Search This Blog

Monday, July 24, 2023

அண்ணா சினிமாவுக்கு எழுதிய ஒரே பாடல்

 


Movie Name : Kaadhal Jothi Actors : Ravichandran, Jai Sankar, Kanchana, Thengai Srinivasan, Nagesh...... Song : Un mela konda aasai uthamiye nitham undu Singer : Dr. Sirgali Govindarajan Story : Arignar Anna

உன் மேல கொண்ட ஆச உத்தமியே மெத்த உண்டு சத்தியமா சொல்லுறேன்டி தங்க ரத்தினமே தாளமுடியாது கண்ணே பொண்ணு ரத்தினமே.. உன் மேல கொண்ட ஆச உத்தமியே நித்தம் உண்டு சத்தியமா சொல்லுறேன்டி தங்க ரத்தினமே தாளமுடியாது கண்ணே பொண்ணு ரத்தினமே.. தங்க ரத்தினம், பொண்ணு ரத்தினம் தங்க ரத்தினம், பொண்ணு ரத்தினம்... உன் மேல கொண்ட ஆச........... சித்திரைக்குப் பக்கத்திலே சேர்ந்திருக்கிற வைகாசிப்போல் சித்திரைக்குப் பக்கத்திலே சேர்ந்திருக்கிற வைகாசிப்போல் முத்தழகி நீயும் நானும் தங்கரத்தினமே மூணு முடிச்சிப்போட்டு சேர்ந்துக்குவோம் பொண்ணு ரத்தினமே நேத்து நீ போட்டக்கோலம் நீர்க்கோலம் ஆகிப்போச்சி மாக்கோலம் போடடுக்கலாம் தங்க ரத்தினமே... என்ன மச்சான்னு கூப்பிடம்மா பொண்ணு ரத்தினமே என் தங்கம் என் பொண்ணு என் தங்கம் என் பொண்ணு (உன் மேல....) ஈரோட்டு சந்தையிலே எனக்கு வேட்டி எடுக்குவோம் ஈரோட்டு சந்தையிலே எனக்கு வேட்டி எடுக்குவோம் காஞ்சிபுரம் சிலுக்கு சேல தங்கரத்தினமே தந்து கண்ணாலம் கட்டிக்கிறேன் பொண்ணுரத்தினமே ஈரோட்டு சந்தையிலே எனக்கு வேட்டி எடுத்துக்குவோம ஈரோட்டு சந்தையிலே எனக்கு வேட்டி எடுத்துக்குவோம் காஞ்சிபுரம் சிலுக்கு சேல தங்கரத்தினமே தந்து கண்ணாலம் கட்டிக்கிறேன் பொண்ணு ரத்தினமே கனவிலே வந்தவளே கதவு தாண்டி வந்தாலென்ன கதையாகப் போகவேண்டாம் தங்க ரத்தினமே நானே கதவாக துணையிருப்பேன் பொண்ணுரத்தினமே கனவிலே வந்தவளே கதவு தாண்டி வந்தாலென்ன கதையாகப் போகவேண்டாம் தங்க ரத்தினமே நானே கதவாக துணையிருப்பேன் பொண்ணுரத்தினமே என் தங்கம் என் பொண்ணு என் தங்கம் என் பொண்ணு (உன் மேல ...) படம் - காதல் ஜோதி பாடல் - அண்ணா

Saturday, July 15, 2023

பண உதவி காமராஜர்

 தஞ்சாவூர் வெண்ணாற்றங்கரை நீரேற்று நிலையத்தில் ஒரு நிகழ்ச்சி...

நிகழ்ச்சியில் படிக்காத மேதை காமராஜர் தனக்கே உரிய பாணியில் பேசியது...
நாட்ல இருக்கிற எல்லாருக்கும் பணம் வேணும்.....
ஏதாச்சும் இயலாமையை சொல்லி அரசாங்கம் பண உதவி பண்ணனும்னு கேட்கிறாங்க...
எனக்கு ஒன்னும் பிரச்சினை இல்லை....
பண நோட்டு அடிக்கிற மிஷின் எங்க கிட்டே தான் இருக்கு.....
எவ்வளவு வேண்டுமானாலும் அச்சடிக்கலாம்னேன்...
அடிச்சு உங்கள் இஷ்டப்படியே ஆளுக்கு ஒரு மூட்டை பணம் கொடுத்துடுவோம்னேன்...
இப்போ பணம் இல்லாதவங்களே நாட்ல கிடையாதுன்னு வச்சுக்குவோம்...
கொஞ்ச நாள் கழிச்சு கடைத்தெரு பக்கம் போனீங்கன்னா எல்லா கடையும் பூட்டி கெடக்கும்... அரிசி, பருப்பு, உப்பு, புளி, மொளகா, எண்ணெய் -ன்னு ஒன்னும் கெடைக்காது.
விவசாய வேலைக்கு ஆள் வராது...
ஒரு வேலைக்கும் ஒருத்தனும் வரமாட்டான்..
எப்படி வருவான்னேன்..?
பணம் வேணும்னு உழைக்கிறாங்க....
கட்டு கட்டா பணம் இருக்கும்போது
எவன் தான் வேலைக்கு வருவான்...?
பணத்தை தலைக்குமாட்டில் வச்சுக்கிட்டு வயித்துல ஈரத்துணியை போட்டு கிட்டு... கெடக்க வேண்டியது தான்!
ஊரே தூக்கம் வராம கெடக்கும்....
இப்போ அது மதிப்புள்ள பணம் காசு இல்ல..
வெத்து பேப்பர் தான்னேன்....!
உழைப்பு தான் பணம்ன்னேன்...!
பொருளாதாரத்திற்கு மூல ஆதாரமே... உழைப்பு தான்னேன்....!
உழைப்பு இல்லாமல்...
ஒன்னுமே கெடைக்காது!
ஒன்னுமே கெடையாது!
இப்ப தெரிஞ்சுதா...?
உழைப்பு இல்லாமல் கட்டு கட்டா பணம் குடுத்தால் நாட்டோட பொருளாதாரமே சீர்கெட்டு கதை கந்தலாகி போகும்னேன்!"
இது பொருளாதார படிப்பு படிக்காமல் நாட்டு நிலையையும் நாட்டு மக்கள் நாடித்துடிப்பையும் படிச்ச ஒரு பாமர மனுஷன் சொன்னது!
படிக்காதமேதை...ன்னு சும்மாவா சொல்றாங்க!