Search This Blog

Friday, February 28, 2014

கவனம்... கணினி... "கண்"மணி

கம்ப்யூட்டரில் அதிக நேரம் இருப்பவர்களுக்கு 'கம்ப்யூட்டர் விஷன் சின்ட்ரோம்' பாதிப்பு ஏற்படும். கண்ணில் எரிச்சல், அரிப்பு, நீர் வடிதல், காய்ந்து போதல், கண்ணைச் சுற்றி வீக்கம், இறுக்கமாக இருப்பது இவையெல்லாம் அறிகுறி. இதற்கு முக்கிய காரணம்... கண் சிமிட்டுவது குறைவதுதான்.
இதனால், கண்ணீர் சுரப்பு குறைந்து, கண்ணை ஈரமாக்கும் வேலை தடைபடுகிறது. கண் திறந்தே இருப்பதால், சுரக்கும் கண்ணீரும் வேக வேகமாக காற்றில் ஆவியாகிவிடுகிறது.
ஒரு மனிதன் நிமிடத்துக்கு சராசரியாக 12 முறை கண் சிமிட்ட வேண்டும். அதாவது தூங்கும் நேரம் போக, ஒரு நாளைக்கு சுமார் 10,080 முறை.. கண் சிமிட்ட வேண்டும்.
* மானிட்டர் மீது வெளிச்சம் படாமல் பார்த்துக் கொள்ளுங்கள். இதைக் குறைக்க, மானிட்டரின்மீது ஸ்பெஷன் கண்ணாடி மாட்டிக் கொள்ளலாம்.
* உங்களுக்கு மானிட்டருக்கும் இடையில் சுமார் ஒன்றரை அடி இடைவெளி இருக்கவேண்டும்.
* ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை 5 நிமிடம் கண்களை மூடிக் கொண்டு, பிறகு எழுந்து கண்ணை நன்றாகக் கழுவிவிட்டு, திரும்பவும் வேலையை தொடங்குங்கள்.
* இடை இடையே மானிட்டரிலிருந்து கண்ணை திருப்பி, அருகில் ஜன்னல் வழியாக வெளியே ஒரு முறை பார்த்துவிட்டு, மறுபடியும் வேலையில் ஈடுபடுங்கள்.
* எழுத்துக்களை பெரிதாக்கிக் கொள்வதன் மூலம் கண்ணுக்கு அதிக‌ அசதி, சோர்வை தவிர்க்கலாம்.

(இதைப் படிக்கும்போதே... அட்லீஸ்ட் 24 முறையாவது கண் சிமிட்டினீர்கள் என்றால், 'விஷன் சின்ட்ரோம்' பயம் தேவையில்லை)

No comments:

Post a Comment