Search This Blog

Monday, February 10, 2020

முல்லை யேசுதாசன் (சாமி) எழுத்தாளரும் திரைப்பட நடிகரும்

எழுத்தாளரும் திரைப்பட நடிகருமான முல்லை யேசுதாசன் (சாமி) மறைந்து விட்டார். அதிர்ச்சியளிக்கும் சேதியிது. எந்த நிலையிலும் சோராத மனிதர். பொருளாதார நெருக்கடி, இராணுவ நெருக்கடி, குடும்பச் சூழலின் நெருக்கடி என தொடர் நெருக்கடிகளால் எப்போதும் சுற்றி வளைக்கப்பட்ட வாழ்க்கை முல்லை யேசுதாசனுடையது. ஆனாலும் அவர் எதற்கும் துவண்டு போனதில்லை. எந்தச் சுமையையும் பெரிதாக எடுத்துக் கொண்டதில்லை. எப்போதும் கலகலப்பையே எல்லாவற்றுக்குமான ஆயுதமாக வைத்திருந்தார் யேசு. இதனால் எல்லோரையும் சமனிலையில் நோக்கிப் பழகிய பிறவியாக இருந்தார். வஞ்சகம், சூது அறியாத மனிசர் என்று சொல்வார்களல்லவா.. அது அப்படியே சாமிக்குப் பொருந்தும். ஊர்ச்சனங்கள் தொடக்கம் போராளிகள் வரையில் “சாமி“ என்றும் “சாமி அண்ணை” என்றுட“ அன்பாக அழைத்துக் கொண்டாடியவரை இனி நாம் காணவே முடியாது.

முல்லைத்தீவு கள்ளப்பாட்டில் பிறந்து அங்கேயே வாழ்ந்து வந்த யேசுதாசன் 1980 களில் ஈரோஸ் இயக்கத்தில் இணைந்து செயற்பட்டவர். அந்த நாட்களிலேயே வாசிப்பில் சாமிக்கு மிகுந்த ஆர்வம். பின்னர் சில ஆண்டுகாலம் யேசுதாசன் இந்தியாவுக்குப் புலம்பெயர்ந்து அங்கே வாழந்தார். ஆனாலும் அந்த வாழ்க்கை அவருக்குத் தோதுப்படவில்லை. அங்கிருந்து திரும்பி முல்லைத்தீவுக்கே வந்தார். ஆனால், முல்லைத்தீவு அவரை வரவேற்கும் நிலையில் இருக்கவில்லை. அது இராணுவத்திடம் பறிபோயிருந்தது. அல்லது இராணுவப் பிடியிலிருந்தது. இதனால் யேசுதாசனின் குடும்பம் இடம்பெயர்ந்து வேறு இடத்திலிருந்தது.
இந்தக் காலப்பகுதியில் அவர் சுயதொழிலில் ஈடுபட்டார். இந்தச் சந்தர்ப்பத்தில்தான் திரைப்பட முயற்சிகளில் ஆர்வத்தோடு இயங்கத் தொடங்கினார். அநேகமாக இது 1990 க்குப் பிறகு. அப்பொழுது மட்டக்களப்பிலிருந்து முல்லைத்தீவுக்கு வந்திருந்த கணேஸ் மாமா என்ற திரைக்கலைஞருடன் ஏற்பட்ட உறவின் விளைவாக கணேஸ் மாமாவின் தம்பியார் பொ. தாசனுடன் யேசுதாசனுக்கு அறிமுகம் உண்டானது. இதன் பயனாக பொ.தாசனின் படங்களில் வேலை செய்யத் தொடங்கினார் யேசுதாசன்.
விளைவாக விடுதலைப்புலிகளின் கலை பண்பாட்டுக்கழகத்துடனும் திரைத்துறையோடும் நிதர்சனத்துடனும் யேசுதாசனுக்கு நெருக்கம் ஏற்பட்டது. பிறகு நிதர்சனத்தின் முதன்மைப் பங்களிப்பாளர்களில் ஒருவராகினார். அப்பொழுது ஏனைய இயக்குநர்களான ஞானரதன், ந. கேசவராஜன் போன்றோருடனும் பின்பு இளைய இயக்குநர்கள், போராளிக் கலைஞர்கள் போன்றோரோடும் யேசுதாசன் இணைந்து செயற்பட்டார்.
இந்தக் காலகட்டத்தில் ஏராளமான குறும்படங்கள், முழு நீளப்படங்கள் போன்றவற்றில் முல்லை யேசுதாசன் நடித்தும் பிற பங்களிப்புகளைச் செய்தும் வந்தார். 10 க்கு மேற்பட்ட குறும்படங்களைத் தனியாகவே இயக்கினார் யேசு. உதிரிப்பூக்கள் மகேந்திரன். ஜான் போன்ற இயக்குனர்களுடனும் இணைந்து பணியாற்றியிருக்கிறார். முக்கியமாக ஆணிவேர், 1996 போன்றவை குறிப்பிடத்தக்கவை. அவர்களுடைய நெறிப்படுத்தலில் நடித்தவர் யேசு. திரைக்கதை உருவாக்கத்திலும் சேர்ந்தியங்கினார்.
யேசுதாசன் எழுத்தாளரும் கூட. ஏராளம் கதைகளை எழுதியிருக்கிறார். யேசுதாசனின் சிறுகதைகள் நீலமாகி வரும் கடல் என்ற தலைப்பில் ஒரு தொகுதியாக வெளியாகியுள்ளன. யேசுதாசனுக்குப் பெரும் உதவியாகவும் தூண்டலாகவும் இருந்தவர் சேரலாதன். நிதர்சனம், திரைப்பட உருவாக்கப்பிரிவுப் பொறுப்பாளராக சேரலாதன் இருந்த காலத்திலும் சரி, கலை பண்பாட்டுக்கழகத்தின் துணைப்பொறுப்பாளராக இருந்த போதும் சரி யேசுதாசனுக்கும் சேரலாதனுக்குமிடையில் ஆழமான அன்பும் நெருக்கமுமிருந்தது. இதன் விளைவாக யேசுதாசன் பல படங்களில் பங்களிக்க வாய்த்தது. யேசுதாசனின் சிறுகதைகளை நூலாக்குவதற்கான முயற்சியையும் சேரலாதனே எடுத்திருந்தார். நான் அதை வெளியிட்டிருந்தேன். இது விடியல் பதிப்பகத்தின் மூலமாக தமிழகத்தில் இரண்டாவது பதிப்பைக் கண்டுள்ளது. அதையும் தமிழகத்திலிருந்து கொண்டு வந்து யேசுதாசனின் கைகளில் கொடுத்திருந்தேன். பின்னாளில் எழுதிய கதைகளைச் சேர்த்து ஒரு தொகுதியாக்கலாம் என்று பேசியிருந்தோம். பேசிய காலத்தில் அதைச் செய்திருக்கலாம். யார் கண்டது, இப்படி இவ்வளவு விரைவாக யேசுதாசன் நம்மிடமிருந்து விடைபெறுவார். தனனுடைய இயக்கத்தை நிறுத்திக் கொள்வார் என்று.
சுனிமிப் பேரலை, முள்ளிவாய்க்கால் இறுதி யுத்தம், போர்க்கள வாழ்க்கை, அபாயமான படப்பிடிப்புச் சூழல் என மிகமிகச் சவாலான இடங்களிலும் காலங்களிலும் வாழ்ந்து வென்ற யேசுதாசன் மிகச் சாதாரண மாரடைப்பிற்குத் தோற்று விட்டார். யாருமே இப்படியொரு சாவு வந்து சாமியை அழைக்கும் என்று எதிர்பார்த்திருக்கவில்லை. அந்தளவுக்கு மிகமிகத் துடிப்பாக இயங்கிக் கொண்டிருந்தார் யேசு. இறப்பதற்கு முதல் நாள் கூட பதுளைக்குப் போய் தொலைக்காட்சித் தொடர் ஒன்றுக்கான படப்பிடிப்பைச் செய்து விடடே வந்திருந்தார். பஞ்சி அலுப்பு, நோய் நொடி என்று சோர்ந்ததில்லை இந்த யேசுபிரான்.
படகு திருத்துநர் (கடற் கலங்களைச் செம்மை பார்க்கும்) தொழிலைச் செய்து வந்தாலும் சாமியின் அடையாளம் எப்போதும் ஒரு கலைஞர் என்பதுவாகவே இருந்தது. அதுவே அவரை மிகப் பெரிய பரப்பில் அறிமுகப்படுத்தியது. அதுவே எல்லோராலும் சாமியை நினைவு கூர வைக்கிறது.
இறுதி யுத்தத்தின்போது அவருக்கு வலது கரமாக இருந்த அவருடைய புதல்வன் ஜூயினை இழந்த போதும் தளராமல் தாக்குப் பிடித்துக் கொண்டு இயங்கிய சாமி இப்போது நிரந்தர ஓய்வில் வீழ்ந்து விட்டார் என்பது எவ்வளவு கொடுமையானது.
எனக்கு சாமியின் அடையாளங்கள் எல்லாவற்றையும் விடச் சிறந்ததொரு கடலோடியாக அவர் இருந்ததும் எழுதியதுமே முதன்மையாகத் தெரிகிறது. சாமியின் அடையாளப் பரப்பு பெரியது. ஒன்றென்று வரையறுக்க முடியாதது. ப்ரியம் முதலாவது. நெருக்கம் இரண்டாவது. விசுவாசம் மூன்றாவது. சோர்வினமை நான்காவது. எளிமை ஐந்தாவது. இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம். இதனால்தான் சாமி எல்லோராலும் நேசிக்கப்பட்டார். கொண்டாடப்படுகிறார்.
யுத்தத்திற்குப் பிறகு சில காலம் மறுபடியும் படகு திருத்தும் வேலைகளைச் செய்து வந்த யேசுவை காலம் புதிய திசையில் நகர்த்தியது. யாழ்ப்பாணத்தில் இயங்கிய தொலைக்காட்சிகள் சாமியை வரவேற்றன. இதனால் தொலைக்காட்சிகளில் வேலை செய்யத் தொடங்கினார். இறுதியில் Capital தொலைக்காட்சியில் நிகழ்ச்சித் தயாரிப்பாளராக வேலை பார்த்து வந்தார்.

யேசுதாசனை அறிந்தவர்கள் ஏராம்பேர். அத்தனை பேருக்கும் இது பேரிழப்பு. பெருந்துயர்.
யேசுதாசனுக்கு அஞ்சலிகள்.

Karunakaran Sivarasa

Tuesday, February 4, 2020

தாமரைச்செல்வியின் “உயிர்வாசம்”(அகதிகளின் அடையாளம், உரிமைகளைக் குறித்துக் கேள்வி எழுப்பும்)

அகதிகளின் அடையாளம், உரிமைகளைக் குறித்துக் கேள்வி எழுப்பும் தாமரைச்செல்வியின் “உயிர்வாசம்”
---------------------------------------------------------------------------------
தாமரைச்செல்வியின் “உயிர்வாசம்” (நாவல்) நூலினை தமிழகத்திலுள்ள சிந்தன் புக்ஸ் இரண்டாவது பதிப்பாகப் பதித்து வெளியிட்டிருக்கிறது. இதற்கான ஏற்பாட்டைச் செய்தவர் சிராஜ். மாதவ் வெளியிட்டிருக்கிறார்.
சென்னை புத்தகக் காட்சியின்போது இந்த நாவலின் அறிமுக நிகழ்வு எழுத்தாளர் முற்றத்தில் நடந்தது. நிகழ்வுக்கு திரைப்படம் மற்றும் ஆவணப்படம் சார்ந்து இயங்கும் நெறியாளர் சோமிதரன் தலைமை ஏற்றார். தாமரைச்செல்வியை எழுத்துகளின் வழியாகவும் வாழ்க்கையின் வழியாகவும் அறிந்திருந்த சோமிதரன், விரிவானதொரு அறிமுகத்தைச் செய்தார். தாமரைச்செல்வியின் வாழ்க்கைச் சூழல், போர் நிகழ்ந்த காலத்தில் அவர் சந்தித்த அனுபவங்களை வரலாற்றுப் பதிவு போன்றதொரு தொனியில் இலக்கியமாக்கிய அவருடைய எழுத்துகள், அந்த எழுத்துகள் மகேந்திரன் போன்ற இயக்குனர்களின் கவனத்தை ஈர்த்தமை, அவற்றில் சில குறும்படங்களாக உருவாக்கப்பட்டமை என சோமிதரனின் அறிமுகம் இருந்தது. தமிழகச் சூழலுக்கு இந்த விசயங்கள் முக்கியமானவை. பலருக்கும் இது ஒரு வாசலைத் திறக்கக் கூடியது.
இதைத் தொடர்ந்து கருணாகரன் தாமரைச்செல்வியின் புனைவுலகம் பற்றிச் சிறியதொரு உரையை நிகழ்த்தினார். சாமானிய மக்களின் வாழ்க்கையும் அவர்கள் கொள்ள விரும்பும் எதிர்காலமுமே தாமரைச்செல்வியின் முதற்கரிசனை. இதனால்தான் அவர் எப்போதும் சனங்களின் கதைசொல்லியாக இருக்கிறார். மிக எளிய மனிதர்களின் வாழ்க்கையை அதே எளிய முறையிலான கதைசொல்லலின் மூலமாக வரலாற்றில் பதிய வைக்கிறார். காலத்தையும் சூழலையும் உருவழியாமல் கட்டமைப்பது தாமரைச்செல்வியின் புனைவு. புனைவின் வழியாக தன்னுலகை அழியாமல் நிர்மாணித்து விடுகிறார். அவருடைய தன்னுலகென்பது எளிய சனங்களின் வாழ்க்கையின் நிழற்படமே. ஆனால், இந்த நிகழ்படம் உயிரோடிப்பது என்று குறிப்பிட்டார் கருணாகரன்.
நிகழ்வின் முக்கியமான அம்சம் கவின்மலர், எழுத்தாளர் விஜிதரன் ஆகியோரின் உரைகள். உயிர்வாசம் நாவல் அகதிகளைக் குறித்த மிக முக்கியமான ஆவணமாகவும் இலக்கியப்பிரதியாகவும் உள்ளது என்றார் விஜிதரன். இந்தியாவில் ஒரு அகதியாக இருக்கும் தன்னுடைய அனுபவங்களை வைத்து, உலகளாவிய ரீதியில் அகதிகள், அகதிகள் மீதான அரசுகளின் நடத்தைகள், அகதிகளுக்கான ஐ.நாவின் வரையறைகள் போன்றவற்றைப் பற்றி மிகச் சிறப்பாகப் பேசினார் விஜிதரன். (இந்த உரையை மையமாக வைத்து விரிவானதொரு விமர்சனத்தை விஜிதரன் எழுதியுள்ளார்). முக்கியமாக இந்திய அரசும் தமிழகச் சூழலும் இந்த நாவலைப் படித்துப் பார்க்க வேண்டும். அப்பொழுதுதான் அகதிகள் விடயத்தில் சர்வதேச நியமங்களை விட்டு எந்தளவுக்கு தாம் தாழ்ந்து போயிருப்பதை உணர்ந்து கொள்ளக் கூடியதாக இருக்கும். இந்த நாவல் தமிழகச் சூழலில் பரவலாக வாசிக்கப்படுமாக இருந்தால் அது ஈழ அகதிகளைப்பற்றிய வேறு விதமான – உண்மைகளை பலருக்கும் உண்டாக்கும். அந்த வகையில் இந்த நாவலுக்குப் பெரியதொரு முக்கியத்துவம் உண்டென்றார். கூடவே நாவலில் கவனித்திருக்க வேண்டிய சில பகுதிகளைப்பற்றியும் குறிப்பிட்டார் விஜிதரன்.
கவின்மலருடைய உரை இன்னொரு கோணத்திலிருந்தது. போரினால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்ச்சியாக அவலங்களைச் சந்திக்க வேண்டியிருக்கிறது. போர் முடிந்தாலும் அவர்களுடைய அவலக்கதைகளும் துயரமும் எளிதில் முடிந்து விடுவதில்லை. அவற்றிலிருந்து அவர்கள் நீங்க முயன்றாலும் அது தொடரும் துயரக் கதைகளாக வெவ்வேறு வடிவங்களில் தொடர்கிறது என்பதைச் சாரமாகக் கொண்டு கவின்மலர் தன்னுடைய உரையை நிகழ்த்தினார். இரண்டு உரைகளும் மிகுந்த கவனத்திற்குரியவை. உயிர்வாசம் நாவலைக் குறித்த, அதனுடைய முக்கியத்துவத்தைக் குறித்த உரைகளாக இருந்தன.
ஈழத்தமிழர்களை வெளிச்சூழலில் பிற சமூகத்தினர் – குறிப்பாக மத்தியகிழக்கு மற்றும் அரபுச் சூழலில் உள்ளோர் கூட இரண்டாம் தரப்பிரசைகளாகக் கணிப்பதற்கான காரணங்கள், அவர்கள் இந்த நாடுகளில் கொண்டிருந்த தொழில் மற்றும் வாழ்க்கைத் தன்மையாகும் என்ற வாதத்தை முன்வைத்து கவிஞர் வ.ஐ.ச. ஜெயபாலன் விஜிதரனின் கூற்றுக்குப் பதிலளித்தார்.
பிரதியை திரைப்பட இயக்குநர் லெனின் பாரதி வழங்கி வைத்தார். கவின்மலர், பெற்றுக் கொண்டார். ஈழ எழுத்தாளர்கள் தமிழ்நதி, அகரமுதல்வன், ப.தெய்வீகன், கவிஞர் வ.ஐ.ச.ஜெயபாலன், வாசு முருகவேல், செல்வம் அருளானந்தம் (காலம்) நாட்டியக் கலைஞர் அபிராமி, ஊடகத்துறையைச் சேர்ந்த ரேணுகா துரைசிங்கம், கமலாகரன், திரைப்பட நடிகர் வின்சன்ட் உள்ளிட்ட பலரோடு தமிழகத்தின் எழுத்தாளர்கள், வாசகர்கள், திரைத்துறையைச் சேர்ந்தோரும் எனப் பலர் கலந்து கொண்டனர்.
உயிர்வாசம்
(நாவல்) சிந்தன் புக்ஸ் - இந்திய விலை 400/=

இலங்கையில்
சுப்ரம் பதிப்பகம் - இலங்கை விலை 900/=
Karunakaran Sivarasa
6 mins 
 

Monday, February 3, 2020

The genetic origins of schizophrenia

An introduction to Schizophrenia

Schizophrenia is a mental disease, a group of psychotic disorders that interfere with thinking and responsiveness. It is a disease of the brain, like Alzheimer’s and Parkinson’s diseases. A person with schizophrenia has deteriorated occupational, interpersonal, and self-supportive abilities. Schizophrenia is known as one of the most disabling and emotionally devastating illnesses among mankind. But this disease has been misunderstood for so long that it has received relatively little attention and its victims have been undeservingly stigmatized. Schizophrenia is not a split personality, a common idea about what schizophrenia is, but it is a rare and very different disorder usually common among young people.
The word schizophrenia comes from Greek origins “schizein” and “frenos” meaning split mind. (Wikipedia contributors. “Schizophrenia.” Wikipedia, the Free Encyclopedia.)

Studies on the genetics of schizophrenia show that schizophrenia has a genetic component. While in general population its lifetime prevalence is %1, the risk of schizophrenia is higher in relatives of schizophrenic patients. Third-degree relatives (e.g. cousins) share their %12.5 genes and carry a %2 risk for schizophrenia. Second-degree relatives (e.g. half brothers) share their %25 genes and carry %6 risk for schizophrenia. Many First degree relatives (e.g. siblings, fraternal twins) share their %50 and carry %9 risk for disease.
But schizophrenia does not imply a split minded personality instead it describes a person who believes two different reality at the same time. While a normal person can only be able to believe in one reality, a schizophrenic person can adopt a second reality which can not be understood by a man in mental health. Genetics constitute a crucial risk factor to schizophrenia. In the last decade, molecular genetic research has produced novel findings, infusing optimism about discovering the biological roots of schizophrenia. However, the complexity of the object of inquiry makes it almost impossible for non-specialists in genetics (e.g., many clinicians and researchers) to get a proper understanding and appreciation of the genetic findings and their limitations. This study aims at facilitating such an understanding by providing a brief overview of some of the central methods and findings in schizophrenia genetics, from its historical origins to its current status, and also by addressing some limitations and challenges that confront this field of research. In short, the genetic architecture of schizophrenia has proven to be highly complex, heterogeneous and polygenic. The disease risk is constituted by numerous common genetic variants of only very small individual effect and by rare, highly penetrant genetic variants of larger effects. In spite of recent advances in molecular genetics, our knowledge of the etiopathogenesis of schizophrenia and the genotype-environment interactions remain limited.


The first genetic analysis of schizophrenia in an ancestral African population, the South African Xhosa, appears in the journal Science. The study was carried out in the Xhosa population because Africa is the birthplace of all humans, yet ancestral African populations have rarely been the focus of genetics research (There is no evidence that the Xhosa have an unusually high risk of schizophrenia).
The researchers analyzed blood samples collected from 909 individuals diagnosed with schizophrenia and 917 controls living in South Africa. Their study revealed that participants with schizophrenia are significantly more likely to carry rare, damaging genetic mutations compared to participants without schizophrenia.
These rare mutations were also more likely to affect the brain and synaptic function. Synapses coordinate the communication between brain nerve cells called neurons; the organization and firing of neuronal synapses are ultimately responsible for learning, memory, and brain function.
http://sciencemission.com/site/index.php…