Search This Blog

Thursday, December 29, 2011

தமிழ்

பழைய தமிழ் நூல்கள் செய்யுள் வடிவிலேயே காணப்பட்டன . புதிய உரைநடையின் தோற்றம் ஐரோப்பியர் வருகையின் பின்னரே ஏற்பட்டது. இதில் ஆனந்தரங்கம் பிள்ளை (1709-1761) புதுச்சேரி, தத்துவபோதக சுவாமிகள்,
வீரமாமுனிவர், ஞானப்பிரகாச சுவாமிகள் , கால்டுவெல், ஆறுமுக நாவலர் ஆகியோர் குறிப்பிடத்தக்க பங்காற்றியுள்ளனர்.

உரைநடையின் தன்மைகள் கி.பி.
18, 19 ஆம் நூற்றாண்டுகளில் மாற்றம் பெற்றன. உரைநடையில்
தனி நூல்கள் எழுதும் நிலை உருவாயிற்று. சொல் பயன்பாடு,
தொடர்ப் பயன்பாடு ஆகியவற்றில் எளிமை பின்பற்றப்
பெற்றது. இம்மாற்றங்கள் எல்லாம் ஐரோப்பியர் தமிழகத்திற்கு
வந்ததன் பின் நிகழ்ந்தவை. இந்தப் புதிய உரைநடையின்
தோற்றத்தை மூன்று நிலைகளாகப் பகுத்து விளக்கலாம்.

• முற்றிலும் பேச்சுத் தமிழில் அமைந்த உரைநடை
• பேச்சுத் தமிழ் கலந்த உரைநடை
• இலக்கணத் தூய்மையுடன் அமைந்த உரைநடை

இனி, இவற்றை ஒவ்வொன்றாகப் படித்து அறிந்து கொள்வோம்.

** பேச்சுத் தமிழ்
தமிழர் வாழும் புதுச்சேரி (Pondicherry) பிரெஞ்சு
ஆட்சியின் கீழ் இருந்தது. அந்த ஆட்சியில் முக்கியப் பதவி
வகித்தவர் ஆனந்தரங்கம் பிள்ளை (1709-1761). இவரிடம்
நாட்குறிப்பு எழுதும் வழக்கம் இருந்தது. விரிவான நிலையில்
செய்திகளை நாட்குறிப்பில் எழுதி உள்ளார். இதற்கு அவர்
பயன்படுத்தி உள்ள உரை நடை முற்றிலும் பேச்சு
வழக்கினதாக அமைந்து உள்ளது. பேச்சு வழக்குச் சொற்கள்
பயன்பாடு ஒரு நிலை என்றால், மொழிநடையே எதிரே
உள்ளவரிடம் பேசுவது போன்று அமைந்து உள்ளது.

“ஆள் கழுக்கு மழுக்கென்று மணலிலெ பிடுங்கி
யெடுத்த வள்ளிக் கிழங்காட்டமா யிருக்கிறான்.
முகம் பரந்த முகமாய் ஆன வாகனனாய்
இருக்கிறான். அவள் சென்னப் பட்டணத்துக்குப்
போயிருந்து வந்தவள்”.

இந்தச் சான்றுப் பகுதியில் கூட்டுச் சொற்கள் இடம் பெற்று
உள்ளன. பேச்சு வழக்காக இருந்தாலும் சந்தி விதிகளை நீக்கி
எழுதும் வழக்கம் அக்காலத்தில் இல்லை.

**பேச்சுத் தமிழ் கலந்த நடை

தமிழகத்திற்கு வருகை புரிந்த கிறித்தவப் பாதிரிமார்களில் சிலர்
குறிப்பிடத் தக்கவர் ஆவர். தத்துவபோதக சுவாமிகள்,
வீரமாமுனிவர், ஞானப்பிரகாச சுவாமிகள் ஆகியோரால்
தமிழ் உரைநடை வளம் பெற்றது.

இவர்களின் உரைநடை சாதாரணப் பொது மக்களை
மனங்கொண்டு எழுதப் பெற்றது. பேச்சு வழக்குச் சொற்களைப்
பெரிதும் பயன்படுத்தி உள்ளனர். நீண்ட தொடராக
அமைந்துள்ளது. என்றாலும் தொடர் அமைப்பு பேச்சு வழக்கை
ஒட்டியதாகவே அமைந்து உள்ளது. இதற்குச் சான்றாகத் தத்துவ
போதக சுவாமிகளின் உரைநடையைக் குறிப்பிடலாம். அது
வருமாறு:

இரண்டாஞ் சல்லாபத்திலே நம்மாலே உபதேசிக்கப்
பட்டதெல்லாம் ஒன்றாய்த் தெளிஞ்சாயானால் இப்பாலும்
அறிய வேண்டியதை சங்கோசப் படாமல் கேழ்ப்பாயாக

இதே காலக்கட்டத்தில் வாழ்ந்த கால்டுவெல் ஐயரின்
(1714-1761) உரைநடையும் நீண்ட தொடர் உடையதாகவே
அமைந்து உள்ளது. சந்தி பிரித்து எழுதுதல், எளிமை, தெளிவு
என்னும் பண்புகள் உடையதாகவும் அமைந்துள்ளது. இவரும்
ஐரோப்பாவில் இருந்து தமிழகம் வந்த பாதிரியார்தான். இவர்
உரைநடைக்குச் சான்று ஒன்று பார்ப்போமா?

“தேவ நற்கருணை வாங்கும் போதெல்லாம் இப்புத்தகத்தில்
அடங்கியிருக்கிற செபத்தியானங்கள் ஒவ்வொன்றையும்
முறையாய் வாசிக்க வேண்டு மென்று நினைக்க
வேண்டாம். ஒரு மாதத்தில் சில தியானங்களையும்
அடுத்த மாதத்தில் மற்றும் சில தியானங்களையும்
வாசித்தால் எப்போதும் எழுப்புதல் உண்டாக ஏதுவாக 
இருக்கும்.”

இதே காலக் கட்டத்தில் இலக்கியம் எழுதுவதற்கு உரைநடை
பயன்படுத்தப் பெற்று உள்ளது. என்றாலும் இந்த முயற்சி
தொடரவில்லை. வீரமாமுனிவர் பரமார்த்த குரு கதை என்று
ஓர் இலக்கியத்தை உரைநடையில் எழுதி உள்ளார். அதில் சிறு
பகுதி:

“ஒரு நாய் திருடின ஆட்டுக்கறிக் கண்டத்தை வாயிலே
கவ்விக் கொண்டு நடுவாற்றிலே நீந்திப் போகையில்
ஆறு கபடாகத் தண்ணீரிலே வேறொரு பெரிய
மாம்மிசத் துண்டைக் காட்டினதாம்....தோன்றினதினாலே
கவ்வியிருந்த ..... சென்ற தென்றான்”

இதில் பேச்சு வழக்குச் சொற்கள் இடம் பெற்று உள்ளன.
நடுவாற்றிலே (நடுஆற்றிலே), தோன்றினதினாலே (தோன்றியது
அதனாலே), கவ்வியிருந்த (கவ்வி இருந்த), சென்ற தென்றான்.
(சென்றது என்றான்) என்ற கூட்டுச் சொற்களும் பயன்படுத்தப்
பெற்று உள்ளன.

ஐரோப்பியப் பாதிரிமார்களிடம் தம் உரைநடை எவ்வாறு
அமைதல் வேண்டும் என்பதிலும் தெளிவு இருந்து உள்ளது.
ஞானப்பிரகாச சுவாமிகள் இதைக் குறிப்பிட்டு உள்ளார்.
சிலுவைப் பாதையின் ஞானமுயற்சி (1849) என்னும் நூலின்
பாயிரத்தில் அவர் கருத்துப் பதிவாகி உள்ளது. அதன்
சாரத்தை நுஃமான் இப்படி வரையறுத்து அளித்து உள்ளார்
(1988). அவ் வரையறை வருமாறு:

• யாவரும் எளிதில் வாசித்து உணரக் கூடியதாய் இருத்தல்
• மிகுந்த புணர்ச்சி விகாரங்கள் இல்லாது இருத்தல்
• செந்தமிழுடன் கொடுந்தமிழும் கலந்து இருத்தல்
• சில வாக்கியங்கள் இலக்கண விதிகளையும் மீறி அமைதல்

இந்த வரையறைகளே புதிய உரைநடை வளர்ச்சியின் தனித்
தன்மைகள் எனலாம்.

**இலக்கணத் தூய்மை

இவ்வகை உரைநடை இலக்கணப் பிழை இல்லாமல்
அமைந்திருந்தது. பேச்சு வழக்குச் சொற்களைப்
பயன்படுத்தவில்லை. மொழி அமைப்பில் ஏற்படும் புதிய
மாற்றங்களை ஏற்றுக் கொள்ளவில்லை. இதில், இலக்கண
நூல்களால் வரையறுக்கப் பட்டுள்ள மொழியே பயன்படுத்தப்
பெற்றுள்ளது. இந்த நடையில் எழுதியவர்கள் செந்தமிழ் மரபை
அல்லது உயர் இலக்கிய மரபைப் பேணும் முயற்சியை
மேற்கொண்டனர்.

“தமிழ் கற்கப் புகும் சைவ சமயிகள்
முன்னர்ப் பால பாடங்களைப் படித்துக்
கொண்டு இலக்கணச் சுருக்கத்தைக்
கற்றறிந்து இயன்றவரை பிழையில்லாமல்
எழுதவும் பேசவும் பழகுக.”

என்று ஆறுமுக நாவலர் குறிப்பிடுகின்றார். சாதாரணத் தமிழ்
உரை நடையைப் படிக்கவும் எழுதவும் இலக்கண அறிவு
தேவை என்பது நாவலர் கருத்து.

இலக்கணத் தூய்மையை விரும்பும் நாவலர் மொழித்
தூய்மையைக் கட்டாயப் படுத்தவில்லை. அவர் எழுதிய
நூல்களில் ஆங்கிலச் சொற்களும், சமஸ்கிருதச் சொற்களும்
மிகுதியாக இடம் பெற்று உள்ளன.

ஆறுமுக நாவலரின் உரைநடைக்குச் சான்று வருமாறு :

“கடவுள் என்றும் உள்ளவர்; அவருக்குப் பிறப்பும் 
இறப்பும் இல்லை. அவர் எங்கும் நிறைந்தவர்; அவர்
இல்லாத இடம் இல்லை. அவர் எல்லாம் அறிந்தவர்,
அவர் அறியாதது ஒன்றும் இல்லை. அவரது அறிவு
இயற்கை அறிவு, ஒருவர் அறிவிக்க அறிபவர் அல்லர்.”

இதில், ஐரோப்பியப் பாதிரிமார்களின் உரைநடையில் இருந்து
வேறுபட்ட தன்மைகள் இரண்டைக் கவனிக்கலாம்.

• சிறு சிறு தொடர்கள்.
• பேச்சு மொழி புறக்கணிப்பு; செந்தமிழ்ச் சொல் பயன்பாடு.

ஆறுமுக நாவலரின் ஒட்டு மொத்த உரைநடைப்
படைப்புகளையும் ஆராய்ந்து உள்ளனர். அவர்கள் மூன்று
முக்கியப் பண்புகளைச் சுட்டிக் காட்டி உள்ளனர். அவை,

• கல்வி அறிவு உடைய வித்துவான்கள், கல்வி அறிவு
குறைந்தவர்கள் கல்வி அறிவு இல்லாதவர்கள் ஆகிய யாவருக்கும் எளிதில் பொருள் விளங்குவது.
• பெரும்பாலும் இயற் சொற்களைக் கொண்டு இருப்பது
அவசியமான இடத்து மட்டும் பிற சொற்களைப்
பயன்படுத்துவது.
• பெரும்பாலும் சந்தி பிரித்து எழுதுவது.

**உரைநடை இலக்கியம்

இலக்கியம் எழுத உரைநடையை முதன் முதலில்
பயன்படுத்தியவர் வீரமா முனிவர் என்பதை அறிவோம். இவர்
எழுதிய பரமார்த்த குரு கதைக்கு அடுத்து இம்முயற்சி
தொடரவில்லை. 1887 இல் தமிழின் முதல் புதினமான ‘பிரதாப
முதலியார் சரித்திரம்’ வெளிவந்தது. இதைத் தொடர்ந்து
புதினங்கள் பல எழுதப் பெற்றன. இலக்கியம் எழுதும்
முயற்சிக்குப் பெருமளவில் உரைநடையைப் பயன்படுத்தும்
முறை வழக்குப் பெற்றது. இந்த உரைநடையிலும் மாற்றம்
வேண்டும் என்பது பாரதியின் கருத்து. இதை உரைநடை
வழியே பாரதி வெளிப்படுத்தி உள்ளார்.

“தமிழில் வசன நடை (உரைநடை) இப்போதுதான்
பிறந்தது. பல வருஷமாகவில்லை. தொட்டில் பழக்கம்
சுடுகாடு மட்டும். ஆதலால் இப்போதே நமது
வசனம் உலகத்தில் எந்தப் பாஷையைக் காட்டிலும்
தெளிவாக இருக்கும்படி முயற்சிகள் செய்ய வேண்டும்.
கூடியவரை பேசுவது போலவே எழுதுவதுதான்
உத்தமமென்பது என்னுடைய கட்சி. எந்த விஷயம்
எழுதினாலும் சரி, ஒரு கதை அல்லது தர்க்கம்,
ஒரு சாஸ்திரம், ஒரு பத்திரிகை விஷயம் எதை
எழுதினாலும் வார்த்தை சொல்லுகிற மாதிரியாகவே
அமைந்து விட்டால் நல்லது”

இது பாரதி வாழ்ந்த கால உரைநடை வளர்ச்சியை அறியப்
போதுமான சான்று. பாரதி 1882 இல் பிறந்து 1921 இல் இயற்கை
எய்தினார். இக்காலத்தில் பேசுவது போல் எழுத வேண்டும்
என்பது ஒரு கட்சியாக இருந்து உள்ளது. இதற்கு மாற்றுக்
கருத்து உடையவர் இருந்ததைப் பாரதியின் கருத்துத்
தெளிவாக்குகின்றது.

பாரதிக்குப் பின்னர் உரைநடை வளர்ச்சியில் குறிப்பிடத்
தக்கவர்கள் பலர் உள்ளனர். புதுமைப்பித்தன், திரு.வி.க,
மறைமலை அடிகள் முதலானவர் தமக்கெனத் தனி
உரைநடைப் பாணியை உருவாக்கி உள்ளனர்.

Tamil

தமிழில் தோற்றம் கொண்டு வளர்ந்தமைந்த இலக்கியங்களைத் தமிழ் இலக்கியங்கள் எனக் கூறலாம். எழுந்த காலம், மற்றும் இலக்கியத்தின் யாப்பியல், கருப்பொருள் முதலியன தொடர்பாகத் தமிழ் இலக்கியங்களை வேறு பிரித்து ஆராயும் முறை நிலவி வருகிறது. தமிழ் எந்த ஒரு மதத்திற்கும் மட்டும் உரியதன்று. அது பொதுவானது. பல மத இலக்கியங்களும் தமிழ்மொழியின் வளர்ச்சிக்கு துணை புரிந்திருக்கின்றன.

தமிழ் உரைநடை வளர்ச்சியின் பின்புலம்

ஐரோப்பியர் வருகைக்குப் பின்னர்த் தமிழ்ச் சமூகத்தில்
மாற்றங்கள் நிகழ்ந்தன. புதிய சமூக அமைப்பிற்குச் செய்யுள்
இலக்கியத்தை விட உரைநடை வளர்ச்சியே ஈடுகொடுத்து வந்து
உள்ளது. இதைக் கீ்ழ்வருமாறு பகுத்துக் காணலாம்.

• நிர்வாகத் தேவை
• மதப் பிரச்சாரம்
• பத்திரிகைத் துறை வளர்ச்சி
• கல்வி வளர்ச்சி

* நிர்வாகத் தேவையும் உரைநடையும்

கி.பி. 19 ஆம் நூற்றாண்டில் தமிழகத்தை ஆங்கிலேய
அரசு ஆண்டது. புதிய நிர்வாக முறை அறிமுகம் செய்யப்
பெற்றது. இதனால் கடிதத் தொடர்புகள், கணக்கேடுகள்,
பட்டியல்கள் என எல்லாம் மாற்றம் பெற்றன. இத்தேவைகளைச்
செய்யுள் வடிவ மொழி நிறைவு செய்யாது. பழைய
உரைநடையின் வளர்ச்சி அல்லது மாற்றம் நிர்வாகத்
தேவையை நிறைவு செய்தது. இதனால் தமிழ் உரைநடை
வளர்ச்சி விரைவு பெற்றது.

ஆங்கிலேய அரசு 1835 இல் அச்சகம் அமைக்க அனுமதி
வழங்கியது. இதுவரை பாதிரிமார்கள் மட்டுமே அச்சகம் நிறுவி
இருந்தனர். அரசின் புதிய ஆணையால் அச்சகம், அதை
ஒட்டிய தமிழ் உரைநடை இரண்டும் வளர்ந்தன. இந்நிலையில்,
1849 இல் ஆறுமுக நாவலர் சென்னையில் அச்சகம்
நிறுவினார். தமக்கெனத் தனி உரைநடையை வளர்த்தெடுத்தார்.

ஆங்கிலேய அரசு மேலும் ஒரு வகையில் தமிழ்
உரைநடை வளர்ச்சிக்குத் துணை புரிந்து உள்ளது. 1812 இல்
சென்னைக் கல்விச் சங்கம் (The College of Fort St.
George) அரசால் நிறுவப் பெற்றது. இதனால் நூல் நிலையம்,
புத்தக விற்பனை நிலையம், அச்சகம் ஆகிய துறைகள்
வளர்ந்தன. இதனால் தமிழ் உரைநடையும் வளர்ச்சி பெற்றது.

* சமயப் பிரச்சாரமும் உரைநடையும்

தத்துவ போதக சுவாமிகள், வீரமாமுனிவர்,
ஞானப்பிரகாச சுவாமிகள் ஆகிய மூவருமே கிறித்தவ
மதத்தைத் தமிழகத்தில் பரப்பினர். இந்தச் சமயம் பரப்பும்
முயற்சிக்காக அவர்கள் தேர்ந்தெடுத்துக் கொண்டதுதான்
உரைநடை. அதிலும் மக்களின் பேச்சு வழக்கில் உரைநடையை
எழுதியதன் நோக்கம் சமயம் பரப்பும் முயற்சிதான் எனலாம்.

இதே போன்று ஆறுமுக நாவலரின் உரைநடைப்
படைப்புகளுக்கும் சமயம் பரப்புவதே நோக்கமாக இருந்தது.
பாதிரிமார்களுக்கு எதிராக நாவலர் பிரச்சாரம் செய்தார்; சைவ
சமயத்தைப் பரப்பினார். பேச்சு வழக்குக்கு எதிரான எளிய
செவ்விய தமிழ் உரைநடையைக் கட்டமைத்தார்.

ஆக, உரைநடை வளர்ச்சியில் மதப் பிரச்சாரம் முன்னிலை
வகித்தது எனலாம்.

தொடர்புடைய குறிப்புகள் @ 
https://www.facebook.com/note.php?note_id=406102279709 
https://www.facebook.com/note.php?note_id=405146539709
https://www.facebook.com/note.php?note_id=403681399709
https://www.facebook.com/note.php?note_id=403681279709

இயல், இசை, நாடகம் ஆகியவற்றை உள்ளடக்கியது தமிழ் மொழி. பண்டைய காலத்தில் மூன்று துறைகளுடன் ஆன்மிகமும் கலந்து தமிழ் மொழி வளர்க்கப்பட்டது. இலக்கியம், நாடகம் மூலமாக தமிழ் மொழி வளர்க்கப்பட்டாலும், பெரிய அளவில் ஆன்மிகம் தான், தமிழ் மொழி வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றி வருகிறது. குறிப்பாக
அப்பர், சம்பந்தர், சுந்தரர் பாடிய தேவராம், மாணிக்கவாசகர் பாடிய திருவாசகம், சேக்கிழார் எழுதிய பெரியபுராணம் போன்ற பன்னிரு திருமுறைகள், மற்றும் கம்பராமாயணம், திருவிளையாடல் புராணம், ஆகிய சைவ சமயத்தின் மூலமாக தமிழ் மொழி வளர்ச்சி அடைந்துள்ளது. அதே போல் பொய்கை ஆழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார், திருமழிசை ஆழ்வார், தொண்டரடிப்பொடி ஆழ்வார், திருப்பாணாழ்வார், பெரியாழ்வார், ஆண்டாள், நம்மாழ்வார், மதுரகவி ஆழ்வார், குலசேகர ஆழ்வார், திருமங்கை ஆழ்வார் ஆகிய 12 ஆழ்வார்கள் பாடிய நாலாயிர திவ்ய பிரபந்தம் ஆகிய வைணவ சமயத்தின் மூலம் தமிழ் மொழி வளர்ச்சி அடைந்துள்ளது. இவ்வாறு ஆன்மிகமும் தமிழ் மொழியும் பிரிக்க முடியாதவகையில் பின்னிப்பிணைந்திருக்கிறது. தமிழ் மொழி வளர்ச்சியில் ஆன்மிகத்தின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக இன்றும் என்றும் இருந்து வருவது மறுக்க முடியாத உண்மையாகும். 
ஆன்மிகத்தின் மூலம் தமிழ் மொழி வளர்ச்சிக்காக பாடுபட்டவர்கள்:
பதினென் சித்தர்கள்:
அகத்தியர்,போகர், கோரக்கர், மச்சமுனி, சட்டைமுனி, திருமூலர், நந்தி, கொங்கணர், ராமதேவர், பதஞ்சலி, குதம்பை முனிவர், கரூவூரார், தன்வந்திரி, வாசமுனி, இடைக்காடர், கமலமுனி, சுந்தரானந்தர், பாம்பாட்டி சித்தர் 
மன்னர்கள்:
சேரன் செங்குட்டுவன், கரிகால் சோழன், ராஜசோழன், உக்கிர பாண்டின், அதிவீரராம பாண்டியன்.
புலவர்கள்:
நக்கீரர், அவ்வையார்,காரைக்கால் அம்மையார், 
பாணபத்திரர், சீத்தலை சாத்தனார், கம்பர், பாரதியார், திரிகூட ராசப்பக்கவிராயர், இரட்டைப்புலவர்களான இளஞ்சூரியர், முதுசூரியர், இளங்கோவடிகள், திரு.வி.க., ஆன்மிக வாதிகள்
பாம்பன் சுவாமிகள், முத்துக்குமார சுவாமிகள், குமரகுருபரர், சங்கரதாஸ் சுவாமிகள், வள்ளலார், கிருபானந்த வாரியார்.

ஒரு மொழி செம்மொழியாக இருப்பதற்குரிய தகுதிகள்


-----------------------------------------------------------------------------
1) தொன்மை (Antiquity)

2) தனித்தன்மை (Individuality)

3) பொதுமைப் பண்பு (Common Characters)

4) நடுவு நிலைமை (Neutrality)

5) தாய்மைத் தன்மை (Parental Kinship)

6) பண்பாடு,கலை,பட்டறிவு வெளிப்பாடு (Finding expression in the culture,art and life experience of the civilized society)

7) பிறமொழிக் கலப்பில்லாத தனித்தன்மை.(Ability to function independently without any impact or influence of any other language and literature)

8) இலக்கிய வளம் (Literary Powers)

9) உயர்சிந்தனை (Noble Ideas and Ideals)

10) கலை,இலக்கியத் தன்மை வெளிப்பாடு (Originality in artistic and literary expressions)

11) மொழிக் கோட்பாடு.

தமிழ்மொழி

தமிழ்மொழியானது 2400 ஆண்டுகளுக்கு முன்பே எழுத்தின் படஎழுத்து, கருத்தெழுத்து, அசையெழுத்து ஆகிய மூன்று நிலைகளையும் கடந்து வரியெழுத்து நிலையாகிய நான்காவது நிலையை அடைந்திருந்தது. இதனை தொல்காப்பியம் எமக்கு அறியத்தருகின்றது என கடந்த இதழில் எழுதியிருந்தேன். அதற்கு, தமிழ் 2400 ஆண்டுகளுக்கு முன்பே வரியெழுத்து நிலையை அடைந்திருந்தது என்று எப்படி உங்களால் எழுதமுடியும்? படஎழுத்து, கருத்தெழுத்து, அசையெழுத்து என்பன என்ன? என்றும் சிலர் கேட்டிருந்தார்கள். ஆதலால் தொல்காப்பியத்தின் காலத்தை சற்று ஆராய்வோம்.

1. இன்று இருக்கும் தமிழ் நூல்களிலே காலத்தால் பழமையானது தொல்காப்பியம். இது உலக மொழிகளில் கிடைக்கக்கூடிய இலக்கணநூல்களிலே பழமையானதுமாகும். தொல்காப்பியர் இடைச்சங்ககாலப் புலவர். இவருடன் படித்த பனம்பாரனார் தொல்காப்பியப் பாயிரத்தைப் (முகவுரையை) பாடியுள்ளார். அதில் தமிழ்மொழி பேசப்பட்ட நிலத்தின் எல்லைகளை குறித்துள்ளார். “வடவேங்கடம் தென்குமரி ஆயிடை தமிழ் கூறும் நல் உலகம்” இதில் பனம்பாரனார் தமிழ்மொழி பேசப்படும் நாடு என்று கூறாமல் தமிழ்மொழி பேசப்படும் உலகம் என்றும் கூறியிருப்பதை கவனத்தில் கொள்ளவேண்டும். ஒரு நாடு உலகம் ஆகாது. பல நாடுகள் சேர்ந்ததே உலகம். எனவே பனம்பாரனார் சொல்லிய நில எல்லைக்குள் தமிழ்மொழி பேசப்பட்ட பல நாடுகள் இருந்திருக்கின்றன. அவரின் கருத்திற்கு துணைசேர்ப்பது போல் தொல்காப்பியரும் “இயற்சொல் தாமே செந்தமிழ் நிலத்து வழக்கொடு சிவணி” அதாவது இயற்சொல் செந்தமிழ் பேசப்படும் நிலத்தில் வழங்கும் சொல்லாய் இருப்பதே ஆகும். இதில் செந்தமிழ் நிலத்து என்று சொன்னவர் திசைச்சொல்லை கூறுமிடத்தில் “செந்தமிழ் சேர்ந்த பன்னிரு நிலத்தும்” எனப் பிரித்துக் காட்டுகின்றார். “செந்தமிழ் சேர்ந்த பன்னிரு நிலத்தும் தம்குறிப்பினவே திசைச்சொற் கிளவி” அதாவது தமிழ்கூறும் உலகைச் சூழ்ந்துள்ள செந்தமிழ் கலந்த வேற்றுமொழிகள் பேசப்படும் நாட்டுச்சொற்கள் தமிழிலே வந்து வழங்கும் போது அவை திசைச்சொற்கள் எனப்படும்.

இதனால் தொல்காப்பியர் காலத்தில் செந்தமிழ் நிலமும் அதைச்சூழ செந்தமிழ் சேர்ந்த பன்னிரெண்டு நிலமும் இருந்தது தெரியவருகின்றது. ஒர் இடத்திற்கு எல்லை கூறும்போது நான்கு திசைகளில் எல்லை கூறுவார்கள். ஆனால் பனம்பாரனாரோ தமிழ்கூறும் நல்லுலகிற்கு வடவேங்கடம் தென்குமரி என இரண்டு எல்லைகளையே கூறியுள்ளார். அது ஏன்?

தொல்காப்பிய உரையாசிரியரான இளம்பூரணர் “கடல் கொள்வதன் முன்பு பிறநாடு உண்மையின் தெற்கும் எல்லை கூறப்பட்டது. கிழக்கும் மேற்கும் பிறநாடு இன்மையின் கூறப்படாவாயின என இதற்கு விளக்கம் தந்துள்ளார்”. வட வேங்கடத்திற்கு வடக்கே பிறநாடு இருப்பது போல கடல் கோளின் முன்னர் குமரிக்குத் தெற்கேயும் பிறநாடு இருந்ததால் எல்லை கூறப்பட்டது. கிழக்கும் மேற்கும் கடலாதலால் எல்லை கூறவில்லை. இவர் கருத்தின்படி பனம்பாரனாரும் தொல்காப்பியரும் குமரி கடல்கோளால் அழியுமுன் வாழ்ந்தவர்கள் ஆகின்றனர்.

2. தொல்காப்பியத்தின் இன்னொரு உரையாசிரியரான பேராசிரியரும் தமது தொல்காப்பிய உரையில் “பனம்பாரனார்”, “வடவேங்கடம்”, தென்குமாரி எனக் குமரியாற்றினை எல்லையாகக் கூறி பாயிரம் செய்தமை கடலகத்துப் பட்டுக் குமரியாறும் பனைநாட்டோடு கெடுவதற்கு முன்னையது” எனக் கூறியுள்ளார்.

பனம்பாரனார் தென்குமரி என்றதை பேராசிரியர் குமரியாறு என தெளிவுபடுத்தியுள்ளார். அந்நாளில் குமரியாறு இருந்த உண்மையை Òகுமரியம் பெருந்துறை அயிரை மாந்தி” என்று புறநானூற்றில் பிசிராந்தையார் சொல்லி இருப்பதால் நாமறியலாம்.

அயிரை என்பது ஒருவகை மீன். இந்த அயிரை மீன் ஆற்றுநீரிலே வாழும். கடல் நீரில் வாழாது. எனவே இப்பாடலில் பிசிராந்தையார் சொன்ன குமரியம் பெருந்துறை இன்று தமிழ்நாட்டில் உள்ள கன்னியாகுமரி அல்ல. இன்றைய குமரிமுனை மூன்று பக்கமும் கடலால் சூழப்பட்டது. ஆதலால் குமரியம் பெருந்துறை குமாரியாற்றங் கரையில் இருந்திருக்கின்றது. பெருந்துறை என்பதால் அது ஒரு துறைமுகமாகும். தமிழரின் போக்குவரத்து குமரியாற்றில் நடந்தது என்ற உண்மையை இது எடுத்துக் காட்டுகின்றது.

இந்த குமரிப்பெருந்துறையை பின்னாளில் வந்த பௌத்த பாளி நூல்கள் மகாதித்த என்கின்றன. அதனை நாம் மாதோட்டம் என்கிறோம். மனித நாகரீகமே ஆற்றங்கரைகளிலே தான் வளர்ந்தது. பழந்தமிழர் நாகரீகமும் குமரியாற்றங்கரையில் உருவானது என்பதை இது காட்டுகின்றது.

தொல்காப்பியப் பாயிரம் பாடிய பனம்பாரனாரே குறுந்தொகையில் “ஆரவாரித்து எழுந்த கடல், ஏறி மிதித்ததால் நீரினிடையே மலையின் உச்சி அசைந்ததை”, “ஆர்கலி மிதித்த நீர்திகழ் சிலம்பில் கூரசைந் தனையை” எனக் கூறியுள்ளார். ஆதலால் அவர் காலத்தில் கடல்கோள் ஒன்று நடந்திருக்க வேண்டும். அதைப் பார்த்த பின் அந்த உண்மையை இவ்வரிகளில் அவர் பதிவு செய்திருக்கலாம்.

தெற்கே குமரி கடல்கோளால் அழிந்ததை மார்க்கண்டேயர் புராணமும் கூறுகின்றது. “அயம்பது நவமஸ் தேஷாம் த்விப சாகர ஸம்வ்ருத குமாராக்யா பாரிக்யாதோ த்வீபோயம் தஷிணோத்ர” பல நாடுகளை அழித்த மாபெரும் கடல்கோள் சொலமன் அரசனின் காலத்திற்கு 300 வருடங்களுக்கு முன் நடந்தது. The Anchor Bible Dictionary அது நடந்த காலத்தை கி.மு 1250 இந்த கடல்கோள் நடந்த காலத்திற்கு தொல்காப்பியர் காலம் சாரிவருமா என்பது ஆராயப்பட வேண்டிய விடயம்.

5. தொல்காப்பியரை பனம்பாரனார் தொல்காப்பிய பாயிரத்தில் “ஐந்திரம் நிறைந்த தொல்காப்பியன்” எனப் புகழ்ந்துள்ளார். ஐந்திரம் என்பது தொல்காப்பியர் படித்த பழந்தமிழ் இலக்கண நூல். அந்த ஐந்திரத்தை மயன் எழுதினான். ஐந்திரம் பாணினீயம் எனும் வடமொழி இலக்கணத்திற்கு முந்தியது. பாணினீயத்தை எழுதிய பாணினியின் காலம் கி.மு 4ம் நூற்றாண்டாகும். சிலர் இந்திரனால் எழுதப்பட்டது ஐந்திரம் என்பர். அது பிழையான கருத்தாகும். இந்திரன் எழுதிய வடமொழி இலக்கண நூல் இந்திரம்.

6. சமணம், பௌத்தம் எனும் இரு மதக் கொள்கைகளும் தமிழ் நிலத்தில் பரவியதற்கு ஆதாரமாக இருக்கும் கல்வெட்டுக்களும் நூல்களும் கி.மு 3ம் நூற்றாண்டைச் சேர்ந்தவையாகும். தொல்காப்பியத்தில் சமண, பௌத்த மதக்கொள்கைகள் பற்றிய குறிப்புகள் எதுவும் இல்லை. எனவே இவ்விரு சமயமும் தமிழ்நிலத்தில் பரவ முன்னரே தொல்காப்பியம் எழுதப்பட்டது எனக்கொள்ளலே பெருந்தும். மேற்கூறிய ஆதாரங்கள் யாவும் தொல்காப்பியர் காலத்தை கி.மு 4ம் நூற்றாண்டிற்கு முன்பே கொண்டு செல்கின்றன.


அடுத்து படஎழுத்து, கருத்தெழுத்து, அசையெழுத்து என்றால் என்ன? என்பதைப் பார்ப்போம். மனிதன் தனது எண்ணங்களை மற்றவர்களுக்கு வெளிப்படுத்த உருவங்களை படமாகக் கீறினான். அதனை உருவ எழுத்து என்றும் படஎழுத்தென்றும் கூறுவர். படஎழுத்தில் உள்ள உருவம் அதன் பெயரைச் குறிக்காமல் ஒரு கருத்தைச் சொல்லின் அது கருத்தெழுத்து எனப்படும். அதாவது “புகைத்தல் தடைசெய்யப்பட்டுள்ளது (No Smoking)” என்பதற்கு நாம் பாவிக்கும் அடையாளத்தை போன்றதே கருத்தெழுத்து. இந்த எழுத்துக்களுக்கு ஒலி இல்லை.

அசையெழுத்து என்பது கூட்டெழுத்தாகும். க்+அ எனும் இரு எழுத்துக்கள் கூட்டாகச் சேர்ந்து க எனும் எழுத்தை உருவாக்கும். அதுபோன்றதே அசையெழுத்து. தமிழிலிலுள்ள உயிர்மெய் எழுத்துக்களை அசையெழுத்து என்றும் கூறலாம். தமிழில் உள்ள சொற்களில் எழுத்து என்னும் சொல் மிகவும் சுவையான கருத்தாழம் உள்ள சொல்லாகும். எழுத்து என்றால் என்ன? எழுப்பப்படுவதா? எழுதப்படுவதா? எழுத்தை நாம் உச்சரிக்கும் போது எழுப்பப்படுவதாகவும் அதை எழுதும் பொழுது எழுதப்படுவதாகவும் அமைந்துள்ளது. எழுத்தின் ஓசை எழுப்பப்படும் பொழுது ஒலிவடிவத்தையும் அது எழுதப்படும் பொழுது வரிவடிவத்தையும் எழுத்து பெறுகின்றது. எனவே ஒலிவடிவம், வரிவடிவம் இரண்டையும் பெற்று விளங்குவதே எழுத்தாகும்.

தொல்காப்பியர் காலத்திற்கு முன்பே தமிழ் எழுத்துகள் ஒலிவடிவத்தை பெற்றுவிட்டன. அவரது காலத்திற்கு முன்பு வாழ்ந்த தமிழ்புலவர்கள் எழுத்தின் ஒலிக்கு கால வரையறையும் செய்திருந்தனர். தொல்காப்பியர் அதனை “அ இ உ எ ஒ என்னும் அப்பால் ஐந்தும் ஓரளபு இசைக்குங் குற்றெழுத்து என்ப “நீட்டம் வேண்டின் அவ்வள புடைய கூட்டி எழுஉதல் என்மனார் புலவர்” எனக்கூறுவதால் அறியலாம்.

அ இ உ எ ஒ என்ற ஐந்தையும் ஒரு மாத்திரை ஒலிக்கும் குற்றெழுத்துக்கள் என்று சொல்வர் எனவும் (இசைக்கும் – ஒலிக்கும்) நீண்டஒலி வேண்டும் மானால் அந்த அளவுக்கு எழுத்துக்களை கூட்டி அவ்வொலியை உண்டாக்குக என்று புலவர் கூறுவரெனவும் குறிப்பிட்டுள்ளார். தமிழ் எழுத்துகள் தொல்காப்பியர் காலத்திற்கு முன்பே வரிவடிவத்தையும் பெற்றுவிட்டதால் ஒரு சில எழுத்துகளுக்கு மட்டுமே வரிவடிவு கூறியுள்ளார். அதனாலேயே போன இதழில் வரியெழுத்து வடிவாக இருந்த தமிழ்மொழிக்கே தொல்காப்பியர் இலக்கணம் வகுத்துள்ளார் என எழுதினேன்.

நன்றி - ஆம்பல் இணைய சஞ்சிகை -இலண்டன்

பொய்க்கால் குதிரை ஆட்டம்

 
தமிழ்நாடு நாட்டுப்புறக் கலை வடிவங்களில் பொய்க்கால் குதிரை ஆட்டம் ஒன்றாகும். கரகம், காவடியைப் போல வழிபாட்டுக் கலையாக அல்லாமல் பொதுமக்கள் கண்டுகளிக்கும் பொருட்டு ஏற்பட்ட ஆட்டமாகப் பொய்க்கால் குதிரை ஆட்டம் விளங்குகிறது.

கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் தோன்றிய காப்பியமான சிலப்பதிகாரத்தில் மாதவி ஆடிய பதினொரு வகை ஆடல்களில், முன்பு துர்க்கை ஆடிய மரக்காலாடல் ஒன்றாகும்.

மாயவ ளாடிய மரக்கா லாடலும் (கடலாடு காதை, அடி 59)

என்று சிலப்பதிகாரம் குறிப்பிடுகிறது.

வஞ்சத்தால், பாம்பு, தேள் முதலிய விடப் பூச்சிகளாக உருவெடுத்துத் தனக்கு இன்னலை விளைத்துத் தன்னைக் கொல்லக் கருதிய அï¢îணர்களின் செயலை உணர்ந்து துர்க்கை தன் கால்களில் கட்டையைக் கட்டிக் கொண்டு, அவர்கள் மிதிபட்டு மடியுமாறு ஆடிய ஆட்டமே மரக்கால் ஆடல் ஆகும். மரக்கால் கொண்டு ஆடுதலின் மரக்காலாடல் ஆயிற்று. சிலப்பதிகாரத்தில் குறிப்பிடும் மரக்காலாடல் இன்று பொய்க்கால் குதிரை ஆட்டமாக மாறிவந்தது.

இவ்வாறு காலில் கட்டை கட்டி ஆடுதல் தமிழ் நாட்டில் மட்டுமின்றி ஆந்திரம், மத்தியப் பிரதேசம், ஒரிசா போன்ற மாநிலங்களிலும் காணப்படுகின்றது.

பொய்க்கால் குதிரை

கால்களில் கட்டையைக் கட்டிக் கொண்டு, உண்மையான கால்களில் நின்று ஆடாமல், பொய்யான கால்களில் நின்று கொண்டு, குதிரை போன்ற உருவத்தைச் சுமந்து கொண்டு ஆடுதல் பொய்க்கால் குதிரை ஆட்டம் ஆகும். மேலும் இந்த ஆட்டம் புரவியாட்டம் என்றும் அழைக்கப்படுகிறது. மதுரைப் பகுதியில் காலில் கட்டையைக் கட்டிக் கொள்ளாமல் வெறுங்காலில் சலங்கை கட்டிக் கொண்டு பொய்க்குதிரைக் கூட்டைச் சுமந்து கொண்டு ஆடும் மரபு உள்ளது. இதனால் இந்த ஆட்டம் “பொய்க் குதிரையாட்டம்” என்று அழைக்கப்படுகிறது.

தமிழ்நாட்டைப் பொருத்தவரை இப்பொய்க்கால் குதிரையாட்டம் முற்றிலும் பொழுதுபோக்கின் அடிப்படையில் தோன்றிய ஒரு கலையாகவே வழங்கி வந்துள்ளது. தமிழ்நாட்டில் பன்னெடுங் காலமாக மரக்காலாடல் வழக்கில் இருந்து வருகிறது. ஆனால் பொய்க்குதிரைக் கூட்டைச் சுமந்து கொண்டு ஓடியதற்கான சான்றுகள் தொல்காப்பியத்தில் உள்ளன. தொல்காப்பியத்தில் அகத்திணை இயலில் பெருந்திணைக்கு இலக்கணம் கூறும் நூற்பாவில் தலைமகன் தான் விரும்பிய பெண்ணை மணக்கப் பெண்ணின் பெற்றோர் தடை விதித்த போது, பனை ஓலையில் குதிரை போல் உருவம் செய்து அதனை உடலில் தாங்கிக் கொண்டு ஊர்த் தெருக்களில் வந்து தான் விரும்பும் பெண்ணைத் தனக்குக் கட்டி வைக்கக் கோரிய செயல் “மடலேறுதல்” என்னும் பெயரால் வழங்கப்பட்டுள்ளது. இது தொல்காப்பியத்தில் “ஏறிய மடல் திறம்” என்று பேசப்படுகிறது. ஆனால் காலில் கட்டை கட்டிப் பொய்க்குதிரைக் கூட்டைச் சுமந்து ஆடலாக ஆடப்பட்டதற்கான சான்றுகள் எவையும் கிடைக்கவில்லை. இன்றைக்கு 85 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே தமிழ்நாட்டில் இப்பொய்க்கால் குதிரையாட்டம் ஆடப்பட்டு வந்ததற்கான சான்றுகள் கிடைத்துள்ளன.

1¼ அடி உயரமுள்ள கட்டைகளைக் கால்களில் கட்டிக் கொண்டு, செய்தித்தாள், சாக்கு, காடாத் துணி, புளியங் கொட்டைப் பசை, பிரம்பு, இரும்புத் தகடுகள் ஆகியவற்றாலான பொய்க் குதிரைக் கூட்டை நாடாக் கயிற்றால் இணைத்து ஆடுபவரின் இடுப்பு உயரத்தில் தொங்கும்படி தோளில் தொங்க விட்டுக் கொண்டு கோந்தளம் அல்லது நையாண்டி மேள இசைக்கேற்ப ஆடுவர்.

தற்காலத்தில் தஞ்சையை அடுத்துள்ள திருவையாற்றில் வாழ்ந்த இராமகிருட்டினன் முதன் முதலில் பொய்க்கால் குதிரையாட்டத்தை நடைமுறையில் கொண்டு வந்தார்.

அடவுகள்

பொய்க்கால் குதிரையாட்டத்தில் அரசனும் அரசியும் உலா வருவது போன்ற நிலையில், ஆடுகளத்தைச் சுற்றி அரசனும் அரசியும் கம்பீரமாக மூன்று முறை நடந்து வருவர். ஆண், பெண் இருவரும் தனியாகவும் சேர்ந்தும் அடவுகளை ஆடுவர். காலில் கட்டையைக் கட்டிக் கொண்டு 30 கிலோவிற்கும் மேலுள்ள எடையைத் தோளில் சுமந்து கொண்டு நிற்கும் போது ஒரே நிலையாக நிற்க முடியாது. அங்கும், இங்கும் தாளத்திற்கு ஏற்ப அசைந்து கொண்டே ஆடுவர். இதனால் நிற்கும் பொழுதும் ஏதேனும் தூண் அல்லது ஆளைப்பிடித்துத் தான் நிற்க முடியும். பொய்க்கால் குதிரையாட்டத்தில் நடத்தல், ஓடுதல், குதித்தல், குனிதல், நிமிர்தல், கால் தூக்கி ஆடுதல், முன் புறம் செல்லுதல், பின் புறம் செல்லுதல், பக்கவாட்டுக்களில் செல்லுதல், கீழே உட்கார்ந்து எழுதல் அனைத்தும் கீழே விழாமல் சமன் செய்து ஆடுவர். மேலும் குதிரையை அடக்குவது போலவும் செய்வர். இருவரும் நேருக்கு நேர் அடவுகள் செய்தும், வட்டமாகவும் அடவுகளைச் செய்வர். பெண் ஆட்டக் கலைஞர் பல நளினமான கால் அடவுகளைச் செய்வர். மேலும் காலில் அடவுகளைச் செய்து கொண்டு, குதிரைக் கடிவாளத்தைப் பிடித்து முன்னும் பின்னும் அசைந்து ஆடுவர்.

இசைக்கருவிகள்

பொய்க்கால் குதிரையாட்டத்திற்குக் கோந்தளம் எனப்படும் இரட்டை முகத்தோல் கருவி பக்க இசையாகப் பயன்படுகிறது. மேலும் இரு தவில்கள், இரு நாகசுரங்கள், பம்பை, கிடுகிட்டி போன்ற இசைக் கருவிகள் இவ்வாட்டத்திற்குப் பக்க இசையாகப் பயன்படுகின்றன.

தமிழகத்தில் அன்றி இந்தியாவின் வேறு சில மாநிலங்களிலும் இவ்வாட்டம் ஆடப்பட்டு வருகிறது. ஆந்திர மாநிலத்தில் இந்த ஆட்டம் “கீலுகுர்ரலு” என்னும் பெயரில் வழங்கப்பட்டு வருகிறது. ஒரிசாவில் “கையுதா” எனவும் இராசசுதான் பகுதியில் “கச்சிகோடி” எனவும் வழங்கப்படுகிறது.

பொய்க்கால் குதிரையாட்டம் தமிழ்நாட்டில் திருவிழாக் காலங்களிலும், திருமண ஊர்வலங்களிலும், அரசியல் ஊர்வலங்களிலும் இடம் பெற்று ஆடப்பட்டு வருகிறது

இணைய தமிழ்


------------------------------------------------------------------------------
Analog - உவமம்
Digital - துடிமம்
Computer - கணிபொறி
CPU - மையச் செயலகம்
Memory - நினைவகம்
Keyboard - விசைப்பலகை
Monitor - திரையகம்
Mouse - சுட்டி, சொடுக்கி
Floppy Disk - நெகிழ்வட்டு
Hard Disk - நிலைவட்டு
Compact Disk - குறுவட்டு
Disk Drive - வட்டகம்
Printer - அச்சுப்பொறி
Inkjet Printer - மைஅச்சுப் பொறி
Dot Matrix Printer - புள்ளி அச்சுப்பொறி
Laser Printer - ஒளியச்சுப் பொறி
Ploter - வரைவு பொறி
Scanner - வருடு பொறி
Modem - இணைக்கி
Input - உள்ளீடு
Output - வெளியீடு
Network - பிணையம்
Internet - இணையம்
WWW - வைய விரிவலை
Website - வலையகம்
Portal - வலைவாசல்
Webpage - வலைப்பக்கம்
Webcasting - வலைபரப்பு
Netizen - வலைவாசி
Browser - உலாவி
Server - புரவன்
Client - கிளையன்
Terminal - முனையம்
Workstation - பணி நிலையம்
Node - கணு
Search Engine - தேடு பொறி
E-mail - மின் அஞ்சல்
E-Commerce - மின் வணிகம்
Download - பதிவிறக்கம்
Upload - பதிவேற்றம்
Encryption - மறையாக்கம்
Decryption - மறைவிலக்கம்
Hackers - ஊடுருவிகள்
E-Cash - மின்பணம்
IT - தகவல் தொழில்நுட்பம்
Text - உரை
Graphics - வரைகலை
Sound - ஒலி
Audio - கேட்பொலி
Video - நிகழ்படம்
Photo - நிழற்படம் / ஒளிப்படம்
Microprocessor - நுண்செயலி
ROM - அழியா நினைவகம்
RAM - நிலையா நினைவகம்
Mother Board - தாய்ப்பலகை
Expansion Slot - விரிவாக்கச் செருகுவாய்
Animation - நகர்படம்
Motion capture - அசைவுப்பதிவு
Wire freame - வலைப்புள்ளிச்சித்திரம்
Rendering - உருப்பெருதல்
Texture - புறத்தோற்றம்
Multimedia - பல்லூடகம்
Data - விவரம் / தகவல்
Column - நெடுவரிசை
Row - கிடைவரிசை
Table - அட்டவணை
Data Base - தகவல் தளம்
Word Processor - சொல் செயலி
Spread Sheet - விரிதாள்
Operating System - இயக்க முறைமை
Platform - பணித்தளம்
GUI - வரைகலைப் பணிச்சூழல்
User - பயனாளர் / பயனாளி / பயனர்
Password - நுழைசொல்
Application Package - பயன்பாட்டுப் பணித்தொகுப்பு
File - கோப்பு
Document - ஆவணம்
Directory - கோப்பகம்
Folder - கோப்புறை
Variable - மாறி
Constant - மாறிலி
Instruction - ஆணை
Command - கட்டளை
Program - செயல்வரைவு
Function - செயல்கூறு
Interpreter - ஆணைமாற்றி
Compiler - மொழிமாற்றி
Translator - மொழிபெயர்ப்பி
Binary Language - இரும மொழி
Window - சாளரம்
Menu - பட்டியல்
Icon - சின்னம் / குறும்படம்
Font - எழுத்துரு
Erase - அழி
Delete - நீக்கு
Remove - அகற்று
Format - வடிவமை / அழகமை
Virtual - மெய்நிகர்
Virtual Reality - மெய்நிகர் நடப்பு
Artificial Intelligence - செயற்கை நுண்ணறிவு
Remote Control - தூர இயக்கி
CD Player - இறுவட்டு இயக்கி
Representative - பிரதிநிதி - சார்பாளர் /சார்பாக இருப்பவர்
Democracy - ஜனநாயகம் - குடியாட்சி / மக்களாட்சி
Dictatorship - சர்வாதிகாரம் - வல்லாட்சி / அடக்குமுறையாட்சி
Dictator - சர்வாதிகாரி - வல்லாட்சியார் / அடக்கி ஆள்பவர்

நன்றி - மதிசெல்வன் மதியழகன்

What Holiday Movies Teach About Small Business


Everything you need to know about small business can be found in Frank Capra’s It’s a Wonderful Life. Well, maybe not exactly. But there must be a reason a community bank in Oregon insists employees watch the film. In a stirring speech near the beginning of the movie, hero George Bailey, portrayed by actor Jimmy Stewart, says his dad’s savings and loan is needed to provide an alternative to big business solutions. Could the same thing be said of our ventures? Read on for more about why small businesses are important and how to make them thrive.

Seasonal

Let your small business have a heart. See how small banks, like this one in Eugene, Oregon, aim to connect with their customers on a basic human level, realizing that each account represents a person or family, and that the decisions the bank makes can make a difference in the greater community. With the new year approaching, the time is right to look at how connected you are with your customers and community and how your small business can make a difference. The Register-Guard
Ringing in the new year tolls success for this niche small business. The tinkling and ringing of bells is a hallmark of the holiday season, but did you know that many of these seasonal bells are the products of just one family-owned small business? This profile shows how this one small company is working hard to put the jingle in your holidays. NPR

Strategy

Polish up your brand for the new year. Powerful branding can cut through the clutter of other businesses offering the same products or services as yours, so get out your elbow grease and put a shine on your branding with these insightful marketing tips.Network Solutions
Handle your social media responses with care! As your small business navigates the social network it’s almost unavoidable that a customer or client may “call you out” publicly when you’ve made a mistake or have somehow failed to satisfy. The trick is to respond, not react. Read how one blogger keeps her cool when faced with friction on Facebook. Bloggertone

Growth

Easy as Christmas pudding! Normally we’d say “easy as pie” when describing how simple it really is to create a LinkedIn company page for your small business. This easy to follow to-do list is already assembled, and you only have to check it once to get your LinkedIn page up and optimized today. BusinessInfoGuide.com
What are your priorities? That’s a question you should be asking your potential clients. See why understanding your client’s motivation can provide the knowledge you need to craft your pitch to show them how your product or service can help them reach their goals. BizCompare.com

Resources

We all make mistakes. Hopefully we learn from them. But you don’t need to make these social media missteps for your small business to benefit from the lessons learned. See what one blogger discovered from her worst social media screw-ups of 2011. Forewarned is forearmed! Resonance
A Google tool for after Yule. Now, in the slight lull between holidays, it might just be a good time to explore the power of the Google Keyword Tool with this helpful how-to and learn how to boost your ranking on the popular search engine for the new year.Sales Tip A Day

Marketing

Don’t let your Website be a weak sister. Many small business rock their brick-and-mortar venue, but when it comes to their online presence they miss the mark. Often customers want to see small business beat the big guys, however the same customers cringe when presented with a cluttered niche Website where they have to work too hard to get what they want. Learn why it’s paramount to make your Website a strong sibling for your offline business. The New York Times
What postal cuts mean to some entrepreneurs. Certainly, many have been calling for cutbacks at the U.S. Postal Service and, from the standpoint of fiscal responsibility, perhaps many small business owners can empathize. But for other small entrepreneurs who depend upon cheap shipping, the decision may have dire repercussions. Bloomberg Businessweek

THIS COMPANY PROVES ALL IDEAS ARE WORTH A SHOT




It may seem like your business idea is doomed from the onset. Friends and business partners may frankly state “There is no way that this one is going to fly.” Here’s the thing: sometimes in business, a significant portion is left to fate. This company heard from every one of its imminent failure. Despite this, they persevered to produce their product. Much to the surprise of many, it took off once customers got a hold of it. Find out what product it was and the story behind its unexpected success here!
Booze Business shares…
I was chatting with James Espey the other day, and the subject of Baileys' Irish Cream came up. For those of you who don’t know him or of him, suffice to say that James is a legend in the spirits industry as a very senior manager who has successfully run companies, categories and brands. In addition to creating the Keepers of the Quaich (see Sept. 28, 2010 posting) , James’ innovation history includes the invention of Malibu, significant involvement in Baileys and much more.
Anyway, the subject turned to what it takes for a brand to withstand the naysayers (generally corporate types who are risk-averse and would rather buy than create) and the prognosticators (the self-proclaimed experts at prediction of success and failure). James told me the story of a well-known industry observer who took one look at Bailey's idea and proclaimed, “That s**t will never sell.” Well, the forecast was wrong but never mind, that gent went on to make millions in the industry anyhow.
The Baileys story I had heard came from the late Jerry Mann (former Seagram CEO) right after I took over new products. His advice began with a typical Jerry Mann comment. “Listen, pal,” he said between puffs, “in this business, you never know what will sell and what won’t.”
It seems that when Jerry was running a distributor operation in California a friend called and asked for a favor, which was to buy some 5,000 cases of this new cream liqueur. He thought it was doomed for failure, but a friend asked a favour, and Jerry complied. He said, “We stuck the crap in the back of the warehouse and forgot all about it.” Then one day out of the blue, a sales manager called and informed him that retailers were clamouring for “that crap at the back of the warehouse.”
7 million cases per year later, despite ups and downs, lower priced knock-offs and diet and weight concerns, Baileys is still going strong and a truly global brand.
According to James, it was launched using a well-thought-out new product approach, a strong dedicated team, management commitment and an understanding of consumer needs and wants. Which I believe gave the brand its momentum. Once you get momentum, boys and girls, even a large bureaucratic behemoth can’t slow you down.
Get more information at Booze Business!

WHY A LANDING PAGE WILL INCREASE SALES




Website Visitors to Buyers With Landing Pages

A customer walks into your office. You give your sales pitch. The customer listens intently. She looks around at the photos on the wall and the condition of the office. She evaluates the benefits you are providing. She then makes a decision in her head to either accept your message, or not.
If she buys, it’s a conversion.
Now imagine 1,000 customers walk into your office over a year’s time, and 10 percent of those customers end up buying from you. You just converted 100 customers at a 10 percent conversion rate! That’s a good thing!
Those customers obviously appreciated your sales message, how your office looks and your overall presentation, which is why they bought from you. Now imagine if you could increase that 10 percent conversion rate to 11 percent, or 15 percent, or even 20 percent?
Wow! How much more money would you be making every year with those numbers? So you would do your best to make sure that your office was professional and clean, and your sales pitch was practiced, right?
If you’re doing it offline in sales meetings and with your printed materials, why wouldn’t you take the same care and preparation online with your website, your blog and your landing pages?
For your small business, the same sales process that happens in your office is happening online, but you may not give it as much attention as you need to.
You may be trying to sell your product or service, or get more email newsletter signups, or get more downloads of your new ebook or white paper. But if you’re not doing it the right way with high-quality landing pages, you’ll never get the conversions you need to see your conversion rate increase.
So what is a landing page? A landing page is a single Web page that appears in response to clicking on an advertisement. The landing page will usually display directed sales copy that is a logical extension of the advertisement or link.
  • A landing page is not your website.
  • A landing page should not have website navigation.
Continue reading this article at SmallBizTrends.com after the break