Search This Blog

Thursday, January 23, 2014

உடல் மொழியின் நாடகம் - ந.முத்துசாமி

கல்லூரியில் ஆங்கில இலக்கியம் படிக்கும் போது சாமுவேல் பெக்கட்டின் வெயிட்டிங் பார் கோதோ வாசித்தேன். அதுவரை நவீன நாடகம் என்பதைப் பற்றி அறிந்திருக்கவில்லை. அந்த நாடகம் வாசிப்பதற்கு மிகுந்த ஆர்வமுடையதாக இருந்தது. அதை எப்படி மேடையேற்றியிருப்பார்கள் என்பதைப் பற்றி எனது பேராசிரியர்களில் ஒரு வரிடம் பேசிக்கொண்டிருந்தபோது அவர் லண்டனில் நடந்த நாடகவிழா ஒன்றில் நிகழ்த்தப்பட்ட கோதோ நாடகத்தின் வீடியோவைக் காண்பதற்குத் தந்தார்.
நான் வாசித்த பிரதிக்கும் நிகழ்த்தபட்ட நாடகத்திற்கும் இடையில் மிகப்பெரிய இடைவெளி2006041100010101இருந்தது. நிகழ்த்தப்படும் வெளி மற்றும் நடிகர்களின் உடல்மொழி மற்றும் காட்சிகளின் பின்புல இசை யாவும் அந்த நாடகத்தை ஒரு கனவு நிலைப்பட்டதாக மாற்றியிருந்தது.  பிரதியை அப்படியே மேடையேற்றுவது அல்ல நாடக இயக்குனரின் வேலை. பிரதியிலிருந்து தனக்கான நாடகமொழியை உருவாக்கிக் கொள்வதுதான் நவீன நாடகத்தின் பிரதான பணி என்று பேராசிரியர் சொன்னபோது எனக்கு அது புரியவில்லை.
அந்நாள்வரை நான் கண்டிருந்த மேடை நாடக வடிவம் முற்றிலும் கலைந்து போய் நடிகர்களின் உடல் மொழியும் நவீன நிகழ்த்து வெளியும் உரையாடும் பாங்கும் தீவிரமாகப் பற்றிக் கொண்டது. என்ன வகை நிகழ்த்துதல் இது. ஏன் தமிழில் இப்படியான நாடகங்கள் நடத்தப்படுவதில்லை. கோதோவை மொழியாக்கம் செய்து இதே போல நிகழ்த்தினால் என்னவென்று அதன் பிந்தைய நாட்களில் தோன்றிக்கொண்டிருந்தது. பத்து நாட்களுக்குள் கோதோவை மொழியாக்கம் செய்துவிட்டேன். ஆனால் அதை எப்படி நிகழ்த்தவது என்பதைப் பற்றி நான் அறிந்திருக்கவில்லை.
நான் அறிந்த இலக்கிய நண்பர்கள் எவரும் அன்று நவீன நாடகம் பற்றி எதையும் அறிந்திருக்கவில்லை. சில மாதங்களுக்கு அதைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்துவிட்டு பெக் கெட்டை மறந்து வழக்கம் போல  நாவல், அபுனைவுக் கட்டுரைகள் என்று வாசிப்பதை நோக்கி நகர ஆரம்பித்தேன். ஆனால் மனதில் பெக்கெட்டின் வரிகள் மற்றும் நிகழ்காட்சிகள் இருந்து கொண்டேயிருந்தது.
அதன் சில ஆண்டுகளுக்கு பின்பு மதுரையில் தற்செயலாக பேராசிரியர் மு.ராமசாமி ஏற்பாடு செய்திருந்த எட்வர்ட் ஆல்பியின் ஜர் ஸ்டோரி என்ற நாடகத்தைப் பார்க்க நேர்ந்தது. என் மனதிலிருந்த  பெக்கெட் திரும்பவும் விழித்துக் கொண்டுவிட்டார். அந்த நாட்களில்  மதுரையில் சுதேசிகள் என்ற பெயரில் தமிழ்த் துறையில் பயின்ற சுந்தர்காளி ஒரு குழுவை உருவாக்கியிருந்தார். அவர்களுடன் சேர்ந்து நவீன நாடகம் பற்றிப் பேசவும் விவாதிக்கவும் துவங்கினேன்.
விஜய் டெண்டுல்கர், ஹெரால்ட் பைண்டர், ஐயனெஸ்கோ, டென்னஸி வில்லியம்ஸ்,  லூயி பிராண்டலோ,  ஆர்தர் மில்லர், ஒநில், பிரெக்ட், செகாவ், ஜெனே, லோர்க்கா, இப்சன் எட்வர்ட் பாண்ட், வோலே சோயிங்கா என்று நூலகத்தில் கையில் கிடைத்த நாடகப்பிரதிகளை மிகுந்த தீவிரத்தோடு வாசிக்க ஆரம்பித்தேன்.
தமிழில் அப்படி யாருடைய நாடகமாவது இருக்கிறதா என்று தேடியலைந்த போது பழைய ஷேக்ஸ்பியர் பிரதிகள், மற்றும் சங்கரதாஸ் சுவாமிகளின் மரபு நாடகப்பிரதிகள் இருந்தனவேயன்றி நவீன நாடகப்பிரதிகள் எதுவும் காணப்படவில்லை.
அறிந்த நண்பர்களிடம் கேட்டபோது அவர்களும் அப்படி நவீன நாடகப்பிரதி எதுவும் வெளியாகி இருப்பது போல அறியவில்லை என்றார்கள். அந்த நாட்களில்தான் ந. முத்துசாமியின் பெயரைக் கேள்விபட்டேன். நடை இதழில் முத்துசாமியின் காலம் காலமாக வெளி வந்து மிகுந்த கவனத்தைப் பெற்றது என்பதையும் அவரது நாற்காலிக்காரர், சுவரொட்டி நாடகங்களையும் பற்றி நண்பர்கள் விரிவாகச் சொல்லிக்கொண்டிருந்தார்கள்.
நீர்மை எழுதிய முத்துசாமியா நவீன நாடங்கங்கள் போடுகின்றவர் என்று வியப்புடன் கேட்டேன். ஆமாம் அவரேதான் என்றபடியே கூத்துப்பட்டறை என்ற நவீன நாடகக் குழுவைச் சென்னையில் உருவாக்கியிருக்கிறார் என்றும் அது தீவிரமாக நவீன நாடக உருவாக்கத்தில் முனைந்திருக்கிறது என்றும் அறிந்து கொண்டேன்.
எனக்கு முத்துசாமியின் சிறுகதைகளைப் பிடிக்கும். நவீனச் சிறுகதைகளில் அவர் தனித்துவமானவர். குறிப்பாக அவர் கதை சொல்லும் முறை வித்யாசமானது. சிறிய சம்பவங்களை நுட்பமாக விவரித்துக் கொண்டே செல்லும் கதைமுறை அவருடையது. ஊர் சார்ந்த நினைவுகள் மற்றும் நவீன வாழ்வின் அபத்தம் இரண்டும் கலந்த குரல் அவர் கதைகளுக்கு உண்டு. கதாபாத்திரங்களின் நிகழ்வுகளைவிடவும் அவர்களின் மனவோட்டத்திற்கு மிகுந்த முக்கியத்துவம் தரும் எழுத்துமுறை அவருடையது. புஞ்சை என்ற ஊரைப் பற்றிய வெவ்வேறு விதமான பதிவுகள் அவர் கதைகளில் தொடர்ந்து இடம் பெற்றிருந்தன. அத்தோடு கசடதபற இதழ்களில் முத்துசாமி எழுதியதையும் வாசித்திருக்கிறேன்.
நீர்மையின் இன்னொரு சிறப்பு முத்துசாமியின் மகன் ஓவியர் நடேஷ் வரைந்த முகப்பு ஓவியம். மிகச் சிறப்பாக அச்சிடப்பட்டிருந்த புத்தகமது. அதில் முத்துசாமியின் சித்திரம் ஒன்றை மிக நவீனமான முறையில் நடேஷ் வரைந்திருப்பார். அதிலிருந்து ஒரு முத்துசாமியை நாம் கற்பனை செய்து கொள்வது விசித்திரமாக இருக்கும்.
இருபதிற்கும் குறைவான சிறுகதைகளே முத்துசாமி எழுதியிருக்கக்கூடும். ஆனால் அந்தக் கதைகள் அவருக்கெனத் தனியான வாசக உலகை உருவாக்கியிருந்தன. தொடர்ந்து அவர் சிறுகதையுலகில் செயல்படாமல் போனது பெரிய இழப்பே.
நவீன நாடங்களில் ஏற்பட்ட ஈடுபாட்டின் காரணமாக கேரளாவில் உள்ள திருச்சூரில் உள்ள நாடகப்பள்ளிக்கு ஒருமுறை சென்றிருந்தேன். அங்கே நாடகவிழா ஒருவார காலம் நடைபெற்றது. அப்போதுதான் நான் வாசித்திருந்த பல நவீன நாடகங்களை ஒரு சேரக்காணக் கிடைத்தது. நாடகப்பள்ளியின் வளாகமும் அதன் கட்டிட அமைப்பும் மிக நவீனமானவை. அதை லேரி பேக்கர் வடிவமைத்திருந்தார்.
நாடகப்பள்ளியில் நடத்தபட்ட நாடங்களைக் காண்பதற்கு அருகாமையில் உள்ள  கிராம மக்கள் வருவதைக் கண்டது ஆச்சரியமாக இருந்தது. லோர்க்காவின் நாடகம் ஒன்றை மலையாளத்தில் நிகழ்த்தினார்கள். சமஸ்கிருத நாடகம் ஒன்று நிகழ்த்தப்பட்டது. அயென்ஸ்கோ நாடகத்தை மாணவர்கள் நிகழ்த்தினார்கள்.  இப்படி ஒரு வார காலம் நடைபெற்றது. அங்குள்ள மாணவர் விடுதியில் தங்கியபடி நாடகங்களைப் பார்த்து பிரமித்துப் போயிருந்தேன்.
இந்த நாடகங்கள் மேடை அமைப்பை விட்டுவிலகி புதிய நாடகவெளியை உருவாக்கியிருந்ததும் சம்பிரதாயமாக வசனங்களைப் பெரிதும் சார்ந்திருந்த நடிப்பை விலக்கி நடிகனின் உடலின் வழியே நிகழும் நாடகமாக வெளிப்படுத்தும் முறையும் குரலை உபயோகிக்கும் முறைகளும் நாடக பாவனைகளும், அவர்கள் உருவாக்கும் படிமங்களும், உருவகங்களும் நவீன நாடகம் என்பதைப் பற்றிய ஆதார பிரக்ஞையை உருவாக்கியது. அந்த நாட்களில் முத்துசாமியைச் சந்திக்க வேண்டும் என்பதில் மிகுந்த ஆர்வம் கொள்ளத் துவங்கினேன்.
ஆனால் ஏதோ தயக்கம் அதைத் தடுத்துக்கொண்டேயிருந்தது. திருச்சூரில் சந்தித்த நாடகத்துறை  நண்பர்களின் வழியே பெங்களூரில் நடைபெறும் நவீன நாடகங்கள் பற்றி அறிந்து கொள்ள ஆரம்பித்தேன். இதற்காகவே  பெங்களூர் செல்லும் போதெல்லாம் நவீன நாடகங்களைத் தேடிச்சென்று பார்க்கத் துவங்கினேன். அப்படித்தான் கிரிஷ் கர்நாட்டின் துக்ளக், ஹயவதனா, மற்றும் கம்பாரின் நாடகங்கள் காண நேர்ந்தது.
நவீன நாடகம் என்பது தனியுலகம். அதற்கெனத் தன்னை அர்ப்பணித்துக் கொண்ட நடிகர்களும் இயக்குனர்களும் அதற்கான குறைந்தபட்ச பார்வையாளர்களைப் பற்றிய கவலையின்றித் தங்களது முழு ஈடுபாட்டையும் செலுத்தி வருவதைக் கண்ட போது அது என்னை ஈர்க்கத் துவங்கியது. 
அந்த நாட்களில் திருச்சியில் பாதல்சர்க்கார் நாடகவிழா நடை பெற்றது. அதைக் காணும் சந்தர்ப்பம் கிடைத்தது. அங்கே கூத்துப்பட்டறையின் நாடகம் ஒன்றைக் கண்டேன். முத்துசாமியைக் காண முடியவில்லை. மற்ற நாடகங்களிலிருந்து கூத்துப்பட்டறை நாடகம் மிகவும் வேறுபட்டிருந்தது.
அந்த நாடகவிழாவின் உந்துதலில் சூரியனின் அறுபட்ட சிறகுகள் என்ற நாடகத்தை எழுதி அதை நாடகவெளி இதழுக்கு அனுப்பி வைத்தேன். ரங்கராஜன் அப்போதுதான் நாடகத்திற்கான சிற்றிதழாக வெளியை அறிமுகம் செய்திருந்தார். அதில் என்னுடைய நாடகம்    வெளியானது.  அதன் தொடர்ச்சியாக சுதேசிகள் நாடகக்குழுவிற்காக 'உருளும் பாறைகள்' என்ற நாடகத்தை எழுதித் தந்தேன். அது சங்கீத நாடக அகாதமியின் தென் மண்டல நாடகவிழாவிற்காகத் தேர்வு செய்யப்பட்டது. அந்த நாடகம் குறித்து முத்துசாமி தனக்குப் பிடித்துள்ளது என்று தெரிவித்ததாக சுந்தர்காளி சொன்னபோது மீண்டும் முத்துசாமியைப் பார்க்கும் ஆசை துளிர்விடத் துவங்கியது.
மதுரை நண்பர்களுக்காக எட்வர்ட் பாண்டின் ஸ்டோன், பிரெக்டின் கலிலியோ, மகேஷ் எல்கஞ்வரின் பிரதிபிம்பம், என்று பரபரப்பாக நாடகங்களை மொழியாக்கம் செய்வதும் எழுதித் தருவதுமாக இருந்த நாட்களில் எனக்கிருந்த ஒரே வாசிப்புத் துணை ந. முத்துசாமியின் நாடகங்கள். அத்தோடு அவர் எழுதிய அன்று பூட்டிய வண்டி என்ற நிகழ்த்து கலைகள் பற்றிய கட்டுரைகள். மரபுக்கலைகள் குறித்த அவரது பார்வையும் விவரிப்பும் அசலானவை. அன்று பூட்டிய வண்டி முத்துசாமியின் முக்கியமான கட்டுரைத் தொகுப்பு.
தெருக்கூத்து தென்மாவட்ட மக்களுக்குப் பரிச்சயம் இல்லாத வடிவம். அப்படி ஒரு நிகழ்த்துகலை இருப்பதையே மக்கள் அறிந்திருக்கவில்லை. தென்மாவட்டங்களுக்கு என்று சிறப்பான நிகழ்த்துகலைகள் நிறைய இருந்தன. ஆனால் தெருக்கூத்து அங்கேயில்லை.
முத்துசாமியின் கட்டுரைகள் அளித்த உந்துதல் காரணமாக தெருக்கூத்தைத் தேடிச் சென்று பார்ப்பது என்று சுற்றியலைந்து காஞ்சிபுரம் அருகில் உள்ள ஒரு கிராமத்தில் முதன்முறையாகத் தெருக்கூத்தைப் பார்த்தேன். நடிகர்களின் ஒப்பனையும், நிகழ்த்தும் முறையும் வியப்பாக இருந்தது. அது  முத்துசாமியைச் சந்திக்கும் ஆசையை அதிகப்படுத்தியது.
சென்னையில் வந்து சுற்றியலைந்தபோது சிறுகதைகள் மற்றும் நாடகம் இரண்டிலும் இருந்த என் அக்கறைக்கு முத்துசாமியே காரணமாக இருந்தார். அப்போது அடையாற்றில் தங்கியிருந்த போது அண்ணாமலை அறிமுகமானார். அவர் கூத்துப்பட்டறையில் பயின்ற நடிகர். அவரிடம் முத்துசாமியைச் சந்திக்க வேண்டும் என்று சொன்னதும் அதற்கென்ன பார்த்துவிடலாமே என்று சொல்லி மறுநாளே முத்து சாமியைச் சந்திக்க அழைத்துச் சென்றார். அலியான்சே பிரான்சேயின் வெளிவாசலில் முத்துசாமி நின்றுகொண்டிருந்தார்.
முத்துசாமியின் தோற்றம் ஒரு நடிகருக்கான கம்பீரம் கொண்டது. குறிப்பாக அவரது மீசையும் முகபாவங்களும் அற்புதமானவை. அவர் பேசும் தோரணையும் கைகளை அவர் உபயோகிக்கும் லாவகமும் எவரையும் ஈர்க்கக் கூடியவை.  ஆனால் அவர் குரலில் இயல்பாகவே எதையோ மறுக்கின்றவரைப் போன்ற எதிர்ப்புணர்வு இருக்கும். உண்மையில் அவர் வேடிக்கையாகப் பேசும்போதுகூட அந்தத்தொனி  அவரிடமிருக்கிறது. அது பலநேரம் முத்துசாமி மிகவும் கோபப்படக்கூடியவர் என்ற பிம்பத்தை உருவாக்கியிருந்தது.  அது உண்மையில்லை. முத்துசாமியோடு நெருங்கிப் பேசினால் அவரிடம் சொல்லித் தீராத நினைவுகளும்  நாடகம் குறித்த புதிய தேடுதல்களும் மரபுக் கலைகள் குறித்த தனித்துவமான அவதானிப்புகளும் நிரம்பியிருக்கும்.
என் முதல் சந்திப்பில் முத்துசாமி 'ஒங்க நாடகம் ரொம்ப நல்லாயிருந்தது. எழுதுங்க' என்று ஒரேயொரு வரிதான் பேசினார். அதன் பிறகு அலியான்சேயில் பிரான்சிலிருந்து வந்திருந்த தோல்பாவைக் கலைஞருடன் ஒரு கலந்துரையாடல் நடைபெற்றது. அதன் முன் வரிசையில் அமர்ந்தபடியே அந்த பிரெஞ்சுக் கலைஞரை உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தார் முத்துசாமி. ஏதோ ஓவியம் ஒன்றைப் பார்வையிடுவதைப் போன்றிருந்தது அவரது முகபாவம்.
முடிவில் முத்துசாமி பத்து நிமிடங்கள் பேசினார். "தெருக்கூத்து ரொம்ப ஒசத்தியானது. அதை அப்படியே நாடகமாகப் போட்டுற முடியாது. அதை நாம முதல்ல புரிஞ்சிகிடணும். குரல்வளம் உள்ள நடிகர்கள் நம்மகிட்டே இல்லை. முதல்ல நாம  அதை உருவாக்கணும். அதே போல பார்வையாளர்களுக்கும் நடிகருக்கும் இடையில் உள்ள வெளி ரொம்ப முக்கியமானது. நடிகர்கள்  கதாபாத்திரத்தை சிருஷ்டி பண்றாங்க. அதுல மூழ்கிப் போறதில்லை.
கதாபாத்திரமாக மாறிப்போறது என்பதெல்லாம் தெருக்கூத்துல கிடையாது. நடிகர் கதாபாத்திரம் ரெண்டுக்கும் இடையில் ஒரு பெரிய மாயம் நடக்குது. நடிகன் தன் கற்பனையால் அந்தக் கதாபாத்திரத்தை வளர்த்துகிட்டே போறான். அது ஒரு விளையாட்டு. கண்ணுக்குத் தெரியாத விளையாட்டு. நடிகன் ஒரு ஜென் துறவி மாதிரியும் இருக்கணும். அதே நேரம் சாமுராய் மாதிரியும் இருக்கணும். பழைய மேடை நாடக நடிப்பு எல்லாம் இப்போ எடுபடாது" என்று அவர் பேசிய விதமும் சொற்களை அவர் கையாளும் லாவகமும் அதை விளக்கிச் சொல்லும் போது அவரிடம் ஏற்படும் முகமாற்றங்களும் பார்வையாளர்களைக் கட்டிப் போட்டிருந்தது.
பேச்சை அவர் திடீரென நிறுத்தி  முடித்துக்கொண்டுவிட்டார். கிட்டத்தட்ட அதுவே ஒரு நிகழ்த்து கலை போலவே இருந்தது. நிகழ்ச்சி முடிந்து முத்துசாமி வெளியே செல்லும் வரை பார்த்துக்கொண்டேயிருந்தேன். சம்பந்தம் என்ற கூத்துக் கலைஞருடன் அவர் ஒரு டிவிஎஸ் 50யின் பின்னாடி ஏறிக்கொண்டு புறப்பட்டார். அவரது உயரத்திற்கு அந்த வண்டியில் போவது சிரமம் தருவதாக இருந்திருக்கக்கூடும். ஆனால் அவரிடம் அது தென்படவில்லை.
அலியான்சேயின் வெளியில் இருந்த படிகளில் அமர்ந்தபடியே முத்துசாமி பற்றிப் பேசிக் கொண்டிருந்தோம். நவீன இலக்கியப் பரிச்சயம் கொண்டிருந்த முத்துசாமி நவீன நடனத்திலிருந்தே தனது நாடகத்திற்கான மூலங்களைக் கொண்டிருக்கிறார். ஆகவே அவருக்கு நாடகப்பிரதி என்பது ஒரு வரைபடம் போல நாடகம் போடுவதற்காக ஆதாரம் மட்டுமே. நடிகனின் உடல் மற்றும் குரலில் அவர் செய்யும் மாற்றம் அற்புதமானவை.
கூத்துப்பட்டறையில் நடிப்பிற்கு மட்டும் பயிற்சி அளிக்கப்படுவதில்லை. மாறாக நடனம், யோகா, மார்சல் ஆர்ட்ஸ், சிலம்பம், தேவராட்டம், களறி, தாய்சி, தியானம், எனப் பல்துறைப் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. அதன் மூலம் நடிகன் தன் உடலை எப்படிப் பயன்படுத்துவது என்பதை அறிந்து கொள்ள முடியும். அது போலவே மரபான நடிப்பு முறையிலிருந்து விலகிய பிரக்ஞை பூர்வமாக நடிப்பைக் கைக்கொள்ள முடியும் என்று கூத்துப்பட்டறையில் பயின்ற நண்பர்கள் பேசிக் கொண்டிருந்தார்கள்.
அது உண்மை என்பதை அதிலிருந்து பயின்று வந்த பல நடிகர்கள் இன்று நிரூபணம் செய்கிறார்கள். சிறந்த இரண்டு உதாரணங்கள் பசுபதி மற்றும் கலைராணி. இவர்கள்  நடிப்பை பிரக்ஞை பூர்வமாகவும் பல்வேறு தளங்களில் விரித்தும் கற்பனை செய்தும் புரிந்து கொண்டவர்கள். இவர்கள் மட்டுமின்றி பிரசாத், அண்ணாமலை, ஜார்ஜ், பாங்ளா , குமாரவேல், சந்திரா, என்று தனித்துவமிக்க நடிகர்கள் பலரை கூத்துப்பட்டறை உருவாக்கியிருக்கிறது.
அதன் பிறகு கூத்துப்பட்டறையின் நாடகங்களை அலியான்சே மேக்ஸ்முல்லர் பவன் மற்றும் தீவுத்திடலில் உள்ள அரங்கில் தொடர்ச்சியாகக் காண நேர்ந்தது. ஒவ்வொரு நிகழ்வின்  போதும் முத்துசாமி தொலைவில் நின்று கொண்டிருப்பார். ஒரு சிரிப்பு மற்றும் எப்படியிருக்கீங்க என்ற வினா இரண்டையும் தவிர அவர் வேறு எதையும் பகிர்ந்து கொண்டது கிடையாது.
ஆனால் ஒரு முறை பிரிட்டீஷ் கவுன்சில் ஆங்கில நாடகம் ஒன்றினையும் அதைத் தொடர்ந்த இரவு விருந்தையும் அளித்தது. சென்னையில் தமிழ் நவீன நாடகங்கள் பார்ப்பதற்கு ஐம்பது பேர்கூட வருவதில்லை. ஆனால் ஆங்கில நாடகம் பார்ப்பதற்கு முந்நூறு பேர்களாவது வருவார்கள். இதில் ஆச்சரியம் ஐநூறு ரூபாய் டிக்கெட் போட்டு நடக்கும் நவீன நாடகங்களுக்குக் கூடப் பல நேரங்களில் டிக்கெட் விற்றுப் போய் நாடகம் பார்க்க முடியாமல் வீடு திரும்ப நேரிடும். அது ஒரு எலைட் இன்ட்ரஸ்ட் என்று முத்துசாமியே ஒரு சமயம் சொன்னார்.
அன்று பிரிட்டீஷ் கவுன்சிலின் வெளியில் நாடகம் முடிந்து வெளியே விருந்து துவங்கியது. பகட்டான ஆங்கிலப் பேச்சுகள், நாடகம் பற்றிய மேல்உதட்டு அபிப்ராயங்கள் தாண்டி தனியே அமர்ந்திருந்தார் முத்துசாமி, அருகில் சென்று அமர்ந்தேன்.  அவராகப் பேசத்துவங்கி பேச்சு அவரது சொந்த ஊரான புஞ்சை  பற்றியும் அங்குள்ள நற்றுணையப்பன் என்ற தெய்வம் குறித்தும் நீண்டது.
பேச்சின் நடுவில் செம்பொனார் கோவிலில் இருந்த நாதஸ்வரக் கலைஞர் ஒருவரைப் பற்றி நினைவுகூறத்துவங்கி உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தவர் அப்படியே எழுந்து நின்று அந்த நாதஸ்வரக் கலைஞர் வாசிக்கும் முறையைத் தன் கைகளால் பாவனை செய்தபடியே தனிநடிப்பு போல சொல்லத் துவங்கினார்.
"அப்படியே ஆகாசத்துக்கும் பூமிக்கும் இடையில் அந்த நாதஸ்வரம் சுழன்று சுழன்று வருது.  அந்த மனுசன்  ஆவேசத்துடன் வாசிக்கிறார். வெளியே இருக்கிற மரங்கள் எல்லாம் ஒடுங்கிப் போய் நிக்குது. அருள் வந்த ஆள் போல அவர் வாசிச்சிகிட்டே இருக்கார். ரொம்ப  ஒசத்தியான இசை. இன்னைக்கும் மனசில அப்படியே இருக்கு. இசையைக் கேட்டு நாம கற்பனை பண்ண முடியலை. அது ஒரு உன்னதமான அனுபவம். பார்த்துகிட்டு இருக்கும்போதே எல்லாம் மறைஞ்சி போற மாதிரி இருக்கு.  பாம்பாட்டி முன்னால் நிக்குற பாம்பு மாதிரி இருக்கேன். எதையோ தொலைச்சிட்டு தேடிக்கிட்டு இருக்கிறது மாதிரி நாதஸ்வரம் மேலேயும் கீழேயும் இந்தப் பக்கமும் அந்தப் பக்கமும் போய்க்கிட்டே இருக்குது. சாட்டையைச் சுழட்டுற மாதிரி இருக்கு இசை. ஆனா.. சட்னு அப்படியே ஒரு நிமிஷம் அவர் வாசிக்கிறதை நிறுத்திடுறார். நம்மாலே நிறுத்த முடியலை."
அவர் சொல்லச் சொல்ல, காதில் அந்த நாதஸ்வர இசை கேட்பது போலவே இருந்தது. இசையை ஒரு மனிதனால் இவ்வளவு நுட்பமாகக் காட்சிப்படுத்த முடியுமா என்ற வியப்பிலிருந்து என்னால் மீள முடியவேயில்லை. முத்துசாமி சொல்லி முடித்து சிரிப்போடு அருகில் இருந்த தண்ணீரை எடுத்துக் குடித்துவிட்டு நெருக்கத்தோடு என் தோளில் தட்டினார். முத்துசாமியிடமிருந்து இதைத்தான் தெரிந்துகொள்ள ஆசைப்பட்டிருந்தேன் என்று அந்த நிமிடத்தில் தோன்றியது.
அதன் பிறகு அவரை ஒன்றிரண்டு முறை தேடிப்போய்ப் பேசுவதும் பார்ப்பதுமாக இருந்தேன். இணக்கமும் அன்புமான பகிர்தல் அவரிடம் எப்போதுமிருந்தது. இதன் இடையில் நடேஷ் நெருக்கமான நண்பராகியிருந்தார். நடேஷ் முத்துசாமி இருவரும் பேசிக்கொள்வதைக் காணும்போது அப்பா பையன் போலவே இருக்காது.
முத்துசாமியின் கவனம்  தமிழ் நவீன நாடகத்திற்கான புதிய மொழியை உருவாக்குவதிலே முதன்மையாகக் குவிந்திருக்கிறது. அது மரபுக்கலைகளிலிருந்து உருவான நவீன உடல்மொழி.  தமிழ்நவீன நாடகப் பிரக்ஞையை முத்துசாமியே உருவாக்கினார்.
பேராசிரியர் ராமானுஜம், மு.ராமசாமி, மங்கை, ஞாநி, பிரளயன், ராஜி, ஆறுமுகம், ராஜேந்திரன், சண்முகராஜா, முருகபூபதி என்று நவீன நாடகப் பரப்பில்  பல்வேறு ஆளுமைகள் தீவிரமாக நாடக உருவாக்கத்தில் செயல்பட்டு வருகின்றார்கள். இவர்கள் யாவருக்குள்ளும் முத்துசாமியின் ஏதோவொரு நுட்பமான பாதிப்பும், அரூபமான நெருக்கமும் அறிந்தும் அறியாமலும் இருக்கின்றது.
முத்துசாமி உருவாக்கிய நாடக மொழிக்கான அடிப்படைகளை அவர் சிற்பங்கள் ஓவியங்கள், நடனம், மரபுக்கலை, கோவில்கலை, மேலை நாடக மரபுகள் என்று பல்வேறு இழைகளைக் கொண்டு உருவாக்கியிருக்கிறார்.
முத்துசாமியின் நாடகம் தந்த உந்துதலால் சந்திரலேகாவின் நாடகங்களைக் காண நேர்ந்தது. அது முற்றிலுமான ஒரு நடனநாடகம் என்றே சொல்வேன். அதில் நடிகன்  பெரிதும் நடனக்கலைஞராகவே இருக்கிறான். அவன் உடலை யோகநிலைகள் போல வெவ்வேறு படிகளில் ஒன்று சேர்ப்பதும் அவிழ்ப்பதுமே நாடகத்தின் முக்கிய போக்காக இருந்தது. அபத்தமோ, முரண்களோ, பகடியோ அதில் இல்லை.
முத்துசாமியின் நாடகங்களை ஒரு சேர வாசிக்கும் போதுதான் அவர் உருவாக்கியுள்ள தமிழ் நவீன நாடகப்பரப்பு எவ்வளவு பெரியது என்று உணர முடிகிறது. காலம் காலமாக எழுதிய போது முத்துசாமி நவீன நாடகம் குறித்து அதிகம் அறிந்திருக்கவில்லை. அது நடை இதழில் 1969ஆம் ஆண்டு வெளியாகிறது. எழுத்து இதழில் சி.சு. செல்லப்பா ஓரங்க நாடகங்கள் என்று சில நாடகங்களை வெளியிட்டார். ஆனால் அது நவீன நாடக வகைமை கொண்டதில்லை.
முத்துசாமி சுயமாக தனக்கான நாடகமொழியைக் கண்டுபிடித்திருக்கிறார். அதன்பிறகு தெருக்கூத்தின் பரிச்சயம் அவருக்கு 1975ஆம் ஆண்டுதான் ஏற்பட்டிருக்கிறது. அன்றிலிருந்து அவரது பிரதிகள் உருமாற்றம் கொள்ளத் துவங்குகின்றன. உருவகங்கள் குறியீடுகள் கலாச்சார மறுவாசிப்பு புராணக்கதைகளின் மறுவடிவம் என்று அவர் தன் பிரதிக்கான அர்த்த தளங்களை விரிவாக  எடுத்துக்கொண்டு போகிறார். படுகளம் நாடகம் அதன் உச்ச நிலை என்றே சொல்வேன். மகாபாரதமும் சமகால நிகழ்வுகளும் ஒன்றோடு ஒன்று கலப்பதும் அதில் வெளிப்படும் பகடியும் நிகழ்த்து முறையும் நவீன நாடகத்தின் சிறப்பான உயர்நிலை.
நாற்காலிக்காரர், சுவரொட்டிகள், உந்திசுழி, கட்டியக்காரன், நற்றுணையப்பன்,  இங்கிலாந்து தெனாலி, பிரகலாத சரிதம், சந்திர ஹரி, படுகளம் என்று முத்துசாமியின் நாடகங்கள் ஒவ்வொன்றும் ஒரு தளத்தில் இயங்குகின்றது.
முத்துசாமியின் நாடகங்களை முதன்முதலாகப் பார்க்கும் பார்வையாளன் அடையும் திகைப்பு நடிகர்கள் பேசும் முறை. அவர்கள் வசனங்களை நேரடியாக ஒப்புவிப்பதில்லை. மாறாக அதைச் சிலவேளைகளில் உச்சாடனம் செய்கிறார்கள். சில வேளைகளில் கவிதை போல உயர்நிலைக்குக் கொண்டு போகிறார்கள். சிலவேளைகளில் சொற்களின் ஊடே இடைவெளியை உருவாக்கி அர்த்த மாற்றங்களை ஏற்படுத்துகிறார்கள். இது பார்வையாளன் அடையும் முதல் திகைப்பு.
அடுத்தது அவர்கள் மேடையைப் பயன்படுத்தும் விதம். பொதுவில் திரைச்சீலைகளும் மேஜை நாற்காலிகளும் அரங்க பொருட்களாக அறிமுகமாகயிருந்த பார்வையாளனுக்கு முத்துசாமியின் நாடகத்தில் அவர்கள் தங்கள் பாவனைகளால் பொருட்களை உருவாக்குவதும் அதைப் பயன்படுத்துவதும் வியப்பளிக்கக் கூடியது. மூன்றாவது, நாடகத்தின் பின்புல இசை மற்றும் கூட்டியக்கம். ஒரு இசைக்கோவை போல நாடகம் வேறுவேறு தளங்களுக்கு உயர்ந்து பின்பு உச்சநிலையை அடைகிறது.
இது பார்வையாளர்களுக்குக் குழப்பம் ஏற்படுத்திவிடாதா, நாடகம் புரிந்து கொள்ளப்படவில்லை என்ற கேள்வி முத்துசாமியின் ஒவ்வொரு நாடகத்தின் முடிவிலும் கேட்கப்படுகிறது. அவர் மிகப் பொறுமையாக, இதற்குப் பார்வையாளர்கள் பழகிக் கொள்ள வேண்டும். திரும்பத் திரும்ப எனது நாடகங்களைக் காண்பதுதான் அதைப் புரிந்துகொள்வதற்கான ஒரே வழி என்று சொல்கிறார். அதுதான் உண்மை. இந்த நாடகங்கள் புரியவில்லை. இதை வெறும் ஏமாற்று என்று புறக்கணிப்பதைவிடவும் இதை எப்படிப் புரிந்து கொள்வது என்று முயற்சிப்பதே அவசியம்.
முத்துசாமி நவீன நாடகப்பிரதிகளை எழுதியதோடு அதை முழுமையானதொரு நவீன நாடகமாக நடிகர்களைக் கொண்டு பயிற்சி செய்து உருமாற்றிக் காட்டுகிறார்.  குறிப்பாக மேடையின் ஒளியமைப்பில் கூத்துப்பட்டறை செய்த பல முன்முயற்சிகள் இந்திய அளவில் குறிப்பிட்டுச் சொல்லப்பட வேண்டியவை. டாக்டர் ரவீந்திரன், மற்றும் நடேஷ் ஒளியமைப்பு செய்த முறைகள் மிகுந்த பாராட்டுக்கு உரியவை.
அது போலவே பன்சி கௌல், கன்யாலால், அன் மோல் விலானி, கில் ஆலன், ஜான் மார்டின், என்று பல்வேறு நாடக இயக்குனர்களுடன் முத்துசாமி இணைந்து உருவாக்கிய தமிழ்நாடங்கள் நவீனத் தமிழ்நாடகத்தை உலக அரங்கிற்கு எடுத்துச் சென்றுள்ளது. இன்று நாடகத்திற்கான சிறப்புப் பயிலரங்கில் ஒன்றாகக் கூத்துப்பட்டறையை யுனெஸ்கோ அங்கீகாரம் செய்து உதவி செய்து வருகிறது.
முத்துசாமியை நீண்ட நேர்காணல் ஒன்று செய்து எனது அட்சரம் இதழில் வெளியிட வேண்டும் என்று அவரை நான்கு முறை தொடர்ச்சியாகச் சந்தித்து உரையாடலைப் பதிவு செய்தேன். பத்து மணி நேரத்திற்கும் அதிகமான பதிவு. முத்துசாமி அந்தப் பதிவில் எங்கும் தன் சாதனைகள் பற்றியோ, தனது ஏமாற்றங்கள் பற்றியோ ஒரு முறைகூடக் குறிப்பிடவேயில்லை. இதழ் நின்று போய்விடவே அந்த ஒலிப்பதிவுகள் அப்படியே கைவிட் டுப் போய்விட்டன.
அலியான்சே மேக்ஸ்முல்லர்பவன் என்று அயல்நாட்டுக் கலாச்சார நிறுவனங்களோடு இணைந்து நாடகம் போடுகின்றவர் என்று குற்றம் சாட்டப்பட்ட முத்துசாமி சென்னையில் பலவருடம் சேரிப்பகுதி மக்களுடன் இணைந்து வசித்தவர். அடிப்படை வசதிகள்கூட எதுவுமில்லாத மிக எளிமையான அரசுக் குடியிருப்பில் தன் வாழ்க்கையைச் செலவிட்டவர். பொருளாதார நெருக்கடிகளுக்காகத் தன்னை மாற்றிக்கொள்ளாதவர் முத்துசாமி.
இன்று சிறுகதை, கவிதை, நாவல் போன்ற வடிவங்களின் மீது இலக்கியவாதிகள் காட்டும் அக்கறையில் ஒரு பகுதிகூட நாடகத்தின் மீது இல்லை என்பதே உண்மை.
தெருக்கூத்திற்கு இன்றுள்ள அங்கீகாரத்திற்கு அவரே முக்கிய காரணம். நாடகம், கூத்து, கலை என்று தன் முழு நேரத்தையும் ஒப்படைத்துக் கொண்ட முத்துசாமி  சங்கீத நாடக அகாதமி விருது பெற்றபோது அது இலக்கியச் சூழலில் பெரிதாகக் கண்டு கொள்ளப்படவேயில்லை. ஆனால் முத்துசாமியின் தொடர் இயக்கம் காரணமாகவே இன்று வெளி மாநிலங்களில் நவீனத் தமிழ்நாடகம் குறித்த அறிமுகம் ஏற்பட்டு உள்ளது.
நாடகத்திற்கான தேவை இப்போதுதான் மிக அதிகமாக உள்ளது. அதிகமான மன அழுத்தம் மற்றும் நெருக்கடியான சூழலில் மனிதர்களுக்கு அகவிடுதலை தரக்கூடிய தனித்தன்மை கொண்டது நாடகம். பன்னாட்டு நிறுவனங்கள் இன்று தங்களது ஊழியர்களுக்கு யோகா மற்றும் நாடகப் பயிலரங்கம் நடத்துகின்றன. நாடகம் ஒருபோதும் புறக்கணிக்கபட்டுவிடாது. அதை நாம் முறையாக எடுத்துச் செல்ல வேண்டும் என்று முத்துசாமி சொல்லியிருந்ததை சமீபத்திய நேர்காணல் ஒன்றில் வாசித்தேன்.
முப்பது ஆண்டுகாலமாக முத்துசாமியின் அக்கறை அப்படியே இருக்கிறது. பிரதான இலக்கியச் சூழல் அவரைக் கண்டுகொள்ளாமல் எப்போதும் போல வீண்வாதங்கள், வம்புகளின் பின்சென்று கொண்டிருக்கிறது. அதை அவர் கண்டுகொள்ளவும் இல்லை கவலைப்படவும் இல்லை. அபத்தம் தான் வாழ்வின் பிரதான சுவை என்று அவர் அறிந்திருக்கக்கூடும்.

KAMAKSHI

Sri Parvati as Sri Kamakshi or Sri Sivakamasundari is depicted as holding the bow and the arrows of Kamadeva controlling Kaama within Her eyes. Hence Kamakshi. She holds the sweet sugarcane bow representing the minds of human beings, and the five arrows representing five senses through which the mind is influenced and is functioning and won the grace of Lord Siva, who alone, as the destroyer of Kaama and Kaala, is capable of saving us from the cycle of birth and death. If we surrender ourselves at the feet of the Divine Mother in the manner in which Sri Adi Sankara has taught us In the Soundarya Lahari, She Will help us to keep the mind and the senses under control and purify our heart, so that we may attain perfection Without being afflicted by kamma and lobha (lust and desires) and realise the Ultimate Truth and achieve sublime peace and happiness.

by Chandrasekharendra Saraswathi Mahaswamiji


KAMAKSHI

Sri Parvati as Sri Kamakshi or Sri Sivakamasundari is depicted as holding the bow and the arrows of Kamadeva controlling Kaama within Her eyes. Hence Kamakshi. She holds the sweet sugarcane bow representing the minds of  human beings, and  the five arrows representing five senses through which the mind is influenced and is functioning and won the grace of Lord Siva, who alone, as the destroyer of Kaama and Kaala, is capable of saving us from the cycle of birth and death. If we surrender ourselves at the feet of the Divine  Mother in the manner in which Sri Adi Sankara has taught us In the Soundarya Lahari, She Will help us to keep the mind and the senses under control and purify our heart, so that we may attain perfection Without being afflicted by kamma and lobha (lust and desires) and realise the Ultimate Truth and achieve sublime peace and happiness.

by Chandrasekharendra Saraswathi Mahaswamiji

Wednesday, January 22, 2014

Kannadasan (24 June 1927 -- 17 October 1981)

Kannadasan (24 June 1927 -- 17 October 1981) was a Tamil poet and lyricist, heralded as one of the greatest and most important writers in the Tamil language.
Frequently called Kaviarasu (English: King of Poets),
Kannadasan was most familiar for his song lyrics in Tamil films and contributed around 5000 lyrics besides 6000 poems and 232 books,including novels, epics, plays, essays, his most popular being the 10-part religious essay on Hinduism, captioned Arthamulla Indhumatham (English: Meaningful Hindu Religion).
He won the Sahitya Akademi Award for his novel Cheraman Kadali in the year 1980 and was the first ever to receive the National Film Award for Best Lyrics, given in 1969 for the film Kuzhanthaikkaga.
Kannadasan worked in "Thiraioli" a Cine magazine run by Rama.Thiyagarajan in Rayavaram. Pudukkottai Distt and in Chennai. He also worked for "Thirumagal" magazine in Ramachandrapuram, Pudukkottai Distt.

Atheism to Hinduism
Muthiah was a staunch atheist and a follower of the Dravidian atheistic movement. He had great love for the Tamil language and culture, and excelled in Tamil literature, prose and poetry. He once read the Thiruppavai of Andal, and was amazed at its mystic poetry, that was to have a deep and everlasting impact on him. After a lot of introspection, he decided to reconvert back into Hinduism, renamed himself as Kannadasan, dug deep into understanding Hinduism, and wrote his series of books on Hinduism titled "Arthamulla Indhu Matham"
Kannadasan is the real master of Tamil film lyrics which exceeds all other works he contributed. Simple words with a philosophical flavor is his evergreen style. Though many song writers back from Papanasam Shivam, Kambadasan, Vindhan, Maruthakasi, Ku.Ma.Balasubramanian etc. ruled Tamil music industry, but after Kannadasan the scene changed.He was the unbeatable no.1. till he died. In this same period there were many excellent poets like Vaali, Pulamaipittan, Alangudi Somu, Avinasimani,Panchu Arunachalam, Jayakanthan etc., the songs written by these poets too are considered by many fans as Kannadasan songs, because everyone thinks if a song has been good it could be by Kannadasan alone. This was the credit he attained.Even after his death though film lyrics had come a long way from Vairamuthu to Tamarai or even Kolaiveri Danush, still Kannadasan is the best and his songs overtake all the new songs up to date. New songs fade away by months or even days, but still Kannadasan's songs haunt us. After Bharati we could name Kannadasan as the next great poet, but poetry and film lyrics are totally different in Tamil art world. He was the producer of historic Tamil film "sivagangai seemai"portraiting first freedom fighters "Marudhu Pandaiars"belonging to "AGAMUDAIRS"a sub sect of "Mukulatthor"(KALLAR,MARAVAR and AGAMUDAIAR).The song "Santhupottu"in that film was popular and ever remembered..



Shree Shirdi Sai Baba Morning Aarti 4:30 Am To 5:30 Am

Monday, January 20, 2014

கனவு-அன்று-கனவு அபி



எல்லாம் முடிந்துவிட்டது எனக் 
கடைசியாக வெளியேறிய போது 
கவனித்தான் 
பின்புலமற்ற 
தூய நிலவிரிவு ஒன்றுabi_photobw01 
அவனுக்காகக் காத்திருப்பதை 

கனவுபோன்று இருந்தாலும் 
கனவு அன்று அது 

ஒளியிலிருந்து 
இருளை நோக்கிப் 
பாதிவழி வந்திருந்தது 
அந்த இடம் 

கிழக்கும் மேற்கும் 
ஒன்றாகவே இருந்தன 
தூரமும் கூடத் 
தணிந்தே தெரிந்தது 

தெரிந்ததில் 
எப்போதாவது ஒரு மனிதமுகம் 
தெரிந்து மறைந்தது 
ஒரு பறவையும் கூடத் 
தொலைவிலிருந்து தொலைவுக்குப் 
பறந்துகொண்டிருந்தது 

சஞ்சரிக்கலாம் 
மறந்து மறந்து மறந்து 
மடிவுற்றிருக்கலாம் அதில் 
நடக்க நடக்க 
நடையற்றிருக்கலாம் 

ஆயினும் 
உறக்கமும் விழிப்பும் 
துரத்திப் பிடிப்பதை 
அவற்றின் மடிநிறைய 
தலைகளும் கைகால்களும் 
பிதுங்கிக் கொண்டிருப்பதைப் 
பார்க்கும் நிமிஷம் 
ஒருவேளை வரலாம் 

கனவு அன்று எனத் தோன்றினாலும் 
கனவாகவே இருக்கலாம் 


மாலை - எது 

தூசி படிந்த புளியமர வரிசையை 
வைதுகொண்டே 
மணலில் வண்டியிழுக்கின்றன மாடுகள் 

வண்டுகளும் பறவைகளும் 
தோப்புகளுக்குள் 
இரைச்சலைக் கிளறி 
எதையோ தேடிக்கொண்டிருக்கின்றன 

இருண்டு நெருங்கி வளைக்கும் 
மலைகளுக்கு நடுவே பள்ளத்தாக்கில் 
இங்கும் அங்கும் பாய்ந்து நிரம்பித் 
ததும்புகிறது 
என் வலி 

பொழுது நிரம்புகிறது 
ஒரு இடுக்கு விடாமல் 


தூசி படிந்த இரைச்சலுக்கடியில் 
சாத்வீக கனத்துடன் 
இது எது? 

இருள் இருண்டு காட்டிய வெளிச்சத்தில் 
இடறாத என் பாதங்களினடியில் 
இது எது 
என் சாரங்களின் திரட்சியுடன் 
வலியுடன் 
அலங்கரித்த விநோதங்களை 
அகற்றிவிட்டு 
எளிய பிரமைகளின் வழியே 
என்னைச் செலுத்தும் 
இது எது? 


மாலை - தணிவு 

காடு எரிந்த கரிக்குவியலில் 
மேய்ந்து களைத்துத் 
தணிந்தது வெயில் 
என்னோடு சேர்ந்து 

இதோ இதோ என்று 
நீண்டு கொண்டே போன பாதைகள் 
மடங்கிப் 
பாலையினுள், முள்வெளி மூழ்கச் 
சலனமற்று நுழைந்துகொண்டன 

விவாதங்கள் 
திரும்புவதற்கு அடையாளமிட்டுப் போன 
வழிகளில் 
அறைபட்டுத் திரும்பின 

முடிவுகள் 
அரைகுறைப் படிமங்களாக வந்து 
உளறி மறைந்தன 

பசியும் நிறைவும் 
இரண்டும் ஒன்றாகி 
என் தணிவு 

வேறொரு விளிம்பைச் 
சுட்டிக் காட்டாத 
விளிம்பில் 
தத்தளிப்பு மறைந்த 
என் தணிவு 

நிகழும் போதே 
நின்றுவிட்ட என் கணம் 
குளிரத் தொடங்கியது 
என் தணிவைத் தொட்டு 


மாலை - காத்திருத்தல் 

விஷப்புகை மேவிய வானம் 
மூச்சுக்குத் தவிப்பது தெரிகிறது 

அறிந்தவைகளின் மறுபுறங்கள் திரண்டு 
மின்னி இடித்து 
வெறியோடு வருகின்றன 
அல்ல அல்ல அல்ல என்று 
பொழிந்து பிரவகிக்க 
அழித்துத் துடைத்து எக்களிக்க 
வருவது தெரிகிறது 

அடர்வனங்களின் 
குறுக்கும் நெடுக்குமாக 
ஆவேசக் காட்டாறுகள் 
பதறி ஓடி 
வாழ்வைப் பயிலும் 

உண்டு-இல்லை என்பவற்றின் மீது 
மோதிச் சிதறி 
அகண்டம் 
ஒரு புதிய விரிவுக்குத் தயாராவது புரிகிறது 


காத்திருக்கிறேன் 
இதுவே சமயமென 
எனது வருகைக்காக 
என் குடிசையில் வாசனை தெளித்து 
சுற்றிலும் செடிகொடிகளின் 
மயக்கம் தெளிவித்து 
அகாலத்திலிருந்து 
இந்த மாலைப்பொழுதை விடுவித்து- 

காத்திருக்கிறேன் 
மறுபுறங்களிலிருந்து 
வெற்றி தோல்வியின்றித் திரும்பும் 
என் வருகையை எதிர்நோக்கி 

விடைகள் 
விடைகள் 
மிகவும் மெலிந்தவை 

ஏதோ சுமந்து வருவன போல 
முக்கி முனகி வியர்வை துளித்து 
நம் முகத்தில் 
திருப்தி தேடுபவை 

தரையில் கால்பாவாது 
நடக்கவும் 
நீரில் நனையாமல் 
நீந்தவும் 
அறிந்தவை 

முந்தாநாள் 
ஒரு விடையை 
எதிர்ப்பட்டேன் 

என்னைப் பார்த்தவுடன் 
அது 
உடையணிந்து 
உருவுகொண்டது 

தன்னை ஒருமுறை 
சரிபார்த்துக் கொண்டதும் 
எங்களைச் சுற்றி 
ஒரு அசட்டுமணம் பரப்பிவிட்டு 
என்னை நேர்கொண்டது 

நான் 
ஒன்றும் சொல்லவில்லை 

நெளிந்தது 

கலைந்து மங்கும்தன் 
உருவை 
ஒருமித்துக் கொள்ளக் 
கவலையோடு முயன்றது 

சுற்றிலும் பார்த்துவிட்டு 
ஒருமுறை 
என்னைத் தொடமுயன்றது 

நான் 
எதுவுமறியாத 
பாவனை காட்டியதில் 
ஆறுதலுற்றுக் 
கொஞ்சம் நிமிர்ந்தது 

எதிர்பாராது வீசிய காற்றில் 
இருவரும் 
வேறுவேறு திசைகளில் 
வீசப்பட்டோம் 

திரும்பப்போய்த் 
தேடிப்பார்த்த போது 
சாமந்திப்பூ இதழ்கள் போல் 
பிய்ந்து கிடந்தன 
சில 
சாகசங்கள் மட்டும் 


காலம் - புழுதி 

எங்கிலும் புழுதி 
வாழ்க்கையின் தடங்களை 
வாங்கியும் அழித்தும் 
வடிவு மாற்றியும் 
நேற்று நேற்றென நெரியும் புழுதி 

தூரத்துப் பனிமலையும் 
நெருங்கியபின் சுடுகல்லாகும் 
கடந்தாலோ 
ரத்தம் சவமாகிக் கரைந்த 
செம்புழுதி 

புழுதி அள்ளித் 
தூற்றினேன் 

கண்ணில் விழுந்து 
உறுத்தின 
நிமிஷம் நாறும் நாள்கள் 


காலம் - சுள்ளி 

காடு முழுதும் 
சுற்றினேன் 

பழைய 
சுள்ளிகள் கிடைத்தன 

நெருப்பிலிட்டபோது 
ஒவ்வொன்றாய்ப் 
பேசி வெடித்துப் 
பேசின 

குரலில் 
நாளைச்சுருதி 
தெரிந்தது 

அணைத்து, 
கரித்தழும்பு ஆற்றி 
நீரிலிட்டபோது 
கூசி முளைத்துக் 
கூசின இலைகள் 

தளிர் நரம்பு 
நேற்றினுள் ஓடி 
நெளிந்து மறைந்தது

New supermaterial made in Aus

Ayandata_Silicene_Wikipedia
Although theoretical calculations had predicted that silicene would contain exciting properties, this is the first time in Australia the material has been fabricated.
Image: Ayandata/Wikimedia
THE UNIVERSITY OF WOLLONGONG    
From smaller, faster computer chips to more practical and efficient solar cells through to improvements in medical technologies and vehicle and aircraft parts, silicene, a two-dimensional form of silicon, may provide a powerful material for the future.
Silicene is similar to graphene in that it is a single-atom-thick and has the same honeycomb structure. Theoretical calculations have predicted that silicene would contain exciting properties that could be used in a range of applications. However, its complicated formation chemistry and physics makes the fabrication of this material to be extremely difficult.
Now a team including Dr Yi Du, Dr Xun Xu, Dr Stefan Eilers, Dr. Germanas Peleckis, Professor Xiao Lin Wang and Professor Shi Xue Dou from the Institute for Superconducting and Electronic Materials (ISEM), located at the University of Wollongong’s Australian Institute for Innovative Materials facility, has successfully fabricated single-atom-layer silicene for the first time in Australia.
The research team is one of a small number of teams around the world who have successfully fabricated silicene.
ISEM Director, Professor Shi Xue Dou said that being the first group to fabricate silicene in Australia was a tremendous breakthrough.
“Silicene is an exciting new material, rich in physics and chemistry sciences and possible applications, and it is fantastic that we have been able to fabricate it here.
“We are also the first group to perform Raman spectroscopy investigation on the phonon* modes for the first time in the world using Scanning Near-field Optical Microscopy”, Professor Dou said. [*A phonon is a collective excitation in a periodic, elastic arrangement of atoms or molecules in condensed matter such as solids and some liquids]
The research team noted that this work would not have been possible had it not been for the three-chamber low-temperature scanning tunnelling microscope (STM), the first of its type in Australia, which allows researchers to undertake surface imaging at atomic level. The purchase of the microscope was possible after the team at ISEM and their collaborators were successful in securing a $2,500,000 grant from the Australian Research Council.
“The scanning tunnelling microscope allows us to both examine and manipulate materials at an atomic level.
“This enables us to discover new properties with the aim of maintaining those properties as we scale the materials up from the nano scale to a scale that would be useful in manufacturing and production,” Professor Dou said.
The research team will continue their efforts to advance their knowledge of the fundamental properties of silicene and how they can harness its properties for use in applications from nanoelectrics through to solar energy applications.
This team has also demonstrated the molecular gear for a nanomachine and tuning the interaction within a molecular layer and between a molecular layer and substrate with light. The team has actively collaborated with researchers from the University of Queensland and the Institute of Physics of Chinese Academy of Sciences.
Editor's Note: Original news release can be found here.

Study shows plants can learn



Not long after publishing a paper in a prestigious journal about plants being able to ‘talk' using sound, Monica Gagliano is back with her new findings showing that they can ‘learn'.
While this may sound stranger than fiction, Dr Gagliano, an Australian Research Council research fellow at The University of Western Australia's Centre for Evolutionary Biology, has solid evidence to support her theories, the latest of which is published in Oecologia.
Her work is becoming famous, with a recent mention by Michael Pollan in the New Yorker.
Her new article - written with Associate Professor Michael Renton and Dr Martial Depczynski from UWA's School of Plant Biology and Oceans Institute, respectively, and Professor Stefano Mancuso at the University of Florence in Italy - is titled "Experience teaches plants to learn faster and forget slower in environments where it matters".
Dr Gagliano and her team show that Mimosa pudica plants can learn and remember just as well as it would be expected of animals, but of course, they do it all without a brain. Using the same experimental framework normally applied to test learned behavioural responses and trade-offs in animals, they designed their experiments as if Mimosa was indeed an animal.
Dr Gagliano and her colleagues trained Mimosa plants' short- and long-term memories under both high and low-light environments by repeatedly dropping water on them using a custom-designed apparatus (Mimosa folds its leaves in response to the drop). They show how Mimosa plants stopped closing their leaves when they learnt that the repeated disturbance had no real damaging consequence. Mimosa plants were able to acquire the learned behaviour in a matter of seconds, and as in animals, learning was faster in less favourable environments (i.e. low light). Most remarkably, these plants could remember what had been learned for several weeks, even after changing environmental conditions.
Plants may lack brains and neural tissues, but they do possess a sophisticated calcium-based signal network in their cells similar to animals' memory processes, they write.
The researchers concede that they do not yet understand the biological basis for this learning mechanism, nevertheless, their set of experiments has major implications - not least, it radically changes the way we perceive plants and the boundaries between plants and animals, including our definition of learning (and hence memory) as a property special to organisms with a nervous system function of a nervous system.
Editor's Note: Original news release can be found here.

"Proof of Vedic Culture's Global Existence"

The Story of Universal Creation: Biblical story derived from the Vedas?
Excerpt from Stephen Knapp's book, "Proof of Vedic Culture's Global Existence"

The story of the creation of the world, as explained in the Bible, has its roots in the Vedic tradition. In the first sentences of the Bible it states: “In the beginning God created the heaven and the earth. And the earth was without form and void; and darkness was upon the face of the deep. And the spirit of God moved upon the face of the waters.” So herein we can see that the Bible begins with the same but summarized story as recorded in the Vedic texts, when Lord Vishnu was lying on the universal waters in a dark and empty universe and created all the universal elements to form heaven and earth.

This is continued in the New Testament, in the opening lines of the book of John which states, “In the beginning was the word, and the word was with God, and the word was God.” That first word, as described in the Vedic texts, was OM. That word was present at the time of creation and was with God, and is God.

Shortly after the creation, the Bible refers to the story of Adam and Eve, the first couple from whom the human race was born. However, this is similar to the previously recorded story in the Vedic texts of Svayambhuva Manu and his wife Satarupa who, after coming into being, were essentially advised by Brahma, the creator, to “Beget many children and rule over the earth, for you shall be the ruler of men.” The Koran also follows the biblical tradition, accepting the lineage of the prophets.


The Story of Universal Creation: Biblical story derived from the Vedas?
Excerpt from Stephen Knapp's book, "Proof of Vedic Culture's Global Existence"

The story of the creation of the world, as explained in the Bible, has its roots in the Vedic tradition. In the first sentences of the Bible it states: “In the beginning God created the heaven and the earth. And the earth was without form and void; and darkness was upon the face of the deep. And the spirit of God moved upon the face of the waters.” So herein we can see that the Bible begins with the same but summarized story as recorded in the Vedic texts, when Lord Vishnu was lying on the universal waters in a dark and empty universe and created all the universal elements to form heaven and earth.

This is continued in the New Testament, in the opening lines of the book of John which states, “In the beginning was the word, and the word was with God, and the word was God.” That first word, as described in the Vedic texts, was OM. That word was present at the time of creation and was with God, and is God.

Shortly after the creation, the Bible refers to the story of Adam and Eve, the first couple from whom the human race was born. However, this is similar to the previously recorded story in the Vedic texts of Svayambhuva Manu and his wife Satarupa who, after coming into being, were essentially advised by Brahma, the creator, to “Beget many children and rule over the earth, for you shall be the ruler of men.” The Koran also follows the biblical tradition, accepting the lineage of the prophets.

Friday, January 17, 2014

கணைய மறுசீரமைப்பு.. சர்க்கரை நோயர்களுக்கு உதவும்..!!

கலிபோர்னியா சான்பிரான்சிஸ்கோ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் குழு ஒன்றுஎலிகள் மீது பரிசோதனை நடத்திஅவற்றின் கணையத்தில் இருக்கும் அசினார் செல்களை பேட்டா செல்களாக மாற்றுவதன் மூலம் அவற்றின் ரத்தத்தில் உள்ள இயற்கை இன்சுலின் மற்றும் குளூகோஸ் அளவுகளை மீண்டும் நிலை நிறுத்தும் முடியும் என்பதை கண்டறிந்துள்ளார்கள். மருந்துகள் மூலம் அளிக்கப்படும் சிகிச்சைகளால் அசினார் செல்களை பேட்டாசெல்களாக மாற்றுவது சாத்தியம் என்று முதல் முறையாக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். மைக்கேல் எஸ்.ஜெர்மன் சோதனைச்சாலையில் மருத்துவ முனைவர் பட்டத்துக்கு ஆய்வு செய்து வரும் லூக்பேயன்ஸ் கலிபோர்னியா சான்பிரான்சிஸ்கோ பல்கலைக்கழகத்தில் இணை பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இவருடைய தலைமையில் இந்த ஆராய்ச்சி நடைபெற்றது.

இந்தஆய்வு முடிவு முதலாம் வகை சர்க்கரை நோயாளர்களுக்கும், பேட்டா செல்களின் தவறான செயல்பாட்டின் காரணமாக இரண்டாம் வகை நோயர்களுக்கும் குணமளிக்கும் என்று நம்பிக்கை தரும் சிகிச்சை முறை கிடைத்துள்ளதாக கருதப்படுகிறது. எலிகளில் செய்யப்பட்ட சோதனைகள் மனிதருக்கும் மாற்றப்பட்டு வெற்றி அடைந்தால், முதலாம் வகை சர்க்கரை நோயர்களுக்கு மருந்து மூலம் சிகிச்சை அளித்து புதிய பேட்டா செல்களை உற்பத்தி செய்தால் முதல் வகை சர்க்கரை நோயர்கள் பெரிதும் நன்மை அடைவார்கள் என்று நேச்சர் பயோடெக்னாலஜியில் எழுதிய கட்டுரையில் டாக்டர் பேயன்ஸ் கூறியுள்ளார். பேட்டா செல்கள் அதிநுட்பமான செல்கள். அவை ஒரு இறுக்கமான கட்டுப்படுத்தப்பட்ட வழியில் ஏராளமான இன்சுலினை உற்பத்தி செய்கின்றன.

Thursday, January 16, 2014

அதிகமாக பொருட்களை வாங்கி குவிப்பவர்கள். அதிகமாக மனஅழுத்தத்திற்கு ஆளாகிறார்கள்

சமீபத்திய ஆய்வுகளின் படி 
அதிகமாக பொருட்களை வாங்கி குவிப்பவர்கள். அதிகமாக மனஅழுத்தத்திற்கு ஆளாகிறார்கள் .
ஏராளமாக பொருட்களை குவிப்பது தன்னுடைய குடும்பம் 
வசதியாக வாழ, என எண்ணுகின்றனர் .
புதிய மாடல் கார், பெரிய TV,
பெரிய வீடு. இவை எல்லாம் தம்பதிகளுக்கிடையாண இடைவெளியை மிக நீண்டதாக ஆக்கிவிடுகிறது.

உணர்வில்லா இப்பொருட்கள் ,நம்உறவில் பெரும் ஏக்கத்தை உண்டுபண்ணுகின்றன. குறைவாக செலவு செய்வது
தங்கள் தகுதியையும் , வாழ்க்கை தரத்தையும் பாதிக்கும் என எண்ணுகின்றனர் .

இவர்களின் உணர்வுபூர்வமான நெருக்கத்தில் நிரந்தர இடை வெளி ஏற்படுகிறது .
விவாகரத்துக்கு (living in a material world )இது ஒரு முக்கிய காரணம் .

Uttarayana and Dakshinayana--matter and Vishnu , the all pervading force .


Cancer and Tropic of Capricon which is called in the Indian context as Uttarayana and Dakshinayana.

Makara Sankranti falls in the period when the Sun, which is in the Tropic of Capricon in the Southern Hemisphere, has started moving northwards towards us in India.

Makara Jyothi is a star which is worshiped by pilgrims in huge numbers at Sabarimala Temple in Kerala on Makara Sankranti on January 14th or 15th every year.

Makara Jyoti is not to be mistaken to Makara Vilakku (Holy flame). Makaravilakku is a light or flame that appears thrice on the Ponnambalamedu hill, four kms away to the Sabarimala temple.

The very name Ayyappa in the South Indian languages, denotes the embodiment of 5, the 5 Primordial elements (Space, Air, Fire, Water & Earth) of which this Universe or Prapancha is made of.

Celebrating the festival of this Makara Sankranti in association with Ayyappa, brings to our attention that we and everything in this Prapancham is made up of Panchabhuta – the Primordial 5 elements.

When we say, Ayyappa Saranam , we pay obeisance to these 5 Primordial elements themselves. We pay obeisance to Ayyappa, son of Shiva the cause for the manifestation of matter and Vishnu , the all pervading force which together keep this Universe conforming to the Dharma of the Universe and Nature



Monday, January 13, 2014

Oldest woman of world A chinese woman born in 1885 and still alive! - 127 year old




திருப்பூர் குமரன் (Tiruppur Kumaran)



திருப்பூர் குமரன் (அக்டோபர் 4, 1904 - ஜனவரி 11, 1932) இந்திய விடுதலைப் போராட்ட தியாகி ஆவார். இவர் ஈரோடு மாவட்டத்தில் உள்ள் சென்னிமலையில் பிறந்தார். 1932 ஆம் ஆண்டு சட்ட மறுப்பு இயக்கம் மீண்டும் தொடங்கிய போது தமிழகம் முழுவதும் அறப்போராட்டம் பரவிய நேரத்தில் திருப்பூரில் தேசபந்து இளைஞர் மன்ற உறுப்பினர்கள் அச்சமயம் ஏற்பாடு செய்த மறியல் போராட்டத்தில் தீவிரமாகப் பங்குகொண்டு, 1932 ஆம் ஆண்டு ஜனவரி 11 ஆம் தேதியன்று கையில் தேசியக் கொடியினை ஏந்தி, தொண்டர் படைக்குத் தலைமை ஏற்று, அணிவகுத்துச் சென்றபோது காவலர்களால் தாக்கப்பட்டு தடியடிபட்டு மண்டை பிளந்து, கையில் இந்திய தேசியக் கொடியை ஏந்தியபடி மயங்கி விழுந்து, பின்னர் மருத்துவமனையில் உயிர் துறந்தவர் திருப்பூர் குமரன் . இதனால், கொடிகாத்த குமரன் என்றும் அழைக்கப்படுகிறார்.






நினைவகம்

தமிழ்நாடு அரசு திருப்பூர் குமரன் தியாகத்தைப் போற்றும் வகையில் திருப்பூரில் திருப்பூர் குமரன் நினைவகம் ஒன்றை அமைத்துள்ளது. இங்கு தற்காலிக நூல் நிலையம் உள்ளது. படிப்பகம் ஒன்று செயல்பட்டு வருகின்றது. மேலும் இந்தியச் சுதந்திரப் போராட்ட வீரர்களின் படங்கள் வரைந்து பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.

தபால் தலை

இவரது நூறாவது பிறந்த நாளைச் சிறப்பிக்கும் வகையில், அக்டோபர் 2004 இல் சிறப்பு நினைவுத் தபால் தலை இந்திய அரசால் வெளியிடப்பட்டது.

Tiruppur Kumaran (1904–1932), was an Indian revolutionary who participated in the Indian independence movement. Kumaran was born in Chennimalai, a small town in the Erode District in Tamil Nadu region of south India. He died from injuries sustained from a police assault during a protest march against the British colonial government on January 11, 1932. At the time of his death, he was holding the flag of the Indian Nationalists, which had been banned by the British.

Kumaran founded Desa Bandhu Youth Association. The government has erected his statue in a park by the railway station in Tirupur. Kumaran is revered as a martyr in Tamil Nadu and is known by the epithet Kodi Kaththa Kumaran (Kumaran who saved the Flag) —
— with Yadhav Prakash and Ramanathan Ramanathan.

Kumaran also known as Tiruppur Kumaran (4 October 1904 – 1 November 1932) was an Indian revolutionary who participated in the Indian independence movement.
Kumaran was born in Chennimalai in Madras Presidency, British India (current Erode district in Tamil Nadu). He founded Desa Bandhu Youth Association and led protests against the British. He died from injuries sustained from a police assault on the banks of Noyyal River in Tiruppur during a protest march against the British government on 11 January 1932. At the time of his death, he was holding the flag of the Indian Nationalists, which had been banned by the British giving rise to the epithet Kodi Kaththa Kumaran (Kumaran who held the flag)
A commemorative stamp was issued by India post in October 2004 on his 100th birth anniversary. A statue has been erected in Tirupur in his honor which is often used as a focal point for public demonstrations
 

Friday, January 10, 2014

ஒரு மனைவியின் சாகசம்-இடாலோ கால்வினோ

ஆங்கில மொழிபெயர்ப்பு: வில்லியம் வீவர்
தமிழில்: ஆர். சிவக்குமார்.

இடாலோ கால்வினோ 1923 ஆம் ஆண்டு கியூபாவிitalo-calvino-bw1-frmல் பிறந்தார்.இத்தாலியில் வளர்ந்தார். இவர் இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தியநாவலாசிரியர்களில் தலை சிறந்தவராகக்  கருதப்படுகிறார். இவர்எழுதியுள்ள முக்கியமான நூல்கள்: தி காஸ்ட்ல் ஆப் க்ராஸ்ட் டிஸ்டினீஸ்(நாவல், 1973), இன்விஸிபில் சிட்டீஸ் (1972), டிபிக்கல்ட் லவ்ஸ்(சிறுகதைகள், 1984), ரோட் ஆப் சன் ஜியோவன்னி (1994) மற்றும் அன்டர் த ஜகர்ஸன் (1992).

திருமதி ஸ்டெஃபனியா ஆர். காலை ஆறு மணிக்குத் தன் வீட்டிற்குத் திரும்பி வந்து கொண்டிருந்தாள். அதுதான் முதல் தடவை.
கார் அவளுடைய வீடு இருந்த கட்டடத்திற்கு முன்பாக இல்லாமல் சற்று முன்னாலேயே திருப்பத்தில் நின்றது. அந்த இடத்தில் தன்னை விட்டுவிடும்படி அவள்தான் ஃபர்னெரோவை கேட்டுக்கொண்டாள்; ஏனென்றால், கணவன் ஊரிலில்லாத சமயத்தில் அதிகாலையில் ஓர் இளைஞனுடன் அவள் வீடு திரும்புவதைக் காவலாள் பார்ப்பதை அவள் விரும்பவில்லை. என்ஜினை நிறுத்தியவுடன் ஃபர்னெரோ அவளைத் தன் கையால் அணைக்க முற்பட்டான். வீடு அருகிலிருந்தமை எல்லாவற்றையும் மாற்றிவிட்டதைப் போல ஸ்டெஃபனியா அவனிடமிருந்து சட்டென பின்னகர்ந்தாள். காரிலிருந்து அவசரமாக வெளியேறிய அவள், காரைக் கிளப்பிக்கொண்டு போய்விடும்படி ஃபர்னெரோவுக்குக் குனிந்து சைகை செய்துவிட்டு, கோட்டின் கழுத்துப்பட்டியில் முகம் புதைந்திருக்க வேகமாக
நடக்க ஆரம்பித்தாள். அவள் தன் கணவனுக்கு துரோகம் செய்பவளா? கூட்டுக் குடியிருப்புகள் நிறைந்த அந்தக் கட்டடத்தின் பிரதான கதவு இன்னும் பூட்டியே இருந்தது. ஸ்டெஃபனியா இதை எதிர்பார்க்கவில்லை. அவளிடம் சாவி இல்லை. சாவி இல்லாததனால்தான் முந்தைய இரவை அவள் வெளியே கழித்தாள். நடந்த கதை அதுதான். இரவின் ஒரு குறிப்பிட்ட நேரத்திற்குள் அதைத் திறக்க நூறு வழிகள் இருந்திருக்கலாம்; அல்லது தன்னிடம் சாவி இல்லை என்பது முன்னதாகவே அவளுக்கு நினைவுக்கு வந்திருக்க வேண்டும். ஆனால் அது நடக்கவே இல்லை; வேண்டுமென்றே அவள் அப்படி செயல்பட்ட மாதிரி இருந்தது. இரவு உணவுக்கும் திரும்பிவிட முடியும் என்று அவள் நினைத்ததால் சாவி இல்லாமலேயே பிற்பகலில் வீட்டைவிட்டுக் கிளம்பினாள். ஆனால் அவள் பல காலம் பார்க்காதிருந்த அவளுடைய பெண் நண்பர்களும், அவர்களின் ஆண் நண்பர்களும் முதலில் இரவு உணவுக்கும், பின் குடிக்கும், நடனத்திற்கும் என்று அவளை ஒவ்வொருவர் வீடாக இழுத்தடித்தனர். விடியற்காலை இரண்டு மணிக்குத் தன்னிடம் சாவி இல்லையென்பது நினைவுக்கு வந்தபோது மிகவும் தாமதமாகிவிட்டது. அதற்கெல்லாம் காரணம், அந்த ஃபர்னெரோவுடன் அவள் கொஞ்சம் காதல் வயப்பட்டிருந்ததுதான். காதலா? கொஞ்சம் கூடுதல் குறைச்சலில்லாமல் விஷயங்களை உள்ளவாறே பார்க்க வேண்டும். அவனுடன் அந்த இரவை அவள் கழித்திருந்தாள்,உண்மைதான். ஆனால் அப்படிச் சொல்வது மிகை; அப்படிச் சொல்வதுசரியுமல்ல. அவள் வசித்த கட்டடத்தின் கதவு திறக்கப்படுவதற்கான நேரம்வரை அவனுடைய தோழமையில் அவள் இருந்தாள். அவ்வளவுதான். ஆறுமணிக்குத் திறந்துவிடுவார்கள் என்று நினைத்து வீடு திரும்ப அவள் அவசரப்பட்டாள். ஸ்டெஃபனியா இரவை வெளியே கழித்ததை ஏழு மணிக்கு வரும் துப்புரவு செய்யும் பெண் தெரிந்து கொள்வதையும் அவள் விரும்பவில்லை. அவளுடைய கணவன் வேறு இன்று வீடு திரும்புகிறான்.
கதவு இன்னும் திறக்கப்படாமலிருப்பதைக் கண்டாள். ஆளரவமற்ற தெருவில் அவள் மட்டும்தான் இருந்தாள். எல்லாவற்றையும் உருப்பெருக்கிக் காட்டுவது போன்ற அந்த அதிகாலை ஒளியில் அவள் பகலின் வேறெந்தநேரத்தை விடவும் துலக்கமாகத் தெரிந்தாள். ஒரு கலக்க உணர்வு சுரீரென்று அவளை உறைத்தது; கணவன் அருகில்,அவன் அரவணைப்பில் ஒவ்வொரு நாள் அதிகாலையிலும் அனுபவிக்கும் நீண்ட ஆழ்ந்த தூக்கத்துக்கு அவள் ஏங்கினாள். இந்த ஏக்கம் ஒரு கணம்தான்; குறைவாகக்கூட இருக்கலாம். அந்தக் கலக்கத்தைத் தான் உணர்வோம் என்று அவள் எதிர்பார்த்திருக்கலாம். ஆனால் உண்மையில் அவள் அதை உணரவேயில்லை. காவலாள் வெளிக்கதவை இன்னும் திறக்காமலிருந்தது சலிப்பூட்டியது. ஆனாலும் அந்த அதிகாலைக்காற்றிலும், அந்த நேரத் தனிமையில் இருப்பதில் உண்டான ரத்த ஓட்டத்துள்ளலிலும் ஒருவகையான பரவசம் இருக்கத்தான் செய்தது .ஃபர்னெரோவை அனுப்பிவிட்டதில் அவளுக்கு வருத்தம் ஒன்றுமில்லை;அவன் அருகில் இருந்திருந்தால் அவள் கொஞ்சம் பதற்றத்துடனேயே இருந்திருப்பாள். மாறாக, தனியாக இருந்ததில் அவள் வேறுவகையாகஉணர்ந்தாள். சிறுபெண்ணாக இருந்தபோது உணர்ந்ததை அது கொஞ்சம் ஒத்திருந்தாலும் முற்றிலும் வேறானது.
இரவை வெளியே கழித்ததில் அவளுக்குக் கொஞ்சமும் குற்றஉணர்வில்லை. இதை அவள் ஒத்துக்கொண்டேயாகவேண்டும்.அவளுடைய மனசாட்சி சுமையின்றி இருந்தது. அது கவலையற்றுஇருந்தது. இப்போது அந்தச் செயலைத் துணிந்து அவள்மேற்கொண்டுவிட்டதாலா? அல்லது கடைசியில் அவள் தன்னுடைய தாம்பத்ய கடமைகளை ஒதுக்கி வைத்து விட்டதாலா? அல்லது அதற்கு மாறாக, எல்லாவற்றையும் மீறி ஆசையை எதிர்த்து நின்று தன்னுடைய தாம்பத்ய விசுவாசத்தைக் காப்பாற்றிக் கொண்டுவிட்டதாலா?ஸ்டெஃபனியா தன்னைத்தானே கேட்டுக் கொண்டாள். இந்த குழப்பமும்,உறுதியற்ற நிலையுமே காலை நேரக் காற்றின் குளிர்ச்சியுடன் சேர்ந்துஅவளைக் கொஞ்ச நேரம் திடுக்குற வைத்தன. அவள் தன்னைஒழுக்கங்கெட்டவள் என்று கருதுவாளா, இல்லையா? தன்னுடைய நீண்டகோட்டின் பாக்கெட்டுகளில் கைகளை நுழைத்துக்கொண்டு அவள்முன்னும் பின்னுமாகக் கொஞ்ச நேரம் நடந்தாள். ஸ்டெஃபனியாவுக்குக் கல்யாணமாகி இந்த இரண்டு வருடங்களில் கணவனுக்குத் துரோகமிழைப்போம் என்று அவள் ஒருபோதும் நினைத்ததில்லை. கல்யாணமான ஒரு பெண் என்ற முறையில் ஏதோ ஒரு மாதிரியான எதிர்பார்ப்பு அவளுக்கிருந்தது; ஏதோ ஒன்று அவளுக்குக் கிடைக்காதது போன்ற உணர்வு அது. தன் சிறுபெண்தனத்திலிருந்து அவள் முழுமையாக இன்னும் விடுபடாதது போல இருந்தது. ஊர் உலகத்தின் முன் கணவனுக்கு சமதையாக ஆகும்படி, அவனைச் சார்ந்து வாழும் ஒரு புதிய சிறுபெண்தனத்திலிருந்து அவள் வெளியேற வேண்டும். அவள் இதுநாள் வரை காத்துக்கொண்டிருந்தது இந்த ஒழுக்கக் கேட்டுக்குத்தானா? ஃபர்னெரோ ஓர் ஒழுக்கங்கெட்டவனா? இரண்டு கட்டடங்கள் தாண்டி சாலையின் எதிர்புறமிருந்த ஒரு மதுபான விடுதி திறந்திருப்பதை அவள் பார்த்தாள். உடனடியாக அவளுக்கு ஒரு சூடான காஃபி தேவைப்பட்டது. விடுதியை நோக்கி நடக்க ஆரம்பித்தாள். ஃபர்னெரோ ஒரு சிறு பையன். அவனைக் குறித்து பெரிய வார்த்தைகளை உபயோகிப்பதை நினைத்துப் பார்க்கவே முடியாது.அவனும் அவளும், அவனுடைய சிறிய காரில் இரவு முழுக்க மலைகளை முன்னும் பின்னுமாக வலம் வந்ததும், நதியோரத்துச் சாலையில் பயணம்செய்தும் பொழுது புலரும்வரைச் சுற்றினார்கள். ஒரு கட்டத்தில்பெட்ரோல் தீர்ந்துபோய் காரைத் தள்ளிக்கொண்டு தூங்கிக் கொண்டிருந்த பெட்ரோல் நிலைய பணியாளை அவர்கள் எழுப்பவேண்டியதாயிற்று. அந்த இரவு முழுக்க அவர்கள் குழந்தைகளின்குதூகலத்தோடு நகரத்தைச் சுற்றினார்கள். மூன்று நான்கு முறைஃபர்னெரோவின் முயற்சிகள் பத்தானவையாக இருந்தன; ஒருமுறைஅவன் தான் தங்கியிருந்த விடுதியின் வாசற்படிக்கே அவளை அழைத்துக்கொண்டுபோய் தீர்மானமான குரலில் சொன்னான்: 'அலட்டிக் கொள்ளாமல் நீ இப்போது என்னுடன் மேல்மாடிக்கு வரவேண்டும்.'ஸ்டெஃபனியா மேல்மாடிக்குப் போகவில்லை. அப்படி நடந்து கொண்டது முறைதானா? பிறகு என்ன ஆகும்? அதைப் பற்றி இப்போது நினைக்க அவள் விரும்பவில்லை. ஒரு இரவைத் தூக்கமின்றி கழித்ததில் அவள் சோர்வடைந்திருந்தாள். அல்லது, இந்த அசாதாரண மனநிலையில் இருந்ததால் ஒருவேளை தான் தூக்கக் கலக்கத்தில் இருப்பதையே அவள் இதுவரை உணரவில்லையோ என்னவோ; ஆனால் படுக்கைக்குப் போய்விட்டால் ஒளி மங்கி மறைவது போல அவள் தூக்கத்தில் அமிழ்ந்து விடுவாள். தன்னை எழுப்ப வேண்டாமென்று சமையலறை சிலேட்டில் வேலைக்காரிக்குக் குறிப்பெழுதி வைத்துவிடுவாள். அவளுடைய கணவன் வந்த பிறகு ஒருவேளை அவளை எழுப்பக்கூடும். இன்னும் அவள் தன் கணவனை நேசிக்கிறாளா? அவள் அவனை நேசிப்பது உண்மைதான். அதன் பிறகு என்ன? அவள் தன்னைத்தானே இனி கேள்வி கேட்டுக்கொள்ளமாட்டாள். அவள் அந்த ஃபர்னெரோவோடு லேசாகக் காதல் வயப்பட்டிருந்தாள். லேசாகத்தான். பாழாய்ப்போன முன் கதவை எப்போதுதான் திறக்கப் போகிறார்கள்? மதுபான விடுதியில் நாற்காலிகள் அடுக்கப்பட்டும், மரத்தூள் தரையில் பரப்பப்பட்டும் இருந்தன. கவுண்ட்டரில் பணியாள் மட்டும் இருந்தான். ஸ்டெஃபனியா உள்ளே நுழைந்தாள். அந்த அகால நேரத்தில் அங்கு இருப்பது பற்றி அவள் கொஞ்சமும் சங்கோஜப்படவில்லை. யாருக்கு என்ன தெரியும்? அவள் அப்போதுதான் விழித்தெழுந்திருப்பாள்; ரயில் நிலையம் நோக்கிப் போய்க்கொண்டோ அல்லது வந்து சேர்ந்தோ இருப்பாள். எப்படியோ யாருக்கும் அவள் விளக்கம் சொல்ல வேண்டியதில்லை. இந்த எண்ணம் அவளுக்கு சந்தோஷம் தந்ததை அவள் உணர்ந்தாள். பணியாளிடம், 'சூடான கடுங் காஃபி' என்று சொன்னாள். அவள் இதற்கு முன் வந்தேயிராத இந்த விடுதியின் பணியாளுக்கும் அவளுக்கும் ஏற்கனவே ஏதோ அறிமுகம் இருந்ததைப்போல அவளுடைய குரலில் நம்பிக்கையும் உறுதியும் ஏற்பட்டிருந்தன.
'சரி அம்மா, யந்திரம் ஒரு நிமிடத்தில் சூடானவுடன் காஃபி தயாராகிவிடும்' என்று சொன்ன பணியாள் தொடர்ந்தான்: 'காலை நேரத்தில் நான் சுறுசுறுப்பு பெற எந்திரம் சூடாகத் தேவைப்படும்நேரத்தைவிட அதிக நேரம் பிடிக்கிறது.'
சிரித்துக்கொண்டே ஸ்டெஃபனியா குளிரினால் காலருக்குள் கழுத்தை இறுக்கிக்கொண்டே 'பர்ர்ர்...' என்று சொன்னாள்.
கடையில் வேறொருவன், ஒரு வாடிக்கையாளன். ஒரு ஓரமாக நின்று ஜன்னல் வழியே பார்த்துக் கொண்டிருந்தான். ஸ்டெஃபனியாவின் நடுக்கத்தைக் கேட்டு அவன் திரும்பியபோதுதான் அவளும் அவனைப் பார்த்தாள். இரண்டு ஆண்கள் அங்கு இருந்தது திடீரென்று அவளை சுயநினைவுக்கு ஈர்த்தது போல கவுண்டருக்குப் பின்புறமிருந்த கண்ணாடியில் தன்னைக் கவனத்துடன் பார்த்தாள். இரவை வெளியே கழித்தவள்போல நிச்சயம் அவள் தோன்றவில்லை; கொஞ்சம் வெளிறிப் போயிருந்தாள். அவ்வளவுதான். பையிலிருந்து சிறிய ஒப்பனைப் பெட்டியை எடுத்து மூக்குப் பகுதியில் பவுடர் போட்டுக்கொண்டாள். அந்த ஆள் இப்போது கவுண்டர் அருகே வந்துவிட்டான். வெண்பட்டுக் கழுத்துப் பட்டியைக் கொண்ட கருப்பு ஒவர் கோட்டையும், நீலநிற சூட்டையும் அவன் அணிந்திருந்தான். யாரையும் குறிப்பாகப் பார்த்துப் பேசாமல் அவன் சொன்னான்: 'காலையில் இந்த நேரத்தில் விழித்திருப்பவர்கள் இரண்டு வகைப்படுவார்கள். இன்னும் விழித்திருப்பவர்கள் மற்றும் இப்போதுதான் விழித்தவர்கள்.'
தன் கண்களை அவன்மீது பதிக்காமல் ஸ்டெஃபனியா லேசாகச் சிரித்தாள். ஆனாலும் ஏற்கனவே அவள் அவனை நன்றாகப் பார்த்திருந்தாள். பரிதாபமும் சாதாரணமும் நிரம்பிய முகம் அவனுடையது. வயோதிகத்தை அடையும் முன்பாகவே தம்மையும் உலகத்தையும் புகாரில்லாமல் ஏற்றுக்கொண்டு, புத்திசாலித்தனத்திற்கும், முட்டாள்தனத்திற்கும் இடைப்பட்ட நிலைக்கு வந்து சேர்ந்துவிட்ட மனிதர்களில் அவனும் ஒருவன்.
அவன் தொடர்ந்தான்: '... ஒரு அழகான பெண்ணை நீ பார்க்கும்போது அவளுக்குக் காலை வந்தனம் சொல்லிவிட்டு...' அவன் தன் வாயிலிருந்த சிகரெட்டை  எடுத்துவிட்டு ஸ்டெஃபனியாவை நோக்கித்தலை வணங்கினான். ஸ்டெஃபனியாவும் கொஞ்சம் குதர்க்கமான குரலில் 'காலை வந்தனம்' என்றாள்.
'... உன்னை நீயே கேட்டுக்கொள்கிறாய்: இன்னுமா? இப்போதுதானா? இப்போதுதானா? இன்னுமா?... அங்குதான் புதிரே இருக்கிறது' என்றான்.
விளையாட்டில் ஈடுபடுத்தப்பட்டும் விளையாட மனமில்லாதவளின் குரலில் 'என்ன?' என்றாள் ஸ்டெஃபனியா. அவன் அவளை விவஸ்தையில்லாமல் உன்னிப்பாகக் கவனித்தான். ஆனால் அவள் 'இன்னும்' விழித்திருப்பவள் என்பதைத் தெரிந்து கொண்டால்கூட ஸ்டெஃபனியா கவலைப்படப் போவதில்லை.
'நீங்கள்?' என்று அவள் மறைமுகக் கேள்வியுடன் கேட்டாள். தூங்காமல் அலையும் இரவு நேர ஆந்தை என்று தனக்குத்தானே சொல்லிக்கொள்வதில் பெருமிதம் கொள்பவன் அவன்; அப்படிப்பட்டவன் என்று தன்னை முதல் பார்வையிலேயே மற்றவர்கள் அடையாளம் கண்டு கொள்ளாதபோது வருத்தம் அடைபவன்.
'என்னையா கேட்கிறீர்கள்? நான் இன்னும் விழித்திருப்பவன்! எப்போதும் இன்னும் விழித்திருப்பவன்!' பிறகு தான் சொன்னதைப்பற்றி ஒரு கணம் யோசித்தான். 'பார்த்தால் உங்களுக்குத் தெரியவில்லையா?' அவன் அவளைப் பார்த்து சிரித்தாலும் இவ்விஷயத்தில் தன்னைத்தானே கிண்டல் பண்ணிக்கொள்ளத்தான் அவன் விரும்பினான். அங்கேயே ஒரு விநாடி நின்று தன் எச்சில் கசந்ததைப்போல அதை மெதுவாக விழுங்கினான். 'பகல் வெளிச்சம் வௌவாலைக் குகைக்குள் துரத்துவது போல என்னை என் இருப்பிடத்திற்குத் துரத்துகிறது...' என்று நாடக பாத்திரம் போல தன்னை மறந்து அவன் சொன்னான்.
'இதோ நீங்கள் கேட்ட பால். இது அந்த அம்மாவுக்குக் காஃபி' என்று சொல்லி பணியாள் கொண்டு வந்து வைத்தான். அவன் தன் கிளாசை ஊதியவாறு மெதுவாக உறிஞ்சிக் குடித்தான்.
'நன்றாக இருக்கிறதா?' என்று ஸ்டெஃபனியா கேட்டாள்.
'மகா மோசம்' என்று அவன் சொன்னான். 'விஷத்தை உடலிலிருந்து அகற்றும் என்கிறார்கள். ஆனால் இன்றைய நிலையில் அது என்னை என்ன செய்துவிட முடியும்? ஒரு விஷப்பாம்பு என்னைக் கடித்தால் அதுதான் செத்துப்போகும்.'
'உங்களுக்கு ஆரோக்கியம் இருக்கும் வரையில்...' என்றாள் ஸ்டெஃபனியா. வரம்பு மீறி அவள் அவனை கிண்டல் செய்கிறாள் போல.
'எனக்குத் தெரிந்த ஒரே விஷமுறிவு, நீங்கள் என்னை சொல்லச் சொன்னால்...' அவன் என்ன சொல்ல வருகிறான் என்பது  கடவுளுக்குத்தான் தெரியும்.
'நான் எவ்வளவு தரவேண்டும்?' என்று பணியாளிடம் கேட்டாள் ஸ்டெஃபனியா,
'...நான் எப்போதும் தேடிக்கொண்டிருக்கும் அந்தப் பெண்...' என்று அந்த இரவு ஆந்தை தொடர்ந்தான்.
கதவைத் திறந்துவிட்டார்களா என்று பார்ப்பதற்காக ஸ்டெஃபனியா வெளியே போனாள். நடைபாதையில் கொஞ்சதூரம் போனவள் கதவு இன்னும் மூடியிருப்பதைப் பார்த்தாள். இதற்கிடையில் அவளைத் தொடரும் எண்ணம் உடையவனைப் போல அவனும் மதுபான விடுதியிலிருந்து வெளியே வந்துவிட்டிருந்தான். ஸ்டெஃபனியா திரும்பி நடந்து விடுதியில் மீண்டும் நுழைந்தாள். இதை எதிர்பார்க்காத அவன் ஒரு கணம் தயங்கி தானும் திரும்ப ஆரம்பித்தான். ஒருவகையான,நடப்பதை ஏற்றுக்கொள்ளும் தன்மை மேலிட, லேசாக இருமிக்கொண்டு தன் வழியே போக ஆரம்பித்தான்.
'இங்கு சிகரெட் விற்கிறீர்களா?' என்று ஸ்டெஃபனியா பணியாளைக் கேட்டாள். அவளிடம் இருந்தவை தீர்ந்து போயிருந்தன; வீட்டிற்குப் போனவுடனேயே புகைக்க விரும்பினாள். சிகரெட் கடைகள் இன்னும் திறக்கவில்லை.
பணியாளரிடமிருந்து ஒரு சிகரெட் பாக்கெட்டை வாங்கிக்கொண்டு காசைக் கொடுத்தாள். விடுதியின் வாசற்படிக்கு அவள் மீண்டும் போனாள். கழுத்தில் கட்டப்பட்ட தோல்வாரை மூர்க்கத்தனமாக இழுத்துக்கொண்டு வேட்டைநாய் ஒன்று அவளை அநேகமாக மோதிக்கொண்டு உள்ளே நுழைந்தது. அதை இழுத்துப் பிடித்துக்கொண்டுஒரு வேட்டைக்காரன் பின்னால் வந்தான். துப்பாக்கி, குண்டுகள் ஆகியவை பொருத்தப்பட்ட இரும்புப் பட்டை மற்றும் வேட்டையாடப்பட்டவற்றை போட்டுக் கொள்ளும் பை ஆகியவற்றோடு அவன் இருந்தான். நாயைப் பார்த்து 'ஃப்ரிசெத்! உட்கார்!' என்று அதட்டியவன் விடுதிக்குள்ளே பார்த்து 'காஃபி' என்று கத்தினான்.
நாயைத் தடவிக்கொண்டே 'அழகாயிருக்கிறது' என்று சொன்ன ஸ்டெஃபனியா, 'இது மோப்ப நாயா?' என்று கேட்டாள்.
'இது ப்ரெத்தினிலிருந்து வந்த இனத்தைச் சேர்ந்த வேட்டை நாய்' என்று சொன்னான். அவன் இளமையாகவும், வெட்கப்படும் சுபாவம் காரணமாக ஒரு மாதிரி கரடு முரடாகவும் இருந்தான்.
'என்ன வயது?'
'ஏறத்தாழ பத்து மாதங்கள். ஃப்ரிசெத் ஒழுங்காக நடந்து கொள்.'
'சரி, கௌதாரிகள் எங்கே?' என்று விடுதியின் பணியாள் கேட்டான்.
'நாய்க்குப் பயிற்சிக் கொடுப்பதற்காகத்தான் வெளியே போகிறேன்' என்று வேட்டைக்காரன் சொன்னான்.
'ரொம்ப தூரம் போவீர்களா?' என்று ஸ்டெஃபனியா கேட்டாள்.
அதிக தூரத்தில் இல்லாத ஒரு பகுதியை அவன் குறிப்பிட்டான். 'காரில் போனால் அது ஒரு தூரமேயில்லை. எனவே பத்து மணிக்கெல்லாம் திரும்பிவிடுவேன். இந்த வேலை...'
'அந்த இடம் நன்றாக இருக்கும்' என்று ஸ்டெஃபனியா சொன்னாள்.
அவர்கள் இருவரும் எதைப்பற்றியும் அதிகம் பேசவில்லையென்றாலும் உரையாடலை நிறுத்திவிட அவளுக்கு மனமில்லை.
'அங்க பாலை வனமான புதரடர்ந்த ஒரு பள்ளத்தாக்கு இருக்கிறது. காலை நேரத்தில் பனிப்படலம் இல்லாததால் எல்லாவற்றையும் தெளிவாகப் பார்க்க முடியும்... நாய் எந்தப் பறவையையாவது துரத்தினால்...'
'பத்து மணிக்கு எனக்கு வேலை ஆரம்பித்தால் தேவலை. ஒன்பதே முக்கால் வரை தூங்குவேன்' என்று பணியாள் சொன்னான்.
'ஆமாம், எனக்கும் தூங்க ஆசைதான்; இருந்தாலும், எல்லோரும் தூங்கிக் கொண்டிருக்கும்போது அங்கு போக வேண்டியிருக்கிறது...என்னவென்று தெரியவில்லை, எனக்கு அது பிடித்திருக்கிறது... அதுஒரு வெறியாகவே என் உள்ளே இருக்கிறது...' என்று வேட்டைக்காரன் சொன்னான்.
இந்த இளைஞன் தன்னுடைய வெளிப்படையான சுய மெய்ப்பித்தலுக்குப் பின்னால் ஒரு கூர்மையான பெருமிதத்தையும், சுற்றியுமுள்ள தூங்கும் நகரத்தின்மீது ஒரு வெறுப்பையும், வித்தியாசமாக உணர வேண்டுமென்ற உறுதியையும் மறைத்து வைத்திருப்பதை ஸ்டெஃபனியா உணர்ந்தாள்.
'தப்பாக எடுத்துக்கொள்ள வேண்டாம், வேட்டைக்காரர்களாகிய நீங்கள் எல்லாருமே பைத்தியக்காரர்கள் என்பது என் கருத்து; அதாவது நடுராத்திரியில் எழுந்து கொள்ளும் இந்த வேலை...' என்றான் பணியாள்.
'அப்படி இல்லை, அவர்களை நான் புரிந்துகொள்கிறேன்' என்றாள் ஸ்டெஃபனியா. 'ஹ்ம்ம், யாருக்குத் தெரியும்? வேறெந்த வெறியையும் போன்றுதான் இதுவும்' என்று சொன்ன வேட்டைக்காரன் இப்போது ஸ்டெஃபனியாவை நன்றாகப் பார்க்க ஆரம்பித்திருந்தான்.
வேட்டையாடுதலைப் பற்றிய தன் பேச்சில் அவன் முன்பு வெளிப்படுத்தியிருந்த உறுதி இப்போது இல்லாத மாதிரி தோன்றியது. ஸ்டெஃபனியாவின் முன்னிலை, அவனுடைய முழு அபிப்ராயமும் தப்பானதோ என்றும், மகிழ்ச்சி என்பது அவன் தேடிக்கொண்டிருந்த மாதிரி இல்லாமல் வேறான ஒன்றோ என்றும் அவனை சந்தேகிக்க வைப்பது மாதிரி இருந்தது. 'உண்மையாலுமே உங்களைப் புரிந்துகொள்கிறேன். இதைப் போன்ற ஒரு காலை...' என்று ஸ்டெஃபனியா சொன்னாள்.
பேச விரும்பியும் என்ன பேசுவது என்று தெரியாதவன் போல வேட்டைக்காரன் சில விநாடிகள் இருந்தான். 'இம்மாதிரியான உலர்ந்த, குளிர்ச்சியான சீதோஷ்ணநிலையில் நாயால் நன்றாக நடக்க முடியும்' என்றான் அவன். காஃபியைக் குடித்துவிட்டு அதற்குக் காசுகொடுத்தான். வெளியே போக நாய் அவனை இழுத்துக்கொண்டிருந்தது.ஆனால் அவன் தயங்கியபடியே அங்கேயே நின்றிருந்தான். 'நீங்களும்ஏன் என்னுடன் வரக்கூடாது?' என்று ஸ்டெஃபனியாவை அவன்தடுமாற்றத்துடன் தயங்கியபடி கேட்டான்.
ஸ்டெஃபனியா சிரித்தாள். 'ஓ, மீண்டும் நாம் சந்திக்க நேர்ந்தால் அதற்கு ஏற்பாடு செய்வோம், என்ன?'
வேட்டைக்காரன் 'ம்ம்' என்று சொல்லிவிட்டு மேலும் ஏதாவது பேசுவதற்கு வாய்ப்பு கிடைக்குமா என்று பார்ப்பதற்காகக் கொஞ்சம் தயங்கி நகர்ந்தான். 'சரி, நான் போகிறேன். வணக்கம்.' இருவரும் கையசைத்துக் கொண்டார்கள். நாய் அவனை இழுக்க வெளியே போனான். ஒரு தொழிலாளி உள்ளே வந்தான். ஒரு கிளாஸ் வைனுக்கு ஆர்டர் கொடுத்தான். பிறகு தன்னுடைய கிளாசை உயர்த்திப்பிடித்து, 'காலையில் சீக்கிரம் கண்விழிக்கும் எல்லாருடைய ஆராக்கியத்திற்கும் - குறிப்பாக
அழகான பெண்களுக்கு' என்றான். அவன் இளைஞனாக இல்லாவிட்டாலும் உல்லாசமாகத் தோற்றமளித்தான். ஸ்டெஃபனியா பணிவாக 'உங்களுடைய ஆரோக்கியத்துக்கு' என்று சொன்னாள்.
'இந்த உலகமே உங்களுக்கு சொந்தமானது என்ற உணர்வே காலையில் உங்களுக்குத் தோன்றும் முதல் எண்ணம்' என்று அவன் சொன்னான். 'மாலையில் இல்லையா?' ஸ்டெஃபனியா கேட்டாள். 'மாலையில் தூக்கக் கலக்கத்தில் இருக்கிறோம். எதைப்பற்றியும் நாம் நினைப்பதில்லை. நினைத்தால் அது தொல்லையைத்தான் உண்டாக்கும்...' என்றான்.
'காலையில் நான் வரிசையாக ஒவ்வொரு பிரச்சனையாக யோசிக்கிறேன்' என்று விடுதியின் பணியாள் சொன்னான்.
'ஏனென்றால் காலையில் வேலையை ஆரம்பிப்பதற்கு முன்னால் உனக்கு ஒரு சந்தோஷமான பயணம் தேவைப்படுகிறது. நீ என்னைப்போல செய்ய வேண்டும். குளிர்காற்று என் முகத்தில் பட நான் மோட்டார் சைக்கிளில் தொழிற்சாலைக்குப் போகிறேன்...'
'காற்று யோசனைகளைத் துரத்திவிடும்' என்றாள் ஸ்டெஃபனியா.
'பார், அந்தப் பெண் என்னைப் புரிந்துகொள்கிறார். அப்படிப் புரிந்து கொள்வதால் அவர் என்னுடன் குடிக்க வேண்டும்' என்று தொழிலாளி சொன்னான்.
'நன்றி, நான் குடிப்பதில்லை.'
'காலையில் அதுதான் நமக்குத் தேவைப்படுகிறது. இரண்டு கிளாஸ் வைன்' என்று பணியாளைப் பார்த்து சொன்னான்.
'நான் உண்மையில் எப்போதும் குடிப்பதில்லை; நீங்கள் என்னுடைய ஆரோக்கியத்திற்காகக் குடித்தால் நான் சந்தோஷப்படுவேன்.'
'நீங்கள் எப்போதுமே குடிப்பதில்லையா?'
'எப்போதாவது மாலை வேளையில்.'
'அங்குதான் தப்பு செய்கிறீர்கள், புரிகிறதா...?'
'ஒவ்வொரு நபரும் நிறைய தவறுகள் செய்கிறோம்...'
'உங்கள் ஆரோக்கியத்திற்கு' என்று சொல்லிவிட்டு அவன் தொடர்ந்து இரண்டு கிளாஸுகளையும் காலி செய்தான். 'ஒன்றும் ஒன்றும் இரண்டு. நான் விளக்குகிறேன் பாருங்கள்...'
அந்த வித்தியாசமான ஆண்களுக்கு மத்தியில் ஸ்டெஃபனியா தனியாக உட்கார்ந்து அவர்களுடன் பேசிக்கொண்டிருக்கிறாள். அவள் அமைதியாக,தன்னம்பிக்கை நிறைந்தவளாக இருக்கிறாள்; அங்கு எதுவும் அவளை நிலைகுலையச் செய்யவில்லை. இதுதான் அன்றைய காலையின் புது சம்பவம்.
தன் வீடிருக்கும் கட்டடத்தைத் திறந்து விட்டார்களா என்று பார்ப்பதற்காக அவள் விடுதியிலிருந்து வெளியே வந்தாள். அந்தத் தொழிலாளியும் வெளியே வந்து மோட்டார் சைக்கிளில் உட்கார்ந்து கையுறைகளை அணிந்துகொண்டான். 'உங்களுக்குக் குளிரவில்லையா?' என்று ஸ்டெஃபனியா கேட்டாள். அவன் தன் நெஞ்சில் தட்டிக் காண்பித்தான். செய்தித்தாள்கள் சரசரக்கும் சப்தம் கேட்டது. 'நான்
கவசம் அணிந்திருக்கிறேன்' பிறகு அவன் உள்ளூர் பேச்சு வழக்கில் 'நான் வருகிறேன், அம்மணி' என்று சொன்னான். ஸ்டெஃபனியாவும் அதே வழக்கில் அவனுக்கு விடை கொடுத்தபின் அவன் தன் வாகனத்தை ஒட்டிக்கொண்டுப் போய்விட்டான்.தன்னால் இப்போது கைவிட்டுவிட்டு மீளமுடியாத ஏதோ ஒன்று நடந்துவிட்டது என்பதை ஸ்டெஃபனியா உணர்ந்தாள். இப்படி ஆண்களுடன் இரவு ஆந்தை, வேட்டைக்காரன், தொழிலாளி - அவள் இருக்கும் புது நிகழ்வு அவளை வித்தியாசமாக உணர வைத்தது. இதுதான் அவள் அவளுடைய கணவனுக்கு செய்த துரோகம். இப்படி ஆண்களுடன் தனியாக, அவர்களுக்குச் சமமாக இருப்பது. அவள் ஃபர்னெரோவைக் கூட மறந்துவிட்டிருந்தாள்.
கட்டடத்தின் முன் கதவு திறக்கப்பட்டிருந்தது. ஸ்டெஃபனியா வேகமாகவீட்டிற்குப் போனாள். வாயிற்காவலாளி அவளைப் பார்க்கவில்லை.
*************
நன்றி: காலச்சுவடு