Search This Blog

Tuesday, May 9, 2017

மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களே!.... உங்களின் பலம் மற்றும் பலவீனம்



மேஷம் :
மேஷ ராசிக்காரர்கள் இரண்டாம் இடத்தில் இருப்பது அவனது அல்லது அவளது குணமாக இருக்காது. முதலில் இருந்தே அனைத்தையும் பொறுப்பில் எடுத்து, தலைமை வகிக்க விரும்புவார்கள். இந்த அணுகுமுறை அவர்களை தைரியமுள்ளவர்களாகவும், சுதந்திரமானவர்களாகவும் மாற்றும். அதனால் வாழ்க்கையில் தாங்கள் எடுக்கும் முடிவுகளின் விளைவுகளைப் பற்றி அவர்கள் கவலை கொள்வதில்லை. புதுமை விரும்பியாக இருக்க விரும்பும் இவர்கள், அவர்கள் செய்யும் எதிலும் முதல் ஆளாக இருக்கவும் விரும்புவார்கள். நம்பிக்கை மிகுந்த குணம் உடையவர்கள் இவர்கள்.
ரிஷபம் :
அடக்கமானவர்களான ரிஷப ராசிக்காரர்கள் நம்பகத்தன்மையுள்ளவராக, திடமானவர்களாக, பொறுப்புடையவர்களாக, கடின உழைப்பாளியாக, உறுதியுள்ளவராக, பொறுமைசாலியாக மற்றும் உயர்ப்பண்புடையவராக இருப்பார்கள். காளையால் உருவமைப்படுத்தப்பட்டுள்ள ரிஷப ராசிக்கார்கள் அருமையான நண்பர்கள், காதலர்கள் மற்றும் உடல் வேலை செய்யும் பணியாளர்களைக் கொண்டிருப்பார்கள். ஆழமாக காலூன்றியவர்கள் என்பதால் இவர்கள் வாழ்க்கையை நடைமுறைக்குரிய யதார்த்தத்துடன் பார்ப்பார்கள். சிறந்த அறிவுரைகளை வழங்கும் இவர்கள் மற்றவர்கள் கூறுவதை எப்போதும் பொறுமையாக கேட்பார்கள். அதேப்போல் தேவைப்படும் நேரத்தில் உதவிக்கு வந்து நிற்பார்கள். மற்றவர்களை எப்போதும் கைவிட மாட்டார்கள்.
மிதுனம் :
ராசிகளுக்கு மத்தியில் தூதராக செயல்படுவது மிதுன ராசி. அந்த குணத்திற்கு ஏற்ப தொடர்பாற்றல் என்றால் இவர்கள் மிகவும் விரும்புவார்கள். வார்த்தைகளை பயன்படுத்துவதில் அவர்களுக்கென ஒரு வழி இருக்கும். அதேப்போல் முக்கியமான விஷயங்களை எப்போதும் பெறுவார்கள். கூடுதலாக, நகைச்சுவை உணர்வுடன், ஆற்றல் திறன் மிக்கவராக, வாழ்க்கையின் மீது ஆர்வமிக்கவராக இருப்பார்கள். அதேப்போல் பெற்ற அறிவுகளை பகிர்ந்து கொள்ள விரும்புவார்கள். புதிய ஆட்களை சந்திக்க அவர்கள் விரும்புவதால், இணங்கத்தக்க வகையில் இருப்பார்கள் அவர்கள். அனைவருடன் சுலபமாக பழகவும் செய்வார்கள்.
கடகம் :
கடக ராசிக்காரர்கள் தங்கள் மனதை கொண்டு யோசிப்பார்கள். அதனால் அவர்கள் விசுவாசமுள்ளவர்களாக, பாதுகாப்பளிப்பவர்களாக, அக்கறையுள்ளவர்களாக, வரவேற்கும் பண்புடையவர்களாக மற்றும் அனைத்து வகையான சூழ்நிலைகளுக்கு ஏற்ப மாறக்கூடியவர்களாக இருப்பார்கள். உங்கள் பக்கம் கடக ராசி நண்பர் பக்கபலமாக இருந்தால், நீங்கள் எதை பற்றியும் கவலை படத்தேவையில்லை. நீங்கள் சொகுசுடன் பாதுகாப்பாக இருப்பதை அவர்கள் உறுதி செய்வார்கள். இயற்கையாகவே ஊட்டமளிப்பவர்களாக இருப்பார்கள். அவர்கள் கையில் எடுக்கும் எந்த ஒரு செயல் திட்டத்திற்கும் கடின உழைப்பையும், முயற்சியையும் போடுவார்கள். மேலும் தங்கள் நண்பர்களுக்கு உதவி செய்வதில் இருந்து அவர்கள் பின் வாங்க மாட்டார்கள்.
சிம்மம் :
காட்டின் ராஜாவான இவர்கள் மனதளவில் மென்மையானவர்களாக இருப்பார்கள். இவர்களைப் பற்றி குறிப்பிட வேண்டுமானால் நம்பிக்கை, லட்சியம், நற்பண்பு, விசுவாசம் மற்றும் ஊக்குவிக்கும் பண்பு என சிலவற்றை சொல்லலாம். தங்கள் நண்பர்களுக்கு விசுவாசமாக இருக்கும் இவர்கள், தேவைப்படும் பட்சத்தில் அவர்களை காப்பார்கள். சிம்ம ராசிக்காரர்கள் காரியத்தை சிறப்பாக செய்ய அனைவரையும் ஊக்கப்படுத்துவார்கள். ஆதரவளிக்கும் குணத்தை கொண்ட இவர்கள் இயற்கையாகவே புதிரானவர்கள்.
கன்னி :
கன்னி ராசிக்காரர்கள் முடிவெடுக்க முடியாதவர்கள் என்பதால் பல நேரங்களில் அவர்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றனர். ஆனால் பிரகாசமான பக்கத்தை பார்க்கும் போது, குறிப்பிட்ட சில விஷயத்தைப் பற்றி அவர்கள் சமாதானமாகாத உண்மையை வெளிக்காட்டுகிறது. பகுப்பாய்வுடன் இருக்கும் இவர்கள், ஒரு விஷயத்தின் ஆணி வேர் வரை செல்வார்கள். அவர்களின் கூர்நோக்குகள் மிக ஆழமாக இருப்பதால், அவர்கள் எப்போதுமே நம்பகமான தகவலையே அளிப்பார்கள்.
துலாம் :
அமைதியை விரும்பும் துலாம் ராசிக்காரர்கள், அனைவரும் சௌகரியமாக, நன்றாக ஒத்துப்போகிறார்களாக என்பதை எப்போதுமே உறுதி செய்வார்கள். அனைவரும் ஒன்றாக மகிழ்ந்திட வேண்டும் என விரும்பும் இவர்கள், அதற்காக உபசரணையுள்ள சூழ்நிலையை உருவாக்குவார்கள். இயற்கையாகவே இராஜதந்திரத்துடன் இருக்கும் இவர்கள், எந்த ஒரு கூட்டமாக இருந்தாலும் சரி, சுலபமாக ஒன்றி, நண்பர்களைப் பெற்று விடுவார்கள். உயர்ந்த கொள்கைகள், வாழ்க்கையில் லேசான விஷயங்களுக்கு கூட சிறந்த சுவையைக் கொண்டிருக்கும் இவர்கள் வசீகரமானவர்கள். அனைவரையும் கனிவுடன் வரவேற்பார்கள். கனிவுடன் நற்பண்புகளை கொண்டவர்கள் இவர்கள்.
விருச்சிகம் :
விருச்சிக ராசிக்காரர்கள் கூர்ந்து நோக்கக்கூடியவர்கள். மேலும் ஒருவரைப் புகழ்ந்து, மோசம் செய்து தகவலை பெறக்கூடிய வல்லமையை கொண்டவர்கள். ஆழமான உள்ளுணர்வுடன், எந்த ஒரு விளக்கமும் இன்றி, ஒரு சூழ்நிலை அல்லது பிரச்சனையை அவர்கள் சுலபமாக புரிந்து கொள்வார்கள். சமயோஜித புத்தியுள்ள இவர்கள் தங்கள் வேலையை எப்படியும் வாங்கி விடுவார்கள். கூர்ந்து கவனிப்பதால் அடுத்தவர்களை சரியாக மதிப்பிடுவார்கள். விசுவாசமான நண்பர்கள் மற்றும் சிறந்த காதலர்களை இவர்கள் பெறுவார்கள்.
தனுசு
மிகுந்த நம்பிக்கை மிகுந்தவர்களான தனுசு ராசிக்காரர்கள், எப்போதுமே புதிய துணிகரமான செயல்களைத் தேடி செல்வார்கள். தங்களின் சுதந்திரம் மற்றும் சார்பற்ற தன்மையை அவர்கள் மதிப்பார்கள். அதேப்போல் ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட இடம் தேவை என்பதை அவர்கள் புரிந்து வைத்திருப்பார்கள். இவர்களின் நம்பிக்கை குணம், புதிய அனுபவங்கள் மற்றும் கண்டுபிடிப்புகளைத் தேடச் செய்யும். இவர்களின் படைப்பாற்றல் பக்கம் தொற்று தன்மை மிக்கவை.
மகரம் :
கடின உழைப்பாளியான மகர ராசிக்காரர்கள், தங்களின் வேலை மண்டலத்தில் வைராக்கியம் மிக்கவர்களாகவும், தலைமை குணம் கொண்டவர்களாகவும் இருப்பார்கள். தாங்கள் செய்வதை திறம்பட செய்யும் அவர்கள், தோல்விகளுக்கான பொறுப்பை எடுத்துக் கொள்ள பயப்பட மாட்டார்கள். ஒரு பிரச்சனைக்கு பொறுப்பெடுத்து அதனை தீர்க்க முற்படுவார்கள். விடை கிடைக்கும் வரை இவர்களுக்கு ஓய்வு கிடையாது. இலட்சியவாதிகளாக இருந்தாலும் கூட பொறுமைசாலிகள் இவர்கள். தொழில் ரீதியான மைல்கற்களை தொழில் ரீதியான வழியிலேயே அடைவார்கள். நண்பர்கள் மற்றும் குடும்பத்திற்கு விசுவாசமாக இருக்கும் இவர்கள், இயற்கையாகவே சமயோஜித மற்றும் நடைமுறை புத்தியுள்ளவர்கள்.
கும்பம் :
பல்வேறு விஷயங்களில் ஒரே நேரத்தில் ஈடுபட்டு மகிழ்வதை விரும்புவார்கள் கும்ப ராசிக்காரர்கள். நீங்கள் ஏதேனும் புதிதாக பரிந்துரைத்தால், அதனை உடனடியாக எடுத்துக் கொள்வார்கள். நகைச்சுவை உணர்வு மற்றும் தகவமைப்பு பண்புடையவர்கள் இவர்கள். மற்றவர்களின் விஷயத்தில் தலையிடுவதை இவர்கள் வெறுப்பார்கள். அதை தான் இவர்கள் தங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தாரிடமும் எதிர்ப்பார்ப்பார்கள். வாழ்க்கையை புத்திசாலித்தனமாக அணுகும் இவர்கள் இம்மைக்குரிய விஷயங்களை புதுமையுடன் அணுகுவார்கள்.
மீனம் :
மீன ராசிக்காரர்கள் அதிக உணர்சியுடையவர்கள். தங்களைச் சுற்றியுள்ள சந்தோஷம் மற்றும் சோகத்தை வைத்தே அனைத்தையும் புரிந்து கொள்வார்கள். மற்றவர்களின் உணர்வுகளை அனுதாபத்தோடு பார்ப்பார்கள். இவர்களின் நண்பர்கள் சோகமாக இருந்தால், இவர்களும் சோகமாக இருப்பார்கள். சுருக்கமாக சொல்ல வேண்டுமானால், இரக்க குணமுள்ளவர்கள் இவர்கள். தாங்கள் விரும்பும் காரணம் மற்றும் நபர்களுக்காக அவர்கள் அர்ப்பணிப்புடன் இருப்பார்கள். இவர்களின் கற்பனை உயர பறக்கும். அதனால் புத்திசாலித்தனமான விளைவுகளையும் அளிக்கும். எந்த ஒரு சூழ்நிலைக்கும் ஏற்ப இவர்கள் நடப்பதால், அனைவரிடமும் சுலபமாக பழகுவார்கள்.
- See more at: http://www.manithan.com/news/20170430126759?ref=youmaylike3#sthash.gnQBt0Qx.dpuf

இரண்டு திருமணம் அமையும் ராசி எது? அவர்­களின் ஜாதக நிலை எப்படி இருக்கும்?

திரு­மணம் எனும் இனிய பந்தமான இல்­ல­ற வாழ்க்கையில் எந்த ராசிக்காரர்களுக்கு இரண்டு திருமணம் அமையும் என்பதை பற்றி பார்ப்போம்.
இரண்டு திருமணம் அமையும் ராசி எது?
ஜாதக நிலையில் குடும்­பஸ்­தானம் மற்றும் களத்தி­ரஸ்­தானம் எனும் இரண்டு நிலைகளும், மிகவும் முக்­கி­ய­மான நிலை­களைப் பெறு­கின்­றது.
இவற்றில் அமையும் ஸ்தானங்­களின் கிரகத்தன்மை பல வகை­யில் தம்பதியர்களின் குடும்ப வாழ்வில் குழப்ப நிலைகளை கொடுத்து விடு­கின்­றது.
எனவே இதனால் ஜாதக கிரக நிலையில் குடும்ப களத்­தி­ரஸ்­கா­ரகன் என்று அமை­கின்ற கிர­கங்­களின் தன்­மை­களும், அதன் செயல்­பா­டு­களும் மிகவும் முக்­கி­ய­மா­னதாகும்.
துலாம்
துலாம் ராசியில் பிறந்த பல­ருக்கு இரண்டு தாரப்­பலன் அமையும் நிலை ஏற்­ப­டு­கின்­றது. இது ஜோதிட நூல்­க­ளிலும் கூறப்­பட்டு இருக்­கின்ற விஷயமாகும்.
இதற்கு சந்­திர சுக்­கிர சேர்க்கை தான் உரிய காரணமாக ஆய்வு ஒன்றை மேற்கொண்ட போது தெரியவந்துள்ளது.
துலாம் ராசிக்கு அடுத்த ராசி விருச்­சிகம் ராசி­யி­லேயே சந்­திரன் நீச­பங்கம் பெறு­கின்ற நிலையும், துலா ராசிக்கு சுகபோகஸ் ­தா­ன­மான கன்னி ராசியில் சுக்­கிரன் நீச­பங்கம் பெறுவதும் இந்த இரண்டு மனைவி அமையும் நிலைக்கு கார­ண­மா­கின்­றது.
சித்­திரை, சுவாதி, விசாகம் எனும் நட்­சத்­தி­ரங்­களின் அதி­பதிக் கிர­க­மான செவ்வாய், ராகு, குரு என்­கின்ற கிரகச் சேர்க்கையும் இதற்கு கார­ண­மா­கின்­றது.
எனவே துலாம் ராசிக்காரர்களுக்கு இரண்டு மனைவிகள் அமையும் பலன் எனும் நிலை அமை­கின்­றது.
ஆனால் இது முழு­தாக அனைத்து துலாம் ராசிக்கும் அமை­யாது. மேற்­கூ­றிய குடும்ப களத்­திர நிலை கிர­கங்­களின் சேர்க்­கையும் இதற்கு முக்­கிய கார­ணமாக இருந்தால் மட்டுமே இரண்டு தார பலன்கள் அமையும்.
இரண்டு திருமணம் அமையும் ராசிக்காரரின் ஜாதக நிலை எப்படி இருக்கும்?
ஒரு­வரின் ஜாத­கத்­தில் களத்­திரம் எனும் 7 ஆம் இடம் சூரியன், சனி, செவ்வாய், சுக்­கிரன் போன்ற கிரகங்­க­ளின் நிலையில் அமை­வதும், களத்­தி­ரஸ்­தான நிலைக்கு உரிய கிரகம் நீச­பங்க நிலை பெற்றாலும், அது இரண்டு தாரப் பலனைக் கொடுக்கும்.
அதேபோல சூரியன், செவ்வாய் சேர்க்கை, சுக்­கிரன், குரு சேர்க்கை என்று ஜாதகத்தில் அமையும் நிலையும் கூட இரண்டு தார பலனை கொடுக்கும்.
சுக்­கி­ரனும் சனியும் சேர்க்கை பெற்று அமைந்­தாலோ அல்­லது பார்வை பெற்­றாலோ பெண்­களால் தொல்லை அவமானம் ஏற்­பட்டு, கணவன், மனைவி மனக் கசப்­புகள் அமையும்.
சூரியன், செவ்வாய் சேர்க்­கையும் தம்பதிகளுக்கிடையே மனஸ்­தாபம் பிரி­வு­களைக் கொடுக்கும். சுக்­கிரன், சந்­திரன் சேர்க்கை குடும்ப வாழ்வில் குழப்­பத்தை ஏற்படுத்தும்.
ஜாதகத்தில் கேது, ராகு, சனி, சுக்­கிரன், சூரியன், செவ்வாய் போன்ற கிர­கங்­களின் தொடர்புடைய ஒரு சில நட்சத்திரங்கள் இரண்டு தாரப் பலன் பெறு­கின்ற நிலை அதிகம் உள்ளது.
எனவே மூலம், மகம், சுவாதி, சித்­திரை, கார்த்­திகை, பூசம், பூரம், ஆயி­லியம், ரோகினி போன்ற நட்­சத்­திரம் கொண்ட ஆண், பெண் இரு­பா­லாரும் அவர்­களின் ஜாதக நிலையை நன்கு ஆராய்ந்து செயற்­பட வேண்­டி­யது மிக முக்­கி­ய­மாகும்.
ஆண் ஜாதக அமைப்பில் களத்­தி­ர­கா­ரக கிரகம் 3 ஆம் இடம் அமைந்து இருப்­பதும் குடும்பஸ்­தான அதி­பதி பலவீனமடைந்து இருப்­பதும் முதல்­ தார மனை­வியின் சகோதரியே இரண்­டாம்­ தார மனை­வி­யாக அமையும் நிலை ஏற்­படும்.

A step closer to LIMITLESS energy

UK's latest nuclear fusion reactor could supply the grid with clean power by 2030
The heart of the Tokamak ST40 reactor will reach 100 million centigrade in 2018
Temperature could trigger nuclear fusion and release huge amounts of energy
And by 2030, the reactor will provide clean energy to the UK's national grid
Britain's newest fusion reactor has been fired up and taken the world one step further towards generating electricity from the power of the stars.
The heart of the Tokamak ST40 reactor - a super-hot cloud of electrically charged gas, or plasma - is expected to reach a temperature of 100 million centigrade next year.
That is how hot it needs to be to trigger fusion, the joining together of atomic nuclei accompanied by an enormous release of energy.
And by 2030, the reactor will provide clean energy to the UK's national grid, according to its creators Tokamak Energy.
Fusion involves placing hydrogen atoms under high heat and pressure until they fuse into helium atoms.
The same process enables stars to shine and in a less controlled way provides the destructive force of H-bombs.
Tokamak Energy, a private company pioneering fusion power in the UK, built the new reactor at Milton Park, Oxfordshire.
It is Tokamak Energy's third upgraded reactor and represents the latest step in a five-stage plan to bring fusion power to the national grid by 2030.
Fusion power holds out the promise of almost unlimited supplies of clean energy. It uses special forms of hydrogen as fuel, produces no greenhouse gases, and the only waste product is helium.
But harnessing and raining in the mighty forces involved is a daunting challenge.
The plasma, which at 100m C is seven times hotter than the centre of the sun, has to be contained in a doughnut-shaped 'magnetic bottle'.
The tokamak is the most developed magnetic confinement system and is the basis for designing fusion reactors.
Plasma is contained in a vacuum vessel, which is then heated by driving a current through it.
Combining two sets of magnetic coils creates a field in both vertical and horizontal directions, acting as a magnetic 'cage' to hold and shape the plasma.
The heating provided by the current plasma supplies a third of the 100 million°C temperature required to make fusion occur.
Additional plasma heating is provided when neutral hydrogen atoms are injected at high speed into the plasma, which is ionized and trapped by the magnetic field. As slowed down, they transfer their energy to the plasma and heat it.
High-frequency currents are also induced in the plasma by external coils.
The frequencies are chosen to match regions where the energy absorption is very high.
This way, large amounts of power may be transferred to the plasma.
Some way has also got to be found to turn the energy of fast-moving elementary particles into electricity.
Speaking after the ST40 reactor was officially turned on and achieved 'first plasma', Tokamak Energy chief executive Dr David Kingham said: 'Today is an important day for fusion energy development in the UK, and the world.
'We are unveiling the first world-class controlled fusion device to have been designed, built and operated by a private venture.
'The ST40 is a machine that will show fusion temperatures - 100 million degrees - are possible in compact, cost-effective reactors.
This will allow fusion power to be achieved in years, not decades.'
He said the project, now halfway to the goal of fusion energy, still needed 'significant investment'.
To date, the company has raised £20 million from private contributors.
Dr Kingham added: 'Our approach continues to be to break the journey down into a series of engineering challenges, raising additional investment to reach each new milestone.'



https://www.techpowerup.com/…/uks-latest-nuclear-fusion-re…/

Monday, May 8, 2017

எகிப்தும் பிரமிடுகளும் மர்மங்கள்

மர்மங்கள் என்று எடுத்துக்கொண்டால் இவ்வுலகம் முழுவதும் விதவிதமாக கொட்டிக்கிடக்கும். பல மர்மங்களில் ஒரு சில காலப்போக்கில் விடை காணப்பட்டிருக்கின்றன.
எகிப்தும் பிரமிடுகளும் எகிப்தின் பிரமிடுகளைப்பற்றி நம்மில் சிலபேர் முன்னரும் பலபேர் மம்மி பார்ட்-1 மற்றும் பார்ட்-2 திரைப்படங்கள் பார்த்த பின்னரும் அறிந்திருப்போம். பிரமிடுகள் என்றாலே இன்றளவும் ஒரு மலைப்பும் ஆச்சர்யமும் உண்டாவது நிச்சயமாய் அவற்றின் தனிச்சிறப்பே.
’பிரமிடு’ என்றால் பலரும் சொல்வது, ”அது எகிப்தில் இருக்கும் ஒரு கட்டிடம். அதில் அக்காலத்தில் இறந்த மன்னர் போன்றவவர்களின் சடலத்தைப் பாதுகாப்பாக வைத்திருக்கிறார்கள். ‘மம்மி’ என்றழைக்கப்படும் அவற்றின் உடல்கள் இன்னமும் கெடாமல் இருக்கின்றன. அது தவிர பல்வேறு புதையல்களும் அங்கே இருக்கக்கூடும்” என்பதுதான். ஆனால் இவை மட்டும் தான் பிரமிடா? இன்று உலகில் பல நாடுகளில் பிரமிட்கள் உள்ளன. அந்த பிரமிட்களை பற்றியும் பார்க்கலாம்.






எகிப்து நாட்டில் காணப்படும் பிரமிடுகள் கற்களால் கட்டப்பட்ட
பிரம்மாண்டங்கள். 2008ம் ஆண்டு வரையிலும் கிட்டத்தட்ட 138 பிரமிடுகள்
கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன. பிரமிடுகளுக்குப் பின்னாலான மர்மங்கள் கணக்கிலடங்காதவை. பிரமிட்கள் சாதாரண மக்களை மட்டுமல்ல, பொறியியல் வல்லுநர்களையும் வியக்க வைக்கும் அமைப்புகள். ஒரிஜினல் ஏழு உலக அதிசயங்களில், இன்று நாம் காணக் கிடைக்கும் ஒரே அதிசயம் பிரமிட்கள்தாம். கிங் குஃபு வின் பிரமிடு என்றும் இது அழைக்கப்படுகிறது.
இதுவரை கண்டறியப்பட்ட எகிப்து பிரமிடுகளிலேயே இதுதான் மிகப்பெரிய அளவிலானது. இதன் உயரம் 146 மீட்டர் (கிட்டத்தட்ட 500அடி). கிட்டத்தட்ட 4600 வருடங்களுக்கு முன்னர் இது கட்டப்பட்டதாக கணக்கிடப்பட்டிருக்கிறது. இதில் ஒரு சுவாரசியம் என்னவென்றால் முதன் முதலில் கட்டப்பட்டது கிரேட் பிரமிடு அல்ல. கிங் குஃபு வின் தந்தை கிங் ஸ்நெஃப்ருவினால் கட்டப்பட்ட ஸ்டெப் பிரமிடுதான் முதன் முதலில் கட்டப்பட்ட பிரமிடாகும். கிரேட் பிரமிடு 2.3 மில்லியன் எண்ணிக்கையிலான கற்களால் கட்டப்பட்டிருக்கிறது. இவற்றின் மொத்த எடை 5.9 மில்லியன் டன்கள்.கிஸா (Giza) நகரில் இருக்கும் பெரிய பிரமிட் சுமார் 476 அடி உயரமானது, 13.6 ஏக்கர் நிலப் பரப்பு கொண்டது 5,90,712 கற்கள் பயன்படுத்தப்பட்டிருப்பதாகக் கம்ப்யூட்டர் கணக்கீடுகள் சொல்கின்றன. கற்களின் எடை ஒவ்வொன்றும் இரண்டில் இருந்து முப்பது டன் வரை. இதில் முக்கியமான விஷயம்
என்னவென்றால் இந்தப் பிரமிடுகளைச் சுற்றி எந்தவிதமான மலைகளோ, பாறைகளோ, கற்குன்றுகளோ கிடையாது. நகரத்தின் அருகில் மட்டுமல்ல,
தொலைவிலும் கூட இல்லை. ஒரு புறம் பாலைவனமும், மறுபுறம் கடலும் தான் இந்நகரைச் சுற்றி உள்ளது. அப்படியானால் இந்தப் பிரமிடை எப்படி உருவாக்கியிருப்பார்கள், இத்தனை லட்சம் கற்களை எங்கிருந்து கொண்டு வந்திருப்பார்கள், இவ்வளவு பெரிய உயரத்திற்கு அவற்றை எப்படி எழுப்பியிருப்பார்கள் என்றுதான் வரலாற்றாய்வாளர்களும், விஞ்ஞானிகளும் ஆராய்ந்து கொண்டிருக்கின்றனர். மேலும் இந்த அளவுக்கு அருகில்
பூமியில் எங்காவது கற்களைத் தோண்டி எடுத்து இவற்றைக் கட்டியிருப்பார்கள் என்று வைத்துக் கொண்டால் கூட, அவ்வாறு தோண்டி எடுத்த இடங்களில் மிகப் பெரிய பள்ளங்கள் ஏற்பட்டிருக்க வேண்டும்.
ஆனால் பலமைல் சுற்றளவிற்கு அப்படி எந்த ஒரு பெரிய பள்ளமும் இல்லை. ஆகவே எப்படி இவற்றை உருவாக்கியிருப்பார்கள் என்று இன்னமும் விஞ்ஞானிகள் மண்டையை உடைத்துக் கொண்டுதான் உள்ளனர். உச்சியை எட்டும்போது கற்களை 400 அடிகளுக்கு மேல் தூக்கிக் கொண்டு போயிருக்க வேண்டுமே? அவர்களிடம் கிரேன் மாதிரி எந்திரம் இருந்ததா? ஒரு லட்சம் தொழிலாளிகள் இருபது வருடம் பணியாற்றியிருந்தால் மட்டுமே பெரிய பிரமிட் உருவாகியிருக்கும் என்பது கட்டடக் கலை வல்லுநர்கள் கணிப்பு. மிஸிரினஸ் பிரமிடில் உபயோகித்திருக்கும் ஒரேயொரு கல்லின் எடை மட்டும் 285 டன் என்பதும், இவ்வளவு எடையுள்ள கல்லை எப்படி கையாண்டிருப்பார்கள் என்பதும் ஆராயமுடியாத மர்மமாகவே நீடிக்கிறது.
பிரான்ஸ் நாட்டின் மாவீரராக இருந்த நெப்போலியன் இந்தப் பிரமிடுகளில் என்னதான் இருக்கிறது என்று பார்க்க ஆர்வம் கொண்டார். தனி ஆளாக ஓரிரவு முழுக்க இந்தப் பிரமிடில் தங்கினார். மறுநாள் காலை வெளிவந்த அவர், பிரமிப்பின் உச்சியில் இருந்தார். பிரமிடின் பல்வேறு ரகசியங்களைத் தெரிந்து கொண்டிருந்த அவர், அவற்றை முழுமையாக வெளியிடவில்லை. ”நான் சொல்வதை யாரும் நம்ப மாட்டார்கள்” என்ற கருத்தை மட்டும்
தெரிவித்தார்.
பிரமிட் என்றால் கூம்பு வடிவம். அடிப்பகுதி நீண்ட சதுரமாக இருக்கும். நான்கு சரிவான முக்கோணப் பகுதிகள் உச்சியில் ஒன்றாக இணையும். இந்தப் பிரமிட்களுக்குள் ராஜா ராணிகள், விஐபிகள் ஆகியோரின் உடல்கள் அவர்கள் மறைவுக்குப்பின் மம்மிகளாக, உடல் கெடாதவாறு பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இந்த உடல்கள் கெட்டுப் போகாமல் இருக்கின்றன. பிரமிட்களின் கூம்பு வடிவம் இதற்குக் காரணம் என்று விஞ்ஞானிகள் சொல்கிறார்கள்.
பிரமிட்கள் எல்லாமே ஏன் கூம்பு வடிவில் மட்டுமே கட்டப்பட்டுள்ளன? வீடுகளை சாதாரணமாக, சதுர, செவ்வக வடிவங்களில் கட்டியவர்கள், பிரமிட்களை மட்டும் கூம்பு வடிவம் ஆக்கியது ஏன்?
ஆராய்ச்சியாளர்கள், பல ஆண்டுகள் செய்த பரிசோதனைகளின் அடிப்படையில் தரும் விளக்கங்கள் நம்மை பிரமிக்க வைக்கின்றன.
பிரமிட் வடிவ அறைக்குள் காய்கறிகள், பழங்களை வைத்தால், மற்ற அறைகளில் வைக்கப்பட்ட காய்கறிகள், பழங்களைவிட அதிக நாட்கள் கெடாமல் இருகின்றன.
பிரமிட் வடிவக் கட்டங்களில் தூங்குபவர்களுக்கு, சாதாரண அறைகளில் தூங்குபவர்களைவிட, அதிகம் புத்துணர்ச்சி கிடைக்கிறது.
பிரான்ஸ் நாட்டு விஞ்ஞானிகள் இறந்த ஒரு பூனையின் உடலை, மரத்தால் செய்த பிரமிட் வடிவப் பெட்டிக்குள் வைத்தார்கள். பல நாட்கள் ஆன பின்னும் இந்த உடல் கெட்டுப் போகவில்லை.
பிரமிட் வடிவ அறைக்குள் இருக்கும் இரும்புப் பொருட்கள் எளிதாகத் துருப் பிடிப்பதில்லை.
இப்படி ஆச்சரியமான கண்டுபிடிப்புகள்!
கூம்பு வடிவ அமைப்பு, சுற்றுப்புறத்திலிருந்து ஒரு வித மின்காந்த ஆற்றலை உள் வாங்குகிறது. பிரமிடின் உச்சிப்பகுதி, அந்த ஆற்றலை, பிரமிடின் உள்பகுதியில் ஒரே சீராகப் பரவ வைக்கிறது. இதுதான் ரகசியம் என்கிறார்கள்.
இது முழுமையான விளக்கமா? சரி என்று ஒத்துக்கொண்டாலும், பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால், எகிப்தியர்களுக்கு இந்த விஞ்ஞான உண்மை எப்படித் தெரிந்தது, புரிந்தது?
பிரமிடு போலவே இன்னுமொரு தீராத மர்மம் அதன் முன்னால் இருக்கும் ஸ்பிங்க்ஸ் சிற்பம். மிகப்பிரமாண்டமான அளவில் கட்டப்பட்டிருக்கும் இந்த சிற்பம் கிரேட் பிரமிடை பாதுகாக்கத்தான் கட்டப்பட்டிருக்கிறது என்ற வாதங்களையும் தாண்டி காலச்சிதைவுகளுடன் அமர்ந்திருக்கிறது.
ஸ்பிங்க்ஸ் பிரமிடைப் போன்ற ஓர் பிரமிடு உருவச்சிலை செவ்வாய்க்
கிரக பிரமிடுகளுக்கு அருகே காணப்படுவதாகக் கூறியிருக்கின்றனர். அவர்கள், செவ்வாய்க் கிரகத்தில் சைடோனிக் எனக் குறிக்கப்படும்
ஒரு பகுதியில் காணப்படும் பிரமிடு போன்ற அமைப்புகளுக்கும், எகிப்தின்
பிரமிடுகளுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கக் கூடும் என்றும் கருதுகின்றனர்.
சில ஆராய்ச்சியாளர்கள் கிரேட் பிரமிடு நாலு லட்சம் மனிதர்களை கொண்டு சுமார் 20 ஆண்டுகள் கட்டப்பட்டிருக்கும் என்று கணக்கிட்டிருக்கிறார்கள். (சிலர் பிரமிடுகளை கட்டியது மனித சக்தியே அல்ல… நிச்சயமாய் ஏதோவொரு சூப்பர் பவரோ... இல்லை... வேற்றுக்கிரகவாசிகளோதான் கட்டியிருக்கவேண்டும் என்றும் வாதிக்கின்றனர். ஏனென்றால் 20ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில்கூட மனிதர்களால் கிரேட் பிரமிடு போன்ற ஒன்றை உருவாக்குவது சாத்தியமில்லாதபோது 5000 வருடங்களுக்கு முன் இது எப்படி மனித சக்தியால் கட்டப்பட்டிருக்கும் என்ற கேள்வியும் வாதத்திற்கு வலு சேர்ப்பதாய்த்தான் இருக்கிறது)
உலகில் கட்டப்பட்ட பிரமிடுக்களில், அடிப்படையில் மிகப் பெரியது
மெக்சிக்கோவில் உள்ள சோலுலாவின் பெரிய பிரமிடு ஆகும். இப் பிரமிடு இன்னும் தொல்பொருள் ஆராய்ச்சியில் அகழப்பட்டு வருகின்றது.
பிரமிடு வடிவிலான கட்டிடங்கள் எகிப்தியர், மாயன், சுமேரியர் உள்ளிட்ட பல பழமையான நாகரிக மக்களால் அமைக்கப்பட்டன.
பாரிசில் உள்ள லூவர் அருங்காட்சியகம் முன்பாகக் கண்ணாடியாலான பிரமிடு அமைக்கப்பட்டுள்ளது.
மெசபடோமியர்கள், சிக்குரத்கள் எனப்பட்ட பழமையான நாகரிக மக்கள் துவக்க கால பிரமிடுகளை முதன்முதலாகக் கட்டினர். இவை சூரிய வெப்பத்தில் உலர்ந்த செங்கற்களைப் பயன்படுத்திக் கட்டப்பட்டமையால் அனைத்தும் அழிந்துபோயின. இத்தகைய சிக்குரத்களை சுமேரியர்கள், பாபேலியர்கள், ஈலாமியர்கள், அக்காடியர்கள், மற்றும் அசிரியர்கள் அவரவர் பகுதிகளில் பல பிரமிடுகளை கட்டினர்.
சூடான்
பிரமிடுகள் எகிப்துடனேயே அடையாளப்படுத்தப் பட்டாலும் உலகின் மிகக்
கூடுதலான பிரமிடுகளை கொண்ட நாடாகச் சூடான் விளங்குகிறது. இங்கு 220 பிரமிடுகள் இன்றும் உள்ளன. நுபியர்கள் சூடானின் மூன்றிடங்களில் இந்த 220 பிரமிடுகளை அமைத்துள்ளனர். நாப்பட்டா மற்றும் மெரோ
அரசர்/அரசிகளின் கல்லறைக் கட்டிடங்களாக இவற்றைக் கட்டினர். இவை எகிப்திய பிரமிடுகளிலிருந்து மாறுபட்டுள்ளன. அவற்றைவிட நுபியப் பிரமிட்கள் செங்குத்தான கோணங்களில் அமைக்கப்பட்டுள்ளன.
சூடானில் கிமு 300 வரை பிரமிடுகள் கட்டப்பட்டு வந்தன.
நுபியப் பிரமிட்கள்
நைஜீரியா
அபுஜாவில் சுடெ பிரமிடுகளை அங்கு வாழ்ந்த குபோ நாகரிகத்தின் கூறாகக்
காணலாம். களிமண்ணால் கட்டப்பட்ட பத்து பிரமிடுகள் இங்குள்ளன. முதல் கட்ட அடிப்பகுதி 60 அடி சுற்றளவையும் 3 அடி உயரத்தையும் கொண்டுள்ளது.
அடுத்தப்படியில் 45 அடி சுற்றளவில் கட்டப்பட்டுள்ளது. இவ்வாறான அடுக்குகள் வட்டவடிவ ஒன்றன்மேல் ஒன்றாக மேல்வரை கட்டப்பட்டுள்ளன. இவை கடவுளரின் இருப்பிடமாகவும் சிகரத்தில் அவர்கள் வசிப்பதாகவும் நம்பப்பட்டது. இதன் அடையாளமாக ஒரு கம்பு அங்கு நடப்பட்டிருந்தது. இவை ஐந்து குழுக்களாக ஒன்றுக்கொன்று இணையாகக் கட்டப்பட்டன.
இவை களிமண்ணால் கட்டப்பட்டமையால் அவ்வப்போது மீளுருவாக்கம் செய்ய வேண்டியிருந்தது.
சுடெ பிரமிடு
கிரீஸ்
கிமு இரண்டாம் நூற்றாண்டின் புவியியலாளர் பவுசானியாசு பிரமிடுகளை ஒத்த இரு கட்டிடங்களைக் குறிப்பிடுகிறார்; இவற்றில் ஒன்று ஹெலனிக்கோன் நகரிலிருந்து 19 கிமீ தொலைவில் தென்மேற்கே
இருந்ததாகவும் அர்கோசு ஆட்சிக்காகப் போராடிய போர்வீரர்களின் நினைவாக இவை கட்டப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார். இவை இரண்டுமே பிரமிடுகளை ஒத்து இருந்ததற்கான எந்தவொரு சான்றும் இதுவரை
கிடைக்கப்பெறவில்லை.
பவுசானியாசு பிரமிடு
இந்தியா
சோழர்கள் காலத்தில் தென்னிந்தியாவில் கருங்கற்களால் கட்டப்பட்ட பிரமிடு வடிவ கோபுரங்களுடன் கூடிய பல பெரும் கோவில்கள் இன்றும் சமயப் பயன்பாட்டில் உள்ளன. தஞ்சைப் பிரகதீசுவரர் கோயில், கங்கைகொண்ட சோழபுரம் மற்றும் தாராசுரத்தில் உள்ள ஐராவதேஸ்வரர் கோயில் தமிழ்நாட்டின் ஸ்ரீரங்கம் வட்டத்திலுள்ள அரங்கநாதசுவாமி கோயில் ஆகியன இவற்றில் சிலவாம். 11ஆம் நூற்றாண்டில் இராஜராஜ சோழன் கட்டிய தஞ்சை பிரகதீசுவரர் கோவில் யுனெசுகோவால் உலகப் பாரம்பரியக் களமாக 1987இல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் விரிவாக்கமாக 2004ஆம் ஆண்டு கங்கைகொண்ட சோழபுரம் கோயிலும் தாராசுரம் கோயிலும் இணைக்கப்பட்டன.
தஞ்சைப் பிரகதீசுவரர் கோயில்
இந்தோனேசியா
இந்தோனேசியாவின் ஆஸ்த்ரேலேசிய பாறைக் கட்டமைப்பு பண்பாட்டில் குத்துக்கல், கல் மேடைகள், கற்சிலைகளுக்கு அடுத்ததாகப்
புந்தென் பெருந்தக் எனப்பட்ட மண்,கற்களாலான அடுக்கு பிரமிடு
கட்டமைப்புகள் இருந்தன. இவை மேற்கு சாவாவின் குனுங் படாங் பகுதியிலும் சிசுலோக் பங்குயங்கன் பகுதிகளிலும் காண்டறியப்பட்டன. மலைகளிலும் உயர்ந்த இடங்களிலும் மூதாதையரின் ஆவி வாழ்வதாக
உள்ளூர் மக்கள் கொண்டிருந்த நம்பிக்கைகளின் அடிப்படையிலேயே இக்கற்கட்டிடங்கள் கட்டப்பட்டன. மத்திய சாவாவில் உள்ள போரோபுதூரில்
8ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த புத்த சமய பிரமிடு ஒன்று உள்ளது. பிந்தையக் கால சாவா கட்டமைப்புக்கள் இந்திய கட்டிடக்கலையின் தாக்கத்துடன் கட்டப்பட்டன.
குனுங் படாங்
பெரிய பிரமிட் பிரம்மாண்டம் என்று நினைக்கிறீர்களா? இதோ வருகிறது நிஜ பிரமாண்டம். கார்நாக் (Karnak) எகிப்தின் மேற்குப் பகுதியில் இருக்கும் கிராமம். ஆலயங்கள் நிறைந்த இடம். சிதிலமாகிவிட்ட பல கோவில்கள் நெஞ்சில் துயரம் பொங்க வைக்கின்றன. இங்கே இருக்கும் ஆமுன் ரே (Amun Re) கோவில் எகிப்தின் மற்ற எல்லாக் கோவில்களையும் விட மிகப் பெரியது. ஆமுன் ரே எகிப்தியரின் முழுமுதற் கடவுள். நாட்டையும், மன்னர்களையும், மக்களையும், எல்லாத் துன்பங்களிலிருந்தும், எப்போதும் காப்பாற்றுபவர் என்பது பொது நம்பிக்கை.
Amun Re
ஆமுன் ரே கோவிலில் இருக்கும், கி.மு. 14 – ம் நூற்றாண்டில், இரண்டாம் ராம்சேஸ் மன்னரால் கட்டப்பட்ட அரங்கம் முக்கிய அம்சம். ஹைப்போ என்னும் வித்தியாசமான கட்டடக் கலைப் பாணியில் நிர்மாணிக்கப்பட்டிருக்கிறது. தாங்கும் வளைவுகள் இல்லாமல், வரிசையாகத் தூண்களை நிறுவி, அவற்றின்மேல் தட்டையான கூரை அமைக்கும் முறை இது. அரங்கம் எத்தனை பெரியது தெரியுமா? பரப்பளவு 52,000 சதுர அடி. 16 வரிசைகளில், 134 தூண்கள் அரங்கத்தைத் தாங்கி நிற்கின்றன. இவை ஒவ்வொன்றின் சுற்றளவு 10 அடி. 122 தூண்களின் உயரம் 33 அடி: எஞ்சிய 12 தூண்களின் உயரம் 70 அடி. பிரமிடுகள் கட்டப்பட்ட விதமும் கட்டப்பட்டதற்கான காரணங்களும் பல்வேறு ஆராய்ச்சி முடிவுகளுடன் தொடர்ந்து கொண்டேயிருக்கும் மர்மங்கள்.
karnak temple
இறந்து போன மன்னர், மகாராணி ஆகியோரின் சடலங்கள்
பதப்படுத்தப்பட்டு அவர்கள் உபயோகிக்கும் பொருட்களுடன் பிரமிடுக்குள்
அமைக்கப்பட்டிருப்பது இறப்பிற்கு பின்னாலான வாழ்க்கை குறித்த இன்று வரை மர்மமாகவே ஆராயப்படுகிறது.
மர்மங்கள் வெறும் பிரமிடுகளுடன் முடிந்து விடுவதல்ல. மம்மிகள்
எனப்படும் பதப்படுத்தப்பட்ட உடல்கள், பிரமிடுக்குள் 5000 ஆண்டுகளுக்கு முன்னரே ஃபிளையிங் மெஷின் மற்றும் பல்பு போல செதுக்கப்பட்டிருக்கும் உருவங்கள், மனித உடலும் விலங்கு தலையுமான உருவங்கள் என நீளும் விஷயங்கள் இன்னும் எத்தனை நூற்றாண்டுகளானாலும் தீர்க்க முடியாத எகிப்தின் மர்மங்களே!!!

புற்றுநோய் (பீர் குடித்தால்)


கோடைகாலத்தில் மதுப் பிரியர்கள் அதிகமாக பீர் அருந்துகிறார்கள். அது உடலுக்கு குளிர்ச்சியை தருவதாகவும், உற்சாகத்தை அளிப்பதாகவும் கூறிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் வெகுகாலம் பீர் அருந்தும் பழக்கம் கொண்டவர்களுக்கு புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு அதிகம் என்று டாக்டர் கூறுகிறார்.

பிரபல டாக்டர் ஒருவர் தனது அனுபவத்தை இவ்வாறு பதிவு செய்திருக்கிறார்:


“பல வருடங்களுக்கு முன்பு என்னை ஒருவர் சந்திக்க வந்திருந்தார். அவர் தினமும் பீர் பருகுவதாக சொன்னார். நான் அவரிடம், அதற்கு நீங்கள் அடிமையாகிவிட்டால் புற்றுநோய் வரக்கூடும் என்றேன். பின்பு அவர் வெளிநாடு சென்றுவிட்டார்.

வருடங்கள் கழித்து அவர் மீண்டும் வந்தார். என்னிடம், ‘என்னால் கஞ்சிதான் குடிக்க முடிகிறது. சோறு சாப்பிடமுடியவில்லை’ என்றார். என்டோஸ்கோபி பரிசோதனை செய்ய பரிந்துரைத்தேன். பரிசோதனைகளுக்கு பின்பு அவருக்கு குட்டிநாக்கு பகுதியில் புற்று நோய் இருப்பது கண்டறியப்பட்டது. இறப்பதற்கு சிறிது நாட்களுக்கு முன்பு அவர் ‘டாக்டர் நான் தவறு செய்துவிட்டேன்’ என்று சொன்னார்.

பீரில் கலரிங் மெட்டீரியலாக ‘என்நைட்ரோசோ அமென்’ சேர்க்கப்படுகிறது. பீருக்கு நிறம் தரும் ரசாயனப் பொருள் இது. இது புற்றுநோயை உருவாக்கும் தன்மை கொண்டது. இதை பெரும்பாலானவர்கள் உணருவதில்லை. அதுபோல் பீரில் ஆல்கஹால் அளவும் அதிகமாக இருக்கிறது. 6 சதவீத ஆல்கஹால் என்று கூறப்பட்டாலும் அதைவிட அதிக போதைத்தன்மை அதில் உள்ளது” என்கிறார், டாக்டர்.

பொதுவாக மது அருந்துகிறவர்கள் பலர், தாங்கள் மது அருந்துவதை நியாயப்படுத்த, ‘உடலுக்கு கெடுதல் செய்யும் மதுவை நாங்கள் அருந்துவதில்லை. நல்லது செய்யும் மதுவை தான் அருந்துகிறோம்’ என்று சொல்வார்கள். மதுவை நல்லது, கெட்டது என்று தரம் பிரிக்க முடியாது. எல்லாம் மதுதான். எல்லாவற்றிலும் ஆல்கஹால் இருக்கிறது.

பருகும் மது வாய் வழியாக இரைப்பையை அடையும். அதில் 20 சதவீதம் ரத்தத்தில் கலந்துவிடும். மீதி 80 சதவீதமும் சிறுகுடலில் போய் சேரும். சிறுகுடலுக்கு ரத்தம், ஈரல் வழியாகச் செல்லும். உடலுக்கு தேவையில்லாததை வெளியேற்றுவது ஈரலின் வேலை. ஆனால் அங்கே வரும் மதுவின் அளவு மிக அதிகமாகும்போது, ஈரலால் தன் பணியை செய்ய முடியாது. தடுமாறி, காலப்போக்கில் ஈரல் பாதிக்கப்படும்.

மதுவின் தரம் என்பது அதில் எவ்வளவு ஆல்கஹால் கலந்திருக்கிறது என்பதை வைத்தே முடிவு செய்யப்படுகிறது. விலை உயர்ந்ததெல்லாம் தரமான மது என்று சொல்லிவிட முடியாது. எவ்வளவு விலை கொடுத்து வாங்கினாலும், மது என்றால் அது உடலுக்கு கெடுதியைத்தான் உருவாக்கும்.

ஒரு சில கிராமங்களில் பிரசவமான பெண்களுக்கும், உடல் பலகீனமாக இருப்பவர் களுக்கும் மதுவை மருந்தாக கருதி கொடுக்கிறார்கள். அதில் சில திரவங்களை கலந்தும் தருகிறார்கள். அதன் மூலம் உடல் வலுவடையும் என்று நம்புவது தவறு. மதுவை அப்படியே குடித்தாலும், எதனுடனாவது கலந்து குடித்தாலும், எத்தனை வயதில் குடித்தாலும், யார் குடித்தாலும் அது உடலுக்கு கேடுபயக்கவே செய்யும்.

மூளை, நரம்பு, ஈரல் போன்று உடலின் பல பகுதிகளை மது பாதிக்கும். உணர்வு நரம்புகள் அதிகமாக பாதிக்கப்பட்டு அது மரத்துப்போய்விடுவதால்தான், மது அருந்துகிறவர்கள் என்ன நடக்கிறது என்று தெரியாத அளவுக்கு தன்னிலை இழந்துவிடுகிறார்கள்.

மது அருந்துபவர்கள் அதிக அளவில் ஏப்பம் விடுவார்கள். குறட்டையால் பாதிக்கப்படுவார்கள். சுவாச தடைகொண்ட நோய்களும் அவர்களை பாதிக்கும். ஆல்கஹால் மூளையையும் பாதிப்பதால், காலப்போக்கில் அவர்களுக்கு நினைவாற்றல் குறைந்துகொண்டே போகும்.

தொடர்ச்சியாக மது அருந்துகிறவர்களுக்கு உடலுறவு நாட்டம் குறைந்துபோகும். தொடக்கத்தில் அது பாலியல் வேட்கையை அதிகப்படுத்துவதுபோல் தோன்றினாலும், நாளடைவில் அவர்களுக்கு உறுப்பு எழுச்சி குறைந்துபோகும்.

ஆண், பெண் இருபாலரிடமும் ஆண் ஹார்மோனும், பெண் ஹார்மோனும் கலந்து காணப் படும். இந்த ஹார்மோன் கணக்கை சீர்படுத்துவதில் ஈரல் பெரும் பங்கு வகிக்கிறது. ஈரல்தான் ஆண்களிடம், பெண் ஹார்மோனை கட்டுக்குள் வைக்கும். அடிக்கடி மது அருந்துகிறவர் களுக்கு ஈரல் பாதிக்கப்படுவதால், அவர்கள் உடலில் பெண் ஹார்மோன் அதிகரிக்கும். அதனால் அவர்களிடம் பெண்தன்மை மேம்பட்டு, பாலுறவு ஆர்வம் குறைந்துவிடும்.

மது அருந்துகிறவர்களில் பலர் ‘பாற்றி லிவர்’ என்ற பாதிப்பிற்கு உள்ளாகிறார்கள். ஈரல் திசுக்களில் கொழுப்பு படிவதால், இந்த வீக்கம் ஏற்படுகிறது. இதனால் மஞ்சள்காமாலை, பசியின்மை, வலி போன்றவை தோன்றும். இந்த ஈரல் வீக்கத்தை குணப்படுத்திய பின்பு மீண்டும் மது அருந்தினால் விளைவுகள் மிக மோசமாகிவிடும். மது அருந்துவதை முழுமையாக கைவிட்டால் ஈரல் மீண்டும் இயல்புநிலைக்கு வர வாய்ப்பிருக்கிறது. தொடர்ந்து பத்து வருடங்களுக்கு மேலாக மது அருந்திக் கொண்டிருப்பவர்களுக்கு ‘லிவர் ஸிரோஸிஸ்’ என்ற கடுமையான ஈரல் பாதிப்பு ஏற்படும். அதற்கு சரியான சிகிச்சை மேற்கொள்ளாவிட்டால், உயிருக்கே ஆபத்தாகிவிடும்.  
http://www.dailythanthi.com/News/Districts/2017/05/07124244/Beer-drinking-Cancer.vpf

Sunday, May 7, 2017

வடக்கு கிழக்கில் அபிவிருத்திக்கான மந்தப்போக்கிற்கான முக்கிய காரணி எமது தமிழ் அரசியல்வாதிகள்

வடக்கு கிழக்கில் அபிவிருத்திக்கான மந்தப்போக்கிற்கான முக்கிய காரணி எமது தமிழ் அரசியல்வாதிகள் என்பதுதான் கவலைக்குரிய விடயமாக உள்ளது. இதில் எனது 5 திட்டங்களும்
1. வடமாகாணத்துக்கான குடிநீர்
2. யாழ் வைத்தியசாலைக்கான பிரத்தியேக சத்திர சிகிச்சைப்பிரிவு
3. முல்லைத்தீவு மாங்குளம் வைத்தியசாலை
4. கிளிநொச்சி வைத்தியசாலை மகப்பேற்றுப்பிரிவு
5. கிழக்குமாகாண ஜேர்மன் தொழில்நுட்பக்கல்லூரி
அடங்கும். இதுதான் இன்றய யதார்த்தநிலை.
யாராவது எனது கூற்றை மறுப்பவராயின் உங்கள் அரசியல் தலைமைகளை கூட்டிவாருங்கள். பொதுத்தளமொன்றில் பகிரங்கமாக விவாதிக்க தயாராக இருக்கிறேன். ஆதாரங்களோடு!

என்னுடன் முன்னய ஜேர்மன் பாராளுமன்ற உறுப்பினரும் Rockerfeller குழுமத்தின் மூத்த ஆலோசகரும் இலங்கை நிதி மந்திரியை உத்தியோகபூர்வமாக சந்தித்தபொழுதில் எடுத்த புகைப்படம் உங்கள் பார்வைக்கு!!!!





Puloliyuran Yogeesen

1.. நிரந்தரமான அரசியல் தீர்வு தமிழர்களுக்கு கிடைக்கவேண்டும்.// தற்போதைய தமிழ் தலைமையின் கீழ் அரசியல் தீர்வு தமிழர்களுக்கு கிடைக்காது
2. அதுவும் நீதி, நிதி, நிலம் போன்ற அதிகாரம் கிடைக்காமல் எதுவுமே செய்ய முடியாது.// இதில் எந்தவொரு அதிகாரமும் தற்போதைய தமிழ் தலைமையின் கீழ் கிடைக்காது
3. உலக நாடுகளின் உதவியோடு ஒரு தீர்வு அமைய எமது தமிழ்தலைவர்களும் மக்களும் உழைத்து வருகிறார்கள்.. /// அந்த உலகநாட்டை ஆட்டிவைக்கும் உரியவர்களுடன்தான் நானும் உள்ளேன். அங்கு எந்த எமது தமிழ்தலைவர்களுமோ மக்களுமோ இல்லை. இருந்தால் அடையாளம் காட்டுங்கள். அத்தோடு என்ன தீர்வு இவர்களிடம் எனச்சொன்னால் நன்று.
4. தமிழ்தலைவர்கள் என்பது மக்களால் ஜனநாயக வழியில் தெரிவுசெய்யப்பட்டவர்கள்.// ஓ.... அப்படியா!! மக்களுக்காக வாழப்பிறந்த ஜனநாயக பொதுநலவாதிகள். அப்ப அவர்கள் திருடுவது, அபகரிப்பது, கொலை, சுருட்டுவதெல்லாம் மக்களுக்காக!! சரி சரி. !!
5. 2015 பிறகு தான் தீர்வுக்கான ஆக்கபூர்வமான கருமங்களில் ஈடுபட்டுவருகின்றார்கள் மக்களால் தெரிவு செய்யப்பட்ட எமது தலைவர்கள்.// 2009ல் முடிந்த போர். என்ன தீர்வு முன்வைக்கிறார்கள்? என்ன ஆக்கபூர்வமான கருமங்களில் ஈடுபட்டுவருகின்றார்கள்?? நீங்கள் அல்லது நீங்கள் குறிப்பிடும் தலைவர்கள் பட்டியலிடட்டும்.
6. எனவே நல்லது நடக்கும் என்று நம்புவோமாக.//// எதுவரை?? கடந்தவாரம்தானே சம் சும் மாவை ஏதோ சூடு சூடாக சீனவெடி விட்டார்களே. அப்ப அது சனத்துக்கு விட்ட சுடுகாத்தா?
7. வெளியில் இருந்து எதையும் பேசலாம். நடைமுறை சிக்கலை கொஞ்சம் உள்ளவாங்க வேண்டிய தேவையுள்ளது. /// இதுவரையில் ஒண்டுமே செய்யாதவர்களின் நொண்டிச்சாட்டு இது. அன்று தொடங்கி இன்றுவரை சிக்கல்இருக்கிறது. இப்ப என்ன புதிய சிக்கல்.
8. இனி வழமையான உங்கள் பாணியில் பொங்குங்கோ.!!!/// பாணி, பொங்குங்கோ எல்லாம் சொம்புகளின் வழி. எனதல்ல
Puloliyuran Yogeesen

பலம் மிக்கதோர் வடக்கு கிழக்கு!!!


வடக்கு கிழக்கு பொருண்மியத்தை கட்டி எழுப்பி தன்னிறைவு பெற முயல்வோம்.
வடக்கு கிழக்கில் தமிழர் தவிர்ந்த வல்லாதிக்கம் வலுப்படுவதை அனுமதிக்கக் கூடாது. புலம்பெயர்ந்த மக்கள் அங்கு முதலீடுகளைச் செய்வதோடு மேலதிக வருவாயை புலம்பெயர் நாடுகளுக்கு எடுத்து வர வேண்டும் அல்லது அங்கு வடக்கு கிழக்கு கட்டுமானத்தில் முதலீடாக்க வேண்டும். சிறீலங்காவில் சர்வதேச வங்கிகளில் வைப்புக்களை வைக்க சர்வதேச வங்கிக் கிளைகளை வடக்குக் கிழக்கிற்கு எடுத்து வர வேண்டும்.
புலம்பெயர் மக்கள் மேற்குலக பல்கலைக்கழகங்களோடு ஒன்றிணைந்து தனியார் உயர்கல்வி நிறுவனங்களை வடக்கு கிழக்கு எங்கும் நிறுவி தமிழ் மக்களின் கல்வி அறிவூட்டலையும் அடுத்த நூற்றாண்டிற்கு அவசியமான தொழில்நுட்பக் கல்வியையும் வழங்க வேண்டும்.
பெருகி வரும் ஆசியப் பொருளாதார போட்டி தொழில்நுட்பக் கல்வி கற்ற உயர் கல்வியாளர்களின் தேவைகளை ஆசியப்பிராந்தியத்தில் அதிகரிக்கச் செய்வதோடு மேற்குலகில் இருந்து வரும் விஞ்ஞானக் கல்வியில் அக்கறையின்மை அதற்கான தேவையை இன்னும் அதிகரிக்கும். இதன் அடிப்படையில் தான் நான் ஜேர்மன் அரசினது ஆலோசனை, ஆதரவுடன் கிளிநொச்சி அறிவு நகரில் ஜேர்மன் தொழில்நுட்பக்கல்லூரியை நிறுவினேன்.
இலங்கை கல்வி அமைச்சின் கீழ் இருந்தாலும் ஜேர்மனியரின் நிர்வாகத்தின் கீழ் தற்போது 1200 மாணவர்கள் கல்வி கற்பது எனக்கு மிகுந்த சந்தோசம். தனி ஒருவனாக எந்தவொரு அரசியல் கலப்பும் இன்றி இலங்கையில் இதை நடத்தி முடித்ததன் வலி எனக்கொருவனுக்குத்தான் தெரியும்.
நாம், வடக்கு கிழக்கின் பிரதான முதலீட்டாளர்களாக இருப்பதோடு பெறப்படும் பொருளியல் வளத்தைக் கொண்டு வடக்கு கிழக்கில் உட்கட்டுமானங்களை வளப்படுத்த வேண்டும்.
நாமும் துரிதமாக வளரும் சந்தர்ப்பத்தில் தான் சர்வதேசத்தின் பார்வையை செல்வாக்கை எம்மை நோக்கி திருப்பி ஆதிக்கத்திற்கும் எதிரான எமது குரலை உலகு செவிமடுக்கச் செய்ய முடியும்.
தமிழர்கள் இயன்றவரை சேமிப்புக்களை குறைத்துக் கொண்டு உட்கட்டுமானம் ஏற்றுமதி இறக்குமதி வியாபாரம் வர்த்தகம் கல்வி சுகாதாரம் சேவைகள் சுற்றுலாத்துறை என்று முதலீடுகளில் அவற்றை இட்டு தமிழர் தேசங்களை வளமிக்கதாக்குவதோடு எமது வளங்களை நாமே பயன்படுத்தும் நிலைக்கு வரவேண்டும். அந்நியருக்கு எமது வளங்கள் ஆதிக்க சக்திகளால் விற்கப்படுவதும் எமது வளங்களைச் சுரண்டி எடுக்க வரும் அந்நியமுதலீட்டாளர்களை முறியடிக்கவும் நாம் விரைந்து செயற்பட வேண்டும்.
யாழ்ப்பாணம் வன்னி மற்றும் திருமலை மட்டக்களப்பை மையமாக வைத்து அந்நிய முதலீட்டாளர்களும் கல்வி நிறுவனங்களும் படையெடுக்கும் இன்றைய காலத்தில் நாம் எமது உட்கட்டுமானங்கள் கல்வி மற்றும் இதர தேவைகளை, சவால்களை சந்திக்கும் வகையில் கட்டி எழுப்ப வேண்டும்.
ஆதிக்க சக்திகள் எமது வளங்களைச் சுரண்டி இலாபம் ஈட்ட அனுமதிக்கக் கூடாது. அந்த நிலையை தவிர்த்து நாம் சர்வதேச அளவில் பேசக் கூடிய அளவிற்கு எமது பொருளியலை கட்டி எழுப்பி செல்வாக்குள்ளவர்களாகும் நிலை வரின் நிச்சயம் நாமும் ஒருநாள் உலகால் வியந்து பார்க்கப்பட்டு எமது உரிமைகள் தொடர்பில் உலகை நோக்கி காத்திரமான கோரிக்கைகளை முன்வைக்கும் பலத்தைப் பெறலாம்.
ஆயுதப்போராட்டம் ஊடான விடுதலை என்பது சாத்தியப்படாத நிலையில் எமது போராட்ட வடிவங்களை எமது வளர்ச்சியோடு ஒருமித்துக் கொண்டு இட்டுச்செல்ல வேண்டும். ஏற்கனவே சிதைந்து சின்னாபின்னமாகியுள்ள எமது தேசத்தைக் கட்டி எழுப்பி எமக்கு தேவையான அத்துணை வளங்களையும் சேவைகளையும் நாமே எமது தேசத்தில் நிறைவு செய்யும் போது நாம் முழுமையாக விடுதலை பெற முடியும்.
எமக்கான நவீன துறைமுகங்கள், விமான நிலையங்கள், வைத்தியசாலைகள், பல்கலைக்கழகங்கள் என்று சர்வதேசத்தோடு இணைந்து நாம் பணிகளை முன்னிட்டுச் செல்லும் போது ஆளும் வர்க்கம் அதற்கு தடைபோட முடியாது. எமது நவீன கட்டுமானங்கள் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்களை கருத்தில் கொண்டு அமைக்கப்பட வேண்டும். நெடிய அதிவேக வீதிகள் மேம்பாலங்கள் நவீன அதிவேக தொடரூந்து நிலையங்கள் நடுத்தர சர்வதேச விமான நிலையங்கள் என்று எமது தேசத்தை எமது மனித மற்றும் இதர வளங்களைப் பயன்படுத்தி கட்டி எழுப்ப வேண்டும்.
வடக்குக் கிழக்கில் கிட்டத்தட்ட 4 துறைமுகங்களாவது அமைக்க வேண்டும். சர்வதேச வர்த்தகக் கப்பல்களுக்கான வழியை எம்மை நோக்கி இழுக்க வேண்டும்.
பொருளியல் பலத்தைக் காட்டி எமது அரசியல் பலத்தை வெல்ல நாம் இனிப்போராட வேண்டும். ஆசியப் பிராந்தியத்தில் சீனா உலகின் இரண்டாவது பெரிய பொருளியல் சக்தியாக உருவெடுத்துவிட்டது. ஜப்பான் 3ம் இடத்தில் உள்ளது. இந்தியா மிக விரைந்து வளரும் பொருளியல் சக்தியாக உள்ளது.
இந்த நிலையில் மேற்குலகம் பொருளியலில் பிந்தங்கிச் செல்லும் சூழல் இருப்பதால் அவர்களுக்கு தெற்காசியாவில் தமது நட்புப் பொருளியல் தளம் ஒன்று உருவாவது எதிர்க்கப்படக் கூடியதல்ல. அதேவேளை ஆசிய பொருளியல் சக்திகளோடு நேரடிப்பகை பாராட்டாது அதேவேளை அவர்களின் ஆதிக்கத்துக்குள் செல்லாது சிங்கள தேசம் எமக்கு அளிக்கும் அல்லது கிடைக்கப்பெறும் மட்டுப்படுத்திய அரசியல் உரிமையை எமக்கு சாதமாக்கிக் கொண்டு நாம் எம்மை வளர்த்துக் கொள்ள வேண்டும். இதன் மூலமே தமிழர் தேசத்தை அடுத்த நூற்றாண்டில் உலகம் வியக்க முன்னேற்றிச் செல்ல முடியும்.
தமிழனா இப்படி எழுந்து நிற்கிறான் என்று இந்த உலகம் எம்மை உற்றுநோக்க வேண்டும். ஒரு பொருளியல் பலம் மிக்க இனமாக நாம் இருந்திருந்தால் முள்ளிவாய்க்காலில் இந்த உலகம் எம்மைப் போட்டு மிதித்திருக்குமா..??! சிங்கப்பூரை எந்த நாடாவது போருக்கு இழுக்குமா..??! இல்லை. Singapore, Hong Kong, Taiwan, Luxemburg, Lichtenstein, Switzerland இராணுவ பலத்தால் அல்ல பாதுகாக்கப்பட்டிருக்கிறது. பொருளியல்பலத்தால் அது பாதுகாக்கப்பட்டிருக்கிறது.
நாம் சிந்திக்க வேண்டும். எமது பொருளாதாரத்தை வளங்களைக் கொண்டு நாமே கட்டி எழுப்ப வேண்டும். இதர சக்திகளின் ஆதிக்கத்துக்குள் எமது பொருண்மியம் வளம் செல்ல அனுமதிக்கக் கூடாது.
தொடர்ந்து தாயகம் புலம்பெயர் மக்கள் என்று பிரித்துப் பேசிக் கொண்டிராமல் இரண்டு மையங்களும் இணைந்து செயற்படும் நிலை உருவாக வேண்டும். எம்மிடம் உழைக்கும் சக்தி இருக்கிறது. பொருண்மிய திறன் இருக்கிறது. கல்வி மற்றும் தொழில்நுட்ப அறிவு இருக்கிறது. சிறந்த உல்லாசப் பிரயாணத்துறைக்கான வழிமுறைகள் தெரிந்திருக்கிறது. அப்படி இருக்கும் போது உலகில் வளர்ந்து வரும் இரண்டு பெரிய பொருளியல் சக்திகள் இருக்கும் கேந்திர ஸ்தானத்தில் இருந்து கொண்டும் எமது நிலத்தை வளத்தை சுடுகாடாக விட்டுவிட்டு குளிர்நாடுகளில் கூலிக்கு மாரடிப்பதை பெருமையாக நினைத்துக் கொண்டிருப்பதிலும் அந்தக் கூலியில் இருந்து முதலாளி ஆகும் நிலைக்கு நாம் வளர முயற்சிக்க வேண்டும். அதுவே இன்றைய தேவை.
இது தொடர்பில் உங்கள் கருத்துக்கள், நிலைப்பாடுகள், இந்த முன்மொழிவுகளில் இருக்கக் கூடிய குறைகள், நிறைகள், அவற்றை எவ்வாறு சீர்செய்வது, எந்த இடத்தில் என்ன திட்டத்தை செய்யலாம், எப்படி அந்நிய ஆதிக்கத்தில் இருந்து எமது பொருண்மியத்தை மீட்டு எமதாக்குவது என்பவற்றை இட்டு உங்கள் கருத்துக்களை முன்வையுங்கள்.
2018ல் சிறந்த 50 திட்டங்களை வடக்குக் கிழக்கில் தெரிவு செய்து ஆரம்பிப்பதற்கான அடிதளம் போடப்பட இருக்கிறது. அத்திட்டங்களை உள்வாங்கும் கிராம நகரமக்களும் அதில் பங்காளராக இருப்பார்கள்.
அது தவிர்ந்து குதர்க்கங்கள் இங்கு வேண்டாமே
Puloliyuran Yogeesen

மனித புலன்கள் புரிதலும் மற்றும் ஆற்றலறியும் முறைகளும்


இந்த உலகில் மிகவும் பயனுள்ளதும் அதே நேரத்தில் புரிந்து கொள்ளக்கடினமானதும் ஒன்று உண்டென்றால் அது மனிதனின் உள்ளுக்குள் புதைந்து இருக்கும் அவனின் தன்மைகளும் மற்றும் குணாதிசயங்களும்தான்.
மிகவும் முக்கியமான இந்தக்கலை, தொன்று தொட்டு பல்வேறு வடிவங்களில் இருந்து வருகிறது என்பது ஒரு உண்மை. அற்புதமான மனித ஆற்றலை இனங்கண்டு, அதை சரியான வடிவத்தில் பயன்படுத்தும் முறையை இன்றும் உலகில் பலவேறு பகுதிகளில் பல உத்திகள் கொண்டு கண்டுபிடிக்கும் நிலை நடைமுறையில் உள்ளது.
நம்மில் உள்ள சாஸ்திர சம்பிரதாய முறையைப்போல், மேலை நாடுகளிலும் பல்வேறு உத்திகள் கையாளப்பட்டு, மனித வளத்தின் தன்மைகளையும் மற்றும் திறன்களையும் அறிகிறார்கள். மிகவும் நீண்டுச்செல்லும் இந்த தலைப்பின் செய்திகளை, எளிதாக்கி தரவேண்டும் என்ற சிந்தனையில், மிக சுருக்கமாக சில குறிப்புகளை மட்டும் இங்கே தர விழைகிறேன்.
மனித வளம் மேலாண்மை (Human Resource Management & Personnel Administration) என்பது மிக அறிய, நீண்ட மற்றும் அதிசயங்கள் நிறைந்த ஒரு பகுதி. அதில், மனித திறன் கன்டுபிடிப்பு (Analysis and Finding of Human Traits) என்பது கடலில் முத்து தேடும் முதற்சியே. இதை நாம் நன்கு விளங்கிக்கொள்ளல் வேண்டும். இருப்பினும், கீழ்காணும் சில முறைகளின் மூலம் மனித குணங்களையம், தன்மைகளையும் மற்றும் திறன்களையும் தெரிந்து கொள்ள இயலும் என்பது உண்மையே.
1 . கண்களின் பார்வை நிலையை வைத்து (Analysis from Vision of Human)
2 . தலை வாரும் நிலையை வைத்து (முடி சூடியவருக்கு மட்டும்) (Hair Style and its dressing mode of Human Analysis)
3 . நடந்து வரும் நிலையை வைத்து (Watching of Walking Style of Human)
4 . உடை அணித்தலை வைத்து (Dressing Code or Style of Human Analysis)
5 . உட்காரும் முறையை வைத்து (Looking on Sitting Style of Human)
6 . தலை ஆட்டும் விதம் கொண்டு (Noting the way of turning head by Human)
7 . பேசும் முறையில் இருந்து (Through conversation or talking ways)
8 . சாப்பிடும் விதம் வைத்து (Mode of taking food in common places)
9 . உடல் அங்க அசைவுகள் கொண்டு (Body Language Analysis)
10 . தன்னை மதிப்பிட்டு சொல்லும் விதம் வைத்து (Expressing self-analysis)
11 . தன்னம்பிக்கையின் வெளிப்பாடு வைத்து (Exposing of self-confidence)
12 . பொது அறிவு, உலக புரிதலை வெளிப்படுத்தும் விதம் வைத்து (General Knowledge and World affairs exposure method)
மேற்சொன்ன முறிகளின் மூலம், ஏறக்குறைய யாரும் சொல்லாமலே ஒருவரை பற்றி அதிகம் நாம் அறிந்துகொள்ள முடியும். மேலே குறிப்பிட்ட ஒவ்வொன்றும் ஒரு தனி தலைப்பாக கொண்டு விவரிக்கும் அளவிற்கு கருத்துக்கொண்டவை.
மனித ஆளுமை அபிவிருத்தி (Human Personality Management) கல்வியின் ஒரு சிறு துளியே நான் இங்கே கோடிட்டு கட்டியிருப்பது. இதை தாண்டியும் பல செய்திகள் மனித வள மேம்பாடு (Human Resource Development) என்ற மிக பெரிய பாடத்திற்குள் ஒளிந்து கொண்டிருக்கிறது என்றல் அது மிகை யாகாது.
மனித திறன் அபிவிருத்தி மற்றும் மேம்பாடு (Human Traits Development and Management), மனித ஆளுமை திறன் வளர்ச்சி (Human Personality Development), மனித வளம் பெருக்கம் மற்றும் பயன்பாடு (Increasing of Human Resources & deployment) , மனித சிந்தனை உருவாக்கம் (Human Think-tank process) , மனித நேய கோட்பாடுகள் (Humanity Ethics), மனித வாழ்வியல் நியதி (Human Life Ethics), மனித அறநெறி வளர்ச்சி (Human Morality Development) போன்று எண்ணற்ற பகுதிகள் மனித வள மேலாண்மையில் (Human Resource Management) இருக்கின்றன.
இதை எல்லாம், சரி வர தெரிந்து கொள்ளாமல், எந்த சமூகமும் உயர்வை எட்ட இயலாது என்பது உண்மை,
மீண்டும் ஆராய்வோம் .....

Shiridi Saibaba Tamil Movie

வடமாகாண சபையின் வீழ்ச்சி ,வடக்குக் கல்வி அமைச்சின் சீர்கேடு

வடமாகாண சபையின் வீழ்ச்சியைப் பற்றியும் வடக்குக் கல்வி அமைச்சின் சீர்கேட்டைப்பற்றியும் கடந்த மூன்று ஆண்டுகளாகத் தொடர்ச்சியாகப் பொதுவெளியில் கவனப்படுத்தி வருகிறேன். இதையெல்லாம் கண்டு கொள்ளவே கூடாது என்ற மாதிரி தமிழ்ப்பெருங்குடி கள்ள மௌனம் காத்துக் கொண்டிருக்கிறது.
இதன் விளைவுகள் வினையாகத் தமிழ்ச்சமூகத்தைச் சூழத் தொடங்கி விட்டன. இப்போது வடக்கு மாகாணம் உற்பத்தியிலும் பிற பொருளாதார நடவடிக்கைகளிலும் சமூக வளர்ச்சியிலும் பின்தங்கியிருக்கிறது. வன்முறையிலும் குற்றச்செயல்களிலும் வீண் விரயங்களிலும் முன்னேறியுள்ளது.
ஆனாலும் அது தன்னுடைய வீழ்ச்சியை மறைத்துக் கொண்டேயிருக்கிறது. தன்னுடைய தவறுகளை நியாயப்படுத்த முயற்சிக்கிறது. என்னதானிருந்தாலும் கிழிந்த கோமணத்தினால் இழுத்துப் போர்த்த முடியாது என்பது தெளிவான உண்மையல்லவா!
வட மாகாணம் இலங்கையில் கடைசி இடத்தில் உள்ளது. கிளிநொச்சி மாவட்டம் 125 ஆவது இடத்தில், கடைசியில் உள்ளது.
இதற்கெல்லாம் காரணம் முறைகேடான நிர்வாக முறைமையும் அரசியல் தலையீடுகளுமே.
கீழே பாருங்கள்.
கிளிநொச்சி - பூநகரிக் கல்விக் கோட்டத்தில் உள்ள 1சி பாடசாலையான முட்கொம்பன் வித்தியாலத்தில் கடந்த நவம்பர் மாதம் முதல் அதிபர் இல்லை. சுமார் அறுநூறு மாணவர்களை கொண்ட இந்தப் பாடசாலையை ஆண்டு ஒன்றுக்கு கல்வி கற்பிக்கும் பயிற்றப்பட்ட ஆரம்பக் கல்விப் பிரிவு ஆசிரியரே நடத்திவருகின்றார். ஆனால் நகரில் உள்ள பாடசாலை ஒன்றுக்கு ஐந்து அதிபர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
கிளிநொச்சி ம.விக்கு ஐந்து அதிபர்கள் உள்ளனர். அதிபர் தரம் ஒன்றில் ஒருவர். அதிபர் தரம் இரண்டில் இரண்டு அதிபர்கள். அதிபர் தரம் மூன்றில் இரண்டு அதிபர்கள் இருக்கிறார்கள்.
மத்திய கல்லூரியின் ஆரம்ப வித்தியாலயத்தில் தரம் இரண்டில் இரண்டு அதிபர்கள் கடமையாற்றுகின்றனர்,
பரந்தன் இந்து மகா வித்தியாலயத்தில் தரம் இரண்டு அதிபர் அதிபராக கடமையாற்றுகிறார். தரம் ஒன்றைச் சேர்ந்த அதிபர் ஒருவர் எவ்வித பொறுப்பும் இன்றி இருந்தார். தற்போது இவர் எந்தப் பொறுப்புகளும் வழங்கப்படாமல், பாடசாலை எதுவும் வழங்கப்படாமல் கண்டாவளைக் கோட்டத்தில் இணைக்கப்பட்டிருக்கிறார்.
இராமநாதபுரம் பாடசாலையில் தரம் இரண்டு அதிபர்கள் இருவர் உள்ளனர், இராமநாதபுரம் மேற்கு பாடசாலையில் தரம் இரண்டு அதிபர் ஒருவரும் தரம் மூன்று அதிபரும் ஒருவரும் உள்ளனர்
இவ்வாறு மாவட்டத்தின் நகரை அண்டிய பகுதிகளில் உள்ள பாடசாலைகளில் ஆசிரிய வளமும் அதிபர்களும் குவிக்கப்பட்டுள்ள நிலையில் கிராமப்புறப் பாடசாலைகள் போதுமான வளங்கள் இல்லாமல் தொடர்ச்சியாக காணப்படுகின்றன.
க.பொ.த உயர்தரத்தில் கலை வர்த்தக பிரிவுகளைக் கொண்ட முட்கொம்பன் பாடசாலையில் அறுநூறு மாணவர்கள் படிக்கின்றனர். மீள் குடியேற்றத்தின் பின்னர் படிப்படியாக கல்வியில் வளர்ச்சியடைந்து வந்த இந்தப் பாடசாலையில் தற்போது ஏற்பட்டிருக்கும் அதிபர் வெற்றிடமும் அங்கு நிலவும் ஆசியர் வெற்றிடமும் மிகமோசமான நிலைமையை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த இந்தப் பாடசாலையில் கற்பிப்பதற்கு கணித பாடத்திற்கு இரண்டு ஆசிரியர்கள் தேவையாக உள்ள போதும் ஒருவரும் இல்லாத நிலை. அவ்வாறே விஞ்ஞானப் பாடத்திற்கும் இரண்டு ஆசிரியர்கள் தேவையாக உள்ள போதும் எவரும் இல்லை. இந்த நிலைமை கடந்த பல மாதங்கள் காணப்படுகிறது.
அத்தோடு உயர்தரத்தில் இந்து நாகரீகத்திற்கும் ஆசிரியர் இல்லை என தெரிவிக்கும் பெற்றோர், இந்த நிலைமை நீடித்தால், தங்களுடைய பிள்ளைகளின் கல்வி பாதிக்கப்படும். இது குறித்து எல்லா இடமும் முறைப்பட்டிருக்கிறோம். நடவடிக்கையை எடுப்பதற்கு யாருமே முன்வரவில்லை எனக் குறிப்பிடுகின்றனர்.
யாழ்ப்பாணத்திலிருந்து கிளிநொச்சியில் கற்பிப்பதற்கான ஆசிரிய வளப்பகிர்வைச் சரியாகச் செய்ய முடியாத, பிரதேச வேறுபாட்டை மேவிச் சிந்திக்கப் பண்ணாத மாகாண நிர்வாகமும் தமிழ் அரசியல் தலைமையும்தான் வடக்குக் கிழக்கு இணைப்பைப்பற்றியும் தேசியத்தைப் பற்றியும் பெருங்கதையாடல் செய்கிறது.
இதற்குள்தான் இத்தனை பெருமைகளும் கனவுகளும்.
இந்த லட்சணத்தில்தான் இவர்களுக்குக் குடைபிடிப்போர் உள்ளனர்.
Sivarasa Karunagaran

தகுதி கூடிய வடக்கு முதலமைச்சரை விட எட்டாம் ஆண்டு படித்த வடமேல் மாகாண முதலமைச்சர் சிறப்பாக மாகாணத்தை கொண்டு நடத்துகின்றார் என வடமாகாண எதிர்க்கட்சித் தலைவர் தவராசா தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி ஊடக அமையத்தில் இன்று(06) இடம்பெற்ற சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன் போது தொடர்ந்து கருத்து தெரிவித்த வடமாகாண எதிர்க்கட்சித் தலைவர்,

இலங்கையில் உள்ள முதலமைச்சர்களில் தகுதி கூடிய முதலமைச்சர் என்றால் அது வடக்கு முதலமைச்சர்தான். அது அனைவருக்கும் தெரியும்.
அண்மையில் கல்வி அமைச்சருடன் வட மேல் மாகாணத்தில் வயம்ப எனும் இடத்தில் கூட்டம் ஒன்றுக்கு சென்றிருந்தேன். அங்கு குறிப்பிட்டுள்ளார்கள் வட மேல் மாகாண முதலமைச்சர் எட்டாம் ஆண்டுதான் படித்தவர் என்று.
ஆனால் அவர் அந்த மாகாணத்தை சிறப்பாக கொண்டு நடத்துகின்றார். இதற்கு தகுதி அல்ல முக்கியம், ஆளுமைதான் காரணம் அவரிடம் ஆளுமை இருக்கிறது. இதனை பல இடங்களில் நான் சுட்டிக் காட்டியிருக்கிறேன்.
அது போலதான் வடக்கு கல்வி அமைச்சரும் அவர் ஆசிரியராக, அதிபராக, வலயக் கல்விப் பணிப்பாளராக இருந்து கல்வி அமைச்சராக வந்தவர் என்பது முக்கியமல்ல அவரது ஆளுமைதான் முக்கியமானது.
வடக்கின் கல்வித்துறையில் வளங்கள் சரியாக பகிரப்படாமை, சரியாக பயன்படுத்தப்படாமை, மற்றும் நெறிப்படுத்தப்படாமை போன்ற காரணங்களால் கல்வித்துறை என்றுமில்லாத அளவுக்கு வீழ்ச்சியடைந்துள்ளது.
வடக்கு மாகாணத்தை பொறுத்தவரை ஆசிரியர் வளங்கள் உள்ளிட்ட கல்வித்துறையின் வளங்கள் சரியாக முறையாக பங்கிடப்படவில்லை.
யாழ்ப்பாணத்தில் குறிப்பாக ஒரு சில வலயங்களில் கல்வித்துறையின் ஆளணி வளம் குவிக்கப்பட்டுள்ளது. எத்தனையோ தடவைகள் எடுத்துக் கூறியும் அது சீர்செய்யப்படவில்லை.
அதற்கு மேலதிகமாக இந்தக் குறைபாடுகளை நீக்குவதற்காகதான் பட்டதாரிகளை ஆசிரியர் சேவைக்குள் உள்வாங்கப்பட்டார்கள் குறிப்பாக வன்னி பிரதேசங்களில் நியமிக்கவே முன்னுரிமை அளிக்கப்பட்டது.
குறிப்பாக 400 பேரளவில் யாழ்ப்பாணத்திற்கு வெளியே நியமிக்கப்பட்டார்கள் அதில் ஐம்பது பேர் இடமாறுதல் மூலம் மீண்டும் யாழ்ப்பாணத்திற்கு வந்திருக்கின்றார்கள்.
ஆனால் 75 பேர் அரசியல்வாதிகளின் சிபாரிசு மற்றும் உயர்மட்ட செல்வாகின் அடிப்படையிலும் யாழ்ப்பாணத்திற்கு வந்துவிட்டார்கள் இதில் எந்தெந்த அரசியல்வாதிகள் ஈடுப்பட்டுள்ளனர் என்ற ஆதாரமும் என்னிடம் உண்டு.
வடக்கிலும் முதலமைச்சர் அமைச்சர்கள் அவர்களுக்குச் சம்பளங்கள் சலுகைகள் மற்றும் உறுப்பினர்கள் அவர்களுக்கு சம்பளம் என வழங்கி வருவது ஏன் மக்களுக்கு வினைத்திறனான செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் என்பதற்காகவே ஆனால் அது எதுவும் நடந்ததாக தெரியவில்லை என அவர் மேலும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
வடமாகாண எதிர்க்கட்சித் தலைவர் தவராசா
http://www.tamilwin.com/politics


கேரளத்தில் புற்றுநோய்க்கு ஒரு ஆச்சரிய ஆயுர்வேத மருத்துவர்

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் பெருந்தலமன்னா பேருந்து நிலையத்துக்கு எதிர்ப்புறம் பிரியும் சின்ன சாலையில் அரை கிலோ மீட்டர் நடந்தால் அரசு ஆயுர்வேத மருத்துவர் மனோஜ்குமாரின் கிளினிக் இருக்கிறது. ஆயுர்வேத மருத்துவம் பயின்று 1998 முதல் அரசு ஆயுர்வேத மருந்தகத்தில் முதன்மை மருத்துவ அலுவலராகப் பணியாற்றி வரும் ஏ.மனோஜ்குமார், ஆயுர்வேத மருந்துகளின் மூலம் புற்றுநோய்க்கு சிகிச்சை அளிக்கிறார்.
‘ஈரல் புற்றுநோய்க்கான ஆயுர்வேதச் சிகிச்சை முறைகள்’ குறித்துத் தனது சிகிச்சை அனுபவங்களை உள்ளடக்கி, இவர் சமர்ப்பித்த ஆய்வுக் கட்டுரையை (19.09.2015), ஜெர்மனியைச் சேர்ந்த ஐரோப்பிய ஆயுர்வேத அகாடமி என்ற அமைப்பு சிறந்த ஆயுர்வேதச் சிகிச்சை முறை என அங்கீகரித்துள்ளது. இதே சிகிச்சைக்காக இந்திய மருத்துவ முறைகளின் அமைப்பான ஆயுஷ்ஷின் கீழ் இயங்கும் கேரள அரசு மருத்துவப் பிரிவு, 2015-ம் ஆண்டின் சிறந்த மருத்துவருக்கான விருதை இவருக்கு வழங்கியுள்ளது.
தமிழகம், கேரளத்தைச் சேர்ந்த நோயாளிகள் இவரிடம் அதிகமாகச் சிகிச்சை பெறுகின்றனர். கத்தியில்லை, ரத்தமில்லை, உள் நோயாளி சிகிச்சை இல்லை. தான் தயாரிக்கும் ஆயுர்வேத மருந்துகளின் மூலமாகவே நாள்பட்ட புற்றுநோய்களுக்கும் இவர் சிகிச்சை அளிக்கிறார்.
சில நோயாளிகள்
டாக்டர் மனோஜ்குமாரை சந்தித்தபோது, சிகிச்சைக்கு வந்திருந்த பெண்ணுக்கு 48 வயது. மலப்புரம் அருகே அமரம்பலம் கிராமத்தைச் சேர்ந்தவர். நான்கு வருடங்களுக்கு முன்பு எலும்பில் புற்று ஏற்பட்டு, கருப்பைக்கும் பரவி, வயிற்றுவலியால் துடித்து ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டிருக்கிறார். அறுவைசிகிச்சைதான் வழி, அதைச் செய்தாலும் பிழைக்க வாய்ப்பு குறைவு என்று மருத்துவர்கள் தெரிவித்திருந்தனர். அந்நிலையில் உறவினர் ஒருவர் மூலம் இங்கு வந்துள்ளார். இரண்டு மாதம் டாக்டர் மனோஜ்குமார் அளித்த ஆயுர்வேத மருந்துகள், அந்தப் பெண்ணைப் புற்றுநோயிலிருந்து மீட்டுள்ளன.
இதேபோல் கோவையை சேர்ந்த ஒருவருக்குப் பிரைன் ட்யூமர். திடீரென்று வாய், கை கால்கள் கோணி நினைவிழந்து விட்டார். அத்தனை சோதனைகளையும் செய்து பார்த்த புகழ்பெற்ற ஆங்கில மருத்துவர் குழு ஒன்று, ‘மூளையில் குறிப்பிட்ட அளவு புற்று கட்டி. அதை அறுவை சிகிச்சை மூலம் அகற்றுவதுதான் வழி. ஆனால் பிழைப்பதற்கு உத்தரவாதம் இல்லை!’ என்றே சொல்லிவிட்டது. அவருக்கு டாக்டர் மனோஜ்குமார் இரண்டு மாதம் சிகிச்சை அளித்தார். இப்போது மனிதர் எழுந்து உட்கார்ந்துவிட்டார். இப்படிப் பல உதாரணங்கள் உள்ளன.

ஆயுர்வேத மருத்துவத்தில் பொதுவாக வழங்கப்படும் கஷாயம், சூரணம், மாத்திரை வடிவங்களிலேயே இங்கே புற்றுநோய்க்கும் மருந்து வழங்கப்படுகிறது. அதில் சில மருந்துகளை டாக்டர் மனோஜ்குமாரே தயாரிக்கிறார். செலவும் அதிகப்படியாக ஆவதில்லை.
அனுபவம் தந்த சிகிச்சை
“நான் ஆயுர்வேதத்தில் பொது மருத்துவர்தான். கேன்சர் பேஷண்ட் வந்தபோது ஆயுர்வேதத்தில் உள்ள சில மருந்துகளைக் கொடுத்துப் பார்த்தேன். ஒரு ஸ்பிரிசுவல் நேச்சர் என்று சொல்லுவார்களே, அப்படி அந்த மருந்துகள் அவர்களைக் குணப்படுத்தியதைக் கண்டு, அதில் ஆர்வம் கொண்டேன். பிறகு அந்தச் சிகிச்சைக்கான மருந்துகளை அனுபவம் மூலமாகக் கையாள ஆரம்பித்தேன். அது வெற்றிகரமாக அமைய, அது குறித்த ஆராய்ச்சியில் இறங்கினேன். ஒரு நோயாளியைப் பார்த்தால் அவருக்கு எந்த அளவு அந்த நோயின் தன்மை இருக்கிறது என்பதைப் பொருத்தே மருந்து கொடுக்கிறேன்.
கருப்பை புற்றுநோய் என்றால் ஒரே மருந்து கொடுப்பார்கள். நான் அப்படிக் கொடுப்பதில்லை. நோயாளியின் உடல் தன்மைக்கும், நோய்த் தன்மைக்கும் ஏற்ப வேறு வேறு மருந்துகளே கொடுக்கிறேன். அது குணமாகும்போது ஒவ்வொரு முறையும் மருந்தை மாற்றிக் கொடுக்கிறேன். ரத்தப் புற்றுநோயில் பல வகைப்பட்டவர்கள், கருப்பை புற்றுநோய், ஈரல் புற்றுநோய், வயிற்றுப் புற்றுநோய் என உள்ளவர்கள் பல தரப்பட்டவர்களும் என்னிடம் சிகிச்சை பெற்றுள்ளனர்.
நான் ஒரு அரசு மருத்துவர். எனது வேலைநேரம் போக எஞ்சிய நேரத்தில்தான் புற்றுநோய் சிகிச்சைக்காக நேரம் ஒதுக்குகிறேன்,” என்கிறார் டாக்டர் மனோஜ்குமார், அமைதியாக.
http://tamil.thehindu.com/general/healthwidget-art=four-all