Search This Blog

Monday, October 8, 2018

கவிதையியல் அல்லது அழகியல் செயல்பாடு

ஒரு மொழிதலில் இருக்கும் ஆறு அம்சங்களில் மேலாதிக்கம் செலுத்தும் ஒன்று வேறுபட்ட மொழியியல் செயல்பாட்டைக் கொண்டிருப்பதாக யாக்கப்சனின் மொழியியல் தகவல்தொடர்பு மாதிரியில் விளக்கப்படுகிறது. மொழிதல்களில் கவிதையியல் செயல்பாடு மேலாதிக்கம் செலுத்தினால்(உதாரணமாக இலக்கியப் பிரதிகள்), மொழி அதிகம் ‘இருண்மை’ மிக்கதாகவும் குறிப்பான் மற்றும் ஊடகத்தை(மற்றும் அதன் பொருளாம்சாம் உட்பட) அல்லது வடிவம், பாணி அல்லது சங்கேதம் போன்றவற்றில் குறைந்தபட்சம் குறிப்பீடு, உள்ளடக்கம், ‘தகவல்’ அல்லது குறிப்பால் உணர்த்தும் பொருள் போன்றவற்றை வலியறுத்துவதாகவும் மரபுரீதியான உரையாக இல்லாமலும் இருக்கும்.
அது போன்ற பிரதிகள் வெளிப்பாட்டின் வடிவம் மற்றும் வினையை முன்வைப்பதாகவும் ‘இயற்கையான’ அல்லது ‘ஊடுருவத்தக்க’ உறவாக குறிப்பான் மற்றும் அதன் குறிப்புப் பொருளைக் குறைத்துக் காட்டுவதாகவும் இருக்கும். இந்தப் பொருளில், கவிதையியல் செயல்பாடு மேலாதிக்கம் செலுத்தும் பிரதி சுய-குறிப்புப் பொருளாக உள்ளது: வடிவமே உள்ளடக்கம் மற்றும் ‘ஊடகமே(அல்லது மொழியே) அதன் தகவல்’.
யாக்கப்சனின் மாதிரியை முன் வைத்து பின்னர் வளர்க்கப்பட்ட மாதிரிகளில் கவிதையியல் செயல்பாடு முறையான செயல்பாடாகக் கொள்ளப்பட்டது. கவிதையியல் செயல்பாடு ஆகுபெயராக அல்லாமல் அதிமான உருவகமாகவும் புறப்பொருளைச் சுட்டாமல் அதிகமான அகப்பொருளைக் கொண்டும் இருக்கும்.
பல்பொருள்:பிரதியியல் நியமனவாதத்தை(உதாரணமாக பின்அமைப்பியல்வாதிகள்) மறுப்பவர்கள், பிரதிகளின் ‘பல்பொருள்’ இயல்பை வலியுறுத்துகிறார்கள்-பன்மை பொருள்களைக் கொண்டதாகக் கூறுகிறார்கள்.
பல்குரல்கள்:ஒற்றைக் குரலுக்கு மாற்றாக ஒரு பிரதியின் கதையாடலில் இருக்கும் பல்குரல்கள் ஒரு விருப்பப்பட்ட வாசிப்பு அல்லாமல் பல்வேறு வகைப்பட்ட வாசிப்புகளை ஊக்குவிக்கின்றன.
பின்நவீனத்துவம்:இந்த வழுக்கும் சொல், நவீன காலத்திற்குப் பிந்தையதாகவும் பின்அமைப்பியலுடன் இயைந்து வந்த தத்துவமாகவும், கட்டுடைப்பு, முற்போக்கு ஐயமுறு வாதம், உறவுவாதம் போன்றவற்றுடன் முரண் அடிப்படை நிலைப்பாட்டைப் பகிர்வதுமான ஒன்றாகவே கொள்ளப்படுகிறது. விளக்கத்தை எதிர்க்கும் விளக்கமாகவே பின்நவீனத்துவம் இருப்பது அவலம்.
ஓர் ஒற்றை ‘கோட்பாட்டை’க் கொண்டதாக பின்நவீனத்துவத்தைக் கூறமுடியாது(குறித்தலுக்கு வெளியே எந்த ஓர் உண்மையும் இருப்பதாக எந்த ஒரு பின்நவீனத்துவக் கோட்பாட்டாளரும் கூறவில்லை). ‘பின்நவீனத்துவ’ அழகியல் ‘இயக்கம்’ எதுவும் இல்லை. பின்நவீனத்துவம் அதிகமான முறிவுகளைக் கொண்டதாகவும் பன்முகம் கொண்டதாகவும் உள்ளதாகும். இருந்தாலும், பின்நவீனத்துவ பிரதிகள் மற்றும் நடைமுறைகளின் பண்பில் உள்ள அம்சங்கள் அவலம் மற்றும் அதிகப்படியான உட்பிரதியியலைப் பிரதிபலிப்பவையாக இருப்பதாகும்-பிரதிகளுக்கு, வகைமைகளுக்கு, ஊடகங்களுக்கு இடையே உள்ள எல்லைகள் மங்கி பிரதியின் கட்டமைப்பு மற்றும் கட்டமைக்கப்பட்டச் செயல்பாடு மீது மட்டும் கவனத்தைக் குவிப்பவையாக உள்ளன.
வெகுஜன கலாச்சாரத்தையும் ‘தீய ரசனையை’ உள்ளிழுப்பதாகவும் இருப்பதால் நவீனத்துவத்திலிருந்து பின்நவீனத்துவம் வேறுபடுகிறது. லியோடார்ட் 1979ல் எழுதிய ‘பின்நவீனத்துவ நிலை’ என்ற நூலிலிருந்து அதன் காலம் கணக்கிடப்படுவதாகவும் சில சமயங்களில் தோன்றுகிறது. அதிலிருந்து ‘மீமெய் கதையாடல்களின் மீதான அவநம்பிக்கையை’க் காட்டுவதாக பின்நவீனத்துவ கோட்பாடு கொள்ளப்படுகிறது.

Mubeen Sadhika

No comments:

Post a Comment