Search This Blog

Wednesday, August 27, 2014

கணபதியின் அருளைப் பெற 11 வகை விரதங்கள்

கணபதியின் அருளைப் பெற பதினோரு வகையான விரதங்களை நம் முன்னோர்கள் நமக்கு அருளி இருக்கின்றார்கள். 

1.வைகாசி வளர்பிறை:- முதல் வெள்ளிக்கிழமை தொடங்கி ஒரு வருடம் செய்வது வெள்ளிக்கிழமை விரதம். 

2.செவ்வாய் விரதம்:- ஆடிச் செவ்வாய் தொடங்கி ஒவ்வொரு செவ்வாயும் ஓராண்டு வரை செய்வது செவ்வாய் தோஷம் விலகிவிடும். 

3.சதுர்த்தி விரதம்:-பிரதி மாதம் சதுர்த்தி அன்று இருப்பது காரியத்தடைகள் நீங்கும். 

4.குமாரசஷ்டி விரதம்:-கார்த்திகை மாத தேய்பிறை பிரதமை திதி அன்று தொடங்கி மார்கழிவரை பிறை சஷ்டி வரை 21 தினங்கள் செய்வர். 21 இலைகள் உடைய மஞ்சள் நூலை கையில் கட்டிக்கொள்வர். பிள்ளை செல்வம் குடும்ப வளத்திற்காக செய்யப்படுகின்ற இந்த விரத்திற்குப் பிள்ளையார் நோன்பு என்ற பெயர் உண்டு. 

5. தூர்வா கணபதி விரதம்:- கார்த்திகை மாத வளர்பிறை சதுர்த்தி அன்று விநாயகரை அருகம்புல் ஆசனத்தில் அமர்த்தி செய்வது வம்சவிருத்தி ஏற்படும். 

6. சித்தி விநாயக விரதம்:- புரட்டாசி வளர்பிறை 14-ம் திதியான சதுர்தகி திதியில் விரதம் இருப்பது எதிரிகள் விலகுவர். 

7. தூர்வாஷ்டமி விரதம்:- புரட்டாசி வளர்பிறை அஷ்டமி அன்று தொடங்கி விநாயகரை 1 ஆண்டு அருகம்புல்லால் அர்ச்சித்து வருவது உடல் வலிமை உண்டாகும். 

8. விநாயக நவராத்திரி:- ஆவணி வளர்பிறை சதுர்த்தியை தொடர்ந்து ஒன்பது நாட்கள் செய்வது விநாயக நவராத்திரி. 

9. வெள்ளிப்பிள்ளையார் விரதம்:- ஆடி, தை வெள்ளிக்கிழமைகளில் விநாயகரை நேர்ந்து கொண்டு விரதம் இருந்து நாம் கோருகின்ற பலனுக்கு ஏற்ப துதிகள் பாடி பலகார பட்சனங்கள் படைத்து வணங்குதல். இந்த விரத பூஜையை பெண்கள் செய்ய வேண்டும். எண்ணங்கள் நிறைவேறும் படி செய்வது. 

10. செவ்வாய் பிள்ளையார் விரதம்:- ஆடி மாத செவ்வாயன்று செய்யப்படுவது. ஆண்கள் கலந்து கொள்ளக்கூடாது. இந்த விரத பூஜையைச் செய்யும் பெண்கள் வீட்டிலிருந்து பச்சரிசியைக்கொண்டு வந்து பொதுஇடத்தில் இடித்து மாவாக்கி தேங்காய் துருவல் சேர்த்து உப்பின்றி கொழுக்கட்டை அடை செய்து விநாயகருக்கு படைப்பர். கன்று போடாத பசு சாணத்தால் உருவம் செய்து புங்கமரக்கொழுந்து, புளிய மரக்கொழுந்தால் தட்டி செய்து மேடையாக்கி அதில் அவரை பிரதிஷ்டை செய்து ஆடிப்பாடுவர். கன்னியாகுமரி, நெல்லை மாவட்டங்களில் இன்றும் இப்பூஜை செய்வர். குமரி மாவட்டத்தில் உள்ள பூதப்பாண்டியில் அமைந்துள்ள ஒளவையார் கோவிலில் விசேஷமாகக் செய்யப்படுகிறது. செல்வச்செழிப்புடன் வாழ இந்த பூஜை வழிசெய்வதாக பெண்களின் நம்பிக்கை. 

11. அங்காரக சதுர்த்தி விரதபூஜை:- பரத்வாஜ முனிவருக்கும், இந்திர லோகப்பெண் துருத்திக்கும் ஒரு ஆண் குழந்தை பிறக்க அதை பூமாதேவி வளர்த்து பெற்றோரிடம் ஒப்படைக்க மகரிஷியோ அதற்கு அங்காரகன் எனப்பெயர் சூட்டி விநாயகரை பூஜித்து வரும்படி கூறினார். இதில் மகிழ்ந்த விநாயகர் நவக்கிரஹகங்களில் ஒருவராக அங்காரகனுக்கு பதவி அளித்தார். ஏழையாக உள்ள ஒருவன் மாசி தேய்பிறை செவ்வாயில் தொடங்கி ஒரு வருடம் பூஜை செய்து வந்தால் பெரும் பணக்காரன் ஆவான் என்று விநாயகர் வழிபாட்டு சாத்திரங்கள் சொல்கின்றன. 

பிள்ளையார் கோபுரம்:- காரைக்கால் கோவில் பத்து என்னும் ஊரில் அமைந்திருக்கும் சுந்தரமூர்த்தி விநாயகர் ஆலய கோபுரம் 5 கலசங்களுடன் மூன்று அடுக்குகளாக அமைந்து முதல் இரண்டு அடுக்குகளில் ஆறு விநாயகர்கள் வீதம் பன்னிரு விநாயகமூர்த்தங்களும் மூன்றாவது அடுக்கில் ஐந்து வித்தியாசமான விநாயக வடிவங்களும் ஆக 17 பேர் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Thought of Feminism Painting சந்திரமோகன் வெற்றிவேல் வரைந்த ஓவியம்..


ஏன் திருமண வாழ்க்கையில் இவ்வளவு பிரச்சனனைகள் ஏற்படுகிறது ?

ஏன் திருமண வாழ்க்கையில் இவ்வளவு பிரச்சனனைகள் ஏற்படுகிறது என்ற சந்தேகம் உங்களுக்கு வரக்கூடும். இதற்கு பல காரணங்கள் உண்டு அவற்றில் ஒன்று ஜாதகத்தை ஆராயாமல் திருமண வாழ்வை அமைத்து கொள்வது. ஜாதகம் என்பது உங்களுடைய காலக்கண்ணாடி அது உங்களின் வாழ்க்கையை பிரதிபலிக்கும். எனவே அதை சரியாக பயன்படுத்தி உங்கள் வாழ்க்கையை சுகமாக்க / வாழ கற்று கொள்ளவும்.
ஒருவருடைய வாழ்க்கையில் முக்கிய திருப்பு முனையாக அமைவது அவருடைய திருமண பந்தம் ஆகும்.
ஆனால் சிலருக்கு
• வாழ்க்கை இனிக்கிறது
• வாழ்க்கை கசக்கிறது
• காதல் திருமணம்
• திருமணம் நடப்பதே குதிரை கொம்பாக இருக்கிறது
• ஒருவருக்கே இரண்டு,மூன்று திருமணம் நடப்பது அதிலும் திருப்பிதியற்ற சூழ்நிலை ஏற்படுவது
• திருமண முறிவு (விவாகரத்து) ஏற்படுகிறது
• திருமண வாழ்வின் அடிப்படையான தாம்பத்திய சுகம் கெடுகிறது
• திருமணதிற்கு பிறகு கள்ளக்காதல் / வேறு ஒருவருடன் தொடர்பு ஏற்படுவது
இதற்கு பல காரணங்கள் சொல்ல படுகிறது. ஆனால் இதற்கு அடிப்படை காரணமாக இருப்பது மணமக்கள் ஜாதகத்தை சரியாக பொருத்தாமல் / ஆராயாமல் திருமணம் செய்வது முக்கிய காரணமாக இருக்கிறது. எனவே தங்கள் குழந்தைகளின் திருமண ஏற்பாடு செய்யும் போது கீழ்க்கண்ட ஜாதக பொருத்தம் உள்ளதா என்பதை சரிபார்த்து வாழ்க்கையை அமைத்து கொடுத்தால் மிக சிறப்பாக அவர்கள் வாழ்க்கை நடத்த உதவியாக இருக்கும்.
திருமண பொருத்தம் பார்க்கும் போது இந்த இருவகை பொருத்தம் பார்க்க வேண்டும்
1. நட்சத்திர பொருத்தம்
2. ஜாதக பொருத்தம்
தற்போது நடைமுறையில் தசவித (1௦ பொருத்தம்) களை வைத்து திருமணங்கள் நிச்சயம் செய்யப்படுகிறது.
(நட்சத்திர பொருத்த நூல்கள் பல உள்ளன அவைகள் முகூர்த்த சிந்தாமணி, முகூர்த்த சாரம், முகூர்த்த ரத்னம், முகூர்த்த தத்துவம், முகூர்த்த சங்கீரம், முகூர்த்த தத்துவம், முகூர்த்தம் மாதவியம், கால விதானம், காலம்ருதம், ஆசார சங்கீரம், காலப்ரகாசிகை இன்னும் பல)
மேற்கூறிய நூல்களில் பரஸ்பர முரண்பாடுகள் நிறையவே உள்ளன. இவைகளில் 36 பொருத்தங்கள் கொடுக்கப்பட்டு அவைகளில் 23 (ராசி அடிப்படையில் 4 + ராசி அதிபதி 1 + நட்சத்திர அடிப்படையில் 18). தற்காலத்தில் அதுவும் சுருங்கி தசவித பொருத்தம் மட்டும் பார்க்க படுகிறது
அவை
தினம், கணம், மாகேந்திரம், ஸ்தீரி, தீர்க்கம், யோனி, ராசி, ராசிஅதிபதி, வசியம், ரஜ்ஜு,வேதை
இவைகளை தவிர ஜாதக பொருத்தம் கண்டிப்பாக பார்க்க பட வேண்டும்
அவைகள்
1. எல்லா பாவங்களுக்கும், கிரகங்களுக்கும் உள்ள தொடர்பு
2. சஷ்டாங்கம்
3. சூரிய தோஷம்
4. செவ்வாய் தோஷம்
5. 7மிட தோஷம்
6. 7மிட அதிபதி தோஷம்
7. சுக்ரன் தோஷம்
8. பாவகிரக தோஷம்
9. புத்திர தோஷம்
10. பஞ்சனை தோஷம்
11. திசா சந்தி
12. கோச்சர குரு, சனி நிலை
13. நடக்கும் திசா புத்திகள்
14. யோகி அவயோகி நிலை
15. தோஷ சாம்யம் உண்டா
16. பரிகாரம் உண்டா
ஆகியவைகள் கணக்கில் கொண்டு பொருத்தினால் நல்ல பலன்கள் கிட்டும்.

இதை எல்லாம் பார்க்காமல் நடந்த திருமணம், காதல் திருமணம் ஆகியைவைக்கு விமோசனம் கிடையாது என்று எண்ணிவிட முடியாது ! ஒழுக்கம் என்ற மார்கத்தின் நம்பிக்கை உள்ள தம்பதியர் க்கு கடவுள் அனுக்ரஹமும் பரிஹாரமும் உண்டு ! ஆனால் முழு நம்பிக்கை பக்தி கடவுள் மீதும் ஒழுக்கத்தின் மீதும் கொண்டவர்களுக்கு கண்டிப்பாக சுவாரஷ்ய திருமண வாழ்க்கை உண்டு. அதற்க்கு ஜோதிடத்தின் வழியில் மதியால் நல்ல விதி மாற்றம் உண்டு.
நன்றி