Search This Blog

Tuesday, May 16, 2017

பன்னிரு ராசிகளும் அவற்றின் பணப்புழக்கம், யோகம் என்பன குறித்து பார்ப்போம்



ஒவ்வொரு ராசியினருக்கும் ஒவ்வொரு விதமான பணப்புழக்கம், யோகம் என்பன அவரவர் ராசியைப் பொறுத்து அமையும் என்பது ஜோதிட நம்பிக்கை. அதன்படி பன்னிரு ராசிகளும் அவற்றின் பணப்புழக்கம், யோகம் என்பன குறித்து பார்ப்போம்.

மேஷம் :

கண்ணிமைக்கும் வேகத்தில் முன்னணிக்கு வருவதில் உங்களுக்கு நிகரானவர்கள் யாரும் இல்லை. எதிலுமே வெற்றி பெறும் யோகம் கொண்ட நீங்கள் புத்திசாலித்தனமாக எந்த காரியத்தையும் உற்று நோக்குவதால் எல்லா பணிகளிலும் லாபம் அடைவீர்கள். உங்களிடம் பணப்புழக்கம் மிக சிறப்பாக காணப்படும்.

ரிஷபம் :

நீங்கள் வேலையில் முழு மனதுடன் உழைப்பவர், பணத்தை கடவுளாக நினைப்பவர். இருப்பினும் உங்களிடம் பணம் தங்குவது கடினம். எந்தளவுக்கு உழைக்கின்றீர்களோ அதேயளவு செலவு ஆகும். பணம் சம்பாதிப்பதில் வல்லவரான நீங்கள், மற்றவர் மீது அதிகாரத்தை பயன்படுத்துவதனால் மற்றவர்களுக்கு நீங்கள் சுயநலவாதியாக தெரிவீர்கள். நீங்கள் இலகுவாக பணக்காரனாக முடிவதில்லை.

மிதுனம் :

உங்களிடம் பணப்புழக்கம் அதிகமாகவும் இருக்காது, பற்றாக்குறையும் ஏற்படாது. பிறப்பு முதல் இறப்பு வரை உங்களிடம் பணப்புழக்கம் ஒரே சீராக இருக்கும்.

கடகம் :

நீங்கள் உங்களது வாழ்க்கைத் துணையிடம் குடும்ப பொருளாதாரத்தை ஒப்படைத்துவிடுவீர்கள். பயணத்தால் உங்களுக்கு லாபம் அதிகரிக்கும். 14, 26, 30 வயதுகளில் நல்ல யோகத்தை பெறும் வாய்ப்பு உண்டு. பணத்தை சேமிக்கும் எண்ணம் இருக்கும். பணத்தை சம்பாதிக்க பாடுபடுவீர்கள். இருப்பினும் சிலவேளைகளில் பணத்தட்டுப்பாடு இருந்து வரும்.

சிம்மம் :

உங்களிடம் பணப்புழக்கம் மிகச் சிறப்பாக இருக்கும். எப்போது தேவைப்பட்டாலும் உங்களுக்கு பணம் கிடைத்துவிடும். நீங்கள் பணத்தை செலவழிக்க பயப்படுவீர்கள். செலவு ஏற்பட்டாலும் அதை நினைத்து கவலை கொள்வீர்கள். பண வரவு இருந்தாலும் அதற்கேற்ப செலவும் இருக்கும். பணத்தை சேமிப்பது உங்களுக்கு எளிதானதல்ல. வீட்டில் திருடு போகவும், பொருள் காணாமல் போகவும் பொருட்களை மறந்து வைத்துவிடவும் வாய்ப்புண்டு. நீங்கள் வீட்டில் ஏதேனும் மிருகமோ அல்லது பறவையோ வளர்ப்பது நல்லது.

கன்னி :

நீங்கள் பண விஷயத்தில் சிக்கனமாக இருப்பவர் மாத்திரமன்றி, பணத்தினுடைய மகத்துவத்தை நன்றாக புரிந்து கொண்டவரும் கூட. பணத்தை பாதுகாத்து வைத்துக்கொள்ள வேண்டும் என விருப்பமுடையவர். மனை வாங்கும் விஷயத்தில் பணம் செலவழித்தால் வெற்றி பெறுவீர்கள்.

துலாம் :

வியாபாரத்தில் நீங்கள் அதிக லாபம் அடைவீர்கள். உங்களது குணநலத்தின் காரணமாக எந்த காரியத்தை செய்தாலும் அதில் அதிக லாபம் விரைவிலேயே கிடைக்கும் வாய்ப்பு உண்டு. உங்களுக்கு பணவரவு நன்றாக இருக்கும்.

விருச்சிகம் :

உங்களது ஆசைகள் அனைத்தும் பூர்த்தியாகும். ஆனால், அதற்கு கடின உழைப்பு அவசியம். செலவை குறைப்பது நல்லது. எந்த காரியத்தையும் முழுவதுமாக முடித்தால் பண வரவு நிச்சயம். எங்கே சென்றாலும் அங்கிருந்து பணம் வரும். பணவரவால் மகிழ்ச்சி காண்பீர்கள்.

தனுசு :

உங்களுக்கு கொடுக்கல் - வாங்கல், வாங்குதல்-விற்றல் எல்லாமே இழுபறியாக இருக்கும். உங்களுக்கு அதிகம் செலவாவதால் சேமிக்க இயலாது. உங்களது வாழ்நாளில் ஒரு பெரும் செலவு செய்யும் வாய்ப்புண்டு. ஏமாற்றப்படவும் வாய்ப்புண்டு. பணம் இருந்தால்தான் நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். நீங்கள் சம்பாதிக்கும் பணத்தை உங்களுக்காகவே செலவழிப்பீர்கள்.

மகரம் :

உங்களது திறமையால் லாபத்தை பெருக்கிக் கொள்ளும் ஆற்றல் கொண்டவர் நீங்கள். எந்த தொழிலை செய்தாலும் நஷ்டம் அடைய மாட்டீர்கள். தர்மம் செய்ய அஞ்சமாட்டீர்கள். உங்களது செலவை குறைக்க முடியாது. மற்றவர்களுக்கு உதவி செய்வதிலேயே பாதி நேரம் செலவழியும். சாதாரண பண நடமாட்டம் இருக்கும்.

கும்பம் :

உங்களது வீட்டு செலவைக் கூட நீங்கள் புத்திசாலித்தனமாக குறைத்துவிடுவீர்கள். உங்களுக்கு நண்பர்களை விட எதிரிகளின் எண்ணிக்கையே அதிகமாக இருக்கும். உங்களுக்கு அசையும்-அசையா சொத்துக்கள் கிடைக்கும் யோகம் உள்ளது. எப்போதும் பண நடமாட்டம் இருக்கும் நபராகவே திகழ்வீர்கள். உங்களுக்கு 25 வயதில் இருந்தே யோகம் ஆரம்பிக்கிறது. 25, 28, 40, 45, 51 மற்றும் 63ஆம் வயதுகளில் உங்களுக்கு அதிக லாபம் கிடைக்கும். எனினும் சிறப்பான யோகம் ஏதும் உங்களுக்கு இல்லை. செலவை குறைக்க வாய்ப்பும் இல்லை. ஆனால், சொத்து சேரும் யோகம் உண்டு.

மீனம் :

உங்களது சுய முயற்சியாலேயே பணத்தை சம்பாதிப்பீர்கள். அதிர்ஷ்டத்தை நம்பி லொத்தர் மற்றும் தரகு வேலைகளில் ஈடுபட்டால் அதிக நஷ்டம் உண்டாகும். அப்படி இருந்தாலும் உங்களது வாழ்நாள் முழுவதும் பணம் குறையாது. பணம் தேவைப்பட்டால் உடனடியாக கிடைக்கும். பணம் உங்களுக்கு சாதாரணமான ஒன்று. நீங்கள் வாங்கும் இடங்களில் அதிக கஷ்டம் ஏற்பட வாய்ப்புண்டு. வியாபாரங்களில் ஏற்ற தாழ்வு நிகழும், அவதானம் தேவை.
- See more at: http://www.manithan.com/news/20170513127036?ref=youmaylike1#sthash.NVgx1W9m.dpuf

வசந்த் & கோ கடைகள் 22 ரூபாயில் ஆரம்பித்து இன்று 900 கோடி ரூபாய் வியாபாரம்

வீட்டு உபயோகப் பொருட்களை விற்பனை செய்யும் வசந்த் & கோ கடைகள் 64 கிளைகளோடு தமிழ்நாடு, கேரளா, பாண்டிசேரி உள்ளிட்ட மாநிலங்களில் இன்று வியாபாரத்தில் வெற்றி நடை போட்டு வருகிறது.
வசந்த் & கோவின் நிறுவனர் எச்.வசந்தகுமார் (67) இவர் கடந்த 1950ஆம் ஆண்டு தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்தில் பிறந்தார்.
பள்ளிப்படிப்பை வெற்றிகரமாக முடித்த வசந்தகுமார் பின்னர் தனது பட்டப்படிப்பை கல்லூரியில் படிக்காமல் அஞ்சல் வழியில் மேற்கொண்டார்.
படித்து கொண்டே விஜிபி நிறுவனத்தில் வீட்டு பொருட்கள் விற்பனையாளராக சேர்ந்த வசந்தகுமார் அங்கு எட்டு வருடங்கள் பணிபுரிந்தார்.
அங்கு வீட்டு பொருட்கள் வியாபாரத்தை பற்றிய அனைத்து விடயங்களையும் கற்று கொண்டதுடன், தனது வேலையை ராஜினாமா செய்தார்.
பின்னர், தனியாக தொழில் தொடங்க முடிவெடுத்து, நண்பரின் உதவியை நாடினார்.
ஆறு மாதத்தில் ரூ.8000 நண்பருக்கு தர வேண்டும் என்ற நிபந்தனையுடன் வசந்தகுமார் நண்பரின் கடையை வாங்கினார்.
1978ல் அந்த கடைக்கு வசந்த் & கோ என பெயர் வைத்தார். கடையின் முதல் பொருளை வாங்க கூட பணம் இல்லாமல் இருந்த அவருக்கு சென்னை தேனாம்பேட்டையை சேர்ந்த திருப் பக்தவச்சலம் என்னும் நபர் 22 ரூபாய் கொடுத்தார்.
70களில் 22 ரூபாய் என்பது மிக பெரிய பணமாகும்.
அதன் பின்னர் அயன் பாக்ஸ் போன்ற சிறிய பொருளில் விற்பனையை ஆரம்பித்த வசந்த் & கோ பின்னர் தொலைகாட்சி பெட்டி, வாட்டர் ஹீட்டர்ஸ், குளிர் சாதன பெட்டி, ரேடியோ, மின் விசிறி, மிக்சி போன்ற வீட்டு உபயோக பொருட்களை விற்பனை செய்ய ஆரம்பித்தது.
ஏதேனும் தடைகளைச் சந்திக்க நேர்ந்தால், திசையை மாற்றி முன்னேறிச் செல்ல வேண்டும். நீங்கள் முன்னேறிச் செல்ல செல்ல நிறைய அனுபவம் கிடைக்கும்.
சாம்சங், சோனி, எல்.ஜி, பேனசானிக் பிலிப்ஸ் போன்ற உலக தரம் வாய்ந்த நிறுவனங்களின் பொருட்களின் விற்பனை வசந்த் & கோவில் தொடங்கியது.
அதன் பின்னர் வசந்த் & கோவின் வியாபாரம் சூடு பிடிக்க இன்று தமிழகம், பாண்டிசேரி, கேரளா மாநிலங்களில் 64 கிளைகளுடன் இயங்கும் இந்நிறுவனத்தில் 1000 பேர் பணி புரிகிறார்கள்.
இன்று இந்த நிறுவனத்தின் விற்பனை 900 கோடியை தாண்டியுள்ளது.
குறைந்த வருவாய் ஈட்டுபவர்களும் எல்லா பொருட்களையும் வாங்க வேண்டும் என்பதற்காகவே தவணை முறையில் பணம் கட்ட சொல்லி பொருட்களை விற்கிறேன் - எச்.வசந்தகுமார்
ஒரு சமயம் மற்ற நிறுவனங்களின் பொருட்களை தவிர்த்து வசந்த் & கோ தயாரித்த மிக்ஸி, மின் விசிறி போன்றவற்றை வசந்தகுமார் தயாரித்தார்.
ஆனால் அது மக்களிடத்தில் வரவேற்பை பெறாத காரணத்தினால் அதை நிறுத்தி விட்டு மற்ற நிறுவனங்களின் பொருட்களை மட்டுமே வியாபாரம் செய்வதை அவர் தொடர்ந்தார்.
தமிழ்நாட்டின் நாங்குநேரி தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் எம்.எல்.ஏ-வாக இருக்கும் வசந்தகுமாருக்கு தனது வியாபாரத்தை இன்னும் விரிவுபடுத்த வேண்டும் என்பதே முக்கிய நோக்கமாக உள்ளது.

சிறுநீரக செயலிழப்பை சரிசெய்யும் மூக்கிரட்டை.


Monday, May 15, 2017

கைரேகை ஜோதிடத்தின் படி,பலமுறை காதல் மலர்ந்தவர்களை அறிவது எப்படி ?



ஒருவருக்கு காதல் ஒருமுறை தான் பூக்கும் என்பதெல்லாம் வெறும் பொய். சிலருக்கு காதல் பலமுறை பூக்கும். ஆனால் பலரும் அதை வெளிப்படையாக சொல்லிக் கொள்வதில்லை. கைரேகை ஜோதிடத்தின் படி, பலமுறை காதல் மலர்ந்தவர்களை எளிதில் கண்டறிய முடியும்.

நம் கையில் உள்ள சில ரேகைகள் ஒருவரது மோகத்தன்மை அல்லது கடலைப்போடும் குணத்தை வெளிக்காட்டும். கைரேகை ஜோதிடர்கள், ஒருவரது கை ரேகைகளைப் பார்த்தே இறந்த காலம், நிகழ் காலம் மற்றும் எதிர்காலத்தில் நடக்கப் போவதைக் கணித்துக் கூறுவார்கள். இப்படி கூறுகையில், சிலருக்கு நடக்காமல் இருந்தாலும், பலருக்கும் நடந்திருக்கும்.

இக்கட்டுரையில் கை ரேகைகளைக் கொண்டு ஒருவரது மோகத்தன்மையை எப்படி அறிவது என்பது குறித்து கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து உங்கள் துணை எப்பேற்பட்டவர் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
ஒருவரது கையில் உள்ள சுக்கிர மேட்டில் வலைப்பின்னல் போன்று அளவுக்கு அதிகமான ரேகைகள் இருந்தால், அத்தகையவர்கள் மற்றவர்களுடன் அளவுக்கு அதிகமாக கடலைப் போடக்கூடியவர்கள். அதாவது அத்தகையவர்களிடம் மோகத்தன்மை சற்று அதிகம் இருக்குமாம்.




கையில் உள்ள சுக்கிர மேட்டில் மச்சம் இருந்தால், அத்தகையவர்கள் தன் காதல் வாழ்க்கையை வெளிப்படையாக சொல்லாமல் மறைப்பார்களாம்.



இரண்டு கைகளிலும் உள்ள இதய ரேகைகள் செயின் போன்று பிணைந்திருந்தால், அவர்கள் அதிகமாக உணர்ச்சிவசப்படக்கூடியவர்கள் மற்றும் அத்தகையவர்களுக்கு நிறைய காதல் இருக்க வாய்ப்புள்ளதாம்.



சுண்டு விரலின் அடிப்பகுதிக்கும், இதய ரேகைக்கும் இடையே ஒன்றிற்கு மேற்பட்ட கோடுகள் இருந்தால், அத்தகையவர்களுக்கும் நிறைய காதல் மலர்ந்திருக்க வாய்ப்புள்ளதாம்.



சந்திர மேட்டில் இருந்து இரண்டு தலைவிதி ரேகைகள் ஆரம்பமானால், அத்தகையவர்கள் ஒரே நேரத்தில் இரண்டு உறவுகளை பிரச்சனைகளின்றி சமாளிக்கக்கூடியவர்களாம்.



சுண்டு விரலுக்கு கீழே மற்றும் இதய ரேகைக்கு மேலே நான்கு நீளமான மற்றும் மெல்லிய திருமண ரேகைகள் இருந்தால், அத்தகையவர்கள் மிகவும் ரொமான்டிக்கானவர்களாக இருப்பார்களாம்.




- See more at: http://www.manithan.com