Search This Blog

Tuesday, August 2, 2011

ஆண், பெண், அலியாவது, 100 ஆண்டு வாழ்வது எப்படி?




சித்தர் சிந்தனைகள்:  

ஆண்பெண்அலியாவது ஏன்?


"
பாய்கின்ற வாயு குறையிற் குறளாகும்
பாய்கின்ற வாயு இளைக்கின் முடமாகும்
பாய்கின்ற வாயு நடுப்படின் கூனாகும்
பாய்கின்ற வாயு மாதர்க்கில்லை பார்க்கிலே"
(
திருமந்திரம் 480)
ஆணின் உடலிருந்து விந்து வெளிப்படும்போது அவனது வலது நாசியில் சுவாசம் ஓடினால் ஆண் குழந்தை தரிக்கும். இடது நாசியில் ஓடினால் பெண் குழந்தை பிறக்கும். ஆனால் இரு நாசிகளிலும் இணைந்து சுழுமுனை சுவாசம் ஓடினால் கருவுரும் குழந்தை அலியாகப் பிறக்கும் என மூலர் கீழ்வரும் வரிகளில் விவரிக்கிறார்.
 



குழவியும் ஆணாம் வலத்தது ஆகில்
குழவியும் பெண்ணாம் இடத்து ஆகில்
குழவியும் இரண்டாம் அபானன் எதிர்க்கில்
குழவியும் அலியாகும் கொண்டகால் ஒக்கிலே

(
திருமந்திரம் 482)
அது சரிஒரு சிலருக்கு வழக்கத்திற்கு மாறாக ஒன்றுக்கு மேலாக ஒரே சமயத்தில்பிறப்பதேன்அதற்கும் திருமூலர் பதில் கூறுகிறார். விந்து வெளிப்படும்போதுஅபானவாயு அதனை எதிர்க்குமானால்ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகள் தரித்துப் பிறக்கும்.
கருத்தரித்து விட்டதுநமக்கும் ஒரு குழந்தை பிறக்கப்போகிறது என பலஎதிர்ப்பார்ப்புடன் இருக்கும் தம்பதியினருக்கு அதிர்ச்சி தரும் கருச்சிதைவுஏற்படுவது ஏன்உடல் உறவின் போது ஆண்-பெண் இருவரின் சுவாசமும் நாடித்துடிப்பும் இயல்பாக இல்லாமல் தாறுமாறாக இருந்தால் கருச்சிதைவு ஏற்படும்என்கிறார் திருமூலர்.
கொண்டநல் வாயு இருவர்க்கும் ஒத்தேறில்
கொண்ட குழவியும் மோமள மாயிடும்
கொண்டநல் வாயு இருவர்க்கும் குழறிடில்
கொண்டதும் இல்லையாம் கோல்வளை யாட்கே
மூளை வளர்ச்சி குன்றிய குழந்தை பிறப்பதற்குக் காரணம்உடலுறவு கொள்ளும்போதுபெண்ணின் வயிற்றில் மலம் மிகுந்திருத்தலே காரணம் என்கிறார் திருமூலர்.மேலும் உடலுறவு கொள்ளும்போது பெண்ணின் வயிற்றில் சிறுநீர் அதிகமிருந்தால் கருத்தரிக்கும் குழந்தை ஊமையாக இருக்கும் என்கிறார். பெண்ணின் வயிற்றில் மலமும் சலமும் சேர்ந்து மிகுந்திருந்தால் குழந்தை குருடனாகவே பிறக்கும் என்றும் கூறுகிறார் மூலர். எப்படி?

"
மாதா உதரம் மலமிகில் மந்தனாம்
மாதா உதரம் சலமிகில் மூங்கையாம்
மாதா உதரம் இரண்டொக்கில் கண்ணில்லை
மாதா உதரத்தில் வந்த குழவிக்கே

(
திருமந்திரம் 481)
சரிகுறைகளற்ற குழந்தைகள் பிறக்கவேண்டுமென்றால் என்ன செய்ய வேண்டும்அதற்கு திருமூலர் தரும் பதில் என்னஉடலுறவின்போது ஆணின் விந்து வெளிப்படும்போது இருவருடைய சுவாசத்தின் நீளமும் திடமும் ஒத்து இருந்தால் குறையற்ற குழந்தை கருத்தரிக்கும் என்கிறார். ஆனால் ஆணின் சுவாசத்தின் நீளம் குறைவாக இருந்தால் கருத்தரிக்கும் குழந்தை குள்ளமாக இருக்கும்ஆணின் சுவாசம் திடமின்றி வெளிப்பட்டால் தரிக்கும் குழந்தை முடமாகும் என்று கூறுகிறார். வெளிப்படும் சுவாசத்தின் நீளமும் திடமும்ஒருசேரக் குறைவாகஇருந்தால் குழந்தை கூனாகப் பிறக்கும்.

 
100 ஆண்டு வாழ்வது எப்படி?
நாம் நூறாண்டு வாழ்வதற்கு நம் தந்தையரே காரணமாகின்றனர்.

எப்படி

விந்து வெளிப்பட்டதும் ஆண் விடும் சுவாசம் ஐந்து மாத்திரைக் கால

அளவு நீடித்தால் தரிக்கும் குழந்தை ஆயிரம் பிறைகள் காண முடியும்

.ஆனால் மாத்திரை அளவு குறையக் குறைய அதற்கேற்றாற்போல் 

நமது ஆயுளும் குறையும் என்று பின்வரும் பாடலில் கூறுகிறார்.

பாய்ந்த பின் அஞ்சோடில் ஆயுளும் நூறாம்

பாய்ந்த பின் நாலோடில் பாரினில் எண்பதாம்

பாய்ந்திடும் வாயு பகுத்தறிந் திவ்வகை


பாய்ந்திடும் யோகிக்குப் பாய்ச்சலுமே

(-
திருமந்திரம் 479)
பிறப்பு இறப்பு பற்றிய இன்னும் பல கேள்விகளுக்கும் திருமூலர் பதில் கூறுகிறார்.
நன்றி: by Nàthàn கண்ணன் Suryà 

No comments:

Post a Comment