Search This Blog

Wednesday, September 12, 2012

முதுகுவலி: ஏன் வருகிறது? எப்படி போக்குவது? அறிந்து கொள்வோம்


 

முதுகுவலி முதியவர்களுக்கு மட்டும்தான் வரும் என்றில்லை. இளைஞர்களையும் இப்போது பாடாய்படுத்திக் கொண்டிருக்கிறது. பெண்களும் முதுகுவலி, கழுத்து வலியால் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

முதுகின் கட்டமைப்பு எப்படி இருக்கிறது?

முதுகில் வலி உருவாக என்ன காரணம்?

வலி வராமல் தடுப்பது எப்படி, வந்தால் அதை குணப்படுத்துவது எப்படி?

தாய் வயிற்றில் கருவான எத்தனையாவது நாளில் சிசுவுக்கு முதுகெலும்பு உருவாகும்? முதலில் எப்படி தோன்றி, படிப்படியாக வளரும்? முதுகெலும்பின் டிஸ்குகள் மற்றும் அதன் கட்டமைப்பு என்ன?

“முதுகெலும்பும், முதுகுத்தண்டும் கரு உருவான 18-ம் நாளிலிருந்தே உருவாக ஆரம்பிக்கும். முதலில் முதுகெலும்பு உருவாகி திறந்தபடி இருக்கும். கரு உருவான 29-வது நாள் மூடிக்கொள்ளும். அதன் நடு மையத்தில் மூளையின் தொடர்ச்சியான தண்டு வடம், இடுப்பு பகுதி வரையில் நீண்டு இருக்கும்.

முதுகெலும்பு, ஒன்றுடன் ஒன்றாக இணைக்கப்பட்ட 33 சிறு துண்டு எலும்புகளைக் கொண்டது. இதில் முதல் 7 எலும்புகள் கழுத்துப் பகுதியிலும் (செர்வைக்கல்), 12 எலும்புகள் மார்பு பகுதியிலும் (தெராசிக்), 5 எலும்புகள் இடுப்பு பகுதியிலும் (லம்பார்), 5 எலும்புகள் ஒன்றோடு ஒன்று இணைந்த நிலையில் அடி முதுகு பகுதியிலும் (சேக்ரல்), கடைசி 4 எலும்புகள் சேர்ந்து ஒரே எலும்பாய் முதுகின் அடிப்பகுதியிலும் (காக்சிஸ்) அமைந்து உள்ளது. இவற்றில் கடைசி 9 எலும்புகள் அசைவற்றதாகவும், இதர 24 எலும்புகள் அசையக்கூடியதாகவும் இருக் கும். எலும்புகளுக்கிடையில் மெல்லிய ஜவ்வு போன்ற டிஸ்க் பகுதி அமைந்துள்ளது.

இந்த டிஸ்க்குகள் உடலில் ஏற்படும் அதிர்வை தாங்கிக்கொள்ள பயன்படுகிறது. முதுகெலும்பு நேராக இல்லாமல் சில வளைவுகளுடன் இருக்கும். முதுகெலும்பின் நடுவில் இருக்கும் தண்டுவடத்தில் இருந்து 31 ஜோடி நரம்புகள் முதுகெலும்புகளுக்கிடையில் உள்ள துவாரத்தின் வழியாக வெளியேறி உடலின் பல முக்கிய உறுப்புகளுக்கு சென்று செயல்பட வைக்கிறது.”

எத்தனை வயது வரை முதுகெலும்பு வளரும்? வேகமாக வளரும் காலகட்டம் எது?
“குழந்தை பிறந்ததில் இருந்தே எலும்புகளின் வளர்ச்சி வேகமாகவும், சீராகவும் இருக்கும். எலும்பின் வளர்ச்சி 18 வயது வரையில் வேகமாகவும், அதன்பின் 25 வயது வரை மிதமாகவும் இருக்கும்.”

முதுகெலும்பின் அமைப்பில் ஆண்-பெண்ணுக்கு வித்தியாசம் ஏதாவது இருக்கிறதா?
“முதுகெலும்பின் அமைப்பிலோ, செயல்பாட்டிலோ ஆணுக்கும்- பெண்ணுக்கும் வித்தியாசம் இல்லை. ஆனால் முதுகெலும்பின் வளைவுகளில் சிறு வித்தியாசம் இருக்கும். வளைவு ஆண்களை விட பெண்களுக்கு சற்று அதிகமாக இருக்கும்.”

பெண்கள் கோலம் போடுதல், வீடு பெருக்குதல், துணி துவைத்தல் போன்ற வேலைகளில் ஈடுபட்டால் அவர்களுக்கு முதுகு வலி ஏற்படுமா?
“பெண்கள் 45-50 வயது வரை வீட்டு வேலைகளை செய்வது நல்லது. வீட்டு வேலைகளால் முதுகெலும்பிற்கோ, எலும்புகளின் நடுவில் உள்ள டிஸ்கிற்கோ எந்த பாதிப்பும் வராது. ஆனால் முதுகெலும்பில் ஏதாவது பிரச்சினையோ, நோயோ ஏற்பட்டிருந்தால் கடினமான வேலைகளை செய்யாமல் இருக்கவேண்டும். இடுப்பில் தண்ணீர் குடத்தை தூக்குவதாலும், குழந்தைகளை இடுப்பில் தூக்குவதாலும் பெண்களின் முதுகெலும்பில் பொதுவாக பாதிப்பு ஏற்படுவதில்லை.”

கர்ப்பம், பிரசவத்திற்கு தக்கபடி பெண்களின் முதுகெலும்பு கட்டமைப்பில் ஏதேனும் மாற்றங்கள் இருக்கிறதா?
“பெண்களின் அடி முதுகு வளைவு அவர்களது கர்ப்ப காலத்தில் வயிற்றின் முன் பக்க வளர்ச்சிக்கு ஏற்ப, பின்பக்கம் சாய்ந்து கொள்ளக்கூடிய விதத்தில் அமைந்துள்ளது. இதனால் வயிற்றில் குழந்தை வளர வளர முன்பக்க பாரத்திற்கு ஈடுகொடுக்கும் விதத்தில், பின்புறமாக சாய்ந்துகொண்டு கர்ப்பிணிகளால் அன்றாட வேலைகளை செய்ய முடியும். இதற்கு கர்ப்ப காலத்தில் சுரக்கும் ஹார்மோன்களும் உதவி புரிகின்றன.”

முதுகுவலி தோன்ற எத்தனை விதமான காரணங்கள் இருக்கின்றன?
“முதுகுவலி தோன்ற கீழ்க்கண்டவை பொதுவான காரணங்களாக இருக்கின்றன.
டிஸ்க் ப்ரொலாப்ஸ்: முதுகெலும்புகளுக்கு இடையில் ஷாக் அப்சர்வர் போல் இயங்கும் `டிஸ்க்’ என்னும் மெல்லிய ஜவ்வு வயதாவதாலோ, காயம் பட்டதினாலோ அல்லது அழற்சியினாலோ தேய்ந்து விடும். அப்போது 2 எலும்புகளுக்கிடையே போதிய இடைவெளி இன்றி டிஸ்க் எலும்பை விட்டு வெளியே பிதுங்கி விடும். இதனால் அதன் அருகில் செல்லும் ரத்தக்குழாயையோ, நரம்பையோ அழுத்தி வலியை உண்டு பண்ணும்.

ஸ்பாண்டிலோசிஸ்: வயதாகி எலும்புகளில் தேய்மானம் ஏற்படுவதாலும், எலும்புகளுக்கிடையே சில தாதுக்கள் படிவதாலும் எலும்புகளுக்கிடையே உராய்வு ஏற்படும். இதனால் அழற்சியோ, கிருமி தொற்றோ ஏற்பட்டு வலி ஏற்படும்.

ஆஸ்டியோபொரோஸிஸ்: உடலின் கால்சியம் சத்துக்களின் அளவு வயதாவதினாலோ, பெண்களுக்கு மாதவிடாய் நின்ற பிறகோ குறைந்து விடலாம். இதனால் எலும்புகளில் போதிய அளவு சுண்ணாம்பு சத்து இல்லாததால் எலும்புகள் வலுவிழந்து, அடர்த்தி குறைவாகிவிடும். இதனாலும் எலும்புகளில் வலியும், எலும்பு முறிவும் ஏற்படலாம்.

ஸ்பான்டிலோலிஸ்தஸிஸ்: முதுகெலும்பு வலுவிழக்கும்போது வரிசையாய் இருக்க வேண்டிய எலும்புகளில் ஒன்றிரண்டு வரிசையிலிருந்து முன்புறமோ பின்புறமோ விலகி விடும். இதனாலும் முதுகுவலியோ, முதுகு தசை பிடிப்போ, மரத்து போதலோ ஏற்படலாம். இது 35 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு ஏற்படுகிறது.

ஆர்த்ரைட்டிஸ்: மூட்டுக்களில் ஏற்படும் அழற்சியே ஆர்த்ரைட்டிஸ். இது ருமடாய்டு ஆர்த்ரைட்டிஸ், ஆன்க்கிலோசில் ஸ்பான்டிலோசிஸ் போன்ற நோய்களின் விளைவால் ஏற்படக்கூடியதாக இருக்கும்.”

மேடு, பள்ளம் நிறைந்த சாலைகளில் இரு சக்கர வாகன பயணம் மேற்கொள்வது முதுகுவலியை ஏற்படுத்துமா?
“முதுகெலும்புகளுக்கு நடுவில் உள்ள டிஸ்க் ஷாக் அப்சர்வர் போல் செயல்பட்டு அதிக பளு தூக்குதல், குனிதல், குதித்தல் போன்ற சமயங்களில் அதிர்வுகளை தாங்கி கொள்ளும். ஆனால் டிஸ்க் தேய்ந்து விட்டாலோ அல்லது எலும்புகளில் வேறு பிரச்சினை இருந்தாலோ மேடு, பள்ளம் நிறைந்த சாலையில் செல்லும்போது டிஸ்க் அழுத்தப்பட்டு, அழுத்தம் தாளாமல் வெளியே பிதுங்கி பக்கத்தில் உள்ள நரம்புகளை அழுத்தும். இதனால் வலி ஏற்படும்.”

முதுகுவலி என்பது கழுத்து வலியும் சேர்ந்ததா? முதுகு வலிக்கும்போது கழுத்தும் சேர்ந்து வலிக்குமா?
“முதுகெலும்பில் எங்கு வேண்டுமானாலும் எலும்பு தேய்மானமோ, அழற்சியோ, டிஸ்க் ப்ரொலாப்ஸோ ஏற்படலாம். இதனால் எங்கு வேண்டுமானாலும் வலி ஏற்படலாம். பொதுவாக கழுத்து எலும்பில் டிஸ்க் ப்ரொலாப்ஸ் என்றால் கழுத்து, தோள்பட்டை, கைகளில் வலி பரவலாம்.

அதே போல் அடி முதுகில் ப்ரொலாப்ஸ் என்றால் அடிமுதுகு, இடுப்பு மற்றும் கால்களில் வலி ஏற்படலாம். இரண்டு வித வலியும் சேர்ந்து இருக்க வேண்டிய அவசியமில்லை.”

முதுகெலும்பின் அடர்த்தி குறைவு மற்றும் பிரச்சினைகளை வலி வரும் முன்பே கண்டுபிடிக்க முடியுமா?
“வலியின் அறிகுறி தெரியும் வரை முதுகெலும்பில் டிஸ்க் ப்ரொலாப்ஸ் பிரச்சினையை கண்டுபிடிக்க முடியாது.”

கழுத்து வலி மற்றும் முதுகுவலிக்கு இருக்கும் நவீன சிகிச்சை என்ன?
“பேக் அண்ட் நெக் கட்டமைப்பு மருத்துவத்தில், டிஸ்க் ப்ரொலாப்ஸை அறுவை சிகிச்சையின்றி கட்டுப்படுத்தலாம். நவீன மருத்துவ முறையில் வடிவமைக்கப்பட்ட DRX 9000 என்ற கருவி முதுகுவலிக்கும், DRX 9000C என்ற கருவி கழுத்து வலிக்கும் சிகிச்சையளிக்க பயன்படுகிறது. இந்த சிகிச்சை முறை கிட்டத்தட்ட 86 சதவீதம் வரை வலியை குறைத்து நோயாளி தன் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப உதவும்.”

உறுப்பு மாற்று ஆபரேஷன் இப்போது பரவலாக இருக்கிறதே. முதுகெலும்புகளை எடுத்து எலும்பு வங்கிகளில் சேகரிக்க முடியுமா? அதை மாற்று ஆபரேஷன் மூலம் பாதிக்கப்பட்டவருக்கு பொருத்த முடியுமா?
“எலும்பு வங்கியில் எலும்புகள் சேமித்து வைக்கப்படுகிறது. ஆனால் முதுகெலும்புகள் சேமிக்கப்படுவதில்லை. மேலும் செயற்கை டிஸ்க்குகளை பயன்படுத்தி டிஸ்க் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. ஆனால் முதுகெலும்பு மாற்று அறுவை சிகிச்சை இதுவரை செய்யப்படவில்லை.

Shirdi sai telugu full movie (Nagarjuna's) . Kasi Viswanadha Swami Satsa...

Tuesday, September 11, 2012

சேப்பங்கிழங்கு கறி :-



சேப்பங்கிழங்கு கறி :- 


சேப்பங்கிழங்கு 1/4 கிலோ




இந்த காய் கூட கார பொடி போட்டு பண்ணலாம் , இல்லன்னா
பொடி ஸ்பெஷலா விழுதா அரைச்சு போட்டும் பண்ணலாம்


சேப்பங் கிழங்கு வாணலியில் போட்டு
தண்ணி விட்டு வேக வைக்கவும் , வெந்ததும் தோல்
உரித்து வைக்கவும்




1)அடுப்பில் வாணலியில் என்னை விட்டு கடுகு
உளுத்தம்பருப்பு தாளித்து , உப்பு போட்டு , உரித்த
காயை அதில் போட்டு 2 ஸ்பூன் கார பொடி சேர்த்து
நன்றாக வதக்கவும் .




காரப்போடிக்கு பதிலாக , 5 நீட்டு மிளகாய் மிசியில்
தண்ணி விட்டு அரைத்து விழுதாக்கி அதை போட்டு
வதக்கினால் சுவை கூடும்.





பொதுவா கொஞ்சம் வழ வழ கொழ கொழன்னு இருந்தா
ஒரு ஆளை இப்டி திட்டுவாங்க விளக்கெண்ணைல சேப்பங்கிழங்க
வதக்கினா மாதிரி இருக்கான் அப்டின்னு ................. அது சரியா
இருக்குமோ ஒருவேளை

Pregnancy-related cancers on rise


THE UNIVERSITY OF SYDNEY   
Share on print


The rate of pregnancy-associated cancer is increasing and is only partially explained by the rising number of older mothers according to research led by the University of Sydney.

The researchers say improved diagnostic techniques, detection and increased interaction with health services during pregnancy may contribute to the higher rates of pregnancy-associated cancer.

The findings, co-authored by Dr Christine Roberts from the Kolling Institute at Sydney Medical School, were recently published in BJOG: An International Journal of Obstetrics and Gynaecology. Cathy Lee, a Masters student in Biostatics at the University, is lead author of the study.

"The genetic and environmental origins of pregnancy-associated cancers are likely to pre-date the pregnancy but the hormones and growth factors necessary for a baby to develop may accelerate the growth of a tumour," Dr Christine Roberts said.

The Australian study looked at 1.3 million births between 1994 and 2008. The rate of pregnancy-associated cancer, where the initial diagnosis of cancer is made during pregnancy or within 12 months of delivery, was compared to pregnant women without cancer (using the same parameters).

It found that over a 14-year period the incidence rate of pregnancy-associated cancer increased from 112.3 per 100,000 to 191.5

"Although this represents a 70 percent increase in cancers diagnosed during or soon after pregnancy it is important to note that cancer remains rare affecting about two in every 1000 pregnancies," Dr Roberts said.

Although the age of the mother is a strong risk factor for cancer, increasing maternal age explained only some of the increase in cancer occurring.

"Pregnancy increases women's interaction with health services and together with improved techniques for detecting cancer the possibility for diagnosis is therefore increased," Dr Roberts said.

The most common cancers detected were skin melanomas, breast cancer, thyroid and other endocrine cancers, gynaecological and lymphohaematopoeitic cancers. The high incidence of melanoma may relate to the fact Australia has the highest incidence of melanoma in the world.

The study also looked at pregnancy outcomes and found that cancer during pregnancy was associated with a significantly increased risk of caesarean section and planned preterm birth which may be to allow cancer treatment to commence.

Importantly there was no evidence of harm to the babies of women with cancer - they were not at increased risk of reduced growth or death.
Editor's Note: Original news release can be found here.

RELIGION | MUSLIM MOVIE SHORT FILM || BEHIND THE WALLS || HD (FULL)


One brief encounter trapped with a Muslim women in an elevator will change the views of this American man forever. Should ritual trump compassion? Should compassion trump ritual? Which is more important?

கல்லணை

 
 
பல நூற்றாண்டுகளுக்கு முன்பு தமிழகத்தை ஆண்ட கரிகால சோழன் காவிரியில் அடிக்கடி பெருவெள்ளம் வந்து மக்கள் துயரப்பட்டதைக் கண்டு அதைத் தடுக்க காவிரியில் ஒரு பெரிய அனையைக் கட்ட முடிவெடுத்தான் . ஆனால், அது சாதாரன விஷயம் அல்லவே . ஒரு நொடிக்கு இரண்டு லட்சம் கனநீர் பாயும் காவிரியின் தண்ணீர் மேல் அணைக்கட்டுவதற்கும் ஒரு வழியைக் கண்டுபிடித்தார்கள் தமிழர்கள் .
நாம் கடல் தண்ணீரில் நிற்கும்போது அலை நம் கால்களை அணைத்துச் செல்லும். அப்போது பாதங்களின் கீழே குறுகுறுவென்று மணல் அரிப்பு ஏற்பட்டு நம் கால்கள் இன்னும் மண்ணுக்குள்ளே புதையும் . இதைத்தான் சூத்திரமாக மாற்றினார்கள் அவர்கள் . காவிரி ஆற்றின் மீது பெரிய பெரிய பாறைகளைக் கொண்டுவந்து போட்டார்கள் . அந்தப் பாறைகளும் நீர் அரிப்பின் காரணமாக கொஞ்சம் கொஞ்சமாக மண்ணுக்குள் போகும் . அதன் மேல் வேறொரு பாறையை வைப்பார்கள்.

நடுவே தண்ணீரில் கரையாத ஒருவித ஒட்டும் களி மண்ணைப் புதிய பாறைகளில் பூசிவிடுவார்கள் . இப்போது இரண்டும் ஒட்டிக்கொள்ளும் . இப்படிப் பாறைகளின் மேல் பாறையைப் போட்டு, படுவேகத்தில் செல்லும் காவிரி நீர் மீது கட்டிய அணைதான் கல்லணை.

ஆங்கிலப் பொறியாளர் சர் ஆர்தர் காட்டன் தான் இந்த அணையைப் பற்றிப் பலகாலம் ஆராய்ச்சி செய்து இந்த உண்மைகளைக் கண்டறிந்தார் . காலத்தை வென்று நிற்கும் தமிழனின் பெரும் சாதனையைப் பார்த்து வியந்து அதை ' தி கிராண்ட் அணைக்கட் ' என்றார் சர் ஆர்தர் காட்டன் . அதுவே பிறகு உலகமெங்கும் பிரபலமாயிற்று .

உலகிற்கு பறைச்சாற்றுவோம் தமிழனின் பெருமைகளை.. கண்டிப்பாக ஒவ்வொரு தமிழனுக்கும் தெரிய வேண்டிய செய்தி , SHARE செய்யுங்கள் 

Saranu Saranu Sai

Monday, September 10, 2012

பின் பாதி. திருக்கோவில் கவியுவன்




நாளாக நாளாக
மனதின் உரம்மீறி
தளர்ந்து கொண்டே வருகிறது
உடம்பு
கால் குளிர்ந்து நெற்றி வியர்க்கும்  
ஒவ்வொரு கணத்துளியிலும்
செய்தாக வேண்டியவைகளின்  
பட்டியல்கள்
பயம் காட்டுகின்றன.
வெயிலைச் சட்டை செய்யாது
தார் வீதியில் கனைத்துக் குதித்துச் செல்லும்  
வெள்ளாட்டுக் குட்டியின் வேகம்  
எனக்குள் இருந்த நாட்களைத் தேடுகின்றேன்.  
மிருகங்கள் தொட்டதற்கெல்லாம்
மாத்திரை எடுப்பதில்லை என்கிறது அறிவு.
எல்லாத் தளைகளையும் அறுத்துக் கொண்டு  
நெடுங்கடல் மணல் பரப்பில் ஓடிச்சென்று  
தன்னந்தனியனாய் திரும்பிப் பார்க்க அலைகிறது  
மனசு.
வாழ்வுப் பரப்பில்
தனித்தலையும் பறவையொன்றின் துயரை  
அனுபவித்து உணரும்
மகத்தான முதிர்வு
மனசுக்குள் எப்போது வந்தது?
கற்பனை மலிந்த ஜீவிதத்தில்
சொந்த மரணத்தின் பின்னாண நிகழ்வுகளையும்  
பலமுறை திரையிட்டுப் பார்த்தாயிற்று.
பால்யத்தின்
ஆறாவடுவாய்
அப்பாவின் மரணம் துருத்திக் கொண்டே வருவதுபோல்  
இளையவனுக்கும் வந்துவிடக்கூடாதே என்ற வேண்டுதலாய் அவன் கை பற்றியே தினப்படிக்குத் தூங்குகின்றேன்.
மயக்கும் மாலைப்பொழுதையெல்லாம்  
இப்போது என்னால் ரசிக்க முடியவில்லை  
அதுவும் பகலொன்றின் பின்பாதி என்னும்  
எண்ணம் வந்து அலைக்கழிப்பதனால்.  
--திருக்கோவில் கவியுவன் (2012.08.27)

வலி திருக்கோவில் கவியுவன்




நினைவு கூரத்தக்க நாள்வரை  
வாழ்வை மீட்டிப் பார்க்கின்றேன்  
வேலிக்கம்பியில் மாட்டித் தவிக்கும்  
சொப்பிங் வேக்காய் தவிக்கிறது மனசு.
கோழியின் சிறகிடுக்கின் கதகதப்பில்  
குளிரும் வெயிலுமற்று சுகம் காணும் குஞ்சுகளாய்  
உறவுகளின் அரவணைப்பில் கடைசிப் பிள்ளை என்ற செல்ல மமதையுடன்
உலா வந்த நாட்கள்----------------
அறுத்த வயற்பரப்புத் தரும் ஏக்கத்தைப்போல்  
அவர்கள் விடுத்துச் சென்ற நினைவுகளின் தாக்கங்கள்  
உறக்கத்தின் முன்னான கடைசி நிமிடங்களில் ஒவ்வொரு நாளுமே  
ஏக்கப் பெருமூச்சாய் எனக்குள்ளே------
நத்தார் அடைமழையின் பின்  
இறுகிப்போன முற்றத்து மண்ணில்
குச்சி கொண்டு பூ வரைவேன் நான்  
கூரிய நகத்துடன் கொடும் மிருகமொன்று வரைவான் 
என் நண்பன்
அப்பா சொல்வார்
'உன்னை மிதித்துச் செல்வார்கள்
உன் நண்பன் மற்றவரை மிதித்துச் செல்வான்'  
மூன்று தசாப்தங்கள் முழுதாய்க் கடந்தது  
அப்பா சொன்னதன் அர்த்தத்தைப் புரிய.
சிறு வெள்மணலை கூட துள்ளியெழா  
கோரக்களப்பாற்றின் பேரமைதியையொத்த  
மகோன்னத தருணங்கள் நிறைந்த என் வாழ்வுக்குளத்தில்  
வந்து விழுந்த முதற்கல்லாய் அப்பாவின் மரணம்.
நீருக்குள் அணையாமல் நெருப்புக் கொண்டு செல்லும்  
தந்திரங்கள் நிறைந்த மானுடக் கூட்டத்தினுள்ளே  
நேர்கோட்டில் வாழ்வதன் கடினத்தைப்  
புரிய வைக்காமலே அப்பா சென்று விட்டார்.
அதன் பின்
ஒலிம்பிக் போட்டி நடப்பது போல  
நான்காண்டுக்கொரு முறை  
ஒவ்வொரு உறவு ஒவ்வொரு காரணமாய்  
ஒவ்வொரு பாடத்தையும் ஒவ்வொரு 
வலியையும் எனக்குள்
நிரந்தரமாய் இறக்கிவிட்டு.........




ஒரு காலத்தில்
என் வலிகளையும் மறந்து விட்டு,
இருப்பு கேள்வியாகிப்போன வாழ்வின்  
அவலத்தை வெளிப்படுத்த
என் பேனா குனிந்தபோதெல்லாம்
நான் நிமிர்ந்து நின்றேன்
அப்பாவின் தெளிவுடனும்  
அண்ணாவின் உறுதியுடனும்------
இன்றோ,
ஊழித்தாண்டவம் ஆடிய  
ஆழிப்பேரலையை விஞ்சும் வகையில்  
மானுடம் நசுக்கப்பட்டபோதும்  
உள்ளிருந்தே அரிக்கும் கறையான்போல  
கொஞ்சம் கொஞ்சமாய் சுயம் மறுக்கப்பட்ட போதும்  
ஏழு கடல்களுக்கப்பால் 
ஏதோ ஒரு சிறு மீனின் உடலில்  
உயிரைத்தங்க விட்டு 
வேறெங்கோ வாழும் அரக்கன் போல  
உணர்வைத் தோண்டிப் புதைத்தது விட்டு  
ஊமையாய் வாழும் இந்த வாழ்வின் வலி  
எல்லா வலியையும் விட மிகக் கொடுமையானது.
மன்னியுங்கள்
நானும் பழகிக் கொணடேன்  
வலியுடன் வாழ்வதற்கு.
திருக்கோவில் கவியுவன்

முன்மாதிரி-முஸ்லிம்-குடும்பம்-islamkalvi-HD

இஸ்லாம் ஓர் அறிமுகம் - islamkalvi

Natural Treatment of Obesity


Natural Treatment of Obesity~

Obesity is a physical condition that results from excessive storage of fat in the body. Obesity has been defined as a weight more than 20% above what is considered normal as per the body mass index, which is calculated from an individual’s age, height, and weight.

Home Remedies for obesity:-


>Extract juice of one lemon in a glass of lukewarm water. Add a teaspoon of honey, mix well and take in the morning immediately after waking up and before taking anything else. Similarly add a pinch of black rock salt instead of honey to the lukewarm water, mix it well and take it daily in the afternoon. These two drinks must be taken regularly to cut off fats form your body.

>Roast barley seeds and powder it. Mix it with a little milk and honey. Make a small ball and take it in breakfast. A pinch of salt can be added with a little water.

>Sieve wheat flour and remove the bran. Mix two tablespoon full of this bran in a glass of skimmed milk, add honey and take it at least once a day. Do not add sugar. Bran can also be taken with buttermilk.

>Take a ripe banana mashed in plain diluted cow’s milk with a tablespoonful of fresh banana flower juice during breakfast for a couple of months can help in reducing obesity.

>Ten drops of tulsi leaf juice with two teaspoon full of honey in water for one month. This tulsi juice is very effective in terms of reducing obesity from body.

>Raw tomatoes and onions, mixed with juice of one lemon is a very good salad for obesity.

>Having green tea has been found to be beneficial in treating obesity. You can also consume tea made from dandelion root.

>Horse gram can help cure obesity. Soak 1-2 tbsp horse gram in a glass of water and keep it overnight. Filter the concoction the next morning and have it on an empty stomach.

>To prevent obesity, there is no better option than physical exercise. Brisk walking is the best exercise to begin with. As soon as you wake up in the morning, workout for at least 30mins to an hour. Burn up unwanted calories by putting large leg muscles to work.

Forms of Shiva


 
Shaivite iconography recognizes many different traditional forms of the Lord. The Shiva Lingam is the primary form for worship and is found everywhere, in almost all temples of Shiva. The Shiva Lingam is referred to as the aniconic form because it depicts the supreme Formless Form (arupa-rupa). In addition, 25 common iconic forms (murtis) are described as prominent in Saiva Siddhanta, although many more are recognized. In general, anthropomorphic representations are called Maheshvara murtis, whereas the Shiva Lingam, the aniconic form, is called Sadashiva murti.
The Maheshvara murtis are sub-divided by two sets of classifications. The first classification divides the murtis into fierce (ugra) or benevolent (anugraha) images. The second classification divides the murtis into bhoga, yoga and vira. The bhoga forms are represented with Shakti, whereas in the yoga and vira forms Shakti is not specifically depicted, but is implicit. Note that all the bhoga and most of the yoga forms are also anugraha forms.

25 Maheshvara Murtis 

Name Grouping I Grouping II Bhikshatana Anugraha
Yoga
Nataraja Anugraha Yoga Aja Ekapada
Anugraha Yoga Dakshinamurti
Anugraha Yoga Lingodhbhavamurti
Anugraha Yoga Kamadahanamurti (Kamari) Ugra Yoga Tripurantaka (Tripurari) Ugra Vira Mahakaleshvara (Kalari) Ugra Vira Jalandharari
Ugra Vira Gajasamharamurti Ugra Vira Virabhadra (Karala)
Ugra Vira Kankala-Bhairava Ugra Vira Kalyanasundara
Anugraha Bhoga Vrishabharudha Anugraha Bhoga Chandrashekhara
Anugraha Bhoga
Uma-Maheshvara Anugraha Bhoga Shankara-Narayana
Anugraha Bhoga Ardhanarishvara Anugraha Bhoga Kiratamurti
Anugraha Bhoga Chandeshanugraha Anugraha Bhoga Chakrapradasvarupa
Anugraha Bhoga Somaskanda Anugraha Bhoga Gajamukhanugraha Anugraha Bhoga Nilakantha-Maheshvara Anugraha Bhoga Sukhasanamurti
Anugraha Bhoga

Panchanana Shiva – the five faces and the five Shaktis

In addition to the above twenty-five, there is yet another important but rare anthropomorphic form – the five-faced (Panchanana) Shiva – which is considered not a Maheshvara Murti, but a Sadashiva Murti like the Shiva Lingam. Per Shaivite theology, Shiva realized in the five faces is revealed as the Lord and Master of all the categories of existence (tattvas), which have classically been described and divided into groups of fives. The sum totality of all groups of five categories is the manifest universe (prapancha). Revealed in the five faces, Shiva is realized as the essence of all prapancha (prapancha-sara).

Each of the five faces of Shiva has a proper name, and an associated Shakti, which collectively describe the Panchakritya (five divine acts) of Shiva, i.e. creation, sustenance, dissolution, concealment and revealment.

Name of Face Associated Shakti Ishana (Sadashiva)
Anugraha Shakti (Power of Revealment)
Tatpurusha (Maheshvara)
Tirodhana Shakti (Power of Concealment)
Aghora (Rudra)
Samhara Shakti (Power of Dissolution)
Vamadeva (Vishnu)
Stithi Shakti (Power of Sustenance)
Sadyojata (Brahmā)
Sristhi Shakti (Power of Creation)

The basic idea is that the Supreme Lord (Parameshvara) ever creates the world, sustains it, and dissolves it when the time is ripe. Moreover, He has concealed Himself within the fabric of manifest existence, and becomes revealed to us as such when we have matured enough.


Aum Namah Shivaya.
Anbe Sivamayam Satyame Parasivam.

எல்லாளன் துட்ட காமினி மகாவம்சம்

எல்லாளன் என்ற தமிழ் மன்னன் இலங்கையை 44 ஆண்டுகள் ஆண்டதாக ஆதாரபூர்வமான வரலாறு கூறுகிறது.
சிங்களர்கள்தான் இலங்கையின் பூர்வக்குடிகள் என்று நிரூபிப்பதற்காக எழுதப்பட்ட நூல் "மகாவம்சம்.''
சிங்கள வம்சத்தை தோற்றுவித்தவன் விஜயன்தான் என்று அந்நூல் கூறுகிறது. ஆனால், அவன் இலங்கையில் காலடி வைக்கும்போதே, அங்கே குவேனி என்ற தமிழ் அரசி இருந்திருக்கிறாள் என்று அதே மகாவம்சம் குறிப்பிடுகிறது. அப்படியானால், விஜயனுக்கு முன்பே தமிழர்கள் அங்கு வாழ்ந்திருக்கிறார்கள் என்பதை மகாவம்சமே ஒப்புக்கொள்கிறது.

அனுராதபுரம்

இலங்கையின் மற்ற பகுதிகள் காடுகளாக இருந்தபோது, அனுராதபுரத்தை பெரிய நகரமாக தமிழர்கள் உருவாக்கி, அங்கிருந்து ஆட்சி நடத்தியிருக்கிறார்கள் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.

விஜயன் தனக்கென்று ஒரு ராஜ்ஜியத்தை உருவாக்குவதற்கு முன்பே, அனுராதபுரத்தில் தமிழ் மன்னர்களின் ஆட்சி நடந்திருக்கிறது. விஜயனின் வருகைக்கு சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்பே அனுராதபுரம் பெரிய நகரமாக இருந்திருக்கிறது என்பது, தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிப்பு. அந்தக் காலத்தில் இந்தியாவில் உஜ்ஜயினி பெரிய நகரமாக இருந்தது. அதற்கு சமமாக அனுராதபுரம் இருந்ததாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.

புகழ் பெற்ற தமிழ் மன்னன்

இலங்கைக்கு இந்தியப் பேரரசர் அசோகர் அனுப்பிய புத்த மதக் குழுவினர், அனுராதபுரத்தில் திசையன் என்ற தமிழ் மன்னனை சந்தித்தது பற்றி, பாலி மொழி வரலாற்று நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

திசையன் இறந்த பிறகு, சேனன், குத்தன் என்ற இரு தமிழ் மன்னர்கள் 22 ஆண்டுகள் அனுராதபுரத்தில் நல்லாட்சி நடத்தினர்.
இவர்களுக்குப் பிறகு ஆட்சிக்கு வந்தவர் எல்லாளன்.

சிங்களர்களைப் புகழ்வதற்காகவே எழுதப்பட்ட "மகாவம்சம்'' நூலில், எல்லாளனின் வீரம் பற்றி உயர்வாகவே கூறப்பட்டுள்ளது. அவனுடைய குணநலன்கள், மனுநீதிச் சோழனின் இயல்பை ஒட்டி சித்தரிக்கப்பட்டுள்ளன.

மகாவம்சம் கூறுவதாவது:-

"எல்லாளன், இயேசு கிறிஸ்துவுக்கு 235 ஆண்டுகளுக்கு முன்னதாகப் பிறந் தவன். அவன் அனுராதபுரத்தைத் தலைநகரமாகக் கொண்டு, 44 ஆண்டுகள் ஆட்சி நடத்தினான். அவன் சோழ வம்சத்தை சேர்ந்தவன். நீதி தவறாதவன்.

அவன் தன் படுக்கை அறையில் ஒரு மணியை தொங்கவிட்டிருந்தான். அது, அரண்மனைக்கு வெளியே தொங்கவிடப்பட்டிருந்த ஒரு கயிற்றுடன் இணைக்கப்பட்டு இருந்தது. தங்களுடைய குறைகளை மன்னருக்குத் தெரிவிக்க, யார் வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் மணியை அடிக்கலாம்.

ஒருமுறை, ஒரு பெண் அந்த மணியை அடித்தாள். எல்லாளன் அந்தப் பெண்ணை அழைத்து, "உன் குறை என்ன?'' என்று கேட்டான்.
"உன் மகன் ரதத்தில் செல்லும்போது, என் கன்றுக்குட்டி மீது ரதத்தை ஏற்றிக் கொன்றுவிட்டான்'' என்று கூறினாள்.

அதைக்கேட்ட எல்லாளன், தன் மகனையும் ரதத்தை ஏற்றி கொன்றுவிடுமாறு கட்டளையிட்டான். அக்கட்டளைப்படி இளவரசன் கொல்லப்பட்டான். (மனுநீதி சோழன் வரலாற்றிலும் இதே போன்ற சம்பவம் வருகிறது)

புத்தர் கோவில்

ஒருமுறை எல்லாளன் ரதத்தில் செல்லும்போது, ரதம் மோதி புத்தர் கோவில் சேதம் அடைந்தது. ரதத்தில் இருந்து கீழே இறங்கிய எல்லாளன், கோவில் இடிந்ததற்காக மிகவும் வருந்தினான்.

உடனே மந்திரிகளை அழைத்து, "புத்தர் கோவிலை சேதப்படுத்திய நான் படுபாவி; பெரிய குற்றவாளி. என்னைக் கொன்றுவிடுங்கள்'' என்றான்.

அதற்கு மந்திரிகள் மறுத்துவிட்டனர். "நீங்கள் உங்களுக்கே மரண தண்டனை விதித்துக் கொள்வதை, புத்த பகவானே ஏற்கமாட்டார்'' என்று கூறினர். "நீங்கள் உங்கள் உயிரைப் போக்கிக் கொள்வதற்கு பதிலாக, கோவிலை புதிதாகக் கட்டிக் கொடுத்து விடலாம்'' என்று தெரிவித்தார்கள்.

மந்திரிகளின் இந்த யோசனையை ஏற்றுக்கொண்ட எல்லாளன், புத்தர் கோவிலை முன்பைவிட அழகாகக் கட்டிக் கொடுத்தான்.

துட்ட காமினி


இந்தக் காலக்கட்டத்தில் தென் இலங்கையை கவந்திசா என்ற சிங்கள மன்னன் ஆண்டு வந்தான். அவனுடைய மகன் பெயர் துட்டகாமினி. (இவனுடைய இயற்பெயர் கெமுனு என்றும், துஷ்டத்தனம் செய்து வந்ததால், துட்ட காமினி என்று அழைக்கப்பட்டான் என்றும் மகாவம்சம் கூறுகிறது.)

ராஜ்ஜியத்தை விரிவுபடுத்த விரும்பிய துட்டகாமினி, பல சிற்றரசர்களை தோற்கடித்து விட்டு, வடக்கு நோக்கி முன்னேறினான். தமிழ் மன்னன் எல்லாளனை முறியடித்து, அனுராதபுரத்தை கைப்பற்ற வேண்டும் என்பது அவன் எண்ணம்.

தன் விருப்பத்தை தன் தந்தைக்குத் தெரிவித்தான். அதை மன்னர் ஏற்கவில்லை. "எல்லாளனிடம் ஒரு லட்சம் போர் வீரர்கள் இருக்கிறார்கள். மேலும் அவர் நல்லவர். மக்களின் ஆதரவைப் பெற்றவர். அவர் மீது படையெடுக்க வேண்டாம்'' என்று தகவல் அனுப்பினார்.

தந்தைக்கு அனுப்பிய "பரிசு''

இதனால் சீற்றம் அடைந்த துட்ட கா மினி, பெண்கள் அணியும் வளையல்களையும், சேலைகளையும் தந்தைக்கு அனுப்பி வைத்து, தந்தையை அவமானப்படுத்தினான்.

இதனால் கோபம் அடைந்த மன்னர், துட்ட காமினியை கைது செய்து, தன் முன் கொண்டு வந்து நிறுத்துமாறு வீரர்களுக்குக் கட்டளையிட்டார்.

இதை அறிந்து கொண்ட துட்ட காமினி, காட்டில் போய் ஒளிந்து கொண்டான்.

சில நாட்களில் மன்னர் மரணம் அடைந்தார். துட்ட காமினி, நாட்டுக்குத் திரும்பி ஆட்சியைக் கைப்பற்றிக் கொண்டான். பின்னர், அனுராதபுரத்தின் மீது படையெடுத்தான்.

பயங்கர போர்


பெரும் படையுடன் துட்ட காமினி வருவது பற்றி அறிந்த எல்லாளன், மந்திரிகளை அழைத்து அவசர ஆலோசனை நடத்தினார்.
துட்டகாமினியை கோட் டைக்குள் வரவிடக்கூடாது என்றும், கோட்டைக்கு வெளியே அவனை எதிர்கொண்டு போரிடுவது என்றும் முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, அனுராதபுரம் கோட்டைக்கு வெளியே இருதரப்பு படைகளும் மோதின. போர் பயங்கரமாக நடந்தது. ரத்த ஆறு ஓடியது.

பட்டத்து யானை

இந்நிலையில், எல்லாளனுக்கு துட்டகாமினி சவால் விட்டான்.

"நாம் இருவரும் நேருக்கு நேர் நின்று போர் புரிவோம். யாருக்கு வெற்றி என்பதை நமது நேரடிப் போர் தீர்மானிக்கட்டும்'' என்றான்.
போர் நடந்தபோது எல்லாளனுக்கு வயது 74. துட்ட காமினி இளைஞன். என்றாலும் அவன் விட்ட சவாலை, எல்லாளன் ஏற்றுக்கொண்டார்.

இருவரும் பட்டத்து யானைகள் மீது அமர்ந்து போரிட்டனர். எல்லாளன் வயோதிகராக இருந்தாலும் தீரத்துடன் போரிட்டார். என்றாலும், துட்டகாமினியின் யானை, தன்னுடைய தந்தத்தால் எல்லாளன் அமர்ந்திருந்த யானையின் முகத்தில் குத்தி கிழித்தது. யானை கீழே சாய்ந்தது. அதே நேரத்தில் துட்ட காமினி எறிந்த ஈட்டி, எல்லாளன் உயிரைக் குடித்தது.

கோவில்

எல்லாளன் இறந்த இடத்திலேயே அவர் உடலை தக்க மரியாதையுடன் துட்ட காமினி தகனம் செய்தான். அதே இடத்தில் கோவில் ஒன்றை கட்டவும் ஏற்பாடு செய்தான்.

"இந்த வழியே செல்பவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் அரசர்களே ஆனாலும் கோவிலை கும்பிட்டு விட்டு செல்லவேண்டும்'' என்று உத்தரவிட்டான். எல்லாளனின் வீரத்துக்கு, துட்ட காமினி அளித்த மரியாதை இது.

அனுராதபுரத்தைக் கைப்பற்றிக்கொண்ட துட்டகாமினி, அதை மேலும் விரிவுபடுத்த எண்ணமிட்டான்.

ஆனால், அவன் திட்டங்கள் நிறைவேறுவதற்கு முன், பாம்பு கடித்து இறந்து போனான்.''

இவ்வாறு மகாவம்சம் கூறுகிறது.

Foods that heal the kidneys



Foods that heal the kidneys are purple plums, purple potatoes, black quinoa, blackberries, black carrots (purple carrots), hijiki(potent seaweed), black seaweed salad, black grapes, black beans, and black elderberries. 

உலகம் ஆண்ட லெமூரியன்


 
லெமூரியர்களுக்கு பல அரிய பொருள்கள் தெரிந்திருந்தன. தண்ணீரை எதிர்ப்பக்கம் தள்ளும் ஆற்றல் மிக்க 'கல்' அவர்களுக்கு தெரிந்திருந்தது. படகைத்தள்ள அந்த கல்லை பயன்படுத்தி இருக்கிறார்கள். நீராவிக் கருவி, வான ஊர்தியும் தெரிந்திருந்ததாகவே கருதப்படுகிறது.'ஒளி' பற்றி அதிசயம் ஒன்று உண்டு! மின்சாதனத்தைவிட ஏதோ ஒரு வகையில், இரவை பகலாக்கும் அளவுக்கு ஒளிரச் செய்திருக்கிறார்கள். கலிபோர்னியா காட்டில் இன்றும் நெடுந்தூரம் வரை வீசும் ஒளி தெரிகிறது. அங்கே பழங்குடி மக்கள் பதுங்கி வாழ்கிறார்கள்.

அடுப்பில் சமைத்தவர்கள், நெருப்பு, அல்லது வெய்யிலை பயன்படுத்தி சமைத்திருக்கலாம். வீடுகள் காற்றோட்டமாக அமைக்கப்பட்டது. தெருக்கள் சிமெண்டைப் போல பொருளால் அமைக்கப்பட்டது. ஒட்டகம் போல ஒருவகை விலங்கின் மீது அமர்ந்து பயணம் செய்தார்கள். இதெல்லாம் அவர்கள் வரைந்த ஓவியங்கள் மூலம் அறியப்படுகிறது. பொன்னும் வெள்ளியும் அன்று இருந்தன. அணிகலன்களுக்கு பயன் படுத்தப்பட்டிருக்கிறது. சொல்லப் போனால், பொன்னைவிட விலை உயர்ந்த பிளாட்டினம் போன்ற ஒன்றையும் அவர்கள் பயன்படுத்தி இருக்கிறார்கள்! "லெமூரியா பற்றி இன்னும் நிறைய ஆராய்ச்சிகள் நடக்கின்றன. லெமூரியாவில் மிச்சம் இருந்தவர்களே 'சித்தர்கள்' என்று பன்மொழிப்புலவர் அப்பாதுரை கூறுவார் பழந்தமிழ் மக்கள் லெமூரியர்களையும், எகிப்தியர், அமெரிக்க மாயா நகர மக்களையும் ஒத்திருந்தனர்.

ஆஸ்திரேலியா நாட்டின் பழங்குடியினர் இன்னும் 'சிவா நடனம்' என்ற பழம்பெரும் தமிழர் நடனத்தை ஆடுகிறார்கள். நெற்றியில் கண் வைத்துக் கொண்டு முக்கண்ணுடன் ஆடுகிறார்கள். வன உயிர்களை வேட்டையாட அவர்களை 'பூமராங்' என்ற ஆயூதத்தை பயன்படுத்துகிறார்கள். இது எதிரியை தாக்கி விட்டு திருப்பி வந்து விடும். இந்த பூமராங்கை இன்னும் ஊட்டி கொடைக்கானல் பழங்குடியினர் பயன்படுத்துகிறார்கள்.

எனவே ஆஸ்திரேலியா ஆப்பிரிக்கா பழங்குடியினர் கலாச்சார ரீதியாக நம்முடன் ஒத்திருக்கிறார்கள். மெக்சிகோ நகரில் சிவப்பு இந்தியர்கள் (மாயன்) சிறுபயற்றை விரும்பி சாப்பிடுகிறார்கள். நாம் அனைத்து விழாக்களிலும் தாய் மாமனுக்கு முக்கியத்துவம் கொடுப்பது போல் அவர்களும் கொடுக்கிறார்கள். தமிழன் பயன்படுத்தும் அம்மியும்இ உரல்களும் அங்கு சகஜம். இவையெல்லாம் ஒரு காலத்தில் அனைத்து பகுதிகளும் ஒன்றாக இருந்திருக்கிறது என்ற வாதத்திற்கு வலுவூட்டுவதாய் அமைந்திருக்கிறது.

குமரிக் கண்டத்தில் குமரிகோடு என்ற இடம் இருந்ததாக வரலாறு. இதையொட்டிதான் தற்போதைய குமரி மாவட்டத்தில் விளவன் கோடு அதன்கோடு ஆண்டுகோடு இடைகோடு மெக்கோடு நெட்டன்கோடு திருவிதாங்கோடு பரகோடு வெள்ளைக்கோடு கட்டிமன்கோடு என்று ஊர்களுக்கு பெயரிடப்பட்டது. சங்கம் வளர்த்த தமிழ் குமரிக் கண்டம் தான் உலகில் முதன் முதலில் தோன்றியது என்பதற்கு இன்னொரு அடையாளம் குமரி என்ற பெயர் பல கண்டங்களில் இருப்பது. குறிப்பாக ஆப்பிரிக்கா அருகே மடகாஸ்கர் தீவிற்கு குமர் என்று பெயர். இங்கு வாழும் மக்கள் கொம்ரி என்று அழைக்கப்படுகிறார்கள்.

ஆப்பிரிக்கா மடகாஸ்கர் மொசாம்பி ஆகிய இடங்களுக்கு இடையேயுள்ள தீவை கோமர் அல்லது கோம்ரான் என்று அழைக்கிறார்கள். மேற்கு ஆப்பிரிக்காவின் ஒரு பகுதி கோம்ரூல் என்றே இன்றும் அழைக்கப்படுகிறது. எனவே இவற்றிற்கெல்லாம் தோற்றுவாய் குமரிதான் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

தென்அமெரிக்கா மேல்கரை, பஜகாலிபோர்னியா, நெவதா முதலிய இடங்களில் ஒருவகை கல் அமைந்த வேலைப்பாடுகள் காணப்படுகிறது. இவை கருங்கல்லைவிட உறுதியானவை. இவற்றை சிமெண்டை விட உறுதியான குழம்பு கொண்டு, சேர்த்து கட்டம் கட்டி இருக்கிறார்கள். அந்த கல் எங்கும் இன்று இல்லை.

திரிகோணப் பாறை எனப்படும் விவேகானந்தர் பாறையிலிருந்து 8 கி.மீ. தூரத்தில் 36 மீ ஆழத்தில் 15000 சதுர அடியில் பழைய கால இடிபாடுடன் கூடிய கோயில் உள்ளது. இதனை டாலமியும் சொல்லியுள்ளார். பின்பு, இந்தியப் பெருங்கடல் முழுவதும் ஆய்வு செய்தபோது இது வரை நான்கு இட்பாடுகள் உள்ள இடங்களும் மற்றும் ஒரு தீவு மூழ்கி உள்ளதும் தெரியவந்தது. இப்படி உலகில் முதல் மனிதன் தோன்றிய லெமூரியாவை குறித்து இன்னும் பல ஆராய்ச்சி செய்ய வேண்டும். லெமூரியா கல் வெட்டுகளையும், சிந்துநதி பக்கமுள்ள கல் வெட்டுகளையும் புரிந்து முயலும்போது இன்னும் பல புதிர்கள் அவிழும். தமிழ் இனம் பற்றி பல புதுமைகள் அறிய முடியும்."

'Hit men' stop autoimmune


WALTER AND ELIZA HALL INSTITUTE   
Share on print
Eraxion_BloodCells_iStock
White blood cells in the blood stream. The scientists found that the absence of two related proteins, called Puma and Bim, led to self-reactive immune cells accumulating and attacking many different body organs. This suggests the two proteins work together to protect against autoimmune diseases, such as type 1 diabetes and rheumatoid arthritis.  
Image: Eraxion/iStockphoto
Researchers at the Walter and Eliza Hall Institute have discovered that a pair of molecules work together to kill so-called ‘self-reactive’ immune cells that are programmed to attack the body’s own organs. The finding is helping to explain how autoimmune diseases develop.

Dr Daniel Gray and colleagues from the institute’s Molecular Genetics of Cancer division and the University of Ballarat discovered that the absence of two related proteins, called Puma and Bim, led to self-reactive immune cells accumulating and attacking many different body organs, causing illness. The research is published online in the journal Immunity.

Autoimmune diseases, such as type 1 diabetes, rheumatoid arthritis, inflammatory bowel disease and multiple sclerosis, develop when immune cells launch an attack on the body’s own cells, destroying important body organs or structures. Around one in 20 Australians is affected by autoimmune conditions, most of which are chronic illnesses with no cure.

Puma and Bim are so-called ‘BH3-only’ proteins that make cells die by a process called apoptosis. Defects in apoptosis proteins have been linked to many human diseases, including cancer and neurodegenerative disorders.

Dr Gray said one way the body protects against autoimmune disease is by forcing most self-reactive immune cells to die during their development. “If any self-reactive cells manage to reach maturity, the body normally has a second safeguard of switching these potentially dangerous cells into an inactive state, preventing them from causing autoimmune disease,” he said.

“Until now, there has been debate about how important the death of self-reactive cells is as a protection against autoimmune diseases. Our research has identified two molecules that are needed for this process. We were able to use this discovery to show that the death of self-reactive immune cells is indeed an important protection against autoimmune disease development.”

Dr Gray is now collaborating with researchers who have identified human gene defects linked to the development of autoimmune conditions. “We now know that self-reactive cell death is an important protection against autoimmunity,” Dr Gray said. “The next stage of our work is to discover whether defects in the cell death process cooperate with other factors to cause human autoimmune disease.”

The research was funded by the National Health and Medical Research Council, the Juvenile Diabetes Research Foundation, the US Leukemia and Lymphoma Society, the US National Cancer Institute and the Victorian Government.
Editor's Note: Original news release can be found here.

Sri Shirdi Sai Baba Temple - Punjagutta

Friday, September 7, 2012

அறிஞர் அண்ணா