Search This Blog

Sunday, July 2, 2017

நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி…- A Musical Love Story

ஒரு சிறந்த இசையை கேட்கும்போது நீங்கள் அனைத்தையும் மறக்கிறீர்கள் அல்லது அனைத்தையும் நினைக்கிறீர்கள்
யாரோ ஒருவன்
ரவீந்தர் அந்த வெள்ளைக் காகிதத்தை பிரித்துப் பார்த்தான். அதில் ஆங்கிலத்தில், “தயவுசெய்து ‘நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி…’ பாடலைப் பாடவும்” என்று எழுதியிருந்தது. கையெழுத்தைப் பார்த்தவுடனேயே தெரிந்துவிட்டது. அதே நபர்தான். ரவீந்தர் சுற்றிலும் தேடினான்.
சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் இருக்கும், ஒரு ரிசார்ட்ஸ் பார் அது. வழக்கமான ஈஸிஆர் பார்களைப் போல் இளைஞர்கள் கும்மாளமிடும் பார் அல்ல. பணம் சம்பாரித்து சம்பாரித்து களைத்துப்போன… “வீட்டுக்கு கிளம்பிட்டீங்களா?” என்று ஃபோனடிக்கும் மனைவிகளால் அலுத்துப்போன… ஆண்டுக்கொரு முறை ஐஃபோனை மாற்றும் பிள்ளைகளால் வெறுத்துப்போன… நடுத்தர வயது பணக்காரர்கள் அமைதியாக அமர்ந்து குடிக்கும் கார்டன் பார்.
ரவீந்தர், அங்கு தினமும் நடைபெறும் ஆர்கெஸ்ட்ராவில் பாடுபவன். ஆங்கிலம், ஹிந்தி, தமிழ்… என்று மூன்று மொழிகளிலும் பாடுவார்கள். கடந்த ஒரு வாரமாக ஒருவன், தினமும் இப்பாடலைப் பாடச் சொல்லி சீட்டு கொடுக்கிறான். பாடி முடித்தவுடன், ரவீந்தரின் அருகில் வந்து, ஐநூறு ரூபாயைக் கொடுத்துவிட்டு திரும்பிப் பார்க்காமல் சென்றுவிடுவான்.
ரவீந்தர் அவனைத் தேட… அவன் ஒரு மரத்தடியிலிருந்து கையை உயர்த்திக் காட்டினான். அவனுக்கு ஏறத்தாழ 40 வயதிருக்கும் கொஞ்சம் குண்டாக… தாடி வைத்த மோகன்லால் போல் இருந்தான். ரவீந்தரைப் பார்த்து “பாடு…” என்பது போல் கை காட்டினான். கீபோர்டில் ஜான், ‘நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி…’ பாடலுக்கான ப்ரீலூடை வாசித்து முடித்தவுடன், ரவீந்தர் பாட ஆரம்பித்தான்.
நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி…
நமைச் சேர்த்த இரவுக்கொரு நன்றி…
என்று ரவீந்தர் பாடலுக்குள் நுழைந்து… கொஞ்சம் கொஞ்சமாக சுற்றுப்புறத்தை மறந்து… முற்றிலும் அந்தப் பாடலுக்குள் ஆழ்ந்துவிட்டான். “உயிரே… வா…” என்று பாடலை முடித்தவுடன், படபடவென்று கைத்தட்டும் சத்தம் கேட்டது. அவன்தான். பாரில் அனைவரும் அவனைத் திரும்பிப் பார்த்தார்கள். ரவீந்தருக்கு ஆச்சர்யமாக இருந்தது. தினமும் அமைதியாக பணத்தைக் கொடுத்துவிட்டுச் சென்றுவிடுவான். இன்று என்ன கைத்தட்டல்? ரொம்ப ஓவராக குடித்துவிட்டானோ? என்று நினைத்துக்கொண்டிருக்கும்போதே அவன் எழுந்து மேடையை நோக்கி வந்தான். நடை தள்ளாடியது. மேடைக்கருகில் வந்து, “உன் பேர் என்ன?” என்றவனின் குரலில் நிறைபோதை ததும்பியது.
“ரவீந்தர்…”
“நோ… இன்னைலருந்து உன் பேரு ஹரிஹரன்… இன்னைக்கி ரொம்ப அற்புதமா பாடுன. சில இடங்கள்ல ஹரிஹரன தாண்டிட்ட…” என்றவனுக்கு நிற்க முடியவில்லை. ஜானைப் பார்த்து, “நீ தப்பான ஸ்கேல்ல வாசிக்கிற.…” என்றவனை ரவீந்தர் ஆச்சர்யமாக பார்த்தான். இசை தெரிந்தவன். அவன் பர்ஸை எடுத்து பிரித்தபிறகு ஒரு வினாடி யோசித்தான். சட்டென்று ரவீந்தரின் கையில் பர்ஸை திணித்துவிட்டு, திரும்பி நடக்க ஆரம்பித்தான். பர்ஸை திறந்து பார்த்த ரவீந்தர் அதிர்ந்தான். உள்ளே ஏகப்பட்ட ஆயிரம் ரூபாய் நோட்டுகள். பதறிப்போன ரவீந்தர் ஜானிடம், “ஒரு நிமிஷம்…” என்று கூறிவிட்டு வேகமாக மேடையிலிருந்து இறங்கி ஓடினான்.
அதற்குள் அவன் தோட்டத்தை விட்டு வெளியேறி, கடல் மணலுக்குச் சென்றிருந்தான். ரவீந்தர், “சார்… சார்… “என்று பின்னால் ஓடினான். அவன் திரும்பிப் பார்ததுவிட்டு நின்றான். கடல் காற்றில் அவன் முடிகள் கலைந்தாட… அலைகளின் சத்தம் இரைச்சலாக கேட்டது.
“சார்… இதுல நிறைய பணம் இருக்கு. இவ்ளோ பணம் எனக்கு வேண்டாம்” என்று ரவீந்தர் பர்ஸை நீட்டினான். அவன் பர்ஸை வாங்கியபடி, “உன் பேர் என்ன சொன்ன?” என்றான்.
“ரவீந்தர் சார்… உங்க பேரு?”
“மனோஜ்… மனோஜ்குமார்”
“நான் ஒண்ணு கேக்கலாமா சார்?”
“கேளு…”
“இந்தப் பாட்ட ஏன் தினமும் கேக்குறீங்க?”
“ம்ஹ்ம்…” என்று சிரித்த மனோஜ், “ரவீந்தர்… இது பாட்டு இல்லை. வாழ்க்கை… இளையராஜாவோட ஒவ்வொரு பாட்டும் ஒவ்வொரு வாழ்க்கை..” என்றவன் உடனே “நோ…” என்று கூறி… இரண்டு கைகளையும் வானத்தை நோக்கி விரித்து, “லட்சம் பேரோட வாழ்க்கை… கோடி பேரோட வாழ்க்கை…” என்றான் சத்தமாக.
“இன்னொரு விஷயம் கேக்கணும். நீங்க… லவ் ஃபெயிலியரா?” என்று கேட்டுவிட்டு ரவீந்தர் நாக்கைக் கடித்துக்கொண்டான். அவன் இந்தப் பேச்சை ஆரம்பித்திருக்கக்கூடாது. காதல் தோல்வி குடிகாரர்களிடம் சிக்கினால், சிதைத்து சின்னாபின்ன படுத்திவிடுவார்கள். ஓரிரவு முழுவதும், “அவ கண்ணு இன்னும் என் கண்ணுலயே நிக்குது” என்பதை மட்டுமே ஆயிரம் தடவைச் சொல்லி சாகடிப்பார்கள். “நீங்க லவ் பண்ணியிருக்கீங்களா பாஸ்?” என்று கேட்டுவிட்டு, தங்கள் காதல் கதையைக் கூறுவார்கள்… என்று ரவீந்தர் நினைத்து முடிப்பதற்குள், “நீங்க லவ் பண்ணியிருக்கீங்களா ரவீந்தர்?” என்றான் மனோஜ்.
“இல்ல சார்… வீட்டுல பொண்ணு பாத்துகிட்டிருக்காங்க…”
“ம்…” என்ற மனோஜ் கடற்கரையை நோக்கி நடந்தான். ரவீந்தர் அவன் பின்னாலேயே சென்றான். அலைகள் அருகில் வந்தவுடன் மனோஜ் நின்றுவிட்டான். அரை நிலா வெளிச்சத்தில் சத்தமிட்டுக்கொண்டிருந்த கடல் அலைகளை பார்த்தான். பேண்ட் பாக்கெட்டில் இருந்த ஓட்கா பாட்டிலை எடுத்து மடமடவென்று குடித்தான். அப்படியே மணலில் அமர்ந்துகொண்டு ரவீந்தரைப் பார்த்து, “இங்க உக்காரு ரவீந்தர்” என்றான். ரவீந்தர் தயக்கத்துடன் நின்றான்.
“ஏய்… ஏன் சங்கடப்படுற? நான் பணக்காரன்னுல்லாம் நினைக்கவேண்டாம், இளையராஜாவோட இசை நம்மள ஒண்ணாக்கிடுச்சு…. உக்காரு..” என்றவன் மீண்டும் ஒரு மடக்கு குடித்துவிட்டு, “அப்ப எனக்கு சரியா 25 வயசு. அப்ப நான் கொல்கத்தாவுல இருந்தேன்…” என்று ஆரம்பித்தான்.
2000, பிப்ரவரி 22, செவ்வாய்கிழமை. அப்போது கொல்கத்தா, கல்கத்தாவாகத்தான் இருந்தது. தெற்கு கல்கத்தா, ராஸ் பிஹாரி அவென்யூ. தேசப்பரியா பார்க்கிலிருந்த டென்னிஸ் கிளபில் நான் ப்ரமோத் வருவதற்காக காத்துக்கொண்டிருந்தேன். அப்போது வேகமாக என்னை நோக்கி வந்த ப்ரமோத், “மனோஜ்… தாராதாரி எஷோ… ப்ரியா தியேட்டரெர் ஷாம்னே ஜமேலா சோல்ச்சே…(வேகமா வா… ப்ரியா தியேட்டர் முன்னாடி கலாட்டா நடக்குது…)” என்று என் கையைப் பிடித்து இழுத்தான்.
“கீ நியே ஜமேலா ஹொச்…(என்ன கலாட்டா…)” என்றேன்.
“உங்க கமல்ஹாசனோட ‘ஹே ராம்’ ஹிந்தி படத்துக்கு எதிரா…” என்று வங்காளத்தில் கூறிய ப்ரமோத் என்னை இழுத்துக்கொண்டு வேகமாக நடந்தான்.
ப்ரியா தியேட்டர் வாசலில் பயங்கர சத்தமாக இருந்தது. ஏராளமான காங்கிரஸ்காரர்கள், கையில் காங்கிரஸ் கொடியுடன், காந்தியை அவதூறாக சித்தரிக்கும் ஹே ராம் படத்தை தடை செய்யவேண்டும் என்று கோஷமிட்டுக் கொண்டிருந்தார்கள். போலீஸ்காரர்கள், “ஷோரே ஜான்… ஷோரே ஜான்…” என்று தொண்டர்களைத் தள்ளிக்கொண்டிருந்தார்கள். அருகில் சம்பந்தமில்லாமல் நான்கைந்து இளம் பெண்கள், ஏதோ “ஜிபன நந்த தாஸ்…” என்று கத்திக்கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு நடுவே ஒரு இளம்பெண், மிரட்சியான கண்களுடன் அங்கு நிலவிய ஆவேசத்திற்கு சம்பந்தமில்லாமல் இருந்தாள். ஆனால் அழகாக இருந்தாள். வங்காளப் பெண்களுக்கே உரிய அதீத மேக்கப் இல்லாமல், லாவண்டர் நிற சல்வார் கமீஸில் எளிமையாக இருந்தாள். அவளை ப்ரமோத்திடம் காண்பித்த நான், “அழகான பெண்கள் போராடுறப்ப, அந்த போராட்டத்தோட மதிப்பு அதிகரிக்கும்” என்று கூற… ப்ரமோத் சத்தமாக சிரித்தான்.
போராட்டக்காரர்கள் திடீரென்று தியேட்டரை நோக்கி கற்களை வீச… அந்த இடத்தின் சூழல் மாறியது. சிலர் தியேட்டரின் வின்டோபேன்களை உடைக்க ஆரம்பிக்க… போலீஸ் தடியடியில் இறங்கியது. கும்பல் நாலாபக்கமும் சிதறி ஓட… போலீசார் கையில் கிடைத்தவர்களைப் பிடித்து வேனில் ஏற்றினர். கும்பலில் நாங்களும் நெருக்கித் தள்ளப்பட… ப்ரமோத் எங்கே போனான் என்றே தெரியவில்லை. ப்ரமோத்தைத் தேடியபோதுதான் மீண்டும் அந்தப் பெண்ணைப் பார்த்தேன்.
அந்த அழகிய, லாவண்டர் நிற சல்வார் கமீஸ் பெண் நானிருக்கும் திசையை நோக்கித்தான் ஓடி வந்தாள். அப்போது போலீஸ் அந்தப் பெண்ணின் தலையில் தடியால் தாக்க… அவள் தலையிலிருந்து ரத்தம் வழிய ஆரம்பித்தது. “ஆ…” என்று அலறியபடி நின்றுவிட்ட அந்தப் பெண்ணைப் பிடித்து போலீஸ்காரர் இழுக்க… நான் சட்டென்று அந்த முடிவை எடுத்தேன். அவளை வேனில் ஏற்ற விடக்கூடாது. வேகமாக அவளருகே சென்ற நான், அவள் கையைப் பிடித்து இழுத்துக்கொண்டு ஓட ஆரம்பித்தேன். “தாராதாரி தௌரே எஷோ… கம் ஃபாஸ்ட்…” என்று கத்தியபடி ஓடினேன். எங்களோடு பலரும் ஓடி வர… போலீஸ் எங்களைத் துரத்தியது. தியேட்டருக்கு பின்பக்கம்தான் என் வீடு.
எங்கள் வீதிக்குள் நுழைந்த நான், என் வீட்டை நோக்கி ஓடினேன். வேகமாக வீட்டுக் கதவைத் திறந்தேன். அந்தப் பெண்ணைப் பிடித்து வீட்டுக்குள் இழுத்து கதவைச் சாத்திய பிறகுதான் என் பதட்டம் தணிந்தது. இப்போது நிதானமாக அவளைப் பார்த்தேன். அவள் கண்கள் இன்னும் அதிர்ச்சியிலிருந்து விடுபடவில்லை. அவள் நெற்றியில் ரத்தத்தைப் பார்த்து, வேகமாக ஃபர்ஸ்ட் எய்ட் பாக்ஸை எடுத்து வந்தேன். பஞ்சால் ரத்தத்தை துடைத்தேன். அவள் கைவிரலை வாயில் வைத்து தண்ணீர் கேட்டாள். நான் தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தேன். வேக, வேகமாக அவள் தண்ணீரைக் குடித்து முடித்தவுடன், காயம் பட்ட இடத்தில் பிளாஸ்திரியை ஒட்டினேன். வலியில் ‘ஸ்…” என்று முகத்தை சிணுங்கியபோது மேலும் அழகாக தெரிந்தவளை, இப்படி சுருக்கமாக வர்ணிக்கலாம். மற்ற அழகிகள் எல்லாம் ‘அழகி’ என்றால், இவள் ‘அழகி’
“அமர் நாம் மனோஜ்… அப்னார் நாம்?” என்று அவள் பெயரைக் கேட்டேன்.
“அமோதிதா…”
“அமோதிதா… பியூட்டிஃபுல் நேம்”
“அமோதிதா மீன்ஸ் ஹேப்பினெஸ்”
நான் வங்காளத்தில், “எப்போதும் ஹேப்பியா இருக்கவேண்டிய பொண்ணு, இங்க எப்படி போராட்டத்துல? உங்களப் பாத்தா… அரசியலுக்கும், உங்களுக்கும் சம்பந்தம் இருக்கிற மாதிரி தெரியல” என்றேன்.
“நான் பார்ட்டி ஆள் இல்ல. ‘ஹே ராம்” படத்துல வர்ற ‘ஜன்மோன் கி ஜ்வாலா’ பாட்டுல(தமிழில் ‘நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி’) ஜிபன நந்த தாஸ் கவிதையை ஆபாசமா பிக்ச்சரைஸ் பண்ணியிருக்கிறதா கேள்விப்பட்டு, ஆர்ப்பாட்டம் பண்ண வந்தோம்…”
“அப்படியா? நான் இன்னும் படத்தைப் பாக்கல. லிட்ரேச்சர் படிக்கிறீங்களா?”
“லாஸ்ட் இயர் படிச்சு முடிச்சுட்டேன். ஸ்காட்டிஸ் சர்ச் காலேஜ். பிஏ ஹானர்ஸ் இன் பெங்காலி… தினமும் அலிப்பூர் நேஷனல் லைப்ரரில, நாங்க ஃப்ரண்ட்ஸ்ல்லாம் மீட் பண்ணுவோம். இந்த மாதிரி போராட்டம் நடத்தப் போறாங்கன்னு கேள்விப்பட்டு வந்தோம்.” என்றவள் சட்டென்று எழுந்தாள்.
“கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துட்டு போலாமே…” என்றேன்.
“இல்ல… நான் கிளம்புறேன். நீங்க தனியா இருக்கீங்க…” என்று இழுத்தாள்.
“நீங்க பயப்படவேண்டியதில்ல. நான் காலேஜ் படிக்கிறப்ப, கூட படிக்கிற ஹிந்திக்கார பொண்ணுங்க ராக்கி கட்ட வர்றப்ப… அத்தனை பசங்களும் தலைமறைவாயிடுவாங்க. நான் மட்டும் நானா போய் ராக்கி கட்டிக்குவேன்” என்ற நான் அவளருகில் சென்று மெதுவாக, “ஒருத்தரும் நல்லாருக்கமாட்டாங்க” என்று கூற… அவள் மெலிதாக சிரித்தாள். தொடர்ந்து, “நான் கல்யாணம் பண்ணிக்கப்போற பொண்ணத் தவிர, இந்த கல்கத்தா ஸிட்டில இருக்கிற அத்தனை பொண்ணுங்களையும் சகோதரியாத்தான் பாப்பேன். ஆனா அந்தப் பொண்ணு யாருன்னு தெரியாததால, இப்போதைக்கு யாரையும் சகோதரியா பாக்கமுடியாது.” என்றவுடன் அவள் சத்தமாக சிரித்துவிட்டு, “ஆ…” என்று பிளாஸ்திரியின் மீது கைவைத்து அழுத்தினாள்.
“என்னாச்சு?”
“சிரிக்கிறப்ப வலிக்குது. நீங்க மதராஸியா?”
“அசல் சென்னை மதராஸி” என்றபோதுதான் அந்த ஹாலிலிருந்த பியானோவைப் பார்த்த அமோதிதா, “வாவ்…” என்று வேகமாக பியானோவை நோக்கிச் சென்றாள். முகமெல்லாம் மலர, அந்த யமஹா பியானோவை ஆசையுடன் தடவியபடி, “நான் வாசிச்சு பாக்கட்டுமா?” என்றாள்.
“உங்களுக்கு வாசிக்கத் தெரியுமா?”
“பியானோ கிரேட் ஃபோர். கல்கத்தா ஸ்கூல் ஆஃப் மியூசிக்ல படிச்சேன். ”
“நான் பியானோ… கிரேட் ஸிக்ஸ்” என்றவுடன் அவள் கண்களில் மரியாதை. பிறகு பரபரப்புடன் பியானோவுக்கு கீழிருந்த பெஞ்சை இழுத்து அமர்ந்தாள். கீழே பார்த்து பியானோவின் பெடலில் காலை வைத்துக்கொண்டாள். பிறகு அவள் கீ போர்டில் கையை வைத்து வார்ம் அப் செய்தபோது… பியானோவிலிருந்து வந்த சத்தத்தைக் கேட்டு அமோதிதாவின் கண்கள் லேசாக கலங்கியது போல் இருந்தது.
“ஹலோ… என்னாச்சு?” என்றேன்.
“பியானோவ கையாலத் தொட்டு ஆறு மாசமாவுது. என்னோட பியானோவ வித்துட்டாங்க. ஸ்டெய்ன்வே அன்ட் ஸன்ஸ். B 1994 மாடல்…. Satin ebony colour” என்றவளை நான் ஆச்சரியத்துடன் பார்த்தேன். நிச்சயமாக பணக்கார வீட்டுப் பெண். ஸ்டெய்ன்வே அன்ட் ஸன்ஸ் பியானோ B மாடல், செகண்ட்ஸிலேயே பல லட்சங்கள் இருக்கும்.
“ஏன் வித்துட்டாங்க?”
“கடன்… தலை வரைக்கும் கடன் வர இருந்துச்சு. என் பியானோவ வித்து, கழுத்தோட கடன நிறுத்திட்டாங்க. கோடிஸ்வரரா இருந்தோம். இப்ப கோடிகள்ல கடன்தான் இருக்கு” என்றவளை அனுதாபத்துடன் பார்த்தபடி, “என்ன பிரச்னை?” என்றேன்.
“பிசினஸ்ல லாஸ்…” என்றவள் பியானோவில் வாசிக்க ஆரம்பித்தாள், என்னை நோக்கி கண்களால் “என்னான்னு தெரியுதா?” என்றாள். சற்றே யோசித்துவிட்டு, “பீதோவன்… மூன்லைட் ஸொனாட்டா…” என்று நான் கூற… புன்னகைத்துவிட்டு இசையில் ஆழ்ந்தாள். முழுமையாக வாசித்து முடித்துவிட்டு, “ஹௌ இஸ் இட்?” என்றாள். “அங்கங்க பிசிறு தட்டினாலும் ஓகே…” என்று சத்தமின்றி கைத்தட்டினேன்.
“நீங்க எதாச்சும் வாசிங்க” என்று எழுந்தாள். சற்றே யோசித்த நான், அவள் எந்தப் பாடலை எதிர்த்து போராட வந்தாளோ அதையே வாசிக்க முடிவு செய்தேன்.
சில நிமிடங்கள் வார்ம் அப் செய்தேன். பிறகு C மைனர் கீயில் ‘நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி’ பாடலின் ப்ரீலூடை வாசிக்க ஆரம்பித்தேன். இடையில் கண்களால், “என்னெவென்று தெரிகிறதா?” என்றேன். அவள் உதட்டைப் பிதுக்கினாள். முதலில் சாதாரணமாக பார்க்க ஆரம்பிததவள்… பிறகு பாடல் வளர வளர… பிரமிப்பாக பார்த்தாள். கடைசியாக நான் “உயிரே… வா,..” என்று முடித்தவுடன் படபடவென்று கைத்தட்டினாள். “Great music and well played...” என்று என் கையைப் பிடித்து குலுக்கினாள்.
“இது வரைக்கும் இதை நான் கேட்டதே இல்ல…
.யாரோட மியூசிக்?” என்றாள்.
“நீயே சொல்லு”
“மார்த்தா?” என்றாள்.
“இல்ல”
“ஆர்த்தர் ரூபின்ஸ்டெய்ன்?”
“இல்ல…. இளையராஜா…”
“யா… கேள்விப்பட்டிருக்கேன். தி க்ரேட் மதராஸி மியூஸிக் டைரக்டர்”
“ஓகே… இது எப்படி இருந்துச்சு?”
“ஃபன்ட்டாஸ்ட்டிக்… லாட் ஆஃப் மூவ்மென்ட்ஸ்…”
“எஸ்… அப்புறம் கடைசில… அந்த B மேஜர் கார்டு…. சான்ஸே இல்ல. அதுதான் அந்த பாட்டுக்கு ஒரு ஹோல்னெஸ கொடுக்குது…”
“யா… யா…”
“இந்த பாட்டுக்கு முன்னாடிதான் அந்த கவிதை வருது…”
“எந்த கவிதை?” என்றாள் சட்டென்று புரியாமல்.
“இப்ப நீங்க போராட வந்தீங்களே…. அந்தக் கவிதை. இந்த பாட்டு ‘ஹே ராம்’ படத்துலதான் வருது” என்றவுடன் அவள் முகம் மாறி, “அதை எப்படி எடுத்துருக்காங்கன்னு தெரியல. ஆனா இப்ப இந்தப் பாட்டக் கேட்டதும், பழைய கோபம் குறைஞ்சுடுச்சு…” என்றாள்.
“தி பவர் ஆஃப் மியூசிக்” என்றேன்.
“எனக்கும் அந்த பாட்ட வாசிக்கணும் போல இருக்கு. நோட்ஸ் இருக்கா?”
“நாளைக்கு வாங்க… நான் நோட் எழுதி வைக்கிறேன்”
“சரி… நாளைக்கு இதே டைம் வரேன்…”
“நான் தனியாதான் வீட்டுல இருப்பேன்” என்றேன் சிரித்தபடி.
“பரவால்ல… உங்க ஃபேமிலில்லாம்…” என்று இழுத்தாள்.
“அப்பா டெல்லில ஐஏஎஸ் ஆஃ.பிஸர். அம்மா… இங்க ஐஆர்எஸ் ஆஃபிசர். ஒரு அண்ணன், அஹமதாபாத்ல எம்பிஏ பண்றான். நான் ஸ்கூல் வரைக்கும், சென்னைல பாட்டி வீட்டுல தங்கிதான் படிச்சேன். காலேஜ்ல்லாம் இங்க… எம்.ஏ. மாஸ் கம்யூனிகேஷன். ரெண்டு வருஷம் ஹெச்டிஏ-ல ஒர்க் பண்ணினேன். இப்ப சொந்தமா அட்வர்டைசிங் கம்பெனி தொடங்குறதுக்காக ஆஃபிஸ் பாத்துகிட்டிருக்கேன்” என்றேன்.
“ஓகே… நாளைக்கு பாக்கலாம்” என்று கிளம்பினாள் அமோதிதா.
மறுநாள் வந்தவுடன், “நோட் எழுதிட்டீங்களா?” என்றாள். நேற்றிரவே நெடு நேரம் கண் விழித்து, போராடி எழுதிவிட்டேன். ஆனால் இதை வைத்துதான் அவளிடம் பழக்கத்தை நீட்டிக்கவேண்டும் என்பதால், “இன்னும் இல்ல” என்றேன். “அப்ப சரி…” என்று வேகமாக செருப்பை மாட்டினாள்.
“ஹேய்… என்ன கிளம்பறீங்க?”
“பின்ன… நோட் எழுதல… கிளம்பறேன்?”
“இல்லன்னா என்ன? வேற எதாச்சும் பேசலாம் இல்ல?”
“வேறன்ன பேசணும்?”
“’வாட்டர் படத்தோட டைரக்டர் தீபா மேத்தா, ஸிஎம் ஜோதிபாஸப் பாக்கப்போறாங்க. அதைப் பத்தி பேசலாம். இல்லன்னா சௌரவ் கங்குலியோட கேப்டன்ஸிப் பத்தி பேசலாம்”
“ஸாரி… அதைப் பத்தில்லாம் எனக்குத் தெரியாது”
“சரி… உங்களுக்கு தெரிஞ்ச விஷயத்தைப் பத்தி பேசுங்க…”
“ம்….” என்று யோசித்தவள், “ஜிபன நந்த தாஸ் பற்றி பேசலாமா?” என்றவுடன் “ஜிபன நந்த தாஸா?” என்று நெளிந்தேன்.
“அதான்… ஹே ராம் பாட்டுல வர்ற அந்த கவிதை…. ஆகாஷே ஜ்யோட்ஸ்னா…”
“அவரா? ம்… சொல்லுங்க…” என்றேன் ஆர்வமின்றி.
“வாழும் காலத்துல அதிகம் பேசப்படாத பெங்காலி கவிஞன். நாவல்லாம் கூட எழுதியிருக்காரு. 1927-ல அவரோட ‘ஜாரோ பாலக்’-ங்கிற முதல் கவிதைத் தொகுப்பு வெளிவந்துச்சு. அப்புறம்... அவரோட ‘ருபாஸி பங்ளா’ கேள்விப்பட்டிருக்கீங்களா? ஆக்ச்சுவலா அது 1934-ல எழுதினது. ஆனா அவரு இறந்த பிறகு, 1957-லதான் புத்தகமா வந்துச்சு. அதுக்கு ரேப்பர் டிசைன் பண்ணது யாருன்னு தெரிஞ்சா ஆச்சர்யப்படுவீங்க”
“யாரு?”
“தி கிரேட் சத்யஜித்ரே…”
“ஓ….”
“அந்தக் கவிதைய பங்களாதேஷ் போராட்டத்தப்ப பயன்படுத்தினாங்க. அது வங்காளத்தோட கிராமப்புறங்களோட….” என்று அவள் கூறிக்கொண்டேச் செல்ல… நான் கஷ்டப்பட்டு கொட்டாவியை அடக்கினேன். எனது முகத்தைக் கவனித்த அமோதிதா, “போரடிக்கிறனா?” என்றாள்.
“சேச்சே…”
“அப்ப சரி…. நிறைய கவிஞர்களப் போல, இவருக்கும் காதல் தோல்வி. அவர் ஷோவனாங்கிற அவரோட சொந்தக்காரப் பொண்ண காதலிச்சிருக்காரு. ஆனா அந்தப் பொண்ணு, கல்யாணம் பண்ணிக்கிற முறை கிடையாது. அதனால அந்த லவ் ஃபெயிலியராயிடுச்சு. அவரோட முதல் தொகுப்பை அந்தப் பொண்ணுக்குதான் டெடிகேட் பண்ணியிருக்காரு…” என்று தொடர… அதற்கு மேல் பொறுக்கமுடியாத நான், “அமோதிதா… நௌ வீ ஆர் இன் 2000. வேற ஏதாச்சும் பேசலாமே…” என்றவுடன் முகம் மாறிய அமோதிதா, “அப்ப நான் போறேன்” என்றாள்
“எங்க?”
“அலிப்பூர் லைப்ரரிக்கு”
“டெய்லி வீட்டுல இருக்கமாட்டீங்களா?”
“ம்ஹ்ம்… வீடு நரகம். தினம் கடன்காரங்க வந்து சத்தம் போட்டுட்டு போவாங்க. அதனால தினம் வெளியதான் சுத்திகிட்டிருப்பேன்”
“நானும் உங்க கூட சுத்தட்டுமா?”
“தாராளமா சுத்தலாம்”
சுற்றினோம். தினம் தினம் சுற்றினோம்.
விக்டோரியா மெமோரியல் ஹாலுக்கு வெளியே இருந்த தோட்டத்தில் நடந்தபடி, “உங்களுக்கு பெங்காலி பெண்களப் பிடிக்குமா? தமிழ் பெண்களப் பிடிக்குமா? என்றாள்.
“ஒரு பெங்காலிப் பொண்ணு இந்தக் கேள்வியக் கேட்டா, பெங்காலிப் பெண் பிடிக்கும்பேன். தமிழ்ப் பெண் கேட்டா தமிழ்ப் பெண் பிடிக்கும்பேன்”
அமோதிதா சத்தமாக சிரித்தாள்.
மார்பிள் பேலஸின் பிரமாண்டமான தூணில் சாய்ந்துகொண்டு, “நீங்க யாரையாச்சும் லவ் பண்ணியிருக்கீங்களா?” என்றாள்.
“ஸ்கூல் டேஸ்ல… அதை லவ்வுன்னு சொல்லமுடியாது. ஒரு பொண்ணு மேல ஒரு சின்ன க்ரஸ்… அவளோட ஒவ்வொரு கண்ணுக்குள்ளயும் ரெண்டு ரெண்டு கண்ணு…. பாத்தான்னா மனசுக்குள்ள பூ உதிரும். “உன் பென்சிலக் கொஞ்சம் தர்றியா?’ன்னு கேட்டா, “நம்ப கல்யாணம் பண்ணிக்கலாம் வர்றியா?”ன்னு கேட்ட மாதிரி புல்லரிச்சுப்போயிடும்… க்ளாஸ்ல சும்மா சும்மா திரும்பி என்னைப் பார்ப்பா… ஆனா அப்புறம்… ஒரு நாள் என்னைத் தனியா கூப்பிட்டு, ‘உன்னைப் பாத்தா ஆக்ஸிடென்ட்ல செத்துப்போன என் அண்ணன் மாதிரியே இருக்கு. உனக்கு ‘எல்லாமே… என் தங்கச்சி…’ பாட்டுத் தெரியுமா?”ன்னு கேட்டா”
“ம்… அப்புறம்” என்றாள் அமோதிதா சிரிப்பை உதட்டுக்குள் அடக்கியபடி.
“வேற வழி… அந்தப் பாட்ட பாடிட்டு வந்துட்டேன்”
அமோதிதா வெடித்துச் சிரித்தாள்.
ட்ராம் வண்டியில் மெதுவாகச் செல்லும்போது, “இந்த பார்க்லருந்து க்ராஸ் பண்றப்பதான்…” என்ற அமோதிதா, “வேண்டாம்… விடுங்க…” என்றாள்.
“பரவால்ல… சொல்லு…”
“ட்ராம் வண்டி மோதி இறந்துபோய்ட்டாரு”
“யாரு?”
“ஜிபன நந்த தாஸ்…” என்று அவள் கூற… நான் “துர்காமாதாஜி… என்னைக் காப்பாத்து…” என்றபடி எழுந்து வேறு சீட்டில் அமர்ந்துகொண்டேன். வேகமாக என் அருகில் வந்து அமர்ந்தபடி, “ஸாரி… ஸாரி…” என்றாள். நான், “வாழ்க்கை தினமும் எதாவது ஒரு பாடத்தக் கத்துத் தருது” என்றேன்.
“யா… யா… இட்ஸ் ட்ரூ. இன்னைக்கி என்ன பாடம் கத்துகிட்டீங்க?”
“லிட்ரேச்சர் படிச்சப் பொண்ணுங்களோட பழகக்கூடாது…” என்று கூற… சத்தமாக சிரித்த அமோதிதா, “தேங்க் யூ மனோஜ். நீ என்னை ரொம்ப நாள் கழிச்சு சிரிக்க வைக்கிற… வீட்டுக் கவலைய மறக்க வைக்கிற…” என்ற அமோதிதாவை உற்றுப் பார்த்தேன்.
எனது வாழ்க்கையின், மிக மிக அழகான நாட்கள் அவை. கடவுளால் சிறகுகள் பொருத்தப்பட்ட… பூக்கள் கோர்க்கப்பட்ட… நட்சத்திரங்கள் பதிக்கப்பட்ட…. நாட்கள் அவை. பனிப்புகை வீட்டிற்குள் நுழைவது போல், அமோதிதா மெல்ல மெல்ல என் மனதிற்குள் நுழைந்து, நாள் முழுவதும் என்னைச் சில்லிட வைத்த தருணங்கள் அவை.
நான் எனது காதலை அவளிடம் சொல்ல முடிவெடுத்த பிறகுதான், ‘நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி’-யின் பியானோ ஸ்கோர் தாளை அவளிடம் கொடுத்தேன். அமோதிதா வாசிக்க ஆரம்பித்தாள். ப்ரீலூட் முடிந்தவுடன், ராணி முகர்ஜியை விட அற்புதமான குரலில் அமோதிதா அந்தக் கவிதையை உச்சரிக்க ஆரம்பிக்க… எனக்கு சிலிர்த்துப்போனது.
“ஆகாஷே ஜ்யோட்ஸ்னா…
புலேர் பதே… சித்தா பாகர் காயர்…”
என்று அவள் உச்சரிக்க… உச்சரிக்க… அவள் முகம் பரவசமாக மாறி, கண்கள் அந்தரத்தில் ஏக்கத்துடன் சஞ்சரித்தது. அவள் கவிதையை முடித்துவிட்டு “ஆஹாஹஹா… ஆஹாஹஹா…” என்று பாடலை ஆரம்பித்தாள். அவள் பியானோ வாசிக்க… இருவரும் சேர்ந்தாற் போல் தமிழிலும், ஹிந்தியிலும் மாற்றி மாற்றி பாடினோம்.
நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி…
மில்னே கி த்ரிஷ்னா தி மன் மெய்ன்…
அயராத இளமைச் சொல்லும் நன்றி நன்றி…
அபுனா… ரஹி மனுமெய்ன் கோயி ஹல்ச்சல்…
தொடர்ந்து பாடினோம். இரண்டாவது சரணத்தின் முடிவில், “உயிரே… வா…”” என்று நான் முடித்தபோது, என் உயிர் பியோனோவிலிருந்து எழுந்து என்னருகில் வந்திருந்தது. நெருக்கமாக நின்றுகொண்டு அமோதிதா என்னை உற்றுப் பார்த்தாள். அப்போது அவள் கண்களில் தெரிந்த காதலை, கொஞ்சம் முயன்றால் தனியாக கையில் எடுத்து, புகைப்படமாக எடுத்துவிடலாம் போல் தோன்றிது. அதற்கு மேல் பொறுக்கமுடியாத நான் சட்டென்று அவளை இழுத்து அணைத்தபடி, “ஐ லவ் யூ… ஐ வான்ட் டு மேரி யூ…” என்றேன். சில வினாடிகள் மௌனமாக என்னை அணைத்திருந்த அமோதிதா என்ன நினைத்தாளோ? சட்டென்று என்னிடமிருந்து விலகினாள். அவள் கண்களில் இப்போது அந்த காதல் இல்லை.
“ஸாரி மனோஜ்… உன் காதல ஏத்துக்கிற சூழ்நிலைல நான் இல்ல…” என்றாள் தலையைக் குனிந்தபடி.
சில வினாடிகள் மௌனமாக அவளைப் பார்த்த நான், “நீ என்னைக் காதலிக்கலையா? இல்ல… என் காதல ஏத்துக்கிற சூழ்நிலைல இல்லையா?” என்றேன். அமோதிதா கண்களைத் துடைத்துக்கொண்டு, “நான் மூழ்கிட்டிருக்கிற கப்பல்ல இருக்கேன் மனோஜ்…” என்றாள்.
“நான் உன் கையைப் பிடிச்சு காப்பாத்துவேன் அமோ….”
“என்னைக் காப்பாத்துவ… என் தங்கை… தம்பி… அம்மா… அப்பா…. இப்ப எங்க வீடு இருக்கிற சூழ்நிலைல காதலப் பத்தி என்னால நினைச்சுக் கூட பாக்கமுடியாது…”
“நீ என்னைக் காதலிக்கலன்னா விட்ருவேன் அமோ… ஆனா நீ என்னைக் காதலிக்கிற… ஏத்துக்கத்தான் தயங்குற… ஸோ… ஐ வில் நாட் லீவ் யூ…” என்ற நான் செல்ஃபிலிருந்து அந்த நகைப் பெட்டியை எடுத்தேன். அதில் அஞ்சலி ஜீவல்லர்ஸில் நான் வாங்கிய வளையல்கள் இருந்தது. “என்னோட காதல் பரிசு…” என்று அவளிடம் வளையல்களை நீட்டினேன்.
“வேண்டாம். என்னை விட்டுரு…” என்ற அமோதிதா தனது ஹேண்ட்பேகை எடுத்துக்கொண்டாள்.
“நோ…” என்ற நான் அவள் ஹேண்ட்பேகில் வலுக்கட்டாயமாக அந்த வளையல்களை திணித்துவிட்டு, “நல்லா யோசி…. ஓகேன்னா நாளைக்கு இந்த வளையலப் போட்டுட்டு வா… இல்லன்னா எப்பவும் என்னைப் பாக்க வராத….” என்றேன்.
“மனோஜ்… ப்ளீஸ்…. நான் சொல்றத புரிஞ்சுக்க…”
“இப்ப நீ போகலாம்…” என்ற நான் முகத்தை திருப்பிக்கொண்டேன்.
மறுநாள் காலை, ஒன்பது மணிக்கு மேல் எனக்கு ஃபோன் செய்த ப்ரமோத்தின் குரலில் பதட்டம்.
“மனோஜ்… ஒரு ஷாக்கிங் இன்ஃபர்மேஷன்… கடன் பிரச்னையால நேத்து கோர்ட்ல, அமோதிதாவோட அப்பா வீட்ட அட்டாச் பண்ணி, ஏலம் விடச் சொல்லிட்டாங்களாம். அதனால…” என்று இழுத்தான்.
“அதனால?” என்ற எனக்கும் பதட்டம் தொற்றிக்கொண்டது.
“ஏற்கனவே நிறைய கடன்… இப்ப வீட்டையும் அட்டாச் பண்றாங்கன்னவுடனே… அவங்க… அவங்க… விஷம் குடிச்சு தற்கொலைப் பண்ணிகிட்டாங்க” என்றவுடன் அமிலத்தில் நனைத்த ஊசியை யாரோ என் நெஞ்சில் செருகியது போல் இருந்தது. “அமோதிதா?” என்ற என் குரல் குழறியது. “தெரியல…” என்ற ப்ரமோத் ஃபோனை வைத்துவிட்டான். நான் பைக்கை எடுத்துக்கொண்டு, அமோதிதாவின் வீடிருக்கும் ஹிந்துஸ்தான் பார்க் பகுதியை நோக்கி பறந்தேன்.
அந்த விக்டோரியன் ஸ்டைல் பங்களா வாசலில் பெரும் கூட்டம். பங்களாவிற்கு முன்பிருந்த தோட்டத்தில் திட்டு திட்டாக ஜனங்கள். நான் பதட்டத்துடன் தோட்டத்தைக் கடந்து, பங்களா வாசலை நோக்கிச் சென்றேன். வாசலில் போலீசார் கைகளைக் கோர்த்து வேலி போட்டிருந்தனர். எங்கிருந்தோ வந்த ப்ரமோத், “உள்ள விட மாட்டன்ங்கிறாங்க மனோஜ்” என்றான். வேகமாக அவன் சட்டைக் காலரைப் பிடித்து இழுத்த நான், “அமோதிதாவுக்கு என்ன ஆச்சு?” என்றபோது என் குரல் தழுதழுத்தது.
“தெரில. சில பேரு அமோதிதாவோட அப்பா, அம்மா மட்டும் தற்கொலைப் பண்ணிகிட்டாங்கன்னு சொல்றாங்க. கொஞ்ச பேரு…. எல்லாரும் தற்கொலை…” என்ற ப்ரமோத்தின் நெஞ்சில் கைவைத்து வேகமாக தள்ளினேன். பொங்கி வந்த அழுகையை, உள்நாக்கால் உள்கன்னத்தில் அழுத்தி அடக்கினேன். அப்போது ஜனங்கள் சலசலப்புடன் பங்களா வாசலை நோக்கிச் செல்ல… நான் திரும்பிப் பார்த்தேன். வீட்டுக்குள்ளிருந்து ஒரு ஸ்ட்ரெச்சர் வருவது தெரிந்தது. நானும், ப்ரமோத்தும் வீட்டு வாசலை நோக்கி ஓடினோம். மக்கள் கும்பலாக ஸ்ட்ரெச்சரை நெருங்க… போலீஸ் பெரிய அணை போல் தடுத்து நிறுத்தியது.
நான் ஆவேசத்துடன் போலீஸைக் கடந்து செல்ல முயற்சிக்க… போலீஸார் என்னை நெட்டித் தள்ளினர். ப்ரமோத் என்னைப் பிடித்து நிறுத்தினான். முதலில் வந்த ஸ்ட்ரெச்சரில் அமோதிதாவின் அப்பா… அடுத்து வந்த ஸ்ட்ரெச்சரில் அமோதிதாவின் அம்மா… எனக்கு தொண்டையில் ஏதோ செய்து வாந்தி வருவது போல் இருந்தது. அதன் பிறகு, வேறு எந்த ஸ்ட்ரெச்சரும் வராமல் இருக்க… நான் சற்று நிம்மதியானேன். சில நிமிடங்களில் வீட்டுக்குள்ளிருந்து அடுத்தடுத்து ஸ்ட்ரெச்சர் வர… அதிர்ந்தேன்.
அழுவது போல் முகம் மாறியிருந்த ப்ரமோத், என் கையை இறுகப் பிடித்து அழுத்தினான். அந்த மூன்றாவது ஸ்ட்ரெச்சர் நெருங்கியது. அதில் இ……ரு…..ந்…..த….வ….ள்…… அமோதிதா. நெஞ்செல்லாம் வெடித்து சிதற…. நான் “அமோ…” என்று பாய்ந்து ஓட… போலீஸ்காரர்கள் என்னைத் தடுத்தனர். நான் அவர்களைப் பிடித்துத் தள்ளிவிட்டு, ஸ்ட்ரெச்சரை நெருங்கினேன். “அமோ…” என்று அலறிக்கொண்டே உயிரற்ற அவள் உடல் மீது அழுதபடி பாய்ந்தேன். போலீஸ்காரர்கள் மிகவும் சிரமப்பட்டு என்னைப் பிடித்து இழுத்தனர். அப்போது நடந்த தள்ளுமுள்ளில், ஸ்ட்ரெச்சரிலிருந்த அமோதிதாவின் உடல் நகர்ந்து… சட்டென்று அவள் கை ஸ்டட்ரெச்சருக்கு வெளியே வர…. அதில் நேற்று நான் கொடுத்த வளையல்களை அமோதிதா அணிந்திருந்தாள். “அமோதிதா…” என்று நான் அலறிய அலறலில் மொத்த இடமும் அமைதியானது.
மனோஜ் கூறி முடித்தபோது, ரவீந்தரின் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்துகொண்டிருந்தது. மனோஜ் வானத்தை நோக்கியபடி கண்களை மூடியிருந்தான். கண்ணோரம் நீர்த்துளிகள். அலைகளின் சத்தம் இப்போது மெதுவாகத்தான் இருந்தது.
தொடர்ந்து மனோஜ், “என் வளையலோட அவள் கையப் பார்த்த அந்தக் காட்சி, இன்னும் என் கண்ணுலயே இருக்கு ரவீந்தர். அந்தக் காட்சிய கடவுள் பர்மனன்ட்டா என் கண்ணுல ஃபிக்ஸ் பண்ணிட்டாரு. அவள ஆம்புலன்ஸ்ல ஏத்துற வரைக்கும், அந்த வளையல் கை அப்படியே நீட்டிட்டுதான் இருந்துச்சு. ஆம்புலன்ஸ்ல ஏத்துன பிறகும், அந்தக் கை வெளியவேதான் நீட்டிகிட்டிருந்துச்சு. ஆம்புலன்ஸ் கதவைச் சாத்துறப்பதான் கைய உள்ளத் தள்ளினாங்க. இப்பவும் அடிக்கடி கனவுல, அந்த வளையல் கை என் முகத்துல மோதும்…” என்ற மனோஜ் கண்ணீரைத் துடைத்துக்கொண்டான். மீண்டும் ஓட்கா பாட்டிலை எடுத்து அப்படியே வாயில் கவிழ்த்துக்கொண்டு, காலி பாட்டிலைத் தூக்கி எறிந்தான்.
இப்போது திரும்பி ரவீந்தரின் முகத்தைப் பார்த்த மனோஜ், “தட் வாஸ் எ பியூட்டிஃபுல் லவ் ரவீந்தர். Love in its purest form. அவ இறந்தப்பவே நானும் இறந்துருக்கணும். ஆனா… இந்த பாட்டுதான் எனக்கு உயிர் கொடுத்தது. இந்தப் பாட்டக் கேக்குற ஒவ்வொரு முறையும் நான் அவளோட வாழுறேன். நான் வாழ்றதுக்காகத்தான் இந்தப் பாட்ட கேக்குறேன்…” என்று பேசி முடித்தான்.
“சார்… நீங்க… கல்யாணம்…” என்று ரவீந்தர் இழுத்தான்.
“இல்ல… அவ இறந்த பிறகு, நான் கல்கத்தாவ விட்டு வரவே இல்ல. இப்ப எங்க பாட்டி உடம்பு சரியில்லாம இருக்காங்கன்னுதான் சென்னை வந்தேன். மரணப் படுக்கைல அவங்க, “நீ கல்யாணம் பண்ணிக்கோ’ன்னு சொன்னப்ப கூட சரின்னு சொல்லல. மறுபடியும், மறுபடியும் மறக்க நினைச்சாலும், மறக்கமுடியாத காதல் அது…” என்ற மனோஜ், நான் கொஞ்சமும் எதிர்பாராத விதமாக திடீரென்று பாடினான்.
நாடகம் முடிந்த பின்னாலும்
நடிப்பின்னும் தொடர்வது என்ன?
ஓரங்க வேடம் இனி போதும் பெண்ணே…
உயிர் போகும் மட்டும் உன் நினைவே கண்ணே…
உயிரே…. வா….
***

Saturday, July 1, 2017

Six Exemplary Ways to Represent Architectonic Construction Details

The visual presentation of a project, which architects are responsible for, must effectively communicate and analyze the organization of the project's material elements. This essential creative process allows those involved to effectively identify and even modify key aspects and components of the building during all phases of its conception.
Because of the inherent challenges of material selection and other practical issues, the development of what exactly will be built tends to be relegated to the end of the design process. But a true understanding of minor yet invaluable details is among the most interesting and important aspects of the best architectural projects.
In our search for the most outstanding recent examples of construction detail representations, we've collected a series of ten drawings that celebrate different styles and approaches.


01. Freehand Sketches

 

 via © Daniel Moreno + Sebastián Calero
When it comes to materials and details, it is necessary to understand the relationship between the project's constructive elements in both formal and spatial terms. For this, freehand sketches can be an effective tool to show organizational and material links.

02. Construction Details

  

 via © Daniel Moreno + Sebastián Calero
Recognizing the way two different structural elements will meet clearly demonstrates the design challenges that must be solved. In many cases, the work's final aesthetic is the result of approaching the project on the scale of these important yet inconspicuous details. 

03. Integrated Sections

Understanding, analyzing and communicating the material behavior of an architectural project in its totality is an essential step to avoid serious problems such as issues with the isolation of architectural elements or even mismatched joints.  



  via © Daniel Moreno + Sebastián Calero

04. 3D Schemes

Whether one must identify the relationships between a project's constructive parts or study the design's performance, three-dimensional representation allows for a clearer spatial understanding of material components, providing clear and precise visualizations of material organization.



via © Daniel Moreno + Sebastián Calero

05. Perspective Sections

In order to understand aspects of construction alongside other types of information, it's important and interesting to visualize the relationships intended to occur between spaces, giving an idea of the resultant spatial atmosphere.


  via © Daniel Moreno + Sebastián Calero

06. Construction Models

Another possible approach to the reality of construction is the development of models—a process that helps focus on key elements such as the performance of the structural system.

 via © Daniel Moreno + Sebastián Calero



விஜய் டிவி வரலாற்று பின்னணி


1994-ஆம் ஆண்டு நா. பா. வா ராமஸ்வாமி உடையாரால்,கோல்டன் ஈகிள் டெலிவிசன் நெட்வொர்க் (GEC) என்ற பெயரில் தொடங்க பட்ட, தொலைகாட்சி நிறுவனம் , பின்பு , விஜய் மல்லையாவுக்கு கை மாறி விஜய் டிவியாக உருமாறியது .கோல்டன் ஈகிள் என்ற புகழ் பெற்ற உடையாரின் பீர் மதுவின் பெயரால் துவங்கப்பட்ட இந்நிறுவனம் பின்பு மல்லையா என்ற சாராய சாம்ராட்டிற்கு கை மாறியதும் அவர் இந்த டிவி தன் பெயரிலேயே அழைக்க பட வேண்டும் என்று விரும்பி விஜய் என்று பெயரிட்டார் . 
அதன் பின் பலவிதமான கார்பரேட் காரணங்களுக்காக சேனல் ஃபாக்ஸ்(FOX) நிறுவனத்திற்கு கை மாறியது கை மாறும்போது மல்லையாவின் ஒப்பந்த விதிகளிலேயே எந்த காரணம் முன்னிட்டும் சேனல் பெயர் மாற்ற படக் கூடாது என்பது குறிப்பிட பட்டது . அதன் பின்பு 2001-ஆம் ஆண்டு ரூபர்ட் முர்டோக்கின் என்பவரின் ஸ்டார் நிறுவன த்தால் வாங்கப் பட்டு ஸ்டார் விஜய் என பெயர் மாற்றப்ப ட்டது. இன்று வரை அது தொடர்கிறது . உபரி தகவல் : உடையாரின் GEC யில் துக்ளக் சோ அவர்கள் CEO வாக இருந்தார் அப்பொழுது தான் தொலைகாட்சி நிகழ்ச்சி தயாரிப்பாளர் மற்றும் தொகுப்பாளராக என் முழு நேர அலுவல் துவங்கியது . 
அதன் பின்பு GECயில் எஸ் வி சேகர் அவர்கள் பொறுப்பேற்றார். சேனல் மல்லையா கைகளுக்கு போன பின்பு ரபி பெர்னார்ட் அவர்கள் பொறுப்பேற்றார் . அதன் பின்பு ஏ எல் மோகன் பொறுப்பேற்றார் . அதுவரை என் பணி விஜய் டிவியுடன் இணைந்து இருந்தது . சென்னையில் செகன்ட் லைன் பீச் ரோட்டில் உள்ள மெக்டோவல் ஹவுஸ் என அழைக்க படும் அலுவலகத்தில் தான் மல்லையாவுக்கு கை மாறிய பின் விஜய் டிவி சேனல் அலுவலகம் நடந்தது. அதே அலுவலகத்தில் அதற்கு முன்பு UB petro products எனப்படும் மல்லையாவின் அலுவலகம் இருந்தது அங்கு விஜய் மல்லாவை சந்தித்து இருக்கிறேன் limestone எனப்படும் சுண்ணாம்பு கற்களை UB petro products க்கு சப்ளை செய்யும் முக்கியமான கம்பெனிகளில் நான் மார்கெட்டிங் மேனேஜராக வேலை பார்த்த Bansal Chemline pvt ltd நிறுவனமும் ஒன்று அந்த சமயத்தில் நான் வேலை பார்த்த Bansal Chemline pvt ltd என்ற கம்பெனி சார்பில் விஜய் மல்லையா அளித்த பிசினஸ் லஞ்ச்சில் கலந்து கொண்ட அனுபவமும் எனக்கு இருக்கிறது . 
சில விசயங்களை மக்கள் புரிந்து கொள்ளுவதே இல்லை . மல்லையா நம் நாட்டை பொறுத்தவரை தேடப்படும் குற்றவாளி . இன்றும் அவரது நிறுவனங்கள் தங்கள் பெயரை மாற்றி கொண்டு , வியாபாரத்தை தொடர்ந்து கொண்டு தான் இருக்கின்றன . UB petro products ltd ன் இன்றைய பெயர் Spic Organics Ltd. நிறுவனங்கள் பெயர்களை மட்டுமே மாற்றி கொண்டு மாறி மாறி தங்களது கார்பரேட் ஒப்பந்தங்களை மட்டுமே மாற்றி எழுதி கொள்கின்றன . மக்கள் தங்கள் வேலைகளை விட்டு விட்டு , கருத்து காளமேகமாக மாறி , சோசியல் மீடியா வைரல்களாக பதிவிட்டு கொண்டு இருக்கின்றனர் . அது காசு மேல காசாக மாறி மழையாக பொழிகிறது . விஜய் டிவி சம்பாதிக்கிற பணம் இந்தியாவுக்கு சொந்தமல்ல .
Govindarajan Vijaya Padma