Search This Blog

Monday, March 23, 2020

எந்த ஒரு நோயையும் அணுகக்கூடிய எளிய மருந்து இசை Music Therapy



இசையை வைத்து நோயாளிகளை குணப்படுத்தும் ஒரு சிகிச்சை முறைதான் மியூசிக் தெரபி.
1945ம் ஆண்டு இரண்டாம் உலகப்போர் முடிந்த பிறகு,  போரில் பாதிக்கப்பட்டிருந்த வீரர்கள் சிகிச்சையில் இருந்தார்கள். அவர்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் தினமும் பல இசை கலைஞர்களை  மருத்துவமனைக்கு வரவழைத்து இசைக்கருவிகளை வாசித்தும், பாடல் பாடியும் வீரர்களுக்கு மகிழ்ச்சியை உண்டாக்கினார்கள். அதன் பிறகு,  சிகிச்சையில் நல்ல முன்னேற்றம் தெரிந்தது. இதை கவனித்த அமெரிக்கர்கள் இசைக்கும் மருத்துவத்துக்கும் இருக்கும் தொடர்பு பற்றிய ஆராய்ச்சியில்  இறங்கினார்கள். அறிவியல் ரீதியாகவும் இசை குணப்படுத்தும் திறன் கொண்டது என்பது தெரிந்த பிறகே, மியூசிக் தெரபி  என்ற சிகிச்சை முறையை  உருவாக்கினார்கள்.


Music Therapy is the clinical and evidence-based use of music interventions to accomplish individualized goals within a therapeutic relationship by a credentialed professional who has completed an approved music therapy program.
Music Therapy is an established health profession in which music is used within a therapeutic relationship to address physical, emotional, cognitive, and social needs of individuals. After assessing the strengths and needs of each client, the qualified music therapist provides the indicated treatment including creating, singing, moving to, and/or listening to music. Through musical involvement in the therapeutic context, clients' abilities are strengthened and transferred to other areas of their lives. Music therapy also provides avenues for communication that can be helpful to those who find it difficult to express themselves in words. Research in music therapy supports its effectiveness in many areas such as: overall physical rehabilitation and facilitating movement, increasing people's motivation to become engaged in their treatment, providing emotional support for clients and their families, and providing an outlet for expression of feelings.


நோய்க்கு நேரடி மருந்தாக இது இருக்காது. ஆனால் நோயை குணப்படுத்த பக்கபலமாக இருக்கும். அதனால், இதை காம்ப்ளிமென்ட்ரி தெரபி என்றும்  சொல்வார்கள். மன அழுத்தமும் பதற்றமும் அதிகமாகி விட்ட இன்றைய வாழ்வில் உடலால் வரும் நோய்களைவிட மனதால் வரும் நோய்கள்  அதிகமாகிவிட்டன. ரத்த அழுத்தம் போன்ற உடல் நோய்களுக்கு கூட மனமே காரணமாக இருக்கிறது. கோபம், பொறாமை அதிகமாகி வருகிறது.

இந்த எதிர்மறை விஷயங்களையெல்லாம் தவிர்த்து அமைதியான முறையில், வெற்றிகரமாக ஒருவர் வாழ்வதற்கு மியூசிக் தெரபி பெரிதும் உதவி  செய்கிறது. முதியோர் இல்லங்கள், போதை மறுவாழ்வு மையங்கள், சிறைச்சாலைகள் போன்ற இடங்களில் இருப்பவர்களுக்கு கூட மியூசிக் தெரபி  நல்ல பலனை கொடுத்து வருகிறது. ஆட்டிசம் பாதிப்புக்குள்ளானவர்களுக்கு மியூசிக் தெரபி பெரிய உதவியாக இருப்பதைக் கண்கூடாக பார்க்க  முடியும். அதனால் நோயாளிகளுக்கு மட்டுமல்ல எல்லோருக்கும் மியூசிக் தெரபி தேவை.

இந்த சிகிச்சையை எப்படி அளிப்பார்கள்?

“ இசையை கேட்க வைப்பது, இசைக் கருவிகளை வாசிக்க வைப்பது, மற்றவர்களுடன் சேர்ந்து பாடுவது, மற்றவர்கள் பாடுவதை கேட்பது என்று இதில்  பல வகைகள் இருக்கின்றன. நோயாளிக்குத் தகுந்தாற்போல் இந்த சிகிச்சை முறைகள் மாறுபடும்.”

கர்ப்பிணிகளுக்கு மியூசிக் தெரபி அளிப்பது நல்லதாமே?

“ கர்ப்பத்தில் இருக்கும் அபிமன்யு கதை கேட்டதாக புராணக் கதை உண்டு. கருவைச் சுற்றியிருக்கும் அம்னியாட்டிக் திரவம் மூலம் கர்ப்பத்தில்  இருக்கும் குழந்தையால் நாம் பேசுவைதை கேட்க முடியும் என்று விஞ்ஞானிகள் இப்போது கண்டுபிடித்திருக்கிறார்கள். இதனால் மியூசிக் தெரபியை  தாய்க்கு அளிப்பதன் மூலம் கருவில் இருக்கும் குழந்தையின் மூளை வளர்ச்சி நன்றாக இருக்கும். அதனுடன் சுகப்பிரசவமாவதற்கும் குழந்தை  ஆரோக்கியமாக பிறப்பதற்கும் மியூசிக் தெரபி உதவுகிறது.



தினமும் 30 நிமிடம் பாட்டு கேளுங்கள்..!
ஒரு நாளைக்கு 30 நிமிடங்கள் இசையைக் கேட்பது இதயத்திற்கு நல்லது என்று ஆய்வு முடிவில் கூறப்பட்டுள்ளது.
என்ன மோசமான மனநிலையில் இருந்தாலும் பிடித்த பாடல்களை கேட்டால் மனநிலை ஓரளவுக்கு சரி ஆகிவிடும் என்று கூறுபவர்கள் பலர். அவ்வாறு இந்த உலகில் இசைக்கு அடிமையானவர்கள் ஏராளம்.
இந்நிலையில் இசை குறித்து மேற்கொண்ட ஆய்வில், பல ஆச்சரியத்தக்க தகவல்கள் தெரிய வந்துள்ளது. அதில் குறிப்பாக முதல்முறை மாரடைப்பு வந்தவர்கள் தொடர்ந்து தினமும் இசையை கேட்கும் பட்சத்தில், அவர்களுக்கு அடுத்து மாரடைப்பு வராது என்று தெரிய வந்துள்ளது. மேலும் எந்த ஒரு நோயையும் அணுகக்கூடிய எளிய மருந்து இசை என்றும் அதனால் நோயாளிகள் அனைவருக்கும் ‘மியூசிக் தெரபி’ வழங்க வேண்டும் கூறுகின்றனர் ஆய்வாளர்கள்.
ஏனென்றால் ‘மியூசிக் தெரபி’ -க்கு பெரிதாக முயற்சி எடுக்கத் தேவையில்லை. எளிதானது, மலிவானது. நோயாளிகளுக்கு சிகிச்சையின்போதும், அவர்கள் வீட்டில் ஓய்வு எடுக்கும்போது மனதுக்குப் பிடித்த இசையை கேட்கச் செய்யலாம் என்றும் இதன் மூலமாக மன மற்றும் உடல் ரீதியாக அவர்களது நம்பிக்கையை அதிகரிக்க முடியும் என்று தெரிவிக்கின்றனர்.
முன்னதாக, செர்பியாவில் ஆஞ்சியோ சிகிச்சை மேற்கொண்ட 350 நோயாளிகளை வைத்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் மேற்குறிப்பிட்ட முடிவுகள் உறுதி ஆகியுள்ளன.

மியூசிக் தெரபி சிகிச்சையைப் பெறும் நோயாளிகள் முதலில் தங்கள் உடல்நிலை, மனநிலைக்கு ஏற்ற இசையைத் தேர்ந்தெடுக்கின்றனர். தினமும் 30 நிமிடங்கள் ஒரே விதமான இசையை கேட்டனர். சுமார் ஏழு ஆண்டுகளாக தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் நேர்மறையான முடிவுகள் பெறப்பட்டன.
நோயாளிகள் கவலை, வலி​ குறைந்ததாக உணர்ந்ததுடன், எளிமையாக சிகிச்சையை பெற்றதாக உணர்ந்தனர். மருத்துவ சிகிச்சையை விட பலருக்கு இசை சிகிச்சை மிகவும் பயனுள்ளதாக இருந்தது. மேலும், ஏற்கனவே ஒருமுறை, இரு முறை மாரடைப்பு வந்தவர்கள் பெரும்பாலானோருக்கு அடுத்த முறை மாரடைப்பு வரவில்லை.
ஒருவரின் மன அழுத்தத்தை குறைக்க இசையே சிறந்த வழி என்றும் ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது. சிறப்புக் குழந்தைகள் அல்லது ஸ்பெஷல் சில்ட்ரன் என்று ஆட்டிஸம் பாதித்த குழந்தைகளுக்கு 13 வருடங்களாக இசையைப் பயன்படுத்தி அவர்கள் திறமையை வெளிக் கொண்டுவரும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார் லட்சுமி மோகன். சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் வகுப்புகள் நடத்தி வருகிறார். சென்ற ஒரு வருடமாக சௌமனஸ்யா அறக்கட்டளை ஒன்றை இதற்காகவே உருவாக்கியுள்ளார். அவரைச் சந்தித்தோம்: 

 "முன்னைவிட என் மகனிடம் இப்போது பொறுமை அதிகமாகத் தெரிகிறது. வெளியே ஹோட்டலுக்கோ, மாலுக்கோ போனால் அவனை எளிதாகக் கையாள முடிகிறது' என்று அதிகத் தீவிரமான பையனைப் பற்றி பெற்றோர் தெரிவித்த கருத்து இது.
சங்கராபரணம், சாருகேசி, கல்யாணி போன்ற ராகங்களில், ஒரே மாதிரியான வார்த்தைகளில் பஜன்கள் பாடும்போது, இவர்களின் நடவடிக்கை ஒழுங்குபடுவதாகக் கூறும் லஷ்மியிடம் 3 வயது முதல் 45 வயது
வரையிலான ஆட்டிசப் பாதிப்புடையவர்கள் சங்கீதப் பயிற்சி பெறுகிறார்கள்.
பயிற்சி பெறும் அனைவரும் வெவ்வேறு வயதில், வெவ்வேறு வகையிலான குறைபாட்டுடன் இருந்தாலும், இசை அவர்களை ஓர்
இடத்தில் நிறுத்துகிறது. கவனத்தைக் குவிப்பது, தனக்கான வேலைகளை முடிந்தவரையில் தானே செய்துகொள்ளவைப்பது போன்ற முன்னேற்றங்கள்,
இசை சிகிச்சையால் சாத்தியப்படுவதை நிரூபித்திருக்கிறார் லஷ்மி மோகன்.



எனவே, தினமும் சிறிது நேரம் இசையை ரசிப்பதன் மூலமாக உங்களது வாழ்க்கையை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ளுங்கள்.

Sunday, March 22, 2020

Speaking Pencil Arts

இது சீன வைரஸா? - த.வி.வெங்கடேஸ்வரன், முதுநிலை விஞ்ஞானி, விஞ்ஞான் பிரச்சார்.

சீனாவின் ரகசிய ஆயுத ஆராய்ச்சிக் கூடத்திலிருந்து உயிரியல் போர் ஆயுதமாக தயாரிக்கப்பட்ட கிருமி தவறுதலாக வெளியேறி பரவியதுதான் கொரோனா வைரஸ் என்ற புரளிக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது சமீபத்திய ஆய்வு. அமெரிக்காவின் ‘ஸ்க்ரிப்ஸ் ரிசர்ச் இன்ஸ்டிட்யூட்’ என்ற நிறுவனத்தை (scripps research institute)  சேர்ந்த கிறிஸ்டியன் ஆண்டர்சன் தலைமையில் நடத்தப்பட்ட இந்த ஆய்வின் முடிவானது புகழ் பெற்ற‘நேச்சர் மெடிஸன்’ ஆய்விதழில் மார்ச் 17, 2020 - செவ்வாயன்று  வெளியாகியுள்ளது. 
                            SARS - coV - 2 என்ற அறிவியல்  பெயரைக் கொண்ட இந்த வைரஸின் மரபணுக்களை ஆய்வு செய்த நிபுணர்கள், அவை ஆய்வகத்தில் செயற்கையாகவோ அல்லது மரபணுமாற்றம்  செய்யப்பட்டோ உருவாகவில்லை என்றும் இயற்கையில் பரிணமித்த புதிய இனப்பிரிவு என்றும் உறுதிப்படுத்தியுள்ளனர்.  கடந்த டிசம்பரில் சீனாவின் வுஹான் நகரில் மனிதர்களிடம் நோயை ஏற்படுத்தும்  SARS - coV - 2  இனப்பிரிவைச் சேர்ந்த கொரோனா வைரஸ் தனது கைவரிசையை காட்டத் தொடங்கியது.  வுஹான் நகரில் வைரஸ் ஆய்வு நிறுவனம் உள்ளதால் கொரோனா வைரஸ் அங்கே ரகசியமாக தயாரிக்கப்பட்ட செயற்கை கிருமி என்ற புரளி எழுந்தது. “ஏற்கெனவே நாம் அறிந்துள்ள வேறு கொரோனா வைரஸ் இனப்பிரிவுகளின் மரபணு தொடரோடு புதிய இனப்பிரிவை ஒப்பிட்டு பார்க்கும்போது  SARS - coV - 2 இனப்பிரிவு வைரஸ் இயற்கையில் பரிணமித்த ஒன்று என தெள்ளத்தெளிவாக புலப்படுகிறது” என்கிறார்கள் ஆய்வாளர்கள்.


பூட்டும்  வைரஸ்களின் கள்ளசாவியும்
ஓம்புயிரிகளின் செல்களில் புகுந்து அந்த உயிரியின் செல்அமைப்பை பயன்படுத்தித்தான் வைரஸ்கள் இனப்பெருக்கம் செய்யும். எனவே எப்படியாவது ஓம்புயிரி செல்களுக்குள் செல்ல வைரஸ் துடிக்கும். ஓம்புயிரிகளின் செல்கள் தங்கள் கதவை திறந்த வைத்து வா வா என்று வைரஸ்களை அழைக்காது. செல் சுவர் கொண்டு வைரஸ்களை உள்ளே எளிதில் நுழைய முடியாமல் தடுத்து நிறுத்தும். ஆனால் கதவு பூட்டிய கோட்டை போல எல்லா நேரமும் செல்கள் இருந்துவிட முடியாது. செல்பிரிதல், செல் செயல்படுதல் போன்ற எல்லா இயக்கத்துக்கும் ஆற்றல் தேவை. பற்பல புரத பொருள்கள் தேவை. ரத்தம் எடுத்துவரும் புரத பொருள்கள், ஆக்ஸிஜன் போன்ற பொருள்கள் செல்களுக்கு வெளியில் இருந்து உள்ளே செல்ல வேண்டும். உள்ளே ஏற்படும் வேதி வினை காரணமாக உருவாகும் மாசுகளை அப்புறப்படுத்த வேண்டும். எனவே, செல்களின் சுவர்களில் கதவு போன்ற அமைப்பு இருக்கும். தேவை ஏற்படும்போது மட்டும் கதவு திறந்து வெளியே உள்ள பொருள் உள்ளே வரும். உள்ளே உற்பத்தியாகும் மாசுகள் வெளியேற்றப்படும்.
சரியான புரதப்பொருள்கள் வந்து சேரும்போது, அவற்றை செல்களின் சுவர்களில் பற்றிப் பொருத்துவதற்காக கைப்பிடி போன்ற ஏற்பிகள் இருக்கும். அந்த புரதங்களின் ஒரு பகுதி சாவியின் வடிவில் இருக்கும். செல்சுவற்றில் உள்ள கதவு பூட்டின் உள்ளே இந்த சாவி வடிவம் நுழையும்போது கதவு திறந்து புரதம் உள்ளே செல்ல முடியும். பூட்டை உடைத்து திருடன் நுழைவது போல கள்ளச்சாவி போட்டு கதவை திறந்து வைரஸ்கள் உள்ளே நுழையும். ஒவ்வொரு பூட்டின் சாவியும் வெவ்வேறு வடிவில் இருக்கும் அல்லாவா? அதுபோல ஒவ்வொரு உயிரியின் பூட்டும் கைப்பிடியும் வெவ்வேறு வடிவில் இருக்கும். இதனால்தான், எல்லா வைரஸ்களும் எல்லா உயிரிகளின் செல்களிலும் புகுந்துவிட முடிவதில்லை. இதன் காரணமாகவே, மாட்டுக்கு நோய் ஏற்படுத்தும் வைரஸ்கள், பல சமயம் மனிதர்களுக்கு ஆபத்து ஏற்படுத்துவதில்லை. அதாவது ஒவ்வொரு வைரஸுக்கும் அதற்கு ஏற்ற ஓம்புயிரிகள் உள்ளன. தனது ஓம்புயிரி செல்களைப்பற்றி துளையிட்டு புகுந்து செல்வதற்காக அந்த குறிப்பிட்ட வைரஸ்களுக்கும் அதன் மேலுறையில் செல்களின் ஏற்பிகளை பற்றி பிடிக்கும் RBD புரதம் மற்றும் செல்சுவரின்  கதவை திறக்கும் சாவி போன்ற அமைப்பு, புரதம் போன்ற சிறப்பு அமைப்புகள் இருக்கும்.

ACE2 is an integral component of the RAS

(The renin-angiotensin system (RAS) is a signalling pathway that acts as a homeostatic regulator of vascular function . Its systemic actions include the regulation of blood pressure, natriuresis, and blood volume control. However, the RAS also plays an important local role, regulating regional blood flow and controlling trophic responses to a range of stimuli. The RAS is composed of a number of different regulatory components and effector peptides that facilitate the dynamic control of vascular function, in both health and disease ). The S protein exists in a metastable prefusion conformation that undergoes a dramatic structural rearrangement to fuse the viral membrane with the host cell membrane. This process is triggered by binding of the S1 subunit to a host-cell receptor ACE2, which destabilizes the prefusion trimer, resulting in shedding of the S1 subunit and transition of the S2 subunit to a highly stable postfusion conformation. In order to engage a host-cell receptor, the receptor-binding domain (RBD) of S1 undergoes hinge-like conformational movements that transiently hide or expose the determinants of receptor binding. These two states are referred to as the “down” conformation and the “up” conformation, where “down” corresponds to the receptor-inaccessible state and “up” corresponds to the receptor-accessible state, which is thought to be less stable. Due to the indispensable function of the S protein it represents a vulnerable target for antibody-mediated neutralization, and characterization of the prefusion S structure would provide atomic-level information to guide vaccine design and development.
மரபணு தொடர் வரிசை
தொற்றுநோய் பரவல் ஏற்பட்ட சில நாட்களிலேயே சீன விஞ்ஞானிகள் SARS - coV - 2  வைரஸின் மரபணு தொடரை வரிசை செய்து அனைத்து ஆய்வாளர்களும் ஆராய்ச்சி செய்யும் வண்ணம் பொதுவெளியில் வெளியிட்டனர். ஏற்கெனவே நடத்தப்பட்ட ஆய்வில், முதலில் ஒரே ஒரு மனிதருக்கு இந்தவைரஸ் தொற்று ஏற்பட்ட அதன் பின்னர் அவரிடமிருந்து மற்றவர்களுக்கு பரவித்தான் சீனாவில் தொற்றுநோய் பரவல் ஏற்பட்டது என்பது விளங்கியது. ஏறக்குறைய பந்து வடிவில் இருக்கும் கொரோனா வைரஸ்கள் மீது குறிப்பிட்ட புரதங்களால் ஆன கூர் முனைகள் உள்ளன. இந்த கூர் முனைகளைக் கொண்டே விலங்குகள் மற்றும் மனித செல்களை இந்த வைரஸ் பற்றிக் கொண்டு துளையிட்டு உள்ளே நுழைகிறது.
ஆண்டர்சன் மற்றும் அவரது சக பணியாளர்கள் SARS - coV - 2  மரபணு தொடரை ஆராய்ந்த போது, இந்த வகை வைரஸ்களின் கூர் முனைகளில் மனித செல்களின் மீது உள்ள ACE2 என்ற ஏற்பியை பற்றிக்கொள்ளும் விதத்தில் ‘ஏற்பி பற்று’ புரதம் பரிணமித்துள்ளது என கண்டறிந்தனர். அதாவது  ACE2  என்ற பூட்டை திறக்கும் சரியான சாவி SARS - coV - 2  -யிடம் இருந்தது.
ஒப்பீடு ஆய்வு
இந்த சாவியை ஏனைய SARS - coV  வைரஸ்களின் சாவியோடு ஒப்பிட்டு பார்த்தனர். புதிதாக உருவான SARS - coV - 2   -ன் சாவி புரதம் ஏற்கெனவே SARS - coV  வைரஸ்களிடம் இருந்த சாவி புரதத்தை விட ஆற்றல் குறைந்தது. செயற்கையாக உயிரியல் ஆயுதம் தயாரிக்க வேண்டும் என்றால் மேலும் ஆற்றல் கூடிய பற்று புரதத்தை தான் உருவாக்குவார்கள். ஆற்றல் குறைவான ஒன்றைஅல்ல. ஒருவேளை, செயற்கை SARS - coV  வைரஸை, கிருமி யுத்தத்துக்கு தயார் செய்தால், அது ஏற்கனவே மனிதர்களை கொல்லும் மிகவும் கொடிய வகை வைரஸை அடிப்படையாக கொண்டு தான் அமையவேண்டும். SARS - coV - 2  -ன் அடிப்படை அமைப்பு ஏற்கனவே மனிதரை தாக்கும் SARS - coV வைரஸ்கள் போல இல்லாமல் அழுங்கு மற்றும் வவ்வால்களை தாக்கும் SARS - coV வைரஸ்கள் போல அமைந்துள்ளது.
ஏற்கெனவே இருக்கும் கூர் கத்தியை மழுங்கடித்து போர் தளவாடங்களை தயார் செய்ய மாட்டார்கள் அல்லவா? அதன்படி பார்த்தால்,SARS - coV  வைரஸ்களின் வீரியம் கூட இந்த நோவல் SARS - coV - 2   வைரஸுக்கு இல்லை. “SARS - coV - 2   கூர்முனையின் RBD பற்று புரதம் மற்றும் வைரஸின் அடிப்படை மூலக்கூறு வடிவம் இரண்டையும் சேர்த்து பார்க்கும்போது, செயற்கையாக ஆய்வகத்தில் உருவாக்கிய கிருமியாக இருக்க முடியாது” என ஆய்வாளர்கள் முடிவுக்கு வந்தார்கள்.
எப்படி உருவானது?
இரண்டு வகையில் இந்த நோவல் SARS - coV - 2   வைரஸ் பரிணமித்து இருக்கலாம் என ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். முதலாவதாக, வேறு விலங்குகளில் தொற்று ஏற்படுத்தும் வைரஸ் உருவாகி, பின்னர் மனிதர்களிடம் நோய் ஏற்படுத்தும் கிருமியாக பரிணமித்து பரவியிருக்கக் கூடும் . இல்லையெனில், முதலில் நோயற்ற வடிவில் மனிதரிடம் பரவி, பின்னர் மனிதரிடம் பரிணமித்து நோய் ஏற்படுத்தும் கிருமியாக உருவாகியிருக்கலாம். வவ்வால்களிடம் பரவும் SARS - coV - 2   வைரஸின் சாயல் இந்த  கொரோனா வைரஸில் காணப்படுகிறது. எனவே, வவ்வால்களிடமிருந்து மனிதர்களுக்கு இது பரவி இருக்கலாம் என ஒரு கருத்து உள்ளது. SARS மற்றும் MERS வகை  SARS-CoV கரோனா வைரஸ்கள் இப்படித்தான் முதலில் புனுகுப் பூனை மற்றும் ஒட்டகங்களில் முறையே உருவாகி பின்னர் மனிதரிடம் பரவியது. எனினும், வவ்வால்களிடம் நோய் ஏற்படுத்தும் அதே இனம் மனிதரிடம் நோய் ஏற்படுத்த முடியாது. எனவே இரண்டுக்கும் இடைப்பட்ட இனப்பிரிவு பரிணமித்து இருக்க வேண்டும். இதுவரை அப்படிப்பட்ட இனப்பிரிவு இனம் காணப்படவில்லை. எனவே, வவ்வால்களிடம் உருவாகி மனிதனுக்கு இது பரவியது என தீர்மானமாக கூற முடியாது.
மாற்றாக நோய் விளைவிக்கின்ற திறன் அற்ற வகை வைரஸ் மனிதர்களிடம் பரவி, பின்னர் காலப்போக்கில் பரிணாமத்தின் காரணமாக, நோய் விளைவிக்கின்ற தன்மை கொண்ட இனப்பிரிவாக உருவெடுத்து இருக்கலாம். அழுங்கு எறும்புண்ணிகளில் இந்த சாயல் கொண்ட வைரஸ் உள்ளது. அந்த விலங்கிடம் காணப்பட்ட வைரஸ்களிலும், SARS-CoV-2 வைரஸ்களிலும் ஒரே வகை RBD அமைப்புதான் உள்ளது. எனவே நேரடியாக எறும்புண்ணியிடமிருந்தோ அல்லது பூனை இன விலங்குகளிடம் இருந்தோ இந்த வைரஸ் மனிதர்களிடம் பரவி இருக்கலாம். மனிதர்களிடம் பரவிய பின்னர் பரிணாம படிநிலை வளர்ச்சியில் மனித செல்களை துளைத்து திறக்கும் ‘சாவி புரதம்’ பரிணமித்து தொற்று நோயாக உருவாகியிருக்கலாம் என்கிறார்கள்.
இரண்டில் எது சரி என்பதை இப்போது நம்மிடம் உள்ள தரவுகளைக் கொண்டு இறுதி செய்ய முடியாது. தொற்று விளைவிக்க கூடிய திறனோடு விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு பரவியது என்றால் மறுபடி இந்த வைரஸின் வேறு ஒரு வடிவம் எதிர்காலத்தில் பரவி புதிய தொற்றுநோய் ஏற்பட வாய்ப்பு உள்ளது. நோய் ஏற்படுத்தும் திறனற்ற வடிவில் மனிதர்களிடம் பரவி பின்னர் நோய்த் தன்மை கொண்ட வைரஸ் பரிணமித்துள்ளது என்றால் மறுபடியும் அதேபோன்ற நிகழ்வு ஏற்படும் வாய்ப்பு மிகக் குறைவு. எப்படி இந்த வைரஸ் உருவானது என்பதை கூடுதல் ஆய்வுதான் நமக்கு தெளிவுப்படுத்தும்.
கிரீடம் அணிந்த வைரஸ்
பூனைக் குடும்பத்தில் பூனை, புலி என பல விலங்குகள் உள்ளதுபோல இந்த கொரோனா வைரஸ் குடும்பத்தில் மனிதர்களை தாக்கும் வைரஸ் என பற்பல இனப்பிரிவுகள்  உண்டு.  நுண்ணோக்கி வழியே பார்க்கும்போது கிரீடம் (கிரவுன்) போல அல்லது சூரியனை சுற்றி இருக்கும் ஒளிக்கதிர்கள் (கொரோனா) போல கூர்முனைகளைக் கொண்டு தென்படுவதால் கொரோனா வைரஸ் குடும்பம் என இதற்கு பெயர் ஏற்பட்டது.
நமக்கு தெரிந்த வரையில் மனிதர்களை  தாக்கும் ஆறு கொரோனா வைரஸ்களில் 229E,  NL63, OC43, HK01  ஆகிய நான்கும் ஆபத்து அற்ற உடல் உபாதைகளை ஏற்படுத்தும்.  MERS - CoV மற்றும் SARS - coV  ஆகிய இரண்டும் கிருமி தாக்கியவர்களில் சிலருக்கு மரணம் சம்பவிக்கும் அளவுக்கு நோயை ஏற்படுத்தும். ஏழாவதாக உருவானதுதான் இந்த SARS - coV - 2 . எனவேதான், புத்தம் புதிதாக சமகாலத்தில் பரிணமித்த இனப்பிரிவு என பொருள்படும் ‘நோவல்’ என்ற அடைமொழியோடு ‘நோவல் கொரோனா வைரஸ்’ என பெயர் சூட்டப்பட்டது. இந்த வைரஸ் ஏற்படுத்தும் நோயின் பெயர்தான் கோவிட் -19.
தொடர்புக்கு : tvv123@gmail.com
நன்றி : தி இந்து (தமிழ்), 19.3.2020.

Saturday, March 21, 2020

மூஸா நபியும் ஹிள்ர் நபியும் சந்தித்தல்....



இன்னும் மூஸா தம் பணியாளிடம், “இரு கடல்களும் சேரும் இடத்தை அடையும் வரை நீங்காது நடப்பேன்; அல்லது வருடக் கணக்கில் நான் போய்க்கொண்டிருப்பேன்” என்று கூறியதை நீர் நினைவு படுத்துவீராக.
(அல்குர்ஆன் : 18:60)
அவர்கள் இருவரும் அவ்விரணடு (கடல்களு)க்கும் இடையே ஒன்று சேரும் இடத்தை அடைந்த போது; அவ்விருவருடைய மீனை அவ்விருவரும் மறந்து விட்டனர்; அது கடலில் தன்னுடைய வழியைச் சுரங்கம் போல் அமைத்துக்கொண்டு (நீந்திப் போய்) விட்டது.
(அல்குர்ஆன் : 18:61)
அவ்விருவரும், அப்புறம் அந்த இடத்தைக் கடந்த போது, தம் பணியாளை நோக்கி, “நம்முடைய காலை ஆகாரத்தைக் கொண்டுவா; இந்த நம் பிரயாணத்தில் நிச்சயமாக நாம் களைப்பைச் சந்திக்கிறோம்” என்று (மூஸா) கூறினார்.
(அல்குர்ஆன் : 18:62)
அதற்கு “அக்கற்பாறையில் நாம் தங்கிய சமயத்தில் நீங்கள் பார்த்தீர்களா? நிச்சயமாக நான் மீனை மறந்து விட்டேன்.” மேலும், அதை (உங்களிடம்) சொல்வதை ஷைத்தானையன்றி (வேறு எவனும்) என்னை மறக்கடிக்கவில்லை; மேலும் அது கடலுக்குள் தன் வழியை ஆச்சரியமாக அமைத்துக் கொண்டது!” என்று பணியாள் கூறினார்.
(அல்குர்ஆன் : 18:63)
(அப்போது) மூஸா, “நாம் தேடிவந்த (இடம் அ)துதான்” என்று கூறி, இருவரும் தம் காலடிச் சுவடுகளைப் பின்பற்றி (வந்தவழியே) திரும்பிச் சென்றார்கள்.
(அல்குர்ஆன் : 18:64)
(இவ்வாறு) அவ்விருவரும் நம் அடியார்களில் ஒருவரைக் கண்டார்கள்; நாம் அவருக்கு நம்மிடமிருந்து கிருபை அருளியிருந்தோம்; இன்னும் நாம் அவருக்கு நம்மிடமிருந்து கல்வி ஞானத்தையும் கற்றுக் கொடுத்திருந்தோம்.
(அல்குர்ஆன் : 18:65)
“உங்களுக்குக் கற்றுக் கொடுக்கப்பட்ட நன்மையானவற்றை நீங்கள் எனக்குக் கற்பிக்கும் பொருட்டு, உங்களை நான் பின் தொடரட்டுமா? என்று அவரிடம் மூஸா கேட்டார்.
(அல்குர்ஆன் : 18:66)
(அதற்கவர்,) “நிச்சயமாக நீர் என்னுடன் பொறுமையாக இருக்க இயலமாட்டீர்!” என்று கூறினார்.
(அல்குர்ஆன் : 18:67)
“(ஏனெனில்) எதைப் பற்றி உமக்கு முழுமையான ஞானம் இல்லையோ, அதில் நீர் எவ்வாறு பொறுமையாயிருப்பீர்!” (என்று கேட்டார்.)
(அல்குர்ஆன் : 18:68)
(அதற்கு) மூஸா, “இன்ஷா அல்லாஹ்! நான் பொறுமையுள்ளவனாகவும், எவ்விஷயத்திலும் உமக்கு மாறு செய்யாதவனாகவும் நான் இருப்பதை நீங்கள் விரைவில் காண்பீர்கள்” என்று (மூஸா) சொன்னார்.
(அல்குர்ஆன் : 18:69)
(அதற்கு அவர்) “நீர் என்னைப்பின் தொடர்வதாயின், எந்த ஒரு விஷயத்தைப் பற்றியும் - நானாகவே அதைப்பற்றி உமக்கு அறிவிக்கும் வரை - நீர் என்னிடம் கேட்கக் கூடாது” என்று சொன்னார்.
(அல்குர்ஆன் : 18:70)
பின்னர் இருவரும் ஒரு மரக்கலத்தில் ஏறும் வரையில் நடந்து சென்றனர், (மரக்கலம் கடலில் செல்லலானதும்;) அவர் அதில் ஓர் ஓட்டையைப் போட்டார்; “இதிலுள்ளவர்களை மூழ்கடிக்கவா நீங்கள் இதில் ஓர் ஓட்டையைப் போட்டீர்கள்? நிச்சயமாக நீங்கள் ஓர் (அபாயகரமான) பெருங் காரியத்தைச் செய்துவிட்டீர்கள்” என்று (மூஸா) கூறினார்.
(அல்குர்ஆன் : 18:71)
(அதற்கு அவர்,) “நிச்சயமாக நீர் என்னுடன் பொறுமையைக் கடைப்பிடிக்க முடியாது என்று உமக்கு நான் சொல்லவில்லையா? என்றார்.
(அல்குர்ஆன் : 18:72)
“நான் மறந்து விட்டதைப் பற்றி நீங்கள் என்னை(க் குற்றம்) பிடிக்க வேண்டாம்; இன்னும் என் காரியத்தைச் சிரமமுடையதாக ஆக்கி விடாதீர்கள்” என்று (மூஸா) கூறினார்.
(அல்குர்ஆன் : 18:73)
பின்னர் (மரக்கலத்திலிருந்து இறங்கி) இருவரும் வழி நடக்கலானார்கள்; (வழியில்) ஒரு பையனை அவ்விருவரும் சந்தித்த போது, அவர் அவனைக் கொன்று விட்டார். (உடனே மூஸா) “கொலைக்குற்றமின்றி, பரிசுத்தமான ஜீவனைக் கொன்றுவிட்டீர்களே? நிச்சயமாக நீங்கள் பெருத்தக் கேடான ஒருகாரியத்தையே செய்து விட்டீர்கள்!” என்று (மூஸா) கூறினார்.
(அல்குர்ஆன் : 18:74)
(அதற்கு அவர்) “நிச்சயமாக நீர் என்னுடன் பொறுமையாக இருக்க இயலாது என்று உமக்கு நாம் சொல்லவில்லையா?” என்று கூறினார்.
(அல்குர்ஆன் : 18:75)
இதன் பின்னர் நான் எந்த விஷயத்தைப் பற்றியாவது உங்களிடம் கேட்பேனாயின் நீங்கள் உங்கள் தோழனாக வைத்துக் கொள்ள வேண்டாம் - நிச்சயமாக நீங்கள் என்னிடமிருந்து தக்க மன்னிப்புக் கோருதலைப் பெற்றுக் கொண்டீர்கள்” என்று கூறினார்.
(அல்குர்ஆன் : 18:76)
பின்னர் அவ்விருவரும் வழி நடந்து, இருவரும் ஒரு கிராமத்தாரிடம் வந்து சேர்ந்தார்கள்; தங்களிருவருக்கும் உணவு தருமாறு அந்த கிராமத்தாரிடம் கேட்டார்கள்; ஆனால் அவ்விருவருக்கும் விருந்தளிக்க அவர்கள் மறுத்து விட்டார்கள்; அப்போது அங்கே இடிந்து அடியோடு விழும் நிலையிலிருந்த ஒரு சுவரை அவ்விருவரும் கண்டனர்; ஆகவே, அவர் (சரிசெய்து) நிமிர்த்து வைத்தார். (இதைக் கண்ட மூஸா) “நீங்கள் நாடியிருந்தால் இதற்கென ஒரு கூலியை பெற்றிருக்கலாமே” என்று (மூஸா) கூறினார்.
(அல்குர்ஆன் : 18:77)
“இது தான் எனக்கும், உமக்குமிடையே பிரிவு(க்குரிய நேரம்) ஆகும்; எதைப் பற்றி நீர் பொறுமையாக இருக்க முடியவில்லையோ, அதன் விளக்கத்தையும் (இப்பொழுதே) உமக்குத் திட்டமாக அறிவித்து விடுகிறேன்” என்று அவர் கூறினார்.
(அல்குர்ஆன் : 18:78)
“அம்மரக்கலம் கடலில் வேலை செய்யும் ஏழைகள் சிலருக்குச் சொந்தமானது; எனவே நான் அதை (ஓட்டையிட்டு)ப் பழுதாக்க விரும்பினேன்; (ஏனெனில்) அவர்களுக்குப் பின்னால் (கொடுங்கோலனான) ஓர் அரசன் இருந்தான்; அவன் (பழுதில்லா) மரக்கலங்களையெல்லாம் பலவந்தமாக எடுத்துக் கொள்கிறான்.
(அல்குர்ஆன் : 18:79)
“(அடுத்து) அந்த சிறுவனுடைய தாய், தந்தையர் இருவரும் முஃமின்களாக இருக்கிறார்கள்; அவன் (வாலிபனாகி) அவ்விருவரையும் வழிகேட்டிலும், குஃப்ரிலும் சேர்த்து விடுவான் என்று நாம் பயந்தோம்.
(அல்குர்ஆன் : 18:80)
“இன்னும், அவ்விருவருக்கும், பரிசுத்தத்திலும் (பெற்றோரிடம்) அன்பு செலுத்துவதிலும் சிறந்திருக்க கூடிய (ஒரு மகனை) அவ்விருவருடைய இறைவன் (கொலையுண்டவனுக்குப்) பதிலாக கொடுப்பதை நாம் விரும்பினோம்.
(அல்குர்ஆன் : 18:81)
“இனி: (நான் நிமிர்த்து வைத்த) அந்த சுவர் அந்தப் பட்டிணத்திலுள்ள அநாதைச் சிறுவர் இருவருக்குரியது; அதன் அடியில் அவ்விருவருக்கும் சொந்தமான புதையல் உள்ளது; அவ்விருவருடைய தந்தை (ஸாலிஹான) நல்ல மனிதராக இருந்தார்; எனவே, அவ்விருவரும் தக்க பிராயமடைந்த தம்மிருவரின் புதையலையும் வெளிப்படுத்தி (எடுத்துக்) கொள்ள வேண்டும் என உம்முடைய இறைவன் நாடினான். (இவையெல்லாம்) உம் இறைவனுடைய ரஹ்மத்தில் நின்றும் உள்ளவை; என் விருப்பு, வெறுப்பின்படி எந்தக் காரியத்தையும் செய்யவில்லை; எதைப் பற்றி நீர் பொறுமையாக இருக்க முடியவில்லையோ அதன் விளக்கம் இது தான்” என்று கூறினார். 
(அல்குர்ஆன் : 18:82)
(ஹிள்ர்(அலை) அவர்களைச் சந்தித்த) மூஸா அலை அவர்கள், இஸ்ராவேலர்களின் நபியாக அனுப்பப்பட்ட மூஸா அல்லர்; அவர் வேறு மூஸா' என்று நவ்ஃபுல் பக்காலி என்பவர் கருதிக் கொண்டிருக்கிறாரே என்று இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களிடம் கேட்டேன். அதற்கவர்கள் 'இறைவனின் பகைவராகிய அவர் பொய் கூறுகிறார். எங்களுக்கு உபய்யுபின் கஅபு(ரலி), நபி(ஸல்) கூறினார்கள் என அறிவித்தாவது: (இறைவனின்) தூதராகிய மூஸா(அலை) அவர்கள் இஸ்ரவேலர்களுக்கிடையே உரையாற்ற நின்றார்கள். அப்போது 'மக்களில் பேரறிஞர் யார்?' என்று அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு, தாமே பேரறிஞன் என்று அவர்கள் பதில் கூறிவிட்டார்கள். அவர்கள் இது பற்றிய ஞானம் அல்லாஹ்வுக்கே உரியது என்று கூறாதததால் அல்லாஹ் அவர்களைக் கண்டித்து, 'இரண்டு கடல்கள் சங்கமமாகும் இடத்தில் என் அடியார்களில் ஒருவர் இருக்கிறார். அவர் தாம் உம்மை விடப் பேரறிஞர்' என்று அவர்களுக்குச் செய்தி அறிவித்தான். அதற்கவர்கள் 'என் இறைவனே! அவரை நான் சந்திக்க என்ன வழி?' என்று கேட்டார்கள். 'கூடை ஒன்றில் ஒரு மீனைச் சுமந்து (பயணம்) செல்வீராக! அம்மீனை எங்கே தொலைத்து விடுகிறீரோ அங்கேதான் அவர் இருப்பார்' என்று அவர்களிடம் கூறப்பட்டது. உடனே அவர்கள் தம் பணியாளான யூஷஃ இப்னு நூன் என்பாருடன் ஒரு மீனைக் கூடையில் சுமந்து கொண்டு நடக்க ஆரம்பித்தார்கள். (நெடு நேரம் நடந்த களைப்பில்) இருவரும் ஒரு பாறையை அடைந்ததும் படுத்து உறங்கிவிட்டார்கள். உடனே கூடையிலிருந்த மீன் மெல்ல நழுவி கடலில் தன் வழியே நீந்திப் போக ஆரம்பித்துவிட்டது. (மீன் காணாமல் போனது மூஸாவுக்கும் அவரின் பணியாளுக்கும் வியப்பளித்தது. அவ்விருவரும் அன்றைய மீதிப்போது முழுவதும் நடந்து போய்க் கொண்டே இருந்தார்கள். பொழுது விடிந்ததும் (அது வரை களைப்பை உணராத) மூஸா(அலை) தம் பணியாளரிடம், 'இந்தப் பயணத்தின் மூலம் நாம் (மிகுந்த) சிரமத்தைச் சந்தித்து விட்டோம். எனவே நம்முடைய காலை உணவை எடுத்து வா?' என்றார்கள். (சந்திப்பதற்காகக்) கட்டளையிடப்பட்டிருந்த இடத்தைத் தாண்டும் வரை எந்த விதச் சிரமத்தையும் அவர்கள் உணரவில்லை. அப்போது பணியாளர் அவர்களிடம் 'பார்த்தீர்களா? நாம் அந்தப் பாறையில் தங்கியிருந்தபோது (தான் அந்த மீன் ஓடியிருக்க வேண்டும்) நானும் மீனை மறந்து விடடேன்' என்றார். '(அட!) அது தானே நாம் தேடி வந்த இடம்' என்று மூஸா(அலை) அவர்கள் கூறிவிட்டு, இருவருமாகத் தம் காலடிச் சுவடுகளைப் பின்தொடர்ந்தவர்களாய் (வந்தவழியே) திரும்பி வந்து கொண்டிருந்தார்கள். இருவரும் அந்தக் குறிப்பிட்ட பாறையைச் சென்றடைந்ததும் ஆடை போர்த்தியிருந்த ஒரு மனிதரைக் கண்டார்கள். உடனே மூஸா(அலை) அவர்கள் (அம்மனிதருக்கு) ஸலாம் கூறினார்கள். அப்போது ஹிள்ர் அவர்கள் 'உம்முடைய ஊரில் ஸலாம் (கூறும் பழக்கம்) ஏது?' என்று கேட்டார்கள். 'நான்தான் மூஸா' என்றார்கள். 'இஸ்ரவேலர்களுக்கு நபியாக அனுப்பப்பட்ட மூஸாவா?' என ஹிள்ர் அவர்கள் கேட்டார்கள். அதற்கு 'ஆம்!' என்று கூறினார்கள். 'உமக்கு (இறைவனால்) கற்றுத் தரப்பட்டதிலிருந்து எனக்குக் கற்றுத் தருவதற்காக உம்மை நான் பின்பற்றி வரட்டுமா?' என்று கேட்டார்கள். ஹிள்ர் (அலை) அவர்கள், 'நிச்சயமாக நீர் என்னுடன் பொறுமையோடிருக்க ஆற்றல் பெறமாட்டீர்! மூஸாவே! இறைவன் தன்னுடைய ஞானத்திலிருந்து எனக்குக் கற்றுத் தந்தது எனக்கிருக்கிறது. அதனை நீர் அறிய மாட்டீர். அவன் உமக்குக் கற்றுத் தந்திருக்கிற வேறொரு ஞானம் உமக்கிருக்கிறது. அதனை நான் அறிய மாட்டேன்' என்று கூறினார். அதற்கு மூஸா(அலை) அவர்கள், 'உம்முடைய உத்தரவை மீறாத முறையில் அல்லாஹ் நாடினால் என்னைப் பொறுமையாளனாகக் காண்பீர்!' என்றார்கள். (முடிவில்) இருவரும் கப்பல் எதுவும் கிடைக்காத நிலையில் கடற்கரை ஓரமாகவே நடந்து சென்றார்கள். அவ்விருவரையும் ஒரு கப்பல் கடந்து சென்றது. தங்களையும் (அக்கப்பலில்) ஏற்றிக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார்கள். அவர்கள் கிள்று அவர்களை அறிந்திருந்ததால் அவ்விருவரையும் கட்டணம் ஏதுமின்றிக் கப்பலில் ஏற்றினார்கள்.
ஒரு சிட்டுக்குருவி வந்து கப்பலின் ஓரத்தில் அமர்ந்து கடலில் ஒன்றிரண்டு முறை கொத்தியது. அப்போது கிள்று அவர்கள், 'மூஸா அவர்களே! இச்சிட்டுக் குருவி கொத்தியதால் கடலில் எவ்வளவு குறையுமோ அது போன்ற அளவுதான் என்னுடைய ஞானமும் அளவுதான் என்னுடைய ஞானமும் உம்முடைய ஞானமும் அல்லாஹ்வின் ஞானத்திலிருந்து குறைத்து விடும்' என்று கூறினார்கள். (சற்று நேரம் கழித்ததும்) கப்பலின் பலகைகளில் ஒன்றை கிள்று (அலை) கழற்றினார்கள். இதைக் கண்ட மூஸா(அலை) அவர்கள் 'நம்மைக் கட்டணம் ஏதுமின்றி ஏற்றிய இந்த மக்கள் மூழ்கட்டும் என்பதற்காக, வேண்டுமென்று கப்பலை உடைத்து விட்டீரே?' என்று கேட்டார்கள். 'மூஸாவே! நிச்சயமாக நீர் என்னுடன் பொறுமையோடிருக்க ஆற்றல் பெறமாட்டீர் என்று நான் (முன்பே உமக்குச்) சொல்லவில்லையா? என்று கிள்று அவர்கள் கேட்டார்கள். அதற்கவர்கள், 'நான் மறந்துவிட்டதற்காக என்னை நீர் (குற்றம்) பிடித்து விடாதீர்' என்று கேட்டுக் கொண்டார்கள். எனவே முதற் பிரச்சினை மூஸாவிடமிருந்து மறதியாக ஏற்பட்டுவிட்டது. (கடல் வழிப் பயணம் முடிந்து) மீண்டும் இருவரும் நடந்து போய்க் கொண்டிருந்தார்கள்.
அப்போது ஒரு சிறுவன் ஏனைய சிறுவர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தான். கிள்று அவர்கள் அதன் தலையை மேலிருந்து பிடித்து (இழுத்து)த் தம் கையால் (திரும்) தலையை முறித்துவிட்டர்கள். உடனே மூஸா(அலை) அவர்கள் 'யாரையும் கொலை செய்யாத (ஒரு பாவமும் அறியாத) தூய்மையான ஆத்மாவைக் கொன்று விட்டீரே?' என்று கேட்டார்கள். அதற்கு கிள்று அவர்கள் 'மூஸாவே! நிச்சயமாக நீர் என்னுடன் பொறுமையாயிருக்க முடியாது என்று உம்மிடம் நான் முன்பே சொல்லவில்லையா?' என்று கேட்டார்கள். இந்த வார்த்தை முந்திய வார்த்தையை விட மிக்க வலியுறுத்தலுடன் கூடியது என இந்த ஹதீஸ் அறிவிப்பாளர்களில் ஒருவரான இப்னு உயைனா என்பவர் கூறுகிறார்.
மீண்டும் இருவரும் (சமாதானமாகி) நடந்து போய்க் கொண்டிருந்தார்கள். முடிவாக ஒரு கிராமத்தவரிடம் வந்து அவர்களிடம் உணவு கேட்டார்கள். அவ்வூரார் அவர்களுக்கு உணவளிக்க மறுத்துவிட்டார்கள். அப்போது அக்கிராமத்தில் ஒரு சுவர், கீழே விழுந்து விடும் நிலையிருக்கக் கண்டார்கள். உடனே கிள்று அவர்கள் தங்களின் கையால் அச்சுவரை நிலை நிறுத்தினார்கள். (இதைப் பார்த்துக் கொண்டிருந்த) மூஸா(அலை) அவர்கள் 'நீர் விரும்பியிருந்தால் இதற்காக ஏதாவது கூலி பெற்றிருக்கலாமே!' என்று அவர்களிடம் கேட்டார்கள். உடனே கிள்று அவர்கள், 'இதுதான் எனக்கும் உமக்கிடையே பிரிவினையாகும்' என்று கூறிவிட்டார்கள்.'
(இச்சம்பவத்தை) நபி(ஸல்) அவர்கள் (சொல்லிவிட்டு) 'மூஸா மாத்திரம் சற்றுப் பொறுமையாக இருந்திருந்தால் அவ்விருவரின் விஷயங்களிலிருந்தும் நமக்கு இன்னும் (நிறைய) வரலாறு கூறப்பட்டிருக்கும். அல்லாஹ் மூஸாவிற்கு அருள் புரிவானாக!' என்று கூறினார்கள்' என ஸயீது இப்னு ஜுபைர்(ரலி) அறிவித்தார்.
ஸஹீஹ் புகாரி : 122.
இனி அவர் ஹிள்ர் நபியுடன் பயணிக்க முடியாது. அவசரப்பட்டு அவர்கேட்ட மூன்று
சம்பவங்கள் குறித்தும் ஹிள்ர் நபிவிளக்கம் கூற ஆரம்பித்தார்.

“நான் நாம் ஏறிவந்த கப்பலில் துளையிட்டேன். அது அந்தக்கப்பல் காரர்களுக்கு அநியாயம் செய்வதற்காக செய்தது அல்ல. இவர்கள் போகும்வழியில் ஒரு அநியாயக்கார அரசன் இருக்கிறான். எந்தக் குறையும் இல்லாத கப்பலைக் கண்டால் அதை அவன்அபகரித்துக்கொள்வான். நான் கப்பலில் துளையிட்டதால் அவன் அபகரிக்கமாட்டான் . இந்தக்கப்பல் கடல் தொழில்செய்யும் ஏழைக்குரியது. எனவே கப்பல்  அபகரிக்கப்படாமல் இருப்பதற்காகத்தான் கப்பலி துளையிட்டேன்” என்று கூறினார்.
ஆம் “கண்ணால்காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய், தீரவிசாரிப்பதேமெய்” என்பார்கள் அல்லவா? ஹிள்ர் நபியின் செயலைப்பார்த்தால் கப்பல்காரருக்கு அநியாயம் செய்வதுபோல் தான் தெரிந்தது. ஆனால் அவர் செய்ததது கப்பல் சொந்தக்காரருக்கு உதவிதான். இப்படித்தான் உங்கள் பெற்றோர், ஆசிரியர்கள் உங்களுக்காக நன்மை செய்யும் போது உங்களுக்கு அது கெடுதியாகத் தெரியலாம்.
அடுத்து ஒரு சிறுவனை ஹிள்ர் நபி கொலை செய்தார் அல்லவா? இது ஒரு கொடிய செயலாகத்தான் தெரிந்தது. ஆனால் அதுபற்றி அவர் கூறும்போது “அந்த சிறுவனின் தாய் தந்தையர் இருவரும் நல்லவர்கள். இந்த சிறுவர் பெரியவனானால் அவர்களது பெற்றோருக்கு அநியாயம் செய்வான். அவர்களை இறைநிராகரிப்பில் ஈடுபடுமாறு நிர்பந்திப்பான். எனவே இவனைக் கொன்றுவிட்டு அவர்களுக்கு பெற்றோரை மதிக்கக்கூடியநல்ல குழந்தையை வழங்க அல்லாஹ் நாடினான். எனவேதான் அந்த சிறுவனைக்கொன்றேன்” என்றார். நாம் பெற்றோருடன் நல்ல முறையில் நடக்காவிட்டால் நமக்குப் பாதுகாப்பில்லை பார்த்தீர்களா?
“அடுத்து நான் சரி செய்த வீட்டுச்சுவர் இரண்டு அனாதை பிள்ளைகளுக்குறியது. அந்தப்பிள்ளைகளின் தந்தை ஸாலிஹானவராவார். அந்த சுவற்றில் இந்த அனாதைப்பிள்ளைகளுக்கான ஒரு புதையல் உண்டு. இப்போது இந்த சுவர் இடிந்து விழுந்தால் அந்த புதையலை யாரவது எடுத்துக்கொள்வார்கள். இப்போது அந்த அனாதைப்பிள்ளைகள் சிறுவர்களாக உள்ளனர். அவர்கள் பெரியவர்களாகி இந்தப்புதையலை எடுக்கவேண்டும். அதற்காகத்தான் உடைந்து விழ இருந்த சுவற்றை நான் சரி செய்தேன்” என்று விரிவாக விளக்கினார்கள். அத்துடன் இவற்றை நான் என் விருப்பப்படி செய்யவில்லை. அல்லாஹ்வின் அனுமதிப்படி தான் செய்தேன் என்று கூறினார்.
மூஸாநபி, “நான்தான் இப்போது உலகில் உள்ளஅறிவாளி” என்று கூறியதற்காக அல்லாஹ் கற்றுக்கொடுத்த பாடம் இது.
நாமும் ஆணவம் கொள்ளக்கூடாது! பெருமை கொள்ளக்கூடாது! என்னைவிட அறிந்தவர்கள் இருப்பார்கள் என்று உணர்ந்து செயல்பட வேண்டும். கல்விக்குக்கட்டுப்பாடு அவசியம். ஹிள்ர் நபி மூஸா நபிக்குக்கட்டுப்பாடு போட்டார்கள் அல்லவா? ஹிள்ர் நபியை விட மூஸா நபி அந்தஸ்த்திலும் பொறுப்பிலும் கூடியவராவார்.
இருப்பினும் அவரிடம் இவர் கற்கவேண்டும் என்பது அல்லாஹ்வின் ஏற்பாடாகும். எனவே அறிவுயாரிடம் இருந்தாலும் நாம் கற்றுக்கொள்ளவேண்டும். இது போன்ற நல்ல படிப் பினைகளைத்தரும் இச்சம்பவத்தை திருக்குர்ஆனில்அத்தியாயத்தில் 60-82 வரையுள்ள வசனங்களில் காணலாம்.