Search This Blog

Friday, October 17, 2014

Top Fifty Must-See American Films of the Seventie

Chronologically ordered by year:

Five Easy Pieces (1970)
Patton (1970)
The Last Picture Show (1971)
The French Connection (1971)
A Clockwork Orange (1971) (UK co-production)
Dirty Harry (1971)
Duel (1971)
Harold and Maude (1971)
Straw Dogs (1971)
Cabaret (1972)
Deliverance (1972)
The Getaway (1972)
The Godfather I & II (1972 & 1974)
Papillon (1973)
American Graffiti (1973)
Badlands (1973)
The Long Goodbye (1973)
The Last Detail (1973)
Mean Streets (1973)
Serpico (1973)
The Exorcist (1973)
The Sting (1973)
Chinatown (1974)
The Conversation (1974)
A Woman Under The Influence (1974)
Young Frankenstein (1974)
Blazing Saddles (1974)
One Flew Over the Cuckoo's Nest (1975)
Dog Day Afternoon (1975)
Jaws (1975)
Barry Lyndon (1975) (UK co-production)
Nashville (1975)
All the President's Men (1976)
Carrie (1976)
Marathon Man (1976)
Network (1976)
Rocky (1976)
Taxi Driver (1976)
Annie Hall (1977)
Close Encounters of the Third Kind (1977)
Sorcerer (1977)
Star Wars (1977)
Days of Heaven (1978)
The Deer Hunter (1978)
Halloween (1978)
Apocalypse Now (1979)
Being There (1979)
Kramer vs Kramer (1979)
Manhattan (1979)
Alien (1979)

Unakagavey Piranthaen - உனக்காகவே பிறந்தேன் - Tamil Short film

சில வாஸ்து தகவல்கள் .....

1.கோபுர நிழல் விழும் இடத்தில்,கோவிலின் நிழல் விழும் இடத்தில் வீடு கட்ட கூடாது ....
2.பெருமாள் கோவில் பின்புறமும் .....
சிவன் கோவில் ,பிள்ளையார் கோவில் முன் புறம் வீடு கட்ட கூடாது ..
3.மின்சாரம் தொடக்கம் ,கழிவு நீர் அக்னி முலையில் (தென் கிழக்கு --southeast ) இருப்பது நன்மை ..
4.வீட்டு வாசலில் ராகு கேது பாம்புகளுக்கு அடையலாம் செய்ய
தீய சக்திகள் உள்ளே வராது---(நிலையின் கீழ் பாகத்தில் மஞ்சள் கும்குமம் வைத்து தீபம்,தூபம் செய்வது )
5.வீட்டில் சூரிய வெளிச்சம் விழும்படி ஜன்னல் வைக்க வேண்டும் .
இன்று எல்லா இடத்திலும் முடியவில்லை ..
கூர் மையான இலைகளை உடைய செடிகளை வளர்பதால் இந்த பலனை அடைய முடியும் (கூர்மை யான இலைகள் சூர்ய கதிர்களை இழுக்கும் சக்தி படைத்தவை)
6.அதிக வெளிச்சம் உள்ள வீடுகளில் (சூரிய வெளிச்சம் ) சந்திர கதிர்களை
சமமாக வரவழைக்க வட்ட இலைகளை உடைய செடிகளை வளர்பதால் இந்த பலனை அடைய முடியும்
7.வீட்டில் எதாவுது ஒரு இடத்தில் நீர் குமிழி (fountain )வைப்பதால்
பண புழக்கம் அதிகரிக்கும்
8.வீட்டில் வண்ண மீன்கள் வளர்ப்பது குறிப்பாக கருப்பு நிறத்துடன் 1 மீனும் பல வர்ணமுடன் மற்ற மீன்கள் இருப்பது மிகுந்த நல்ல பலனை தரும் .
9.நம்முடைய வீட்டில் பறவைகள் கண்டிப்பாக வளார்க்க கூடாது
இது குழந்தைகளின் ஆரோக்கியத்தை கெடுக்கும் ..
10.சமையல் அறைகளை சுத்தமாக வைத்த பெண்கள் குடும்பத்திற்கு
ஆரோக்கியம் தருகிறார்கள்
படுக்கை அறைகளை சுத்தமாக வைத்த ஆண்கள் பெண்களை ஆரோக்யமாக வைத்து உள்ளார்கள் ..
வாடகை வீட்டில் உள்ளவர்கள்
1.அரசு வேலை உள்ளவர்கள் வடக்கு பார்த்த வாசல் உள்ள வீட்டில்
குடி இருந்தால் நல்ல வளர்ச்சி உண்டாகும்
2.வியாபாரம் ,தொழில் ,செய்பவர்கள் தெற்கு பார்த்த வாசல் உள்ள வீட்டில்
குடி இருந்தால் நல்ல வளர்ச்சி உண்டாகும் ..
3.ஆசிரியர்கள் ,மருத்துவர்கள் ,சட்டம் பேசுபவர்கள் ,அறிவியல் துறை சேர்ந்தவர் மேற்கு பார்த்த வாசல் உள்ள வீட்டில்
குடி இருந்தால் நல்ல வளர்ச்சி உண்டாகும் ..
4.மற்றவர்களுக்கு கிழக்கு பார்த்த வீடு சிறந்தது
இவைகள் பொதுவான கருத்துக்கள் ..........

Magnificent interior of amazing rock hewn Ajintha caves How they did it some 2000 years ago?


Additive manufacturing technology can print using plastic, paste or concrete:

Using different modules, the "3D Modular" can print using several materials like plastic, paste or concrete.
It all started with the needs of an architecture student and the interest of an engineer who, seeing the high cost of manufacturing molds, decided to develop a 3D modular printer which uses polymers (plastic) to generate models for low-cost functional prostheses.

To develop this project, stakeholders from different disciplines and educational institutions created their own company, Maker Mex, which was incubated at the Tecnológico de Monterrey (ITESM), in the Technological Park of León, Guanajuato in the center of México.

This modular equipment has implemented several options for printing, with interchangeable modules. If the project requires printing with multiple materials, only a module is changed; the technology eliminates the need for multiple printers.

SOURCE: Phys Org
Posted by: Er_Sanch

உடலில் குரோமியம் உப்பு குறைந்தால்....!

 உடம்பில் மூளையை தலைமை செயலகம் என்று கூறுவார்கள். ஆனால் உண்மையில் இதயமே நமது உடம்பின் தலைமை செயலகம் என்கிறார்கள் மருத்துவ அறிஞர்கள். இன்றைக்கு நாம் சாப்பிடும் துரித உணவின் தாக்கத்தால் இதயம் தீவிரமாக பாதிக்கப்படுகிறது.
இதயத்தை பாதுகாக்க, தினமும் பாதாம் பருப்பு, இஞ்சி, முந்திரிப் பருப்பு, வெந்தயம், பருப்பு வகைகள் ஆகியவற்றை தவறாமல் சாப்பிட வேண்டும். இதில் இஞ்சியும், பாதாம் பருப்பும் மிக முக்கியமானவை. நம் உடலில் குரோமியம் என்ற தாது உப்பின் அளவு குறைந்தால், இரத்தத்தில் சர்க்கரையின் அளவை நிர்ணயிக்கும் பணி தாறுமாறாகி விடுகிறது. இதனால் சர்க்கரை எரிக்கப்படுவது குறைந்து நீரிழிவு நோய் ஏற்படுகிறது.
இதயத் தசைகளுக்கு ஆக்ஸிஜனும், சத்துணவும் எடுத்துச் செல்ல உதவும் கரனரி நாளங்களிலும் தடைகளை ஏற்படுத்தி இதயநோய்களை உண்டாக்குகிறது. இரத்தத்தில் கொலஸ்டிரால் அளவு அதிகரித்தால் குரோமியம் உப்பு குறைந்துவிட்டது என்பதே அர்த்தம்.
1999-ல் பிரிட்டீஷ் ஆராய்ச்சியாளர்கள், ஒரு வயது முதல் 75 வயது வரை உள்ள 41 ஆயிரம் பேர்களின் இரத்தம், முடி, வியர்வை முதலியவற்றில் குரோமியம் அளவு எப்படி இருக்கிறது என்று ஆராய்ச்சி செய்தார்கள்.
வயது ஆக, ஆக குரோமியம் உப்பின் அளவு பாதியாகக் குறைந்துகொண்டே வந்தது. இதற்கு நன்கு சுத்திகரிக்கப்பட்ட (ரீபைன்ட்) உணவுப் பொருட்களையே அதிகம் சாப்பிடுவதே முக்கிய காரணம். நன்கு சுத்திகரிக்கப்பட்ட மாவுப்பொருள்களில் குரோமியம் உப்பு மிகவும் குறைவாகவே உள்ளது.
இதைத் தவிர்க்க விரும்பினால், கேழ்வரகு அல்லது பார்லி அரிசியை காலையில் சாப்பிடுங்கள். பகலில் காரட், முருங்கைக்கீரை, கொண்டைக்கடலை, பீட்ரூட், வெங்காயம் ஆகியவற்றையும் சேர்த்துக் கொள்வது நல்லது.
சீத்தாப்பழம், மாதுளம்பழம், பழுத்தத் தக்காளி, அன்னாசிப்பழம் முதலியவைகளில் இந்த உப்பு போதுமான அளவு உள்ளது. இஞ்சியும், பாதாம் பருப்பும், தினமும் தவறாமல் சேர்க்க வேண்டும். இதயக்கோளாறு மற்றும் நீரிழிவு நோயாளிகள் இந்தப் பட்டியல்படி சாப்பிட்டு வந்தால், குரோமியம் அளவு சரியாக இருக்கும்.
விருந்தின்போது கேக், மட்டன் மூலம் சேரும் கொழுப்பு, படியாமல் இருக்க வெற்றிலை போட்டுக் கொள்ள வேண்டும். இதில் இந்தக் குரோமியம் உப்பு நன்கு கிடைப்பதால், கொழுப்பால் இரத்தத்தை நிர்வகிப்பது தடைபடாமல் இருக்கும்.
பல நோய்களுக்கு இந்தத் தாது உப்பு குறைவே காரணமாக இருக்கிறது. எனவே, எல்லா வயதுக்காரர்களும் கொண்டைக்கடலை, முருங்கைக்கீரை, வெங்காயம் முதலியவற்றை அவ்வப்போது தவறாமல் உணவில் இடம்பெறுமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். தினசரி அளவான 50 மைக்ரோ கிராம் முதல் 20 மைக்ரோ கிராம் வரை இந்த தாது உப்பு எளிதில் கிடைத்துவிடும். தினசரி பாதாம் பருப்பு சாப்பிடுவது மிகவும் நல்லது.

Thursday, October 16, 2014

உலக நாடுகளில் லஞ்சம் வாங்கினால் என்ன தண்டனை தெரியுமா?

லஞ்சம் வாங்குபவர்களுக்கு அதிகபட்ச தண்டனை வழங்கினால், லஞ்சத்தை ஒழிக்கலாம் என்பது பலரது வாதம் லஞ்சத்துக்கு எந்த நாட்டில் என்ன தண்டனை?

# ஜஸ்லாந்து: இங்கு தண்டனை என்னவோ 2 வருட சிறைச்சாலைதான். அதற்கு முன்பு லஞ
சம் வாங்கிச் சேர்த்த பணம் முழுவதும் பறிமுதல் செய்யப்படும். (ஊழல் குறைவான நாடுகள் வரிசையில் இதற்கு முதலிடம்).

# எகிப்து: இங்கு லஞ்சம் வாங்குவது கிரிமினல் குற்றம். நிரூபிக்கப்பட்டால் ஆயுள் முழுவதும் சிறைதான். அதுவும் உள்ளே கடுமையான வேலைகளைச் செய்யவைத்து பெண்டு நிமிர்த்துவார்கள்.

# அர்ஜெண்டினா: சிறை தண்டனையோடு வேலையும் பறிபோய்விடும். விடுதலையான பிறகும் சாகும் வரை வேறு வேலை தர மாட்டார்கள்.

# செக் குடியரசு: சிறை தண்டனை, வேலை காலி, வீடு மற்றும் பிற சொத்துக்கள் பறிக்கப்படும்.

# நைஜர்: இங்கு தண்டனை கொஞ்சம் வித்தியாசமானது. லஞ்சம் பெற்றது உறுதியானால் அரசியல் மற்றும் குடி உரிமைகள் பறிக்கப்படும்.

# இங்கிலாந்து: சிறை தண்டனையுடன் வாக்களிக்கும் உரிமையும் ரத்து செய்யப்படும்.

# சீனா: கீழ்மட்ட அரசாங்க அலுவலர்களுக்கு சிறை தண்டனை. உயர் பொறுப்பில் இருப்பவர்களுக்கு மரண தண்டனையும் உண்டு. விஷ ஊசி போட்டு நொடிகளில் சாகடித்து விடுவார்கள். முன்பெல்லாம் துப்பாக்கியால் நெற்றியில் சுட்டுச் சாகடிப்பார்கள். துப்பாக்கி குண்டுக்கான செலவு உறவினர்களிடம் வசூலிக்கப்படும்.

எல்லாம் சரி இந்தியாவில்..? அரசு ஊழியராக இருந்து லஞ்சம் வாங்கினால் அதிகபட்சம் ஒரு வருடம் வரை சிறை தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டுமே! உணவு, மது, பொழுதுபோக்கு போன்றவற்றை லஞ்சமாக.... ஸாரி 'கிஃப்ட்டாக' வாங்கினால் அபராதம் மட்டுமே. அரசியல்வாதியாக இருந்து லஞ்சம் வாங்கினால் அப்படியே எம்.எல்.ஏ-வாகி, அமைச்சர் ஆவதுதான் 'தண்டனை'!

Production of(fuel) Diesel From Non-Recyclable Waste Plastics

Thermal technique makes clean crude replacement from mixed plastic waste. 

Waste plastic could become a more valuable commodity after developing a process that turns mixed plastic waste into a hydrocarbon-based product. 

This is the assessment of Adrian Haworth, sales and marketing director of Recycling Technologies. This company has developed WarwickFBR, a recycling system that converts mixed plastic waste (MPW) into PlaxOil, a heavy fuel alternative that can be sold or used in localised on-demand combined heat and power (CHP) plants.

Haworth explained that its WarwickFBR system produces the PlaxOil following pyrolysis of MPW. To do this, the system first shreds and dries the MPW. It then injects blended product into a fluidised bed where the long hydrocarbon chains in the polymers are broken down by pyrolysis - a multi-step process in which organic materials are decomposed by heat in the absence of oxygen - to form an energy-rich gas. This gas is then filtered to remove contamination, cooled and condensed to provide PlaxOil.

“Pyrolysis is a fairly simple process, it starts by drying plastics to be processed. They are then shredded into smaller pieces and heated in a thermal chamber. The melted plastic is continually heated until it boils and produces vapours. The vapour is passed into cooling pipes and distilled into a liquid chemically identical to regular fuel.”




The art of refining liquid hydrocarbons (crude oil) into diesel, gasoline, and fuel oils was commercially scaled decades ago. Unfortunately, refineries are technologically limited to accepting only a narrow range of liquid hydrocarbons with specific properties and minimal contaminates. Hydrocarbon streams that fall outside of accepted refinery standards have traditionally been landfilled or melted into products of low value. Unrecyclable, hydrocarbon-based waste is a significant environmental problem increasing every year. According to the Environmental Protection Agency’s 2010 Facts and Figures report, over 92% of waste plastic is not recycled. With a growth rate of approximately 8% per year, a critical need for a viable and environmentally sound, general-purpose hydrocarbon-based recycling process exists. 

The barriers and challenges are so significant that previous attempts to refine waste plastics into fuel resulted in unviable batch-based machines producing low-value, unstable mixed fuels. However, for three years, JBI, Inc. (“JBI”) has broken through these barriers and has designed and built a viable commercial-scale continuous refinery capable of processing a wide range of hydrocarbon-based waste into ASTM specification fuels. 

Research and testing of scale-up through 1-gallon, 3000 gallon, multi-kiln, and 40 ton/day processors in a plant in Niagara Falls, NY. Technical challenges encountered and lessons learned during process development will be explained in detail. 

In 2009, our technology was “molecularly audited” by IsleChem, LLC (“IsleChem”) of Grand Island, NY. In 2012, SAIC Energy, Environment & Infrastructure, LLC (“SAIC”). Numerous sources of waste plastic and users of the resulting fuel products conducted extensive audits of the technology, process, and plant. However, this technology can be applied to other waste hydrocarbon-based materials such as contaminated monomers, waste oils, lubricants and other composite waste streams.


Plastic Fuel
All around the globe, companies and individuals are starting to produce fuel from waste plastic. As only 8% of waste plastic is recycled in the US, 15% in Western Europe, and much less in developing countries, this reuse of plastic could potentially keep enormous amounts of plastic out of landfills and out of the oceans. Over 500 billion pounds of new plastic is manufactured each year, and roughly 33% of that is single-use and thrown away. As so little plastic is recycled, we need to reframe plastic waste as an underused resource vs landfill destined. If all plastic waste made it into the dump, it would indeed be mined in the future, but currently, all plastic waste does not make it into our landfills. The United Nations estimates plastic accounts for four-fifths of the accumulated garbage in the world’s oceans. We need to stop polluting our oceans with plastic before it is too late and start collecting all plastics suitable for this new fairly simple technology, a technology that is available now.


Image via: coastalcare.org


The technology is not overly complicated; plastics are shredded and then heated in an oxygen-free chamber (known as pyrolysis) to about 400 degrees celsius. As the plastics boil, gas is separated out and often reused to fuel the machine itself. The fuel is then distilled and filtered. Because the entire process takes place inside a vacuum and the plastic is melted - not burned, minimal to no resultant toxins are released into the air, as all the gases and or sludge are reused to fuel the machine.

 

For this technology, the type of plastic you convert to fuel is essential. If you burn pure hydrocarbons, such as polyethene (PE) and polypropylene (PP), you will produce a fuel that burns pretty clean. But burn PVC and large amounts of chlorine will corrode the reactor and pollute the environment. Burning PETE releases oxygen into the oxygen-deprived chamber, thereby slowing the processing, and PETE recycles efficiently at recycling centres, so it is best to recycle PETE traditionally. HDPE (jugs) and LDPE (bags and films) are polyethene, so usable as fuel as well, just slightly more polluting as a thicker, heavier fuel is created. But additional processing can turn even HDPE into clean diesel.

 Source (Plastic To Fuel • Insteading)

“Polyethylene and polypropylene are pure hydrocarbons, only they are arranged in long chains. If you chop those chains into shorter ones, you get oil, if you chop them even shorter, you get diesel, and if you chop them again, you get gasoline and eventually burnable gas.” 

www.energeticforum.com

In Niagara Falls, NY, John Bordynuik’s ‘Plastic Eating Monster’ can even vaporise thick HDPE plastic into a cleaner-burning number 2 fuel. Put plastic in one end of the machine, and out the other end comes diesel, petroleum distillate, light naphtha and gases such as methane, ethane, butane and propane. The machine accepts unwashed, unsorted waste plastics, composites and commingled materials and returns about 1 gallon of fuel from 8.3 pounds of plastic. And the processor uses its off-gases as fuel, therefore using minimal energy to run the machine. John currently has two massive steel processors up and running, with financing secured for three more to be built shortly. 

In the Philippines, Poly-Green Technology and Resources Inc. was started by Jayme Navarro whose sister asked him to come up with a way to recycle plastic bags. A plant is being built that will produce 5,000 kilos of fuel per day. www.polygreen.com.ph 


Cynar in the UK likes to call their product ‘End of Life Plastic to Diesel’ or ELPD. Their technology converts mixed Waste Plastics into synthetic fuels that are cleaner, low in sulphur and in the case of the diesel, a higher cetane than generic diesel fuel. They have a plant running in Ireland , with another to open in Bristol, UK in January and many more in the planning stage. Each Cynar plant can process up to 20 tons of End of Life Plastic per day, producing 5,000 gallons (19,000 litres) of high quality liquid fuels at a conversion rate of 95%.

Cynar will be supplying Jeremy Rowsell, a British insurance industry executive who lives in Australia, with all the plastic waste fuel he needs to fly a single-engine Cessna from Sydney to London this winter. Fuel will be in place at about 10 locations along the 10,500-mile route. The solo journey dubbed ‘On Wings of Waste’ is intended to heighten awareness of this new fuel.

Of course, it would be best if widespread environmentally friendly plastics were in use, but in the meantime, recycling existing plastics into fuel would keep the plastics out of our waterways. This process is also excellent for difficult to recycle PP and PE plastics like bottle caps, appliance plastics, nursery planters and dirty plastics such as meat wrappings. This process is not suitable for PVC or polystyrene (styrofoam). This technology could also reduce carting issues, as companies that deal with plastic waste could build mini-burners on location. 

Companies:



Japan. Sells International: e-n-ergy.com

UK: Cynar produces a synthetic fuel suitable for all internal combustion engines: cynarplc.com

Washington, DC: www.envion.com
Boosts easy installation, high efficiency, no second-time pollution.
The plant converts 6,000 tons of plastic into nearly a million barrels yearly.

Circle Pines, MN and International:  polymerenergy.com
They have a modular unit that produces 775 litres of fuel for every ton of plastic waste processing. System capacity is rated at 185 tons per month.

New York/Canada: JBI, Inc. www.plastic2oil.com
20-ton processor, 4,000 lbs. of plastic feedstock per machine per hour.

Philippines: www.polygreen.com.ph
5,000 kilos of fuel per day

Hong Kong: Ecotech Recycling Social Enterprise
A prototype machine can process three tons of plastic waste into 1,000 litres of fuel oil per day.

Las Vegas, NV: general@quadraprojects.net

 


Resources:

UNEP Policy Brief on Plastic Waste: unep.org.pdf

Northeastern University turns plastic waste into energy to drive generators: phys.org

DIY for under $800.: energeticforum.com

Peswiki Plastic and Energy page: peswiki.com
This homemade device converts around 25 kg of shredded plastic into 24 litres of diesel in 4 hours. www.emuprim.lv

 

ரூ.6 லட்சத்தில் இரண்டடுக்கு மாடி வீடு…. ஐ.ஐ.டி., அறிமுகம்…

ரூ.6 லட்சத்தில் இரண்டு அடுக்குமாடி வீடு கட்டலாம். ஏதோ ரியல் எஸ்டேட் விளம்பரம் என்று நினைக்க வேண்டாம். குறைந்த செலவில், நில நடுக்கத்தால் பாதிக்கப்படாத ஒரு பிளாட்டை புதிய தொழில்நுட்பத்தின் உதவியுடன் உருவாக்கியிருக்கின்றனர், சென்னை ஐ.ஐ.டி., பொறியியல் துறையினர்.
அப்படி இந்த கட்டடத்தில் என்னதான் சிறப்பும் வித்தியாசமும் என்கிறீர்களா? இதன் மூலப் பொருட்கள் தான். முற்றிலும் வித்தியாசமான இதன் மூலப்பொருள் குறித்து பார்ப்போம்...
ஜிஎப்ஆர்ஜி என்றால் என்ன?
உரத் தொழிற்சாலைகளின் கழிவு பொருட்கள், கண்ணாடி இழைகள் மற்றும் ஜிப்சம் உப்பு ஆகியவற்றின் கூட்டுச் சேர்க்கையில் தயாரிக்கப்பட்ட (கிளாஸ் பைபர் ரீ இன்போர்ஸ்டு ஜிப்சம்) ஜிஎப்ஆர்ஜி பலகைகள், இவற்றோடு குறைந்த அளவு சிமென்ட் மற்றும் மிகக் குறைந்த அளவு இரும்புக் கம்பிகள் இவற்றை வைத்து தான் ஐ.ஐ.டி., சிவில் இன்ஜினியரிங் துறையினர் இந்த மாதிரி வீட்டை அமைத்துள்ளனர்.
சென்னை ஐ.ஐ.டி., வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள 1981 சதுர அடி அளவில் இரண்டு அடுக்குகள் கொண்ட இந்த மாதிரி வீட்டைக் கட்ட தேவைப்பட்ட கால அவகாசம் வெறும் ஒரு மாதம் தான். சொந்த வீடு என்பது கனவாகவே போய் விடுமா என்ற ஏக்கத்தில் இருக்கும் நடுத்தர குடும்பங்களுக்கு இந்த புதிய தொழில் நுட்பம் நிச்சயம் பயன்படும் என்கின்றனர் பொறியாளர்கள்.
பரீட்சார்த்த முறையில் ஐ.ஐ.டி வளாகத்தில் கட்டி முடிக்கப்பட்டுள்ள மாதிரி வீட்டை, பிரதமரின் ஆலோசகர் டி.கே.ஏ.நாயர் சமீபத்தில் திறந்து வைத்தார்.
ஐ.ஐ.டி,யின் இயக்குனர் பாஸ்கர் ராமமூர்த்தியின் வழிகாட்டுதலில் இத்திட்டத்தை செயல்பாட்டுக்கு கொண்டுவந்த சென்னை ஐ.ஐ.டி.,பேராசிரியர்கள் டாக்டர் தேவதாஸ் மேனன் மற்றும் டாக்டர் மெஹர் பிரசாத் ஆகியோரிடம் நேயர்கள் மற்றும் வாசகர்கள் சார்பில் நாம் சில கேள்விகளை முன்வைத்தோம்.
கேள்வி: சாதாரணமாக கட்டப்படும் வீடுகளை தவிர்த்து இந்த வீடுகளை கட்டுவதால் எவ்வளவு சேமிக்கலாம்?
பதில்: தற்போதைய சூழ்நிலையில் கட்டப்படும் வீடுகளின் செலவைக் காட்டிலும் இந்த ஜிப்சம் பலகை கொண்டு வீடுகட்டினால் 20 சதவீதம் வரை சேமிக்கலாம், தவிர இந்த மாதிரியான கட்டடங்களுக்கு பிளாஸ்டரிங் தேவைப்ப டுவதில்லை. குறைந்த நாட்களில் , குறைந்த அளவிலான பணியாளர்களைக் கொண்டு இந்தக் கட்டடங்களை கட்டிவிடலாம். 8 அடுக்கு மாடி கொண்ட குடியிருப்பை மரபு சார் கட்டடத்தைக் காட்டிலும் 50 சதவீதம் எடை குறைவானதாகவே அமைக்க முடியும். இதனால் அஸ்திவாரம் அமைப்பதற்கு ஆகும் செலவைக் குறைத்து அதிக அளவில் பணம் சேமிக்க இயலும்.
கேள்வி: கிளாஸ் பைபர் ரீ இன்போர்ஸ்டு ஜிப்சம், இவை எங்கு கிடைக்கின்றன?
பதில்:இந்தியாவில் கேரள மாநில கொச்சியிலும், மும்பையிலும் கிளாஸ் பைபர் ரீ இன்போர்ஸ்டு ஜிப்சம் போர்டுகள் தயாரிக்கப்படுகின்றன. பொதுத்துறை உரத் தொழிற்சாலைகளான எஃப்.ஆர்.பி.எல்., கொச்சின், ஆர்.சி.எஃப்., மும்பை இவற்றை தயாரிக்கின்றன.
எதிர்காலத்தில், தனியார் தொழிற்சாலைகளும் கிளாஸ் பைபர் ரீ இன்போர்ஸ்டு ஜிப்சம் போர்டுகள் தயாரிப்பில் ஈடுபடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பேனல்களின் விலை ஒரு சுதுர மீட்டர் ரூ.750 முதல் ரூ.900 வரை விற்கப்படுகிறது.
ஜி.எஃப்.ஆர்.பி., (GFRG) கொண்டு கட்டப்படும் வீடுகள் நில நடுக்கத்தால் பாதிக்காத வகையிலும், பூமியின் ஈர்ப்பாற்றலை தாங்கும் வகையிலும் இருக்கும். ஜி.எப்.ஆர்.ஜி பலகைகள் 12 மீட்டர் நீளம், 3 மீட்டர் உயரம் 124 மிமீ கனம் கொண்டவையாக தயாரிக்கப்படுகின்றன.
கேள்வி: உலகில் ஐ.ஐ.டியில்தான் முதன் முறையாக இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளதா?
பதில்: ஆஸ்திரேலியா, சீனா, ஓமன் போன்ற நாடுகளில், கிளாஸ் பைபர் ரீ இன்போர்ஸ்டு ஜிப்சம் போர்டுகளை பயன்படுத்தி நிறைய கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன.
கேள்வி: 6 லட்சம் ரூபாய்க்கு பிளாட் கிடைக்கும் என்பது கவர்ச்சிகரமாக இருந்தாலும், இந்த கட்டடங்களின் ஸ்திரத்தன்மை எப்படி இருக்கும்
பதில்: இந்த வகை கட்டடங்களின் ஸ்திரத்தன்மை, மரபு சார் கட்டடங்களுக்கு நிகரானதாக இருக்கும். ஒப்பிட்டுப் பார்க்கும் போது பராமரிப்புச் செலவு கனிசமாக குறைவு.
சுற்றுச்சூழலுக்கு ஏற்றதான இவ்வகை கட்டடங்களை கட்ட மணல், சிமென்ட், தண்ணீர், இரும்பு எல்லாமே குறைவான அளவிலேயே தேவை. இவ்வகைக் கட்டடங்களின் கான்கிரீட் தட்பவெப்ப சூழலின் நேரடி தாக்குதலுக்கு ஆளாவதில்லை. இதனால் மரபுசார் கட்டடங்களைக் காட்டிலும், இவற்றின் ஸ்திரத்தன்மை பன்மடங்கு அதிகம்.
கேள்வி: ஜி.எஃப்.ஆர்.பி., (GFRG) பயன்படுத்தி சராசரியாக எத்தனை மாடிகள் எழுப்பலாம்?
பதில்: கட்டடம் அமைக்கப்படும் பகுதி, நிலநடுக்க அபாய வளைவில் (seismic zone) எந்த பட்டியலில் அமைந்திருக்கிறது என்பது முக்கியம். மிதமான நிலநடுக்கம் ஏற்படக் கூடிய ஜோன் 3 (moderate seismic risk) பகுதியில் 10 மாடிகள் கொண்ட அடுக்குமாடியை அமைக்கலாம். ஜி.எஃப்.ஆர்.பி., (GFRG) பேனல்களுடன் ஆர்.சி., ஷியர் வால்ஸ் (RC shear walls) எனும் மற்றுமொரு தொழில்நுட்பத்தை புகுத்தி 10க்கும் மேற்பட்ட மாடிகள் கொண்ட கட்டடத்தையும் எழுப்ப முடியும்.
கேள்வி: இதுபோன்ற வீடுகளை வீட்டுவசதி வாரியங்கள் கட்டுவதற்கு ஊக்குவிப்பீர்களா?
பதில்: குறைந்த செலவில் கட்டப்படும் இந்த மாதிரியான வீடுகளை அனைத்து மாநிலங்களிலும் உள்ள வீட்டுவசதி வாரியங்களும் பின்பற்ற உகந்தது. தொகுப்பு வீடுகள் கட்ட ஜி.எஃப்.ஆர்.பி., (GFRG) மிகவும் ஏற்புடையது. இருப்பினும் இவற்றை அமைப்பதில் தரம் முழுமையாக பின்பற்றப்பட வேண்டும்.
இதற்கான பிரத்யேக பணியாளர்களைக் கொண்டு நல்ல முறையில் திட்டத்தை செயல்படுத்துதல் அவசியம். எனவே வீட்டு வசதி வாரியங்கள் இவ்வகை வீடுகளை கட்டும் பட்சத்தில் கட்டுமானப் பணிகளை நல்ல பயற்சி பெற்ற நிறுவனங்களுக்கு வழங்க வேண்டியது அவசியம்.
மணல் திருட்டை தடுக்க வேண்டும், நிலத்தடி நீரை சேமிக்க வேண்டும் இப்படி பல கட்டாயத்தில் இருக்கும் தருணத்தில் குறைந்த அளவு சிமெண்ட், குறைந்த அளவு இரும்பு, குறைந்த அளவு தண்ணீர், மிகக் குறைவான அளவில் மணல் கொண்டு நீண்ட காலத்துக்கு நீடித்து உழைக்கும் கட்டடங்களை கட்ட முடிந்தால் அது நிச்சயம் வரப்பிரசாதமாகத்தான் அமையும்... பார்ப்போம்!

நாரதா் வரலாறு:_

பிரம்மாவின் வயிற்றிலிருந்து இருந்து தோன்றியவா். தம் மூன்றாவது பிறப்பில் இவா் பிரம்மாவின் பிள்ளை. இவா் பத்தாவது பிரஜாபதியும் ஆவாா்.

ஹா்யச்வா்களையும், சபலாச்வா்களையும், பிரஜா விருத்தி செய்யாமல் தடுத்து மோட்ச மாா்க்கத்தை உபதேசித்தாா். அதனால் பிரம்மா இவரைக் கந்தா்வத் தலைவனாகும் படி சபித்தாா். தட்சன் குமாரா்களுக்கு ஞானோபதேசம் செய்து மோட்சமடையச் செய்தாா், அதனால் இவரை ஒரு நிலையில் இல்லாமல் சுற்றுமாறு தட்சன் சபித்தான், அதனால் திாிலோக சஞ்சாாியானாா்.

இவா் கையில் உள்ள வீணைக்கு மஹதி என்று பெயா்.
வீணாகானத்தில் நிகரற்றவா்.

வேதங்கள், வேதாந்தங்கள், இதிகாசங்கள், புராணங்கள், தா்ம ரகஸ்யம், பூா்வகல்ப சரிதம், பிரம்மாண்டத்தின் அமைப்பு, ராஜ நீதி, வித்யைகள், கலைகள், சங்கீதம், நாட்டியம் முதலிய சகல ஞானத்திலும், பேசுந்திறமையிலும் நிகரற்றவா். தேவா்கள், அசுரா்கள் இருவருக்கும் வேண்டியவா். இவ்விரு வகையினரும் இவரை வணங்கினா்.

சகல நற்குணங்களும் உடையவா், நடு நிலை உடையவா், பற்றற்ற புண்யாத்மா, கந்தா்வ கணங்களுள் தும்புருவுடன் சோ்க்கப்படுகிறாா். இவருடைய சகோதாி மகன் பா்வதா்.

முன் கல்பங்களில் வழங்கி வந்த ப்ரும்ம ஞானத்திற்க்கு இவா் ஆதி ரஷி. பகவானுடைய குணங்களை மஹதி என்னும் யாழில் வாசிப்பதும், ஏழு மாா்க்கங்கள் உள்ள ப்ரஹ்ம் வித்தையை உபதேசிப்பதும இவருடைய பணி.

கா்மகதியை பின் தொடா்ந்து ஜீவ கோடிகளுக்கும் உலகங்களுக்கும் நன்மை செய்வதே இவா் நோக்கம். ஜீவாத்மாக்களின் விணை கா்மங்கள் தகுந்த காலங்களில் தகுந்த படி கவனிப்பாா். சாதாரணமாகப் பாா்க்கும் போது இவா் செயல்கள் கலகம் உண்டாக்குவதாகத் தோன்றும், ஆனால் நாரதா் கலகம் நன்மையில் முடியும் என்பது பழமொழி.
அதனால் இவா் கலகப்பிாியா் என்று அழைக்கப்பட்டாா்.
கா்ம தேவதைகளுக்கு இவா் தலைவா். இவாில்லாமல் ஈஸ்வரனின் காாியங்கள் நடப்பது இல்லை.

பெய்யாதிருந்த நாரம்(நாரம்_மழை) இவா் பிறந்தவுடன் பெய்தமையால் நாரதா் என்ற பெயா் பெற்றாா்.
தம்முடன் இருந்த சிறுவா்களுக்கு நாரம் என்னும் ஞானத்தை உபதேசித்ததால் நாரதா் என்றும் பெயா் ஏற்பட்டது.

வால் மீகி தா்ம நாயகனும், பொய் பேசாதவரும்
இன்னும் இப்படிப் பல்வேறு நற்குணங்கள் பொருந்தி உள்ள நாயகன் யாா் என்று நாரதரைக் கேட்ட போது அவா் ராமரைப் பற்றிக்கூற, ராமாயணம் எழுந்தது.
நாரதா் பாண்டவா்களின் உற்ற நண்பரும் கூட! தேவைப் பட்ட போதெல்லாம் அவா்களைச் சந்தித்து அவா்களுக்கு தேவையான வழிகாட்டுதல்களையும், அறிவுறைகளையும் தந்ததை மஹா பாரதத்தில் வியாஸா் வெகுவாக விாித்துரைப்பதைக் காணலாம்.

வேத வியாஸா் மனம் கலங்கி இருந்தபோது அவரை பாகவதத்தை இயற்றுமாறு கூறி அவாின் கலக்கத்தை போக்கி பாகவதம் எழக் காரண புருஷராக இருந்தவரும் இவரே!

அா்சுனன் பாசுபதம் பெறத் தவம் செய்யச் சென்றான் என்ற செய்தியைத் துாியோதனனுக்கு கூறி துாியனின் நண்பன் மூகா சூரனை தவ பங்கத்திற்க்கு அனுப்பி வைத்தாா், இதனால் மூகா சூர வதத்திற்க்குக் காரணமானாா்.

தமயந்தியின் சுயம்வரத்தை இந்திரனுக்குக் கூறி அவளைப் பல சோதனைகளுக்கு ஆட்படுத்தி அவளின் கற்பு நெறியை உலகினுக்கு வெளிப்படுத்தினாா். மேரு மலைக்கு அதன் உயா் வினை உணா்த்தினாா். வன வாசம் செய்த தருமனுக்குத் தீா்த்த மகத்துவம் கூறினாா்.

மேருவின் தன்மையை விந்திய மலைக்கு உணா்த்தினாா், விந்தியம் கா்வம் கொண்டு உயா்ந்து வளர அகத்தியரால் விந்தியத்தின் கா்வபங்கம் செய்ப்பட்டது.
இதனால் அகத்தியா் பெருமை எங்கும் பரவியது.

மந்திரதேச மன்னன் அசுவபதிக்கு சாவித்திரி விரத மகிமை கூறினாா். இம் மன்னனுக்குச் சாவித்ரி என்னும் பெண் பிறந்து பருவமடைந்து பின் சத்யவாணின் குண நலன்களை மன்னனுக்கு கூறினாா். சாவித்ரிக்கு உபதேசம் செய்தாா்.

துருவனுக்கு தத்துவம் உபதேசித்து அவன் நெஞ்சில் நாராயணனை நிலை நிறுத்தினாா்.

பிராசீன பா்க்கியிடம் சென்று உன் வினைக் கா்மங்களினால் உனக்குச் சுகப் பிராப்தி இல்லை என்பதைக் கூறி அவனைத் துறவறம் பூணச் செய்தாா்.

1.கந்தருவன், 2.மனிதன் , 3. பிரும்ம புத்திரா் என்ற மூன்று பிறவியினை இவா் எடுத்தாா். நாரதா் சாபத்தால் பிரம்மன் பூஜையற்றவன் ஆனான்.

பிரகலாதனுக்கு அவன் கருவில் இருக்கும் போது நாராயண மந்திரோபதேசம் செய்தாா்.

மணிக்கிரீவனை மருத மரமாகச் சபித்தாா், கிருஷ்ணாவதார காலத்தில் கண்ணனால் இச்சாபம் தீா்ந்தது.

மும்மூா்த்திகளும் ஒன்றாக எழுந்தருளியிருந்தபோது பொதுவாக நமஸ்காித்து, நமஸ்காரம் உத்தம மூா்த்திக்குாியது என்று கூறிக் கலகம் விளைவித்தாா்.

தட்சன் செய்யும் வேள்வியைப் பற்றி உமாதேவியிடம் கூறினாா், இது பாா்வதி தேவியின் அவதாரத்திற்க்குக் காரணமாயிற்று.

திக்கு விஜயம் செய்யும் இராவணனுக்கு யமபுரம் செல்லும் வழியைக் கூறி, இராவணன் வருவதை யமனுக்கும் அறிவித்தாா்.

அரசா்களை ஜராசந்தன் சிறையிட்டு வைத்துள்ளான் என்பதையும், அனைவரையும் கொல்லவும் போகிறான் என்ற செய்தியையும் கண்ணணுக்குத் தொிவித்தாா்.

ஒரே ஒரு பிரச்சனையை எழுப்பி அதன் மூலம் அவா் பல பொிய விஷயங்களுக்குத் தீா்வு கான்பதை ஏராளமான கதைகள் விளக்குவதை நாம் அறிவோம்.

நாரதரைப் பற்றி சுவையான ஒரு குட்டிககதையைப் பாா்ப்போம், தானே சிறந்த விஷ்னு பக்தா் என்றும் இசைக் கலைஞா் என்றும் கா்வம் கொண்ட நாரதா், ஒரு முறை ஒரு நந்த வனத்தின் பக்கம் செல்கையில் பல பெண்கள் புலம்பி அழுவதைக் கேட்டாா். யாா் அவா்கள் என்று பாா்த்த போது, அவா் திகைத்துப் போனாா்.
தேவதை போன்ற அழகிய முகங்கள் கொண்ட அவா்களில் சிலருக்கு கைகள் இல்லை: சிலருக்கு கால்கள் இல்லை: சிலரோ சிதைந்த உருவத்தோடு இருந்தனா்: சிலா் குள்ளமா ஆகி இருந்தனா்: இதைப் பாா்த்துத் திகைத்த நாரதா் அவா்களை நோக்கி அதன் காரணத்தைக் கேட்டாா், அதற்க்கு அவா்கள்," நாங்கள் ராக தேவதைகள், இன்று வைகுந்தத்தில் நாரதா் என்ற ஒருவா் அபத்தமாக இசையை இசைக்கவே நாங்கள் உருக்குலைந்து, சீா் குலைந்து இப்படி ஆகிவிட்டோம்" என்று பாிதாபமாகத் தங்கள் நிலையைக் கூறினா். நாரதரது கா்வம் ஒழிந்தது. அவா் தான் என்பதை ஒப்புக் கொண்டு, இப்போது நான் ஹனுமனிடம் உண்மையான இசை என்ன என்பதைத் தொிந்து கொள்வதற்க்காக போகிறேன்" என்றாராம். ஹனுமன் அவருக்கு உள்ளத்தின் ஆழத்திலிருந்து வரும் பக்தி இசையைப் பாடிக் கற்றுத் தந்தாராரம்.

நாடக வாயிலாகவும் நமது திரைப்படங்கள் வாயிலாகவும் நாம் பாா்க்கும் நாரதா் வேறு; ஜோதிடம், பக்தி, நாட்டியம், பூஜை முறைகள் இவற்றை உபதேசித்து உரைக்கும் மகத்தான ஞானமுடைய மஹாிஷி நாரதா் வேறு!

நல்ல பக்தராக வேண்டுமா? நல்ல ஜோதிடராக வேண்டுமா? நல்ல நாட்டியக் கலைஞராக வேண்டுமா? நாட வேண்டிய மஹாிஷி நாரதரே!

குடைவரை கோயில் :

பெரிய மலைகளை குடைந்து அமைக்கப்பட்ட கோயில்கள் குடைவரை கோயில்கள் என அழைக்கப்படுகின்றன.

தமிழகத்தின் முதல் குடைவரைக் கோவில் :

தமிழகத்தின் முதல் குடைவரைக் கோயில் எது என்பதில் வரலாற்று ஆய்வாளர்களிடம் ஒத்த கருத்துகள் இல்லை. பாண்டியன் செழியன் சேந்தன் கட்டிய பிள்ளையார்பட்டிக் குடைவரையும், மலையடிக்குறிச்சி குடைவரை கோயில்களே முதல் தமிழகக் குடைவரைக் கோயில்கள் என்று சிலரும், மகேந்திர பல்லவன் என்கிற பல்லவ மன்னன் செஞ்சிக்கருகில் உள்ள மண்டகப்பட்டு எனும் ஊரில் உருவாக்கிய குடைவரைக் கோவிலே தமிழகத்தின் முதல் குடைவரைக் கோவில் என்று சிலரும் கூறுகின்றனர். பாண்டியர்கள் தங்கள் முதலாம் பாண்டியப் பேரரசின் போது முப்பதுக்கும் மேற்பட்ட கோயில்களை கட்டி இருந்தனர். அத்துடன் மகேந்திர பல்லவனும் மாமண்டூர், திருக்கழுக்குன்றம், திருச்சிராப்பள்ளி ஆகிய ஊர்களில் குடைவரைக் கோவில்களை அமைத்தவன் ஆவான். தமிழகத்தில் பாண்டியர், பல்லவர், அதியர் மன்னர்களின் மரபினர்களே குடைவரைக் கோவில்களை அமைத்து வழிகாட்டியுள்ளனர்.

மண்டகப்பட்டு இலக்சிதன் கோயில் :

தமிழ் நாடு , விழுப்புரம் மாவட்டத்திலுள்ள மண்டகப்பட்டு என்னும் ஊரில் அமைந்துள்ளது. இலக்சிதன் கோயில் என அழைக்கப்படும் குடைவரை கோயில் ஆகும். கி.பி 590 முதல் கி.பி 630 வரை தமிழகத்தை ஆட்சி புரிந்த பல்லவ மன்னனான முதலாம் மகேந்திரவர்மனால் அமைக்கப்பட்டது இக்கோயில். தமிழ் நாட்டில் கல்லினால் அமைக்கப்பட்ட முதலாவது கோயில் என்றவகையில் தமிழகக் கட்டிடக்கலை வரலாற்றில் இது ஒரு திருப்புமுனையாகக் கருதப்படுகின்றது.

இக்குடைவரையில் காணப்பட்ட மகேந்திரவர்மனின் வடமொழிக் கல்வெட்டில் 'இந்தக்கோயிலை நான்முகன், திருமால், சிவபெருமான் ஆகிய மூன்று தெய்வங்களுக்கும் கல், மண், உலோகம், சுதை, மரம் இன்றி விசித்திர சித்தனாகிய நான் தோற்றுவித்தேன்' என்று குறுப்பிட்டுள்ளார்.

இவரே மாமண்டூர், திருக்கழுக்குன்றம், திருச்சிராப்பள்ளி போன்ற இடங்களில் குடைவரைக் கோயில்களை அமைத்துக் கட்டடக் கலைக்குப் புத்துயிர்
அளித்ததோடு, அழகான சிற்பங்களையும் உருவாக்கியுள்ளார்.
இவருக்குப்பின் வந்த இவர் மகன் நரசிம்மவர்மன் தன் தந்தையின் பணியைத் தொடர்ந்தார். திருக்கழுக்குன்றத்திலுள்ள ஒரு குடைவரைக் கோயில் இவர் காலத்துப் படைப்புக்குச் சிறந்தசான்றாகும். பின்வந்த இராஜசிம்ம பல்லவன் காலத்தில்தான் பல்லவர்காலக் கோயிற்கலை சிகரத்தைத் தொட்டது. காஞ்சிபுரத்துக்கயிலாசநாதர் கோயில், மாமல்லபுரத்துக் குடைவரை படைப்புகளான ஐந்து ரதங்கள், குன்றில் குடையப்பட்ட கோயில்கள், புலிக்குகை
போன்ற படைப்புகள் அனைத்தும் இவரது படைப்பாகும்.

பல்லவர்காலம் குடைவரைகள் :

மண்டகப்பட்டு இலக்சிதன் கோயில்,
பல்லாவரம் குடைவரை,
மாமண்டூர் உருத்திரவாலீஸ்வரம்,
மாமண்டூர் திருமால் குடைவரை,
குரங்கணில்முட்டம் குடைவரை,
வல்லம் வசந்தீஸ்வரம் (செங்கை வல்லம் குடைவரைக் கோயில்கள்),
மகேந்திரவாடி குடைவரை,
தளவானூர் சத்துருமல்லேசுவர் ஆலயம்,
திருச்சிராப்பள்ளி குடைவரை,
நாமக்கல் நரசிம்மர் திருக்கோயில்,
நார்த்தாமலை குடைவரை,
குடுமியான்மலை குடைவரை,
திருமெய்யம் குடைவரை,
சீயமங்கலம் திருத்தூணாண்டார் கோயில்,
விளாப்பாக்கம் குடைவரை,
மாமல்லபுரம் தர்மராஜ மண்டபம்,
மாமல்லபுரம் கோடிக்கல் மண்டபம்,
மாமல்லபுரம் கோனேரி மண்டபம்,
மாமல்லபுரம் வராக மண்டபம்,
மாமல்லபுரம் மகிஷாசுரமர்த்தினி மண்டபம்,
மாமல்லபுரம் மகிஷாசுரமர்த்தினி சிறிய மண்டபம்,
மாமல்லபுரம் மும்மூர்த்தி குடைவரை,
மாமல்லபுரம் பஞ்சபாண்டவர் மண்டபம்,
மாமல்லபுரம் புலிப்புதர் மண்டபம்,
மாமல்லபுரம் பரமேஸ்வரவராக விஷ்ணுகிருகம்,
மாமல்லபுரம் இராமானுஜ மண்டபம்,
மாமல்லபுரம் சிறிய யாளி மண்டபம்,
சாளுவன்குப்பம் அதிரணசண்ட பல்லவேஸ்வரம்,
சாளுவன்குப்பம் புலிக்குடைவரை.

பாண்டியர் குடைவரைகள் :

பிள்ளையார்ப் பட்டிக் குடைவரை,
மலையடிக்குறிச்சிக் குடைவரை,
மகிபாலன்பட்டிக் குடைவரை,
அரளிப்பாறைக் குடைவரை,
திருமெய்யம் குடைவரைகள்,
கழுகுமலைக் குடைவரை,
திருத்தங்கல் குடைவரை,
செவல்பட்டிக் குடைவரை,
திருமலைக் குடைவரை,
திருச்செந்தூர் வள்ளிக்கோயில் குடைவரை,
மனப்பாடுக் குடைவரை,
மூவரை வென்றான் குடைவரை,
சித்தன்னவாசல் குடைவரை,
ஐவர் மலைக் குடைவரை,
அழகர் கோயில் குடைவரை,
ஆனையூர்க் குடைவரை,
வீர சிகாமணிக் குடைவரை,
திருமலைப்புரம் குடைவரை,
அலங்காரப் பேரிக் குடைவரை,
குறட்டியாறைக் குடைவரை,
சிவபுரிக் குடைவரை,
குன்றக்குடிக் குடைவரைகள்,
பிரான்மலைக் குடைவரை,
திருக்கோளக்குடிக் குடைவரை,
அரளிப்பட்டிக் குடைவரை,
அரிட்டாபட்டிக் குடைவரை,
மாங்குளம் குடைவரை,
குன்றத்தூர் குடைவரை,
கந்தன் குடைவரை,
யானைமலை நரசிங்கர் குடைவரை,
தென்பரங்குன்றம் குடைவரை,
வடபரங்குன்றம் குடைவரை.

முத்தரையர் குடைவரைகள் :

மலையடிப்பட்டி வாகீஸ்வரமுடையார் கோயில்.

( படத்தில் உள்ளது மண்டகப்பட்டு குடைவரைக் கோவில்)

Process of oil painting by Vladimir Volegov


Home Made Wind Turbine


நீயும் பொம்மை - Neeyum Bommai - Bommai - S Balachandar Singer : KJ Yesudas's First Song


Wednesday, October 15, 2014

கருத்தரித்தல்....

குறிப்பு: கர்ப்பிணிகள் இப்பதிவை படிக்க வேண்டாம்....
புற அதிசயங்கள் அனைத்தையும் மிஞ்சும் அதிசயம் ஆகிய உயிர் உருவாதல் பற்றி ஏற்கனவே சில பதிவுகளில் பார்த்தோம். இனி இன்னும் இரண்டும் அல்லது மூன்று பதிவுகளில் அதை பற்றி அலசுவோம். உடல், உயிர் (மனம்+பிராணன்), ஆன்மா ஆகியவற்றின் தொகுதியே மனிதன். தான் செய்த நல்வினை மற்றும் தீவினைப் பயன்களுக்கு ஏற்ப உடல்களை மாற்றியபடி செல்கின்ற உயிரின் பயணமே வாழ்க்கை. உயிர், பழைய உடலை விடுவது மரணம். புதிய உடலை ஏற்றுக்கொள்வது பிறப்பு. உடல் தாயிடமிருந்து கிடைக்கிறது. உயிர் தந்தையின் வழியாகத் தாயின் கருப்பைக்குள் புகுகிறது. இந்த உடல்+உயிர்ச் சேர்க்கையில் இறைவன் ஆன்மாவாகப் புகுந்து அதனை இயங்கச் செய்கிறார். உயிரின் இந்த பயணத்தைப் பற்றி சில கருத்துகளை இப்பதிவில் பார்ப்போம். இவை ரிக் வேதம் ஐதரேய உபநிஷத்தில் வருகின்றன. மூன்றுபிறப்பு பற்றி சொல்லப்படுகிறது. அதாவது முதற்பிறப்பு கருத்தரித்தல், இரண்டாம் பிறப்பு குழந்தை பிறப்பு, மூன்றாம் பிறப்பு கருப்பையின் உள்ளே. இதில் முதல் பிறப்பை பற்றி பார்ப்போம்.
‘(கர்ப்பிணிகள் வெளியேறவும்) மனிதன் ஆரம்பத்தில் ஆணிடம் விந்துவாக இருக்கிறான். விந்து என்பது எல்லா உறுப்புக்களின் ஆற்றல் திரண்டு உருவாகிறது. ஓர் ஆண் இவ்வாறு தன்னில் தன்னைத் (விந்து வடிவில்) தாங்குகிறான். விந்துவை எப்போது பெண்ணில் விடுகிறானோ அப்போது தன்னைக் (குழந்தையாகப்) பிறப்பித்துக்கொள்கிறான். இது அவனது முதற்பிறப்பு’.
இந்த மந்திரமும் இந்த அத்தியாத்தில் தொடரும் மந்திரங்களும் உடலுறவு, கருத்தரித்தல் போன்ற கருத்துக்களைக் கூறுகின்றன. இதிலிருந்து சில உண்மைகளை நாம் அறிந்துக்கொள்கிறோம். ‘கர்ப்பிணிகள் வெளியேறவும்’ என்று ஆரம்பத்தில் வருகிறது. எனவே அரச சபை, பண்டிதர் சபை போன்ற பொது இடங்களில் இந்தக் கருத்துக்கள் விவாதிக்கப்பட்டன என்பது தெரிகிறது. இத்தகைய எல்லா விவாதங்களிலும் கருத்துப்பரிமாற்றங்களிலும் பெண்கள் கலந்துகொண்டார்கள் என்பது தெரிகிறது. பண்டைய சமுதாயம் ஒரு சிறந்த ஆரோக்கியமான சமுதாயமாக விளங்கியதற்கான முக்கியக் காரனங்களுள் ஒன்றை இங்கே காண்கிறோம். உடலுறவு, கருத்தரித்தல் போன்றவை சபைகளில் விவாதிக்கப்பட்டன. குருகுலத்தில் தகுந்த ஒருவரால் சிறுவயதிலேயே இவை கற்ப்பிக்கபடுவது பற்றி தைத்திரீய உபநிஷதம் கூறுகிறது. உயிரை உருவாக்குகின்ற இந்த உறவை கீதை(10.28) தெய்வீகமாகப் போற்றுவதும் இங்கு நினைவுக்கூரத் தக்கது.
இனவிருத்தி என்பது கடவுளின் மிகப் புனிதமான சின்னம்; கணவனும் மனைவியும் சேர்ந்து செய்கின்ற ஆழ்ந்த பிரார்த்தனை. நல்லதோ, தீயதோ செய்வதற்கான பெரும் சக்தி பெற்ற ஓர் உயிரை உலகிற்குக் கொண்டு வரப்போகின்ற பிரார்த்தனை. இது என்ன வேடிக்கையா? அல்லது வெறுமனே நரம்புகளுக்குத் திருப்தி அளிக்கின்ற செயலா? மிருகத்தனமான உடலின்ப அனுபவமா? இல்லை, இல்லையென்று ஆயிரம் தடவை சொல்கிறான் இந்து. என்கிறார் சுவாமி விவேகானந்தர். வாழ்க்கையின் அடிப்படை அம்சங்களான இவைபற்றி உரிய வேளையில், உரிய முறைப்படி சிந்திப்பதும் கற்பிப்பதும் செயல் படுவதும் நல்ல சமுதாயம் உருவாக வழிகோலுகின்றன. இனி மனிதனின் இரண்டாம், மூன்றாம் பிறப்பு பற்றி அடுத்த பதிவில் பார்ப்போம்.

Shri Sai Chalisa || in Telugu || by Gopala Krishnananda Swamiji

Tuesday, October 14, 2014

Chinese scientists unveil new liquid 3D metal printing method

Scientists at the Beijing Key Laboratory of CryoBiomedical Engineering, part of the Technical Institute of Physics and Chemistry at the Chinese Academy of Sciences, have developed a new conceptual 3D printing method with “ink” consisting of a metal alloy that has a melting point slightly above room temperature.

The new method, according to the article on Chinatopix, will revolutionise metal printing by making the process faster, more affordable and energy efficient by controlling the temperature of the medium used to deposit the metal ink.

Researchers Liu Jing and Wang Lei presented the liquid-phase 3D printing technique for the rapid manufacturing of a conductive metal object in one, two or three dimensions, in the study published in the journal SCIENCE CHINA Technological Sciences. The study titled “Liquid phase 3D printing for quickly manufacturing conductive metal objects with a low melting point alloy ink” reveals a four-element alloy, the Bi35In48.6Sn16Zn0.4, which was developed and adopted as the printing ink, along with a streamlined fabrication process.

The Bi35In48.6Sn16Zn0.4 alloy is composed of bismuth, indium, tin and zinc. The scientists said that metal that melts at low temperature has great potential uses for cooling computer chips and in numerous other areas such as thermal interface and micro fluids. “Such material has also been proposed as printing ink with evident value in direct writing electronics and 3D printing technology” the researchers said.

As far as the fabrication process goes, first a 3D object is generated as a computer-aided design (CAD) model and then converted into a STL (stereolithography) file which is then imported into an open source software program that generates slices of the object as a set of horizontal layers and that generates tool paths for each layer. The printing ink is dropped into a liquid phase cooling fluid via an injection needle; the object is printed layer by layer.

Source: Australian Manufacturing.
Posted by: Er_sanch.

This new battery charges to 70% in two minutes, and lasts for 20 years

Researchers have developed a groundbreaking new lithium ion battery that charges super quickly and lasts 10 times longer than today’s batteries. It’ll be on the market within two years.
Sick of waiting an hour for your phone to charge before you leave the house? Researchers at Nanyang Technological University in Singapore have come up with the best solution yet - a lithium ion battery that charges to 70 percent in just two minutes. 
Even better, it also lasts for 20 years, and will reportedly be available to the public within two years.
Rechargeable lithium ion batteries are already common in our mobile phones, tablets and laptops - but most only last around 500 recharge cycles, which is around two to three years of typical use. And at the moment batteries take around two hours to fully charge.
The new battery drastically improves this process, and will allow you to charge your phone while you look for your keys on the way out the door. It would also help make electric vehicles a more viable alternative to fossil-fuel-powered cars, by reducing battery replacement costs and allowing drivers to recharge their cars in minutes. 
“Electric cars will be able to increase their range dramatically, with just five minutes of charging, which is on par with the time needed to pump petrol for current cars,” said Professor Chen Xiaodong who led the study, in a press release. “Equally important, we can now drastically cut down the toxic waste generated by disposed batteries, since our batteries last 10 times longer than the current generation of lithium-ion batteries.”
The breakthrough came after the scientists replaced the traditional graphite that makes up theanode (the negative pole of the battery) in lithium-ion batteries with a new gel material made from titanium dioxide nanotubes that they created themselves.
These nanotubes are a thousand times thinner than a human hair, and they speed up the rate at which electrons and ions can transfer in and out of the batteries, allowing for super-fast charging. They also allow more energy to be packed into the batteries. This means that the battery can now offer 10,000 charging cycles, instead of the usual 500.
Even better, the new batteries will be relatively cheap, as titanium dioxide is inexpensive and already readily available in soil. The team has published details on how they formed the titanium dioxide gel in Advanced Materials, and have already had the technology licensed to eventually produce the devices. They expect they’ll be on the market within two years.
We literally can’t wait.
Source: Nanyang Technological University

சர்க்கரை நோயை முற்றிலும் குணப்படுத்தலாம்

சர்க்கரை வியாதியில் உலகத்திலேயே முன்னோடியாக இருக்கக் கூடிய நாடு எது? என்றால் அது இந்தியா. இந்தியாவிலேயே சர்க்கரை வியாதியில் முன்னோடியாக இருக்கக் கூடிய மாநிலம் எது? என்றால் நம்புங்கள் அது நம் தமிழ்நாடு தான்.
தமிழ் நாட்டிலேயே முன்னோடியாக இருக்கக் கூடிய ஒரு நகரம் எது என்றால் சென்னை. சக்கரை வியாதிக்கான மிகப் பெரிய வணிகச் சந்தையை தனக்குள்ளே உள்ளடக்கிக் கொண்டு, நடைப்பிணமாய் திரியக் கூடிய தமிழ் சமூகம் இன்று உருவாகி உள்ளது. அதற்கான காரணங்கள் என்ன? அது எப்படியெல்லாம் வருகிறது? அதை எப்படி தடுக்கலாம்? அதற்கான உணவு முறை கட்டுப்பாடுகள் என்ன? இதையெல்லாம் முழுமையாக அலசி ஆராயப்போகிறோம். முதலில் நீரிழிவு என்பது அன்றே சித்தர்களால் மது மேகம் என்ற பெயரில் சொல்லப்பட்டது. இந்த மது மேகம் எப்படியெல்லாம் வரும் என்பதை விளக்கும் சித்தர் பாடலானது . . . .
“கோதையார் களவின் போதை
கொழுத்த மீனிறைச்சி போதை
பாலுடன் நெய்யும்
பரிவுடன் உண்பீராகில்
வருமே பிணி”

என்று மது மேகத்தைப் பற்றி சொல்கிறார்கள் சித்தர்கள். அதாவது கோதையார் களவின் போதை என்று சித்தர்கள் சொல்லக் கூடிய ஒரு பெரிய காரணி என்ன என்றால் உடலுறவில் ஈடுபடும் பொழுது முழுமையாக செயல்படக் கூடியது நாளமில்லாச் சுரப்பி மண்டலம் ஆகும். ஆதலால் மதுமேக நோய் என்பது ஒரு ஹார்மோனல் கிருமி என்கிறார்கள். உடலில் இன்சுலின் என்கிற ஹார்மோன் குறைவதால் வரக் கூடிய நோய் இதுவாகும்.
சித்தர்கள் அன்றே தெளிவாக கூறியிருக்கிறார்கள் “கோதையார் களவின் போதை, கொழுத்த மீனிறைச்சி போதை” என்றால் நிறைய அசைவ உணவுகள், மந்த உணவுகள் எடுத்துக் கொண்டால் இந்த உணவின் மூலம் பாலியல் சார்ந்த உணர்வுகள் தூண்டப்பட்டு அதன் அடிப்படையில் அடிக்கடி பாலியல் சார்ந்த உறவுகளில் ஈடுபடும் பொழுது மது மேகம் என்ற நோய்க்கு மனிதர்கள் ஆட்படுகிறார்கள் என்று சித்தர்கள் கூறுகிறார்கள்.
அதே போல் “பாலுடன் நெய்யும், பரிவுடன் உண்பீராகில்” என்பது பாலாக இருந்தாலும் சரி, நெய்யாக இருந்தாலும் சரி அதை அரிசியோடு சேர்த்து எடுக்கும் கால கட்டத்தில் நீரிழிவு கண்டிப்பாக வரும் என்பது சித்தர்களின் கூற்று. இந்த மதுமேகந்தான் இன்று உலகையே அச்சுறுத்தக் கூடிய நீரிழிவு என்னும் நோயாகும்.. இந்த நீரிழிவு நோய் என்பது இன்று அனைவருக்கும் பொதுவாகிவிட்டது. நீரிழிவில் மூன்று வகையான நீரிழிவுகளைப் பார்க்கிறோம். குழந்தைகளுக்கு வரக்கூடியது (Juvenile) நீரிழிவு என்று சொல்கிறார்கள் இது முதல் விதம். இரண்டாவது மருந்துகளால் கட்டுப்படக் கூடிய நீரிழிவாகும்.
மருந்தே இல்லாமல் இன்சுலினுக்கு கட்டுப்படக்கூடிய நீரிழிவு. இது மூன்றாவது விதம். என்று மூன்று விதமான நீரிழிவு இருக்கிறது. சர்க்கரை நோய் ஒருவருக்கு வந்து விட்டது என்றால் அவருடைய முழுமையான செயல்பாடுகள் சிறிது சிறிதாக குறைய ஆரம்பித்து விடும். உடல் மெலிந்து விடும், அடிக்கடி சிறுநீர் கழிக்கக் கூடிய தன்மை இந்த மாதிரி அதன் அறிகுறிகளை கொடுமையாக வெளிப்படுத்தக் கூடிய ஒரு கால கட்டம் உண்டு.
இன்று தமிழ் நாட்டில் தமிழ்ச் சமூகம் சந்திக்கக் கூடிய ஒரு பெரிய பிரச்சினை என்ன என்றால் நீரிழிவு நோய், இது ஒரு குறைபாடு தான். இக்குறைபாட்டிலிருந்து நாம் மீள முடியும் என்கிற தன்னம்பிக்கையை இழந்து விட்டு எப்பொழுதும் மருந்துகளையும், மருத்துவர்களையும் தேடி அவர்கள் பின்னாலேயே ஓடக் கூடிய ஒரு நிலையில் தான் தமிழ் மக்கள் இன்று இருக்கிறார்கள். அதற்கான காரணம் என்ன என்று பார்த்தால், எவ்வளவோ உணவுப் பொருட்கள் சொல்லப்பட்டிருந்தாலும் நமக்கு அந்த பாரம்பரியமான உணவுப் பொருட்கள் இந்நோயை கட்டுப்படுத்தக் கூடிய தன்மையில் இருந்தாலும் கூட அந்த உணவுகளை நாம் எடுக்கத் தயாராக இன்று இல்லை.
ஏன் என்றால் நாம் அந்த அளவுக்கு அரிசியை பழக்கப்படுத்தி வைத்திருக்கிறோம். அரிசியிலிருந்து கிடைக்கக் கூடிய Carbohydrates என்ற மாவுச்சத்து மிகவும் அதிகமாக இருகிறது. இந்த அரிசியையே தொடர்ந்து 2 வேளை அல்லது 3 வேளையாகச் சாப்பிடக் கூடிய மக்களுக்கு என்ன ஆகும்? நீரிழிவு தொடர்ந்து உடலிலேயே இருக்க ஆரம்பிக்கிறது. நீரிழிவைக் கட்டுப்படுத்த வேண்டும் என்றால் கண்டிப்பாக அது உணவுகளால் தான் சாத்தியமாகும். இந்த அவசர கால யுகத்தில், உணவுப் பொருட்களில் நிறைய உடனடி உணவுகளைப் (Instant food) பயன்படுத்துகிறோம்.
என்னுடைய நீரிழிவுக்கான மருத்துவ சிகிச்சையின் போது நான் பலரையும் பார்த்திருக்கிறேன், காலை வேளையில் 2 பிரட்டையும், ஒரு கோக், பெப்சி, மிராண்டா போன்ற குளிர் பானத்தை குடிப்பவர்களுக்கு, ஒரு மாதமோ, இரண்டு மாதமோ அல்லது ஆறு மாதமோ இதையே பழக்கப்படுத்திவர்களுக்கெல்லாம் நீரிழிவு வந்திருக்கிறது. எனவே உணவில் நிறைய துரித உணவுகள், ரசாயன உணவுகள் எடுக்கக் கூடியவர்களுக்கு கண்டிப்பாக நீரிழிவு வருகிறது.
இதை எப்படி தடுக்கலாம், என்றால் மருந்து ஓரளவிற்கு கட்டுப்படுத்தத்தான் செய்யும், ஆனால் முழுமையாக குணப்படுத்திவிடாது. ஆனால் உணவுகளை அடையாளப்படுத்தி, தேர்ந்தெடுத்து சாப்பிடும் பொழுது சர்க்கரை நோயை முழுமையாக நாம் குணப்படுத்த முடியும். அன்றைய சித்தர்கள் சொன்ன மதுமேகந்தான் இன்று உலகையே ஆட்டிப் படைக்கக் கூடிய சர்க்கரை வியாதி.
இந்த சர்க்கரை நோய்க்கான காரணம் என்ன என்றால் அடித்துச் சொல்லலாம் உணவு முறைகளின் முரண்பாடுதான். இது பாரம்பரிய நோய், இது அம்மா அப்பாவுக்கு இருந்தால் நமக்கும் வரும் என்பது உண்மையாக இருந்தாலும் கூட அதைக் கண்டிப்பாகத் தடுக்க முடியும். எனவே அதற்கான உணவுகள் என்னென்ன? அதை எப்படியெல்லாம் நாம் பயன்படுத்தலாம் என்பதை தொடர்ந்து பார்க்கலாம்.
சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்த . . .
வெந்தயம்:
சர்க்கரை நோயை பிரதானமாக கட்டுப்படுத்தக் கூடிய தன்மை வெந்தயத்திற்கு உண்டு. வெந்தயத்தைப் பிரித்தால் வெந்த + அயம். வெந்த என்றால் பஸ்பமாகி விட்டது என்று அர்த்தம். அயம் என்றால் இரும்பு என்று பொருள். இரும்பை பஸ்பமாக்கக்கூடிய ஒரு பொருள் எது என்றால், அது வெந்தயம் தான். தொடர்ந்து வெந்தயத்தை வறுத்து வைத்துக் கொண்டு, தொடர்ந்து சாப்பிட்டுக் கொண்டே வந்தால் கூட நீரிழிவு நோய் முழுமையாகக் கட்டுப்படுத்தலாம்.
பாகற்காய்:
அடுத்து பாகற்காய். பாகற்காயை நன்கு காயவைத்துப் பொடி செய்து காலை, இரவு என்று இரண்டு வேளை தொடர்ந்து சாப்பிடக் கூடியவர்களுக்கு கண்டிப்பாகச் சர்க்கரை நோய் முழுமையாகக் குறையும். சர்க்கரை நோய் என்பது தனி நோய் கிடையாது. இது பல நோய்களுடைய சார்பு நோய் ஆகும்.
அதாவது முதலில் நீ செல் பின்னாடியே நான் வருகிறேன் என்று சொல்வது மாதிரி ஒருவருக்கு சர்க்கரை நோய் வர ஆரம்பித்தது என்றால் தொடர்ந்து ரத்த அழுத்தம் வரலாம், கொழுப்பு நோய் ,கொழுப்பு சீரற்ற நிலையில் மாறலாம். ரத்தத்தில் Try Glyceride என்கின்ற கொழுப்பு இருக்கிறது.
அதே மாதிரி LDL என்று சொல்லக் கூடிய கெட்ட கொழுப்பும் இருக்கிறது. இந்த இரண்டும் அதிகமாக மாறும் பொழுது இதயம் சார்ந்த நோயும் வரலாம். சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு இதயம் சார்ந்த நோய் வருவதற்கு வாய்ப்பு அதிகம் உண்டு. சர்க்கரை அதிகமாகி கட்டுப்படாத சூழலினால் சிறுநீரகப் பாதிப்பு சார்ந்த நோயும் வரலாம். இதனால் சிறுநீரக செயலிழப்பு கூட உண்டாகலாம்.
நினைவுத்திறன் குறைந்து போவது, மூளைத்திறன் குறைந்து போவது இப்படி பல நோய்களைக் கொண்டுவரக் கூடிய நோயாக சர்க்கரை நோய் உள்ளது. நீரிழிவு என்றால் உடலை நீராய் இழக்கச் செய்யக் கூடிய ஒரு வியாதி நீரிழிவாகும். நம் உடம்பில் இருக்கக் கூடிய அனைத்து ஆதாரங்களையும் சிறிது சிறிதாக வெளியே கொண்டு வந்து விடும். அதாவது எலும்பு நம் உடம்பிற்கு வன்மை தரக்கூடியதாக இருந்தால் கூட, அந்த எலும்பையே கரைக்கக் கூடிய தன்மை இந்த நீரிழிவுக்கு உண்டு.
ஆதலால் நீரிழிவை நாம் உண்ணும் உணவின் மூலம் கட்டுப்படுத்த வேண்டும். நீரிழிவு நம் உடம்பை மென்மையாக்குகிறது. அப்பொழுது நன்றாக உண்ணக்கூடிய உணவுப் பொருட்களைச் சாப்பிட வேண்டும். நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள், எந்த உணவுப் பொருட்களில் துவர்ப்பு சக்தி அதிகமாக இருக்கிறதோ அவைகள் நீரிழிவை கட்டுப்படுத்தும்.
வாழைப்பூ:
நீரிழிவு நோயாளி ஒருவர் வாழைப்பூவை கசாயம் செய்து சாப்பிட்டார் என்றால் கண்டிப்பாக நீரிழிவு கட்டுப்படும். ஆனால் வாழைப்பூவில் கடலைப்பருப்பைச் சேர்த்து இன்று நாம் பருப்பு வடையாகத்தான் சாப்பிடுகிறோம். இதே வாழைப்பூவுடன், சிறிது காய்ந்த மிளகாய் எல்லாம் சேர்த்து அரைத்து துவையல் மாதிரி செய்து தொடர்ந்து சாப்பிட்டு வரும் பொழுது சர்க்கரை நோய் கட்டுப்படும்.
தென்னைமரப் பூ:
அதே மாதிரி தென்னம்பாலைக்குள் இருக்கும் தென்னை மரத்துப் பூவை நன்றாகக் காயவைத்து, அதைப் பொடி செய்து காலையிலும், இரவிலும் தொடர்ந்து சாப்பிட்டு வந்தோம் என்றால் சர்க்கரை நோய் கட்டுப்படுவதுடன் சர்க்கரை நோயால் தளர்ந்து போன நரம்புகள் அனைத்தும் சரியாகிவிடும். இதனால் நம் கண் பார்வையும் தெளிவாக இருக்கும்.
நீரிழிவால் நரம்பு பாதிக்கப்படுவதால் கண்ணில் வரக்கூடிய நோய்கள் நிறைய வரும். அதே போல் நம் பாதங்களிலும் பல நோய் வரும். இவை அனைத்தையும் சரி செய்யக் கூடிய தன்மை தென்னம்பாலைக்குள் உள்ள தென்னைமரத்துப் பூவுக்கு உண்டு.
நெல்லி, கடுக்காய், தான்றிக்காய் :
அது போல் நெல்லிக்காய், கடுக்காய், தான்றிக்காய் இதையும் சம அளவில் கலந்து வைத்துத் தொடர்ந்து திரிபலா என்கிற சூரணத்தையும் சாப்பிடும் பொழுது நீரிழிவு முழுமையாகக் கட்டுப்படக்கூடிய ஒரு வாய்ப்பு உண்டு. அதே போல் இந்த சர்க்கரை நோய்க்கு என்ன செய்யலாம் என்றால், சமையலில் சீரகத்திற்குப் பதிலாக அல்லது சீரகத்துடன் கருஞ்சீரகத்தையும் சேர்த்து சமையலில் ஈடுபடுத்தும் பொழுது சர்க்கரைக்கு அற்புதமான ஒரு மருந்தாக இருக்கும்.
அதே போல் ரத்தத்தில் கெட்ட கொழுப்பு ( Try Glyceride) அதாவது இதயத்திற்கு செல்லக் கூடிய ரத்த நாளங்களில் அடிக்கக் கூடிய ஒரு கொழுப்பு ட்ரை க்லீசரைடு. உலகம் முழுக்க அதற்கான மருந்துகள் குறைவு. அந்த மருந்துகளை உபயோகப்படுத்தினால் அதற்கான பக்கவிளைவுகள் அதிகம். இதை முழுமையாக சரி செய்ய நம் நாட்டு கருவேப்பிலை, லவங்கப் பட்டை, வெந்தயம் இந்த மூன்றையும் சம அளவில் கலந்து வைத்துக் கொண்டு தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் கண்டிப்பாக அற்புதமான பலன் கிடைக்கும்.
அன்றைய மது மேகத்தில் சித்தர்கள் சொன்ன உணவுகள் எல்லாம் இதுதான். சித்தர்களுடைய விஞ்ஞான பார்வைக்கு ஒரு எடுத்துக்காட்டு சொல்லாம். அதாவது அன்றைய காலத்தில் மதுமேகம் வந்த நோயாளிகளுக்கு சித்தர்கள் கொடுத்த மருந்து பருத்தி கொட்டை, எள்ளுப் புண்ணாக்கு, கோரைக் கிழங்கு, ஆவாரம்பூ போன்றவைகளையே மருந்தாகக் கொடுத்தனர். என்ன இது எருமை மாடு சாப்பிடுவதை மருந்து எனச்சொல்கிறாரே என்று நினைத்தால் அது தவறு.
இந்த உலகத்தில் நீரிழிவு என்ற நோய் பரவத்தொடங்கிய போது இன்சுலின் குறைபாடு உள்ளவர்களுக்கு மாத்திரையால் ஒரு சிலருக்கு சர்க்கரை நோய் கட்டுப்படுத்தப்பட்டது. ஆனால் இன்னும் ஒரு சிலருக்கு மாத்திரை பலன் கொடுக்க வில்லை. அப்போது என்ன செய்தார்கள் என்றால் பன்றிகளுடைய கணையம், எருமை மாட்டுடைய கணையம் இந்த இரண்டு கணையத்திலிருந்து இன்சுலின் நுண்ணுயிர் எடுக்கப்பட்டு அது மனிதருக்கு ஏற்புடைய வகையில் இன்சுலினாக மாற்றப்பட்டு அதன் பிறகு, அதை மனிதர்களுக்கு மருந்தாகச் செலுத்தினார்கள்.
இப்பொழுது DNA கூட்டமைப்பு உள்ள human Insulin இன்று உலகம் முழுக்க வந்துவிட்டது. ஆனால் அதற்கு முன்பு கோரைக் கிழங்கையே பிரதானமாகச் சாப்பிடக் கூடிய பன்றிகளின் கணையத்திலிருந்து இன்சுலின் எடுக்கப்பட்டது, பருத்திக் கொட்டையையும், எள்ளுப் புண்ணாக்கையும் சாப்பிட்ட எருமை மாட்டுக் கணையத்திலிருந்து இன்சுலின் எடுக்கப்பட்டது. இதில் ஒரு ஆச்சர்யம் என்றால் சித்தர்களுக்கு எவ்வாறு இது தெரிந்தது என்று தெரியவில்லை. ஏன் என்றால் பிரதானமாக பருத்திக் கொட்டையிலேயும், கோரைக் கிழங்கிலேயும், எள்ளுப் புண்ணாக்கிலேயும் இன்சுலின் அளவு அப்படியே இருக்கிறது. அதில் உள்ள கந்தகச் சத்து அப்படியே வரும். நம் உடம்பில் இருக்கக் கூடிய கார்போ ஹைட்ரேட்- ஐ முழுமையாகக் கரைக்கக் கூடிய தன்மை இதற்கு உண்டு.
அதனால் தான் இன்றும் எனது கிராமத்தில் சர்க்கரை நோய் என்று கூறினால் யாரும் தொடர்ந்து மாத்திரை சாப்பிடுபவர்களை பார்க்கவே முடியாது. மிக எளிமையாக அரைக் கிலோ எள்ளு புண்ணாக்கு, அரை கிலோ பருத்திக் கொட்டை, அரை கிலோ ஆவாரம்பூ , 100 கிராம் கருஞ்சீரகம் இவற்றை உரலில் இட்டு இடித்து வைத்துக் கொள்கிறார்கள். இதில் ஒரு கையளவு எடுத்து சிறிது கருப்பட்டி, பனைவெல்லம் சேர்த்து இக்கலவையை நன்கு கொதிக்க வைத்து, அதை நன்றாக வடிகட்டி காலையிலேயும், இரவிலேயும் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோய் தானாகவே சரியாகிவிடும்.
சர்க்கரை நோய் வந்தவர்கள் எந்த மருந்தை எடுத்தும் கட்டுப்படுத்திக் கொள்ள முடியும். அதற்குத் தகுந்த மாதிரி உடலில் வியர்வை உண்டாக்க வேண்டும். அதுதான் பிரதானமானது. நாம் சிறிது நடைப்பயிற்சி கூட செய்யாமல் இருப்பதனால் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்த முடியாது. ஒரு இலகுவான நடைப்பயிற்சி, உடலை வருத்திச் செய்யக் கூடிய சில வேலை இவற்றையெல்லாம் செய்து வியர்வையை உண்டாக்கிக் கொள்ளவேண்டும். குறைந்தது 50 மில்லி அளவாவது சர்க்கரை நோயாளிகளுக்கு வியர்வை வர வேண்டும்.
இதில் இன்னும் பெரிய விசயம் என்னவென்றால் நீரிழிவால் வரக்கூடிய கால் புண்ணானது குழிப் புண்ணாக மாறிவிடும். அந்தப் புண்ணுக்கு ஆங்கில மருத்துவத்தில் டின்ஜர், டெட்டால், மற்றும் சில மருந்துகளையும் சேர்த்து குணப்படுத்துகிறோம் பேர்வழி என்று சொல்லி, பிறகு காலையே வெட்டக் கூடிய ஒரு நிலை வருகிறது. கிராமங்களில் வெறும் ஆவார இலையை அவித்து அந்த புண்ணில் வைத்து கட்டுகிறார்கள். அதன் பின் ஒரு வாரம் அல்லது 10 நாட்களில் அப்புண் குணமாகி விடுகிறது அவ்வளவு அதிசயமான விசயம் எல்லாம் சித்தர்கள் கூறியிருக்கிறார்கள்.
சர்க்கரை நோயில் ஆவாரம்பூவிற்கு ஒரு பிரதானமான இடம் இருக்கிறது. அதில் தங்கத்தின் சத்து இருப்பதாக சித்தர்கள் கூறுகிறார்கள். ஆனால் இன்றைய விஞ்ஞானம் இப்பூவை ஆராய்ச்சி செய்து பார்க்கும் பொழுது அதில் தங்கத்தின் கூறுகள் இருப்பதை ஒத்துக் கொள்கிறது. ஆவாரம்பூ இந்நோய்க்கு அவ்வளவு அற்புதமானது. அதனால் சித்தர்கள் கூறுவார்கள் “ஆவாரை பூத்திருக்கச் சாவாரைக் கண்டதுண்டோ” என்று. இந்த ஆவாரையைத் தொடர்ந்து சாப்பிடக் கூடியவர்களுக்கு சாவே இல்லை என்று கூறுகிறார்கள். சர்க்கரை நோயில் அது முழுக்க முழுக்க உண்மை.
இன்று சர்க்கரை நோய்க்கு இனிப்புத் துளசி சாப்பிடுபவர்கள் நிறைய நபர்களை பார்த்திருக்கிறோம். ஆனால் ஆவாரம் பூவை தேநீராகச் சாப்பிடும் பொழுது சர்க்கரை நோய் கட்டுப்படுவதை நாங்கள் கண் கூடாக காண்கிறோம். சத்தாகச் சாப்பிடுங்கள் சர்க்கரையைக் கட்டுபடுத்துங்கள் என்று நாங்கள் கூறுகிறோம். உணவை கட்டுப்படுத்தும் பொழுது அந்த உணவின் ஊட்டமேல்லாம் குறைய ஆரம்பிக்கிறது. ஆக தேர்ந்தெடுத்த உணவை நாம் எடுக்கும் பொழுது நல்ல முழுமையான பலன் கண்டிப்பாக கிடைக்கும்.
ஆவாரம்பூ, சுக்கு, ஏலக்காய் இவற்றை தொடர்ந்து கொதிக்கவைத்து கசாயமாகச் சாப்பிடும்பொழுது சர்க்கரை நோய் முழுமையாக கட்டுப்படும்.இது மிக எளிமையான வழிமுறைஆகும். தேநீர் சாப்பிடக் கூடிய அதே சுவை இதிலேயும் இருக்கும். ஆவாரம்பூ தேநீர் சாப்பிட்டுப் பாருங்கள் நல்ல பலன் கிடைக்கும். இன்னும் சர்க்கரை நோய்க்கு சிறுகுருஞ்சான், நாவல் கொட்டை, மருதம்பட்டை, வேப்பம்பட்டை, கடலலஞ்சில் இவை ஐந்தையும் சம அளவு கலந்து, பொடி செய்து வைத்துகொண்டு காலை, இரவு நேரம் தொடர்ந்து சாப்ப்பிட்டுக் கொண்டு வந்தால் சர்க்கரை நோய்க்கு நல்ல பலன் இருக்கும்.
நீரிழிவு என்றால் உடம்பை மென்மைப் படுத்தக் கூடிய ஒரு வியாதி ஆகும், அந்த நீரிழிவைக் கட்டுப்படுத்தவேண்டும். அப்பொழுதுதான் உடம்பு நல்ல சக்தி பெரும். நீரிழிவு நோயாளிகள் உடம்பில் அதிகம் நீர்ச்சத்து இழக்காமல், தண்ணீர் தாகம் அதிகம் இல்லாமல், நாவு வறட்சி இல்லாமல் இருக்க கவனம் செலுத்த வேண்டும். நாம் மேலே கூறிய உணவுகளை எல்லாம் தொடர்ந்து எடுத்துக்கொள்ளும் பொழுது நல்ல பலன் கிடைக்கும்.
நாம் உணவில் நிறைய பிஞ்சுக் காய்கறிகளான முருங்கைப் பிஞ்சு, பீர்க்காய்ப் பிஞ்சு , புடலங்காய்ப் பிஞ்சு, பீன்ஸ், அவரை இவை அனைத்தையும் தொடர்ந்து சாப்பிட்டுக் கொண்டே வாருங்கள். இன்று இருக்கும் அலோபதி மருத்துவர்கள் சர்க்கரை நோயாளிகளிடம் கேரட் சாப்பிடாதீர்கள், அது சர்க்கரை நோய்க்கு நல்லதில்லை என்று கூறி வருகிறார்கள். அவர்கள் அப்படிச் சொன்னதனால் 10 வருடமோ அல்லது 15 வருடமோ கேரட்டையே சாப்பிடாத சக்கரை நோயாளிகள் எனக்கு தெரிந்து நிறைய பேர் இருக்கிறார்கள். கேரட் கண்களுக்கு மிகவும் நல்லது.
இதில் பீட்டா கரோடினாய்ஸ் எனும் ஊட்டச் சத்து இருப்பதனால் நம் தோல் பகுதிக்கு கீழ் இருக்கக் கூடிய தசை பகுதியில் சக்தியை சேர்த்து வைக்கக் கூடிய தன்மை கேரட்டிற்கு உண்டு. அதனால் தாராளமாக நீரிழிவு நோயாளிகள் கேரட்டைச் சாப்பிடலாம் தவறில்லை.
அது போல் தமிழ் நாட்டில் இருக்கக் கூடிய ஆங்கில மருத்துவர்கள் சர்க்கரை நோயாளிகளை பார்த்து இளநீர் சாப்பிடாதீர்கள் என்று கூறி திசை திருப்புகிறார்கள். இளநீர் சாப்பிட்டால் கண்டிப்பாக நீரிழிவு அதிகமாகிவிடும் என்று கூறி நோயாளிகளைப் பயமுறுத்துகிறார்கள். இது தவறான செயலாகும். நான் அவர்களைப் பார்த்துக் கேட்கிறேன், கரும்புச் சாற்றிலிருந்து சர்க்கரை தயார் செய்யலாம், இளநீரிலிருந்து சர்க்கரை தயார் பண்ண முடியுமா? இதை யோசித்து பாருங்கள். இளநீரில் அத்தனை கால்சியமும் இருக்கிறது. அச்சத்தில் புண்களை ஆற்றக் கூடிய தன்மை இருக்கிறது. ஒரு தட்டுச் சாப்பாட்டில் இருக்கக் கூடிய கார்போ ஹைட்ரேட்ஸ் இளநீரில்கிடையாது.
அதனால் என்னைப் பார்க்க வரும் நோயாளிகளுக்கு நான் கூறுவது, இளநீரில் வெந்தயத்தை ஊற வைத்து, அந்த வெந்தயத்தையும் இளநீரையும் நன்கு கலந்து சாப்பிடுங்கள் என்கிறேன். அப்படிச் சாப்பிட்டால் சர்க்கரை முழுமையாகக் கட்டுப்படக் கூடிய வாய்ப்பு உள்ளது. அதே மாதிரி மருதம்பட்டையைக் கசாயம் செய்து தொடர்ந்து சாப்பிடும் பொழுது நல்ல பலன் கிடைக்கும்.
நாம் உண்ணும் உணவில் பல்வேறு உணவுகளைப் பன்னாட்டு நிறுவனங்கள் திணிக்கத் தயாராகி கிட்டத்தட்ட 17 வகையான நூடுல்ஸ்சில் அதிக பொட்டாசியம் சத்து , அதிக சோடியம் சத்து ஆகியவை அதிகமாக இருக்கிறது கூவிக் கூவி விற்பனை செய்து நம்மை வாங்க வைக்கிறது. இதை இந்திய விஞ்ஞானிகள் ஆய்வு செய்து, இந்த பன்னாட்டு உணவுகள் உண்பதற்கு ஏற்ற உணவுகள் அல்ல, இவைகள் பக்க விளைவுகளை ஏற்படுத்தும் ஆதாலால் இதைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று சொன்னால் கூட, இவைகளை நிறுத்துவதற்கு எந்த அரசும் தயாராக இல்லை. ஏன் என்றால் பன்னாட்டு நிறுவனங்கள் கொடுக்கக் கூடிய மிகைமிஞ்சிய வரியே இதற்குக் காரணம் ஆகும்.
இந்தத் தொகை பெரிய தொகையாக ஆளுகின்றவர்களுக்கு தெரிவதால் மக்களுடைய அடிப்படை ஆரோக்கியத்தைப் பற்றி எந்தக் கவலையும் இல்லாத ஒரு சூழல் இருக்கிறது. ஆக ஒவ்வொரு தனி மனிதனும் தனக்கான விழிப்புணர்வை அவன்தான் தேடி எடுத்துக் கொள்ள வேண்டும். ஆரோக்கியமான வாழ்விற்கு உணவுக் கட்டுப்பாடு என்பது கண்டிப்பாக வேண்டும். உணவைத் தேர்ந்தெடுக்க வேண்டிய விசயமும் நம் கையில் தான் இருக்கிறது.
சித்தர்கள் சொன்ன சிறு தானியங்கள் வரகரிசி, திணை அரிசி, குதுரவாலி, சாமை எல்லாமே நார்ச்சத்து உள்ள அற்புதமான உணவுகள். இந்த உணவுகளை ஒரு வேளையோ, இரு வேளையோ சர்க்கரை நோயாளிகள் தொடர்ந்து சாப்பிடும் பொழுது நோய் கட்டுப்படக் கூடிய ஒரு தன்மை உண்டு. சர்க்கரை நோய் வந்து விட்டாலே உடலில் நார்ச்சத்து, இரும்புச்சத்து, சுண்ணச்சத்து இவைகள் குறைந்து விடும். இவற்றை ஈடுகட்ட துவர்ப்பான உணவுகளை எடுத்துக் கொண்டால் சர்க்கரையை முழுமையாகக் கட்டுப்படுத்த முடியும்.
இந்தியாவானது இன்று உலகத் தாயாரிப்புகளை விற்கும் பெரும் வணிகச் சந்தையாக, வளர்ந்த நாடுகளுக்கென மாறிவிட்டது. அதனால் தான் இங்கு நோய் மறைமுகமாக விதைக்கப்படுகிறது. அந்த நோய்களை இங்கு விதைத்து, மறைமுகமாக இங்குள்ள நிதி ஆதாரங்கள் கொள்ளயடிக்கப்படுகிறது. எனவே நாம் தான் நுகர்ர்வுப் பொருட்களை வாங்கும் பொது மிகக்கவனமாக இருக்க வேண்டும்.
2007 கணக்குப்படி இந்தியாவில் சர்க்கரை வியாதிக்கான வணிக மதிப்பு 700 கோடி. அமெரிக்காவின் எலிலில்லி என்ற நிறுவனம் தயாரிக்கின்ற மருந்துகள் இங்கு மட்டும் 700 கோடி ரூபாய்க்கு விற்பனையாகக் கூடிய வணிகச் சந்தையாக நம் நாடு இருக்கிறது.. இது இன்று கிட்டத்தட்ட 1000 கோடியைத் தாண்டி சென்றிருக்கும். அதனால் நம்முடைய நிதி ஆதாரங்கள் கொள்ளயடிக்கப்படாமல், நம்முடைய நாடு வளமையான நாடாக மாற வேண்டும் என்றால்,நாம் நல்ல உடல் நலத்தோடு, உடல் வளத்தோடு இருக்க வேண்டும்.
அவ்வாறு மாறும் பொழுதுதான் ஒரு முழுமையான, ஒரு ஆரோக்கியமான இந்தியாவை, ஒரு ஆரோக்கியமான தமிழ்ச் சமூகத்தை நாம் படைக்க முடியும். எப்பவுமே நோய்வாய்ப்பட்டவனிடம் படைப்பாற்றல் குறைந்து விடும். ஒரு நல்ல ஆற்றல் உள்ள, படைப்புத்திறன் உள்ள தமிழ் சமூகம் மறுபடியும் வரவேண்டும், வளரவேண்டும் என்றால் சர்க்கரையை கட்டுப்படுத்த வேண்டும்.
அவ்வாறு கட்டுப்படுத்துவதற்கு உணவே மருந்து மருந்தே உணவு என்ற சித்தர்கள் கோட்பாட்டின் படி அனைவரும் முயற்சி செய்யவேண்டும். நான் கூறிய உணவுப் பொருட்கள், மருந்துப் பொருட்கள், உணவே அடிப்படையாகக் கொண்ட மருந்துப் பொருட்கள் எல்லாவற்றையுமே தொடர்ந்து சாப்பிடுங்கள். அடுத்த முறை சிறகு இணைய இதழில் சர்க்கரை நோயினால் வரக் கூடிய சார்பு நோய்கள் பற்றி விரிவாக எடுத்தியம்ப இருக்கிறேன்.
சர்க்கரை நோய் வந்தவர்களுக்கு ஆஸ்துமா, இதய நோய், சிறுநீரக நோய் ஆகிய நோய்களும் துணை நோய்களாக இருக்கிறது.

தமிழகத்தில் முதன் முறையாக பாதிரி யார்கள் உள்பட நெல்லை, தூத்துக் குடி மாவட்டத்தை சேர்ந்த 185 தலித் கிறிஸ்துவ குடும்பத்தினர் ஆயிரம் பேர் புனித நீர் தெளித்து இந்துக்களாக மாற்றப்பட்டனர்

தமிழகத்தில் முதன் முறையாக பாதிரி யார்கள் உள்பட நெல்லை, தூத்துக் குடி மாவட்டத்தை சேர்ந்த 185 தலித் கிறிஸ்துவ குடும்பத்தினர் ‘தாய் மதம் திரும்பும் நிகழ்ச்சி’ அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு நெல்லையில் நடந்தது. இதில் ஆயிரம் பேர் புனித நீர் தெளித்து இந்துக்களாக மாற்றப்பட்டனர். குமரி, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள நாங்குநேரி, சாத் தான்குளம், திசையன் விளை, வள்ளி யூர், ராதா புரம் உள்ளிட்ட பல பகுதி களைச் சேர்ந்த 185 தலித் கிறிஸ்துவ குடும்பத்தை சேர்ந்த சுமார் 1000 பேர் தாய் மதமான இந்து சமயத்திற்கு திரும்ப முடிவு செய்தனர். இதையடுத்து இந்து மக்கள் கட்சி சார்பில் அவர்கள் தாய் மதம் திரும்புவதற்கான சட்டப் பூர்வ நடவடிக் கைகள் மேற்கொள்ளப் பட்டன. இந்நிகழ்ச்சி முதலில் நெல்லை டவுன் நெல்லையப்பர் கோயிலில் கடந்த மகா சிவராத்திரி நாளன்று நடைபெறு வதாக இருந்தது. ஆனால் கோயில் சார்ந்த நிகழ்ச்சிகள் மட்டுமே கோயில் கலையரங்கில் வைத்து நடத்த முடியும் என்றும் தனியார் நிகழ்ச்சி கள் ஏதும் கோயிலுனுள் நடத்த அனுமதிக்க முடியாது என்று கோயில் நிர்வாகம் தடைவிதித்தது. இதனை தொடர்ந்து அம்பேத்கர் பிறந்தநாளான தாய்மதம் திரும்பும் நிகழ்ச்சி நெல்லை ஜங்ஷன் சங்கீத சபாவில் இன்று காலை நடந்தது. காலை 6மணிக்கு கணபதி ஹோமத்துடன் நிகழ்ச்சி தொடங்கியது. பின்னர் தாய்மதம் திரும் புபவர்களுக்காக வேங்கட சாஸ்திரிகள் தலைமையில் பிராயச்சித்த யாகம் நடத்தப்பட்டது. பின்னர் தாய்மதம் திரும்புபவர்கள் இந்து மக்கள் கட்சி நிர்வாகிகள் தலைமையில் நெல்லையில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியயதை செலுத்தினர்.அதைத்தொடர்ந்து கங்கை, தாமிர பரணி, காவரி, கிருஷ்ணா, பிரம்ம5-ம் பக்கம் பார்க்க புத்திரா, நர்மதா, கோதா வரி, சிந்து, சேது சமுத்திரம் ஆகிய புனித நீர் தெளித்து புனிதப்படுத்தும் சடங்கு நடந்தது. பின்னர் சைவம், வைணவம், சக்தி வழிபாடுகளை விரும்புபவர்களுக்கு அவர்களின் விருப்பத்திற் கேற்ற சமய சின்னங்கள் இடப்பட்டன.

பின்னர் அவர்களின் விருப்பப்படி இந்து பெயர்கள் சூட்டப் பட்டன. இதில் பெரும்பாலும் அவரவர் ராசி பலன்கள் மற்றும் முன்னோர்களின் நினைவுப் பெயர்கள் சூட்டப்பட் டன. பின்னர் அவர்களுக்கு துறவிகள், சமய பெரியோர்கள் தீட்சை வழங்கினர். மதமாற்றும் சடங்கு சட்டப்பூர்வமான முறை யில் நடைபெற்றது. குமரி மாவட்டத்தை சேர்ந்த பாதிரியார் உள்பட 2 பாதிரியார்களும் இந்துக்களாக மதம் மாறினர்.மதம் மாறியவர்களுக்கு சட்டப் பூர்வ அங்கீகாரம் பெறு வதற்காக நூற்றாண்டு பழமை வாய்ந்த செங் கோல் மடத்திடம் இருந்து மதம் மாறியதற்கான சான்றிதழ் பெற்று பின்னர் அரசிதழில் பதிவு செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சிகளை தொடர்ந்து இந்து சமயம் தொடர்பான கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் இதுவரை கிறிஸ்தவ மத சடங்குகள் மற்றும் கோட்பாடுகளை மட்டுமே தெரிந்திருந்தவர்களுக்கு இந்து மதம் குறித்தும் அதன் சமய, நம்பிக்கை சடங்குகள், வழிபாடு முறைகள் உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆன்மீகவாதிகள், மடாதிபதிகள் விளக்கமளித்தனர். இதையடுத்து மாலை 4 மணிக்கு சுவாமி சங்கரானந்தா தலைமையில் தாய் மதம் திரும்பியவர்கள் அனைவரும் வாகனத்தில் ஊர்வலமாகச் சென்று நெல்லையப்பர் கோயிலுக்குள் ஆலயப் பிரவேசம் செய்யும் நிகழ்ச்சி நடக்கிறது.தாய் மதம் திரும்பும் நிகழ்ச்சியில் தமிழக துறவியர் பேரவை அமைப்பாளர் சதாசிவானந்தா சுவாமிகள், ராகவானந்தா சுவாமிகள், சங்கரானந்தா சுவாமிகள், ஏழை கிறிஸ்து மக்கள் இயக்க மாநில செயலாளர் நரேஷ் அம்பேத்கர், இந்து மக்கள் கட்சி நெல்லை மாவட்ட தலைவர் கணேசன், மாவட்ட அமைப்பாளர் முருகானந்தம், தேவர் பேரவை மணி உள்பட பலர் கலந்து கொண்டனர். தலித் கிறிஸ்தவர்கள் தாய் மதம் திரும்பும் நிகழ்ச்சியை முன்னிட்டு நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் மஞ்சுநாதா உத்தரவின் பேரில் நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ராமர் பெயருடன் ஆரம்பம் நெல்லை சங்கீத சபாவில் இன்று தலித் கிறிஸ்தவர்கள் மீண்டும் இந்து மதம் திரும்பும் நிகழ்ச்சி நடந்தது. இதில் ஆயிரம் பேர் மதமாற்றம் செய்யப்பட்டனர். இன்று ராமநவமி என்பதால் முதலில் மதம் மாறியவருக்கு ‘ஸ்ரீராமன்’ பெயர் சூட்டப்பட்டது

இந்து மதம் பற்றிய ஆராய்ச்சி படிப்பு !!

அமெரிக்காவின் அல்மெடா பல்கலைக்கழகம் ஆன்லைன் வழியில் இந்து மதம் பற்றிய பி.எச்.டி. (ஆராய்ச்சி) படிப்பை அறிமுகப்படுத்தியுள்ளது. இதுவரை அமெரிக்கா உட்பட மேற்கத்திய நாட்டினர் இந்து மதம் பற்றி அறியாமல் இருந்தனர்.

ஆனால், இந்து மதத்தில் பல்வேறு சிறப்புகள் இருப்பதை உணர்ந்த அவர்கள் அதுபற்றி அறிந்து கொள்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதையடுத்து, அமெரிக்காவின் அமெல்டா பல்கலைக்கழக இந்து மதம் பற்றிய பி.எச்.டி. படிப்பை ஆன்லைனில் (Online) அறிமுகப்படுத்தி உள்ளது.

இது குறித்து அந்த பல்கலைக்கழகம் கூறியிருப்பதாவது, இந்து மதம், ஆழ்ந்த வரலாறு மற்றும் ஆன்மீகத்துடன் தொடர் புடையது.
ஆழ்ந்த மனோதத்துவ அறிவு கொண்டது. எங்கள் பல்கலைக்கழகத்தின் மூலம் இந்துமதம் பற்றிய ஆராய்ச்சி படிப்பை அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சி அடைகிறோம்.

இந்த படிப்பு இந்து மத மதிப்பீடு, முக்கிய நம்பிக்கைகள், பண்பாடு, வழிபாட்டு சடங்குகள், வழி தோன்றலாக வரும் பயிற்சிகள் உள்ளடக்கியதாக இருக்கும். கர்மா, வர்ணாஸ்ரமம், தர்மம் ஆகியவற்றை கடந்து, வேதம் தொடர்பான படிப்பாகவும் இது இருக்கும். வாழ்க்கை சுழற்சி, வேத தத்துவங்கள், கிழக்கு மற்றும் மேற்கத்திய நாடுகளில் எந்த அளவிற்கு இந்து மத கொள்கைகள் ஏற்று கொள்ளப்பட்டுள்ளன ஆகியவையும் பாடமாக உள்ளன.

அரிய காணொளிப்பதிவு : தில்லானா மோகனாம்பாள் திரைபடத்தை எப்படி எடுத்தார்கள் என்று இந்த காணோளியில் பாருங்கள். அவர்களின் நடிப்பும் திறமையும், அற்புதமாக இருக்கும்.

குறிப்பு: தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த காணோளியில் 30 வது நோடியிலிருந்துதான் படம் வருகிறது.

Chennakesava Temple (also called Kesava or Keshava temple)

Somanathapura (ಸೋಮನಾಥಪುರ) is a town located 35 km from the historic Mysore city in Mysore district, Karnataka state, India. Somanathapura is famous for the Chennakesava Temple (also called Kesava or Keshava temple) built by Soma, a Dandanayaka (commander) in 1268 CE under Hoysala Empire King Narasimha III, when the Hoysalas were the major power in South India.

The Keshava temple is one of the finest and most complete examples of Hoysala architecture and is in a very well preserved condition. The temple is in the care of the Archeological Survey of India as a protected heritage site.

இந்த வீடியோ பதிவு பழுதடைந்த சிறுநீரகத்தை அறுவை சிகிச்சை இல்லாமல் குணப்படுத்தும் ஒரு முறையாகும்.