Search This Blog

Saturday, May 28, 2016

ராகு -- கேது --காலசர்ப்ப தோஷம் --பரிகாரம்


யார் இந்த ராகு கேது ?
இவர்களால் ஏற்படும் தோஷம் என்ன ?
என்பதனை பற்றி சில விவரத்தை இங்கு அறிந்து கொள்வோம் ..
முதலில் சில 
சில சுருக்கமான புராண தகவல்கள் தெரிந்து கொள்வோம் .

ஆதிபராசக்தி தேவியை வழிபாடு செய்து தரிசனம் செய்த துர்வாச முனிவருக்கு அம்பாள் வேண்டும் வரம் கேள் என்றவுடன் முனிவர் 
தனக்கு எந்த தேவைகளும் இல்லை தங்களை தரிசிக்கும் பாக்கியம் 
கிடைக்க வேண்டும் என்றதும்
அம்பாள் மகிழ்ந்து தான் கழுத்தில் இருந்த பூமாலையை அவருக்கு கொடுத்து ஆசிர்வதித்து அனுப்பினாள்.
இந்த பூமாலையுடன் வந்த முனி அதை இந்திரனிடம் கொடுத்தார்.
இந்திரன் கர்வமாக அதை பெற்று தன்னுடைய யானையின் கழுத்தில் அனுவித்தான்.
கடும் சினம் கொண்ட முனிவர் தேவ குலத்தில் பிறந்து அமரர் என்று பெயர் உடைய நீயும் உன் குலத்தவர் அனைவரும் இனி அரக்க ஜென்மமாக மாறி விடுவிர்கள் என்று சபித்தவுடன் இந்திரன் அமர்தன்மையை இழந்து முனிவரின் சாபத்தை அடைந்தான் .

இந்திராணி பயந்து முனிவரிடம் மன்னிப்பு கேட்டு தன் கணவன் செய்த 
குற்றத்துக்கு இந்திரனுக்கு மன்னிப்பு கொடுத்து மீண்டும் அமரனாக வேண்டும் என்றாள் .
முனிவர் அமிர்தம் உண்டால் மீண்டும் தேவர்களாக முடியும் என்று சொல்லி சென்று விட்டார் .
அமிர்தம் பற்றி கருடன் அறிவார் அவரை கேட்கலாம் என்றால் அவர் தான் தாயிக்காக ஒரு முறை எடுத்து வந்தது பெரும் பாடு ,
நாம் என்ன செய்வது என்று குழம்பிய பொழுது 
நாரதர் விவரம் அறிந்து வந்தார் .
சில விவரம்களை சொன்னார் .

அதன் படி பெருமாளின் உதவியோடும் காற்றை உண்டு வாழும் வாசுகி பாம்புபை கயிறாக வைத்து மந்திர மலையால் பால் கடலை 
கடைந்தால் அமிர்தம் உண்டாகும் என்றார் .

இந்த யோசனையை ஒத்து கொண்ட தேவர்கள் பெருமாளின் அனுமதியோடு 
கடைய முயற்சிக்கும் பொழுது நபர்கள் போதவில்லை .
இந்திரன் அசுரர்களிடம் நாம் சேர்ந்து கடைந்தால் வரும் அமிர்தத்தில் 
உங்களுக்கு பங்கு தருகிறேன் என்று ஆசை உண்டாக்கினான் .
நம்பிய அவர்கள் தலை பாகத்தில் அமிர்தம் வரும் என்று நம்பி நின்று கொண்டார்கள் .
கடையும் பொழுது தலையில் இருந்து நஞ்சு வெளிப்பட்டு எல்லா அசுரர்களும் இறந்தார்கள்
முடிவில் வந்த அமிர்தம் பகிர்ந்து கொள்ள முனைந்த பொழுது சில அசுரர்கள் உயிருடன் இருப்பது இந்திரனுக்கு தெரிந்தது .
சண்டை ஆரம்பம் ஆவது போல் இருக்கவே பெருமாள்

மோகினி அவதாரம் எடுத்து அமிர்தத்தை பிரித்து தருவதாக சொன்னவுடன் எல்லோரும் அமைதியானார்கள் .
முதலில் வரிசையில் நின்ற தேவர்களுக்கு நிறைய அமிர்தம் தரபட்டது
இதை கவனித்த ஒரு அசுரன் சூரியனுக்கும் சந்திரனுக்கும் நடுவில் புகுந்து அவர்களுக்கு அறியாதவண்ணம் அமிர்தம் பெற்று உண்டான் .

இதை கவனித்த இந்திரன் மகாவிஷ்ணுவிடம் முறையிட அவர் சக்ராயுதத்தால் தலையைக் கொய்தார்..
அமிர்தம் உண்டதால் உயிர் பிரிய வில்லை ,தலையும் முண்டமும் துடித்தது .
இந்திரன் என்ன செய்வது என்று புலம்பும் பொழுது ,பெருமாள் அவன் உடலில் 
இறந்த வாசுகி பாம்பின் தலையும் ,உடம்பையும் வைத்து விடு.
என்று சொன்னார் .
அதன் படி செய்ய பட்டது .
தேவர்கள் போல் தலையும் பாம்பின் உடலும் ,
பாம்பின் தலையும் தேவர்கள் உடலையும் பெற்று இரு 
உருவமாக நின்றவனை 
யாரும் சேர்த்து கொள்ள வில்லை .

இவர்கள் ராகு கேது என்று பெயர் பெற்றார்கள் .
ராகு- மனித முகமும் பாம்பின் உடலுடனும்.
கேது- பாம்பின் தலையும் மனித உடலுடனும் உருப்பெற்றனர்.

தொடர்ந்து இவர்கள், கடும் தவம் புரிந்து சிவபெருமானின் அருளால், நவக்கிரக பதவியை அடைந்தனர்.
நிழல் கிரகமான இவர்கள் சக்தி தேவி மற்றும் விநாயகர் அவர்களின் கட்டுபாட்டில் மனித வாழ்கையில் நுழைந்தார்கள் .
மனிதனின் உடலில் 9 ஓட்டைகள் உண்டு இவர்கள் காற்றாக நம்முடைய 
உடலில் நுழைவார்கள் .
தலை பாகம் கேதுவுக்கு கால்பாகம் ராகுவுக்கு என்று பிரித்து கொண்டு நம்மில் வாசம் செய்வார்கள்.

சோதிட உலகில் இவர்கள் பங்கு பெரிய தொல்லைகளாக உடையதாக இருக்கிறது .
ஆண்டியை அரசனாக்கும் வல்லமை ராகுவுக்கும்; அரசனை ஞானியாக்கும் ஆற்றல் கேதுவுக்கும் கிடைத்ததாகச் சொல்வர்.
இந்த கிரகங்கள், ஒன்றரை ஆண்டுக்கு ஒருமுறை ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியடைவர்.இவர்களுக்கு சொந்த வீடு கிடையாது. எந்த ராசியில் அமர்ந்துள்ளனரோ, அந்த ராசிக்கு உரிய கிரகத்துடன் இணைந்தே பலன் தருவார்கள்.
ராகுவின் தன்மைகளை புரிந்து கொண்டால் நமக்கு சில காரணம்கள் புரியும் .
இவரின் நட்சத்திரம் சதையும் ,சுவாதி,திருவாதிரை .
கருமையானவர்,
தென்மேற்கு திசைக்கு அதிபதி,
கிரகங்களில் பெண் கிரகம்,
இனத்தில் சங்கிரமன்,
வடிவில் உயரம், தொடை, பாதம் மற்றும் கணுக்காலுக்கு உரியவர்.
பஞ்ச பூதத்தில் ஆகாயமான இவர்... சரக்கிரகமும்கூட (மேஷம், கடகம், துலாம், மகரம் ஆகியவை சரராசிகள் என்பர்)
இவர் நமக்கு தீமையாக அமைந்து விட்டால் நம்முடைய கால்கள் பாதிப்பு அடைந்து இருக்கும் ,போதை பழக்கம் அல்லது மருந்து எப்பொழுதும் உன்ன வேண்டி வரும் ,

இவர் பலமானால் தலைவலி மட்டும் வரும் ,விஞ்ஞானி ,மருத்துவர் ,போன்ற துறைகளில் மேன்மையாக இருப்பார் .
பில்லி ஏவல் சூன்யம் இவர்கள் எளிமையாக செய்வார்கள் .
சோதிடத்தில் நாக தோஷம் என்று இவரையும் கேதுவையும் சேர்த்து சொல்வார்கள் .
கேது -- இவரின் நட்சத்திரம் அஸ்வினி ,மகம், முலம் 
செந்நிறம் கொண்டவர்,
வடமேற்கு திசைக்கு அதிபதி,
ஆண் கிரகம்,
இனத்தில் சங்கிரமன்,
மர்ம உறுப்புக்கு அதிபதி. 
பல வண்ணங்கள் கொண்ட வஸ்திரம் இவருக்குப் பிடிக்கும், பஞ்சபூதங்களில் ஆகாயம் இவர்,
ஸ்ரீவிநாயகரும் ஸ்ரீசண்டிகேஸ்வரரும் கேதுவின் அதிதேவதைகள்.
வாழ்வின் பிற்பகுதியில் பலன் தரும் கிரகம் இவர். 
கேது நேர் எதிர் மறையான பலன்களை உடையவர் .
இவருக்கு எந்த தீய செயல் செய்தாலும் அதனை சரி செய்யும் மருந்து தெரியும் .

பாதிக்க பட்ட நபர்கள் இவரின் ஆசியால் சுபம் அடைவார்கள் .
சித்தர்கள் இவரின் வழியாக தான் சகல ஞான கணக்குகளை அறிவார்கள் .
ஞானமான இவர் ஒருவரின் ஜாதகத்தில் நன்கு அமைந்து விட்டால் பொது பணியில் சிறந்த பெயரையும் பலர் இவரை வணங்கும் படியாக 
இருப்பார்கள் .

நண்பர்கள் இவர்களை நன்கு மதிப்பார்கள் .
எப்படி கால சர்ப்ப தோசம்கள் எப்படி செயல்படும் சில விளக்கம் மட்டும் ....
ராகு கேதுவின் பார்வைக்குள் லக்னத்துடன் சேர்த்து எல்லா கோள்களும் (7)
அடைபட்டு இருப்பது கால சர்ப்ப தோஷம் ,இது 18+18=36 வயது வரை சிலருக்கு ,
சிலருக்கு 36+9 =45 வயது வரையிலும் இருந்து பாதிப்பு தரும் .

மந்திர சாபம் ,வாலை சாபம் ,போன்ற சாபம்களுடன் தொடர்ப்பு பெற்று நாக சாபம் என்றும் /சர்ப்ப சாபம் என்றும் நம் கட்டத்தில் அமைந்து இருக்கும். 
இவைகள் நம்மை பாதிப்பது

1.திருமணம் ப்ராப்தம் நகர்த்து கொண்டே இருக்கும் .
2.எந்த ஒரு வேலையும் மிகவும் சிரம்மம் கொண்டு முடிக்க வேண்டும் .
3.நோயின் அறிகுறிகள் கண்டறிய முடியாது .
4.நம்முடைய உழைப்பு பிறருக்கு உயர்வு தரும் .
5.குழந்தை பிறப்பு இருக்காது .
6.சிலருக்கு ஆண் மட்டுமே அல்லது பெண் குழந்தைகள் மட்டுமே பிறக்கும் .
7. .சிலருக்கு தலை ,முதுகு ,கால்கள் பலமற்று இருக்கும் .
8.அதிர்ஷ்டம் ,தரித்தரம் ,இவைகள் ஏற்படுவது இதனால் .
9.போதை ,களிப்பாட்டம் இவைகள் தான் வாழ்க்கை என்று இருப்பர்.
10.மன நலம் பாதிப்பு,மாந்த்ரிக பழக்கம் ,தொல்லைகள் இருக்கும் /உண்டாகும் .
இவைகள் பொதுவான பலன்கள் இனி இவர்களின் பரிகார கோவில்களை 
பார்போம் ...

சைவர்களுக்கு ...
திருபாம்புரம் --கும்பகோணம் --ஆண் சாபம் 
மேல பெரும் பள்ளம் --பூம்புகார் --பெண் சாபம் 
கிழ பெரும் பள்ளம் --பூம்புகார்--ஆண் சாபம் 
திருசேரை-கும்பகோணம் --பெண் சாபம் 
திரு நறையூர் --புதுகோட்டை வழி பொன் அமராவதி பாதை .-- பெண் சாபம்
கால ஹஸ்தி ---திருபதி--பெண் சாபம்

வைணவர்களுக்கு ....
கோடி ஹத்தி பெருமாள் --இன்று கோழி கொத்தி பெருமாள் என்று மருவி உள்ளது --ஆண் சாபம் --மாயவரம் குத்தலாம் பாதையில் ..

திருகண்ணன் மங்கை பெருமாள் --கொரடசெரி வழி குடவாசல் பாதையில் --பெண் -சாபம் போக்கும் கோவில் .
மேலும் புற்றுடன் உள்ள மாரியம்மன் கோவில் ,காளி கோவில் 
புற்றுடன் உள்ள சிவ பெருமான் கோவில் .

ராகுவிற்கு ராகு காலத்தில் ,கேதுவிற்கு யமகண்ட நேரத்தில் வழிபாடு செய்து உங்கள் தோசத்தை அமிர்தமாக மாற்றி கொள்ள என்னுடைய 
வாழ்த்துக்கள்

நன்றி ...
அறிவோம் ஆன்மீகம்
அகத்தியர் 
காக புஜண்டர் ஆசிகளுடன்

மகா விஷ்ணுவின் மோகினி அவதாரத்தால் வெட்டுப்பட்ட ராகு, கேது இருவரும் அமிர்தம் பருகியதால் தேவ அந்தஸ்து பெற்றனர். 2 கிரகங்களுக்கும் தனித்தனி தலங்கள் இருப்பினும் திருவாஞ்சியத்தில் இருவரும் ஒரே மூர்த்தியாக இணைந்து வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர். இருகிரக பரிகாரங்களையும் இங்கே செய்யலாம். இந்த அமைப்பு ‘சண்ட ராகு’ என வழங்கப்படுகிறது. இங்கு துர்க்கை அஷ்ட புஜங்களுடன் மகிஷாசுரமர்த்தனியாக காட்சி அளிக்கிறாள். 108 தாமரை மலர்களால் அர்ச்சித்தால் வேண்டியது கிடைக்கும். 21 வாரம் செவ்வாய்க்கிழமைகளில் மலரிட்டு வழிபடுவோர் எண்ணியது நடக்கும். திருவாஞ்சியம் திருத்தலத்தில் பைரவர் மேற்கு பார்த்து அமர்ந்த நிலையில் யோக பைரவராக காட்சி அளிக்கின்றனர். இவர் சனீஸ்வர பகவானுக்கு குருவாக விளங்குபவர். நரம்பு சம்பந்தப்பட்ட எந்த வியாதிகள் இருந்தாலும் நெய்யினால் தயார் செய்யப்பட்ட வடை மாலை சாத்தி அபிஷேகம், அர்ச்சனை செய்தால் வியாதி நிவர்த்தியாகி மன நிம்மதி பெறலாம். 

தமிழகத்தில் திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வட்டத்தில் அமைந்துள்ளது ஸ்ரீவாஞ்சியம் கிராமம். கும்பகோணத்தில் இருந்து நன்னிலம் வழியாக நாகப்பட்டினம் செல்லும் மார்க்கத்தில் அச்சுதமங்கலம் பேருந்து நிறுத்தத்தில் இருந்து சுமார் 1 1/2 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது.

தத்ரூபமான ஓவியம்


கோயில்களுக்கு செல்ல குழந்தைகளை கண்டிப்பாக பழக்குங்கள்..இறை என்று சொன்னால் கேட்கவில்லை என்றால் அறிவியலை கூறுங்கள் :


1. பூமியின் காந்த அலைகள் அதிகம் வீசப்படும் இடங்களில்தான் கோயில்கள் இருக்கும். 
2. சக்தியும், பாஸிட்டிவ் எனர்ஜியும் அதிகம் கொண்டிருக்கும், இது நார்த் போல் சவுத் போல் திரஸ்ட் வகை ஆகும். 
3. கர்ப்பகிரகம் அல்லது மூலஸ்தானம் என்று அழைக்கப்படும் மூலவர் சிலைதான் இந்த மையப்பகுதியில் வீற்றீருக்கும். 
4. இந்த இடம்தான் அந்த சுற்று வட்டாரத்திலேயே காந்த மற்றும் பாஸிட்டிவ் எனர்ஜி அதிகம் காணப்படும் இடம் ஆகும். 
5. இந்த மெயின் கர்ப்பகிரகத்தின் கீழே சில செப்பு தகடுகள் பதிக்கபட்டிருக்கும் அது தான் கீழே இருக்கும் அந்த எனர்ஜியை அப்படி பன்மடங்காக்கி வெளிக் கொணரும்.
6. அதுபோக எல்லா மூலஸ்தானமும் மூன்று சைடு மூடி வாசல் மட்டும் தான் திறந்து இருக்கும் அளவுக்கு கதவுகள் இருக்கும். இது அந்த எனர்ஜியை லீக் செய்யாமல் ஒரு வழியாக அதுவும் வாசலில் இடது மற்றும் வலது புறத்தில் இருந்து இறைவனை வணங்கும் ஆட்களுக்கு இந்த எனர்ஜி கிடைக்க செய்யப்பட்டது ஆகும் ..
7. கோயிலின் பிரகாரத்தை இடமிருந்து வலமாய் சுற்றி வர காரணம் எனர்ஜியின் சுற்று பாதை இது தான் அதனால் தான் மூலஸ்தானத்தை சுற்றும் போது அப்படியே எனர்ஜி சுற்றுபாதை கூட நாமும் சேர்ந்து சுற்ற அந்த எனர்ஜி அப்படியே உங்கள் உடம்பில் வந்து சேரும். 
8. இந்த எனர்ஜி நமது உடம்புக்கும், மனதிற்கும், மூளைக்கும் தேவையான ஒரு பாஸிட்டிவ் காஸ்மிக் எனர்ஜி.
9. மூலஸ்தானத்தில் ஒரு விளக்கு கண்டிப்பாய் தொடர்ந்து எரிந்து கொண்டிருக்கும் அது போக அந்த விக்கிரகத்திற்க்கு பின் ஒரு விளக்கு இருக்கும்.அதை சுற்றி கண்ணாடி ஒன்று இருக்கும். 
10. அது அந்த எனர்ஜியை அப்படி பவுன்ஸ் செய்யும் ஒரு டெக்னிக்கல் செயல்தான்.
11. அது போக மந்திரம் சொல்லும் போதும், மணியடிக்கும் போதும் அங்கே செய்யபடும் அபிஷேகம் அந்த எனர்ஜியை மென்மேலும் கூட்டி ஒரு கலவையாய் கொண்டு வரும் ஒரு அபரிதமான எனர்ஜி ஃபேக்டரிதான் மூலஸ்தானம் என்பது..
12. பூக்கள், கர்ப்பூரம் (பென்ஸாயின் கெமிக்கல்), துளசி (புனித பேஸில்), குங்குமப்பூ (சேஃப்ரான்),கிராம்பு (கிளவ்) இதை சேர்த்து அங்கு காப்பர் செம்பில் வைக்கபட்டு கொடுக்கும் தீர்த்தம் ஒரு ஆன்டிபயாட்டிக். 
13. இதை மூன்று தடவை கொடுக்கும் காரணம் ஒன்று உங்கள் தலையில் தெளித்து இந்த உடம்பை புண்ணியமாக்க, மீதி இரண்டு சொட்டு உங்கள் உடம்பை பரிசுத்தமாக்க.
14. இந்த தீர்த்தம் வாய் நாற்றம், பல் சுத்தம் மற்றும் இரத்ததை சுத்த படுத்தும் ஒரு அபரிதமான கலவை. கோயிலுக்கு முன்பெல்லாம் தினமும் சென்று வந்த மானிடர்களுக்கு எந்த வித நோயும் அண்டியது இல்லை என்பதற்கு இதுதான் காரணம்.
15. கோயிலுக்கு மேல் சட்டை அணிந்து வர வேண்டாம் என சில கோயில்களில் கூறுவதற்கும் இது தான் முக்கிய காரணம் அந்த எனர்ஜி, அப்படியே மார்பு கூட்டின் வழியே புகுந்து உங்கள் உடம்பில் சேரும் என்பது ஐதீகம். 
16. பெண்களுக்கு தாலி அணியும் காரணமும் இது தான்.
நிறைய பெண்களுக்கு ஆண்களை போன்று இதய நோய் வராமல் இருக்கும் காரணம் இந்த தங்க மெட்டல் இதயத்தின் வெளியே நல்ல பாஸிட்டிவ் எனர்ஜியை வாங்கி உள்ளே உள்ள கொழுப்பை கூட கரைக்கும் சக்தி இருப்பதாக ஒரு கூடுதல் தகவல்.
17. பல மைல் தூரத்தில் இருந்து பயணம் செய்திருப்பினும், மூலவரின் தரிசனம் கிட்டும்போது, அந்த சில நொடிகளில் அந்த உடம்பில் ஏற்படும் ஒரு மென்மையான சிலிர்ப்பும், ஒரு வித நிம்மதியும் ஏற்படுகிறது என்றால் அதற்க்கு காரணம், கோயிலின் மூலஸ்தானம் மற்றும் அதில் உள்ள எனர்ஜி. 
18. கோயிலின் கொடி மரத்திற்க்கும் மூலஸ்தானதிர்க்கும் ஒரு நேரடி வயர்லெஸ் தொடர்பு உண்டு. கோயில் மேல் இருக்கும் கலசம் சில சமயம் இரிடியமாக மாற இது தான் காரணம். கீழ் இருந்து கிளம்பும் மேக்னெட்டிக் வேவ்ஸ் மற்றும் இடியின் தாக்கம் தான் ஒரு சாதாரண கலசத்தையும் இரிடியமாக மாற்றும் திறன் படைத்தது.
19. அது போக பெரும்பாலும் கோயில் இடி தாக்கும் அபாயம் இல்லாமல் போன காரணம் கோயில் கோபுரத்தில் உள்ள இந்த கலசங்கள் ஒரு சிறந்த மின் கடத்தி ஆகும் ..
20. நல்ல மானிடர் இருவேளை கோயிலுக்கு சென்று வந்தால் மனிதனின் உடல் மட்டுமல்ல அவனின் மனதும் மூளையும் சுத்தமாகும்.
இவ்வளவு புனிதத்துவம் வாய்ந்த கோயில்களுக்கு குடும்பத்துடன் சென்று வர பழகுவோம் ..குழந்தைகளையும் பழக்குவோம் ...அது அறிவியல் ஆகட்டும் ..எதுவாகட்டும் ....இறை சக்தி நம்மை காக்கட்டும் ...

Thursday, May 26, 2016

நெப்போலியன்

மே 26: மாவீரன் நெப்போலியன்... ஏழை வீட்டு பிள்ளையாக பிறந்து சக்கரவர்த்தி ஆன தினம் இன்று
தன்னம்பிக்கை கதைகளைத் தனித்தனியாக கேட்பதைவிட நெப்போலியனின் வாழ்க்கையை படித்தால் போதும்.
எளிமையான இத்தாலியில் இருந்து குடிபெயர்ந்த குடும்பத்தில் பிறந்தான் நெப்போலியன். ராணுவத்தில் சேர்ந்து கலக்கி எடுத்தான். ஒரு முறை எண்ணற்ற மக்கள் கூடிப் போராடிக் கொண்டிருந்தார்கள். 
வீரர்களின் எண்ணிக்கை மிகக் குறைவு. கொஞ்சம் மிஞ்சினால் மக்கள் பொங்கி விடுவார்கள். கண்ணாடி பந்துகளை கச்சிதமாக பீரங்கிகளில் பொருத்தி போராட்டக்காரர்கள் மீது செலுத்தினான். உயிர் 
இழப்பு இல்லாமல் கூட்டம் கலைந்தது.

வெகு சீக்கிரமே படைத் தளபதியாக உயர்ந்தார். ஆஸ்திரியாவின் வசமிருந்த இத்தாலியின் பகுதிகளை பிடித்துக் காண்பித்தான். கிழக்கு தேசங்களை பிடிக்கும் முயற்சியை நெல்சன் தகர்த்தார்.
பயமென்றால் என்னவென்றே அறியாமல் தன்னை வார்த்தெடுத்துக் கொண்ட நெப்போலியன் உருவத்தில் பார்க்க குள்ளமானவர்.

ஒரு முறை போர்க்களத்தில் வென்ற பிறகு வீரர்களை கொண்டாட அனுப்பிவிட்டு நெப்போலியன் தனியாக வேகமாக குதிரையை செலுத்திக்கொண்டு பயணப்பட ஆரம்பித்தான். உற்சாக மிகுதியில் 
இன்னமும் குதிரையின் வேகத்தை அதிகப்படுத்தும் பொருட்டு கடிவாளத்தை பிடித்து இழுத்தான்.

குதிரையின் வாயில் இருந்து ரத்தம் சொட்டிக்கொண்டே இருந்தது. சிட்டென பறக்க ஆரம்பித்தது. கிடுகிடு பள்ளம் ஒன்று திடீர் என குறுக்கிட்டது. அப்படியே குதித்து விடலாம்; குதிரையால் தாவக்கூடிய 
தூரத்தைவிட ஒரு ஐந்தடி அதிகமாகவே அகலமாக இருந்தது பள்ளம். பார்த்தான்; வீரனுக்கு அழகு இப்படி சாவதுதான் என எண்ணிக்கொண்டு முடுக்கினான். பள்ளத்தில் குதிரை தாவி வீழ்ந்தபொழுது, 
அந்த ஐந்தடியை மிதந்து கொண்டு இருக்கும்பொழுதே தாவி அடிகளோடு தப்பித்தான். தன்னை ‘விதியின் மனிதன்’ என அழைத்துக்கொண்டான்.

நெப்போலியன் பிரெஞ்சு புரட்சியால் நாட்டில் ஏற்பட்டு இருந்த கொதிநிலையை பயன்படுத்திக்கொண்டு ஆட்சியை பிடித்துக்கொண்டான். என்றாலும், முதலில் மூன்று பேர் கொண்ட அமைப்பை கொண்டு 
ஆள்வது போல பாவ்லா காட்டிவிட்டு ஆட்சிப் பீடம் ஏறினான். தானே மகுடத்தை எடுத்து சூட்டிக்கொண்டான். உலக வரலாற்றில் ஏழை ஒருவரின் மகன் ஒரு மாபெரும் நாட்டின் சக்ரவர்த்தி ஆகிற 
அற்புதம் அன்றைக்கு நிகழ்ந்தது.

ஒரு நாளைக்கு நான்கு மணி நேரம் மட்டும் உறங்கிய நெப்போலியன் ஆழ்ந்து வாசிக்கிற பழக்கம் உள்ளவன். வாசிப்பே நம்மை பக்குவப்படுத்தும் என்பது அவன் எண்ணம். குள்ளமாக இருந்ததால் அவன் 
அரசவைக்கு நடந்து வருகிறபொழுது அவன் அணிந்திருக்கும் போர்வாள் உரசி இரத்தின கம்பளங்கள் கிழிந்து போகும். பின் இரும்பால் கம்பளம் வைத்தபொழுது உரசிக்கொண்டு தீப்பொறி பறக்க 
அரசவைக்கு வருவார்.

அவருக்கு தன்னைவிட இரண்டாண்டுகள் மூத்தவளும், இரண்டு பிள்ளைகளுக்கு தாயுமான ஜோசபின் மீது முதல் பார்வையிலேயே காதல் பூத்தது. அவளை மணம் செய்து கொண்டார். அவருக்காக 
உலகம் முழுக்க இருந்து ரோஜா மலர் செடிகளை பரிசாக அனுப்பி வைப்பார். அதன் மூலம் உருவான தோட்டம் மிக பிரமாண்டமானது. ஜோசபைனுக்கு நெப்போலியன் எழுதிய காதல் கடிதங்கள் தனிக் 
காவியம். அவள் பிள்ளை பெற்றுத்தர முடியவில்லை என்று விவாகரத்து செய்த பின்னும் பெரிய மாளிகை கொடுத்து அவளுக்காக கண்ணீர் வடித்தான் நெப்போலியன்.

போர்களில் தொடந்து வென்று கொண்டிருந்த நெப்போலியனின் சொந்த வாழ்க்கை வெகு சிக்கனமானது. ஓரிரு செட் ஆடைகள், தன் அறையில் தன் பதினான்கு ஆண்டுகால சம்பளத்தில் வாங்கிய 
மேசை, நாற்காலி ஆகியவற்றில்தான் தன் வாழ்க்கையை ஒட்டிய எளிமை விரும்பி அவர். இரண்டு வேளை மட்டுமே எளிமையான உணவு சாப்பிடுவார். அரைக் குவளை காபி மட்டும் இரண்டு அல்லது 
மூன்று வேளை குடிப்பார். வெகு சுறுசுறுப்பாக இருக்கும் அவனின் சின்னம் தேனீ.

பல நாடுகளை வென்ற அவன் செய்த தவறு ரஷ்யாவின் மீதான படையெடுப்பு. தான் கொண்டு வந்த இங்கிலாந்துடன் வியாபாரம் செய்யக்கூடாது என்கிற கண்ட முறையை ஏற்க மறுத்த ரஷ்யா மீது 
போர் தொடுத்தான். நாட்டையே துப்புரவாக துடைத்து வைத்திருந்தார்கள் மக்கள். ரஷ்ய குளிர் வாட்டி எடுத்தது. உயிரை அப்படியே உருவி எடுத்தது. பல வீரர்கள் சுருண்டு இறந்தார்கள். ஒன்றுமே 
இல்லாத மாஸ்கோவை கைப்பற்றினார்கள். பசிக்கு சாப்பிட எதுவுமில்லாமல் குதிரைகளையே வெட்டி உண்ணவேண்டிய நிலைமை. வெறிச்சோடி போன மாஸ்கோவின் தெருக்கள்தான் காத்துக்கொண்டு 
இருந்தன.

இருந்ததில் பாதி படையை காவு கொடுத்துவிட்டு நெப்போலியன் இன்றுதான் பின்வாங்கினார். அதற்கு பின் நடைபெற்ற போரில் தோற்று எல்பா தீவில் சிறை வைக்கப்பட்டார் அவர். “ரஷ்யக் குளிர் 
நெப்போலியனை தோற்கடித்தது!”என வரலாறு எள்ளி நகையாடுகிறது.

அப்பொழுது நடந்த ஒரு சம்பவம். ரஷ்ய படைகளின் கண்ணில்பட்டு தப்ப முயன்று ஒரு தையல்காரனிடம் சரண் புகுந்தார் நெப்போலியன். “என்னை காட்டிகொடுக்காவிட்டால் மூன்று வரங்கள் 
தருகிறேன்!”என்று சொல்லிவிட்டு ஒரு பெரிய துணிமூட்டைக்குள் ஒளிந்துகொண்டார் நெப்போலியன். ரஷ்ய படைகள் வந்தன. துணிமூட்டைக்குள் ஜஸ் லைக் தட் என கத்திகளை சொருகி 
பார்த்தார்கள். ஆனால் ஒன்றும் ஆகாமல் நெப்ஸ் தப்பிவிட்டார். அதற்கு பின் பிரெஞ்சு படைகள் வந்தன. வரங்களை கேட்க சொன்னார் நெப்போலியன்.

“முதலில் கடையின் ஓட்டை சரி செய்ய வேண்டும்”. “முடிந்தது” என்றார் நெப்ஸ். “அடுத்து” என கம்பீரமாக கேட்க, “எதிர்க்கடை தையல்காரனை நாடு கடத்தி விடுங்கள் – ஒரே தொழில் 
போட்டி” எனவும் சிரித்துக்கொண்டே, “சரி! அடுத்து?”எனக் கேட்க நீங்கள் அந்த துணிமூட்டைக்குள் இருக்கும்பொழுது கத்தியால் குத்தினப்ப எப்படி ஃபீல் பண்ணிங்கனு தெரிஞ்சாகணும்!” “ஹ்ம்ம்” 
என்ற நெப்போலியன்…

“கிளம்புங்கள்!” என படைகளிடம் சொல்லிவிட்டு – வெளியேறும் பொழுது சடக்கென்று திரும்பி, படை வீரனை பார்த்து தையல்காரனின் தலையில் படக்கென்று துப்பாக்கியை வைக்கச்சொல்லி ஒன்று 
இரண்டு மூன்று என்றதும் சுட்டுவிடு என்றதும், துப்பாக்கி ஓட்டை தையல்காரன் தலையில் பொய் ஒட்டிகொண்டது. “ஒன்…டூ…த்ரீ!” என்றதும் அதீத மௌனம், குண்டு வெடிக்கவில்லை 
வியர்த்துப்போன தையல்காரனை பார்த்து “இப்படிதான் இருந்தது எனக்கு!” என்றுவிட்டு கிளம்பினான் நெப்போலியன். அந்த அளவுக்கு நகைச்சுவை உணர்வும் அவனிடம் இருந்தது.

எல்பாவில் இருந்து தப்பி வந்தபொழுது மக்கள் மீண்டும் அவன் பின் அணிவகுத்தார்கள். வாட்டர்லூவில் இறுதிப் போர். ஒய் வடிவத்தில் படைகளை நிலை நிறுத்தினான். போரில் வென்று விடுவோம் 
என்கிற நம்பிக்கை அவனுக்கு இருந்தது. அதற்கு முந்தைய நாள் நல்ல மழை பெய்தது. இவனுக்கு காய்ச்சல் வேறு; சொன்ன உத்தரவுகள் தப்பு தப்பாக வீரர்களின் காதுகளில் விழ தோல்வியை 
தழுவினான் நெப்போலியன். இந்த முறை தப்பிக்க முடியாத ஹெலினா தீவில் கொண்டு போய் தனிமைச் சிறை வைத்தார்கள்.

நாற்பது போர்கள் கண்ட நெப்போலியன் கொண்டு வந்த கோட் ஆப் நெப்போலியன் இன்றைக்கும் பின்பற்றப்படும் அருமையான சட்டம். எல்லா மக்களுக்கும் சம உரிமை வழங்கும் அற்புதம் அது. 
எளிமையான மொழியில் அவை எழுதப்பட்டு இருந்தன. நில உடைமை முறையை வேரறுத்து மக்களுக்கு நிலங்களை பிரித்து கொடுத்தான். மதத்தை அரசியலில் இருந்து ஒதுக்கி வைத்தார். 
நெப்போலியன் காலத்தில் அறிவியலுக்கும் முக்கியத்துவம் தரப்பட்டது. வோல்டாவை பார்த்து நீங்கள் வருடத்துக்கு ஒரு முறை அரசவைக்கு வந்தால்கூட போதும் என்கிற அளவுக்கு நெப்போலியன் 
தீராத வாசிப்பு ஆர்வம் கொண்டவன்.

எல்பாவில் சிறைவைக்கப்பட்டு இருந்தபொழுது நெப்போலியனுக்கு கொடுக்கப்பட்ட சிறிய அறையில் அவன் எதை தெரியுமா வைத்திருந்தான்? எல்லா அடுக்குகளிலும் மொத்தமாக மூவாயிரம் 
புத்தகங்களை வைத்திருந்தான். அவன் மரணத்துக்கு பிறகு ஆங்கில அரசே அவனை மாவீரன் என்று ஏற்றுக்கொண்டது.


ஒரு சம்பவத்தோடு முடித்தால் நன்றாக இருக்கும். நெப்போலியனின் படைத் தளபதி வேகமாக ஓடி வந்தார். கண்களில் கலக்கம். “அரசே! எதிரி நாட்டுப் படைகள் எல்லாப் பக்கமும் சுற்றி வளைத்து 
விட்டார்கள். அவ்வளவு தான்!” என்றபொழுது நெப்போலியன், “அதனால் என்ன? எல்லா பக்கமும் சுடலாம் என சந்தோசப்படுங்கள்” என்றார்.

“முடியாது என்பது முட்டாள்களின் அகராதியில் உள்ள வார்த்தை” என்ற குள்ளமான உருவம் கொண்ட வானுயர தன் உழைப்பால் எளிய குடும்பத்தில் இருந்து பேரரசனாக உயர்ந்து 
முடிசூட்டிக்கொண்ட நாள் இன்று..

- பூ.கொ.சரவணன்

Wednesday, May 25, 2016

சிறப்பான உணவு வகைகள் - தமிழ்நாடு ..


1. சிம்மக்கல் கறி தோசை, கோலா உருண்டை
2. நடுக்கடை : இடியாப்பம் - ஆட்டுக்கால் பாயா
3. சிதம்பரம் கொத்சு
4. புத்தூர் அசைவச் சாப்பாடும் கெட்டித் தயிரும்
5. திருவானைக்கா ஒரு ஜோடி நெய் தோசை
6. கும்பகோணம் பூரி-பாஸந்தி
7. ஸ்ரீரங்கம் இட்லி பொட்டலம்
8. மன்னார்குடி அல்வா
9. கூத்தாநல்லூர் தம்ரூட்
10. நீடாமங்கலம் பால்திரட்டு
11. திருவையாறு அசோகா
12. கும்பகோணம் டிகிரி காபி
13. விருதுநகர் பொரிச்ச பரோட்டா
14. கோவில்பட்டி கடலை மிட்டாய்
15. ஆம்பூர் தம் பிரியாணி
16. நாகர்கோவில் அடை அவியல்
17. சாத்தூர் சீவல்
18. திருநெல்வேலி இருட்டுக் கடை அல்வா
19. ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா
20. செங்கோட்டை பார்டர் கடை பரோட்டா, நாட்டுக் கோழி வறுவ ல்
21. மணப்பாறை அரிசி முறுக்கு
22. கீழக்கரை ரொதல்அல்வா
23. திண்டுக்கல் தலப்பாக் கட்டி நாயுடு பிரியாணி
24. பண்ருட்டி முந்திரி சாம்பார்
25. மதுரை ஜிகர்தண்டா மற்றும் பருத்திப்பால்
26. சாயல்குடி கருப்பட்டி காபி
27. பரமக்குடி சிலோன் பரோட்டா, சிக்கன் சால்னா
28. பழனி சித்தநாதன் பஞ்சாமிர்தம்
29. கமுதி மாரியம்மன் பால் பண்ணை லஸ்ஸி
30. புதுக்கோட்டை முட்டை மாஸ்
31. தூத்துக்குடி மக்ரூன்
32. சௌக்கார் பேட்டை மன்சுக்லால் சேட் டோக்லா மற்றும் கச்சோடி
33. கன்னியாகுமரி தேங்காய் சாதம், மீன் குழம்பு
34. ராமநாதபுரம் கணவாய் கோலா உருண்டை, இறால் ஊறுகாய்
35. ஈழத் தமிழர்கள் சோதி மற்றும் தேங்காய்ப் பால்
36. செட்டிநாடு - ஒவ்வொரு ஊருக்கும் ஏதாவது ஒன்று சிறப்பா இருக்கும், ஆனா நம்ம ‘செட்டி நாட்டுலே’ மட்டும்தாங்க செய்யிற எல்லா உணவுமே சிறப்பா யிருக்கும் அப்படிபட்ட செட்டி நாடு உணவு வகைகளில் சில..
1. குழிப்பணியாரம்
2. வாழைப்பழ தோசை
3. எண்ணெய் கத்தரிக்காய்
4. பால் பணியாரம்
5. பூண்டு வெங்காய குழம்பு
6. ரவா பணியாரம்
7. பால் கொழுக்கட்டை
8. சேமியா கேசரி
9. மோர் குழம்பு
10. நாட்டுகோழி மிளகு வறுவல்
11. இறால் தொக்கு
12. நட்டுக் கோழி ரசம்
13. நண்டு மசாலா
14. வெண்டைக்காய் புளிக்கறி
15. பருப்பு சூப்
16. ரிப்பன் பக்கோடா
17. பருப்பு உருண்டை குழம்பு
18. குருமா குழம்பு
19. தேன்குழல்
20. கருப்பட்டி பணியாரம்
21. சீயம்
22. மாவுருண்டை
உணவுக்காக, உணவுப் பொருட்களுக்காக போர் புரிந்த கதை எல்லாம் நம்ம ஊரிலே மட்டும் தான் எப்படி நடந்துச்சுனு இப்ப தெரியுதா? அவ்வளவு ஏன்.. கொலம்பஸுகளும் வாஸ்கோடமாக்களும் இந்தியாவை தேடி எதுக்கு அலைஞ்சாங்க?.. இங்கே கொட்டி கிடந்த வேறு எங்குமே கிடைக்காத 'மசாலா' பொருட்களுக்காக மட்டுமேதான்னுங்கிறது நிதர்சமான உண்மை.
"வாழ்க்கையின் ரசனையை உணவில் காணும் சாப்பாட்டு பிரியர்களுக்காக.. இந்த தொகுப்பு சமர்ப்பணம்"

வீரப்பன்..


வீரப்பனாருக்கு ஒயிலாட்டம் ஆடத்தெரியும்; நாடகங்கள், தெருக்கூத்துகளில் நடித்துள்ளார்; திரைப்படத்துறையில் கூட ஒருமுறை முயற்சி செய்தார்; அதிரடி வேட்டைக்காரனாக இருந்தவர்; எந்த ஒரு மனிதர் போலவும் விலங்கு போலவும் குரலெழுப்பத் தெரியும்; தியானம், சில யோகாசனங்கள் செய்வார்; மரக்கட்டைகளை நுட்பமாக செதுக்கி உருவங்களும் செதுக்குவார்; குறிதவாமல் துல்லியமாக சுடத் தெரியும்;கன்னி வைத்து விலங்குகளைப் பிடிக்கும் நுட்பங்கள் தெரிந்தவர்; பள்ளி பக்கமே போகாதவர் என்றாலும், தமிழ் எழுதப் படிக்கக் கற்றுக்கொண்டார்; விலங்குகள் பறவைகள் நடமாட்டத்தை வைத்தே வேற்றுமனிதர் நடமாட்டத்தையும், காலநிலையையும் கணித்துவிடுவார்; சமையல் தெரியும்; நீச்சலிலும் வல்லவர்; மீன்பிடித்தல், மரமேறுதல், மலையேறுதல், திசையறிதல், எல்லாம் அத்துப்படி; ஒரு நாளைக்கு குறைந்தது 20கிமீ நகர்ந்து கொண்டேயிருப்பவர்; 3000சகிமீ காட்டில் தனியரசு செலுத்தியவர்; வெடிகுண்டு, கையெறி குண்டு, கண்ணிவெடி எல்லாம் செய்யத்தெரிந்தவர்; படைவியூகங்கள் வகுப்பது, படை நகர்வு, உளவு பார்ப்பது, மாறுவேடம் தரித்தல், நேரடி மோதல், தாக்குதல் தொடுப்பது, ஆயுதக் கொள்ளை என ஒரு படைத்தலைவருக்கான அத்தனை குணங்களும் அமையப்பெற்றவர்.
மூலிகை கண்டறிதல், மருந்து தயாரித்தல், பேச்சுத்திறமை, கமுக்கமான பணப் பரிமாற்றம், காட்டுவேளாண்மை, பொருள் கடத்தல், கமுக்கமான தகவல் தொடர்பு என அனைத்தையும் விரல்நுனியில் வைத்திருந்தவர்; இத்தகைய திறமைகள் இருந்ததால்தான் அவரால் 32வருடங்கள், இரு மாநிலக் காவல்துறை மற்றும் வனத்துறை, மத்திய ரிசர்வு படை,உள்நாட்டு வான்கண்கானிப்பு, காட்டுக் கொள்ளையர்கள், அரசியல்வாதிகள், பெருமுதலாளிகள் அனைவரையும் எதிர்த்து புலிகள் ஆண்ட வன்னி அளவு பெரிய காட்டை ஆளமுடிந்தது;

1990களிலேயே வீரப்பனார் பற்றித் தகவல் தருவோருக்கு நாற்பத்தி நூறாயிரம்(40லட்சம்) பரிசு அறிவிக்கப்பட்டிருந்தது; கர்நாடக அரசு வீரப்பனாரோடு போராட 70கோடி செலவளித்துள்ளது; தமிழகம் 40கோடி செலவளித்துள்ளது; இரு மாநிலங்களும் சேர்ந்து கிட்டத்தட்ட 15,000 காவல் மற்றும் வனத்துறையினரை ஈடுபடுத்தி வந்தது; இத்தனைக்கும் வீரப்பனாரிடம் எப்போதும் 150பேருக்கு மேல் இருந்ததில்லை.
வீரப்பனாரின் கூட்டாளிகள் நால்வர் கர்நாடகாவில் பெல்காம் சிறையில் தூக்கில்போடப்படவுள்ளனர்; இது தமிழர்களுக்கு தெரியாமல் மறைக்கப்பட்டுள்ள பல செய்திகளில் ஒன்று; வீரப்பனைத் தேடுகிறோம் என்ற பெயரில் பல நூறு மக்களை கொன்று கற்பழித்து கொடுமைப்படுத்திய அதிரடிப்படையும் அதன் அதிகாரிகளும் பணமும் பதவியும் பெற்று சுகமாக வாழ்கின்றனர்; 1993ல் வீரப்பனார் கன்னிவெடி வைத்து வெறியாட்டம் போட்டுவந்த அதிரடிப் படையின் தமிழக,கர்நாடக காவலர்கள் 22பேரைக் கொன்ற வழக்கில் மேற்கண்ட நால்வர் தண்டனை பெற்றுள்ளனர்; (ஆனால் 1994ல் ஜூன் 11 சின்னாம்பதி என்ற சிற்றூரை ஆயுதமுனையில் சுற்றிவளைத்து அந்த ஊரிலிருந்த அத்தனை இளம்பெண்களையும் கூட்டமாக கற்பழித்த அதிரடிப்படையினர் மீதான விசாரணை என்னவானது என்று யாருக்கும் கவலையில்லை; அவர்களெல்லாம் சுகபோகமாக சுற்றிக்கொண்டிருக்கின்றனர்;இதில் பாதிக்கப்பட்ட மக்கள் சுமார் நூறுபேரை வீரப்பனார் தம்மோடு காட்டுக்குள் வைத்து கண்ணும் கருத்துமாகப் பாதுகாத்தார்.

அது 1997 ம் ஆண்டு. ஒரு முறை சந்தனக் கடத்தல் வீரப்பன், தவறுதலாக கானுயிர் புகைப்படக்காரர்கள் குருபகர் மற்றும் செனானியையும், வங்காளப் பேராசிரியர் மைத்தியையும்அரசு உயரதிகாரிகள் என்று தவறுதலாக நினைத்து கடத்திவிடுகிறான். இரண்டு வாரங்கள் கழித்து இருவரையும் விடுவிக்கிறான். சில மாதங்கள் கழித்து, வீரப்பனுடன் இருந்த 14 நாட்கள் அனுபவங்களை ‘சுதா’ என்னும் கன்னட வார இதழில் தொடராக எழுதுகிறார்கள். பின், “Birds, Beasts Bandits 14 Days With Veerappan” என்ற தலைப்பில் 2011 ம் ஆண்டு புத்தகமாக வருகிறது.
அதில், வீரப்பன் அவர்களுக்கு சொன்ன ஒரு கதையை குறிப்பிட்டுள்ளார்கள். அந்தக் கதை உண்மையில் வீரப்பனின் இன்னொரு இளகிய முகத்தை பிரதிபலிப்பதாக இருக்கிறது.
யானையும், கடவுளும் பின்னே மனிதனும்:
குருபகர், செனானி மற்றும் வங்காளப் பேராசிரியர் மைத்திக்கும், வீரப்பனுக்கும் நடந்த உரையாடலில் வீரப்பன் இவ்வாறாக துவங்கி இருக்கிறான்…
“இந்தப் புவியில் மனிதனைப் போல் கொடூரக்காரர்கள் யாரும் இல்லை. மனிதன் பொய் சொல்லுவான், ஏமாற்றுவான்… ஏன் பழி வாங்குவான் மற்றும் நேர்மையற்ற செயலை செய்வான். மனிதன் யானைகளை பிடித்து சர்க்கசிற்கு விற்பான். யானையை கொடுமைப்படுத்தி பணம் காண்பான்… ஏன் அதன் முடி, தந்தம் என அனைத்தையும் விற்பான்.. உண்மையில் மனிதனைப் போல கொடுமைக்காரர்கள் யாரும் இல்லை…” என்று கூறி உள்ளான்.
வீரப்பனின் இந்த உரை, மூவருக்கும் அதிர்ச்சி அளிப்பதாக இருந்து இருக்கிறது. வீரப்பன் குறித்து சொல்லப்பட்ட பிம்பம் வேறு. ஆனால் அவனது உரையாடல் இதற்கு நேரெதிராக இருந்து இருக்கிறது.
அப்போது வீரப்பன் சொன்ன கதை இது…
“ஒரு காலத்தில் கடவுளும் இந்த பூமியில்தான் சந்தோஷமாக சக ஜீவன்களுடன், இந்த பூமியில் உள்ள வளத்தை பங்கிட்டு வாழ்ந்தார். அவர்கள் இந்த இயற்கையுடன் குதூகலமாக வாழ்ந்தார்கள். ஒரு நாள் இப்புவியில் மனிதன் தோன்றினான். புவியில் இருந்த அமைதிக்கு தொந்தரவு கொடுத்தான்.
கடவுள் இதனால் கவலை உற்றார். அவர் மற்ற உயிரினங்களுடன் கலந்து ஆலோசித்தார். மனிதன் மிக மோசமான உயிரினம் என்ற முடிவுக்கு வந்தார்கள். அவனால் ஒரு காலமும் இயற்கையுடன் இயைந்து வாழ முடியாது. அதனால், நாம் பூமியைவிட்டு வெளியே சென்று விடலாம் என்று திட்டமிட்டனர்.
அப்போது, ஒரு யானைக் கூட்டம் கடவுளிடம் வந்தது. கடவுள், யானைகளிடம் தன் முடிவை சொன்னார். அப்போது யானை கடவுளிடம், “இது என்ன முட்டாள்தனமான முடிவு. மனிதன் பொடியன். அவனால் நம்மை என்ன செய்துவிட முடியும். நாம் ஏன் இந்த அழகுமிகுந்த மலரை, வானத்தை, காட்டை, ஆற்றைவிட்டுப் போக வேண்டும்…?” என்றது.
சினம் கொண்ட கடவுள், “நீங்கள் இங்கேயே தங்கி, உங்களை நீங்களே அழித்துக் கொள்ளுங்கள்” என்று சொல்லிவிட்டு சொர்க்கத்திற்கு சென்றார்.” என்று கதையை முடித்த வீரப்பன், பின் இவ்வாறு சொல்லி இருக்கிறான், “பாருங்கள் இப்போது… அந்த பாவப்பட்ட யானைக்கு என்ன ஆனது என்று…? அது சுதந்திரமாக சுற்ற, காடுகள் இல்லை. சர்க்கஸில் பிச்சை எடுத்து சாப்பிடுகிறது”என்று.
இந்தக் கதையும் வீரப்பனின் வாதமும், இந்த மூவரையும் குழப்பமடைய செய்திருக்கிறது.
உண்மையை சொன்னால் யாரும் நம்பபோவதில்லை:
அவர்களுடனான ஒரு உரையாடலின் போது, தேனீர் அருந்தியவாறே செனானியிடம், “இப்போது பந்திப்பூர் காட்டில் எத்தனை நீள தந்தமுள்ள யானைகள் இருக்கும்…?” என்று கேட்டு இருக்கிறான். அதற்கு செனானி, “ஏழு யானைகள் இருந்தாலே பெரிது. தந்தத்திற்காக தொடர்ந்து யானைகள் கொல்லப்பட்டு வருகின்றன. இப்போதெல்லாம் நீள தந்தமுள்ள யானைக் குட்டிகளை பார்ப்பதே அரிதாக இருக்கிறது…” என்றுள்ளார்.
அது மட்டுமல்லாமல் அவர் வீரப்பனிடம், “நீள தந்தமுள்ள யானைகளின் எண்ணிக்கை மிகக் குறைவாக உள்ளது. நீங்கள் இனி தந்தத்திற்காக யானைகளை கொல்லக்கூடாது…” என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அதற்கு வீரப்பன் மெல்லிய குரலில், “நான் யானைகளைக் கொன்று பல ஆண்டுகள் ஆகப்போகிறது. ஆனால், இதை நான் சொன்னால் யாரும் நம்பப்போவதில்லை.
சில நாட்களுக்கு முன்பு ஒரு கூட்டம் இந்த காட்டிற்கு வந்தது. அவர்களை பார்த்தவுடன் நான் கண்டு பிடித்துவிட்டேன், அவர்கள் யானையை வேட்டையாட தான் வந்திருக்கிறார்கள் என்று. அவர்களை எச்சரித்து அனுப்பினேன். ஆனால், அவர்கள் யானையை கொன்றுவிட்டார்கள். அவர்களை இன்னொருமுறை இக்காட்டில் பார்த்தால் சும்மாவிடமாட்டேன்” என்றுள்ளான்.
பின் ஒரு நீண்ட மெளனத்திற்கு பின், வீரப்பன், “இந்தக் காட்டில் எது நடந்தாலும், என்னையே குற்றம் சுமத்துகிறார்கள். வேட்டைக்காரர்கள் தைரியமாக யானையை வேட்டையாடி தந்தத்தை கடத்துகிறார்கள். ஆனால், நான் பழியை சுமக்கிறேன்….”
அப்போது செனானி குறுக்கிட்டு, “2000 யானைகளை வேட்டையாடி நீங்கள் தந்தத்தை கடத்தி உள்ளீர்கள் என்று ஊடகம் சொல்கிறதே…?” என்று வினவி உள்ளார்.
அதற்கு வீரப்பன். “அதுவெல்லாம் பொய். பிறர் செய்யும் குற்றங்கள் எப்போதும் என் தலையில் வந்து விழுகின்றன…”
இவ்வாறாக செல்கிறது அப்புத்தகம்.
வீரப்பனின் கதையும், வீரப்பன் கதையும்:
இப்போது ஏன் வீரப்பன் கதையும், வீரப்பனின் கதையும் என்கிறீர்களா… அல்லது ஏன் வீரப்பனை கதாநாயகனாக சித்தரித்து ஒரு கட்டுரை என்கிறீர்களா…? இல்லை, உண்மையாக வீரப்பனை கதாநாயகனாக சித்தரிக்கவில்லை. நிச்சயம் அவன் கொடுங்குற்றம் செய்தவன்தான். அதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால், இப்போது மேற்கு தொடர்ச்சி மலைகளை வீரப்பனுக்கு முன், வீரப்பனுக்கு பின் என்று பிரித்துவிட முடியும். வீரப்பன் தன் கதையில் சொல்லியது போல் இப்போது உண்மையில் யானைகள் உலா வர இடம் இல்லை. மலைகள் முழுவதும் ஆக்கிரமிப்புகள்.
சில ஆண்டுகளுக்கு முன்பு, கர்நாடக கோபிநத்தம் பகுதியில் நான் சந்தித்த வன உயர் அலுவலர், “முன்பு வீரப்பன் இருக்கும் பயத்தில், ரியல் எஸ்டேட் முதலைகள் இங்கு முதலீடு செய்ய தயங்கின. அப்போது காடு காடாக இருந்தது. ஆனால், இப்போது தடி எடுத்தவனெல்லாம் தண்டல்காரன் என்ற நிலையில்தான் காடு இருக்கிறது…” என்றார் மிகக் கவலையாக.
உண்மையில் வீரப்பன் பலியாடுதான். உண்மையான குற்றவாளிகள் இன்னும் தைரியமாக வெளியே சுற்றி கொண்டுதான் இருக்கிறார்கள்.
மேட்டூர், சத்தியமங்கலம் பகுதியைச் சுற்றி வீரப்பனாலும், காவல் துறையினராலும் பாதிக்கப்பட்ட மக்களுடன் உரையாடியவன் என்ற முறையில் சொல்கிறேன். இது வரை வீரப்பன் குறித்து வந்த பதிவுகள் எதுவும் வீரப்பனை சரியாக பதிவுசெய்யவில்லை. இதற்கிடையே வரப்போகும் காவல் துறை அதிகாரி விஜயகுமாரின் புத்தகமும் காவல்துறையின் சார்பை சொல்வதாகதான் இருக்கப் போகிறது.
ஒரு வீரப்பனை அழித்துவிட்டோம். இப்போது ஓராயிரம் வீரப்பன்கள் உருவாகிவிட்டார்கள். அவர்களை கட்டுக்குள் கொண்டு வருவது எப்போது… நாம் கானகத்தை காப்பது எப்போது…?

– மு. நியாஸ் அகமது

தயவுசெய்து இந்த வீடியோவை பதிவிறக்கம் செய்து உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு பகிருங்கள்.


ஸ்ரீவிநாயகப்பெருமானுக்கு உகந்த விரதமாகிய ”சங்கடஹர சதுர்த்தி” விரதம் இன்று அனுஷ்டிக்கப்படுகிறது ..


அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. அங்கிங்கெணாதபடி எங்கும் வியாபித்திருக்கும் “ ஓம் “ எனும் ஓங்காரவடிவமாக விளங்குபவருமான 
ஸ்ரீவிநாயகப்பெருமானுக்கு உகந்த விரதமாகிய ”சங்கடஹர சதுர்த்தி” விரதம் இன்று அனுஷ்டிக்கப்படுகிறது ..

தங்களனைவரது சங்கடங்கள்யாவும் நீங்கி ஆயுள் .. அபிவிருத்தி .. பதவிஉயர்வு மற்றும் வாழ்வில் சந்தோஷம் என்றும் மிளிரவும் விக்னவிநாயகரைப் போற்றுகின்றேன் ..
ஓம் தத்புருஷாய வித்மஹே ! 
வக்ரதுண்டாய தீமஹி ! 
தந்நோ தந்தி ப்ரசோதயாத் !!

ஸ்ரீவிநாயகமூர்த்தியை வழிபட பல்வேறு வழிபாடுகள் இருந்தபோதிலும் சங்கடஹர சதுர்த்தி வழிபாடு மிகமிக முக்கியமானது .. ஒவ்வொரு பௌர்ணமிக்கும் பிறகு வரக்கூடிய நான்காம் நாளான தேய்பிறை சதுர்த்தித் திதியே சங்கடஹர சதுர்த்தியாகும் ..
சந்திரபகவான் தனது தோஷங்கள் நீங்கவும் .. தனது தேய்மானம் நீங்கவும் தேய்பிறை சதுர்த்தி தினத்தன்று ஸ்ரீவிநாயகப்பெருமானை நினைத்து கடும்தவம் செய்ய .. சந்திரனின் கலைகள் எனும் பிறைகள் வளர அருள்பாலித்தார் .. தேய்பிறை என்றாலும் விநாயகரின் அருளால் சந்திரனுடைய தேஜஸ் வளர்ந்தது .. அந்த நன்னாளைத்தான் நாம் சங்கடஹர சதுர்த்தியாக வழிபட்டு வருகின்றோம் ..
’சங்கடம் ’ என்றால் இக்கட்டு .. தொல்லைகள் .. கஷ்டங்கள் ..தடைகள் என்று அர்த்தம் ..
’ ஹர ‘ என்றால் நீக்குவது .. அழித்தல் என்று பொருள் ..

சந்திரனும் விநாயகரைச் சிறப்பாக வழிபட்டுப் பல சிறப்புகளுடன் விநாயகரின் திருமுடியில் பிறைச்சந்திரனாகவும் .. நெற்றியில் முழுநிலவுத் திலகமாகவும் விளங்கும் பேறுபெற்றான் .. விநாயகருக்கு பாலச்சந்திரன் என்றும் பெயர் உண்டு .. மேலும் இந்த சங்கடஹர சதுர்த்தியன்று சந்திரனையும் தரிசிக்கவேண்டிய முறையும் உண்டாகியது ..
வாழ்வில் கஷ்டநஷ்டங்கள் யாவும் நீங்கப்பெற்று .. வாழ்வாங்கு வாழ விக்னவிநாயகரைப் பணிவோமாக ! 
” ஓம் விக்னேஷ்வராய நமஹ “ .. வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..

GOOD MORNING DEAR FRIENDS .. MAY THIS DIVINE ' SADURTHI '
BRINGS YOU WITH SUCCESS IN ALL YOUR ENDEAVORS ..AND
MAY LORD GANAPATHY REMOVE ALL THE OBSTACLES IN YOUR LIFE TOO .. " JAI GANESHAAYA NAMAHA "
'ஜெய் மகாகால்; மகாகாலருக்கு ஜே!'

- உஜ்ஜயினிவாசிகள், ஒருவருக்கொருவர் முகமன் கூற உச்சரிக்கும் இந்த வாசகத்தைக் கேட்கும்போது நம் உடலும் உள்ளமும் சிலிர்க்கும்! அவர்களது உள்ளத்தில் நீக்கமற நிறைந்திருக்கும் மகாகாலராகிய ஜோதிர்லிங்கமே உஜ்ஜயினியின் அதிபதி!

கனகச்ருங்கா, குமுதவதி, குசஸ்தலி, பத்மாவதி, ப்ரதிகல்பா, போகவதி, அவந்திகா ஆகிய பெயர்களாலும் அழைக்கப்படும் உஜ்ஜயினி, தொன்மை வாய்ந்த- சரித்திரப் புகழ் பெற்ற திருத்தலம்.

அங்காரகனான செவ்வாய் பகவானின் பிறப்பு, வளர்ப்பு மற்றும் அவர் நவக்கிரக பதவி பெற்றது ஆகிய புராண சம்பவங்களுடன் தொடர்புடைய தலம் ஆதலால் உஜ்ஜயினியை, 'அங்காரக க்ஷேத்திரம்' என்றும் போற்றுவர்! அங்காரகனது பிறப்பு பற்றி பல்வேறு விதமான தகவல்கள் வெவ்வேறு புராணங்களில் காணப்படுகின்றன.

உமாதேவி, இறைவனைப் பிரிந்திருந்த காலம். கல்லால மரத்தடியில் யோகத்தில் ஆழ்ந்திருந்தார் ஈசன். இந்த நிலையில், அவரின் நெற்றிக் கண்ணில் இருந்து வழிந்த வியர்வைத் துளி ஒன்றை, கீழே விழாதபடி அப்படியே தாங்கிக் கொண்டாள் பூமாதேவி. அந்த வியர்வைத் துளியிலிருந்து தோன்றிய குழந்தையே மங்களன். இவனே அங்காரகன் எனப்பட்டான் என்றொரு கதை உண்டு.

சூரபதுமனால் தேவர்கள் துயருற்ற காலம்! 'அவனை அழிக்க வல்ல பலவான், சிவபெருமான் மூலம் தோன்ற வேண்டும்' என்றார் மகாவிஷ்ணு. அதன்படி தேவர்கள் அனைவரும் சிவபெருமானைக் காணச் சென்றனர். அவரோ கடுந்தவத்தில் ஆழ்ந்திருந்தார். அவரது தவம் கலைந்தால்தான் தங்களது எண்ணம் ஈடேறும் என்பதை உணர்ந்த இந்திரன், மன்மதனைத் தூண்டினான். மன்மதன் தனது மலர்க் கணைகளால் சிவபெருமானின் தவத்தைக் கலைத்தான். இதனால் கோபம் கொண்ட ஈசன், மன்மதனை தனது நெற்றிக் கண்ணால் எரித்துச் சாம்பலாக்கினார்!

இதன் பிறகு சிவ- பார்வதியர் திருமணம் நடந்தேறியது. இந்த நிலையில், 'இவர்களுக்குப் பிறக்கப் போகும் அதிபராக்கிரம சாலியான குழந்தையால் தனது பதவிக்கு ஆபத்து நேருமோ!' என்று பயந்தான் இந்திரன். எனவே, சிவ- பார்வதியர் இணைவதைத் தடுக்க அக்னியை அனுப்பினான். ஆனால், சிவ பெருமானின் வீரியத்தை தாங்க முடியாத அக்னி பகவான், அவரிடம் சரணடைந்து

மன்னிப்பு வேண்டினான்.அவனிடம், கங்கையில் வீரியத்தைச் சேர்க்கும்படி கட்டளையிட்டார் சிவபெருமான். அக்னி தேவனும் அப்படியே செய்தான். அப்போது, உருவான குழந்தையே அங்காரகன் என்பது சிலரது கருத்து. ஆனால், 'அக்னி தேவனுக்கும் விகேசி என்பவளுக்கும் பிறந்தவனே அங்காரகன்' என்கிறது லிங்க புராணம்!

மச்ச புராணம் என்ன சொல்கிறது தெரியுமா?

தட்சன், தன் மகளான தாட்சா யணியை சிவபெருமானுக்கு மணம் செய்து கொடுத்தான். ஆனால், சிவனா ருக்கும் தட்சனுக்கும் இடையே பகை ஏற்பட்டது.

ஒரு முறை, பெரும் வேள்வி ஒன்றைத் துவக்கிய தட்சன், சிவனாருக்கு அழைப்பு அனுப்பாமல் அவரை அவமதித்தான். கோபம் கொண்ட சிவனார், தனது நெற்றிக் கண்ணிலிருந்து வீரபத்திரரை உருவாக்கி, தட்சனை அழித்து வர அனுப்பினார். இதையடுத்து, தட்சன் மற்றும் அவனைச் சேர்ந்தவர்களை அழித்தார் வீரபத்திரர். அப்போது, வீரபத்திரரது ஆவேசத்தைக் கண்டு அதிர்ந்த தேவர்கள் அனைவரும் ஒன்றுகூடி அவரை சாந்தப்படுத்தினர். அவரும் சாந்தமானார். இந்த உருவமே அங்காரகன் என்கிறது மச்ச புராணம்.

மற்றுமொரு கதை...

வசிஷ்டரின் பரம்பரையில் தோன்றியவர் பரத்வாஜ முனிவர். இவர், நர்மதை நதிக்கரையில் தவம் செய்து வந்தார். ஒரு நாள்... நர்மதையில் நீராடிக் கொண்டிருந்த தேவ மங்கை ஒருத்தியைக் கண்டு மோகித்த பரத்வாஜர், அவளை அவந்தி நகருக்கு அழைத்துச் சென்று, இல்லறம் நடத்தி

வந்தார். இவர்களுக்கு ஆண் குழந்தை ஒன்று பிறந்ததும் அந்தப் பெண் தேவலோகத்துக்குத் திரும்பிச் சென்றாள். பரத்வாஜ முனிவரும் குழந்தையை அங்கேயே விட்டு விட்டு, நர்மதைக் கரைக்குச் சென்று தவத்தைத் தொடர்ந்தார். இதையடுத்து, அந்தக் குழந்தையை பூமாதேவி

அரவணைத்து வளர்த்தாள். குழந்தை யின் மேனி, செந்நிறத்துடன் அக்னி போல் பிரகாசித்ததால், அவனுக்கு 'அங்காரகன்' என்று பெயர் சூட்டினாள்.

அங்காரகனுக்கு ஏழு வயதானது. ஒரு நாள், ''அம்மா, என் தந்தை யார்? அவரைக் காண ஆவலாக உள்ளது!'' என்று பூமாதேவியிடம் கேட்டான். உடனே, ''குழந்தாய்... உன் தந்தையின் பெயர் பரத்வாஜர்; மகரிஷிகளில் மகிமை பெற்றவர். அவரிடம் உன்னை அழைத்துச் செல்கிறேன்!'' என்ற பூமாதேவி, அவனுடன் பரத்வாஜரது ஆசிரமத்தை அடைந்தாள்.

அங்கு முனிவரைச் சந்தித்தவள், ''முனிவரே, இவனே தங்களின் மகன். உங்களைக் காண விரும்பியதால் இவனை இங்கு அழைத்து வந்தேன். தாங்கள் இவனை ஏற்றுக் கொள்ள வேண்டும்!'' என வேண்டினாள். மிகவும் மகிழ்ந்த பரத்வாஜர், அன்புடன் தன் மகனை அணைத்துக் கொண்டார்.

அங்காரகன் தகுந்த வயதை அடைந்ததும், முறைப்படி அவனுக்கு உபநயனம் முதலிய சடங்கு களைச் செய்து வைத்து வேத அத்யயனத்தையும் ஆரம்பித்து வைத்தார் பரத்வாஜர். சதுர்வேதங்களை மிகக் குறுகிய காலத்திலேயே கசடறக் கற்றுத் தேர்ந்த அங்காரகன், இன்னும் பல கலைகளிலும் சிறந்து விளங்கினான்.

இதன் பிறகு... தான் சர்வ வல்லமை பெற விரும்புவதாகவும், தகுந்த வழி காட்டுமாறும் தந்தையிடம் பிரார்த்தித்தான். 'தவமே சிறந்த வழி' என்ற பரத்வாஜர், விநாயகரைக் குறித்து தவம் இருக்கும்படி அங்காரகனைப் பணித்தார். உரிய மந்திரங்களையும் அவனுக்கு உபதேசித்து அனுப்பி வைத்தார்.

அவந்தி நகரை அடுத்த அடர்ந்த வனத்தில் தக்க இடத்தைத் தேர்ந்தெடுத்து, ஒரு நன்னாளில் தனது தவத்தைத் துவக்கினான். பல நூறு ஆண்டுகள் நீடித்த அங்காரகனின் தவத்துக்கு பலன் கிடைக்கும் காலம் கனிந்தது. மாசி மாதம், கிருஷ்ணபட்சம் (தேய்பிறை) சதுர்த்தியன்று இரவு சந்திரோதய காலத்தில், அங்காரனுக்கு தரிசனம் தந்தார் ஆனைமுகத்தோன். அவரது பாத கமலங்களை பணிந்த அங்கார கன், விநாயகரை பலவாறு துதித்துப் போற்றினான். பிறகு, ''விக்னேஸ்வரா, தங்களிடம் சில வரங்களை யாசிக் கிறேன். அருள் புரியுங்கள்!'' என்று வேண்டினான்.

''அங்காரகனே, உனது அன்பினால் கட்டுண்டேன். விரும்பும் வரம் எதுவாயினும் தயங்காமல் கேள்!'' என்று லம்போதரன் திருவாய் மலர்ந் தருளினார்.

''விக்ன ராஜனே... நான், அமிர்தம் அருந்தி அமரனாக ஆசைப்படுகிறேன். சர்வ மங்களமான திரு உருவோடு தங்களைத் தரிசித்த என்னை எல்லோரும், 'மங்களன்' என்று அழைக்க வேண்டும். அத்துடன், தங்களது திவ்விய தரிசனம் கிடைத்த இந்த சதுர்த்தி நன்னாளை அனைவரும் கொண்டாட வேண்டும். இந்நாளில் உம்மை வணங்கும் அடியவர்களது இன்னல்களை நீக்கி அருள வேண்டும். என்னை வணங்கும் அடியவர்களுக்கு செல்வம் அளிக்கும் கிரகமாக நான் மிளிர வேண்டும்!'' என்று பல வரங்களைக் கேட்டான் அங்காரகன்.

அவனை கனிவுடன் நோக்கிய கணபதி, ''அன்பனே! நீ கேட்ட எல்லா வரங்களையும் தருகிறேன். அத்துடன், என்னிடம் நீ அனுக்கிரகம் பெற்ற இந்த நாள், 'அங்காரக சதுர்த்தி'யாகப் போற்றப்படும். இந்த நாளில் திரிகரண சுத்தியுடன் என்னை வணங்குபவர்களது விக்கினங்களை அடியோடு விலக்குவேன்!'' என்று அருளி மறைந்தார்.

விநாயகரின் தரிசனம் கிடைத்த அந்தப் புனித இடத்தில், கணேசர் விக்கிரகத்தைப் பிரதிஷ்டை செய்து அல்லும் பகலும் அவரை வழிபட்டு வந்தான் அங்காரகன். இதனால் இந்த விநாயகருக்கு, 'மங்கள விநாயகர்' என்ற பெயர் வந்தது.

இதன் பிறகு, விநாயகப் பெருமானின் அருளால், தேவலோகம் அடைந்த அங்காரகன், அங்கு அமிர்தம் பருகியதுடன்... விரைவிலேயே, நவக்கிரகங்களில் ஒருவனாகும் பேறு பெற்றான். அவனுக்கு உகந்த தினம் செவ்வாய்.

எனவே செவ்வாய்க்கிழமையுடன் சேர்ந்து வரும் சதுர்த்தி மற்ற சதுர்த்தியைக் காட்டிலும் ஒப்பற்றது; விநாயகருக்கு மிக உகந்தது.

இந்த நாளில் விரதம் இருந்து விநாயகரை வழிபடுவோரது சங்கடங்கள் அனைத்தும் விலகும். எனவே இந்த புனித தினம், சங்கடஹர சதுர்த்தி என்று பெயர் பெற்றது.

சங்கடஹர சதுர்த்தி விரத மகிமையை பல்வேறு நூல்கள் விளக்குகின்றன.

மாசி மாதம்- தேய் பிறையில்... செவ்வாய்க் கிழமையுடன் கூடி வரும் சதுர்த்தி திதி துவங்கி ஒரு வருட காலம் விதிப்படி விரதம் அனுஷ்டிக்க வேண்டும்.

இந்த விரதத்தை துவங்கும் நாளன்று, சூரியன் உதிப்பதற்கு ஐந்து நாழிகைக்கு முன்பே உறக்கத்திலிருந்து எழுந்து விதிப்படி சங்கல்பம் செய்து புண்ணிய நதியில் நீராட வேண்டும்.

பிறகு, சிவ சின்னங்களை அணிந்து கொண்டு விநாயகரை தியானிக்க வேண்டும்.

விநாயகரின் ஓரெழுத்து, ஆறெழுத்து மந்திரங்களில் ஏதாவது ஒன்றை... இவற்றை அறியாதவர்கள், விநாயகரின் புனித நாமங்களை அன்று முழுவதும் இடைவிடாமல் ஜபிக்க வேண்டும். உபவாசம் இருப்பதே மேல். அன்று இரவு உறங்குவதும் கூடாது. விநாயக புராணத்தைப் பாராயணம் செய்வது நல்லது.

இவ்வாறு இந்த அரிய விரதத்தை மன உறுதியோடு ஓராண்டு காலம் கடைப்பிடித்தால், இன்னல்கள் அகலும். செல்வம், கல்வி மற்றும் செல்வாக்கு ஓங்கும். கூன்- குருடு போன்ற குறைபாடுகள் நீங்கி நலம் பெறலாம். கடன்தொல்லை, நோய், பகை முதலானவை அகன்று நலமுடன் வாழலாம். இதுவே சங்கடஹர சதுர்த்தியின் சாரம்.

அங்காரகனால் துவக்கப்பட்ட சங்கடஹர சதுர்த்தி விரதமும், காலம் காலமாக அனுசரிக்கப் பட்டு வருவதை பல புராணங்கள் வாயிலாக அறிகிறோம்.

விப்ரதன் என்ற வேடன் முற்கல முனிவரிடம் கணேச மந்திர உபதேசம் பெற்று ஆயிரம் ஆண்டுகள் தியானித்தான். அதன் பலனாக 'புருசுண்டி' என்ற பெயரு டன், விநாயகரை குருவாகக் கொண்டு ஞானோபதேசம் பெற்று முக்தி அடைந்தான். அவன் அனுஷ்டித்தது சங்கடஹர சதுர்த்தி விரதம்.

அரசன் கிருதவீர்யன், அத்ரி முனிவரிடம் இந்த விரதத்தை உபதேசமாகப் பெற்று புத்திரப்பேறு எய்தி மகிழ்ந்தான். சூரசேனன் எனும் அரசன், இந்திரன் வாயிலாகக் கேட்டு சங்கடஹர சதுர்த்தி விரதம் ஏற்று முக்தி அடைந்தான்.

பெற்ற அன்னையையே கொலை செய்த 'புதன்' எனும் அந்தணன், குஷ்ட நோயால் பீடிக்கப்பட்டான். இவன் மேல் இரக்கம் கொண்ட சூரசேன மகாராஜா... அந்தணனுக்கு, கணபதி மந்திரம் உபதேசித்து, சங்கடஹர சதுர்த்தி விரதம் ஏற்குமாறு பணித்தார். அதன்படியே செய்து நோய் நீங்கி பல்லாண்டு வாழ்ந்து முடிவில் முக்தி அடைந்தான் அந்தணன் புதன்.


கீர்த்திகள் பெற்ற செவ்வாய் கிரகத்துக்கு- அங்காரகனுக்கு, உஜ்ஜயினியின் (அவந்தி நகரம்)

வட எல்லையில் அவன் தோன்றிய இடத்திலேயே ஒரு திருக்கோயில் எழுப்பப்பட்டுள்ளது. இந்தக் கோயிலின் கருவறைக் கடவுள் மங்கள்நாத் என்பர். மங்களகரமான உருவம் கொண்டவர் என்று பொருள்!

'அங்காரகன், சிவந்த மேனி, மார்பில் செம்மலர் மாலை துலங்க அழகிய திருமுடி தரித்து நான்கு திருக்கரங்களுடன் திகழ்பவன். வலது திருக்கரங்களில் ஒன்று அபயம் அருள மற்றொன்றில் சக்தி ஆயுதம். இடது திருக்கரங்களில் கதாயுதமும் சூலமும் திகழ்கின்றன. மேஷ வாகனம் கொண்ட இவன், சிம்ம வாகனத்திலும் காணப் பெற்றவன். இவனுக்கு மாலினி, சுசீலினி என்று இரு மனைவியர். எட்டுக் குதிரைகள் பூட்டிய பொன் தேரில் பவனி வரும் திருக்கோலம் கொண்டவன்' என்று அங்காரகனை வர்ணிக்கிறது ஒரு நூல்.

ஆனால் உஜ்ஜயினி மங்கள்நாத் ஆலயத்தில், 'பிண்டி' எனப்படும்... சிவலிங்கம் போன்ற அருவுருவமே உள்ளது. இதையே அங்காரகனின் திருவுருவமாகப் பாவித்து வழிபடுகின்றனர்.

அங்காரகன் கடுந்தவம் இயற்றி, கணேசர் தரிசனம் பெற்ற புனித இடத்தை, உஜ்ஜயினியின் தென் மேற்கில் இன்றும் காணலாம். 'ஜவாஸியா' எனும் கிராமத்திலுள்ள இந்த புனித இடத்தில் விநாயகருக்கு ஓர் ஆலயம் உண்டு. உஜ்ஜயினியில் உள்ள ஆறு கணபதி ஆலயங்களில் இதுவே சற்றுப் பெரியது.

விஸ்தாரமான பிராகாரத்துடன் திகழும் ஆலயத்தில் சந்நிதிக்கு எதிரில் யாக சாலை உள்ளது. இங்கு பக்தர்களால் தினமும் ஹோமங்கள் நடத்தப்படுகின்றன. பிராகாரத்தில், ஆழ்கிணறு ஒன்றைக் காணலாம். இதை, 'பாணகங்கா தீர்த்தம்' என்கிறார்கள். இங்கு, புளிய மரமே ஸ்தல விருட்சம்!

இங்குள்ள கணபதி உருவம் அங்காரகனால் பிரதிஷ்டை செய்யப்பட்டது என்கின்றனர். ஆனால் சிலையின் வடிவமைப்பை ஆராய்ந்தால், சுயம்பு மூர்த்தியே என்ற முடிவுக்கு வரலாம். இந்த மூர்த்தியின் திருநாமம்- சிந்தாமணி விநாயகர். பாற்கடலில் கிடைத்த சிந்தாமணியைப் போன்று கேட்பதைத் தருபவர் என்பதால் இந்தப் பெயர்.

சங்கடஹர சதுர்த்தி துவங்கப்பட்ட புனித இடத்தில் குடிகொண்டிருக்கும் இந்த சிந்தாமணி விநாயகர் ஓர் அரிய வரப்ரசாதி என்பதில் ஐயமில்லை!

பெண்கள் மட்டுமே கடைப்பிடிக்கும் பிள்ளையார் விரதம்!

செவ்வாய் பகவானுடன் தொடர்புடைய விநாயகர் வழிபாடு மற்றொன்றும் உண்டு! தமிழக கிராமப்புறங்களில் பெண்கள் மட்டுமே அனுசரிக்கும்- 'செவ்வாய் பிள்ளையார் கும்பிடுதல்!' என்ற விரதமே அது.

தை மற்றும் ஆடி மாத செவ்வாய்க்கிழமைகளில் துவங்கி... 'இத்தனை செவ்வாய்' என்று நிச்சயம் செய்து, இந்த நோன்பை ஆரம்பிப்பார்கள். இந்த விரதத்தால் ஏற்படும் சப்தம்கூட ஆண்களுக்கு கேட்கக் கூடாது என்பது நியதி! தப்பித்தவறி இந்த விரத நைவேத்தியத்தை ஆண்கள் உட்கொண்டாலோ, நைவேத்திய பதார்த்தத்துக்காக மாவு இடிக்கும் சத்தத்தைக் கேட்டாலோ அவர்களது உடல்நலம் பாதிக்கப்படும் என்பது நம்பிக்கை! எனவே, ஆண்கள் யாவரும் உறங்கச் சென்ற பிறகு அல்லது அவர்கள் வெளியூர் சென்றிருக்கும் நேரத்தில் இந்த வழிபாட்டைக் கடைப்பிடிக்கிறார்கள்.

ஊர் பெண்கள் அனைவரும் ஆடவர் இல்லாத ஓர் இல்லத்தில் ஒன்று கூடுவர். ஒவ்வொருவரும் தங்களது பங்காகக் கொண்டுவந்த நெல்லை உரலில் இட்டு இடித்து அரிசியாக்குவர். பிறகு உமி களைந்து, அரிசியை மாவாக்கி வைத்துக் கொள்வர். இந்த மாவுடன், சிறு சிறு தேங்காய்த் துண்டுகளும் இளநீரும் கலந்து நன்றாகப் பிசைந்து 'அடை'களாகத் தட்டுவர். பிறகு வாணலியில் வைக்கோலைப் பரப்பி, அதன்மேல் அடைகளை வைத்து வேக வைப்பார்கள். மாவில் உப்பு சேர்க்க மாட்டார்கள். இதுவே நிவேதனம்!

பிறகு, கனாக்கன்றின் (பசுவின் ஆண் கன்று) சாணத்தால் பிள்ளையார் பிடித்து, புங்கை இலை, புளிய இலை மூலம் சுழல் அமைத்து, அதன் நடுவே சாணப் பிள்ளையாரை எழுந்தருளச் செய்வார்கள். தொடர்ந்து, விநாயக புராணத்தை ஒருவர் எடுத்துச் சொல்வார். கதை முடிந்ததும் தூப- தீப ஆராதனைகள் காட்டி, அடைகளை நிவேதனம் செய்து வழிபட்ட பிறகு, அந்தப் பிரசாதத்தை குழுமி இருப்போருக்கு விநியோகிப்பர். அதை அங்கேயே உண்ண வேண்டும்!

இதையடுத்து புங்கை- புளியந் தழைகள், வைக்கோல் மற்றும் பூஜை மலர்கள் ஆகியவற்றை, பொழுது விடிய நான்கு நாழிகைக்குள்ளேயே எடுத்துச் சென்று ஆற்றில் விட்டு விடுவார்கள். அத்துடன், பிள்ளையாரையும் வழியனுப்பிவிட்டு, நீராடிய பின்... வாய் பேசாமல், புனித மஞ்சள்- குங்குமம் அணிந்து, வெற்றிலை சுவைத்து அவரவர் இல்லத்துக்குச் செல்வர். அன்று முழுவதும் எவருக்கும் காசு- தானியம் தரமாட்டார்கள்.

ஆயுள் வளர்க்கும் அருகம்புல்!

'மூதணிடம்' என்றால் என்ன தெரியுமா? அருகம்புல்லின் வேறு பெயரே இது. இதன் அசல் பெயர் 'அகரம் புல்'!

ஒரு சந்தர்ப்பத்தில், மிகுந்த வெப்ப தேகம் கொண்ட அனலாசுரன் என்ற அசுரனை விழுங்கினார் விநாயகர். இதனால் அவரது திருமேனி தகித்தது! இந்த உஷ்ணத்தைப் போக்க விநாயகரை குளிர்வித்த பெருமைக்குரியது அருகம்புல். இதனால், அவருக்கே உரிய பத்ரமாக(தழை) திகழ்கிறது அருகம்புல். 'தூர்வா' என்றும் சிறப்பிக்கப்படும் அருகம்புல் கொண்டு கணபதியை பூஜிப்போர், நிலையான ஆரோக்கியத்தையும் நீண்ட ஆயுளையும் பெறுவர்!