Search This Blog

Monday, September 24, 2018

The differences between the common Greek (left) and Albanian (right) clothing during the Ottoman period


“மதக வன்னிய“ Mathaka Wanniya" “இப்படி ஒரு காலம்“


என்னுடைய “இப்படி ஒரு காலம்“ என்ற கட்டுரைப் புத்தகத்தின் முதல் பதிப்பில் அத்தனை பிரதிகளும் விற்றுத் தீர்ந்து விட்டன. இரண்டாவது பதிப்பைச் செய்யுங்கள் எனப் பலரும் கேட்டிருந்தனர். ஆனாலும் மனதில் இன்னமும் தயக்கமுண்டு. இரண்டாவது பதிப்புக்கு தமிழ்ச் சூழலில் அவ்வளவு வரவேற்பிருக்குமா என.
ஆனால், இது சிங்களத்தில் மொழிபெயர்க்கப்பட்டு “மதக வன்னிய“ Mathaka Wanniya" என்ற தலைப்பில் வெளியாகியபோது மூன்று நாட்களிலேயே 1000 பிரதிகள் விற்பனையாகியிருக்கிறது. தொடர்ந்து இரண்டாவது பதிப்பு வெளியாகி அதுவும் அதிகமாக விற்பனையாகியுள்ளது.
இதைப்பற்றி இந்தப் புத்தகத்தை மொழி பெயர்த்த அனுஷா சிவலிங்கம் நேர்காணல் ஒன்றில் கீழ் வருமாறு சொல்லியிருக்கிறார் -
கேள்வி - இந்த நூலுக்கு சிங்கள சமூகத்திடம் வரவேற்பு இருந்ததா?
பதில் - “நான் எதிர்பார்த்ததை விட பல மடங்கு கூடுதலாக இருந்தது. புத்தக அறிமுக நிகழ்வு நடத்த முன்னர் சமூக ஊடகங்கள் ஊடாக இவ்வாறு ஒரு புத்தகம் வெளியிடப்பட உள்ளதாக பகிர்ந்து மூன்று நாட்களுக்குள் 1000 பிரதிகள் விற்பனை செய்யப்பட்டன. கொழும்பில் நடைபெற்ற சர்வதேச புத்தக கண்காட்சியில் அந்த நூலினை பலர் வாங்க முயன்ற போதும் , பிரதிகள் முடிவடைந்து விட்டன. அந்த நூலினை வாசித்த பலர் தம்மையும் தமது இனத்தையும் விமர்சனத்திற்கு உள்ளாக்க தொடங்கினார்கள். அதன் பின்னர் இந்த நூல் தொடர்பில் விமர்சனங்கள் , பாராட்டுக்கள் என பல கடிதங்கள் எனக்கு வந்தன. அவை எனக்கு மட்டும் அல்ல அந்த நூலினை தமிழ் எழுதிய கவிஞர் கருணாகரனுக்கும் பல கடிதங்கள் சென்றன. பல பிரபலமான சிங்கள எழுத்தாளர்கள் அந்த நூலினை சிங்கள மொழிக்கு மொழி பெயர்த்தமைக்கு நன்றி தெரிவித்ததுடன் தமது பாராட்டுக்களையும் தெரிவித்தனர். நூல் வெளியிட்டு இரண்டு வருடங்கள் ஆகின்றன. கடந்த வாரம் கூட ஒரு கடிதம் வந்தது. அதனை அது ஒரு சிரேஸ்ட சட்டத்தரணி எழுதி இருந்தார். அந்த நூலினை சிங்கள மொழிக்கு மொழி பெயர்த்தமைக்கு நன்றி தெரிவித்ததுடன் , அந்த நூலில் யாழில்.இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்ட பாடசாலை மாணவியான கிருஷாந்தி குமரசாமியின் வழக்கு தொடர்பில் தான் தேடி வருவதாகவும் எழுதி இருந்தார். அந்த நூலினை சிங்கள மொழிக்கு மொழி பெயர்த்தமை ஊடாக சில சிங்கள மக்கள் மத்தியில் மாற்றங்களை ஏற்படுத்த முடிந்தமையை நினைத்து நான் பெருமை கொண்டேன்.“
(இதைச் சிங்கள மொழிக்கு எடுத்துச் செல்வதற்கு முதன்மைப் பங்களிப்பைச் செய்தவர் விமல் சாமிநாதன். விமலின் நல் நோக்கமும் ஆர்வமும் அதற்கான உழைப்பும் எப்போதும் மதிப்புக்குரியன.
விமலின் வழிகாட்டலில் இப்படி ஒரு காலத்தை மதக வன்னிய என சிங்களத்துக்கு எடுத்துச் சென்றவர் அனுஷா. ஆச்சரியமூட்டும் வகையில் மிகச் சிறிய வயதிலேயே இந்தப் பணியை அவர் செய்திருக்கிறார்.
இருவருக்கும் எப்போதும் என்னுடைய அன்பும் நன்றிகளும்)
Karunakaran Sivarasa

How Brains understand to Smell


Unlike images, odours are unstructured, ill-defined things. What neuroscientists are learning about the olfactory system could help computer scientists develop new, more powerful machine learning algorithms.
Now, teams of scientists have developed a deep learning method that smells compounds in the human breath and detects illnesses. The AI can detect 17 diseases, including 8 different types of cancer, just from your breath. This AI is cable of recognizing chemical signatures of the diseases by their chemical structure.







Random and Sparse Networks

Olfaction differs from the vision on many fronts. Smells are unstructured. They don’t have edges; they’re not objects that can be grouped in space. They’re mixtures of varying compositions and concentrations, and they’re difficult to categorize as similar to or different from one another. It’s therefore not always clear which features should get attention.

These odours are analyzed by a shallow, three-layer network that’s considerably less complex than the visual cortex. Neurons in olfactory areas randomly sample the entire receptor space, not specific regions in a hierarchy. They employ what Charles Stevens, a neurobiologist at the Salk Institute, calls an “anti-map.” In a mapped system like the visual cortex, the position of a neuron reveals something about the type of information it carries. But in the anti-map of the olfactory cortex, that’s not the case. Instead, information is distributed throughout the system, and reading that data involves sampling from some minimum number of neurons. An anti-map is achieved through what’s known as a sparse representation of information in a higher dimensional space.

Take the olfactory circuit of the fruit fly: 50 projection neurons receive input from receptors that are each sensitive to different molecules. A single odour will excite many different neurons, and each neuron represents a variety of odours. It’s a mess of information, of overlapped representations, that is at this point represented in a 50-dimensional space. The information is then randomly projected to 2,000 so-called Kenyon cells, which encode particular scents. (In mammals, cells in what’s known as the piriform cortex handle this.) That constitutes a 40-fold expansion in dimension, which makes it easier to distinguish odours by the patterns of neural responses.
Cecile G. Tamura

கெக்கிராவ ஸஹானா

கெக்கிராவ ஸஹானாவை நான் முதலில் வாசித்தது மல்லிகையில்தான். ஸஹானாவுக்கு கூடுதல் முக்கியத்துவத்தைக் கொடுத்து, அவரை ஊக்கப்படுத்தினார் ஜீவா. “பாரும் ஒரு சிங்களப் பகுதியில இருக்கிற முஸ்லிம் பொம்பிளைப்பிள்ளை என்ன மாதிரி எழுதுகிறா” என்று ஜீவா வாய் நிறைய, மனசு நிறையப் பெருமிதமாகச் சொல்லிக் கொண்டிருந்தார்.

யாராவது இளைய - புதிய தலைமுறையைச் சேர்ந்தவர்கள் எழுதுவதைக் கண்டு விட்டால் போதும், இப்பிடித்தான், அவர்களைப் பற்றியே எல்லோரிடமும் சொல்லிக்கொண்டிருப்பார் ஜீவா. 1980 களில் வாசுதேவன்(மட்டக்களப்பு), சோலைக்கிளி, ஜபார், சந்திரா தியாகராஜா போன்றவர்களைப் பற்றியெல்லாம் இப்படியே சொல்லிக் கொண்டிருந்தார்.

ஜீவாவின் வாய்பைப் பயன்படுத்தி, 1990 களில் அதிகமாக எழுதினார் ஸஹானா. சில சமயம் தொடர்ச்சியாக ஒவ்வொரு மாதமும் ஸஹானா மல்லிகையில் எழுதிக் கொண்டேயிருந்தார்.
பிறகு வெவ்வேறு பத்திரிகைகள், இதழ்களிலும் எழுதினார் ஸஹானா. ஸஹானாவின் கவனம் எப்பொழுதும் மனித உறவுகளுக்கிடையிலான சிக்கல்களும் உணர்ச்சிச் சுழிப்புகளுமாகவே இருந்தது. அன்பை ஆதாரமாகக் கொண்ட வாழ்க்கையை அவர் வலியுறுத்தினார். அதிக சிரமமில்லாத எளிய எழுத்து. கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரு தகவல் கேள்விப்பட்டேன். ஸஹானாவின் கதைகளைப் பற்றிப் பல்கலைக்கழக மாணவர் ஒருவர் ஆய்வு செய்ததாக.
எழுத்துகளின் வழியே அறியப்பட்ட அவரைச் சந்தித்துப் பேச வேண்டும் எனப் பல தடவை யோசித்திருக்கிறேன். கடிதங்களில் எழுதும்போது நிச்சயமாகத் தனக்கும் அப்படி ஆர்வமுண்டு. வாருங்கள் என்று அழைத்திருந்தார். பல தடவை கெக்கிராவவின் வழியாகச் சென்றிருக்கிறேன். கடந்த ஆண்டு கெக்கிராவவில் ஒரு நண்பர் வீட்டில் நடந்த நிகழ்வொன்றுக்காகச் சென்றிருந்தேன். அப்பொழுது கூடச் ஸஹானாவின் வீட்டுக்குச் செல்ல வேணும், அவரைச் சந்திக்க வேணும் என்று விரும்பியிருந்தேன். நண்பர்களுடன் சென்றிருந்ததால் அதற்கான நேரம் கிடைக்கவில்லை. பிறகொரு தடவை பார்க்கலாம் என்று தாகம் நிரம்பிய நினைவோடு வந்தேன்.
இனி எப்போதுமே பார்க்க முடியாது. உங்களுக்குத் தந்த கால அவகாசம் எல்லாம் முடிந்து விட்டது என்று நிரந்தரத் துக்கத்தை உணரவைத்துச் சென்று விட்டார் ஸஹானா.
அவர் தந்து விட்டுச் சென்ற எழுத்துகள்தான் இனி அவருடைய அடையாளமும் உறவும் நினைவுகளும்.
என்றும் எங்களோடுதான் நீங்கள் ஸஹானா...Karunakaran Sivarasa

புத்தகங்கள் என்றென்றைக்கும் புதியனவாகும்.


Basheer Segu Dawood
கிடைத்தற்கரிய பழைய புத்தகங்கள் அடைத்து வைக்கப்பட்டுள்ள சிறையில் சில்லறைக்கு அறிவு வாங்கலாம் வாருங்கள் தோழர்களே!

நேற்றைய அந்திப் பொழுதில் கல்கிஸ்ஸையில் இருக்கும் Chinthaka Book Shop என்ற பழைய புத்தகங்கள் விற்கும் கடைக்குச் சென்றிருந்தேன்.
அக்கடையில் கண்ணாடி அலுமாரிகளுக்குள் அடுக்கி வைக்கப்பட்டும், கீழே தரையில் பரப்பப்பட்டும் கிடந்த புத்தகங்களை கண்களால் துளாவி, பரபரப்புடன் கைகளால் அளைந்து 16 புத்தகங்களைத் தெரிந்து வாங்கிக்கொண்டேன். பின்னர் கடையின் முதலாளியாகவும்- தொழிலாளியாகவும் இரட்டைப் பாத்திரம் வகிக்கும் வீரரத்னவிடம் பேச்சுக் கொடுத்தேன்.
இந்தப் பெரிய எண்ணிக்கையிலான பழைய புத்தகங்களை எப்படிக் கொள்வனவு செய்கிறீர்கள்? என்று வினவினேன்.
இப்போதெல்லாம் பெரும்பாலானவர்களுக்கு இங்கு பழைய புத்தகங்களை வாங்கி விற்கும் கடை திறந்திருப்பது தெரியும். கணவர் இறந்துவிட்டாலோ அல்லது நடமாட முடியாதவாறு முதுமையடைந்துவிட்டாலோ அவர் வாங்கிப் பாதுகாத்து வைத்திருந்த புத்தகங்கள் மனைவியருக்குப் பெரும் சுமைகி விடுகிறது. எங்களை அழைத்து மிகக் குறைந்த விலைக்கு விற்றுவிடுகிறார்கள்.சிலர் பணமே தரத் தேவையில்லை, இடத்தைக் காலி பண்ணினால் போதும் என்கிறார்கள். இவ்வாறே சில இடங்களில் மனைவியரின் புத்தகங்களைக் கணவர் காலி செய்து வீட்டைத் துப்புரவாக்கும் வேலையைக் கச்சிதமாகச் செய்கிறார் என்று வீரரத்ன பதிலிறுத்தார்.
பதிலைச் செவியேற்று இருண்டுகொண்டு வந்த என் கண்களுக்குள் எவரோ ஒரு பெண் தும்புத் தடியோடு நடமாடுவது தெரிந்தது.
அந்தக் கடையில் புத்தகங்களை வாங்குவதற்கும் கிழவர், கிழவியரே நின்றிருந்தனர். இது என்ன முரணோ? இவர்கள் வாங்கிய புத்தகங்கள் குறுகிய காலத்தில் இதே கடைக்கு மீளுமோ?
இளவயதுடைய எந்தப் பாலினத்தையும் அங்கு காணவில்லை என்பது கவலையளித்தது.
அங்கு பழைய ஸ்மார்ட் போன் மற்றும் லெப்டொப் ஆகியன விற்பனைக்கு விடப்பட்டிருந்தால் இளையோர் நிரம்பியும் முதியோர் இன்றியும் இருந்திருக்குமோ அவ்விடம்?

நண்பர்களே கல்கிஸ்ஸை கார்கில்ஸ் புட் சிற்றிக்கு முன்னால் அமைந்துள்ள சிந்தக்க புத்தகசாலைக்கு போய் சில புத்தகங்களை வாங்கலாமே!

A spiral staircase designed by Leonardo da Vinci in the year 1516.


Monday, September 17, 2018

முதல் லெஸ்பியன் கவி என்று புகழப்படும் சாப்போவின் 2500 ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்டகவிதை

முதல் லெஸ்பியன் கவி என்று புகழப்படும் சாப்போவின் 2500 ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட, காதலின் முழுமையும் வசீகரமும் நிறைந்த கவிதை

Sappho seemingly penned these lines to a female lover in the seventh century BC, becoming one of the first notable lesbian poets in the process. In fact, the word "lesbian" derives from the name of her home: the island of Lesbos. Since Sappho's time, many famous lesbian poets have followed in her spiritual footsteps.



அவன் ஒரு கதாநாயகனை விட மேலானவன்
என்னுடைய கண்களில் அவன் ஒரு கடவுள்
உன்னருகில் உட்கார அனுமதிக்கப்படும் அந்த ஆள்
தூண்டும் உன்னுடைய குரலின்
இனிமையான முணுமுணுப்புகளை நெருக்கமாக
கேட்டுக்கொண்டிருக்கிறானே
சிரிப்பு என்னுடைய இதயத்துடிப்பையே
வேகமாக்குகிறது
உன்னைத் திடீரென்று சந்தித்தால்
என்னால் பேச முடியாது
என்னுடைய நாக்கு உடைந்திருக்கிறது
மெல்லிய தீக்கொழுந்து என்னுடைய
சருமத்தின் அடியில் பாய்கிறது
எதையுமே என்னால் பார்க்கமுடியவில்லை
என்னுடைய செவிப்பறைகள் தாளமிடுவதையே
கேட்கிறேன்
நான் வியர்வை வடிய நிற்கிறேன்
நடுக்கம் என்னுடைய உடலை அசைக்கிறது
உலர்ந்த புல்லை வெளுப்பாக மாற்றுகிறது
அது மாதிரியான நேரங்களில்
மரணம் என்னிலிருந்து தூரத்தில் இல்லை.
Kutti Revathi

கவிதைகளை எழுதுவது கவிதையாகாது

ஒரு நாட்டுப்பாடல்
~ ஜிபிக்னியூ ஹெர்பெர்ட்
மொழியாக்கம்: வ.கீதா - எஸ்.வி.ராஜதுரை
உழவனின் மகன் கேட்டான்:
அப்பா, கவிதை என்றால் என்ன?
விதைத்து அறுப்பது
என்றான் உழவன்.
தையல்காரனின் மகன் கேட்டான்:
அப்பா, கவிதை என்றால் என்ன?
கிழியாத, வெதுவெதுப்பான ஆடைகளைத் தயாரிப்பது
என்றான் தையல்காரன்
தளபதியின் மகன் கேட்டான்:
அப்பா, கவிதை என்றால் என்ன?
கொரில்லாவுக்கு எதிராக பூர்ஷ்வா வர்க்கத்தின்
இராணுவத்தை
வழிநடத்திச் செல்வது என்றான் தளபதி
கவிஞனின் மகன் கேட்டான்:
அப்பா, கவிதை என்றால் என்ன?
எனக்குத் தெரியாது என்றான் கவிஞன் -
ஆனால் கவிதைகளை எழுதுவது
கவிதையாகாது மகனே!
Kutti Revathi

வாழ்வோம் வாழவைப்போம்...

கருணை உள்ளம் கொண்ட பல புலம் பெயர் தமிழர்கள் ஊருக்கு வரும் போது போரினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை பராமரிக்கும் இல்லங்களுக்கு செல்கிறார்கள்.
அவர்களுக்கு அன்றைய உணவுக்கான செலவுகளை ஏற்றுக் கொள்கிறார்கள்.
உண்மையில் இது பாராட்டப்பட வேண்டிய விடயம்.
ஆனால் அதையும் விட புலம் பெயர் தமிழர்கள் மட்டுமல்ல, ஊரில் இருக்கும் வசதி படைத்தவர்கள் இன்னும் எவ்வளவோ வினைத்திறன் மிக்க விடயங்களை செய்யலாம் .
ஒரு வசதி படைத்த குடும்பம் ஒரு குழந்தைக்கான அனைத்து செலவுகளையும் பொறுப்பெடுக்கலாம்.
இதற்கு ஆரம்பத்தில்மாதம்
5000 - 10000 ரூபாய் மட்டுமே செலவாகும்.
வசதி படைத்தவர்களக்கு இது ஒரு பெரிய தொகை அல்ல.
அந்த குழந்தை தன் சொந்த காலில் நிற்கும் வரைக்கும் இதை செய்யலாம் .
ஆகக் குறைந்தது அந்த குழந்தையின் கல்விச் செலவையாவது கையில் எடுக்கலாம்.
பாதுகப்பற்ற
ஓலைக் குடிசையில் வாழும் ஒரு சிறு குடும்பத்திற்கு 500 சதுர அடிக்கு குறைவான அடிப்படையான கல் வீட்டைக் கட்டிக் கொடுக்கலாம்.
இதற்கு 10 இலட்சத்திற்கும் குறைவான செலவே யாகும்.
அவர்களுக்கு நிரந்தர தொழிலாக 10 பால் மாடுகளையோ 50 கோழிகளை யோ வழங்கலாம்.
அல்லது சிறு பெட்டிக்கடை ஒன்றை போட்டுக் குடுக்கலாம்.
இன்னும் எவ்வளவோ நிரத்தர உதவிகளை செய்யலாம் .
ஒரு நாள் உணவு புண்ணியம் என்றால் நிரந்தர உதவி மகா புண்ணியம்.
இப் பதிவு வசதியானவர்களுக்கு மட்டுமானதே.
ஒரளவு வசதி படைத்தவர்கள் கூட தங்கள் வசதிக்கேற்ப சிலவற்றை செய்யலாம் .

Sivaratnam Navatharan


*மஞ்சள் பூசி குளிங்க… கருப்பை புற்றுநோய் எட்டிக்கூட பார்க்காது!*


முகத்திற்கு பூசுவதற்கு வித விதமாய் அழகு சாதன கிரீம்கள் வந்த பின்னர் மஞ்சள் பூசி குளிப்பது இன்றைக்கு மறந்தே போய்விட்டது. ஆனால் மஞ்சள் பூசி குளிப்பவர்களுக்கு கருப்பை வாய் புற்றுநோய் பாதிக்கும் வாய்ப்பு குறைவு என்று ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
மஞ்சள் பூசிய முகத்துக்கென்று ஒரு தனி அழகு உண்டு. ஆனால், அது வெறும் அழகோடு நிற்காமல் அதில் ஏராளமான மருத்துவ குணங்களும் உண்டு என்பது இன்றைய இளம் யுவதிகளுக்குப் புரிவதில்லை.
இன்றைய இளம் பெண்கள் பலருக்கும் சோப்பு போட்டு குளித்த பின்னர் மஞ்சள் பூசி குளிப்பதன் மகிமை தெரியாமல் போனதன் காரணம் அதைப் பற்றி சரியான புரிதலும், விழிப்புணர்வும் இல்லாமல் போனதுமே காரணம். எனவேதான் மஞ்சள் பூசி குளித்தவர்கள் கூட, நாளடைவில் தோழிகள் சிரிக்கிறார்களே என்று தற்போது மஞ்சளை மறந்தே விட்டார்கள்.
மஞ்சள் ஒரு கிருமிநாசினி என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் அது பெண்களுக்கு ஏற்படும் கொடிய புற்றுநோயான கருப்பை வாய் புற்றுநோயைக் கூட கட்டுப்படுத்துகிறதாம்.
மஞ்சள் பூசி குளிக்கும் பெண்களுக்கு கருப்பை வாய் புற்றுநோயை உருவாக்கும் ஹியூமன் பப்பிலோமா வைரஸ் (எச்பிவி) அழிக்கப்படுவதும், புற்றுநோய் ஏற்பட்டவர்களுக்கு அது ஓரளவுக்கு கட்டுப்படுத்தப்படுவதும் ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கருப்பை வாய் புற்றுநோய் ஏற்படுத்தும் எச்பிவி கிருமிகள் கருப்பை வாயில் இருப்பது கண்டறியப்பட்ட பெண்களில் பாதி பேருக்கு மஞ்சள் கொடுத்து பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டது. சிலருக்கு எப்போதுமான மருந்துகள் மட்டும் கொடுக்கப்பட்டது.
அதில் மஞ்சள் பயன்படுத்தியவர்களுக்கு எச்பிவி கிருமியால் ஏற்பட்ட பாதிப்பு சரியாகியிருந்ததும், மேலும் பாதிப்பு ஏற்படுவது தடுக்கப்பட்டிருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இனி பெண்கள் குளிக்கும் போது, மஞ்சள் தேய்த்து குளிப்பதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். அலுவலகம் மற்றும் பள்ளிக்குச் செல்லும் பெண்கள் விடுமுறை நாட்களிலாவது மஞ்சள் பூசுவது அவசியம்.

Friday, September 14, 2018

Louis Armstrong plays his trumpet for his wife at the sphinx and pyramids of Giza, Egypt, January 31, 1961

Louis Daniel Armstrong (August 4, 1901 – July 6, 1971), nicknamed Satchmo Satch, and Pops, was an American trumpeter, composer, singer and occasional actor who was one of the most influential figures in jazz. His career spanned five decades, from the 1920s to the 1960s, and different eras in the history of jazz. In 2017, he was inducted into the Rhythm & Blues Hall of Fame.

Armstrong was born and raised in New Orleans. Coming to prominence in the 1920s as an "inventive" trumpet and cornet player, Armstrong was a foundational influence in jazz, shifting the focus of the music from collective improvisation to solo performance.[5] Around 1922, he followed his mentor, Joe "King" Oliver, to Chicago to play in the Creole Jazz Band. In the Windy City, he networked with other jazz musicians, reconnecting with his friend, Bix Beiderbecke, and made new contacts, which included Hoagy Carmichael and Lil Hardin. He earned a reputation at "cutting contests", and moved to New York in order to join Fletcher Henderson's band.


With his instantly recognizable gravelly voice, Armstrong was also an influential singer, demonstrating great dexterity as an improviser, bending the lyrics and melody of a song for expressive purposes. He was also very skilled at scat singing. Armstrong is renowned for his charismatic stage presence and voice almost as much as for his trumpet playing. Armstrong's influence extends well beyond jazz, and by the end of his career in the 1960s, he was widely regarded as a profound influence on popular music in general. Armstrong was one of the first truly popular African-American entertainers to "cross over", that is, whose skin color became secondary to his music in an America that was extremely racially divided at the time. He rarely publicly politicized his race, often to the dismay of fellow African Americans, but took a well-publicized stand for desegregation in the Little Rock crisis. His artistry and personality allowed him access to the upper echelons of American society, then highly restricted for black men.

That’s how big they are!


Tuesday, September 11, 2018

Inspiring inventors under 18


நீர் வர்த்தகப் பண்டமாக மாற்றமடைவது மனிதர்களது வாழ்வாதாரத்திற்கு அச்சுறுத்தலாக அமையுமா??



உலக வர்த்தக கழகத்தின் GATT ஒப்பந்தம் தண்ணீரை வர்த்தகப் பண்டமாக வரையறுக்கின்றது. இது ஒரு நாட்டில் இருந்து தண்ணீரை இன்னுமொரு நாட்டுக்கு ஏற்றுமதி செய்வதை தடை செய்யக்கூடாது என்கின்றது. இதனடிப்படையில் தென்னாபிரிக்காவில் தண்ணீர் தனியார் மயப்படுத்தப்பட்டுவிட்டது நீங்கள் செலுத்திய பணத்தின் அளவுக்கேற்ப நீர் குழாய்களினூடாக வழங்கப்படும் பணம் முடிவடைந்ததும் நீர் வரத்து நின்று விடும் மீண்டும் பணம் செலுத்தினால் மாத்திரமே நீரை அனுபவிக்க முடியும். இதன் மறைமுக செய்தி யாதெனில் நீங்கள் இருப்பதற்கு வதிவிடமில்லையா? நீர்க் கட்டணம் செலுத்த வசதியில்லையா?? நீங்கள் இங்கு உயிர்வாழ தகுதியற்றவர் என்பதே ஆகும்.
1990 களிற்கு முன்னர் நீர், வளி, சூரிய ஒளி ஆகியவை இலவசப் பண்டங்களாக வரையறுக்கப்பட்டிருந்தன. எனினும் இன்று சீனா, ஜப்பான் போன்ற வளி மாசடைந்த நாடுகளில் ஒக்சிசன் வணிகப் பண்டமாக மாற்றமடைந்து விட்டது. நீரானது அநேகமாக உலகின் அனைத்து நாடுகளிலும் வணிகப் பண்டமாக மாற்றமடைந்து விட்டது ஆக மிஞ்சியிருப்பது சூரிய ஒளி மாத்திரமே. அதற்கும் உத்தரவாதம் இல்லை.
சரி மற்ற நாடுகளின் கதை எதற்கு நம் நாட்டு நிலையை சற்றுப் பார்ப்போம். இலங்கையைப் பொறுத்த வரை இன்றைய நிலையில் அநேக நகரங்கள் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் குழாய் நீரையே நம்பியுள்ளன. இது ஏனைய நாடுகளைப் பொறுத்தவரை மிக மலிவான விலையில் விநியோகிக்கப்படுகின்றது அதாவது முதல் 05 அலகுகளிற்கு ரூபாய் ஐம்பது மாத்திரமே ஆகும். எனினும் வவுனியா போன்ற சுண்ணக்கல் நிறைந்த பிரதேசங்களில் தனிப்பட்டவர்கள் குடிநீரை லீற்றர் 50 சதத்திற்கு விற்பனை செய்கின்றனர் அதனை பெறுவதற்கு நீங்கள் பாத்திரங்களுடன் செல்ல வேண்டும். அதே போன்று கோமரங்கடவல, பதவிஸ்ரீபுர, பொலனறுவை மற்றும் அநுராதபுர போன்ற ஆர்சனிக் போன்ற உலோக இரசாயனங்கள் உள்ள பிரதேசங்களில் நீரை நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை மாத்திரமல்லாது தனிப்பட்ட மற்றும் பொது நீர் சுத்திகரிப்பு இயந்திரங்களின் உதவியுடனும் நீர் பெறப்படுகின்றது. இதை விடக் கொடுமை என்னவெனில் தனிப்பட்ட ஒரு தடவை மாத்திரம் பயன்படுத்தக்கூடிய கொள்கலன்களில் ஒரு லீற்றர் குடிநீர் தற்போது ரூபாய் 60 தொடக்கம் 70 ஆகவும் 19 லீற்றர் கொல்களன்களில் (கொள்கலன் கட்டணமாக ரூபாய் ஆயிரம் செலுத்த வேண்டும்) ரூபாய் 200 தொடக்கம் 250 வரை விற்கப்படுகின்றது.
சரி இலங்கையையும் பார்த்தாச்சா இனி நம்ம மட்டக்களப்பு பக்கம் வருவோம். மட்டக்களப்பின் பெரும்பாலான பகுதிகளில் உள்ள மக்கள் கிணற்று நீரை தமது குடிநீரிற்கான மூலாதாரமாக பயன்படுத்துகின்றனர் அதே வேளை மட்டக்களப்பின் நகரப் பகுதிகளில் தற்போது குழாய் நீர்ப் பாவனை அதிகரித்துள்ளது. இதற்கான நீர் வழங்கலானது உன்னிச்சை மற்றும் உறுகாமம் குளங்களை நம்பிய வகையிலேயே அமைந்துள்ளது. ஆனால் இந்த பாரிய குளங்கள் அமைந்துள்ள பிரதேச மக்களது குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதற்கு இக்குளத்திலிருந்து குழாயினூடாக வழங்கப்படும் நீர் எந்தளவிற்கு பயன்படுகின்றது என்றால்... (வேண்டாம் நமக்கெதற்கு இப்பரிதாபத்துக்குரியவர்களின் அவலக் கதை....)
சரி இலங்கையிலே அதிக வறுமையான பிரதேசமாக மத்திய வங்கியின் தரவுகளின் படி உறுதிப்படுத்தப்பட்ட இந்தப் படுவாங்கரை பிரதேசத்தைச் சேர்ந்த மக்கள் தங்கள் குடிநீர் தேவையை நிறைவேற்றும் விதமே மிக வித்தியாசமானது நன்கு மழை பெய்யும் காலப் பகுதிகளில் குழாய்க் கிணறு அல்லது மிக ஆழமாக தோண்டப்பட்டு மிகச் சிறிதளவே நீருள்ள கிணறுகளில் இருந்து நீரை மொண்டு எடுப்பர் அதுவும் கிணறுகள் நம்ம ஊர்களில் இருப்பதைப் போன்று வீட்டுக்கு வீடு இருக்காது கிராமத்தில் தப்பித் தவறி ஏதாவது ஒன்று இருந்தால் தான் அதில் நீரை அள்ளுவதற்காக பல மைல் தூரத்திற்கு குடத்தை இடுப்பில் இடுக்கிப் பிடித்தபடி நடக்க வேண்டும். சரி இப்படியாவது தண்ணீர் கிடைக்குதே என்று ஆறுதலா இருப்பம் என்று பார்த்தால் யூலை தொடங்கிடும் பிறகு என்ன கிணறு எல்லாம் வற்றி விடும் பிரதேச சபையின் தண்ணீர் பவுசரிற்காக மணிக் கணக்கில் காத்திருக்க வேண்டியது தான். அதுல அரைகுறையாக பிடிச்சிட்டு அன்றைய பொழுதை கழிக்க வேண்டியது தான். சில நேரங்களில பயிரை நடுகை செய்தால் சில நேரங்களில் நீர் இருக்காது முதலுக்கே மோசமாகி விடும் பிறகு என்ன நம்ம 'ரவுண்ட் அப்' தான் இருக்கே அடிச்சிட்டு படுத்தா நேரா சொர்க்கம் தான்.
சரி விடயத்துக்கு வருவோம் இப்ப ஐந்து யுனிட் ஐம்பது ரூபாய்க்கு கிடைக்குது சுகமாக குளிக்கிறீங்க குடிக்கிறீங்க முழுமையான வியாபாரப் பண்டமாக தென் ஆபிரிக்கா போன்று இலங்கையிலும் தனியார்மயமாக மாற்றமடைந்தால் ஒரு யுனிட் குறைந்தது ஆயிரம் ரூபாவாக மாற்றமடையும் மட்டக்களப்பு நகரப் பகுதி, காத்தான்குடி பிரதேசங்களில் இருப்பவர்கள் ஒரு குவளை தண்ணீரில் ஒரு குடும்பமே குளிக்க வேண்டி வரும் கக்கா போகலாம் கழுவ இயலாது தண்ணீரை முகர்ந்து பார்க்கலாம் குடிக்க இயலாது. தேநீரை இப்ப இருப்பதை விட பல மடங்கு விலையில் விற்க வேண்டி வரும் சாப்பிட்ட கை கழுவ தண்ணீர் இருக்காது பிறகு என்ன ஒருவனும் சாப்பாட்டுக் கடைக்கு வரமாட்டான் இழுத்த மூட வேண்டியது தான். இங்கு நான் படுவாங்கரை பிரதேச மக்களைப் பற்றி கதைக்கவில்லை ஏனெனில் அவர்கள் இறந்த காலத்துடன் நீரின்றி இறந்திருப்பார்கள்.
சரி குடிநீரை பற்றி மாத்திரமே கதைக்கானே குடிநீரை வியாபாரப் பண்டமாக்கினால் ஏனைய விடயங்கள் குறிப்பாக விவசாயத்தின் நிலை என்ன என்று நீங்கள் கேட்பது விளங்குகின்றது. சரி அதையும் சொல்லிட வேண்டியது தான்.
தனியார் நிறுவனங்கள் எல்லாம் நீ நான் என போட்டி போட்டு குடிநீரிற்காக இருக்கின்ற நிலங்களை எல்லாம் கபளீகரம் செய்வார்கள். அந்த நீரை இலங்கையில் மாத்திரம் விற்பனை செய்ய வேண்டும் என்று சட்டம் போட இயலுமா அதை நடைமுறையில் சாத்தியமும் இல்லையே பிறகென்ன வளைகுடா போன்ற செல்வம் கொழிக்கும் நாடுகளிற்கு பாரிய அளவில் நீர் தேவையே எடுடா அந்த மெசின உறிஞ்சடா அந்த நீரை என போட்டி போட்டு நீரை உறிஞ்சுவாங்க ஒரு கட்டத்துக்கு மேல வேகமா உறிஞ்சினா என்ன நடக்கும்?? ம்ம் ஒன்று நீரோட்டம் மாறி கடல் நீர் கலந்து தண்ணீர் சவறாகும் இல்லாட்டி ஆமா தண்ணீர் ஊறுவதே நின்று விடும் பிறகென்ன விவசாயத்தை நம்பியிருக்கின்ற 32%ற்கு மேற்பட்ட மக்களது வாழ்வாதாரத்திற்கு ஒரு பெரிய சாவு மணியா அடிச்சிட வேண்டியது தான். நிலமெல்லாம் பாலைவனமாகிவிடும் பிறகென்ன நாமளும் அடுத்த எத்தியோப்பியா சோமாலியாவா வளர்ந்திடுவோம்.
ஒன்றை மாத்திரம் புரிந்து கொள்ளுங்கள் நண்பர்களே நீரும் காற்றும் சூரிய ஒளியும் இலவசப் பண்டங்களாக இருக்கும் வரை தான் நாம் சிங்களவர், தமிழர், முஸ்லிம், ஜாதி, மதம் எல்லாம், என்று முழுமையாக வியாபார பண்டமாக மாற்றமடைகின்றதோ அதற்கு பிறகு இருப்பவர் மட்டுமே இங்கு இருக்க உரிமையுடையவர். இன்றைய நிலையில் தினமும் இருநூறு கோடிக்கு மேற்பட்ட மக்கள் நீரை பெறுவதில் சிரமத்தை எதிர்கொள்ளுகின்றனர் ஒரு இருபத்திநாலு மணி நேரம் நீர் கிடைக்காமல் விட்டாலே சிறுநீரகம் போன்ற இன்றியமையாத உறுப்புகள் தற்காலிகமாக செயலிழக்க ஆரம்பித்து விடும். நீடித்தால் நிரந்தர செயலிழப்பும் மரணமும் தான்.
ஆகவே எங்கள் வருங்கால சந்ததியும் நீரையும் காற்றையும் எங்களை போன்றே இலவசமாக அனுபவிப்பதற்கேற்ற வகையில் நீர் ஆதாரங்களையும் மரங்களையும் பாதுகாப்பது மாத்திரமல்ல தனியார் கைக்கு செல்ல விடாதும் தடுப்பது இலங்கையராகிய எமது கடமையாகும். எம்மவர் தானே என தவறுகளுக்கு துணை சென்றால் நாளை பாதிக்கப்படப்போவது நீங்களும் உங்கள் சந்ததியுமே.
சிந்தித்துச்_செயல்படுவோம் நீரின்றி_அமையாதுலகு

Pragash Sinnarajah