Search This Blog

Tuesday, August 4, 2015

அறிவைப் பெருக்கும் தோப்புக்கரணம்:


ஒரு காலத்தில் தோப்புக்கரணம் போடுவது என்பது பள்ளிகளில் மிகச் சாதாரணமான விஷயம். தவறு செய்தாலோ, வீட்டுப்பாடம் எழுதி வரா விட்டாலோ ஆசிரியர்கள் மாணவர்களைத் தோப்புக்கரணம் போட வைப்பது வாடிக்கை. பரிட்சை சமயத்தில் பக்தி அதிகரித்து மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற தாங்களாகவே பிள்ளையார் முன் தோப்புக்கரணம் போடுவதுமுண்டு. ஆனால் இக்காலத்தில் தோப்புக்கரணம் போடுவதை அதிகமாக நாம் காண முடிவதில்லை.
ஆனால் இந்த தோப்புக்கரணம் அமெரிக்காவில் ஆராய்ச்சிக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது என்று சொன்னால் ஆச்சரியமாக இருக்கிறதல்லவா? லாஸ் ஏஞ்சல்ஸைச் சேர்ந்த மருத்துவர் எரிக் ராபின்ஸ் (Dr.Eric Robins) இந்த எளிய உடற்பயிற்சியால் மூளையின் செல்களும் நியூரான்களும் சக்தி பெறுகின்றன என்கிறார். அவர் தன்னிடம் வரும் நோயாளிகளுக்கு அந்த உடற்பயிற்சியை சிபாரிசு செய்வதாகக் கூறுகிறார். பரிட்சைகளில் மிகக் குறைந்த மதிப்பெண்கள் எடுக்கும் ஒரு பள்ளி மாணவன் தோப்புக்கரண உடற்பயிற்சியைச் சில நாட்கள் தொடர்ந்து செய்த பின் மிக நல்ல மதிப்பெண்கள் வாங்க ஆரம்பித்ததாகக் கூறுகிறார்.
யேல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த நரம்பியல் நிபுணரான டாக்டர் யூஜினியஸ் அங் (Dr. Eugenius Ang) என்பவர் காதுகளைப் பிடித்துக் கொள்வது மிக முக்கிய அக்குபஞ்சர் புள்ளிகளைத் தூண்டி விடுகின்றன என்று சொல்கிறார். அதனால் மூளையின் நரம்பு மண்டல வழிகளிலும் சக்தி வாய்ந்த மாற்றங்கள் ஏற்படுவதாக அவர் தெரிவிக்கிறார். இடது கையால் வலது காதையும், வலது கையால் இடது காதையும் பிடித்துக் கொண்டு உட்கார்ந்து எழுகையில் மூளையின் இரு பகுதிகளும் பலனடைகின்றன என்று சொல்கிறார்.
தோப்புக்கரணம் போடுவதால் ஏற்படும் மாற்றங்களை EEG கருவியால் டாக்டர் யூஜினியஸ் அங் அளந்து காண்பித்தார். மூளையில் நியூரான்கள் செயல்பாடுகள் அதிகரிப்பதை பரிசோதனையில் காண்பித்த அவர் மூளையின் வலது, இடது பாகங்கள் சமமான சக்திகளை அடைவதாகவும் சொன்னார். மிக நுண்ணிய தகவல் அனுப்பும் காரணிகள் வலுப்பெறுவதும் பரிசோதனையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. டாக்டர் யூஜினியஸ் அங் தானும் தினமும் தோப்புக்கரணம் போடுவதாகக் குறிப்பிடுகிறார்.
Autism, Alzheimer போன்ற இக்காலத்தில் அதிகரித்து வரும் நோய்களுக்குக் கூட இந்த தோப்புக்கரண உடற்பயிற்சியை ஆராய்ச்சியாளர்கள் பரிந்துரைக்கிறார்கள். தோப்புக்கரணம் தினமும் செய்வதன் மூலம் மேற்கண்ட நோய்களால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் மிக நல்ல பலன்களைப் பெறுவதாக அவர்களது பரிசோதனைகள் சொல்கின்றன.
ப்ராணிக் சிகிச்சை நிபுணர் கோ சோக் சூயி (Master Koa Chok Sui) தன்னுடைய Super Brain Yoga என்ற புத்தகத்தில் தோப்புக்கரணத்தைப் பற்றியும் அதன் பலன்கள் பற்றியும் குறிப்பிட்டுள்ளார். தன்னுடைய சொற்பொழிவுகளிலும் இதை அதிகம் குறிப்பிடுகிறார்.
இதனால் தான் தோப்புக்கரணம் பள்ளிகளில் நம் முன்னோர்களால் நடைமுறைப்படுத்தப்பட்டு இருக்கலாம் என்று தோன்றுகிறது. படிக்காத மாணவர்கள் தோப்புக்கரண முறையால் தண்டிக்கப்படுவதன் மூலம் அவர்களது அறிவுத் திறன் அதிகரிக்க வழியும் காண்பிக்கப்பட்டிருக்கிறது என்று தோன்றுகிறது.
இந்த தோப்புக்கரணப்பயிற்சியை தினந்தோறும் மூன்று நிமிடங்கள் செய்தால் போதும் வியக்கத் தக்க அறிவு சார்ந்த மாற்றங்களைக் காணலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள். அவர்கள் பரிந்துரைக்கும் தோப்புக்கரண பயிற்சியை அவர்கள் சொல்கின்ற முறையிலேயே காண்போமா?
உங்கள் கால்களை உங்கள் தோள்களின் அகலத்திற்கு அகட்டி வைத்து நின்று கொள்ளுங்கள். உங்கள் பாதங்கள் நேராக இருக்கட்டும். வலது காதை இடது கையின் பெருவிரலாலும் ஆட்காட்டி விரலாலும் பிடித்துக் கொள்ளுங்கள். அதே போல் இடது காதை வலது கையின் பெருவிரலாலும் ஆட்காட்டி விரலாலும் பிடித்துக் கொள்ளுங்கள். பிடித்துக் கொள்ளும் போது இடது கை உட்புறமாகவும், வலது கை வெளிப்புறமாகவும் இருக்க வேண்டும் என்பது முக்கியம்.
மூச்சை நன்றாக வெளியே விட்டபடி அப்படியே உட்கார்ந்து மூச்சை உள்ளே நன்றாக இழுத்தபடி எழுந்து நில்லுங்கள். மூச்சும், உட்கார்ந்து எழுவதும் ஒரு தாளலயத்துடன் இருக்கட்டும்.
செய்து பழக்கமில்லாதவர்களுக்கு ஆரம்பத்திலேயே மூன்று நிமிடங்கள் தொடர்ந்து தோப்புக்கரணம் செய்வது கடினமாக இருக்கலாம். அப்படிப்பட்டவர்கள் ஒரு நிமிடம் செய்வதில் இருந்து ஆரம்பித்து நாட்கள் செல்லச் செல்ல இரண்டு நிமிடங்கள், பிறகு மூன்று நிமிடங்கள் என்று அதிகரியுங்கள்.
ஆராய்ச்சியாளர்கள் சொல்லும் மிக நல்ல பலன்களைப் பார்க்கும் போது உங்கள் அறிவுத் திறனின் வளர்ச்சிக்காக மூன்று நிமிடங்கள் தினமும் செலவழிப்பது மிகப்பெரிய விஷயமல்ல அல்லவா?

Rising Above Illusion

The philosophy of Nonduality says that there is just One Spirit in the Universe and that everything, living or inanimate, is an inseparable and indivisible part of this One Spirit.

Nonduality further says that it is only illusion, caused by the mind and the play of the senses, which makes us regard the world and everything in it, as real and separate from us.

For someone not familiar with this philosophy, it might sound strange and even weird, but once understood, it can completely change one's attitude and perspective about life.

Imagine a state, in which you feel oneness with the Universe, enjoying bliss and peace of mind and at the same time acting and functioning normally in your day-to-day life.

A state of being active in the world but at the same time maintaining a state of inner detachment. Being aware of your oneness with the One Spirit and also aware that the One Spirit is acting and manifesting through everything, matter, plants, trees, animals and people.

This is the experience of nonduality in its highest form.

Our thoughts and five senses draw the mind outside, to the external world and obscure the awareness of the consciousness that is beyond the mind.

Through meditation, we gain inner peace and the ability to silence the mind and lift up the obscuring veil of thoughts.

In this state of inner silence we rise above the illusion of identification with the mind, thoughts and ego, get beyond the illusion of separateness and realize the oneness with the One Spirit.

It is as if a new sort of consciousness dawns and we see the world in a different way.

With this kind of consciousness we are able to allow the mind to be active or silent at our command. It becomes our faithful servant, instead of being our master.

We act in the material world, yet our roots are in pure, calm and limitless consciousness, which is not attached to anything and not limited by anything. In this state, we live and view the world from the nonduality point of view.

Though in our day-today life we regard other people, as separate from us, as separate units, this is only a mental viewpoint, convenient for functioning in our day to day life.

From a higher state of consciousness, all are One, and the terms "I", "you", "he", "she" and "they" are not real. There is only the One Spirit, Consciousness, which manifests in limitless forms and ways.

The external forms may be different but the Spirit within them is one undivided Spirit. It is the mind, which lets us believe and feel that we are separate from others but we are all part of the same One Spirit manifesting and expressing itself through different forms.

The concept of nonduality is not a strange or weird idea. 

It can be experienced and lived right here and now, no matter where you are and without attracting anybody's attention. It is an inner state of consciousness, not an external state.


It is possible to realize and experience the meaning of nonduality in an ashram or a cave and it is also equally possible to do so while living in a town or city, with family and a job.

This requires dedication, an open mind, inner work and turning the mind inwards.

Most people cannot afford to leave everything behind, in order to meditate and lead a purely spiritual life. They need to work and support their family and can therefore devote only part of the day to spiritual pursuits.

The good news is that you can walk on the inner path of spirituality and nonduality, meditation and self realization, without abandoning your family, job or external life style. With proper planning, it is possible to find the time and the energy for the inner work.

Meditation and walking on the spiritual path, which can lead to understanding and experiencing nonduality, can be practiced anywhere, without making external changes in your life. You can stay with your job and family, and still make spiritual progress and realize the true meaning nonduality.

Look within you, be aware of what is going in your mind, search for the source of your thoughts and where they come from, learn to make your mind peaceful and you will start to be aware of your true essence and the consciousness beyond your mind. This will lead to understanding what nonduality is.

What can help? 

A peaceful mind, concentration, meditation, reading of spiritual literature and when possible, the proximity and guidance of true spiritual teachers.





Remez Sasson 

முதலமைச்சரின் அந்தரங்கம் வெளியாகியது அதிர்ச்சியில் கூட்டமைப்பு!!!


கூட்டமைப்பின் தலைவர்கள் வெளிநாடுகளில் குடும்பங்களை வைத்துக் கொண்டு அரசியல் வியாபாரம் செய்கின்றனர் – விக்கினேஸ்வரன்
வட மாகாணசபை முதலமைச்சர் விக்கினேஸ்வரனுக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முக்கிய தலைவர்களுக்குமிடையே கடுமையான முரண்பாடுகள் விரிந்து வருவது இரகசியமானதல்ல. இணைய ஊடகம் ஒன்றிக்கு வழங்கிய ஒளிப்பதிவு செய்யப்பட்ட நேர்காணலில் முதலமைச்சர் விக்கினேஸ்வரன் தமிழ் தேசியக் கூட்டமைபபின் தலைவர்கள் மீது மிகக் கடுமையான வார்த்தைகளைத் தொடுத்துள்ளார்.
“நான் யாரையும் தனிப்பட்ட முறையில் தாக்கவில்லை” என்று ஆரம்பித்த முதலமைச்சர் “தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பல தலைவர்களுடைய குடும்பம் இந்தியாவில் இருக்கின்றன. அப்ப, இவர்கள் வந்து ஒரு பிசினஸ்ஸை நடத்துகிற மாதிரிதான் நடத்திக்கொண்டு.. அந்தந்த நேரத்திற்கு வந்து வாக்குகளை எடுப்பதும் போவதும்” என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பில் வெளிநாடுகளில் குடும்பங்களை வைத்துள்ள வதிவிடங்களைக் கொண்டுள்ள தலைவர்களான இரா சம்பந்தன் (த.தே.கூ தலைவர், இந்தியா), மாவை சேனாதிராஜா (தமிழரசுக் கட்சித் தலைவர், இந்தியா), செல்வம் அடைக்கலநாதன் (தமிழீழ விடுதலை இக்கத்தின் தலைவர், இந்தியா), என் சிறிகாந்தா (தமிழீழ விடுதலை இயக்கத்தின் யாழ் மாவட்ட வேட்பாளர், அவுஸ்திரேலியா), வினோதாரலிங்கம் (தமிழீழ விடுதலை இயக்கத்தின் முலைத்தீவு மாவட்ட வேட்பாளர், பிரித்தானியா), சுரேஸ் பிரேமச்சந்திரன் (ஈபிஆர்எல்எப் சுரேஸ் அணியின் தலைவர், கனடா) ஆகியோர் முதலமைச்சரின் சொல்லம்புகளுக்கு இலக்காகி உள்ளனர்.
இது பற்றி மேலும் தெரிவித்த முதலமைச்சர் “இது சரிவராது” என்றும் திட்டவட்டமாக மேலுள்ள தலைவர்களுக்கு சுட்டிக்காட்டியும் உள்ளார்.
முதலமைச்சர் விக்கினேஸ்வரன் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு ஆதரவாக பிரச்சாரங்களில் ஈடுபட மாட்டேன் என்று தெரிவித்து இருப்பது தொடர்பாக தேர்தல் நிறைவடைந்த பின்னர் அவருடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்து அதேசமயம் முதலமைச்சரின் இந்தக் குற்றச்சாட்டும் வெளிவந்து உள்ளது.
முதலமைச்சரின் பதிவின் முழுமையை கீழே காணலாம்.
இன்றுள்ள தலைமைத்துவம் சரியானதா என்பதற்கு நான் பதில் சொன்னேன் என்றால், எனக்கு அடியும் நல்லா விழும.; ஆனால், நான் பதில் சொல்லுறன். பதில் சொல்லுறன். பதில் சொல்ல வேண்டிய கட்டம் வந்திட்டுது.
இப்ப ஏழெட்டு மாதத்திற்கு முதல் ஈபிஆர்எல்எவ் இனுடைய ஆண்டு விழாவொன்று நடந்தது. அங்கு நான் பேசுறதுக்கெண்டு போகவில்லை ஆனால், பேச விட்டுவிட்டார்கள். அந்த நேரத்தில் நான் என் மனசிற்கு வந்த சில விசயங்களை பேசியிருக்கிறன். அது ஒரு முக்கியமான பேச்சு என்னைப் பொறுத்தளவில். தமிழ் தலைமைத்துவம் அறுபது எழுபது வயதிற்கு மேற்பட்ட ஆட்களைத்தான் கொண்டிருக்கிறது. இரண்டாம் கட்ட தலைமைத்துவத்தை நாங்கள் இன்னும் ஏற்படுத்தவில்லை.
இன்னொரு விடயத்தையும் நான் சுட்டிக்காட்ட வேண்டும். எங்களுக்குள்ள வளங்கள் குறைவு. தலைமைத்துவத்திற்கு வயது போயிட்டுது. இந்த நிலையில், தலைமைத்துவத்திற்கு ஏதாவது ஒன்று நடந்தால் நாங்கள் பெரும் பிரச்சினையிலும் சீரழிவிலும் முடிய வேண்டிவரும். ஆகவே, நாங்கள் இரண்டாம் கட்ட தலைவர்களை உருவாக்குவதற்கு எல்லா நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என்று சொன்னேன். மாவையிட்டையும் இதைப்பற்றி சொன்னேன்.
“ஓமோம் செய்யத்தான் வேணும்;, எங்கள் இளைஞர் அணி எல்லாத்துக்கும் அப்பிடி செய்யோணும் இப்படிச் செய்யோணும்” எண்டு சொல்லுறதுதான், ஆனால் எதுவுமே நடக்கிறதில்லை. இப்ப இன்னுமொரு உதாரணம் தாறன். பாராளுமன்றத்தில் போய் இஞ்சை நடக்கிற பல விசயங்களை எந்தளவுக்கு சொல்லி நடவடிக்கை எடுக்கிறம் என்பதும் பிரச்சினையாக இருக்கிறது. இப்ப இந்த மகாவலி சம்பந்தமாக எந்தளவுக்கு தெளிவுபடுத்தி பாராளுமன்றத்தில் சொல்லியிருக்கிறம்?
நீங்கள் இப்பிடியெல்லாம் செய்யிறியல் இது பிழை என்று எங்கையும் சொன்ன மாதிரி எனக்கு தெரியவில்லை. அப்படி சொல்லியிருந்தாலும் அது பற்றி எங்களுக்கு சரியாக தெரியாது. பல விடயங்களிலும் எங்களுக்குள்ள பிரச்சினைகளை வெளிக்கொண்டு வந்து, அதை பாராளுமன்றத்தில் தெரிவித்து, அது தொடர்பாக நடவடிக்கை எடுக்காவிட்டால் வெளிநாடுகளுக்கு தெரியப்படுத்தி, அதை பிரபலப்படுத்தி, மக்களிடையே அது சம்பந்தமாக ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்துவது முக்கியம். அதற்கு ஏற்ற அளவுக்கு எங்களது தலைமைத்துவம் இருக்கின்றதா? இனிவரும் ஒரு தலைமைத்துவம் அப்பேர்ப்பட்ட தலைமைத்துவமாக இருக்குமா? இதுவெல்லாம் பெரிய கேள்விகள்.
அதை தவிர்ப்பதற்கு என்ன செய்ய வேண்டும் என்று நீங்களே சொல்லுங்கள். நான் ஒரு தீவிரவாத கருத்தை இப்ப கொண்டிருக்கின்றேன் என்று மக்கள் சொல்கிறார்களாம். அதுக்கு நான் பதில் சொன்னேன். எவ்விதமான தீவிரவாத கருத்துக்களையும் நான் கூறவில்லை. நான் கொழும்பில் பிறந்து வளர்ந்தவன். ஆனால், இங்கு வந்து ஒன்றரை வருடமாக மக்களோடு மக்களாக இருந்து, நாளாந்தம் மக்களின் பிரச்சினைகளை நான் கேள்விப்பட்டுக் கொண்டு வாறன். அவர்களின் ஊர்களுக்குப் போறன். பார்க்கிறன், கேட்கிறன். அப்ப… இதுகள் எல்லம்தான் என்னை மாத்தியிருக்கு. அட இப்பிடிப்பட்ட ஆட்களுக்குப் போய் பதின்மூன்றாம் திருத்தச் சட்டம்.. இதுகளை எடுத்து வைத்துக்கொண்டு கதைச்சிக்கொண்டு….? நாங்கள் அவர்களுக்கு முழுமையான தீர்வு ஒன்றை எடுத்துக் கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் எங்களுக்குள் தன்பாட்டில் வருகிறது.
அதான் உங்களுக்கு நான் சொன்னன் எந்தத் தலைவராக இருந்தாலும், தமிழ் மக்களின் தலைவர்களாக இருந்தால், அவர்கள் வந்து இங்கு இருக்க வேணும். மக்களோடு மக்களாக இங்கு வாழ வேணும். வாழ்ந்தால்தான் மக்களுக்கு தலைமைத்துவம் கொடுக்கலாம், நடத்திக்கொண்டு போகலாம். இதைவிட்டு. அந்தந்த நேரத்திற்கு மாத்திரம் வந்து மக்களிடம் வாக்குகளை கேட்கிறது…?
நான் யாரையும் தனிப்பட்ட முறையில் தாக்கவில்லை. பலருடைய குடும்பம் இந்தியாவில் இருக்கின்றன. இது ஒரு பிசினஸ் மாதிரி வந்திட்டுது.. எனக்கு குடும்பமே இல்லாததால் அது வேறு.. ஆனால், பலருடைய குடும்பங்கள் இந்தியாவில் தான். மனைவிகள் பிள்ளைகள் எல்லாரும் அங்கே.. அப்ப, இவர்கள் வந்து ஒரு பிசினஸ்ஸை நடத்துகிற மாதிரிதான் நடத்திக்கொண்டு.. அந்தந்த நேரத்திற்கு வந்து வாக்குகளை எடுப்பதும் போவதும்.
இது சரிவராது. மக்களோடு இருந்து அவர்களது பிரச்சினைகளை தீர்க்கக் கூடிய விதத்தில் நாங்கள் சிந்திக்க வேணும். அதற்குரிய நடவடிக்கைளை எடுக்க வேண்டியது பற்றி நாங்கள் சிந்திக்க வேணும். அதற்கு நாங்கள் தியாகப்படுத்த வேணும்.. எங்களை நாங்கள் அர்ப்பணிக்க வேணும். அந்தவிற்கு தலைவர்கள் இருந்தால்தான் எங்களுக்கு.. தமிழ் மக்களுக்கு விமோசனம் கிடைக்கும். இல்லையென்று சொன்னால் நாங்கள் ஒரு காலமும் விமோசனத்தை எதிர்பார்க்க முடியாது.
அடுத்த பொதுத் தேர்தலில் நான் எவருக்குமே சார்பாக பேசப் போவதில்லை என்ற கருத்தில்தான் இப்போது இருக்கின்றேன். அதனை மாற்றிக்கொள்வேனோ என்பது எனக்குத் தெரியாது. ஏனென்றால் அபபடியானதொரு நிலைமை.
மகாவலி தண்ணீரை வட மாகாணத்திற்கு கொண்டுவர வேண்டும் என்று அரசாங்கம் ஒற்றைக் காலில் நிற்கிறது. இதுவரை ஒரு சொட்டுக் கூட வடமாகாணத்திற்கு வரவில்லை. ஆனால், மகாவலி அதிகார சபைக்கு கீழ் மகாவலி எல் வலையம்; ஒன்றை வட மாகாணத்திற்குள்ளேயே நிர்ணயப்படுத்தி, இந்த இடத்திற்குத்தான் தண்ணீர் வரபோவதாக மகாவலி திட்டத்தில் இருந்தது என்று கூறி, அந்த இடத்தில் நாங்கள் மக்களை கொண்டுவந்து குடியேற்றுகிறோம் என்று கூறி, அந்த இடங்களில் சிங்கள மக்களை கொண்டுவந்து குடியேற்றியிருக்கிறார்கள். கனகாலத்துக்கு முதல், அந்த தண்ணீர் இங்கு வரப்போகின்றது என்று கூறித்தான் இது நடந்தது.
தண்ணீரை கொண்டு வாறம், தண்ணீரைக் கொண்டு வாறம் என்று கூறி வேறு விசயங்களையும் இந்த அரசாங்கம் கொண்டுவரப் பார்க்குது. அதனை இப்படியே கொண்டுவந்து இரணைமடுவோடு சேர்க்க வேணும் என்று பேச்சு நடக்குது. இரணைமடு வரைக்கும் மகாவலி சபை இருந்து கொண்டு, அதுவரைக்கும் சிங்கள மக்களை கொண்டுவந்து அதுக்குள்ளே போடுது. நாளைக்கு இது என்ன மாதிரி பாதிக்கப் போகின்றது என்று பாருங்கள்.
இதற்காகத்தான நான் சென்ற கிழமை ஆயர் அவர்களிடம் ஒரு வேண்டுகோள் விடுத்தேன். எல்லா விதமான மாறுபட்ட கருத்துக்களையும் கொண்டுள்ள மக்களின் தலைமைத்துவங்களையும் ஒன்று சேர்த்து. பொதுவான ஒரு கருத்தை நிலைநாட்டக் கூடியதாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சொன்னேன். அதற்கு அவர் பதில் தருவதாக கூறியிருந்தார் ஆனால், இதுவரை வரவில்லை. அப்படி செய்ய வேண்டிய அவசியம் ஒன்று எங்களுக்கு இருக்கின்றது. எந்த இடத்திலும் தமிழ் மக்கள் பிரியக்கூடாது.
நன்றி
த. ஜெயபாலன்