Search This Blog

Tuesday, June 20, 2017

சரபேசுவரர் சிற்பங்கள்

எட்டுக் கால்களைக் கொண்ட விலங்கொன்று மேற்குத்தொடர்ச்சி மலைகளில் வாழ்வது உங்களுக்குத் தெரியுமா? இதை நம் சங்க இலக்கியமும் பதிவு செய்திருக்கிறது என்று சொன்னால் நம்புவீர்களா? இச்செய்தியை அறிய நாம் புராணத்திருந்து தொடங்கவேண்டும். மேற்குத்தொடர்ச்சி மலைவாழ் உயிரினத்துக்கும் புராணத்துக்கும் என்ன தொடர்பு என்கிறீர்களா? தொடர்பை உருவாக்கி வைத்துள்ளார்களே, என்ன செய்வது?

இரணியன் பிரகலாதன் கதையை நாம் அறிவோம். இரணியன் இறை மறுப்பாளர். அவருடைய மகன் பிரகலாதனோ திருமால் பக்தன். கடவுள் எங்கே இருக்கிறார் என்கிற இரணியனின் கேள்விக்கு அவர் தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார் எனப் பிரகலாதன் பதில் சொல்ல இந்தத் தூணில் இருக்கிறாரா எனக்கேட்டு இரணியன் ஒரு தூணைப் பிளக்க அதிலிருந்து நரசிம்மம் வெளிப்பட்டு இரண்யன் கொல்லப்பட்டார் என்பது வைணவத்திலுள்ள புராணக் கதை.
இதைப் பின்தொடர்கிறது சைவப் புராணக்கதை. இரணியணைக் கொன்ற நரசிம்மர் சினம் அடங்காது போகவே அவரை ஆற்றுப்படுத்த, சிவன் எட்டுக்கால்கள் கொண்ட சிம்புள் பறவை உருவம் எடுக்கிறார். இது வடமொழியில் சரபம் எனப்படுகிறது. இவ்வுருவம் எடுத்ததும் சிவன் நரசிம்மரின் தோலை உரித்து ஆடையாக உடுத்திச் சினத்தை அடக்கியதால் சரபேஸ்வரர் என்கிற பெயரைப் பெறுகிறார். ஆனால் இக்கதை வைணவத்தைத் தாழ்த்த சைவ சமயத்தினர் உருவாக்கியக் கட்டுக்கதை என்பது வைணவர்களின் குற்றச்சாட்டு. இது எப்படியோ போகட்டும். சரபேசுவரர் சிற்பங்களைப் பார்ப்போம்.

சரபேசுவரர் சிற்பங்கள் தமிழகக் கோயில்களில் பிற்காலச் சோழர் காலத்திலிருந்தே தொடங்குகின்றன. வடநாடுகளை வென்ற சோழர்கள் இதை அங்கிருந்து கொண்டு வந்திருக்கலாம். இதை வழிப்பட்டால் எதிரிகள் அழிந்துப் போவர் என்பது நம்பிக்கை. இந்நம்பிக்கையில்தான் மேளாள் முதல்வர் ஜெயலலிதா திருபுவனம் கோவிலில் ‘சத்ருசம்கார’ யாகம் நடத்தினார். தமிழகத்தில் நாச்சியார்கோவில் அருகேயுள்ள துக்காச்சி எனும் ஊரிலுள்ள ஆபத்சகாயேசுவரர் கோயிலில்தான் முதலில் இச்சிலை நிறுவப்பட்டுள்ளது. நிறுவியவர் விக்கிரமச் சோழன் என்கிறார்கள்.
சரபேஸ்வரர் பறவை, மனிதர், விலங்கு ஆகிய மூன்றும் கலந்ததொரு ஆற்றல் மிகுந்த உருவம் என்று வடமொழி நூல்கள் கூறுகின்றன. மகாபாரதத்தில் புலி, யானை, சிங்கம் முதலியவற்றைக் கொன்றுண்ணும் விலங்காகச் சரபம் சொல்லப்பட்டிருக்கிறது. சிற்பங்களில் சிங்கமுகமும் இடுப்புவரை நான்கு கைகளைக் கொண்ட மனித உடலும் அதற்கிரு இறக்கைகளும் கொண்டதாக இது இருக்கிறது. இடுப்புக்கு கீழே நீண்ட வாலுடன் கூடிய ஒரு விலங்கின் உடல்.
ஆனால் இப்படியொரு விலங்கு நம் மேற்குத்தொடர்ச்சி மலைகளில் வாழ்ந்ததாகவும் அதை நம் சங்க இலக்கியம் பதிவு செய்திருப்பதாகவும் அன்பர் ஒருவர் கூறியபோது அதிர்ச்சி அடைந்தேன். எட்டு கால்களுள்ள ஓர் உயிரினத்தை உலகின் எந்தவொரு இயற்கையலாளர்களும் இதுவரை கண்டதில்லை. ஆனால் இக்கற்பனை உருவம் தமிழ்நிலத்தைச் சார்ந்தது என்கிற பழிச்சொல்லைத்தான் தாங்க முடியவில்லை. உயிரினங்கள் குறித்து நுண்மான் நுழைப்புலத்துடன் விவரிக்கும் நம் இலக்கியத்தில் இப்படியொரு அபத்தம் நிகழ வாய்ப்பில்லை. பாலையும் நீரையும் அன்னம் தனித்தனியே பிரிக்கும் என்பது போன்ற ஒருசில மிகை கற்பனைகள் இருக்கிறதே தவிர, புதியதொரு உயிரினத்தையே உருவாக்கி அது உலாவ விடாது என்பது என் நம்பிக்கை.
ஆனால் அன்பர் தமிழில் புலமை வாய்ந்தவர். எனவே அவரிடமே விளக்கம் கேட்டேன். அவர் இலக்கியங்களில் அது 'எண் கால் புள்' என்று குறிப்பிடப்பட்டிருப்பதாகத் தெரிவித்தார். எனக்கு அன்று உடனே விளங்கவில்லை. ஆனாலும் அன்பருக்கு தமிழ்மேலுள்ள பற்றைவிடச் சைவ சமயத்தின் மேலுள்ள பற்று அதிகமென்பதால் எனக்குள் ஓர் உறுத்தல் இருந்துக்கொண்டே இருந்தது. பி.எல் சாமி அவர்களின் சங்க இலக்கியத்தில் விலங்கின விளக்கம் என்கிற நூலைப் படித்தபோது இவ்வுறுத்தல் தீர்ந்தது.
மீமிசைக் கொண்ட கவர் பரிக் கொடுந் தாள்
வரை வாழ் வருடை வன் தலை மாத் தகர்
- மலைபடுகடாம் (502 - 503)

இவ்வரிக்கு உரை எழுதிய நச்சினார்க்கினியர் வருடை என்ற சொல்லுக்கு 'முதுகிடத்தே கொண்ட நிலத்தைக் கைக்கொள்ளும் செலவினையுடைய, வளைந்த காலையுடைய வரையிடத்தே வாழும் எண்கால் வருடையின் வலிய தலையினையுடைய பெரிய கிடாய்' என்றெல்லாம் சுற்றி வளைத்துப் பொருள் கூறியுள்ளார். அதாவது 'வரை வாழ் வருடை' என்கிற மலைவாழ் வருடைக்கு மேலும் நான்கு கால்களைக் கூட்டி எட்டுக்கால்களை உடைய விலங்காக மாற்றிவிடுகிறார்.
இவர் மீது மட்டும் குற்றமில்லை. நிகண்டுகளில் எண்காற் புள்ளென்பது 'வருடை' எனக் கூறப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கிறார் பி.எல்.சாமி. சேந்தன் திவாகரம், பிங்கலந்தை ஆகிய நிகண்டுகள் 'வருடை சரபம் வரை யாடாகும்' என்று கூறியுள்ளது என்கிறார் அவர். உண்மையில் இப்பாடல் வரிகள் வருடை என்கிற விலங்கின் நடத்தையைக் (behaviour) குறித்த அறிவியல் செய்தியாகும். மீமிசை என்பது உயர்ந்த மலைப்பகுதி. இம்மலையில் வாழும் விலங்குதான் வருடை. இது செல்லும் செங்குத்தானச் சரிவில் மனிதர் நடக்க முடியாது. ஆனால் வருடை ஓர் உச்சியிலிருந்து வேறொரு உச்சிக்கு தாவும். அப்படித் தாவுகையில் சறுக்கி கீழே வீழாது. ஏனெனில் அதன் கால்கள் பாறையை வலுவாகப் பிடித்துக்கொள்ளும் வகையில் அமைந்துள்ளது. இதைதான் மேற்கண்ட பாடல் வரிகள் விளக்குகின்றன. ஆனா இதில் எட்டுக்கால்கள் எங்கிருந்து முளைத்தன என்றுதான் தெரியவில்லை.
பின்பு இது முளைத்த இடத்தையும் கண்டுப்பிடிக்கிறார் பி.எல்.சாமி. 'வானாடும் பரியாயும் அரிணமாயும் வண்கேழற் களிறாயும் எண்காற் புள்மான் தானாயும்' என்கிற நீலகேசி பாடல் வரியைக் குறிப்பிட்டு இதில்தான் 'எண்காற் புள்மான்' என்றொரு பறவையும் விலங்கும் கலந்து வரும் ஓர் உயிர்வகை வருவதாகக் குறிப்பிட்டு அய்யத்தைத் தீர்க்கிறார்.
'வருடை' என்பது தற்காலத்தில் 'வரையாடு' என்று அழைக்கப்படுகிறது. Nilgris Tahr என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் இதுதான் தமிழகத்தின் மாநில விலங்கு. நல்லவேளை! தமிழ்நாட்டின் மாநில விலங்கு ‘வரையாடு’ இல்லை அது ‘சரபம்’தான் என்று மாற்றாமல் விட்டீர்களே, அதுவரைக்கும் நன்றி!

Monday, June 19, 2017

Sulfur cycle

The sulfur cycle is the collection of processes by which sulfur moves to and from minerals (including the waterways) and living systems. Such biogeochemical cycles are important in geology because they affect many minerals.

Sulfur (S), the tenth most abundant element in the universe, is a brittle, yellow, tasteless, and odorless non-metallic element. It comprises many vitamins, proteins, and hormones that play critical roles in both climate and in the health of various ecosystems. The majority of the Earth’s sulfur is stored underground in rocks and minerals, including as sulfate salts buried deep within ocean sediments.
The sulfur cycle contains both atmospheric and terrestrial processes. Within the terrestrial portion, the cycle begins with the weathering of rocks, releasing the stored sulfur. The sulfur then comes into contact with air where it is converted into sulfate (SO4). The sulfate is taken up by plants and microorganisms and is converted into organic forms; animals then consume these organic forms through foods they eat, thereby moving the sulfur through the food chain. As organisms die and decompose, some of the sulfur is again released as a sulfate and some enters the tissues of microorganisms. There are also a variety of natural sources that emit sulfur directly into the atmosphere, including volcanic eruptions, the breakdown of organic matter in swamps and tidal flats, and the evaporation of water.
Sulfur eventually settles back into the Earth or comes down within rainfall. A continuous loss of sulfur from terrestrial ecosystem runoff occurs through drainage into lakes and streams, and eventually oceans. Sulfur also enters the ocean through fallout from the Earth’s atmosphere. Within the ocean, some sulfur cycles through marine communities, moving through the food chain. A portion of this sulfur is emitted back into the atmosphere from sea spray. The remaining sulfur is lost to the ocean depths, combining with iron to form ferrous sulfide which is responsible for the black color of most marine sediments.
Since the Industrial Revolution, human activities have contributed to the amount of sulfur that enters the atmosphere, primarily through the burning of fossil fuels and the processing of metals. One-third of all sulfur that reaches the atmosphere—including 90% of sulfur dioxide—stems from human activities. Emissions from these activities, along with nitrogen emissions, react with other chemicals in the atmosphere to produce tiny particles of sulfate salts which fall as acid rain, causing a variety of damage to both the natural environment as well as to man-made environments, such as the chemical weathering of buildings. However, as particles and tiny airborne droplets, sulfur also acts as a regulator of global climate. Sulfur dioxide and sulfate aerosols absorb ultraviolet radiation, creating cloud cover that cools cities and may offset global warming caused by the greenhouse effect.

Sunday, June 18, 2017

காலித் பின் வலீத் (ரழி)(சைபுல்லாஹ்)


இஸ்லாமிய வரலாற்றில் காலித் பின் வலீத் (ரழி) ஒரு தனிச்சிறப்பிடம் உண்டு. உயரமான மலை போன்ற உறுதியான தோற்றம், மற்றும் பரந்த மார்புகள், குறிப்பிட்டுச் சொல்லும் தகுதிகளான கழுகு போன்ற கூர்ந்த பார்வை, தொலை நோக்குச் சிந்தனைத் திறன், சிறந்த அறிவாற்றல், நல்ல நினைவாற்றல் மற்றும் உயர்ந்த சிந்தனைகள், உறுதியான கொள்கைப் பிடிப்பு ஆகிய குணநலன்களை ஒருங்கே பெற்றவர் தான் காலித் பின் வலீத் (ரழி). இஸ்லாமிய போர் வரலாற்றில் இவருக்கென தனி இடம் உண்டு. இவருக்கு நிகரான குதிரை ஏற்ற வீரரும், வாள் வீச்சு மற்றும் பல்வேறு ஆயுதங்களைப் பிரயோகிக்கும் திறமை படைத்தவர்கள் கிடையாது என்று சொல்லும் அளவுக்கு வீரத்தின் விளைநிலமாகத் திகழ்ந்தார்.



உஹதுப் போர்க்களத்தில் எதிரிகளின் தரப்பில் இருந்து கொண்டு, முஸ்லிம்களை கதிகலங்கச் செய்த காலித் பின் வலீத் அவர்கள், அல் முஃதா போரிலே முஸ்லிம்கள் தரப்பில் கலந்து கொண்டு, இஸ்லாமிய எதிரிகளைக் கதிகலங்க வைத்த பெருமைக்குரியவர்.

தன்னுடைய தனித் திறமை மற்றும் போர்த்திட்டத்தின் காரணமாக ரோமர்களைப் புறமுதுகிட்டோடச் செய்து, முஸ்லிம்களுக்கு மிகப் பெரிய வெற்றியை ஈட்டிக் கொடுத்த மாவீரர். ரோமும், பாரசீகமும் காலித் பின் வலீத் (ரழி) அவர்கள் படை நடத்தி வருகின்றார் என்ற செய்தி கேட்டவுடன், அவர்களின் கைகளில் இருந்த வாள் ஆட்டம் காணும் அளவுக்கு எதிரிகளின் இதயத்தில் அச்சத்தை ஊட்டிய வீரத்தின் விளைநிலம் காலித் பின் வலீத் (ரழி) ஆவார்கள்.





இறைநிராகரிப்பாளர்களின் முன்பு காலித் பின் வலீத் (ரழி) அவர்களின் பெயர் உச்சரிக்கப்படுமானால், அவர்கள் கதிகலங்கினார்கள், அவரது வலிமை மிக்க தாக்குதல்கள் அவர்களை நிலைகுலையச் செய்தன. அதன் மூலம் மிகப் பெரிய வெற்றியை இஸ்லாமியப் போர் வரலாற்றில் ஈட்டிக் கொடுத்த பெருமை காலித் பின் வலீத் (ரழி) அவர்களைச் சாரும்.

இதன் காரணமாக இறைத்தூதர் (ஸல்) அவர்கள் "அல்லாஹ்வின் வாள்" என்றழைக்கக் கூடிய சைபுல்லாஹ் என்ற பட்டப் பெயரைச் சூட்டி காலித் பின் வலீத் (ரழி) அவர்களைப் பெருமைப்படுத்தினார்கள். இஸ்லாமிய வரலாற்றிலும் சரி.., இன்னும் வரக் கூடிய நாட்களின் போர் வரலாற்றிலும் சரி.., காலித் பின் வலீத் (ரழி), என்ற மாபெரும் வீரருக்கு தனிச் சிறப்பிடம் என்றென்றும் உண்டு.

வெற்றிகள் அவரது காலை வந்து முத்தமிட்டன, அவரது எதிரிகள் கூட அவரது வீரத்தை மெச்சும் அளவுக்கு அவர் தன்னிகரற்ற வீரராகத் திகழ்ந்தார்.

பிறப்பும் வளர்ப்பு;பும் மக்காவின் பனூ மக்சூம் என்ற குலத்தில் வலீத் பின் முகீரா என்பவருக்கு மகனாகப் பிறந்த காரணத்தால், அவரது பெருமைமிக்க குலப் பெருமையின் காரணமாக, இளமையிலேயே  எல்லோராலும் அறியப்படக் கூடிய மனிதராகக் காலித் பின் வலீத் (ரழி) அவர்கள் திகழ்ந்தார்கள். அவரது இளமைக் காலத்திலேயே தூர நோக்கு, திட்டமிட்டு செயலாற்றுதல், எடுத்த காரியத்தை கனகச்சிதமாக நிறைவேற்றுதல் ஆகியவற்றின் காரணமாக பனூ மக்சூம் கோத்திரத்து வாலிபர்களில் மிகச் சிறந்த இடத்தைப் பெற்றிருந்தார்கள்.

உஹதுப் போர் முதல் ஹுதைபிய்யா வரைக்கும் இஸ்லாமிய எதிரிகளின் தரப்பில் இருந்த காலித் பின் வலீத் அவர்கள், இஸ்லாமிய எதிரிகளின் இராணுவத்தின் துணைப் பிரிவுக்குத் தலைவராகவும், குதிரைப் படைக்குத் தலைவராகவும் இருந்து பணியாற்றிய அனுபவமிக்க இவர், அதற்குப் பின் இஸ்லாத்தின் வெளிச்சப் புள்ளிகள் அவரது வாழ்வை வெளிச்சமேற்றியதன் காரணமாக, பின்னாளில் இஸ்லாமியப் போர்ப்படைத்தளபதியாகப் பரிணமித்தார். இஸ்லாத்தின் எதிரிகளை நிலைகுலையச் செய்து, இஸ்லாமிய சாம்ராஜ்யம் அரபுப் பிரதேசத்தை விட்டும் பரவத் துணை புரிந்தார்.



தலைமைப் பொறுப்பை ஏற்றுக் கொள்ளுதல் இராணுவத் தந்திரங்கள் மூலமாக எதிரிகளை அச்சுறுத்தக் கூடிய தலைவர் ஒருவர் தான் இப்பொழுது நமது வீரர்களுக்கு தேவைப்படுகின்றார். எதிரிகளைத் துவம்சம் செய்யும் திட்டங்களுடன் நமது வீரர்களை வழிநடத்திச் சென்று, எதிரிகளை நிலைகுலையச் செய்வதன் மூலம் நமது வீரர்கள் சற்று மனவலிமை பெற்றுக் கொள்ளும் சந்தர்ப்பத்தை ஏற்படுத்துங்கள் என்று கேட்டுக் கொண்டார். பின் படையினரின் பக்கம் திரும்பிய அவர், என்னருமைத் தோழர்களே! காலித் பின் வலீத் (ரழி) அவர்களை நமது தலைவராக நீங்கள் ஏற்றுக் கொள்கின்றீர்களா? என்று கேட்டார். அவர்கள் அனைவரும் ஒருமித்த குரலில், காலித் பின் வலீத் (ரழி) அவர்கள் எங்களுக்கு தளபதியாகப் பொறுப்பேற்பதில் சந்தோஷமே என்று கூறினார்கள். இப்பொழுது, கொடியைக் கைகளில் ஏந்திக் கொண்ட காலித் பின் வலீத் (ரழி) அவர்கள், முஸ்லிம் படைக்குத் தலைமைப் பொறுப்பை ஏற்றுக் கொண்டார்.

மிகவும் உக்கிரமாக நடந்த அந்தப் போரில் காலித் பின் வலீத் (ரழி) அவர்கள் ஒரு வாள் உடைந்து போக இன்னொரு வாளை மாற்றி மாற்றி, இவ்வாறாக அந்தப் போரில் ஒன்பது வாள்களைப் பயன்படுத்தி எதிரிகளைத் துவம்சம் செய்தார்.

எதிரிகளுடன் ஒப்பிடும் பொழுது, முஸ்லிம் படைவீரர்கள் மிகக் குறைந்த அளவே இருந்தனர்.

காலித் பின் வலீத் (ரழி) அவர்களின் தந்திரமும், போர் திட்டங்களும் எதிரிகளின் திட்டங்களை தவிடுபொடியாக்கின. ஒரு சில முஸ்லிம் வீரர்களைத் தேர்ந்தெடுத்து, அவர்களை மறைந்திருக்கச் செய்து, திடீரென போர்க்களத்திற்குள் நுழையுமாறு பணித்தார்கள். திடீரென ஏற்பட்ட இந்த போர்க்களச் சூழலில், ஏற்பட்ட புழுதிப் படலம் மற்றும் ஆரவாரம் எதிரிகளை நிலைகுலையச் செய்தது. திடீர் திடீர் என வந்து போர்க்களத்திற்குள் குதித்த முஸ்லிம்களைப் பார்த்த ரோமப் படைகள், புதிய படைப் பிரிவு வந்து கலந்து கொண்டிருக்கின்றது என்று நினைத்து, அச்சத்திற்குள்ளாயினர்.

ரோமப் படைவீரர்களின் இந்த மனநிலைத் தடுமாற்றத்தைத் தங்களுக்கு சாதமாகப் பயன்படுத்திக் கொண்ட காலித் பின் வலீத் (ரழி) அவர்கள், எதிரிகளின் வளையத்திலிருந்து தனது படைவீரர்களை பாதுகாப்பான பகுதிக்கு அனைவரையும் அப்படியே, ஒதுக்கி அழைத்துச் சென்று விட்டார்கள். இதற்கு முன்பு ரோமர்கள் வெற்றி பெற்று விடுவோம் என்ற மமதையில் இருந்தார்கள். ஆனால், முஸ்லிம்களோ அவர்களின் ஒருவரையும் உயிருடன் போர்க்களத்திலிருந்து திருப்பி அனுப்பவில்லை. அவர்களது நம்பிக்கைக்கும் காரணமிருந்தது.

அதுவென்னவெனில், சற்று சில காலங்களுக்கு முன்பு தான் பாரசீகத்தை அவர்கள் வெற்றி கொண்டிருந்தார்கள். அந்த வெற்றிப் போதையானது, எண்ணி விடக் கூடிய அளவிற்கு இருந்த முஸ்லிம்களையும், வெகு எளிதாக வெற்றி பெற்று விடலாம் என்ற போதையை ஏற்றி இருந்தது.

இறைவன் காலித் பின் வலீத் (ரழி) அவர்களுக்கு வழங்கியிருந்த அந்த ஆற்றல்களும், திட்டமிடல்கள், வீரம், நிலைகுலையாத தன்மை ஆகியவற்றின் காரணமாக, எதிரிகளை வென்றெடுக்கக் கூடிய ஆற்றலைத் தந்திருந்தான்.

முதல் நாள் போரிலேயே காலித் பின் வலீத் (ரழி) அவர்கள் ஒரு வாள் உடைந்து போக மறுவாள் என்று, ஒன்பது வாள்களை அவர் மாற்றி மாற்றி போர் செய்தததைப் பார்த்து விட்ட, ரோமர்கள் இனி நாம் ஒருக்காலும் வெற்றி பெற முடியாது என்ற நிலைக்கு வந்து விட்டனர். இரண்டாவது நாள் போரில், எதிரிகளுக்கு அச்சத்தை ஊட்டி, அந்த அச்சத்தைத் தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டதோடல்லாது, தனது படைவீரர்களை மீண்டும் ஒருங்கிணைத்து, எதிரிகளின் தாக்குதல்களிலிருந்து பாதுகாப்பான இடத்திற்கு நகர்த்திச் சென்றதையும் அவர்கள் கண்டு விட்டு, இனி வெற்றி என்பது இல்லை என்ற முடிவுக்கே வந்து விட்டனர். மோசமான, மிகவும் ஆபத்தான இந்தச் சூழ்நிலையில் தனது படைவீரர்களை ஒருங்கிணைத்து அவர்களைப் பாதுகாப்பான இடத்திற்கு நகர்த்திச் சென்றதோடல்லாமல், எதிரிகளையும் நிலைகுலையச் செய்த காலித் பின் வலீத் (ரழி) அவர்களின் திட்டம், இன்றைக்கும் உலகப் போர் வரலாற்றில் மறக்க முடியாத சம்பவங்களாகப் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.