Search This Blog

Wednesday, April 22, 2015

கடல் அனுபவங்கள் Sakthi Jothi

உடலிலிருந்து
நதிகள் பெருக்கெடுப்பதாக நம்புகிற அவளுக்கு
கடல் பார்த்தலும்
கடற்பயணமும் மிக விருப்பமானவை
தற்செயலாகத் தான்
கடலின் விரிவும் ஆழமும் பற்றிச்
சிந்திக்கத் தொடங்கினாள்
அதன்பின்பே
எல்லாம் நிகழ்ந்தன
வேறு திசை நோக்கிய பார்வையையும்
நிலவின் பாடலையும்
கனவின் உன்மத்தத்தையும்
வெளியின் சூனியத்தையும்
ஒருசேர அறிந்து கொண்டது
ஒரு கூடலிலும் கடல்வெளியிலும்
சாரமற்றுப் போகாதிருக்கும்
வாழ்வுக்கான சாத்தியங்களை
அடையாளங்களாக
கடல் அனுபவங்கள் கொடுக்குமென நினைக்கிறாள்
கூடவே
கடல் அவளுக்குக் கற்றுக்கொடுக்கிறது
காமத்தின் நீலத்தையும்
கரிப்பின் வாசனையையும்.

No comments:

Post a Comment