Search This Blog

Showing posts with label Alternative medicine. Show all posts
Showing posts with label Alternative medicine. Show all posts

Wednesday, April 1, 2020

கொரோனாவுக்கு கபசுரக்குடிநீர் Kabasura Kudineer

டெங்கு காய்ச்சல் பரவிய போது நிலவேம்பு குடிநீரும், ஹெச் 1 என் 1 வைரஸ் தொற்றால் பன்றி காய்ச்சல் தீவிரமாக பரவிவந்தது. அப்போது இதை கட்டுப்படுத்த கைகொடுத்தது சித்தமருத்துவம் தான்.

நிலவேம்பு குடிநீர், கபசுர குடிநீர், ஆடாதோடை மணப்பாகு என உடலுக்கு எதிர்ப்பு சக்தியை வழங்கக்கூடிய மூலிகை நீர் அரசு சித்த மருத்துவமனைகளில் வழங்கப்பட்டது. தற்போது கொரோனா வைரஸ் தொற்று தீவிரமாக பரவிவரும் நிலையில் அலோபதி மருத்துவ துறை மருந்துகளை கண்டறிவதில் வேகம் காட்டிவருகிறது.

இந்நிலையில் சித்தா, ஆயுர்வேத, யுனானி, ஹோமியோபதி மருத்துவர்களிடம் வைரஸை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து ஆலோசனையும் மேற்கொள்ளப்பட்டது. அப்போது இந்திய சித்தமருத்துவர்கள் கபசுர குடிநீரை பரிந்துரை செய்தார்கள்.அதே நேரத்தில் இவை கொரோனா வைரஸை குணப்படுத்தும் என்று நினைத்திட வேண்டாம். இவை கொரோனாவாக இருக்கலாம் என்று தனிமைப்படுத்தியவர்களுக்கும், அறிகுறிகள் இலேசாக இருக்கும் போது சிகிச்சை அளிப்பவர்களுக்கும் கபசுரகுடிநீரை கொடுக்கலாம். மேலும் அலோபதி சிகிச்சை பெறுபவர்களுக்கும் இந்த குடிநீரை கொடுக்கலாம் என்றும் பரிந்துரை செய்திருக்கிறார்கள் சித்த மருத்துவர்கள்.



தற்போது அரசு சித்தமருத்துவமனைகளில் மக்களுக்கு கபசுரகுடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. கபசுர குடிநீர் குறித்து மேலும் தெரிந்துகொள்வோம். யூகி முனி சித்தர் பொதுவாக காய்ச்சலை 64 வகை காய்ச்சலாக பிரித்திருக்கிறார். அதில் கபசுரகுடிநீர் வைரஸ் காய்ச்சலுக்கு மருந்தாக இருக்கும் என்றும் கூறியிருக்கிறார். காய்ச்சல் வராமல் தடுப்பதற்கும் காய்ச்சல் வந்தபிறகு குணப்படுத்துவதற்கும் இதை பயன்படுத்தலாம் என்றும் வழிகாட்டியிருக்கிறார்.


மூலிகை பொருள்களை கலந்து தயாரிக்கும் கபசுரக்குடிநீரை வீட்டில் தயாரிப்பது கடினமானது. இதில் சுக்கு, திப்பிலி இலவங்கம், சிறுகாஞ்சேரி வேர், அக்ரகாரம், முள்ளி வேர், ஆடாதோடை இலை, கற்பூரவள்ளி இலை, கோஷ்டம், சீந்தில் தண்டு, சிறுதேக்கு, நிலவேம்பு சமூலம், வட்ட திருப்பி வேர், கோரைக்கிழங்கு, கடுக்காய்த்தோல் என 15க்கும் மேற்பட்ட மூலிகை பொருள்கள் கலக்கிறார்கள். அதோடு இதை சுத்தம் செய்வதும் கடினம். அதனால் இதை சித்தமருந்து கடைகளில்கிடைக்கும் கபசுர பொடியாக வாங்கி பயன்படுத்தலாம்.


ஒரு டம்ளர் நீரை கொதிக்க வைத்து அரை டம்ளராக ஆகும் வரை சுண்ட வைத்து இறக்கி வடிகட்டி கால் தம்ளர் குடித்து வரவும். ஒவ்வொரு முறையும் அப்போது கொதிக்க வைத்து வடிகட்டி குடிக்க வேண்டும். மூக்கு, தொண்டை, சுவாசப்பாதையில் வரும் தொற்றுகளை நீக்கும் வல்லமை கொண்டது இந்த கபசுரக்குடிநீர். குறிப்பாக மூச்சுவிடுவதில் இருக்கும் சிரமத்தை குறைக்க உதவுகிறது.


சிறு பிள்ளைகளுக்கு கொடுக்கும் போது இந்த நீரை வடிகட்டி அதனுடன் இனிப்புக்கு சுத்தமான தேன் அல்லது பனங்கருப்பட்டி கலந்து கொடுக்கலாம். இரண்டு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு கொடுக்கும் போது மருத்துவரை கலந்தாலோசித்து கொடுப்பது நல்லது. கர்ப்பமாக இருக்கும் பெண்கள் கபசுரகுடிநீரை தவிர்ப்பது தான் நல்லது.


கொரோனா அச்சத்தால் இயன்றவரை கூட்டம் கூடாமல் தனித்திருக்க வேண்டும் என்று அறிவுறுத்துகிறார்கள். இப்போது கூட்டத்தில் போக வேண்டாம் என்று நினைப்பவர்கள் வீட்டில் இருக்கும் பொருள்களை கொண்டும் தயாரித்து குடிக்கலாம். 
சுக்கு, ஆடாதோடை, கற்பூரவல்லி, நிலவேம்பு, இலவங்கம், திப்பிலி இவையுடன் வேறு கபசுரகுடிநீர் செய்ய பயன்படும் மூலிகை பொருள்களில் எது உங்களுக்கு எளிதாக கிடைக்கிறதோ அதை சிறிதளவு எடுத்து சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி குடிக்கலாம்.

கபசுரக்குடிநீர் குடிப்பதால்கொரோனா வைரஸ் பரவாது. வந்தாலும் குண்மாகிவிடுமா என்று கேட்கலாம். ஆனால் சித்தமருத்துவர்கள் பரவிவரும் கொரோனா வைரஸ்க்கு கபசுரகுடிநீரை மருந்தாக பரிந்துரைக்கவில்லை. ஆனால் வைரஸ் போன்ற தொற்றுகளை பரவாமல் தடுக்க உதவும் கபசுர குடிநீர் கோரொனாவுக்கான மருந்தாக ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கவில்லை. எனினும் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் என்று உறுதிபட தெரிவிக்கிறார்கள். இயல்பாக நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது என்பதால் கபசுர குடிநீர் எப்போதும் உடலுக்கு நன்மையை தரும் என்றே சொல்லலாம்.
சித்த மருத்துவமும் கொரொனாவும் பித்தசுரக் குடிநீர்
Balamurali Balasingam 
தற்சமயம் முழுஉலகையுமே ஆட்கொண்டுள்ள உயிர்கொள்ளி நோயாகிய கொவொயிட் 19 என்ற நோயினால் உலகமே ஸ்தம்பித்த நிலையில் உள்ளது, பல வல்லரசுகளும் இப்பேரிடரிலிருந்து மீழ்வதற்கு பகீரதப் பிரயத்தனங்களை மேற்கொண்டு வருகின்றன, எனினும் அவை பெரியஅளவில் வெற்றியளிப்பதாகத் தெரியவில்லை. இச்சந்தர்ப்பத்தில் மக்கள் மாற்று மருத்துவத்தின் மூலம் இதற்கான தீர்வைத் தேடத் தொடங்கியுள்ளனர் அந்த வகையில் சித்த மருத்துவத்தில் கொரொனாவிற்கான சிகீட்சை முறைகள் சொல்லப்பட்டுள்ளனவா என்பதை அறிவதற்காக பலரும் சித்த மருத்துவத்தின் பக்கம் நாடுகின்றனர். இன்நிலையை சிலர் சாதகமாகப் பயன்படுத்தி எமது சித்த மருத்துவ ஏடுகளின் புகைப்படங்களில் கணனித் தொழில்நுட்பத்தின் உதவியுடன் சில மாற்றங்களைச் செய்து எம்மிடம் இதற்கான மருந்துகள் உண்டு நாம் இப்பிணியை முற்றிலும் குணமடையச்செய்வோம் என மக்களை நம்பவைத்து தாம் பிரபல்யம் அடைவதற்கும் பணம் சம்பாதிப்பதற்கும் முயற்சிக்கின்றார்கள், இவர்கள் யாராக இருந்தாலும் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டியவர்களே.
அப்படியானால் இந்த நோய்க்கு சித்த மருத்துவத்தால் எதுவும் செய்யமுடியாதா என்று நீங்கள் கேட்கலாம் அதற்குரிய பதிவாகவே இப்பதிவிடப்படுகின்றது.
சித்த மருத்துவத்தில் பலவகையான ரோகங்களும் அவற்றிற்கான பரிகாரங்களும் மிகவும் திருத்தமாகவும் விளக்கமாகவும் சொல்லப்பட்டுள்ளன ஆனாலும் எனது அறிவிற்கெட்டிய வரை கொரொனா பற்றி எங்குமே குறிப்பிடப்படவில்லை, மாறாக பல வகையான சுரங்கள் தொடர்பாகவும் அவற்றிற்கான குணங்குறிகள் பரிகாரங்கள் தொடர்பாகவும் விளக்கமாகச் சொல்லப்பட்டுள்ளன. அவற்றுள் பித்தசுரம் எனப்படும் ஒரு பிணிநிலையின் ரோகலட்சணங்கள் தற்போதய கொவொயிட் 19 என்ற நோயின் குணங்குறிகளுடன் ஓரளவிற்கு ஒத்துப்போவதாகவுள்ளது அதற்காக பித்தசுரம் தான் கொவொயிட் 19 என்ற முடிவிற்கும் உடனடியாக வரமுடியாது.
அந்தவகையில் பித்தசுரத்திற்காக பரிந்துரைக்கப்பட்டுள்ள சித்த மருந்துகளில் முக்கியமானது பித்தசுரக் குடிநீராகும் இக்குடிநீரானது 15 மூலிகைகளைக் (இவற்றுள் பல கிடைத்தற்கரிய அரிய வகை மூலிகைகள்) கொண்டு முறைப்படி தயாரிக்கப்பட வேண்டிய ஒரு மருந்தாகும், இதனுடன் வேறும் சில மருந்துகளைச் சேர்த்துக் கொடுப்பதன் மூலம் பித்தசுரத்தினையும் இதனால் ஏற்படக்கூடிய உபத்திரவங்களையும் தணிக்க முடியும். எனினும் இந் நோய் ஏற்படுவதைத் தடுப்பதற்காக இந் நோய்நிலை ஏற்படுவதற்கு முன்னர் இம்மருந்துகளை தடுப்பு மருந்துகளாகப் பயன்படுத்த முடியும் என்பதற்கான எந்த ஆதாரங்களும் இல்லை.
இருப்பினும் இவ்வகையான மருந்துகளைப் பயன்படுத்துவதனால் எந்தவிதமான பாதகமான விழைவுகளும் ஏற்படாது தானே எதற்கும் நாமும் ஒருமுறை பாவித்துப் பார்ப்போம் என நீங்கள் எண்ணலாம் அது மிகவும் தவறான எண்ணமாகும். முதலாவதாக மூலிகை மருந்துகளிற்கு பக்கவிழைவுகள் இல்லை என்பது மிகவும் தவறான கருத்தாகும், இம் மருந்துகளும் தகுதியான சித்த மருத்துவரின் ஆலோசனையின்றிப் பாவித்தால் பாரிய விழைவுகளை ஏற்படுத்தும். அடுத்ததாக இந்த கபசுரக் குடிநீரில் சேரும் 15 வகையான மருத்துவ மூலிகைப் பொருட்களில் பல கிடைத்தற்கரிய அரிய மூலிகை வகைகள் இவற்றுள் சில முழு இலங்கையிலுமே ஒரு சில கிலோ அளவிலேயே கையிருப்பில் இருக்கும் அவற்றையும் நாம் நோய் ஏற்படுவதற்கு முன்னர் முடித்துவிட்டோமானால் உண்மையில் தேவைப்படும் நோயாளரிற்கு என்ன செய்வது? ஒரு சில செக்கன்களில் உற்பத்தி செய்யக்கூடிய சத்திர சிகீட்கை முகக்கவசங்களிற்கே இவ்வளவு தட்டுப்பாடு ஏற்படும் போது உற்பத்தி செய்வதற்கு பல மாதங்கள் எடுக்கும் மூலிகைப் பொருட்கள் பற்றி சொல்லத் தேவையில்லை இந்நிலையில் மூலிகைப் பொருட்களிற்கான கேள்வி பல மடங்கு அதிகரிக்கும் போது போலியான மூலிகைகள் சந்தைக்கு விடப்படும் இந் நிலை நிலைமையை மேலும் மோசமடையச் செய்யும்.
அடுத்ததாக நோய்த்தொற்று ஏற்பட்டு நோய்க்கான குணங்குறிகள் தென்படுவதற்கு முன்னதாக இம்மருந்துகளைப் பயன்படுத்துவதால் நோய்க்கான குணங்குறிகள் தோன்றாது போகலாம் அதனால் அவர்கள் நோயாளராக இனங்காணப்பட்டு தனிமைப்படுத்தப்படமாட்டார்கள் இவர்கள் மூலமாக பலருக்கும் நோய்த் தொற்று ஏற்படக்கூடிய அபாயம் அதிகரிக்கின்றது.
தற்சமயம் இலங்கை உலக சுகாதார தாபனத்தின் கொவொயிட் 19 தரப்படுத்தலிற்கமைவாக நிலை 3ஏ யில் இருந்து நிலை 3பி யை அடைகின்றது மிகவிரைவில் நிலை 4ஐ அடையும் என எதிர்பார்க்கப்படுகிக்றது இந்நிலையில் எமது வீடுகளிலும் பல சித்த ஆயர்வேத மருத்துவமனைகளிலும் உபத்திரவங்கள் ஏற்படாத கொவொயிட் 19 நோயாளர்களை வைத்துப் பராமரிக்க வேண்டிய நிலைகள் ஏற்படலாம் இச்சந்தர்ப்பத்தில் இவ்வாறான சித்த மருந்துகள் எமக்கு உபத்திரவங்களைத் தடுப்பதற்காக கைகொடுக்கலாம் எனவே தற்போதய சூல்நிலையில் குறித்த மருந்துகளை வீண்விரயமாக்காமல் அவற்றை முறையாகத் தயாரித்து சேமித்து வைத்து அடுத்துவரும் கிழமைகளில் அவற்றின் தேவை ஏற்படும்போது சரியாகப் பயன்படுத்துவது சித்த மருத்துவத்துறை சாரந்த அனைவரதும் கடமையாகும்.


Monday, February 25, 2019

அக்குபஞ்சர் மருந்தில்லா மருத்துவமுறை



அக்குபஞ்சர் நாடிப் பரிசோதனையின் மூலம் மட்டுமே ஒரு நோயாளியின் அனைத்துக் கஷ்டங்களுக்கும் காரணமான அந்த ஒரே ஒரு புள்ளியின் ரகசியத்தை அறிந்து செயல்பட முடியும்.

மருந்தில்லா மருத்துவம் அக்குபஞ்சர்
இந்தியாவில் சித்தா, ஆயுர்வேதா, அலோபதி, ஹோமியோபதி என பல மருத்துவமுறைகள் இருந்தாலும், உலகிற்கே நாகரிகத்தை கற்றுக்கொடுத்த மூத்த குடியாம் தமிழ் குடியில் போகர், தேரையர், கோரக்கர் காலத்திலே தோன்றிய தொன்மையான மருந்தில்லா மருத்துவ முறை தான் அக்குபஞ்சர். அகில உலகிலும் இன்று தமிழ் மணத்துடன் வாழும் அக்குபஞ்சரை பற்றி பார்ப்போம்.

அக்குபஞ்சர் என்பது மருந்தில்லா மருத்துவமுறை. சுமார் 5000 ஆண்டுகளுக்கு முன்பாக தோன்றிய பழமையான சிகிச்சையாகும். மனித உடலானது ஜம்பூதங்களால் ஆனது என நம் முன்னோர்கள் சொல்வார்கள். அது போல மனித உடலில் 14 உயிர்சக்தி, 12 இரட்டை பாதைகள் உள்ளன. 76000 அக்குபஞ்சர் புள்ளிகள் மனித உடலில் உள்ளது.

நம்முன்னோர்கள் முன்பே நாடிபிடித்து நோய்களை கண்டறிவதில் வல்லவர்களாக திகழ்ந்துள்ளனர். நம் உடலில் உயிர் சக்திகள் மாறுபடும் போதும், ஆற்றல் குறையும் போதும் நோய் உண்டாகிறது.
முதலில் நாடிபரிசோதனையில் எந்த உறுப்பின் இயக்கம் குறைந்துள்ளது என்பதை கண்டறிய முடியும். இரண்டாவது அந்த உறுப்பின் இயக்கத்தை வைத்து எந்த உறுப்பின் இயக்கம் பாதிக்கின்றது என்பதை கண்டறியவேண்டும். மூன்றாவது அந்த பாதிப்பை சரிசெய்யும் புள்ளியையும், நான்காவது அந்த புள்ளியை எதற்காக தேர்வு செய்தோம் என்பதிலும் நமக்கு தெளிவு வேண்டும். ஜந்தாவது அந்த புள்ளி நோயை எவ்வாறு சரி செய்கிறது என்பதில் தெளிவு வேண்டும்.
ஆறாவது அந்த புள்ளிக்கும் நோய்க்கும் உள்ள தொடர்பு என்ன என்பது தெரிய வேண்டும். ஏழாவது அந்த புள்ளி குணமாக்கும் என்பதில் நமக்கு தீவிரமான உறுதிவேண்டும். நாடி பரிசோதனையை காலையில் மட்டுமே செய்ய வேண்டும். வெறும் வயிற்றில் எதுவும் சாப்பிடாமல் மட்டுமே பரிசோதனை செய்யவேண்டும்.
ஒன்று அல்லது இரண்டு ஊசிகளுக்கு மேலாக பயன்படுத்தக்கூடாது. மருந்து மாத்திரைகளை கண்டிப்பாக நிறுத்த வேண்டும் ஒரு வாரம் அல்லது பதினைந்து நாட்களுக்கு பின்னர்தான் அடுத்த சிகிச்சை தர வேண்டும். அக்குபஞ்சர் சிகிச்சை மேற்கொள்ளும் போது எலக்ட்ரானிக் சாதனங்கள் பயன்படுத்தவேண்டாம். பிற மருந்துகள், சிகிச்சைகளை பயன்படுத்தக்கூடாது.
அக்குபஞ்சர் நாடிப் பரிசோதனையின் மூலம் மட்டுமே ஒரு நோயாளியின் அனைத்துக் கஷ்டங்களுக்கும் காரணமான அந்த ஒரே ஒரு புள்ளியின் ரகசியத்தை அறிந்து செயல்பட முடியும்.
“ஒரு நோயாளி ஒரு சமயத்தில் கூறக்கூடிய அனைத்துக் கஷ்டங்களுக்கும் காரணமான ஒரே ஒரு புள்ளியைத் தேர்ந்தெடுத்து, அதன் மூலம் சுகமளிக்க முற்படுபவர் மட்டுமே உண்மையான அக்கு பஞ்சர் நிபுணர் ஆவார்.
உயிர் ஆற்றலை நேர்மறை, எதிர்மறை ஆற்றல்களாக சீன முறையில்யின், யான் ஆகப் பார்க்கிறது அக்குபஞ்சர். இவற்றின் இணைவுதான் இயக்கம். ‘யின்’ என்பது பெண். பெண்மை, குளிர்ச்சி, கருமை என வகுக்கப்பட்டுள்ளது. யான் என்பது ஆண். ஆண்மை, வெப்பம், உறுதி, வெளிச்சம் என வகுக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு அம்சங்களுக்கு இடையிலான சமன்குலைவு, நோய் என வரையறுக்கப்பட்டுள்ளது.
உடல், மனம், ஆன்மா ஆகிய மூன்றையும் பரிசீலனை செய்து சிகிச்சை தருவதுதான் அக்குபஞ்சர். இதில் பயன்படுத்தப்படும் ஊசி ஆத்மாவையும் தொடுகிறது.
அறுவைசிகிச்சை இல்லாமல் எப்படி நோய்களை குணப் படுத்த முடியும்? எப்படி அது சாத்தியம்? என்று கேட்கிறார்கள் மனித உடலில் நகம், முடி ஆகியவை வெட்டி எடுக்ககூடிய உறுப்புகள். மற்றவைகளை வெட்டக்கூடாது. அப்படி அறுவைசிகிச்சை முறையில் நீக்குவது தீர் வாகாது அது மேலும் பல பாதிப்புகளை ஏற்படுத்தும்.அக்கு பஞ்சர் முறையில் கத்தியில்லா பைபாஸ், பித்தக்கல், கிட்னி கல் ஆகியவற்றை இயற்கையாகவே அக்குபஞ்சரில் வெளியேற்றமுடியும். அக்குபஞ்சர் மனம், உடல் ஆற்றல் என மூன்றையும் மேம்படுத்தி நோய்களை நிவர்த்திசெய்கிறது
சர்க்கரை நோய்,பிரசர் பாதிப்புகளுக்கு நிரந்தர தீர்வு அளிக்கமுடியும்.நாம் சீனி,மைதாவால் செய்யப்பட்ட ரொட்டிகள், பாஸ்ட் புட்,பிராய்லர் கோழி, ரசாயனம் கலந்த உணவுவகைகளை தவிர்க்க வேண்டும். நம்முன்னோர்கள் போல் உணவே மருந்து என்ற முறைக்கு வர வேண்டும். தானியம், பழங்கள், கைகுத்தல் அரிசி, இயற்கை முறையில் விளைந்த காய்கறி போன்றவைகளை உட்கொண்டு,யோகா, அடிப் படை உடற்பயிற்சிகளை செய்தாலே சர்க்கரை நோயை விரட்டலாம்.
அக்குபஞ்சரில் இயற்கையாகவே இன்சுலினை தூண்டி நிரந்தர தீர்வு அளிக்க முடியும். இருமல், சளி, வயிற்றுவலியை ஒரே நாளில் குணப்படுத்தலாம். நாடிபிடித்து, நோய்களின் அறிகுறியை கண்டறிந்து ம், மயிரிழை ஊசிகளை புள்ளிகளில் குத்தியும் நோய் பாதிப்பை கண்டறிந்து இவற்றின் தன்மையை பொறுத்து ஆரம்ப காலத்தில் நோய்பாதிப்பு இருந்தால் விரைவாகவும்,நீண்டகாலமாக இருந்தால் தாமதமாகவும் பக்க விளைவு இல்லாமல் நிரந்தர தீர்வை அக்குபஞ்சரால் அளிக்க முடியும்.
எந்த ஒரு குண்டூசியையும் இந்த மருத்துவத்துக்கு பயன்படுத்தலாம் என்று யாரும் தயவுசெய்து முயன்றுவிடவேண்டாம். அது மிகவும் ஆபத்து. அக்குபஞ்சருக்கு என்று பிரத்யேகமாக தயாரிக்கப்படும் ஊசிகளை மட்டுமே சரியான முறையில் பயன்படுத்த வேண்டும். பொதுவாக, அக்குபஞ்சர் ஊசி 0.5 இன்ச்சிலிருந்து 7 இன்ச் வரை கிடைக்கிறது.
இந்த ஊசிகளில் சிரெஞ்ச் போல துளைகள் இருக்காது. அதனால் இந்த ஊசிக்குள் ரத்தம் தாங்காது. எனவே ரத்தத்தின் மூலம் பரவும் வியாதிகள் இந்த ஊசிகளினால் பரவாது என்பது நல்ல விசயம். இருந்தாலும், ஒருவருக்கு உபயோகிக்கப்படும் அக்குபஞ்சர் ஊசிகள் அடுத்தவருக்கு உபயோகிக்கப்படுவதில்லை. அக்குபஞ்சர் ஊசிகள் காப்பர், வெள்ளி, என்று வெவ்வேறு உலோகங்களில் கிடைக்கிறது.
அக்கு பஞ்சர் சிகிச்சையால் குழந்தைகளை பாதிக்கும் ஆப்டிசைசம், கற்றல்திறன் குறைபாடு, மனவளர்ச்சி குறைபாடு ஆகியவைகளை முற்றிலுமாக குணப்படுத்த முடியும்.
உதாரணமாக நாம் இரவு உணவாக பப்ஸ், முட்டை, சிக்கன் 65, பால் என்று அனைத்தையும் ஒரே வேளையில் உட்கொள்ளும் போது அஜீரணகோளாறு ஏற் படும் .அதனால் ஒவ்வாமை உண்டாகி வாந்தி மூலம் உடலில் இருந்து வெளியேற்ற முயலும்.இதை நாம் அறி யாது நாம் மாத்திரைகளை உண்போம் . மாத்திரையை ஏற்க உடல் வயிற்று போக்காக வெளியேற்ற முயலும். நாம் அதனை தடுக்க மீண்டும் மாத்திரைகளை உட்கொள்வோம் இப்படி தொடர்ந்து உடலில் ஆற்றலை நாமே சிதைக்கிறோம் அது கூடாது.நாம் பாதிப்புகளை அடுத்த கட்டத்துக்கு தான் கொண்டு செல்கிறோம்.
அதற்கான வேர்களை தேடுவதில்லை. பூசிமொழுக மட்டுமே செய் கிறோம். ஆனால் அக்குபஞ்சரில் நோய் நாடி நோய்முதல் நாடி என நோய்பாதிப்புகள் உள்ள புள்ளிகளை அறிந்து அதற்கான சிகிச்சை அளிக்கப்படுகிறது.அக்குபஞ்சரில் மட்டுமே ஒரு பாதிப்புக்கு மருத் துவம் அளித்தால் தொடர்புடைய பிற பாதிப்புகளையும் நீக்குகிறது.
உயிர்கொல்லி நோய்களான எய்டஸ் பாதிப்பின் வீரியத்தை வெகுவாக கட்டுப்படுத்தமுடியும்.
இறுதியாக இன்றைய நவீன உலகில் மருந்தே உணவாக மாறியதால் நாம் நம் முன்னோர்களின் சிறுதானியம், காப்பர் பானை தண்ணீர், மண்பானை சமையல்,பூச்சிகொல்லியில்லா உணவுகளை உட்கொண்டு நோயினை விரட்டுவோம். அக்குபஞ்சர் மருத்துவத்தை முறையாக கற்ற மருத்துவர்களை அணுகி சிகிச்சை பெறவேண்டும்.பக்கவிளைவு இல்லாத ஆதிகாலத்து மருந்தில்லா முறையான அக்குபிரசர் மற்றும் அக்குபஞ்சர் சிகிச்சை முறைகளை மீண்டும் மக்கள் வெகுவாக நாடிவருகின்றனர்.
செயற்கையால் ஏற்பட்ட வியாதிகள் இயற்கையாக சரியாகும் என்ற நம்பிக்கை நமக்குள் வர வேண்டும்! அதற்கு நாம் இயற்கை முறையில் சரிசெய்ய முயல வேண்டும்!.
பஞ்சபூதங்களால் ஆன உடலில் நோய் ஏற்பட்டால் அதனை அக்கு பஞ்சர் சிகிச்சையால் விரட்டுவோம். மருந்தில்லா மருத்துவம் நிச்சயம் மலரும் இயற்கையோடு இரண்டற கலந்து இணைந்து வாழ்வோம். ஆரோக்கியமான உலகை படைப்போம்.

Friday, January 18, 2019

கைவிரல்களுக்கு பயிற்சி அளித்தே உடலை சரி செய்யலாம்

உடலின் எந்த ஒரு பாகத்தில் பாதிப்பு ஏற்பட்டாலும், கைவிரல்களுக்கு பயிற்சி அளித்தே சரி செய்யலாம்

 

கட்டை விரல்;
உங்கள் கட்டை விரலுக்கு அழுத்தம் கொடுத்து பயிற்சி செய்வதால், மன அழுத்தம் குறைய, மனநிலையை கட்டுப்படுத்த முடியும், நல்ல உறக்கம் பெறலாம். மேலும் இது உடற்சக்தியை மேம்படுத்தவும் உதவுகிறது.கட்டை விரலானது, மண்ணீரல் மற்றும் வயிறு பகுதியுடன் இணைப்புள்ளது ஆகும். இது வெள்ளை மற்றும் சிவப்பு இரத்த செல்களை ஊக்குவித்து செரிமானத்தை சீராக்குகிறது.
ஆள்காட்டி விரல்;
உங்கள் பலவீனம் மற்றும் பயத்தை குறைக்க கூடியது ஆள்காட்டி விரல். மேலும், ஆள்காட்டி விரலுக்கு அழுத்தம் கொடுத்து பயிற்சி செய்வது உங்களிடம் இருக்கும் அடிமைத்தனத்தினை குறைக்கவல்லது. உங்கள் ஆள்காட்டி விரல் சிறுநீரகம் மற்றும் சிறுநீர்ப்பையுடன் இணைப்புக் கொண்டுள்ளது. சிறுநீரகத்தில் கற்கள் உண்டாகாமல் இருக்கவும், நீர்வறட்சி ஏற்படாமல் இருக்கவும் பயனளிக்கிறது.
நடுவிரல்;
நடுவிரலுக்கு அழுத்தம் கொடுத்து பயிற்சி செய்வது உங்களது கோபத்தை குறைக்க உதவும். தலை பகுதியில் இரத்த ஓட்டத்தை சீராக்கி தலைவலி ஏற்படாமல் இருக்கவும் இது உதவுகிறது.
நடுவிரலானது, கல்லீரல் மற்றும் பித்தப்பையுடன் இணைப்புடையது. இது இந்த பாகங்களின் வலிமையை மேம்படுத்துகிறது மற்றும் உடற்சக்தியை ஊக்குவிக்கிறது.
மோதிரவிரல்;
ஏறத்தாழ கட்டைவிரலுடன் ஒத்துப் போவது தான் இந்த மோதிர விரலும். உங்களில் இருக்கும் எதிர்மறை எண்ணங்கள் மற்றும் தீய எண்ணத்தை குறைக்க நீங்கள் மோதிர விரலுக்கு அழுத்தம் கொடுத்து பயிற்சி செய்யலாம்.மேலும், மோதிர விரல் நுரையீரலுடன் இணைப்பு கொண்டுள்ளது. இது சுவாசக் கோளாறுகளை போக்கவல்லது. மேலும், நரம்பு மண்டலம், தசைகளுக்கு வலிமை அளிக்கிறது. இதனால், உங்கள் உடற்சக்தி மேம்படும்.
சிறுவிரல்;
சிறுவிரலுக்கு அழுத்தம் கொடுத்து பயிற்சி செய்வது இதயம் மற்றும் இரத்த ஓட்டத்திற்கு நல்லது. இது இரத்த ஓட்டத்தை சீராக்கி இதர உடல் பாகங்களின் செயற்திறனை ஊக்குவிக்கிறது.மேலும் இது மூளையின் செயல்திறனையும் மேம்படுத்துகிறது, இதனால் உங்கள் எண்ணம், சிந்தனை, கவனம் போன்றவையும் மேம்படும்.
உள்ளங்கை;
மன அழுத்தம் தான் அனைவருக்கும் ஏற்படும் கொடிய நோய். இது ஒட்டுமொத்தமாக மனதையும், உடலையும் பாதிக்கக் கூடியது. உள்ளங்கையில் அழுத்தம் கொடுத்து பயிற்சி செய்வது நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்க உதவுகிறது.இது உடல் மற்றும் மனதில் ஏற்படும் சோர்வில் இருந்து விரைவாக விடுபட்டு வெளிவரவும் பயனளிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Monday, May 23, 2016

Phytotherapy (herbal treatments)


Herbs have been used as drugs since ages, their medicinal powers were discovered either by experimenting or by chance. Now the medical agents in the herbs are used either directly or after some processing stages. There are also some synthetic and semi-synthetic medicines based on herbs (which currently constitute 95 % of all medicines on the market). Whatever the medicine is, either herbal or chemical, it is always better to choose the natural ones, to be careful and not to use any medicines unless that is really needed. The reason is that most medicines are in fact poisons but, when used in proper doses and in proper circumstances, they exhibit meditional qualities.

As far as the way a medicine acts and its side effects, natural (herbal) ones are always the best because those synthetic and semi-synthetic contain chemical substances that result in the liver over heating and make the liver tired. Live is one of the biggest organs in the body and, according to its functions, it can be considered one of the most important organs.

All medicines that we take, all chemicals that we breathe in with the air or preservatives in the food are subjected to metabolism in the liver and after a series of chemical processes in the liver are thrown away from the body either through the kidneys or via other ways (breathing, bile, skin, etc.). As a result, most chemicals are harmful to the liver, kidneys and other organs.

The most essential function of the liver is to provide energy to our everyday activities (both physical and mental). But the liver gets tired because of the medicines we use, chemicals in the food and in the air, etc. and cannot properly perform its functions. Also, because of the effect of those chemicals, toxic elements (free radicals) are formed in other cells of the body. As a result, one develops acute illnesses, like tiredness, stress, anger, headache as well as chronical, like early ageing, skin paleness, sluggishness, baldness.

Here we are going to explain how all kinds of our daily activities (taking herbal and chemical drugs, nutrition, using of cosmetics, lifestyle) affect our body and, as a result, our physical, emotional and spiritual being. We will explain how we can cure illnesses and improve our health most naturally without using any chemicals, just with the help of phytotherapy, natural nutrition and other natural methods.
How to prepare herbal teas: http://www.sahajayogaportal.org/…/fytother…/herbal-teas.html

Friday, March 6, 2015

பிரம்மமுனி அருளிய இஞ்சி லேகியம்


அவலேஹம் என்கிற சமஸ்க்ருதச் சொல்லே மருவி 'லேகியம்' என்றானது. தமிழில் இதனை இளகல் அல்லது இளகம் என்று அழைப்பர். பொதுவில் லேகியம் என்பவை கெட்டியான குழம்பு போல இல்லாமல் சற்றே இறுகிய நீர்ம நிலையில் இருக்கும்.
இவ்வாறு நீர்ம நிலையில் தயார் செய்யப்படும் லேகிய வகைகளில் ஒன்றான "இஞ்சி லேகியம்" தயாரிக்கும் முறையினை இன்றைய பதிவில் பார்க்க இருக்கிறோம். இந்த தகவல் பிரம்மமுனி அருளிய “பிரம்மமுனி வைத்திய சாரம்” எனும் நூலில் இருந்து சேகரிக்கப் பட்டது.

சொல்லவே இஞ்சி லேகியத்தைக் கேளு
தோல்போக்கிப் பலம்பத்து நிறுத்துக் கொண்டு
பல்லவே பழச்சாற்றில் லாட்டி மைபோல்
மைந்தனே சட்டியிலே இட்டுக் கொள்ளே
அல்லவே சீரகமுமிள கோடே லமும்
அதிமதுரந் திப்பிலியும் கோஷ்டமூலம்
கல்லவே வாலுழுவை தாளிச்சப் பத்திரியுங்
கடுகொடு கொத்தமல்லி சித்திர மூலம்

பல்லவே சிங்கியொடு குரோசாணி ஓமம்
அப்பனே வகைவகைக்கு அரைப்பலம் தூக்கே
தூக்கியே கரிசாலை பூவரசம்பட்டை சாற்றால்
துவளையரைத்து முன்மருந்தோ டொக்கச் சேரு
ஊக்கமாம் பிரண்டையது மோரிலுப் பிட்டு
ஊறி உலர்த்திடித்து ஒருபலமே போடு
ஆக்கவே வங்காள சர்க்கரை யப்பா
அதில்பாதி போட்டபின்னே நெய்யை வாரே
நெய்வார்த்து லேகியமாய் பண்ணிக் கொண்டு
நேரமொரு பாக்களவு அந்திசந்தி கொள்ளு
பொய்யல்ல பித்தவாய்வு உஷ்ண காந்தி
பிரட்டல் சத்திவலி குன்மம் பித்தகுன்மம்
மெய்யான அஸ்திசுரம் சன்னி தோசம்
வீறான எரிகுன்மம் சீரண வாதஞ்
செய்யவே உப்பீசமும் அரோசிகமுந் தீரும்
தீவனமாம் பசியறிந்து சீராய்க் கொள்ளே
தோல் நீக்கிய இஞ்சி பத்துப்பலம் நிறுத்து எடுத்து, அதனைக் கல்வத்தில் இட்டு எலுமிச்சம் பழச் சாறுவிட்டு நன்கு மைபோல் அரைத்து அதனை ஒரு மண் சட்டியில் சேகரித்துக் கொள்ள வேண்டுமாம். பின்னர் சீரகம், மிளகு, ஏலம், அதிமதுரம், திப்பிலி, கோஷ்ட மூலம், வாலுழுவை, தாளிச்சப்பத்திரி, கடுகு, கொத்தமல்லி, சித்திரமூலம், கற்கடக சிங்கி, குரோசாணி, ஓமம் ஆகியவற்றை வகைக்கு அரைப் பலம் எடுத்துச் சேர்த்து கல்வத்தில் இட்டு கரிசாலை, பூவரசம் பட்டை ஆகியவற்றின் சாறுவிட்டு மெழுகு பதத்தில் அரைத்து எடுத்து இஞ்சி சேகரித்த மண் சட்டியில் இதனையும் சேர்த்துக் கலந்து கொள்ள வேண்டுமாம்.
மோரில் உப்புப் போட்டு கலந்து அதில் பிரண்டையை சிறுதுண்டுகளாக அரிந்து ஊறப்போட்டு நன்கு காயவைத்து எடுத்து *சூரணமாக செய்து கொள்ள வேண்டுமாம். இந்த சூரணத்தில் ஒருபலம் எடுத்து முன்னர் மருந்துக் கலவை சேகரித்த மண்சட்டியில் இட்டு அதனுடன் சம அளவில் வங்காள சர்க்கரை சேர்த்துக் கொள்ள வேண்டுமாம். அத்துடன் அளவாக நெய் சேர்த்து லேகியமாக தயார் செய்து எடுத்து சேமித்துக் கொள்ள வேண்டுமாம்.
இந்த லேகியத்தில் கொட்டைப்பாக்களவு எடுத்து காலை மாலை என இரு வேளையும் ஏழு நாட்கள் தொடர்ந்து உண்டுவர பித்த வாய்வு சம்பந்தமான கோளாறுகள் நீங்கி குணமாகுமாம். அத்துடன் பித்த வாய்வு, உஷ்ண காந்தி, புரட்டல், வாந்தி, வலிகுன்மம், சீரணவாதம் (செரியாமை), உப்பிசம், ருசியின்மை ஆகியவை குணமாகும் என்கிறார்.
மருந்துண்ணும் ஏழு நாளும் பத்தியமாக பசிக்கும் போது பசியின் தன்மை அறிந்து உண்ண வேண்டும் என்கிறார்.
*சூரணம் - ஈரமானவைகளை காய வைத்தும், காயந்தவைகளை சுத்தமாக்கியும், வறுக்க வேண்டியவைகளை வறுத்தும் இடித்தோ அரைத்தோ பொடியாக்கி சலித்து எடுத்துக் கொள்வது.

Monday, April 21, 2014

புற்று நோயை முற்றிலும் அழிக்க , வராமல் தடுக்க

வெறும் நூறு ரூபாயில் புற்று நோயை முற்றிலும் அழிக்க , வராமல் தடுக்க ஒரு சிறந்த கை மருந்து !
புற்று நோயால் பாதிக்கப் படுகிறார்களாம். சொந்த செலவிலேயே சூனியம் வைக்கறதுக்கு சமம். சொன்னா யார் கேட்கப்போறா !?

புற்று நோய் வந்து விட்டது என்றாலே சகல சப்த நாடிகளும் ஒடுங்கிப்போய் தளர்ந்து விடுவார்கள். அருகில் இருந்து பார்த்தவர்களுக்குத் தான் தெரியும் , சிங்கம் போலே சிலுப்பிக் கொண்டு இருந்த பலரை , வேரோடு சாய்த்து விடும் தன்மை. இந்த புற்று நோய்க்கு உண்டு. இப்போது ஓரளவுக்கு மெடிக்கல் உலகம் சில மருந்துகளை கண்டுபிடித்து , குணப் படுத்த நடவடிக்கை எடுத்தாலும், பணம் இருப்பவர்கள் மட்டுமே அந்த சிகிச்சை மேற்கொள்ள முடியும். ஆனால் அந்த வேதனை , ரணம் உயிரை விட்டு விடுவதே மேல் என்றே தோன்றி விடும்.

எனக்கு தெரிந்து , மிக நெருக்கமான வட்டத்தில் – மூன்று பேரை , அவர்கள் ஒட்டு மொத்த சொத்தையும் செலவழித்துப் பார்த்தும், உயிரையே காவு வாங்கி விட்டது.
அதை விட கொடூரமாக வேறு எந்த நோயின் வீரியத்தையும் கண் முன்னே நான் பார்த்ததில்லை.
அப்படிப்பட்ட புற்று நோயை , படிப்படியாக முற்றிலும் குணப்படுத்த ஒரு எளிய வைத்தியம் இது.
இந்த சிகிச்சையை கண்டுபிடித்தவர் பிரேசில் நாட்டில் பிறந்தவரும் சிறந்த மருத்துவரும் பாதிரியாருமாகிய Fr ரோமனோ சகோ (Fr Romano Zago) என்பவர்.
இவர் கண்டு பிடித்த இம்மருந்தை புற்று நோயால் மிக கடுமையாக பாதிக்கப் பட்டவர்கள்கூட உபயோகித்து குணமடைந்துள்ளனர். .
இனி இம்மருந்தை எப்படி தயாரிப்பது என்பதை பார்ப்போம் .இதில் பயன்படுத்தப்படும் மூலிகை எங்கும் எளிதாக கிடைக்கும் சோற்று கற்றாழை ஆகும் .
சோற்று கற்றாழை 400 கிராம்
சுத்தமான தேன் 500 கிராம்
whisky(or)brandy 50 மில்லி (மருந்தாக மட்டும் பயன்படுத்துக)
தயாரிப்பு முறை
சோற்றுக் கற்றாழையை எடுத்து பக்கவாட்டில் உள்ள முட்களை நீக்கி கொள்ள வேண்டும்
தோலை நீக்கிவிடக்கூடாது
தோலை சுத்தமான துணியினால் துடைத்துக் கொள்ளவேண்டும் அடுத்த படியாக எவ்வளவு முடியுமோ அவ்வளவு சிறியதாக கற்றாழையை நறுக்கிக் கொள்ளவேண்டும்
நறுக்கப்பட்ட துண்டுகளை ஒரு பாத்திரத்தில் கொட்டி தேன் மற்றும் whisky (or) brandy யுடன் சேர்த்து ஒரு கரண்டியால் நன்றாக கலக்க வேண்டும்
இப்போது மருந்து தயாராகி விட்டது
மருந்தை உட்கொள்ளும் விதம்
இம்மருந்தை தினமும் மூன்று வேளை உணவு அருந்துவதற்கு 30 நிமிடத்திற்கு முன்பு 15 ml வீதம் உண்ணவேண்டும் .ஒவ்வொரு முறை பயன்படுத்தும்போதும் மருந்தை நன்றாக குலுக்கிக் கொள்ளவேண்டும. மேலே சொன்ன அளவில் செய்தால் பத்து நாட்களுக்கு இந்த மருந்து வரும். மருந்து தீர்ந்தவுடன் 10 நாள் கழித்து மீண்டும் தயாரித்து உண்ணவேண்டும. பத்து நாட்களுக்கு மேல் மருந்தை storage செய்ய கூடாது.
இடையிடையே மருத்துவ பரிசோதனை செய்து கொண்டு நோய் நன்கு குணமாகும் வரை மருந்தை உட்கொள்ளவேண்டும் .சிலருக்கு மிக குறுகிய காலத்திலேயே இதன் மூலம் நிவாரணம் கிடைத்துள்ளது .
இது மிகவும் எளிதான சக்தி மிகுந்த மருந்து ஆகும் . மருந்தை குளிர்சாதன பெட்டியிலோ அல்லது அதிக வெப்பம் இல்லாத இடங்களிலோ காற்று புகாத பாட்டிலில் வைத்திருப்பது நல்லது .
உங்களால் முடிந்தவரை உங்கள் நட்பு வட்டாரத்தில் இதை தெரியப்படுத்துங்கள். யாரோ ஒருவருக்கு இது மிக தேவையானதாக இருக்க கூடும்… ! சிகரெட் பிடிக்கும் அனைவரும் உடனடியாக , புகை பழக்கத்தை நிறுத்தி , இந்த மருந்தை உட்கொள்ள ஆரம்பித்தல் நல்லது.ஒரே ஒரு நிமிஷம் , உங்களுக்கு புற்று நோய் வந்துடுச்சுனு டாக்டர் சொல்றதா நினைச்சுக்கோங்க.. கண் முன்னாலே உங்க மனைவி, குழந்தைகள், வயசான அப்பா , அம்மா எல்லோரும், நீங்க இல்லாம – கஷ்டப்படப் போறதை நினைச்சுப் பாருங்க… அந்த கருமத்தை , இதுக்கு மேலே தொடுவீங்க !?
நாம மனசு வைச்ச எல்லாம் முடியும் சார்!

Wednesday, February 5, 2014

அதிமதுரம்

அதிமதுரம் என்று ஒன்று இருப்பது நிறைய பேருக்கு தெரியாது. ஆனால் அதில் இருக்கும் மருத்துவ குணங்களை இயற்க்கையின் வரம் எனலாம். இனி அதைப் பற்றி பார்ப்போம். நம் நாட்டு குண்டுமணியின் வேர் அதிமதுரம் எனப்படுகிறது. மேனாட்டில் விளையும் குண்டுமணி வேரில் மருத்துவப் பயன் மிகவும் அதிகம். இவ்வேர் இனிப்புச் சுவையும் இனிமையான மணமும் நிறைந்தது.

அதிமதுரம் சர்வதேச மருத்துவ மூலிகையாகும். அதிமதுரத்தின் மருத்துவ குணங்கள் அனைத்தும், உலகத்தின் எல்லா மருத்துவ முறைகளிலும் பயன்படுத்தப்படுகிறது. அதிமதுரம் மிக எளிய முறையில் பயன்படுத்தப்பட்டாலே அனேக நோய்களை நீக்கி விட முடியும். மனிதர்களுக்குத் தீங்கு செய்யும் வைரஸ் கிருமிகளை அழிக்கும் சக்திகள் நிரம்பியது.

1. அதிமதுரத்தில் உள்ள பசைப் பொருளும் பிசின் பொருளும் உணவு மண்டலத்தில் செயல்பட்டு உணவு செரிப்பதற்கு உதவுகிறது. மலச்சிக்கலை நீக்குவதில் நிகரற்ற முறையில் செயல்படுகிறது.

2. ஊட்டச் சத்தாகவும் இரத்தப் போக்கை நிறுத்துவதிலும், சொட்டு மூத்திரத்தை நிவர்த்திக்கவும், சிறுநீர்ப்பை புண்களை ஆற்றவும். கல்லடைப்பை நீக்கவும் பயன்படுகிறது.

3. தோல் நோய்கள், கண்நோய்கள், சளி, சரும அலர்ஜி குணமாகும். வேற்று மருந்துகளுடன் கூட்டியும், சூரணம், கஷாய ரூபத்தில், தனியாகவும் உபயோகித்து நோய்களிலிருந்து நன்மை பெறலாம்.

4. அதிமதுரத்தைத் தூளாக்கி பசும்பாலில் ஒரு மணி நேரம் ஊறவைத்து அரைத்து மயிர்க்கால்களில் ( தலை மண்டை ) அழுத்தித் தேய்த்து அப்படியே 2 மணி நேரங்கழித்துக் குளிக்க தலைமயிரின் ( தலைமுடி ) குறைகள் நீங்கும்.

5. தலையிலுள்ள சிறு புண்கள் குணமாகும். கேசம் பட்டு போல் மினுமினுப்பாகவும் அகால நரையும் நீங்கும்.

6. தேங்காய் பாலைத் தலையில் அரை மணி நேரம் ஊற வைத்துக் குளித்தால் முடி உதிர்வது நிற்கும். வாரம் ஒரு முறை இப்படியாக முடி உதிர்வது நிற்கிற வரை செய்ய வேண்டும் . அதிமதுரத்தை இடித்து எருமைப்பால் விட்டு நன்றாக அரைத்து தலையில் தேய்த்து வந்தாலும் குணம் தெரியும்.

7. நெல்லி முள்ளியுடன், கரிசலாங்கண்ணி, அதிமதுரம் ஆகியவற்றை சம அளவு எடுத்துச் சேர்த்து, அரைத்து தலையில் தேய்த்து ஊறவைத்துக் குளித்து வரலாம். கடுக்காய்க்கு நரையை அகற்றிக் கருமையாக்கும் தன்மை உண்டு. கரிசலாங்கண்ணிச் சாற்றையும், கடுக்காய் ஊறிய தண்ணீரையும் கலந்து தலையில் தேய்த்துச் சிறிது நேரம் ஊறியதும் குளிக்க வேண்டும். இளநரை நீங்கும்.

8. அதிமதுரம், கடுக்காய், திப்பிலி, மிளகு சேர்த்து வறுத்து பொடி செய்து நெய்யில் கலந்து சாப்பிட கண் எரிச்சல் நீங்கும். கண் ஒளி பெறும்.

9. இருமல், வயிற்றுப்புண், பசியின்மை, சுவையின்மை, சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல்.

10. அதிமதுரத்துடன் சமஅளவு தோல் சீவிய சுக்கு சேர்த்து தூளாக்கி காலை, மாலை உணவுக்குப் பிறகு கால் டீஸ்பூன் தேனில் குழைத்து சிறிது சிறிதாக சுவைத்து உண்ண தலைச்சுற்றல், வாந்தி, மயக்கம் போகும்.

11. அதிமதுர இலையை அரைத்துப் பூசிவர உடலிலும், அக்குளிலும் உண்டாகும் கற்றாழை நாற்றம், அரையில் உண்டாகும் சொறி, சிரங்கு போகும்.

12. அதிமதுரத் துண்டு ஒன்றை வாயிலிட்டுச் சுவைத்து விழுங்க இருமல் தணியும். அதிமதுரம், சோம்பு, சர்க்கரை வகைக்கு 35 கிராம், கொடி வேலி வேர்ப்பட்டை 17 கிராம் இலைகளைச் சூரணம் செய்து சித்திரை முதல் ஆடி வரை சாப்பிட்டுவர நோயணுகாது. தலைவலி, ஒற்றைத் தலைவலி, தீராத்தலைவலி, காய்ச்சல் தீரும். கண்கள் ஒளி பெறும்.

13. அதிமதுரம், கடுக்காய், மிளகு மூன்றையும் சம எடையில் எடுத்து இளவறுப்பாய் வறுத்து, சூரணம் செய்து வைத்துக் கொண்டு 5 கிராம் அளவில் தேனில் குழைத்துச் சாப்பிட்டால், அதிகச் சூட்டினால் ஏற்படும் இருமல் தீரும்.

14. அதிமதுரம், சீரகம் சரி எடை எடுத்து பொடித்து வைத்துக் கொண்டு 20 கிராம் பொடியை 200 மில்லி தண்ணீரில் போட்டுக் கொதிக்க வைத்து 100 மில்லியாகச் சுண்டியதும் வடிகட்டி காலை வேளையில் மூன்று தினங்கள் சாப்பிட்டால் கருவுற்ற பெண்களுக்கு பிரசவத்திற்கு முன்னதாக உள்ள காலங்களில் ஏற்படும் உதிரப் போக்கை நிவர்த்தி செய்து விடலாம்.

15. அதிமதுரம், சங்கம் வேர்ப்பட்டை சமமாக எடுத்துப் பொடி செய்து எலுமிச்சம் பழச்சாற்றில் அரைத்து தேற்றாங்கொட்டை அளவு மாத்திரை செய்து உலர்த்தி வைத்துக் கொண்டு, பசும்பாலில் மூன்று தினங்கள் சாப்பிட்டால், மஞ்சள் காமாலை நிவர்த்தியாகும். புளியில்லா பத்தியம் இருக்க வேண்டும். சுகப் பிரசவத்திற்கு...
அதிமதுரம், தேவதாரம் இவைகள் வகைக்கு 35 கிராம் பொடி செய்து, பிறகு வெந்நீர் விட்டு நன்றாக அரைத்து, பிரசவ வலி துவங்கிய உடன் இரண்டு முறை கொடுத்தால் சுகப்பிரசவம் ஏற்படும்.

16. அதிமதுரச் சூரணத்தைத் தயாரித்து வைத்துக் கொண்டு 1_2 கிராம் அளவில் தேனில் குழைத்து, தினம் மூன்று வேளை சாப்பிட்டால் தொண்டைக் கட்டு, இருமல், சளி குணமாகும். இதைச் சாப்பிட்டு வருபவர்களுக்கு ஆண் தன்மை பலவீனம் நீங்கும். உடல் பலமும், ஆரோக்கியமும் விருத்தியாகும்.

17. பெண்களுக்கு ஏற்படும் கருப்பைத் தொடர்பான நோய்கள் நிவர்த்தியாகும். ஆரோக்கியமான பெண்களின் மலட்டுத்தன்மை நீங்கும்.

18. அதிமதுரம், ரோஜா மொக்கு, சோம்பு இவற்றைச் சம அளவில் எடுத்து இடித்துச் சலித்து வைத்துக்கொண்டு, இரவு படுக்கும் போது 4_6 கிராம் பாலில் கலந்து சாப்பிட்டால் மலச்சிக்கல் இருக்காது. இலகுவாக மல விருத்தியாகும்.

19. சோம்புச்சூரணம், அதிமதுரச் சூரணம் தலா 5 கிராம் அளவில் இரவு படுக்கும்போது சாப்பிட்டு சுடு தண்ணீர் சாப்பிட்டால், இலகுவாக மல விருத்தியாகும். உள் உறுப்புக்கள் சூடுதணிந்து, சுறுசுறுப்பாக உடல் இயங்கச் செய்யும்.

20. அதிமதுரச் சூரணம் கலப்படம் இல்லாத சந்தனச் சூரணம் வகைக்கு அரை கிராம் எடுத்து பாலில் கலந்து 3_4 வேளை சாப்பிட்டால், வாந்தியுடன் இரத்தம் வருதல் நிற்கும்... உடலில் உள் உறுப்பு ரணங்கள் ஆறிவிடும்.

21. போதுமான அளவு தாய்ப்பால் இல்லாதவர்கள் ஒரு கிராம் அதிமதுரச் சூரணத்தைப் பாலில் கலந்து சிறிதளவு இனிப்பு சேர்த்துச் சாப்பிட்டு வந்தால், தாய்ப்பால் அதிகமாகச் சுரக்கும். இதன் மூலம் குழந்தைகளுக்குக் கூடுதலாக ஊட்டச்சத்து .

22. அதிமதுரம், வாதுமைப் பிசின், வேலம் பிசின் சமமாக வகைக்கு 10 கிராம் அளவில் சேகரித்து வைத்துக் கொண்டு, 250 கிராம் சர்க்கரையைத் தண்ணீர் சிறிதளவு விட்டு பாகு பதம் வரும்வரை காய்ச்ச வேண்டும். தேன் பதம் வரும்போது மேற்கண்ட சூரணங்களைக் கொட்டிக் கிண்டி லேகியம் தயாரித்து வைத்துக் கொண்டு, இரண்டு தேக்கரண்டியளவு மூன்று முறை சாப்பிட்டால், வரட்டு இருமல் தீரும். கோழையுடன் உள்ள இருமலும் தீரும். தொண்டைப் புண் ரணங்கள் விரைவில் ஆறிவிடும்.

23. அதிமதுரம், அரிசித்திப்பிலி, சித்தரத்தை மூன்றையும் தலா பத்து கிராம் அளவில் சேகரித்து வைத்துக்கொண்டு, இதில் முசுமுசுக்கை இலை பத்து கிராம். ஆடா தொடை இலை பத்து கிராம், இவைகளை 200 மில்லி தண்ணீரில் விட்டுக் காய்ச்சி 50 மில்லியாகச் சுண்டியதும் வடிகட்டி, காலை, இரவு இரண்டு வேளை சாப்பிட்டு வந்தால், நெஞ்சுச் சளியும் அனைத்து வகைச் சளிகளும் வெளியாகும். இருமல் நின்று விடும். ஆஸ்துமா நோயாளிகளுக்குச் சிறந்த நிவாரணமாகும். இம்முறையில் தயாரிக்கப்பட்ட மருந்தை சிறுவர் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பருக, சளித்தொல்லை நீங்கும்.

24. அதிமதுரம், வால்மிளகு, சித்தரத்தை, திப்பிலி ஆகியவை வகைக்கு 5 கிராம் எடுத்து சன்னமாகப் பொடித்து 250 மில்லி கொதிக்கும் நீரில் போட்டு மூடி 30 நிமிஷங்கள் சென்றபின் வடிகட்டி காலை, மாலை இருவேளை 30 மில்லி வீதம் சாப்பிட்டால் இருமல் தீரும்..அதிமதுரம் 15 கிராம், சீரகம் 15 கிராம், வெங்காயம் 20 கிராம், சங்கம் வேர்ப்பட்டை 15 கிராம் இவைகளை பசும்பால் தெளித்து நன்றாக அரைத்து காலை வேளையில் மூன்று தினங்கள் மட்டும் சாப்பிட்டால் மஞ்சள் காமாலை தீரும். மூன்று தினங்களுக்கும் ஆகாரத்தில் உப்பு, புளி சேர்க்காமல் பத்தியம் இருக்க வேண்டும்.

25. அதிமதுரத்தை நன்கு பொடித்து பாலில் கலக்கி சிறிதளவு தேன் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால், தாது விருத்தி உண்டாகும். போக சக்தி அதிகரிக்கும். போக சக்தியை இழந்த வாலிபர்களுக்குப் புத்துயிர் அளிக்கும் சிறந்த மூலிகையாகும்.

26. அதிமதுரம், திராட்சை இவை இரண்டையும் சமமாகப் பொடி செய்து 50_100 கிராம் எடுத்து தண்ணீரில் அரைத்து பாலில் கலக்கி பெண்களின் மாதவிடாய் தொடங்கிய நாள் முதல் ஐந்து தினங்கள் சாப்பிட்டு வந்தால், ஆரோக்கியமான பெண்களுக்குக் கருத்தரிக்கும். கருத்தரிக்கும் வரை 2_3 மாதங்கள் சாப்பிட்டால் நல்ல பலனை எதிர்பார்க்கலாம்.

27. அதிமதுரத்தை நன்றாகப் பொடி செய்து, அம்மியில் வைத்து எருமைப்பால் விட்டு நன்றாக விழுதாகும் வரை அரைத்து, தேவையான அளவு எருமைப்பாலில் கலக்கித் தலைக்குத் தேய்த்துக் குளித்து வந்தால், இளவயதில் ஏற்பட்ட தலை வழுக்கை நீங்கி மீண்டும் மயிர் முளைக்கும். தலையில் உள்ள பொட்டு, பொடுகு, சுண்டு முதலியவை நீங்க, இதைப் பயன்படுத்துவதால் மேற்கண்ட குறைகள்நிவர்த்தியாகும்.

28. அதிமதுரம், சோம்பு, சர்க்கரை இவைகளை வகைக்கு 35 கிராம் எடுத்து, தனித்தனியாக நன்கு சூரணம் செய்து, பின் ஒன்று கூட்டி வைத்துக் கொண்டு தேனில் குழைத்துச் சாப்பிட்டு வந்தால், உடல் சூட்டினால் ஏற்பட்ட தலைவலி நீங்கும். இதையே தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் தொடர்ந்து தொல்லை கொடுக்கும் தலைவலி, தீராத தலைவலி, ஒற்றைத் தலைவலி தீரும். அதிமதுரம், கடுக்காய், தான்றிக்காய், நெல்லிக்காய் இவைகளை சம எடையாக எடுத்துச் சூரணம் செய்து அரைத் தேக்கரண்டியளவு தேனில் குழைத்துச் சாப்பிட்டால் சீதளத்தால் ஏற்பட்ட தலைவலி தீரும். இதே சூரணத்தை நெய்யில் குழைத்துச் சாப்பிட்டு வந்தால் அதிக வெப்பத்தால் ஏற்பட்ட தலைவலி நீங்கும்.

29. அதிமதுரத் துண்டு ஒன்றை வாயில் அடக்கிக் கொண்டிருந்தால் வாயில் உமிழ் நீர் சுரக்கும். இந்த உமிழ்நீரை உள்ளுக்கு விழுங்கிக் கொண்டிருந்தால் தொண்டைக் கரகரப்பு நீங்கும். குரல் கம்மல் நீங்கி விடும்... தொண்டையில் உள்ள சளிக் கட்டு கரைந்து விடும்.

30. பொதுப்பிரயோகமாக அதிமதுரச் சூரணத்தை தினசரி ஒரு தேக்கரண்டியளவு சாப்பிட்டு வந்தால், ஆஸ்துமா நோயைக் கட்டுப்படுத்தலாம். சளி, இருமல் இருக்காது. தொண்டை சம்பந்தப்பட்ட தொல்லைகளும் நீங்கிவிடும்.

Tuesday, September 10, 2013

மூலிகைச் சாறு



சில மூலிகைச் சாறுகளை உடலில் மேல்பூச்சாக பயன்படுத்தினால் எண்ணற்ற தோல் வியாதிகளை குணப்படுத்தலாம். நம் முன்னோர்கள் நோயின் தாக்கம் இன்றி வாழ அவ்வப்போது வீடுகளில் மூலிகைச் சாறு கொடுப்பார்கள். இது இன்றைய தலைமுறையினருக்கு தெரிய வாய்ப்பில்லை. இந்த மூலிகைச் சாறுகளின் மருத்துவப் பயன்களை அன்றே உணர்ந்த முன்னோர்கள் அதை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதையும் தெளிவாக பாடியுள்ளனர். இந்த மூலிகைச் சாறுகளின் பயன்களை பார்ப்போமா....


எலுமிச்சை சாறு:

எலுமிச்சை சாற்றை அருந்தினால் பித்த மயக்கம், வாந்தி, கண்ணோய், இரத்த சோகையால் ஏற்பட்ட சோர்வு முதலியவை நீங்கும். உடலுக்கு புத்துணர்வை தரும். நன்கு பசியைத் தூண்டும். தாகத்தைத் தணிக்கும். எலுமிச்சம் சாற்றை தலையில் தேய்த்து குளித்து வந்தால் மனநோய், மன அழுத்தம் நீங்கும். உடலில் தேய்த்து குளித்தால் தோல் சம்பந்தப்பட்ட சில வியாதிகள் குணமடையும். நகச்சுற்றுக்கு இதன் சாறே சிறந்த மருந்து. யானைக்கால் வியாதி, கண்ணோய், காதுவலிக்கும் எலுமிச்சை சாறு சிறந்த மருந்து.

இஞ்சி சாறு:

நம் முன்னோர்கள் காலையில் இஞ்சி, கடும்பகல் சுக்கு, மாலையில் கடுக்காய் என்றார்கள். இம்மூன்றையும் தினமும் உட்கொண்டால் நோய் என்பதே நம்மை நெருங்காது.

இஞ்சியை சாறு எடுத்து சிறிதளவு தினமும் அருந்தினால் வயிற்றுவலி, வயிற்றுப் பொருமல், வாந்தி, குடல்நோய், பித்த மயக்கம், போன்றவை நீங்கும். நீரிழிவு நோயாளிகளுக்கும் இது உற்ற மருந்தாகும். மேலும் தொண்டைப்புண், குரல் கம்மல், இவைகளைக் குணப்படுத்தும்.

கரிசலாங்கண்ணிச் சாறு:

கரிசலாங்கண்ணிச் சாறு ஜலதோஷம், காய்ச்சல், உடல்வலி, விஷக்கடி, சிறுநீரில் இரத்தம் வெளியேறுதல் போன்றவற்றை குணப்படுத்தும். இதன் சாறை காலையில் அருந்துவது நல்லது. அல்லது மதிய உணவுக்குப்பின் சூப் செய்து அருந்தலாம்.

பொன்னாங்கண்ணிச் சாறு:

பொன்னாங்கண்ணி பல வகையான தைல வர்க்கத்தில் அதிகம் உபயோகப்படுத்தப்படுகிறது. இந்த பொன்னாங்கண்ணி கீரையை சூப் செய்து காலை மாலை இருவேளை என 15 நாட்களுக்கு அருந்தி வந்தால் கண் நோய்கள் ஏதும் அண்டாது. உடலின் வெப்பத்தைக் குறைத்து உடலுக்கு புத்துணர்வை கொடுக்கும்.

தூதுவளைச் சாறு:

வறட்டு இருமல், தொண்டைக் கட்டு, தொண்டைப்புண், அடிக்கடி ஜலதோஷம் உள்ளவர்கள் தூதுவளைச் சாறு அருந்தி வந்தால் சளித் தொல்லையிலிருந்து விடுபடலாம்.

அருகம்புல் சாறு:

அருகம்புல் சாறானது இரத்தத்தை சுத்தப்படுத்துவதுடன் உடலுக்கும் புத்துணர்வை கொடுக்கிறது. உடலில் தேங்கியுள்ள அசுத்த நீர் அனைத்தையும் வெளியேற்றுகிறது.

தண்­ணீர் விட்டான் கிழங்கு சாறு:

தண்ணீ­ர் விட்டான் கிழங்கின் சாறை எடுத்து தினமும் காலையில் அருந்தி வந்தால் உடல் சூட்டை தணித்து பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப் படுதலைத் தடுக்கும். தாது புஷ்டியை கொடுக்கும்.

பித்தம் சம்பந்தப்பட்ட நோய்களைக் குணப்படுத்தும்.

வெள்ளைப் பூண்டு சாறு:

வெள்ளைப் பூண்டு சாற்றை காதில் இரண்டு சொட்டு விட்டால் காது மந்தம் குறையும். உள்நாக்கில் தடவினால் உள்நாக்கு வளர்ச்சி (டான்சில்) குறையும். மேலும் சிறிது அருந்தினால் இருமல், சுவாசம் அடைப்பு, மலக்கிருமிகள் நீங்கும். உடலின் மேல் சுளுக்கு ஏற்பட்ட பகுதிகளிலும் தடவலாம்.

வெற்றிலைச் சாறு:

வாத பித்த கபத்தினை அதனதன் நிலையில் சமப்படுத்த வெற்றிலைச் சாறு சிறந்த மருந்தாகும். சளியைப் போக்கும். காணாக்கடிகளுக்கு இதன் சாறு சிறந்த மருந்து. அஜீரணத்தைப் போக்கும். ஜீரண சக்தியைத் தூண்டும்.

வேலிப்பருத்தி சாறு:

சுவாசம், காச நோய்களுக்கு சிறந்த மருந்தாகும். கருப்பையிலுண்டாகும் பக்க சூலைக்கு இதன் சாறு தேன் கலந்து கொடுத்தால் பக்க சூலை நீங்கும். கை கால் வீக்கங்களுக்கு மேல் பூச்சாகத் தடவலாம்.

Tuesday, August 27, 2013

ஆகாயத்தாமரை..!

ஆகாயத்தாமரைக்கான பட முடிவுகள்"

நீரில் மிதக்கக் கூடிய கூட்டம் கூட்டமாக வளரும் சிறுசெடிகள். காம்பற்ற இலைகளையும் குஞ்சம் போன்ற வேர்களையும் உடையது. அந்தரத் தாமரை என்றும் குறிப்பிடுவதுண்டு. தமிழகமெங்கும் குளம் குட்டைகளில் வளர்வது. இலைகளே மருத்துவப் பயனுடையவை.

வெப்பு தணித்து தாகங் குறைக்கும் மருந்தாகவும் தாதுக்களின் எரிச்சலைத் தணித்து அவற்றைத் துவளச் செய்யும் மருந்தாகவும் பயன் படுத்தலாம்.

1. இலையை அரைத்துக் கரப்பான், தொழுநோய்ப்புண் ஆகியவற்றின் மீது வைத்துக் கட்டிவர விரைவில் ஆறும். ஆசனவாயில் வைத்துக் கட்டிவர வெளிமூலம், ஆசனகுத்தல் ஆகியவை தீரும்.

2. 25 மி.லி. இலைச்சாற்றைச் சிறிது தேனுடன் காலை, மாலை 5 நாள்கள் கொடுக்க மார்பினுள் உண்டாகும் கிருமிக் கூடுகள் போகும். மேலும் நீர்ச்சுருக்கு, மூலம், சீதபேதி, இருமல் ஆகியவை தீரும்.

3. இலையை நீரிலிட்டுக் கொதிக்க வைத்து அந்த ஆவியை 10 நிமிடம் ஆசனவாயில் பிடித்து வர மூல முளை அகலும்.

4. இலைச் சாறு அரை லிட்டர், நல்லெண்ணெய் 1 லிட்டர் ஆகியவற்றைக் கலந்து சிறு தீயில் காய்ச்சி வண்டல் மெழுகுப் பதமான நிலையில் கிச்சிலிக் கிழங்கு, சந்தனத் தூள், வெட்டி வேர், கஸ்தூரி மஞ்சள், சாம்பிராணி வகைக்கு 10 கிராம் பொடித்துப் போட்டு இறக்கி வடித்து (ஆகாயத் தாமரைத் தைலம்) வாரம் 1 முறை தலைக்கிட்டுக் குளித்து வர உட்சூடு, கண்ணெரிச்சல், மூல நோய் ஆகியவை தீரும்.

மலட்டுத்தன்மையை போக்கும் தேனீயின் மகரந்தம்.!




தேனீயின் மகரந்தமானது உலகம் முழுவதும் மருத்துவத்திற்கு பயன்படுத்தப்படும் ஒரு சிறந்த மருந்தாகும். தேனீயின் மகரந்தமானது பெரிய தேனீக்களின் மூலம் உருவாக்கப்பட்டு இளம் தேனீக்களை வளர்க்க மகரந்தத்தை உணவாக வழங்குகிறது. இயற்கையின் மிக முக்கியமான ஊட்டமளிக்கும் உணவாக கருதப்படுகிறது. இந்த மகரந்த உணவானது மனிதனுக்கு தேவைப்படும் அனைத்து ஊட்டச்சத்துகளையும் கொண்டுள்ளது. தேனீ சேகரிக்கும் மகரந்தத்தில் புரதம் சுமார் 40%, இலவச அமினோ அமிலங்கள், பி காம்ப்ளக்ஸ் வைட்டமின், ஃபோலிக் அமிலம் போன்றவை நிறைந்துள்ளது.

தேனீயின் மகரந்தம் முழுமையான இயற்கை உணவு, இதில் முழுமையாகவே விலங்கு சம்பந்தப்பட்ட சிறு பொருட்களைக் கூட கொண்டிருக்காது. மகரந்தமானது விலங்குகளின் மூல ஆதாரங்களை விட புரதங்களை அதிகம் கொண்டுள்ளது அதாவது இதில் மாட்டிறைச்சி, முட்டை, சீஸ் போன்றவற்றை விட அதிக அமினோ அமிலங்களை கொண்டுள்ளது. இதன் புரதத்தில் பாதிக்கு மேலாக அமினோ அமிலங்களை கொண்டுள்ளதால் அப்படியே பயன்படுத்தலாம். ஒரு டீஸ்பூன் மகரந்தத்தை தயாரிக்க ஒரு நாளைக்கு எட்டு மணி நேரத்தை செலவிடுகிறது. ஒரு டீஸ்பூன் மகரந்தத்தில் 2.5 பில்லியன் தானியங்கள் உள்ளது.

ஆற்றலை வழங்கும்

தேனீயின் மகரந்தம் அதிக ஊட்டச்சத்துகளை கொண்டுள்ளதால் மனதனுக்கு தேவையான இயல்பான ஆற்றலை வழங்குகிறது. இதில் கார்போஹைட்ரேட், புரதம், வைட்டமின் பி கொண்டுள்ளதால் உடல் உறுதியை மேம்படுத்தி சோர்வை நீக்கி நாள் முழுவதும் சுறுசுறுப்பை தருகிறது.

தோல் பராமரிப்பு

தேனீயின் மகரந்தம் தோலில் ஏற்படும் தடிப்பு, அலர்ஜி, எக்ஸிமா, பொதுவாக தோல் எரிச்சல், போன்றவற்றை சரிசெய்ய மேற்பூச்சி பொருட்களில் பயன் படுத்தப்படுகிறது. இது அமினோ அமிலங்கள் மற்றும் வைட்டமின்கள் கொண்டுள்ளதால் தோலை பாதுகாத்து செல்களின் மறு உருவாக்கத்திற்கு உதவுகிறது.

சுவாச அமைப்பு

நுரையீரல் திசுக்களின் காரணமாக உருவாகும் ஆரம்பகட்ட ஆஸ்துமாவை தடுக்கும். ஏனெனில் ஆஸ்துமாவை தடுப்பதற்க்கு தேவையான ஆண்டியாக்ஸிடண்ட்களை அதிக அளவு கொண்டுள்ளது. இருதய அமைப்புக்கு ஆதரவு புரிகிறது. ஆக்ஸிஜனேற்ற எதிர்பொருட்களை அதிகளவு கொண்டுள்ளதால் இரத்த நாளங்கள், இரத்த ஓட்ட பிரச்சினைகள், கொழுப்பு அளவுகளை சரி செய்து இருதய அமைப்புக்கு ஆதரவு தருகிறது. மேலும் பக்கவாதம், மாரடைப்பை தடுக்கிறது.

செரிமான அமைப்பு

இதில் ஆரோக்கியமான வைட்டமின்கள், தாதுக்கள், புரதம் ஆகியவற்றை கூடுதலாக கொண்டுள்ளதால் செரிமானத்தை சரிசெய்கிறது. ஏனெனில் தேனீயின் மகரந்தம் செரிமானத்திற்கு உதவும் என்சைம்களை கொண்டுள்ளது. என்சைம்கள் நமது உடலுக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துகளையும் கிடைக்க செய்கிறது. மேலும் ஒவ்வாமைகளை குணப்படுத்தும் ஆற்றலையும் கொண்டுள்ளது..

மலட்டுத்தன்மையை

தேனீயின் மகரந்தம் கருப்பையின் செயல்பாட்டை தூண்டி முட்டைகளை மீளுருவாக்கும் செய்கிறது. எனவே கர்ப்பத்தை தூண்டுவதற்கு பெரிதும் உதவுகிறது. இது ஒரு வகையிலான ஹார்மோன் பூஸ்டர், பாலுணர்வூக்கி எனவும் அழைக்கின்றனர். புரோஸ்டேட்க்கு உதவி புரிகிறது. அதாவது புரோஸ்டேட் மிகைப்பெருக்கத்தால் பாதிக்கப்பட்ட ஆண்கள் தேனீயின் மகரந்தம் மூலம் நிவாரணம் காணலாம். மேலும் வீக்கத்தை குறைத்து சிறுநீர் கழிப்பை அதிகப்படுத்துகிறது.

Tuesday, September 25, 2012

சில நோய்களுக்கான மூலிகை மருந்துகள்



உடல் நலம் சரியில்லை என்றால் நிறைய பேர் உடனே மருத்துவரிடம் தான் செல்ல வேண்டும் என்று நினைப்பார்கள்.
ஆனால் ஒருசிலர் நமது பாரம்பரிய மருந்துகளை பின்பற்றுவார்கள். ஏனெனில் நமது பாரம்பரிய வீட்டு மருந்துகளின் அருமை அவர்களுக்கு நன்கு தெரிந்திருப்பதே ஆகும்.
ஆனால் சிலருக்கு அதன் அருமை, அதனைப் பற்றிய ஒரு நன்மைகள் சரியாக தெரியவில்லை. மேலும் நிறைய மக்கள் கெமிக்கல் உள்ள மருந்துகளை பயன்படுத்துதைவிட, மூலிகை மருத்துவமான ஆயுர்வேதத்தை தான் பின்பற்றுகிறார்கள்.
கறிவேப்பிலை: உணவுகள் அனைத்திலும் பொதுவாக பயன்படுத்தும் ஒரு பொருள் தான் கறிவேப்பிலை. அத்தகைய கறிவேப்பிலை ஒரு சூப்பரான மருத்துவகுணம் கொண்டது.
அதிலும் நீரிழிவிற்கு நல்லது. ஆகவே நீரிழிவால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்ந்து மூன்று மாதம் தினமும் 8-10 இலைகளை சாப்பிட்டு வந்தால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு குறைந்துவிடும். அதுமட்டுமல்லாமல், உடல் எடையையும் குறைத்துவிடும்.
இலவங்கப்பட்டை: இது பெரும்பாலும் பிரியாணிக்கு பயன்படுத்துவார்கள். இத்தகைய இலவங்கப்பட்டையை தினமுத் சாப்பிட்டு வந்தால், நீரிழிவு குறைந்துவிடும்.
மேலும் சில காரத்திற்கு பயன்படுத்தும் உணவுப் பொருட்களான இலைகள், மஞ்சள் மற்றும கிராம்பு போன்றவையும் நீரிழிவை சரிசெய்யும்.
நெல்லிக்காய்: நெல்லிக்காய் சாப்பிட்டால், கூந்தல் நன்கு வளரும் என்று அனைவருக்கும் தெரிந்தது. அத்தகைய நெல்லிக்காய் ஒரு சிறந்த மூலிகைப்பொருள்.
இதனால் இரத்ததில் உள்ள சர்க்கரையின் அளவு குறையும். அதற்கு இந்த நெல்லிக்காயை அப்படியே சாப்பிடலாம் அல்லது பாகற்காய் ஜூஸ் உடன் கலந்தும் சாப்பிடலாம். மேலும் இந்த நெல்லிக்காயை தொடர்ந்து 2-3 மாதத்திற்கு சாப்பிட்டால், நல்ல பலன் கிடைக்கும்.
துளசி: உடலில் அதிக குளிர்ச்சியின் காரணமாக வரும் சளி மற்றும் இருமல் போன்றவற்றிற்கு துளசி இலைகளை பச்சையாகவோ, ஜூஸ் அல்லது துளசி டீ-யாகவோ செய்து சாப்பிட்டால், நல்லது.
இஞ்சி: சளி மற்றும் இருமலுக்கு இஞ்சி மற்றொரு சிறந்த மூலிகைப் பொருள். ஆகவே சளி அல்லது இருமல் ஏற்படும் போது ஒரு துண்டு இஞ்சியை தேனுடன் தொட்டு சாப்பிடலாம். இல்லையெனில் அதனை இஞ்சி டீ போட்டும் குடிக்கலாம்.
ஏலக்காய்: உணவுகளில் நறுமணத்திற்கு சேர்க்கும் ஏலக்காயும், சளி மற்றும் இருமலுக்கு சிறந்தது. ஆகவே இதனை டீ செய்து குடித்தால், இருமலால் தொண்டையில் ஏற்படும் அரிப்பு நீங்கும்.
எலுமிச்சை: வெதுவெதுப்பான நீரில் ஒரு டீஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் ஒரு டீஸ்பூன் தேன் விட்டு கலந்து குடித்தால், சளி மற்றும் இருமல் சரியாகும். இதனை ஒரு நாளைக்கு எத்தனை முறை வேண்டுமானாலும் குடிக்கலாம்.


மூலிகைகளை பயன்படுத்தும் விதம்
மூலிகைகளை பல விதங்களில் மருந்தாக பயன்படுத்தலாம்; டீ, கஷாயம், சாராயக்கரைசல் (tincture), பத்து (poultice) போன்ற வடிவில் உபயோகிக்கலாம். ‘மூலிகை டீ’ தயாரிக்க மூலிகை மீது கொதிக்கும் தண்ணீரை ஊற்ற வேண்டும், ஆனால் மூலிகையை தண்ணீரில் போட்டு கொதிக்க வைக்கக் கூடாது என்று நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள். கஷாயம், மூலிகை வேர்களையும் பட்டைகளையும் தண்ணீரில் கொதிக்க வைத்து தயாரிக்கப்படுகிறது; மருத்துவ குணமுள்ள பொருட்களின் சாறை இறக்குவதற்கு அவை இவ்வாறு கொதிக்க வைக்கப்படுகின்றன.
சாராயக்கரைசல்கள் எப்படி தயாரிக்கப்படுகின்றன? அவை “சுத்தமான அல்லது நீர்கலந்த மது, பிராந்தி, வோட்கா போன்றவற்றைக் கொண்டு தயாரிக்கப்படும் மூலிகை சாறுகள்” என ஒரு புத்தகம் சொல்கிறது. பத்துகளோ பல விதங்களில் தயாரிக்கப்படலாம். பொதுவாக அவை நோய்ப்பட்ட அல்லது வலியுள்ள உடல் உறுப்புகளின்மீது தடவப்படுகின்றன.
அநேக வைட்டமின்களையும் மருந்துகளையும் போலல்லாமல், பெரும்பாலான மூலிகைகள் உணவுப்பொருட்களாகவே கருதப்படுகின்றன; அவை பெரும்பாலும் வெறும் வயிற்றில் உட்கொள்ளப்படுகின்றன. மாத்திரை வடிவில்கூட அவை உட்கொள்ளப்படலாம்; அதிக சௌகரியமாகவும் சுவை தெரியாமலும் விழுங்கிவிட மாத்திரைகள் வசதியானவை. மூலிகை மருந்துகளை பயன்படுத்த நீங்கள் முடிவு செய்தால், மருத்துவரின் உதவியை நாடுவது நல்லது.
காலங்காலமாக, ஜலதோஷம், அஜீரணம், மலச்சிக்கல், தூக்கமின்மை, குமட்டல் போன்றவற்றிற்கு மூலிகைகளே பரிந்துரைக்கப்படுகின்றன. இருந்தாலும், அதைவிட பெரிய கோளாறுகளுக்கும் அவை சிலசமயங்களில் உபயோகிக்கப்படுகின்றன; அதுவும் குணப்படுத்தும் மருந்தாக மட்டுமல்ல, தடுப்புமருந்தாகவும்கூட பயன்படுத்தப்படுகின்றன. உதாரணத்திற்கு, ஜெர்மனியிலும் ஆஸ்திரியாவிலும், சா பால்மெட்டோ (Serenoa repensஎன்ற மூலிகை, புற்றுநோயல்லாத விந்துச்சுரப்பி வீக்கத்திற்கு (benign prostatic hyperplasia) ஆரம்ப சிகிச்சையளிக்க பயன்படுத்தப்படுகிறது. சில நாடுகளில் இந்த வியாதி 50 முதல் 60 சதவீத ஆண்களுக்கு வருகிறது. இருந்தாலும் அந்த வீக்கத்தின் காரணத்தை மருத்துவர் கண்டுபிடிப்பது முக்கியம்; அப்போதுதான் புற்றுநோயைப் போல் இதற்கு தீவிர சிகிச்சை தேவையா இல்லையா என்பதை தீர்மானிக்க முடியும்.
சில எச்சரிக்கைகள்
ஒரு மூலிகை தீங்கற்றதென பரவலாக கருதப்பட்டாலும் எச்சரிக்கையாயிருப்பது அவசியம். “இயற்கை மருந்து” என்ற லேபிளைப் பார்த்தவுடனேயே பயப்பட தேவையில்லை என ஒருபோதும் நினைக்காதீர்கள். மூலிகைகள் சம்பந்தமாக ஒரு என்ஸைக்ளோப்பீடியா இவ்வாறு குறிப்பிடுகிறது: “சில மூலிகைகள் மிக ஆபத்தானவை என்பதே கசப்பான உண்மை. [வருத்தகரமாகசிலர் எவ்வித மூலிகைக்கும், அது ஆபத்தானதோ இல்லையோ, தகுந்த கவனம் செலுத்துவதில்லை.” மூலிகைகளில் உள்ள ரசாயனப் பொருட்கள் இதயத்துடிப்பை, இரத்த அழுத்தத்தை, க்ளூகோஸ் அளவை மாற்றலாம். ஆகவே இதயக் கோளாறு, உயர் இரத்த அழுத்தம், அல்லது சர்க்கரை நோய் போன்ற கோளாறுகள் உள்ளவர்கள் அதிக ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.
என்றாலும் பொதுவாக, மூலிகைகளின் பக்க பாதிப்புகள் அலர்ஜியைப் போலத்தான் இருக்கின்றன. அதாவது, தலைவலி, தலைச்சுற்றல், குமட்டல், தோல் தடிப்பு போன்ற பாதிப்புகள்தான் ஏற்படுகின்றன. மூலிகைகள் ஃப்ளூ காய்ச்சலை அல்லது மற்ற அறிகுறிகளை உண்டாக்குவதன் மூலம் “குணப்படுத்தும் சீரழிவை” தூண்டுவதாகக்கூட சொல்லப்படுகிறது. அதாவது மூலிகைகளை சாப்பிடும் ஒருவரின் உடல்நிலை முதலில் மிகவும் மோசமாகும், பிறகுதான் தேறும். மூலிகை வேலை செய்ய ஆரம்பிக்கும் சமயத்தில் உடலிலிருந்து நச்சுப் பொருட்கள் வெளியேற்றப்படுவதால் அவ்வாறு நடப்பதாக சொல்லப்படுகிறது.
அவ்வப்போது, குறிப்பிட்ட சில மூலிகைகளால் சிலர் உயிரையே இழந்திருக்கிறார்கள்; ஆகவே உஷாராக இருப்பதும், விஷயமறிந்தவர்களின் உதவியைப் பெறுவதும் எவ்வளவு முக்கியம் என்பது புரிகிறது. உதாரணத்திற்கு, உடல் எடையைக் குறைப்பதற்காக பொதுவாக உட்கொள்ளப்படும் எஃபிடிரா என்ற மூலிகை, இரத்த அழுத்தத்தை அதிகரிக்கலாம். ஐக்கிய மாகாணங்களில் அறிக்கை செய்யப்பட்டிருக்கும் 100-⁠க்கும் அதிகமான சாவுக்குக் காரணம் எஃபிடிரா என்று சொல்லப்படுகிறது; இருந்தாலும் சான் பிரான்ஸிஸ்கோவைச் சேர்ந்த நோயியல் மருத்துவரான ஸ்டீவன் கார்ச் இவ்வாறு குறிப்பிடுகிறார்: “எனக்குத் தெரிந்தவரை [எஃபிடிராவை சாப்பிட்டதால்இறந்தவர்களுக்கு கடும் இதயத்தமனி நோய் இருந்தது அல்லது அவர்கள் எஃபிடிராவை அளவுக்கதிகமாக சாப்பிட்டுவிட்டார்கள்.”
மூலிகை மருந்துகள் பற்றிய ஒரு புத்தக ஆசிரியரான டாக்டர் லோகன் சேம்பர்லின் இவ்வாறு சொல்கிறார்: “சமீப வருடங்களில், மூலிகைகளால் தீய பாதிப்புகள் ஏற்பட்டதாக காட்டும் ஒவ்வொரு அறிக்கையை எடுத்துக்கொண்டாலும், ஆலோசனைகளை பின்பற்றாததால் வந்த வினையே அது என்பது தெளிவாகிறது. . . . நம்பத்தகுந்த மருந்துபொருட்களின் லேபிளில் கொடுக்கப்பட்டுள்ள அளவுகள் பாதுகாப்பானவை, மிதமானவைகூட. ஆகவே, பயிற்சி பெற்ற மூலிகை நிபுணரின் ஆலோசனையின் பேரில் மட்டுமே அதன் அளவை கூட்டிக் குறைக்கலாம்.”
மூலிகை நிபுணரான லின்டா பேஜ் இந்த எச்சரிக்கையை தருகிறார்: “உடல்நிலை மிக மோசமாக இருந்தால்கூட, மிதமாகத்தான் மருந்துகளை சாப்பிட வேண்டும், அளவுக்கதிகமாக அல்ல. சிறந்த பலனைப் பெறுவதற்கு உங்களுக்கு தேவை அதிக நேரமும் மிதமான சிகிச்சையும்தான். ஆரோக்கியத்தை மீண்டும் பெற காலம் எடுக்கும்.”
சில மூலிகைகள், அளவுக்கு மீறி உட்கொள்ளப்பட்டால் உடனே எதிர்விளைவை உண்டாக்குகின்றன; இவ்வாறு அதன் அளவு அதிகமாகிவிடாதபடி பாதுகாக்கும் இயல்பை இயற்கையாகவே பெற்றிருக்கின்றன என்று மூலிகையியல் புத்தகம் ஒன்று கூறுகிறது. உதாரணத்திற்கு, உடலை ரிலாக்ஸ் செய்ய பயன்படுத்தப்படும் ஒரு மூலிகை, அளவுக்கு அதிகமாக உட்கொள்ளப்படும்போது வாந்தியை உண்டுபண்ணுகிறது. இருந்தாலும், இந்த குணம் எல்லா மூலிகைகளுக்குமே இல்லை; ஆகவே உரிய அளவு மட்டுமே சாப்பிட வேண்டியது எப்போதும் அவசியம்.
இருந்தாலும், ஒரு மூலிகை திறம்பட வேலை செய்வதற்கு போதுமான அளவை தகுந்த வடிவில் சாப்பிடுவது அவசியம் என அநேகர் நினைக்கிறார்கள். சிலசமயங்களில் இவ்வாறு செய்வதற்கு ஒரே வழி சாரத்தை பிரித்தெடுப்பதாகும். ஞாபகசக்தியையும் இரத்த ஓட்டத்தையும் அதிகரிப்பதற்காக வெகு காலமாக பயன்படுத்தப்பட்டு வந்திருக்கும் ஜின்க்கோ பிலோபா என்ற மூலிகையைப் பொறுத்தவரை இதுதான் செய்யப்படுகிறது. ஏனென்றால், ஒருமுறை சாப்பிடுவதற்கு தேவையான அளவைத் தயாரிக்கவே பவுண்டு கணக்கில் இலைகள் தேவை; அப்போதுதான் மருந்து திறம்பட வேலை செய்யும்.
ஆபத்தான கலவை
மூலிகைகள் மற்ற மருந்து மாத்திரைகளோடு சேர்த்து சாப்பிடப்படும்போது பல வித பாதிப்புகளை ஏற்படுத்தலாம். உதாரணத்திற்கு, அவை மற்ற மருந்துகளின் வீரியத்தை அதிகரிக்கவோ குறைக்கவோ செய்யலாம், அம்மருந்துகளை சீக்கிரமாகவே உடலிலிருந்து வெளியேற்றலாம், அல்லது பக்க பாதிப்புகள் ஏற்படும் வாய்ப்பை அதிகரிக்கச் செய்யலாம். ஜெர்மனியில் லேசான அல்லது மிதமான மனச்சோர்வுக்கு பரிந்துரைக்கப்படும் வெட்டைப்பாக்கு (St. John’s wort), மற்ற மருந்துகளை உடலிலிருந்து இரு மடங்கு அதிக வேகமாக வெளியேற்றுகிறது; இவ்வாறு அவற்றின் வீரியத்தை குறைக்கிறது. ஆகவே கருத்தடை மாத்திரைகள் உட்பட வேறெந்த மருந்து மாத்திரைகளை நீங்கள் சாப்பிட்டுக் கொண்டிருந்தாலும், அவற்றோடு சேர்த்து மூலிகை மருந்துகளை சாப்பிடுவதற்கு முன்பு உங்கள் டாக்டரிடம் ஆலோசனை கேளுங்கள்.