Search This Blog

Friday, March 14, 2014

கர்லூ பறவைகள்-கேப்ரியல் கார்சியா மார்க்வெஸ்

த‌மி‌ழி‌ல் : கால சு‌ப்‌பிரம‌ணிய‌ம்
நாங்கள் மூவரும், மேஜையைச் சுற்றி உட்கார்ந்திருந்தோம், நாணயத்தை யாரோ துளைக்குள் போட வுல்லிட்ஸர் மீண்டும் இசைத்தட்டினை - இரவு முழுதும் பாடிக் கொண்டிருந்த அதே இசைத்தட்டினை - மறுபடியும் இசைத்தது. பின்பு எங்களுக்கு யோசித்துப் பார்க்கக் கூட நேரம்  வைக்காமல், அதிவேகமாக நிகழ்ந்துவிட்டது அந்த பின் நிகழ்வு. எங்கிருக்கிறோம் என்று நினைத்துப் பார்க்குமுன் - இருக்குமிடத்தின் ஞாபகத்தை நாங்கள் திரும்ப நினைவுக்குக் கொண்டு வருமுன் - அது நிகழ்ந்தது.
எங்களில் ஒருத்தன், தன் கரத்தைக் கெளண்டருக்கு மேல் நீட்டி (அந்தக் கையைப் பார்க்கவில்லை - கேட்டோம்) இருட்டில் தடவினான். ஒரு தம்ளரை அது தள்ளிவிடவே, இருகரங்களையும்ட கரடு முரடான தரை‌யில் ஊன்றிக் கொண்டு இருட்டில் துளாவினான்.marquez_gabriel
பின்பு மூவரும் இருட்டுக்குள் எங்களை நாங்கள் பார்த்துக் கொள்ள முயன்றோம். முப்பது விரல்கள் இணைந்ததை வைத்து நாங்கள் அங்கிருப்பதை உணர்ந்து கொண்டோம். கல்லாவின் கெளண்டரைப் பற்றிப் பிடித்துக் கொண்டோம். நாம் கிளம்பலாம் என்று எங்களில் ஒருத்தன் சொன்னான். பின்பு எதுவும் நிகழாதது போல், எழுந்து நின்றோம். நாங்கள் திகைப்படைவதற்குக் கூட இன்னும் நேரம் கிடைக்கவில்லை.
முற்றம் வழியாகச் சென்றபோது, அருகிலிருந்து இசை சுழன்று வந்து எங்களை அடைவதைக் கேட்டோம். சோகித்த பெண்கள், உட்கார்ந்தபடியே காத்துக் கொண்டிருக்கும் வாசனையைப் பிடித்தோம். கதவை நாங்கள் அடைவதற்குள அந்த ஹாலின் நீண்ட வெறுமையினை உணர்ந்தோம். வேறு வாசனைகள் எங்களைச் சூழ்ந்து கொள்ளுமுன், கதவுக்கருகில் அமர்ந்திருந்த ஒரு பெண்ணின் புளித்த மணத்தை நோக்கிச் சொன்னோம், போய் வருகிறோம்.
அந்தப் பெண் எந்தப் பதிலும் கூறவில்லை. அவள் எழுந்து நின்றதால், ஆடும் நாற்காலி கிரீச்சிட்டது. தளர்ந்த பலகைத் தரையில், காலடிகளை உதைந்துச் சென்றதையும் திரும்பி வந்து அப்பெண் உட்கார்ந்ததையும் அப்போது திரும்பவும் ஒரு முறை கீல்கள் கிரீச்சிட்டதையும் பின்பு எங்களுக்குப் பின் கதவு மூடிக் கொண்டதையும் கேட்டோம்.
நாங்கள் சுற்றிச் சுற்றி நடந்தோம். நேர் எதிரே - பார்க்க முடியாத ஓர் கடும் விடியலின் மென்காற்று;அதை வெட்டுவது போல எங்களுக்கு பின் ஒரு குரல் இதைச் சொன்து, வழி விடுங்கள் உள்ளே போக வேண்டும்.
நாங்கள் பின்னுக்கு நகர்ந்தோம். அந்தக் குரல் மீண்டும் சொன்னது. நீங்கள் இன்னும் கதவுக்கு எதிரில்தான் இருக்கிறீர்கள்.
அதன்பிறகு எல்லாப் பக்கமு‌ம் நகர்ந்து பார்த்துவிட்டு, அந்தக் குரலை எல்லா இடத்திலும் கேட்டு, நாங்கள் இதைச் சொன்னோம். கல்லூக்கள் எங்கள் கண்களைக் கொத்திக் கொண்டு போய்விட்டன. நாங்கள் இங்கிருந்து போக வழி தெரியாமல் நிற்கிறோம்.
உடனே பல கதவுகள் திறந்து கொள்வதைக் கேட்டோம். பின்பு, எங்கள் கரங்களிலிருந்து எங்களில் ஒருவனை, வழி பார்த்து வர விடுத்துவிட்டோம். அவன் இருட்டுக்குள நகர்ந்து செல்வதைக் கேட்டோம். பல்வேறு பொருட்களை எங்களை அடர்ந்து சூழ்ந்து கொண்டிருக்க, எங்கோ இருட்டுக்குள் இருந்து அவன் பேசினான். நாம் போக வேண்டிய இடம், அருகில் எங்கேயோதான் இருக்க வேணும்.
அவன் மேலும் சொன்னான். நிறைந்து வழியும்படி குவிக்கப்பட்ட தொட்டிகளின் நாற்றம் இங்கே சுற்றிலும் இருக்கிறது.
மறுபடியும் அவனுடைய கரங்கள் இணைவதை உணர்ந்தோம். எதிரிலிருந்த ஒரு சுவரில் சாய்ந்து கொண்டு நின்றோம். எங்கள் கூடவே வந்த வேறொரு குரல், இப்போது எங்களைக் கடந்து சென்றது - ஆனால் எதிர்த்திசையில்.
`இவைகள் சவப்பெட்டிகளாய்த்தான் இருக்க வேண்டும்' எங்களில் ஒருத்தன் சொன்னான். அவனாகவே, எங்களை ஒரு மூலைக்கு இழுத்துச் சென்றான், எங்களுக்குப் பக்கத்தில் மூச்சு விட்டுக் கொண்டு பின்பு சொன்னான். `இவை பெட்டிகள்தான். குவித்து வைக்கப்பட்ட துணிகளின் நாற்றத்தைக் கண்டு சொல்லும் திறமை எனக்குச் சின்ன வயசிலிருந்தே இருக்கிறது'
பின்பு நாங்கள் அத்திசையில் நகர்ந்தோம். தரை மிருதுவாயும், மெத்தென்றுமிருந்தது. நாங்கள் நடந்து சென்றது வளமான ஒரு நிலத்தின் மீது. எங்களில் யாரோ ஒருத்தன் கரத்தை நீட்டி எங்களை நிறுத்தினான். ஆரோக்கியமான உயிர்த்துடிப்புள்ள ஒரு தோலின் தொடர்பை உணர்ந்தோம். ஆனால் எதிரிலிருந்த சுவரையோ, நாங்கள் நீண்ட நேரமாக உணரவேயில்லை.
`இது ஒரு பெண்' நாங்கள் சொல்லிக் கொண்டோம். எங்களில் ஒருத்தன் - பெட்டிகளைப் பற்றி பேசியவன் - சொன்னான். `அவள் தூங்குகிறாள் என்று நினைக்கிறேன்.'
எங்கள் கரங்களின் ஸ்பரிசத்தில், அவள் உடல் அசைந்தது; நெளிந்தது. எங்களின் கையெல்லையை மீறி அது போகவில்லை என்றாலும், அது நழுவிச் செல்வதை உணர்ந்தோம். ஆனால் அது இன்னும் எழுந்து நிற்கவில்லை.
அசையாமல் சிறிது நேரம் நின்றோம். பின்பு மற்றவர் தோள்களில் சாய்ந்து உறுதிப்படுத்திக் கொண்டு நின்றோம். பிறகு அவர் குரலைக் கேட்டோம்.
`யாரது?' என்று அது கேட்டது.
"நாங்கள்தான்" நாங்கள் நகராமல் பதிலளித்தோம். கிரீச்சும் கேட்டன. இருட்டுக்குள் காலணிகளுக்காகத் தேடி நகர்ந்தன அந்தப் பாதங்கள். இன்னும் முழுசாக விழித்துக் கொள்ளாமல், உட்கார்ந்தபடியே எங்களைப் பார்க்கும் ஒரு பெண்ணை மனதில் வரைந்து கொண்டோம்.
`இங்கே என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்?' அவள் கேட்டாள். உடனே நாங்கள் பதிலளித்தோம் : `எங்கிருக்கிறோம் என்று எங்களுக்குத் தெரியவில்லை. கர்லூக்கள் எங்கள் கண்களைக் கொத்தி எடுத்துவிட்டன.'
இந்த விஷயம் பற்றி தான் ஏதோ கேள்விப்பட்டதாக அவள் சொன்னாள். செய்தித்தாள்கள் இதைப் பற்றிச் சொல்லியிருந்தன. மூன்று மனிதர்கள், ஏழு கர்லூக்கள் (ஐந்து அல்லது ஆறு கர்லூக்கள்) இருந்த ஒரு முற்றத்தில் குடித்துக் கொண்டிருந்தபோது, அவர்களின் ஒருவன் கர்லூக்களைப் போலவே பாடத் தொடங்கினான். அவைகளைப் போலி செ‌ய்தான். `இதில் மோசம் என்னவென்றால், ஒரு மணி நேரத்திற்குப் பின்னால் அங்கே போய் அவர்களோடு சேர்ந்து கொண்டவன் அவன்' அவள் சொன்னாள். மேஜைமேல் அந்தப் பறவைகள் தாவிக்குதித்து, அவர்களின் கண்களைக் கொத்தி எடுத்துச் சென்றுவிட்டன.
செய்தித்தாள்களில் சொல்லியதை அவள் எல்லோருக்கும் சொன்னாள். ஆனால் யாரும் அதை நம்பவில்லை.
நாங்கள் சொன்னோம் :`ஜனங்கள் அங்கே போயிருந்தால், அந்தக் கர்லூக்களைப் பார்த்திருக்கலாம்.'
உடனே அந்தப் பெண் சொ‌ன்னாள் :`அடுத்த நாள் அந்த முற்றம் நிறைய, ஜனங்கள் கூடி விட்டார்கள் என்றுதான் சொன்னார்கள். ஆனால் அந்த பெண் முன்னதாகவே அந்தக் கர்லூக்களை எடுத்துக் கொண்டு எங்கோ சென்றுவிட்டாள்.'
நாங்கள் சுற்றித் திரும்பி நடக்கத் தொடங்கியதும் அந்தப் பெண் சொல்வதை நிறுத்திவிட்டாள். மறுபடியும் அந்தச் சுவர்தான் எதிரிலிருந்தது. சும்மா சுற்றித் திரும்பியதுமே நாங்கள் அந்தச் சுவரைக் கண்டுபிடித்துவிட்டோம். எங்களைச் சுற்றி, எங்களைச் சூழ்ந்து எப்போதும் ஒரு சுவர். ஒருத்தனை மறுபடியும் எங்கள் கரங்களிலிருந்து விடுவித்தோம். அவன் மீண்டும் தவழ்ந்து செல்வதையும் நிலத்தை முகர்வதையும் பின்பு தொடர்வதையும் கேட்டோம்.
இப்போது அந்தப் பெட்டிகள் எங்கே என்று எங்களுக்குத் தெரியவில்லை.`இப்போது நாம் வேறு எங்கோ வந்துவிட்டோம் என்று நினைக்கிறேன்' கூடவே இதையும் சொன்னோம்: `இங்கே வா. இங்கே நமக்கு அருகில் யாரோ இருக்கிறார்கள்.
பிரிந்து சென்றவன் அருகில் வருவதைக் கேட்டோம். அவன் எங்களுக்குப் பக்கத்தில் நிற்பதையும் அவனது சூடான மூச்சு எங்கள் முகத்தைத் தாக்குவதையும் உணர்ந்தோம். `அந்த வழியாகப் போ' அவனுக்குக் கூறினோம். `நாம் தெரிந்து கொள்ள வேண்டிய ஏதோ ஒன்று அங்கே இருக்கிறது.'
அவன் அதைச் சென்று அடைந்திருக்க வேண்டும். நாங்கள் குறிப்பிட்ட இடத்தை அவன் நகர்ந்து சென்று சேர்ந்திருக்க வேண்டும். ஏனென்றால் அடுத்த கணம், உடனே அவன் திரும்பி வந்து எங்களிடம் சொன்னான்.
`அது ஒரு பையன் என்று நினைக்கிறேன்'
உடனே நாங்கள் அவனுக்குச் சொன்னோம் : `சரி... அவனுக்கு நம்மைத் தெரியுமா என்று கேள்.'
அவன் அந்தக் கேள்வியைக் கேட்டான். அந்தப் பையனின் கவலையற்ற சன்னக் குரலை நாங்கள் கேட்டோம். அவன் சொன்னான் : `ஆம் உங்களைத் தெரியும். நீங்கள்தானே கர்லூக்களால் கண்கள் கொத்தி எடுக்கப்பட்ட அந்த மூன்று பேர்?'
பின் ஒரு வயதான குரல் பேசியது, மூடிய கதவுக்குப் பின்னாலிருந்து வந்தது போல் தோன்றிய அந்தப் பெண் குரல் சொன்னது :`மறுபடியும் நீ உனக்குள் பேச ஆரம்பித்துவிட்டாயா?'
அந்தக் குழந்தையின் சாவதானமான குரல் சொன்னது :`இல்ல¨.. கர்லூக்களால் கண்கள் கொத்தி எடுக்கப்பட்ட மனிதர்கள்.. மறுபடியும் இங்கே வந்திருக்கிறார்கள்.'
கீல்களின் சத்தம். பிறகு முதல் தடவையைவிட மிக அருகில் அந்த வயதான குரல் :`அவர்களை வீட்டுக்கு அழைத்துப் போ.' அவள் சொன்னாள்.
அந்தப் பையன் சொன்னான் :`அவர்கள் எங்கே வசிக்கிறார்கள் என்று எனக்குத் தெரியாது.'
அந்த வயதான குரல் சொன்னது :`அர்த்தம் இல்லாமல் உளராதே. இவர்கள் இங்கே வசிக்கிறார்கள் என்று எல்லோருக்கும் தெரியும். அந்த கர்லூக்கள் இவர்கள் கண்களைக் கொத்திச் சென்ற இரவிலிருந்தே இது இங்கே எல்லோருக்கும் தெரியும்.'
பின்பு, அவள் மாறுபட்ட குரலில், எங்களை நோக்கிப் பேசுவது போல் தொடர்ந்து கூறினாள் :`என்ன நடந்தது என்பது யாராலும் நம்ப முடியாததாகத்தான் இருக்கிறது. மேலும் இது பேப்பர்காரர்களால் அவைகளின் வியாபாரத்தை அதிகரிக்க, மிகைப்படுத்தப்பட்ட ஒரு ஆதாரமற்ற தகவல் என்றும் சிலர் சொல்கிறார்கள். யாரும் அந்த கர்லூக்களைப் பார்க்கவில்லை.'
உடனே அச்சிறுவன் சொன்னான் :`ஆனால் இவர்களைத் தெரு வழியே இட்டுச் சென்றால், என்னை யாரும் நம்பமாட்டார்கள்.'
நாங்கள் நகரவில்லை. சுவரில் எதிரிட்டுச் சாய்ந்து நிலைத்து நின்று, அவளைக் கவனித்துக் கேட்டோம். மேலும் அந்தப் பெண் சொன்னாள் :`இவன் உங்களைக் கூட்டிச் செல்லலாம் என்று நினைத்தான் என்றால் மட்டும் அது வேறு விதமாகிவிடும். ஒரு சிறு பையன் சொல்வது பற்றி யாரும் பெரிசாகக் கவனம் செலுத்த மாட்டார்கள்.'
அந்தக் குழந்தையின் குரல் குறுக்கிட்டது. `இவர்களுடன் நான் தெருவில் சென்றாலோ, இவர்கள்தான் அந்தக் கர்லூக்களால் கண்கள் இழந்த மனிதர்கள் என்று சொன்னாலோ, பையன்கள் என் மேல் கல்லை விட்டெறிந்தார்கள். தெருக்காரர்கள் ஒவ்வொருவரும் சொல்கிறார்கள், அது ஒருபோதும் நடந்திருக்காது என்று.'
அங்கு ஒரு கணநேர அமைதி. பின்பு அந்தக் கதவு மறுபடியும் மூடிக் கொண்டது. அந்தப் பையன் பேசினான் : அதில்லாமல் நான் இப்போது `டெர்ரியும் கடற்கொள்ளைக்காரர்களும்' படித்துக் கொண்டிருக்கிறேன்.
காதுக்குள் எங்களில் யாரோ ஒருத்தன் சொன்னான் : `அவனை நான் வழிக்குக் கொண்டு வருகிறேன்.' குரல் வந்த இடத்துக்கு அவன் தவழ்ந்து சென்றான். `அந்தக் கதை எனக்கு ரொம்பப் பிடிக்கும்' என்றான். : `இந்த வாரம் டெர்ரிக்கு என்ன நடந்தது என்பதையாவது எங்களுக்குச் சொல்லேன்.'
தன் சாதுரியத்தால் அவன் காரியம் சாதிக்க முயற்சி செய்கிறான் என நினைத்தோம். ஆனால் அந்தப் பையன் சொன்னான் : `எனக்கு அந்த கதையென்றும் பிடித்தமானதில்லை. நான் ஆசைப்படும் ஒரே ஒரு பொருள், பெயிண்ட்தான்.'
`டெர்ரி ஒரு ஆபத்தான கட்டத்தில் இருக்கிறான்' நாங்கள் சொன்னோம்.
உடனே அந்தப் பையன் சொன்னான் :`அது வெள்ளிக்கிழமை. இன்று ஞாயிற்றுக்கிழமை. மேலும் நான் விரும்புவது பெயிண்ட் மட்டும்தான்' அவன் இதை உணர்ச்சியற்ற வேறுபட்ட குரலில் உஷ்ணத்துடன் சொன்னான்.
மற்றவன் திரும்பி வந்ததும் நாங்கள் சொன்னோம். `நாங்கள் மூன்று நாட்களுக்கு மேல் அலைந்து திரிகிறோம். ஒரு நிமிஷம் கூட இளைப்பாற முடியாமல் கிடந்து தவிக்கிறோம்.'
ஒருத்தன் சொன்னான் :`சரி. கொஞ்சம் ஓய்வெடுத்துக் கொள்வோம். ஆனால் ஒருவர் கையை மற்றவர் போக விட்டுவிட வேண்டாம்.'
கீழே அமர்ந்தோம். பார்க்க முடியாத சூரியன் எங்களின் தோள்களைச் சூடாக்கத் தொடங்கினான். சூரியனின் புறப்பாடு கூட எங்கள் ஆவலைத் தூண்டவில்லை. முன்பே தொலைந்து போய்விட்ட தூரம் பற்றிய ஞாபகத்தால் காலம், திசை எல்லாவற்றிலும் நாங்கள் அந்த தூரத்தையே நினைவுகொண்டோம். பல குரல்கள் கடந்தன.
`கர்லூக்கள் எங்கள் கண்களைக் கொத்திக் கொண்டு போய்விட்டன' - நாங்கள் சொன்னோம்.
அதில் ஒரு குரல் சொன்னது : `இது உண்மைதானா என்று செய்தித்தாள்களைப் படித்துப் பார்க்க வேண்டும்.'
அந்தக் குரல்கள் சென்று தேய்ந்தன. தோளோடு தோள் இணைய நாங்கள் அப்படியே உட்கார்ந்திருந்தோம். கடந்து செல்லும் குரல்களை, கடந்து செல்லும் மன உருவங்களை, மணத்தாலோ ஒலியாலோ - அவை கடந்து செல்வதை உணர்ந்தபடி காத்திருந்தோம். எங்களின் உச்சந்தலைக்கு மேல் சூரியன் மேலும் அதிகச் சூட்டைக் கிளப்பினான். பின்பு எங்களுள் ஒருவன் சொன்னான் :`அந்தச் சுவரை நோக்கி மறுபடியும் போவோம்.'
பார்க்க முடியாத வெளிச்சத்தை தலைகளை அண்ணாந்து நோக்கியபடி அசையாமலிருந்துகொண்டு மற்ற இருவரும் சொன்னோம்.
`இப்போது வேண்டாம். சூரியன் சாய்ந்து நம் முகத்தில் காயத் தொடங்கும் வரை நாம் காத்திருப்போம்.'
****
கேப்ரியல் கார்சியா மார்க்வெஸ் நோப‌ல் ப‌ரிசு பெ‌ற்ற ல‌த்‌தீ‌ன் அமெ‌ரி‌க்க எழு‌த்தாள‌ர். மே‌ஜிக‌ல் ‌ரிய‌லிச‌ம் எ‌ன்ற வகை எழு‌த்தா‌ல், ‌மிக‌ப் ‌பிரபல‌ம் பெ‌ற்றவ‌ர். இவரது `ஒரு நூ‌ற்றா‌ண்டு‌த் த‌னிமை' நாவ‌ல், உல‌கி‌ன் ‌சிற‌ந்த நாவ‌ல்களு‌ள் ஒ‌ன்றாக‌க் கருத‌ப்படு‌கிறது. ‌சிற‌ந்த ‌சிறுகதைகளையு‌ம் இவ‌ர் படை‌த்த‌ளி‌த்து‌ள்ளா‌ர்.
 ந‌ன்‌றி - ச‌‌ங்கேத‌ங்களு‌ம் கு‌றி‌யீடுகளு‌ம் - மேலைநா‌ட்டு‌ச் ‌சிறுகதைக‌ள் : விலை: ரூ 85
வெ‌ளி‌யீடு : குரு‌த்து, பிச்சாண்டம் பளையம், பொலவக்காளி பாளையம் அஞ்சல், கோபிச்செட்டிப்பாளையம், ஈரோடு மாவட்டம்-638476

சாணக்கிய சிந்தனைகள்:-

வேலையத் துவங்கிவிட்டீர்களென்றால் அதன் விளைவுகள் பற்றி அச்சப்படக்கூடாது. கைவிடாதீர்கள்! நேர்மையாக பணியாற்றுபவர்கள் மகிழ்ச்சியானவர்கள்.

மலரின் மணம் காற்றின் திசைவழி மட்டுமே செல்லும், ஒரு நல்ல மனிதனின் நற்தன்மை அனைத்து திசைகளுக்கும் செல்லும்.

விக்கிரகங்களில் கடவுள் இல்லை. உங்கள் உணர்வுகளே உங்கள் கடவுள். ஆன்மாவே கோயில்.

மனிதன் செயலினால் உயர்ந்தவனே தவிர பிறப்பினால் அல்ல.

உங்களை விட தகுதியில் உயர்ந்தவர்களிடமோ, தாழ்ந்தவர்களிடமோ நட்பு பாராட்டாதீர்கள், இந்த நட்பினால் மகிழ்ச்சி ஏற்படாது.

முதல் 5 ஆண்டுகளுக்கு உங்கள் குழந்தைகளை அன்புடன் நடத்துங்கள். அதன் பிறகு கண்டியுங்கள், 16 வயது ஆகிவிட்டதா நண்பராக நடத்துங்கள், வளர்ந்த உங்களுடைய குழந்தைகளே உங்கள் சிறந்த நண்பர்கள்.
சாணக்கிய சிந்தனைகள்:-

வேலையத் துவங்கிவிட்டீர்களென்றால் அதன் விளைவுகள் பற்றி அச்சப்படக்கூடாது. கைவிடாதீர்கள்! நேர்மையாக பணியாற்றுபவர்கள் மகிழ்ச்சியானவர்கள்.

மலரின் மணம் காற்றின் திசைவழி மட்டுமே செல்லும், ஒரு நல்ல மனிதனின் நற்தன்மை அனைத்து திசைகளுக்கும் செல்லும்.

விக்கிரகங்களில் கடவுள் இல்லை. உங்கள் உணர்வுகளே உங்கள் கடவுள். ஆன்மாவே கோயில்.

மனிதன் செயலினால் உயர்ந்தவனே தவிர பிறப்பினால் அல்ல.

உங்களை விட தகுதியில் உயர்ந்தவர்களிடமோ, தாழ்ந்தவர்களிடமோ நட்பு பாராட்டாதீர்கள், இந்த நட்பினால் மகிழ்ச்சி ஏற்படாது.

முதல் 5 ஆண்டுகளுக்கு உங்கள் குழந்தைகளை அன்புடன் நடத்துங்கள். அதன் பிறகு கண்டியுங்கள், 16 வயது ஆகிவிட்டதா நண்பராக நடத்துங்கள், வளர்ந்த உங்களுடைய குழந்தைகளே உங்கள் சிறந்த நண்பர்கள்.

எகிப்தில் உள்ள " பிரமிடு " தமிழர் கட்டியது என்பது மட்டுமல்ல , அச்சொல்லே தமிழ்ச் சொல்லாகும் .

ஒரு வியப்பான செய்தியை கூறினால் நீங்கள் வியப்பால் விழி விலகி நிற்பீர்கள் ! எகிப்தில் உள்ள " பிரமிடு " தமிழர் கட்டியது என்பது மட்டுமல்ல , அச்சொல்லே தமிழ்ச் சொல்லாகும் .

"இடுதல்" என்றால் புதைத்தல் என்று பொருள். இறந்தவர்களை புதைப்பதால் ' இடுகாடு ' என்று அழைக்கப் பட்டது . சாதாரண மக்கள் இறந்தால் சிறு குழியில் புதைத்து மேலே மேடு அமைப்பர் . அது "சிறு இடு " . மன்னர்கள் போன்ற உயர்ந்தோர் இறந்தால் "பெரும் இடு" அமைப்பர் . பெரும் + இடு = பெருமிடு . அதுவே "பிரமிடு " என்று எகிப்தில் அழைக்கப் படுகிறது . 

தமிழர்கள் உலகின் பல பாகங்களில் வாழ்ந்தவர்கள் என்பது மட்டுமல்ல . பல மொழிகள் தோற்றத்திற்கு காரணமாய் அமைந்து , பல மொழிகளுக்கும் பல சொற்களை கொடையாகவும் அளித்துள்ளது
ஒரு வியப்பான செய்தியை கூறினால் நீங்கள் வியப்பால் விழி விலகி நிற்பீர்கள் ! எகிப்தில் உள்ள " பிரமிடு " தமிழர் கட்டியது என்பது மட்டுமல்ல , அச்சொல்லே தமிழ்ச் சொல்லாகும் .

"இடுதல்" என்றால் புதைத்தல் என்று பொருள். இறந்தவர்களை புதைப்பதால் ' இடுகாடு ' என்று அழைக்கப் பட்டது . சாதாரண மக்கள் இறந்தால் சிறு குழியில் புதைத்து மேலே மேடு அமைப்பர் . அது "சிறு இடு " . மன்னர்கள் போன்ற உயர்ந்தோர் இறந்தால் "பெரும் இடு" அமைப்பர் . பெரும் + இடு = பெருமிடு . அதுவே "பிரமிடு " என்று எகிப்தில் அழைக்கப் படுகிறது .

தமிழர்கள் உலகின் பல பாகங்களில் வாழ்ந்தவர்கள் என்பது மட்டுமல்ல . பல மொழிகள் தோற்றத்திற்கு காரணமாய் அமைந்து , பல மொழிகளுக்கும் பல சொற்களை கொடையாகவும் அளித்துள்ளது

பல்லில் பிரச்னை இருந்தால் புற்றுநோய் வர வாய்ப்பு:-

பல்லில் ஏற்படும் பொதுவான பிரச்சனை சொத்தை. இதை ஆரம்ப கட்டத்தில் சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும். இல்லை என்றால் அது பல் முழுதையும் பாதிக்கும். சிலசமயம் பல் இரண்டாக உடைந்து போகும். அப்போது, உடைந்த கூறான பல், நாக்கு மற்றும் கன்னப் பகுதியில் குத்தி காயம் ஏற்படும்.

இது புற்றுநோயாக மாறும் வாய்ப்பு உண்டு. பல் சொத்தையை வேர் வைத்தியம் செய்து, செராமிக் செயற்கை பல்லை பொருத்தலாம். பல்லின் அடுத்த பிரச்சனை பல்செட். இதை அணிபவர்கள் இருபத்து நாலு மணிநேரமும் பயன்படுத்தக்கூடாது. ஒரு நாளைக்கு பதினைந்து மணி நேரம் மட்டுமே அணியணும். இரவு படுக்கும் போதும் கண்டிப்பாக கழட்டணும்.

தொடர்ந்து அணிவதால், தடை எலும்பில் பாதிப்பு ஏற்படும். நம் வாயில் பலகோடி பாக்டீரியாக்கள் உள்ளன. பல் இடுக்கில் சிக்கிக் கொள்ளும் உணவுகளை சரியாக சுத்தம் செய்யாமல் இருந்தால், வாய் துற்நாற்றம், ஈறு பிரச்னை ஏற்படும். பாக்டீரியாக்கள் எச்சில் மூலமாக வயிற்றுக்கும் மற்ற உறுப்புக்கும் பரவும்.

இதனால் கண்கள் சிவப்பாகும், சருமத்தில் தேமல், மூட்டு வலி போன்ற பிரச்சனைகள் ஏற்படும். ஒவ்வொரு முறை உணவு சாப்பிட்ட பிறகு வாயை நன்றாக தண்ணீரால் சுத்தம் செய்ய வேண்டும். பல் சிறப்பாக இருந்தால் உடல் ஆரோக்கியமாக இருக்கும் என்றார்.

பல் ஆரோக்கியத்துக்கு டிப்ஸ்...

செய்ய கூடியவை...

தினமும் காலை. இரவு இரண்டு வேளை பல் துலக்க வேண்டும்.

இரவு படுக்கும் முன் பல் இடுக்கில் உள்ள உணவு பொருட்களை ‘பிளாஸ்‘, தண்ணீரால் சுத்தம் செய்யணும்.

பால் சார்ந்த உணவுகளை சாப்பிடுவது நல்லது.
பல்லில் பிரச்னை இருந்தால் உடனடியாக பல் நிபுணரை அணுக வேண்டும்.

செய்ய கூடாதவை...

பற்களில் ஒட்டிக் கொள்ளும் உணவு பொருட்களை தவிர்க்கவும்.பென்சிலை கடிப்பது மற்றும் பிளாஸ்டிக் மற்றும் நூல் போன்ற பொருட்களை பல்லால் கடித்து கிழிக்க கூடாது.
புகை, பாக்கு, வெற்றிலை ஆகியவற்றை தவிர்க்க வேண்டும்

மடியில் வைத்து மடிக்கணினியை பயன்படுத்தலாமா?

லேப்டாப்பை மடியில் வைத்து பயன்படுத்துபவர்களுக்கு நிறச்சிதைவு நோய் அதிகம் வருகிறது. அதிலிருந்து வெளி வரும் வெப்பத்தால் தோல்பகுதி சிவந்து போகும். பிறகு அந்த இடத்தில் சிறிய கொப்புளங்கள் உருவாகி அரிப்பு ஏற்படும். அதை சொரியச் சொரிய அந்த இடத்தில் தோலின் நிறம் மாறி, தடித்த கறுப்பான தோலாக மாறிவிடும். இதற்கு ‘ரோஸ்டட் ஸ்கின் சின்ட்ரோம்’ என்று பெயர்.
காஷ்மீர் பகுதியில் உள்ளவர்கள் குளிரிலிருந்து தப்பிக்க, ஒரு பானை நிறைய நெருப்பைப் போட்டு அதை வயிற்றோடு சேர்த்து கட்டிக் கொள்வார்கள். அப்போதைக்கு குளிரில் இருந்து தப்பித்தாலும் நெருப்பால் உண்டான காயம் தோலில் தடிமனான ரோஸ்ட் போல தங்கிவிடும். இதுதான் ‘ரோஸ்டட் ஸ்கின் சின்ட்ரோம்’. இது போன்ற பாதிப்பு லேப்டாப் பயன்படுத்துவோருக்கும் வருகிறது.
லேப்டாப்பில் காரீயம் சேர்த்திருப்பார்கள். அதிக நச்சுத்தன்மை நிறைந்த இந்த தனிமம் உடலுக்கு பல ஆபத்துகளை உருவாக்கும். கான்டாக்ட் டெர்மடைட்டிஸ் என்ற அலர்ஜியை உருவாக்கும். இதனால் கொப்புளம், அரிப்பு, தோல் தடிப்பு போன்ற நோய்கள் வரும். லேப்டாப்பை தொடர்ச்சியாக அருகில் வைத்து பார்ப்பதால் கண்ணுக்கு அடியில் ரத்த ஓட்டம் குறைந்து, கருவளையம் நிரந்தரமாகத் தங்கிவிடும்.
மடியின் மேல் பயன்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டால் அரைமணி நேரத்துக்கு மேல் வேண்டாம். துணி, தலையணை, பிளாஸ்டிக் பொருட்களின் மீதும் லேப்டாப்பை வைத்து பயன்படுத்துவது ஆபத்தானது. லேப்டாப்பில் இருந்து வெளியாகும் வெப்பத்தைக் கட்டுப்படுத்த இப்போது சிறிய ஃபேன் கொண்ட ‘கூலிங் பேடு’ உபகரணங்கள் வந்துவிட்டன. குழந்தைகளிடம் இருந்து லேப்டாப்பை சற்று தள்ளியே வைத்திருங்கள்.

Perfect Click....

Wednesday, March 12, 2014

ஏதோ ஒன்று

செங்கை ஆழியான் 











இருள் வானைக் கீறிக் கொண்டு பாய்ந்த எரி வெள்ளி ஒன்று, ஒளி ஒடுங்கி, அவிகின்றது.

எவ்வளவு உண்மை, மறுக்கவே முடியாத பிரத்தியட்சமான உண்மை.

அடிவானில் ஒளி ஓடுங்கி, அவியத்தான் வேண்டுமா?

தூரத்தே பெரும் கட்டிடங்களின் மங்கற் கோடுகள். இருளுடே தெரிகின்றன. அவற்றிற்கும் அப்பால், சிவனொளிபாத மலையின் சிகரத்து மின் விளக்கு, நம்பிக்கை தரும் ஒளியாக மின்னுகின்றது.

நம்பிக்கை தரும் அச்சிறு ஒளியின் பின்னால், அதனோடு இணைந்து, மாபெரும் மலை, உண்மைப் பொருள் இருக்கிறது.

எரி வெள்ளி...?

முழுவதும் ஒளிதான், ஆனால் அதன் பின், - கண்ணைப் பறித்து மின்னி அவியும்போது அதன் பின் - சூனியம் தான் மிச்சம்.

என் கொள்கைகள் எரி வெள்ளியா?

'சகல பிரச்சனைகளுக்கும் காரணம், அடிப்படைக் காரணம், என்ன தெரியுமா?

அவன் என்னை நிமிர்ந்து பார்க்கிறான். அவன் பார்வையில், என் பேச்சில் இருந்த படபடப்பு இல்லை. அமைதி உருகி வருகிறது.

'நீயே... சொல்லு....!'

'அடிப்படைக் காரணம் பொருளாதாரக் குறைவுதான்....! ஒருவன் அளவிற்கு அதிகமாக உண்டுகளித்கும்போது, இன்னொருவன் ஒருவேளை கஞ்சிக்கும் வழியில்லாமல் தவிக்கிறான்! ஒருவன் ஆடம்பரமாகக் காரிலே பவனி வரும்போது, இன்னொருவன் கொதிக்கும் வெயிலில், தார் சூடு பாதங்களைத் தீய்க்க, செருப்பிற்கே வழியின்றித் தடுமாறுகிறான்! ஒருவனுக்கு அளவுக்குமதிகமான உடைகள்! இன்னொருவனுக்கு தன் மானத்தை மறைக்கவும் ஒரு முழந்துண்டில்லை! ஒருவனுக்கு அரண்மனை போன்ற வீடுகள் பல! இன்னொருவனுக்கு வாழ்வதற்குச் சிறு குடிசையுமில்லை! ஒருவன் பிறர் உழைப்பிலே வாழ்கிறான்! இன்னொருவன் உழைத்து வாழ வழியின்றித் தவிக்கிறான். இந்த நிலையேன்.....? இந்த ஏற்றத்தாழ்வுகளேன்? மனிதர்களுக்குள் ஏற்றவிறக்கங்கள் ஏன்?'

உணர்ச்சி வசப்படுகின்றேன்.

எதிர்த்தரப்பில் அமைதி 'இந்த மனித பேதத்தை முற்றாக ஒழிக்க வேண்டும்! வர்க்க பேதமற்ற ஒரு சமூகத்தை அமைக்கவேண்டும்! எல்லோருக்கும் சம சந்தர்ப்பம் எல்லாத்துறைகளிலும் அளிக்க வேண்டும்!

ஆவேசத்தோடு தொடர்கின்றேன்.
'அப்போதுதான் எல்லோருக்கும் உணவு கிடைக்கும்! வாழ வீடுகள் கிடைக்கும்!'

இருளினூடே என் கண்கள் துழாவுகின்றன. மலையுச்சியிலமைந்திருக்கும் என் விடுதியிலிருந்து பார்க்கும் போது, பல்கலைக்கழகக் கட்டிடங்கள் மங்கலாகத் தெரிகின்றன.

மேடுகளும், பள்ளங்களும்!

வானில் இங்கொன்றும், அங்கொன்றுமாக நட்சத்திரப் பூக்கள். இரவுச் சாப்பாட்டிற்குரிய அழைப்பு மணி கிணு கிணுக்கின்றது. அவன் எழவில்லை.
'வர்க்கபேதமற்ற ஒரு சமூகத்தை நான் எதிர்க்கிறேன் என்று நீ எண்ணுகிறாயா?'
நான் அவனைக் கண்ணிமைக்காது பார்க்கிறேன்.

அவன் மெதுவாக எழுந்து சென்று, பலகணிக் கதவைத்திறந்து விடுகின்றான். மென்காற்று இழைக்கிறது!

மனிதர்களுக்குள் ஏற்றத் தாழ்வுகள் இருக்கக்கூடாது என்றுதான் நானும் விரும்புகின்றேன். எல்லோரும் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்றுதான் நானும் விரும்புகிறேன்! ஒருவன் ஒருவேளை சோற்றிற்குத் தவிக்கும்போது, இன்னொருவன் மேலதிகமாக உண்டு சீரழிப்பதை நானும் வெறுக்கிறேன்!.....'

'அப்படியானால் நீயேன் மொழி, இனம் மதம் என்று திரிகிறாய்?

வானில் இருளின் கருமை அகன்று, தெளிவு தோன்றுகின்றது. அங்கொன்றும் இங்கொன்றுமாகத் தெரிந்த நட்சத்திர மலர்கள், வானமெங்கும் இப்போது மலர்கின்றன.

'அவ்விடத்தில் தான் நீயும், நானும் வேறுபடுகின்றோம்! நீ உணவு மட்டும் தான் வாழ்க்கை என்கிறாய்?'

'பின் வேறு என்ன?....?'

'உணவுமட்டும்தான் வாழ்வல்ல! உணவு மடடும்தான் வாழ்வென்றால், மிருகங்களுக்கும், எங்களுக்கும் என்ன வித்தியாசம்?'

அவன் கேள்வியோடு நிறுத்தி விட்டு, என்னைப் பார்க்கின்றான்:

'உன் கொள்கைகள் உயர்ந்தவை! நல்லவை! ஆனால் - சிறிது யோசித்துப்பார், தெரிந்தோ, தெரியாமலோ மொழியையும், இனத்தையும், மதத்தையும் காட்டி.., ஒரே நாட்டில் வாழ்கின்ற இன்னொரு சமூகத்தின் மேல் இனவெறியை ஊட்டிவிட்டு, பதவிக்கு வந்த சிங்கள அரசில்;, நாம் வர்க்க பேதமற்ற ஒரு சமூகத்தைக் காணப் பொதுவுடைமை பேசுவுது சரியா? அப்படிப் பேசிசிக்கொண்டிருந்தால் நம்மினம், நம்மொழி.........'

நான் வேகமாகக் குறுக்கிடுகின்றேன்.

'வர்க்க பேதமற்ற ஒரு சமூகத்தில், இனம், மொழி?'

இப்பொழுது அவன் குறுக்கிடுகின்றான்:

'இரு மொழி பேசும் மக்கள் சமூகம் வாழ்கின்ற ஒரு நாட்டில், ஒரு சமூகம் மட்டும் அதுவும் சிறுபான்மைச் சமூகம் மட்டும், வர்க்கபேதமற்ற சமூகத்தை அடையப் போராடும்போது, அச்சமூகத்தின் மொழி இனம் அழிந்து போய்விடும்! அதுமட்டுமல்ல, எல்லா மக்களும், மொழி, இன மதவேறுபாடுடின்றிப் போராடும் போதுதான் நீ கருதுகின்ற சமூகம் உருவாக முடியும்......!'

என் கண்களில் வெறுப்பு

'புரிந்து கொள்ளாதவன்!'

'உணவு மட்டுத்தான் வாழ்க்கையா?'

அவன் திரும்பவும் கேட்கிறான்.

என் தலை திடமாக அசைகிறது.

'உணவு கிடைத்தால் போதுமா?'

திரும்பவும் கேட்கின்றான்.

'ஒரு மணிக்கு மேலாகிறது! இன்னும் படுக்காமல் வெளியே என்னத்தை அப்படிப் பார்த்துக் கொண்டு நிற்கின்றாய்?'

என் அறை நண்பன் கேட்கிறான்.

'நீ படுத்துக்கொள்! விளக்கை அணைத்து விட்டுப் படு!'

வெளியே இருள் தான். தூரத்தில் சிவனொளி பாதமலைச் சிகர மின் விளக்கு கண்ணைச் சிமிட்டுகிறது.

நாங்கள் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறோம். சிங்கள மாணவர்களும், தமிழ் மாணவர்களும் ஒன்றாக இருந்து சாப்பிட்டுக் கொண்டிருக்கின்றோம்.

'எவ்வளவு ஐக்கியம்!'

இன்னொரு மேசையிலிருந்து அவன், அந்த பிற்போக்குவாதி, சாப்பிட்டுக் கொண்டிருக்கிறான்.

எனக்குப் பக்கத்தில் ஓரிடம் காலியாக இருக்கிறது.

அதில் ஒரு தமிழ் மாணவனை அழைத்து வந்து இருத்துகிறான், எங்களுக்கு உணவு பரிமாறுகிறவன்.

இந்தத் தமிழ்ப் பண்டிகளை இங்கேன் இருத்துகிறாய்?' கேட்டவன், என் முன்னிருந்து சாப்பிட்டுக் கொண்டிருந்த ஒரு சிங்கள மாணவன்தான், சிங்களத்தில் தான் கேட்டான்.

என் இதயமேன் துடிக்கிறது? இதயமே நீறற்று வரண்டு போனது போல்..... அடிவயிற்றில் பெரு நெருப்புப் படர்வது போல.....

என்னால் அங்கிருக்க முடியவில்லை. மொழி விளங்காத நண்பர்கள் அமைதியாகச் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

நான் எழுந்து சென்று, 'அவனு'க்கு முன் அமர்ந்து கொள்கின்றேன்.

அவன் விழிகளில் அதிசயம், கேள்வி.

நான் வேதனையோடு விளக்குகின்றேன்.

அவன் சிரிக்கின்றான்.

'உணவு மட்டுந்தான் வாழ்க்கையா?'

நானென்ன பதில் கூறுவேன்?

'உணவு மட்டுந்தான் வாழ்க்கை என்றாயே? அப்படியானால் இங்கே ஏன் எழுந்து வந்தாய்? தமிழ்ப் பண்டி என்று சொன்னானே, அவனுக்கு முன்னாலும் உணவு இருக்கிறது தானே?'

வேதனையோடு தலை குனிகிறேன்.

'அவன் அப்படிக் கூறியபோது நீ எதையோ ஒன்றை இழந்தது போல உணரவில்லையா?'

உணர்கிறேன், உணர்கிறேன்.

இருள் வானைக் கீறிட்டுக் கொண்டு பாய்ந்த எரி வெள்ளி ஒன்று, ஒளி ஒடுங்கி, அவிகின்றது.

தூரத்தே சிவனொளிபாதமலைச் சிகரத்து மின் விளக்கு மின்னுகின்றது.

தலையில் முடி அடர்த்தியாக வளர உங்களுக்கு சில குறிப்புக்கள்..........



1.ஐந்து இதழ்கள் உள்ள செம்பருத்தி / செம்பரத்தை பூவை அரைத்து நல்லெண்ணையில் காய்ச்சி, வடிகட்டிய பின் தலைக்குத் தேய்த்தால் தலை முடி அடர்த்தியாக வளரும்.

2. முடி செழித்து வளர வாரம் ஒருமுறை வெண்ணெய் தலைக்குத் தடவி ஒருமணி நேரம் கழித்து கழுவி வந்தால் முடி நன்றாக வளரும்.

3.செம்வரத்தம் இலையை அரைத்து தலையில் தடவி அரைமணி நேரம் ஊறிய பின் தலையை சீயக்காய் அல்லது ஷாம்பூ போட்டு அலசவும். கூந்தல் அடர்த்தியாக வளரும்.

4.கறிவேப்பிலை, சின்ன வெங்காயம்-4, இரண்டையும் நன்றாக அரைத்து அத்துடன் தயிர் சேர்த்து தலைக்கு தேய்த்து முழுகினால் கூந்தல் நல்ல கருமையான நிறத்துடன் வளரும்.

5. கடுக்காய், செவ்வரத்தம் பூ, நெல்லிக்காய் ஆகியவைகளை சம அளவு எடுத்து தேங்காய் எண்ணெயில் காச்சி கூந்தலில் தடவினால் முடி நன்றாக வளரும்.

6.வெந்தயத்தை ஊறவைத்து நன்கு அரைத்து தலையில் பேக் போல போட்டு ஊறிய பிறகு தலைக்கு குளித்தால் தலை முடி செழித்து வளரும்.

7.ஒரு லிட்டர் நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெயில் நெல்லிக்காய் பொடி, தான்றிக்காய் பொடி, மருதாணி பொடி, கறிவேப்பிலை பொடி, கரிசலாங்கண்ணி பொடி, வெட்டிவேர், ரோஜா இதழ்கள், சந்தன பொடி ஆகியவை தலா 10 கிராம் சேர்த்து, எண்ணெயில் போட்டு கொதிக்க வைக்கவும். இந்த கலவையை நாலு நாள் வெயிலில் வைக்க வேண்டும். சூரிய கதிர்கள் பட்டு எண்ணெயில் எசன்ஸ் இறங்கும். பின் வெள்ளைத் துணியில், அதை வடிகட்டவும். குளிக்கும் முன் இதை தலையில், தேய்த்து வந்தால், முடி கருமையாகும்,அத்துடன் தலை முடி அடர்த்தியாக வளரும்.

8.மருதாணி, செம்பருத்தி, கருவேப்பிலை, வேப்பிலை, ரோஜா இதழ்கள் இவற்றை நன்கு நிழலில் உலர்த்தி பொடி செய்து வைத்து கொண்டு காய்ச்சிய தேங்காய் எண்ணையில் கலந்து ஊறவிட்டு பின்பு தலைக்கு தேய்க்கவும். இப்படி செய்தால் தலைமுடி உதிர்வது குறையும். எப்பொழுதுமே ஒரு செய்முறை செய்தால் அதை தொடர்ந்து செய்யவேண்டும். மாற்றிக் கொண்டே இருந்தால் முடி உதிர்வதை தடுக்க முடியாது. ஷாம்புக்கள் பயன்படுத்தும் போதும் இதே போல் செய்ய வேண்டும்.அடிக்கடி ஷாம்புக்களை மாற்றினால் முடி உதிரும்.

9.செம்பருத்தி இலையை அரைத்து தலையில் தடவி அரைமணி ஊறிய பின் தலையை சீயக்காய் அல்லது ஷாம்பூ போட்டு அலசவும். கூந்தல் அடர்த்தியாக வளரும்.

10.கருவேப்பிலை, சின்ன வெங்காயம் -4, இரண்டையும் நன்றாக அரைத்து அத்துடன் தயிர் சேர்த்து தலைக்கு தேய்த்து குளித்தால் கூந்தல் நல்ல கருமையான நிறத்துடன் வளரும்.
தலையில் முடி அடர்த்தியாக வளர உங்களுக்கு சில குறிப்புக்கள்..........

1.ஐந்து இதழ்கள் உள்ள செம்பருத்தி / செம்பரத்தை பூவை அரைத்து நல்லெண்ணையில் காய்ச்சி, வடிகட்டிய பின் தலைக்குத் தேய்த்தால் தலை முடி அடர்த்தியாக வளரும்.

2. முடி செழித்து வளர வாரம் ஒருமுறை வெண்ணெய் தலைக்குத் தடவி ஒருமணி நேரம் கழித்து கழுவி வந்தால் முடி நன்றாக வளரும்.

3.செம்வரத்தம் இலையை அரைத்து தலையில் தடவி அரைமணி நேரம் ஊறிய பின் தலையை சீயக்காய் அல்லது ஷாம்பூ போட்டு அலசவும். கூந்தல் அடர்த்தியாக வளரும்.

4.கறிவேப்பிலை, சின்ன வெங்காயம்-4, இரண்டையும் நன்றாக அரைத்து அத்துடன் தயிர் சேர்த்து தலைக்கு தேய்த்து முழுகினால் கூந்தல் நல்ல கருமையான நிறத்துடன் வளரும்.

5. கடுக்காய், செவ்வரத்தம் பூ, நெல்லிக்காய் ஆகியவைகளை சம அளவு எடுத்து தேங்காய் எண்ணெயில் காச்சி கூந்தலில் தடவினால் முடி நன்றாக வளரும். 

6.வெந்தயத்தை ஊறவைத்து நன்கு அரைத்து தலையில் பேக் போல போட்டு ஊறிய பிறகு தலைக்கு குளித்தால் தலை முடி செழித்து வளரும். 

7.ஒரு லிட்டர் நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெயில் நெல்லிக்காய் பொடி, தான்றிக்காய் பொடி, மருதாணி பொடி, கறிவேப்பிலை பொடி, கரிசலாங்கண்ணி பொடி, வெட்டிவேர், ரோஜா இதழ்கள், சந்தன பொடி ஆகியவை தலா 10 கிராம் சேர்த்து, எண்ணெயில் போட்டு கொதிக்க வைக்கவும். இந்த கலவையை நாலு நாள் வெயிலில் வைக்க வேண்டும். சூரிய கதிர்கள் பட்டு எண்ணெயில் எசன்ஸ் இறங்கும். பின் வெள்ளைத் துணியில், அதை வடிகட்டவும். குளிக்கும் முன் இதை தலையில், தேய்த்து வந்தால், முடி கருமையாகும்,அத்துடன் தலை முடி அடர்த்தியாக வளரும்.

8.மருதாணி, செம்பருத்தி, கருவேப்பிலை, வேப்பிலை, ரோஜா இதழ்கள் இவற்றை நன்கு நிழலில் உலர்த்தி பொடி செய்து வைத்து கொண்டு காய்ச்சிய தேங்காய் எண்ணையில் கலந்து ஊறவிட்டு பின்பு தலைக்கு தேய்க்கவும். இப்படி செய்தால் தலைமுடி உதிர்வது குறையும். எப்பொழுதுமே ஒரு செய்முறை செய்தால் அதை தொடர்ந்து செய்யவேண்டும். மாற்றிக் கொண்டே இருந்தால் முடி உதிர்வதை தடுக்க முடியாது. ஷாம்புக்கள் பயன்படுத்தும் போதும் இதே போல் செய்ய வேண்டும்.அடிக்கடி ஷாம்புக்களை மாற்றினால் முடி உதிரும். 

9.செம்பருத்தி இலையை அரைத்து தலையில் தடவி அரைமணி ஊறிய பின் தலையை சீயக்காய் அல்லது ஷாம்பூ போட்டு அலசவும். கூந்தல் அடர்த்தியாக வளரும்.

10.கருவேப்பிலை, சின்ன வெங்காயம் -4, இரண்டையும் நன்றாக அரைத்து அத்துடன் தயிர் சேர்த்து தலைக்கு தேய்த்து குளித்தால் கூந்தல் நல்ல கருமையான நிறத்துடன் வளரும்.

Recovering the Hidden Ram in HP Servers !

This is very interesting and thought of sharing with you all!! Recently we found out that our HP DL 380(G6) server shows only 3.25GB RAM, even though we originally installed 4GB RAM. But it was showing only 3.25GB RAM.
We were surprised when we have removed the server casing and saw that it has 4GB Physical memory. Our requirement is to upgrade it up to 8GB. But even I have installed the 8GB RAM modules it shows only 3.25GB RAM. Then I have checked in the BIOS. It nicely display 8GB RAM. I phoned our venders but even they didn’t have an answer for it. We decided that this should be an issue with Operating system.
When we check Microsoft says W2K3 std Edition supports only up to 4GB, but we have got W2K3 Enterprise on our server.
Finally we found the solution for this issue, it’s really easy to recover your Hidden RAM. I have done it and it worked. Recovering memory that is invisible to the Microsoft® Windows® operating system As memory usage requirements of servers increase, one common problem is that the Windows® operating system sees less RAM than is actually present, such as seeing only 3.25 GB of RAM instead of 4 GB. In most cases, the loss of RAM is caused by the PCI (peripheral component interconnect) memory space that is located just below 4 GB. This is commonly called the “PCI memory hole.” The PCI memory hole ranges from .5 GB to 2.0 GB, but is often about .75 GB. PCI memory is configured as “memory-mapped I/O,” which means it takes up standard memory address space to access hardware I/O locations. That memory space then becomes unavailable for use with actual memory. Originally, this did not cause issues because the amount of memory space taken was small and computers did not have that much memory. More recently, the PCI memory hole has become more of an issue because of the increased memory requirements and also because the PCI memory hole grew. The latest chipsets now have mechanisms available that allow the recovery of this memory space by mapping it to other address locations above 4 GB.
Older HP ProLiant servers may not have chipsets that allow the recovery of RAM; as of 2007, all shipping ProLiant servers support this feature.
Partial list of ProLiant servers with chipsets allowing the recovery of RAM HP BladeSystem c-Class servers HP ProLiant DL servers HP ProLiant ML servers ProLiant BL460c ProLiant DL140 G3 ProLiant ML110G4 ProLiant BL465c ProLiant DL145 G3 ProLiant ML115 ProLiant BL480c ProLiant DL320 G5 ProLiant ML150 G3 ProLiant BL680c G5 ProLiant DL320s ProLiant ML370 G5 ProLiant BL685c ProLiant DL360 G5 ProLiant ML310 G4 ProLiant BL20p G4 ProLiant DL365 ProLiant ML350 G5 ProLiant BL25p G2 ProLiant DL380 G5 ProLiant BL45p G2 ProLiant DL385 G2 ProLiant DL580 G5 ProLiant DL585 G2 To access this memory, the OS needs to be capable of working with memory addresses above 4 GB.
 The way to access the rest of the RAM is to enable the PAE (Physical Address Extension). PAE is available in the following operating systems: • Microsoft Windows 2000 Advanced Server • Microsoft Windows 2000 Datacenter Server • Microsoft Windows Server 2003, Enterprise Edition • Microsoft Windows Server 2003, Datacenter Edition
Steps: To enable PAE, the C:\boot.ini file needs to be edited.
To edit this file, go to the control panel for the Windows OS.
1. Click Start, point to Settings, and then click Control Panel.
2. In the Control Panel, double-click System.
3. Click the Advanced tab, and then click Settings under Startup Recovery. 4. Under System Startup, click Edit to display the C:\boot.ini command line. The current boot.ini command probably reads something like the following: multi(0)disk(0)rdisk(0)partition(1)\WINDOWS=”Microsoft Server 2003 Enterprise” /noexecute=optin /fastdetect 5. Add the PAE command at the end so the command reads something like: multi(0)disk(0)rdisk(0)partition(1)\WINDOWS=”Microsoft Server 2003 Enterprise” /noexecute=optin /fastdetect /PAE 6. Click OK to apply the change. Then reboot the system, then you will see entire RAM which you have installed.

Kushantha Gunawardana
MSc-IT, C|EH, C|HFI, CISE, IEEE, MBCS, MCS (lk), MCSE (W2K) + M MCSA (W2K3), HNDIT
E kushantha@gmail.com

Get rid of Babylon Toolbar (Removal Instructions)

This toolbar is ad-ware comes with various free tools. Babylon toolbar set your home page to Babylon URL and always redirect to their own search instead of user desired search engine. It also post adds and disturbs general user routine. Also it steals user bandwidth and generates unintended traffic to various other websites without users knowledge. I recommend two easy steps to get rid from Babylon.
1. Go to add remove program feature, and uninstall Babylon toolbar from the computer.
2. Then goto -> Run command, and Type “Regedit” and press enter. Then go to “View”-> press “Find”, then Type “Babylon”, and delete all the entries it finds about Babylon. Then close it and again open Browser.Now at this point you can see again Babylon has changed your general URL to its own one. Now go to registry editor again and search for “Babylon”. Once you found it (Usually general URL), change the value to http://www.google.com or your desired home page.
This will remove Babylon redirection. If you need to remove this completely I recommend to  Download  “Malwarebytes Anti-Malware FREE”, Scan system and remove all the malware.
Kushantha Gunawardana
MSc-IT, C|EH, C|HFI, CISE, IEEE, MBCS, MCS (lk), MCSE (W2K) + M MCSA (W2K3), HNDIT
E kushantha@gmail.com

INFORMATION SECURITY RELATED RISKS AND PREVENTION

Simple steps to prevent you being victimized for an Information Security based
Attack
Today information security has become a part of our lives. Consciously or not everyone uses
Information Technology (IT). Regardless of the extent of sophistication of Mobile phones,
Computers, iPods, iPhones, iPads, Navigation systems, and ATM Machines or Cyber cafes yet you
are at Information security related risk. Simply any device with processing power we call a
computer and if it has any form of connectivity it is called a communication device. The greater
number of features the equipment or the device has it becomes more vulnerable. Either category
of these devices falls within the classification of information technology base devices of equipment.
As a result of globalization any device invented and introduced today will be available in the open
market tomorrow. Most of the high tech devices available in the market have not been subjected to
proper information security testing procedures before they reach the general public. The reason is;
heavy competition among the production companies. Every company wants to release its own
product to the market before other competitors release other compatible products. This
competition compromises quality, security testing and other necessary post production procedures.
This becomes even worse when some critical high tech equipment and devices used by high-tech
intelligence agencies for their investigations can now be found in the Singapore, and Hong Kong
based Chinese open market at very low prices without any restrictions. Some of them can even be
ordered from home and delivered to one’s doorstep without verifying the intention of use.
This is an emerging issue in Asian countries including Sri Lanka. Since a growing number of
people are required to use information technology based equipment, processors and activities
these days, information security risks also have risen rapidly. According to recent reports many of
Sri Lanka’s young generation have been victims of Information Security related attacks. The main
reason is lack of awareness about information security risks related to the devices, technologies
and processors that they are using. This article attempts to describe, with examples, some of the
threats associated with Information Technology related equipment.The objective of this article is to give you a summarized form of information about technology/Devices and Procedures people use currently. This information describes their security risks and provides simple precautions one can take in order to prevent being victim to information security based attacks. Many of the researches and case studies have proven that most of the incidents happen due to lack of awareness about the
technologies and their impacts. I will not be discussing the technology or technical details of t
he devices and how their security can be breached, but will try to give you general understa
nding and awareness about the Information Security related risk of devices that you are using
and what simple precautions you can take in order to minimize the security risk. I have not gon
e into greater details since my objective is to prepare a simple paper of security risks and precau
tions. I have included in the final page some of the definitions of IT related terms that would be 
helpful.
Download full article in PDF format – Download

Thanks
Kushantha GunawardanaKushantha Gunawardana MSc-IT,C|EI,MCT,C|EH,C|HFI
MSc-IT, C|EH, C|HFI, CISE, IEEE, MBCS, MCS (lk), MCSE (W2K) + M MCSA (W2K3), HNDIT

காளான் மருத்துவ குணங்கள்:-

காளான் மழைக்காலங்களில் மட்கிப்போன பொருட்களின் மீது வளரும் ஒருவகை பூஞ்சையினமாகும். இயற்கையாய் வளரும் காளான்களில் சில விஷமுள்ளதாகவும், சில விஷமற்றதாகவும் வளரும். விஷக் காளான்கள் துர்நாற்றம் வீசக்கூடியதாகவும், அதிக வண்ண முடையதாகவும் இருக்கும்.

காளான் வளர்ப்பு சிறந்த வருவாய் ஈட்டித்தரும் எளிய தொழிலாக உள்ளது. இதனை பல இடங்களில் குடிசைத் தொழிலாக மேற்கொண்டு வருகின்றனர். காளான் மிகுந்த சுவையுள்ளதாகவும், மிகுந்த சத்துக்கள் கொண்டதாகவும் இருப்பதோடு மிகுந்த மருத்துவப் பயன் கொண்டதாக உள்ளது.

காளான் இதயத்தைக் காக்கும் அற்புத உணவாகும். காளான் இரத்தத்தில் கலந்துள்ள அதிகப்படியான கொழுப்பைக் கரைத்து இரத்தத்தைச் சுத்தப்படுத்தும் தன்மை கொண்டது. இதனால் உயர் இரத்த அழுத்தம் மற்றும் இரத்த நாளங்களின் உட்பரப்பில் உண்டாகும் கொழுப்பு அடைப்பைத் தடுக்கிறது.

காளானில் உள்ள லென்ட்டைசின்(lentysine), எரிட்டிடைனின்(eritadenin) என்ற வேதிப் பொருட்கள் இரத்தத்தில் கலந்துள்ள ட்ரை கிளிசரைடு பாஸ்போலிட் போன்றவற்றை வெகுவாகக் குறைக்கிறது.

இதில் எரிட்டினைன் கொழுப்புப் பொருட்களை எந்த வித பாதிப்பும் இல்லாமல் இரத்தத்திலிருந்து வெளியேற்றி பிற திசுக்களுக்கு அனுப்பி உடலை சமன் செய்கிறது.

இவ்வாறு உடலில் அதிகம் தேவையில்லாமல் சேரும் கொழுப்பு கட்டுப்படுகிறது. இதனால் இரத்தம் சுத்தமடைவதுடன் இதயம் பலப்பட்டு நன்கு சீராக செயல்படுகிறது. இதயத்தை பாதுகாப்பதில் காளானின் பங்கு அதிகம்.

பொதுவாக உயர் இரத்த அழுத்தம் ஏற்படும் போது உட்புறச் செல்களில் பொட்டாசியத்தின் அளவு குறையும். வெளிப்புறச் செல்களில் உள்ள சோடியம், உட்புறமுள்ள பொட்டாசியத்திற்கு சமமாக இருக்கும்.

இரத்த அழுத்தத்தின் போது வெளிப்புறத்தில் சோடியம் அதிகரிப்பதால் சமநிலை மாறி உற்புறத்தில் பொட்டாசியத்தின் அளவு குறைகிறது. இதனால் இதயத்தின் செயல்பாடு மாறிவிடுகிறது.

இத்தகைய நிலையைச் சரிசெய்ய பொட்டாசியம் சத்து தேவை. அவை உணவுப்பொருட்களின் மூலம் கிடைப்பது சாலச் சிறந்தது. அந்த வகையில் பொட்டாசியம் சத்து அதிகம் உள்ள உணவு காளான்தான். 100 கிராம் காளானில் பொட்டாசியம் சத்து 447 மி.கி உள்ளது. சோடியம் 9 மி.கி உள்ளது. எனவே இதயத்தைக் காக்க சிறந்த உணவாக காளான் உள்ளது.

மேலும் காளானில் தாமிரச்சத்து உள்ளதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. தாமிரச்சத்து இரத்த நாளங்களில் ஏற்படும் பாதிப்பை சீர் செய்யும். காளான் மூட்டு வாதம் உடையவர்களுக்கு சிறந்த நிவாரணியாகும். மலட்டுத்தன்மை, பெண்களுக்கு உண்டாகும் கருப்பை நோய்கள் போன்றவற்றைக் குணப்படுத்துகிறது.

தினமும் காளான் சூப் அருந்துவதால் பெண்களுக்கு உண்டாகும் மார்பகப் புற்றுநோய் தடுக்கப்படுவதாக காளான் பற்றிய சமீபத்திய ஆராய்ச்சியில் கண்டுபிடித்துள்ளனர். 100 கிராம் காளானில் 35 சதவீதம் புரதச்சத்து உள்ளது.

மேலும் உடல் வளர்ச்சிக்குத் தேவையான அமினோ அமிலங்கள் உள்ளதால், குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கு சிறந்த ஊட்டசத்தாக அமைகிறது. எளிதில் சீரணமாகும் தன்மை கொண்டது.

கடும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உடல் இளைத்தவர்கள் தினமும் காளான் சூப் அருந்தி வந்தால் விரைவில் உடல் தேறும். காளானை முட்டைகோஸ், பச்சைப் பட்டாணியுடன் சேர்த்து சமைத்து அருந்தி வந்தால் வயிற்றுப்புண் குணமாகும்.

மன நோயைப் பற்றி சில உண்மைகள்

இப்பொழுதெல்லாம் மருத்துவ ரீதியாக, மனநோயும் இதர நோய்களை போலவே ஒரு வியாதியாகவே கருதப்படுகிறது. ஏனெனில் இந்நோயை சிகிச்சை மூலமாக கட்டுப்படுத்தக் கூடும். சில சந்தர்ப்பங்களில் பூரணமாக குணப்படுத்தவும் முடியும் என்பதனாலேயே.

மன நோய் வெட்கப்பட வேண்டிய ஒன்றானதாகவோ, குழப்பத்தையும், திகைப்பையும் உண்டு பண்ண கூடியதாகவோ, தற்காலத்தில் எண்ணப்படுவதில்லை. மேலும் ஆபத்தை தருவது, தீராதது, சமூகத்தின் பார்வையிலிருந்து மறைத்து வைக்கப்பட்ட வேண்டிய நோய், மனநோய் என்பதும் உண்மையன்று.

மன நோயும், அறிவுத்திறன் குறைவும் ஒன்று என கொள்ளலாமா?
மன நோயும், அறிவுத்திறன் குறைவும் ஒன்றேயல்ல. அவை, வேறானவை. அறிவுத்திறன் குறைந்தவர்களிடையேயும் சில மன நோய்களும் ஏற்படுவதுண்டு. ஆனால் மனநோய் உள்ளவர்கள் யாவரும் அறிவுத்திறன் குன்றியவர்கள் ஆகமாட்டார்கள்.

அறிவுத்திறன் குன்றியவர்கள், கற்றுக் கொள்வதிலே சிரமும், தாமதமும், உள்ளவர்களாயிருப்பர். பொதுவாகவே குழந்தைப் பருவத்திலேயே இந்தக் கோளாறு இருப்பதைக் கண்டறியக் கூடும். இது மிகவும் கடுமையானதாகவும், அல்லது மத்தியதரமானதாகவும், இருக்கக்கூடும்.

இந்தக் கோளாறுக்கு காரணங்கள், மூளை பாதிக்கப்படுதல், சினை அணுக்களில் சீரழிவு, வளர்ப்பு ஏதுக்களில் கெடுதி முதலியனவாகும். ஆரம்பத்திலேயே அறிவுத்திறன் அளவை நிச்சயித்து, அதற்குத் தகுந்த, உரிய பயிற்சிகள் தருவதன் மூலம், அறிவு நிலை குன்றியோர் வாழ்வில், நல்லதொரு திருப்பமும், மாற்றமும் கொண்டு வரக்கூடும்.

மனநோய் பாரம்பரியமாய் பெற்றோர்களிடமிருந்து குழந்தைகளுக்கு வழிவழியாய் வரக்கூடுமா?
சில வகையான மனநோய்கள், உதாரணமாக, மனமுறி நோய், மன எழுச்சி நோய் போன்றவை, சில குடும்பங்களில் (இதர குடும்பங்களை விட) அதிகமாய் தோன்றி பாதிக்கின்றன. பாரம்பரியக் கோளாறே இந்நிலைக்கு அடிப்படையாய், ஆதரவாய், இருக்கிறது எனக் கூறலாம்.

பாரம்பரியத்தால் வரும் தீங்கு என்னவென்றால், மனநோய் தோற்றுவாய்க்கு, எளிதில் ஆளாக்கும் தன்மையை, நிலையை, உற்பத்தியாக்குவதேயாம். எனினும், மற்ற பல காரணங்களும் நோய் விளைவுக்கு அவசியமாயிருப்பதனாலே ஓரிருவரைத் தவிர, அக்குடும்பத்தைச் சேர்ந்த பெரும்பாலோர், இந்த நோயால் தாக்கப்படுவதில்லை.

மனநோய் தொற்று நோயாகுமா?

மனநோய் தொற்று நோய் அல்ல. அம்மை நோய், மண்ணை கட்டி நோய், தட்டம்மை போன்று ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு தொற்றி பரவும் நோய், மனநோய் அல்ல.

மன நோயாளர் வன்முறையாளர்கள்?

சமூகத்தில் உள்ள பெரும்பாலரை விட, மன நோயால் பாதிக்கப்பட்டவர், வன்முறைகளை கையாளுபவர் என கொள்ளுதல் சரியானதாகாது. எனினும் மன நோயாளர் அச்சமும், ஐயுறவும் கொண்டிருப்பதாலேயே குழப்பத்தோடு பயற்திற்கேற்ப, சமூகத்தை பாதிக்கும் செயல்கள் ஆற்றுகிறார்கள் என கொள்ளலாம்.

அப்பேற்பட்ட சந்தர்ப்பங்களில் சமூகப் பாதுகாப்பிற்காகவும் நோயாளியின் நலனையும் கருதி, அவர்களை கட்டுப்படுத்த வேண்டிய அவசியமேற்படுகிறது.

மனநோயாளிகளின் நலன்களைக் கருதி அவர்களை பூட்டி பாதுகாப்பில் வைக்க வேண்டுமா?

பெரும்பாலான மன நோயாளிகள், ஆஸ்பத்திரியில் சேர்க்கப்படாமலேயே, வெற்றிகரமாய் குணப்படுத்தப்படுகிறார்கள். அதனால் அநேகருக்கு மருத்துவமனையில் சேர்க்கப்பட வேண்டிய அவசியமில்லாமல் போய் விடுகிறது. எனினும், ஒரு சிலர் நோயின் கொடுமையால் மிகவும் பாதிக்கப்படுவதின் நிமித்தம்.

மருத்துவமனையில் சேர்ந்து தீவிர சிகிச்சையும், ஆதரவும் பெற வேண்டியிருக்கிறது. என்றாலும், பெரும்பாலோர் முரட்டுத்தனமாக இருப்பதில்லை. மனநோய் மருத்துவமனையில் பெரும்பாலான அறைகள், பகுதிகள், பூட்டி வைக்கப்படுவதில்லை. மிகச் சிலரையே சமூகப் பாதுகாப்பிற்காகவும், நோயாளியின் சொந்த பாதுகாப்பிற்காகவும், பூட்டி வைக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறது.

மனேநோயை குணப்படுத்த முடியுமா?

மக்களில் பலர், தங்கள் வாழ்க்கையில் ஒரே ஒருமுறை தான் மனநோயால் அவதியுற்று, பிறகு எப்போதுமே அந்நோயால் பாதிக்கப்படாமலே இருக்கின்றார்கள். ஒருசிலர், பலதடவை, மறுபடியும் மறுபடியுமாக, மனநோயால் தாக்கப்படுகிறார்கள்.

மிகச் சிறுபான்மையினர் தங்கள் வாழ்நாள் முழுவதும் மனநோயால் கஷ்டப்படுகிறார்கள். உடலைப் பற்றிய நோய்களை போலவே மன நோய்களிலும் மறுபடியும் பிணிவாய்ப்படுதல் என்பது, சகஜமாய் நிகழக்கூடியது தான். மேலும் பல வருடங்களாக நோயால் பாதிக்கப்பட்டவர்களும் குணமடையலாம்.

குழந்தைகளின் அழுகைக்கான காரணங்கள் :-

குழந்தைகளின் அழுகைக்கு பல காரணங்கள் இருக்கின்றன. குழந்தைகளின் அழுகைக்கு என்ன காரணம், அதை எப்படி கண்டுபிடிப்பது என்பதை இங்கே காணலாம்.. பசியால்தான் பெரும்பாலும் குழந்தைகள் அழும். பசியால் அழுதால் எளிதாக கண்டு பிடித்துவிடலாம்.

குழந்தைகள் பால்குடிக்கும்போது என்ன அறிகுறிகளை காட்டுமோ அதை எல்லாம் அந்த அழுகையோடு வெளிப்படுத்தும். கைவிரலை சப்புதல், பால்குடிப்பதுபோல் உதடுகளை சுளித்தல், உதடுகளை அம்மாவின் உடல் மீது சேர்த்தல், அம்மாவின் முகத்தை பார்த்தல் போன்றவைகள் எல்லாம் பசியால் ஏற்படும் அழுகையின்போது வெளிப்படும்.

பசி தீர்ந்து, குழந்தை நன்றாக தூங்கும்போது திடீரென்று அழுதால் சிறுநீர் கழித்து நனைந்திருக்கிறது என்று அர்த்தம். அதுதான் காரணம் என்றால், நனைந்த துணியை மாற்றியதும் குழந்தை நிம்மதியாக தூங்கத் தொடங்கிவிடும்.

வீட்டில் அதிக சத்தமோ, திடீர் சீதோஷ்ணநிலை மாற்றமே ஏற்பட்டால் அது குழந்தைகளின் தூக்கத்தை பாதிக்கும். அப்போதும் அழத் தொடங்கிவிடும். குளிப்பாட்டி, பசியை தீர்த்ததும் எல்லா குழந்தைகளும் தூக்கத்திற்கு தயாராகிவிடும். அப்போது தூக்கத்திற்கு ஏற்ற சூழ்நிலை அமையாவிட்டால் குழந்தைகள் அழுதுவிடும். அந்த குழந்தையின் அருகில் இருந்து மற்ற குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்தாலும், தூங்க முடியாமல் குழந்தை தவிக்கும்.

சில நேரங்களில் குழந்தைகள் அம்மா தன்னை தூக்கி கொஞ்சவேண்டும் என்பதற்காகவும் அழும். அப்போது அம்மா எடுத்து, நெஞ்சோடு சேர்த்து, கொஞ்சி சிறிது நேரம் பேசினால் அழுகையை நிறுத்திவிடும். அம்மாவின் பாதுகாப்பும், அரவணைப்பும், வருடலும் குழந்தைகளுக்கு எப்போதும் தேவைப்படுகிறது. அது கிடைக்காதபோது அழுகையைத் தொடங்கிவிடும்.

குழந்தைகளை அதிகமாக அழவைப்பது, அதன் வாயு தொந்தரவு. பால் குடித்த சிறிது நேரத்திலே இந்த தொந்தரவு ஏற்பட்டு குழந்தைகள் அழும். பிறந்த 3, 4 மாதங்களில் வாயு தொந்தரவு அதிகம் ஏற்படும். அதனால் பால் புகட்டியதும் சிறிது நேரம் தோளில் போட்டு தட்டிக்கொடுத்தால் குழந்தை ஏப்பம் விடும். அப்போது வாயு வெளியேறிவிடும்.

பால் புகட்டியதும் குழந்தையை படுக்கவைக்காமல் இருந்தால், இந்த அழுகை ஏற்படாது. குளிர் அல்லது திடீர் உஷ்ணத்தை குழந்தைகளால் தாங்கிக்கொள்ள முடியாது என்பதாலும் அழும். குளிப்பாட்டிவிட்டு உடனே தலையை துவட்டி, உடலை துடைக்காவிட்டாலும், நனைந்த நாப்கினை மாற்ற தாமதமானாலும் குளிரால் குழந்தைகள் அழும்.

குழந்தைகளை குளிப்பாட்டி முடிந்ததும் உடனே உடலை துடைத்துவிடவேண்டும். குளிர்ந்த நீரிலும், சுடுநீரிலும் குழந்தைகளை குளிப்பாட்டக்கூடாது. குளிப்பாட்டும் நீரில் டெட்டால் போன்ற எதையும் கலக்கவும்கூடாது. பேபி சோப், பேபி லோஷன் போன்றவற்றை மட்டும் பயன்படுத்தவேண்டும்.

பல் முளைக்கும்போது சில குழந்தைகள் வலியால் அழும். அந்த அழுகை நீடித்தால் குழந்தையை டாக்டரிடம் காண்பிப்பதே நல்லது. 4 முதல் 7 மாதத்திற்குள் முதல் பல் முளைக்கும். அப்போது ஈறை தடவிப் பார்த்தால் உணர முடியும்.

அறிமுகமற்றவர்கள் தூக்கும்போதும், ஆடை தொந்தரவாக அமையும்போதும், பால் குடிப்பதும்- தூங்குவதுமாக பொழுதை போக்கி போரடித்தாலும் குழந்தைகள் அழும். காரணத்தைக் கண்டறிந்து, சரி செய்ய முடியாதபோது அழும் குழந்தையை டாக்டரிடம் கொண்டுபோய் காண்பிப்பதே சரியான வழி.

Taal Volcano, Luzon Island (Philippines)


An island, within a lake, in a volcano, in a lake, on an island 

Taal Volcano, Luzon Island (Philippines)

Leaf art

Amazing Predator

Tuesday, March 11, 2014

ANCIENT TRIPURAA SUNDARI TEMPLE ....


Naggar, Himachal Pradesh.

Tripurasundarī ("Beautiful (Goddess) of the Three Cities") or Mahā-Tripurasundarī ("Great Beautiful (Goddess) of the Three Cities"), also called Ṣoḍaśī ("Sixteen"), Lalitā ("She Who Plays"[1]) and Rājarājeśvarī ("Queen of Queens, Supreme Ruler"), is one of the group of ten goddesses of Hindu belief, collectively called Mahavidyas. She is the highest aspect of Goddess Parvati.

As true knowledge she is called Samvit, which is the power to comprehend all things as consciousness itself.

शिन्दुररुन विग्रहम् त्रिनयनम् मनिक्यमौलि स्फुरत्
टर नयक शेखरम् स्मितमुखिम् अपिन वक्शोरुहम् ।
फनिभ्यम् अलिपूर्न रत्न चशकम् रक्तोत्पलम् बिभ्रतिम्
शौम्यम् रत्न घतस्थ रक्तचरनम् ध्ययेत् परमम्बिकम्॥

Sinduraruna vigraham trinayanam manikyamauli sphurat
Tara nayaka shekharam smitamukhim apina vakshoruham |
Panibhyam alipoorna ratna chashakam raktotpalam bibhratim
Saumyam ratna ghatastha raktacharanam dhyayet paramambikam||

The Divine mother is to be meditated upon as shining in a vermilion-red body, with three eyes, sporting a crown of rubies studded with the crescent moon, a face all smiles, a splendid bust, one hand holding a jewel-cup brimming with mead, and the other twirling a red lotus.

As Shodashi, Tripurasundari is represented as a sixteen-year-old girl, and is believed to embody sixteen types of desire. Shodashi also refers to the sixteen syllable mantra, which consists of the fifteen syllable (panchadasakshari) mantra plus a final seed syllable. The Shodashi Tantra refers to Shodashi as the "Beauty of the Three Cities," or Tripurasundari.

Tripurasundari is the primary goddess associated with the Shakta Tantric tradition known as Sri Vidya.The Goddess Who is "Beautiful in the Three Worlds" (Supreme Deity of Srikula systems); the "Moksha Mukuta".

கற்பு

வரதர்

 

 









மாலை நாலரை மணி. பிள்ளையார் கோயில் கணபதி ஐயர் வீட்டில் முன்விறாந்தையில் மூர்த்தி மாஸ்டரும் ஐயரும் கதைத்துக் கொண்டிருக்கிறார்கள். எங்கெல்லாமோ சுற்றிவந்து கடைசியில் இலக்கிய உலகத்திலே புகுந்தார்கள்.

''மாஸ்டர், நீங்கள் 'கலைச்செல்வி'யைத் தொடர்ந்து படித்து வருகிறீர்களா?'' என்று கேட்டார் ஐயர்.

''ஓமோம், ஆரப்பத்திலிருந்தே 'பார்த்து' வருகிறேன். ஆனால் எல்லா விடயங்களையும் படித்திருக்கிறேனென்று சொல்ல முடியாது. ஏன் என்ன விசேஷம்?''

''கலைச்செல்வி பழைய பிரதி ஒன்றை இன்றுதான் தற்செயலாகப் படித்துப் பார்த்தேன். அதிலே ஒரு சிறுகதை....''

''யார் எழுதியது?''

''எழுதியவர் பெயரைக் கவனிக்கவில்லை. அந்தச் சம்பவந்தான் மனதை உறுத்திக்கொண்டே இருக்கிறது.''

''சொல்லுங்கள். நினைவு வருகிறதா பார்க்கலாம்?''

''மூன்றாம் வருஷம் இலங்கையில் பெருவெள்ளம் ஏற்பட்டதல்லவா? அந்தச் சூழ்நிலையை வைத்துக் கதை எழுதப்பட்டிருக்கிறது. குளக்கட்டை உடைத்துக்கொண்டு ஒரு கிராமத்துக்குள் வெள்ளம் பெருகி வருகிறது. சனங்கள் உயரமான இடத்தைத் தேடி ஓடுகின்றார்கள். அந்த ஊரில் ஒரு பணக்காரனின் வீட்டுக்கு 'மேல் வீடு'ம் இருக்கின்றது. அங்கே அவன் தனியாக இருக்கிறான். வெள்ளத்துக்கு அஞ்சி ஒரு ஏழைப்பெண் - இளம் பெண் - அந்த மேல் வீட்டுக்குச் செல்கிறாள், பணக்காரன் அவளைப் பதம் பார்க்க முயல்கிறான். அவள் இசையவில்லை. அவன் பலாத்காரம் செய்தேனும் அவளை அடைந்துவிடத் துணிந்து விட்டான். அவள் உயிரைவிடக் கற்பையே பெரிதாக மதிப்பவள். மேல் வீட்டிலிருந்து கீழே குதித்து உயிரைத் துறந்தாள். கற்பைக் காப்பாற்றிக் கொண்டாள்.... இந்தக் கதையைப் பற்றி என்ன நினைக்கீர்கள் மாஸ்டர்?''

''என்ன நினைக்கிறது? புராண காலத்தில் இருந்து திருப்பித் திருப்பிப் படித்த 'கருத்து'த் தான். கதையை அமைத்த முறையிலும், வசன நடையின் துடிப்பிலும் தான் இந்தக் கதைக்கு வாழ்வு கிடைக்கும். நான் படிக்கவில்லை படித்தால் தான் அதைப் பற்றிச் சொல்லலாம்.''

''நான் கதைக்கு விமர்சனம் கேட்கவில்லை மாஸ்டர். புராண காலத்திலிருந்து படித்ததாதச் சொன்னீர்களே. அந்தக் கருத்தைப் பற்றித்தான் உங்கள் அபிப்பிராயம் என்ன என்று கேட்கிறேன்.''

''எதைக் கேட்கிறீர்கள் ஐயா? தனது கற்பைக் காப்பாற்ற உயிரைத் துறந்தாளே, அதைப்பற்றியா?''

''ஓமோம், அதையே தான்''

''ஒரு பெண்ணின் - முக்கியமாகத் தமிழ்ப் பெண்ணின் சிறப்பே அதில்தானே இருக்கிறது. மானம் அழிந்தபின் 'வாழாமை இனிதென்பதல்லவா தமிழின் கொள்கை?'''

ஐயர் பெருமூச்சு விட்டார். பிறகு, ''நீங்களும் இப்படிச் சொல்கிறீர்களா?'' என்று கேட்டார்.

மூர்த்திமாஸ்டர் திகைத்தார். நான் என்ன தவறுதலாகச் சொல்லிவிட்டேன்? இந்த ஐயர் என்ன இப்படிக் கேட்கிறார்?

ஒரு நிமிஷநேரம் மௌனம் நிலவிற்று. ஏதோ எண்ணித் துணிந்து விட்டவர் போல கணபதி ஐயரே மீண்டும் மௌனத்தைக் கலைத்தார்.

'மாஸ்டர், எனக்கும் என் மனைவிக்கும் தெரிந்த ஒரு இரகசியத்தை உங்களுக்கு சொல்லப் போகிறேன். உங்களுக்கு சொல்லலாம். சொல்வதால் ஒரு தீமையும் ஏற்படாது. இதைக் கேட்ட பிறகு 'கற்பு' பிரச்சனையைப் பற்றிப் பேசுவோம்.
........................................................

போன வருஷம் பெரியந்தனை முருகமூர்த்தி கோயிலில் நான் பூசை செய்து கொண்டிருந்தது உங்களுக்குப் தெரியும். அங்கே தமிழர்கள் தொகை ஐம்பது பேர் கூட இருக்காது. விசேட தினங்களுக்கு மட்டும் பிற இடங்களில் இருந்தெல்லாம் வந்து கூடுவார்கள். சிங்களவர் கூடப் பலர் கோயிலுக்கு வந்து அருச்சனை செய்விப்பது வழக்கம்.

சிங்களவர் - தமிழர் கலகம் துவங்கினவுடனே அங்கே இருந்த தமிழர்களில் முக்கால்வாசிப் பேரும் யாழ்ப்பாணத்துக்கு ஓடி வந்து விட்டார்கள். நான் பூசையை விட்டு விட்டு எப்படிப்போக முடியும்? என் மனைவியைப் போகும்படி சொன்னேன். எனக்கு வருவது தனக்கும் வரட்டும் என்று அவள் மறுத்து விட்டாள். சிங்களவரும் அக்கோயிலிலே கும்பிட வரும் வழக்கம் இருந்ததால் கோயில் விஷயத்தில் தலையிடமாட்டார்கள். எங்களுக்கும் ஆபத்து நேராது என்ற துணிவில், அவளை மேலும் வற்புறுத்தாமல் விட்டு விட்டேன்.

ஒரு புதன்கிழமை, அன்று பேபிநோனா என்ற சிங்களக் கிழவி – அவள் எங்களோடு நன்கு பழகியவள் - கோயிலுக்கும் நாள் தவறாமல் வருகிறவள் - அவள் சொன்னாள் - 'நீங்கள் இனி இங்கேயிருப்பது புத்தியில்லை ஐயா. காலியிலிருந்து சில முரடர்கள் மூன்று லொறிகளில் வருகிறார்களாம். வருகிற வழியெல்லாம் தமிழர்களை இல்லாத கொடுமை செய்கிறார்களாம். இன்றிரவோ நாளையோ இந்தப் பக்கம் வரக்கூடுமென்று கதைக்கிறார்கள். நீங்கள் இப்போதே புறப்பட்டு பொலீஸ் துணையோடு கொழும்புக்குச் செல்லலாம்' – என்றாள்.

அவள் சொன்னதைக் கேட்ட பிறகு, 'அப்பனே முருகா! என்னை மன்னித்துக்கொள்' மனதுக்குள் வேண்டிக் கொண்டு கையோடு கொண்டுபோகக் கூடிய பொருட்களை இரண்டு பெட்டிகளுள் சேகரித்தோம். என் மனைவியின் நகைகளையும் - நூலில் கட்டிய தாலி ஒன்றைத் தவிர – எல்லாவற்றையும் கழற்றிப் பெட்டியில் பூட்டினோம். இந்த ஆயத்தங்கள் செய்வதற்குள் மாலை ஐந்து மணியாகிவிட்டது. பேபி நோனா அவசரம் அவசரமாக ஓடிவந்தாள். 'ஐயா, ஐயா சில்வாவும் வேறு இரண்டு பேருமாக வாறாங்கள். அம்மாவை அவர்கள் கண்ணில் படாமல் எங்கேயாவது ஒளித்திருக்கச் சொல்லுங்கோ! கேட்டால் 'நேற்றே ஊருக்குப் போய்விட்டா' என்று சொல்லுங்கோ. நான் இங்கே நின்றால் எனக்கும் ஆபத்து, உங்களுக்கும் ஆபத்து' கவனம் ஐயா' – என்று சொல்லிவிட்டு பேபிநானோ ஓடி மறைந்து விட்டாள்.

சில்வாவை எனக்குத் தெரியும், ஆள் ஒருமாதிரி 'ஐயா ஐயா, என்று நாய் மாதிரிக் குழைந்து ஐப்பது சதம், ஒரு ரூபா என்று இடைக்கிடை என்னிடம் வாங்கி இருக்கிறான். ஆள் காடைத் தரவளியாதலால் நானும் பட்டும் படாமலும் நடந்து வந்திருக்கிறேன். இரண்டொரு நாள் என் மனைவியை றோட்டில் தனியாகக் கண்டபோது அவனுடைய பார்வையும், சிரிப்பும் நன்றாக இருக்கவில்லை என்று அவள் சொல்வதுண்டு.

இப்போது அவன் வருகிறானென்றால் எனக்கு ஒரு கணம் ஒன்றும் தோன்றவில்லை. யோசிக்கவும் நேரமில்லை. வீட்டுக்குள் உயரத்தில் பரண் மாதிரி மூன்று மரங்களைப் போட்டு அதன்மேல் சில பழைய பெட்டிகளைப் போட்டிருந்தோம். என் மனைவியை நான் தூக்கி அந்த மரங்களின் மேல்விட்டு மெதுவாக அந்தப் பெட்டிகளின் பின்னால் மறைந்திருக்கும்படி விட்டேன். பின் எங்கள் பயணப் பெட்டிகளை எடுத்துச் சற்று மறைவாக ஒரு மூலையில் வைத்துவிட்டேன். பிறகு முன் விறாந்தைப் பக்கம் வந்தேன். நானும் வர, அந்தக் காடையர்களும் வாயிலில் நுழைந்தார்கள். எனக்கு உள்மனது நடுங்க ஆரம்பித்துவிட்டது. இருந்தாலும் சமாளித்துக்கொண்டு, 'என்ன சில்வா, இப்பப் பக்கம்?' என்று சிரிக்க முயன்றேன்.

''சும்மாதான், நீங்கள் இருக்கிறீகளா இல்லாவிட்டால் யாழ்ப்பாணத்துக் கம்பி நீட்டி விட்டீர்களா என்று பார்க்கத்தான் வந்தேன்'' என்றான்.

''முருகனை விட்டு நான் எங்கே தான் போக முடியும்?'' என்று சொன்ன என் குரலே தெளிவாக இல்லை.

'எங்களுக்குக் கொஞ்சம் தண்ணீர் குடிக்க வேண்டும்.' என்றான் சில்வா. நான் சரியென்று குசினிப் பக்கம் போனேன். எனக்குப் பின்னால் அவர்கள் தொடர்ந்து வருவதை உணர்ந்தேன். ஆனாலும் திரும்பிப் பார்க்கவில்லை. ஒரு செம்பில் தண்ணீரை வார்த்துக் கொண்டு நிமிர்ந்தேன். எனக்கு முன்னால் அந்த மூன்று காடையர்களும் நின்றார்கள். செம்பைப் பிடித்த எனது கையில் நிதானமில்லை.'

''அது சரி ஐயா, எங்கே அம்மாவைக் காணவில்லை.''

நான் திரும்பித் திரும்பி மனதிற்குள் ஒத்திகை பார்த்து வைத்திருந்த வசனங்களை ஒப்புவித்தேன். 'அவநேற்றே ஊருக்குப் போய் விட்டாவே.' 'பளீர்' என்று என் கன்னத்தில் ஒரு அறை விழுந்தது. செம்பும் தண்ணீரும் உருண்டு சிதறிற்று. என் கண்களுக்குப் பார்வை வரு முன்பே என் மடியில் கையைப் போட்டு ஒருவன் இழுத்தான். மற்றக் கையினால் வயிற்றில் ஒரு குத்து விட்டான்.

தமிழ்பண்டி, பொய்யா சொல்லுகிறாய்? இன்று காலையில் கூட உன் பொண்டாட்டியைப் பார்த்தேனே!'

மற்றவன் கேட்டான்: 'சொல்லடா! அவளை யார் வீட்டில் கொண்டுபோய் ஒளித்து வைத்திருக்கிறாய்?' –எனக்கு நெஞ்சில் கொஞ்சம் தண்ணீர் வந்தது. இந்த முரடர்கள் நான் அவளை வேறு யார் வீட்டிலோ ஒளித்து வைத்திருப்பதாக நினைத்து விட்டார்கள். ஆகையால் இந்த வீட்டில் அதிகம் பார்க்க மாட்டார்கள். என் உயிர் போனாலும் சரி, அவள் மானம் நிலைக்கட்டும் என்று நினைத்துக் கொண்டேன்.

''என்னடா பேசாமல் நிற்கிறாய்?''

குத்து! அடி! உதை!
குத்து! அடி! உதை!
குத்து! அடி! உதை!

நான் இயக்கமின்றிக் கிழே விழுந்து விட்டேன். அம்மட்டிலும் அவர்கள் விடவில்லை. இரண்டு பேர் என்னைப் பிடித்து தூக்கினார்கள்.

''அவள் இருக்கிற இடத்தை நீ சொல்லமாட்டாய்? கடைத் தெருப்பக்கம் காலியிலிருந்து லொறியில் வந்திருக்கிறான்கள். அவன்களிடம் உன்னைக் கொண்டு போய்க் கொடுத்தால் உன்னைத் தலை கீழாகக் கட்டித் தூக்கித் தோலை உரித்த பிறகு கீழே நெருப்பைக் கொழுத்திச் சுடுவான்கள். உனக்கு அது தான் சரி! வாடா!'' என்று சொல்லி இழுத்தார்கள். என்னால் நடக்கவும் முடியவில்லை. அவ்வளவு அடி அகோரம். அவர்கள் என்னை இழுத்துக்கொண்டு நடு வீட்டுக்கு வந்து விட்டார்கள். மேலே என் மனைவி.... அந்த அறையையும் கடந்து வெளியே காலை வைத்து விட்டார்கள்.

''நில்லுங்கள்! நில்லுங்கள்!'' என்ற கூச்சலோடு என் மனைவி பரணிலிருந்து குதித்தாள்.

''அவரை விட்டு விடுங்கள்!''  என்று அலறிக் கொண்டே என்னிடம் ஓடி வந்தாள்.

அவர்கள் என்னை விட்டு விட்டார்கள். ஆறு முரட்டுக் கரங்கள் அவளை மறித்துப் பிடித்தன.

பிறகு....

என்னை ஒரு மேசையின் காலோடு பின் கட்டாகக் கட்டினார்கள். அவளை – என் மனைவியை குசினிப் பக்கம் இழுத்துக் கொண்டு போனார்கள். இரண்டொரு நிமிஷங்களில் அவளுடைய அலறல் கேட்டது. பிறகு அவள் அலறவில்லையோ, அல்லது நான் தான் இரத்தம் கொதித்து மூளை கலங்கி, வெறி பிடித்து, மயங்கி விட்டேனோ?

மறுபடி எனக்கு நினைவு வரும் பொழுது அதே மேசையடியில் அவ்விதம் ஒருவருடைய மடியில் படுத்திருப்பதை உணர்ந்தேன். என்னை அவ்விதம் ஆதரவாகத் தூக்கி மடிமீது வைத்திருப்பது யாரென்று அறிய ஒரு ஆவல். கண்களைத் திறந்து பார்த்தேன்.

என் மனைவி.

மானம் அழிந்த என் மனைவி...

எத்தனையோ நூற்றாண்டுகளாக ஊறிப்போன 'கருந்து' என்னைச் சித்திரவதை செய்தது. மானத்தை இழந்த என் மனைவியின் மடிமீது தலை வைத்துப்படுத்திருக்கிறேன்.... என் உடம்பு கூனிக் குறுகியது. எழுந்து வெளியே நிலத்தில் விழுந்து விடவேண்டுமென்று மனம் உன்னிற்று.

என் முகத்திலே ஒரு சொட்டுக் கண்ணீர். இன்னொன்று இன்னொன்று என் முகம் அவள் கண்ணீரால் நனைய, மனமும் சிந்திக்கத் தொடங்கியது.

மூன்று விஷப்பாம்புகள் அவளைக் கடித்து இன்பத்தை உறுஞ்சின. அவள் உடலும் உள்ளமும் வேதனையால் துடித்தன. எரிந்து போகிற உடலை யாரோ என்னவோ செய்தார்கள். மனம் சிறிதும் சம்பந்தப்படாத போது வெறும் உடலுக்கு நேர்ந்த தீங்கினால் மானம் அழிந்து விடுமென்றால் பிரசவத்திற்காக டாக்டரிடம் போகும் பெண்களெல்லாம்....

என் மனதில் எழுந்த அருவருப்பை வெளியே இழுத்தெடுத்துத் தூர வீசினேன். பரிதாபப்படவேண்டிய, பாராட்டப்பட வேண்டிய என் மனைவியின் பெருமை என் நெஞ்செல்லாம் நிறைந்தது. மெதுவாக அவள் கைகளைப் பற்றி என் மார்போடு அணைத்துக் கொண்டேன்.

பிறகு பொலிஸ் வந்தது. பேபி நோனா தான் அந்த உதவியைச் செய்தாளென்று பின்னால் தெரிந்து கொண்டேன். என்னவோ கஷ;டங்களெல்லாம் பட்டு, அகதி முகாமில் கிடந்துழன்று எப்படியோ இங்கு வந்து சேர்ந்தோம்.

...................................................

''இப்பொழுது சொல்லுங்கள் மாஸ்டர். பலாத்காரத்தினால் ஒரு பெண்ணின் உடல் ஊறு செய்யப்பட்டால் அவள் மானம் அழிந்து விடுமா? அதற்காக அவள் உயிரையும் அழித்து விடவேண்டுமா...? அப்படி உயிரை விட்டவளைப் பத்தினித் தெய்வமென்று கும்பிட வேண்டுமா? கணவன் இறந்தவுடன் உடன் கட்டை ஏறியவள் அப்படிச் செய்வதே கற்புடைய மகளிர் கடமை என்ற சமூகக் கருத்தினால் உந்தப்பட்டு ஏற்றப்பட்டவள் பத்தினித் தெய்வமா, அல்லது பகுத்தறிவற்ற சமுதாயத்திற்குப் பலியான பேதையா?.... சொல்லுங்கள் மாஸ்டர்....!''

கணபதி ஐயர் உணர்ச்சி மேலீட்டினால் பொருமினார்.

''என்னை மன்னித்துக் கொள்ளுங்கள் ஐயா! இப்படித்தான் பரம்பரை பரம்பரையாக இரத்தத்தில் ஊறிப்போன பல விஷயங்களைப் பற்றிச் சிந்திக்காமலே அபிப்பிராயம் கொண்டு விடுகிறோம். நான் கூட எவ்வளவு முட்டாள் தனமாக அபிப்பிராயம் சொல்லிவிட்டேன்... ஐயா, பகுத்தறிவு, பகுத்தறிவு என்று சொல்லிக் கொண்டு தேவையில்லாத விஷயங்களிலெல்லாம் வாய்வீச்சு வீசுகின்ற பலரை எனக்குத் தெரியும். ஆனால் உண்மையான பகுத்தறிவு வாதியை இன்றைக்குக் கண்டு பிடித்து விட்டேன்'' என்று சொன்னார் மூர்த்தி மாஸ்ரர். ஐயர் வீட்டுச் சுவரிலே இருந்த மகாத்மா காந்தியின் படம் - அதிலே ஐயரின் சாடை தெரிவது போலத் தோன்றிற்று மூர்த்தி மாஸ்டருக்கு.

Researchers 'design for failure' with model material


Detail —When deciding what materials to use in building something, determining how those materials respond to stress and strain is often the first task. A material's macroscopic, or bulk, properties in this area—whether it can spring back into shape, for example—is generally the product of what is happening on a microscopic scale. When stress causes a material's constituent molecules to rearrange in a way such that they can't go back to their original positions, it is known as "plastic deformation."

Researchers at the University of Pennsylvania have devised a method to study stress at the macro and micro scales at the same time, using a model system in which microscopic particles stand in for molecules. This method has allowed the researchers to demonstrate an unusual hybrid behavior in their model material: a reversible rearrangement of its particles that nevertheless has the characteristics of plastic deformation on the macroscale. That kind of plastic deformation is more akin to what happens with ketchup or toothpaste, a liquid-like flowing instead of a brittle fracturing of the material's particles.

Their study could pave the way for designing this potentially useful trait into new materials. Plastic deformation dissipates energy rather than transferring it, so a material that could repeatedly deform in this way could be used to dampen vibrations or protect against impacts.

The study was conducted by postdoctoral researcher Nathan Keim and professor Paulo Arratia, both of the Department of Materials Science and Engineering in Penn's School of Engineering and Applied Science. It was published in Physical Review Letters . "If you're driving your car and you hit a lamppost, your car would be totally deformed," Arratia said. "That's plastic deformation because it's irreversible. When you put your car into reverse and back up away from the lamppost, it's not as if the car just springs back into shape. And even if you take it to the body shop and hammer it out to look like new, it's never going to be the same again on the atomic level."

"On the other end of the spectrum," Keim said, "there's elastic deformation. Those deformations are usually reversible rearrangements. If you take a piece of steel and deform it just a little bit, like sitting on the hood of your car rather than running it into a lamppost, it will come back exactly as it started, even on the microstructural level.

"What we were able to show with this model is that you can have something that's between the two ends of this spectrum, a hybrid regime that is plastic but also reversible."

Simultaneously investigating both the macroscopic and microscopic behavior of a material under stress time is a challenge: bulk materials are generally opaque, so seeing what is happening inside of them while they maintain their bulk properties is impossible. To provide a window to this inner world, the researchers built a model material that sacrifices complexity for access. "The complexity we sacrificed is the third dimension," Keim said. "We have made an effectively 2-D material in the lab that consists of microscopic particles that sit on an oil-water interface. These particles have a little electric charge that keeps them constantly pushing away from each other, which means you can think of them as drops of liquid in an emulsion or even as atoms."

The researchers used this model material to study a behavior known as the "yielding transition," which is how disordered solids begin to flow. Just as toothpaste doesn't immediately flow out of the tube and ketchup doesn't pour out of the bottle once the cap is removed, the particles of a disordered solid are jammed against one another and don't easily rearrange themselves unless outside energy is added. In the case of ketchup, this outside energy often takes the form of tapping the side of the bottle.

In the case of this model material, the researchers added this energy by way of a needle that also sat at the material's oil-water interface, in the plane with the rest of the particles. Using an electromagnetic field, they could swing the needle back and forth against the particles and measure how much resistance they provided.

In experimenting with this model material, the researchers were surprised by what they described as a "learned behavior." They found that by repeatedly moving the needle back and forth, irreversibly deforming the material many times, the particles eventually rearranged themselves in such a way that they went back to their original state after each cycle of deformation. "The material can reorganize itself so that the link between plasticity and irreversibility is broken," Arratia said. "The material flows slightly, and yet, at the end of each cycle, it is exactly unchanged."

Critically, this reversible rearrangement of particles is not like what happens in elastic deformations. "After the material is deformed," Keim said, "it doesn't just bounce back to its original state. Rather than just pushing back elastically, like a spring would, it gives a little bit and dissipates energy, more like a viscous fluid than a solid." Having a mix of plastic and elastic properties is potentially useful.

"You might want this in materials where the alternative to flowing is shattering," Keim said. "You'd rather that it deform a little bit before breaking, and you'd also want things not to be severely altered or damaged by being deformed again and again. This kind of plastic deformation also dissipates a lot more energy; you want the body of your car to absorb the energy of an impact and dissipate it, not transfer it to you."

While this behavior has now only been observed in the researchers' model material, understanding the conditions in which it arises could lead to ways of producing it in materials that might be used outside the lab.

"We are designing for failure," Arratia said. "Elastic deformation is pretty great, but it can't last forever, eventually something has to give. And when it gives, this would be a pretty great way to do it. You'd like that transition to be as graceful and non-destructive as possible."

IN PHOTO: A map of a portion of the material. Dots represent particle positions, and circles represent rearrangements.

Source: Phys Org
Posted by: Er_sanch.

Photo: LATEST MECHANICAL ENGINEERING RESEARCH UPDATE IN STRENGTH OF MATERIALS (Feb. 13, 2014)

Researchers 'design for failure' with model material 

Detail —When deciding what materials to use in building something, determining how those materials respond to stress and strain is often the first task. A material's macroscopic, or bulk, properties in this area—whether it can spring back into shape, for example—is generally the product of what is happening on a microscopic scale. When stress causes a material's constituent molecules to rearrange in a way such that they can't go back to their original positions, it is known as "plastic deformation."

Researchers at the University of Pennsylvania have devised a method to study stress at the macro and micro scales at the same time, using a model system in which microscopic particles stand in for molecules. This method has allowed the researchers to demonstrate an unusual hybrid behavior in their model material: a reversible rearrangement of its particles that nevertheless has the characteristics of plastic deformation on the macroscale. That kind of plastic deformation is more akin to what happens with ketchup or toothpaste, a liquid-like flowing instead of a brittle fracturing of the material's particles.

Their study could pave the way for designing this potentially useful trait into new materials. Plastic deformation dissipates energy rather than transferring it, so a material that could repeatedly deform in this way could be used to dampen vibrations or protect against impacts.

The study was conducted by postdoctoral researcher Nathan Keim and professor Paulo Arratia, both of the Department of Materials Science and Engineering in Penn's School of Engineering and Applied Science. It was published in Physical Review Letters . "If you're driving your car and you hit a lamppost, your car would be totally deformed," Arratia said. "That's plastic deformation because it's irreversible. When you put your car into reverse and back up away from the lamppost, it's not as if the car just springs back into shape. And even if you take it to the body shop and hammer it out to look like new, it's never going to be the same again on the atomic level."

"On the other end of the spectrum," Keim said, "there's elastic deformation. Those deformations are usually reversible rearrangements. If you take a piece of steel and deform it just a little bit, like sitting on the hood of your car rather than running it into a lamppost, it will come back exactly as it started, even on the microstructural level.

"What we were able to show with this model is that you can have something that's between the two ends of this spectrum, a hybrid regime that is plastic but also reversible."

Simultaneously investigating both the macroscopic and microscopic behavior of a material under stress time is a challenge: bulk materials are generally opaque, so seeing what is happening inside of them while they maintain their bulk properties is impossible. To provide a window to this inner world, the researchers built a model material that sacrifices complexity for access. "The complexity we sacrificed is the third dimension," Keim said. "We have made an effectively 2-D material in the lab that consists of microscopic particles that sit on an oil-water interface. These particles have a little electric charge that keeps them constantly pushing away from each other, which means you can think of them as drops of liquid in an emulsion or even as atoms."

The researchers used this model material to study a behavior known as the "yielding transition," which is how disordered solids begin to flow. Just as toothpaste doesn't immediately flow out of the tube and ketchup doesn't pour out of the bottle once the cap is removed, the particles of a disordered solid are jammed against one another and don't easily rearrange themselves unless outside energy is added. In the case of ketchup, this outside energy often takes the form of tapping the side of the bottle.

In the case of this model material, the researchers added this energy by way of a needle that also sat at the material's oil-water interface, in the plane with the rest of the particles. Using an electromagnetic field, they could swing the needle back and forth against the particles and measure how much resistance they provided.

In experimenting with this model material, the researchers were surprised by what they described as a "learned behavior." They found that by repeatedly moving the needle back and forth, irreversibly deforming the material many times, the particles eventually rearranged themselves in such a way that they went back to their original state after each cycle of deformation. "The material can reorganize itself so that the link between plasticity and irreversibility is broken," Arratia said. "The material flows slightly, and yet, at the end of each cycle, it is exactly unchanged."

Critically, this reversible rearrangement of particles is not like what happens in elastic deformations. "After the material is deformed," Keim said, "it doesn't just bounce back to its original state. Rather than just pushing back elastically, like a spring would, it gives a little bit and dissipates energy, more like a viscous fluid than a solid." Having a mix of plastic and elastic properties is potentially useful.

"You might want this in materials where the alternative to flowing is shattering," Keim said. "You'd rather that it deform a little bit before breaking, and you'd also want things not to be severely altered or damaged by being deformed again and again. This kind of plastic deformation also dissipates a lot more energy; you want the body of your car to absorb the energy of an impact and dissipate it, not transfer it to you."

While this behavior has now only been observed in the researchers' model material, understanding the conditions in which it arises could lead to ways of producing it in materials that might be used outside the lab.

"We are designing for failure," Arratia said. "Elastic deformation is pretty great, but it can't last forever, eventually something has to give. And when it gives, this would be a pretty great way to do it. You'd like that transition to be as graceful and non-destructive as possible."

IN PHOTO: A map of a portion of the material. Dots represent particle positions, and circles represent rearrangements.

Source: Phys Org
Posted by: Er_sanch.