Search This Blog

Sunday, June 28, 2020

வாஸ்து சாத்திரம்

வாஸ்து சாத்திரம் [ எத்தனை வசதியாக அரண்மனை அமைத்தாலும் -வாஸ்து பிழைத்தால் அங்கு வாழ முடியாது- ]

முன்பொரு காலத்தில் அண்டகாசுரன் என்ற அரக்கன், தன்னை வெற்றிகாண எவரும் இல்லை என்ற மமதையில் சிவபெருமானை போருக்கு அழைத்து போரிட்டான். அப்போது சிவபெருமானுடன் போரிட்ட அசுரனின் நெற்றியில் வழிந்த வியர்வையில் இருந்து ஒரு பூதம் தோன்றியது. மிகவும் கரிய நிறம் கொண்ட அந்த பூதத்திற்கு அகோரப் பசி ஏற்பட்டது. அதனால் கண்ணில் கண்ட அனைத்தையும் விழுங்கியது. கொடிய அசுரன் அண்டகாசுரனின் உடலையும் விழுங்கியது. தீராத பசியில் இருந்த பூதம் தன் பசியை தீர்த்து வைக்குமாறு சிவபெருமானிடம் வேண்டியது. சிவபெருமான் அந்த பூதத்திற்கு அனைத்தையும் உண்ணும் வரத்தை அளித்தார்.

இதனால் அந்த பூதத்திற்கு இந்த பூமியையே அளிக்கும் சக்தி உண்டானது. உடனே தேவர்கள் அனைவரும் பிரம்மாவிடம் முறையிட்டனர். பிறகு பிரம்மதேவன் அந்த பூதத்திடம் பூமியில் மக்கள் வீடு கட்டும் போது அவர்கள் படைக்கும் உணவை உண் என்றும், சாஸ்திரப்படி வீடு கட்டவில்லை என்றால் அந்த வீட்டில் வசிப்பவரை வாட்டு என்றும் வரம் அளித்தார். அந்த பூதமே வாஸ்து பகவான் என்றும் வாஸ்துப்படி வீடு கட்டுபவர்களுக்கு நன்மைகளையும், மற்றவர்களுக்கு தீமையையும் அளித்து வருகிறார். வாஸ்து என்றால் வாழும் இடம் என்று பொருள். மிகச்சரியான வாஸ்து உள்ள வீட்டில் பிரச்சனைகள் இருக்காது. நிம்மதி மகிழ்ச்சி பெருகும்.
“வாஸ்து” என்ற சொல் கட்டிடமொன்று கட்டப்பட்டுள்ள அல்லது  கட்டப்படவுள்ள நிலத்தைக் குறிக்கும். “வாஸ்து சாஸ்திரம்” என்பது, ஒரு நிலத்தில் கட்டிடம் கட்டுவதற்குரிய முறைகளையும், அதன் தத்துவங்களையும் விளக்கும் ஒரு வேதம் சார்ந்த அறிவுத்துறையாகும். “வாஸ்து சாஸ்திரம்” என்பது நகர அமைப்பு, கட்டிடக்கலை என்பன சம்பந்தப்பட்ட, இந்தியாவின் மிகவும் பழமையான அறிவுத்துறைகளில் ஒன்றாகும். கி.மு. 3000 ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்டிருக்கக் கூடுமெனக் கருதப்படுகிறது. இந்துக்களின் முதல் நூல்களான நான்கு வேதங்களில் நான்காவது வேதமான அதர்வண வேதத்தில் வாஸ்து பற்றி சொல்லப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. வாஸ்து சாஸ்திரத்தின் பல்வேறு அம்சங்களையும் விரிவாக விளக்கிப் பல நூல்கள் பழைய காலத்திலேயே எழுதப்பட்டுள்ளன.


6 அடி- நன்மை ஏற்படும்
7 அடி- தரித்திரம் பிடுங்கி தின்னும்
8 அடி - முன்னேற்றங்கள், தெய்வ அருள் உண்டு.
9 அடி- துன்பம் துயரம்
10 அடி - யோகம் உண்டு.
11 அடி - செல்வ நிலை உயரும்.
12 அடி- துயரம் புத்திரசோகம்
13 அடி- துன்பம் நோயினால் அவதி
14 அடி- பொருள் இழப்பு, கவலை
15 அடி- துன்பம் துயரம்
16 அடி - செல்வாக்கு உண்டாகும்
17 அடி - நிறைந்த வருமானம்
18 அடி- வீடு அழியும்
19 அடி- வறுமை உண்டு
20 அடி - சிறப்பான லாபம்.
21 அடி - பொன்னும பொருளும் சேரும்.
22 அடி - மனதில் தைரிய உணர்வு
23 அடி- கெடுதி ஏற்படும்
24 அடி- வரவும் செலவும் சமம்
25 அடி- மனைவிக்கு கண்டம்
26 அடி - பொன்னும் பொருளும் சேரும்.
27 அடி - பதவிகள் தேடிவரும்.
28 அடி - எளிதாக வெற்றி கிட்டும்.
29 அடி - மனதில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும்.
30 அடி - சிறப்பாக இருக்கும்.
31 அடி - காரியசித்தி உண்டு.
32 அடி - செல்வ அபிவிருத்தி, வெளிநாடு பயணம்
33 அடி- வாழ்க்கையின் நிலை உயரும்
34 அடி- இடமாற்றம் ஏற்படும்
35 அடி- திருமகள் அருள்
36 அடி- சுகபோக வாழ்க்கை ஏற்படும்
37 அடி- செய்தொழில் முன்னேற்றம்
38 அடி- வறுமை, துன்பம்
39 அடி- நல்ல வாழ்வு
40 அடி- விரோதிகள் வலிமை பெறுவர்
41 அடி- செல்வம் பெருகும்
42 அடி- அஷ்டலட்சுமி வாசம்
43 அடி- நன்மை ஏற்படாது
44 அடி- பெரிய இழப்பு உண்டாகும்
45 அடி- மக்கள் செல்வம் அதிகரிக்கும்
46 அடி- வறுமை, நோய்
47 அடி- பொருள் இழப்பு
48 அடி- தீயினால் ஆபத்து
49 அடி- தவறுகள், இழப்புகள்
50 அடி- நன்மை உண்டாகாது
51 அடி- வீண் தொல்லைகள்
52 அடி- பொருள் அபிவிருத்தி
53 அடி- பெண்களால் பொருள் நட்டம்
54 அடி- அரசின் சீற்றம்
55 அடி- உறவினர் விரோதம்
56 அடி- குடும்ப விருத்தி
57 அடி- சந்ததி நாசம்
58 அடி- கண்டம் ஏற்படும்
59 அடி- கவலைகள் வறுமை
60 அடி- செய்தொழில் அபிவிருத்தி

வீட்டின் பகுதிகள்
-------------------------------

ஒரு வீட்டின் கதவுகளின் எண்ணிக்கையை பொருத்தும், அந்த வீட்டின் பலன்கள் அமைகிறது என வாஸ்து சாஸ்த்திரம் விவரிக்கிறது.

  • இரண்டு கதவுகள் : நல்ல பலன்கள் கிட்டும்
  • மூன்று கதவுகள் : எதிரிகள் அதிகமாவார்கள்.
  • நான்கு கதவுகள் : நீண்ட ஆயுள் கிட்டும்.
  • ஐந்து கதவுகள் : அவ்வபோது நோய்களால் வேண்டிவரும்.
  • ஆறு கதவுகள் : புத்திர பாக்கியம் உண்டு.
  • ஏழு கதவுகள் : ஆபத்துக்கள் நேரிடலாம்.
  • எட்டு கதவுகள் : செல்வம் குவியும்.
  • ஒன்பது கதவுகள் ; நோய்கள் வரும் ஆபத்து உண்டு
  • பத்து கதவுகள் : பணமும் பொருளும் வீடு தேடி கவரும்
  • குறிப்பு: இதில், வீட்டின் சுற்று சுவரி உள்ள கதவுகள் பொருந்தாது.

    கிழக்கு - குடிநீர் ஆதாரம்
    தென் கிழக்கு .. சமையலறை
    தெற்கு ... இரண்டாவது சந்ததியர் புழங்கும் படிப்பறை மற்றும் படுக்கையறை
    மேற்கு .. சந்தததியர் படுக்கை அறை
    வடமேற்கு .. டாய்லெட் மற்றும் கழிவு நீர் குறி்த்த நன்மை
    வடக்கு ... குபேரனது திசை என்பதால் சுத்தமாக வைத்து அமைக்கவும்.
    வடகிழக்கு.. இது நேரடியான குடிநீர் ஆதாரம் தருவதாகும்.

    அலுவலக அறை வடமேற்கு திசை, புத்தக அறை தென்மேற்குத் திசை
    சமையல் அறை தென் கிழக்குத் திசை, உணவு புசிக்கும் அறை தெற்குத் திசை
    படுக்கை அறை மேற்கு, வடகிழக்குத் திசைகள், பூஜை அறை மேற்கு, வடகிழக்குத் திசைகள்
    குளியல் அறை கிழக்கு திசை, சேமிப்பு அறை வடக்கு திசை, கழிவறை வட மேற்கு திசை.

    எப்போதும் வீட்டின் நடுவே நின்று திசைக்காட்டியின் உதவி யோடு திசை களை அறிந்துக்கொள்ளுங்கள். வீட்டின் முதன்மை வாசல் கதவு வழியாகத் தான் நேர்மறை சக்தி வீட்டிற்குள் நுழையும். ஆகவே வாங்கும் புது மனையின் வாசற்கதவு, தென்மேற்கு திசையை நோக்கி இருக்காத படி பார்த்துக் கொள்ளுங்கள். ஏனென்றால் இந்த திசை தான் தீய சக்திகளின் நுழை வாயில். அது நமக்கு கஷ்டங்களை யும் துரதிஷ்டத்தையும் தரும். ஏற்கனவே வீட்டின் கதவு இந்த திசை யில் இருந்தால், இரண்டு அனுமான் கடவுளின் படம் இருக்கும் டைல் கல்லை வாசலுக்கு வெளியில் பதித்து விடுங்கள். அப்புறம் பாருங்கள் மாற்றத்தை.

    கோவில் அல்லது பீடம் தான் அனைத்து வாஸ்து சாஸ்திரங்களுக்கும் சக்கரவர்த்தி. அதனால் பூஜை அறையை வடகிழக்கு திசையில் அமைத்திடுங்கள்; அனைத்து நன்மைகளும் வந்து சேரும். மேலும் வணங்கும் போது கிழக்கு திசையை நோக்கி வணங்க வேண்டும்.
    http://www.astrospider.in/

    No photo description available.

    No comments:

    Post a Comment