Search This Blog

Saturday, April 9, 2016

துர்முகி வருட ராசி பலன்கள்(14.4.2016 முதல் 13.4.2017 )

எளிய பரிகாரங்களுடன்!`ஜோதிட ரத்னா’ கே.பி.வித்யாதரன்
மேஷம் (அசுவினி, பரணி கிருத்திகை 1-ம் பாதம்)
நாலும் தெரிந்த அனுபவசாலி நீங்கள்!
உங்கள் ராசிக்கு 3-ம் வீட்டில் சந்திரன் அமர்ந்திருக்கும்போது இந்தப் புத்தாண்டு பிறப்பதால், புதிய முயற்சிகள் வெற்றியடையும். தள்ளிப் போன காரியங்கள் விரைந்து முடியும். இளைய சகோதர வகையில் உதவிகள் உண்டு. வழக்கு சாதகமாகும்.
செவ்வாய் 8-ல் ஆட்சி பெற்று அமர்ந்திருக்கும்போது இந்த ஆண்டு பிறப்பதால், அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பும் அதனால் ஆதாயமும் கிடைக்கும். சகோதர ஒற்றுமை வலுப்பெறும். பழைய கடன் பிரச்னைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். ஆவணி மாதம் பிற்பகுதிவரை செவ்வாயுடன் சனியின் சேர்க்கை இருப்பதால், சிறுசிறு விபத்துகள், உடல்நலக் குறைவு, வீண்பகை போன்றவை வந்துசெல்லும். வீடு, மனை வாங்குவதில் எச்சரிக்கை யுடன் செயல்படவும்.
வருடம் பிறக்கும்போது உங்கள் ராசியில் உச்சம் பெற்ற சூரியனுடன் புதனும் சேர்ந்திருப்பதால், அரசாங்க விஷயங்கள் சாதகமாக முடியும். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்துகொள்வார்கள். பூர்வீகச் சொத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். சிலருக்கு அயல்நாடு செல்லும் வாய்ப்பு உண்டாகும்.
1.8.16 வரை குரு 5-ம் வீட்டில் இருப்பதால், மனக் குழப்பங்கள் நீங்கும். மகளுக்கு நல்ல வரன் அமையும். மகனுக்கு அயல்நாடு தொடர்புடைய நிறுவனத்தில் நல்ல வேலை கிடைக்கும். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். குலதெய்வ பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள்.
ஆனால், 2.8.16 முதல் 16.1.17 வரை மற்றும் 10.3.17 முதல் 13.4.17 வரை குரு உங்கள் ராசிக்கு 6-ல் மறைவதால், மறைமுக எதிர்ப்புகள் அதிகமாகும். எவ்வளவு பணம் வந்தாலும் பற்றாக்குறை நீடிக்கும். அவ்வப்போது மரியாதைக் குறைவான சம்பவங்கள் நிகழக் கூடும். 17.1.17 முதல் 9.3.17 வரை குரு அதிசாரத்திலும் வக்ரகதியிலும் உங்கள் ராசிக்கு 7-ல் அமர்ந்து உங்கள் ராசியைப் பார்ப்பதால், மறைந்து கிடந்த திறமைகள் வெளிப்படும். கணவன் – மனைவிக்குள் அந்நியோன்யம் அதிகரிக்கும். மனைவிவழி உறவினர்களிடம் மரியாதை கூடும்.
வருடம் முழுவதும் அஷ்டமத்து சனி நீடிப்பதால், அடிக்கடி மனச் சஞ்சலம் ஏற்படும். சிறுசிறு விபத்து கள் ஏற்படக்கூடும். குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்துச் செல்லுங்கள். யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடவேண்டாம். குடும்ப விஷயங்களை மற்றவர் களிடம் பகிர்ந்துகொள்ள வேண்டாம்.
26.8.16 முதல் 18.9.16 வரை சுக்ரன் 6-ல் சென்று மறைவதால், வாகன விபத்து, வழக்கால் நெருக்கடிகள், வாழ்க்கைத் துணைக்கு உடலநலக் குறைவு ஏற்படக்கூடும். வருடம் முழுவதும் ராகு 5-ல் இருப்பதால் பிள்ளை களை அனுசரித்துப் போகவும். அவர்களின் படிப்பு மற்றும் திருமண விஷயத்தில் அலட்சியம் வேண்டாம்.
ஆனால், கேது 11-ல் இருப்ப தால், ஷேர் மூலம் பணம் வரும். கோயில் கும்பாபிஷேகத்தை முன்னின்று நடத்துவீர்கள். வேற்று மொழியைச் சேர்ந்தவர்களால் நன்மை உண்டாகும்.
வியாபாரத்தில், கடினமாக உழைத்து ஓரளவு லாபம் பெறுவீர் கள். பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். இப்போதைக்கு பெரிய முதலீடுகள் வேண்டாம். கட்டட உதிரிபாகங்கள், கடல்வாழ் உயிரினம், பெட்ரோ கெமிக்கல் வகைகளால் ஆதாயம் உண்டு. ஆனி, புரட்டாசி, தை, மாசி ஆகிய மாதங்களில், நண்பர்களது உதவி யால் வியாபாரத்தை விரிவுபடுத்த சந்தர்ப்பம் உண்டாகும்.
உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். உங்களுக்கு கிடைக்க வேண்டிய சலுகைகளைப் போராடியே பெறவேண்டி இருக்கும். ஒருசிலருக்கு, பணியின் காரண மாக அயல்நாடு செல்லும் வாய்ப்பு உண்டாகும்.
மாணவ – மாணவிகள், பாடத்தில் கவனம் செலுத்துவது அவசியம். போட்டிகளில் வெற்றி பெறும் வாய்ப்பு உண்டாகும். கலைத்துறையினரே! போட்டி களையும் தாண்டி முன்னேறுவீர்கள். சம்பள விஷயத்தில் கறாராக இருங்கள். 
மொத்தத்தில் இந்த துர்முகி வருடம் சூழ்ச்சிகளையும், சிக்கல் களையும் தந்து உங்களை அச்சுறுத் தினாலும், இறுதியில் உங்களை வெற்றி பெற வைப்பதாக அமையும்.
பரிகாரம்
திருவாதிரை திருநாளில் உத்தரகோசமங்கை தலத்துக்குச் சென்று ஸ்ரீமங்களேஸ்வரி உடனுறை ஸ்ரீமங்களேஸ்வரரையும், மரகத நடராஜரையும் வழிபட்டு வாருங்கள்; நலம் உண்டாகும்.
ரிஷபம் (கிருத்திகை 2,3,4-ம் பாதம், ரோகிணி, மிருகசீரிடம் 1, 2-ம் பாதம்)
கொள்கை மாறாதவர் நீங்கள்.
உங்கள் ராசிக்கு 2-ம் வீட்டில் இந்த வருடம் பிறப்பதால், சின்னச் சின்ன ஆசைகள் நிறைவேறும். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். தன்னம்பிக்கை கூடும். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். புது வேலை அமையும். வெளிநாடு வெளிமாநிலங்களுக்குச் சென்று வருவீர்கள்.
9.9.16 முதல் 25.10.16 வரை செவ்வாய் 8-ல் மறைவதாலும் 19.9.16 முதல் 13.10.16 வரை உங்களின் ராசிநாதனான சுக்ரன் 6-ல் மறைவதாலும் வீண் அலைச்சல், தொண்டை வலி, சகோதர வகையில் சச்சரவுகள், வழக்கால் நிம்மதியின்மை, கணவன்-மனைவிக்குள் விவாதங்கள் வந்து போகும்.
வருடம் முழுவதும் ராகு 4-லும் கேது 10-லும் தொடர்வதால், தாயின் உடல் நலன் பாதிக்கப்படும். அவருக்கு சிறுசிறு அறுவை சிகிச்சைகள் செய்ய நேரிடும். வாடகை வீட்டில் இருப்பவர்களுக்கு உரிமையாளரால் சிற்சில பிரச்னைகள் உண்டாகும். மற்றவர்களுக்கு ஜாமீன் தரவேண்டாம். சின்னச் சின்ன அவமானங்கள் வந்து போகும். வழக்கில் தீர்ப்பு தள்ளிப்போகும்.
1.8.16 வரை குரு பகவான் 4-ல் அமர்வதால், வேலைச் சுமை அதிகரிக்கும். வாகன விபத்துகள் ஏற்படக்கூடும். சிலர், சொந்த ஊரிலிருந்து வேறு ஊருக்கு மாற வேண்டியது வரும். 2.8.16 முதல் 16.1.17 வரை மற்றும் 10.3.17 முதல் 13.4.17 வரை குரு உங்கள் ராசிக்கு 5-ல் அமர்வதால், வசதி, வாய்ப்புகள் பெருகும். வருமானத்தை உயர்த்த அதிரடியாக சில திட்டங்கள் தீட்டுவீர்கள். சிலருக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும். மகளுக்கு நல்ல வரன் அமையும். குலதெய்வ பிரார்த்தனைகள் நிறைவேறும்.
ஆனால், 17.1.17 முதல் 9.3.17 வரை குருபகவான் அதிசாரத்திலும், வக்ரகதியிலும் ராசிக்கு 6-ல் சென்று மறைவதால், வேலைச் சுமை அதிகரிக்கும். உங்களுடன் பழகும் சிலரே உங்களுக்கு எதிராகச் செயல்படக்கூடும்.
வருடம் முழுவதும் சனி உங்கள் ராசிக்கு 7-ல் அமர்ந்து கண்டகச் சனியாகத் தொடர்வதால், கணவன் மனைவிக்குள் வீண் சந்தேகம், சச்சரவுகள் வரும். திருமண முயற்சிகள் தாமதமாக முடியும். வாழ்க்கைத் துணையின் ஆரோக் கியம் பாதிக்கப்படும். முக்கியமான பணிகளை நீங்களே நேரடியாகச் செய்து முடிப்பது நல்லது. பாஸ்போர்ட், வாகனத்துக்கான லைசென்ஸ், ஆர்.சி புத்தகங்களை உரிய நேரத்தில் புதுப்பித்துக் கொள்ளவும்.
வியாபாரத்தில் ஆழம் தெரியாமல் காலைவிட வேண்டாம். லாபம் மந்தமாக இருக்கும். மாறி வரும் சந்தை நிலவரத்தை அவ்வப்போது உன்னிப்பாக கவனித்து செயல்படவும். விளம்பர யுக்திகளாலும், தள்ளுபடி அறிவிப் பாலும் பழைய சரக்குகளை விற்றுத் தீர்ப்பீர்கள். வேலையாட்களின் ஒத்துழைப்பின்மையால் லாபம் குறையும். புதிய நிறுவனங்  களுடன் ஒப்பந்தம் செய்வது மற்றும் கூட்டுத் தொழில் தொடங்குவதற்கு முன்பாக வழக்கறிஞரிடம் ஆலோசிப்பது நல்லது. ஆவணி, ஐப்பசி, மாசி மாதங்களில் பற்று வரவு உயரும். ஹோட்டல், கெமிக்கல், எண்ணெய், மூலிகை, கமிஷன் வகைகளால் ஆதாயம் உண்டு.
வருடம் முழுவதும் கேது 10-ல் தொடர்வதால், உத்தியோகத்தில் கூடுதல் நேரம் வேலை பார்க்க வேண்டி வரும். அதிகாரி, உங்களைப் புரிந்துகொள்ளமாட்டார். உங்கள் உழைப்புக்கு வேறு சிலர் உரிமை கொண்டாடுவார்கள். சக ஊழியர்களில், சிலர் உங்களுக்கு ஆதரவாகவும், சிலர் எதிராகவும் செயல்படுவர். உங்களில் சிலருக்கு அயல்நாட்டில் அல்லது வெளி மாநிலத்தில் வேலை கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. ஆடி, மாசி மற்றும் பங்குனி மாதங்களில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக் கும். சம்பள பாக்கி கைக்கு வரும்.
மாணவ-மாணவியர், படிப்பில் அதிக கவனம் செலுத்தவும். நீங்கள் விரும்பும் பாடப்பிரிவில் சேர சிலரின் சிபாரிசு தேவைப்படும்.கலைத் துறையினரே! வீண் வதந்திகள் இருக்கவே செய்யும். மனம் தளராமல் இருங்கள். உங்களை விட வயதில் குறைந்த கலைஞர்களால் நல்லது நடக்கும்.
மொத்தத்தில் இந்த தமிழ்ப் புத்தாண்டு, இடமாற்றத்தையும் வேலைச் சுமையையும் தந்தாலும், நல்லவர்களை இனம் கண்டு கொள்ள ஏதுவாக அமையும்.
பரிகாரம்
கோவை-பொள்ளாச்சி வழியில், ஈச்சனாரி எனும் ஊரில் அருளும் ஸ்ரீவிநாயகரை சதுர்த்தி திதி நாளில் வழிபட்டு வாருங்கள்.  நிம்மதி கிடைக்கும்.

மிதுனம் (மிருகசீரிடம் 3,4-ம் பாதம், திருவாதிரை, புனர்பூசம் 1, 2,3-ம் பாதம்)
எதிலும் யதார்த்தத்தை விரும்புபவர் நீங்கள்!
சூரியன், புதன் மற்றும் சுக்ரன் சாதகமாக இருக்கும் நேரத்தில் இந்த வருடம் பிறப்பதால், உங்களுடைய நிர்வாகத் திறமை அதிகரிக்கும். அதிகாரிகளின் நட்பு கிடைக்கும். கடினமான காரியங் களையும் எளிதாக முடித்துக் காட்டுவீர்கள். பணப் புழக்கம் அதிகமாகும். மகளுக்கு நல்ல வரன் அமையும். மகனுக்கு புதிய வேலை கிடைக்கும். 
உங்கள் ராசியிலேயே வருடம் பிறப்பதால், ஆரோக் கியத்தில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். அவ்வப்போது வீண் டென்ஷன், தலைச்சுற்றல், மன அமைதியின்மை, முன்கோபம் வந்து நீங்கும். தோலில் நமைச்சல், தேமல், நரம்புச் சுளுக்கு வரக்கூடும்.            
வருடம் முழுவதும் சனி ராசிக்கு 6-ம் வீட்டில் வலுவாக அமர்ந்திருப்பதால், புதிய திட்டங்கள் நிறைவேறும். எதிரிகளும் நண்பர்களாவார்கள். கணவன்-மனைவிக்குள் அந்நியோன்யம் உண்டாகும். புது பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். வேலைக்கு விண்ணப்பித்து காத்திருந்தவர்களுக்கு நல்ல நிறுவனத்திலிருந்து அழைப்பு வரும். சொந்த ஊரில் மதிப்பு கூடும். வீடு, வாகனம் வாங்க வங்கிக் கடன் உதவி கிடைக்கும். வழக்கில் தீர்ப்பு சாதகமாகும்.
செவ்வாய் 6-ம் வீட்டில் வலுவாக அமர்ந்திருக்கும் போது வருடம் பிறப்பதால், அதிகாரப் பதவியில் இருப்பவர்களால் ஆதாயம் அடைவீர்கள். உடன்பிறந்த வர்கள் பக்கபலமாக இருப்பார்கள்.  
ராகு 3-ம் வீட்டிலேயே தொடர்வதால், உங்கள் உழைப்புக்கு உரிய பலன் கிடைக்கும். பிரச்னைகளுக்கு உரிய தீர்வைக் காண்பீர்கள். தடைப்பட்ட காரியங்கள் நல்லபடியாக முடியும். ஷேர் மூலம் பணம் வரும். ஆனால், கேது 9-ல் இருப்பதால், தந்தையின் ஆரோக் கியம் பாதிக்கப்படும். அவருடன் கருத்து வேறுபாடு களும் ஏற்படக்கூடும். பிதுர்வழிச் சொத்தில் பிரச்னைகள் ஏற்படக்கூடும்.  26.10.16 முதல் 2.12.16 வரை செவ்வாய் உங்கள் ராசிக்கு 8-ல் அமர்வதால், சொத்துப் பிரச்னைகள், சகோதர வகையில் மனத்தாங்கல், பழைய கடனை நினைத்த கவலைகள் வந்து செல்லும். 
14.10.16 முதல் 7.11.16 வரை சுக்ரன் 6-ல் மறைவதால், கணவன்-மனைவிக்குள் மனஸ்தாபங்கள், பிள்ளைகளால் செலவுகள் வந்து போகும். 
1.8.16 வரை குருபகவான் உங்களுடைய ராசிக்கு 3-ம் வீட்டில் நிற்பதால் இளைய சகோதர வகை யில் பிணக்குகள் வரும். யாருக் காகவும் ஜாமீன் கையெழுத்திட வேண்டாம். 2.8.16 முதல் 16.1.17 வரை மற்றும் 10.3.17 முதல் 13.4.17 வரை குரு ராசிக்கு 4-ல் அமர்வ தால், உங்களைப் பற்றிய வதந்திகள் அதிகமாகும். அவ்வப்போது மன இறுக்கம் உண்டாகும். தாயாரின் ஆரோக்கியம் பாதிக்கப்படும். வழக்கில் வழக்கறிஞரை மாற்ற நேரிடும். ஆனால் 17.1.17 முதல் 9.3.17 வரை குருபகவான் அதிசாரத்திலும், வக்ரகதியிலும் ராசிக்கு 5-ல் அமர்வதால், மனத் தெளிவு உண்டாகும். பிள்ளைகளின் உயர்கல்வி, உத்தியோகம், திருமணம் தொடர்பான முயற்சிகள் நல்லபடி முடியும். சிலருக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும்.
வியாபாரத்தில், புது முதலீடுகள் செய்து விரிவுபடுத்துவீர்கள். பங்குதாரர்கள் உங்களுக்குக் கட்டுப்படுவர். சந்தை நிலவரத்தை அறிந்து முக்கிய முடிவு எடுப்பீர்கள். வாடிக்கையாளர்கள் அதிகரிப்பர். கட்டுமானப் பொருட்கள், பெட்ரோ கெமிக்கல், போர்டிங், லாட்ஜிங் வகைகளால் லாபம் அதிகரிக்கும்.
வருடம் முழுவதும் குரு சாதக மாக இல்லாததால், உத்தியோகத்தில் மேலதிகாரிகளால் ஒதுக்கப் படுகிறோமோ என்ற ஒரு சந்தேகம் உண்டாகும். சக ஊழியர்களின் இரட்டை வேடத்தை புரிந்து கொள்வீர்கள். மூத்த அதிகாரி களைப் பற்றிய ரகசியங்களை மற்றவர்களிடம் பகிர்ந்துகொள்ள வேண்டாம். சிலருக்கு உத்தியோகத் தில் இடமாற்றம் உண்டாகும். சித்திரை, புரட்டாசி, கார்த்திகை, பங்குனி மாதங்களில் பதவி உயர்வு, சம்பள உயர்வு உண்டு. 
மாணவ-மாணவிகள் கடின மாக உழைத்து உயர்கல்வியில் வெற்றி பெறுவர். கலைத் துறை யினருக்கு, புகழ் பெற்ற நிறுவனங் களில் இருந்து அழைப்பு வரும்.
மொத்தத்தில் இந்தப் புத்தாண்டு, உங்களை கடினமாக உழைக்க வைப்பதாக இருந்தாலும், தன்னம்பிக்கையால் தலை நிமிரச் செய்வதாக அமையும்.
பரிகாரம்
உங்களின்  ஜென்ம நட்சத்திர நாளன்று, சிதம்பரம் அருகிலுள்ள புவனகிரிக்கு சென்று,  அங்கு அருளும் ஸ்ரீராகவேந்திரரை, நெய் விளக்கேற்றி வழிபடுங்கள்; நன்மைகள் கூடும்.

கடகம் (புனர்பூசம் 4-ம் பாதம், பூசம், ஆயில்யம்)
தாயை தெய்வமாகப் போற்றுபவர்களே!
புத்தாண்டு பிறக்கும்போது உங்களின் யோகாதிபதி யான செவ்வாய் பூர்வ புண்ணியஸ்தானத்தில் ஆட்சி பெற்று அமர்ந்திருப்பதால், அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். பூர்வீக சொத்து பங்கைக் கேட்டு வாங்குவீர்கள். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். இந்தப் புத்தாண்டு உங்கள் ராசிக்கு விரயஸ்தானமான 12-ம் வீட்டில் பிறப்பதால், அலைச்சலுடன் ஆதாயம் உண்டாகும். வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும்.
வருடம் முழுவதும் 5-ம் இடத்திலேயே சனி அமர்ந்திருப்பதால், மனதில் குழப்பமும் தடுமாற்றமும் இருந்தபடி இருக்கும். பிள்ளைகளை அனுசரித்துப் போகவும். மகளின் திருமண விஷயத்தில் அவசரம் வேண்டாம். வருடம் பிறக்கும்போது சூரியனும் புதனும் வலுவாக இருப்பதால், எதிர்பார்த்து ஏமாந்த தொகை கைக்கு வரும். குடும்பத்தில், கணவன்-மனைவிக்குள் இருந்து வந்தப் பிணக்குகள் நீங்கும். வெளிநாடு செல்ல விசா கிடைக்கும். அரசாங்க காரியங்கள் சாதகமாக முடியும்.
3.12.16 முதல் 15.1.17 வரை செவ்வாய் ராசிக்கு 8-ல் மறைவதால், வெளிவட்டாரத்தில் அலைச்சல் அதிகமாகும். உடன்பிறந்தவர்களுடன் மனவருத்தம் வந்து போகும். சொத்து சம்பந்தப்பட்ட வழக்கில் தீர்ப்பு தாமதமாகும். 8.11.16 முதல் 3.12.16 சுக்ரன் 6-ல் மறைவதால், வாகனப் பழுது, சிறுசிறு விபத்துகள், தாயாருக்கு மருத்துவச் செலவுகள், கழுத்து வலி வந்து செல்லும்.   1.8.16 வரை குருபகவான் உங்கள் ராசிக்கு தனஸ்தானத்தில் அமர்ந்திருப்பதால், மகிழ்ச்சி யான சூழ்நிலை உண்டாகும். பண வரவு உண்டு. சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். உடல் நலம் சீராகும். நீண்ட நாட்களாக போக நினைத்த புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். பாகப்பிரிவினை சுமுகமாக முடியும். ஆனால், 2.8.16 முதல் 16.1.17 வரை மற்றும் 10.3.17 முதல் 13.4.17 வரை குரு ராசிக்கு 3-ல் அமர்வதால், பண விஷயத்தில் கறாராக இருங்கள். புது முயற்சிகள் தாமதமாகி முடிவடையும். வழக்கில் தீர்ப்பு தள்ளிப் போகும். ஆனால், 17.1.17 முதல் 9.3.17 வரை குரு அதிசாரத்திலும், வக்ரகதியிலும் ராசிக்கு 4-ல் அமர்வதால், தாயின் ஆரோக்கியம் பாதிக்கப்படும். அவசரப்பட்டு எந்தக் காரியத்திலும் இறங்க வேண்டாம். சிலருக்கு இடமாற்றம் ஏற்படும்.
வருடம் முழுவதும் ராகு 2-லும் கேது 8-லும் நீடிப்பதால், குடும்பத் தில் சலசலப்புகள் வரும். உங்கள் குடும்ப விஷயத்தில் மற்றவர்கள் தலையிட அனுமதிக்காதீர்கள். அரசு காரியங்கள் தாமதமாக முடியும். வாகன விபத்துகள் ஏற்படக்கூடும். சந்தேகத்தால் நல்ல நட்புகளையும் இழக்க நேரிடும்.   
வியாபாரத்தில் சிறு சிறு நஷ்டங்கள் வந்து போகும். எதிர்பார்த்த ஆர்டர் தாமதமாக வரும். பழைய பாக்கிகளை போராடி வசூலிக்க வேண்டி வரும். தொழில் ரகசியங்களை எவரிடமும் பகிர்ந்து கொள்ள வேண்டாம். வாடிக்கை யாளர்களைத் திருப்திப்படுத்த முடியாமல் திணறுவீர்கள். ஏற்றுமதி – இறக்குமதி, லாட்ஜிங், வாகன உதிரி பாகங்கள், ஸ்டேஷனரி, கமிஷன் வகைகளால் லாபம் அடைவீர்கள். சித்திரை, வைகாசி, புரட்டாசி ஆகிய மாதங்களில் லாபம் வரும். கடையை விரிவு படுத்துவீர்கள்.
உத்தியோகத்தில், உங்களுக்கு நெருக்கமாக இருந்த அதிகாரி மாற்றப்படுவார். புது அதிகாரிகள் உங்களைப் புரிந்துகொள்ளாமல் செயல்பட வாய்ப்பு இருக்கிறது. வேலைச்சுமையும் அதிகரிக்கும். எதிர்பாராத இடமாற்றம் உண்டு. வைகாசி, புரட்டாசி, மார்கழி மாதங் களில் அலுவலகத்தில் நிம்மதி உண்டாகும். எதிர்பார்த்த சலுகை களும், விரும்பிய இடத்துக்கே வேலை மாற்றமும் உண்டாகும்.
மாணவ-மாணவிகளே! படிப்பு மட்டுமல்லாமல் மொழியறிவுத் திறனிலும் கவனம் செலுத்துவீர்கள். அறிவியல் சம்பந்தமான இடங் களுக்குச் சென்று வரும் வாய்ப்பும் உண்டாகும். சிலருக்கு பள்ளி மாற வேண்டி இருக்கும்.
கலைத்துறையினரே! மூத்த கலைஞர்களின் நட்பால் ஆதாயம் அடைவீர்கள். உங்களின் படைப்பு களைப் போராடி வெளியிட வேண்டி வரும்.
மொத்தத்தில் இந்தப் புத்தாண்டு சிறு சிறு கசப்பான அனுபவங்களைத் தருவதாகத் திகழ்ந்தாலும், அனுபவ அறிவால் உங்களை முன்னேற வைப்பதாக அமையும்.
பரிகாரம்
தஞ்சாவூர் மாவட்டம், அழகாபுத்தூர் என்னும் ஊரில் அருள்பாலிக்கும் ஸ்ரீ படிக்காசுநாதரை, பிரதோஷ நாளில் தரிசித்து வணங்குங்கள். நன்மைகள் உண்டாகும்.

சிம்மம் (மகம், பூரம், உத்திரம் 1-ம் பாதம்)
அன்புக்குக் கட்டுப்பட்டவர் நீங்கள்!
புத்தாண்டு பிறக்கும்போது, உங்களின் யோகாதிபதி செவ்வாய் கேந்திர பலம் பெற்று அமர்ந்திருப்பதால், தன்னம்பிக்கை பிறக்கும். பெற்றோரின் உடல் நிலை சீராகும். உடன்பிறந்தவர்கள் உதவியாக இருப்பார்கள். வழக்கில் தீர்ப்பு சாதகமாகும்.
வருடம் பிறக்கும்போது, ராசிநாதன் சூரியனும், ஜீவனாதிபதி சுக்ரனும் 8-ல் உச்சம் பெற்று அமர்ந்தி ருப்பதால், அரசால் அனுகூலம் உண்டு. சிலருக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பு வரும். 1.8.16 வரை ஜென்ம குரு தொடர்வதால், ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். கணவன்-மனைவிக்குள் வீண் சந்தேகத்தால் பிரிவுகள் வரக்கூடும். அனுசரித்துச் செல்வது நல்லது. ஆனால், 2.8.16 முதல் 16.1.17 வரை மற்றும் 10.3.17 முதல் 13.4.17 வரை குரு 2-ம் வீட்டில் அமர்வதால், எதிர்பார்த்து ஏமாந்த தொகை கைக்கு வரும். தடைப்பட்டிருந்த சுப நிகழ்ச்சி கள் நல்லபடி நிறைவேறும். ஷேர் மூலம் பணம் வரும். குடும்பத்தில் அமைதி நிலவும். மூத்த சகோதர வகையில் உதவிகள் உண்டு. ஆனால், 17.1.17 முதல் 9.3.17 வரை குருபகவான் அதிசாரத்திலும், வக்ர கதியிலும் ராசிக்கு 3-ல் அமர்வதால், ஒரே நாளில் பல வேலைகளையும் பார்க்க வேண்டி வரும். புதிய முயற்சிகள் தாமதமாகி முடியும்.
4.12.16 முதல் 29.12.16 வரை சுக்ரன் 6-ல் மறைவ தால், நரம்புச் சுளுக்கு, சோர்வு, வீண் செலவு, வாகன விபத்து, கணவன்-மனைவிக்குள் கருத்து வேறுபாடு கள் வந்து நீங்கும். வருடம் முழுவதும் அர்த்தாஷ்டமச் சனி தொடர்வதால், சின்னச் சின்ன வேலைகளைக் கூட அலைந்து முடிக்க வேண்டி வரும். தவிர்க்க முடியாத செலவுகள் அதிகரிக்கும். தாயாருக்கு சிறு அறுவை சிகிச்சை செய்ய வேண்டி வரும். வழக்கில் தீர்ப்பு தள்ளிப் போகும்.
வருடம் முழுவதும் உங்கள் ஜன்ம ராசியில் ராகுவும், 7-ல் கேதுவும் தொடர்வதால், அடிக்கடி முன்கோபம் வரும். குடும்பத்தில் குழப்பம் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளவும். வாழ்க்கைத் துணைக்கு மருத்துவச் செலவுகள் ஏற்படக்கூடும். பணம் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை.
உங்களின் யோகாதிபதியான செவ்வாய் 16.1.17 முதல் 26.2.17 வரை 8-ல் மறைவதால், வரவுக்கு மிஞ்சிய செலவுகள், சகோதர வகையில் சங்கடங்கள், எதிலும் நம்பிக்கையின்மை, வீடு, மனை வாங்குவது, விற்பதில் சின்னச் சின்ன இழப்புகள், மறைமுக எதிர்ப்புகள் வந்து செல்லும்.
வியாபாரத்தில் ஏற்ற இறக்கங் கள் இருக்கும். வருடத்தின் மத்தியப் பகுதியிலிருந்து ஓரளவு லாபம் வரும். விளம்பர யுக்திகளைக் கையாண்டு லாபம் ஈட்டுவீர்கள். புது சலுகைத் திட்டங்களை அறிமுகப்படுத்தி வாடிக்கையாளர் களைக் கவர்ந்திழுப்பீர்கள். என்றாலும் 4-ம் வீட்டில் சனி நிற்ப தால், பங்குதாரர்கள் உங்களைப் புரிந்துகொள்ள மாட்டார்கள். சில விஷயங்களுக்கு நீதிமன்றம் செல்ல வேண்டிய நிலையும் ஏற்படும். சினிமா, பதிப்புத்துறை, ஹோட்டல், கிரானைட், டைல்ஸ், மர வகை களால் ஆதாயம் உண்டு. வைகாசி, ஆவணி, தை மாதங்களில் பாக்கிகள் வசூலாகும். வங்கிக் கடன் கிடைத்து உங்கள் ரசனைக்கு ஏற்ற இடத்துக்குக் கடையை மாற்றுவீர்கள்.
உத்தியோகத்தில் வேலைச்சுமை அதிகமாகும். சிலருக்கு இடமாற்றம் உண்டு. என்றாலும் ஆனி, ஐப்பசி, தை மாதங்களில் அலுவலகத்தில் அமைதி உண்டாகும். உங்களுக்கு முக்கியத்துவம் அதிகமாகும். வேறு சில புது வாய்ப்புகளும் வரும். சம்பளம் உயரும். உங்கள் மீது தொடுக்கப்பட்ட அவதூறு வழக்கில் இருந்து விடுபடுவீர்கள்.
மாணவ-மாணவிகளே! படிப்பில் அலட்சியம் வேண்டாம். அன்றைய பாடங்களை அன்றே படித்துவிடுவது நல்லது. விளையாடும்போது சின்னச் சின்ன காயங்கள் ஏற்படக் கூடும். கவனமாக இருக்கவும். போட்டித் தேர்வுகளில் போராடி வெற்றி பெற வேண்டி வரும்.
கலைத்துறையினர் விடா முயற்சியால் சாதித்துக் காட்டு வார்கள். அவர்களுடைய படைப்புத் திறன் வளரும்.
மொத்தத்தில் இந்த தமிழ்ப் புத்தாண்டு, முற்பகுதியில் சின்னச் சின்ன சங்கடங்களை தந்தாலும், வருடத்தின் பிற்பகுதி வருங்காலத் திட்டங்களை நிறைவேற்ற உகந்த வாய்ப்புகளைத் தருவதாக அமையும்.
பரிகாரம்
திருநள்ளாறு அருகிலுள்ள அம்பகரத்தூரில் அருளும் ஸ்ரீஅஷ்டபுஜ காளியை, வெள்ளிக்  கிழமை ராகு காலத்தில் எலுமிச்சை தீபம் ஏற்றி வழிபடுங்கள். அல்லல்கள் நீங்கும்.

கன்னி (உத்திரம் 2,3,4-ம் பாதம், அஸ்தம், சித்திரை  1,2-ம் பாதம்)
எதிலும் தூய்மையை விரும்புபவர் நீங்கள்!
சந்திரன் 10-வது ராசியில் நிற்கும்போது புது வருடம் பிறப்பதால், உங்கள் சாதனை தொடரும். நிர்வாகத்திறன் அதிகரிக்கும். புது வேலை கிடைக்கும். மதிப்பு மரியாதை கூடும். அரசால் அனுகூலம் உண்டு. புத்தாண்டு பிறக்கும் நேரத்தில் தனாதிபதி சுக்ரன் 7-ல் உச்சம் பெற்று அமர்ந்திருப்பதுடன் உங்களது ராசியையும் பார்த்துக் கொண்டிருப்பதால், உங்களிடம் மறைந்து கிடந்த திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். கணவன்-மனைவிக்குள் அந்நியோன்யம் கூடும். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள்.
வருடத் தொடக்கத்தில் செவ்வாய் 3-ம் இடத்தில் வலுவாக நிற்பதால், தைரியம் பிறக்கும். பழைய கடன் பிரச்னையில் ஒன்று தீரும். உடன்பிறந்தவர்கள் பக்க பலமாக இருப்பார்கள். ராசிநாதன் புதன் வருடப் பிறப்பின்போது 8-ல் மறைந்திருப்பதால், உறவினர், நண்பர்களின் அன்புத்தொல்லைகள் வந்து போகும். வரவுக்கு மிஞ்சிய செலவுகள் இருக்கும்.
ராகு பகவான் ராசிக்கு பன்னிரண்டாம் வீட்டிலேயே தொடர்வதால், மாதக் கணக்கில் தள்ளிப் போய் கொண்டிருந்த வேலைகள் முடிவடையும். எதிர்பாராத பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். அண்டை மாநிலப் புகழ் பெற்ற புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். கேது 6-ம் வீட்டில் நீடிப்பதால், சுப நிகழ்ச்சிகளால் வீடு களை கட்டும். ஷேர் மூலம் பணம் வரும். வழக்கு சாதகமாகும்.
1.8.16 வரை குரு ராசிக்கு 12-ல் நிற்பதால், எடுத்த வேலைகளை முடிப்பதற்குள் அலைச்சல் அதிகமாகும். பணம் வந்தாலும் செலவுகளும் தொடரும். ஆனால், 2.8.16 முதல் 16.1.17 வரை மற்றும் 10.3.17 முதல் 13.4.17 வரை குரு உங்கள் ராசிக்கு ஜன்ம குருவாக வருவதால், உடல் நலம் பாதிக்கும். மருத்துவப் பரிசோதனை செய்துகொள்வது நல்லது. புது நண்பர்களை நம்பி பெரிய முடிவுகள் எடுக்கவேண்டாம். ஆனால், 17.1.17 முதல் 9.3.17 வரை குரு அதிசாரத்திலும், வக்ரகதி யிலும் ராசிக்கு 2-ல் அமர்வதால், அமைதி உண்டாகும். கணவன் -மனைவிக்குள் இருந்து வந்த மோதல்கள் விலகும். எதிர்பார்த்த தொகை கைக்கு வரும். நோய் குணமாகும். வாழ்க்கைத் துணையின் ஆரோக்கியம் சீராகும். அவர் உங்களின் தியாக உள்ளத் தைப் புரிந்துகொள்வார். பேச்சில் கனிவு பிறக்கும்.
27.2.17 முதல் 11.4.17 வரை செவ்வாய் உங்களுடைய ராசிக்கு 8-ல் மறைவதால், சின்னச் சின்ன ஏமாற்றங்கள், பண இழப்புகள், சகோதர வகையில் மனக்கசப்புகள், வீடு, மனை வாங்குவது, விற்பதில் வில்லங்கம் ஏற்படும். வழக்கில் தீர்ப்பு தாமதம் ஆகும்.  
சனி பகவான் உங்கள் ராசிக்கு 3-ம் வீட்டிலேயே தொடர்வதால், உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். குழந்தை பாக்கியம் கிடைக் கும். மகளுக்கு நல்ல வரன் அமை யும். பூர்வீகச் சொத்தில், உங்கள் ரசனைக்கேற்ப சில மாற்றங்கள் செய்வீர்கள். மகனுக்கு நல்ல வேலை கிடைக்கும். உங்களை எதிர்த்தவர்களும் நட்பு பாராட்டு வார்கள். சிலருக்கு அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும்.   
வியாபாரத்தில் சில தந்திரங் களைக் கற்றுக் கொள்வீர்கள். வி.ஐ.பி-களும் வாடிக்கையாளர் களாக அறிமுகமாவார்கள். ஆனி, ஆடி, மாசி மாதங்களில் வியாபாரம் செழிக்கும். பெரிய நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். உணவு, ஸ்பெகுலேஷன், சிமென்ட்,
கல்விக் கூடங்களால் ஆதாயம் அடைவீர்கள்.  
உத்தியோகத்தில் போராட்டங் கள் அதிகரிக்கும். வேலையில் நீடிப்பது பற்றி மனக் குழப்பம் உண்டாகும். உயர் அதிகாரிகள் உங்களை அலட்சியப்படுத்தினா லும், சக ஊழியர்கள் உதவியாக இருப்பார்கள். ஆனி, ஆடி, கார்த்திகை மாதங்களில் வேலை யில் ஆர்வம் உண்டாகும். சிலர் புது பொறுப்புகளுக்கு தேர்ந்தெடுக்கப் படுவீர்கள்.
மாணவ-மாணவிகள், படிப்பில் ஆர்வம் காட்டுவார்கள். நினைவாற் றல் கூடும். கலைத் துறையினரின் படைப்புகள் பலராலும் பாராட்டப் படும். புது வாய்ப்புகளும் வந்து சேரும்.  
மொத்தத்தில் இந்த புத்தாண்டு சிற்சில தருணங்களில் சுகவீனங் களை அளித்தாலும் வசதி, வாய்ப்பு களை அள்ளிக்கொடுப்பதாகவும் அமையும்.
பரிகாரம்
சுவாதி  நட்சத்திர நாளில், வேலூர் மாவட்டம் சோளிங்கரில் அருளும் ஸ்ரீயோக நரசிம்மரை, வணங்கி வாருங்கள். வாழ்க்கையில் மகிழ்ச்சி  பெருகும்.

துலாம் (சித்திரை 3,4-ம் பாதம் சுவாதி, விசாகம் 1,2,3-ம் பாதம்)
இன்ப துன்பங்களை சமமாகக் கருதுபவர் நீங்கள்!
உங்கள் ராசிக்கு 9-ல் சந்திரன் இருக்கும்போது புத்தாண்டு பிறப்பதால், மாறுபட்ட அணுகுமுறையால் முன்னேற்றம் காண்பீர்கள். பணவரவு திருப்திகரமாக இருக்கும். பிரபலங்களின் அறிமுகமும், அதனால் ஆதாயமும் கிடைக்கும். வீடு மனை வாங்கும் யோகம் உண்டாகும். புது பொறுப்புகளுக்குத் தேர்ந்தெடுக்கப் படுவீர்கள். புத்தாண்டு பிறக்கும் நேரத்தில் புதன் 7-ல் அமர்ந்து உங்கள் ராசியைப் பார்ப்பதால் திருமண பேச்சுவார்த்தை சாதகமாகும்.
வருட ஆரம்பத்தில் உங்களுடைய ராசியதிபதி சுக்ரன் உச்சம் பெற்று அமர்ந்திருப்பதால், மகிழ்ச்சி உண்டாகும். ஆனால், சுக்ரன் 6-ல் மறைந்திருப்பதால், வாகனப் பழுது, சிறுசிறு விபத்துகள், கணவன் – மனைவிக்கு இடையில் மனவருத்தம் வந்து நீங்கும்.வருடம் முழுவதும் பாதச் சனி தொடர்வதால், குடும்பத் தில் அவ்வப்போது சச்சரவுகள் ஏற்படும்; பொறுமை அவசியம். வழக்குகள் தள்ளிப் போகும். எவருக்கும் சாட்சிக் கையெழுத்துப் போடவேண்டாம். பணப் பற்றாக்குறை அதிகரிக்கும். பூர்விகச் சொத்தில் கவனம் தேவை. மறதியால் விலையுயர்ந்த பொருட்களை இழக்க நேரிடும்.
குரு பகவான் 1.8.16 வரை உங்கள் ராசிக்கு லாப வீட்டில் அமர்ந்திருப்பதால், பிரபலங்கள் மற்றும் நல்லவர்களின் நட்பால் உங்கள் பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும். பழைய நகையை மாற்றி, புது டிசைனில் ஆபரணம் வாங்குவீர்கள். சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். மகளுக்கு நல்ல வரன் அமையும். அரசாங்க விஷயங்கள் சாதகமாக முடியும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். ஆனால், 2.8.16 முதல் 16.1.17 வரை மற்றும் 10.3.17 முதல் 13.4.17 வரை குரு உங்கள் ராசிக்கு 12-ல் மறைவதால், வீண் விரயம், ஏமாற்றம், எதிலும் தடை தாமதங்கள் வந்து செல்லும். கடன் வாங்கவேண்டிய சூழ்நிலை உண்டாகும். திடீர் பயணங்கள் அதிகரிக்கும். அவ்வப்போது கனவுத் தொல்லை அதிகரிக்கும்.
17.1.17 முதல் 9.3.17 வரை குரு பகவான் அதிசாரத்திலும், வக்ர கதியிலும் ஜன்ம குருவாக வருவதால், உடல் நலனில் கவனம் தேவை. கணவன் – மனைவிக்குள் சச்சரவுகள் வரக்கூடும்.
வருடம் முழுவதும் ராகு பகவான் உங்கள் ராசிக்கு லாப ஸ்தானத்தி லேயே தொடர்வதால், செல்வம், செல்வாக்கு கூடும். கொடுத்த பணம் திரும்ப வரும். ஷேர் மூலமாகவும் பணவரவு உண்டு. சகோதர வகையில் ஒற்றுமை வலுப்படும். வெளிவட்டாரத்தில் மரியாதை கூடும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். கணவன் – மனைவிக்குள் அந்நியோன்யம் அதிகரிக்கும். தள்ளிப்போன திருமண முயற்சிகள் கூடிவரும். உடல் ஆரோக்கியம் சீராகும். பிற மொழி பேசுபவர்களால் யோகம் உண்டாகும். ஆனால், கேது 5-ல் இருப்பதால், வீண் குழப்பங்கள், பிள்ளைகளால் பிரச்னைகள் தோன்றும். பூர்வீகச் சொத்தில் பிரச்னை ஏற்படும். மகளின் திருமண விஷயத்தில் அவசரம் வேண்டாம்.
27.1.17 முதல் வருடம் முடியும் வரை சுக்ரன் ராசிக்கு 6-ல் மறைந்திருப்பதால், சளித் தொந்தரவு, தலைவலி, மூச்சுப் பிடிப்பு வந்து செல்லும். மின்சார சாதனங்கள் பழுதாகும். வாழ்க்கைத் துணைக்கு வயிற்று வலி, தைராய்டு பிரச்னை வந்து போகும்.
வியாபாரத்தில், புதிய முதலீடு கள் செய்வீர்கள். சிலர், கடையை சொந்த இடத்துக்கு மாற்றுவீர்கள். புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். கமிஷன், ஸ்பெகு லேஷன், அழகுசாதனப் பொருட்கள், கம்ப்யூட்டர் உதிரி பாகங்களால் லாபம் அடைவீர்கள். ஆடி, ஆவணி, மார்கழி, பங்குனி மாதங்களில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும்.
உத்தியோகத்தில், வேலை அதிகரிக்கும். ஆடி, ஆவணி, மார்கழி மாதங்களில் அயல்நாடு தொடர்புடைய நிறுவனத்தில் சிலருக்கு வேலை அமையும். மாணவ-மாணவிகளுக்கு விரும்பிய கல்விப் பிரிவில், எதிர்பார்த்த நிறுவனத்தில் இடம் கிடைக்கும். மதிப்பெண் கூடும்.     கலைத் துறையினருக்கு பெரிய நிறுவனங்களின் வாய்ப்புகள் வரும்.
மொத்தத்தில் இந்தப் புத்தாண்டு, உங்களுக்கு சின்னச் சின்ன ஏமாற்றங்களை தந்தாலும், சாதனை கள் படைக்கத் தூண்டுவதாக அமையும்.
பரிகாரம்
சனிக்கிழமை அன்று, காஞ்சியில் அருளும் ஸ்ரீபாண்டவதூத பெருமாளை, துளசி மாலை அணிவித்து வணங்கி வாருங்கள்; சங்கடங்கள் குறையும்.

விருச்சிகம் (விசாகம் 4-ம் பாதம் அனுஷம், கேட்டை)
சவால்களை ஏற்று சாதிப்பவர் நீங்கள்!
உங்கள் ராசிநாதன் செவ்வாய் ராசியிலேயே ஆட்சி பெற்று இருக்கும்போது புத்தாண்டு பிறப்பதால், இடையூறுகளைக் கடந்து சாதிப்பீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். வீடு, மனை வாங்குவது விற்பது லாபகரமாக முடியும். சகோதர வகையில் அனுகூலம் உண்டாகும். ஆனால், சனியின் சேர்க்கை இருப்பதால், அலர்ஜி, ரத்தசோகை, முன்கோபம் வந்து செல்லும்.
உங்கள் ராசிக்கு 8-ம் வீட்டில் சந்திரன் நிற்கும்போது புத்தாண்டு பிறப்பதால், அலைச்சலுடன் ஆதாயம் உண்டாகும். பணப் பற்றாக்குறையை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். வருடம் பிறக்கும்போது சூரியனும், சுக்ரனும் சாதகமாக இருப்பதால், எதிர்ப்புகள் இல்லாமல் போகும். இங்கிதமாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். அரசாங்க காரியங்கள் சாதகமாகும்.
வருடம் முழுவதும் ஜன்மச் சனி தொடர்வதால், உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. கணவன் – மனைவிக்கு இடையில் சிலர் குழப்பம் ஏற்படுத்தப் பார்ப்பார்கள். சொத்துப் பிரச்னைக்கு சுமுகத் தீர்வு காண்பது, தேவையற்ற சங்கடங்களைக் குறைக்கும்.
1.8.16 வரை குரு 10-ல் தொடர்வதால், வேலைச் சுமையால் அசதி, சோர்வு வந்து நீங்கும். விலை உயர்ந்த நகை, பணத்தை இழக்க நேரிடும். யாரையும் எளிதில் நம்பி ஏமாற வேண்டாம். மறைமுக அவமானங் கள் வந்து நீங்கும். 2.8.16 முதல் 16.1.17 வரை மற்றும் 10.3.17 முதல் 13.4.17 வரை குருபகவான் லாப வீட்டில் அமர்வதால், தடைகள் நீங்கும். வி.ஐ.பி-களின் அறிமுகம் கிடைக்கும். பணவரவு அதிகரிக்கும். இழந்த செல்வாக்கைத் திரும்பப் பெறுவீர்கள்.தடைப்பட்ட சுபநிகழ்ச்சிகள் நல்லபடி நிறைவேறும். சிலருக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும். மூத்த சகோதர வகையில் ஆதரவு பெருகும். ஆனால், 17.1.17 முதல் 9.3.17 வரை குரு பகவான் அதிசாரத்திலும், வக்ரகதியிலும் உங்களுடைய ராசிக்கு 12-ல் மறைவதால், திடீர் பயணங்களும் சுபச் செலவுகளும் அதிகரிக்கும்.
வருடம் முழுவதும் ராகு 10-ல் தொடர்வதால், கடினமான காரியங் களையும் சுலபமாக செய்து முடிப்பீர்கள். நிர்வாகத் திறன் கூடும். குடும்பத்தில் அமைதி திரும்பும். சில அவமானங்கள் ஏற்படக்கூடும். திறமையும் உழைப்பும் இருந்தும் உரிய பலனைப் பெற முடியவில்லையே என்று ஆதங்கப்படுவீர்கள்.
கேது 4-ம் வீட்டிலேயே தொடர்வதால், அவ்வப்போது தன்னம்பிக்கை குறையும். தாயாரின் உடல்நலம் பாதிக்கக் கூடும். கடன் விஷயத்தில் எச்சரிக்கையாக இருக்கவும். மின்சார சாதனங்கள் பழுதாகும். அரசு காரியங்கள் தாமதமாகும். சிலருக்கு இடமாற்றம் ஏற்படும்.
வியாபாரத்தில் நெளிவு, சுளிவு களைக் கற்றுக் கொண்டு கூடுதல் லாபம் அடைவீர்கள். பெரிய முதலீடுகள் இப்போதைக்கு வேண் டாம். வாடிக்கையாளர்களிடம் கனிவு தேவை. வேலையாட்கள், பங்குதாரர்களுடன் போராடவேண்டி இருக்கும். உணவு, இரும்பு, கன்சல்டன்சி, ரியல் எஸ்டேட் மற்றும் மர வகைகளால் ஆதாயம் உண்டு. சித்திரை, ஆவணி, புரட்டாசி ஆகிய மாதங்களில் திடீர் லாபம் உண்டு.  
2.8.16 முதல் உத்தியோகத்தில் எல்லோராலும் மதிக்கப்படுவீர்கள். வேலைச்சுமை குறையும். என்றாலும் ராகு 10-ல் நிற்பதால், மூத்த அதிகாரிகளை திருப்திபடுத்த முடியாமல் திணறுவீர்கள். உங்களைப் பற்றிய விமர்சனங்கள் அதிகமாகும். சில நேரங்களில் வேலையை விட்டுவிடலாமா என்ற எண்ணம் ஏற்படும். அவசரப்பட்டு முடிவு எடுக்கவேண்டாம். சித்திரை, ஆவணி, புரட்டாசி, தை மாதங் களில், தள்ளிப்போன பதவி உயர்வும் சம்பள உயர்வும் உங்களைத் தேடி வரும்.
மாணவ-மாணவிகளுக்கு, படிப்பில் கூடுதல் உழைப்பு தேவை. விளையாட்டு, பொது அறிவுப் போட்டிகளில் பாராட்டும் பரிசும் கிடைக்கும். கலைத் துறையினரின் தடைப்பட்டு கிடந்த படைப்புகள், இப்போது ரிலீஸாகும். அதேநேரம், வீண் பழிகளும் விமர்சனங்களும் அதிகரிக்கும். அதற்காக வருந்த வேண்டாம்.
மொத்தத்தில், இந்தப் புத்தாண்டு ஓய்வெடுக்க முடியாத அளவுக்கு வேலைச் சுமையையும், பரபரப்பையும் தரும் என்றாலும், உங்களுக்கென்று தனி அங்கீகாரத்தைப் பெற்றுத் தருவதாகவும் அமையும்.
பரிகாரம்
சதுர்த்தசி அன்று ஈரோடு மாவட்டம், கொடுமுடிக்குச் சென்று, அங்கு அருளும் ஸ்ரீ மகுடேஸ்வரரை வில்வத்தால் அர்ச்சித்து வழிபடுங்கள். விக்கினங்கள் நீங்கும்.

தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் 1-ம் பாதம்)
முயற்சியை எப்போதும் கைவிடாதவர் நீங்கள்!
உங்கள் ராசிக்கு 7-ம் வீட்டில் சந்திரன் இருக்கும் போது, புது வருடம் பிறப்பதால், உங்களுடைய அறிவாற்றலை வெளிப்படுத்த நல்ல சந்தர்ப்பங்கள் அமையும். தடைப்பட்டு வந்த திருமணம் உடனே முடியும். கணவன் – மனைவிக்கு இடையில் அந்நியோன்யம் கூடும்.
வருடம் பிறக்கும்போது சுக்ரனும் புதனும் சாதகமாக இருப்பதால், கனிவாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். பணப் பற்றாக்குறையைப் போக்க கூடுதலாக உழைப்பீர்கள். மனைவிவழி உறவினர்கள் மத்தியில் மதிப்பு கூடும். பிரபலங்களுக்கு நெருக்கமாவீர்கள். பழைய கடன் பிரச்னை தீரும்.
1.8.16 வரை உங்கள் ராசிநாதன் குரு பகவான் 9-ல் நிற்பதால், பிரச்னைகளைத் தீர்க்கும் சூட்சுமத்தை உணர்வீர்கள். எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். பாதியில் நின்ற வீடு கட்டும் பணியை விரைந்து முடிப்பீர்கள். குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். தாயாரின் ஆரோக்கியம் மேம்படும். எதிரிகளும் நண்பர்களாவார்கள். ஆனால், 2.8.16 முதல் 16.1.17 வரை மற்றும் 10.3.17 முதல் 13.4.17 வரை குரு 10-ம் வீட்டில் நுழைவதால், சில ஏமாற்றங் களைச் சந்திக்க நேரிடும். உங்களின் திறமையையும் உழைப்பையும் மற்றவர்கள் பயன்படுத்திக்கொள்வர். எந்த விஷயத்தையும் நீங்களே நேரடியாக முடிக்கவும்.
ஆனால், 17.1.17 முதல் 9.3.17 வரை குரு பகவான் அதிசாரத்திலும், வக்ரகதியிலும் ராசிக்கு 11-ல் அமர்வதால், அடிப்படை வசதி, வாய்ப்புகள் பெருகும். சுபகாரியங்கள் நடைபெறும். தாயின் ஆதரவு அதிகரிக்கும். எதிர்பாராத பணவரவுக்கும் இடம் உண்டு. மூத்த சகோதர வகையில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வருடம் முழுவதும் ராகு பகவான் 9-ம் வீட்டிலேயே தொடர்வதால், தன்னம்பிக்கை பிறக்கும். வர வேண்டிய பணம் வந்து சேரும். வீடு கட்ட, தொழில் தொடங்க வங்கிக் கடன் உதவி கிடைக்கும். தந்தைக்கு ரத்த அழுத்தம், கை, கால் வலி வந்து போகும். பிதுர்வழி சொத்துப் பிரச்னை தலைதூக்கும். தந்தையாருடன் மனத்தாங்கல் வரும். செலவுகளும் அதிகரிக்கும். பாகப்பிரிவினை பிரச்னையில் இப்போது தலையிட வேண்டாம்.
ஆனால், கேது 3-ம் வீட்டிலேயே நீடிப்பதால், தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். எதிர்பாராத பணவரவு உண்டு. இளைய சகோதர வகையில் பிணக்குகள் நீங்கும். பங்குச் சந்தை மூலமாக பணம் வரும். கௌரவப் பதவிகள் வரும். வருடம் முழுவதும் விரயச் சனி தொடர்வதால், மனச் சஞ்சலம் உண்டாகும். எந்த ஒரு வேலையை யும் போராடி முடிக்கவேண்டி வரும். வீண் அலைச்சல்கள் அதிகரிக்கும். நண்பர்கள் வீட்டு சுபநிகழ்ச்சிகளை நீங்களே முன்னின்று நடத்துவீர்கள். திடீர்ப் பயணங்கள் உங்களை அலைக்கழிக்கும். ஒரு சிக்கல் தீர்ந்தது என்று நினைக்கும்போது புதிதாக மற்றொரு சிக்கல் ஏற்படும்.
வியாபாரத்தில், வாடிக்கையாளர் களின் ரசனைகளுக்கு ஏற்ப முதலீடு செய்வது நல்லது. ஏற்றுமதி – இறக்குமதி, கெமிக்கல், பிளாஸ்டிக் வகைகளால் லாபம் அதிகரிக்கும். பங்குதாரர்கள் உங்கள் ஆலோசனைகளை ஏற்பர். கடையை வேறு இடத்துக்கு மாற்று வீர்கள். வைகாசி, ஆவணி, புரட்டாசி ஆகிய மாதங்களில் லாபம் அதிகரிக்கும்.    
2.8.16 முதல் குரு உங்கள் ராசிக்கு 10-ல் அமர்வதால், உத்தியோகத்தில் பொறுப்பு அதிகமாகும். சக ஊழியர்களில் ஒருசிலர் அவர்களின் வீழ்ச்சிக்கு நீங்கள் காரணம் என்று தவறாகப் புரிந்துகொள்வார்கள். மறைமுக எதிர்ப்புகளும் இருக்கும். சிலருக்கு,  கட்டாய ஓய்வு எடுக்கவேண்டிய சூழலும் உருவாகலாம். அதுவும் நன்மைக்கே! வைகாசி, ஆவணி, புரட்டாசி, ஐப்பசி மாதங்களில் அலுவலகத்தில் உங்களின் மதிப்பு கூடும்.
மாணவ-மாணவிகள், ஒரு முறைக்கு பலமுறை படிப்பதும், படித் ததை எழுதிப்பார்ப்பதும் அவசியம்.பெற்றோர் உங்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வார்கள். கலைத் துறையினரே! படைப்புகளை வெளியிடுவதில் கொஞ்சம் விட்டுக் கொடுத்துப் போகவும். வேற்றுமொழி வாய்ப்புகளும் வரும். 
மொத்தத்தில் இந்தப் புத்தாண்டு உங்களைக் கொஞ்சம் செம்மைப் படுத்திக் கொள்ள உதவுவதுடன், சமூகத்தில் அனுசரித்துப் போகும் கலையை உங்களுக்குக் கற்றுத் தருவதாகவும். அமையும்.
பரிகாரம்
நாமக்கல் ஸ்ரீஆஞ்சநேயரை, மூலம் நட்சத்திர நாளில், வெற்றிலை மாலை அணிவித்து வணங்கி வாருங்கள். கஷ்டங்கள் குறையும்.

மகரம் (உத்திராடம் 2,3,4-ம் பாதம் திருவோணம், அவிட்டம் 1,2-ம் பாதம்)
மனதில் சரியெனப்பட்டதை தயங்காமல் செய்பவரே!
செவ்வாய், உங்கள் ராசிக்கு லாப ஸ்தானத்தில் ஆட்சி பெற்று அமர்ந்திருக்கும் நேரத்தில் புத்தாண்டு பிறப்பதால், எதிலும் உங்கள் கை ஓங்கும். எதிர்பாராத பணவரவு உண்டு. பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். பேச்சில் கம்பீரம் கூடும். வீடு, மனை வாங்குவது விற்பது லாபகரமாக முடியும். உடன் பிறந்தவர்களால் ஆதாயம் உண்டு. வெளி வட்டாரத்தில் மதிப்பு கூடும். கமிஷன் மூலம் பணம் வரும். 
சுக்ரனும், புதனும் சாதகமான வீடுகளில் செல்வதால், சின்னச் சின்ன வாய்ப்புகளையும் பயன்படுத்திக் கொள்வீர்கள். உறவினர்கள் மத்தியில் செல்வாக்கு கூடும். பழைய நண்பர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள்.  
உங்கள் ராசிக்கு 6-ல் சந்திரன் இருக்கும்போது, புது வருடம் பிறப்பதால், சில சவால்களைச் சந்திக்க வேண்டி வரும். மறைமுக எதிர்ப்புகள் அதிகமாகும். பயணங்களும், செலவுகளும் துரத்தும். சிலருக்கு வேற்று மாநிலம் அல்லது வெளிநாட்டில் வேலை கிடைக்கும். பழைய கடனை நினைத்து அவ்வப்போது கலங்குவீர்கள்.  வருடம் முழுவதும் ராகு 8-லும், கேது 2-லும் நீடிப்பதால், காலம் அறிந்து செயல்படுவது அவசியம். செலவுகள் தொடரும். சிலருக்கு அயல்நாடு சென்று வரும் வாய்ப்பு ஏற்படும். கணவன் – மனைவிக்கு இடையில், சிலர் பிரச்னை ஏற்படுத்தப் பார்ப்பார்கள். சிறு சிறு விபத்துக்கள் ஏற்படக்கூடும். வழக்கு விவகாரங்களில் எச்சரிக்கையுடன் செயல் படவும். சிலருக்கு புண்ணிய தலங்களுக்குச் சென்று வரும் வாய்ப்பு உண்டாகும்.
வருடம் முழுவதும் உங்கள் ராசிநாதன் சனிபகவான் லாப வீட்டில் தொடர்வதால், அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடி வரும். வருமானம் உயரும். ஓரளவு சேமிப்புக்கும் இடமுண்டு. பெரிய பதவியில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். வீட்டில் திருமணம், வளைகாப்பு, கிரகப் பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். நீண்ட காலமாக குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். ரசனைக்கு ஏற்ப புது வீடு வாங்குவீர்கள். மகனுக்கு வெளிநாட்டில் உயர்கல்வி அமையும். மனைவி வழியில் மரியாதை கூடும். சிலருக்கு கௌரவ பதவிகள் தேடி வரும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். அயல்நாடு செல்ல விசா கிடைக்கும்.
1.8.16 வரை குருபகவான் 8-ல் மறைந்திருப்பதால், மறைமுக எதிரிகளால் ஆதாயம் அடைவீர்கள். திடீர் பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். சேமிக்க இயல வில்லையே என ஆதங்கப்படுவீர்கள். ஆனால், 2.8.16 முதல் 16.1.17 வரை மற்றும் 10.3.17 முதல் 13.4.17 வரை குருபகவான் உங்கள் ராசிக்கு 9-ம் வீட்டில் நுழைவதால், வீண் குழப்பங் கள், தடுமாற்றங்கள் நீங்கி தெளிவு பிறக்கும். திடீர் பணவரவு உண்டா கும். குடும்பத்தில் சச்சரவுகள் குறையும். பூர்வீகச் சொத்துப் பிரச்னை முடிவுக்கு வரும். ஆனால், 17.1.17 முதல் 9.3.17 வரை குரு பகவான் அதிசாரத்திலும், வக்ர கதியிலும் ராசிக்கு 10-ம் வீட்டில் அமர்வதால், அடுக்கடுக்கான வேலைகளால் அவதிப்படுவீர்கள். வாக்கை காப்பாற்ற முடியாமல் போகும். உங்களுடைய உழைப்புக்கு மற்றவர்கள் உரிமை கொண்டாடு வார்கள். தன்னம்பிக்கை குறையும்.
வியாபாரத்தில் சில நுணுக்கங் களைக் கற்றுக் கொள்வீர்கள். சந்தை நிலவரத்தை அவ்வப்போது கவனித்து அதற்கேற்ப செயல்படுங் கள். வேலையாட்களின் குறை, நிறைகளை பொறுமையாக சுட்டிக் காட்டி திருத்துங்கள். விளம்பரங் களின் மூலம் உங்கள் தொழிலை விரிவுபடுத்துவீர்கள். மூலிகை, கட்டட உதிரி பாகங்கள், துணி, புரோக்கரேஜ் வகைகளால் லாபம் அடைவீர்கள். ஆனி, ஐப்பசி, கார்த்திகை மாதங்களில் பழைய பாக்கிகள் வசூலாகும்.  
உத்தியோகத்தில், உயரதிகாரி களுக்கு தகுந்தாற்போலும் பேசும் வித்தையையும் கற்றுக் கொள்ள வேண்டுமென்ற முடிவுக்கு வருவீர்கள். ஆனி, ஐப்பசி, கார்த் திகை, பங்குனி மாதங்களில் இழந்த சலுகைகளை மீண்டும் பெறுவீர்கள்.     
மாணவ-மாணவிகளுக்கு போட்டித் தேர்வுகளில் வெற்றி உண்டு. கலைத் துறையினரின் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும்.
மொத்தத்தில் இந்த துர்முகி வருடம், மாறுபட்ட அணுமுறையால்  உங்களை முன்னேற வைப்பதாக அமையும்.
பரிகாரம்
அஷ்டமி திதி அல்லது திங்கட் கிழமைகளில், சமயபுரம் சென்று, மாரியம்மனுக்கு எலுமிச்சை மாலை அணிவித்து வணங்கி வாருங்கள்; இன்னல்கள் குறையும்.

கும்பம் (அவிட்டம் 3,4-ம் பாதம் சதயம், பூரட்டாதி 1,2,3-ம் பாதம்)
பிரதிபலன் பாராமல் உதவுபவர் நீங்கள்.
உங்கள் ராசிக்கு 3-ம் வீட்டில் சூரியன் பலம் பெற்று அமர்ந்திருக்கும் நேரத்தில், இந்தப் புத்தாண்டு பிறப்பதால் மனோபலம் கூடும். அரசால் அனுகூலம் உண்டாகும். நீண்ட காலமாக எதிர்பார்த்து காத்திருந்த விசா வரும். கணவன்-மனைவிக்குள் இருந்து வந்த கசப்பு உணர்வுகள் நீங்கும். மனைவிவழியில் ஆதரவு பெருகும். இழுபறியான வேலைகள் முடிவடையும்.
இந்தப் புத்தாண்டு உங்கள் ராசிக்கு 5-ம் வீட்டில் பிறப்பதால், அடிப்படை வசதிகள் உயரும். பிள்ளை களால் மதிப்பு கூடும். மகளின் திருமணம் கூடிவரும். மகனின் உயர்கல்வி, வேலை போன்ற முயற்சிகள் சாதகமாக முடியும். பூர்வீகச் சொத்தை சீர்படுத்துவீர்கள்.
வருடம் முழுவதும் உங்கள் ராசிநாதன் சனிபகவான் 10-ம் இடத்திலேயே தொடர்வதால், உழைப்புக்கேற்ற பலன் கிடைக்கும். குடும்ப வருமானத்தை உயர்த்த புது முயற்சிகள் மேற்கொள்வீர்கள். உங்களின் நிர்வாகத் திறன், ஆளுமைத் திறன் அதிகரிக்கும். அரசு காரியங்கள் விரைந்து முடிவடையும். வீடு கட்ட, வாகனம் வாங்க வங்கிக் கடன் உதவி கிடைக்கும். வழக்கில் வெற்றி கிடைக்கும். வருடம் பிறக்கும் நேரத்தில் செவ்வாய் பகவான் ஆட்சி பெற்று 10-ம் வீட்டில் அமர்ந்திருப்பதால், புது வேலை கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் அன்புடனும் அனுசரணையுடனும் நடந்துகொள்வார்கள். சிலருக்கு சொந்தமாக வீடு, மனை வாங்கும் யோகமும் உண்டாகும்.
1.8.16 வரை குரு 7-ல் அமர்ந்து உங்கள் ராசியைப் பார்ப்பதால்,  உங்களின் திறமைகள் வெளிப்படும். சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். கணவன்-மனைவிக்குள் அந்நியோன்யம் அதிகரிக்கும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். திருமணம் கூடி வரும். மனைவிவழி உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். 2.8.16 முதல் 16.1.17 வரை மற்றும் 10.3.17 முதல் 13.4.17 வரை, குரு ராசிக்கு 8-ல் சென்று மறைவதால், வீண் அலைச்சல் அதிகரிக்கும். தன்னம்பிக்கை குறையும். செலவு கள் அதிகமாகும். சில வேலை களைப் போராடி முடிக்க வேண்டி வரும். மறதியால் விலை உயர்ந்த தங்க ஆபரணங்களை இழக்க நேரிடும். ஆனால், 17.1.17 முதல் 9.3.17 வரை குரு அதிசாரத்திலும், வக்ரகதியிலும் ராசிக்கு 9-ல் அமர்வதால், தன்னம்பிக்கை உண்டாகும். தொழிலதிபர்களின் நட்பு கிடைக்கும்.
வருடப் பிறப்பு முதல் ஆண்டு முழுவதும் உங்கள் ராசிக்கு 7-ம் இடத்திலேயே ராகு தொடர்வதால், வீண் சந்தேகத்தால் கணவன்-மனைவிக்குள் பிரிவுகள் வரக் கூடும். மனைவிவழி உறவினர் களுடன் மனத்தாங்கல் வரும். உங்களைவிட வயதில் குறைந்த வர்கள் மூலமாக ஆதாயம் அடைவீர் கள். கேதுவும் உங்கள் ஜன்ம ராசியிலேயே தொடர்வதால், ஆரோக்கியம் பாதிக்கும். இரவு நேர பயணங்களைத் தவிர்க்கவும்.
வியாபாரத்தில், போட்டிகளைச் சமாளிக்க அதிகம் உழைக்க வேண்டி வரும். பெரிய முதலீடுகள் செய்ய வேண்டாம். எவருக்கும் முன்பணம் தர வேண்டாம். புது தொழில், புது முயற்சிகளில் இறங்க வேண்டாம். கட்டட உதிரி பாகங்கள், கமிஷன், பூ, மர வகை களால் ஆதாயம் அடைவீர்கள். இயன்ற வரையிலும் கூட்டுத் தொழிலைத் தவிர்க்கவும். கடையை அவசரப்பட்டு வேறு இடத்துக்கு மாற்ற வேண்டாம். ஆடி, கார்த்திகை, மார்கழி மாதங்களில் புது முதலீடுகள் செய்வீர்கள். எதிர்பார்த்த லாபம் வரும். 
உத்தியோகத்தில்,  உழைப்புக்கு ஏற்ற அங்கீகாரம் இல்லையே என ஆதங்கம் உண்டாகும். சூழலுக்கு ஏற்ப உங்களுடைய கருத்துக்களை மேலதிகாரிகளிடம் பதிவு செய்வது நல்லது. நியாயமான பதவி உயர்வு, சம்பள உயர்வைகூட போராடி பெற வேண்டி வரும். சித்திரை, ஆடி, கார்த்திகை, மார்கழி மாதங்களில் அலுவலகத்தில் முன்னேற்றம் கிடைக்கும்.
மாணவ-மாணவிகளுக்கு மறதியால் மதிப்பெண் குறைய வாய்ப்பு உண்டு. ஆகவே, படிப்பில் கவனம் செலுத்தவும். கலைத் துறையினர், சம்பள விஷயத்தில் கறாராக இருக்கவும். பெரிய வாய்ப்புகளும் உங்களைத் தேடி வரும்.
மொத்தத்தில் இந்த புத்தாண்டு, ஆரோக்கியக் குறைவையும், காரியத் தடங்கல்களையும் தந்தா லும், தொடர் முயற்சிகளால் இலக்கை எட்டிப் பிடிக்கவைப்பதாக அமையும்.
பரிகாரம்
அஷ்டமி திதி நாளில், சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் அருளும் யோக பைரவரைத் தரிசித்து, தேங்காய் தீபமேற்றி வணங்கி வாருங்கள். சங்கடங்கள் நீங்கும்.

மீனம் (பூரட்டாதி  4-ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)
பிறர் கஷ்டங்களைத் தனதாகக் கருதும் பண்பாளரே!
உங்கள் ராசிக்கு சுக ஸ்தானத்தில் துர்முகி வருடம் பிறப்பதால், கனவுகள் நனவாகும். தள்ளிப்போன காரியங்கள் விரைந்து முடிவடையும். பிரபலங்கள் நண்பர்களாவார்கள். தாயாரின் உடல் நிலை சீராகும். தாய்வழி உறவினர்களுடன் இருந்த மோதல்கள் விலகும். தாய்வழி சொத்து கைக்கு வரும்.
வருடம் முழுவதும் ராகு உங்கள் ராசிக்கு 6-ம் வீட்டிலேயே தொடர்வதால், பிரச்னைகள் வெகுவாக குறையும். எதிர்த்தவர்கள் நண்பர்களாவார்கள். புது பதவிகள் தேடி வரும். வெற்றி பெற்ற மனிதர்களின் நட்பு கிடைக்கும். மழலை பாக்கியம் கிடைக்கும். பிள்ளைகளின் வருங்காலம் குறித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். ஷேர் மூலமாக பணம் வரும். வழக்கு சாதகமாகும். மகளுக்கு நல்ல வரன் அமையும். மகனுக்கு அயல்நாடு தொடர்புடைய நிறுவனத்தில் வேலை கிடைக்கும். அயல்நாட்டில் இருக்கும் நண்பர்களால் ஆதாயம் அடைவீர்கள். கேது ராசிக்கு 12-ல் மறைந்திருப்பதால், வாழ்க்கையின் நெளிவு, சுளிவுகளைக் கற்றுக் கொள்வீர்கள். திடீர் பயணங்கள் அதிகரிக்கும்.           
1.8.16 வரை உங்கள் ராசிநாதன் குரு ராசிக்கு 6-ம் வீட்டில் மறைந்திருப்பதால்,  சில வேலைகளை போராடி முடிப்பீர்கள். வீண் சந்தேகத்தால் நல்லவர் களின் நட்பை இழக்க நேரிடும். மற்றவர்கள் விவகாரத் தில் தலையிட வேண்டாம். 2.8.16 முதல் 16.1.17 வரை மற்றும் 10.3.17 முதல் 13.4.17 வரை குரு 7-ம் வீட்டில் அமர்ந்து உங்கள் ராசியைப் பார்க்க இருப்பதால், உங்களின் திறமைக்கு அங்கீகாரம் கிடைக்கும். கணவன்-மனைவிக்குள் அந்நியோன்யம் உண்டாகும். விலை உயர்ந்த ஆபரணங்கள் வாங்குவீர்கள். காணாமல் போன முக்கிய ஆவணம் ஒன்று கிடைக்கும். சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். புதியவரின் நட்பால் உற்சாகம் அடைவீர்கள். ஆனால், 17.1.17 முதல் 9.3.17 வரை குரு  அதிசாரத் திலும், வக்ரகதியிலும் ராசிக்கு 8-ல் அமர்வதால், குடும்பத்தினரு டன் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. வீண் அலைச்சல்கள் அதிகமாகும். சிலர், உங்களைப் பற்றிய தவறான வதந்திகளைப் பரப்புவர்; பொறுமை அவசியம்.
இந்த வருடம் முழுவதும் சனி ராசிக்கு 9-ல் நிற்பதால், மற்றவர் களால் செய்ய முடியாத காரியங் களை முடித்துக் காட்டுவீர்கள். மதிப்பு கூடும். பழைய பிரச்னைகள், சிக்கல்களுக்குத் தீர்வு காண்பீர்கள். அயல்நாடு தொடர்புடைய நிறுவனத் தில் வேலை கிடைக்கும். பொது விழாக்களில் முதல் மரியாதை கிடைக்கும். ஆனால், தந்தையுடன் வாக்குவாதம், அவருக்கு நரம்புச் சுளுக்கு, மூட்டுத் தேய்மானம், சிறுசிறு அறுவை சிகிச்சைகள் வந்து போகும். பிதுர்வழி சொத்துப் பிரச்னை விஸ்வரூபமெடுக்கும். வழக்கில் தீர்ப்பு தள்ளிப் போகும்.
இந்தப் புத்தாண்டு செவ்வாய், சுக்ரன், புதன் ஆகிய கிரகங்கள் சாதகமாக இருக்கும் நேரத்தில் பிறப்பதால், செயலில் வேகம் கூடும். கலை, இலக்கியத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். உடன்பிறந்த வர்களின் கோபம் குறையும்.
வியாபாரத்தில் இழப்புகளைச் சரி செய்வீர்கள். மாறுபட்ட அணுகு முறையால் லாபம் ஈட்டுவீர்கள். தள்ளிப்போன ஒப்பந்தம் கூடிவரும்.சிலர் சொந்த இடத்துக்கே கடையை மாற்றுவீர்கள். பதிப்பகம், போர்டிங், லாட்ஜிங், ஏற்றுமதி-இறக்குமதி வகைகளால் லாபம் அடைவீர்கள். வைகாசி, ஆவணி, தை, மார்கழி மாதங்களில் பழைய சரக்குகள் விற்றுத் தீரும். 2.8.16 முதல், உத்தியோகத்தில் ஏற்றம் உண்டு.தடைப்பட்டிருந்த பணிகளை விரைந்து முடிப்பீர்கள். மூத்த அதிகாரிகள் முக்கியத்துவம் தருவர். வைகாசி, ஆவணி, தை மாதங்களில் புது பொறுப்புக்கும், பதவிக்கும் உங்களுடைய பெயர் பரிந்துரை செய்யப்படும்.
மாணவ-மாணவிகளுக்கு, படிப்பில் முன்னேற்றம் உண்டு.  தேர்வில் எதிர்பார்த்தபடி மதிப்பெண் வர வாய்ப்பு உண்டு. விரும்பிய கல்விப் பிரிவில் சேருவீர்கள். கலைத் துறையினருக்கு, அரசு விருது உண்டு. பெட்டிக்குள் முடங்கிய படம் ரிலீசாகும். வர வேண்டிய சம்பள பாக்கி கைக்கு வந்து சேரும். பெரிய நிறுவனங்கள் உங்களை அழைக்கும்.
மொத்தத்தில் இந்த துர்முகி வருடம், அனைத்திலும் உங்களை வெற்றி பெற வைப்பதுடன், பணம், பதவியையும் பெற்றுத் தருவதாக அமையும்.
பரிகாரம்

ஏகாதசி தினங்களில், திருச்சி மாவட்டம், உத்தமர் கோவிலுக்குச்  சென்று,  ஸ்ரீபுருஷோத்தமனை தரிசித்து வணங்கி வாருங்கள். நன்மைகள் கூடும்.


ஜோதிடர் பேராசிரியர் கே.ஆர்.சுப்ரமணியன் சென்னை: 
துர்முகி புத்தாண்டு எந்த ராசிக்காரர்களுக்கு எத்தகைய பலன்களைக் கொடுக்கும் என்பதை தெரிந்து கொள்வோம் ராசி பலன்கள் அனைத்தும் பொதுவானவை ஜன்ம ராசியின் அடிப்படையில் எழுதப்பட்டுள்ள பலன்களாகும். அவரவருக்கென்று தனியாக இருக்கும் ஜாதக பலன்கள், குணாதிசயம், ராசி பலன்கள் மாறுபடலாம். ஜாதகத்தில் சுபபலன்கள் தரக்கூடிய தசை புக்தி அந்தரங்கள் நடக்குமானால் இங்கே கோஅசார ரீதியாக சொல்லப்பட்டுள்ள நற்பலன்கள் கூடும் கெடுபலன்கள் குறையும். ஜாதக பலமும் சிறப்பாக இல்லாமல் கோசாரமும் அனுகூலமாக அமையாமல் போஅனால் கெடுபலன்கள் அதிகமாகும். இப்படிப்பட்ட கிரக நிலை அமையப் பெற்றவர்கள் கிரகப் பிரீதி கோயில் வழிபாடு தான தர்ம காரியங்கள் ஆகியவற்றின் மூலம் அதிக சங்கடங்கள் ஏற்படாமல் தங்களை பாதுகாத்துக் கொள்ளலாம். மேஷம்: இனிய புத்தாண்டு வாழ்த்துக்களோடு ஸ்ரீதுர்முகி வருஷத்தில் அடி எடுத்து வைக்கும் 
மேஷம் ராசி 
அன்பர்களே இவ்வாண்டு உங்களுக்கு நடைபெறவிருக்கும் சில பலன்களை பார்ப்போம். வீர பராக்கிரமம் கொண்ட மேஷ ராசி அன்பர்களே எதிலும் துணிச்சலும் தான் நினைத்த காரியம் சாதிக்கின்ற எண்ணமும் தான் நினைக்கும் எண்ணப்படி பிறர் நடக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்களே தாங்கள் பிறருக்கும் அவர்கள் எண்ணங்களுக்கும் மதிப்பு கொடுத்து பிறரை அலட்சியமாக எண்ணாமல் உதசீன படுத்தாமல் முன்கோபம் இன்றி சலிப்புகளைப் பிறரிடத்தில் காட்டாமல் அவரசத்தை நீக்கி நிதானத்தை கடைபிடிக்க மற்றவர்களையும் அவர்கள் சொற்களையும் எடுத்தெரியும் எண்ணங்களை மாற்றி பொறுமையை கையாண்டால் தாங்கள் வாழ்வில் அனைத்திலும் வெற்றி பெறுவீர்கள். இந்த ஆண்டில் உங்களுக்கோ உங்கள் குடும்ப உறுப்பினருக்கோ வைத்தியச் செலவுகள் செய்ய வேண்டிய கட்டாயம் உருவாகும் வருமானம் வருவதில் சில இடையூறுகள் இருந்தாலும் அதை சமாளித்து தொடர் லாபம் பெறுவீர்கள் வேலையில் மாற்றம் உயர் பதவி குறித்த சிந்தனைகளை செயல்படுத்த முயற்சி மேற்கொள்வீர்கள். திரைகடல் ஓடி திரவியம் தேடும் மேஷ ராசிக்காரர்கள் அந்நிய செலாவணி மூலம் வலுவான லாபம் பெறுவீர்கள். வெளிநாடு உங்களை வாழ வைத்தது என்று எண்ணும் அளவிற்க்கு தொடர் விமானப் பயணம் உண்டு. வட்டிக்கு பணம் கொடுத்து வாங்குவது அடகுக்கடை நடத்துவது போன்ற தொழிலில் நீண்ட காலத் தொடர்பு உள்ளவர்கள் ஒன்றிரண்டு பேரிடம் ஏமாந்தாலும் அந்த தொழில் விட்டு வெளிவர மாட்டீர்கள் இந்த தொழிலில் இது சகஜம் தான் என்று லாபாம் பார்த்து பழகியதால் தொடர்வீர்கள். அரசாங்க உத்தியோகம் பர்க்கும் சிலர் சைடு பிசினசாக உபதொழில் செய்து சம்பாதீப்பீர்கள் விவசாயத்தில் இவ்வளவு காலமும் பெரிதாக அக்கரை காட்டாமலிருந்த சிலர் தொடர்மழை காரணமாக இந்த ஆண்டு ஆர்வத்துடன் பயிர்களை சாகுபடி செய்வீர்கள் ஓரளவு நல்ல விலை கிடைக்கும். சுறுசுறுப்பு மிகுந்த நீங்கள் சும்மா இருக்க மாட்டீர்கள் உற்சாகம் பெருக ஓயாத உழைப்பு எப்போதும் அயராத அலைச்சல் உறவுகளின் விஷேசங்களில் கலந்து கொள்ளுதல் ஒவ்வொரு நாளும் கண்விழித்ததும் இன்றைக்கு வருமானம் வரும் வழி குறித்து ஆராய்தல் நேரத்தை மிச்சம் பிடித்து தன் உயர்வுக்கு எப்படியெல்லாம் பயன்படுத்தலாம் என்கிற சிந்தனை வீண்பொழுது வெட்டிப் பேச்சுங்குற வேலைக்கே இடம் இல்லைங்கிற அளவிற்கு சுய தேடலில் அதிக விருப்பம் கொள்வீர்கள். ஊரும் உறவும் புகழ புதிதாக வீட்டைக் கட்டி முடிப்பீர்கள் உங்களின் கனவு நிறைவேறும் குருவிக்கு கூடு குடும்பத்திற்கு வீடு இன்றைய அவசிய தேவையாகிவிட்டது எப்பாடுபட்டாவது இந்த ஆண்டில் பால்காய்ச்சி புதுமனைப் புகுவிழா நடத்திடுவீர்கள். அதேபோல் பிள்ளைகளுக்கு திருமண ஏற்பாடுகளை செய்திட வேண்டுமென்கிற உறுதியும் உங்களுக்கு உண்டாகும் சில தடைகளிலுருந்தாலும் அதை சாதுரியமாக சமாளித்து சாதிப்பீர்கள். தினந்தோறும் ஸ்ரீவிநயகப் பெருமானையும் ஸ்ரீ ஆஞ்சனேய பெருமாளையும் வழிபட இவ்வாண்டு அனைத்து நன்மையும் உண்டாகும் ரிஷபம்: 
இனிய புத்தாண்டு வாழ்த்துக்களோடு ஸ்ரீதுர்முகி வருஷத்தில் அடி எடுத்து வைக்கும் ரிஷபம் ராசி அன்பர்களே இவ்வாண்டு உங்களுக்கு நடைபெறவிருக்கும் சில பலன்களை பார்ப்போம். பேச்சில் நளினம் பெண்கள் போன்ற இனிய சுபாவம் தன் காரியத்தை பிறரைக் கொண்டு சாதித்துக் கொள்ளும் சாமர்த்தியம் நுட்பமாக பேசும் வல்லவர்களே சிறிது நப்பாசையுடன் சில காரியங்களில் இறங்கி சாதிக்கும் வேளையில் தனக்கு இடர்வரும் என்று தெருந்தவுடன் தான் தப்பித்துக் கொள்ளும் திறன் படைத்தவர்களே பயந்த சுபாவம் மிக்க நீங்கள் தங்கள் தந்திரத்தால் தன் பகையை முடிக்கும் திறமை கொண்டவர்களே., கடந்த காலம் உங்களை கசக்கி எறிந்துவிட்டதென்று நினைத்து வருத்தப்படாமல் நிகழ்கால நிச்சய வெற்றிக்காக உழைப்பீர்கள் உங்களின் வருமானம் சக்தி என்னவென்று தெரியாமல் அகலக்கால வைத்து அதிக கடன் தொந்தரவுகளில் மாட்டிக் கொண்டீர்கள் அதிலிருந்து மீள அதிக உழைப்பு தேவைப்படும் சமாளித்துவிடலாம் என்று நீங்கள் போட்ட திட்டங்கள் உங்களை விழிபிதுங்க யோசிக்க வைத்திருக்கும். நல்ல வருமானம் வரும் கவலை படாதீர்கள் நீங்கள் தொட்டதெல்லம் துலங்கும் வச்சதெல்லாம் விளங்குமென்று உங்களை யாரோ உசுப்பேற்றிவிட்டிருப்பார்கள் அதை நம்பி ஏகப்பட்ட கடனை வாங்கி தொழிலை விரிவுபடுத்தி மாட்டிக் கொண்டது தனி அனுபவமாக இருக்கும். இதிலிருந்து எப்படி மீள்வதென்று பலவாறு குழம்பி யோசிப்பீர்கள் கைமீறிப் போய்விட்டது காலம் கடந்த சிந்தனை காரியத்துக்கு உதவுமா இனி என்ன செய்வது ஒருவருக்கு யோகதசை நடந்தால் அந்த தசை முழுவதும் நன்றாகவே இருக்குமா என சிலர் இப்படித்தான் ஏமாந்துவிடுகிறார்கள் நன்றாக வருமானம் வரும்போது அதிக கடன் வாங்கிவிட்டால் கடனை திருப்பிக் கொடுக்க நினைக்கும் சமயத்தில் வருமானம் நின்று பொய்விடும் தொண்டையில் முள்காட்டி கொண்டது போல் அவஸ்தைப்பட வைத்துவிடும். சிலருக்கு குடும்பத்துக்குள் குழப்பம் சண்டை கணவன் மனைவி விரோதம் தலைவிரித்தாடும் பிள்ளைகளின் எதிர்காலத்தை சிறப்பாக அமைத்துக் கொடுக்கும் பொறுப்புமிக்க குடும்பத் தலைவரான நீங்கள் இபோது அவசரப்பட்டு பிள்ளைகளைக் கட்டுப்படுத்த முடியாமல் இருப்பீர்கள். சிலர் துன்பங்களைத் துடைத்துப் போட்டுவிட்டு பழசையெல்லாம் மறந்துவிட்டு இந்த புத்தாண்டில் எப்படி சாதிப்பது என்பதை மட்டும் யோசிப்பீர்கள் நல்ல விஷயங்களுக்கு கடன் வாங்கினாலும் பரவாயில்லையென்று துணிச்சலாக முடிவெடுப்பீர்கள். இந்த ஆண்டு உங்கள் குடும்பத்தில் சுபகாரியங்கள் சுக அனுபவங்களைத் தரும் உள் மனதில் உட்கார்ந்து ஊஞ்சல் ஆடிய கற்பனைகளை நிஜத்தில் அனுபவிப்பது ஒரு தனி சுகமாக இருக்கும். மௌனமாய் ஊமையாய் நீங்கள் மட்டுமே ரசித்த ஆசைகளை நிறைவேற்றிக் கொள்ள இந்த ஆண்டு சாதகமாக அமையும். எத்தனை காலம் வெளியே சொல்லமுடியாமல் காய்ந்து போயிருந்த நினைவுகள் ஈரம் இழையோட இதமான இன்பம் தரும். யாரிடமும் சொல்ல முடியாது மறந்து போன கனவுகள் இப்போது ஞாபகத்திற்க்கு வரும் பிறரிடம் பகிர்ந்து கொள்ள முடியாத விஷயங்களை நீங்கள் மட்டுமே அனுபவிப்பீர்கள் எவ்வளவு படிப்பு படித்திருந்தாலும் நெருக்கமான உறவுகளிடம் சொல்லி கேட்க முடியாத ஒன்று இந்த ஆண்டு நிறைவேறுவது பெரிய தவத்திற்குக் கிடைத்த பரிசாக இருக்கும். தினந்தோறும் வீட்டில் மாலை வேளையில் ஐந்து முக குத்துவிளக்கில் பசும் நெய் விட்டு விளக்கேற்றி ஸ்ரீலலிதா சகஸ்ரநாம பாராயணம் செய்ய இவ்வாண்டு அனைத்து நன்மையும் உண்டாகும். 
மிதுனம் : 
இனிய புத்தாண்டு வாழ்த்துக்களோடு ஸ்ரீதுர்முகி வருஷத்தில் அடி எடுத்து வைக்கும் மிதுனம் ராசி அன்பர்களே இவ்வாண்டு உங்களுக்கு நடைபெறவிருக்கும் சில பலன்களை பார்ப்போம். இரட்டை சிந்தனை உள்ள மிதுன ராசி அன்பர்களே உங்கள் காரியங்களை தேவைகளை பூர்த்தி செய்துக் கொள்ள பலவகையான யோசனைகளையும் தந்திரங்களையும் கையாள்வதில் சாமர்த்தியம் உள்ளவர்களே வார்த்தைகளால் பிறரிடத்தில் தன் மதிப்பை காட்டிக் கொள்பவர்களே கள்ளத்தனமும் போலி ஆடம்பரமின்றி நடந்து கொள்ளும் மிதுன ராசி அன்பர்களே, ஆற்றல் மிக்க அனுபவசாலிகளான மிதுன ராசிக்காரர்களான உங்களுக்கு உள்ளூர ஒருவித பயம் இருந்து கொண்டேயிருக்கும். வெளியே வீரமாகப் பேசினாலும் பொருளாதார நிலையில் விழுந்துவிடுவோமோ என்னும் அச்சம் ஒரு பக்கமமில்லாமல் இருக்காது கிரகங்கள் பலவீனத்தால் கீழே விழுந்துவிட்டால் எழுவது எளிதான விஷயமில்லேயே! கோச்சார கிரகங்கள் சாதகமில்லாத இந்த நேரத்தில் புத்தாண்டு எப்படி இருக்குமோ என்ற கேள்வி இருக்கத்தானே செய்யும். நடக்குதோ நடக்கவில்லையோ கிடைக்குமோ கிடைக்கவில்லையோ முயற்சியைக் கைவிடக்கூடாதென்று மட்டும் உறுதி கொள்வீர்கள் போராட்டம் மிகுந்த இந்த காலகட்டத்தில் போட்டியும் பொறாமையும் நிறைந்து காணப்படும் நேரத்தில் பொல்லாத உறவுப்பகையில், பொறுத்துக் கொள்ளாத மனைவி மக்களுடன் எல்லாவற்றுக்கும் பொறுமைதான் முதல் முதலீடு உங்கள் கோபத்தையெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக குழிதோண்டி புதைத்துவிட்டீர்கள் அதனால் கெட்ட பெயர் குறைந்தது உங்களின் பழைய முகம் பலருக்கும் ஞாபகமிருப்பதால் ஒருவித பயம் கலந்த மரியாதை எல்லா இடத்திலும் இருக்கத்தான் செய்கிறது. நீங்கள் உங்கள் தொழிலை விரிவுபடுத்த புதிய கிளை தொடங்குவீர்கள் நிலம் நிலம் வாங்கிபோட்ட இடத்தில் வீட்டைக் கட்டுவீர்கள் கிராமத்தில் விவசாயத்திலும் கவனம் செலுத்த ஆட்கள் நியமிப்பீர்கள் வேலையில் பதவி உயர்வுக்கும் முயற்சி செய்வீர்கள் மருத்துவம், பொறியியல், சட்டம், நிதி, நிர்வாகம் என எந்த துறையில் ஈடுபட்டிருந்தாலும் அதை முழுமையாக்க கல்வியில் முழுக்கவனம் செலுத்துவீர்கள். எதிர்கால சிந்தனைகள் உங்களுக்கொரு பயத்தை ஏற்படுத்தியிருப்பதால் பொருப்பு கூடுதலாகி செய்கிற வேலையில் கவனம் செலுத்துவீர்கள். வெட்டியாக சுற்றிக்கொண்டும் நண்பர்களிடம் அரட்டை அடித்து வெட்டிப் பொழுது போக்குவதை நிறுத்திக் கொள்வீர்கள் நல்ல குணங்கள் உங்களை வந்தடைய ஆரம்பித்துவிட்டதால் செல்வாக்கும் சொல்வாக்கும் தானாக வரும் ஏற்றத்தை தரும். மாற்றங்கள் இருபதாக இருந்தாலும் அறுபதாக இருந்தாலும் வந்து சேரும் கசப்பு மாறி இனிக்கும் ஆண்டாக இருக்கும். புதன் கிழமை தோறும் புதன் ஹோரையில் ஸ்ரீமகாவிஷ்ணுவிற்கும் ஸ்ரீமகாலட்சுமிக்கும் அர்ச்சித்து வழிபட இவ்வாண்டு அனைத்து நன்மையும் உண்டாகும். கடகம் : இனிய புத்தாண்டு வாழ்த்துக்களோடு ஸ்ரீதுர்முகி வருஷத்தில் அடி எடுத்து வைக்கும் 
கடகம் ராசி 
அன்பர்களே இவ்வாண்டு உங்களுக்கு நடைபெறவிருக்கும் சில பலன்களை பார்ப்போம். தான், தனது, தனக்கென்று ஓர் கொள்கை பிடிவாத குணமும் சாமர்த்தியமும் தைரியமும் உள்ளவர்களே எவர் எது சொன்னாலும் அதை ஆராய்ந்து பலரிடத்தில் கேட்டு விபரம் தெரிந்து கொண்டாலும் முடிவில் தன் எண்ணப்படி நடப்பவர்களே... எளிதில் எதையும் நம்பாதவர்களே... பிறர் தனது ஆணைக்குள் இருக்க விரும்புபவர்களே... தன் காரியத்தை சாதித்துக் கொள்ளும் வல்லமை கொண்டவர்களே... பிறரை எடைபோட்டு ஆய்பவரே தனம் படைத்தவர்களோடு பழகுபவர்கள் உயர் பொருள் ஒன்றிருக்க அதனினும் மேலான பொருளை தேடி செல்பவர்களே தன்னலம் கொண்ட கடக ராசி அன்பர்களே! கோட்சார கிரகங்கள் ஓரளவுக்கு சாதகமாக இருபதனால் நன்மைகள் நடப்பதில் குறை ஒன்றும் இருக்காது வாய்ப்புகளை எதிர்நோக்கிக் காத்திருக்கும் உங்களுக்கு நல்ல செய்திகள் கிட்டும் வெறுப்புகள் விலகி விருப்பங்கள் பூர்த்தியாகும். போட்ட முதலுக்கு ஏற்ற லாபங்கள் இல்லாமல் இருக்காது கூடுதல்-குறைவென்கிற வித்தியாசங்கள் இருந்தாலும் நஷ்டம் வர வாய்ப்பில்லை. அதிகப்படியான செலவுகளை சமாளிக்க முடியாமல் திணறும் சிலர் வருவாய் வருவதற்கான முயற்சிகளை மேற்கொள்வீர்கள். சிலர் திடீர் நன்மைகள் அடைவீர்கள் கடன் நெருக்கடிகள் குறையும் கடல் கடந்து செல்வோருக்கு வருமானம் பெருகும் விவசாயிகள் நன்மை அடைவார்கள் மீன்பிடி தொழில் செய்வோர் எச்சரியாக இருக்க வேண்டும். எல்லா இடங்களிலும் எல்லா நேரங்களிலும் முரட்டுத் துணிச்சல் சாதகமாக இருக்காது சமயத்தில் பாதிப்பையும் ஏற்படுத்து விடுமென்பதை மனதில் பதிய வைத்துக் கொள்ள வேண்டும். எப்படியிருந்தாலும் விழிப்புணர்வு உள்ள நண்டு ராசிக்காரர்களான நீங்கள் பயத்துடன் கூடிய எச்சரிக்கை உணர்வு உள்ளவர்களாவீர்கள் இருப்பினும் எதிரிகளிடமிருந்து தப்பிக்க தன் கால்களை மடக்கிக் கொண்டு வளைக்குள் போய்விட்டாலும் இரைதேடும் ஆசையில் அவசரப்பட்டு வெளியே வந்து மாட்டிக் கொள்வது போல் ஏதேனும் சிக்கல்களை இழுத்துக் கொள்ள நேரிடும். விழுவதும் எழுவதும் மனித வாழ்வோடு பின்னிப்பிணைந்த ஒன்றுதான் அதற்காக சோர்ந்து விட வேண்டாம். இந்த புத்தாண்டு உங்களுக்கு வெற்றியை கொடுக்கும். நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு ஒன்றும் குறைவைக்கவில்லை உங்களால் முடிந்தவரை வழிகாட்டியுள்ளீர்கள் இன்னும் இருக்கும் காலம் வரை சாதிக்கவே எண்ணுவீர்கள். திங்கள் கிழமை தோறும் ஸ்ரீமுருகப்பெருமான் சன்னதியில் நெய்தீபம் ஏற்றி கந்த சஷ்டி கவசம், கந்தகுருகவசம் பாராயணம் செய்யவும். இந்த ஆண்டு அனைத்து நன்மையும் உண்டாகும். சிம்மம் : 
இனிய புத்தாண்டு வாழ்த்துக்களோடு ஸ்ரீதுர்முகி வருஷத்தில் அடி எடுத்து வைக்கும் சிம்மம் ராசி அன்பர்களே இவ்வாண்டு உங்களுக்கு நடைபெறவிருக்கும் சில பலன்களை பார்ப்போம். காட்டுக்கு அரசன் சிங்கம் போல் ராசி மண்டலத்திலேயே மேலான நிலையை கொண்டிருக்கும் சிம்ம ராசி அன்பர்களே தனக்கென்ற தனிப்பாதை பிறர் தன்னை தான் வணங்க வேண்டும் என்ற எண்னம் கொண்டவர்களே, தனக்கென்ற தனிப்பாதை பிறர் தன்னை வணங்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்களே... வீண் கர்வம், முரட்டு பிடிவாதம் கொண்டவர்களே, வாக்கு சாதுரியம், மனோபலம், தன்னை எதிர்க்கும் எதிரிகளை தக்க சமயத்தில் அவர்களை வெற்றி கொள்பவர்களே, தான் என்ற மமதை, அகம்பாவம், பிறரை அடக்கி ஆளும் அதிகார போக்கு, அலட்சிய சுபாவம், அனைத்தும் தெரிந்தவர் போல் காட்டி கொள்பவர்களே, தான் பிடித்த முயலுக்கு மூன்று கால்கள் என்பது போல் வரட்டு பிடிவாதம் கொண்டவர்களே தன்னை பிறர் போற்ற வேண்டும் என்ற எண்ணம், பிறர் முகஸ்துதிக்கு ஆளாகி அவர்கள் பேச்சால் ஏமாற்றம் அடைபவர்களே எவரையும் நம்பாமல் தான் என்ற அகம்பாவத்தால் கஷ்ட நஷ்டத்தை தேடி கொள்பவர்களே ஆற்றல் மிக்கவர்களாக இருந்தும் ஆத்திரத்தால் நிதானத்தை இழக்கும் சிம்ம ராசி அன்பர்களே! கோட்சார கிரகங்களால் சில நல்ல மாற்றங்களை எதிர்பார்க்கலாம் ஓங்கி அடித்த கிரகங்கள் இனி் தாங்கி அடிப்பார்கள் துன்பத்தின் வலிமையான முழுவீரியம் குறையுமென்று நம்பலாம் எதிர்ப்புகளை சமாளிக்கும் வல்லமை கிட்டும் கடன் இல்லையென்று கைவிரித்தவர்கள் கொஞ்சம் தர சம்மதிப்பார்கள். திருமணத்தடை விலகும், கல்யாணம் கூடிவந்து களிப்படைய வைக்கும். விவசாயம் பெருகும் விளைச்சல் அதிகரிக்கும் பணப்பயிர்கள் ஆதாயம் தரும், தங்க நகை சேர்க்க தகுந்த நேரம் இதுவாகும். கடன் குறையும் அரசியலில் செல்வாக்கு பெருகும் ஆளுமைத்திறன் அதிகரிக்கும் வேலை வாய்ப்பு உண்டாகும், வெளிநாடு செல்வீர்கள், குடும்பத்தரின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள் இடையூறுகள் விலகும் பலவீனங்கள் மறைந்து போகும் பலம் அதிகரிக்கும், எதிரிகள் அடங்கி போவார்கள், விட்டுப் போனவர்கள் விலகியவர்கள் தானே தேடி வருவார்கள், எல்லாவற்றிலும் வெற்றி கிடைக்கும். சில சமயம் குழப்பம் உண்டானாலும் மனத்துணிவுடன் எதையும் சமாளிப்பீர்கள். எல்லாமே உங்களுக்கு சாதகமாக அமையவிருக்கும் புத்தாண்டாகும் இது. சனிக்கிழமை தோறும் ஸ்ரீபூவராகபெருமாளுக்கு நெய் தீபம் ஏற்றி மலர்களால் அர்சித்து வழிபட அனைத்தும் நன்மையாகும். 
கன்னி: 
இனிய புத்தாண்டு வாழ்த்துக்களோடு ஸ்ரீதுர்முகி வருஷத்தில் அடி எடுத்து வைக்கும் கன்னி ராசி அன்பர்களே இவ்வாண்டு உங்களுக்கு நடைபெறவிருக்கும் சில பலன்களை பார்ப்போம். இனிய தோற்ற பொலிவும் இனிய சுபாவமும் கலகலப்பும் பெண் சாயல் கொண்டவர்களான நீங்கள் சிக்கனம் என்ற பெயரில் வரவுக்கு மீறி செலவுகள் செய்வீர்கள். தன் காரியத்தை சாதித்துக் கொள்ள நயந்து செலவின்றி காரியத்தை முடித்துக் கொள்ள முயல்வீர்கள். உயர்ந்த மனிதர்களுடைய தொடர்பை ஏற்படுத்திக் கொள்ளுதல் எந்த ஒரு விஷயத்தையும் நம்பிக்கை கொள்ளாத நீங்கள் தான் செய்ய வேண்டிய காரியத்தை பிறரிடத்தில் கொடுத்து சோதித்துப்பார்ப்பீர்கள், சலன புத்தி கொண்ட உங்களின் பேராசை தன்மை அறிந்து கொண்ட சில ஏமாற்றுகாரர்களையும் நம்பும் நீங்கள் நாணயமானவர்களையும் தன் நலனை கருதாது உங்களுக்கு உதவி புரியும் உற்றார் உறவினர்களையும் உற்ற நண்பர்களையும் உறுதுணை செய்பவர்களையும் நம்பாமல் பிறகு நம்பும் கன்னி ராசி அன்பர்களே! புத்தாண்டு புதுப் பொலிவை கொடுக்கும் நினைத்து பார்க்காத காரியங்களை நிறைவேற்றிதும், சாதிக்க வேண்டியது எவ்வளவோ இருந்தாலும், சாதாரண விஷயங்கள் பூர்தியாகும். திருமண பருவத்திலிருப்பவர்களுக்கு திருமண யோகம் கூடி வரும் வெளிநாட்டு பயணம் கூடி வரும். நீண்ட நாள் திட்டங்கள் நிறைவேறும். பணம் கையிலிருந்தும் வீடுகட்ட முடியாமல் தடை உண்டாகிக் கொண்டே இருக்கும் அதை எப்படியும் இவ்வாண்டு ஆரம்பிபீர்கள். பூமி பூஜை செய்திடுவீர்கள் சிலர் வீடு கட்ட ஆரம்பித்து பணத்தடையால் கட்டுகான வேலைகள் பாதியில் நிற்கும் அதை தொடர்ந்து செய்து பூர்த்தி செய்வீர்கள். திருமணம் முதலில் செய்வதா வீடு கட்டுவதா என்ற குழப்பம் வந்துவிடும். சிலருக்கு உள்நாட்டு வேலை வாய்ப்பும் வெளி நாட்டு வேலை வாய்ப்பும் ஒரே நேரத்தில் வந்த கதவைத் தட்டும். கடன் இருக்கிறதென்று சிலர் கலங்கி தவிப்பீர்கள் கடனை குறைக்க மாற்று வழி காண்பீர்கள் புத்தாண்டில் நல்ல செய்தி வரும். சிலருக்கு எவ்வளவு சம்பாதித்தாலும் ஒரு பைசா கூட கையில் தங்க மாட்டேங்குதேன்னு கவலை இருக்கும் சேமிப்பு வழிகளில் ஏதாவதொன்றைத் தேர்வு செய்து பணம் சேர சபதம் எடுப்பீர்கள். சம்பளம் கைக்கு வருமுன்னே பட்ஜெட் போட்டு செலவு செய்ய சிக்கன நடவடிக்கையை மேற்கொள்ள இந்த ஆண்டில் தீர்மானம் செய்வீர்கள். வியாழக்கிழமை தோறும் ஸ்ரீலட்சுமி ஹயக்கிரீவ பெருமாளுக்கு நெய் தீபமேற்றி மலர்களால் அர்ச்சித்து வழிபட இவ்வாண்டு அனைத்து நன்மைகளும் உண்டாகும். 
துலாம்:
 இனிய புத்தாண்டு வாழ்த்துக்களோடு ஸ்ரீதுர்முகி வருஷத்தில் அடி எடுத்து வைக்கும் துலாம் ராசி அன்பர்களே இவ்வாண்டு உங்களுக்கு நடைபெறவிருக்கும் சில பலன்களை பார்ப்போம். எதிலும் நியாயம், நேர்மை, நீதி, வாக்கு தவறாமை, எல்லா செயல்களிலும் சீராக நடக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்ட அன்பர்களே! நீங்கள் உங்கள் பேச்சால் சாதுரியம் செய்வீர்கள். சில சமயங்களில் யோசிக்காமல் பிறர் கூறும் கருத்துக்களை எடுத்துக் கொள்ளாமல் அவசரத்தால் அபசகுணமாக பேசி விடுவீர்கள். நீதி தேவதையின் கையில் துலாபாரமாக இருந்தாலும் பொருள் வைக்கும் பக்கமே சாய்வீர்கள். சிலரை சீண்டி பேசி வேடிக்கை பார்ப்பீர்கள். சிறிது நேரத்திற்குள்ளேயே குண பேதங்களை மாற்றிக் கொள்பவர்களே சில சமயம் துலாபாரத்தின் முள் போல் சரியான நியாயத்தை பேசுவீர்கள், பிறரை போற்றி பேசி தன் காரியங்களை சாத்திதுக் கொள்பவர்களே மேலான சுறுசுறுப்பும் தெளிவும் கொண்டவர்களே, ஆடம்பர வாழ்க்கையும் கௌரவத்தையும் கௌரவத்தையும் எதிர்பார்க்கும் நீங்கள் பிறர் சொல்லில் பொருள் ஆய்ந்து அதற்கு தக்கபடி பதில் அளிப்பதால் உங்கள் வார்த்தைக்கு மதிப்பும் மரியாதையும் கூடும். அவசர வார்த்தைகளாலேயே வர இருக்கும் நன்மை நண்பர்களின் உதவி காரிய வெற்றி தன் அறியாமையால் நற்பலனை இழக்க நேரும் பிறர் கூறும் கருத்தை கவனமாய் கேட்பது போல் இருந்து பின் தான் நினைத்தபடி நடக்க வேண்டும் என்ற எண்னம் கொண்ட துலாம் ராசி அன்பர்களே, உங்கள் ஜென்ம ராசிக்கு மூன்று ஆறுக்குடைய குரு பகவான் தன்னம்பிக்கையை கூடுதலாக வளர்க்கும் ஆனால் உங்களுக்கு யோக திசை நடக்குமானால் நன்மையான பலன்களும் அவயோக திசையினால் தீமையான பலன்களும் நடக்கும் எது செய்யத் தகுதியுடையதோ அதை வெகு ஜாக்கிரதையுடனும் பலத்துடனும் விருப்பத்துடனும் செய்ய வேண்டும். நாம் நம்முடைய கடமை மீது கொள்ளும் விருப்பத்தை நிறுத்தப் பார்க்கவோ தெய்வ வலிமையில் அதற்குரிய முக்கியத்தை தீர்கானக்கவோ நம்மிடம் எவ்வித அளவுகோலும் இல்லை நம்முடைய கால நேரம் நமக்கு எப்படி வேண்டுமானாலும் அமையலாம் அனாலும் ஒரு எச்சரிக்கை உணர்வு நமக்குல் இருந்து கொண்டே இருக்க வேண்டும் இது பெரிய பிரச்சினைகளிலிருந்து நாம் விடுபட வழிவகை செய்யும். முன்பின் யோசிக்காமல் சில விஷயங்களில் அவசரப்பட்டு மாட்டிக் கொண்டதால் சில சங்கடமான அனுபவம் கிடைக்க கிடைக்க சுதாரிப்பீர்கள் எந்த ஒரு காரியத்திலும் நிதானம் தேவையென்பதை உணர்வீர்கள் பக்குவப்பட்ட பிறகு பலன் கிடைப்பது உறுதியாகும். இவ்வாண்டு உங்களின் செயல் காரியங்களை நிறைவேற்ற பாடுபடும் நடந்தவை யாவும் நன்மைக்குத்தான் என்ற பட்டறிவு உங்களைப் பதப்படுத்தியதால் யோகங்கள் அதிகரிக்கும் சோகங்கள் மறையும். பிள்ளைகளின் திருமணத்தை பிரமாதமாக நடத்துவீர்கள் அவர்களின் கல்வித் தரத்தை உயர்த்துவீர்கள் வீட்டு வலைகளை விரைந்து முடிப்பீர்கள் மனை வாங்கி மகிழ்வீர்கள் சில குடும்பத்தில் விவசாய நிலத்தை வீட்டு மனையாக்க வேண்டுமென்று பிள்லைகள் விரும்புவார்கள் சிற்சில மாற்றங்களுடன் அனைத்து நன்மைகளும் உண்டாகும். சனிக்கிழமை தோறும் ஸ்ரீவிஷ்ணு சகஸ்ரநாம பாராயணம் செய்யவும். 
விருச்சிகம்: 
இனிய புத்தாண்டு வாழ்த்துக்களோடு ஸ்ரீதுர்முகி வருஷத்தில் அடி எடுத்து வைக்கும் விருச்சிகம் ராசி அன்பர்களே இவ்வாண்டு உங்களுக்கு நடைபெறவிருக்கும் சில பலன்களை பார்ப்போம். சகல விஷயங்களிலும் ஆர்வம் காட்டி சுறுசுறுப்போடு சிக்கனமாய் இருக்கும் அன்பர்களே அனாவசிய செலவுகளை நீக்கி அவசிய அத்தியாவசிய செலவுகலை செய்யும் அன்பர்களே, சிலருக்கு ஏழரையிலும் ஏற்றம் எளிதில் வரும் மாற்றம் எங்கிருந்தாலும் குடும்பத் தேவைகளை நிறைவேற்றுவீர்கள், பிள்ளைகளின் படிப்பு திருமணம் நல்லவிதமாக அமையும். வேலையில் எதிர்பார்த்த வருமானம் தொழில் வளர்ச்சியும் காணும், அரசியல் செல்வாக்கு ஆதாயம் தரும் அடுத்தவெரென்ன நமக்கு வாய்ப்பு கொடுப்பது நாமே நமக்கு வாய்ப்பை உருவாக்கி கொள்வோமென முடிவு செய்து களத்தில் குதித்து அதில் வெற்றியும் பெறுவீர்கள். பலருக்கு வெளிநாட்டுப் பயணம் சாதகமாக அமையும் சட்டச் சிகலை சந்தித்து வரும் நீங்கள் அதிலிருந்து விடுபட ஓரளவு நல்ல வழி கிட்டும். ஒப்பந்த வேலைகள் சூடு பிடிக்கும் எதிர்பார்த்த லாபம் கிடைக்கவிட்டலும் கணிசமான ஆதாயம் தரும். பழைய தொழிலில் மாற்றங்கள் கொண்டு வரவும் உங்களுடன் பழகிக் கொண்டே உங்களுக்கு குழிபறிப்பதை கண்டும் காணாமலும் இருப்பது போலிருந்து கையும் களவுமாக பிடிப்பீர்கள் மறைமுக எதிர்ப்புகளை முறியடிப்பீர்கள் மனச்சோர்வின்றி செயல்பட முடிவெடுப்பீர்கள் ஒரே முயற்சியில் உச்சியை அடைய முடியாதென்பது உங்களுக்கு நன்கு தெரிந்திருப்பதால் படிப்படியான வளர்ச்சியைப் பெற பாடுபடுவீர்கள். துன்பம் வறுமை ஆகியவற்றை உழைப்பினால் விரட்டலாமென்பது நன்கு தெரிந்த காரணத்தால் ஒவ்வொரு நாளும் ஏதாவதொரு வழியில் பயணிப்பீர்கள். வீழ்ச்சிகளில் பெரிய வீழ்ச்சி தன்னம்பிக்கையை இழந்துவிடுவது தான் என்பது உங்களுக்கு நன்கு தெரிந்திருபதால் திடமான சிந்தனை தெளிவான முயற்ச்சி உருப்படியான உழைப்பு உள்ளதால் இந்த ஆண்டு உங்களுக்கு சாதகமாக இருக்கும். சனிக்கிழமை தோரும் ஸ்ரீசக்கரத்தாழ்வார் சந்நிதியில் நெய் விளக்க்கேற்றி அர்ச்சித்து வழிபாடு செய்ய இவ்வாண்டு அனைத்து நன்மையும் உண்டாகும். 
தனுசு: 
இனிய புத்தாண்டு வாழ்த்துக்களோடு ஸ்ரீதுர்முகி வருஷத்தில் அடி எடுத்து வைக்கும் தனுசு ராசி அன்பர்களே இவ்வாண்டு உங்களுக்கு நடைபெறவிருக்கும் சில பலன்களை பார்ப்போம். வைராக்கியம் திட சிந்தனை பொன்மனம் நேர்மை நல்லொழுக்கம் உடைய தனுசு ராசி அன்பர்களே தங்கள் பேச்சால் பிரச்சினைகளை வரவழைத்து கொள்ளும் நீங்கள் விட்டுக் கொடுத்து வாழும் மனப்பான்கை குறைந்தவர்கள் ஊருக்கு உபகாரத்தை செய்யும் நீங்கள் தன் குடும்பத்திற்கு ஆகாதவர்கள் ஆவீர்கள் கல்வி வாக்கு சாதுரியங்கள் கொண்ட நீங்கள் சமயத்தில் உண்மைக்கு புறம்பான வாக்கால் உங்கள் கௌரவத்தை கெடுத்துக்கொள்வீர்கள். ஏழரை சனியின் தடை இருந்து கொண்டு தான் இருக்கிறது அதோடு வேலையில் திடீர் பிரச்சினைகள் இடமாற்றம் குறைந்த சம்பளம் மேலிட தொந்தரவுகள், இருந்த வேலையும் கைவிட வேண்டிய கட்டாயம் திருமணம் அமையாமை என பல்வேறு குளறுபடிகள் கடன் ஒருபக்கம் மருத்துவ செலவுகள் ஒருபக்கம் என் செலவுகள் உண்டாகும். தொழிலில் கிடைக்கும் லாபங்கள் யாவும் முன்னர் பெற்ற அனுபவங்களினால் விளைந்த முத்துக்களாக இருக்கும் வெற்றியென்பது உடனே கிடைத்துவிடும் விஷயமல்ல பல தோல்விகளுக்கு பிறகே அதன் முகத்தைப் பார்க்க முடியும். இந்த ஆண்டு உங்களுக்கு நல்லதும் கெட்டதுமான விஷயங்கள் கலந்தேயிருக்கும் முழு அளவில் நல்ல பலன்களும் முழு அளவில் கெட்ட பலன்களும் இருந்திடாது எதிர்ப்புகளை சமாளிக்க வேண்டிவரும் எதிரிகளை வீழ்த்தும் பொழுது காயங்கள் ஏற்படாமலிருக்குமா? வீடு கட்டவும் வாங்கவும் திருமணம் முடிவு செய்யவும் குழந்தை பாக்கியம் பெறவும் ஜாமீன் போட்ட சங்கடத்திலிருந்து விடுபடவும் வழக்கை ஒரு முடிவுக்கு கொண்டு வரவும் பங்காளி சொத்து பாகப் பிரிவினையும் வேலை வாய்ப்பு பிரச்சினைகளும் சில சில இடையூறுகளுடன் ஒரு நல்ல முடிவுக்கு வரும் யோகங்களை அனுபவிக்க வாய்ப்புகள் உண்டு. வாகனப் பயணங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் நெரிசல் மிகுந்த இடங்கஆளுக்கு செல்லக் கூடாது உடல்நலத்தில் அக்கறை காட்ட வேண்டும் வைத்தியச்செலவுகளைத் தவிர்க்க முடியாது கடன் இருந்து கொண்டுதான் இருக்கும் படிப்படியாகத்தான் விடுபட முடியும் உங்களின் ஆன்மீக பலமும் அயராத முயற்சியும் உழைப்பும் விட்டு விலகிடாத தன்னம்பிக்கையும் உங்களுக்கு நிச்சயம் வெற்றி படிக்கட்டுகளாக இவ்வாண்டு அமையும். சனிக்கிழமை தோறும் மாலைவேளையில் ஸ்ரீலட்சுமி நரசிம்ம பெருமாளுக்கு பானகம் நைவேத்தியம் செய்து வழிபட இவ்வாண்டு அனைத்து நன்மையும் உண்டாகும். 
மகரம்: 
இனிய புத்தாண்டு வாழ்த்துக்களோடு ஸ்ரீதுர்முகி வருஷத்தில் அடி எடுத்து வைக்கும் மகரம் ராசி அன்பர்களே இவ்வாண்டு உங்களுக்கு நடைபெறவிருக்கும் சில பலன்களை பார்ப்போம். எதையும் யோசித்து பார்க்கும் திறன் பல வழிகளில் சாமர்த்தியம் காட்டி தன்னிடம் எதுவும் இல்லாதது போல் நடந்து கொள்ளும் குணம் பிறர் கருத்துக்களை ஏற்றுக் கொண்டாலும் தன் எண்ணப்படி காரியம் ஆற்றுபவர்களே பிறர் சொல்லுவதை அல்லது பிறர் தன்னுடைய கருத்தை கேட்டாலும் மற்றவருடைய அபிப்பிராயத்தை தான் கேட்டுக் கொள்வீர்கள் தன்னுடைய அபிப்பிராயத்தை கூற மாட்டீர்கள். எதை கேட்டாளும் ஆம், இல்லை என்று பதில் தர மாட்டீர்கள் அடுத்து என்ன என்று திரும்பி கேட்டும் தன்னை தன் மனதுக்குள்ளேயே சில பிரச்சினைகளை போட்டு போராடி போராடி தானே தனக்கு தீர்வு காண்பீர்கள். உங்களின் ராசி அதிபதி சனி பகவான் லாப ஸ்தானத்திலிருப்பதால் வருமானம் அபரிமிதமாக இருக்கும் உழைப்புக்கு ஏற்ற பலன் கண்டிப்பாக கிடைக்கும். துணிச்சல் வைராக்கியம் தன்னம்பிக்கை தீவிரமாகும், சோர்வை விரட்டுவீர்கள், எதையும் கிடைக்கும் வரை விடமாட்டேன் என்கிற வெறி உள்ளத்தில் நங்கூரமிட்டு நிலைத்திருக்கும் கண்டிப்பாக தொழில் வேலையில் புது அணுகுமுறையில் வெற்றி காண்பீர்கள். ராசிக்கு 8ல் ராகு 2ல் கேது இருப்பதால் இடமாற்றம் வெளி விவகாரம் பாகப்பிரிவினை வெளிநாட்டுப் பயணம் தூர தேச வேலை சற்று அலைச்சலுடன் கூடிய ஆதாயம் என பலன்களிருக்கும். மற்ற கிரகங்களின் கோச்சார அமைப்புப்படி இந்த ஆண்டு சாதனை ஆண்டாக இருக்கும். வருமானம் அதிகரிப்பதால் பிரச்சினைகள் குறையும் கடன் நிவர்த்தியாகும். தன்கையே தனக்குதவி யாரையும் எதிர்பார்த்து வாழ்தல் கூட்டாது முடிந்தவரை உழைக்க வேண்டும் என்ற கொள்கை கொண்ட நீங்கள் பெற்றோரையும் உறவினரையும் பிரிந்து வாழ வேண்டிய நிலை வரலாம், மகன் மகளுக்கு திருமணமாகியிருந்தால் பேரன் பேத்தி கொஞ்சும் பாக்கியம் கிடைக்கும் இல்லாவிட்டால் மகன் மகளுக்கு இந்த ஆண்டு திருமணம் ஆகிவிடும். நீங்கள் யாருக்கு உதவி செய்தாலும் அது வெற்றிகரமாக முடிந்துவிடுகிறது அதுவே உங்களுக்கென்று ஈடுபட்டால் தடையும் தடுமாற்றமும் தவிர்க்க முடியாமல் போய் எப்படியோ கடுமையாக முயற்சித்து கடைசி நேரத்தில் காரியம் கைகூடிவிடும். புதன்கிழமை தோறும் ஸ்ரீகிருஷ்ணர் சந்நிதியில் தேங்காய் உடைத்து 2 பாகத்திலும் பசும்நெய் ஊற்றி தீபம் ஏற்றி பச்சரிசியில் வைத்து வழிபட இவ்வாண்டு அனைத்து நன்மையும் உண்டாகும். 
கும்பம்: 
இனிய புத்தாண்டு வாழ்த்துக்களோடு ஸ்ரீதுர்முகி வருஷத்தில் அடி எடுத்து வைக்கும் கும்பம் ராசி அன்பர்களே இவ்வாண்டு உங்களுக்கு நடைபெறவிருக்கும் சில பலன்களை பார்ப்போம். நவகோள்களில் தன் பணியை நீடி வழிவாது செய்யும் அனலோன் மகனான அந்தகனே கும்பராசியின் அதிபராவார். தெய்வீக குணமிக்க கோடியில் ஒருவர் கும்பத்தில் உதிக்கும் ஞானி ஆவார் என்னும் சொல்லுக்கு உரித்தான கும்பராசி அன்பர்களே, தீர்க்கமான கண்கள் காரிய சாதனை தர்ம சிந்தனை சிரித்த முகமும் குழந்தை உள்ளம் நியாய தர்கங்களுக்கு பயந்து நடப்பவரும் பிறர் அன்புக்கு கட்டுப்படும் நீங்கள் அதிகாரத்திற்கு கட்டுப்படாமல் இருப்பதும் தக்க மரியாதைக்கு உரியவர்களைத் தவிர பிறருக்கு தலை வணங்காமல் இருப்பதும் மனைவி மேல் அன்பு கொண்டவராய் இருப்பீர்கள். அதிகமான கல்வியும் அதிகமான அனுபவங்களை கொண்டவரும் விளம்பர ஆடம்பரத்தை விரும்பாதவர்களும் சகல விஷயங்களையும் தெரிந்து கொள்ள வேண்டுமென்ற ஆர்வம் கொண்டுள்ளவர்களும் பல கலைகளை பயில்பவரும் சாந்த குணமும் இறைஞான சித்தமும் தெய்வீக அனுக்கிரகமும் கொண்டவர்களும் இளகிய மனம் கொண்டவர்களாகவும் அமைதியும் அடக்கமாகவும் பால்மனம் கொண்டவர்களாக இருப்பீர்கள். ஒரு சிலர் பிறரை சாடையாக இடித்து பேசி ஒவ்வொருவருடைய குணாதிசயங்களை அறிந்து அவர்கள் இடையில் கலகத்தை மூட்டிவிடும் குணமும் கொண்டவர்களாக இருப்பீர்கள். இந்த புத்தாண்டில் உங்கள் ராசி அதிபதி சனிபகவான் உங்கள் ஜென்ம ராசிக்கு தொழில் ஸ்தானமான பத்தாமிடத்தில் சஞ்சரிப்பதால் உங்கள் தொழில் மிகவும் சிறப்பாக நடைபெறும். சனி பகவானின் கேந்திர பலம் உங்களை தொழிலில் உச்சத்திற்க்கு கொண்டு செல்லும், தொழிலில் சில கஷ்டங்கள் இருந்தாலும் கண்டிப்பாக நஷ்டம் கிடையாது. சில சமயங்களில் அவசரப்படுதல் முன்கோபம் பிறர் மீது எரிந்து விழுதல் போன்ற ஆகாத குணங்களைத் தவிர்க்க வேண்டும். தற்சமயம் ஏழாமிடத்தில் இருக்கும் குருபகவான் எட்டாமிடத்திற்க்கு இந்த ஆண்டு மாறப்போகிறார் எனவே உடல் நலத்தில் கவனம் தேவை உங்கள் குடும்பத்தில் உள்ளவர்களுக்கோ நெருங்கிய உறவினர்களுக்கோ வைத்திய செலவுகள் உண்டாகும். பிள்ளைகளுக்கு தக்க படிப்பு படித்து முடித்தவுடன் வேலை, திருமண யோகம் இந்த ஆண்டு அமையும். இவ்வாண்டு ஆரம்பத்தில் மந்தமாகவும் பின் படிப்படியாக வளர்ச்சியும் பெறக்கூடியவர்கள் நெருக்கமான உறவுகளின் ஒத்துழைப்பு கிட்டும். வெள்ளிக்கிழமை தோறும் சுக்கிரன் ஹோரையில் ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீபள்ளிகொண்ட பெருமாளுக்கு நெய் தீபம் ஏற்றி மலர்களால் அர்ச்சனை செய்து வழிபட இவ்வாண்டு அனைத்து நன்மையும் உண்டாகும். 
மீனம்: 
இனிய புத்தாண்டு வாழ்த்துக்களோடு ஸ்ரீதுர்முகி வருஷத்தில் அடி எடுத்து வைக்கும் மீனம் ராசி அன்பர்களே இவ்வாண்டு உங்களுக்கு நடைபெறவிருக்கும் சில பலன்களை பார்ப்போம். மிக மேலான குணம் கொண்டவர்களும் வாசனை திரவியங்கள் மீது விருப்பம் ஒரு சில சமயங்களில் மிக சுறுசுறுப்பாக காரியம் ஆற்றும் நீங்கள் ஒருசிலர் நிதானமாகவும் வேகமின்றி மந்தமாக காரியத்தை செய்ய நீங்கள் இரண்டு விதமான மனோபாவத்தை கொண்டவர்கள். நீங்கள் பல காரியங்களை நேர்த்தியோடு செய்ய நினைப்பீர்கள் மனத் தெளிவும் வாக்கு சாதுரியமும் உண்டு. தன் காரியத்தை சாதித்து கொள்ளும் வேளை மிக நளினமாக பேசி அவர்களை தன் வசம் ஆக்கி காரியங்களை சாதிக்கும் மீன ராசி அன்பர்களே. உங்களுக்கு மறைமுக எதிர்ப்புகள் இருக்கும், இடம் விட்டு இடம் மாறி இருக்க நேரிடும். தனக்கோ தனக்கு நெருக்கமான உறவினருக்கோ வைத்திய செலவுகள் தவிர்க்க முடியாது. கூடுதல் அலைச்சலும் கூடாத நட்பும் குடும்பத்தில் சலசலப்பை உண்டாக்கும். வருமானம் அதிகமாகவும் உண்டாகும். ராசிக்கு லாப விரயாதிபதியான சனிபகவான் பாக்கிய ஸ்தானமான ஒன்பதாமிடத்திலிருப்பதால் மிகவும் சிரமப்பட்டு பணத்தை சேமிக்க வேண்டியிருக்கும். ராகு ஆறிலும் கேது பன்னிரெண்டிலும் அமர்ந்து வாழ்க்கைக்கு புதுப்பாதை போட்டுக் கொடுக்கும். படிக்கும் வயதில் இருக்கும் ஆண்-பெண்கள் வருமானம் பெறக்கூடிய படிப்பை தேர்வுச் செய்து அதே சமயம் அதிக கோபத்தால் அவசர முடிவெடுத்து பாதிப்பைப் பெறுவார்கள் குடும்பத்தை விட்டு படிப்பு வேலையென்று பிரிந்து போகக் கூடிய வாய்ப்பும் உண்டாகும். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணமாகும் சிலருக்கு குடும்பச் சிக்கல்கள் உண்டாகும். சில தவிர்க்க முடியாத இடையூறுகள் வந்து சேரும் எப்படியிருப்பினும் உங்கள் அமைதி பொறுமை நிதானம் கைவிடாது உங்களை காக்கும். இயன்றவரை எல்லாவற்றையும் சரி செய்து வழி நடத்த தயாராவீர்கள் விட்டுக் கொடுத்தாலும் சகிப்புத் தன்மையும் உங்கள் மேம்பட்ட குணமாகவிருப்பதால் எப்படியும் சாதனை நிகழ்த்துவீர்கள். மன்மத வருடம் வரை மனதை குடைந்த சம்பவங்கள் துர்முகி ஆண்டில் துடைக்கப்பட வேண்டுமென்று நினைத்து விட்டீர்கள் என்ன ஆனாலும் சரி இந்த புத்தாண்டில் மாற்றம் வந்தே ஆக வேண்டுமென்று ஒரு முடிவு உங்களிடம் உள்ளது அதற்கான வேலைகளை படிப்படியாக செய்யத் தொடங்குவீர்கள் வெற்றி நிச்சயம். புதன்கிழமை தோறும் ஸ்ரீஅலர்மேல் மங்கை தாயாருக்கும் ஸ்ரீவேங்கடேசப்பெருமாளுக்கும் மலர்களால் அர்சித்து வழிபட இவ்வாண்டு அனைத்து நன்மைகளும் உண்டாகும்.

Read more at: http://tamil.oneindia.com/astrology/news/durmuki-tamil-new-year-rasi-palangal-251094.html

யார் இந்த யாழ்ப்பாணத்தான்? இது ஓர் அரிய வீடியோ தொகுப்பு!


சாதிய வேர்படரும் புகலிடத்து மனநிலை
தமது பொருளாதார நிலைகளை வளப்படுத்தும் நோக்கில் கடும் உழைப்பில் கவனம் செலுத்திவருவதுபோல்; தமது பண்பாடு கலாசாரத்தில் எவ்வித மாற்றமும் நிகழாது பேணுவதிலும் புகலிடம்வாழ் எமது சமூகம் சாதனை படைத்துவருகிறது. அந்தவகையில் சாதியும்; எமது பண்பாட்டோடும், கலாசரத்தோடும் இணைந்தே நகர்ந்து வருகிறது.
குறிப்பாக அண்மைக்காலங்களில் சாதிய திமிர், சாதிய ஆணவம், சாதிய பெருமை பேசும் சம்பவங்களும் முகநூல் வழியாக பரிமாறப்பட்டு வருகிறது. இதனூடாக விஞ்ஞான தொழில் நுட்பங்களையும் ‘சாதகமாக’ பயன்படுத்தும் ஒரு சமூகமாக புதுப் பரிமாணம் பெற்று வருகின்றது.
புலம்பெயர் வெகுஜன ஊடகங்களும் இவ்வாறு சாதிய பாகுபாட்டைப் பேணும் வகையில் தமது பங்களிப்பையும் நல்கி வருகின்றது. அண்மையில் தீவிர தமிழ்தேசிய வாதியும், தமிழ் ஈழப்பற்றாளருமான துரைரெட்ணம் அவர்கள் முகநூல் உரையாடல் ஒன்றில் எழுத்தாளர் ரவிக்குமார் அவர்களை வெளிப்படையாகவே சாதிப் பெயர் கூறி இழிவு படுத்தினார். இச்செயலை கண்டித்து பல்வேறு எதிர்ப்புகள் எழுந்தது. இருப்பினும் I.B.C தொலைக்காட்சி நிறுவனம் துரைரெட்ணம் அவர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கௌரவித்தது. இதனூடாக I.B.C தொலைக்காட்சி நிறுவனமும் சாதிய ஒடுக்குமுறை மனநிலை இருப்பிற்கான தனது பங்களிப்பை பிரக்ஞைபூர்வமாகவே மேற்கொண்டிருக்கின்றது.
புகலிடத்தில் தொடரும் சாதியத்தின் இருப்பும் அதன் நவீன போக்குகள் குறித்தும் நான் தொடர்ந்து பல்வேறு தளங்களில் பதிவுசெய்துகொண்டும், அதை எதிர்கொண்டும் வருகின்றேன். தற்போது இந்த முகநூல் வழியாக காட்சி தரும் சாதியம் மிக கொடூரமானதாக உள்ளது. விடுதலைப் போராட்டத்தின் ஆரம்ப பெண்போராளிகளில் ஒருவரான புஸ்பராணி அவர்கள் முகநூல் வழியாக எதிர்கொண்ட சாதிய வன்கொடுமை மிக வக்கிரமானது. அவர் முன்வைக்கும் விமர்சனங்களை எதிர்கொள்வதற்கு சாதியை பயன்படுத்தும் வழியை மேற்கொள்ளும் ஒரு மனநிலையை நாம் எவ்வாறு புரிந்து கொள்வது?
சாதிய இருப்பு குறித்தும், அதற்கான ஒரு அரசியல் சொல்லாடலாக தலித் என்ற சொல்லையும் முன்வைத்து நாம் புகலிடத்தில் செயல்பட்டு வருகின்றோம். இதுகுறித்த அக்கறையுடனான உரையாடல்களையோ விமர்சனங்களையே மேற்கொள்ளாது ரௌடித்தனமான, காடைத்தனமான மிரட்டல்களின் பின்னால் உள்ள நோக்கம் என்ன? ‘தலித் என்ற சொல் தடை செய்யப்பட்டுள்ளது.’எனும் அறிவித்தல் ஒன்று அண்மையில் முகநூலில் உலாவியது. ஆரோக்கியமான எதிர்வினை ஊக்கம் அற்ற இவ்வாறான அறிவித்தலின் பின்னாலுள்ள மிரட்டலின் நோக்கம் சாதி குறித்து பேசக்கூடாது என்பதாகவே கருதமுடிகின்றது. இந்த அனுபவத்தை நாம் யுத்தகாலத்தில், விடுதலைப்புலிகளின் போராட்ட காலத்தில் பெற்றவர்கள்.
விடுதலைப்புலிகளின் ஆயுதப்போராட்டத்தில் கொள்கையளவில் சாதிய பாகுபாட்டிற்கு தடைவிதிக்கப்பட்டது. சாதிய ஒழிப்பிற்கான சமூகவியல் காரணிகளின் அடிப்படைகளை கண்டறிவதோ அதைக் கண்டறிந்து அகற்றுவதோ விடுதலைப்புலிகளின் நோக்கமாக இருந்ததில்லை. ஆயுதப்போராட்டத்திற்கு சாதியம் ஒரு தடையாக இருந்ததே பிரதான நோக்கம். சாதியம் குறித்த சமூகவியல் ஆய்வென்பது விடுதலைப்புலிகளுக்கு பல்வேறு தரப்பினரையும் இணைக்கும் ஆயுதப்போராட்டத்திற்கு பாதகமாக அமையும் என்பதுவும் காரணமாக இருக்கலாம். விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ளபோது சாதியம் முற்றாக ஒழிந்துவிட்டது எனும் கதையாடலும் நிகழ்ந்தது. மாறாக சாதிய வக்கிரங்களும், சாதிய ஒடுக்குமுறை மேலாதிக்கமும் மிகவும் பாதுகாப்பாக குளிரூட்டப்பட்ட பெட்டிக்குள் வைக்கப்பட்ட இறைச்சிபோல் பாதுகாத்து வைக்கப்பட்டது. சாதியத்தில் மெல்ல மெல்ல நிகழும் நடைமுறை மாற்றங்கள் என்பது சாதியம் முற்றாக அழிந்து போவதற்கான வாய்ப்பாக கருதமுடியாது. அனாகரிகமாக கருதப்படும் சில நடைமுறைகள் தவிர்க்கப்படவேண்டிய நிர்ப்பந்தங்கள் ஏற்படுகின்றது. இவ்வாறு வெளிப்படுத்தப்படாத நடைமுறைகள் அனைத்தும் சேர்ந்து சேர்ந்து மனங்களில் சேர்ந்து உறைந்துகொள்ளும். சாதிய ஒழிப்பு என்பது நடைமுறைகளில் இருந்து அகற்றவதல்ல! முற்றாக மனங்களில் இருந்து அகற்றுவதாகும்! எனவே ‘தலித் என்ற சொல் தடை செய்யப்பட்டுள்ளது.’எனும் அறிவித்தலும் ஒரு பாசிச வன்முறை வெளிப்பாடு என கண்டித்து நாம் கடந்து செல்லவேண்டியதுதான்.
அதேபோல் இலங்கை அரசியலில் சாதிய பாகுபாடு குறித்து நாம் காணும் வெளிப்படையான ஒரு அம்சம்: வடபகுதியில் தற்போது பெரும்பான்மையான மக்கள் தலித் சமூகங்களை சேர்ந்தவர்களாக உள்ளனர். பாராளுமன்றத்தின் தமிழ் பிரதிநிதிகளில் ஒடுக்கப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர்கள் என்று எவரும் இல்லை. இக்குறைபாட்டை கவனத்தில் கொண்டு சென்றபோதும் அது பெரிதாக கண்டுகொள்ளப்படவில்லை. தலித் மக்களாலும் தெரிவுசெய்யப்பட்ட பிரதிநிதிகள்தான் அவர்கள். எனவே பொதுவாக தமிழ்பேசும் மக்கள் அனைவரின் பொது நலனுக்கான பிரதிநிதிகள்தான் அவர்கள் என்று யாராவது கருதினால். எனக்கு சிரிப்பு வாயால் வராது. வேறொரு வாசலால்தான் வரும். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றப் பிரதிநிதிகள் எவருமே சமூகத்தில் நிலவும் பிரச்சனைகளை தீர்ப்பதற்கோ, சமூகத்திற்கான அத்தியாவசிய தேவைகளை தீர்ப்பதற்கான கடமைகளை செய்பவர்களாகவோ இல்லை. அவர்கள் சிங்களவர்களையும், சிங்கள் அரசையும் குற்றம் சாட்டுவதையும், சிங்கள அரசுடன் இணக்கமாக எவராவது அரசியல் செய்தால் அவர்களை துரோகிகள் என அடையாளப்படுத்துவதுமே தமது பாராளுமன்றப் பிரதிநிதித்துவ கடமையாக கருதுகின்றார்கள்.
ஒடுக்கப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர்கள் சமூகமட்டத்தில் பல்வேறு நிர்வாக-அதிகார புறக்கணிப்பிற்குள்ளாகி வருகின்றனர். எனவேதான் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தினூடாக நிர்வாக-அதிகார மட்டத்திலான மறுக்கப்பட்டு வரும் உரிமைகளை பெறுவதற்கு அவர்களுக்கான அரசியல் பிரதிநிதித்துவம் மிக அவசியமானது எனவும் கருதுகின்றேன்.
-தேவதாசன்-

Foundation Rienforcement for world's tallest flag pole.


Audi (car Production) கார்கள் தயாரிப்பதைப் பாருங்கள் .


"Be realistic, expect miracles." -Osho

"Be realistic, expect miracles." -Osho
To be optimistic is the key, because to be optimistic is to trust and have faith in the way creation works and the notion that your Higher Self has your back, because it always has and always will.
There is a difference between being optimistic and having false expectations, because having expectations on a specific way the miracles come to you will keep them away from you, but if you simply expect miracles for their own sake, not worrying or even bothering to care about what kind of or how they should come about then you are in the state of allowance that brings everything you need to you exactly when you need it.
Does luck exist?
In a sense luck doesn't exist, but you can still create the experience of being lucky if you FEEL lucky already. Feeling lucky and appreciation go hand in hand, so feel lucky, feel appreciation and expect the pot of gold to be revealed to you at the end of the rainbow, exactly when you need it to be there!!!
Your Higher Self takes care of the complicated details, it takes care of the bridge of incidents that lead up to the fulfillment of your miracle of desire being manifest, TRUST is the key word. Do you Trust yourself? This is the question because the Higher Self is who you truly are, the ego is simply an avatar it is operating from a higher level in this reality game simulation we call life on earth.
-Craig Krishna

Thursday, April 7, 2016

அபோகலிப்டோ




இந்த ஹாலிவுட் படத்தை நிறைய பேர் பார்த்திருக்கலாம் - அமெரிக்க கண்டத்துல ஐரோப்பியர்கள் போறதுக்கு முன்னாடி - அந்த கண்டத்துல செவ்விந்தியர்கள் - எப்படி வாழ்ந்தாங்க என்பதை அழகா தத்ரூபமாக காட்டுற அற்புதமான படம்

ஒரு சின்ன கிராமமா வாழ்கின்ற ஒரு சந்தோஷமான சின்ன கூட்டத்தினர் - ஒரு பெரும் பலம் கொண்ட கூட்டத்தால் வேட்டையாடப்பட்டு - பலமான ஆண் பெண்களை அடிமையா அடிச்சிட்டு இழுத்துட்டுப் போவாங்க - அந்த அடிமையாப் போகிறவர்களில் ஒருத்தன் தான் கதாநாயகன் - எல்லாரையும் அடிமையாக்கிட்டு கூட்டிட்டு போறதுக்கு முன்னாடி நடந்த ஒரு பெரிய சண்டை நடக்கும் - அந்த நேரத்தில் தன்னோட நிறைமாத கர்ப்பிணி மனைவியையும் - நான்கு வயது நிரம்பிய தனது மகனையும் ஒரு கிணறு மாதிரியான பள்ளத்திற்குள்ள - கயிறு மாதிரியான ஒரு வேரை வைத்து இறக்கி - அவளை மட்டும் எதிரிகளிடமிருந்து அப்போதைக்கு காப்பாற்றி விடுவான் - இறக்கிவிட்ட பிறகு சொல்வான் - நான் எப்படியும் திரும்ப வந்துவிடுவேன் - நீ எனக்காக காத்திரு என்று
சொன்னமாதிரியே பல்வேறு போராட்டத்திற்கு பிறகு - தலை அறுபடப்போகிற தன் உயிரை காப்பாத்தி தன் மனைவியை இறக்கிவிட்ட தன் கிராமம் இருக்கும் அந்த பள்ளத்திற்கே வந்து விடுவான் - அவன் எப்படி அப்பேர்ப்பட்ட அடிமைத்தனத்திலிருந்தும் பல்வேறு எதிரிகளிடமிருந்தும் தன்னை காப்பாத்தி மீண்டுவருவான் என்பது தான் படத்தின் கதையே
இதுல ஒரு அழகான விசயம் என்னவென்றால் - ஒரு ஆண் வெளியுலகில் எவ்வளவுக்கெவ்வளவு போராடுகிறானோ - அதை விட ஒரு பெண் நாலு சுவற்றுக்குள்ளும் போராடுகிறாள் என்பதை சொல்ற விதமா - அந்த பள்ளத்திற்குள் தன் மகனையும் நிறைமாத கருவினையும் வைத்துக் கொண்டு பல்வேறு மணிநேரம் உணவில்லாமல் ஒரு கர்ப்பிணி எப்படி தாக்குபிடிக்கிறாள் என்பதையும் அழகா காட்டிருப்பாங்க -
அந்த பள்ளத்திற்குள் ஒரு பெரிய மிருகம் வந்து விழுந்து விடும் - அதனிடமிருந்து தன்னையும் தன் குழந்தையும் காப்பாற்ற அந்த மிருகத்தோடு போரிடுவது - மகனுக்கு ஏற்பட்ட குழந்தைக்கு எறும்பால் சர்ஜரி பண்ணுவது - இதையெல்லாம் தாண்டி
திடீர்னு பெய்கின்ற மழையில் - அந்த பள்ளம் நீரால் நிறைந்து கொண்டிருக்கும் - கொஞ்சம் கொஞ்சமாக நீர்மட்டம் உயர்ந்து - இடுப்பளவு - மார்பளவு - கழுத்தளவுன்னு கடைசியில தலையே மூழ்கி விடுற தருணத்தில் - தன் மகனை கழுத்தில் வைத்துக் கொண்டு அல்லாடும் தருணத்திலும் - வயிற்றிலி இருக்கும் தன் குழந்தையை - உயிரைக் கொடுத்து முக்கி பெற்று தன் ஒற்றைக் கையில் தூக்கி அந்த பிள்ளையையும் தண்ணீருக்கு வெளியே தூக்கி பிடித்துக் கொண்டு காப்பாற்றும் காட்சி இருக்கிறதே -
அப்படி இரண்டு குழந்தைகளையும் தூக்கிபிடித்த் தருணத்திலேயே - புருசனும் உயிர் தப்பித்து அந்த குழிக்குள் பார்ப்பதும் - அந்த குடும்பமே ஒருங்கிணையும் அற்புதமான காட்சி
எத்தனை முறை பார்த்தாலும் - முதல் முறை பார்ப்பது போல் பரவசம் ஏற்படுத்தும் பெண்ணின் வலிமையை உணர்த்தும் காட்சி

அபோகலிப்டோ - விமர்சனம்

ரூடி யங்பிளட், ஜோனாத்தன் பிரேவர், தலியா ஹெர்னாண்டஸ் நடிப்பில் மெல் கிப்சன் இயக்கியுள்ள படம். 

இன்று மனிதன் எவ்வளவோ முன்னேறிவிட்டான். நாகரிகத்தில் மேம்பட்டுவிட்டான். ஆனால் இதே மனிதன் ஒரு காலத்தில் மிருகங்களைப் போல வாழந்தவன் தான். நாகரிகமற்று திரிந்தவன் தான். அப்படி நாகரிக வெளிச்சம் படாத ஒரு காட்டுவாசி சமுதாயத்தில் நடந்த வாழவை பதிவு செய்து இருக்கிறார் இயக்குனர் மெல் கிப்சன். 

பார்க்கும் போது இன்றைய மனித நாகரிகம் பல கொடுமைகளையும் கொடூரங்களையும் சந்தித்த பின் தான் முன்னேறியிருக்கிறது என்று புரிந்து கொள்ளமுடியும். 

கதையின் தளம் அமெரிக்கப் பழங்குடி காட்டு வாழ் மக்களின் வாழ்க்கை. சூரிய வெளிச்சமும் நாகரிகக் காற்றும் நுழைய முடியாத அடர்ந்த காடு. அதில் வசிக்கும் ஒரு கூட்டம். குடியெடுத்தவன் தண்டல்காரன் என்பது போல் இந்தக் கூட்டத்தை ஆயுதம் தாங்கிய இன்னோரு கூட்டம் சிறைபிடித்துச் செல்கிறது. ஆடு, மாடுகளைப் பிணைப்பது போல் காடு, மேடு, மலை, ஆறு எல்லாவற்றையும் கடந்து அடித்து இழுத்துச் செல்லப்படுகிறார்கள். 

நீண்ட தூரம் கடுமையான கொடுமையான பயணத்துக்குப் பிறகு ஒரு இடத்துக்குக் கொண்டு செல்லப்படுகிறார்கள். அது மாயன் சிட்டி என்கிற இடம். அவ்வூரில் ஒரு கோயில் இருக்கிறது. மனிதர்களை அடிமையாக வாங்கும் பெரிய சந்தையும் இருக்கிறது. கொண்டு செல்லப்பட்டவர்கள் வாங்கப்படுகிறார்கள். அவர்களை அங்கே உள்ள ஒரு தெய்வத்துக்கு பலி கொடுக்க இழுத்துச் செல்கிறார்கள். தாங்கள் தங்கள் ஊர் சுபிட்சமாக வாழ நரபலி கொடுக்க வேண்டும் என்பது அவர்களின் நம்பிக்கை. இந்த முரட்டு பக்திக்கும் மூட நம்பிக்கைக்கும் கொண்டு சென்ற ஆண்களை பலி கொடுக்கத் தீர்மானிக்கிறார்கள். இந்த நரபலியால் தெய்வத்தின் மனம் குளிர்ந்து நன்மை விளையும் என்று நம்புகிறார்கள். 

விலைக்கு வாங்கப்பட்டவர்கள் வரிசையாக இதயம் பிடுங்கப்பட்டு கழுத்தை வெட்டி பலி கொடுக்கப்படுகின்றனர். அவர்களில் அகப்பட்ட நாயகன் ரூடி எப்படி தப்பிக்கிறார். காட்டில் தன் கர்ப்பிணி மனைவி மற்றும் மகனை ஒரு பெரிய பள்ளத்தில் மறைத்து வைத்திருந்தை எப்படிக் காப்பாற்றுகிறார் என்பது தான் "அபோகலிப்டோ" படக்கதை. 

ஆங்கிலப் படம் என்றாலும் படம் முழுக்க பழங்குடியினர் மொழி பேசப்படுகிறது. அது புரியாது என்பதால் சப் டைட்டில் போடுகிறார்கள். 

ஏற்கனவே "பிரேவ் ஹார்ட்", "தி பேஷன் ஆப் தி கிறிஸ்ட்" படங்கள் இயக்கிய மெல் கிப்சன் விழிகளை விரிய வைக்கும் படியும் இதயங்களை உறைய வைக்கும்படியும் காட்சிகள் அமைப்பதில் வல்லவர். இந்தப் படத்திலும் அதைச் செய்திருக்கிறார். 

காடும், காடு சார்ந்த இடங்களையும் படமாக்கியிருக்கும் விதம் மிரட்டல். அடிமைகளாக இழுத்துச் செல்லப்படும் காட்சியில் ஆயுதம் தாங்கியோர் செய்யும் கொடூரம், வன்முறை நமக்குள் ஆத்திரமூட்டும் காட்சி. அவர்கள் கடந்து செல்லும் பாதையை படமாக்கியிருக்கும் விதம் நம்மை அவர்களுடனேயே எல்லா இடங்களுக்கும் அழைத்துச் செல்கிறது. மனித வியாபாரம் நடைபெறும் சந்தை காட்சியில் பிரம்மாண்டம் விழிகளை பிதுங்க வைக்கும். உயரமான நரபலி பீடம், கீழே லட்சக்கணக்கான மக்கள் ஆரவாரம் இதைப் பார்த்து கணகள் மிரளும்; இதயம் விரியும்; அப்பப்பா... எப்படி இதைக் காட்சியாக்கி இருப்பார்கள். கேமரா எங்கே நின்று சுழன்றியிருக்கும் என்று யூகிக்க முடியாதபடி கடுமையான உழைப்பு. 

கொடியவர்களிடம் சிக்கிக் கொண்ட நாயகன் தப்பித்து ஓடுவது நீண்ட நெடிய போராட்டம். இக்காட்சி சற்று நீளமானது தான் என்றாலும் ரசிக்க முடிகிறது. கர்ப்பிணி மனைவி ஆழமான பள்ளத்தில் சிக்கிக் கொள்வது மழை பெய்வது பள்ளம் நிரம்புவது நீரிலேயே பிரசவம் ஆவது என்று நம்மூர் சென்டிமெண்ட் காட்சியும் உண்டு. 

சற்றே நீளமான படம் என்றாலும் ஆரம்பத்தில் தொடங்கிய விறுவிறுப்பு கடைசி வரை தொடர்வது இயக்குனரின் வெற்றி!

Wednesday, April 6, 2016

நிழல்கள் என்பவை யாவை?...


விஞ்ஞானிகள் இதுவரை இருள் என்பது ஒளி இல்லாத நிலை என கருதினர்.ஆனால் புதிய ஆய்வுகள் அது அந்த அளவிற்கு உண்மை என நிரூபிக்கத்தொடங்கியுள்ளது. ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் கருத்துப்படி ஒளியைவிட எதுவும் வேகமாக பயணிக்கமுடியாது.ஒருவேளை இருள் என்பது ஒளி இல்லாத நிலை எனில் அதனாலும் ஏறத்தாழ ஒளியின் திசைவேகத்தில் பயணிக்க இயலும்.ஒளி மறையும் வேகத்தில் இருளால் தோன்ற இயலும்.ஆனால் விசித்திரமான உண்மை என்னவென்றால் இருளால் அடிக்கடி ஒளியை விட வேகமாக நகர முடியும்.
ஒரு சுவரின்முன் நின்று கைகளை உயர்த்துங்கள்.பின்னர் கையை எவ்வளவு வேகமாக அசைக்க முடியுமோ அசையுங்கள்.நீங்கள் உங்கள் கையை எவ்வளவு வேகமாக அசைக்கின்றீர்களோ அதே வேகத்தில் உங்கள் நிழலும் அசையும்.இப்போது சுவற்றை விட்டு சிறிது தூரம் வந்து கையை அசையுங்கள்.இப்போது நிழல் பெரிதாக இருந்தாலும் இப்போதும் உங்கள் கையின் வேகத்திலேயே அசைகிறது.பெரிய நிழல் அதிக இடத்தை அடைத்தாலும் அதே வேகத்தில் செயல்படுகிறது.இப்போது இரவில் ஒரு பிரகாசமான விளக்கின் முன்னிலையில் நிலவை நோக்கி கையை அசைப்பதாக கற்பனை செய்யுங்கள்.இப்போது நிழல் உங்கள் கையின் வேகத்தில் அசைந்தாலும் நிலவினை அடையும் முன் பல்லாயிரக்கணக்கான மைல் பரப்பினை அடைக்கிறது.இப்போது உங்கள் கையினை போதுமான வேகத்தில் அசைத்தால் நிழலின் வேகம் ஒளியின் வேகத்தை விட அதிகமாகிறது.
இருள் எப்படி ஒளியை விட வேகமாக நகர்கிறது?ஐன்ஸ்டினின் சிறப்பு சார்பியல் கொள்கையின்படி ஒளியைவிட வேகமாக நகர்வது காலப்பயணத்திற்கு சமம்.ஆனால் ஒரு பொருளை ஒளியைவிட வேகமாக செலுத்த முடிவிலா ஆற்றல் தேவை எனவும் சார்பியல் கொள்கையில் கூறப்பட்டுள்ளது.நடைமுறையில் ஒரு பொருளை முடிவிலா ஆற்றலில் செலுத்துவது சாத்தியமற்றது.
ஆனால் இருளானது அண்டத்தில் காணப்படும் பருப்பொருள் அல்ல.ஒளியானது போட்டான்களால் ஆனது.இருள் எப்பொருளாலும் ஆக்கப்பட்டது அல்ல.எனவே அதற்கு வேகமாக செல்ல எவ்வித ஆற்றலும் தேவைப்படுவதில்லை.வேறுமாறி சொல்ல வேண்டுமானால் இருளால் இயற்பியலின் விதிகளுக்கு எவ்வித இடையூறும் அல்லாமல் காலத்தின் வழியே பயணிக்க முடியும்.
இக்கருத்தின்படி MIT விஞ்ஞானிகள் இப்போது நிழல்களை ஆராய்ந்து வருகிறார்கள்.

மனத்தைத் திறக்கும் குரலின் மகத்தான ஒளியில்

அந்தப்பாடலை
முதன்முறையாகக் கேட்கிறீர்கள்
சொல்லபோனால்
அந்த மொழியை
தன்னுடைய
காதலைச் சொல்கிறாளா
காதலின் வழி உணரும்
துயரைச் சொல்கிறாளா
அறியவியலா அந்த வரிகளினூடே
இணங்கி வழிகிற
பெண் ஒருத்தியின் குரலில்
உங்களுடைய மனம் திறக்கத் தொடங்குகிறது
அந்தக் குரல்
மழை பொழிந்த
இளமையை மீட்டெடுக்கிறதா
கதறியழுத மறக்கவியலாத கணத்தின்
நினைவை அழைத்து வருகிறதா
என்பதையெல்லாம்
ஒருபோதும் ஆராயவேண்டாம்
நிகழில்
மூடியிருக்கும் மனத்தைத் திறக்கும்
குரலின் மகத்தான ஒளியில்
நனைந்திருப்பதைத் தவிர
இந்தத் தனிமையின் இரவில்
வரமேதும் இல்லை. 
Sakthi Jothi

Rapid Elevation of Fatty Acid Metabolite May Act As a Tipping Point in Diabetes Development

Recently, the furan fatty acid metabolite, 3-carboxy-4-methyl-5-propyl-2-furanpropanoic acid (CMPF) was found to be significantly elevated in the plasma of patients with gestational and T2D. Further studies in animal models revealed a potential causal role of CMPF in diabetes development. However, the timing of the elevation in CMPF, and the role of CMPF in the deterioration of beta cell function during the progression to diabetes, before diabetes onset, has not yet been investigated.

Researchers performed a prospective study examining CMPF levels in human participants during a 5 year follow-up period and studies in prediabetic (high-fat diet, or HFD, and genetically predisposed) animal models to determine whether rapid elevation in plasma CMPF levels participates in the induction of beta cell failure and accelerates the pathological progression of diabetes.
Those who developed overt diabetes had a significant increase in CMPF over time, whereas prediabetics maintained chronically elevated levels, even up to 5 years before diagnosis. To evaluate the effect of increasing CMPF on diabetes progression, authors used obese, insulin-resistant models of prediabetes.
CMPF accelerated diabetes development by inducing metabolic remodeling, resulting in preferential utilization of fatty acids over glucose. This was associated with diminished glucose-stimulated insulin secretion, increased ROS formation, and accumulation of proinsulin, all characteristics of human diabetes.
Thus, an increase in CMPF may represent the tipping point in diabetes development by accelerating beta cell dysfunction.
Thanks http://sciencemission.com/

நான் - மகாகவி பாரதியார்

வானில் பறக்கின்ற புள்ளெலாம் நான், 
மண்ணில் திரியும் விலங்கெலாம் நான்; 
கானில் வளரும் மரமெலாம் நான், 
காற்றும் புனலும் கடலுமே நான்
விண்ணில் தெரிகின்ற மீனெலாம் நான், 
வெட்ட வெளியின் விரிவெலாம் நான்; 
மண்ணில்கிடக்கும் புழுவெலாம் நான், 
வாரியினுள் உயிரெலாம் நான்,
கம்பனிசைத்த கவியெலாம் நான், 
காருகர் தீட்டும் உரவெலாம் நான்; 
இம்பர் வியக்கின்ற மாட கூடம் 
எழில்நகர் கோபுரம் யாவுமே நான்,
இன்னிசை மாதரிசையுளேன் நான், 
இன்பத்திரள்கள் அனைத்துமே நான்; 
புன்னிலை மாந்தர்தம் பொய்யெலாம் நான், 
பொறையருந் துன்பப் புணர்ப்பெலாம் நான்.
மந்திரங்கோடி இயக்குவோன் நான், 
இயங்கு பொருளின் இயல்பெலாம் நான்; 
தந்திரங் கோடி சமைத்துளோன் நான். 
சாத்திர வேதங்கள் சாற்றினோன் நான்.
அண்டங்கள் யாவையும் ஆக்கினோன் நான், 
அவை பிழையாமே சுழற்றுவோன் நான், 
கண்டல் சக்திக் கணமெலாம் நான் 
காரணமாகிக் கதித்துளோன் நான்.
நானெனும் பொய்யை நடத்துவோன் நான், 
ஞானச் சுடர்வானில் செல்லுவோன் நான்; 
ஆனபொருள்கள் அனைத்தினும் ஒன்றாய் 
அறிவாய் விளங்குமுதற்சோதி நான்.

Tuesday, April 5, 2016

“Einstein’s Planet”

The First Exoplanet Detected Using the Special Theory of Relativity




Detecting alien worlds presents a significant challenge since they are small, faint, and close to their stars. The two most prolific techniques for finding exoplanets are radial velocity (looking for wobbling stars) and transits (looking for dimming stars). In 2013, a team at Tel Aviv University and the Harvard-Smithsonian Center for Astrophysics (CfA) discovered an exoplanet using a method that relied on Einstein’s special theory of relativity.
“Einstein’s planet,” formally known as Kepler-76b, a “hot Jupiter” that orbits its star every 1.5 days, was detected in using a method that looks for three small effects that occur simultaneously as a planet orbits its star. Einstein’s “beaming” effect causes the star to brighten as it moves toward us, tugged by the planet, and dim as it moves away. The brightening results from photons “piling up” in energy, as well as light getting focused in the direction of the star’s motion due to relativistic effects.
Its diameter is about 25 percent larger than Jupiter and it weighs twice as much. It orbits a type F star located about 2,000 light-years from Earth in the constellation Cygnus. The planet is tidally locked to its star, always showing the same face to it, just as the Moon is tidally locked to Earth. As a result, Kepler-76b broils at a temperature of about 3,600 degrees Fahrenheit.
Interestingly, the team found strong evidence that the planet has extremely fast jet-stream winds that carry the heat around it. As a result, the hottest point on Kepler-76b isn’t the substellar point (”high noon”) but a location offset by about 10,000 miles. This effect has only been observed once before, on HD 189733b, and only in infrared light with the Spitzer Space Telescope. This was the first time optical observations have shown evidence of alien jet stream winds at work..
Although the method can’t find Earth-sized worlds using current technology, it offers astronomers a unique discovery opportunity. Unlike radial velocity searches, it doesn’t require high-precision spectra. Unlike transits, it doesn’t require a precise alignment of planet and star as seen from Earth.
“We are looking for very subtle effects. We needed high quality measurements of stellar brightnesses, accurate to a few parts per million,” said team member David Latham of the CfA.
Although Kepler was designed to find transiting planets, this planet was not identified using the transit method. Instead, it was discovered using a technique first proposed by Avi Loeb of the CfA and his colleague Scott Gaudi (now at Ohio State University) in 2003. (Coincidentally, they developed their theory while visiting the Institute for Advanced Study in Princeton, where Einstein once worked.)
“This is the first time that this aspect of Einstein’s theory of relativity has been used to discover a planet,” said co-author Tsevi Mazeh of Tel Aviv University.
The team also looked for signs that the star was stretched into a football shape by gravitational tides from the orbiting planet. The star would appear brighter when we observe the “football” from the side, due to more visible surface area, and fainter when viewed end-on. The third small effect was due to starlight reflected by the planet itself.
Once the new planet was identified, it was confirmed by Latham using radial velocity observations gathered by the TRES spectrograph at Whipple Observatory in Arizona, and by Lev Tal-Or (Tel Aviv University) using the SOPHIE spectrograph at the Haute-Provence Observatory in France. A closer look at the Kepler data also showed that the planet transits its star, providing additional confirmation.
“Each planet-hunting technique has its strengths and weaknesses. And each novel technique we add to the arsenal allows us to probe planets in new regimes,” said CfA’s Avi Loeb.
Kepler-76b was identified by the BEER algorithm, whose acronym stands for relativistic BEaming, Ellipsoidal, and Reflection/emission modulations. BEER was developed by Professor Tsevi Mazeh and his student, Simchon Faigler, at Tel Aviv University, Israel.
“This was only possible because of the exquisite data NASA is collecting with the Kepler spacecraft,” added lead author Simchon Faigler of Tel Aviv University, Israel.The paper announcing this discovery has been accepted for publication in The Astrophysical Journal and is available online.
http://www.dailygalaxy.com/…/-einsteins-planet-the-first-ex…
http://mentalfloss.com/…/51819/terrible-weather-6-exoplanets
http://kepler.nasa.gov/news/nasakeplernews/index.cfm…

The Library of Celsus in Ephesus,Turkey

This library is one of the most beautiful structures in Ephesus. It was built in 117 A.D. It was a monumental tomb for Gaius Julius Celsus Polemaeanus, the governor of the province of Asia; from his son Galius Julius Aquila. The grave of Celsus was beneath the ground floor, across the entrance and there was a statue of Athena over it. Because Athena was the goddess of the wisdom.
The scrolls of the manuscripts were kept in cupboards in niches on the walls. There were double walls behind the bookcases to prevent the them from the extremes of temperature and humidity. The capacity of the library was more than 12,000 scrolls. It was the third richest library in ancient times after the Alexandra and Pergamum.


The facade of the library has two-stories, with Corinthian style columns on the ground floor and three entrances to the building. There is three windows openings in the upper story. They used an optical trick that the columns at the sides of the facade are shorter than those at the center, giving the illusion of the building being greater in size.
The statues in the niches of the columns today are the copies of the originals. The statues symbolize wisdom (Sophia), knowledge (Episteme), intelligence (Ennoia) and valor (Arete). These are the virtues of Celsus. The library was restored with the aid of the Austrian Archaeological Institute and  the originals of the statues were taken to Ephesus Museum in Vienna in 1910.
There was an auditorium ,which was for lectures or presentations between the library and the Marble Road, was built during the reign of the Emperor Hadrian.