Search This Blog

Tuesday, November 21, 2017

Beautifully decorated walls of Kirti Stambha

Chittor(Rajasthan)
Dated: 12th century CE
The tower is 22m high. It is 30 feet wide at the base and narrows down to 15 feet at the top.
Photo credit: Kevin Standage

Monday, November 20, 2017

உங்களுக்கு என்ன நோய்? உறுப்புக்களின் அறிகுறிகளை வைத்து தெரிந்துகொள்ளலாம்


கண்கள் உப்பியிருந்தால் என்ன வியாதி?
சிறுநீரகங்கள் மோசமாக இருப்பதைக் குறிக்கிறது. சிறு...நீரகங்கள் உடலில் இருக்கும் கழிவுப் பொருட்களை அகற்றும் வேலையைச் செய்பவை. அவை சரிவர வேலை செய்யவில்லை என்றால், உடலில் சேரும் அசுத்த நீர் வெளியேற முடியாமல் போகும். இவை கண்களைச் சுற்றித் தேங்கி விடுவதால் கண்களைச் சுற்றி வீக்கம் போலத் தோன்றும்.
டிப்ஸ் : உணவில் சேர்த்துக் கொள்ளப்படும் உப்பின் அளவைக் குறைத்துக் கொள்ளவேண்டும். மேலும் அதிகப்படியான நீர் அருந்துவது சிறுநீரகங்கள் சரியாக வேலை செய்ய உதவும்.
கண் இமைகளில் வலி.. என்ன வியாதி?
அதிகப்படியான வேலை காரணமாக இந்த வலி வரலாம். மேலும் மக்னீசியம் உடலில் குறைவதால் உடல் சோர்வடைந்து கண் இமைகளில் வலி உண்டாகிறது.
டிப்ஸ்: போதுமான அளவு ஓய்வு எடுத்துக் கொள்ளவேண்டும். அதோடு உணவில் முட்டைக்கோஸ் மற்றும் கீரைகளை அதிக அளவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
கண்களில் தெரியும் அதிகப்படியான வெளிச்சம் என்ன வியாதி?
அதிகமாக வேலை செய்து கொண்டே இருப்பது. இந்த ஸ்டிரெஸ்ஸினால் உங்கள் மூளை குழப்பமடைந்து கண்களுக்கு தவறான தகவல்களை அனுப்பிவிடுகிறது. அந்த நேரத்தில் நமக்கு சட்டென அதிகப்படியான வெளிச்சங்களும், புள்ளிகளும் பார்வைக்குத் தெரிகிறது.
டிப்ஸ்: எப்பொழுதும் நிமிர்ந்து நிற்க வேண்டும். அதிகமாக காபி குடிக்கும் பழக்கத்தையும் தவிர்க்க வேண்டும்..
கண்கள் உலர்ந்து போவது.. என்ன வியாதி?
நாம் ஏ.சி. நிறைந்த இடங்களில் அதிக நேரத்தைச் செலவிடும் போதும், கண்கள் அதிக வேலையினால் களைப்படையும் போதும் நம் கண்கள் உலர்ந்து மிகுந்த பாதிப்புக்குள்ளாகிறது.
டிப்ஸ்: குறைந்தது எட்டு மணி நேர இரவுத் தூக்கம் மிகவும் அவசியம். தினமும் கண்களை மேலும்_கீழுமாகவும், பக்கவாட்டின் இருபுறமும் அசைத்தல் போன்ற எளிய உடற்பயிற்சிகளை ஒரு நாளில் இரண்டு முறை செய்யவேண்டும்.
தோலில் தடிப்புகள் ஏற்படுதல் என்ன வியாதி?
இருதய நோய் இருக்கலாம். குறிப்பாக இது காதுகளுக்குப் பக்கத்திலிருக்கும் தோலில் ஏற்படுமானால் உங்களுக்கு இருதய கோளாறு உள்ளது என்று தெரிந்து கொள்ளலாம். ஆனால், இப்படி அந்த இடத்தில் ஏன் தோல் தடிக்கிறது என்று டாக்டர்களுக்கே இன்னும் சரிவர புரியவில்லை என்கிறார்கள்.
டிப்ஸ்: அதிகப்படியான மன அழுத்தம் ‘ஹார்ட்_அட்டாக்’ வருவதற்கான வாய்ப்பை உருவாக்கும். மனதை பாரமில்லாமல் லேசாக வைத்துக் கொள்ள முயற்சிப்பதும், பிரச்சினைகளை நல்ல முறையில் அணுகுவதும் இதைத் தவிர்க்கும்.
முகம் வீக்கமாக இருப்பது என்ன வியாதி?
உடலில் தண்ணீர் இழப்பு அதிகமாக இருப்பது. இப்படி ஏற்படும்போது உடலுக்குத் தண்ணீர் அதிகம் தேவைப் படுகிறது. உடலுக்குப் போதுமான தண்ணீர் கிடைக்காமல் போனால், ரத்த செல்கள் விரிவடைந்து முகம் வீக்கமாகத் தெரியும்.
டிப்ஸ்: ஒரு நாளைக்கு எட்டு கிளாஸ் தண்ணீராவது அருந்துவது அவசியம். எப்போதும் தண்ணீர் பாட்டிலை உடன் வைத்துக் கொண்டால் தண்ணீர் அருந்த வேண்டும் என்கிற உணர்வு ஏற்பட்டு அருந்துவீர்கள்.
தோல் இளம் மஞ்சளாக மாறுவது என்ன வியாதி?
கல்லீரல் நோய். கல்லீரல் பாதிப்படையும்போது உடலிலிருக்கும் பித்த நீர் போன்ற மஞ்சள் நிற திரவங்களை வெளியேற்ற முடிவதில்லை. இதனால் தோல் மஞ்சள் நிறத்திற்கு மாறுகிறது.
டிப்ஸ்: அதிகப்படியான ஆல்கஹாலின் அளவால் இப்படி கல்லீரல் பிரச்சினை ஏற்படுகிறது. குடிப்பழக்கம் இருந்தால், உடனடியாக நிறுத்தி விடுவதே நல்லது.
பாதம் கை கால்களில் சில நேரங்களில் சுறுசுறுவென உள்ளே ஏதோ ஓடுவது போலிருத்தல் என்ன வியாதி?
சீரான ரத்த ஓட்டமின்மை. ரத்தக் குழாயில் அடைப்பு இருந்தால் உடலின் ரத்த ஓட்டம் சீராக இருக்காது. இந்த அறிகுறி உங்கள் ரத்தமானது பாதம் வரை சீராக ஓடச் செய்யும் முயற்சியே ஆகும்.
டிப்ஸ்: வைட்டமின் நிறைந்த உணவுகளும் கீரைகளும் சாப்பிட வேண்டும்.
பாதம் மட்டும் மரத்துப் போதல் என்ன வியாதி?
நீரிழிவு நோயின் பாதிப்பு. டயபடீஸ், ரத்தத்திலிருக்கும் செல்களைப் பாதிப்பதோடு, நரம்புகள் செய்யும் வேலைகளையும் தடுத்து விடுகிறது. இதன் விளைவாக சில நேரங்களில் கால்களில் செருப்புக்கள் உராய்ந்து ஏற்படுத்தும் எரிச்சலையோ வலியையோகூட உணர்ந்து கொள்ள முடியாது.
டிப்ஸ்: பிளாக் டீ அல்லது கிரீன் டீ உங்கள் இரத்தத்திலிருக்கும் குளுக்கோஸின் அளவைக் குறைத்து நீரிழிவு நோயைக் கொஞ்சம் கட்டுப்படுத்தும். உடல் பருமனும்கூட டயபடீஸ் வருவதற்கு ஒரு முக்கிய காரணமாகும். அதனால் உடல் எடை அதிகமாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம்.
பாதங்களில் உலர்ந்த வெடிப்புகள் என்ன வியாதி?
தைராய்டு பிரச்சினையாக இருக்கலாம். இந்த தைராய்டு சுரப்பிதான் நம் தோலுக்குத் தேவையான ஹார்மோன்களை ஒழுங்கு செய்கிறது. இந்த தைராய்டு சுரப்பி சரியாக வேலை செய்யாதபோது, நம் பாதங்களின் தோல் உலர்ந்துபோகும். பாதங்களை சரிவரபாராமரிக்காமல் இருந்தால் அதிக அளவில் பாதிப்படைந்துவிடும்.
டிப்ஸ்: தைராய்டு பிரச்சினையின் வேறு சில அறிகுறிகள், அதிக சோர்வும் உடல்எடை அதிகமாதலும் இதில் எந்த அறிகுறிகள் இருந்தாலும் மருத்துவரைச் சந்திப்பது அவசியம்.
சிவந்த உள்ளங்கை என்ன வியாதி?
கல்லீரல் பிரச்சினையாக இருக்கலாம். நோய்வாய்ப்பட்ட கல்லீரலால், நம் இரத்தத்திலுள்ள ஹார்மோன்களைக் கட்டுப்படுத்த முடியாமல் போகும். அதனால் உங்கள் ரத்தத்தின் நிறம் அதிக சிகப்பாகிவிடும். கல்லீரல் சரியாக வேலை செய்யவில்லை என்பதை, அதிக சிவப்பான உள்ளங்கைகள் தான் சட்டென காட்டிக் கொடுக்கும். காரணம் உடலின் மற்ற பாகங்களைவிட உள்ளங்கையின் தோல் மிகவும் மிருதுவாக இருப்பதுதான்.
டிப்ஸ்: கீழாநெல்லியை வாரத்தில் ஒருதரம் சாப்பிடுவது கல்லீரலைச் சரிப்படுத்தும். உடம்பின் விஷத்தன்மையை மாதம் ஒரு முறையாவது போக்க, ஒரு நாள் பழம் மட்டும் சாப்பிடுங்கள்.
வெளுத்த நகங்கள் என்ன வியாதி?
இரத்த சோகை இருக்கிறது. இரத்தத்திலுள்ள சிகப்பணுக்கள் அளவில் குறையும்போது சின்னச் சின்ன வேலையைச் செய்வதற்கும் உடல் பலமின்றிப் போகும்!
ரத்தத்தின் சிவப்பணுக்கள் குறைவதால், இயல்பாக நகம் இருக்க வேண்டிய பிங்க் நிறம் போய், வெளுத்து விடுகின்றன.
டிப்ஸ்: இரும்புச்சத்து இரத்தத்திலுள்ள சிகப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்யும். ஈரல், கீரைவகைகள், மற்றும் இறைச்சியை உணவுடன் சேர்த்துக் கொள்ளவேண்டும். அல்லது டாக்டரின் ஆலோசனையின்படி குறிப்பிட்ட நாட்களுக்கு இரும்புச்சத்து மாத்திரைகளோடு பி_12 மாத்திரைகளையும் எடுத்துக் கொள்வது நல்லது.
விரல் முட்டிகளில் வலி என்ன வியாதி?
ஆர்த்தரடீஸ் என்னும் மூட்டுவலி இருக்கிறது. இதனால் விரல் முட்டிகளில் வீக்கமும் வலியும் ஏற்படும். இந்த வலி அதிகமாக விரல் முட்டிகளில்தான் காணப்படும். அவை வடிவத்தில் சிறியதாக இருப்பதால், இந்த வலி உடனே வர வாய்ப்புண்டு. வயதானவர்களுக்கு மட்டுமே இந்த மூட்டுவலி வருவதில்லை. எந்த வயதுக்காரர்களுக்கும் வரலாம்.
டிப்ஸ்: உடலுக்குத் தேவையான கால்சியம் மற்றும் வைட்டமின் ஙி சரியான அளவில் எடுத்துக் கொண்டால் மூட்டு வலி வருவதைக் குறைக்கலாம். ஒழுங்கான உடற்பயிற்சிகள் மற்றும் உடல்பருமனைக் குறைத்தல் இரண்டும் மூட்டு வலி வராமல் தடுக்கும்.
நகங்களில் குழி விழுதல் என்ன வியாதி?
சோரியாஸிஸ் இருக்கிறது. இது ஒரு மோசமான தோல் வியாதி. இதன் மூலம் தோலும் நகங்களும் மிகவும் மென்மையாகி விடும். இந்த வியாதி வந்தால் மென்மையான நகங்களில் குழிகள் வரக்கூடும்.
டிப்ஸ்: உடனடியாக சரும வியாதி நிபுணரைக் கலந்தாலோசிக்கவும். ஸ்டிரெஸ்ஸைக் குறைத்துக் கொண்டாலே வியாதி அதிகமாவதைத் தடுக்கலாம்.
வாய்ஈறுகளில் இரத்தம் வடிதல் என்ன வியாதி?
பல் ஈறு சம்பந்தப்பட்ட நோய் இருக்கிறது. ஈறுகளிலும் அவற்றின் அடியிலிருக்கும் எலும்புகளிலும் தொற்று நோய்க் கிருமிகளின் தாக்குதல் இருந்தால், பற்கள் உறுதி இழந்து விழுந்துவிடும். பல் துலக்கும்போது ஈறுகளில் ரத்தம் வருவது இந்த நோயின் முதல் அறிகுறி.
டிப்ஸ்: தினமும் பற்களைச் சுத்தமாக துலக்குவதும், பற்காரைகள் வராமல் பாதுகாப்பதும் அவசியம். ஆன்ட்டி பாக்டீரியல் கொண்ட மவுத் வாஷ் கொண்டு வாய் கொப்பளிப்பது நல்லது.
சாப்பிடும்போது வாய் முழுக்க வலி ஏற்படுதல் என்ன வியாதி?
வாய்ப்புண் இருக்கிறது. அதிகமாக ஸ்டிரெஸ் செய்து கொள்வதாலும் வாய்ப்புண் வரலாம். உடலில் ஃபோலிக் ஆசிடின் குறைவு மற்றும், இரும்புச்சத்து அல்லது வைட்டமின் பி_12ன் குறைவினாலும் இப்படி ஏற்படுகிறது.
டிப்ஸ்: ‘மல்டி_விட்டமின்’ மாத்திரைகளைத் தினமும் எடுத்துக் கொள்ளவேண்டும். மேலும் தியானம் மற்றும் யோகா செய்வதால் ஸ்டிரெஸ்ஸைக் குறைக்கலாம். ஹைட்ரஜன் பெராக்ஸைடு கொண்டு வாய் கொப்பளித்து வருவதால் இன்பெக்ஷன் குறைந்து வாய்ப்புண் ஆறும்.
வாய் ஈரப்பசையின்றி உலர்ந்து போவது. என்ன வியாதி?
உடலின் போதுமான நீர்ச்சத்து குறைந்து போயிருக்கிறது. உடலில் அதிகப்படியான நீர் வெளியேறுவதால் இந்த டீஹைடிரேஷன் ஏற்படுகிறது. மேலும் அதிகப்படியாக வியர்ப்பது மற்றும் நீரிழிவு நோயும்கூட வாய் உலர்ந்து போவதற்கு காரணமாகும்.
டிப்ஸ்: நிறைய திரவ ஆகாரம் எடுத்துக் கொள்ளவேண்டும். தினமும் குறைந்தது ஒன்றரைலிட்டர் தண்ணீர் அருந்துவது அவசியம். அதன்கூடவே பழங்களையோ பழச்சாறோ அருந்துதலும் நல்ல பலன் தரும்.

Sunday, November 19, 2017

ஜமீலின் நதியில் ஒரு மீன் குஞ்சாக நீந்திப் பாரத்தல்


வடிந்து கொண்டிருக்கும் பெருமழையைப் பையிலிட்டு அடைத்தபின் அதற்கான பலவர்ணங்களைத் தீட்டி மகிழ்கிறான் ஒருவன். அவன் அணிவித்த நிறங்களத்தனையும் ஒவ்வொரு சாயலாக இடம்பெயர்ந்து செல்கின்றன.
முதலில் ஒரு குழந்தையின் மனதாக...
அதன்பின்னர் முதிர்ந்த காலத்தைக் கூறும் பாத்திரமாக அடுத்து கனவுகளுக்குள் வாழும் உணர்வாக,
இப்படியாக மாறும் உணர்வுகளை மழையின் நிறங்களாகக் காட்டியிருக்கிறார் கவிஞர் ஜமீல்.
ஈழத்தின் கவிதைப்பரப்பில் பின்நவீனச் சாயலானது இவரது படைப்புக்கள்.
ஒரு குழந்தையின் மனமாகவே இவர் பேசுகிறார்.குழத்தையின் உள்மனதிலிருந்து பட்டாம்பூச்சியாகிப்பறக்கும் அவர்களது கனவுகள் வரைக்கும் இவரது தொகுதியில் சிறகடித்துப்பறக்கின்றன.
குழந்தை மனதிற்கு அப்பாலும் இவரது கவிதை வெளி பரத்திருக்கின்றது. அது காதலாகவோ நிலையில்லா அரசியலாகவோ சமூகத்தின் உடைந்த குரல்களாகவோ அது இருக்கின்றது.
பின்நவீனத்தின் ஒப்புவித்தல்களை எளிய வடிவில் இலாவகமாக ரசணைக்குறிப்புகளோடு விளங்கிக் கொள்ள முடிவது இவரது எழுத்துக்களின் வெற்றியே.
'அவன் பையில் ஒழுகும் நதி' பல இன்சுவைகளோடும் குழத்தைகளின் நிறக்கனவுகளோடும் மகிழ்விக்கின்றன.
இத்தொகுதியில் உள்ளடக்கப்பட்டுள்ள பல கவிதைகள் மீண்டும் மீண்டும் வாசிக்கத்தூண்டும் நிலையினை எம்முள் கொணர்ந்து விடுகின்றன.
அட்டைப்படத்தின் நிறங்களோடு மகிழ்விக்கும் இந்நிலை கடைசிப்பக்கம் வரை நீண்டு கொண்டே செல்கின்றதெனலாம்.
இடைவிடாது சிறகடித்துக்கொண்டிருக்கும் கடலின் உட்புறத்தை இவர் அறிகிறார். இக்கடலை பறக்கச் செய்தல் எவ்வாறு என தனது எழுத்துக்களில் வர்ணிக்கிறார்.
மீண்டும் 'பனியில் உறையும் ஒளி'யில் அவதியுறும் நிலவொளிக்கு ஆடைபோர்த்தித் தவழ விடுவது கூடுதல் அழகு சேர்க்கிறது.
கனவுகளால் பாரிக்கும் சிறுவனின் புத்தகப்பை அவனது கனவுகளுக்கே ஆபத்தாகி விடுவதை கவிஞர் சமூகத்திற்கே ஓர் அறிவுரையாகச் சொல்கிறார்.
இரவு விடிவதற்குள் உடைமாற்றித்தயாராகும் குழந்தையின் உள்ளத்தில் விடியலென்றாலே சிறைக்கூண்டு தானே என்ற எண்ணங்களை உருவாக்கும் இச்சமூகம் பொல்லாத பாவியெனச் சொல்லத்தோன்றுகின்றது.
பட்டாப்பூச்சியை இரசிக்கும் மனங்களை அதன் மெலிந்த சிறகாகவே நினைத்து விடுகின்றனர். அது காற்றில் தூக்கி வீசப்பட்டு அங்குமிங்கும் அலைந்தலைந்து கடைசியில் மண்ணாகவே உக்கிவிடுகிறது.
இதிலிருந்து விடுவிக்கப்படுதல் தான் சுதந்திரம். இக்கவிதைகள் பலவற்றின் கருத்துக்கள் இவ்வாறே காணப்படுகின்றன.
அலைதலுக்காகவே வாழ்தல் என்பது போலாகிவிட்ட நம் வாழ்க்கை இரசிப்பதற்காக உருவாக்கப்படவேண்டும்.
அவை எமக்காகப் பங்கிடப்படவேண்டுமெனச் சொல்லும் சில கவிதைகளை இங்கு காணலாம்.
தனிமையில் பெருகும் எண்ணவோட்டங்கள் பெரும் சொற்குவியல்களாகி நீத்திக்கொண்டிருக்கின்றன. அவைகள் நாம் உறங்கும் அறையெங்கும் முத்தங்களைப் பொழித்து ஒரு துணையாக இருந்துவிடுகின்றது.
பின்பொரு நாளில் எம்மைப் பிரமிக்கவும் வைக்கிறது.
இது தான் கவிஞர் ஜமீலின் இத்தொகுப்பு.
மனங்களையும் மனது செல்லும் இடங்களையும் அவர் நன்கறிகிறார்.
நடுநிசி வீதியும் அங்கு உலாவுகின்ற முலையூட்டிகளும் அவர் எழுத்துக்களுக்கு நண்பர்களாகி விடுகின்றன. அவர்வாழும் நெய்தல்,மருதம் அவருக்குள் எண்ணங்களை உசுப்பிவிட்டு தானும் எழுந்து கொள்கின்றன.
வாழ்வியலையும் குழந்தைமனதையும்
சமூகத்தின் இரசணைகளோடு ஒப்புவிக்கும் இத்தொகுப்பு அவரது ஏனைய தொகுப்புக்களைப் போன்று சிறப்பாகவே இருக்கிறது.
*****
றஹ்மதுல்லாஹ்.

ஈழத்து இசையமைப்பாளர் திருமலை ரீ.பத்மநாதன் (இறப்பு: நவம்பர் 18, 2017)


திருமலை ரீ.பத்மநாதன் அவர்கள் திருகோணமலையில் 1964ம் ஆண்டிலேயே திருகோணமலை இசைக்கழகம் என்ற இச...ைக்குழுவை ஆரம்பித்து இயக்கி வந்தவர்.
இலங்கை வானொலியின் மெல்லிசைப் பாடல்கள் பலவற்றுக்கு இசையமைத்துப் புகழீட்டியிருந்த ஈழத்தின் தலைசிறந்த ஓர் இசையமைப்பாளர் திருமலை பத்மநாதன் அவர்கள்.
ஈழத்தின் மூத்த - புகழ் பூத்த கலைஞர் ஏ. ரகுநாதன் அவர்கள் தயாரித்து நடித்த நிர்மலா திரைப்படத்துக்கு இசையமைத்திருந்தவர் திருமலை பத்மநாதன். இந்தத் திரைப்படத்தில் இடம்பெற்றிருந்த "கண்மணி ஆடவா .." என்ற பாடல் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்களின் பாராட்டைப் பெற்றிருந்தது.

அது போல தென்றலும் புயலும் என்ற ஈழத்துத் திரைப்படத்துக்கும் இவரே இசையமைத்திருந்தார்.
இசையில் மண்வாசம் இருக்க வேண்டும் என்பதை மனதில் கொண்டு தனது பாடல்களுக்கு இசையமைத்து இரசிகர்கள் நெஞ்சங்களில் நிலையான இடத்தைப்பிடித்தவர்.
நிறைவான கர்நாடக,மேலைத்தேச இசைஞானம் உடைய ஓர் ஒப்பற்ற இசைக்கலைஞரை எங்கள் தேசம் இழந்துள்ளது.
எமது ஆழ்ந்த இரங்கல்.
பதிவிட்டவர் : SK Rajen

நாகம் பூசித்த மணிபல்லவத்து அன்னை நாகபூசணி


அந்த வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தில் இலங்கைத் தீவில் இயக்கர்களும் நாகர்களும் வாழ்ந்து கொண்டிருந்தார்கள். அவர்களுக்குள்... அரசுகளும் இருந்தன. இந்த நிலையில், வட இலங்கையின் யாழ்ப்பாணத்திற்கு அருகிலே இருக்கிற கடல் நடுவில் உள்ள மணிபல்லவத் தீவில் அவர்கள் ஒரு அழகிய பீடத்தைக் கண்டார்கள்.
இந்த அரியணைக்காக.. சிம்மாசனத்திற்காக.. நாகர்கள் இரு பிரிவுகளாய் பிரிந்து போரிடத் தொடங்கினார்கள். காலம் ஓடிற்று… கௌதமபுத்தர் அஹிம்சையை போதித்து வந்த காலத்திலும் இந்த அரியணைக்கான மோதல் தொடர்ந்தது.
புத்தர் இந்தப் பிணக்கைத் தீர்க்க மணிபல்லவம் வந்தார். “இந்த சிம்மாசனம் இந்திரனாலே புவனேஸ்வரி அம்பாளுக்காகவே பிரதிஷ்டை செய்யப்பெற்றது. இது அன்னைக்கே உரியது.. இதனை வணங்குவதே நம் கடன்” என்று அந்த நாகர் கூட்டத்தை வழிப்படுத்தி வழிபடச் செய்தார்.
“பெரியவன் தோன்றா முன்னர் இப்பீடிகை கரியவன் இட்ட காரணத்தாலும்”
(மணிமேகலை- காதை- 25, 54,55)
இது நடந்து சில காலமாயிற்று.. கலியுகக் கண்களிலிருந்து அம்பிகையின் பீடம் மறைந்தொளிர்ந்தது.. ஆங்கே அன்னை சுயம்பு மூர்த்தியாய் எழுந்தருளியிருந்தாள்.
“பாம்பைக் கண்டால் படையும் நடுங்கும்” என்பர். ஆனால் பாம்பு (நாகம்) ஒன்று அம்பிகையை அங்கு பூஜை செய்து வந்தது. இது தொடர்ந்திட, மணிபல்லவத்து நாயகி.. அறுபத்து நான்கு சக்தி பீடங்களுள் ஒன்றான புவனேஸ்வரி பீட நாயகிக்கு நாகபூஷணி, நாகபூஜணி என்ற பெயர்கள் நிலைக்கலாயின..
நயினைத்த்வீப நிவாஸிநீம் நதிகிருதாம் ஆனந்த சந்தாயினீம்
பக்தாரீஷ்ட நிவாரிணீம் விநிசுதைர் நாகைப் புரா பூஜிதாம்
நாகானாம் ஜனநீதி லோகவசனைக்கியாதாம் சுபாம் சாஸ்வதாம்
நௌமித்வாம் பரதேவதாம் மம மனோபீஷ்டார்த்த சித்திப்பிரதாம்
எனப் போற்றும் வண்ணம் அன்னை அங்கே நிலைத்தாள். காலம் கனிந்தபோது வணிகன் ஒருவனுக்கு அன்னை காட்சிகொடுத்து தம்மிருப்பைப் புலப்படுத்தினாள்.
வணிகன் தன் வாழ்வை, வளத்தை எல்லாம் பயன்படுத்தி பெரிய கோயில் ஒன்றை அன்னைக்குச் சமைத்தான். நயினைப்பட்டர் என்கிற அந்தணர் இக்கோயிலின் ஆதி சிவாச்சார்யர் ஆனார். அவர் பெயரால் மணிபல்லவம்
“நயினாதீவு” ஆயிற்று.
இடையிடையே எத்தனையோ கால மாற்றங்கள்.. மதவெறியர்களான போர்த்துக்கேயர் முதலியவர்களின் இந்து ஆலய அழிப்புச் செயற்பாடுகள் இவைகளை எல்லாம் மீறி இன்றைக்கும் சிறப்புற்றிருக்கிறது இத்தலம்.
போர்த்துக்கேயர் இங்கு வந்து கோயிலை இடித்தபோது அம்பிகையின் உற்சவ வடிவத்தை இங்குள்ள ஆலமரப் பொந்தில் வைத்து அடியவர்கள் மறைவாக வழிபட்டனர். இன்றும் அந்த ஆலமரம் ‘அம்பாள் ஒளித்த ஆல்’ என்று அழைக்கப்பட்டு வழிபடப்படுகிறது.
இந்த ஆலயத் திருத்தேரை போர்த்துக்கேயர் எடுத்துக்கொள்ள முயன்றபோது அது தானே நகர்ந்து கடலுள் பாய்ந்ததாம்.. ஆனிப்பூரணை நாளில் அந்த கடலுள்பாய்ந்த தேரின் திருமுடி மட்டும் தெரியும் என்பதும் ஐதீகமாக இருக்கிறது.
இன்று நயினை நாகபூஷணி அம்பாள் ஆலயம் என்று புகழ் பெற்று விளங்கும் இத்தலம் வட இலங்கையில் யாழ்ப்பாண மாவட்டத்தில் கடல் நடுவிலுள்ள நயினாதீவு என்கிற தீவில் உள்ளது.
கருவறையில் சுயம்புவாக அம்பிகை விளங்குகிறாள். நாகம் குடை பிடிக்க.. சிவலிங்கத்தை இறுக்க அணைத்தபடி விளங்கும் அம்மை போல அந்த சுயம்பு உருவம் இருக்கிறது.
அடியவர்களின் பசிப்பிணி தீர்க்கும் ‘அமுதசுரபி அன்னதான மண்டபம்’ மற்றும் யாத்திரீகர்கள் தங்குவதற்கு ‘இறைப்பயணிகள் இல்லம்’ என்பனவும் இங்கு இன்று அமைக்கப்பட்டிருக்கின்றன.
ஆனி முழுமதி நாளை நிறைவாகக் கொண்டு 15 நாட்கள் மஹா உற்சவம் காணும்
கற்றவர்க்கினியாய் நயினையம்பதி வாழ் காரணி நாரணன் தங்காய்
மற்றவரறியா மரகதவரையின் வாமமே வளர் பசுங்கொடியே
நற்றவரோடும் சேயெனை இருத்தி நாதநாதாந்தமும் காட்டி
முற்றுமாய் நிறைந்த பூரணானந்த முத்திதா நாகபூஷணியே
என்று இந்த அன்னையைப் பாடுகிறார் இவ்வூரில் வாழ்ந்த நயினை நாகமணிப் புலவர்.
சிவனுக்கு உகந்த பஞ்சபூதஸ்தலங்களான சிதம்பரம், திருவண்ணாமலை போன்றன போல, அம்பிகைக்குரிய ஆறு ஆதார சக்தி பீடங்களில் இதனை ‘மணிபூரக ஸ்தலம்’ என்றும் கொண்டாடுகின்றனர்.
இவ்வாறான மகிமை பொருந்திய இந்த ஸ்தல மகிமை பலவாறு சொல்லப்படுகிறது. இங்கே அம்பிகையை வணங்குவார்க்கு பிள்ளைப்பேறு கிட்டும் என்பர். கோயிலில் அண்மைக் காலத்திலேயே பல்வேறு அற்புதங்கள் நடந்ததாக.. நடப்பதாகச் சொல்கிறார்கள்.
வேற்றுச் சமயத்தவர்கள், பிற இனத்தவர்கள் பலரும் கூட தாங்கள் இங்கே பெற்ற அற்புத நிகழ்வுகள் பலவற்றைக் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

இருளின் வெளிச்சம்


வெளிச்சத்தைவிட
இருளே
எனக்கு விருப்பம்.

விதை வளர்கிறது
மண்ணறை இருட்டில்.
குழந்தை வளர்கிறது
கருவறை இருட்டில்.

ஆக்கங்கள் யாவும்
அழகான இருளில்தான்.

வெளிச்ச முத்தத்திலோ
விளம்பர முத்தத்திலோ உண்டா
இருட்டு முத்தத்தின் இன்பம்?

மோதல் தளர்வதும்
காதல் வளர்வதும்
இருட்டில்தான்.

கருவறையிலும்
கல்லறையிலும்
கூடவே இருப்பது
இருட்டுதான்.

வெளிச்சங்கள் யாவும்
வந்து போகலாம்
இருட்டின் நட்பு
நிரந்தரமானது.

வெளிச்ச வண்ணங்கள்
பூசிக்கொள்ளாத
இருட்டை நம்பலாம்
எந்த நாளும்.’

Nagore Rumi

Wednesday, November 15, 2017

குழந்தைகளின் தற்கொலை (குழந்தையைத் திட்டவே மாட்டேன் சொல்கிறவரா நீங்கள்?)

 அப்படியெனில் நீங்கள்தான் வாசிக்க வேண்டும்
Ravi Ravisankar
சிதம்பரம் பேருந்து நிலையத்திற்கு அருகாமையிலேயே ஓர் உணவகம் இருக்கிறது. ஸ்ரீதர் வாண்டையாரின் உணவகம். ‘அங்க வர முடியுமா?’ என்றார் சிதம்பரத்து நண்பர். இப்பொழுது ஐரோப்பிய தேசமொன்றில் மனோவியல் ஆலோசகராக இருக்கிறார். வயது ஐம்பதைத் தாண்டியிருக்கும். திருமணம் செய்து கொள்ளவில்லை. தனிக்கட்டை. ‘நீங்க பெங்களூரு திரும்பும் போது தகவல் சொல்லுங்க’ என்று செய்தி அனுப்பியிருந்தார். குறுஞ்செய்தி அனுப்பியிருந்தேன். பேருந்து நிலையத்தில் வந்து காத்திருந்தார். இரவு எட்டு மணிவாக்கில் சந்தித்துப் பேசினோம். கையில் கத்தையாக செய்தித்தாள்களின் கத்தரிப்புகள். வழக்கமான குசல விசாரிப்புகளுக்குப் பிறகு அந்தக் கோப்பினைக் கையில் கொடுத்தார். குழந்தைகளின் தற்கொலை பற்றிய செய்தித் துண்டுகள் அவை.
எப்பொழுதாவது இந்தியா வந்து போகிறார். ‘தற்கால இந்தியக் குழந்தைகளின் மனநிலை’ குறித்து ஓர் ஆராய்ச்சியைச் செய்து கொண்டிருக்கிறாராம். அதற்கு தோதாகக் கடந்த சில நாட்களாகச் சேகரித்த செய்திகள் அவை. நீலத் திமிங்கல விளையாட்டுத் தற்கொலைகளை அவர் பொருட்படுத்தவில்லை. ‘அது உங்களைத் தற்கொலை செய்ய வைக்கத் திட்டமிட்டு, வற்புறுத்தித் தூண்டுகிறது’ என்று சொல்லி அவற்றைத் தவிர்த்திருக்கிறார். மிகச் சாதாரணமாக விளையாடிக் கொண்டிருந்த குழந்தை ஏன் தற்கொலை முடிவெடுக்கிறது என்பதுதான் முக்கியமான கேள்வியாக இருந்தது. கடந்த பதினைந்து நாட்களுக்கு முன்பான செய்தி ஒன்றைக் காட்டினார். டெங்கு கொசு ஒழிப்பு விழிப்புணர்வுக்காக தெருவைச் சுத்தம் செய்துவிட்டு வீடு திரும்பியிருக்கிறான். பனிரெண்டு வயதுப் பையன். ‘ஏண்டா உனக்கு ஏதாச்சும் காய்ச்சல் வந்துட்டா என்னடா பண்ணுறது?’ என்று ஏதோ சொல்லி அம்மா திட்ட அறைக்குள் தூக்குப் போட்டுக் கொண்டான்.
இப்படி பல செய்திகள் இருந்தன. மனம் பாரமாக இருந்தது. அவற்றை மூடி வைத்துவிட்டு சில வினாடிகள் அமர்ந்திருந்தேன்.
‘என்ன சொல்லுறீங்க?’ என்று கேட்டார். அமைதியாக இருந்தேன். மிக நுணுக்கமான விஷயம் இது. குழந்தைகளின் தற்கொலை என்பது அங்குமிங்குமாக கண்களில் பட்டிருக்கும். பொருட்படுத்தியதாக நினைவில்லை.
பதினைந்து முதல் இருபத்தொன்பது வயது வரையிலானவர்கள் இந்தியாவில்தான் மிக அதிக அளவில் தற்கொலை செய்து கொள்கிறார்களாம். தண்ணீரைக் குடித்துவிட்டு ‘இந்தக் காலத்துக் குழந்தைகளுக்கு தடிச்ச தோல் இல்லை’ என்றார். எதைச் சொன்னாலும் அவர்களால் பொறுத்துக் கொள்ள முடிவதில்லை. பெரியவர்கள்தான் முக்கியக் காரணம் என்றார். வாஸ்தவமான சொல். குழந்தைகளைத் திட்டுவதில்லை என்பதை பல பெற்றோர்கள் பெருமையாகச் சொல்லிக் கொள்வதுண்டு. நானும் கூட அப்படித்தான். ஏதேனும் ஒரு காரணத்துக்காகத் திட்டும் போது- திட்டக் கூட வேண்டியதில்லை- கோமாளி, முட்டாள் என்று ஏதேனும் கேளிச் சொல்லைப் பயன்படுத்தினால் கூட பொலபொலவென்று கண்ணீர் வந்துவிடும் மகனுக்கு.
‘இவன் என்ன இப்படி இருக்கான்?’ என்று அவ்வப்போது யோசித்திருக்கிறேன். ஆனால் தீர்வு குறித்துச் சிந்தித்ததில்லை.
மனோவியல் நிபுணர் ‘உங்க தலைமுறையில் இப்படி இருந்தீங்களா?’ என்றார். இல்லை. அம்மா கடுமையாகத் திட்டுவார். ஆசிரியர் அடிப்பார். அப்பா எப்பொழுதாவதுதான் அடிப்பார் ஆனால் செமத்தியான வணக்காக இருக்கும். அடி வாங்குவதும் வசைச்சொற்களைக் கேட்பதும் சலித்துப் போய்விடும். எப்படி ஏய்ப்பது, அடி வாங்காமல் தப்பிப்பது எப்படி, வசவுக்கு வாய்தா வாங்குவதற்கான வழிமுறைகள் குறித்தெல்லாம்தான் மனம் கணக்குப் போடும். Too sensitive என்றெல்லாம் இருந்ததேயில்லை. உண்மையாக அழுததைக் காட்டிலும் அடி வாங்குவதிலிருந்து தப்பிப்பதற்காக பாவனையாக அழுததுதான் அதிகம்.
இன்றைய குழந்தைகள் அப்படியில்லை. மனிதர்களுடன் உரையாடுவதை விடவும் திரைகளுடன்தான் அதிகம் உரையாடுகிறார்கள். கணினித்திரை, அலைபேசித் திரை, தொலைக்காட்சித்திரை எதுவும் குழந்தைகளுக்கு மனிதர்களின் மனங்களைச் சொல்லித் தருவதில்லை. அவை குழந்தைகளை மேலும் மேலும் ரத்தமும் சதையுமான மனிதர்களிடமிருந்து அந்நியப்படுத்துகின்றன. சக குழந்தைகளுடன் விளையாடுவதும் சண்டையிடுவதும் வெகு அரிது. பள்ளிகளிலும் கண்டிப்புகள் இருப்பதில்லை. அம்மா அப்பாவும் செல்லம் என்ற பெயரிலும் தடித்த சொற்களைப் பயன்படுத்துவதில்லை.
நண்பர், தனது செய்திச் சேகரிப்புகளைச் சுட்டிக் காட்டி ‘இந்த மொத்தச் செய்திகளுக்கும் ஆதாரப்புள்ளின்னு இதைத்தான் சொல்வேன்’ என்றார். அவர் மிக இலாகவமாகவும் நிதானமாகவும் பேசினார். என்ன இருந்தாலும் மனோவியல் நிபுணர். அவர் பேசுவதை என்னால் மறுக்க முடியவில்லை. அவர் சொல்வதில் உண்மை இல்லாமல் இல்லை. Too sensitive to everything என்பது நல்லதில்லை. கோபமும் வசவும் மனிதர்களுக்குரிய குணங்கள். அதைக் குறைந்தபட்ச அளவிலாவது குழந்தைகளிடம் காட்டுவதும், அவர்களைத் திட்டுவதும், வசவுகளுக்கு அவர்களைப் பழக்குவதும் தவறில்லை என்பது அவரது வாதம். வீட்டில் குழந்தைகளுடன் இருக்கும் போது ஒரு முறை அழைத்துப் பார்த்தால் குழந்தைகளின் கவனம் நம் பக்கம் திரும்பவில்லையெனில் ‘டேய்’ என்று சற்றே அதட்டுவதில் தவறொன்றுமில்லை. நமக்கே அது கடினமாகத்தான் இருக்கும். குழந்தைகளுக்கும் அந்த அதட்டலை ஏற்றுக் கொள்வது கடினம்தான். முதல் ஒன்றிரண்டு முறை அழுவார்கள். சுணங்குவார்கள். அது பிரச்சினையில்லை. இரண்டாம் மற்றும் மூன்றாம் முறை அவர்களுக்குப் பழகிவிடும். நம்முடைய கோபத்தை நாம் மறைத்துக் கொண்டு குழந்தைகளிடம் எப்பொழுதுமே காட்டாமல் இருந்துவிட்டு நம்மையும் மீறி ஏதேனும் தருணத்தில் கொட்டிவிடும் போது அந்தப் பிஞ்சுகளால் அதனைத் தாங்கிக் கொள்ள முடிவதில்லை. விபரீத முடிவுகளை எடுக்கிறார்கள்.
பதின்பருவத்துக் குழந்தைகள்தான் (Teen age) தற்கொலை என்ற உச்சகட்ட முடிவுகளை அதிகம் எடுக்கிறார்கள். அவர்களது வயது அப்படி. தம்மைப் பெரியவர்களாக நினைத்துக் கொள்கிறார்கள். சென்சிடிவ்வாக வளர்ந்து நிற்கும் அவர்களால் அம்மாவும் அப்பாவும் திட்டுவதைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் அவசரப்பட்டுவிடுகிறார்கள். ஆரம்பத்திலிருந்தே ‘அம்மா திட்டுவாங்க’ ‘அப்பா திட்டுவாங்க’ என்ற மனநிலையை உருவாக்காமல் விட்டுவிடுவது பெற்றோரின் முக்கியமான தவறாக இருக்கிறது. அப்படிக் குழந்தைகளை உருவாக்குவதும் கூட ஒரு வகையிலான அவர்களின் மன அழுத்த மேலாண்மைதான்.
‘யோசிச்சுப் பாருங்க’ என்றார்.
அவர் சுட்டிக்காட்டியது மிக முக்கியமான விஷயமாகத் தெரிந்தது. இப்படியொரு கோணத்தில் யோசித்ததில்லை. உணவை முடித்துவிட்டு பேருந்தில் ஏறி அமர்ந்த பிறகும் இதுதான் மனதுக்குள் உலாத்திக் கொண்டிருந்தது.
நீங்களும் யோசித்துப் பாருங்கள்.


Monday, November 13, 2017

நல்லதோர் திருப்புமுனை படித்ததில் மனதை தொட்டது :


ஓர் வார இறுதிக்குபின் திங்கட்கிழமை காலை வகுப்பினுள் நுழைகிறார் ஆசிரியை சுமதி அவருக்கு ஒரு வழக்கம் இருந்தது.
அதுதான் வகுப்பறைக்குள் நுழைந்ததுமே மாணவர்களைப்பார்த்து 'Love you all!' என்று சொல்வது. அவர் பொய் சொல்கிறார் என்று அவருக்கே தெரியும்.
ஏனெனில் அந்த வகுப்பிலுள்ள ஒரேயொரு மாணவனை மட்டும் அவரால் நேசிக்கமுடியவில்லை. ஒழுங்காய் உடுத்தாத, எதிலுமே ஒழுங்காய் இல்லாமல் சுட்டிக்காட்டுவதற்கு எந்தவொரு பொசிடிவ் அட்டிடியூடும் இல்லாத 'டெடி'என்கிற தியோடர்! அவனுடன் மட்டும் ஆசிரியை சுமதி நடந்துகொள்ளும் விதம் வித்தியாசமானது! எந்தவொரு தவறான விஷயத்திற்கும் அவனையே உதாரணம் காட்டினார்.எந்த நல்ல விஷயத்திற்கும் அவனை நிராகரித்தார்.
அவ்வாண்டிற்கான காலாண்டு பரீட்சை வந்தது. முன்னேற்ற அறிக்கைகள் வகுப்பாசிரியர்களிடமிருந்து தலைமை ஆசிரியரின் கையெழுத்து க்கு அனுப்பப்பட்டது.
ரிப்போர்ட்களை ,மேற்பார்வை செய்து கையொப்பமிடுத்துக்கொண்டிருந்த தலைமை ஆசிரியர் ,ஆசிரியை சுமதியை அழைப்பு விடுத்தார்.
அவர் வந்ததும், 'முன்னேற்ற அறிக்கை என்பது ஒரு பிள்ளையின் முன்னேற்றத்தை அறிவிக்கவேண்டும். தன் பிள்ளைக்கும் ஓர் எதிர்காலம் உண்டென்ற நம்பிக்கையை பெற்றோருக்கு தரவேண்டும்! நீங்கள் எழுதியிருப்பதை பார்க்கும்போது பெற்றோர் அவன்மீது நம்பிக்கை இழந்துவிடுவார்கள்!’ என்று கேள்விக்குறியுடன் டெடியின் முன்னேற்ற அறிக்கையை காட்டிக்கேட்டார்.
உடனே சுமதி 'என்னால் ஒன்றுமே செய்யமுடியாது. அவனைப்பற்றி எழுதுவதற்கு என்னிடம் ஒரு நல்ல விஷயம்கூட இல்லை!' என்றார்.
உடனே தலைமை ஆசிரியர் அங்குள்ள நிர்வாக ஊழியர் ஒருவரிடம் கடந்த ஆண்டுகளுக்கான டெடியின் முன்னேற்ற அறிக்கைகளை சுமதிக்கு கொடுக்குமாறுபணித்தார். அறிக்கைகள் வருகிறது. ஒவ்வொரு ஆண்டாய் விரித்துப்படிக்கிறார் சுமதி
மூன்றாம் வகுப்பறிக்கை சொன்னது ' வகுப்பின் மிகத்திறமையான மாணவன் டெடி'. தான் வாசித்ததை நம்பமுடியாமல் அதிர்ச்சியில் உறைந்துபோனார் சுமதி
நான்காம் ஆண்டறிக்கை சொன்னது. ' டெடியின் தாய் இறுதிநிலை கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். அதனால் டெடி மீது முன்னர்போல அவரால் கவனம் செலுத்தமுடியவில்லை. அதன் விளைவு அவனிடம் தெரிய ஆரம்பித்திருக்கிறது. '
ஐந்தாம் ஆண்டின் அறிக்கை இவ்வாறு சொன்னது, "டெடியின் தாயார் இறந்துவிட்டார்.அவனுக்கு அவசரமாய் வழிகாட்டல் தேவைப்படுகிறது. இல்லையேல் நாம் அந்தக்குழந்தையை இழந்துவிடுவோம்.!'
கண்களில் கண்ணீருடன் சுமதி தலைமை ஆசிரியரைப்பார்த்து சொன்னார். 'என்ன செய்யவேண்டுமென்று எனக்கு தெரியும்.'
அடுத்த திங்கள் காலை ஆசிரியை வகுப்புக்கு சென்று பிள்ளைகளை பார்த்து வழக்கம்போல் 'Love you all 'என்றார். இம்முறையும் அவர் பொய் சொல்கிறார் என்று அவருக்குத்தெரியும். ஏனென்றால், தற்போது மற்றக்குழந்தைகளைவிட டெடி மீதிருக்கும் அவரது அன்பு அளவுகடந்திருந்தது... டெடியுடனான தன் அணுகுமுறையை உடனே மாற்றுவதென்று அவர் தீர்மானித்திருந்தார். அதன் பின்னர் ஒவ்வொரு நல்ல விஷயத்திற்கும் டெடியின் பெயர் உச்சரிக்கப்பட்டது. ஒவ்வொரு தவறான உதாரணங்களின்போதும் அவன் பெயர் கவனமாய் தவிர்க்கப்பட்டது…
அவ்வாண்டின் பள்ளி இறுதிநாள்
வந்தது. எல்லா மாணவர்களும் தம் ஆசிரியருக்கென பரிசுகள் கொண்டுவந்திருந்தார்கள். அதற்குள் ஒரு பொட்டி மட்டும் ஓர் பழைய செய்தித்தாளால் சுற்றப்பட்டிருந்தது. ஆசிரியை சுமதி க்கு அதை பார்த்ததுமே அது டெடியிடமிருந்துதான் வந்திருக்கவேண்டுமென உள்ளுணர்வு சொல்லியது. முதலில் அதையே பிரித்தார். பிரித்ததும், அதனுள் பாதி உபயோகித்த சென்ட் பாட்டில் ஒன்றும், சில கற்கள் கழன்று விழுந்த பிரேஸ்லெட் ஒன்றும் இருந்தது. அது டெடியினது என்று புரிந்துகொண்ட முழு வகுப்பறையுமே சிரித்தது. ஒன்றுமே சொல்லாமல் ஆசிரியை சுமதி அந்த வாசனைத்திரவியத்தை தன்மீது பூசிக்கொண்டார். அந்த பிரேஸ்லெட்டை எடுத்து கையில் அணிந்துகொண்டார்.
மெல்லியதாய் ஒரு கால்வாசி புன்னகையுடன் டெடி சொன்னான்.'' இப்போது உங்களிடம் என் தாயின் வாசம் வருகிறது. இறக்குமுன் அவர் இறுதியாய் பாவித்த சென்ட் இதுதான். இந்த பிரேஸ்லெட்தான் பெட்டியுள் வைக்குமுன் அவர் உடலில் இருந்து அகற்றப்பட்டது!”
ஓராண்டு கழிந்தது. ஆசிரியை சுமதி மேசையில் ஓர் கடிதம் கிடந்தது. ''
‘I have seen few more teachers. But you are the best teacher I have ever seen’. With love Teddy.
ஒவ்வொரு ஆண்டு இறுதியிலும் ஒரு கடிதம் கிடைத்தது. அதே வரிகளுடன்…
‘I have seen few more teachers. But you are the best teacher I have ever seen’. With love Teddy.
ஆண்டுகள் பல வேகமாய் உருண்டன. அவர்களுக்கிடையேயான தொடர்பு எப்படியோ அறுந்துபோனது. ஆசிரியை சுமதி ஓய்வுபெற்றிருந்தார். பல ஆண்டுகளின் பின்னர் அவருக்கு ஒரு கடிதம் வந்து சேர்ந்தது. கடிதம் டாக்டர் தியோடரிடமிருந்து...
Mrs. Sumathi
‘I have seen many more people in my life. are the best teacher I have ever seen’, I am getting married. I cannot dream of getting married without your presence. This is your Teddy.
Dr. Theodore
அத்துடன் போய்வர விமான டிக்கட்டுக்களும் இணைக்கப்பட்டிருந்தன.ஆசிரியை சுமதிக்கு இருப்பு கொள்ளவில்லை. அவரிடம் அந்த சென்ட் பாட்டில் தற்போது இல்லை. பிரேஸ்லெட் பாதுகாப்பாய் இருந்தது. அதை அணிந்துகொண்டு churchற்குப்புறப்பட்டார்.
அங்கு சென்று பின் இருக்கையொன்றில் அமர முற்பட்டபோது அங்கிருந்த ஊழியர்கள் அவரை எப்படியோ அடையாளம் கண்டுகொண்டு முன் வரிசையில் இருந்த ஆசனம் ஒன்றை நோக்கி அழைத்து சென்றனர். அவருக்கென ஒதுக்கப்பட்டிருந்த ஆசனத்தில் எழுதப்பட்டிருந்தது ''MOTHER ".
திருமணம் முடிந்தது. தியோடர் தன் புது மனைவியிடம் ஆசிரியை சுமதியை அறிமுகம் செய்துவைத்தார். ''இவர் மட்டும் இல்லையென்றால் நான் இன்று இந்த இடத்தில் நின்றிருக்கவே முடியாது' தியோடரின் கண்களில் கண்ணீர்.
ஆசிரியை சுமதி பெண்ணைப்பார்த்து சொன்னார் ' டெடி இல்லையென்றால், ஒரு ஆசியர் தன் மாணவர்களுக்கு முதலில் ஒரு தாயாய் இருக்கவேண்டுமென்பதை நான் அறிந்திருக்கவேமுடியாது!''.
உங்கள் வகுப்பிலும் ஒரு டெடி இருக்கிறான். உங்கள் உதவிக்காக காத்துக்கொண்டிருக்கிறான். உங்களாலும் அந்த ஆசிரியை சுமதியாக இருக்கமுடியும்!
இனி அடுத்த திங்கட்கிழமை காலை வகுப்பறைக்குள் நுழையும்போது ஒரு ஆசிரியராய் இல்லாமல் தாயாய் நுழைந்துபாருங்கள்! உங்களால் ஒரு பிள்ளையின் வாழ்க்கையில் நல்லதோர் திருப்புமுனையாய் இருக்கமுடியும்.

Sunday, November 12, 2017

SUN TZU ஸுன் ட்ஸூ சீனத்துப் போரியல் மேதை

Sun Tzu was an ancient Chinese military general, strategist and philosopher, who is believed to have written the famous ancient Chinese book on military strategy, “The Art of War”. Through his legends and the influential “The Art of War”, Sun Tzu had a significant impact on Chinese and Asian history and culture. The book drew immense popularity during the 19th and 20th centuries when the Western Society saw its practical use. This work still has continued its impact on both Asian and Western culture and politics. Sun Tzu’s authenticity is still a question of debate, but the traditional Chinese accounts place him in the Spring and Autumn Period of China (722–481 BC), where he was a military general serving under King Helü of Wu. Based on the description of warfare in “The Art of War” and the striking similarity of the text’s prose to other works from Warring States period led the modern scholars to place the completion of “The Art of War” in the Warring States Period (476–221 BC).

ஸுன் ட்ஸூவின் நூலின் முதல் அத்தியாயத்திலேயே ஒரு சம்பவம் கூறப்பட்டிருக்கும்.

ஈராயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன்னர், சீனாவில் பல நாடுகள் இருந்தன. அவற்றின் மன்னர்கள் ஒருவருக்கொருவர் போரிட்டுக் கொண்டேயிருந்தனர். அந்த நாடுகளில் ஒன்று வூ என்னும் நாடு. அதன் அண்டை நாடாகிய ச்சூ அதை விட பெரியது. பெரும் படையைக் கொண்டது. வூ படையைவிட பன்மடங்கு பெரியது.  அந்த நாட்டிடமிருந்து தன் நாட்டைப் பாதுகாத்துக்கொள்ளத் தக்கதொரு நல்ல படையைப் பெருக்கிக்கொள்ள வூ மன்னன் விரும்பினான்.

அக்காலத்தின் போரியல் மேதையாக ஸுன் ட்ஸூ விளங்கினார். அவர் போர்க்கலை THE ART OF WAR என்னும் நூலை எழுதியுள்ளார். அந்த நூல் தற்காலத்தில் வாணிபம், நிர்வாகம், போரியல் போன்ற பல துறைகளுக்கும் பயன்படுத்தப்படுகிறது.
வூ நாட்டு மன்னனை ஸுன் ட்ஸூ சென்று சந்தித்தார்.

"தளபதிக்குத் திறமையிருந்தால் எந்த மாதிரியான மனிதர்களுக்கும்
போர்ப்பயிற்சி கொடுத்துவிடமுடியும்",  என்று ஸுன் ட்ஸூ கூறினார். அந்த சித்தாந்தத்தை விளக்க ஆரம்பித்தார். "நான் உம்முடைய நூலைப் படித்துவிட்டேன். இந்தப் பெண்களுக்குக்கூட உம்முடைய முறைகளின்படி போர்ப்பயிற்சி கொடுக்கமுடியுமா, பாரும்" என்று மன்னன் உத்தரவிட்டான். தன்னுடைய அந்தப்புரத்து சிங்காரிகளுக்குப் போர்ப்பயிற்சி சொல்லிக் கொடுக்கச் சொல்லி சவால்விட்டான்.

அதனை ஏற்றுக்கொண்ட ஸுன் ட்ஸூ மன்னனிடம் சன்னத்துப் பெற்றார்.

படையின் தலைமைத்துவத்தையும் முழுப்பொறுப்பையும் பெற்றுக்கொள்ளும் சடங்கு - சன்னத்துப் பெறுதல். தளபதிக்கு மன்னன் தன் கையால் பரிவட்டம் கட்டி வெற்றிலை பாக்கு கொடுப்பான்.
சில மரபுகளில் தண்டம் ஒன்றை மன்னனிடமிருந்து பெறுவார்கள். 'தண்டு எடுத்தல்' என்ற வழக்கம் அது.

சீனர்களிடமும் இந்த சன்னத்துப் பெறும் மரபு இருந்தது.
மன்னனிடமிருந்து வாள் பெறுவார்கள். அந்த வாளைப் பெற்றபின்னர்
தளபதி இடும் உத்தரவை யாரும் மீறவே முடியாது. மன்னவனும் அதனை
மாற்றமுடியாது.
ஸுன் ட்ஸூ மன்னனின் வாளைக் கேட்டு வாங்கிக்கொண்டார்.

பின்னர் அந்தப்புர சிங்காரிகள் வந்தனர்.

நூற்று எண்பது பெண்கள் கொண்ட அந்தப்புர அழகிகள் கூட்டம் ஒன்று வந்து சேர்ந்தது. அந்தக் கூட்டத்தை இரண்டு பகுதிகளாக ஸுன் ட்ஸூ பிரித்தார்.
அவர்களுக்குத் தலைமையாக மன்னனின் மிகவும் விருப்பமான மிக அழகிய மிக இளமையான வைப்பாட்டிகள்(favourite concubines) இருவரை நியமித்தார்.

பயிற்சி தொடங்கியது.
ஸுன் ட்ஸூ அவர்களை வலது பக்கமாகத் திரும்பச்சொன்னார்
அந்த வைப்பாட்டிகள் சிரித்து, கேலி செய்துகொண்டு விளையாடிக்
கொண்டு சரசமாடிக்கொண்டிருந்தனர். மற்ற சிங்காரிகளும் அவ்வாறு
விளையாடினர்.

ஸுன் ட்ஸூ அவர்களை அழைத்து ஒழுங்காகப் பயிற்சி செய்யச்சொன்னார்.
மீண்டும் வலது பக்கம் திருமச்சொன்னார்.
அவர்கள் தொடர்ந்து விளையாடிக்கொண்டிருந்தனர்.
மற்றவர்களும் அதே மாதிரிதான்.

இரண்டாம் முறை ஸுன் ட்ஸூ அவர்களிடம் இன்னும் நயமாகவும் விரிவாகவும் சொன்னார். சில கவாத்துகளைத் தாமே செய்து காட்டினார்.
பலிக்கவில்லை. வைப்பாட்டிகளும் சிங்காரிகளும் மாறவில்லை.

மூன்றாம் முறை முதலிலிருந்து எல்லா கவாத்தையும் முறையாகச்
செய்து காட்டி, முடிவில் எச்சரிக்கையும் விடுத்தார்.
அப்போதும் அவர்கள் திருந்தவில்லை.

உடனே அங்கிருந்த வீரர்களை அழைத்து அந்த இரண்டு  வைப்பாட்டிகளையும் அத்தனை பேர் முன்னிலையிலும் தலையை வெட்டிவிடச்சொன்னார்.

மன்னன் முதலில் விளையாட்டாக நினைத்தான்.
மற்றவர்களும் அப்படியே.

ஆனல் ஸுன் ட்ஸூ வீரர்களிடம் தாம் இட்ட கட்டளையை நிறைவேற்றும் வண்ணம் ஆணையிட்டார்.

மன்னன் வெகுண்டெழுந்து அந்த ஆணையை மாற்றி உத்தரவிட்டான்.

ஸுன் த்ஸூ தம்மிடம் இருந்தார் வாளைத் தூக்கிக் காண்பித்து,
"மன்னவனே! இது உம்முடைய வாள். உம் அதிகாரம் நீதி, வீரம், உறுதி,
வன்மை முதலிய அனைத்திற்கும் இந்த வாள் நிலையாக உள்ளது. அதை நீர் என்னிடம் கொடுத்துவிட்டீர். அத்துடன் அனைத்து அதிகாரத்தையும் என்னிடம் கொடுத்துவிட்டீர்.
அதன்மீது ஆணையிட்டுக் கூறுகிறேன். என் ஆணையில் யார் குறுக்கே
வந்தாலும் - நீரே ஆயினும் சரி - இந்த வாளுக்கு இரையாக்கிவிடுவேன்",
என்றார்.

வெலவெலத்துப் போனார்கள், அனைவரும்.

மன்னன் உட்பட பலர் முன்னிலையிலும் அந்த இரு வைப்பாட்டிகளையும் சிரச்சேதம் செய்தனர்.

புதிய தலைவிகளை ஸுன் ட்ஸூ நியமித்து, பயிற்சியைத் தொடர்ந்தார்.

சில மணி நேரம் சென்று மன்னனை அழைத்து, மேற்பார்க்கச் சொன்னார்.

தன்னுடைய மிக விருப்பமான, மிக அழகிய, மிக இளமையான இரண்டு வைப்பாடிகளை இழந்திருந்த மன்னன் சொன்னான்,
"இப்போது எனக்கு எதையும் மேற்பார்வையிட மூட் இல்லை."

ஸுன் ட்ஸூவின் முதல் மூன்று விதிகள்:

1. நாம் சொல்லவந்ததை நாம் சரியாகச் சொல்லியிருக்க மாட்டோம்.
ஆகவே நாம் சொல்லவந்ததை மீண்டும் விரிவாகச் சொல்ல வேண்டும்.

2.நாம் சொல்ல வந்த விஷயம் புரிந்துகொள்ள முடியாததாக இருக்கலாம். ஆகவே தை மறு பரிசீலனைசெய்து மீண்டும் சொல்லவேண்டும்.

3. சொல்லப்பட்டவர்கள் சற்று தெளிவில்லாதவர்களாக இருக்கலாம்
அவர்கள் பொருட்டு மீண்டும் சொல்லிக்கொடுக்கலாம்.

4. நான்காம் தடவை.......XXX 

http://jaybeestrishul11.blogspot.com.au/2012/07/sun-tzu.html

நிராகரித்தலென்பது


இரக்கமற்ற ஓர் சொல்லின்
விதையிலிருந்து அரும்புகிறது ...
நமது நிராகரிப்புகளின் பச்சை

ஒரு குழந்தை
தாயின் முத்தத்தை மறுப்பதிலிருந்து
துவங்குகிறது அதன் முதல் வலி

அதனை ஏற்பதென்பது
அத்துனை சுலபமான விடயமல்ல
தவிரவும் யாரும் விரும்பி ஏற்பதுமில்லை

ஒருத்தர் மீதான நம்பிக்கையும்
அதீதமான பிரியமும் உடைகிற போது
நிராகரிப்புகளும் உடன் நிகழ்ந்து விடுகிறது
அது தவிர்க்க முடியாதுமாகும்

நிராகரிக்கப் படாமல்
இங்கு யார்தான் ஜீவிக்கிறார்கள்
அதிலிருந்து யாருமே தப்ப மடியாது

ஆயினும் இன் நிராகரிப்புகள்
எதுவுமே நிரந்தரமானதல்ல

காலம் நம்மை
எப்போது நிராகரிக்குமென்று
யாராலூம் கணித்து சொல்ல முடியாது

அத்துயர்மிகு கணம் வரை
வாழ்ந்து தொலைய வேண்டியதுதான்

0
ஜமீல்

Stem Cells

Still find the subject of Stem Cells confusing? This simple yet informative explanation by one of the worlds leading Stem Cell researchers, just might give you that clarity you have been looking for.
To understand what a stem cell is, it is important to first understand what a stem cell is not. All the cells of the body, called somatic cells, are specialized cells that do one specific thing; they will never do anything else, and they do not proliferate.
For example, a skin ...cell will never be anything other than a skin cell and it will never divide. It will do what a skin cell does until the day it dies. It is the same for brain cells that respond to electrical impulses, pancreatic cells that make insulin, muscle cells that contract, and all the other cells of the body that do… what they do.
At the other end of the spectrum we have stem cells; they do not have any specific function: their general role is simply to multiply during the entire life of an individual and to transform into other types of cells.
Historically, adult stem cells from the bone marrow were known to be precursors to blood cells, leading to the formation of white blood cells, red blood cells and platelets... and nothing else.
But discoveries made at the turn of the century showed that stem cells from the bone marrow have the ability to transform into virtually any type of cell in the body. In fact, this is one of their most important roles and it has since lead to the understanding that stem cells from the bone marrow constitute the natural repair and renewal system of the body.
All throughout the life of an individual, everyday stem cells leave the bone marrow to migrate into various organs and tissues to repair and maintain the proper functioning of the whole body.
And when there is an injury or a degenerative process, stem cells migrate into that specific tissue to replace the cells that have been lost and effectively repair the damage.
Over the past 5-10 years, stem cell research has demonstrated that there is a direct link between the number of stem cells in circulation and the ability of the body to repair: more stem cells in circulation means that more stem cells are available to participate to the process of tissue repair.
Furthermore, there is also a link between the number of stem cells in circulation and the formation of degenerative diseases: people that have developed degenerative diseases have roughly half the number of stem cells found in the blood of healthy people.
Conclusion: anything one can do to support the release of stem cells from the bone marrow and to support the overall function of stem cells in the body will contribute to creating and maintaining optimal health.

Lakshmi - Short Film




Review

The first few minutes of Lakshmi is drained out of colours, just like the life of its lead character. We see the eponymous Lakshmi (an effective Lakshmi Priya Chandramouli) go about her day. The monotony sets in; even more so as her husband rolls on top of her every night without a second glance at her. There is also a hint that the husband might be involved with another woman. Hues starts to colour Lakshmi’s life as she meets an attractive man on the train. She finds herself smiling involuntarily, indulging in the guilty joy that unsolicited attention provides. Until a bandh drives their paths closer. Charmed by the man, Lakshmi ends up in his house and eventually in his bed.
The ending of ‘Lakshmi’ is beautiful. Aided by some brilliant music and a beautiful poem, we see her walking back into her usual life. She stops taking the train — her connection with the night of indulgence. As the voiceover says she ‘runs back to the eclipse’ with a memory of the night where she was aglow, even if it was in the sky of a different man. The only flaw that ‘Lakshmi’ does is explain herself when we don’t really need it. But considering the brickbats the film has received, I understand why the filmmaker chose to have it.
The short film has been thrown under a barrage of criticism and a list of accusations: for justifying an extra-marital affair, for equating women empowerment with sexual independence. Rather than justifying extra-marital relationships, what Lakshmi has done is show the difference in treatment meted out to women and men who err. As Sowmya Rajendran rightly asks in her piece in The News Minute, where is the outrage about Sindhu Bhairavi, Agni Natchathiram, Gopurangal Saivathillai and a list of other movies that had central men characters with extra-marital relationships? Not that this disparity is new. Sathileelavathi has a character that says, “Veetla salikarathu nu than avan velila poran” (He goes out only when he is bored with what he gets at home), when Leela shares that her husband is having a mistress, making it Leela’s fault. Can we apply the same logic in Lakshmi’s case as well?
The controversy around Lakshmi makes us rethink how we see women on-screen. After years of seeing a woman be perfect on screen or be termed a ‘villi’, the shades of grey has caused unnecessary outrage. What people fail to understand is that at the end of the day, it is a story. A story of a middle-class woman, frustrated by her unhappy marriage, falters and gives in to temptation. Maybe that’s why Sarjun made the husband’s character get involved with another woman. It wasn’t particularly necessary, the indifference Lakshmi suffered from was pretty evident. Possibly he realised that indifference is not enough reason for a woman to err; so that audience can forgive Lakshmi easier. So that they can reason saying, ‘the husband had an affair as well’. Baby steps.
http://indianexpress.com
கே. எம். சர்ஜூனின் இயக்கத்தில் வெளிவந்த இந்த குறும்படத்தில், பாரதியார் பாடல் பயன்படுத்தப்பட்டிருப்பதும் விமர்சனத்துக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது.
இந்த குறும்படம் உண்டாக்கிய தாக்கம் குறித்தும், சமூகவலைதளத்தில் இது குறித்து எழுந்த விமர்சனங்கள் குறித்தும் கருத்து கேட்டபோது, கருத்துக்கூற இயக்குநர் கே. எம். சர்ஜூன் மறுத்துவிட்டார்.
லட்சுமி குறும்படம்படத்தின் காப்புரிமை Lakshmi Short film
இந்த குறும்படத்தில் லட்சுமி கதாபாத்திரத்தை ஏற்று நடித்துள்ள லட்சுமிபிரியா, பிபிசி தமிழிடம் கூறுகையில், ''இந்த குறும்படம் குறித்து வரவேற்பு அல்லது விமர்சனம் என்று எந்த கருத்தை தெரிவிப்பவராக இருந்தாலும், அனைவரையும் இந்த குறும்படம் பார்க்க வைத்திருக்கிறது என்பதை புரிந்து கொள்ளமுடிகிறது'' என்று தெரிவித்தார்.
''ஒரு இயக்குநர் மற்றும் எழுத்தாளரின் எண்ணத்தை திரையில் வெளிப்படுத்தும் கருவியாகத்தான் நான் செயல்பட்டேன். மேலும், இந்த குறும்படத்தை தவறாக புரிந்து கொண்டவர்கள்தான் விமர்சனங்களை தெரிவிக்கின்றனர். படத்தின் காலவரிசையை பலரும் தவறாக புரிந்து கொண்டனர்'' என்று அவர் தெரிவித்தார்.
'விமர்சிப்பவர்கள் நாகரீகமாக கருத்துக்களை தெரிவிக்க வேண்டும்'
சமூகத்தின் பார்வையில் ஆணுக்கு ஒரு நீதி, பெண்ணுக்கு ஒரு நீதி என்ற நிலை இன்னமும் மாறவில்லை. இந்த படம் என்றில்லை பல விஷயங்களிலும் பெண்ணுக்கு சமஉரிமை இன்னமும் கிடைக்கவில்லை என்று குறிப்பிட்ட லட்சுமிபிரியா, ''இந்த படத்தின் கரு குறித்து பல விமர்சனங்கள் இருந்தாலும், எனது பங்களிப்பு குறித்து பொதுவாக பாராட்டுக்களே கிடைத்துள்ளது'' என்று கூறினார்.
லட்சுமி கதாபாத்திரத்தை ஏற்று நடித்த நடிகை லட்சுமிபிரியா
 லட்சுமி கதாபாத்திரத்தில் நடிகை லட்சுமிபிரியா
''இந்த குறும்படத்தை விமர்சனம் செய்பவர்கள் முழுமையாக படத்தை பார்த்துவிட்டு , அவர்களின் கருத்து எதுவாக இருந்தாலும், அதனை நாகரீமாகவும், மரியாதையாகவும் கூறவேண்டும். அதுவே மதிக்கத்தக்கதாக இருக்கும்'' என்று கூறிய லட்சுமிபிரியா, சமூகவலைத்தளங்களில் தன் மீதும், குறும்படத்தின் இயக்குநர் மீதும் சிலர் வசைக்கருத்துக்களுடன் கூடிய விமர்சனங்களை பதிவிடுவதாக குறிப்பிட்டார்.
'லட்சுமி செய்தது சரியா?'
சமூகவலைத்தளத்தில் இந்த குறும்படம் பற்றி எழுந்த விமர்சனங்கள் குறித்து கட்டுரை எழுதியவரும், பத்திரிக்கையாளருமான சௌமியா ராஜேந்திரன் பிபிசி தமிழிடம் பேசுகையில், ''இந்தப் படம் ஒரு சாதாரண பெண்ணின் கதை. இது நடக்காத ஒரு சம்பவம் இல்லை. சமூகத்தில் நடக்கும் ஒன்றுதான். புரட்சிகரமான கதையாக இதை பார்க்கத் தேவையில்லை'' என்று தெரிவித்தார்.
பாரதியின் புதுமைப்பெண் இது அல்ல என்று விமர்சிப்பவர்கள் பாரதியின் புதுமைப் பெண்ணையும் ஆதரிப்பவர்கள் இல்லை என்று குறிப்பிட்ட சௌமியா, ''ஆணாதிக்க சமூகத்தின் ஒரு எதிர்வினையாகதான் இதை பார்க்கிறேன்'' என்று தெரிவித்தார்.
''லட்சுமி செய்தது சரி என்று நான் வாதாடவில்லை. லட்சுமி ஒரு புனைவு காதாபாத்திரம்தான். ஒரு பெண் புனைவு கதாப்பாத்திரம் திரையில் செய்யும் ஒரு விஷயத்தைகூட சிலரால் ஏற்றுக் கொள்ளமுடியவில்லை. இது ஏன்?'''' என்று வினவினார்.
ஆணுக்கு ஒரு நீதி? பெண்ணுக்கு ஒரு நீதியா?
''திரிஷா அல்லது நயன்தாரா என்று படத்தின் தலைப்பு கூட வருகிறது. திரையில் ஆண்கள் இரண்டு கதாநாயகிகளுடன் காதல் செய்வதை நாம் ஏற்றுக் கொண்டு ரசித்திருக்கிறோம் ஆனால், ஒரு பெண் குறும்படத்தில் இவ்வாறு நடித்தது ஏன் இந்த அளவுக்கு விமர்சிக்கப்படுகிறது?'' என்றும் சௌமியா கேள்வி எழுப்பினார்.

இதனை பெண்ணியம் என்று லட்சுமியோ அல்லது குறும்பட இயக்குநர் அளித்த குறிப்பிலோ எங்குமே கூறவில்லை. இது போன்ற படங்கள் வருவதே அரிது . அதனால், இது போன்ற படங்களை , பார்வையாளர்கள் பெண்ணிய பகுப்பாய்வு செய்யலாம் என்றும் கூறினார்.
''லட்சுமியோ அல்லது அந்த குறும்படத்தின் இயக்குநரோ பெண்ணிய ஆதரவாளர் என்று கூறுவதே தவறு. ஆனால், ஒரு ஆண் செய்யும் ஒன்றை எவ்வாறு வரவேற்கிறோமோ அதனை பெண் செய்யும்போது எவ்வாறு பார்க்கப்படுகிறது என்பதில்தான் பெண்ணியம் என்ற அம்சமே வருகிறது'' என்று கூறிய செளமியா, ஆண் செய்யும் ஒன்றை பெண் செய்யும்போது ஏன் ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்பதை சிந்திப்பதுதான் பெண்ணியம் என்றும் குறிப்பிட்டார்.
இந்த படத்தில் உள்ள சில அம்சங்களை நான் ஆதரிக்கவில்லை. பெண் சுதந்திரம் என்றவுடன் பாரதியை மேற்கோள் காட்ட தேவையில்லை. அந்த பெண்ணின் பயணம் அவராகவே எடுத்த முடிவாக இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். ஆனால், இந்த அளவு விமர்சனங்கள் தேவையற்றது'' என்று செளமியா ராஜேந்திரன் குறிப்பிட்டார்.

http://www.bbc.com


A Tamil short film titled Lakshmi has created a furore on social media since it was uploaded 10 days ago by Ondraga Entertainment.
Directed by Sarjun KM, the film is about a woman, Lakshmi (actor Lakshmi), who has an extramarital affair. It's pretty straightforward why she decides to have this fling - Lakshmi is in an abusive marriage where her husband only treats her as a cook and caretaker. Lakshmi is like the pressure cooker with which she begins her day, building up steam and threatening to burst any moment.
Her husband's callousness extends to the bed where he only thinks about his pleasure and rolls off as soon as he's done. He seems to have another woman in his life as well - there's a phone call from a woman who hangs up when Lakshmi answers and her husband refuses to give her an explanation.
Then, Lakshmi sees an attractive man on the train. Circumstances bring them closer and after a conversation in which he seems to be genuinely interested in her, Lakshmi goes home with him for a night.
The ending of the film is a bit ambiguous - does taking the bus mean she will meet the man again, since it's at the bus-stop that they first have a real conversation? Or does it mean it was a one night stand since her regular transport is the train where she used to see him? At any rate, from the black and white grind of her routine, her world turns colourful when she meets him.
The film is not without its flaws. Lakshmi's "saviour", a stereotypical "artist", comes spouting lines from Bharathiyar as characters from Tamil films always do when they are out to "liberate" a woman. He makes her stand before the mirror and unwinds her tight plait, loosening her hair to make her see for herself what she could be (a faint echo of Mahendra Baahubali making Avantika aware of the "real woman" within her). The film would have worked better if Lakshmi's self-discovery had happened because she makes that internal journey herself - this is what sets apart films like English Vinglish and Queen.
Nevertheless, Lakshmi is an attempt to show a woman's desire to flout the rules to seek her own happiness.
A volley of abuse, objections
This little film, less than 20 minutes long, has unleashed a barrage of abuse and divided opinions from several social media users who've said that Lakshmi's decision is not "women's empowerment". Still others have objected to using Bharathiyar's words to "justify" an extramarital affair.
Does feminism encourage extramarital relationships? No. However, feminism does encourage people of all genders to expect equality in relationships and the right to happiness. Feminism also refuses to pitch marriage as a woman's destiny and acknowledges the patriarchal ideas that sustain the institution of marriage.
The first question her husband asks when she says she's stuck somewhere and can only return in the morning is, 'Then who will make breakfast?'. Considering Lakshmi is in a dead-end marriage, it's ludicrous that the film has upset so many people who have condemned it in strong words. While showing the woman's perspective of an unhappy marriage is fresh, the justification for why she decides to explore her life and sexuality outside the institution is on safe, conventional lines.
History of ‘forgiving’ a man’s extramarital affair
The anger is especially incongruous when Tamil cinema has had a long history of "chinna veedu" or "stepney" (phrases that refer to the "other" woman in an extramarital fling) humour. In fact, this idea of comedy extends to a man treating his wife's younger sister as a "chinna veedu" too.
Further, there are many celebrated films like Sindhu Bhairavi, Gopurangal Saivathillai, Sathi Leelavathi, Rettaivaal Kuruvi, and Chinna Veedu (among others) which have had the hero have an extramarital affair without receiving condemnation. In the end, all is forgiven and the "family" is restored.
In Agni Natchathiram, even though the father is berated by his sons from two different marriages for his deeds, they rally around him when his life is in danger. Films like Marupadiyum, where the woman refuses to take back a husband who cheats on her, have been extremely rare.
Ironically, the female leads in many of these films have been lauded as "strong" women characters while Lakshmi, who does what the male characters in these films have done (with a stronger justification for it to boot), has been condemned.
Does feminism mean women have to imitate the "wrongs" that men do? Certainly not. But feminism insists that you don't have different standards of judgment for the genders.
When we've celebrated years and years of men having the cake and eating it too in popular culture, why is a woman crossing the line upsetting people so much? The anger comes from the fear that the bedrock of patriarchal values, which make up our society, has been threatened. The people outraging about the film should admit this instead of the whataboutery of 'real' women's empowerment. As if they care.
http://www.thenewsminute.com

Mr. and Mrs. Iyer Movie

2002 இல் வந்த மிஸ்டர் அண்ட் மிசஸ் ஐயர் என்ற படத்தை இன்று நினைத்துக் கொண்டேன்.பல விருதுகளை வாங்கிக் குவித்த அந்தப் படம் பல அதிர்வுகளையும் ஏற்படுத்தியது.படத்தை இயக்கியவர் அபர்ணா சென்.

A bus is setting out to Calcutta from a village in West Bengal. Meenakshi Iyer, who is from a strict orthodox Hindu background, is leaving to Chennai for her husband, with her young child, after the vacation with her parents. By chance, she gets a co-passenger who is also to Chennai, Rajah, a photographer, introduced by one of the friends of her father. During the journey they build a good relationship. But a Hindu-Muslim communal riot sets out in the meantime, in some areas they had to travel. Then she comes to face the fact that Rajah is not a Hindu but a Muslim whose real name is Jehangir. Even though she curses herself at that time while some Hindu fanatics evade their bus she saves him introducing as Mr. Iyer. But they have to reach their destination while the other passengers know Rajah as no one else but Mr. Iyer.

தமிழ் பார்ப்பனக் குடும்பத்தைச் சேர்ந்த மீனாட்சி கைக்குழந்தையோடு பெற்றோர் வீட்டிற்கு வந்திருக்கிறாள்.அவள் தந்தை வடகிழக்கில் ஒரு வனத்துறை அதிகாரி.மீனாட்சியின் கணவன் சுப்ரமணியம் கல்கத்தாவில் வேலை செய்கிறான்.ரயில் டிக்கெட் கிடைக்காமல் பஸ்சில் பயணம் செய்ய வேண்டிய நிலை.குழந்தைக்கு வேண்டிய அனைத்துப் பொரு...ட்களோடு தனியே பயணம் செய்யவேண்டிய நிலை.பேருந்து நிலையத்தில் அவள் தந்தை அனுமதி அளித்து வனவிலங்குகளை ஒளிப்படம் எடுத்த புகைப்படக்காரரான ராஜாவைப் பார்க்கிறார்கள்.குழந்தையோடு தனியே செல்லும் மீனாட்சியைக் கவனித்துக் கொள்ள சொல்கிறார்கள்.
குழந்தை அழுது ஆர்ப்பரிக்கிறது.4 வரிசை பின்னால் இருக்கும் ராஜா குழந்தை உணவைத் தயாரிக்க ,குழந்தையைத் தூங்க வைக்க உதவுகிறான்.
ஒரு இடத்தில் பஸ் நகராமல் நின்று விடுகிறது.அங்கு வகுப்புக் கலவரம் வெடிக்கிறது.ஊரடங்கு உத்தரவு போடப் படுகிறது.ஒரு பயங்கரவாதக் கும்பல் பஸ்சில் ஏறி முஸ்லிம்களைத் தேடுகிறது.அனைவரின் பெயர்களைக் கேட்கிறது.சந்தேகம் இருக்கிறவர்களின் காற்சராயைக் கழட்டிப் பார்க்கிறது.பெண்களின் தாலியை அடையாளத்திற்கு சோதனை செய்கிறது.எழ எத்தனிக்கும் ராஜாவை ஏந்ன் எனக் கேட்கிறாள் மீனாட்சி.அவன் என் செல்லப்பெயர் ராஜா.முழுப் பெயர் ஜஹாங்கீர் சௌத்ரி எனச் சொல்கிறான்.மீனாட்சி குழந்தையை அவன் கையில் திணித்து சால்வையை அவன் மேல் போர்த்தி நாங்கள் மிசஸ் அண்ட் மிஸ்டர் அய்யர் என்று அந்தக் கும்பலிடம் சொல்கிறாள்.

இங்கிருந்து கதை ஒரு பாதுகாப்பான சூழலில் வளர்க்கப்பட்ட பெண் ஒரு வகுப்புக் கலவரத்தை எப்படி புரிந்து கொள்கிறாள் என்பதை நோக்கிப் போகிறது.இன்னொருவர் சமைத்தால் சாப்பிட மாட்டேன்,மாமிசம் சமைப்பவர் கையால் சாப்பிட மாட்டேன்,முன் பின் தெரியாத நபரை நம்பலாமா போன்ற சந்தேகங்களைத் தாண்டி ஒரு வனத்துறை கெஸ்ட் ஹவுசில் தங்குகிறார்கள்.
அவள் கண்ணாலேயே கலவரத்தில் ஒரு கொலையைப் பார்த்து ரொம்பவே அரண்டு போய் ஜஹாங்கீரின் கையைப் பிடித்துக் கொண்டு உறங்கிப் போகிறாள் மீனாட்சி.அவளைத் தவிர பஸ் பயணிகள் ,வனப் பங்களா காவலர்,போலிஸ் அதிகாரி அனைவர்க்கும் அவன் மிஸ்டர் அய்யர்.அவர்களுக்குள் ஒரு நேசம் முகிழ்க்கிறது.நிறைய சினேகம் நிரம்பிய உரையாடல்களும் ,பொருள் பொதிந்த பார்வைகளும் அவர்களுக்குள் நிகழ்கின்றன.
அவர்கள்ராணுவ வண்டியில் ஏறி ரயில் நிலையத்தை அடைந்து கல்கத்தாவிற்கு பயணிக்கிறார்கள்.
ரயில் நிலையத்தில் காத்திருக்கும் கணவனிடம் ஜஹாங்கீரை அறிமுகப் படுத்துகிறாள் மீனாட்சி.அவர்களிடம் விடை பெற்று போகிறான் ஜஹாங்கீர்.போனவன் திரும்பி வந்து அவளைப் படம் எடுத்த ஒளிப்பட சுருளைக் கையில் கொடுத்து குட்பை மீனாட்சி என்று சொல்லி விட்டுப் போகிறான்.

இந்தப் படம் தம் அடையாளங்களைத் தாண்டி மானுடத்தோடு இன்னொருவரை நேசிப்பதை ஒரு பக்கம் சொன்னது.இன்னொரு புறம் இன்ன சாதி,மதம்,இன்னொருவன் மனைவி என்பதைத் தாண்டி ஒரு பெண்ணின் அகத்தையும் சொன்னது.

I think the context is the same even now.
Geetha Narayanan
Meenakshi Iyer (Konkona Sen Sharma) and her infant son, Santhanam, embark on a bus journey to return home, after visiting her parents. At the bus station, Meenakshi is introduced to Raja Chowdhury (Rahul Bose) by a common friend. Raja, a wildlife photographer, is requested by Meenakshi's parents to look after their daughter and grandson during the journey. The passengers of the bus include a boisterous group of youngsters, two Sikh men, an elderly Muslim couple, a young couple high on romance, a mentally challenged boy and his mother, and some card-playing men. The bus faces a roadblock and the bus driver attempts a detour, but is stopped by traffic jam caused by sectarian violence between Hindus and Muslims in nearby areas.
Raja reveals his Muslim identity to Meenakshi. As someone who comes from a high caste and conservative Hindu Brahmin family, Meenakshi shudders at the very fact that during their travel she drank water offered by Raja, a Muslim. She is shocked and asks Raja to not touch her. Raja contemplates leaving the bus, but is forced to get stay inside by the patrolling police, who declare a curfew due to the riot. After the police leaves to scout other areas, a rioting Hindu mob arrives and forcibly enters the bus. They begin interrogating passengers about their religious identities and when in doubt, they even resort to check if the person is circumcised.
In order to protect himself from them, one of the passengers, who is Jewish and hence circumcised, points out the old Muslim couple to divert the mob's attention. The mob's leader drags the old couple out of the bus. One of the teenagers resists this, but she is assaulted by the mob. As Raja attempts to rise in revolt, Meenakshi plants Santhanam on his lap, ordering him to hold the baby with an intent to shield Raja's Muslim identity. The mob asks about their identities, and Meenaksi tells the leader that she is Mrs. Iyer and Raja is her husband. After this chilly encounter, the passengers spend the night in the bus.
In the morning, the passengers trek to a nearby village to seek accommodation. Raja and Meenakshi, identifying themselves as Mr. and Mrs. Iyer, fail to find any accommodation. However, the police officer, who was patrolling the earlier evening, bails them out by providing shelter at an abandoned forest bungalow. They are provided with the single usable bedroom available in the bungalow. Meenakshi refuses to share the room with Raja, and curses herself for coming along with a stranger. Raja confronts her on her outdated prejudices about caste and religion. After a brief quarrel, Raja allows her the comfort of the bedroom and prefers to sleep outside. The next morning when Meenakshi does not find Raja, she gets worried and angry as to why he left Santhanam and her in such a place. Soon, she feels relieved to find Raja sleeping outside. After they reach a restaurant in the nearby village, they meet the teenagers from the bus. The girls are excited and curious to know about Meenaakshi and Raja's love story. To keep their farce alive, both of them cook up an impromptu story right from how they met till where they went for their honeymoon. During their stay at the bungalow, they discover each other's beliefs and understanding of religion. That night, as they witness a horrific murder by one of the mobs, a shocked Meenakshi is comforted by Raja.
The next day, they reach a railway station with the army's help. There, they board the train towards their destination. At their destination station, Kolkata, Meenakshi's husband arrives to receive his wife. Meenakshi introduces Raja to her husband as Jehangir Chowdhury, a Muslim man who helped her (a Hindu woman) during the curfew. Raja hands over a camera roll to Meenakshi, containing the photos of their journey; they bid an emotional farewell to each other.