Search This Blog

Thursday, August 2, 2012

'Georges Barbier' Paintings (1882 - 1932)



BIOGRAPHY

French art deco illustrator. 'Georges Barbier'.
Primarily a book illustrator, he also designed fabrics, wallpapers and posters and commercial wrappings, boxes and postcards. He designed costumes and settings for several theatrical productions and for Rudolph Valentino's movie Monsieur Beaucaire. A regular contributor toLa Gazette du Bon Ton, the Journal des Dames et des Modes, Fémina, Vogue, Comoedia Illustré and other journals, his illustrations were frequently reproduced in the pochoir process. His finest book illustrations were those interpreted in woodcuts by F. L. Schmied.


































































































































































































































































































































































Biography courtesy: 'Art Deco', Victor Arwas, Harry N. Abrams, 1992.

HOW ALCOHOL ATTACKS THE BRAIN

வருடங்களும் - விழாக்களும் அறியதகவல் பகிருங்கள்

Nuvvu Leka Anadalam song - Sri Shirdi Sai Baba Mahathyam movie songs - V...

Wednesday, August 1, 2012

கவியரசர் கவிதை

"நெருப்பினை ‘நிலவே’ என்பார்
நீசனைத் ‘தலைவா’ என்பார்
கருப்பினை ‘வெண்மை’ என்பார்
கழுதையை ‘யானை’ என்பார்
உருப்படா தவனை யெல்லாம் 
உயரத்தில் ஏற்றி வைப்பார்
செருப்பினை மதிக்கும் இந்தத் 
தேசத்தில் பிறந்தேன் பாவி! "
-கவியரசர்.

சொராஸ்டர்(பார்சீ) மதம் ஓர் பார்வை.!!!



நாம இறந்தா என்ன பண்ணுவாங்க,இந்துவா இருந்தா எரிப்பாங்க,கிறிஸ்த்துவனாகவோ அல்லது முஸ்லிமாகவோ இருந்தால் புதைப்பார்கள்,நாய் சாப்பிடவோ அல்லது பிணந்தின்னி கழுகுக்கோ போடுவாங்களா,கொஞ்சம் டெரரா இருக்கா ஜோரோஸ்ட்ரியன் எனப்படுகின்ற பார்சி சமூகத்தைப் பற்றி நமக்கு அவ்வளவாக தெரிய வாய்ப்பில்லை,2020-ல் இவர்களது எண்ணிக்கை 23000 ஆக ஆகிவிடும் என இந்திய அரசாங்கம் அறிவித்துள்ளது .இவர்களது இறுதி சடங்கு முறை தான் கொஞ்சம் டெரர்,இறந்த பிறகு அந்த உடலில் இருந்து தலை முடி,நெகங்கள் இவைகளை நீக்கி விட்டு,அந்த உடலை பாலில் குளுப்பாட்டி,இவர்கள் டவர் ஆப்ஃ சைலன்ஸ் என்று அழைக்கப்படுகின்ற ஒரு குன்று போன்ற இடத்தில் வைத்துவிடுவார்கள்,அங்கே தயாராக இருக்கும் பிணந்திண்ணி கழுகுகள் கன நேரத்தில் உடலை தின்றுவிடுகின்றன,இதற்கு இவர்கள் சொல்லும் காரணங்கள் நீர்,நெருப்பு,பூமி இவைகள் புனிதமான மூலங்களாக கருதப்படுவதால் மரணத்தின் மூலமாக அவைகள் கலங்கமுறக்கூடாது

மும்பை CST அருகில் உள்ள டவர் ஆப்ஃ சைலன்ஸ்,மூன்று அடுக்குகளாக பிரிக்கப்பட்டு,முதல் அடுக்கில் ஆண்களும்,அதற்கு அடுத்த அடுக்கில் பெண்களும்,நடுவில் உள்ள அடுக்கில் சிறு குழந்தைகளையும் வைப்பார்கள்,கழுகுகள் தின்றது போக மீத உள்ளவைகள் மழை காரணமாக சுத்தம் செய்யப்பட்டு,இறுதியாக கடலில் கலக்கப்படுகின்றது, இங்கு நமக்கு அனுமதி மறுக்கப்படுகின்றது,பார்சியில் இருந்து வேறு மதத்தில் திருமணம் ஆனவர்களுக்கும் இங்கு அனுமதி கிடையாது,

ஊருக்கு ஒதுக்கு புறமாகவே இவைகள் உருவாக்கப்பட்டு இருக்கும்,ஆனால் நகரங்கள் பெருகிக்கொண்டே வருகின்றகாரணத்தால்,காலப்போக்கில் இவைகள் மனிதர்கள் வசிக்கின்ற இடங்களுக்கு அருகிலே வந்துவிட்டன சமிபத்தில் இறந்த எஸ்.பி.கோத்ரெஜின் உடலைக்கூட இப்படி தான் டவர் ஆப்ஃ சைலன்ஸ்ல் வைத்துள்ளார்கள்,நம்ம ரத்தன் டாட்டா கூட பார்சி இனத்தை சேர்ந்தவரே இதனை நான் ஆதாரம் இல்லாமல் சொல்லுவதாக நினைக்க வேண்டாம் (02-02-2011) இந்தியா டுடே வாங்கி படித்து பாருங்கள், 

சரி நாம் இப்ப அவர்களுடைய வரலாற்றை பார்ப்போம் !!

உலகம் தோன்றிய காலத்திலிருந்து எத்தனையோ மதங்கள் பிறந்து வளர்ந்து மறைந்து இருக்கின்றன. அவைகளில் சில கருவிலேயே சிதைந்தும் இருக்கின்றன. சில மதங்கள் பிறந்து எழுந்து நடந்து ஓடி வல்லரசாக நிமிர்ந்து நின்று, பிறகு மறுபடியும் வீழ்ச்சியை நோக்கி வீழ்ந்திருக்கின்றன. அந்த வரிசையில் நாம் பார்க்கப்போகின்ற சொராஸ்டிரா மதமும் ஒன்று.

சொராஸ்டிரியம்(Zoroastriansim) எனப்படும் மதத்தை நிறுவிய ஈரானியத் தீர்க்கதரிசி. பண்டைய ஈரானிய மொழியில் சொராஸ்டர் (Zoroaster) என்ற இயர்பெயர் கொண்ட இவருடைய வாழ்க்கை வரலாறு பற்றிக் கிடைக்கும் தகவல்கள் மிகக் குறைவு .எனினும் இன்றைய வடக்கு ஈரானில் கி.மு.628ஆம் ஆண்டில்(கி.மு.628-கி.மு.551) இவர் பிறந்தாகத் தெரிகிறது .இவருடைய இளமைக் கால வாழ்வு பற்றியும் செய்திகள் இல்லை. வயது வந்ததும் இவர் தாம் உருவாக்கிய புதிய மதத்தை போதிக்க தொடங்கினார்.

சொராஸ்டர் (Zoroaster)

இவர்களின் போதனைப்படி, ஒருவனே தேவன். அவனை அவர் ‘அஹுரா மாஜ்டா’ (இன்றைய ஈரானிய மொழியில் ‘ஒர்மஜ்டு’) என்று அழைக்கின்றனார். ‘மெய்யறிவுப் பெருமான்’ (The wise Lord) என்று இதற்கு பொருள். அவன் நேர்மையினையும், வாய்மையினையும் ஊக்குவிக்கிறான். ஒரு தீயசக்தி இருப்பதாகவும் சொராஸ்டர்கள் நம்புகிறார்கள். இதனை அவர்கள் ‘அங்ரா மைன்யூ’ (இன்றைய ஈரானிய மொழியில் ‘அஹ்ரிமான்) என அழைக்கின்றார்கள்.இந்த சக்தி தீமையினையும் பொய்மையினையும் குறிக்கிறது.

இவர்களின் திருமறையாகிய “அவெஸ்தா”வின் மிக தொன்மையான பகுதியாகிய “காதஸ்” (Gathas) ஆங்கில மொழிபெயர்ப்பு.

அறநெறிப் பொருட்பாடுகளைப் பொறுத்தவரையில் நேர்மை வாய்மை ஆகியவற்றின் முக்கியத்துவத்தைச் சொராஸ்டரா மதம் வலியுறுத்துகிறது. துறவு வாழ்வு,மணத்துறவு இரண்டையுமே இந்தச் சமயம் எதிர்க்கிறது. இந்த மதத்தை சொராஸ்டர் பரப்ப ஆரம்பித்தபோது முதலில் இவருக்கு கடுமையான எதிர்ப்பு தோன்றியிருக்கிறது. எனினும் இவர் தமது 40 ஆம் வயதில், வடகிழக்கு ஈரானிலிருந்த ஒரு மண்டலத்தின் மன்னராகிய விஷ்டாஸ்பா (Vishtapa) என்பவரைத் தம் சமயத்திற்கு மாற்றுவதில் வெற்றி கண்டார். 

அதன் பின்பு இந்த அரசர் சொராஸ்டரின் நெருங்கிய நண்பராகவும் அந்த மதத்தின் பாதுகாவலராகவும் இருந்து இந்த மத வளர்ச்சிக்கு பெரிது உதவி செய்தார்.ஆனாலும் பண்டைய ஈரானியச் சமயங்களில் காணப்படும் பல அம்சங்கள் இந்த புதிதாக தோன்றிய மதத்தில் இருந்த போதிலும் அது சொராஸ்டரின் ஆயுட்காலத்தில் அதிகமாகப் பரவியதாகத் தகவல்கள் இல்லை.ஆனால் அவர் வாழ்ந்த மண்டலம்.(வடக்கு ஈரான்) கி.மு. ஆறாம் நூற்றாண்டின் மத்தியில் சொராஸ்டர் காலமான சமயத்தில் மகா சைரசினால் (Cyrus the Graat) பாரசீகப் பேரரசில் இணைத்துக் கொள்ளப்படது. 


அடுத்த 200 ஆண்டுகளின்போது, பாராசீக மன்னர்கள் இந்த மதத்தைத் தழுவினார்கள்.இந்த மதத்திற்கும் ஆதரவு பெருகியது. கி.மு. நான்காம் நூற்றண்டின் பிற்பகுதியில் பாரசீகப் பேரரசை மகா அலெக்சாந்தர் வெற்றி கொண்ட பிறகு சொராஸ்டரா மதத்திற்கு கடுமையான வீழ்ச்சி ஏற்பட்டது. எனினும் இறுதியில் பாரசீகர்கள் மீண்டும் அரசியல் சுதந்திரம் பெற்றதும், பாரசீகத்தில் கிரேக்கப் பண்பாடுகள் வீழ்ச்சியுற்று மறுபடியும் சொராஸ்டரா மதம் தலைதூக்கியது. சஸ்ஸானிஸ்ட் அரசர்களின் (Sassanid Dynasty) ஆட்சியின் போது (கி.பி. 226-651) சொராஸ்டரா மதம் பாரசீகத்தின் அரச மதமாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. 

சொராஸ்டரா மதம் மற்ற மதங்களின் இல்லாத பல விசித்திரமான மதச் சடங்குகளை கொண்டிருக்கிறார்கள். இவைகளில் சில சடங்குகள், நெருப்பிடம் அவர்களுக்குள்ள பக்தியை மையமாகக் கொண்டவை . எடுத்துக்காட்டாக ஒரு புனிதப் தீப்பிழம்பு சொராஸ்டரின் கோயில்களில் எப்போழுதும் எரிந்துக் கொண்டிருக்க செய்கிறார்கள். நெருப்பு வணங்கியாக இருந்து இஸ்லாத்தை ஏற்று இஸ்லாமிய வரலாற்றில் உயர்ந்த அந்தஸ்த்தை பெற்ற ‘ஸல்மான் பாரிசீ (ரலி)’ அவர்கள் சிறுவயதில் இந்த தீப்பிழம்பை அணையாமல் பார்த்துக் கொள்கிற பொறுப்பில் இருந்தது வரலாற்றில் பதிவு செய்யப்பட்டுயிருக்கிறது. 

ஏழாம் நூற்றாண்டில் பாரசீகத்தை முஸ்லிம்கள் வெற்றி கொண்ட பின்பு பாரசீக மக்களில் (இன்றைய ஈரான்,ஈராக்) பெரும்பாலோர் படிபடிபபடியாக இஸ்லாமிய மார்க்கத்தை தழுவினார்கள் எஞ்சியிருந்த சொராஸ்டர்கள் ஒரு பகுதியினர் பத்தாம் நூற்றாண்டில் ஈரானிலிருந்து பாரசீக வளைகுடாவிலிருந்த ஹோர்மஸ் என்ற தீவுக்குத் தப்பியோடினார்கள். அங்கிருந்து அவர்கள் அல்லது அவர்களுடைய சந்ததியினர் இந்தியாவுக்குச் சென்று அங்கு சிறுகுடியிருப்பை ஏற்படுத்திக் கொண்டனர். 

மும்பையில் சொராஸ்டரா பார்சீகள் 

இவர்கள் உடை, கலாச்சாரம்,வெளித் தோற்றம், பெயர்கள் இவைகளை வைத்து முஸ்லிகளையும் இவர்களையும் வித்தியாசப்படுத்துவது மிகவும் கடினம் ஹிஜாப் அணிவார்கள், பெயர்கள் நூர்ன்னிஸா,பைரோஸ் இப்படி இருக்கும்.இவர்கள் பாரசீக மரபினர் என்பதால் பார்சீகள் (Parsees) என்று இந்தியர்கள் அழைத்தனர்.(சொராஸ்டிரா சமயமும் பார்சி சமயம் என அழைக்கப்பட்டது) இன்று இந்தியாவில் ஏறத்தாழ 1,50,000 பார்சிகள் வாழ்கிறார்கள்.


இவர்களில் பெரும்பாலும் மும்பாய் நகரிலும் அதைச் சுற்றியுள்ள பகுதியிலும் வசிக்கிறார்கள். பார்சிகள் ஓரளவுக்குச் செல்வச் செழிப்புமிக்க சமுதாயமாகத் திகழ்கின்றனர்.ஈரானிலும் சொராஸ்டிர சமயம் அடியோடு மறைந்து விடவில்லை.எனினும்,அங்கு இன்று சுமார் 40,000 சொராஸ்டர்கள் மட்டுமே வாழ்கிறார்கள்

உயிருக்கு போராடும் கவியரசர் கண்ணதாசன் (அரிய படம்)


சிக்காகோ மருத்துவமனை யில், நினைவிழந்த நிலையில் , உயிருக்கு போராடும் கவியரசர் கண்ணதாசன் . இந்தப் படம் எடுத்த ஒரு சில மணி நேரத்தில் உயிர் பிரிகிறது . அரிய படம் . கவியரசுக்கு மதுரை மீனாட்சி கோவில் குங்குமத்தை நெற்றியில் பூசுபவர் , கவிஞரின் நண்பர் வி.என்.சிதம்பரம் ! "

அஜீத்


தமிழ் திரையுலகின் முக்கியமானவர்கள் பட்டியலில் இருப்பவர் அஜீத். பஸ்ஸில் கண்டக்டராக இருந்து நடிகரான ரஜினியை அடுத்து தனது சொந்த முயற்சியில் வெற்றியும் தோல்விகளையும் ஒரு சேர பார்த்தவர் அஜீத்.

இன்றும் எனது விருப்பதற்காக எனது ரசிகர்களை பயன்படுத்த மாட்டேன் என தனது நற்பணி மன்றங்களை எல்லாம் களைத்து விட்டு இன்றும் தான் உண்டு தனக்கு பிடித்த சினிமா உண்டு என்று ஒதுங்கி வாழ்பவர்,அவரை பற்றிய 41 துளிகள் இங்கே…

தெலுங்கு படமான பிரேம புஸ்தகம் மூலம் திரையுலகிற்கு (1992) அறிமுகம் ஆனார்.
தமிழில் ‘அமராவதி’ என்ற படம் மூலம் அறிமுகம் ஆனார். அத்திரைப்படத்தை அடுத்து பாசமலர்கள், பவித்ரா, ராஜாவின் பார்வையிலே என பல படங்களில் நடித்தார்.

தனக்கு எதிர்பார்த்த வெற்றி இல்லையே என தவித்தவர்க்கு ‘ஆசை’ என்ற படத்தின் மூலம் வெற்றியை கொடுத்தவர் வஸந்த். அந்த படத்தை தயாரித்தவர் மணி ரத்னம்.அடுத்தடுத்து பல படங்களில் நடித்தாலும் காதல் கோட்டை, காதல் மன்னன் போன்ற படங்களின் வெற்றியால் முன்னணி கதாநாயகனாக வலம் வர தொடங்கினார்.1998ம் ஆண்டு வெளிவந்த ‘காதல் மன்னன்’ என்ற படத்திற்கு கிடைத்த பெரும் வரவேற்பை அடுத்து தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்தார்.

அமர்க்களம் படப்பிடிப்பில் ஏற்பட்ட காதலால் ஷாலினியை 2000-ம் வருடம் திருமணம் செய்து கொண்டார். நட்சத்திரத் தம்பதியினருக்கு வாரிசு ‘அனோஷ்கா’ என்ற குட்டி தேவதை.

தனது பெயருக்கும் முன்னால் எந்த பெயரையும் போட விரும்ப மாட்டார். ஆனால் அமர்க்களம் படத்தில் ‘அல்டிமேட் ஸ்டார்’ என்ற பட்டத்தை கொடுத்தவர் சரண். அடுத்து சரண் இயக்கிய ‘அசல்’ படத்தில் பட்டம் எதுவும் போட வேண்டாம் என அஜீத்தே நீக்க சொல்லிவிட்டார்.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வந்த வெற்றிப்படம் ‘தீனா’. படத்தில் ” தலை இருக்கும்போது வால் ஆடக்கூடாது.. நீ ஆடு தலை.. ” என்று வசனம் வரும். அன்று முதல் ரசிகர்களுக்கும் ‘தல’ ஆனார் அஜீத்.அவரது சினிமா வாழ்க்கையில் சர்ச்சைகளும் விடவில்லை. நியூ, மிரட்டல், நான் கடவுள், ஏறுமுகம் என பல படங்கள் இவர் கமிட் ஆகிவிட்டு கருத்து வேறுபாடால் நடிக்க முடியாது என்று கூறி விட்டார்.

வாலி, வில்லன், வரலாறு போன்ற படங்களில் இரண்டு/மூன்று வேடங்களில் நடித்தார். அப்படி நடித்த படங்கள் எல்லாம் ஹிட்.! ஆனந்தப் பூங்காற்றே, உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன், நீ வருவாய் என போன்ற படங்களில் கௌரவ வேடத்திலும் நடித்திருக்கிறார்.

மனதில் பட்டதை அப்படியே பேசிவிடுவார். அதனாலேயே பொது நிகழ்ச்சியில் கலந்து கொள்வதை தவிர்த்து விடுவார். சமீபத்தில் கலந்து கொண்ட ‘பாசத்தலைவனுக்கு பாராட்டு விழா’ என்ற நிகழ்ச்சியில் ” ஐயா.. அடிக்கடி ஏதாவது நிகழ்ச்சினு மிரட்டி வர சொல்றாங்கய்யா.. ” என்று மேடையில் முதல்வர் கருணாநிதியிடமே முறையிட்டார். அஜீத் பேச்சிற்கு மேடையில் இருந்த ரஜினி எழுந்து நின்று கை தட்டினார்.

இன்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு நெருக்கமானவர் அஜீத். ரஜினி நடித்த பில்லா படத்தின் ரீமேக்கில் அஜீத் தான் நடிக்க வேண்டும் என்று சிபாரிசு செய்தவர் ரஜினி.
கல்யாணத்திற்கு முன்பு புகைபிடிக்கும் பழக்கம் கொண்டவர். கல்யாணம் ஆனவுடன் தனது மனைவிக்காக சிகரெட்டை விட்டொழித்தார்.
சிம்பு, ஜீவா, ஆர்யா என தமிழ் திரையுலகின் அடுத்த தலைமுறை நாயகர்கள் ஃபேவரைட் எப்போதும் அஜீத் தான். அதிலும் சிம்பு ஒரு அஜீத் வெறியர்.
பல நாயகர்கள் தாங்கள் நடிக்கும் படங்களுக்கு நாயகியாக இவர் தான் வேண்டும் என்று சிபாரிசு செய்வார்கள். ஆனால் அஜீத் எப்போதும் நாயகி விஷயத்தில் தலையிடுவது இல்லை.

‘நேருக்கு நேர் படத்தில் அஜீத்தும் விஜய்யும் இணைந்து நடித்தனர். இருந்தாலும், கருத்து வேறுபாடு காரணமாக அஜீத் படத்திலிருந்து விலக, சரவணன் என்ற இளைஞரை அஜீத் நடித்த வேடத்தில் நடிக்க வைத்தார் இயக்குனர் வஸந்த். சரவணனுக்கு சினிமாவுக்காக சூட்டப்பட்ட பெயர் சூர்யா.அஜீத்தும் விஜய்யும் இணைந்து நடித்த ஒரே படம் ‘ராஜாவின் பார்வையிலே’. அதன் பிறகு இருவருக்கும் என தனித்தனியாக ரசிகர்கள் கூட்டம் சேர, இணைந்து நடிப்பதைத் தவிர்த்தனர். இருவரும் தொழில்முறையில் போட்டியாளர்கள் என ஆகிவிட, அவர்களது ரசிகர்கள் தங்களுக்குள் மோதிக் கொண்டனர். ‘மங்காத்தா’ படப்பிடிப்பில் விஜய்யும் அஜீத்தும் சந்தித்து கொண்டதிலிருந்து இன்றும் இருவரும் நெருங்கிய நண்பர்களாக இருந்து வருகிறார்கள்.

சுப நிகழ்ச்சிகளுக்கு போகிறாரோ இல்லையோ துக்க நிகழ்ச்சிகளில் நிச்சயம் கலந்து கொள்வார். சமீபத்தில் பாடகி சித்ராவின் குழந்தை நந்தனா இறந்ததற்கு நேரில் சென்று ஆறுதல் கூறினார்.தனது 50வது படமான மங்காத்தாவில் ஜார்ஜ் க்லூனி போன்ற கெட்டப்பில் நடித்தார். வாலி, வரலாறு என தான் கதாநாயகனாக நடித்த படத்தில் வில்லனாகவும் நடித்திருந்தாலும், மங்காத்தா படத்தில் நடித்தது நெகட்டிவ் ரோலில் மட்டுமே.

சில மாதங்களுக்கு முன்பு நீங்கள் அரசியலில் ஈடுபட வேண்டும் என்று அஜீத் ரசிகர்கள் சிலர் கூறவே ” எனது பெயரை தவறாக உபயோகித்தால் ரசிகர் மன்றத்தை கலைத்து விடுவேன்” என்று எச்சரித்தார். நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் இவரது பெயர் தவறாக உபயோகப்படுத்தப்படவே தனது அனைத்து ரசிகர் மன்றங்களையும் கலைத்து விட்டார் அஜீத்.

அஜீத் ரசிகர் மன்ற கலைப்புக்கு கூறும் காரணம் ” மாறிவரும் காலகட்டத்தில் மக்கள் எல்லாரையும் உன்னிப்பாகக் கவனிக்கிறார்கள் என்பதைக் கருத்தில் கொண்டு, திரைப்படங்களுக்கு அப்பால் பொதுமக்களின் பார்வையிலும் கண்ணியமாக தென்பட்டால் மட்டுமே, நடிகருக்கும் அவரது ரசிகர்களுக்கும் கவுரவம் கிட்டும் என்பது என் நம்பிக்கை. அந்த கவுரவமும், எனது இந்த முடிவுக்கு ஆதரவு அளிக்கும் என் உண்மையான ரசிகர்களின் கருத்தும் மட்டுமே எனது இந்த பிறந்த நாளுக்கு உண்மையான பரிசாகும்!”

தீவிரமான சாய்பாபா பக்தர். கார், பைக் என எந்தப் பொருள் வாங்கினாலும் பாபாவுக்குச் சமர்ப்பணம் செய்துவிட்டுதான் பயன்படுத்துவார்!
வெளி இடங்களில் தண்ணீர், பழரசம் போன்றவற்றை அருந்த வேண்டியிருந்தால், இடது கையால் தான் கிளாஸைப் பிடித்துக் கொள்வார். பெரும்பாலான வலது கைக்காரர்கள் பயன்படுத்தியபோது உதடுகள் பட்ட பகுதியைத் தவிர்ப்பதற்காகத்தான் இந்த முன்னெச்சரிக்கை!

சினிமாவில் நடிப்பதற்கு முன் வேலை பார்த்த ஏற்றுமதி-இறக்குமதி வணிகத்தின் நிலவரங்களை இப்போதும் அடிக்கடி அப்டேட் செய்துகொள்கிறார்!
வீடு, அலுவலகம் என எங்கு ரசிகர்களைச் சந்தித்தாலும், ‘உங்க குடும்பத்துக்கு முக்கியத்துவம் கொடுங்க. மன்றப் பணிகளை நேரம் இருந்தா பார்த்துக்கலாம்!’ எனப் பாசமாக வலியுறுத்துவார்!

உள்ளூர் அரசியல் பற்றித்தான் கருத்துச் சொல்ல மாட்டார். ஆனால், உலக அரசியலின் இன்றைய நிலவரம்பற்றி எந்த நிமிடமும் அவரிடம் பேச, விவாதிக்க அவ்வளவு விஷயம் இருக்கும்!

சாய்பாபாவுக்குப் பிறகு அஜீத்துக்குப் பிடித்த தெய்வம் திருப்பதி வெங்கடாஜலபதி. சென்னையில் இருந்தே இதுவரை இரண்டு தடவை நடந்தே சென்று திருப்பதி சாமி தரிசனம் செய்திருக்கிறார்!ரேஸ் போட்டிகளில் அஜீத்துக்கு ரோல் மாடல் பிரபல ரேசர் அயர்டன் சென்னா. அஜீத்தின் பிறந்த நாளான மே 1-ம் தேதிதான் அயர்டன் ஒரு கார் விபத்தில் இறந்தார். அதை நினைத்து தன் பிறந்த நாளன்றும் உருகி வருந்துவார் அஜீத்!

ரசிகர்களின் திருமணங்களுக்குத் தன்னுடைய பெயர், படம் போட்டு ஃப்ளெக்ஸ் பேனர்கள் அடிப்பதை விரும்பவே மாட்டார். ‘கல்யாணம் ரொம்ப பெர்சனல் விஷயம்ல!’ என்பார்!தனது மொபைல் போனில் குழந்தை அனோஷ்கா பிறந்ததில் இருந்து இப்போது வரை நடப்பது, பேசுவது, ஓடுவது, சிரிப்பது என எல்லாமே குட்டிக் குட்டி வீடியோ கிளிப்பிங்குகளாக இருக்கின்றன. படப்பிடிப்பு இடைவேளைகளில் அவற்றைப் பார்த்து ரசித்துக்கொண்டு இருப்பார்!
‘இது நான் பேச உங்களுக்கு உகந்த நேரமா?’ என கேட்டுவிட்டுத்தான் தொலைபேசி, அலைபேசிகளில் பேச ஆரம்பிப்பார்!

பொதுவாக, சுயசரிதை நூல்கள் வாசிப்பது பிடிக்கும். ரஜினி பரிசளித்த ‘ஹிமாலயன் மாஸ்டர்ஸ்’ புத்தகத்தை அடிக்கடி வாசிப்பார். வீட்டில் மினி நூலகமே உண்டு!
அஜீத்தின் விமான ஆசை கிளை விரித்தது ஆசான் மெமோரியல் பள்ளியில். அங்கே அவர் பாடமாகப் படித்த ஏரோ மாடலிங்தான் இன்றைய ரிமோட் விமானம், பைலட் அசோசியேஷன் நடவடிக்கைகள் வரை வளர்ந்து நிற்கிறது!
உருளைக்கிழங்கு பொரியல், சாம்பார், சிக்கன் பிரியாணி சமைப்பதில் எக்ஸ்பர்ட். சூட்டிங் இல்லாமல் வீட்டில் இருப்பதாகத் தெரிந்தால், நண்பர்கள் வீட்டில் குவிந்து, பிரியாணி சமைக்கச் சொல்லி அஜீத்தை வம்பிழுப்பார்கள்!
எந்த ஹோட்டலுக்குச் சென்றாலும் புதுவித உணவு வகைகளாக ஆர்டர் செய்வார். அந்த உணவு அருமையாக இருந்தால், அதைத் தயாரித்தவர்களை நேரில் அழைத்துப் பாராட்டித் தள்ளிவிடுவார்!

படிக்கிற காலத்தில் தீவிர கிரிக்கெட் பிரியர். ஆனால், இப்போது ‘கிரிக்கெட்டுக்கான முக்கியத்துவம் எல்லா விளையாட்டுகளுக்கும் தேவை’ என்கிறார்!
மனித முகங்களைப் படம் பிடிப்பதில் கேமராமேன் அஜீத்துக்கு அத்தனை ஆர்வம். நண்பர்களின் கேமரா பழுதடைந்தால் பைசா செலவில்லாமல் ரிப்பேர் சரி செய்து தரும் அளவுக்கு கேமராக் காதலர் இவர்!
அனோஷ்கா, தந்தையை ‘அஜீத் குமார்’ என்றுதான் அழைப்பாள். அப்படி ஒவ்வொரு முறை அனோஷ்கா அழைக்கும்போதும் பூரிப்பில் முகம் இன்னும் சிவக்கும் அஜீத்துக்கு!

மினியேச்சர் ஹெல்மெட்களைச் சேகரிப்பது அஜீத்தின் பொழுதுபோக்கு. விதவித நாணயங்கள், தபால் தலைகளைக் காட்டிலும் அபூர்வமான கலெக்ஷன்ஸ் இது!
தான் நடித்த படம் ரிலீஸ் ஆன பிறகு ரிசல்ட் கேட்டு அதைப்பற்றிய விமர்சனத்தில் ஈடுபடவே மாட்டார் அஜீத். ‘சந்தைக்கு வந்திருச்சு. இனி ரசிகர்கள்தான் தீர்மானிக்கணும். நம்ம பங்கு முடிஞ்சுபோச்சு!’ என்பார்!

தங்களது படம் வெளியாகும்போது படத்துக்கான பப்ளிசிட்டிக்கு பல நடிகர்கள் ஊர் ஊராக செல்லும் நிலையில், ‘மங்காத்தா’ படத்திலிருந்து என் படம் குறித்து எதுவும் பேசக்கூடாது என முடிவு செய்திருக்கிறேன்..” என படம் குறித்து பேச திடமாக மறுத்திருக்கிறார்.

நன்றி: யாவருக்கும் பிலாக்

சந்திரசேகரபாரதி கணிக்கும் இலவச மாத ராசிபலன்:


Photo: சந்திரசேகரபாரதி கணிக்கும் 
இலவச மாத ராசிபலன்:

2012 ஆகஸ்ட் 1 முதல் 31 வரை

சிம்மம், கன்னி, துலாம் ,விருச்சிகம்,

சிம்மம் :

சுக்கிரன், கேது ஆகியோரது சஞ்சாரம் மட்டுமே கோசாரப்படி அனுகூலமாக இருப்பதால் எதிலும் விசேடமான  நன்மைகளை எதிர்பார்க்க இயலாமல் போகும். பொருள் வரவைக் காட்டிலும் செலவுகள் அதிகம் இருக்கும். சிக்கன  நடவடிக்கை அவசியம் தேவை. வீடு மாற்றம், தொழில் மாற்றம் ஆகியவை ஏற்படும். அக்கம்பக்கத்தில் உள்ளவர்களால்  தொல்லைகள் சூழும். வீண்வம்பு, வழக்குகளைத் தவிர்ப்பது நல்லது. குடும்ப நலனில் அக்கறை அதிகம் தேவை. 

குடும்பத்தில் சலசலப்புக்கள் உண்டாகும். பக்குவமாகச் சமாளிப்பது அவசியம். 

அலைச்சலைத் தவிர்க்க இயலாமல் போகும். மக்களால் அதிகம் அனுகூலமிராது. உத்தியோகஸ்தர்கள், ஆசிரியர்கள்,  வங்கிப்பணியாளர்கள், இயந்திரப்பணியாளர்கள், இஞ்சினீயர்கள் ஆகியோருக்கெல்லாம் பிரச்னைகள் சூழும். 

அரசியல்வாதிகளும் அரசுப்பணியாளர்களும், மருத்துவர்களும், விஞ்ஞானிகளும், இரசாயனத்துறைகளைச் சேர்ந்தவர்களும்  மாத முன்பகுதியில் விழிப்புடன் செயல்படுவது அவசியமாகும். வியாபாரிகள் அகலக்கால் வைக்கலாகாது. மாணவர்கள்  படிப்பில் முழுக்கவனம் செலுத்துவது நல்லது.  விளையாட்டு விநோதங்களைத் தவிர்க்கவும். 


4-ஆம் தேதி முதல் சனி 3-ஆமிடம் மாறி, வலுப்பெறுவதால் மனத்துணிவு கூடும். பொது நலப்பணிகளில் ஈடுபாடு  உண்டாகும். தொழிலாளர்களது நிலை உயரும். 14-ஆம் தேதி முதல் செவ்வாய் 3-ஆமிடம் மாறுவதால் போட்டிப்  பந்தயங்களிலும்; விளையாட்டு விநோதங்களிலும் வெற்றி கிட்டும். மனத்தில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். 

இயந்திரப்பணிகள் லாபம் தரும். சொத்துக்கள் சேரும். 16-ஆம் தேதி முதல் சூரியன் ஜன்ம ராசிக்கு இடம் மாறி  வலுப்பெறுவதால் மதிப்பும் அந்தஸ்தும் உயரும். உயர்பதவி கிடைக்கும். கலைஞர்களுக்கும் மாதர்களுக்கும் மாதம்  முழுவதுமே சிறப்பாக அமையும். புதிய பொருட்சேர்க்கை நிகழும். 

மகம், உத்திரம் ஆகிய நட்சத்திரக்காரர்களுக்கு சுப பலன்கள் அதிகமாகும். 

அதிர்ஷ்டத் தேதிகள்: ஆகஸ்ட் 3, 12, 13, 15, 20, 22, 23, 26 (பிற்பகல்), 29.

திசைகள்: தென்கிழக்கு, வடமேற்கு.  

எண்கள்: 6, 7.  
.............

கன்னி: 


சூரியன், புதன், குரு, ராகு ஆகியோரது சஞ்சாரம் அனுகூலமாக இருப்பதால் உங்கள் நிர்வாகத்திறமை பளிச்சிடும்.  புத்திசாலித்தனம் கூடும். முக்கியமான காரியங்கள் எளிதில் நிறைவேறும். முக்கியஸ்தர்கள் உங்களுக்குப் பக்கபலமாக  இருப்பார்கள். அரசுப்பணிகள் நிறைவேறும். புதிய பதவி, பட்டங்கள் கிடைக்கும். வியாபாரத்தில் அபிவிருத்தி காணலாம். 

புதிய வியாபார முன்னேற்றத்திட்டங்கள் கைகூடும். கணிதம், எழுத்து, பத்திரிகை, சிற்பம், ஓவியம், தரகு சம்பந்தப்பட்ட  துறைகளைச் சேர்ந்தவர்கள் வளர்ச்சி காண்பார்கள்.

புதிய சொத்துக்கள், பொருட்கள் சேரும். கணவன் மனைவி உறவு நிலை திருப்தி தரும். பயணத்தால் அனுகூலம்  உண்டாகும். சுப காரியங்கள் நிகழும். தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றிக் கொள்ளச் சந்தர்ப்பம் கூடிவரும். 

அறப்பணிகளில் ஈடுபாடு கூடும். எலக்ட் ரானிக், கம்ப்யூட்டர் இனங்கள் லாபம் தரும். ஆராய்ச்சியாளர்கள் வெற்றி  பெறுவார்கள். மருத்துவம், இரசாயனம், விஞ்ஞானம், ஆன்மிகம் சம்பந்தப்பட்ட இனங்களைச் சேர்ந்தவர்களுக்குச்  செழிப்பான சூழ்நிலை நிலவிவரும். 

ஜன்ம ராசியில் செவ்வாயும் சனியும் உலவுவதால் உடல்நலம் பாதிக்கப்படும் என்றாலும் ராசியைக் குருபார்ப்பதால்  சரியாகும். எதிலும் பதற்றப்படாமல் நிதானமாக ஈடுபடவும். 4-ஆம் தேதி முதல் சனி 2-ஆமிடம் மாறுவதால்  உழைப்புக்குரிய பயன் கிடைக்கும். மக்களால் நலம் உண்டாகும். கடனாகப் பணம் கிடைக்கும். 14-ஆம் தேதி முதல்  செவ்வாய் 2-ஆமிடம் மாறுவதால் குடும்ப நலனில் கவனம் தேவை. பேச்சில் நிதானம் அவசியமாகும். உணவுப்  பழக்கத்தில் கட்டுப்பாடு தேவைப்படும். வீண் விவகாரங்களில் ஈடுபட வேண்டாம். கொடுக்கல்-வாங்கலில் விழிப்புத்  தேவை. 16-ஆம் தேதி முதல் சூரியன் 12-ஆமிடம் மாறுவது சிறப்பாகாது. உஷ்ணாதிக்கம் கூடும். தந்தையாலும் 


அரசாங்கத்தாராலும் செலவுகள் ஏற்படும். கண், வாய், பல், கால் பாதம் சம்பந்தப்பட்ட உபாதைகள் உண்டாகும். 28 -ஆம் தேதி முதல் புதன் 12-ஆமிடம் மாறுவதும் சிறப்பாகாது. வியாபாரத்தில் முழுக்கவனம் செலுத்தவும். சிலருக்கு  தொழிலில் ஒரு மாற்றம் உண்டாகும். 

உத்திரம். சித்திரை நட்சத்திரக்காரர்களுக்கு சுப பலன்கள் அதிகரிக்கும்.

அதிர்ஷ்டத் தேதிகள்: ஆகஸ்ட் 3, 6, 12, 13, 15, 20, 22, 23, 26 (பிற்பகல்), 29.

திசைகள்: தென்மேற்கு, தென்கிழக்கு, வடக்கு, வடகிழக்கு, கிழக்கு. 

எண்: 1, 3, 4, 5, 6. 

............
துலாம்: 


சூரியன், புதன், சுக்கிரன் ஆகியோரது சஞ்சாரம் அனுகூலமாக இருப்பதால் உங்கள் செயல்திறமை வெளிப்படும். 


அறிவாற்றல் கூடும். செய்து வரும் தொழில் விருத்தி அடையும். புதிய துறைகளில் ஈடுபடவும் வாய்ப்புக் கூடிவரும்.  அரசாங்கப்பணிகளில் ஈடுபாடு உள்ளவர்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் செழிப்பான சூழ்நிலை நிலவிவரும். உங்களைக்  காட்டிலும் வயதில் மூத்தவர்களாலும் தந்தையாலும் அனுகூலம் உண்டாகும். நண்பர்கள், உறவினர்களால் அளவோடு நலம்  ஏற்படும். கலைத்துறையினருக்கு வெற்றி வாய்ப்புக்கள் அதிகரிக்கும். 

மாதர்கள் தங்கள் எண்ணம் ஈடேறப் பெறுவார்கள். புதிய ஆடை, அணிமணிகளின் சேர்க்கை நிகழும். புனிதமான  காரியங்களில் பங்கு கொள்வீர்கள். 2-ல் ராகுவும் 8-ல் குரு, கேது ஆகியோரும் இருப்பதால் பொருள்  கொடுக்கல்-வாங்கலில் விழிப்புத் தேவை. உணவுப் பழக்கத்தில் கட்டுப்பாடு அவசியமாகும். 12-ல் செவ்வாயும் சனியும்  சஞ்சரிப்பதால் சுகம் குறையும். தூக்கம் கெடும். வீண் செலவுகளும் இழப்புகளும் உண்டாகும். கண், கால் சம்பந்தமான  உபாதைகள் ஏற்படும். சிலர் குடும்பத்தை விட்டுப் பிரிந்திருக்க நேரும். கைப்பொருள் காணாமல் போகக் கூடும் 

என்பதால் பத்திரப்படுத்தி வைத்துக் கொள்வது நல்லது. 

4-ஆம் தேதி முதல் சனி ஜன்ம ராசிக்கு இடம் மாறினாலும் அவர் உங்கள் ராசிக்கு யோக காரகன் என்பதால் நலமே  புரிவார். மதிப்பு உயரும். பொது நலப்பணிகளில் ஈடுபாடு உண்டாகும். 14-ஆம் தேதி முதல் செவ்வாய் ஜன்ம ராசிக்கு  இடம் மாறுவது சிறப்பாகாது. எதிலும் அவசரப்படாமல் நிதானமாக ஈடுபடுவது அவசியமாகும். 16-ஆம் தேதி முதல்  சூரியன் 11-ஆமிடம் மாறுவதால் அரசு உதவி கிடைக்கும். நிர்வாகத்திறமை கூடும். 28-ஆம் தேதி முதல் புதன் 11 -ஆமிடம் மாறுவதால் தொழில் நுட்பத்திறமை வெளிப்படும். தந்தையால் நலம் பெருகும். தொலைதூரத் தொடர்பு  பயன்படும். 

சுவாதி, விசாக நட்சத்திரக்காரர்களுக்கு ஓரளவு நற்பலன்கள் உண்டாகும். 

அதிர்ஷ்டத் தேதிகள்: ஆகஸ்ட் 3, 6, 13, 15, 20, 22, 23, 26 (பிற்பகல்), 29.

திசைகள்: கிழக்கு, வடக்கு, தென்கிழக்கு.

எண்கள்: 1, 5, 6.  
...........

விருச்சிகம்: 


செவ்வாய், குரு, சுக்கிரன், சனி ஆகியோரது சஞ்சாரம் அனுகூலமாக இருப்பதால் உங்கள் சுயபலம் கூடும். செயல்திறமை  வெளிப்படும். எதிர்ப்புக்கள் விலகும். வழக்கு, வியாஜ்ஜியங்களிலும்; போட்டிப் பந்தயங்களிலும் வெற்றி கிட்டும்.  இயந்திரப்பணியாளர்களும் இஞ்சினீயர்களும் தங்கள் நோக்கம் நிறைவேறப் பெறுவார்கள். நிலபுலங்கள் லாபம் தரும்.  பொருளாதார நிலையில் அபிவிருத்தி காண வழிபிறக்கும். நல்ல நண்பர்கள் அமைவார்கள். தெய்வப் பணிகள் ஈடேறும்.  திருமணம் போன்ற சுப காரியங்கள் நிகழும். 

குடும்பத்தில் குதூகலம் நிறைந்திருக்கும். விருந்து,உபசாரங்களில் ஈடுபாடு கூடும். பேச்சில் இனிமை நிறைந்திருக்கும்.  தனவந்தர்கள் உதவுவார்கள். கலைத்துறையினருக்கு வரவேற்பு அதிகமாகும். தான, தர்மப்பணிகளில் ஈடுபாடு உண்டாகும்.  ஜன்ம ராசியில் ராகுவும் 7-ல் கேதுவும் உலவுவதால் அலைச்சல் கூடும். கணவன் மனைவியிடையே சிறுசிறு 

சலசலப்புக்கள் ஏற்படும். 9-ல் சூரியனும் புதனும் உலவுவதால் செய்து வரும் தொழிலில் கவனம் தேவை. 4-ஆம் தேதி முதல் சனி 12-ஆமிடம் மாறுவது சிறப்பாகாது. எதிர்பாராத செலவுகள் ஏற்படும். இடமாற்றம் உண்டாகும்.  14-ஆம் தேதி முதல் செவ்வாய் 12-ஆமிடம் மாறி, சனியுடன் கூடுவதால் பிரச்னைகள் அதிகமாகும். சகோதர நலம் பாதிக்கும். வீண் செலவுகள், இழப்புகள் ஆகியவை ஏற்படும். கால் சம்பந்தமான உபாதைகள் உண்டாகும். உடல்நலனில்  கவனம் தேவை. 16-ஆம் தேதி முதல் சூரியன் 10-ஆமிடம் மாறுவதால் அரசு உதவி கிடைக்கும். 

வேலையில்லாதவர்களுக்குத் தகுந்ததொரு வாய்ப்பு கூடிவரும். வேலையில் இருப்பவர்களுக்குப் பதவி உயர்வு,  இடமாற்றம், ஊதிய உயர்வு ஆகியவை கிடைக்கும். 28-ஆம் தேதி முதல் புதன் 10-ஆமிடம் மாறுவதும்  குறிப்பிடத்தக்கது. வியாபாரத்தில் அபிவிருத்தி காண வழிபிறக்கும். மாணவர்களது நிலை உயரும். தொழில் நுட்பத்திறமை 

பளிச்சிடும். முக்கியப் பொறுப்புகளைப் பெறுவீர்கள். 

விசாகம், கேட்டை நட்சத்திரக்காரர்களுக்கு விசேடமான மாதமிது. 

அதிர்ஷ்டத் தேதிகள்: ஆகஸ்ட் 3, 6, 12, 15 (பிற்பகல்), 20, 22, 23, 26 (பிற்பகல்), 29.

திசைகள்: கிழக்கு, தெற்கு, வடகிழக்கு, தென்கிழக்கு. 

எண்கள்: 1, 3, 6, 9. 
.........

சிவாஜி கணேசன்... இந்திய சினிமாவின் திறந்தவெளிப் பல்கலைக்கழகம்


சிவாஜி 25

சிவாஜி கணேசன்... இந்திய சினிமாவின் திறந்தவெளிப் பல்கலைக்கழகம். எல்லா நடிகர்களுக்கும் ரசிகர்கள் இருப்பார்கள். ஆனால், அனைத்து நடிகர்களும் இவருக்கு ரசிகர்கள். அந்தக் கலைச் சமுத்திரத்திலிருந்து சில துளிகள்...

* சத்ரபதி சிவாஜி வேடத்த
ில் நடித்த வி.சி.கணேசனை மேடைக்குக் கீழ் இருந்து பார்த்த தந்தை பெரியார், 'இனி இவர்தான் சிவாஜி!' என்று சொன்னார். அதுவே காலம் சொல்லும் பெயரானது!

* நடிகர் திலகம் முதன்முதலில் போட்ட வேடம் பெண் வேடம் தான். உப்பரிகையில் நின்றுகொண்டு ராமனைப் பார்க்கும் சீதை வேடம்தான் சிவாஜி ஏற்ற முதல் பாத்திரம்!

* 1952-ல் நேஷனல் பிக்சர்ஸ் தயாரித்த 'பராசக்தி'யில் 'குணசேகரன்' பாத்திரத்தில் சிவாஜியைக் கதாநாயகனாக்க படத் தயாரிப்பாளர் பி.ஏ.பெருமாள் முடிவு செய்தபோது, பலரும் எதிர்ப்புத் தெரிவித்தனர். எதையும் காதில் வாங்கிக்கொள்ளாமல் சிவாஜியை ஹீரோவாக்கிய பெருமை பெருமாளுக்கே உண்டு!

* சின்சியாரிட்டி, ஒழுங்கு, நேரந் தவறாமைக்கு சிவாஜி ஓர் உதாரணம். ஏழரை மணிக்கு ஷுட்டிங் என்றால், ஆறே முக்கால் மணிக்கே செட்டில் ஆஜராகிவிடுவார். தனது வாழ்நாளில் ஒரு நாள்கூடத் தாமதமாக ஷுட்டிங்குக்குச் சென்றது இல்லை!

* கலைஞரை 'மூனா கானா', எம்.ஜி.ஆரை 'அண்ணன்', ஜெயலலிதாவை 'அம்மு' என்றுதான் அழைப்பார்!

* வீரபாண்டிய கட்டபொம்மன், பாரதியார், வ.உ.சி., பகத்சிங், திருப்பூர் குமரன் போன்ற சுதந்திரப் போராட்ட வீரர்களின் பாத்திரங்கள் அனைத்தையும் ஏற்று நடித்தவர் சிவாஜி ஒருவரே!

* தன்னை 'பராசக்தி' படத்தில் அறிமுகம் செய்த தயாரிப்பாளர் பி.ஏ.பெருமாள் வீட்டுக்கு ஒவ்வொரு பொங்கல் அன்றும் சென்று, அவரிடம் ஆசி பெறுவதை வழக்கமாகவே வைத்திருந்தார் சிவாஜி!

* திருப்பதி, திருவானைக்கா, தஞ்சை மாரியம்மன் கோயில்களுக்கு யானைகளைப் பரிசளித்துள்ளார்!

* தமிழ் சினிமா உலகில் முதன்முதலாக மிகப் பெரிய கட்-அவுட் வைக்கப்பட்டது சிவாஜிக்குத்தான். 1957-ல் வெளிவந்த அந்தப் படம் 'வணங்காமுடி!'

* சிவாஜி தனது நடிப்புக்காக வாங்கிய முதல் பரிசு ஒரு வெள்ளித்தட்டு. 'மனோகரா' நாடகத்தைப் பார்த்த கேரளா -கொல்லங்காடு மகாராஜா கொடுத்த பரிசு அது!

* தனது அண்ணன் தங்கவேலு, தம்பி சண்முகம் போன்றவர்களுடன் ஒரே கூட்டுக் குடும்பமாக இறுதிவரை வாழ்ந்தார். சிவாஜி யின் கால்ஷீட், நிர்வாகம் அனைத்தையும் கவனித்துகொண்டவர் அவரது தம்பி சண்முகம்தான்!

* சிவாஜி நடித்த மொத்தப் படங்கள் 301. இதில் தமிழ்ப் படங் கள் 270. தெலுங்கில் 9, ஹிந்தி 2, மலையாளம் 1, கௌரவத் தோற்றம் 19 படங்கள்!

* ஒவ்வொரு வருடமும் குடும்பத்துடன் தனது சொந்த ஊரான சூரக்கோட்டையில் பொங்கல் விழா கொண்டாடுவதை வழக்கமாகவே வைத்திருந்தார். அன்றைக்குப் பல சினிமா பிரபலங்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்வார்கள்!

* விநாயகர் மீது மிகுந்த பக்திகொண்டவர் சிவாஜி. சிறுவெள்ளி யிலான பிள்ளையார் விக்கிரகத்தை எப்போதும் கூடவே வைத்திருப்பார்!

* சிவாஜிக்கு சிகரெட் பிடிக்கும் பழக்கம் இருந்தது. 'பராசக்தி' படத்தை இயக்கிய, இயக்குநர்கள் கிருஷ்ணன் - பஞ்சு முன்னிலையில் மட்டும் சிகரெட் பிடிக்க மாட்டார்!

* 'ரத்தத் திலகம்' படத்தில் இவரது நடிப்பைப் பாராட்டி - சென்னை சினிமா ரசிகர் சங்கம் கொடுத்த பரிசு - ஒரு துப்பாக்கி!

* படப்பிடிப்பின்போது அவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் எடுக்காத நேரங்களில் மற்றவர்கள் நடிப்பதை உற்றுக் கவனிப்பார். ஆர்வமாகக் கேட்டால் மற்றவர்களுக்கு டிப்ஸ் கொடுப்பார்!

* சிவாஜியும் எம்.ஜி.ஆரும் இணைந்து நடித்த ஒரே படம் கூண்டுக்கிளி!

* விதவிதமான கடிகாரங்களை அணிவதில் இவருக்கு அலாதி பிரியம். ஒமேகா, ரோலக்ஸ் போன்ற வாட்சுகளை ஏராளமாக வாங்கிவைத்திருந்தார்!

* தன் தாய் ராஜாமணி அம்மையாருக்கு சிவாஜி கார்டனில் சிலை ஒன்றை அமைத்தார் சிவாஜி. அந்தச் சிலையைத் திறந்துவைத்தவர் எம்.ஜி.ஆர்!

* 'ஸ்டேனிஸ் லா வோஸ்கி தியரி' என்கிற நடிப்புக் கல்லூரி மாணவர்களுக்கான பாடப் புத்தகத்தில் 64 வகையான முகபாவங்களைப் பிரதிபலிக்கும் திறமை பெற்றவர் என்று குறிப்பிட்டு, சிவாஜியின் புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன!

* அவரது தீவிரமான ஆசைகளில் ஒன்று தந்தை பெரியார் வேடத்தில் நடிப்பது. கடைசி வரை அது நிறை வேறவே இல்லை!

* பிரபல தவில் கலைஞர் வலையப்பட்டி, 'தமிழ் சினிமாவில் நீங்கள்தான் எல்லோருக்கும் ரோல் மாடல்' என்று சிவாஜியிடம் சொன்னபோது, 'டி.எஸ்.பாலையா, எம்.ஆர்.ராதா வரிசையில் மூன்றாவதாகத்தான் நான்' என்றாராம் தன்னடக்கமாக!

* பெருந்தலைவர் காமராஜரின் மீது அளவிட முடியாத அன்புகொண்டவர் இவர். 'அந்த சிவகாமியின் செல்வனின் அன்புத் தொண்டன் இந்த ராஜாமணியின் மகன்' - என்பதுதான் தன்னைப்பற்றி சிவாஜி செய்துகொள்ளும் அடக்கமான அறிமுகம்!

* கிரிக்கெட், கேரம்போர்டு இரண்டும் இவருக்குப் பிடித்தமான விளையாட்டுகள்!

- மானா பாஸ்கரன்