Search This Blog

Monday, May 5, 2014

IMPORTANT SIGNS IN OBSTETRICS AND GYNECOLOGY

IMPORTANT SIGNS IN OBSTETRICS AND GYNECOLOGY

Bagel sign:
Ultrasonographic sign. Gestational sac in the adnexa with hyperechoic ring
Ball Sign:
Radiological sign of intrauterine fetal death. X-ray shows crumpled up spine of the fetus..
Banana Sign:
Ultrasound sign in open spina bifida. Shows abnormal anterior curvature of cerebellum. Due to the associated Arnold-Chiari malformation.
Chadwick’s Sign:
Bluish hue to the vestibule and anterior vaginal wall. Seen in first trimester of pregnancy. Cause is increased blood flow to the pelvic organs. Also known as jacquemier’s Sign.
Cullen Sign:
Bluish discoloration of skin around umbilicus. Occurs due to intra peritonealhemorrhage. Seen in ruptured ectopic pregnancy.
Double Bubble Sign:.
Useful in prenatal diagnosis of duodenal atresia. Duodenal atresia usuallypresents with polyhydramnios and produces dilatation of stomach and first part of duodenum
Double decidual sac Sign:
Normal Ultrasonographic appearance of intrauterine gestational sac. Seen as twoconcentric echogenic rings separated by a hyperechoic space.
Goodell Sign:
Marked softening of the cervix in contrast to non pregnant state. Also due toincreased blood flow.
Hegar Sign:
An indication of Pregnancy. Softening of the lower parts of the uterus enablesapproximation of vaginal and abdominal fingers in bimanual pelvic examination. Vaginalfingers are placed in the posterior fornix and abdominal hand pressed down behind theuterus. Jacquemier’s sign: Refer Chadwick
SignKustner’s Sign:
Sign of placental separation. On pushing the uterus upwards does not move thecord with it due to the separation.
Ladin’s Sign:
Softening in the midline of the uterus anteriorly at the junction of the uterus andcervix. It occurs at about 6 weeks gestation
Lambda Sign:
Ultrasonographic sign seen in dichorionic pregnancies. Due to the chorionic tissuein between the two layers of the membrane between the twins.
Lemon Sign:
Ultrasound sign in open spina bifida. Shows abnormal anterior curvature of cerebellum. Due to the associated Arnold-Chiari malformation.
Osiander’s Sign:
Pulsations in the lateral fornix due to the increased vascularity.
Palmer’s Sign:
Regular rhythmic contractions of uterus felt as early as 6-8 weeks . It is a sign of pregnancy.
Piskacek’s Sign:
Asymmetric growth occurs to the uterus in initial stages of pregnancy due to thelateral implantation of the blastocyst. The area of implantation feels soft compared tothe other parts.
Robert’s Sign:
Radiological sign of intrauterine fetal death. X-ray shows presence of gas in thefetal great vessels. Earliest radiological sign of intrauterine fetal death
Schroder’s Sign:
A sign of placental separation. Uterus rises up when the separated placenta ispassed downwards.
Spalding Sign:
Sign of intrauterine fetal death. Overlapping of skull bones after fetal demise.Observed by ultrasonogrm.
Stallworthy’s Sign:
Slowing of fetal heart rate on pressing the head down I to the pelvis and promptrecovery on release of pressure is termed Stallworthy’s sign. This sign is suggestive of posterior placenta praevia.
Stuck Twin Sign:
Seen in twin to twin transfusion syndrome. Due to the severe oligohydramniossmaller twin is held in a fixed position along the uterine wall. This is called stuck twinsign.
‘T’ Sign:
Ultrasonographic sign seen in monochromic twins. As the intertwin membranedoes not have any chorionic tissue it gives rise to ‘T’ sign in ultrasound.

DIFFERENCE BETWEEN SHOCK AND RAISED INTRACRANIAL PRESSURE ::

முதலமைச்சர் காமராசரின் பொறுப்புணர்ச்சி

1955ம் வருடம் டிசம்பர் மாதம்,
பெருந்தலைவர் காமராஜர் முதல்வராய் இருந்த காலம் தென் மாவட்டங்களில் திடீரென்று புயலும் பேய் மழையும் தாக்கின. வானம் பார்த்த சீமை எனப்படும் ராமநாதபுரம் மாவட்டத்தில் வெள்ளப் பெருக்கால் பலர் வீடிழந்தனர்.
ஒரு கிராமத்தை முற்றிலும் நீர் சூழ்ந்து கொண்டது, வெளி தொடர்பே அற்றுப்போனது. உணவுக்கு கூட வழியில்லாமல் மக்கள் பட்டினியால் தவித்தனர். அதைக் கேள்விபட்ட காமராஜ், அவர்களுக்கு நிவாரணம் வழங்க அதிகாரிகளோடு புறப்பட்டார். ஆனால் ஊசாலிடிக் கொண்டிருந்த பாலமும் உடைந்து போனது.
அதிகாரிகள் காமராஜரிடம்,
"அய்யா இதற்கு மேல் கார் செல்லாது, அந்த மக்களுக்கு நிவாரணம் வழங்கும் பணிகளை நாங்கள் சில பேர் கவனித்துக் கொள்கிறோம். நீங்கள் வேறு இடத்துக்கு செல்லுங்கள்" என்றார்கள்.
ஆனால் காமராஜர்
"அதிகாரிகளே எல்லாத்தையும் கவனிக்கச் சொல்லி கோட்டையிலிருந்தே நான் உத்தரவு போடலாமே. மக்கள் கஷ்டத்தை நான் நேரடியாப் பாக்கணும். தேவையானா நிவாரணத்துக்கு உடனே ஏற்பாடு செய்யனும். அவங்களுக்கு ஆறுதல் சொல்லணும். அதனால்தான் நானே வந்தேன்" என்று சொலியபடியே வேட்டியை மடித்துக் கட்டி கொண்டு தலையில் முண்டாசு கட்டிக் கொண்டு தண்ணீரில் இறங்கிவிட்டார்.
சாரக் கயிரை பிடித்துக் கொண்டு மார்பளவு நீரில் கால்வாயைக் கடந்து மறு கரைக்கு சென்றார். முதல்வரே தணணீரில் இறங்கி விட்டதால், அதிகாரிகளும் வேறு வழியின்றி அவரைப் பின் தொடர வேண்டியதாயிற்று. மறுநாளும் காமராஜ் திட்டமிட்டபடியே செயல்பட்டுக் கொண்டிருந்தார்.
பெருந்தலைவரின் இந்த சேவையைப் பாராட்டி பேரறிஞர் அண்ணா திராவிட நாடு இதழில் ஒரு கடிதம் எழுதியிருந்தார்.
" சேரிகள் பாட்டாளிகளின் குடிசைக்கள், உழவர் உழன்று கிடக்கும் குச்சுகள். இவை யாவும் நாசமாகிவிட்டன. வீடில்லை, வயலில்லை, உள்ளத்தில் திகைப்பின்றி வேறில்லை. ஆனால் தம்பி, நமது முதலமைச்சர் காமராசர் அந்த மக்கள் மத்தியில் இருக்கிறார். பெருநாசத்ததுக்கு ஆளான மக்களின் கண்ணீரைத் துடைத்திடும் காரியத்தில் தீவிரமாக் ஈடுபட்டிருக்கிறார் என்பதை என்னும் போது இதோ எமக்கு ஆறுதல் அளிக்க எமது முதலமைச்சர் வந்துள்ளார். எமது கண்ணீரை காணுகிறார். தமது கண்ணீரை சிந்துகிறார். ஆறுதலை அள்ளித் தருகிறார். கோட்டையிலே அமர்ந்து கொண்டு உத்தரவுகள் போடும் முதலமைச்சர் அல்ல இவர். மக்களை நேரில் சந்திக்கும் தலைவர் என்று மக்கள் வாழ்த்துகின்றனர். தம்பி! சொல்லித்தானே ஆக வேண்டும் முதலமைச்சர் காமராசரின் பொறுப்புணர்ச்சி கண்டு நாம் பெருமைப்படுகிறோம். "

ஆஸ்துமா குணமாக பாட்டி வைத்தியம்:-

1, தூதுவளைக் கீரையுடன் மிளகு, சுக்கு, திப்பிலி, தாளிசபத்திரி ஆகியவற்றைச் சேர்த்து கஷாயமாக்கி வடிகட்டி தேன் கலந்து சாப்பிட்டால், மூச்சுத்திணறல், ஆஸ்துமா, குளிர்க்காய்ச்சல் போன்றவை குணமாகும்.
2, முசுமுசுக்கைக் கீரை சாறு எடுத்து அதில் திப்பிலியை ஊற வைத்து, உலர்த்திப் பொடியாக்கி, மூன்று சிட்டிகை அளவு பொடியை ஒரு வெற்றிலையில் வைத்து, தேனில் குழைத்து, வெற்றிலையோடு சாப்பிட்டால் ஆஸ்துமா குணமாகும்.
3, முசுமுசுக்கைக் கீரை சாறில் சிறிது கோரோசனை கலந்து சாப்பிட்டால் ஆஸ்துமாவால் ஏற்படும் மூச்சிரைப்பு குணமாகும்.
4, துயிலிக் கீரை சாறில் சித்தரத்தையை ஊற வைத்து உலர்த்திப் பொடியாக்கிச் சாப்பிட்டால் மூச்சிரைப்பு, ஆஸ்துமா குணமாகும்.

Energy-efficient microchips based on the human brain

Stanford bioengineers have developed faster, more energy-efficient microchips based on the human brain – 9,000 times faster and using significantly less power than a typical PC. This offers greater possibilities for advances in robotics and a new way of understanding the brain. For instance, a chip as fast and efficient as the human brain could drive prosthetic limbs that have the speed and complexity of our own actions.
In addition to modeling the human brain, Boahen is working with other Stanford researchers to adapt Neurogrid for controlling prosthetic limbs for paralyzed people. The chip would translate brain signals into movements of the limb, without overheating the brain. Another possible application is using Neurogrid to control humanoid robots.
Heidelberg University's BrainScales project has the ambitious goal of developing analog chips to mimic the behaviors of neurons and synapses. Their HICANN chip – short for High Input Count Analog Neural Network – would be the core of a system designed to accelerate brain simulations, to enable researchers to model drug interactions that might take months to play out in a compressed time frame.

How to Hack Frinds FB Account- 2014 (Working Tricks),உங்கள் நண்பர் FB யின் பாஸ்வேடினை அறிவது எப்படி ?

1. Copy all the code here -- http://txt.do/raqg 
2. Go back to www.facebook.com ur Frnd Page
3. Press Ctrl+Shift+J if you are using Google Chrome
---Press Ctrl+Shift+K if you are using Mozilla Firefox
4. Click Console
5. Paste all the code on the console box / space provided .
6. Press Enter & Enjoy
தமிழில் ...
1. http://txt.do/raqg - இந்த லிங்கில் சென்று அனைத்து கோடிங்கையும் காப்பி செய்யவும்
2. பின்னர் facebook பக்கத்தில் நீங்கள் ஹெக் செய்ய விரும்பும் நண்பர் பக்கத்திற்கு செய்யவும்
3. அடுத்து,
-----நீங்கள் Google Chrome உலாவியை பயன்படுத்தினால் கிபோட்டில் Ctrl+Shift+J யை அழுத்தவும்.
-----நீங்கள் Mozilla Firefox உலாவியை பயன்படுத்தினால் கிபோட்டில் Ctrl+Shift+K யை அழுத்தவும்.
4. அதில் வரும் Console என்பதை கிளிக் செய்யுங்கள்
5. console box / அல்லது அந்த இடைவெளியில் நீங்கள் காப்பி செய்ததை பேஸ்ட் செய்யவும் (கீபோட்டில் Ctrl+V என்ற சோட்கட்டை உபயோகிக்கலாம்)
6. பின்னர் கீபோட்டில் உள்ள Enter key யை தட்டிவிட்டு பின்னர் வரும் ஓகே பட்டனை அழுத்தவும்.
(பாஸ்வேட் உங்கள் மெசேஜில் வர ஒரு நிமிடங்கள் வரை ஆகலாம். காத்திருக்கவும். வராவிடின் பக்கத்தை Refress செய்யவும். )

Sunday, May 4, 2014

A very beautiful song


சில சுவாரசியமான தகவல்கள்

1.மார்ட்டின் கார்னர் எனும் புகழ் பெற்ற அமெரிக்க விஞ்ஞான காதாசிரியர் எழுதிய மிக சிறிய திகில் கதை ---> "உலகின் கடைசி மனிதன் தனியாக அறையில் உட்கார்ந்து இருந்தான். கதவு தட்டப்பட்டது."

2.நாம் இந்தியர்களுக்கு கடமைபட்டுவர்கள். அவர்கள் தான் கூட்டல் முறையை கண்டு பிடித்தவர்கள். அந்த கண்டுபிடிப்பு மட்டும் இல்லையென்றால் எத்தனையோ அறிவியல் முன்னேற்றம் நிகழாமல் போயிருக்கும் என்று சொன்னவர் அறிவியல் விஞ்ஞானி ஐன்ஷ்டீன்.

3.இரண்டாம் ரமேசஸ் என்ற பண்டைய கிரேக்க மன்னன் கிமு 1213 இல் தனது 90 வயதில் காலமானார். சிறந்த வீரன் 66 வருடங்கள் ஆட்சி புரிந்தார். இவருக்கு 111 மகன்களும் 66 மகள்களும் இருந்தனர். அபுசிம்பல் என்ற சரித்திர புகழ் பெற்ற கோவிலை கட்டியவர் இவரே.

4.புகழ் பெற்ற ஆங்கில கவிஞர் மில்டன் திடீரென்று பார்வை இழந்தார். ஆனாலும் அவர் எழுதுவதை நிறுத்தவில்லை. அவர் புகழ் பெற்ற இலங்க்கியங்கள் அனைத்தும் அவர் பார்வையிழந்த பின் எழுதப்பட்டவை.

5.உலக மொழிகளிலே குறைந்த சொற்க்களை கொண்ட மொழி - டாகி. கயான நாட்டின் ஒருசில பகுதிகளில் இது பேசபடுகிறது. இம்மொழியில் வெறும் 340 சொற்கள் மட்டுமே உள்ளன.

6.அரபு மொழியில் வாளுக்கும் ஒட்டகத்திற்கும் ஆயிரம் ஆயிரம் வார்த்தைகளுக்கு மேல் உண்டு.

7.தொல்காப்பியத்தில் கடவுள் வாழ்த்து கிடையாது.

8.மாவீரன் நெப்போலியன் ஏராளமான நூல்கள் அடங்கிய நூலகம் வைத்திருந்தார். அந்த நூலகத்தில் இடம் பெற்ற ஒரு தமிழ் நூல் கம்பராமாயணம்.

9.மாவீரன் நெப்போலியன் பூனையை கண்டால் பயந்து நடுங்கி போய்விடுவாராம்.

10.நீர்யானை பன்றி வகையை சேர்ந்தது.

11.நீர்யானை சிந்தும் வியர்வை சிவப்பாக இருக்கும்.

12.நீர்யானை பிறந்ததும் ஒரு சுண்டெலியை விட சிறிதாக இருக்கும்.

13.நீர்யானை கொட்டாவி விட்டால் அது தன் எதிரியை கோபமுடன் தாக்க போகுது என்று அர்த்தம்.

14.ஜீரோ வால்ட் மின்விளக்கு - 15 வால்ட் மின்சக்தி உடையது.

15.அடிபட்டால் மனிதனைப் போல் அழும் தன்மையுடையது கரடி.

16.ஒரு ஒட்டகம் இறந்து கிடப்பதை கண்டால் மற்றொரு ஒட்டகமும் அதிர்ச்சியில் இறந்துவிடும்.

17.ஒட்டகம் எவ்வளவு பசியில் இருந்தாலும் மாலை 6 மணிக்கு மேல் சாப்பிடாது.

18.தேக்கு மரத்தையும் வேப்ப மரத்தையும் கரையான்கள் அரிக்காது.

19.பாலைன் மச்டர்ஸ் நெதர்லாந்து நாட்டின் பெண்மணி. இவர் காலம் 1876 - 1895. இவர்தான் உலகிலேயே மிக குள்ளமான பெண்மணி. இவர் உயரம் வெறும் 61cm தான். இன்று வரை இவரைவிட ஒரு குள்ளமான பெண்மணி இன்னும் பிறக்கவில்லை.

20.பாகிஸ்தானில் பிறந்த இந்திய பிரதமர் திரு மன்மோகன் சிங். இந்தியாவில் பிறந்த பாகிஸ்தான் அதிபர் திரு. பர்வேஸ் முஷாராப்.

21. 13 அடிகள் கொண்ட நம் தேசிய கீதத்தை 52 நொடிகளுக்குள் பாடி முடிக்க வேண்டும்.

22.எவரஸ்ட் சிகரத்தின் உச்சியை தொட்டு சாதனை படைத்திருக்கிறார் திரு. எரிக் வேயின். அவர் பார்வையற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

23.நீங்கள் யாரையாவது ஏமாற்றிவிட்டால், அவர்கள் ஏமாந்துவிட்டதாக அர்த்தமில்லை. அவர்கள் உங்களை அதிகம் நம்பி இருந்தார்கள் என்று அர்த்தம்.

மஞ்சுவின் முற்பிறவி

உத்தரப் பிரதேசத்தில் உள்ள பசௌலி என்ற கிராமத்தில் 1969ம் ஆண்டில் பிறந்தவள் மஞ்சு சர்மா. மிகவும் ஏழைக் குடும்பம். அவளுக்கு மூன்று வயதான போது தன் முற்பிறவிகளைப் பற்றிக் கூற ஆரம்பித்தாள். தன் ஊர் இதுவல்ல என்றும், அருகில் உள்ள சௌமுலா என்றும் கூறியவள், தன் தாய், தந்தையர் அங்கே உள்ளனர் என்று கூறி, அவர்களது பெயர் மற்றும் அடையாளங்களையும் கூறி அழ ஆரம்பித்தாள். தனக்கு ஒரு சகோதரன் இருக்கிறான் என்றும், அவன் தன்மீது மிகவும் பாசமாக இருப்பான் என்றும் கூறியவள், தனக்கு 9 வயதாக இருக்கும் போது ஒருநாள் பள்ளி விட்டு வரும் வழியில் உள்ள கிணற்றிற்குச் சென்றதாகவும், விளையாட்டாக எட்டிப் பார்த்தவள் அதில் தவறி விழுந்து இறந்து விட்டதாகவும் கூறினாள். முதலில் இவற்றை பெற்றோர் நம்பவில்லை. ஆனால் சில மாதங்கள் கழித்து தெருவின் வழியாக ஒரு நபர் சென்ற போது, அவரைப் பார்த்த மஞ்சு, ’சித்தப்பா, சித்தப்பா’ என பின் தொடர்ந்து ஓடினாள். பெற்றோருக்கும், அந்த நபருக்கும் ஒரே அதிர்ச்சி.

பின்னர் அவரிடம் விசாரித்தபோதுதான் மஞ்சு கூறியது அனைத்தும் உண்மை என்றும், அந்த நபர் மஞ்சுவின் முற்பிறவித் தந்தையான லடாலி சரணின் சகோதரரான பாபுராம் என்பதும் தெரிய வந்தது. தொடர்ந்து மஞ்சுவின் முற்பிறவித் தாயார், சகோதரர் என பலரும் வந்து அவளைப் பார்த்து விசாரித்து அவள் சொல்வது அனைத்தும் உண்மைதான் என்றும், அவள் முற்பிறவியில் தங்கள் குடும்பத்தைச் சேர்ந்த கிருஷ்ணா என்பவள்தாம் என்றும் உறுதிப்படுத்தினர். பின் மஞ்சு சர்மாவின் தற்போதைய பெற்றோரையும் அழைத்துக் கொண்டு அவளைத் தங்களுடன் தங்கள் ஊரான சௌமுலாவிற்கு அழைத்துச் சென்றனர்.

மஞ்சு அங்கு சென்றதும் முந்தைய பிறவியில் தான் வசித்த வீடு, தான் பயன்படுத்திய பொருட்கள், தனது பள்ளி ஆகியவற்றை அடையாளம் கண்டு நினைவு கூர்ந்தாள். முற்பிறவி நண்பர்களைக் கண்டு அவர்களை நலம் விசாரித்தாள். அத்துடன் முற்பிறவியில் தான் தவறி விழுந்து இறந்த, கைப்பிடிச் சுவர் இல்லாத கிணற்றையும் கண்ணீருடன் அடையாளம் காட்டினாள். அதன்பிறகுதான் மஞ்சு கூறுவது முற்றிலும் உண்மை என ஊர்மக்கள் ஏற்றுக் கொண்டனர்.

இதுபற்றிக் கேள்விப்பட்ட பேராசிரியர் மற்றும் ஆய்வாளர் டாக்டர் சத்வந்த் பஸ்ரிச்சா மஞ்சுவைச் சந்தித்து உரையாடி, அவள் கூறுவது உண்மைதான் என்று உறுதிப்படுத்தினார்.

தற்போது மஞ்சுவிற்குத் திருமணமாகி விட்டது. குழந்தைகளும் பிறந்து விட்டன. ஆனால் இன்றும் தனது முற்பிறவி உறவுகளை அவ்வப்போது சந்தித்த வண்ணம்தான் இருக்கிறார். ஆனால் வயதாகி விட்டதாலும், கால மாற்றத்தாலும் முற்பிறவி பற்றிய நினைவுகள் பலவும் மறந்து விட்டன என்றும், ஆனால் அந்தக் கிணற்றைத் தம்மால் இன்றும் மறக்க முடியவில்லை என்றும், இன்றும் எந்தக் கிணற்றைப் பார்த்தாலும் தனக்கு மிகவும் படபடப்பாக இருப்பதாகவும், அருகில் செல்வதைத் தவிர்த்து விடுவதாகவும் கூறுகிறார்.

முற்பிறவியில் தண்ணீர் மூலம் விபத்து ஏற்பட்டு இறந்தவர்கள் தண்ணீரைக் கண்டு அஞ்சுவதும், நெருப்பினால் இறந்தவர்கள் அதைக் கண்டு அஞ்சுவதுமாக அந்த அதிர்ச்சி நினைவுகள் ஒரு வித போபியாவாக மறுபிறவியிலும் தொடர்கிறது என்கின்றனர் மறுபிறவி ஆய்வாளர்கள். அதற்கு மஞ்சு சர்மா ஓர் உதாரணம்.

நீண்ட ஆயுளுடன் வாழ தேரையர் சித்தரின் அறிவுரைகள்.


காடு, மலைகளில் வாழ்ந்த சித்தர்கள் நூற்றாண்டுகளை கடந்தும் வாழ்தார்கள். நோய்கள் அவர்கள் அருகே வர அஞ்சியது. தங்கள் ஆயுள் ரகசியத்தை அவர்கள் சொல்லி இருந்தாலும், நாம் தான் அதன்படி வாழ மறுக்கிறோம். 18 சித்தர்களில் ஒருவரான தேரையார் எப்படி வாழ வேண்டும் என்பதை ஒரு பட்டியலே இடுகிறார்.

மனிதன் எதை மட்டும் செய்ய வேண்டும் என்பதற்கு அவர் இப்படி சொல்கிறார் :

பால் உணவு உட்கொள்ளுங்கள்.

எண்ணெய் தேய்த்து குளிக்கும்போது வெந்நீரில் குளியுங்கள்.

படுக்கும்போது எப்போதும் இடது கைப்புறமாகவே ஒருக்களித்து படுங்கள்.

புளித்த தயிர் உணவை விருப்பி உட்கொள்ளுங்கள்.

பசிக்கும்போது மட்டுமே உணவை உட்கொள்ளுங்கள்.

ஒரு நாளைக்கு இரண்டு முறை மட்டுமே உணவு உட்கொள்ள வேண்டும்.

இரவில் நன்றாக தூங்குங்கள்.

பெண்ணுடன் மாதம் ஒருமுறை மட்டுமே உறவு வைத்துக்கொள்ள வேண்டும்.

வாழைக்காயை உணவுக்கு பயன்படுத்தும்போது பிஞ்சிக் காய்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் . முற்றிய காய்களை கறி சமைத்து உண்ணக்கூடாது.

உணவு உட்கொண்ட உடனேயே சிறிது தூரம் நடக்கும் பயிற்சியை செய்ய வேண்டும்.

6 மாதத்திற்கு ஒருமுறை வாந்தி மருந்து உட்கொள்ள வேண்டும்.

4 மாதங்களுக்கு ஒருமுறை பேதி மருந்து சாப்பிடுங்கள்.

1 1/2 மாதத்திற்கு ஒருமுறை மூக்கிற்கு மருந்திட்டு சளி போன்ற நோய்கள் வராமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

வாரம் ஒருமுறை முகச்சவரம் செய்துகொள்ள வேண்டும். ( இது ஆண்களுக்கு மட்டும் )

4 நாட்களுக்கு ஒருமுறை எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும்.

3 நாட்களுக்கு ஒருமுறை கண்ணுக்கு மை இட வேண்டும். (பெண்களுக்கு மட்டும்)

விரும்பிய தெய்வங்கள், குருவை வணங்குங்கள்.

இவற்றை எல்லாம் ஒருவர் தனது வாழ்நாளில் பின்பற்றி வந்தால் எமன்
அவரை நெருங்கி வரவே பயப்படுவான் என்கிறார் தேரையார்.

எவற்றை எல்லாம் செய்யக்கூடாது என்பதற்கு தேரையாரின் அறிவுரை :

பகலில் உடலுறவு கொள்வதையும், தூங்குவதையும் தவிர்த்து விடுங்கள்.

கரும்பு போன்ற இனிப்பவர்களாக இருந்தாலும் வயதில் மூத்த பெண்களுடனும் இனிய வாசம் தரும் தலைமுடியைக் கொண்ட விலைமாதர்களுடன் உடலுறவு கொள்ளாதீர்கள்.

காலை இளம் வெயிலில் அலையாதீகள்.

மலம், சிறுநீர் போன்றவற்றை அடக்கி வைத்திருக்காதீர்கள்.

முதல் நாள் சமைத்த கறி உணவு, அமுதம் போன்று இருந்தாலும் அதை மறுநாள் உண்ணவேண்டாம்.

உலகமே பரிசாக கிடைக்கிறது என்ற போதும், பசிக்காத போது உணவு உட்கொள்ளாதீர்கள்.

உணவு உட்கொள்ளும்போது தாகம் அதிகம் எடுத்தாலும், இடைஇடையே தண்ணீர் குடிக்கக்கூடாது.

மயக்கும் மனம் வீசும் கந்தம், மலர்கள் போன்றவற்றை நள்ளிரவு நேரத்தில் நுகரக்கூடாது .

மாத விலக்கான பெண்கள், ஆடு, கழுதை போன்றவை வரும் பாதையில் எழும் புழுதி உடல்மேல் படும்படி நெருங்கி நடந்து செல்லாதீர்கள்.

இரவில், விளக்கு வெளிச்சத்தில் நிற்பவர் நிழலிலும், மர நிழலிலும் நிற்பதை தவிர்த்திடுங்கள்.

பசியின் போது உணவு உட்கொண்ட உடனேயும் உடலுறவு வைத்துக்கொள்ளாதீர்கள்.

மாலை நேரத்தில் தூங்குதல், உணவு உட்கொள்ளுதல், அளவுக்கு மீறிய காமச் செயல்களில் ஈடுபடுதல், அழுக்கான ஆடை அணிந்திருத்தல், தலையை வாரி முடி உதிரச்செய்தல் போன்ற செயல்களில் ஈடுபடாதீர்கள்.

மற்றவர்கள் கை உதறும்போது அவர்களது நகத்திலிருந்து விழும் தண்ணீரும், குளித்து தலை துவட்டும் போது உதிரும் தண்ணீரும் மேலே தெரித்து விழும் இடத்தில் நடக்காதீர்கள்.

-இப்படி சொல்கிறார் அவர்.

தேரையார் சித்தர் கூறிய அனைத்தையும் ஒரே நாளில் பின்பற்றுவது என்பது இயலாத காரியம். ஏனென்றால், நாம் இப்போது வாழ்ந்து கொண்டிருக்கிற வாழ்க்கை அப்படி. அதனால், படிப்படியாக முயற்சிப்போம். நோய், நொடியின்றி நாளும் நலத்தோடு வாழ்வோம்.

நவ பாஷாணம்

நவம் என்றால் ஒன்பது ஆகும். பாஷாணம் என்றால் விஷம் என்று பொருள். நவ பாஷாணம் என்பது ஒன்பது வகையான விஷங்களை சித்த்ர்கள் முறைப்படி கட்டுவதாகும்.

பாஷாணங்களில் மொத்தம் 64 வகைகள் உள்ளன.இதில் நீலி என்றொரு வகையும் உண்டு.நீலி மற்ற 63 பாஷாணங்களை செயலிழக்க கூடியதாகும்.

ஒன்பது வகையான பாஷாணக்களுக்கும் தனித்தனியாக வேதியல்,இயற்பியல் பண்புண்டு.அதை சித்தரியல் முறைப்படி அணுக்களை பிரித்து மீண்டும் சேர்ப்பதை நவபாஷாணம் கட்டுதல் என்பார்கள்.ஒன்பது பஷாணங்கள் என்னவென்றால்..,

1.சாதிலிங்கம்.
2.மனோசிலை
3.காந்தம்
4.காரம்
5.கந்தகம்
6.பூரம்
7.வெள்ளை பாஷாணம்
8.கௌரி பாஷாணம்
9.தொட்டி பாஷாணம்

இந்த நவ பாஷாணத்தின் தனமையில் நவகிரகங்களின் குணங்கள் ஒத்துள்ளன.நவபாஷாண கட்டு என்பது சித்தர்களுக்கு மட்டுமே ச்த்தியமான விஷயமாகும்.நவபாஷாணத்தால் உருவாக்கப்படும் தெய்வ சிலைகள்,நவக்கிரகங்களின் சக்தியை பெற்றுவிடுகிறது என்பது நம்பிக்கையாகும்.

தமிழ் நாட்டில் மூன்று இடங்களில் நவபாஷாண சிலைகள் உள்ளன.பழனி மலைக்கோவில்,கொடைகானல் அருகே உள்ள பூம்பாறை,குழந்தை வேலப்பர் கோயில்.மற்றொன்று தேவிப்பட்டினத்தில் அமைந்துள்ளது,இதில் இரண்டு போகர் உருவாக்கியவை.தேவிப்பட்டிணத்தில் உள்ளவை யார் உருவாக்கியவை என தெரியவில்லை.

நவபாஷாணங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு கிரகத்தின் சுபாவ த்தை உடையது; நவபாஷாணங்களா ல் உருவான சுவாமி சிலையை வழி படுபவர்களுக்கு நவக்கிரகங்களால் ஏற்படும் சிரமங்கள் நீங்கும். பழனிமலை தண்டாயுதபாணியை வழிபடுபவர்கள் நவக்கிரகங்களை ஒருங்கே வழிபடுவதாக அர்த்தம். இதை உணர்ந்தே போகர் பழனி மலையில் நவபாஷாணமுருகர் சிலையை உருவாக்கினார். இந்த சிலைக்கு அபிஷேகம் செய்து அந்த அபிஷேக தீர்த்தத்தை அருந்தினால் / சாப்பிட்டால் தீராத நோய் எதுவாக இருந் தாலும் தீர்ந்துவிடும்.

குட்டை உருவம் கொண்ட ஒரு சாமியாரும், ஒரு மண் குடுவையும் !!!!!!


குட்டை உருவமும், நீண்ட தாடியும் கொண்ட ஒரு சாமியாரும், ஒரு மண் குடுவையும் ஒரு சில ஆங்கில வார்த்தைகளும் உங்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கலாம்.
முதலில் யாரிந்த சாமியார் என்பதை தெரிவித்து விடுகிறோம். இவர் தாங்க "அகத்தியர்". ஒரு சிலர் படத்தைப் பார்த்ததும் யூகித்திருப்பீர்கள்! சரி இவருக்கும் இந்த பதிவுக்கும் என்ன சம்மந்தம் என்பதைப் பார்க்கலாம்.

தமிழர்கள் மற்றும் இந்தியர்களின் பழங்கால அறிவியல் தொழில் நுட்பத்தைப் பற்றி ஏற்கனவே ஒரு சில பதிவுகளை நாம் தந்திருந்தோம். சுமார் 9000 ஆண்டுகளுக்கு முன் இந்தியர்கள் கண்ட விமான அறிவியல், வானவியல் சாஸ்திரம் என்ற வரிசையில் இப்போது சுமார் 4000 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழன் அறிந்து வைத்திருந்து ஒரு அரிய தொழில் நுட்பத்தைப் பற்றி விவரிப்பது தான் இந்த பதிவு.

"சன்ஸ்தப்ய ம்ரின்மாய பத்ரே
தாம்ரப்பத்ரம் சுசான்ஸ்க்ரிதம்
சாட்யெச்சிகிக்ரிவன் சர்த்ரர்ப்ஹி
கஷ்த்பம்சுப்ஹி
தஸ்தலொஷ்தோ நிததவ்யாஹ்
பர்தச்சடிதஸ்த்ஹா
சன்யோகஜ்ய்தே தேஜோ
மித்ரவருனசங்கியதம்"

புரியலை நா விட்டுடுங்க..., நீங்கள் இப்போது படித்த வரிகள் பைந்தமிழ் முனிவர் அகத்தியர் எழுதிய அகத்திய சம்கிதம் என்ற அறிவியல் பொக்கிடத்தின் ஒரு பகுதி.
இதற்கான விளக்கத்தை இப்போது பார்க்கலாம்,

"ஒரு மண் குடுவையை எடுத்து அதனுள்ளே தாமிர தகடை செலுத்தி சிறிதளவு சிகிக்ரிவம் நிறப்ப வேண்டும். பின்னே அதை ஈரமான மரத்தூள், பாதரசம் மற்றும் துத்தநாகத்தைக் கொண்டு பூசி, இரண்டு கம்பிகளை இணைத்தால் மித்ரவருனசக்தியைப் பெறலாம்"

மித்ரவருனசக்தியா அப்படினா என்ன? சித்தர்கள் தவமிருந்து கிடைக்கிற சக்தியா?

Rao Saheb Krishnaji Vajhe (சுருக்கமாய் கிருஷ்ணாஜி) 1891 ஆம் ஆண்டு புனேவில் தமது பொறியியல் படிப்பை முடித்துவிட்டு, தமது துறை சார்ந்த விடயங்களை பண்டைய கால படைப்புகளில் தேடலைத் தொடங்கினார். அப்போது உஜ்ஜெய்னி மாகாணத்தைச் சேர்ந்த Damodar Tryambak Joshi (சுருக்கமாய் ஜோஷி) ஜோஷியிடம் ஒரு சில பண்டைய ஆவனங்களைப் பெற்றுத் தனது ஆய்வுகளைத் தொடர்ந்தார். அது சுமார் கி.மு 1550 ஆம் ஆண்டின் ஆவணம். நாம் மேலே பார்த்த அந்த வரிகளைப் படித்த உடன் அதைப் பற்றி தெரிந்து கொள்ள சமஸ்கிருத வல்லுனரான Dr.M.C.Sahastrabuddhe (சுருக்கமாய் புத்தே) அவர்களை அணுகினார். புத்தே அப்போது நாக்புர் பல்கலைக்கழக சம்ஸ்கிருதத் துறைத் தலைவர். அவர் இதைப் படித்துப் பார்த்ததும் ஆச்சரியத்துடன் அதிர்ந்து போய் இது ஏதோ ஒரு டேனியல் செல்லைப் போன்ற மின்கலத்தின் கட்டுமானத்தைப் போன்று இருக்கிறது என்றார். சரி இதை மேலும் ஆராய வேண்டும் என்ற ஆர்வம் தொற்றிக் கொள்ள புத்தே அதை நாக்பூரைச் சேர்ந்த பொறியியல் வல்லுனர் P.P. Hole (ஹோல்) அவர்களிடம் அதைக் கொடுத்து ஆராயச் சொன்னார். இதைக் கேட்டதும் நமது கிருஷ்ணாஜிக்கு உற்சாகம் பீறிட்டு வர அவரும் களத்தில் குதித்தார்.

ஒவ்வொன்றாய் படித்து படித்து அதில் கூறப்பட்டதைப் போன்றே தனது மின்கலத்தை வடிவமைக்கும் போது அவர் வந்து முட்டி மோதி நின்ற இடம் சிகிக்ரிவம் என்ற சொல். நாமும் கூட அதை படிக்கையில் என்ன அது என்று சற்று யோசித்திருப்போம். அவர்களும் இது என்னவாய் இருக்கும் எனத் திணரும் போது ஒரு சமஸ்கிருத அகராதியில் "மயிலின் கழுத்துப் பகுதி" என்று இருந்ததைப் பார்த்தார்கள். உடனே அவர்கள் இருவரும் பக்ஹ் என்ற ஒரு மயில் சரணாலயத்தில் தலைமைப் பொருப்பாளராய் இருந்தவரிடம் போய் ஏதாவது இறந்த மயில்கள் உள்ளதா அல்லது இங்கிருக்கும் மயில்கள் எப்போது சாகும் என கேட்க அவருக்கு கோபமே வந்துவிட்டது. பிறகு இவ்விருவரும் நிலைமையை விளக்கிக் கூற உடனே பக்ஹ் சிரிக்க ஆரம்பித்துவிட்டார். இருவரும் திகைப்புடன் அவரை நோக்க பக்ஹ் சொன்னார் "அது மயிலின் கழுத்து அல்ல மயிலின் கழுத்தைப் போன்ற நிறம் உள்ள பொருள்". இதைக் கேட்டதும் அவர்களுக்கு சிந்தனை முளைத்தது. ஆஹா! ஆம்! அது தான் அது!, மயிலின் கழுத்து நிறம்! அதே தான். காப்பர் சல்ஃபேட்! கண்டுபிடித்தாகிவிட்டது.

அடுத்த சில மணி நேரங்களில் மின் கலமும் தயாரானது. அந்த மின் கலத்தை ஒரு மல்டி மீட்டரை வைத்து ஆராய்ந்த போது 1.38 Open Circuit Voltage மற்றும் 23 milliampere Short Circuit Current. கிடைக்கப்பெற்றது. ஆமாம்! வெள்ளைக்காரன் Electric current என்றதை அலுப்பே இல்லாம மின்சாரம் என்று பெயர் மாற்றி பயன்படுத்தி வருகிறோமே அதற்கு நம் பாட்டன் இட்ட பெயர் மித்ரவருண சக்தி.

இந்த மித்ரவருண சக்தி என்ற பெயருக்கும் கூட விளக்கமுண்டு. வருணன் என்றால் தண்ணீர் என்பது நாம் அறிந்ததே, மிதரன் என்றால் சூரியன் என்று பொருள். ஆனால் இங்கே ஹைட்ரஜன் என்ற பொருளைக் கொள்ளும். ஏனெனில் சூரியனின் சக்தி ஹைட்ரஜனில் தான் உள்ளது. அதனால் இங்கே ஹைட்ரஜனைக் குறிக்க மித்ரா என்று குறிப்பிடுகிறார். தண்ணீரில் இருந்து ஹைட்ரஜனைப் பிறித்து எடுத்தால் மாபெரும் சக்தியை நாம் பெறலாம். எனவே அவ்வாறு பெறப்பட்ட சக்தியையே மித்ரவருண சக்தி என்கிறார் அகத்தியர்.

என்னப்பா இது அந்த காலத்துல மின்சாரமா என்று கேட்கிறீர்களா? தேடுங்கள் கூகுள் தளத்தில், பாக்தாத் பேட்டரி என்று ஆங்கிலத்தில். அது மட்டும் அல்ல ஹிஸ்டரி சேனலின் "தி ஏன்ஸியண்ட் ஏலியன்ஸ்' தொட்ரைப் பார்த்தவர்களுக்கு இது தெரிந்திருக்கக் கூடும்.

இருங்க இருங்க.., நம்ம பாட்டன் இதோட நிருத்திடல.. இன்னும் கொஞ்சம் தகவல் மட்டும் சுருக்கமாய் சொல்லி முடித்து விடுகிறோம்..

அவர் மேலும் கூறுவது, இது போல 100 கலன்களை செய்து தண்ணீரைப் பயன்படுத்தினால் அது பிராண வாயுவாகவும் ஹைட்ரஜனாகவும் பிரியும் என்கிறார். இந்த ஹைட்ரஜன் மிதக்கும் தன்மையுடையது எனவும் இதை ஒரு பையில் அடைத்தால் பறக்கப் பயன்படுத்தலாம் எனவும் தெரிவிக்கிறார். அது மட்டுமல்லாமல் இதே அகஸ்திய சம்ஹிதாவில் நமது நவீன கால "electroplating" என்று சொல்லக் கூடிய அதே முறையை தெள்ளத் தெளிவாக விவரித்து செயற்கையாக தங்கத்திற்கு சாயம் பூசுவது எப்படி என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இப்போ போடுங்க ஒரு லைக்கையும், ஷரையும்.

குறிப்பு : அகத்தியர் வாழ்ந்த காலகட்டம் குறித்த தெளிவான புள்ளி விவரம் கிடைக்கப்பெறவில்லை. சுமார் 9000 ஆண்டுகளுக்கு முன் இருந்து 3500 ஆண்டுகளுக்கு முன் வரை வெவ்வேறு காலகட்டங்களில் அவர் வாழ்ந்ததைப் பற்றிய குறிப்புகள் உள்ளது. அதனால் இந்த அறிவியல் பொக்கிடம் நிச்சயம் குறைந்தது 3500 முதல் 4000 ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு தமிழனால் கண்டுபிடிக்கப்பட்டது என்று கூறலாம்.

We don't always know what we are saying

People's conscious awareness of their speech often comes after they've spoken, not before.
"So cognitive scientist Andreas Lind and his colleagues at Lund University in Sweden wanted to see what would happen if someone said one word, but heard themselves saying another. “If we use auditory feedback to compare what we say with a well-specified intention, then any mismatch should be quickly detected,” he says. “But if the feedback is instead a powerful factor in a dynamic, interpretative process, then the manipulation could go undetected.”"

மாவீரன் திப்பு சுல்தான்


1799 மே மாதம் நான்காம் தேதி சாதாரண சிப்பாய் போல் ஆங்கிலேய அந்நிய படைக்கெதிராக களமிறங்கி தனது உடலில் கடைசி மூச்சு நிற்கும் வரை உறுதியுடன் போராடி உயிர் தியாகியானார் மாவீரன் திப்பு. அந்த வீரத் திருமகனின் வரலாற்றை நினைவு கூறுவது இந்திய தேசத்தின் விடுதலை வரலாற்றையே நினைவு கூறுவதற்கு சமமாகும்.
‘கிழக்கிந்தியக் கம்பெனியின் குலை நடுக்கம்’ - திப்புசுல்தானின் மைசூர் அரசுக்கு அன்று லண்டன் பத்திரிகைகள் வைத்த பெயர் இதுவாகும். இந்தியாவில் ஆங்கிலேயர்களின் உள்ளங்களில் பீதியை விதைத்த தீரர்தான் திப்பு. அதனால்தான் திப்பு சுல்தான் தனது இன்னுயிரை தியாகம் செய்த வேளையில் அவரின் வீரமரணத்தைக் கேள்விப்பட்டு மனம் மகிழ்ந்த ஆங்கிலேய ஜெனரல் ஹாரிஸ் இவ்வாறு கூறினான்: ‘இன்று முதல் இந்தியா நம்முடையது’ என்று.
ஜவஹர்லால் நேரு அவர்கள் தமது டிஸ்கவரி ஆஃப் இந்தியா என்ற நூலில் “ஆங்கிலேயர்களுக்கு சிம்ம சொப்பனமாகவும், பெரும் சவாலாகவும் இருந்தவர்கள் ஹைதர் அலியும், திப்பு சுல்தானும். அவர்கள் பிரிட்டீஷாருக்கு கடுமையான தோல்வியின் மூலம் வேதனைமிக்க அனுபவத்தை ஏற்படுத்தினார்கள். கிழக்கிந்திய கம்பெனியின் அதிகாரத்தை உடைத்தெறியும் அளவுக்கு அவர்கள் நெருங்கினார்கள்” எனக் குறிப்பிடுகிறார்.
1750 நவம்பர் 20ல் ஹைதர் அலி ஃபக்ருன்னிஸா தம்பதியருக்கு மகனாய்ப் பிறந்த திப்புசுல்தான், தனது 17ம் வயதிலேயே போர்ப்படைத் தளபதியாக நின்று வாணியம்பாடி யுத்தத்தில் ஆங்கிலேயரை வென்றார்.
1761ல் மைசூர் மன்னராக பொறுப்பேற்ற திப்பு சுல்தானின் தந்தை ஹைதர் அலி 1767-1769ல் முதலாம் மைசூர் யுத்தம், 1780ல் இரண்டாம் மைசூர் யுத்தம் உட்பட ஆங்கிலேயரை எதிர்த்து பல யுத்தம் கண்டு வெற்றி பெற்றார்.
திப்பு கி.பி 1767ல் தமது 17 ம் வயதில் ஜோசப் ஸ்மித் தலைமையில் போரிட்ட ஆங்கிலப் படையை எதிர்த்து வாணியம்பாடியில் தமது முதல் வெற்றிக்கனியைப் பறித்தார். கி.பி.1767 முதல் கி.பி.1769 வரை தமிழ்நாட்டில் பரவலாக பல இடங்களில் ஆங்கிலப் படைக்கும் மைசூர் படைக்கும் நடந்த போர்களில் எல்லாவற்றிலும் வெற்றியே பெற்றார் திப்பு.
1782 டிசம்பர் 6ல் தந்தை ஹைதர் அலி மரணத்தைத் தொடர்ந்து 1782 டிசம்பர் 26ல் தமது 32ம் வயதில் திப்புசுல்தான் மைசூர் மன்னரானார். மேற்கு கடற்கரையிலிருந்து ஆங்கிலேயர்களைத் துரத்த வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு பிரெஞ்சுப் படையினரையும் சேர்த்துக் கொண்டு ஆவேசத்துடன் போரைத் தொடர்ந்தார் திப்பு.
ஆனால் பிரஞ்சு மன்னன் பதினாறாம் லூயி பிரிட்டனுடன் சமரசம் செய்துக் கொண்டதால் திப்பு வேறுவழியில்லாமல் போரை நிறுத்த வேண்டியதாயிற்று. 1784 ஆம் ஆண்டு முடிவுற்ற இப்போரில் ஆங்கிலேய தளபதி உள்ளிட்ட 4000 சிப்பாய்கள் திப்புவால் போர்க் கைதிகளாக பிடிக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர். இந்த அவமானம் ஆங்கிலேயர்களுக்கு திப்புவை நினைத்து குலை நடுங்கச் செய்தது.
இச்சூழலில் திப்புவிற்கெதிராக போர் புரிய ஆற்காட்டு நவாபும், தொண்டைமான், ஹைதராபாத் நிஜாம், மைசூர் அரசின் முன்னாள் பாளையக்காரர்கள் அனைவரும் ஆங்கிலேயருடன் இணைந்து கொண்டனர். சற்றும் கலங்காத திப்பு எதிரிகளை தன்னந்தனியாக துணிச்சலுடன் எதிர்கொண்டார்.
ஸ்ரீரங்கப்பட்டினம் 30 நாட்களுக்கு மேலாக முற்றுகையிடப்பட்ட போதிலும் எதிரிகளால் திப்புவின் கோட்டைக்குள் நுழைய இயலவில்லை. இதனைக் குறித்து ஆங்கிலேய தளபதி மன்றோ கூறுகையில், ‘30 நாட்கள் முற்றுகையிட்டும் எங்களால் அந்தக் கோட்டையையும், தீவையும் தூரத்திலிருந்து கொண்டு தரிசிக்கத்தான் முடிந்தது’ என்று குறிப்பிட்டான்.
போரின் துவக்கத்தில் வெற்றி பெற்ற திப்பு போரின் இறுதிக்கட்டத்தில் மராட்டியர்கள் நயவஞ்சகத்தனமாக ஆங்கிலேயர்களுடன் இணைந்து கொண்டதால் ஒப்பந்தம் செய்து கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டார். மைசூரின் பாதி நிலப்பரப்பும் எதிரிகள் வசம் சென்றது. இழப்பீடுத் தொகையாக 3.3 கோடி நிர்ணயிக்கப்பட்டது. இழப்பீடு தொகையை செலுத்தும்வரை திப்புவின் இருமகன்கள் பிணையக் கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டனர். இழப்பீட்டுத் தொகையை செலுத்தி தனது மகன்களை மீட்ட திப்பு 1792 ஆம் ஆண்டு நடந்த போருக்கு பதிலடி கொடுக்க வலிமையான முறையில் படையையும், பொருளாதாரத்தையும் கட்டமைத்தார்.
திப்பு சுல்தானை போரில் நேரில் சந்திக்க திராணியற்ற ஆங்கிலேயர்கள் குறுக்கு வழியை கையாள ஆரம்பித்தனர். லஞ்சத்தை ஆயுதமாகப் பயன்படுத்தி திப்புவின் அமைச்சர்களையும் அதிகாரிகளையும் விலைக்கு வாங்கினர். இதனைக் குறிப்பிட்டு வெல்லெஸ்லி ஆங்கிலத் தலைமைக்கு இவ்வாறு கடிதம் எழுதினான், ‘இனி நாம் துணிச்சலாக திப்புவின் மீது போர்த்தொடுக்கலாம்’ என்று.
ஆங்கிலேயனுக்கு எதிராக நடைபெற்ற இறுதிப் போரில் தன்னந்தனியாக களமிறங்கினார் திப்பு. துரோகிகள் ஒருபக்கம், கூட இருந்தவர்களின் குழிபறித்தல் ஒருபக்கம் என எதிர்ப்புகள் ஒன்றிணைந்து தம்மை சந்தித்த பொழுதும் உதவிக்கு வருவதாக வாக்களித்திருந்த நெப்போலியனுக்கு வர இயலாத போதிலும் கலங்காமல் தமது 11 ஆயிரம் படைவீரர்களுடன் தானும் ஒரு போர் வீரனாக தீரமுடன் போரிட்டார் திப்பு.
எதிரிகள் உயிர் தியாகத்தின் வாசலை திப்புவுக்கு திறந்துக் கொடுத்தனர். குண்டுக் காயங்களுடன் கோட்டை வாயிலில் சரிந்து கிடக்கும் திப்புவிடம் “அரசே! யாரேனும் ஒரு ஆங்கிலேய அதிகாரியை அழைக்கட்டுமா, சரணடைந்து விடலாம்” என்று பதறுகிறான் அவருடைய பணியாள். “முட்டாள்… வாயை மூடு” என்று உறுமுகிறார் திப்பு. ஆம்! “ஆடுகளைப் போல 200 ஆண்டுகள் பிழைப்பதை விடப் புலியைப் போல 2 நாட்கள் வாழ்ந்து மடியலாம்” என்று பிரகடனம் செய்த அந்தப் வேங்கை போர்க் களத்திலேயே தன் கண்ணை மூடியது.
## அம் மாவீரனின் நினைவு நாள் இன்று !

Depression can be detected with a blood test

Doctors may soon be able to diagnose mental illness with a simple blood test, new research suggests.

PicMonkey_Collagedepression.jpg
Image: Johan Swanepoel & EmiliaUngur/Shutterstock
In a huge breakthrough for the treatment of mental illness, scientists have revealed that depression can be detected by biomarkers in the blood.
Many depressive conditions are caused by a lack of serotonin, or the "happiness hormone", in the brain. And now scientists from the Medical University of Vienna have shown that by analysing the blood levels of serotonin transporter (SERT), a protein essential of the transport of serotonin into brain cells, it's theoretically possible to detect whether someone is suffering from depression.
These SERT proteins are found in large quantitates in the blood and other organs, and the scientists found that there is a close relationship between the speed of serotonin uptake in blood platelets and the function of the 'depression network' in the brain.
Study leader Luke Pezawas explained in a press release: “This is the first study that has been able to predict the activity of a major depression network in the brain using a blood test."
Even better, the research, which is published in PLoS One, is the first to indicate the concept is even possible.
"While blood tests for mental illnesses have until recently been regarded as impossible, this study clearly shows that a blood test is possible in principle for diagnosing depression and could become reality in the not too distant future," Pezawas adds.

Source: Medical University of Vienna

A new type of magnetic tape material can store 74 times more data per unit than today's devices

.
shutterstock_110799905
Image: The_Pixel/Shutterstock
The material has been developed by Sony and can store an impressive 148 gigabits per square inch.
This is the world's highest recording density magnetic tape ever made, and could lead to tape cartridges with a storage capacity of 185 TB.
By comparison, the latest generation of magnetic tape storage devices, used mostly by data centres and corporate archives, can only store around 2.5 TB per cartridge. Unimpressive.
To make the new material, Sony used technology called sputter deposition, which involves shooting argon ions at a polymer film substrate. This produced layers of magnetic crystal particles with an average size of 7.7 nanometers.
Source: IT World

குழந்தை-டொனால்டு பார்தெல்மே

டொனால்டு பார்தெல்மே (1931 - 1989))                                             

தமிழில்: சி. மோகன்
அமெரிக்க எழுத்தாளர். பின்-நவீனத்துவப் புனைவுலகின் முக்கியப் படைப்பாளி. சிறுகதை - நாவலாசிரியர், எடிட்டர், பத்திரிகையாளர் மற்றும் ஆசிரியர். சிறுகதைப் புனைவில் Donald_Barthelme_(author) அதிகபட்சப் பரிசோதனைகளை நிகழ்த்திக் காட்டியவர். எனினும், பல்வேறு மொழிகளில் அவருடைய கதைகள் மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றன. நிறுவனங்கள் போற்றிப் பரிசளித்திருக்கின்றன. பல்கலைக்கழகங்கள் கெளரவப் பதவிகள் வழங்கியிருக்கின்றன. 'அர்த்தங்களை வலியுறுத்தும் மனோபாவத்திலிருந்து விடுபட நாம் கற்றுக் கொள்ள வேண்டும்' என்று கருதியவர்.
1931ஆம் ஆண்டு ஏப்ரல் 7ஆம் தேதி பிலெடெல்ஃபியாவில் பிறந்தார். 1933ஆம் ஆண்டு இவர்கள் குடும்பம் ஹஸ்டனுக்குக் குடிமாறியது. பார்தெல்மே பள்ளிப் பருவத்திலேயே எழுதத் தொடங்கிவிட்டார்.
1949ல் ஹஸ்டன் பல்கலைக்கழகத்தில் இதழியலை மையப்பாடமாக ஏற்றுப் படித்தபோது, அப்பல்கலைக்கழக இதழின் எடிட்டராக அவருடைய 20ஆவது வயதில் நியமிக்கப்பட்டார். அன்று அது ஒரு சாதனை. பட்டப் படிப்பை முடிப்பதற்கு முன்பாகவே ஆர்மியில் சேர்க்கப்பட்டு கொரியாவில் சேவை செய்தார். அச்சமயம் ஆர்மி செய்தித்தாளின் செய்தியாளராகப் பணியாற்றினார்.
1962ல் நியூயார்க் சென்று முழுநேர எழுத்து வாழ்வை மேற்கொண்டார். 18 ஆண்டுகள் நியுயார்க்கில் வாழ்ந்த பார்தெல்மே 1980ல் மீண்டும் ஹஸ்டன் திரும்பி, ஹஸ்டன் பல்கலைக்கழக 'படைப்பாக்கச் செயல்திட்ட' இயக்குநராகப் பணியேற்றார்.
நான்கு முறை திருமணம் செய்துகொண்டவர். 1989ல் தன் 58ஆவது வயதில் தொண்டைப் புற்றுநோயால் மரணமடைந்தார்.)
இக்கதை 1987 ஆம் ஆண்ட எழுதப்பட்டதென அனுமானிக்க முடிகிறது -  மொழிபெயர்ப்பாளர் குறிப்பு.

குழந்தை செய்யத் தொடங்கிய முதல் தவறு, தன் புத்தகங்களிலிருந்து பக்கங்களைக் கிழிக்க ஆரம்பித்ததுதான். அதனால், அவள் புத்தகத்திலிருந்து கிழிக்கும் ஒவ்வொரு பக்கத்திற்கும், பக்கத்திற்கு நான்கு மணி நேரமென அவள் தன் அறையில், மூடிய கதவுகளுக்குப் பின்னால் தனியாக இருக்க வேண்டுமென்று நாங்கள் ஒரு விதி செய்தோம். அவள் ஒரு நாளில் ஒரு பக்கம் கிழித்த ஆரம்ப கட்டத்தில் இவ்விதி - மூடிய அறையில் இருந்து எழும் அழுகையும் கதறலும் பதற்றம் தந்த போதிலும் - நன்றாகவே செயல்பட்டது. உன் தவறுக்கான தண்டனையை அல்லது தண்டனையின் ஒரு பகுதியையேனும் ஏற்றுக்கொள்ளவே வேண்டுமென நாங்கள் நியாயப்படுத்தினோம். ஆனால், பிறகு அவளின் பிடிமானம் வளர்சியடைந்த நிலையில் ஒரே சமயத்தில் இரண்டு பக்கங்களைக் கிழித்தெறிந்தாள். அதன் காரணமாக, மூடிய அறையில் தனியாக அவள் எட்டு மணி நேரம் இருக்க வேண்டி ஆயிற்று. அதற்கேற்ப தொல்லை எல்லோருக்கும் இரண்டு மடங்காகியது. எனினும், அவள் அவ்வாறு செய்வதை நிறுத்துவதாக இல்லை. அதன் பிறகு, நாட்கள் செல்லச் செல்ல, அவள் மூன்று அல்லது நான்கு பக்கங்களைக் கிழிக்கும் நாட்களை நாங்கள் எதிர்கொள்ள வேண்டி வந்தது. அதன் காரணமாக, தொடர்ச்சியாக பதினாறு மணிநேரம் வரை அவள் தன் அறையில் தனியாக இருக்கும்படி ஆயிற்று. வேளா வேளைக்கு உணவு கொடுப்பதற்கு இது இடையூறாக இருந்ததால் என் மனைவி கவலைப்பட்டாள். ஆனால் நாம் ஒரு விதியை உருவாக்கினால் அதற்கு நாம் கட்டுப்பட்டாக வேண்டுமெனவும் பாரபட்சமோ தளர்வோ காட்டாமல் இருக்கவேண்டுமெனவும் நான் நினைத்தேன். இல்லையெனில் அவர்கள் தவறான கருத்து கொண்டு விடுவார்கள். அந்தச் சமயத்தில் அவள் பதினான்கு அல்லது பதினைந்து மாதங்கள் நிரம்பியவளாக இருந்தாள். அவ்வப்போது ஒரு மணி நேரம் போலக் கதறிய பின்பு அவள் தூங்கிவிடுவதென்னவோ உண்மைதான். அது கருணையின்பாற்பட்டது. அவள் அறை மிகவும் அழகானது. மரத்தினாலான அழகிய ஆடுகுதிரையும், நூறு பொம்மைகளும், பொதிக்கப்பட்ட மிருகங்களும் நிறைந்தது.
நேரத்தை பிரயோசனமாகப் பயன்படுத்தினால் புதிர் விளையாட்டு போன்று பல்வேறு காரியங்களை அந்த அறையில் செய்யலாம். துரதிருஷ்டவசமாக, நாங்கள் கதவைத் திறக்கும் சில சமயங்களில் மேலும் சில புத்தகங்களிலிருந்து மேலும் சில பக்கங்களை, அவள் உள்ளே இருக்கும்போது கிழித்திருப்பதை நாங்கள் கண்டோம். இந்தப் பக்கங்களையும் உரிய வகையில் கணக்கில் சேர்த்துக் கொண்டாக வேண்டும்.
குழந்தையின் பெயர் பார்ன் டான்சின். நாங்கள் எங்களுடையதிலிருந்து குழந்தைக்கு சிவப்பு, வெள்ளை மற்றும் நீல ஒயின் கொஞ்சம் கொடுத்தோம். மேலும் அவளுடன் சிரத்தையோடு பேசிப் பார்த்தோம். ஆனால், அது எவ்வித பயனும் அளிக்கவில்லை.
உண்மையான கெட்டிக்காரத்தனத்தை அவள் பெற்று விட்டாள் என்பதை நான் சொல்லியாக வேண்டும். வீட்டில் அவள் விளையாடிக்கொண்டிருக்கும்போது - தன் அறையிலிருந்து அவள் வெளி வந்திருக்கக்கூடிய அந்த அபூர்வமான தருணங்களில் - நீங்கள் அவளுக்கருகில் சென்றால், அங்கு அவளுக்கு முன் ஒரு புத்தகம் திறந்தபடி இருக்கும். நீங்கள் அதைப் பரிசோதித்தால் அது பார்ப்பதற்கு மிகச் சரியாகவே இருக்கும். அதன்பிறகு நீங்கள் உன்னிப்பாகக் பார்த்தால் சிறு முனை கிழிக்கப்பட்ட ஒரு பக்கத்தைக் காண்பீர்கள். இது, பட்டும் படாமலுமான சாதாரண பார்வையில் மிகச் சுலபமாகத் தெரிய வராது. ஆனால் அவள் என்ன செய்திருக்கிறாள் என்பது எனக்குத் தெரியும். அவள் அந்தச் சிறு முனையைக் கிழித்து அப்படியே விழுங்கியிருப்பாள். அதனால், அவற்றையும் அவள் கணக்கில் சேர்த்துக்கொள்ள வேண்டிய நிலையில் சேர்த்துக் கொண்டாயிற்று. உங்கள் திட்டத்தைத் தவிடு-பொடியாக்குவதற்கான தடைகளை ஏற்படுத்துவதற்காக எந்த ஒரு எல்லைக்கும் அவர்கள் செல்வார்கள். நாம் குழந்தையிடம் அதிகக் கண்டிப்போடு நடந்துகொள்வதால்தான் அவள் மிகவும் மெலிந்து கொண்டே போகிறாள் என்றாள் என் மனைவி. ஆனால் குழந்தை இஜவ்வுலகில் இ ஜன்னும் நீண்ட காலத்துக்கு வாழவிருக்கிறாள்; இந்த வாழ்க்கையை, ஏராளமான விதிகள் நிறைந்த இவ்வுலகில், அவள் பிறருடன் சேர்ந்து வாழ்ந்தாக வேண்டும்; விதிமுறைகளுக்கேற்ப இயங்க உன்னால் கற்றுக்கொள்ள இ ஜயலாது போனால் நீ ஜஇவ்வுலகில் வெறுக்கப்பட்டு ஒரு குணவிலியென தனித்து விடப் படுவாய். சமூகத்திலிருந்து விலக்கி வைக்கப்பட்டு புறக்கணிக்கப்படுவாய் என நான் குறிப்பிட்டேன். தன் அறையில் தொடர்ச்சியாக எண்பத்தெட்டு மணிநேரம் தனித்திருக்கச் செய்ததுதான் இருந்ததற்குள் மிக நீண்ட காலம். கதவின் கொக்கியை இரும்புக் கொண்டி கொண்டு என் மனைவி நீக்கித் திறந்தபோது அது முடிவுக்கு வந்தது. அப்போதும் அவள் இன்னும் பனிரெண்டு மணி நேரம் உள்ளிருந்திருக்க எங்களுக்குக் கடமைப்பட்டிருந்தாள். ஏனெனில், அவள் அப்போது இஜருபத்தைந்து பக்கங்களுக்காக உள்ளிருந்தாள். நான் மீண்டும் கொக்கியில் கதவை இணைத்தேன். மேலும், ஒரு பெரிய பூட்டு போட்டுப் பூட்டினேன். அதை ஒரு காந்தத் தகடு கொண்ட மட்டுமே ஒருவரால் திறக்க முடியும். அந்தக் காந்தத் தடை என்னிடமே வைத்துக்கொண்டேன்.
எனினும், எவ்வித முன்னேற்றமுமில்லை. குழந்தை, தன் அறையிலிருந்து, ஜருட்பொந்திலிருந்து வெளிவரும் ஒரு வெளவாலைப் போல் வருவாள். அருகிலிருக்கும் 'குட்நைட் மூன்' அல்லது வேறு ஏதோ ஒரு புத்தகத்தை நோக்கி விரைவாள். தன் கையால் முரட்டுத்தனமாக அதன் பக்கங்களைக் கிழிக்கத் தொடங்குவாள். பத்து நொடிகளில் 'குட்நைட் மூன்' இன் முப்பத்து நான்கு பக்கங்கள் தரையில் கிடக்கும். அவற்றோடு மேலட்டைகளும். நான் சற்றே கவலைப்படத் தொடங்கினேன். உரிய மணியளவை நான் அவள் பற்றுக் கணக்கில் சேர்த்தபோது, அதன் பிறகு 1992* வரை அவள் தன் அறையை விட்டு வெளிவரப் போவதில்லை என்பதை அறிய முடிந்தது. மேலும், அவள் மிகவும் வெளிறிக் காணப்பட்டாள். வாரக்கணக்கில் அவள் பூங்காவுக்குச் சென்றிருக்கவில்லை. ஏறத்தாழ ஒரு தார்மீகச் சிக்கல் எங்களுக்கு ஏற்பட்டு விட்டிருந்தது.
புத்தகங்களிலிருந்து பக்கங்களைக் கிழிப்பது சரியானதே எனவும், அதைவிட, முன்னர் அவள் புத்தகங்களிலிருந்து பக்கங்களைக் கிழித்துக் கொண்டிருந்ததும் சரியானதே எனவும் அறிவித்து இந்தப் பிரச்சனையை நான் தீர்த்தேன். பெற்றோராய் ஜஇருப்பதில் நிறைவளிக்கக் கூடிய விஷயங்களில் இஜதுவும் ஒன்று. ஏராளமான ஏற்பாடுகள் - ஒவ்வொன்றும் தங்கத்தைப் போல் சிறந்தது - உங்கள் கைவசமிருக்கின்றன. நானும் குழந்தையும் சந்தோஷமாக, தரையில் அருகருகே அமர்ந்து, புத்தகங்களிலிருந்து பக்கங்களைக் கிழித்தோம். சிலசமயம் நாங்கள் தெருவிற்குச் சென்று காற்று விசைக் கண்ணாடித் தடுப்பானை - வெறுமனே கேளிக்கைக்காக - சேர்த்து நொறுக்கினோம்.

சிவாஜி..!


நட்புக்கரம் நீட்டி வரவைழத்த ஒளரங்கசீப், நயவஞ்சகமாகத் தன்னையும் தன் மகைனயும் கைதுசெய்து சிறையில் அடைப்பான் என்று கொஞ்சமும் எதிர்பார்த்திராத மராட்டிய மாவீர‌ன் சிவாஜி, அடிபட்ட புலி போல ஆக்ரா சிறையில் உறுமிக்கொண்டு இருந்தார்.

மகன் சம்பாஜியிடம், ‘‘ஒவ்வொரு வியாழனும் ஏராளமான பழங்கள் வைத்து பூஜித்து, அதைத் தானம் செய்வது வழக்கம் என்று சிறை அதிகாரிகளிடம் சொல்லி, அதற்கான ஏற்பாடுகளைச் செய்’’ என்றார்.

‘‘தந்தையே! நாம் பெரும் ஆபத்தில் இருக்கிறோம். இப்போது எதற்காக பூஜை?’’ என்று மகன் கேட்க, ‘‘மகனே! நீ அச்சத்தின் பிடியில் அகப்பட்டுவிட்டாய் என நினைக்கிறேன். அச்சப்பட்டவர்கள் வெற்றி பெற்றதாகச் சரித்திரம் கிடையாது. நான் இங்கிருந்து தப்பிக்கத்தான் வழி சொல்கிறேன்’’ என்றார் சிவாஜி.

‘‘முகலாயர்களிடம் இருந்து தப்புவதா... அது முடியுமா?’’ என மீண்டும் மகன் சந்தேக‌த்துடன் கேள்வி எழுப்ப, ‘‘துணிந்தவனுக்குத் தோல்வியில்லை’’ என்றார் சிவாஜி உறுதியோடு!

அதன்பின், சிறைகுப் பழக்கூடைகள் வருவதும் போவதும் வழக்கமாயிற்று. அந்தக் கூடைக்குள் அமர்ந்துதான் சிவாஜியும் சம்பாஜியும் ஒருநாள் தப்பித்தார்கள்.

பூனேவுக்கு அருகே, 1630-ல் சிவானி கோட்டையில் பிறந்தார் சிவாஜி. தந்தை ஷாஜி, பூனே சுல்தானின் படைப்பிரிவில் மேஜராகப் பணியாற்றி வந்ததால், தாய் ஜீஜாபாய் மற்றும் தளபதி ஷாயாஜியின் மேற்பார்வையில் வளர்ந்தார் சிவாஜி. சிறு வயதிலேயே குதிரை ஏற்றம், வாட் போர், வில் வித்தை, குஸ்தி போன்ற வீர‌ தீர விளையாட்டுகளில் அதிக ஆர்வம் காட்டினார். இந்துக்கைள அடக்கி ஆண்ட முகலாய ஆட்சியின் மீது அவருக்கு இயல்பாகேவ வெறுப்பு இருந்தது. தாய் ஜஜீ போய் சொன்ன வீர‌ க் கதைகளும், சுவாமி ராமதாசரின் ஆசீர்வாதமும், இந்து சாம்ராஜ்யம் நிறுவ சிவாஜிக்கு ஆர்வமும் ஊக்கமும் தந்தன.

‘‘மாபெரும் படை கொண்ட முகலாயர்கைள என்னால் வெல்ல முடியுமா?’’ என்று சிவாஜி கேட்டேபாது, அவரது தாயும், சுவாமி ராமதாசரும் ஒரு சேரச் சொன்ன பதில்... ‘துணிந்தவனுக்குத் தோல்வியில்லை’.

பூனாவுக்கு அருகே மலைகளில் வசித்து வந்த ‘மாவலி’ மக்களிடமிருந்து இளைஞர்கைளத் திரட்டி, ‘கொரில்லா’ படை அமைத்தார் சிவாஜி. முகலாயர்களின் பிடியில் இருந்த ரோஹிதேசுவரர் ஆலயத்தையும், தேரான் கோட்டையையும் கைப்பற்றினார். சிவாஜியின் இந்த வெற்றி, இந்துக்களிடையே பெரும் விழிப்புணர்வை ஏற்படுத்தேவ, ஆயிரக்கணக்கான இளைஞர்கள் அவரது படையில் இணைந்தார்கள். அதன்பின் குபா கோட்டை, இந்திரபுரி, ஜாவ்லி என கிட்டத்தட்ட முந்நூறு கோட்டைகள் சிவாஜி வசமாயின. ஒவ்வொரு முறையும் போருக்குப் புறப்படும் முன், தனது படையினரிடம், ‘‘தோல்வியில்லை, தோல்வியில்லை... துணிந்தவனுக்குத் தொல்வியில்லை’’ என்று உற்சாகக் குரல் கொடுப்பார் சிவாஜி.துணிந்து கிளம்பும் அந்தப் படை வெற்றி வாகை சூடி வரும்.

ஒருமுறை, சிவாஜியின் கோட்டை முன் பெரும் கடெலன முகலாயர் படை நின்றது. போரைத் தவிர்க்க விரும்பினால், சிவாஜி நிராயுதபாணியாக தன்னிடம் பேச்சு வார்த்தை நடத்த வரேவண்டும் என அழைப்பு விடுத்தான் தளபதிஅப்சல்கான். தனிமையில் போக‌வண்டாம் என அனைவரும் தடுத்தபோதும்,

‘‘துணிந்தவனுக்குத் தோல்வியில்லை’’ எனப் புன்னைகத்தவாறு பகைவனைத் தேடிப் புறப்பட்டார் சிவாஜி. ஆயுதமின்றித் தனிமையில் வந்த சிவாஜியைப் பார்த்துக் கேலியாகச் சிரித்தஅப்சல்கான், ‘‘உன்னிடம் சமாதானம் பேசவா இத்தனை படையுடன்வந்திருக்கிறேன்’’ என்றபடி சரேலென‌ தன்னுடைய வாளை உருவி, சிவாஜியின் மார்பில் செலுத்தினான். உள்ளே கவசம் அணிந்திருந்த சிவாஜி, கண் இமைக்கும் நேரத்தில் அப்சல் மீது பாய்ந்து, தன் கைகளில் மறைத்து வைத்திருந்த விஷம் தேய்த்த புலி நகங்களால் அவைனக் கீறிக் கொன்று போட்டார். தலைவன் இல்லாத படைகளைப் பந்தாடியது மராட்டிய சேனை. மாபெரும் வீர‌னாக, ‘சத்ரபதி’ என முடிசூடினார் சிவாஜி.

1680-ம் ஆண்டு மரணமைடயும் வரையில், சிவாஜியைத் தோல்வி என்பது நெருங்கவே இல்லை. காரணம், ‘துணிந்தவனுக்குத் தோல்வியில்லை’ என்கிற அவரது தாரக மந்திரம்தான்.

கிட்னி கல் என்றால் என்ன?


சிறுநீரில் பல வேதிப் பொருட்கள் கலந்துள்ளன. அவற்றுள் சில மணிச்சத்துக்கள், சில உயிரியற் பொருட்கள். இவை இரண்டும் தகுந்த விகிதத்தில் இருப்பதால்தான் அவை படிகங்களாகவோ, (crystals) திடப்பொருள்களாகவோ, சிறுநீர்த் தாரைகளில் படியாமல் இருக்கின்றன. சிலருக்கு ஏற்படும் வளர்சிதை மாற்றங்கள் இவற்றின் விகிதங்களை மாற்றி இவற்றைச் சிறு துகள்களாகவோ, கற்களாகவோ படிய வைக்கின்றன. இவையே நாளடைவில் கற்களாக உருவாகின்றன.
கிட்னியில் கற்கள் உருவாவதற்கான காரணங்கள்
இந்நோய் சுலபமாக ஏற்படுவதற்கான உடல் கூறு கொண்டவர்களுக்கு, உணவுப்பொருள் ஒரு காரணமாக இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். ஆனால் உணவுப் பழக்கம் மட்டுமே இதற்கு காரணம் என்று கூறமுடியாது எனவும் அவர்கள் கூறுகின்றனர்.
கால்சியம், பாஸ்பேட் மூலகங்கள் அடங்கிய கற்களே மிகுதியாக காணப்படுகின்றன. இம்மூலகங்கள் சிறுநீரில் கூடுதலாக வெளிப்படும் நோய்களில் இவை தோன்றுகின்றன. பாரா தைராய்டு மிகுதி நோயும் (Hyperparathyroidis m), சிறுநீர்ப் பாதையில் தொற்றுகள் (Urinary tractinfections) , , சிறுநீரக நோய்கள் (Cystic kidney diseases) போன்ற நோய்களும் இவ்வகைக் கற்கள் ஏற்பட முக்கியமான காரணங்களாகும்
யூரிக் அமிலம், புரதச் சத்து சிதைப்பிற்கு பின்பு உண்டாகும் கழிவுப் பொருளாகும். இது ரத்தத்தில் 6 மிலி கிராம் அளவில் இருக்க வேண்டும். பிறவி நொதிக்குறைகள் சிலவற்றில் யூரிக் அமிலம் இந்த அளவை தாண்டும்போது மிகுதியான யூரிக் அமிலம் சிறுநீரில் வரும். அப்போது அது கற்களாக படிவதுண்டு.
நாம் உண்ணும் உணவில் இருந்து தேவையான கால்சியம் நமக்கு கிடைக்கிறது. அதிகப்படியாக கால்சியம் நாம் மாத்திரைகளாகவோ, உணவாகவோ எடுக்கும்போது
அவை சிறுநீரில் கழிவு பொருளாக வெளியேறுகிறது. இப்படிப்பட்ட சமயங்களில் கால்சியம் மூலகங்கள் oxalate மற்றும் phosphate உடன் சேர்ந்து சிறுநீர் தாரைகளில் படிகங்களாக படிந்து பின் கற்களாக மாறுகின்றன.

சில சிறுநீர் பெருக்கி மருந்துகள் (Diuretics) கால்சியம் கலந்த antacid மருந்துகள் கல் உருவாகக்கூடிய வாய்ப்புகளை அதிகரிக்கிறது.
பிறவியிலேயே ஏற்படும் சில நொதிக் குறைகளில் சிறுநீரில் ஆக்ஸாலிக் அமிலம், சிஸ்டீன் போன்ற வேதியல் பொருள்கள் மிகுதியாக வெளிவரும். இவைகளும் கிட்னியில் கல் உருவாக ஏதுவாகிறது.
கிட்னி கற்கள் யாருக்கு வரும்-
பொதுவாக 40 வயதுக்கு மேற்பட்ட ஆண்களக்கு இந்த நோய் வருகிறது. பெண்களைப் பொறுத்தவரை, 50 வயதைத் தாண்டும்போது இந்த நோய் வருகிறது. ஒருவருக்கு
ஒருமுறை கிட்னியில் ஒன்றுக்கு மேற்பட்ட கற்கள் வந்துவிட்டால், அடுத்தடுத்து கற்கள் உருவாவதற்கான வாய்ப்பு அதிகம் உண்டு. நோயாளியின் பெற்றோர்களுக்கோ அல்லது முன்னோர்களுக்கோ, இந்த பாதிப்பு இருந்தாலும், இந்நோய் வருவதற்கு வாய்ப்புகள் அதிகம்.
கிட்னி கல் - அறிகுறிகள்
சிறுநீரகத்தில் இருந்து கல் வெளியேறி குறுகிய சிறுநீர்க்குழாயில் நுழைந்து வெளியேற முடியாமல் தடைபடும்போது தாங்கமுடியாத வலி ஏற்படும்.
சிறுநீர் வெளியேறுவதில் சிக்கல் உண்டாகும்.

சில நேரங்களில் சிறுநீர் ரத்தத்துடன் கலந்து வெளியேறும்.
நீர்த்தாரையில் எரிச்சல் உண்டாகும்.
அளவில் சிறியதான கற்கள் சிறுநீர் மூலமாகவே வெளியேறிவிடும். தண்ணீர் அதிகம் அருந்தினால் சிறுநீர் கல் தானாகவே கரைந்து வெளியேறும். தவிர்க்க முடியாத சந்தர்ப்பங்களில் அறுவை சிகிச்சை மூலம் கல்லை வெளியேற்ற வேண்டிய அவசியம் ஏற்படும்.
சிறுநீரக கற்களை எக்ஸ் கதிர், கணினி அச்சு வெட்டு, நுண் ஒலி துருவு படங்கள் ஆகியவற்றின் மூலம் அறியலாம். சிறுநீரக கற்கள் உள்ள நோயாளி தாமாகவே வெளிக்கொணரும் கற்களைஆராய்ந்து அதில் கால்சியம், பாஸ்பேட்,ஆக்ஸலேட்களும் மிகுதியாக இருப்பதை அறியலாம். இவற்றை கொண்டு கற்கள் உருவாவதற்கான காரணங்களை அறிந்து அவற்றை அகற்ற வேண்டும்.

Ceramic screws are corrosion and heat resistant



Most screws are made of steel. But high temperatures or acidic environments take their toll on this otherwise stable material. The alternative is ceramic screws. Researchers can now accurately predict their stress resistance.

Using a screw test rig and simulations, researchers at IWM in Freiburg and their colleagues at the Fraunhofer Institute for Ceramic Technologies and Systems IKTS in Dresden and the Institute for Machine Tools and Factory Management IWF at the Technische Universität Berlin have devoted themselves to exactly this question. "We're testing different ceramic screws and examining how much stress they can really withstand," explains Koplin. The project is funded by the German Federal Ministry for Economic Affairs and Energy (BMWi) and the German Federation of Industrial Research Associations (AiF). Researchers are also optimizing the screw design. The challenge is that load capacity varies greatly even among ceramic screws of the same design; while one screw can tolerate a great deal, another breaks much sooner. The load on the screws is therefore limited by the stress that the weakest among them can withstand. The ceramic's composition is the deciding factor – if the tiny grains that make up the substance bond incorrectly during manufacture, small cracks develop which can later cause the material to fail.

Researchers have now optimized the manufacturing process so that such cracks no longer occur in any of the numerous process steps. "We were able to significantly reduce the range of the distribution curve and thus raise the stress resistance of the screws," says Koplin. He sees significant room for improvement in the last process step, in which the screws receive their thread, either via injection molding or sanding. Until that has been optimized, screw manufacturers can turn to the IWM and consult the project team about what design best suits which targeted screw load capacity value and what the ideal manufacturing process should look like.

The researchers have also used the test rig to test the stress resistance of ceramic screws manufactured in their own laboratories. Their load-bearing capacity exceeds that of their steel counterparts by between 30 and 35 percent. "This is a huge leap forward," says Koplin. "This would already be enough for many applications if the screw was a bit bigger."

Source: Phys Org
Posted by: Er_sanch.