Search This Blog

Tuesday, November 10, 2015

தன்வந்திரி தோன்றிய நாள் - தீபாவளி!


தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்தபோது அதில் இருந்து முதலில் தோன்றியவர் தன்வந்திரி. ஆயுர்வேத மருத்துவத்தைத் தோற்றுவித்தவர். அவர் தோன்றிய நாளே தீபாவளி. ஈசனின் உடலில் பாதியை அடைய திருக்கேதாரத்தில் தவம் செய்தாள் பார்வதி. சதுர்த்தசி நாளில் சக்திக்கு தன் உடலில் பாதியைத் தந்து அர்த்தநாரீஸ்வரர் ஆனார் சிவன். கணவனுடன் எந்நாளும் சேர்ந்தே இருக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டு தீபாவளி நாளில் கேதார கௌரி விரதம் இருக்கின்றனர் பெண்கள். அப்போது அம்மியையும், குழவியையும் சிவசக்தியாக பாவித்து பூஜை செய்கின்றனர்.
தன்வந்திரி பகவானுக்கு என்று தனிக்கோவில் வேலூர் மாவட்டம் வாலாஜா அடுத்த கீழ்புதுப்பேட்டை கிராமத்தில் உள்ளது. இங்கு தன் வந்திரி பகவானுடன் வாழ்வியல் முறைகளை விளக்கும் விதமாக மூலிகை ஆராய்ச்சி, வானிலை ஆராய்ச்சி, ஜோதிட ஆராய்ச்சி, வேத ஆகமங்கள் ஆராய்ச்சி, அறிவியல், சமூகம், கலை, பண்பாடு, சமயம், பாரம்பரிய சம்பிரதாயங்களை பலரும் அறிந்து கொள்ளும் விதத்திலும் தெரிந்து பயன்பெறும் விதத்திலும், வாழ்வியல் முறையில் பல உண்மைகளை தெரிந்து கொள்ளும் விதத்திலும் அமையப்பெற்றுள்ளது. 

இக்கோவில் உலக வாழ்வியல் மையம் என்று அனைவராலும் போற்றப்பட்டு வருகிறது. சுற்றுச்சூழலுக்காக ஐ.எஸ்.ஓ. 14001, ஐ.எஸ்.ஓ. 9001-2008 ஆகிய உலக   தரச்சான்றிதழ் பெற்ற பெருமையும் இந்த பீடத்திற்கு உண்டு. 

ஸ்ரீதன்வந்திரி ஆரோக்கிய பீடத்தின் நிறுவனர் முரளிதர சுவாமிகள். இவர் தன் தாய்க்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற தன்வந்திரி பீடத்தை உருவாக்கினார். இவர் கடந்த 1995-ம் ஆண்டு ஸ்ரீமாருதியின் உதவிக்கரங்கள் என்ற அமைப்பை உருவாக்கினார். 

தன்வந்திரி பீடம்............... இந்த அமைப்பின் அங்கமே ஸ்ரீதன்வந்திரி ஆரோக்கிய பீடம் ஆகும். கும்பாபிஷேகத்திற்கு முன்னர் தன்வந்திரி பகவானை கரிக்கோல ஊர்வலமாக இந்தியா முழுவதும் 2 லட்சம் கிலோ மீட்டர் தூரம் கொண்டு செல்லப்பட்டு, நூற்றுக்கும் மேற்பட்ட வைணவ, சைவ கோவில்களிலும் திருமண மண்டபங்கள், பொது இடங்கள், சமூக கூடங்களில் உலக மக்கள் பங்கு பெறும் வகையில் வைத்து 147 ஹோமங்கள் செய்யப்பட்டது. குறிப்பாக ஆழ்வார்களால் மங்களா சாசனம் செய்யப்பட்ட 67 வைணவ கோவில்களில் சிறப்பு ஆராதனை நடந்தது. 

கும்பாபிஷேகம்.......... ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்கிய பீடத்தில் 15.12.2004-ம் தேதி தன்வந்திரி பகவானுக்கு மகா கும்பாபிஷேகம் நடந்தது. அனைத்து ஜீவராசிகளையும் நோய், நொடி இல்லாமலும் சிறந்த மனநலத்துடன் காக்கும் தன்வந்திரி பகவான் அமிர்தகலசம், கையில் சீந்தல் கொடியுடன் ஸ்டெதாஸ்கோப் அணிந்து 6 அடியில் நின்ற கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். 

நான் என்னும் அகந்தையை விட்டுவிட்டு என்னிடம் நேரிடையாக வந்து சரணடையும் பக்தர்களை கைவிடமாட்டேன். அவர்கள் வாழ்வில் நல்ல உடல்நலமும், மனநலமும் பெற்று மகிழ்ச்சியாக வாழ வைப்பேன் என்று கூறி தன்னை நாடிவரும் பக்தர்களின் குறைகளை போக்கிவருகிறார் தன்   வந்திரி பகவான். 

பீடத்திற்கு வரும் ஆண் பக்தர்கள் சட்டை, பனியன் அணியாமல் செல்ல வேண்டும். ஏனென்றால் தன்வந்திரி பகவானின் நேரடி கடைக்கண் பார்வைபட வேண்டும் என்றும் ஹோமங்களின் பயன்களை பெறும் விதத்திலும் அங்கு அமைந்துள்ள சிலைகளின் கீழ் பக்தர்களால் எழுதி பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள மந்திரங்களின் ஒலி கதிர்களை பெறும் வகையிலும் மூலிகைகளின் காற்றுபட்டு உடல் ஆரோக்கியம் பெற வேண்டும் என்பதற்காக சட்டை அணியாமல் செல்ல வேண்டும் என்பது பீடத்தின் கட்டுப்பாடு. கட்டுப்பாடான வாழ்க்கை ஒருவரை வாழ்வில் உயர்த்தும் என்பதற்கு இது ஒரு உதாரணம். 

அணையா ஹோமகுண்டம்............. இந்த பீடத்தில் தனிநபர் அபிஷேக, ஆராதனை, அர்ச்சனை என்று எதுவும் இல்லை. மூலவரான தன்வந்திரி பகவான் முன்பு அமைதியாக உட்கார்ந்து அவரிடம் நம் குறைகளை ஆத்மார்த்தமாக சொல்ல வேண்டும். பின்னர் அவரின் திவ்ய பேரழகை கண் குளிர கண்டு மனதை ஒரு முகப்படுத்தி தியானம் செய்யலாம். 

அவ்வாறு செய்யும் போது நம்முடைய மனபாரம் குறைகிறது. மனம் லேசாகிறது. உடலுக்கு புத்துணர்வு கிடைக்கிறது என்பதை வருகை புரியும் பக்தர்கள் அங்குள்ள பதிவேட்டில் பதிவு செய்துள்ளது சான்றாக உள்ளது. இங்கு உலக நலன் கருதி நித்ய ஆராதனை நடக்கிறது. 365 நாட்களும் 356 யாகம் நடக்கிறது. 

தினமும் காலை 10 மணி முதல் பகல் 12 மணி வரை தன்வந்திரி ஹோமம், சுதர்சன ஹோமம், லட்சுமி ஹோமம் நடக்கிறது. பக்தர்களுக்கு பகலில் அன்னதானம் வழங்கப்படுகிறது. உலகிலேயே எங்கும் பார்க்க முடியாத அணையா ஹோம குண்டம் இங்கு உள்ளது. 

அங்கு எப்போதும் அக்னி பகவான் வாசம் செய்து கொண்டிருப்பார், பக்தர்களும் தங்களால் இயன்ற யாகப் பொருட்களை இந்த ஹோம குண்டத்தில்போடலாம். இந்த பீடத்தில் பிரதானமாக செய்வது மந்திரங்களுடன் கூடிய ஹோமங்கள் தான். 

விசேஷ ஹோமங்கள்............... ஆரோக்கிய பீடம் என்பது பெயரளவில் இருக்க கூடாது என்பதால் உடல் நலம், மனநலம் அளிக்கும் ஹோமங்கள் தினந்தோறும் நடத்தப்படுகிறது. குழந்தைவரம் இல்லையா, திருமண தடையா, கடன் பிரச்சினையா, அனைத்திற்கும் இங்கு ஹோமங்கள் நடைபெறுகிறது. இவை மட்டுமல்லாது. 

அச்வாரூடா, வாஞ்ச கல்பதா கணபதி, ஸ்ரீசூலினி துர்கா, 1008 திருஷ்டி துர்காஹோமம், சர்பசாந்தி ஹோமம், நவசண்டி ஹோமம், மஹாருத்ர ஹோமம், ஸ்ரீவித்யா நிவாரண பூஜை என விசேஷ ஹோமங்களும் நடக்கிறது. 

தன்வந்திரி ஆரோக்கிய பீடத்தில் ஒரே கல்லில் வினை தீர்க்கும் விநாயகர், பிணி தீர்க்கும் தன்வந்திரி பகவான் காட்சி அளிக்கின்றனர். இவர்களுக்கு பக்தர்கள் தங்கள் கைகளாலேயே எண்ணை அபிஷேகம் செய்கின்றனர். 

ஆரோக்கிய லட்சுமி.............. மகாலட்சுமியின் சொரூபமான ஆரோக்கியலட்சுமி இங்கு தாயாராக வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். ஆரோக்கியலட்சுமி ஸ்டெதாஸ்கோப்பும், கைகெடிகாரமும் அணிந்து கைகளில் அமிர்தகலசம், சீந்தல்கொடி, அட் டைப்பூச்சி சகிதம் காட்சியளித்து அருள்பாலிக்கிறார். 

தன்வந்திரி பகவானுக்கும் ஆரோக்கிய லட்சுமிக்கும் திருக்கல்யாண வைபவம் நடந்தது. இங்கு பஞ்ச திருக்கல்யாணம் சிறப்பாக நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இங்கு மகிஷாசுரமர்த்தினி 18 திருக்கரங்களுடன் மகிஷனை வதம் செய்து முடித்த திருக்கோலத்தில் மலர்ந்த முகத்துடன் அருள்பாலிக்கிறாள். 

அம்மன் சன்னதியில் அமாவாசை நாட்களில் நெய், மிளகாய் போன்ற திரவியங்களுடன் சூலினியாகம் மற்றும் மரணபயம் போக்கும் ம்ருத்யுஞ்ச யாகமும் நடக்கிறது. மாங்கல்ய பலம் பெறுவதற்காகவும், திருமண தடைகள் நீங்கவும், சவுபாக்கியங்கள் பெறவும் பெண்களுக்கு இந்த சன்னதியில் மாங்கல்ய சரடும், எலுமிச்சை பழமும் பிரசாதமாக வழங்கப்படுகிறது. 

மகிஷாசுரமர்த்தினி சிலைக்கு 1008 சுமங்கலிகள் அபிஷேகம் செய்து 10 கோடி மந்திரங்கள் பீடத்தின் அடியில் வைக்கப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. மகிஷாசுரமர்த்தினி விக்கிரகம் சுமார் 10 ஆயிரம் கிலோ மீட்டர் கரிக்கோல பயணமாக வந்து பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. 

468 சிவலிங்கங்கள்............ தன்வந்திரி ஆரோக்கிய பீடத்தில் 468 சித்தர்களின் நினைவாக 468 சிவ லிங்கங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. 300 ஜீவசமாதிகளுக்கு பீடாதிபதி முரளிதர சுவாமிகள் சென்று அங்கிருந்து எடுத்து வந்த மண்வைத்து சிவலிங்கங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டிருப்பது சிறப்பம்சமாகும். 

இங்கு பிரதோஷம், பவுர்ணமி பூஜையும் சிறப்பாக செய்யப்படுகிறது. தினந்தோறும் வரும் பக்தர்கள் தங்கள் கைகளாலேயே சிவலிங்கங்களுக்கு பன்னீர் அபிஷேகம் செய்து பலனடைகின்றனர். பீடத்தில் சிறப்பம்சமாக காலச்சக்கரம் அமைக்கப்பட்டுள்ளது. காலச்சக்கரத்தில் நட்சத்திரங்கள், ராசிகளுக்குரிய விருட்சங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. 

பற்சக்கர வடிவில் கால சக்கரம் அமைக்கப்பட்டுள்ளது. காலச்சக்கரத்தை சுற்றி வரும் பொழுது காலச்சக்கரத்தில் வளர்ந்துள்ள மருத்துவ குணமுள்ள விருட்சங்களின் காற்று நமக்கு நோய் நிவாரணத்தை ஏற்படுத்துகிறது. காலச்சக்கரத்தில் உள்ள மூலிகைகள் யாகத்தில் சேர்க்கப்பட்டு பஸ்பமாக பக்தர்களுக்கு விசேஷ பிரசாதமாக வழங்கப்படுகிறது. 

சன்னதிகள்............. பீடத்தில் அய்யப்பன், மகாவீரர், ராமர், சீதை, லட்சுமணன், அன்னபூரணேஸ்வரி, கூர்மலட்சுமி நரசிம்மர், பாலரங்கநாதர், காயத்திரிதேவி, தத்தாத்ரேயர், ஹயக்கிரீவர், மேதா தட்சிணாமூர்த்தி, நவகன்னியர்கள் கிருஷ்ணர், கருடாழ்வார், ராகவேந்திரர், தங்கபாபா, சூட்சமபாபா, வள்ளலார், சங்கராச்சாரியார், ரமண மகரிஷி, வேதாந்த தேசிகர், சுவாமி குழந்தையானந்தா, கிரியாயோகி மகா அவதார பாபாஜி, சுதர்சன ஆழ்வார் ஆகிய சுவாமிகளுக்கு தனி சன்னதிகளும் அமைக்கப்பட்டுள்ளது. 

மேலும் மஹாமேரு, ஸ்ரீபாதபீடம் அத்ரிபாதம், துளசி மாடம் ஆகியவையும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. தன்வந்தரி பகவானை தரிசித்து நல்ல உடல் நலமும், நல்ல மன நலமும் பெறுவோம். 

அமைவிடம்............. தன்வந்திரி ஆரோக்கிய பீடத்தின் நடை காலை 8 மணியில் இருந்து இரவு 8 மணி திறந்திருக்கும். வாலாஜா பஸ் நிறுத்தத்தில் இருந்து 3 கி.மீ. தொலைவிலும், வாலாஜாரோடு ரெயில் நிலையத்தில் இருந்து 3 கி.மீ. தொலைவிலும் வேலூரில் இருந்து 28 கி.மீ. தூரத்திலும் இந்த பீடம் அமைந்துள்ளது. வேலூர்-சென்னை மார்க்கத்தில் தேசிய நெடுஞ்சாலையில் வாலாஜா நகரம் உள்ளது. 

கார்த்தவீர்யார்ஜூனர்............. மகரிஷி ஜமதக்கனியின் புதல்வரும், குரு தத்தாத்ரேயரின் பிரதம சீடருமான கார்த்தவீர்யார்ஜூனருக்கு தனி சன்னதி உள்ளது. இவருக்கு ஆயிரம் கையுடையான் என்ற பெயரும் உண்டு, இவரை முழுமையாக நம்பி நம்முடைய குறைகளை கூறினால் வியாபார நஷ்டத்திலிருந்து நம்மை காப்பார் என்பதும், திருட்டு போன பொருட்களை திரும்ப கிடைக்க செய்வார் என்பதும் ஐதீகம். 

கார்த்தவீர்யார்ஜூனர் மகாவிஷ்μவின் அம்சமாகவும், தலைசிறந்த அரசராகவும், நம்பிக்கைக்குரிய காவல் தெய்வமாகவும், ஆயுதங்களைக் காவலுக்குரிய கொண்டு பச்சைக்கல்லில் பரவசமடையச் செய்கிறார். 

-எஸ்.கே.எம்.மோகன், வேலூர்.
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம். உடல்நலத்துடன் திகழ இந்த போற்றியை தினமும் விளக்கேற்றி பக்தியுடன் பாடுங்கள்.
ஓம் நமோ பகவதே வாசுதேவாய
தன்வந்த்ரயே அமிர்த கலச ஹஸ்தாய
சர்வ ஆமய விநாசநாய த்ரைலோக்ய நாதாய
ஸ்ரீ மஹா விஷ்ணவே நமஹ
அமுதத்தை ஏந்திநிற்கும் அருள்கரத்தோய் சரணம்
குமதச் செல்வி மணவாளன் மறுவடிவே சரணம்
சேய் எங்கள் நோய் நீக்கி காத்திடுவாய் சரணம்
தாய் போலே தரணிக்கும் தன்வந்த்திரியே சரணம்.

1. ஓம் தன்வந்திரி பகவானே போற்றி
2. ஓம் திருப்பாற்கடலில் உதித்தவரே போற்றி
3. ஓம் தீர்க்காயுள் தருபவரே போற்றி
4. ஓம் துன்பத்தை துடைப்பவரே போற்றி
5. ஓம் அச்சம் போக்குபவரே போற்றி
6. ஓம் அஷ்டாங்க யோகியே போற்றி
7. ஓம் அபயம் அளிப்பவரே போற்றி
8. ஓம் அன்பு கொண்டவரே போற்றி
9. ஓம் அமரர் தெய்வமே போற்றி
10. ஓம் அகிலம் புகழ்வோனே போற்றி
11. ஓம் அட்சய பாத்திரமே போற்றி
12. ஓம் அருளை வழங்குபவரே போற்றி
13. ஓம் அடைக்கலம் தருபவரே போற்றி
14. ஓம் அழிவற்றவரே போற்றி
15. ஓம் அழகுடையோனே போற்றி
16. ஓம் அமிர்தகலசம் ஏந்தியவரே போற்றி
17. ஓம் அமைதியின் வடிவே போற்றி
18. ஓம் அல்லல் தீர்ப்பவரே போற்றி
19. ஓம் அனைத்தும் அறிந்தவரே போற்றி
20. ஓம் அண்டமெல்லாம் நிறைந்தாய் போற்றி
21. ஓம் ஆயுர்வேத தலைவரே போற்றி
22. ஓம் ஆரோக்கியம் தருபவரே போற்றி
23. ஓம் ஆயுள் பலம் நீட்டிப்பாய் போற்றி
24. ஓம் ஆயுதக்கலை நிபுணரே போற்றி
25. ஓம் ஆத்ம பலம் தருபவரே போற்றி
26. ஓம் ஆசாபாசம் அற்றவரே போற்றி
27. ஓம் ஆனந்த ரூபனே போற்றி
28. ஓம் ஆகாயத் தாமரையே போற்றி
29. ஓம் ஆற்றலின் வடிவே போற்றி
30. ஓம் உள்ளம் நிறைந்தவரே போற்றி
31. ஓம் உலக ரட்சகரே போற்றி
32. ஓம் உலக நாதனே போற்றி
33. ஓம் உலக சஞ்சாரியே போற்றி
34. ஓம் உலகாள்பவரே போற்றி
35. ஓம் உலகம் காப்பவரே போற்றி
36. ஓம் உயிர்களின் காவலரே போற்றி
37. ஓம் உயிர் தருபவரே போற்றி
38. ஓம் உயிர்களின் உறைவிடமே போற்றி
39. ஓம் உண்மை சாதுவே போற்றி
40. ஓம் எங்கும் நிறைந்தவரே போற்றி
41. ஓம் எமனுக்கு எமனானவரே போற்றி
42. ஓம் எழிலனே போற்றி
43. ஓம் எளியார்க்கும் எளியவரே போற்றி
44. ஓம் எல்லாம் தருபவரே போற்றி
45. ஓம் எல்லையில்லா தெய்வமே போற்றி
46. ஓம் எவர்க்கும் நோய் தீர்ப்பாய் போற்றி
47. ஓம் எல்லா பொருளின் இருப்பிடமே போற்றி
48. ஓம் எல்லையில்லா பேரின்பமே போற்றி
49. ஓம் எதற்கும் மருந்தளிப்பாய் போற்றி
50. ஓம் கண்ணுக்கு கண்ணானவரே போற்றி
51. ஓம் கருணைக் கடலே போற்றி
52. ஓம் கருணை அமுதமே போற்றி
53. ஓம் கருணா கரனே போற்றி
54. ஓம் காக்கும் தெய்வமே போற்றி
55. ஓம் காத்தருள் புரிபவரே போற்றி
56. ஓம் காருண்ய மூர்த்தியே போற்றி
57. ஓம் காவிரிக்கரை வாழ்பவரே போற்றி
58. ஓம் குருவே போற்றி
59. ஓம் கும்பிடும் தெய்வமே போற்றி
60. ஓம் ஸ்ரீதன்வந்திரி பகவானே போற்றி
61. ஓம் சகல நன்மை தருபவரே போற்றி
62. ஓம் சகல செல்வம் வழங்குபவரே போற்றி
63. ஓம் சகல நோய் தீர்ப்பவரே போற்றி
64. ஓம் சம தத்துவக் கடவுளே போற்றி
65. ஓம் சகிப்புத் தன்மை மிக்கவரே போற்றி
66. ஓம் சங்கு சக்கரம் ஏந்தியவரே போற்றி
67. ஓம் சமத்துவம் படைப்பவரே போற்றி
68. ஓம் சர்வ லோக சஞ்சாரியே போற்றி
69. ஓம் சர்வ லோகாதிபதியே போற்றி
70. ஓம் சர்வேஸ்வரனே போற்றி
71. ஓம் சர்வ மங்களம் அளிப்பவரே போற்றி
72. ஓம் சந்திரனின் சகோதரரே போற்றி
73. ஓம் சிறப்பாற்றல் கொண்டவரே போற்றி
74. ஓம் சித்தி அளிப்பவரே போற்றி
75. ஓம் சித்தமருந்தே போற்றி
76. ஓம் ஸ்ரீ ரங்கத்தில் வாழ்பவரே போற்றி
77. ஓம் சுகம் அளிப்பவரே போற்றி
78. ஓம் சுகபாக்யம் தருபவரே போற்றி
79. ஓம் சூரியனாய் ஒளிர்பவரே போற்றி
80. ஓம் சூலைநோய் தீர்ப்பாய் போற்றி
81. ஓம் தசாவதாரமே போற்றி
82. ஓம் தீரரே போற்றி
83. ஓம் தெய்வீக மருந்தே போற்றி
84. ஓம் தெய்வீக மருத்துவரே போற்றி
85. ஓம் தேகபலம் தருபவரே போற்றி
86. ஓம் தேவாதி தேவரே போற்றி
87. ஓம் தேஜஸ் நிறைந்தவரே போற்றி
88. ஓம் தேவாமிர்தமே போற்றி
89. ஓம் தேனாமிர்தமே போற்றி
90. ஓம் பகலவனே போற்றி
91. ஓம் பட்டதுயர் தீர்ப்பாய் போற்றி
92. ஓம் பக்திமயமானவரே போற்றி
93. ஓம் பண்டிதர் தலைவரே போற்றி
94. ஓம் பாற்கடலில் தோன்றியவரே போற்றி
95. ஓம் பாத பூஜைக்குரியவரே போற்றி
96. ஓம் பிராணிகளின் ஜீவாதாரமே போற்றி
97. ஓம் புருளஷாத்தமனே போற்றி
98. ஓம் புவனம் காப்பவரே போற்றி
99. ஓம் புண்ணிய புருஷரே போற்றி
100. ஓம் பூஜிக்கப்படுபவரே போற்றி
101. ஓம் பூர்ணாயுள் தருபவரே போற்றி
102. ஓம் மரணத்தை வெல்பவரே போற்றி
103. ஓம் மகா பண்டிதரே போற்றி
104. ஓம் மகாவிஷ்ணுவே போற்றி
105. ஓம் முக்தி தரும் குருவே போற்றி
106. ஓம் முழு முதல் மருத்துவரே போற்றி
107. ஓம் சக்தி தருபவரே போற்றி
108. ஓம் தன்வந்திரி பகவானே போற்றி போற்றி!

Gyeongbokgung, also known as Gyeongbokgung Palace or Gyeongbok Palace

Gyeongbokgung, also known as Gyeongbokgung Palace or Gyeongbok Palace, was the main royal palace of the Joseon dynasty. Built in 1395, it is located in northern Seoul, South Korea









 Geonchunmun Gate
 Geunjeongjeon Hall, Important state functions were held in the compound of Geunjeongjeon, the Throne Hall, such as court officials' audiences with the king and receptions for foreign envoys.

 The throne inside Geunjeongjeon Hall.





Emergency Estrogen for Trauma for men?

 On the battlefield for Trauma to our Wounded Soldiers and on the “battlefield” of life in our society perhaps very soon.
Breakthrough research suggests a female sex hormone (Estradiol( may be the key to saving lives on the battlefield, where between 2001 and 2011 more than 80 percent of potentially preventable U.S. war injury deaths resulted from blood loss.
The hormone shows the promise of prolonged survival despite massive loss of blood and could be carried in a small autoinjector for use.
The long path to this breakthrough for Chaudry, who is director of the Center for Surgical Research in the UAB School of Medicine, was prompted by a mistake; in 1997 he and postdoctoral fellow Rene Zellweger, M.D., received the wrong shipment of mice.
It is a fascinating story of how science advances by chance, happenstance, and sometimes laboratory errors
In a landmark step – after 19 years of research by Irshad Chaudry, Ph.D. – UAB has received a $10 million U.S. Department of Defense contract funded by the Combat Casualty Care Research Program, U.S. Army Medical Research and Materiel Command, Fort Detrick, MD, to begin testing its potentially life-saving synthetic estrogen for safety in humans.
UAB has applied for patent protection for their synthetically produced EE-3-SO4. Beyond its battlefield potential, one important application could be domestic trauma patients, given that earlier E2 results that have shown reduced mortality and septicemia.
Also, EE-3- SO4 may have a third beneficial effect – treatment after traumatic brain injury. In experiments, the estrogen is able to reduce cerebral edema, increase brain blood flow, increase cognitive function and memory, and lessen brain cell death. Thus, EE-3-SO4 may prove to be a triple boon for trauma victims.
Trauma is the leading cause of U.S. deaths for people under 47 years of age, according to the federal Centers for Disease Control and Prevention. Because trauma hits all ages of people, it represents 30 percent of all U.S. life-years-lost each year, a far larger loss than cancer, 16 percent of all lost life-years, or heart disease, 12 percent.
http://www.huffingtonpost.com/…/female-sex-hormone-may-save…
In 2005, the U.S. Defense Advanced Research Projects Agency, DARPA, announced a vital goal: finding a way to stretch the time that a severely wounded soldier with blood loss could stay alive. This would give the warfighter a better chance of reaching a field hospital for definitive surgical and medical care.
The agency held a competition with a simple and unequivocal criterion – produce a treatment that enables survival at least three hours after significant, almost universally fatal blood loss.
Because of the accidents and incidents in their a serenditous findings in their lab over many years, Chaudry and his colleagues had discovered that E2 could allow survival for three hours without any fluid resuscitation, and long-term survival if fluid resuscitation was provided after 3 hours.
The prolonged period of low blood pressure after blood loss significantly affects mitochondrial function, endoplasmic reticulum stress markers and inflammatory cytokine production, but E2 was able to diminish those changes.
Low blood pressure reduces the delivery of oxygen to tissues and to the mitochondria, which voraciously consume oxygen to produce energy in the form of ATP. T
Thus, oxygen deprivation is a burden for tissues and mitochondria under low blood flow conditions.
UAB came up with using a synthetic estrogen variant called ethinyl estradiol-3-sulfate, or EE-3-SO4 synthesized by a pharmaceutical company. that was microencapsulated within cyclodextrin to make it water soluble
Out of 10 initial Surviving Blood Loss programs, UAB was the only one that met the challenge of six-hour survival after 60 percent blood loss in the absence of fluid resuscitation.
DARPA’s six-hour aim was solely survival, but Chaudry has continued mechanistic studies of how EE-3-SO4 produces beneficial effects.
The estrogen appears to interact with the different types of estrogen receptors in all types of tissues in both men and women. Using selective estrogen-receptor antagonists or agonists for the different types of estrogen receptors, Chaudry’s research team continues to look at which type of receptor is important for EE-3-SO4action in different tissues.
Besides improved heart function, EE-3-SO4 appears to dilate blood vessels and speed the movement of fluid from the tissue compartment into the blood compartment (the interstitial fluid of the tissue compartment has about twice the volume compared to the average volume of blood in adult humans).
Lowering this resistance to improve blood flow to vital organs hails back to the great challenge to trauma recovery as "the body’s blood system is like a swamp after trauma, and anything
that turns the swamp into a running brook is the answer for treating shock."

Salvatore Giuliano


A 1962 neo-realist documentary-style political drama, Salvatore Giuliano was directed by Francesco Rosi and follows the rise and fall of the titular character as well as the socio-economic situation in post-war Sicily.
The film starts as the body of Sicilian outlaw is discovered in a courtyard. From there on in, the movie is told in non-chronological flashbacks as local political leaders start recruiting outlaws in their fight for Sicilian independence after World War II. Salvatore Giuliano, a local young rebel, initially serves their purprose but as time progresses he starts becoming more of a criminal than a revolutionary and gets in the mafia's way as well as of those politicians who initially needed him, leading up to the events of his assassination and the trial in its wake.
A film so powerful and on the money that its release and popularity actually inspired a real-life investigation into mob-activity in Sicily, Salvatore Giuliano is maybe most noteworthy for the fact that the titular character basically does not appear on screen during the film's run-time except for his corpse after he has been shot. The film is far more interested in the political situation in Sicily at the time and the non-linear narrative combined with the neo-realist aesthetic give the movie a distinct documentary-like feel. Salvatore Giuliano won the Silver Berlin Bear for Best Director in Berlin, the Golden Globe for Best Film at the Italian Golden Globes and was nominated for five Silver Ribbons from the Italian National Syndicate of Film Journalists, winning three for Best Director, Screenplay and Score.

Happy Deepavali


AFRO-CARIBBEAN RELIGIONS

Most West Indians of African descent are affiliated, at least nominally, with a historic Christian denomination or with one of the newer sects. In many areas of the West Indies, however, a number of hybrid religions have attracted large numbers of followers. In Haiti, virtually the entire population is in some way involved in vodou. In Jamaica, the Revivalist, Kumina, and Convince cults continuously attract a small number of adherents. Wherever such cults are found, some persons participate more or less regularly in both a Christian church and a cult, and in times of crisis many who ordinarily ignore the cults become involved in their healing or magical rituals.
This essay will concentrate on four types of syncretic religious cults found in the Caribbean region, which will be called the neo-African cults, the ancestral cults, the revivalist cults, and the religio-political cults. The experience of Caribbean blacks under the political, economic, and domestic conditions of slavery modified character in a stressful direction, and those who were most sensitive to the stress advanced innovative religious and secular systems to deal with their anxiety. The new religious institutions consisted of elements of African and European beliefs and practices, and, in some cases, parts of American Indian and South Asian religious traditions. A number of new religions arose from the interaction of three major variables: socioeconomic, psychological, and cultural. Contingent factors in the development of these hybrid religions include such ecological and demographic variables as the degree to which a group of people had been isolated physically and socially from other segments of the population and the proportion of the total population constituted by various ethnic and racial groups (Simpson, 1978). Successful religions spread, adapt, and persist after the conditions that gave rise to them have changed (or changed to some extent), and individuals are socialized into accepting the revised beliefs and procedures. When this happens, a religion acquires new meanings for its members, and it takes on new functions, the most universal of which is the satisfaction that comes from group activities.

Neo-African Cults

These cults developed during the early stages of cultural contact between persons of European and African origin, because members of the subordinate group could neither acquire the religion of the dominant group nor participate as comembers in the historic Christian denominations. The major cults of this type are Haitian vodou, Cuban Santería, and Trinidadian Shango. From the viewpoint of cultural content, these religions represent the most extensive blend of African and European traditions and rituals in the Caribbean region.

Haitian vodou

The African dances that were performed in the seventeenth century by slaves in the western part of the island of Hispaniola and the religious beliefs of the Fon, Siniga, Lemba, Yoruba, and other African peoples who had been brought to Hispaniola were combined with certain beliefs of European folk origin about Roman Catholic saints, and, as a result, the neo-African religion of vodou developed. As James G. Leyburn (1966) has noted, the period from 1780 to 1790, when the importation of slaves to Hispaniola was increasing, saw the emergence of vodou, with a gradual ascendancy of Fon ideas. Finding the rites useful for their cause, revolutionary leaders in the last decades of the eighteenth century and the early years of the nineteenth century brought about further syntheses.
The supernatural phenomena of greatest importance in vodou are the lwa, also known as zanj, mistè, and other names. Many of these have names derived from old African gods, but other deities have names derived from African tribal or place names, names of Haitian origin, or names of Catholic saints; others have names of uncertain origin. The confusions and contradictions in the beliefs about these beings are due in part to contradictions in the Fon religious system that the Haitians adopted, and in part to the merging of the Fon system with that of the Yoruba (Courlander, 1960). But the endless variations in these and other beliefs concerning the ultimate reality are also the result of the absence of a hierarchy in the cult and of written documents. Erika Bourguignon (1980) suggests that variety and inconsistency in Haitian vodou have developed, and continue to develop, in part through the mechanism of altered states of consciousness, particularly in the forms of possession-trance and dreams. In Haiti, possession-trance is not highly stereotyped and prescribed. During possession-trance, cult leaders and members speak and act in the names of the spirits, behaving in ways that may modify the future performance of the ritual or the adherents’ perception of the spirits.
The grand lwa comprise both nature spirits and functional spirits that are of African origin. Prominent among the nature spirits are Dambala, the serpent spirit identified with the rainbow and associated with floods; Bade, spirit of the winds; Sogbo, a Fon spirit of thunder; Shango (Yor., Ṣango), the Yoruba spirit of thunder and lightning; and Agwé, spirit of the sea. The functional lwa include Legba, the Fon guardian of crossroads and all barriers; the Ogou (Yor., Ogun) family, spirits associated with war; Zaka, associated with crops and agriculture; Ezili, a sea goddess among the Fon, but transformed in Haiti into the personification of feminine grace and beauty; the members of the Gèdè family, the spirits of death; Adja, skilled in the fields of herbs and pharmacy; and Obatala (Yor., Ọbatala), the Yoruba divinity responsible for forming children in the womb (Herskovits, 1937b; Courlander, 1939; Simpson, 1945, 1978; M. Rigaud, 1953; Métraux, 1959).
The lwa are also identified with Catholic saints. Thus, Legba is often believed to be the same as Anthony the Hermit, but some say that he is Saint Peter, the keeper of the keys. Dambala is identified with Saint Patrick, on whose image serpents are depicted. Ogou Ferraille is equated with Saint James; while Ogou Balanjo, the healer, is associated with Saint Joseph, who is pictured holding a child whom he blesses with an upraised hand. Obatala becomes Saint Anne; and Ezili, who is believed to be the richest of all the spirits, is identified with Mater Dolorosa and is represented as richly clothed and bejeweled. The marassa, spirits of dead twins, are believed to be the twin saints Cosmas and Damian (Price-Mars, 1928; Herskovits, 1937a).
The relationship between vodou adherents and the lwa is thought to be a contractual one; if one is punctilious about offerings and ceremonies, the lwa will be generous with their aid. The lwa must be paid once or twice a year with an impressive ceremony, and small gifts must be presented frequently. …
thanks http://corespirit.com/

Monday, November 9, 2015

அவளிடத்தில் துளிர்த்திருக்கும் சின்னஞ்சிறிய சிறகுகளில்

அதற்குப் பிறகான
சந்திப்புக்களில்
தண்ணீர் வண்ணத்தில்
அவளிடத்தில் துளிர்த்திருக்கும்
சின்னஞ்சிறிய சிறகுகளில்
அவளுடன் பறந்து திரிய
அவனை அனுமதித்தாள்
அவளின் சிறகுகளில்
கட்டற்று விரிந்தது
அவனின் எல்லை
எல்லையற்று விரிவதெல்லாம்
ஒற்றைப்புள்ளியில்
மையம் கொள்ளவே
என்பதையறிந்த கணத்தில்
சாம்பல்வண்ணப்
பறத்தலின் வெளி
அடர்ந்து நீலமாகியது .

நிலவு ஒரு பெண்ணாகி உலவுகின்ற அழகோ NILAVU ORU PENNAAKI...... from Film: Ulagam Sutrum Vaaliban (1973)...


நிலவு ஒரு பெண்ணாகி உலவுகின்ற அழகோ
நீர் அலைகள் இடம்மாறி நீந்துகின்ற குழலோ
மாதுளையின் பூப்போலே மலருகின்ற இதழோ
மானினமும் மீனினமும் மயங்குகின்ற விழியோ

புருவம் ஒரு வில்லாக பார்வை ஒரு கணையாக
பருவம் ஒரு களமாக போர்தொடுக்க பிறந்தவளோ
குறுநகையின் வண்ணத்தில் குழிவிழுந்த கன்னத்தில் 
தேன் சுவையை தான் குழைத்து கொடுப்பதெல்லாம் இவள்தானோ
பவளமென விரல்நகமும் பசும்தளிர் போல் வளைகரமும்
தேன் கனிகள் இருபுறமும் தாங்கிவரும் பூங்கொடியோ
ஆழ்கடலின் சங்காக நீள் கழுத்து அமைந்தவளோ
யாழிசையின் ஒலியாகா வாய்மொழி தான் மலர்ந்தவளோ
செந்தழலின் ஒளிஎடுத்து சந்தனத்தின் குளிர் கொடுத்து
பொன் தகட்டில் வார்த்து வைத்த பெண் உடலை என்னவென்பேன்
மடல் வாழை துடை இருக்க மச்சமொன்று அதில் இருக்க
படைத்தவனின் திறமையெல்லாம் முழுமைபெற்ற அழகியென்பேன்
நன்றி: வாலி

Newly identified chemical in eye drop could clear up cataracts


Identified as a "priority eye disease" by the World Health Organization, cataracts--caused when the lenses of the eyes lose their transparency--affect more than 20 million people worldwide. Although cataracts can be successfully removed with surgery, this approach is expensive, and most individuals blinded by severe cataracts in developing countries go untreated.
Reported in Science, the newly identified compound is the first that is soluble enough to potentially form the basis of a practical eye-drop medication for cataracts.

S.Janaki.and.K. J. Yesu Das


Raga Yaman : Eri Aali : DIY Raga Labs Launch

கடவுளிடம் ஒரு விவசாயி

கடவுளிடம் ஒரு விவசாயி கடுமையாகச் சண்டைக்குப் போனான்.
”உனக்குப் பயிர்களைப் பற்றி என்ன
தெரியும்? நீ நினைத்தபோது மழையை
அனுப்புகிறாய். தப்பான சமயத்தில் காற்றை
வீசுகிறாய். உன்னால் பெரிய தொந்தரவாக இருக்கிறது.
பேசாமல்,
இந்த வேலைகளை விவசாயி ஒருத்தனிடம் ஒப்படைத்துவிடேன்!”
என்றான்.
கடவுள் உடனே,
“ அப்படியா? சரி. இனிமேல் வெளிச்சம், மழை, காற்று எல்லாம் உன் கட்டுப்பாட்டிலேயே இருக்கட்டும்” என்று வரம் அருளிவிட்டுப்
போய்விட்டார்.
விவசாயிக்கு சந்தோஷம் பிடிபடவில்லை.
அடுத்த விதைப்பிற்கான பருவம் வந்தது.
”மழையே பெய்” என்றான்.
பெய்தது.
நிறுத்தச் சொன்னபோது,
மழை நின்றது.
ஈரமான நிலத்தை உழுதான்.
தேவையான வேகத்தில் காற்றை வீசச் செய்து, விதையை தூவினான்.
மழை, வெயில், காற்று எல்லாமே அவன் சொன்ன பேச்சைக் கேட்டன.
பயிர் பச்சைப்பசேல் என வளர்ந்தது.
வயல்வெளியைப் பார்க்கவே மிகவும் ரம்மியமாக இருந்தது.
அறுவடைக் காலமும் வந்தது.
விவசாயி ஒரு கதிரை அறுத்தான். அதனை உதிர்த்து, திறந்து பார்த்தான்.
அதிர்ந்தான்.
உள்ளே தானியத்தைக் காணவில்லை, மிகச் சிறிய பதர்தான் இருந்தது.
அடுத்தது, அதற்கடுத்தது என்று ஒவ்வொரு தானியக்கதிராக வெட்டி எடுத்து உடைத்துப் பார்த்தால் ஒன்றிலுமே தானியம் இல்லை.
”ஏ கடவுளே!” என்று கோபத்தோடு கூப்பிட்டான்.
“மழை, வெயில், காற்று எல்லாவற்றையுமே மிகச் சரியான விகிதங்களில்தானே பயன்படுத்தினேன்! ஆனாலும், பயிர்கள் பாழாகிவிட்டதே, ஏன்?” எனக்கேட்டான்.
கடவுள் புன்னகைத்தார்:
“என் கட்டுப்பாட்டில் இருந்தபோது காற்று வேகமாக வீசும். அப்போது பயிர்களெல்லாம், அம்மாவை இறுக்கிக்கொள்ளும் குழந்தைகளைப்போல பூமிக்குள் தங்கள் வேர்களை மிக ஆழமாக அனுப்பிப் பிடித்துக்கொள்ளும்.
மழை குறைந்தால், தண்ணீரைத் தேடி வேர்களை நாலாபக்கமும் அனுப்பும்.
போராட்டம் இருந்தால்தான் தாவரங்கள் தங்களைப் பாதுகாத்துக்கொண்டு, வலுவாக வளரும்.
எல்லாமே வசதியாக
அமைத்துக் கொடுத்ததில் உன் பயிர்களுக்கு சோம்பேறித்தனம் வந்துவிட்டது.
தளதளவென்று வளர்ந்ததே தவிர, ஆரோக்கியமான தானியங்களைக் கொடுக்க அவற்றிற்கு தெரியவில்லை!” என்றார்.
வேண்டாமய்யா, உன் மழையும் காற்றும்! நீயே வைத்துக்கொள்” என்று கடவுளிடமே அவற்றைத் திருப்பித் தந்துவிட்டான் விவசாயி.
பிரச்சினைகள் உங்களைப் போட்டு அழுத்தும்போதுதான், உங்களின் திறமை அதிகரிக்கும்.
இருட்டு என்று ஒரு பிரச்சினை இருந்ததால்தான் மின்விளக்கு கண்டுபிடிக்கப்பட்டது.
பயணம் என்பது பிரச்சினையானபோதுதான் வாகனம் உருவானது.
பிரச்சினைகளே இல்லாமல் இருந்துவிட்டால் நம் மூளையின் திறனை எவ்வாறு அறிவீர்கள்?
எதிர்பாராத திருப்பங்கள்தானே நம் வாழ்க்கையைச் சுவையாக அமைத்துத் தரமுடியும்.

Sunday, November 8, 2015

The nature and dynamics of world religions: a life-history approach Nicolas Baumard, Coralie Chevallier

In contrast with tribal and archaic religions, world religions are characterized by a unique emphasis on extended prosociality, restricted sociosexuality, delayed gratification and the belief that these specific behaviours are sanctioned by some kind of supernatural justice. Here, we draw on recent advances in life history theory to explain this pattern of seemingly unrelated features. Life history theory examines how organisms adaptively allocate resources in the face of trade-offs between different life-goals (e.g. growth versus reproduction, exploitation versus exploration). In particular, recent studies have shown that individuals, including humans, adjust their life strategy to the environment through phenotypic plasticity: in a harsh environment, organisms tend to adopt a ‘fast' strategy, pursuing smaller but more certain benefits, while in more affluent environments, organisms tend to develop a ‘slow' strategy, aiming for larger but less certain benefits. Reviewing a range of recent research, we show that world religions are associated with a form of ‘slow' strategy. This framework explains both the promotion of ‘slow' behaviours such as altruism, self-regulation and monogamy in modern world religions, and the condemnation of ‘fast' behaviours such as selfishness, conspicuous sexuality and materialism. This ecological approach also explains the diffusion pattern of world religions: why they emerged late in human history (500–300 BCE), why they are currently in decline in the most affluent societies and why they persist in some places despite this overall decline.

Saturday, November 7, 2015

Fluorite, Muscovite

Chemical Formula
Fluorite : CaF2
Muscovite : KAl2(AlSi3O10)(OH)2

Locality: Yaogangxian Mine, Yaogangxian W-Sn ore field, Yizhang Co., Chenzhou Prefecture, Hunan Province, China
Field of View: 25 mm

Photo Copyright © Ian Whitlock

தேசிய விருதுபெற்ற புகைபடம்! ஒரே கண் இரண்டு பார்வை!!


This is how to tell if someone is cheating on you


தீபாவளி ஸ்பெஷல்: மைசூர் பாகு


தேவையான பொருட்கள் :
கடலை மாவு - 1 கப்,
சர்க்கரை - 2 கப்,
நெய் - 3 கப்,
தண்ணீர் - 1 கப்.
செய்முறை :
* கடலை மாவை லேசாக நெய் ஊற்றி வாசனை போக வறுத்துக் கொள்ளவும்.
* அடிகனமான பாத்திரத்தில் சர்க்கரை, தண்ணீர் சேர்த்துப் பாகு காய்ச்சவும். ஒற்றைக் கம்பிப் பதத்துக்கு வந்ததும் (ஒரு நூல் கம்பி பதம்)
கடலை மாவை கொஞ்சம் கொஞ்சமாகக் கொட்டிக் கிளறவும்.
* அதே நேரத்தில், இன்னொரு அடுப்பில் நெய்யைச் சூடாக்கி, கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றிக் கிளறவும்.
* மாவும் பாகும் நுரைத்துப் பொங்கி வரும்போது நெய் தடவிய தட்டில் கொட்டவும். தட்டை ஆட்டக்கூடாது. அப்படியே செட்டாக விட
வேண்டும். அப்போதுதான் சூடான ட்ரெடிஷனல் மைசூர் பாகாக வரும். சிறிது சூடாக இருக்கும்போதே கத்தியால் துண்டுகள் போடவும்.

நம்ப முடியவில்லை, இது ஓவியம் தான் என்பதை..


DNA in blood can track cancer development and response in real time

Over three years, researchers at the University of Cambridge took surgical tumor samples (biopsies) and blood samples from a patient with ER-positive and HER2-positive breast cancer that had already spread to other parts of her body.
They carefully studied small fragments of DNA from dying tumor cells that are shed into the blood, comparing them with DNA from the biopsy that was taken at the same point in time.
The results show that the DNA in the blood samples matched up with that from the biopsies, reflecting the same pattern and timing of genetic changes appearing as the cancer developed and responded to treatment.

கேத்தி ஏகர் கவிதை (ப்ளாரிடா நாவலிலிருந்து):

பெண்ணே தராதே, பெண்ணே பெறாதே
குளிராயிருக்கையில் பெண் ஈரமாகிறாள்
ஈரமாகும்போது பெண்  தளர்ந்துபோகிறாள்
பெண்ணே தராதே, பெண்ணே பெறாதே.

இப்பாடலின் கதையை நீ புரிந்துகொள்ளவேண்டுமா
தவறிப்போக விழையும் பெண்ணைப்பற்றியது இது
குண்டுப்பூனையைப்போல திருப்தியுறுபவள் அவள்
மல்லாக்கப் படுத்துக்கிடக்கும்போதுமட்டும்.

நல்லது, இப்பெண் ஒரு ஆணை நேசித்தாள்
துரதிர்ஷ்டசாலிகளான சிலபெண்களால் செய்யமுடிவதைப்போல.
அவனுக்குக் கொட்டைகளிருந்தன ஆனால் அவை அவன் மண்டைக்குள்
இச்சூடான பெண்ணை படுக்கைக்கு அழைத்துச்செல்ல மறுத்தான்.

பெண்ணே தராதே, பெண்ணே பெறாதே
குளிராயிருக்கையில் பெண் ஈரமாகிறாள்
ஈரமாகும்போது பெண்  தளர்ந்துபோகிறாள்
பெண்ணே தராதே, பெண்ணே பெறாதே.

அவளைக் காதலிக்கிறேன் என்றான்; சொன்னான்
அவள் தொடர்ந்து வாழ எதையும் தருவதாக.
விலங்கின் மென்மயிராடை வாங்கித்தருவதாக
முத்துகள் வாங்கித்தருவதாக.
ஆனால் அவள் யோனிக்கு ஒரு சுழலை அவன் தருவதாயில்லை
அவனைப் பெண்கள் பலர் தொடர்ந்துகொண்டிருக்க
இன்னும் எக்கச்சக்கப் பெண்களைப் புணர்ந்துகொண்டிருந்தான்.

ஆக அவனுக்காக இச்சோகப்பாடலை அவள் பாடினாள்
உலகம் எப்போதும் தவறாகவே இருப்பது பற்றி;
[பெரிய எழுத்துருவில்:]
செய்தால் இறப்பேன் செய்யாவிட்டால் இறப்பேன்
எழுதினால் இறப்பேன் எழுதாவிட்டால் இறப்பேன்
காதலில் விழுந்தால் இறப்பேன் விழாவிட்டால் இறப்பேன்

அவனுக்கு அவள் துச்சம், அவனுக்கு அக்கறையில்லை.
குளிர்காலக் காற்றின்முன் கத்தினாள் அவள்;
மணிக்கட்டுகளை அறுத்துக்கொண்டாள்; மொட்டையடித்துக்கொண்டாள்’
கிட்டத்தட்ட செத்துவிழும்வரை உணவை மறுத்தாள்.

அவளிடம் அவன் ஓடிவரவில்லை, மனிதர்களும் அவர்களின்
தேவைகளும் அவனுக்கு நோய் ஏற்படுத்துகிறதென்றான்.
தனித்து அமர்ந்திருக்க மட்டுமே அவனுக்குப் பிடித்திருந்தது
தன் கிராமத்துவீட்டில் அவன் தொலைபேசிக்கருகே.

பெண்ணே தராதே, பெண்ணே பெறாதே
குளிராயிருக்கையில் பெண் ஈரமாகிறாள்
ஈரமாகும்போது பெண்  தளர்ந்துபோகிறாள்
பெண்ணே தராதே, பெண்ணே பெறாதே.

ஆகவே கேளுங்கள் பெண்களே, உணர்ச்சியுறும் காதலிக்கும்
ஆணைத் தேடச் செய்யமுடிந்ததைச் செய்யுங்கள்.
தரமுடிந்ததையெல்லாம் அவனுக்குத் தாருங்கள்.
இன்னும்கூடத் தாருங்கள் நீங்கள் வாழவேண்டி.  

திருசெந்தூர் முருகன் கோவில் பன்னீர் இலை விபூதி :


திருப்பதிக்கு லட்டு, பழனிக்கு பஞ்சாமிர்தம்....
என்கிற வரிசையில் திருசெந்தூர் முருகன் கோவிலின் சிறப்பு பிரசாதம் இலை விபூதி. பன்னீர் இலையில் விபூதியை வைத்து வழங்குவது தான் இது. எந்த கோவிலிலும் இப்படி வழங்குவது இல்லை.
ஆதி சங்கரர் இந்த இலை விபூதியை உண்டு காச நோயை நீக்கிக்கொண்டதாகவும், அதனாலேயே அவர் ஸ்ரீசுப்பிரமணிய புஜங்கம் பாடியதாகவும் கூறப்படுகிறது.
இன்றும் இந்த விபூதி இலை தீராத பல நோய்களை தீர்க்கும் அருமருந்தாக விளங்கி வருகிறது. திருசெந்தூர் செல்பவர்கள் இதை தவறரது பெற்றுச் செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
திருச்செந்தூரில் முருகன் சன்னதியில் விபூதி, சந்தனப் பிரசாதத்தை பக்தர்களுக்குத் தரும்போது, பன்னீர் இலையில் தான் தருவார்கள். முருகன் ஒருபக்கத்திற்கு ஆறு கரங்கள் என 12 கரங்கள் கொண்டவன்.
அது போலவே பன்னீர் மரத்தின் இலைகளிலும் ஒரு பக்கத்திற்கு ஆறு நரம்புகள் என ஈராறு பனிரெண்டு நரம்புகள் இருக்கும். பன்னீருக்கரத்தான் முருகனை சென்று வணங்கும் பக்தர்களுக்கு அவன் தனது பன்னீருதிருக்கரங்களாலேயே இங்கு விபூதி, சந்தன பிரசாதத்தை வழங்குவதாக ஐதீகமாகும். அதனால் இது பன்னீர் செல்வம் என்று பக்தர்களால் சொல்லப்படுகிறது.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர்களுக்கு பன்னீ(னி)ரு இலை விபூதி பிரசாதம் காலம் காலமாக வழங்கப்பட்டு வருகிறது.
இலை விபூதியின் மகத்துவம் ;
அபிநபகுப்தர் என்ற சித்தர் ஒருவர் கெடுதல் செய்யும் நோக்கத்தில் ஆதிசங்கரருக்கு செய்வினை, ஏவல், பில்லி, சூனியம் செய்தார். இதனால் சூலைநோய் உள்பட பல்வேறு நோய்களுக்கு ஆதிசங்கரர் உட்பட்டார். மனமுடைந்த ஆதிசங்கரர் இறைவனை நாடி மனமுறுக வேண்டினார். இருந்தும் அவருக்கு நோய் குணமாகவில்லை. அவர் ஒவ்வொரு கோவிலாக சென்று இறுதியாக திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமிக்கு வந்து மனமுறுக வேண்டினார். அப்போது ஆதிசங்கரர் கையில் பன்னீரு இலை விபூதி பிரசாதம் வழங்கப்பட்டது. பிரசாதத்தை உடலில் பூசிக், அதை உள்கொண்டார். சில நாட்களில் அவரை தொற்றி இருந்த நோய்கள் அனைத்தும் முற்றிலும் குணமடைந்தது.
அதன் பின்னர் ஆதிசங்கரர் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி மீது அதிக பற்று கொண்டு மனமுறுகி 32 பாடல்கள் கொண்ட சுப்பிரமணிய புஜங்க ஸ்லோகம் பாடினார். அந்த 32 பாடல்களும் கோவிலில் சிறப்பு, சுவாமியின் பெருமை போன்றவை குறித்து இருந்தது. அதில் 25வது பாடலில் இலை விபூதியின் மகிமை பற்றி பெருமை பட பாடினார்.
சுப்பிரமண்யா! நின் இலை விபூதிகளை கண்டால் கால் கை வலிப்பு, காசம், கயம், குட்டம் முதலிய நோய்கள் நீங்கும். பூதம், பிசாசு, தீவினை யாவும் விட்டு விடும் என்று சுப்பிரம்மண்ய புஜங்கத்தில் ஆதிசங்கரர் செல்லி இருக்கிறார்.
பன்னீர் இலை என்பதற்கு அர்த்தம். இலையில் மொத்தம் 12 நரம்புகள் இருக்கும். முருக பெருமான் தனது 12 கரங்களால் இந்த பிரசாதத்தை வழங்கியதால் இந்த பன்னீர் இலையில் முருக பெருமானின் பன்னிரு கைகள் போன்று இருக்கும். பன்னிரு இலை என்ற பெயர் காலப்போக்கில் மருவி பன்னீர் இலை என்று கூறப்படுகிறது.
முருக பெருமானை பூஜித்த தேவர்கள் அனைவரும் இந்த பன்னீர் மரங்களாக இருப்பதாகவும், அதில் இருந்து இருந்த பெறப்படும் பன்னீர் இலைகள் பிரசாதமாக வழங்கப்படுவதால் அதற்கு தனி மகத்துவம் இருப்பதாக கருதப்படுகிறது.
இந்த பன்னீர் இலை விபூதி பிரசாதம் தினமும் காலை விஸ்வரூப தரிசனத்தின் போது சுவாமி பாதத்தில் வைத்து பூஜித்து பக்தர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. வேறு எந்த கோவிலிலும் இல்லாத சிறப்பாக திருச்செந்தூர் கோவிலில் இந்த இலை விபூதி பிரசாதம் வழங்கப்படுகிறது.
இந்த இலையை நேராக வைத்து பார்த்தால் முருக பெருமானின் வேல் போன்று காட்சி அளிக்கும்.
1.பன்னீர் இலையில் உள்ள பூவில் உள்ள சாந்த குண சக்தி நிறைவாக உள்ளது. அது நமது உடலுக்குச் சில நன்மைகளைத் தருகிறது என்று சித்தவைத்தியம் கூறுகிறது.
2.இறைவனுடைய பூஜைக்குறியது துளசி வில்வ இலை, வன்னி இலை. அதே போல் இறைவனுடைய பூஜைக்குரியதாகப் பன்னீர் இலை உள்ளது.
3.பன்னீர் இலையில் உள்ள 12 நரம்புகள் முருகப்பெருமானின் பன்னிரு திருக்கரங்களுச் சமம் என்று கூறுவர். 4.திருவாடுதுறை திருப்பனந்தாள் குரு மகாசந்நிதானங்கள் நடராஜப் பெருமானை வணங்குவோர்க்குப் பன்னீர் இலையில் விபூதிப் பிரசாதம் வழங்கி வருகிறார்கள்.
5.திருநீற்றைப்ப பன்னீர் இலையில் பத்திரமாக வைத்துக் கொள்வது செல்வத்தைச் சேமிப்பது போலாகும் என்று பக்தர்கள பன்னீர் இலை வீபூதியைப் பக்தியுடன் பத்திரமாக வைத்துக் கொள்கிறார்கள்.
6.பக்தர்கள் பன்னீர் இலை விபூதியுடன் இலையையும் உண்டு நோய்களிலிருந்து குணமடைகிறார்கள். அருளாளர் ஆதிசங்கரர் நோய் நீக்கும் உண்மையையும் பெருமையையும் வல்லமையையும் தனது பாடல்களில் எடுத்தியம்புகிறார். 7.பன்னீர் இலை விபூதியைப் பக்தர்கள் இல்லங்களுக்கு எடுத்துச் சென்று பூஜை அறைகளில் பத்திரப்படுத்தி வியாதிகள் வந்தால் செந்தில் முருகனை வேண்டி அணிந்து கொள்கிறார்கள். ஆடு, மாடுகள் நோய் கண்டால் நோய் நீங்க வழிபட்டுப் பன்னீர் இலை விபூதியினை மருந்தாகக் கொடுத்து நோய் நீங்கியதும் திருச்செந்தூர் முருகனுக்குக் காணிக்கையாக ஆடு மாடுகளைச் செலுத்திகிறார்கள். பன்னீர் இலை விபூதியினை மருந்தாக் கொடுத்து நோய் நீங்கியதும் திருச்செந்தூர் முருகனுக்குக் காணிக்கையாக ஆடு மாடுகளைச் செலுத்துகிறார்கள். பன்னீர் இலையும் நற்சந்தனமும் பக்தர்களுக்கு வழங்கபபடுகிறது.
"அபஸ்மார குஷ்டக்ஷ்யார்ச ப்ரமேஹ
ஜ்வரோந்மாத குல்மாதிரோகா மஹாந் தஹ
பிசாசஸ்ச சர்வே பவத் பத்ரபூதிம்
விலோக்ய க்ஷணாத் தாரகாரே த்ரவந்தே"
பொருள்
"தாரகாசுரனை வதம் செய்தவனே! வலிப்பு, காசம், குஷ்டம், சுரம், மேகவெட்டை, குடல்புண், புற்றுநோய், பிசாசு மற்றும் மனப்பயம் எனும் நோய்களனைத்தும் பன்னீர் இலையில் வைத்துத் தரப்படும் உன் திருநீற்றைப் பார்த்த மாத்திரத்தில் பறந்தோடி மறைந்துவிடும்."
ஆதி சங்கரர், திருச்செந்தூரில் பாடிய சுப்ரமண்ய புஜங்கத்தில் இவ்வாறு குறிப்பிடுகிறார். பார்த்த மாத்திரத்திலேயே நோய்களைப் பறக்கடிக்கும் என்று அவர் குறிப்பிடும் 'பத்ர பூதி' என்பது என்ன?
விபூதியின் வரலாறு
'பத்ர' என்பது இலை. பூதி என்பது நீறு. செந்திலாண்டவன் திருக்கோயிலில் இறைவனது பிரசாதமாகிய திருநீறு, பன்னீர் இலையில் வைத்துத் தரப்படுகிறது. இதன் மணமே தனித்தன்மை உடையதாக இருக்கும்.
இலையினால் விபூதியின் மணம் இன்னும் அதிகரிக்கிறதோ என்று கூடத் தோன்றுகிறது. என்னவானாலும் சரி, இலை விபூதியில் செந்திலாண்டவனின் அருள் மணம் வீசுகிறது என்பதுதான் நிஜம்.
இலை விபூதியின் வரலாறு, என்னவென்று பார்ப்போம். செந்தூரில் சூரபத்மாதியர்களை ஒடுக்கிவிட்டு கடற்கரையில் கலங்கரை விளக்கம் போன்று ஒளி வீசி நின்றான் முருகப் பெருமான். அவனது பெருமையைத் துதித்த வேதங்களனைத்தும் ஒன்று சேர்ந்து செந்திலோனின் மகிமையை விளக்கும் பன்னீர் மரங்களாக இவ்விடத்தில் தோன்றின.
எனவே இவற்றின் இலைகளும் வேத மந்திர சக்தியை உடையவை என்கிறது புராணம். பன்னீர் இலையில் பத்திரப்படுத்தப்படும் விபூதியிலும் வேத மந்திர சக்திகள் நிறைந்து விடுகின்றன.தவிர, பன்னீர் இலையில் காணப்படும் 12 நரம்புகள் முருகனது பன்னிரு கரங்களை நினைவூட்டுவனவாக அமைந்துள்ளன.
தாடகை எனும் பெண்ணை ராமபிரான் மூலமாக வதம் செய்த காரணத்தினால் தனக்கு ஏற்பட்ட குன்மம் முதலான நோய்கள் தீர, ராமபிரான் தன் கனவில் கூறியபடி, செந்திலாண்டவன் இலை விபூதியைத் தரித்துக் கொண்டு நோய்கள் நீங்கப் பெற்றார் விசுவாமித்திர மகரிஷி.
ஆதி சங்கரரும் செந்திலாண்டவனின் நீறும்
ஆதி சங்கரரது வாழ்விலும் இலை விபூதி மகிமையை விளக்குவதான ஒரு சம்பவம் ஏற்பட்டது. அவருடன் ஏற்பட்ட வாதங்களில் தோற்ற அபிநவகுப்தர் என்பவர், ஆபிசார வேள்வி செய்து சங்கரருக்கு உடலை வருத்தும் நோய் உண்டாகச் செய்து விட்டார்.
அக்காலத்தில் அவர் வட கர்நாடகாவிலுள்ள கோகர்ணத் திருத்தலத்தில் தங்கி வழிபாடு செய்து வந்தார். ஒரு நாள் இரவு, இறைவன் அவர் கனவில் தோன்றி, "என் குமாரன் ஷண்முகன் குடியிருக்கும் புண்ணியத் தலமான செயந்திபுரம் எனும் திருச்செந்தூர் சென்று அவனைத் தரிசித்தால் உன் நோய் முற்றிலுமாக நீங்கப் பெறுவாய்" என்று கூறினார். உறங்கி எழுந்து பார்த்த சங்கரரின் அருகில் விபூதி இருந்தது.
கோகர்ணேஸ்வரர் ஆணைப்படி, செந்தூர் வந்தடைந்தார், ஆதிசங்கரர். கடலில் நீராடி, பின் இறைவன் சன்னதியில் மனமுருகி நின்றபோது, ஆதிசேஷனாகிய பாம்பு ஊர்ந்து ஊர்ந்து இறைவன் சன்னதியை அடைந்ததைக் கண்டார். அதே நேரம் அவருக்கும் இறை தரிசனம் கிட்டியது.
அவன் அருளாலே, மடை திறந்த வெள்ளம் போல அவர் திருவாயிலிருந்து சுலோகங்கள் வெளிவந்தன. வடமொழியில் பாம்பைப் புஜங்கம் என்பர். வடமொழி இலக்கணப்படி, புஜங்க விருத்தமாக அமைந்தன பாடல்கள். பாடி முடித்து இலை விபூதியைப் பெற்று அணிந்து கொண்ட சங்கரருக்கு வெகு விரைவில் நோய் குணமாயிற்று.
தெய்வ அவதாரமாகக் கருதப்படும் ஆதிசங்கரர் நினைத்திருந்தால், தானே நோயை விரட்டி இருக்க முடியும்.ஆனால் மானுட அவதாரத்தில், அத்துயரை, தானே அனுபவித்து உலகோருக்குப் பத்ர பூதியின் பெருமையை வெளிப்படுத்த அவர் நிகழ்த்திய திருவிளையாடலே இது என்று கூறலாம்.
விபூதியே கூலி
சுமார் 350 ஆண்டுகளுக்கு முன் திருவாவடுதுறை ஆதீனத்தைச் சேர்ந்த ஸ்ரீலஸ்ரீ தேசிகமூர்த்தி தம்பிரானவர்கள் செந்தூர் மேலக் கோபுரத்தை நிர்மாணித்தார். பொருள் பற்றாக் குறை ஏற்படவே, கூலியாட்களுக்குக் கூலிக்குப் பதிலாக இலை விபூதியைக் கொடுத்து, தூண்டுகை விநாயகர் கோயிலைத் தாண்டிச் சென்றபின் திறந்து பார்க்கும்படிக் கூறினாராம். அதன்படி திறந்து பார்த்தபோது, தத்தம் வேலைக்குரிய கூலி வைக்கப்பட்டிருப்பதைப் பார்த்து மெய் சிலிர்த்தனர் என்கிறது கோயில் வரலாறு.
திருச்செந்தூர் பிள்ளைத்தமிழ் பாடிய பகழிக் கூத்தர் வாழ்விலும் இலை விபூதி பெரும் அற்புதத்தை நிகழ்த்தியது. தீராத வயிற்று வலியால் துடித்த அவரது கனவில் கோயிலில் பூஜை செய்யும் உரிமையுடைய திரிசுதந்திரர் போல ஒருவர் தோன்றினார்.
"என் புகழைப் பிள்ளைத் தமிழால் பாடு, உன் நோய் குணமாகும்" என்று கூறி இலை விபூதியைக் கையில் கொடுத்திட்டு மறைந்தாராம். உரையாசிரியர் குகஸ்ரீ ரசபதி அவர்கள், திருச்செந்தூர் பிள்ளைத்தமிழ் உரையில் இதுபற்றி விரிவாகக் குறிப்பிட்டுள்ளார்.
கந்தர் கலி வெண்பா பாடிய குமரகுருபரரின் சரித்திரத்தை எழுதியருளிய வித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்கள், செந்தூர் ஆலயத்தில் அர்ச்சகர்கள் இலை விபூதிப் பிரசாதத்தை எடுத்து வழங்குவதைக் குமரகுருபரர், தான் கண்டபடி அழகாகப் பாடியுள்ளார்.
"இலையமில் குமரவேள் முன் வணங்குவார்க்கு என்றும் துன்பம்
இலை.அடுபகை சற்றேனும் இலை.படுபிணி நிரப்பும்
இலை,அளற்றுழன்று வீழ்தல் இலை,பல பவத்துச் சார்பும்
இலை என இலை விபூதி எடுத்தெடுத்துதவல் கண்டார்"
என்று பாடுகிறார்.
விபூதியின் மகிமையைப் பாடவந்த அருணகிரிநாதரும்,
"ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம்
ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம் என்றுபூதி
ஆகமணி மாதவர்கள் பாதமலர் சூடும் அடியார்கள்
பதமே துணையதென்று..."
என்று பாடுகிறார். நாமும் "ஆறுமுகம்" என்று ஆறு முறை ஓதி இலை விபூதியைத் தரித்து செந்திலாண்டவன் திருவருளுக்குப் பாத்திரமாவோமாக.

Natural Health Tips ::


Best Food For Eyes ::

You've probably heard that carrots and other orange-colored fruits and vegetables promote eye health and protect vision, and it's true: Beta-carotene, a type of vitamin A that gives these foods their orange hue, helps the retina and other parts of the eye to function smoothly.

But eating your way to good eyesight isn't only about beta-carotene. Though their connection to vision isn't as well-known, several other vitamins and minerals are essential for healthy eyes.


ஏங்குகிற மனதுக்குத் தெரியும்

இதைவிடக் கூடுதலாய்
ஒரு சொல்
இதைவிடக் கூடுதலாய்
கொஞ்சம் கவனம்
இதைவிடவும் கூடுதலாய் 
அணைப்பு என
ஏங்குகிற மனதுக்குத் தெரியும்
இதுவே போதும் எனவும்.
Courtesy : Painting -anup giri

முன்பெல்லாம் 
பலமுறை அவன்பெயரை 
எதிரொலித்த மலை 
இன்று மௌனமாக இருக்கிறது 

காற்றில் அசைகிற
இலைகளில் அறிகிறாள்
யாரோ பின்தொடர்வதை

திரும்பிப்பார்க்க எண்ணம்
வருவது அவனாக இருக்கலாம்
ஒருவேளை
அவனாக இல்லாவிட்டால்
தவித்துப் போகும் தன்னை
எப்படிச் சமன்செய்வது

முன் நகரவும் விரும்பாமல்
திரும்பவும் இயலாத
நிலையிலிருக்கும் அவளை
அவன் நினைவினால்
தொடர்வதை உணர்கிறாள்
உடலெங்கும்
தளிரிலை துளிர்த்து.



மழைக்காலத்தைப் போலவே
ஒவ்வொரு பருவமும்
அவளுக்குள்
இளம் இறகுகளை துளிர்த்து
அவளது முதிர் இறகுகளை 
உதிர்க்கவும் செய்கிறது

இம்முறை
காற்று உணர்த்திய ஈரத்தில்
நிலைகொள்ளா அந்தரங்கத்துடன்
பன்னீர் பூக்களின் வாசத்தை
அவளிடம் பூக்கச்செய்திருந்த
அவனுக்குப்
பறத்தலின் வெளியைப் பரிசளித்தாள்

மழை தொடங்கிவிட்டது.
Sakthi Jothi

Friday, November 6, 2015

Transport weapons of mass destruction Concept OOOOOh what man!


தொங்கும் தூண் கொண்ட கோட்டை :

வரலாற்றுப் பெருமையின் மௌன சாட்சியாக நிற்கிறது தர்மபுரி மாவட்டத்தில் அதியமான் கோட்டை. ஔவைக்கு நெல்லிக்கனி கொடுத்த கடையெழு வள்ளல்களுள் ஒருவரான அதியமான்தான் இந்தக் கோட்டையை நிர்மாணித்தவர். வரலாற்றுச் சிறப்பு மிக்க தர்மபுரி மாவட்டம் சங்க காலத்தில் தகடூர் நாடு என அழைக்கப்பட்டுள்ளது. தகடூரை ஆண்ட அதியமான் மாபெரும் போர்வீரர். அதியமானின் சிறப்பைப் பாடி புலவர்கள் பரிசில் பெற்றுச் செல்வது வழக்கம். இப்படி வந்த புலவர்களில் ஒருவர்தான் ஔவையார்.
தர்மபுரிதான் அதியமானின் தலைநகரமாக விளங்கியுள்ளது. மன்னர் அதியமானின் தலைமையிடமாக அதியமான் கோட்டை செயல்பட்டுள்ளது. தர்மபுரியிலிருந்து 7 கி.மீ. தூரத்தில் இந்தக் கோட்டை அமைந்துள்ளது. சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இந்தக் கோட்டை நிர்மாணிக்கப்பட்டிருக்கும் எனத் தொல்லியலாளர்களும் வரலாற்றறிஞர்களும் தெரிவிக்கிறார்கள். இப்போது சில பகுதிகள் பழுதடைந்த நிலையில் உள்ள இந்தக் கோட்டை நீள்வட்ட வடிவத்தில் உருவாக்கப் பட்டுள்ளது. மழையால் வெள்ளம் கரைபுரண்டு ஓடும்போது இந்தக் கோட்டையிலிருந்து பழைய நாணயங்கள் முதலானவை வெளியுலகிற்குத் தெரியவருகின்றனவாம். அதியமான் கோட்டைதான் தகடூர் நகரின் நுழைவாயிலாக இருந்திருக்க வேண்டும் என வரலாற்றாய்வாளர்கள் கூறுகின்றனர்.
அதியமான் கோட்டையின் நுழைவாயில் மிகப் பெரியதாக இருந்துள்ளது. கோட்டை மதிலில் எதிரிகள் ஏற முடியாதபடி மதிலின் வெளிப்புறச் சுவரில் கடுகு எண்ணெய்யைப் பூசியுள்ளார்கள். இந்தக் குறிப்புகள் எல்லாம் புறநானூற்றில் குறிப்பிடப்பட்டுள்ளன. இந்தக் கோட்டைப் பகுதியில் உள்ள முக்கியக் கோவில் சோமேஸ்வரர் கோயில். இந்தக் கோயில் வெளிப்புறக் கல்சுவரில் யானை உருவம் செதுக்கப்பட்டுள்ளது. இதுதான் அதியமானின் முத்திரை எனச் சொல்லப்படுகிறது. இந்தக் கோவில் தவிர, பைரவர், அங்காளம்மன், நரசிம்மர், காளியம்மன் ஆகிய கோவில்களும் அதியமான் கோட்டையில் அமைந்துள்ளன. இந்தக் கோட்டையில் படைவீரர்களின் சிற்பங்களும் காணப்படுகின்றன. கோட்டையின் மண்டபங்களில் மேற்புறச் சுவரில் ராமாயண, மகாபாரதக் காட்சிகள் ஓவியங்களாகத் தீட்டப்பட்டுள்ளன. கவனமின்றி சில ஓவியங்கள் மீது சுண்ணாம்பு பூசி அழிக்கப்பட்டுவிட்டன. இந்த ஓவியங்களில் சிவப்பு, கறுப்பு, வெள்ளை ஆகிய வண்ணங்கள் தாம் ஆதிக்கம் செலுத்துகின்றன. இந்த ஓவியங்கள் 16-ம் நூற்றாண்டைச் சேர்ந்தவை என வரலாற்றறிஞர்கள் சொல்கிறார்கள்.
அதியமான் கோட்டையிலுள்ள மகா மண்டபத்தின் தொங்கும் கல்தூண்கள் கட்டடக் கலையின் அதிசயத்தை வெளிப்படுத்தி நிற்கின்றன. ஒவ்வொரு தூணும் இரண்டு டன்கள் எடை கொண்டவை. இவை தரையைத் தொட்டு நிற்கவில்லை. இந்தக் கோட்டை பழங்காலச் சின்னமாக இருப்பதால் அதியமான் கோட்டம் என்னும் பெயரில் இந்தக் கோட்டையைத் தமிழக அரசு பாதுகாக்கிறது. இந்தக் கோட்டத்தில் அதியமான், ஔவையார் ஆகியோரின் சிலைகள் நிறுவப்பட்டுள்ளன.
-நன்றி தி இந்து

இந்த "மெஸேஜ்" இதுவரை ஏன் பரவவில்லை அல்லது பரப்பப்படவில்லை?

நாற்பதாண்டுகளுக்கும் மேலாக இயற்கை வேளாண் விஞ்ஞானி பேரறிஞர் நம்மாழ்வார் இயற்கைக்கு எதிரான , ரசாயன உரங்கள் பூச்சிகொல்லிகள் பயன்பாடு குறித்தும் பன்னாட்டு நிறுவனங்களின் நயவஞ்சக சதிகளையும் அதற்க்கு துணைபோகும் அரசையும் குறித்து தன் வாழ்நாள் முழுவதும் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினார் யாரும் பெரிதாக கண்டுகொள்ளவில்லை. பல்வேறு நோய்களுக்கு ஆளாகி சம்பாத்யத்தின் பெரும்பகுதி மருத்துவருக்கும் மருந்திற்க்கும் செலவாகும் சூழலுக்கு மக்கள் தள்ளப்பட்டுவிட்டனர். நம்மாழ்வார் ஏற்படுத்திய விழிப்புணர்வின் தாக்கம்தான் இதுபோன்ற திரைப்படங்களாக வருகின்றது சினிமாக்காரன் சொன்னால்தான் வாயைப்பிளந்துகொண்டு கேட்டு உணர்ச்சிவசப்பட்டு விழிக்கும் கேடுகெட்ட சமூகமாக இன்னமும் உள்ளது தமிழ் சமூகம் .