Search This Blog

Tuesday, September 23, 2014

Disposing the mind

By Chandrasekharendra Saraswathi Mahaswamiji

Mind refuses to be disposed off. What exactly is this mind? It is the instrument which creates thoughts. If the creation of thoughts stops, mind will also not be there. But we are not able to stop the creation of thoughts. All the time it is galloping to go somewhere.

We go through lots of experiences and enjoyments. We also keep seeing them; those of this birth that we know, and many more in the other births that we do not know. Each of them has left an impression in our mind. They keep running in our mind and sprout numberless thoughts.

It is like the smell that persists in the bottle in which we kept spicy asafoetida. So also even after we have gone through experiences and enjoyments, their smell persists in our mind. This is what is called VAsanA, or JanmAntara VAsanA (VAsanA that comes from other births), or SamskAra VAsanA.

What does it do? It keeps surfacing thoughts about that enjoyment and becomes the cause for further thoughts about how to have that experience again. These thoughts are the plans which the mind makes. This ‘smell’ of the past has to subside. That is what is called ‘VAsanA-kshhayam’ (Death of the VAsanA). And that is the ‘disposal of the mind’!

‘Disposal’ implies the ‘end’. What keeps running all the time has an end when it stops running. When a large flow of water is dammed, the flow stops. In the same way when the flow of the mind is stopped, it means that is the end of the mind.

When I say mind is stilled or stopped I do not mean the staying or resting of the mind on one object. That is something different.

Here when I say the mind is stopped or stilled, I mean something else. When the mind stays on some one object, it means the mind is fully occupied with that object. No other object can have then a place in the mind.

Even to keep the mind still like that is certainly a difficult process. This is actually the penultimate step to ‘dispose off’ the mind. When a wild animal is jumping and running all around, how do you shoot it? It is difficult. But when it is made to stay at one place, we can easily shoot it.

Similarly the mind that is running in all directions should be made to stay at one place in one thought. It does not mean the mind has disappeared then. No, the mind is still there.
Only instead of dwelling on various things it is now full of one and only one thought. This is the prerequisite to what I call the ‘disposal’ of the mind. After this the mind has to be vanquished totally. That is when Realisation takes place -- Realisation of the Atman. In other words the being as a JIva goes and the being as Brahman sprouts.

This process of stopping the mind at one single thought and then vanquishing even that thought in order to dispose off the mind along with its roots is a Himalayan achievement. Our scriptures very often refer to “anAdyavidyA-vAsanayA”, meaning “because of vAsanAs of ignorance going back to beginningless antiquity”. This is the reason for the dirt of the mind being so thick and dense. Removal of that dirt is no doubt a most difficult job.

Monday, September 22, 2014

மைக்கண்ணாடி - ஜார்ஜ் லூயி போர்ஹே தமிழில் - அச்சுதன் அடுக்கா

தனது நாட்டை எகிப்திய வரி வசூலிப்பவர்களின் பேராசைக்கு ஒப்படைத்தவனும், 1842ஆம் வருடம் 14வது பர்மகாட் சந்திர தினத்தில் அரண்மனை அறையொன்றில் இறந்தவனுமான துஷ்டன் யாகப்தான் சூடானை ஆண்டவர்களில் கொடூரமானவன் என்பதை எல்லாச் சரித்திரமும் அறியும். மாந்திரீகன் அப்-எர்-ரக்மான் அல்-மஸ்முதி (இப்பெயரை ’கருணை உள்ளவர்களின் வேலைக்காரன்’ என்று வேண்டுமானால் மொழிபெயர்க்கலாம்) அவனைக் குறுவாளால் அல்லது விஷத்தால் jorge-luis-borgesகொன்றான் என்று நம்புபவர்களும் இருக்கிறார்கள். அவன் துஷ்டனான போதிலும், அவன் இயற்கையான மரணத்தில் இறந்து போயிருப்பதும் சாத்தியம் என்று எண்ணுபவர்களும் இருக்கிறார்கள். காப்டன் ரிச்சர்ட் எப்.பர்டன் அம்மாந்திரீகனை 1853ல் சந்தித்துப் பேசினார். நான் கீழே தந்திருப்பது அவன் நினைவு கூர்ந்த அச் சம்பவம்:
எனது சகோதரன் இப்ராஹிமினால் அவனை ஏமாற்றிய குர்டோஃபானின் ஏமாற்றுக்காரத் தலைவர்களின் வஞ்சகம் நிறைந்த உபயோகமற்ற துணையோடு நடத்தப்பட்ட ரகசிய நடவடிக்கையின் விளைவாகத்தான், துஷ்டன் யாகப்பின் கோட்டையில் நான் சிறைவாசம் அனுபவித்துக் கொண்டிருந்தேன் என்பது உண்மை. ரத்தம் படிந்த நீதியில் என் சகோதரன் வாளுக்கிரையானான். ஆனால் நான், நானொரு மாந்திரீகன் என்றும், எனக்கு வாழ்வு தருவானானால் மந்திர விளக்கைக் காட்டிலும் அற்புதமான வடிவங்களையும் தோற்றங்களையும் அவனுக்குக் காண்பிக்கிறேன் என்றும் சொல்லி அத் துஷ்டனின் வெறுக்கப்பட்ட கால்களில் விழுந்தேன். அந்தக் கொடுங்கோலன் உடனடியாக நிரூபணம் கேட்டான். ஒரு நாணல் பேனா, ஒரு கத்திரி, ஒரு பெரிய வெனிஸ் காகிதம், ஒரு மைச் செப்பு, கனல்கள் கொண்ட தட்டு, கொஞ்சம் தனியா விதைகள், ஒரு அவுன்ஸ் பென்சோயின் இவற்றைக் கேட்டேன். காகிதத்தை ஆறு துண்டாக்கினேன். முதல் ஐந்து துண்டுகளில் மந்திரங்களும், பிரார்த்தனையும் எழுதினேன். எஞ்சிய துண்டில் புனித குரானிலிருந்து எடுக்கப்பட்ட கீழ்க்கண்ட வார்த்தைகளை எழுதினேன்: ‘உனது முகத்திரையை உன்னிலிருந்து மாற்றி விட்டோம்: இன்று உனது பார்வை துளைத்துக் கொண்டிருக்கிறது.’ பின், யாகப்பின் வலக்கையில் ஓர் மாந்திரீக வட்டம் வரைந்தேன். கையைக் குழிக்கச் சொல்லி, அதன் நடுவில் மை விட்டேன். அவன் பிரதிபலிப்பதைப் பார்க்கும்படியாக இருக்கிறதா என்று கேட்டேன். இருக்கிறதென்றான். தலையைத் தூக்க வேண்டாம் என்று சொன்னேன். கனல் தட்டில் பென்சோயினையும், தனியா விதைகளையும் இட்டேன். கனலில் பிரார்த்தனைகளைச் சொன்னேன். அடுத்ததாக, அவன் பார்க்க விரும்பும் ரூபத்தின் பெயரைச் சொல்லச் சொன்னேன். அவன் ஒரு கணம் யோசித்து சொன்னான். ‘ஓர் காட்டுக்குதிரை, பாலைவன எல்லைகளில் மேய்பவற்றில் மிகச் சிறந்தது.’ முதலில், அவன் ஒரு அமைதியான பசும் மேய்ச்சல் நிலத்தைப் பார்த்தான். ஒரு நிமிடத்திற்குப் பிறகு, சிறுத்தையின் அசைவுகளும், முகத்தில் ஒரு வெண் புள்ளியும் கொண்ட குதிரை நெருங்கி வருவதைப் பார்த்தான். அதைப்போன்ற வலிமையுள்ள குதிரைக் கூட்டம் ஒன்றைப் பார்க்கக் கேட்டான். தொடுவானில் தூசுப்படலத்தைப் பார்த்தான். பின் குதிரைக் கூட்டம். இப்பொழுதுதன் எனது வாழ்வு காப்பாற்றப்பட்டதென்றறிந்தேன்.
அன்றிலிருந்து, கீழ்வானில் முதல் ஒளிகிரகணம் தோன்றும் பொழுதில், இரண்டு படைவீரர்கள் என் சிறைக்கூடத்திற்கு வருவார்கள். சாம்பிராணி, கனல் தட்டு, மை இவைகள் ஏற்கனவே தயாராக இருக்கும். துஷ்டனின் படுக்கையறைக்கு என்னை அழைத்துச் செல்வார்கள். உலகில் புலனாகும் எல்லாப் பொருள்களையும் பார்க்கக்கேட்டான். நானும் காண்பித்தேன். நான் இன்னும் வெறுக்கும் அந்த மனிதன் தன் உள்ளங்கையில் இப்போது இறந்து போயிருக்கும் மனிதர்கள் பார்த்திருப்பவைகளையும், இப்போது வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் பார்த்திருப்பவைகளையும் கொண்டிருந்தான்; நகரங்கள், காலநிலைகள், பூமியைப் பிரித்திருக்கும் ராஜ்ஜியங்கள்; தத்தமது கடல்களில் ஓடும் கப்பல்கள்; போர், இசை மற்றும் அறுவைக் கருவிகள்; அழகான பெண்கள்; ஸ்திரமான நட்சத்திரங்களும் கோள்களும்; கடவுளற்ற மனிதர்கள் அருவருக்கத்தக்க அவர்களின் படங்களைத் தீட்ட உபயோகிக்கும் வண்ணங்கள்; சுரங்கங்கள், எந்திரத் தளவாடங்கள், தங்களுக்குள் பூட்டி வைத்திருக்கும் ரகசியங்கள் சொத்துக்களோடு; தேவனின் புகழையும், தொழுதலையுமே உணவாகக் கொண்ட வெள்ளித் தேவதைகள்; பள்ளிக் கூடங்களில் வழங்கப்படும் பரிசுகள்; பிரமிடுகளில் புதைக்கப்பட்டிருக்கும் பறவைகளினதும், அரசர்களினதுமான விக்ரகங்கள்; உலகைத் தாங்கிப் பிடித்திருக்கும் காளையாலும், அதன் அடியில் கிடக்கும் மீனாலும் ஏற்படுத்தப்பட்ட நிழல்; கருணைமிக்க அல்லாவின் சந்தனக் கழிவுகள், வாயு விளக்குத் தெருக்கள், மனிதன் சப்தம் கேட்ட மாத்திரத்தில் மரணமுறும் சுறா போன்ற சொல்ல இயலாதவற்றைக் கண்டான். ஒருமுறை, ஐரோப்பா என்றழைக்கப்படும் நகரத்தைக் காட்டச் சொன்னான். நான் அதன் முக்கிய ரஸ்தாவை அவன் பார்க்கச் செய்தேன். கறுப்பு மற்றும் பலவகைக் கண்ணாடிகள் அணிந்திருக்கும் மனிதர்களின் பிரம்மாண்டமான ஓட்டத்தில்தான் முகமூடி அணிந்த அந்த மனிதனைப் பார்த்தான் என்று நான் நினைக்கிறேன்.
அதுமுதல், சிலசமயம் சூடானிய அணிகளோடும் சிலசமயம் யூனிபார்மோடும் ஆனால் எப்போதும் முகத்தில் முகமூடியோடும் அந்த உருவம் நாங்கள் பார்த்தவற்றினிடையில் அடிக்கடி வந்தது. அவன் வரத் தவறியதேயில்லை. நாங்கள் அவன் யாரென அறியத் துணியவில்லை. முதலில் சீக்கிரம் மறைந்து விடுவதாகவும் அல்லது ஸ்திரமாகவும் தோன்றிய மைக்கண்ணாடி உருவங்கள் இப்போது மிகுந்த சிக்கலாகி விட்டன. அவைகள் எனது கட்டளைக்குத் தாமதமின்றிப் பணிந்தன. அந்தக் கொடுங்கோலன் மிகத் தெளிவாகப் பார்த்தான். அதிகரித்துக் கொண்டே போகும் காட்சிகளின் கொடூரம் எங்களிருவரையும் அசதி நிலைக்குள்ளாக்கியது. தண்டனைகள், மூச்சுத் திணறடித்துக் கொல்லுதல், முடமாக்குதல் போன்ற சிரச்சேதம் செய்பவனின், கருணையற்றவனின் சந்தோஷங்களைத் தவிர வேறெதற்கும் நாங்கள் சாட்சியாகவில்லை.
இவ்வாறாக 14வது பார்மகாட் சந்திர தினத்தின் இரவும் வந்தது. மைவட்டம் அக்கொடுங்கோலன் கையில் உண்டாக்கப்பட்டது. பென்சோயினும், தனியா விதைகளும் கனல்தட்டில் இடப்பட்டன. பிரார்த்தனைகள் சொல்லப்பட்டன. நாங்கள் இருவரும் தனியாக இருந்தோம். அன்று, அவன் இதயம் ஓர் மரண தண்டனையைப் பார்க்க ஆவல் கொண்டிருந்ததால், அந்த துஷ்டன் சட்டப்படியானது, கருணை நிராகரிக்கப்பட்டதுமான ஒரு தண்டனையை அவனுக்குக் காட்ட வேண்டும் என்று கட்டளையிட்டான். டிரம்ஸீடன் வீரர்களை, விரிக்கப்பட்டிருந்த பசுந்தோலை, பார்வையாளர்களாக இருக்கக் கொடுத்து வைத்த மனிதர்களை, நீதியின் வாளை ஏந்தியிருந்த சிரச்சேதம் செய்பவனை அவன் பார்க்கச் செய்தேன். அவனைப் பார்த்து அதிசயித்து யாகப் என்னிடம் சொன்னான். ‘அது அபுகிர் உனது சகோதரனுக்கு நீதி வழங்கியவன். உனது உதவியில்லாமல் விஞ்ஞானத்தால் இந்த ரூபங்களை ஏற்படுத்தும் விதம் எனக்குத் தெரியப்படுத்தப்படும்போது உனது மரணத்தையும் நிச்சயிப்பவன்.’
அவன் கொல்லப்படப் போகும் மனிதனை முன்னால் கொண்டுவரச் சொன்னான். அது செய்யப்பட்டபோது, கொல்லப்படப்போகும் மனிதன் அந்த முகத்திரை அணிந்த விசேஷமான மனிதன் என்பதைக் கண்டு அக்கொடுங்கோலன் வெளிறினான். நீதி வழங்கப்படுவதற்குமுன், அத்திரையை அகற்றும்படி நான் பணிக்கப்பட்டேன். இதைக் கேட்டதும், நான் அவன் காலடியில் விழுந்து, ‘ஓ இக்காலத்தின் மன்னனே, இச் சகாப்தத்தின் மொத்தமும், சாரமுமானவனே, அவன் பெயரோ அவன் தந்தையின் பெயரோ, அவன் பிறந்த நகரத்தின் பெயரோ நமக்குத் தெரியாததால் இந்த உருவம் மற்றவற்றைப் போன்றதல்ல. நான் பதில் சொல்லியாக வேண்டிய ஓர் பாவத்திற்குள்ளாகும் பயத்தால், இந்த உருவ விஷயத்தில் நான் தலையிடத் துணியவில்லை’ என்று முறையிட்டேன்.
அந்த துஷ்டன் சிரித்தான். சிரித்து முடித்ததும், அப்படியொரு குற்றம் இருக்குமானால், இதைத் தனதாக ஏற்றுக் கொள்கிறேன் என்று சத்யம் செய்தான். தனது வாளைக் கொண்டும், குரானைக் கொண்டும் சத்யம் செய்தான். இதன்பின், நான் அந்தக் கைதியின் அடையாளம் காட்டவும், பசுந்தோலில் சுற்றியிருக்கவும், அவன் முகத்திரையைக் கிழிக்கவும் கட்டளையிட்டேன். அப்படியே நடந்தன. கடைசியில் யாகப்பின் மிரண்ட கண்களால் அம்முகத்தைப் பார்க்க முடிந்தது - அது அவன் முகம். பயமும், பைத்தியமும் அவனைக் கவ்விக்கொண்டன. எனது திடமான கையின் மேல் அவனது நடுங்கும் கையை வைத்தேன். அவனது மரணச்சடங்கிற்குச் சாட்சியாகும்படி கட்டளையிட்டேன். அவன் தன் கண்களை அகற்றவோ, மையைக் கவிழ்த்தவோ முடியாத அளவுக்கு, அந்தக் கண்ணாடியோடு ஒன்றிப் போனான். குற்றவாளியின் கழுத்தில் வாள் விழும் காட்சியில் யாகப் எனது இரக்கத்தைத் தொடாத ஓர் சப்தத்தை முனங்கினான். தரையில் தடுமாறி விழுந்து இறந்தான்.
எல்லாம் அவன் மகிமை. அவன் எப்போதும் மன்னிப்பவன். அவன் கைகளில் இருக்கின்றன வரம்பற்ற குற்றங்களின், தீராத தண்டனைகளின் சாவிகள்.
நன்றி: கொல்லிப்பாவை இதழ்த்தொகுப்பு

புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு!

"மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன்," என்கிறார் கீதையில் கண்ணபிரான். மார்கழி மாதத்தைப் போலவே புரட்டாசி மாதமும் இறைவனின் திருவிழாக்கள் பல
நடக்கும் மாதமாக விளங்குகிறது. திருப்பதியில் பிரம்மோற்சவம் நடப்பது போலவே, பல பெருமாள் கோயில்களிலும் வருடாந்திர திருவிழாக்கள் நடை பெறுகின்றன. தேவி பராசக்தியைப் போற்றும் நவராத்திரி விழாவும் இம்மாதத்தில் தான் நடை பெறுகின்றது. இது தவிர திருப்பதி வெங்கடாசலபதியைக் குலதெய்வமாகக் கொண்டுள்ள குடும்பங்களில் மாவிளக்கு ஏற்றி திருவாராதனம் செய்வது வழக்கம்.
புரட்டாசி மாதம், மஹாவிஷ்ணுவுக்கு உகந்த மாதம்.
பொதுவாக திருமாலை சனிக்கிழமையில் வழிபடுவது மிகவும் சிறப்பென்கின்றனர் பெரியோர்கள். அதுவும் புரட்டாசி சனிக்கிழமைகளில் பெருமாளை வழிபட்டால் எல்லாவிதமான கஷ்டங்களும் நீங்கி வளமான வாழ்வு கிட்டும் என்பது இந்து மதத்தின் மரபு வழி நம்பிக்கை. ஒன்பது கோள்களில் ஒன்றான புதன் கிரகத்திற்கு உரிய
மாதங்களில் புரட்டாசியும் ஒன்றென்கின்றனர். புதனின் அதி தேவதையாகவும், பிரத்யதி தேவதையாகவும் இருப்பவர் மஹாவிஷ்ணு. ஆகவே விஷ்ணுவின் அருள்பெற உகந்த மாதமாக புரட்டாசி திகழ்கிறது. இந்த மாதத்தை "எமனின் கோரைப் பற்களுள் ஒன்றாக அக்னி புராணம் குறிப்பிடுகிறது. எமபயம் நீங்கவும், துன்பங்கள் விலகவும் புரட்டாசி மாதத்தில் காத்தல் கடவுளான விஷ்ணுவை வணங்குவது சிறப்பு. ஒவ்வொரு மாதமும் சனிக்கிழமைகளில் விரதம் கடைப்பிடிப்பது நல்லது. அப்படி விரதத்தினை மேற்கொள்ள முடியாதவர்கள், புரட்டாசி சனிக்கிழமைகளில் அவரவர் குடும்ப வழக்கப்படி மாவிளக்கு ஏற்றி, பெருமாளுக்குப் பூஜை செய்து வழிபட்டு, முடிந்த அளவு அன்னதானம் செய்து வந்தால் பெருமாளின் அருள் கிடைக்கும்.
புரட்டாதிச் சனி என்று சுருக்கமாக அழைக்கப்படும் புரட்டாதிச் சனிக்கிழமை விரதம் புரட்டாதி மாதத்தில் உள்ள சனிக்கிழமைகளில் சனிபகவானை நோக்கிக் கடைப்பிடிக்கப் படும் விரதம் ஆகும். சனிக்கிரகம் நவக்கோள்களில் ஒன்று. அவர் சூரியனுக்கு வெகு தூரத்தில் உள்ளார். சனீஸ்வரன் சூரியனுக்கும் சாயாதேவிக்கும் மகனாகப் பிறந்தார். அவர் பிறந்த செய்தியை அறிந்த சூரியபகவான் சனீஸ்வரனைப் பார்க்கச் சென்றார். சனீஸ்வரனைக் கண்டவுடன் சூரியனார் குஷ்டரோகியானார். இதனால் வெகுண்ட சூரியன் சனீஸ்வரனைத் தூக்கித்தூரவீசினார். சனிபகவான் வெகுதூரத்தில் விழுந்து முடவனார் என்று புராணங்கள் கூறும். இயம தர்மராஜனின் அவதாரமே சனிபகவான் என்றும் கூறுவர். புரட்டாசி மாதத்தில் சூரியன் கன்னி இராசியில் சஞ்சரிப்பார். கன்னிராசி புதனின் ஆட்சி உச்ச வீடாகும். மகா விஷ்ணுவே புதனாக அவதாரம் செய்தார் என்பர். எனவேதான் சனீஸ்வர விரதம் கடைப்பிடிப்போர் சிவ விஷ்ணு ஆலயங்களில் உள்ள சனீஸ்வர பகவானிற்கு எள்நெய் எரித்து வழிபடுவதோடு, சிவ விஷ்ணுக்களையும் வழிபடுவது கட்டாயமாகின்றது.
சனீஸ்வரன் சிறந்த சிவபக்கதன். இந்தியாவில் திருநள்ளாற்றில் உள்ள சனீஸ்வரனார் கோவில் மிகவும் பிரசித்தமானது. இங்கே நள மகாராஜான் சிவபெருமானை வழிபட்டு சனீஸ்வரனால் பீடித்த துன்பத்தில் இருந்து விடுபட்டான் என்றும் கூறுவர். அரிச்சந்திர மகாராஜான் அரசிழந்து சுடலையில் காவல்காரன் ஆனதும், பாண்டவர்கள் 12 ஆண்டுகள் வனவாசம் செய்ததும், இராமபிரான் வனவாசம் செய்ததும், சீதை இராவணனால் கவரப்பட்டு சிறையிலிருந்ததும் சனீஸ்வரனின் தோஷத்தாலே என்று நூல்கள் கூறுகின்றன. இராவணனின் மகன் இந்திரஜித்து இவன் பிறப்பதற்கு முன் சோதிடர்களை அழைத்து நல்ல முகூர்த்தவேளை குறிக்கும்படி கட்டளை இட்டான். அவன் கட்டளைக்கமைய சனீஸ்வரனை பதினோராம் வீட்டில் இருக்க முகூர்த்தம் எடுக்கப்பட்டது. ஆனால் இந்திரஜித் பிறக்கும் பொழுது சனி தனது ஒரு காலைப் பன்னிரண்டாம் வீட்டில் நுழைத்து விட்டார். இதனால் சீற்றமடைந்த இராவணன் அவரின் ஒரு பாதத்தை துண்டித்தான் என்றும் கூறுவர். சனீஸ்வரன் தானியம் எள்ளு, வர்ணம் கறுப்பு, வாகனம் காகம். எனவேதான் சனீஸ்வர தோஷத்தால் பீடிக்கப்பட்டவர்கள் ஏழு சனிக்கிழமை காலை தொடர்ந்து எள்நெய் தேய்து, நீராடி, சிவாலயம் அல்லது விஷ்ணு ஆலயம் சென்று சனீஸ்வரனிற்கு எள்ளு, கறுத்தப்பட்டு தானமாகக் கொடுத்து எள்ளுப் பொட்டலம் கறுத்தத் துணியில் கட்டி அதனை ஒரு மண் சட்டியில் இட்டு, நிறைய எள்நெய் விட்டு தீபமாக சனீஸ்வரனுக்கு முன் வைத்து வழிபட வேண்டும். துளசி, கருங்காக்கணவன் மலரால் அர்சித்து பின் சிவன் அல்லது விஷ்ணு சந்தினாதமடைந்து, சனிதோஷம் நீங்கப் பிராத்திக்க வேண்டும். அதன் பின் ஆலயத்திலே எள், அன்னம் காகங்களுக்கு வைத்து வீடு சென்று ஏழைகள் மூவரிற்கு போசனம் அளித்துத் தானும் உணவு உட்கொண்டு விரத்தை முடிக்கலாம். இப்படிச் செய்வதால் தோஷம் நீங்கி நல்வாழ்வு பெறும்.
சனீஸ்வரன் ஒருவருடைய ஜாதகத்தில் சந்திரன் நிற்கும் இடம் இராசிக்கு 5இல் சஞ்சரிக்கும் பொழுது பஞ்சம சனியென்றும், 8இல் சஞ்சரிக்கும் காலம் அட்டமத்துச்
சனியென்றும், 12இல், 1இல், 2இல் சஞ்சரிக்கும் காலம் ஏழரைச் சனியென்றும் கூறுவர். இக்காலங்களில் புத்திர சுகம் குறைவு, மரண பயம், பிரயாணம், அதிக செலவு, தேக
மெலிவு என்பன உண்டாம். இதைச் சனிதோஷம் என்பர். இவர்களே மேற்கூறிய தோஷ நிவர்த்தியை தவறாது செய்தல் வேண்டும். ஏனையோர் புரட்டாசி மாசத்து
சனிக்கிழமைகளில் மட்டும் காலையில் எண்ணெய் ஸ்நானம் செய்து ஆலயம் சென்று எள்விளக்கேற்றிச் சனீஸ்வரனை வழிபட்டுப் பின் சிவ விஷ்ணுக்களை வழிபட்டுப் பிராத்தித்து கோளறுபதிகம், சனீஸ்வர தோத்திரம், தேவாரம் ஓதி அல்லது விஷ்ணு தோத்திரம் பாடி துதிக்கவேண்டும். வீடு சென்று உணவருந்தி விரதம் முடிக்கவேண்டும்....

Malé - Maldives.


More than 100 years old turtle, Southern Great Barrier Reef, Queensland | Photography by Sean Scott


Sunday, September 21, 2014

The Incredible Power of Concentration. One must watch it one of hte most amazing videos ever


VADNAGAR ~ MODI'S HOME TOWN WAS ANCIENT BUDDHIST SITE ...



KIRTI TORAN .... The torans left behind by the Solanki dynasty @ Vadnagar in Gujarat, was a major centre of Hindu worship.

The Kirti ‘Toran’, called the ‘Kirti Stambha’ (Temple Arch) in other regions, is a religious form that flourished under the Solanki rule in Gujarat. Two of the finest examples are at Vadnagar. At one time, both must have been connected with a temple, not a trace of which now remains , interestingly, dismantled parts of a similar but much bigger arch lie in the vicinity. These two arches may have been part of a big temple complex.

The Toran of Vadnagar in Gujarat Of the two, the one that stood at what was the edifice of Rewah, is a truly imposing structure. Almost complete and a typical example of its kind, it rises to a total height of 40 feet. It consists of two massive and elaborate columns, supporting a wide cornice, above which rises a vaulted pediment.Built by a Solanki ruler, the toran in red and yellow sandstone has carvings of battle and hunting scenes.

Many images of gods and goddesses on the arch now stand disfigured. They were, according to historians, vandalised by the armies of Allauddin Khilji, the first Muslim invader to raid north Gujarat during the Sultanate period.

Universe without expansion.





This new theory have constructed a “variable gravity universe” whose main characteristic is a time variation of the Planck mass or associated gravitational constant. The masses of atoms or electrons vary proportional to the Planck mass. This can replace the expansion of the universe. A simple model leads to a cosmology with a sequence of inflation, radiation domination, matter domination, dark energy domination which is consistent with present observations. The big bang appears to be free of singularities.

According to this new and untested theory the universe is not expanding, just It is gaining mass exponentially, so far in the past particles were lighter than nowadays.

But this interesting theory is untestable because we can't travel to the past to measure particles' mass.

However the recent Dark Matter new candidate: "quantum flavour-mixed particles", maybe will be a chance to test it without traveling to the past.

Dark matter (DM) constitutes about 80% of matter and 25% of the total energy density in the universe but its nature remains completely unknown. The existence of DM requires revision of the present day physics. Most likely, DM is a hypothetical particle or particles beyond the standard model.

But this new approach is related to the properties of Standard Model (SM) particles. According to this simulation SM particles may will have the property to have different flavours or masses. It remembers to the neutrino oscillations model that to is currently on tests all around the World. It postulates three different neutrino flavours (electron-neutrino, muon-neutrino and tau-neutrino) but we don't know what flavour is the heaviest and why, especially. If this neutrino property will extend to the rest of SM particles in each family, then SM will increase in a factor of three. Or if the quantum flavour-mixed particle will be between SM families, as neutrino is doing, then SM will be exactly the same and it is nowadays. To verify this last and more probable case, we will need to observe that flavour-mixed between in the leptons and quarks. But, this theoretical property was never observed in any test till the date. Therefore, it will be observed, then it will be plausible to test how the tiny quark mass oscillations will affect to the measure to the "expansion" of the universe. If this measurements will match to the current observation data about expansion and predicted by Hubble constant, then we could conclude that the universe is not expanding and it is an effect of variable gravity.

Abstract

We discuss a cosmological model where the universe shrinks rather than expands during the radiation and matter dominated periods. Instead, the Planck mass and all particle masses grow exponentially, with the size of atoms shrinking correspondingly. Only dimensionless ratios as the distance between galaxies divided by the atom radius are observable. Then the cosmological increase of this ratio can also be attributed to shrinking atoms. We present a simple model where the masses of particles arise from a scalar “cosmon” field, similar to the Higgs scalar. The potential of the cosmon is responsible for inflation and the present dark energy. Our model is compatible with all present observations. While the value of the cosmon field increases, the curvature scalar is almost constant during all cosmological epochs. Cosmology has no big bang singularity. There exist other, equivalent choices of field variables for which the universe shows the usual expansion or is static during the radiation or matter dominated epochs. For those “field coordinates“ the big bang is singular. Thus the big bang singularity turns out to be related to a singular choice of field coordinates.

http://arxiv.org/pdf/1303.6878v4.pdf

கதை - கந்தர்வன்

மரியம்மா டீச்சர் வீடு ஒன்றுதான் இந்த ஊரிலேயே வேதக்கார வீடு. டீச்சருக்கு இது ஒன்றும் சொந்த ஊரில்லை. பக்கமாயிருக்கும் கிடாரத்திலிருந்து பெரிய ஸாரும் மரியம்மா டீச்சரும் புருஷன் பெஞ்சாதியாய் இங்கு வேலைக்குவந்தவர்கள்தான். கிடாரம் ஊரே வேதக்கார ஊராம். பெரிய ஸாருக்கு அவ்வளவாய் வேதக்கார வழக்கமெல்லாம் பிடிக்காது. இந்த ஆள்களா உள்ள ஊரில் பள்ளிக்கூடம் நடத்தவேண்டியிருந்தாலோ என்னவோ ஸார் ரொம்ப நீக்குப் போக்காயிருப்பார். ஆனால் இந்த மரியம்மா டீச்சர்தான் மூச்சுக்கு முன்னூறு முறை ‘கர்த்தரே கர்த்தkantharvanரே’ என்று சொல்லிக்கொண்டு கிடக்கும்.
பள்ளிக்கூடத்தில் இன்னொரு ஸார் சின்ன ஸார். இந்து ஆள்தான். ஆனால் ஒரு மூலைக்கு ஒதுங்கிவிட்டவர். பள்ளிக்கூடத்தில் பெரிய ஸாருக்கும் மேல் மரியம்மா டீச்சரின் சத்தம்தான்  ஹோஹோவென்று கேட்கும்.
அடிக்கடி ஒரு ஆள் வெள்ளைக்கவுன் போட்டு எந்த ஊரிலிருந்தோ மரியம்மா டீச்சர் வீட்டிற்கு வருவார். ஊர்ப்புள்ளைகள் எல்லாம் அதிசயமாய் அவரைப் பார்த்துக்கொண்டே பின்னால் நடந்து வரும்கள். புள்ளைகள் கிளப்பிவிடும் புழுதிக்கு மத்தியில் அவர் நடந்து வருவதைப் பார்க்க மரியம்மா டீச்சர் ரொம்ப அவமானப்படும். புள்ளைகள் மேல் கோபங்கொண்டு கத்தும். அவரை வீட்டில் வைத்து ரொம்ப உபசரிக்கும். பெரிய ஸார் ஏதாவது ஒப்புக்கு அவரிடம் பேசிவிட்டுப்போவார்.
மரியம்மா டீச்சர் வீடு மாதிரி இந்த ஊரிலேயே ஒரு வீடும் இல்லை. பூப்பூவாய் போட்ட திரை தொங்கும். உள்ளே முக்காலியில் காகிதப்பூ சொருகி ஒரு ஜாடி இருக்கும். பாசிகளைக் கோந்தில் ஒட்டி படம் தொங்கும். வீடு பூராவிலும் ஒரு மாதிரி வாசனை இருக்கும். ஒன்னொண்ணும் வித்தியாசந்தான் மரியம்மா டீச்சர் வீட்டில்.
தீபாவளி அன்றைக்கு இந்த ஊரிலேயே மரியம்மா டீச்சர் வீடு ஒன்றில்தான் கருப்பட்டி தோசை சுடமாட்டார்கள். புள்ளைகளின் இம்சை பொறுக்கமாட்டாமல் பொம்பிளைகள் தீபாவளிப் பலகாரம் கொண்டுபோய் மரியம்மா டீச்சரிடம் கொடுப்பார்கள். சிரித்துக்கொண்டே வாங்கி வாங்கி அறைவீட்டு மூலையில் வைத்துக்கொள்ளும். கையால்கூட அந்தப் பலகாரங்களை தொடாது. அரை ஆள் உயரத்திற்கு ஒரு நாய் வளர்க்கும். அதற்கும்கூட அந்தப் பலகாரங்களைப் போடாது. காச்சு மூச்சென்று பலசாதிப் பிச்சைக்காரர்கள் தீபாவளி அன்றைக்கு தகர டின்களோடும் அலுமினியத் தட்டுக்களோடும் வருவார்கள். அப்படியே தூக்கி அந்த ஆள்களிடம் கொட்டிவிடும். சாமி கும்பிடும்போது இந்த பலகாரங்களையும் வைத்துக் கும்பிட்டுத்தான் பொம்பளைகள் கொண்டு வந்திருப்பார்களாம். மரியம்மா டீச்சரிடம் கிடந்து வளர்வதால் அந்த வீட்டு நாய்க்குக் கூட தோஷம் வரக்கூடாதாம்.
பள்ளிக்கு வைக்கையில் புள்ளைகளும் தாய்தகப்பன்களும் காப்பரிசி தேங்காய் எல்லாம் கொண்டு வருவார்கள். பெரிய ஸார் புள்ளை கையைப்பிடித்து ஓம் என்று எழுத வைப்பார். புள்ளைகள் எல்லாம் எழுந்து நின்று ‘கைத்தலம் நிறைகனி’ என்று பாடும்கள். பாடி முடித்ததும் புள்ளையைப் பெத்த தகப்பன் இடுப்பில் துண்டு கட்டிக் கனிந்து சின்னசாரிடமும் மரியம்மா டீச்சரிடமும் காப்பரிசியைக் கொடுப்பார். சின்ன ஸார் வாயெல்லாம் பல்லாக வாங்கிக்கொள்வார். ஒரு குத்தை அள்ளிப்போட்டுக் கொண்டே மிச்சத்தைப் பொட்டணம் கட்டிக்கொள்வார். மரியம்மா டீச்சர் மட்டும் வாங்கிப் பக்கத்தில் வைத்துக்கொள்ளும். பள்ளிக்கூடத்தில் விடப்பட்ட பிள்ளை காரை பெயர்ந்து கிடக்கும் பள்ளிக்கூடக் கட்டிடத்தையும் புள்ளைகள் கூட்டத்தையும் வாத்திமார்க் கைப்பிரம்பையும் பார்த்துவிட்டு வெறித்துக்கொண்டு அழுது அழுது மூக்கெல்லாம் சளியோட நிற்கும். அதன் கைகளிலிருந்து தகப்பன் தன் கையைப் பிய்த்து எடுத்துக்கொண்டே ‘புள்ளைக்கு இனிமே நீங்கதான் பொறுப்பு’ என்று வாத்திமாரிடம் சொல்லிவிட்டுப் புறப்பட்டுப் போனதும் மரியம்மா டீச்சர் சட்டாம்புள்ளையைக் கூப்பிடும். காப்பரிசியை எடுத்து எல்லாப் புள்ளைகளுக்கும் கொடுத்துவிடச் சொல்லும். சாமி கும்பிட்ட அரிசியானதால் விரலால்கூட அதைத்தொடாது மரியம்மா டீச்சர்.
மரியம்மா டீச்சருக்கு ஒரே ஒரு மகன். முந்தி இந்தப் பள்ளிக்கூடத்தில்தான் படித்துக் கொண்டிருந்தான். அப்புறம் பெரிய படிப்பு படிக்க ராமநாதபுரம் போய் விட்டான். அதிலிருந்து டீச்சருக்குப் பெரியகுறை. ‘‘இந்தப் பள்ளிக்கூடம் பூராவிலும் ஒருபுள்ளைகூட வேதக்காரப்புள்ளை இல்லையே’’ என்று ஓயாமல் வாய்விட்டுச் சொல்லிக் கொண்டிருக்கும்.
ஒரு சனிக்கிழமை மத்தியானம் இருக்கும். அன்றைக்கு பள்ளிக்கூடம்தான். புள்ளைகள் எல்லாம் பசி மயக்கதிலிருந்தார்கள். அப்போது மரியம்மா டீச்சர், எல்லாப்புள்ளைகளையும் கூட்டி வைத்துக் கொண்டு சொன்னது. ‘‘நாளைக்கு மத்தியானம் யார் யாருக்கு இஷ்டமோ அவுகள்ளாம் பள்ளிக்கூடத்துக்கு வந்தா நல்ல நல்ல கதையெல்லாம் சொல்வேன். யார் யார்யெல்லாம் ஒழுங்கா கதை கேக்க வர்ராகளோ அவுகளுக்கெல்லாம் கிறிஸ்மஸுக்கு மொத நாள் நல்ல நல்ல பிரைஸ் கொடுப்பேன். எல்லா ஞாயித்துக்கிழமையிலும் கதை கேக்க வர்ரேங்கிற புள்ளைக மட்டும் உயர்த்துங்க.’’
‘‘ஞாயித்துக்கிழமை மத்தியான வெயிலில்தான் புள்ளைகளுக்கு ஏராளமான சோலிகள். கிழடுகளிடமிருந்து பொடிமட்டையை அபேஸ் செய்துகொண்டு வந்து கம்பும் கையுமாய் அலைந்து புதர்களில் ஒதுங்கும் ஓணானை அடித்து அதன் வாய் தலையெல்லாம் பொடியைத் தூவி அது தலைசுற்றிப் பேயாடுவதைப் பார்ப்பதைவிடவும் சந்தோசம் வேறெதிலும் இருப்பதில்லை. வீட்டிலிருந்து மிளகாய் உப்புத் திருடி நுணுக்கி வைத்துக்கொண்டு புளியமரத்திலேறி பிஞ்சு பிஞ்சுக் கொறடுகளாய்ப்பறித்து வந்து நாக்குப் பொத்து போகும் வரை தொட்டுத் தொட்டுத்தின்பதில் உள்ள ருசி வேறெதிலும் இருப்பதில்லை.
மரியம்மா டீச்சர் யார் யார் ஞாயித்துக்கிழமை கதை கேக்க வருவீர்கள் என்று கேட்டதும் எல்லாப்புள்ளைகளுக்கும் இந்த சொகங்களும் ருசிகளும் ஞாபகத்தில் வந்து கம்மென்று இருந்தன. டீச்சர் ஓரிரு முறை அதட்டியதும் திருதிருவென்று முழித்தன. மரியம்மா டீச்சருக்குப் பக்கத்தில் நின்ற புள்ளைகளில் ஒண்ணு ரெண்டு டீச்சர் முகத்தைப் பார்த்தபடியே கைகளைத் தூக்கியதும் நெறையக் கைகள் பிரைஸ் கேட்டு உயர்ந்து நின்றன.
மறுநாள் ஞாயித்துக்கிழமை மத்தியானம் பள்ளிக்கூட மைதானமெல்லாம் வெயிலில் மொறு மொறுத்துக் கொண்டிருக்கையில் மரியம்மா டீச்சர் பவுடர் பூசி பச்சுப் பச்சென்று பள்ளிக்கூடத்திற்குள் வந்தது. இருபது புள்ளைகள் வரை வந்திருந்தன. பள்ளிக்கூடம் இல்லாத நாளில் பள்ளிக்கூடத்திற்கு வந்து எல்லா வகுப்புகளும் ஓவென்று வெறிச்சோடிக்கிடந்ததைப் பார்த்த கிளுகிளுப்பிலும் என்னென்ன வெல்லாமோ கதைகளைக் கேட்கப்போகிறோம் என்ற உற்சாகத்திலும் புள்ளைகள் காச்சுமூச்சென்று கத்திக்கொண்டு கிடந்தன. மரியம்மா டீச்சர் செருப்பைக் கழற்றிக்கொண்டே முகம் பூராவும் சிரிப்பாய் பிள்ளைகளைப் பார்த்தது.
பள்ளிக்கூடத்திற்குப் பின்புறத்தில் தோட்டத்திற்குப் பக்கத்தில் ஒரு தாழ்வாரம் உண்டு. தோட்டத்து வேப்பமரம் அந்த வகுப்பறைமேல் வளைந்து படர்ந்து கிடக்கும். எப்படி ஒறைக்கும் வெய்யிலுக்கும் அந்த இடம் மட்டும் சிலுசிலுவென்றிருக்கும். மரியம்மா டீச்சர் புள்ளைகளையெல்லாம் கூட்டிக்கொண்டு அங்கே போனது. அஞ்சாப்புச் சட்டாம்பிள்ளை போய் ஒரு நாற்காலியை கொண்டுவந்து போட்டான். அன்றைக்கே பிரைஸ் வாங்கப்போவது போல் புள்ளைகள் எல்லாம் அடக்க சடக்கமாய் உட்கார்ந்துகொண்டது.
மரியம்மா டீச்சர் நாற்காலியில் உட்கார்ந்துகொண்டு சொன்னது : ‘‘இன்றைக்கு வந்திருக்கும் புள்ளைகள்தான் ரொம்ப நல்ல புள்ளைகள், நீங்கள் விரும்பியவைகளை கர்த்தர் கொடுப்பார். இன்றையிலிருந்து நீங்கள்ளாம் கர்த்தரின் புள்ளைகள். நமக்கு வேண்டியவைகளை யெல்லாம் நாம் கர்த்தரிடம் கேட்போம். எல்லோரும் மண்டியிடுங்கள்’’ என்று கூறிக்கொண்டே மரியம்மா டீச்சர் நாற்காலியிலிருந்து எழுந்து முழங்காலை மடித்து இரண்டு கைகளையும் ஏந்திக்கொண்டு பேச ஆரம்பித்து.
மரியம்மா டீச்சர் கைகளை ஏந்திக்கொண்டு மண்டி போட்டதைப் பார்த்த புள்ளைகளுக்கு முதலில் ஒன்றுமே புரியவில்லை. டீச்சரே பிரைஸ் கேட்டு யார் முன்னாலேயோ மன்றாடுவது போல் முதலில் தெரிந்தாலும் எல்லாப்புள்ளைகளும் திருதிருவென்று முழித்தன. முதலில் அஞ்சாப்புச் சட்டாம்பிள்ளைதான் மண்டிபோட்டு டீச்சரைப்போலவே கைகளை விரித்து பிரைஸ் கேட்டான். அந்தப்பயல் இருந்த கோலத்தைப் பார்க்கப் பார்க்க புள்ளைகளுக்கு சிரிப்பு பொத்துக்கொண்டு வந்தது. தனக்குத்தானே பேசிக்கொண்டிருந்த டீச்சர் திடுமென்று கண்ணைத் திறந்து எல்லோரையும் மண்டியிடும்படி சைகை காட்டியது. பக்கத்துப் பக்கத்துப் புள்ளைகளைப் பார்த்துக்கொண்டே சிரிப்புகளை அடக்கியபடி இடித்துக்கொண்டும் தடுமாறிக்கொண்டும் மண்டி போட்டன.
டீச்சர் சொன்னதையெல்லாம் புள்ளைகள் திக்கித் திக்கி ஒப்பித்துக்கொண்டே போயின. எங்கள் ஊரில் நல்ல மழை பெய்ய வேண்டும் கர்த்தரே என்றதும், புள்ளைகளை உசுப்பி விட்டது போலிருந்தது. இரண்டு வருஷமாய் ஊரில் மழையில்லை. வயற்காடெல்லாம் பாளம்பாளமாய் வெடித்துக்கிடந்தன. முனியசாமி கோவிலுக்கு எருது கட்டு நடத்திப்பார்த்தும் மழைச்சோறெடுத்துப் பார்த்தும் சப்பாணி கோவிலில் சாமிகும்பிட்டுப் பார்த்தும் இன்னும் மழை பெய்யவில்லை. ‘‘மூன்றாம் வகுப்புப் பாண்டிக்கு உடம்பு சொஸ்தமாகவேண்டும் கர்த்தரே’’ என்று டீச்சர் சொன்னதும் புள்ளைகள் உருக்கமாகிவிட்டன. பாண்டி நன்றாகப் படிப்பான். மரியம்மா டீச்சர் வீட்டிற்கு அடுத்த வீடுதான் பாண்டிவீடு. இழுப்பு வந்து உடம்பெல்லாம் வெளிறிப் போய் மணிக்கட்டில் மஞ்சள் துணிகட்டிப் போட்டிருக்கிறார்கள். ராத்திரிக்கு ராத்திரி பாண்டி வீட்டில் கோடாங்கிச்சத்தம் கேட்கும். பாண்டி அப்பாவும் அம்மாவும் கஞ்சிதண்ணி குடிப்பதில்லை. பாண்டிக்காக பதினெட்டு கோயில்களுக்கு வெதப்புக் கொடுத்துக்கொண்டு திரிகிறார்கள்.
அதுவரை டீச்சர் சொன்னதையெல்லாம் திருப்பிச் சொல்லி வந்த புள்ளைகள் மழையைச் பற்றியும் பாண்டியைப்பற்றியும் டீச்சர் ஏக்கத்தோடு சொன்னதும் புள்ளைகளுக்கு கூச்சம் போய் இயல்பாகச் சொல்ல ஆரம்பித்தார்கள். அப்புறம் என்னென்னவெல்லாமோ சொல்லிவிட்டு மரியம்மா டீச்சர் ‘ஆமென்’ என்றது. எல்லாப்புள்ளைகளும் சத்தம்போட்டு ‘ஆமென்’ என்றன. டீச்சர் கண்ணைத் திறந்து எல்லோரையும் உட்காரச் சொல்லி சைகையும் காட்டிவிட்டு எழுந்து நாற்காலியில் உட்கார்ந்து கொண்டது.
‘‘ஒங்களுக்கெல்லாம் கதை கேக்க ஆசையா இருக்கில்ல’’ என்று டீச்சர் கேட்டதும் ‘‘ஆமாம் டீச்சர்’’ என்று குப்பென்று பிள்ளைகள் கத்தின.
மரியம்மா டீச்சர் கதை சொல்லத் தொடங்கியது. பெத்தலகேம் என்ற இடத்தில் யேசுவானவர் பிறந்த கதையை அது சொல்லிவந்தபோது புள்ளைகள் வாயில் ஈப்போவது கூடத் தெரியாமல் கேட்டுக் கொண்டிருந்தன. மரியம்மா டீச்சர் அம்மா, ஆடு, இலை, ஈ எல்லாம் சொல்லிக் கொடுக்கும்போது மரக்கட்டை மாதிரி முகம் இருக்கும். சரியாகத் திருப்பிச் சொல்லாத புள்ளைகளுக்குப் பிரப்பம்பழம் கொடுக்கும். முகமெல்லாம் வெடுவெடுவென மாறும். பெத்லகேமில் யேசுவானவர் பிறந்த கதையைச் சொல்லும்போது, மரியம்மா டீச்சரின் முகமெல்லாம் அருளோடிருந்தது. ஏற்ற இறக்கங்களோடு கைகளை ஆட்டி நீட்டி உருகிப் போய் கதை சொல்லி வந்தது. தீர்க்கதரிசிகள், மேய்ப்பவர்கள், தேவதூதர்கள் எல்லாம் கதையில் வந்தார்கள். புள்ளைகளுக்கு இதெல்லாம் அரைகுறையாய்ப் புரிந்தாலும் இதுவரை கேட்காத மாதிரியில் இருந்ததால் மயங்கிப் போய் கேட்டுக் கொண்டிருந்தன. வால் நட்சத்திரம் ஆகாயத்திலிருந்து இறங்கிவந்து வழிகாட்டிக் கொண்டே போனதை டீச்சர் சொன்னபோது புள்ளைகளுக்குப் பறந்து போவது போல் தோன்றியது. சொக்கிப் போய்க் கிடந்தன. வால்நட்சத்திரம் ஆகாயத்திலுமில்லாமல் பூமியிலுமில்லாமல் நடுவால ஆள்களுக்கு முன்னாலேயே போன சங்கதியும் வேப்ப மரக்காத்தும் சேர்ந்த ஒரு அசங்க மசங்களில் நாலஞ்சு புள்ளைகள் ஒறங்கியே விட்டார்கள்.
பழைய கஞ்சி குடிச்ச கேரில் புள்ளைகள் யாராவது வகுப்பில் ஒறங்கி விழுந்தால் டீச்சர் பின்னங்கையை நீட்டச் சொல்லி பிரம்பால் அடிக்கும். கதை சொல்லி வரும்போது மட்டும் ஒறங்கிய புள்ளைகளைப் பார்த்து, `ராசுக்கு அரைச்சாமம் ஆச்சு, எழுப்புங்கடா’ என்று சிரிப்பும் கனைப்புமாய்ச் சொன்ன மாரியம்மா டீச்சர் வேறு ஆளாய் மாறி வந்து உட்கார்ந்து இருப்பது போல தெரிந்தது. டீச்சரிடம் இந்த மாதிரி ஆதரவான பேச்சுக்களைக் கேட்பதற்காக வேனும் ஓயாமல் டீச்சர் கதை சொல்லிக் கொண்டிருக்க வேண்டும் போல நெனைப்புத் தட்டியது புள்ளைகளுக்கு.
யேசுவானவர்மேல் புள்ளைகளுக்கு முதல்நாளே பிரியம் வந்துவிட்டது. `அவரு மாட்டுத் தொழுவத்துல பொறந்து கிடந்தபோது ஒன்னைமாதிரி, என்னை மாதிரி கறுப்பாவா இருந்தாரு, வெள்ளை வெளேர்னு பொறந்திருந்தாரு. அவரு மொகம் பூரா தேஜஸ் அடிச்சுதுன்னு டீச்சர் சொன்னதும் அததுக்கும் அவரைப்பத்தி ஒரு மரியாதை வந்துவிட்டது. டீச்சர் வீட்டுக்குப் பள்ளிக்கூட சாவி வாங்கப்போகும் புள்ளைகள் நெறையப் பேர் வீட்டில் தொங்கும் காலண்டரைப் பார்த்திருந்தன. சுற்றி காட்டாளுகளாய் நிற்க ஒரு குழந்தை தொழுவத்தில் கிடந்தது காலண்டர் படத்தில். அதன் முகத்தைச் சுற்றி நட்சத்திரம் மாதிரி ஜொலிக்கும். புள்ளைகள் அதையும் சேர்த்து நினைத்ததில் யேசுவும் உண்மையில் ஒரு சாமிதான் என்று ஒருவடிவாய் யோசித்துக் கொண்டே கதைகேட்டார்கள்.
கோடைக்காலம் போய் காத்துக்காலம் வந்தது. ஞாயிற்றுக்கிழமை மத்தியானங்களில் பள்ளிக்கூட மைதானம் புழுதிக் காலத்தில் அல்லாடியது. தாழ்வாரத்தில் படர்ந்திருந்த வேப்பமரக் கிளைகள் பேய்களைப் போல் தலைவிரித்தாடின. தூசி வந்து விடும் போதெல்லாம் புள்ளைகள் கண்களைத் துடைத்து விட்டுக்கொண்டே யேசுவானவரின் மகிமைகளைக் கேட்டன. கொஞ்சமாயிருந்த அப்பங்களின்மேல் யேசுவானவர் கையை வைத்தார். அப்பங்கள் ரொம்பவாய் வந்தன. சீக்காளிகளின் மேல் அவர் கையை வைத்தார். அப்புறம் அந்த ஆள்கள் மேல் சீக்கே இல்லை. மரியம்மா டீச்சர் இதையெல்லாம் சொல்லிவரும்போது அசலா அங்கேயே அதெல்லாம் நடப்பது போலிருந்தது புள்ளைகளுக்கு. மூணாப்பு பாண்டிக்கு உடம்பு குணமாக வேண்டி புள்ளைகள் தொடர்ந்து ஜெபம் செய்தார்கள். அந்த வருஷம் நல்ல மழை பெய்ய வேண்டுமென்று ஜெபம் முடியும் முன் கேட்டார்கள்.
ஒரு ஞாயித்துக்கிழமை மரியம்மா டீச்சர் கதை சொல்லிக்கொண்டிருந்தது. ரொம்ப அமைதியாய் புள்ளைகள் கதை கேட்டுக் கொண்டிருந்தார்கள். ஊரே அமைதியாயிருந்தது. திடீரென்று கூ_கொள்ளை என்று சத்தம் வந்தது. புள்ளைகள் யாருக்கும் கட்டுப்படாமல் சத்தம் வந்த பக்கமாய் ஓடினார்கள். மூணாப்புப் பாண்டி செத்துப் போயிருந்தான். புள்ளைகளுக்கு எல்லாச் சாமிகள் மேலும் சந்தேகம் வந்தது. ரொம்ப யோசிப்பதற்குள் அடுத்த ஞாயித்துக்கிழமை வந்துவிட்டது. டீச்சர் கொடுக்கப்போகும் பிரைஸ்கள் கூடவே தோன்றி விதம் விதமான கற்பனைகளைத் தூண்ட புள்ளைகள் மறுபடியும் கதைகேட்க வந்தார்கள்.
காத்துக்காலம் அடங்கி அடைமழைக்காலம் வந்தது. பள்ளிக்கூடத்து மைதானம் சொதசொதவென்று கிடந்தது. தாழ்வாரத்து வேப்பமரக் கிளைகள் மழையில் வாங்கிய தண்ணி முத்துக்களைச் சடசடவென்று உதிர்த்துவிட்டன. புள்ளைகள் குளிருக்கு அடங்கி உட்கார்ந்து யேசு சாமியின் அற்புதங்களை அனுபவித்துக் கேட்டன. வானம் மூடிக்கொண்டு பனியும் மப்புமாயிருந்த ஒரு ஞாயித்துக்கிழமை மத்தியானத்தில் மரியம்மா டீச்சர் புள்ளைகளுக்கெல்லாம் பிரைஸ்கள் கொடுத்தது. அழகழகான பொம்மைகள் படம் வரையிற நோட்டுகள் கலர் கலராய் பென்சில்கள் சின்ன சின்ன டப்பாக்கள் எல்லாம் கொடுத்தது. இந்த ஊரில் வேதக்கோயில் இல்லை. அதனால் மரியம்மா டீச்சர் வருகிற வாரம் கிறிஸ்துமஸுக்கு கிடாரத்திற்குப் போய்விடும். புள்ளைகளுக்கு கிறிஸ்துமஸ் என்கிற வார்த்தையே குளிரும் மழையும் பிரைஸுமாய்க் குதூகலத்தைத் தந்தது. பிரைஸ்களை வாங்கி பக்கத்தில் வைத்துக்கொண்டு மண்டி போட்டுக் கண்களை மூடிக்கொண்டு தாங்களாகவே ஜெபம் செய்தன. ஜெபம் முடிந்து கண்களை முழித்து முதலில் பிரைஸ்களையே ஆவலோடு பார்த்து கைகளில் எடுத்து வைத்துக் கொண்டன.
கூச்ச நாச்சமில்லாமல் பக்தி சிரத்தையோடு புள்ளைகள் ஜெபம் செய்யத் தொடங்கிவிட்டன. கதைக்கு வராமல் ஊரணிப்பக்கமும் ஓணான்கள் பின்னாலும் திரிந்த பயல்கள் கதை கேட்கப்போய் பிரைஸ் வாங்கி வந்த பயல்களை `ஆமென் பயலெ வாடா’ என்று நக்கல் பண்ணிய போதும் இந்தப் புள்ளைகள் சட்டை பண்ணவில்லை. ஊரிலேயே இந்தப் புள்ளைகள் மட்டும் ஒரு தினுசாய் நடந்து போனார்கள்.
அந்த வருஷம் ஊரில் நல்ல மழை பெய்து வயல் வரப்பெல்லாம் பச்சை வீசியது. புள்ளைகள் கால்களில் சேறு அப்பியது. `பூட்ஸ் போட்டு நடக்கிறேன் பாரு’ என்று சேறு அப்பிய கால்களோடு லெப்ட் ரைட் என்று கத்திக்கொண்டே சொத் சொத்தென்று நடந்தன. `நாங்க ஜெபிச்சதினால தான் ஊருக்கு மழை வந்திச்சு’ என்று மரியம்மா டீச்சர் சொன்னதை புள்ளைகள் ஆத்தாமாரிடம் சொல்லின. `ஜெபிச்சுப் பார்த்தியலெ, ஏண்டா மூணாப்புப் பாண்டி செத்தான்?’ என்று ஓணான் அடிக்கிற பயல்கள் எதிர் கேள்வி கேட்டார்கள். கல்லுச்சாமியைக் கும்பிடுகிற பயல்கள் என்றும் கர்த்தர் சாமியைக் கும்பிடுகிற பயல்கள் என்றும் பிரிந்து கொண்டார்கள்.
இந்தப் புள்ளைகள் வேறவேற சாமிகளைக் கும்பிடுவதைக் கொஞ்சம் கொஞ்சமாய் குறைத்துக் கொண்டே வந்தன. இதற்கு முன்பெல்லாம் ஊருணியில் குளித்தால் ஈரச்சட்டையை முழங்கையில் போட்டுக்கொண்டு கீழ்ப்படியில் நின்று முனியசாமி கோயிலைப் பார்த்து ஒரு கும்பிடு போட்டுவிட்டு அடிமண்ணை நெற்றியில் வைத்துக் கொள்வார்கள். கண்மாய்க்குக் குளிக்கப் போனாலே உலகம்மாளுக்கு கும்பிடு போட்டுவிட்டு வருவார்கள். மரியம்மா டீச்சரிடம் கதை கதையாய்க் கேட்டபின்பு ஊருணி முனியசாமி கோவிலையும் கண்மாய்க்கரை உலகம்மா கோயிலையும் பிடரி வழியாகப் பார்த்து நடையைக் கட்டினார்கள்.
மரியம்மா டீச்சரின் வீட்டில் மட்டும்தான் ஊரிலேயே தினமும் காலையில் இட்டிலி சுட்டுச் சாப்பிடுவார்கள். மத்தியானத்தில் குழம்பு சோறும் அந்த ஒரு வீட்டில்தான். வண்ணா வீட்டில் துவைத்து இஸ்திரி போட்டுவரும் சேலையைக் கட்டிக்கொண்டுதான் தினமும் மரியம்மா டீச்சர் பள்ளிக்கூடம் வரும். பெரியசாரையும் அழுக்குச்சட்டையெல்லாம் போடவிடாது. அவரும் எப்பொழுதும் இஸ்த்திரி போட்ட சட்டை வேட்டியோடுதான் பள்ளிக்கூடம் போவார். மரியம்மா டீச்சர் மகன் இராமநாதபுரத்தில் ஹாஸ்டலில் தங்கிப்படித்தான். கால்பரிட்சை அரைப்பரிட்சை லீவுகளில் ஊருக்கு வரும்போது அவன் போட்டிருக்கும் அரைட்ரவுசர் சட்டைகளைப் பார்த்து புள்ளைகளுக்கு அவன் மேல் ஒரு மரியாதை வரும். அளவாய்க் கச்சிதமாய் அவன் உடுத்தி வருவான். பொடிமட்டை மாயாண்டி டெயிலரிடம் தைத்தால் ட்ரவுசர் என்ன சட்டையென்ன எல்லாமே பொந்தா பொந்தாவென்று கவுனைப் போல கிடைக்கும். மரியம்மா டீச்சர் மகனுக்கு எல்லாமே ராமநாதபுரத்தில் தைப்பதுதான்.
மரியம்மா டீச்சர் வீட்டுப் பழக்க வழக்கங்களை நெருக்கத்தில் பார்த்த புள்ளைகளுக்கு காலையில் இட்லி, மத்தியானம் குழம்பு சோறு, ராத்திரியில் குழம்பு சோறு, அளவாய்த் தைத்து இஸ்த்திரி போட்ட ட்ரவுசர் சட்டை இவைகள் மேல் சொல்ல முடியாத ஆசை வந்துவிட்டது. மரியம்மா டீச்சர் கர்த்தர் சாமியைக் கும்பிடுவதால்தான் இத்தனையும் அந்த வீட்டிற்கு மட்டும் கிடைக்கின்றன என்று புள்ளைகள் பேசிக் கொண்டன.
தரவைக் காடுகளில் மாடு மேய்க்கும் போது உள்ள தனிமையிலும் உச்சி வெயிலில் நடவிற்கு நாற்று விளிம்பும் வலுவான வேலை செய்யும்போது உள்ள ஆற்றாமையிலும் வாமடையில் தண்ணீர் பாய்வதை வரப்பில் உட்கார்ந்து காவல் காக்கும்போது வரும் வெறுமையிலும் களத்து மேட்டில் பிணையல் மாட்டோடு சுற்றிச் சுற்றி வரும் யந்திரத்திலும் சோவென்று ஊற்றிக் கொண்டிருக்கும் மழை நேரத்தில் குதுகுதுப்பிலும் இந்தப் பிள்ளைகள், `கர்த்தரே எனக்குக் காலையில் சுடச்சுட இட்லி வேண்டும். மத்தியானமும் ராத்திரியும் குழம்பு சோறு வேண்டும். ராமநாதபுரம் டெய்லர் தைக்கும் ட்ரவுசர் சட்டை வேண்டும் ஆமென்’ என்று ஜெபம் செய்தார்கள்.
ஜெபித்து முடிந்ததும் அந்தப்புள்ளைகள் காலையில் இட்லி சாப்பிட்டுவிட்டு ராமநாதபுரம் டெய்லர் அளவாய்த் தைத்த கலர் கலரான ட்ரவுசர் சட்டை அணிந்து டக்டக்கென்று தெருக்களில் நடப்பது போலவும் மத்தியானச் சாப்பாட்டிற்குப் பள்ளிக்கூடத்திற்குத் தட்டுகளேந்தி வரிசைகளில் நிற்காமல் தங்கள் தங்கள் வீடுகளுக்குள் அதிகாரமாய் நுழைந்தது போலவும், சோப்புப்போட்டு முகம் கழுவுவது போலவும், பவுடர் போட்டு வெளியே போவதுபோலவும் வெகு நம்பிக்கையுடன் கற்பனை செய்தார்கள்.
திண்ணைகளில் படுக்கைகளை விரித்ததும் உறங்கப் போகுமுன்பு புள்ளைகள் படுக்கைகள் மீது மண்டியிட்டு ஜெபம் செய்தன. காலையில் படுக்கையிலிருந்து எழுந்ததும் கண்களை கசக்கிவிட்டுக் கொண்ட மறுநொடியே ஜெபம் செய்தன. புள்ளைகள் சாமி கும்பிட்டுவிட்டுப் படுப்பது சாமி கும்பிட்டுவிட்டு எழுந்திருப்பதும் பற்றி ஆத்தா அப்பன்களுக்கு ரொம்பப் பெருமை. கூப்பிட்ட குரலுக்கு பிள்ளைகள் உடனே ஏனென்று கேட்டு விடுவதில்லை. இரண்டு மூன்று தடவைகள் கூப்பிட்ட பிறகுதான் மறுகுரல் கொடுத்தார்கள். அவர்கள் எப்போதும் வேறெங்கோ சஞ்சரித்துக் கொண்டிருந்தார்கள்.
மரியம்மா டீச்சர் கால் தரையில் படாமல் நடந்தது. அதுக்கு அவ்வளவு சந்தோசம். ``வேதக்கார வீடு இல்லையின்னா என்ன? வேதக்கார புள்ளைக நெறைய ஆயிருச்சே’’னு மரியம்மா டீச்சருக்கு நெனச்சு நெனச்சு சந்தோசம்.
பெரிய ஸார் மேசைமேல் ஒருநாள் மரியம்மா டீச்சர் ஒரு உண்டியலைக் கொண்டு வந்து வைத்தது. யேசு முகக்காந்தியோடு உள்ள ஒரு படம் அதில் ஒட்டப்பட்டிருந்தது. ``யேசு ராஜா வருகிறார்’’ என்று அதில் அழகாக எழுதியிருந்தது. பள்ளிக்குப் புள்ளைகளைச் சேர்க்கும்போதும், அஞ்சாப்பு முடிஞ்சு புள்ளைகளுக்கு ரிக்காடுஷீட் கேட்டுவரும் போதும் அதில் காணிக்கை போடவேண்டுமென்று பெரிய ஸாருக்கும் புள்ளைகளுக்குமாய்ச் சேர்த்து சொல்லிவிட்டது. கீழத்தெருவில் ராமுத்தேவர் ரொம்ப நொடித்துப்போய் மனை இடத்தை விற்க வந்ததை, ``வேதக்கோயில் கட்டத் தருவார்களா’’ என்று கேட்டு மரியம்மா டீச்சர் ஆள்மேல் ஆளாய் அனுப்பிக்கொண்டிருந்தது.
புள்ளைகள் இட்லிக்கும் குழம்பு சோறுக்கும் ராமநாதபுரத்தில் அளவாய்த் தைக்கும் ட்ரவுசர் சட்டைகளுக்கும் கர்த்தரே என்று ஆரம்பித்து ஆமென் என்று முடித்து வயல்காடுகளையும் வாமடைகளையும் வெறித்துப் பார்த்துக் கொண்டு திரிந்தன.

நன்றி : பூவுக்குக் கீழே அன்னம் வெளியீடு

This is a real photo from a town in Mexico


Friday, September 19, 2014

The Neminath Temple in Dilwara Abu

The Neminath Temple in Dilwara Abu , is dedicated to Neminath, the 22nd Tirthankar of Jainism.

The Neminath Temple was constructed by Vastupal and Tejpal, the two brothers who also built the Dilwara temples of Mount Abu, a marvel of marble , WHO TOOK THE WEALTH OF SOMNATH AND RAN AWAY TO GIRNAR AND ABU AND PAID FOR THIS CONSTRUCTION, few days before invasion by Mohammed Ghazni !!

தொடர் தோல்வியால் துவளாமல் வெற்றி பெற்ற முதியவர் !!! KFC

சிக்கன், அசைவ விரும்பிகளின் தவிர்க்க முடியாத உணவு. நம்மில் பலருக்கு சிக்கன் என சொன்னதுமே நினைவுக்கு வருவது கேஎஃப்சி சிக்கனாகத் தான் இருக்கிறது. அதன் தனித்துவமிக்க சுவை, தரம் தான் அதற்கு காரணம். இந்த புகழுக்கும்,வெற்றிக்கும் பின்னால் கொலோனெல் ஹார்லேண்ட் சாண்டர்ஸின் போராட்டங்கள் அதிகம்
கொலோனெல் ஹார்லேண்ட் சாண்டர்ஸ்,1890ம் ஆண்டு அமெரிக்காவின் இண்டியானா மாகாணத்தில் பிறந்தார். தனது 6 வயதிலேயே தந்தை இறந்ததால் தனது தம்பியையும், தங்கையையும் வளர்க்கும் பொறுப்பும், குடும்பத்தை காப்பாற்றும் பொறுப்பும் சாண்டர்ஸுக்கு வந்ததால் சிறு வயதிலேயே வேலைக்கு சென்று குடும்பத்தை காப்பாற்ற தொடங்கினார்.தனது உறவினர் பண்ணையில் விவசாயம் செய்தார். பின்னர் அமெரிக்க ராணுவத்தில் வண்டி ஓட்டும் பணி எதிலும் நிலையில்லாமல் இருந்தார் சாண்டர்ஸ்.
பின்னர் தனது 16வது வயதில் ரயில் நிலையத்தில் ரயில்கள் நின்றவுடன், அதில் எரிபொருளான கரியை நிரப்பும் வேலையில் ஃபயர்மேனாக சேர்ந்தார். அந்த வேலையும் கைவிட்டு போன சமயத்தில் பகுதிநேரமாக சட்டம் படித்தார், ஒரு இன்ஷூரன்ஸ் நிறுவனத்தில் சேல்ஸ்மேன் பணியில் இருந்தவருக்கு அந்த வேலையும் ஒத்து வராததால், இறுதியாக ஸ்டாண்டர்டு ஆயில் நிறுவனத்தின் சர்வீஸ் ஸ்டேஷனை நடத்தும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் கொஞ்ச நாட்களில் அதற்கும் வந்தது சோதனை கம்பெனி நஷ்டத்தில் சென்றதால் அதனையும் மூடும் நிலை உருவானது.

ஆனால் சர்வீஸ் ஸ்டேஷனுக்கு அருகில் உள்ளவர்களுக்கு தானே சமைத்த சிக்கன் சமையலை விற்று வந்தார் சாண்டர்ஸ், அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது, மக்கள் மத்தியில் கென்டகி ஃப்ரைடு சிக்கன் பிரபலமடைந்தது. சாண்டர்ஸின் முயற்சிகளில் வெற்றி முயற்சியாக இருந்தது கே.எஃப்.சி மட்டுமே. அதன் அபார வளர்ச்சியால் பல உச்சங்களை அடைந்த கே.எஃப்.சி, நியூயார்க் பங்குசந்தையில் இடம்பிடித்தது தொடங்கி இன்று உலகின் நம்பர் 1 பாஸ்ட் புட் உணவகம் என்ற பெயர் வரை வளர்ந்தது.
இன்றும் சாண்டர்ஸின் முகம் பதித்த புகைப்படம்தான் கேஎஃப்சியின் அடையாளமாக உள்ளது.தொடர் தோல்விகளால் துவண்டு போனவர்கள் முயற்சியை கைவிடாமல் இருந்தால் ஜெயிக்கலாம் என்பதற்கு சாண்டர்ஸ் ஒரு முன்மாதிரி!!

சிவவிரதங்கள் எட்டு


1. சோமவார விரதம்;
திங்கள் கிழமைகளில் இருப்பது
2. உமா மகேஸ்வர விரதம்;
கார்த்திகை பவுர்ணமியில் இருப்பது
3. திருவாதிரை விரதம்;
மார்கழி மாதத்தில் வருவது
4. சிவராத்திரி விரதம்;
மாசி மாதம் அமாவாசை தினத்தில் வருவது
5. கல்யாண விரதம்;
பங்குனி உத்திரத்தன்று கடைபிடிப்பது
6. பாசுபத விரதம்;
தைப்பூச தினத்தில் வருவது
7. அஷ்டமி விரதம்;
வைகாசி மாதத்தில பூர்வபட்ச அஷ்டமி தினத்தில் அனுஷ்டிப்பது
8. கேதார கவுரி விரதம்;
ஐப்பசி அமாவாசையை ஒட்டி (தீபாவளி தினத்தில்) இருக்கும் விரதம்.

கணேசபுரத்து ஜமீன் (பேய்க்கதை)

அன்று சனிக்கிழமை, சனிக்கிழமை வந்தாலே எப்பொழுதும் என் மனதில் ஒரு குதுகூலம் பிறந்துவிடும், ஏனென்றால், மறுநாள் விடுமறை என்பதால் அல்ல, அன்று ஆபீஸ் அரைநாள் மட்டுமே, அரைநாள் என்றால், ஏதோ மதியம் ஒரு மணிக்கு வேலை முடிந்துவிடும் என்று நினைக்க வேண்டாம், எப்படியும் எல்லா வேலையும் முடிக்க மணி மூன்று ஆகிவிடும், அதற்குப்பிறகு வீட்டுக்கு சென்று சாப்பிட்டு, சிறிது நேரம் மனைவிடம் சல்லாப்பித்து, மாலை ஒரு சினிமாவுக்கோ அல்லது வெளியில் எங்கேயாவது அழைத்துச் சென்று சுற்றிவிட்டு, அப்படியே இரவு உணவை, எதாவது ஹோட்டலில் முடித்து, இரவை மகிழ்ச்சியாக கழிக்கலாம் என்பதால் மட்டும் அல்ல, மறுநாள் விடுமுறை என்பதாலும் நிம்மதியாக தூங்கி விருப்பம் போல எப்பொழுது வேண்டுமானாலும் எழலாம் என்பதால் தான்.

ஆனால் சமீபகாலமாக மகிழ்ச்சி இரட்டிப்பானது, காரணம் வேறு ஒன்றுமில்லை, மனைவி தலைப் பிரசவத்திற்காக, தாய் வீடு சென்று இருப்பதாலும், அவளை வாரம் ஒரு முறை பார்த்து வருவதற்காக, ஒவ்வொரு சனிக்கிழமையும் தன் மாமனார் வீட்டிற்க்குச் சென்று வாரம் வாரம் விருந்து உண்டு வருவது தான்.

அந்த சந்தோஷமும் தற்சமயம் மூன்று மடங்கு ஆகிவிட்டது. நீங்கள் நினைப்பது சரிதான், எனக்கு கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னால், ஒரு அழகான பெண் குழந்தை பிறந்தது.சென்ற வாரம் குழந்தையைப் பார்த்ததிலிருந்து, குழந்தையின் ஒவ்வொரு அசைவும் என் கண்ணிலே இருந்து வருவதால், இன்று, எப்படியும் முன்னதாக கிளம்பி, மகளையும் மனைவியையும் பார்க்க விரும்பினேன்.

கணேசபுரம், ஒரு குக்கிராமம், சென்னைலிருந்து திருப்பத்தூர் செல்லும் வழியில் அமைந்திருந்தது, கிராமம் தான் என்றாலும், பார்க்க மிகவும் ரம்மியமாக பச்சைப்பசேலென்று கண்களுக்கு குளிர்ச்சி தரும் பசுமையுடன் அமைந்து இருக்கும். .

கிராமத்தைச் சுற்றிலும் மலைகள் சூழ்ந்திருக்க, நடுவில், அந்த கிராமம். நகரின் வாசனை எதுவும் அறியாத மக்கள், ஏதோ ஒரு புதிய உலகிற்கு வந்துவிட்டோமோ என்று தோன்றும் படியாகவே இருக்கும்.

எப்படியோ ஆபீசில் பெர்மிஷன் போட்டு, மதியம் ஒரு மணிக்கே கிளம்பினேன். நேரே பாரிஸ் கார்னர் சென்று, தன் மனைவிக்கு பிடித்த இனிப்பு கார வகைகளையும் மற்றும் குழந்தையை கொசுக் கடியிலிருந்து தவிர்க்க குடை வடிவ கொசுவலையையும், கூடவே பழங்களையும் வாங்கித் தயாராக வைத்துக்கொண்டேன்.

பஸ் கிளம்ப மதியம் மூன்று மணி ஆயிற்று, எப்படியும் இங்கிருந்து வேலூர் செல்ல மூன்று மணி நேரம் ஆகும். அங்கிருந்து ஒரு மணி நேரத்திற்குள் திருப்பத்தூர் செல்லும் வழியில் இருக்கும் கணேசபுரத்தை இருட்டுவதற்குள் சென்று விடலாம் என்றுதான் மனதிற்குள் கணக்கு போட்டு வைத்திருந்தேன்..

கணேசபுரமோ, மெயின் ரோடிலிருந்து ஒரு மூன்று கிலோ மீட்டர் உள்ளே இருந்த படியால், அங்கிருந்து ஊருக்குள் செல்லும் டவுன் பஸ்ஸில்தான் எப்பொழுதும் செல்வது வழக்கம்,எப்படியும் கடைசி பஸ்சை பிடித்து விடலாம் என்ற நம்பிக்கையில் இருக்க,

வேலூர் வரைக்கும் நன்றாக சென்ற பஸ், வேலூரிலிருந்து திருப்பத்தூர் செல்லும் வழியில், ஒரு இடத்தில் பஞ்சர் ஆகிவிட்டது, நடு வழியில் நின்று விட்டதால் என்ன செய்வதென்று தெரியவில்லை, எப்படியோ பஸ் ஓட்டுனரே, வண்டியின் டையரை மாற்றிவிட்டார். கிளம்ப கூடுதலாக ஒரு மணி நேரம் ஆயிற்று, அப்படியும் கணேசபுரம் மெயின் ரோடு செல்ல கிட்டத்தட்ட ஒன்பது மணி ஆகிவிட்டது.

இறங்கியுடன், சுற்றும் முற்றும் பார்த்தேன், அது பனிக்காலம் என்பதால், அந்த மெயின் ரோட்டில் இருக்கும் கடைகளில் ஒரு சில கடைகள் தவிர, மற்ற எல்லாம் மூடியபடி இருந்தது, ஒரே ஒரு டீக்கடையில், பெரியவர் மட்டும் டீக்கடை பெஞ்ச்களை வெளியில் இருந்து, ஒவ்வொன்றாய் உள்ளே அடுக்கிக் கொண்டிருந்தார், அநேகமாய் அவர்தான் கடையின் முதலாளியாய் இருக்க வென்றும், மெல்ல அவர் அருகில் சென்றேன்,

‘பெரியவரே, கணேசபுரம் போகணும், டவுன் பஸ் போயிடுச்சா’

‘இன்னும் போகல தம்பி, இப்ப வர்ற நேரம் தான்’

மனதிற்கு தெம்பாய் இருந்தது, எப்படியும் வந்தது விடும் என்ற நம்பிக்கையில் காத்திருக்க, மணியோ, பத்து ஆகிவிட்டது,அந்த பெரியவரோ, கடையை மூடிவிட்டு, ஒரு பெஞ்சில், துண்டை விரித்து போட்டு தூங்கத் தயாரானார். நானும் அருகில் உள்ள கடையில் ஒரு சிகரெட் பாக்கெட் வாங்கி, அதிலிருந்து ஒரு சிகரெட்டை எடுத்து பற்றவைத்தேன்.

‘பெரியவரே. மணி ஆச்சி, பஸ் இன்னும் வரலையே..’

‘சில சமயம் லேட்டா வரும்.. வராம கூட போகும், கணேசபுரம் தானே.. கொஞ்சம் பொறுத்துப் பாருங்க.. வரலைனா …அப்படியே காத்தாட நடந்து போயிடலாம் தம்பி’

அவனும் பொறுத்து பொறுத்துப் பார்த்தான், மணி வேறு பதினொன்று ஆகிவிட்டது.இனிமேல் இங்கேயே இருந்தால் ஒன்றும் ஆகப் போவதில்லை, நடந்தே சென்று விடலாம் என்று எனக்குத் தோன்றியது.இதுவரைக்கும் நடந்து சென்றதில்லை, வெளிச்சம் என்று மருந்துக்கும் இல்லை, பெஞ்சில் படுத்திருந்த பெரியவர் இருமினார்.

அவரை அடிக்கடி தொந்தரவு செயகிறேனோ என்று மனதிற்கு பட்டது, இருந்தாலும் கடைசியா அவரிடம் பொய் விசாரித்து விட்டு நடையை கட்டலாம் என்று தோன்றியது.

‘பெரியவரே.. நடந்து போன வழியில் எந்த பயமும் இல்லையே..’

‘என்ன தம்பி இந்த காலத்துல போய் பயப்படறீயே..’

‘அதுக்கில்ல, வழியில எதாவது பூச்சி, பொட்டு வருமான்னு தான் கேக்கறேன்’

‘அதெல்லாம் ஒன்னும் வராது தம்பி, வழியெல்லாம் ஒரே வயக்காடு தான், எதுக்கும் கையில ஒரு தீப்பெட்டி எடுத்துக்கோ..எதாவது சத்தம் கேட்டதுன்னா, ஒரு தீக்குச்சியை பத்த வை.. நெருப்ப பாத்தா எந்த மிருகமும் பயந்து போய்டும்..’

‘சரி பெரியவரே…. நீங்க தூங்குங்க… நான் கெளம்பறேன்’

நல்ல காலம், கையில் தீப்பெட்டி இருந்தது, சமயத்தில் சிகரெட் பிடிப்பது கூட உதவுகிறது, மனதில் நினைத்தவாறு, கணேசபுரம் செல்லும் சாலையை நோக்கி நடக்க ஆரம்பித்தான்.

அதை சாலை என்று கூறுவதை விட, ஒரு மண்ணும் கல்லும் மூடிய ஒற்றையடிப் பாதை என்று தான் கூறவேண்டும், சாலை முழுவதும் சரளைக் கற்கள் பெயர்ந்து, ஒரே குண்டு குழியுமாய் இருந்தது,

இரண்டு புறமும் கருவேல முள் மரங்களும், புளிய மரங்களும், வேப்ப மரங்களும் சாலை நோக்கி வளைந்து சூழ்ந்து கிட்டத்தட்ட பாதையை மூடி, ஒரு குறுகலான தோற்றத்தை உண்டாக்கி இருந்தது, இருட்டில் பார்ப்பதற்கு ஒரு இருட்டு குகைக்குள் செல்வது போல பயமுறுத்தியது.

ஒரு நூறு மீட்டர் நடந்திருப்பேன், சாலையின் ஒரு புறம் உள்ள, கரும்பு தோட்டத்தில், கரும்பு கழிகள் லேசாக அசைய ஆரம்பித்து, காற்று தான் அசைக்கிறது என்று நினைத்தேன், சிறிது நேரத்தில் ராந்தல் விளக்குடன், ஒரு முதியவர், வரப்பில் இருந்து வெளிப்பட்டார்.

அவர் வெளியே வந்து, ரோடை அடையும் வரை பொறுமையாக, அங்கே நின்றேன்.

‘பெரியவரே..’ என்றேன் பதில் இல்லை. அருகில் சென்று மிகவும் சத்தமாக கூற..

லேசாக திரும்பிப்பார்த்தார், அவருக்கு நான் நிற்பதே தெரியவில்லை, பின்னர் தன்னுடைய ராந்தல் விளக்கை என் முகத்தில் அருகே வைத்து பார்க்க…

‘யாரு…’

‘பெரியவரே… கணேசபுரம் போயிட்டு இருக்கேன்..நான் கடைசி பஸ்ஸ தவற விட்டுட்டேன், , நீங்க எங்கே போறீங்க..’

‘ஒ..நானும் அங்கே தான் போறேன்..’

‘நல்லது பெரியவரே.. எனக்கும் தனியா போறதுக்கு கொஞ்சம் பயமா இருந்தது… வழித்துணைக்கு நீங்க வந்தது நல்லதாப்போச்சு.’

‘கால்ல குழாய் எல்லாம் மாட்டிக்கிட்டு இருக்கீங்க… பட்டணத்தில இருந்து வரீகளா..’

‘ஆமாம் பெரியவரே, எனக்கு மாமனார் வீடு இதுதான், பொண்டாட்டி தல பிரசவத்துக்காக வந்திருக்கா …அதான் பாத்திட்டு போக வந்தேன்…இந்த ராத்திரி நேரத்த்தில இங்க என்ன பண்றீங்க..’

‘கரும்பு கொல்லைக்கு தண்ணீர் விட வந்தேன்..ஒரு மணி நேரம் தான் கரண்ட்டு விட்டான, அதுக்குள்ளே போய்டுச்சி .. அதான் வீட்டுக்கு போயிட்டு இருக்கேன்..’

‘தனியா போறீங்களே, வழியில காத்து கருப்பு இருக்குதுன்னு சொல்றாங்களே, பயம் எதுவும் உங்களுக்கு இல்லையா…’

‘அதெல்லாம் நெறைய பார்த்திட்டேன் தம்பி… ஆனா ஒன்னும் செய்யாது’

‘என்னது… இருக்கா… நீங்க பார்த்து இருக்கிங்களா’

‘எத்தனோ முறை வழியில பார்த்து இருக்கேன்… ஆனா ஒன்னும் பண்ணாது..’

எனக்கு மனதில் கிலி பிடிக்க ஆரம்பித்தது, ஆனாலும் அதை வெளிக்காட்டிக்கொள்ளாமல்.

‘இந்த காலத்துல போய் ஆவி, காத்து, கருப்பு எல்லாம் நம்பறீங்களா பெரியவரே..’

‘என்னதான் காலம் மாறினாலும், அதெல்லாம் உண்மைதான்.. இங்க நடமாடற ஆவி கதையை கேட்டு இருக்கீங்களா’

‘அதெல்லாம் நான் நம்பறது இல்ல..சொல்லுங்களேன்… வீட்டுக்கு போற வரைக்கும் போர் அடிக்காம இருக்கும்’

‘அப்படி எல்லாம் நினைக்காத தம்பி…இது உண்மையா நடந்தது தான்’

‘ஒரு நூறு வருஷத்துக்கு முன்னாடி, இங்க கோவிந்தசாமி நாய்க்கர்ன்னு , ஒரு ஜமீன்தார் இருந்தார், சுத்தி இருக்கிற பதினெட்டு பட்டிக்கும், அவர் தான் பெரிய நாட்டாம்மை, வசதிக்கும குறைச்சல் இல்ல..

அரண்மனை போல வீடு இருக்கும், நில புலன்களுக்கும் அளவே இல்ல, வேலை செய்யவே நூத்து கணக்குல ஆள் இருப்பாங்கா..அவருக்கு, கௌரி… லட்சுமி …

‘என்ன.. ரெண்டு போண்ண்டாட்டியா …’

‘இல்லப்பா .. ஒண்ணு தான்.. கௌரி லட்சுமின்னு அழகான மனைவி…அவருக்கு மனைவிமேல அம்ம்புட்டு பிரியம். வாழ்க்கை நல்லத்தான் போய்ட்டு இருந்தது, அப்பதான்.. …’ நிறுத்தினார்.

‘ஏதாவது அசம்பாவிதம் நடந்து போச்சா ..’

‘கொஞ்சம் பொறுப்பா… அவசப்பட்ட எப்படி.. வத்திப்பெட்டி வைச்சிருக்கியா .. சுருட்டு பிடிக்கணும் போல இருக்கு ‘ என்றவர் … மடியில் சுருட்டி வைத்திருந்த சுருக்கு பையைத் துழாவினார்.

‘பெரியவரே…என்ன தேடறீங்க…’

‘இப்பத்தான் … ஒரு சுருட்டு பிடிச்சி.. பாதியை.. இங்கதான் வச்சேன்..அதக் காணோம்..’

‘சிகரேட் பிடிப்பீங்களா…இந்தாங்க….’

‘எனக்கு சுருட்டு பிடிச்சி தான் பழக்கம்…சரி..கொடு…’ கொடுத்தேன்..

பத்த வைத்தவர்.. புகையாய் நன்றாக இழுத்து… தன்னை ஆசுவாப்படுத்திக் கொண்டார்

நானும் ஒன்றை எடுத்து பத்த வைத்தேன்..

‘இந்த வாசனை நல்ல தான் இருக்கு… ஏனோ சுருட்டுல இருக்கிற காரம் இதில இல்லையே…. ஆங்… எங்க விட்டேன்..’

‘ஜமின்தார் தன மனைவியை நேசித்தார்ன்னு சொன்னீங்க…அப்புறம் ‘

விட்ட இடத்தை எடுத்துக் கொடுத்தேன். ..

‘ஆமா.. மனைவி மேல அவருக்கு கொள்ள பிரியம்.. ஜமின்தாருக்கு காட்டுல போய் வேட்டை ஆடுறதுல்ல பைத்தியம்ன்னு சொல்லலாம். , காட்டுக்குள்ள போனாருன்னா… எப்படியும் ஒரு புலி, சிறுத்தை, இல்லாம வீட்டுக்கு வரமாட்டார்.. அதுக்காக காட்டுல ஒரு வாராம் மேல கூட தங்கிட்டு வருவார்…

அப்படி ஒரு தடவ அவர் போன பொழுது…அன்னிக்குன்னு பார்த்து…அவரே எதிர்பாக்காம.. ஒரே நாள்ல .. ரெண்டு புலிய கொன்னு .. போன அன்னிக்கு ராத்திரியே வீட்டுக்கு வந்திட்டார்…

வீட்டுக்கு வந்து பார்த்தா..அவரு மனைவி குதிரைக்காரன் கூட இருக்கிறதை . தன் கண்ணால நேர்லேயே பார்த்திட்டார்…’

‘பார்த்த உடனே குதிரக்காரனையும் மனைவியையும் கொன்னுட்டாரா….’

அவசரப்பட்டேன், முடிவை தெரிந்து கொள்ள..

‘அப்படி பண்ணி இருந்தா தான் பிரச்சினை இல்லையே… ஆனா .. அவர் பார்த்த உடனே குதிரைக்காரன் ஓடிப்போய்ட்டான்..மனைவியோ ஜமின்தார் காலில் விழுந்து கதறி அழுவுறா, அவ அழறதப் பார்த்தவுடன் அவர் மனது கொஞ்சம் இளகியது…

‘எப்போ நீ ஒருத்தன் கூட இருந்தியோ.. அப்பொழுதே இந்த வீட்டை விட்டு போய்விடு..என் முகத்தில் முழிக்காதே..’

கர்ஜித்தார்..

‘அப்படி எல்லாம் செய்திடாதிங்க… எதோ தெரியாம தவறு செய்திட்டேன்..’
மீண்டும் அவர் காலைப் பிடித்து கதற..

‘நீ செய்த தவறுக்கு.. ஊருக்கு மட்டும் நாம் கணவன் மனைவியா இருப்போம், வீட்டுக்குள்ள நீ யாரோ நான் யாரோ, இதற்கு சம்மதம்னா இரு.. ‘

வெளியில் சென்று அவமானப்படுவதை விட, இப்படியே இருந்து விடலாம் என்று முடிவு செய்தவளாய் அவர் சொன்ன நிபந்தனைக்கு ஒப்புக்கொண்டாள்.

‘அப்புறம்.. கதையிலே ஒரு திருப்பமே இல்லையே.. என்ன பெரியவரே… ‘

‘இருப்பா.. இனிமே தான் கதையின் முடிவே வரப்போகுது.. அதுக்குள்ளே அவசப்பட்ட எப்படி..’ அவர் அப்படி சொல்ல…

வழியில் வினோத ஒலிகள் கேட்க ஆரம்பித்தது, பாதை இருமருங்கிலும் பனை மரங்கள் வளர்ந்து. இருந்தது, போதாக்குறைக்கு காற்று வேறு பலமாக வீசியதால், காய்ந்த பனைமர மட்டைகள், ஒன்றுக்கு ஒன்று மோதி ‘சல சல’ என்று சத்தம் போட்டு பயமுறுத்தியது.

பக்கத்தில் எங்கேயோ.. குலமோ, குட்டையோ இருக்க வேண்டும், பாம்பு தவளையை துரத்தி செல்ல, பாம்பின் வாயில் மாட்டிய தவளையின் கதறல் சத்தமும், ஆந்தையின் அலறலும் துல்லியமாகக் கேட்டது.

‘என்னப்ப்ப பயமா இருக்குதா..’

‘அப்படி எல்லாம் இல்ல… இந்த சத்தம் தான்.. ‘ இழுத்தேன்.

‘நாள் செல்லச் . செல்ல, கௌரிலட்சுமிக்கு குதிரைக்காரன் மேல ஆசை கொஞ்சமும் குறையல, அதற்காக ஒரு சதித்திட்டம் போட திட்டமிட்டாள்.

ஒரு நாள், ஜமின்தார் மதிய உணவு சாப்பிட்டிட்டு, ஊஞ்சலில் சாய்ந்து ஓய்வெடுதுக்கொண்டிருந்தார், அப்ப மெதுவாக அவர் பக்கத்துல நின்னு,

‘இந்தாங்க கொழுந்து வெத்தலை போட்டுக்கோங்க..’

தன கையால் மடித்த வெற்றிலையை அவரிடம் நீட்ட..

‘என்ன இன்னிக்கு.. இதுல எதாவது விஷம் தடவி இருக்கியா..’

‘ஐயோ.. ஏன் இப்படி என்ன வார்த்தையால சித்திரவதை செய்றீங்க.. பாருங்க..நம்பிக்கையில்லனா… நானே போட்டுக்கறேன்.. அப்படின்னு சொல்லிட்டு …அவளே அந்த வெத்தலைய தன வாயில் போட்டு மெல்ல ஆரம்பிச்சுதமே ..’

ஜமீன்தார கொஞ்சம் சமாதானாமானார். .

‘நான் ஒரு யோசனை சொல்லவா. பேசாம அவன கொன்னுடலாம் .. அப்புறம் உங்களுக்கு என் மேல நம்பிக்கை வரும் இல்லையா’

தன திட்டத்தை மெதுவா அவர் காதுல போடா ஆரம்பிச்சா..

அவரும் யோசித்தார், அவருக்கும் சரியென்று பட்டது..அதற்கான திட்டமும் தீட்டப்பட்டது… ..

ஜமின்தார் மறுபடியும் வேட்டைக்கு சென்றிருப்பதால், தன்னை வந்து சந்திக்க அய்யனார் கோவிலுக்கு வருமாறு, அந்த குதிரைக்காரனுக்கு தனக்கு விசுவாசமான் ஒருத்தர் மூலம் தகவல் தெரிவித்தாள் …கௌரிலட்சுமி,

அவன் அங்கு வந்தால், அவனை ஜமீன்தார் மூலம் கொலை செய்துவிட்டு, பழியை காத்து, கருப்பு, ஆவி மேல் போட்டு விடலாம. என்ற திட்டத்துடன் இருக்க…

அந்த குதிரைக்காரனும் சரியாக அங்கு வர…

மிக நீண்ட நாட்களுக்கு பிறகு இணையும் காதலர்கள் போல அவர்கள் சந்திக்க, அதை ஜமீன்தார், ஒரு மறைவில் இருந்து பார்த்துக்கொண்டே..மெதுவாக.. அவன் அருகில் வந்து, தன கையில் இருந்த கத்தியால் குத்த முயலும் பொழுது…’ நிறுத்தினார்..

அதற்குள் அந்த ஊரின் எல்லை காவல் தெய்வமான அய்யனார் சிலை சிறிது தூரத்தில் கம்பீரமாக வீற்றிருக்க…ஊர் எல்லையை அடையப் போகிறோம் என்பதை உணர்ந்தான். ..தூரத்தில் … சில வீடுகள் அங்கொன்றும் இங்கொன்றும் இருப்பதை.பார்த்தான்..

‘என்ன பெரியவரே…நிறுத்திட்டிங்க…’

‘ஒண்ணும் இல்லப்பா ….அந்த கௌரிலட்சுமி .கௌரிலட்சுமி…’.

ஏனோ தெரியவில்ல.. கடைசியில் அந்த பெயரைக் கூறிய பொழுது, அவர் குரல் முன் போல இல்லை, குரல் தழுதழுத்தது.. கண் கலங்கியதா…இல்லை கண்ணில் தூசி பட்டதா.. தெரியவில்லை… .

‘அதற்குள், தான் ஆசை ஆசையாய் இருந்த கௌரிலட்சுமியே மறைத்திருந்த கத்தியால் ஜமினதாரின் மார்பில் குத்த, குதிரைக்காரனும் தன் பங்கிற்கு சேர்ந்து கத்தியால் குத்த .. அவர் உயிர் அப்பொழுதே பிரிந்தது..

‘அடிப்பாவி..’ என்றேன்..

‘மறுநாள்… ஜமீன்தாரை… காட்டு புலி கொன்றதாக ஒரு புரளியைக் கிளப்பி.. ஊர் மக்களை நம்பவைத்தாள் கௌரிலட்சுமி…

‘அன்னிக்கு இருந்துதான்.. அந்த ஜமீன்தார் ஆவி… இங்கேயே சுத்திக்கிட்டு இருக்கு..’

‘அப்புறம் எப்படி தான்… அவங்க ரெண்டு பேருக்கும் மட்டும் தெரிந்த அந்த ரகசியம் மத்தவங்களுக்கு தெரிஞ்சது பெரியவரே…’

அதற்குள்… அய்யனார் கோவிலை அடைந்து விட்டேன்…

சுற்றும் முற்றும் பார்க்க… பக்கத்தில் நடந்து வந்த பெரியவரைக் காணவில்லை…

பெரியவரே.. பெரியவரே.. சத்தமாக கூச்சலிட்டுப் பார்த்தேன்.. ..

அவரைக் எங்கும் காணவில்லை….அருகில் நடந்து வந்தவர்… அய்யனார் கோயில் வந்த உடனே …. காணவில்லையே..

ஒருவேளை வந்தவர் தான் அந்த ஜமீன்தாரோ … இவ்வளவு நேரம் அவருடன் தான் பேசிக்கொண்டு வந்தேனோ .. ஊரின் தெரு வீதியை அடைந்தும் .. மனதில் இருந்து பயம் விலகிய பாடில்லை…

அன்று ஏற்பட்ட அந்த அனுபவம் இன்று வரையில் என் வாழ்க்கையில்… ஒரே மர்மமாக இருக்கிறது….

தூக்கம் வராமல், இறந்து போன தன் தந்தை சிவராமனின் பழைய ட்ரங்க் பெட்டியில் இருந்த எடுத்த டைரியில், 4-11-1972 அன்று எழுதிய மேல் சொன்ன பகுதியை படித்ததிலிருந்து கணேஷுக்கு..கொஞ்சம் நஞ்சம் வந்த தூக்கமும் போய் விட்டது..

சமையல் அறைக்குள் சென்று, ஒரு கிளாஸ் தண்ணீர் அருந்தலாம் என்று குடிக்கச் செல்ல..

‘என்னப்பா… கணேஷ்.. தூக்கம் வரலையா’

அதிர்ச்சியுடன் குரல் கேட்டு திரும்ப, இறந்து போன தன் தந்தை எதிரில் நின்று கொண்டு இருந்தார்.

Neurotransmitters. (Illustration and description)

Neurotransmitters are endogenous chemicals that transmit signals across a synapse from one neuron (brain cell) to another 'target' neuron. Neurotransmitters arepackaged into synaptic vesicles clustered beneath the membrane in the axon terminal, on the presynaptic side of a synapse. Neurotransmitters are released into and diffuse across the synaptic cleft, where they bind to specific receptors in the membrane on the postsynaptic side of the synapse. Many neurotransmitters are synthesized from plentiful and simple precursors, such as amino acids, which are readily available from the diet and which require only a small number of biosynthetic steps to convert.








Most neurotransmitters are about the size of a single amino acid, but some neurotransmitters may be the size of larger proteins or peptides. A neurotransmitter is available only briefly – before rapid deactivation – to bind to the postsynaptic receptors. Deactivation may occur due to: the removal of neurotransmitter by re-uptake into the presynaptic terminal; or degradative enzymes in the synaptic cleft. Nevertheless, short-term exposure of the receptor to neurotransmitter is typically sufficient for causing a postsynaptic response by way of synaptic transmission.
In response to a threshold action potential or graded electrical potential, a neurotransmitter is released at the presynaptic terminal. Low level "baseline" release also occurs without electrical stimulation. The released neurotransmitter may then move across the synapse to be detected by and bind with receptors in the postsynaptic neuron. Binding of neurotransmitters may influence the postsynaptic neuron in either an inhibitory or excitatory way. This neuron may be connected to many more neurons, and if the total of excitatory influences is greater than that of inhibitory influences, it will also "fire". That is to say, it will create a new action potential at its axon hillock to release neurotransmitters and pass on the information to yet another neighboring neuron
---
CHEMICAL STRUCTURES OF NEUROTRANSMITTERS [PDF]:
http://www.compoundchem.com/wp-content/uploads/2014/02/Neurotransmitters.pdf
---
Neurotransmitters:
• Lots of different kinds, over 100 or so.
• There are two main types- small molecule neurotransmitters and neuropeptides.
• Abnormalities of neurotransmitter function contributes to wide range of neurological diseases and psychiatric disorders
Major categories of neurotransmitters:
• Small molecule neurotransmitters- amino acids, purines, biogenic amines.
• Peptide neurotransmitters: 3-36 amino acid polypeptides, often derived from longer
polypeptides.
--> http://bio.classes.ucsc.edu/bio125/lecture7.pdf

அதிசயத் தகவல்கள்...!

1.நைல் நதியின் மேல் செல்லும் நீரோட்டத்தை விட அதன் அடிமட்டத்தில் பாயும் நீரின் வேகம் ஆறு மடங்கு அதிகமாக இருக்கும். 

2.ரோலர் கோஸ்டரில் பயணம் செய்பவர்களுக்கு மூளையில் இரத்த அடைப்பு ஏற்படுவதற்கு வாய்ப்பு அதிகம் உள்ளது.

3.நீல நிற கண்களை உடையோற்கு மற்றவர்களை விட இரவில் பார்வை திறன் துல்லியமாக இருக்கும்.

4.காகிதப் பணம் தயாரிக்கப்படுவத ு காகிதம்,பருத்தி ஆகியவற்றின் சிறப்பான கலவைகளால்தான்.

5.தேளை கொல்வதற்கு எளிய வழி.சிறிதளவு மதுபானத்தை தேளின் மீது ஊற்றினால் போதும் உடனே அது இறந்து விடும்.

6.வெங்காயம் உரிக்கும் போது கண்ணில் கண்ணிர் வராமல் இருக்க சூயிங்கம் மென்றால் போதும்.

7.உலகில் பயன்படுத்தப்படும் பெட்ரோலில் 29 சதவீதம் அமெரிக்காவில் பயன்படுத்தப்படு கிறது.அது போல் உலகின் பயன்படுத்தப்படும் மின்சாரத்தில் 33 சதவீதம் பயன்படுத்தப்படுவதும் அமெரிக்காவில்தான்.

8.ஒரு மணி நேரம் காதில் இயர்போன் அணிந்து பாட்டு கேட்கும் போது ,காதில் உள்ள பாக்டீரியாக்களி ன் எண்ணிக்கை பல மடங்கு அதிகரிக்கிறது.

9. வலது கைப்பழக்கம் உள்ளவர்கள் இடது கைப்பழக்கம் உடையவர்களைவிட சராசரியாக ஒன்பது வருடங்கள் உயிர் வாழ்கிறார்கள்.

10.ஒரு முறை புன்னகை புரிவதன் மூலம் குறைந்தப் பட்சம் 30 தசைநார்களுக்கு பயிற்சி கிடைக்கிறது.

11.நமது மூக்கு நமது உடலில் ஒரு குளிர் சாதனப் பெட்டி போல் இயங்குகிறது.இது உடலுக்குள் செல்லும் குளிர் காற்றை வெப்பப்படுத்தி அனுப்புகிறது.சூ டானக்காற்றை குளிரச் செய்து அனுப்புகிறது.மேலும் காற்றில் உள்ள மாசுக்களை தடுத்து தூயக்காற்றை உள்ளே அனுப்பும் வடிகட்டியாகவும் மூக்கு செயல்படுகிறது.(

12.நமது மூளையானது சக்தி வாய்ந்த கணினியை விட பல மடங்கு சக்தி வாயந்தது.மூளை 100 பில்லியன் நரம்பு செல்களால் உருவானதாகும்.

13.மனிதன் இறக்கும் போது முதலில் அவனின் கேட்கும் திறனையே இழக்கிறான்.

14.ஒரிகான் என்ற இடத்தில் 2400 வருடங்கள் வாழ்ந்து கொண்டிருக்கும் காளான் ஒன்று உள்ளது.இது 3.4 சதுரமைல் இடத்தில் பரந்து காணப்படுகிறது.இதில் விசேசம் என்னவென்றால் அது இன்றும் வளர்ந்து கொண்டிருக்கிறது.

15.மற்ற வகை நாய்களை விட, ஜெர்மன ஷெப்பர்ட் வகையைச் சார்ந்த நாய்களே மனிதனை அதிக அளவில் கடிக்கிறது.

16.ஆண்களின் சட்டைகளில் வலது பக்கத்தில் பட்டன்கள் இருக்கும்.ஆனால் பெண்களின் சட்டைகளில் இடது பக்கத்தில் பட்டன்கள் இருக்கும்.

17.நமக்கு மகிழ்ச்சி அளிக்கும் செயல்களை பார்க்கும் போது .நமது விழித்திரையானது சாதாரண நிலையவிட 45 சதவீத அளவில் விரிந்து விடுகிறது.

18.தேன் எளிதில் ஜீரணமாவதற்கு காரணம் அது ஏற்கனவே தேனீக்களால் ஜீரணிக்கப்பட்டிருப்பதுதான்.

19.உண்மையான டைட்டானிக் கப்பலைத் தயாரிக்க எவ்வளவு செலவானது தெரியுமா? வெறும் ஏழு மில்லியன் டாலர் மட்டும்தான்.ஆனால் டைட்டானிக் படம் தயாரிக்க எவ்வளவு செலவானது தெரியுமா? 200 மில்லியன் டாலர்.

20.நாம் நமது கழுத்தை அசைக்கும் போது டிரிக் என ஏற்படும் சத்தமானது நைட்ரஜன் வாய்வுக் குமிழ்கள் எரிக்கப்படுவதால் உண்டாகிறது.

21.மனித உடலில் இரத்த ஓட்டம் இல்லாத பகுதி எது தெரியுமா? கண்ணின் கருவிழி.ஏனென்றால் கருவிழி அதற்கு தேவையான ஆக்ஸிஜனை காற்றிலிருந்து நேரடியாகப் பெற்றுக்கொள்கிறது.



* ஆக்ஸ்போர்டு ஆங்கில அகராதியை உருவாக்க 44 ஆண்டுகள் ஆனது.
* சில சூப்பர் கம்ப்யூட்டர்கள் ஒரே வினாடியில் 3.6 கோடி செயல்களைச் செய்யும் திறன் கொண்டவை!
* ஜப்பானிலுள்ள ஒரு சுரங்கப்பாதையில் சாலை, ரயில் என இருவகை போக்குவரத்துமே உண்டு. மொத்த நீளம் 54 கிலோ மீட்டர்!
* சுவிட்சர்லாந்தில் பாலாடைக்கட்டிகள் துளைகளுடன் கூடிய சக்கரங்கள் போல தயாரிக்கப்படுகின்றன. இந்த சுவிஸ் சீஸ் 100 கிலோ எடையுள்ள சக்கரங்களாகவே ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
* சில ஜெராக்ஸ் இயந்திரங்கள் ஒரே வினாடி யில் இரண்டு நகல்களை வெளித் தள்ளும் அளவு வேகம் கொண்டவை.
* கடிகாரங்களில் உள்ள ஸ்க்ரூக்கள் மிகமிகச் சிறியவை. நம் உள்ளங்கையிலேயே 30 ஆயிரம் ஸ்க்ரூக்களை ஏந்திவிடலாம்!
* 4 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பீர் பானம் தயாரிக்கப்பட்டதற்கான ஆதாரங்கள், பாபிலோனின் பண்டைய கல்வெட்டுகளில் காணப்படுகின்றன.
* ஃபிலிம் பயன்படுத்தப்பட்ட காலத்தில், புகைப்படத் துறை ஆபரணக் கடைகள், நாணயத் தயாரிப்புத் துறையை விடவும் அதிக வெள்ளியைப் பயன்படுத்தியது.
* தேநீரில் 2 ஆயிரத்துக்கும் அதிக வெவ்வேறு விதமான கலப்பு வகைகள் (பிளெண்ட்) உள்ளன.
* பிரான்ஸ் தலைநகர் பாரிஸிலும் சுதந்திர தேவி சிலை (லிபர்டி) உள்ளது.

Do violent movies cause aggression? The answer may depend

The debate over whether violent movies contribute to real-world mayhem may have just developed a wrinkle: New research suggests they might enhance aggression only in those already prone to it.


Using PET scanners to peer into the brains of volunteers watching especially bloody movie scenes, researchers determined that the way a viewer’s brain circuitry responds to violent video depends upon whether the individual is aggressive by nature. The study was published Wednesday in PLOS One.

“Just as beauty is in the eye of the beholder, environmental stimuli are in the brain of the beholder,” said Nelly Alia-Klein, the study’s lead author and an associate professor at the Friedman Brain Institute and the Icahn School of Medicine at Mount Sinai Hospital in New York City.

To test the importance of personality, Alia-Klein and her colleagues rounded up 54 healthy men, some of whom had a history of getting into physical fights, while the others had no history of aggression. The researchers scanned the volunteers three times: doing nothing, watching emotionally charged video and viewing a violent movie.

“It wasn’t the whole [violent] movie,” Alia-Klein said, “just the violent scenes, one after another after another.” Along with the brain scans, the researchers monitored blood pressure and asked about the viewers’ moods every 15 minutes.

While the two groups of men responded similarly when watching the emotional video, their brain scans and blood pressure readings were strikingly different as they viewed the violent scenes. The non-aggressive men’s blood pressure rose and the orbitofrontal cortex, an area of the brain involved in impulse control and decision making, sparked brightly.

The aggressive men’s brains were much quieter and their blood pressures either stayed the same or in some cases dropped a little.


To Alia-Klein, the blood pressure readings meant that the aggressive men were not disturbed by the violent scenes they were viewing. And the lack of activity in the orbitofrontal cortex meant “they weren’t engaging the part of the brain that would say, ‘this is bad.’ It could be because this is congruent with their personalities, that it’s part of their ‘normal.’”

She speculates that the impact may be to enhance the aggression that is already there. “At the right time, when they become violent, they may act out some of the ideas they have seen,” Alia-Klein said. “The movies may offer them ways to kill or aggress.”

Dr. Marco Iacoboni, a brain researcher unaffiliated with the new study, said the findings make a lot of sense.

“This is a nice correlation between the aggression and blood pressure,” said Iacoboni, a professor in the Department of Psychiatry and Behavioral Sciences and director of the Transcranial Magnetic Stimulation Lab at the Ahmanson-Lovelace Brain Mapping Center at the David Geffen School of Medicine at UCLA. “When they see a violent movie their blood pressure doesn’t go up like the quiet guy’s does. It’s almost like they feel at home.”

And the calm orbitofrontal cortex may mean that these aggressive men aren’t able to rein themselves in when angry.

“So if you make me mad I control myself because I am able to do that,” Iacoboni said. “But someone else might be less able to control their emotions and that most likely would lead to aggression.”

The new study “takes an important step forward by documenting experimentally the important variability of our responses to violent media,” said Dr. Brian A. Primack, an associate professor of medicine and pediatrics and director of the Program for Research on Media and Health at the University of Pittsburgh. “It makes sense that different people who experience violent media — such as movies or video games — will respond differently to those stimuli.

“Some people are apparently inspired by or assisted in engaging in antisocial acts, while others may instead develop anxiety or fear responses, and still others may have very little change in mood or inclination.”

Courtesy: NBC News