Search This Blog

Thursday, February 15, 2018

புதிய அரசியல் கலாசாரத்தை நோக்கி


நீண்ட நாட்களின் பின் புதிய கலப்பு தேர்தல் மூலம் உள்ளூராட்சி மன்றங்களுக்கான் தேர்தல்கள் முடிவடைந்து முடிவுகளும் வெளி வந்துள்ள சூழ் நிலையில் தமிழர்களின் தாயக நிலத்தில் நடந்த தேர்தல் புதிய மாற்றங்களுக்கான கட்டியமாக அமைந்துள்ளமை நம்பிக்கை தரும் மாற்றங்களை முன் மொழிந்துள்ளமை ஒரு வெற்றிடத்துக்கான சிந்தனை ஓட்டத்தை வெளிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத் தக்கது பாசிச மனோபாவத்துக்கு மக்கள் கொடுத்த பதிலாகவே பார்க்க முடியும்.
1989ஆம் ஆண்டு தேர்தலைத் தவிர தமிழ் மக்களது பிரதேசத்தில் ஒரு குறிப்பிட்ட மேட்டுக் குடி மிதப்பு மிக்க சர்வாதிகார தன்னிச்சையான முடிவுகளுக்கு கட்டுப் பட வேண்டும் என்ற அரசியல் அதிகார நிகழ்வுகளின் வழியே பயணித்தது.மக்கள் அதிகாரம் துஸ் பிரயோகம் பண்ணப் பட்ட ஒரு பகைப் புலத்தில் இன்றைய தேர்தல் சில எதிர்வு கூறல்களுக்கு இடம் தந்துள்ளது.
வடக்கிலும் கிழக்கிலும் பெரும்பான்மையான இடங்களில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு வெற்றியடைந்த போதிலும் ஒரு சில இடங்களைத் தவிர ஏனைய இடங்களில் ஏனைய கட்சிகளின் அல்லது சுயேச்சைக் குழுக்களின் ஆதரவை கோர வேண்டிய நிலமை காணப் படுகிறது.பல இடங்களில் எதிர் கட்சிகள் ஒன்றிணைந்தால் தமிழ் தேசிய கூட்டமைப்பு சபைகளில் அதிகாரத்தை கைப்பற்ற முடியாத திரி சங்கு சொற்க நிலை காணப் படுகிறது.
வடக்கு கிழக்கில் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு எதிராக விழுந்த வாக்குகளே அதிகம்.உதாரணத்துக்கு கட்டைபறிச்சான் வட்டாரத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பில் போட்டியிட்ட காருண்யா எழுநூறுக்கு மேற்பட்ட வாக்குகளைப் பெற்று வெற்றி பெற அவரை எதிர்த்து போட்டியிட்ட தமிழ் கட்சிகள் சுயேச்சைக் குழுக்கள் பெற்ற வாக்குகள் 1200க்கும் அதிகம் .இந்த நிலமையே அனேகமாக எல்லா இடங்களிலும் காணப் படுகிறது.
இம் முறை தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு கிடைத்த வாக்குகளில் பெரும் பகுதி வேட்பாளர்களின் தனிப்பட்ட செல்வாக்குக்கு கிடைத்த வாக்குகள் என பல அவதானிப்புகள் தெரிவிக்கின்றன.
எந்த ஒழுங்கான நகர கிராமிய கட்டமைப்புகளும் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு இல்லையென்றே சொல்லலாம் வெறும் பழய பெருங்காய பானை மணத்தோடு மக்களின் மறதியில் பயணிக்கும் கோடி முகமுடையோர் வாக்குகளைப் பெறலாம் என்றால்.
முறயான நகர கிராமிய கட்டமைப்புகளை ஏற்படுத்தி முற்போக்கு சிந்தனையும் தெளிந்த அரசியல் ஞானமும் கொண்ட புத்திஜீவிகள் பெண்கள் என ஒரு புதிய சிந்தனை மயப் பட்ட அணிக்கான தேவையயை உணர்த்தி நிற்கிறது இத் தேர்தல்
பல கட்சிகள் சேர்ந்த தமிழ் தேசிய கூட்டமைப்பு வடக்கில் 150 இடங்களை கைப்பற்றி சபைகளை நிர்வகிக்க பெரும் பான்மைப் பலமில்லாமல் இருக்கும் போது ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி 81 இடங்களை கைப்பற்றி மூன்று சபைகளில் அறுதிப் பெரும் பான்மை பெற்றுள்ளது.
தமிழ் தேசிய மக்கள் முன்னணி 88இடங்களை கைப்பற்றி மக்களின் மாற்றுத் தேர்வுக்கான ஒரு இடத்தை தெளிவுறுத்துகிறது.
தேசிய கட்சிகள் கணிசமான இடங்களைப் பெற்றுள்ளன குறிப்பாக மட்டக் களப்பில் ஐக்கிய தேசியக் கட்சி குறிப்பிடத் தக்க வெற்றிகளைப் பெற்றிருக்கிறது.சுயேட்சைகளும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளும் சிந்திக்க வைக்கக் கூடிய வெற்றிகளைப் பெற்றுள்ளனர்.
இந்த முடிவுகள் எதிர் காலத்தில் மக்களை முதன்மைப் படுத்தும் மக்கள் ஜனாயக முற்போக்கு அரசியலுக்கு உள்ள தேவையயை வலியுறுத்துகிறது.
அணி சேர்வோம் புதிய சிந்தனைகளுடனும் சமூக கலாசார விழுமியங்களை முன்னெடுக்கும் அரசியல் கலாசாரம் நோக்கி
பாலசுகுமார்
மேனாள் முதன்மையர்
கலை கலாசார பீடம்
கிழக்குப் பல்கலைக் கழகம்

No comments:

Post a Comment