Search This Blog

Thursday, July 28, 2011

ஓய்வு நேரத்தில் பணம் பண்ணலாம் வாங்க...



வரப்புயர  ! அவ்வையார் அந்த காலத்திலேயே ஒரு மன்னனை , அதியமான்  னு நினைக்கிறேன்..  வாழ்த்த இந்த வார்த்தையை  சொன்னாங்க. இந்த ஒரே வார்த்தையிலேயே .. அந்த மன்னனுக்கு தேவையான வாழ்த்து கிடைச்சிடிச்சு .. 

வரப்புயர நீர் உயரும்.. நீர் உயர நெல் உயரும். நெல் உயர குடி - ( அந்த குடி இல்லீங்கண்ணா ) மக்கள் வாழ்க்கை உயரும். குடி உயர கோன் (அரசன்) உயர்வான் ...  இதே மாதிரி தான் சார்.. நம்ம வாழ்க்கையும் உயரணும்..  

முதல்லே உங்க மனைவி, குழந்தைகள் , பெற்றோர் நல்லா இருக்கணும். நீங்க இவங்களை நல்லா கவனிச்சுக்கணும். முக்கியமா இவங்க உங்களை மதிக்கணும் . புஜ பல பராக்கிரமம் இங்கே எடுபடாது. பயம் வேற . மதிப்பு வேற. அதுக்கு நீங்க திறமை சாலியா இருக்கணும். 

ஆம்பளைக்கு மதிப்பு எப்போ வருது ? அவர் பணம் சம்பாதிக்கிற திறமைலே வருது.. பணம் நியாயமா, நேர்மையா சம்பாதிக்கணும்.. அடுத்தவங்க வயித்துலே அடிச்சு , சம்பாதிக்க கூடாது.. அப்படி வர்ற பணம் , உங்களை மட்டும் இல்லாம , உங்க தலை முறையவே பாதிக்கும்..

சரி, நாம படிச்ச படிப்புக்கு ஏற்ப ஒவ்வொருத்தரும், ஒரு வேலை , இல்லை சொந்த தொழில் னு சம்பாதிக்க முயற்சி பண்றோம்.. இதை தாண்டி என்ன பண்ணலாம் னு யோசிக்கிறப்போ தான்.... இந்த " ஓய்வு நேரத்தில்  பணம் பண்ற வித்தைகளைப் " பத்தி - எனக்கு தெரிஞ்ச வரைக்கும் உங்க கிட்டே பகிர்ந்துக்கலாம்னு ஐடியா வந்தது.. இதிலே பல வகைகளைப் பார்க்க விருக்கிறோம். உங்களுக்கு எது சூட் ஆகுதோ , அதை நீங்க எடுத்துக்கலாம். .... !

சரி , இந்த " வரப்புயர " எதுக்கு சொல்ல வந்தேன்னா , ஒரு அஞ்சு வருஷம் முன்னாலே , வேலை சம்பந்தமா பரிதாபாத் லே ஒரு கம்பெனிக்கு  போயிருந்தேன் . ஒரு பிசினெஸ் டீல். பெரிய கிரேன் உற்பத்தி செய்ற கம்பெனி. அந்த கம்பெனி சேர்மன் பையன் - மோஹித் குலாட்டினு பெயர். வெரி எங் . முப்பது வயசு தான் இருக்கும். எல்லாம் பேசி முடிச்சிட்டு சாயந்திரம் டின்னேர்லே பேசுறப்போ , " மோஹித் , லைப் லே என்ன எய்ம் வைச்சு இருக்கிறீங்க ?" னு கேட்டேன்.  சொன்ன பதில். சும்மா நச்சுனு இருந்தது. "ரொம்ப சிம்பிள் பாஸ். கியூட் டா , ஒரு மெர்சிடிஸ் நான் சம்பாதிச்சு வாங்கணும் , அப்புறம் இதோ - "black Label " தினம் ஒன்னு , நண்பர்கள் கூட உக்கார்ந்து சாப்பிட உடம்பு வெச்சுக்கணும் " னு அந்த விஸ்கி பாட்டில் காமிச்சாரு. அந்த விஸ்கி எப்படியும் ஒரு ஏழு ஆயிரம்னு நினைக்கிறேன் விலை. 

கொஞ்சம் யோசிச்சுப் பாருங்க.  தினம் ஒரு பத்து ஆயிரம் செலவு பண்ண , நீங்க ஒரு அம்பதாயிரமாவது சம்பாதிக்கணும். ஒரு  மெர்சிடிஸ் கார் வாங்க - ஒரு முப்பது லட்சம் குறைஞ்சது வேணும். அந்த கார் பார்க் பண்ண , ஒரு நல்ல வீடு வேணும்.. உங்க கையிலே ஒரு கோடி இருந்தா , இதைப் பத்தி எல்லாம் யோசிக்கலாம்.  ம்ம்ம்..

தினம் விஸ்கி லிமிட்டா சாப்பிட , உடம்பு பலம் வேணும் . உங்க உடம்பை நீங்க மதிச்சு , தினம் ஒரு மணி நேரமாவது உடற் பயிற்சி செய்யனும்.   இது எல்லாத்துக்கும் - மேலே எல்லோருக்கும் கிடைச்சு இருக்கிற அந்த 24 மணி நேரத்தை - பக்காவா திட்டமிட்டு வேலைகளை செய்யனும்..   நமக்கும் இந்த மாதிரி நச்சுனு ஒரு Aim , லட்சியம் , இலக்கு இருக்கணும். இன்னும் அஞ்சு வருஷம் கழிச்சு - நாமே எப்படி இருக்கப்போறோம் கிறதை - இப்போ இருந்தே திட்டமிட்டு - க்ளியரா மூவ் பண்ணனும்..

நானும் , யோசிச்சுப் பார்த்தேன்.. அந்த பையன் நினைச்சு இருந்தா , அவருக்கு இருக்கிற வசதிக்கு பென்ஸ் வாங்கிடலாம். ஆனா, தானே சம்பாதிச்சு வாங்கனும்னு சொன்னது ரொம்ப பிடிச்சு இருந்தது. ஏன், என்னாலே வாங்க முடியாது ? அஞ்சு வருஷம் வேண்டாம்.. ஐயா, ஒரு பத்து வருஷம்.. ! why not ? முடியுமே.. இலக்கு வைச்சாச்சு..ஆண்டவன் அனுக்கிரகம் கிடைக்கணும். பார்ப்போம்..

பணம்  , பணம்னு இந்த உலகமே  ஓடுதே.. நாம ஏன் அந்த மாதிரி போகணும்.. கிடைச்சதை வைச்சு நிம்மதியா இருக்க முடியாதா? ஏன், முடியாது.. ? முடியும்.. ஆனா, உங்களுக்கு சம்பாதிக்கிற திறமை இருந்தா, அதை ஏன் சார் நீங்க utilise பண்ணக் கூடாது..? ஐயா , உங்களுக்கு காசு வேண்டாம்.. நீங்க நல்ல விதமா சம்பாதிச்ச காசு , உங்க புள்ளை குட்டி அனுபவிக்கட்டுமே.. அதுக்கு அப்புறம், நிம்மதியா , முழு நேரமா கோவில் , குளம்னு போங்க.. குடும்பத்தை இன்னும் நல்லா , அக்கறையா கவனிங்க.. அதுக்கு முன்னே.. நிறைய சம்பாதிங்க..! சரியா?
http://t3.gstatic.com/images?q=tbn:ANd9GcSSLfwlr6jQpfU3AxPWdVVQh4eE4I_D1zgUlB2dgHv_EcNzEIrWHA
சரி, இப்போ இன்னொரு நண்பரை பத்தி சொல்றேன். கர்நாடகாவிலே ஒரு ஆட்டோ மொபைல் கம்பெனிக்காக சர்வீஸ் என்ஜினியரா இருக்கிறாரு.வயசு முப்பதுக்குள்ளே தான் இருக்கும். படிச்சது  டிப்ளோமா மெக்கானிக்கல் . பத்து வருஷம் experience . சம்பளம் ஒரு முப்பது  ஆயிரம்  கையிலே  வருது. போன மாசம் ,  ஹூப்ளி ஒரு வேலையா போயிருந்தப்போ , மீட் பண்ணினோம்..

ரெண்டு மாசம் முன்னாலே , புது டொயட்டோ இனோவா கார் வாங்கி இருக்கிறாரு. 14 லட்சம்.  பக்காவா  T - போர்டு வாங்கி , டிராவல்ஸ் ஓடுது. அவர் வாங்குற சம்பளத்துக்கு - கண்டிப்பா வாய்ப்பு கம்மி தான். ஏன், லோன் கூட கஷ்டம் தான். எனக்கு ஒரே ஆச்சர்யம். எப்படின்னு கேட்டேன்.. ? நம்ம கம்பெனி சம்பளம் தவிர , மாசத்துக்கு - 40 ஆயிரம் சம்பாதிக்கிறேன் சார் . வார வாரம் - 10 ஆயிரம் வரும். அப்படி ஒரு வாய்ப்பு. ஒரு வருஷமா, அந்த காசு தொடவே இல்லை. அதுலே ஒரு ஆறு லட்சம் இருந்தது. மீதிக்கு லோன் போட்டேன். இதுக்கு மேலே டியூ கட்டவும் , அந்த மாதிரி வர்ற காசுலே இருந்து தான். சம்பளத்தை தொடப்போறது இல்லே.  டிராவல்ஸ்லே வர்ற காசு வைச்சு - ஒரு டெம்போ டிராவலர் வாங்கணும்.  ஒரு நாலு வருஷம் சார்.. பெங்களூர் லே ஒரு வீடு வாங்கணும். அவுட்டர்லே ஒரு நாலு ஏக்கர் தோப்பு வாங்கணும்.. அதுக்கு அப்புறம் டிராவல்ஸ் மட்டும் பார்த்துக்கிட்டு - நிம்மதியா வீட்டோட இருக்கணும். என்னோட வண்டிகளுக்கு , சர்வீஸ் மெயிண்டனன்ஸ் பார்க்கிறதுக்கு ஒரு ஒர்க் ஷாப் ஆரம்பிக்கணும். அப்படியே சைடு பை சைடு மத்த வண்டிகளுக்கும் பார்க்க ஆரம்பிக்கலாம். அது போதுமே சார்.. நம்ம கையிலே தொழில் இருக்கு ... வேற என்ன சார் வேணும்..? 

எப்படி , இந்த மாதிரி உனக்கு தோணிச்சுன்னு கேட்டேன்.. ? " சார், நீங்களே சொல்லுங்க. மாச மாசம் டார்கெட் கொடுக்கிறீங்க. குட்டிக்கரணம் அடிச்சாதான் , அதுக்கிட்டே போக முடியும். டார்கெட் ரீச் ஆயிட்டா பரவா இல்லை. இல்லைனா, ஒரு அஞ்சு நாளைக்கு தினம் உங்களுக்கு டைம் கிடைக்கிறப்போ எல்லாம் திட்டுவீங்க. நான் நாலு பேர்கிட்டே  எரிஞ்சு விழனும்.. எதுக்கு இந்த பொழைப்பு னு தோணிச்சு ?

எத்தனை நாள் கம்பெனிக்கு வேலை பார்த்துக்கிட்டு இருக்க முடியும்? நீங்க எந்த கம்பெனி க்கு வேலை பார்த்தாலும், உங்க சம்பளம் கூட , கூட , உங்க முதுகு குனிய ஆரம்பிக்கும். வேற வழி கிடையாது பாஸ்.  பாட்டு வாங்கித்தான் ஆகணும்,... கம்பெனி சேர்மன் கிட்ட அதிகமா " ஏத்து " வாங்குறது , அந்த கம்பெனியிலேயே அதிகமா சம்பளம் வாங்குற GM  மா தான் இருப்பார். அவர் வாங்கினதை , இன்னொரு ஆளுக்கு  பாஸ் பண்ண , அவர் நாலு பேருக்கு பாஸ் பண்ண - கடைசி வேலை பார்க்கிறது ஒரு பத்து பேரா இருக்கும்.   சம்பளம் வருது .. கை நிறைய வருது.. ஆனா , அதை வைச்சுக்கிட்டு எத்தனை பேர் சந்தோசமா , குடும்பத்துக்கு டைம் ஸ்பென்ட் பண்ண முடியுது ?  அதனாலே வேற ஏதாவது பண்ணனும்னு தோணிச்சு ...

கிரேட் யார்.. லவ்லி ! ஆல் தி பெஸ்ட் னு வாழ்த்து சொல்லிட்டு வந்தேன்.. நான் செய்ய தவறுனதை , கண் முன்னே நம்ம ஆளு ஒருத்தன் பண்றானேனு ஒரு சந்தோசம்... !!

சரி , அந்த வாரம் பத்து ஆயிரம் எப்படி வருதுன்னு சொல்லவே இல்லையே.. ! சொன்ன விஷயம் என்ன தெரியுமா?  சப்பை மேட்டருன்னு நான் எக்கச்சக்கமான பேருக்கு சொன்ன விஷயம். ... ! நான் சொன்னா , நீங்களே அட போங்க சார் னு சொல்லுவீங்க..!   எல்லாமே பெரிய பெரிய டுபாக்கூர் விஷயம்னு சொல்வீங்க. ...! 


RMP னு ஒரு விஷயம் கேள்விப்பட்டு இருக்கீங்களா? MLM ( Multi level marketing ) கான்செப்ட் தான். Detail லா ஒரு அரை மணி நேரம் அதைப் பத்தி சொன்னாரு. இனிசியல் ல ஒரு எட்டு ஆயிரம் இன்வெஸ்ட் பண்ணினாராம். பண்ணினதும் உங்களுக்கு மெம்பர்ஷிப் கார்ட் கொடுப்பாங்க. அதிலே நிறைய products இருக்கு. எட்டு ஆயிரம் மதிப்புக்கு நீங்க உங்களுக்கு தேவையான பொருள் வாங்கிக்கலாம். நீங்க கொடுத்த வேல்யூ க்கு ஒரு 80 % வொர்த்  தாவது அந்த மெட்டீரியல்  இருக்கும்னு வைச்சுக்கோங்களேன்..   அவரு ஒரு ரெண்டு பேரை join பண்ணி விடனும்.  லெப்ட் - ரைட் join பண்ணினா உங்களுக்கு ஆயிரம் ரூபாய் கிடைக்குமாம். அந்த ரெண்டு பெரும் எவ்வளவு பேரை சேர்க்கிறாங்களோ  , அதுக்கும் உங்களுக்கு பைசா வருமாம். இப்படியே add ஆகிக்கிட்டே  போகுது.. 

வார வாரம் பேமென்ட் வருமாம். ஒரு குறிப்பிட்ட லெவல் தாண்டினதும் , நீங்க diamond லெவலோ  , ஏதோ சொல்றாங்க. அது வந்தாச்சுனா , மாசம் உங்களுக்கு அம்பதாயிரம் வந்துக்கிட்டே இருக்குமாம். என்னமா திங்க்  பண்ணுறாங்க  ..? 


நம்ம ஆளு சேர்த்து விட்ட ரெண்டு பெரும் தீயா வேலை செய்ற ஆளுங்க போலே. பட்டையை கெளப்பி இருக்காங்க. எல்லாத்துக்கும் மேல நேரம் நல்லா இருந்து இருக்கு.. பின்னிப் பெடல் எடுக்கிறாங்க. இவரும் தனக்கு தெரிஞ்சவங்க, போனவங்க , வந்தவங்கனு முடின அளவுக்கு சேர்த்து விட்டிருக்கார்.   இது வரைக்கும் அவருக்கு கீழே 256 pair இருக்கிறாங்களாம். இதிலே ஒரு 20 % active ஆ இருந்தாலே போதும்.. உங்களுக்கு பைசா வந்துக்கிட்டே இருக்கும்னு சொல்றாப்ல.   என்ன , முதல் லே சேர்வங்களுக்கு ஈஸி . Circuit நீளமாக ஆக உங்களுக்கு நல்லது. 


இன்னும் கொஞ்சம் விசாரிச்சா , SPEAK ASIA , AUM GLOBAL னு நிறைய இருக்குது.. அதை எல்லாம் பின்னாலே பார்ப்போம்.. ! 


திருமணத்தடையை நீக்கிய ஓம்சிவசிவஓம் நாம ஜெபம்

!



சுமார் 16 ஆண்டுகளாக வரன் பார்த்து சலித்துப்போய் விட்டதால்,அந்த கன்னிப்பெண்ணின் வீட்டில் வருத்தப்படாத நாளே இல்லை;நமது தலைவிதி அவ்வளவுதான் என முடிவு செய்திருந்த வேளையில் எனது நண்பரும்,ஆன்மீகக்கடல் வாசகருமாகிய ஒருவர்,ஓம்சிவசிவஓம் மந்திர ஜபத்தின் மகிமையையும்,ஜபிக்கும் விதத்தையும்,1,00,000 முறை ஜபிப்பதால் ஏற்படும் நன்மைகளையும் விவரித்திருக்கிறார்.

சில நாட்கள் சிந்தித்த அந்த கன்னிப்பெண்,ஒரு அமாவாசையைத் தேர்ந்தெடுத்தாள்.மஞ்சள் நிற விரிப்பு,மூன்று ருத்ராட்சங்கள் வாங்கிக்கொண்டார்.தினமும் காலை 4 மணி முதல் காலை 7 மணி வரையிலும்,இரவு 7 மணி முதல் 11 மணி வரையிலும் ஓம்சிவசிவஓம் ஜபித்துவந்தார்.கூடவே, தனது ஜப எண்ணிக்கையையும் குறித்துக்கொண்டு வந்திருக்கிறார்.வெறும் 14 நாட்களில் அந்த கன்னியின் ஓம்சிவசிவஓம் ஜப எண்ணிக்கை 1,00,008 ஐக் கடந்துவிட்டது.

15 ஆம் நாள் அதிகாலையில் அந்த கன்னிப்பெண்ணின் வீட்டுவாசலில் ஒரு சிகப்பு நிற பசுவும்,ஒரு வெள்ளை நிறப்பசுவும் வந்து தலையை ஆட்டிக்கொண்டே இருந்ததாம்.அதன் கழுத்துகளில் இருந்த மணிச்சத்தம் கேட்டுக்கொண்டே இருக்க,ஓம்சிவசிவஓம் ஜபித்துக்கொண்டிருந்த அந்த கன்னி,வீட்டுக்கு வெளியே வந்து அந்த பசுக்களை விரட்டியும் அவை போகவில்லை;சுமார் ஒரு மணிநேரம் கழித்தப்பின்னரே,அவை தாமாக புறப்பட்டுச்சென்றன.

16 ஆம் நாள் அந்த கன்னிக்கு திருமணம் நிச்சயமானது.இன்று அந்த கன்னி செல்வச்செழிப்பான,அன்பான கணவனை அடைந்திருக்கிறாள்.மணமாகும்போது அந்தக் கன்னியின் வயது 37!

இறைத்தொண்டில், 

அன்பன் . கே. வீரமுனி 
ஓம்சிவசிவஓம்


Read more: http://www.livingextra.com/2011/07/blog-post_2418.html#ixzz1TNG9FMUR

பரிகாரங்களில் மிகச் சிறந்த, அனைத்து தடைகளையும் உடைத்து , உடனடி முன்னேற்றம் தர விஜயாபதி , நவகலச யாகம் !

image https://dheivegam.com
நமது ஜோதிட பாடம் பயிலும் வாசகர்கள் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயத்தை - உங்களிடம் இன்று பகிர்ந்து கொள்ள விருக்கிறேன். மிக முக்கியமான கட்டுரை. திலா ஹோமம் , ராமேஸ்வரத்தில் செய்வதைக் காட்டிலும், பல மடங்கு பயனுள்ள , உங்களின் பூர்வ ஜென்ம பாவங்களை பூரணமாக கரைக்க - ஒரு அதி அற்புத பரிகார ஸ்தலம் - இந்த விஜயாபதி. ப்ரம்ம ரிஷி , ராஜ ரிஷியான விஸ்வாமித்ர மகரிஷி - நெடு நாட்கள் தங்கியிருந்த ஸ்தலம். 



எத்தனையோ பரிகாரங்கள் செய்தும், கடும் தோஷத்தால் அவதிப்படும் ஆத்மாக்களுக்கு - ஒரு மாபெரும் வரப் பிரசாதம் விஜயாபதி. இங்கு வந்து நவகலச யாகம் செய்த பலருக்கு , பூர்வ ஜென்ம ஞாபகங்கள் வருகிறதாம். 
நவகலச யாகம் செய்பவர்களுக்கு 64 வகையான தோஷங்கள் நிவர்த்தி ஆகின்றன.நீங்கள் ஜாதகம் பார்க்கும் நபர்களுக்கு , கீழே குறிப்பிடும் அறிகுறிகள் , அமைப்பு இருந்தால் - நீங்கள் தாரளமாக பரிந்துரை செய்யலாம். !

ஆணெனில் 31 வயதுக்குள்ளும்,பெண் எனில் 27 வயதுக்குள்ளும் திருமணம் முடிந்துவிட்டால்,அது திருமணத் தடையென்று எடுத்துக்கொள்ள முடியாது.இந்த வயது எல்லை அதிகபட்ச எல்லையாகும். ஆனால்,நடைமுறையில் பல ஆயிரக்கணக்கான இளைஞர்கள், இளம் பெண்களுக்கு திருமணம் ஏதாவது ஒரு காரணத்தினால் தாமதமாகிக் கொண்டே செல்கிறது.முறைப்படி வரன் பார்த்தும்கூட ஏழு ஆண்டுகள்,பத்தாண்டுகளாக வரனைத் தேடிக்கொண்டே இருப்பவர்களுக்கு சிறந்த,செலவு குறைந்த தோஷப்பரிகாரமாக விஜயாபதி நவகலச யாகம் இருக்கிறது.


திருமணமாகி நான்கு ஆண்டுகளுக்குள் கருவுற்றாலே புத்திர தோஷம் இல்லை என்று பொருள்.பல தம்பதிகளுக்கு கருவுறுதல் கூட நடைபெறுவதில்லை;இப்படிப்பட்ட தம்பதியரின் ஜனன ஜாதகங்களை ஆராய்ந்து பார்த்தால் யாராவது ஒருவருக்கு புத்திர தோஷம் இருக்கும்.புத்திர தோஷம் கடந்த ஏழு முற்பிறவிகளில் செய்த கடுமையான கர்மவினையின் /வினைகளின் விளைவாக புத்திர தோஷத்தை உருவாக்குகிறது.இந்த புத்திர தோஷம் நீங்கவும் விஜயாபதியின் நவகலச யாகம் சிறந்த பரிகாரமாக அமைந்திருக்கிறது.

லக்னத்துக்கு , ஒன்று ,  மூன்று,ஐந்து, ஏழு , ஒன்பது, பதினொன்றாம்  இடங்களில் இராகு அல்லது கேது ஒருவரின் பிறந்த ஜாதகத்தில் இருந்தாலே அது பிதுர்தோஷம் ஆகும்.இது உரிய ஜாதகரின் வாழ்க்கையில் திருமணத்தடை,புத்திர பிறப்புத் தடை,அரசுப்பணியில் சேர இயலாமை,சொந்த வீடு வாங்கவோ/கட்டவோ இயலாமை; நல்ல வாழ்க்கைத் திருப்புமுனைகளை அனுபவிக்க இயலாமல் போகுதல்;குடும்பத்தில் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடாமல் இருப்பது போன்றவைகளால் தினசரி வாழ்க்கையே போராட்டமாகிவிடும்.இந்த நிலை நீங்கிட, விஜயாபதியில் நவகலச யாகம் செய்வது அவசியம்.

ஒருவரின் பிறந்த ஜாதகத்தில் சனியும் செவ்வாயும் ஒரே ராசியில் இருந்தாலும்,ஒருவரை ஒருவர் ஏழாம் ராசியில் பார்த்தாலும் அது நான்கு தலைமுறைவரையிலும் சொத்துக்காக சண்டைபோட்டு அதன் சாபத்தை அனுபவிப்பதைக் காட்டுகிறது.இந்த கிரகநிலையுள்ள ஜாதகர் எந்த ஒரு சிறு முன்னேற்றத்திற்கும் கடுமையாகப் போராடவேண்டிய நிர்ப்பந்தம் இருக்கும்.இந்த நிலை வாழ்நாள் முழுக்கத் தொடரும்.இந்த சூழ்நிலையை மாற்றி வாழ்க்கையில் நல்ல விரைவான முன்னேற்றம் காண விஜயாபதியில் நவகலசயாகம் செய்துகொள்வது நன்று.

இராமாயணகாலத்தில் தாடகையை கொன்றதாலும்,அதன்பிறகு சிறந்த சிவபக்தன் இராவணனை வதம் செய்ததாலும் ஏற்பட்ட பிரம்ம ஹத்தி தோஷம்,தந்தை தசரதனின் பேச்சை மீறி வந்ததால் ஏற்பட்ட பிதுர் தோஷம் போன்றவை நீங்கிட, விஸ்வாமித்ர மகரிஷியால் முதன்முதலில் தில்லைவன காளியம்மாள் குடியிருக்கும் விஜயாபதியில் நவகலசயாகம்
ஸ்ரீஇராமபிரானுக்கு செய்யப்பட்டது.

ஆக,இந்த கோவிலும் கிராமமும் யுகங்களைத் தாண்டி இருக்கின்றன. .

இங்கே,நவகலச யாகம் செய்ய மதியம் 12 மணிக்குள் வந்துவிடவேண்டும். இறங்குபொழுது எனப்படும் மதியம் 12 மணிக்குப் பிறகு நவகலச யாகம் செய்வதால்,நமது அனைத்து தோஷங்களும் நாசமடைந்துவிடும்.

ஒன்பது கலசங்களில் ஒன்பதுவிதமான திரவப்பொருட்களை நிரப்பி, நவக்கிரகங்களை ஆவாஹனம் செய்து, மந்திரங்களை ஓதி, இங்கிருக்கும் வில்வ மரத்தடியில் இந்த ஒன்பது கலச நீர்களும் உரிய ஜாதகரின் தலையில் ஊற்றுவார்கள்.அதன் பிறகு,அந்த ஈர ஆடையோடு, ஒரு பர்லாங்கு தூரத்தில் இருக்கும் கடலுக்குச் சென்று கடலில் நீராட வேண்டும். நீராடிய  பின்னர், கடற்கரை மணலில் நெற்றி கடற்கரையில் படுமாறு இடது பக்கம் மூன்று முறையும்,வலது பக்கம் மூன்று முறையும் (மனதுக்குள் ஓம்சிவசிவஓம் என ஜபித்தவாறே) உருள வேண்டும்.அதன் பிறகு,மீண்டும் கடலில் சென்று நீராட வேண்டும்.இப்படி மூன்று முறை செய்ய வேண்டும்.இப்படிச் செய்த பின்னர்,கோவில் பூசாரி ஒரு எலுமிச்சை பழத்தினால் நம்மை திருஷ்டி சுற்றிவிட்டு,அந்த எலுமிச்சையை கடலுக்குள் எறிந்துவிடுவார்.நாம் அணிந்திருந்த ஆடையை கழற்றி,(வேறு ஆடை அணிந்துவிட்டு) அதை கடலில் எறிந்துவிடவேண்டும்.

உடனே,கடற்கரையிலிருந்து அரை பர்லாங்கு தூரத்தில் இருக்கும் தில்லைவனக் காளியம்மன் கோவில் வரை திரும்பிப் பார்க்காமல் வந்தடையவேண்டும்.

தில்லை வனகாளிக்கு பூஜை செய்து இனிப்புகள்,எள் பதார்த்தம்,பழங்களை அங்கிருப்பவர்களிடம் விநியோகிக்க வேண்டும்.நவகலச யாகம் முற்றுப்பெறும்.உடனே, வேறு எந்த கோவிலுக்கும்,யாருடைய வீட்டுக்கும் செல்லாமல் நேராக நம்முடைய வீட்டுக்குச் செல்ல வேண்டும்.இப்படிச் செய்வதால்,நமது 64 விதமான தோஷங்கள் நீங்கிவிடும்.இந்த தோஷங்களில் பிரேத சாபம்,நவக்கிரக சாபம்,குரு சாபம்,குல தெய்வ சாபம் நீங்கும்.

ஒரு முறை நவகலசயாகம் செய்ய மொத்தம் சுமார் ரூ.4000/-  வரை செலவு ஆகும். ஆகும்.இந்த நவகலச யாகத்தினை குரு தட்சிணை எதுவும் வாங்காமல் செய்து வருபவர் தெய்வத்திரு . ஆன்மீக செம்மல் ஐயா. மிஸ்டிக். செல்வம் அவர்களின் நேரடி சீடர்களில் ஒருவரான ,  திரு.சிவ.மாரியப்பன் அவர்கள் ஆவார்.இவர் நெல்லை மாவட்டம் புளியங்குடியில் வசித்து வருகிறார்.


விஜயாபதி நெல்லை குமரி நெடுஞ்சாலையில் வள்ளியூரிலிருந்து பிரிந்து ராதாபுரம் என்னும் ஊருக்குச் சென்று அங்கிருந்து 10 கிலோ மீட்டர்கள் தூரத்தில் கடலோரமாக அமைந்திருக்கும் கிராமம் ஆகும்.கன்னியாகுமரியில் முக்கடலும் சங்கமிப்பதாக சொல்லுவார்கள்.அது ஒரளவே உண்மை.நிஜத்தில் இந்த விஜயாபதியில் தான் முக்கடலும் (வங்காள விரிகுடா,இந்து மகா சமுத்திரம்,அரபிக்கடல்) சங்கமிக்கிறது. இந்த நவகலச யாகம் செய்ய விரும்புவோர் புளியங்குடியிலிருந்து விஜயாபதிக்கு தமது சொந்தச் செலவில் கார் ஏற்பாடு  செய்து கொண்டால் நல்லது. போக்குவரத்து வசதி கொஞ்சம் குறைவுதான்.

தோஷமுள்ள ஜாதகர் தமது குடும்பத்தோடு விஜயாபதிக்கு வந்து நவகலச யாகம் செய்வது நல்லது; தவிர்க்க இயலாதவர்கள் தனியாகவும் வரலாம்.மேலும் விபரமறிய திரு.சிவ.மாரியப்பன் அவர்கள்,புளியங்குடி-9677696967.இவரை தாங்கள் மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் எல்லா நாட்களிலும் தொடர்புகொண்டு பேசலாம்.

ஓம்சிவசிவஓம்.........

ஆசைப் பட்டதை அடைவது எப்படி? - ஒரு அற்புத , ஆன்மீக வழிகாட்டுதல் மந்திரங்கள்



திடீரென்று , ஒரு மலையாள பத்திரிகை கொடுத்து படிக்க சொன்னால் , உங்களால் படிக்க முடியுமா? முடியாது இல்லையா... ஏன்? மலையாளம் படிக்கலை , அதனாலே நமக்கு புரியலை. அந்த மாதிரி இறைவன் ஒருவர் இருக்கிறதை நாம உணர்றதுக்கு நமக்கு உதவுவது தான் , கோவில்கள் , மந்திரங்கள், தியானம் இப்படிப் பல விஷயங்கள். 


நீங்க ட்ரெயின்லே போய்க்கிட்டு இருக்கிறீங்க . உங்களுக்கு ஹிந்தி தெரியும்னு வைச்சுப்போம்.. பக்கத்திலே ரெண்டு பேர் ஹிந்தி பேசுறாங்க.. 
என்னதான் நீங்க ஒரு புத்தகத்தை படிச்சுக்கிட்டு இருந்தாலும், உங்க காது , மனசு அவங்க பேசுறதை கவனிக்க ஆரம்பிக்கும்.. இல்லையா?  நீங்க எதோ ஒரு வேலையா இருக்கிறீங்க ... அப்போ , உங்க பேர் சொல்லி , யாரோ ஒருவர் கூப்பிட்டதும், திரும்பி பார்க்கிறீங்க இல்லையா? 

அதே மாதிரி - இறைவனை , அவனது கோவிலில் சென்று , நீங்கள் இந்த மந்திரங்கள் சொல்லி அழைக்கும்போது - அவனும் உங்களுக்கு செவி சாய்ப்பான்.. ராகு கால வேளையில் - லலிதா சஸ்ரநாமமோ, அல்லது சிவ ஆலயங்களில் ஸ்ரீ ருத்ரமோ, சமகமோ சொல்லும்போது - நீங்கள் அந்த பரம்பொருளால் நேரடியாக கவனிக்கப்படுவீர்கள்..... இது போதாதா ?

கடவுளை எப்படி வேண்டுவது? 

உங்கள் தீராத பிரச்னைகளை , தீர்க்க சொல்லி - மனதில் மன்றாடுங்கள். உங்கள் குழந்தை ஒரு சில விஷயங்களில் அடம் பிடிக்குமே. சமயத்தில் , அந்த குழந்தை கேட்காமலே வாங்கி கொடுப்பீர்கள். சமயத்தில் , அது அழுது , முரண்டு பிடித்தாலும் - உங்களுக்கு அதை நிறைவேற்ற சக்தி இருந்தால் வாங்கி தருவீர்கள். இல்லையெனில் , உங்கள் இயலாமை , அந்த குழந்தைக்கு முதுகில் ஒரு அடியாக வெளிப்படும். அடித்த பிறகு , உங்களுக்கும் மனசு வலிக்குமே... !

இதில் ஒன்றை கவனியுங்கள். வேண்டும் ஒரு விஷயம் , கிடைக்க வேண்டும் என்பதற்காக - குழந்தை உங்கள் கவனத்தை திருப்புகிறது. அதற்குத் தெரியும், நீங்கள் மனது வைத்தால்... அந்த ஆசையை நிறைவேற்ற முடியும். அந்த கோரிக்கை , நியாயமானது எனில், நீங்கள் உடனே இல்லையெனினும், விரைவில் அந்த ஆசையை பூர்த்தி செய்ய முயலுவீர்கள்.. பிற்காலத்தில், ஒரு சில கெடுதல் ஏற்படும் விஷயங்கள்  , என்று இருந்தால் - எப்பாடு பட்டாவது , அதை தடுக்க முயல்வீர்கள்.. இல்லையா? 

அதே தான் சார்.. உங்கள் கோரிக்கை என்னவென்று மனதுக்குள் வேண்டுங்கள்.. கச்சா முச்சான்னு இருக்க வேண்டாம்.. ஒரே விஷயம்.. நியாயமான கோரிக்கையா இருக்கட்டும்.. ! 
உங்கள் ஆசையை நிறைவேற்ற யார் இருக்கிறா ? உங்கள் இஷ்ட தெய்வம்.. 

எப்படி , அந்த தெய்வத்தோட கவனத்தை உங்க மேல திருப்பப் போறீங்க? 
அடிக்கடி அந்த தெய்வத்தோட சன்னதிலே போய் நில்லுங்க.. பதிகம் பாடுங்க, ஸ்லோகம் சொல்லுங்க..  விரதம் இருங்க... ! மந்திரங்கள் எனக்கு புரியலையே என்று நீங்கள் வருத்தப்படாதீர்கள்.. I need something to eat ... என்று நீங்கள் புரியாமல் சொன்னால் கூட ,  ஆங்கிலம் தெரிந்த உங்கள் நண்பர் , உங்களுக்கு சாப்பிட ஏற்பாடு செய்வார்.. இந்த மந்திரங்கள் அனைத்தும், அவன் அருளால் , அவன் பக்தர்களுக்கு - சில நற்காரிய , காரணங்களுக்காக உருவானவையே.. ! அவனுக்கு இதன் அர்த்தம் நன்றாகவே புரியும் !

ஒரு ஆபீஸ்ல ப்ரோமோசன் வாங்குறதுக்கு நீங்க என்ன பாடு எல்லாம் படுறீங்க..? எவ்வளவு வித்தை எல்லாம் செய்யுறீங்க.. அதுக்கு அப்புறம்  நீங்க தகுதி வாய்ந்தவர்ங்கிறதை அவங்க உணர்ந்துட்டா , உங்களுக்கு பதவி உயர்வு கிடைக்குது இல்லையா?  அதே மாதிரி அத்தனை வித்தையையும், கடவுள் கிட்டேயும் நீங்க காட்டனும். 

கண்டிப்பாக திறமை மதிக்கப்படுவது போலே , உங்களுக்கும் இறைவன் முழு கருணை அளிப்பான்...  சற்று தாமதம் ஆகலாம் .. ஆனால் , வெகுமதி நிச்சயம்.. நீங்கள் அவன் குழந்தை.. உங்களை ஏங்க வைத்து , அவன் சந்தோசம் அடையப்போவது இல்லை.. 

உங்கள் பெற்ற தாயிடம் வேண்டுவது போல , உரிமையுடன் - அந்த உலக மாதாவிடம் கேளுங்கள்.. ! தாய்க்கு கருணை ரொம்ப அதிகம்.. ! ஒரு எறும்பு , குருவி மேல் கூட பாசம் வைக்கும் அன்னை , உங்கள் மேல் இன்னும் பாசமுடன் இருப்பாள். 

தந்தை , உங்கள் திறமைக்கு ஏற்ப கொடுப்பவர். அதனால் , உங்கள் திறமையையும் வளர்த்துக் கொள்ளுங்கள்.. நீங்கள் எந்த துறையில் இருந்தாலும், அந்த துறையில் வல்லவராக முயற்சி செய்யுங்கள்..  குழந்தை திறமை சாலி எனில், முதல் ஆளாக ஊக்குவிப்பது தந்தை தான்.. !

என்ன தான் உமை அன்பைப் பொழிந்தாலும், ஈசன் உங்கள் திறமை வளர்க்க சந்தர்ப்பம் கொடுத்து , அதன் பின் உங்கள் ஆசை நிறைவேற செய்வான். !

அதனால் , அந்த பரம்பொருளின் கவனத்தை திருப்புங்கள். உங்கள் திறமையை வளர்த்துக்கொள்ளுங்கள்.. !

ஆசை பட்டது , கிடைக்கும்போது - மனம் அடையும் ஆனந்தத்திற்கு அளவு இல்லை.. !!

 சர்ப்ப தோஷம் - திருமண தடை நீங்க  சரபேசர் வழிபாடு பற்றி சில நாட்களுக்கு முன் எழுதி இருந்தேன்.. அந்த கோவில் பற்றி , நிறைய வாசகர்கள் மேலும் தகவல்கள் கேட்டு இருந்தனர். 

ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்  கிழமை ராகு கால நேரத்தில் - மாலை 4 .30 முதல் , அபிசேக , ஆராதனை நடக்கிறது.. கூட்டம் அதிகம் இருப்பது இல்லை. உங்களுக்கு நான்கு அடி தூரத்தில் , சர்வ வல்லமை பொருந்திய சரபேசரை  , நீங்கள் சலிக்க தரிசனம் செய்யலாம். வழிபாடு முடிந்து செல்ல இரவு எட்டு மணி ஆகிவிடும். 

கோவில் இருக்கும் இடம் : வன்னிவேடு.. வாலாஜா பஸ் நிலையத்தில் இருந்து ஒரு பத்து நிமிட நடந்து செல்லும் தூரத்தில் இருக்கிறது. வாலாஜா - ராணிப்பேட்டை, ஆற்காடு அருகில் உள்ள ஒரு நகரம். சென்னையிலிருந்து வேலூர் செல்லும் எல்லா பேருந்துகளும், வாலாஜா நின்று செல்லும்.. வேலூர் டு வாலாஜா - 25 km. சென்னை டு வாலாஜா - 100 km (approx .)


உங்களுக்கு அதிக பயன் தரும் சில முக்கியமான பாராயண மந்திரங்களை இங்கே பகிர்ந்து கொள்கிறேன். நமது இணைய தளத்தில் ஏற்கனவே  ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் அருளிய தங்க ஆனந்த களிப்பு & வேற்குழவி வேட்கை பதிகங்களை பாடி , கோடிகளில் செல்வம் குவித்த தென்காசி நண்பரை பற்றி ஏற்கனவே பார்த்து இருந்தோம்..  

இந்த பதிவை  படித்த பிறகு, நமது வாசகர் ஒருவர் - பாம்பன் சுவாமிகள் பற்றி தனியே இயங்கும் வலைப்பூ பற்றி குறிப்பிட்டு இருந்தார். நமது வாசகர்கள்   அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்பதால் , உங்களிடம் அதைப் பகிர்ந்து கொள்கிறேன்.. அதில் உள்ள ஒரு பதிவு நம் வாசகர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்று நினைத்து உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்...

வீட்டில் எதிர்மறை எண்ணங்கள் மறைய, பணம் , பொருள், ஆபரணம் சேர்க்க , குடும்பம் - மகிழ்ச்சியாகவும், நிம்மதியாகவும் வாழ , மரண  பயம் நீங்க, துக்க செலவுகள் குறைய, துர் செய்திகள் வராமல் இருக்க , திருமணம் கை கூட , பிரிந்தவர் மீண்டும் ஒன்று சேர என்று -
இவை ஒவ்வொன்றும் , அற்புதமான பலன்கள் தரும் மந்திரங்கள்.

மந்திரங்களை படிக்க  இங்கே க்ளிக் செய்யுங்கள்