Search This Blog

Tuesday, April 22, 2014

Bipolar Disorder

“Bipolar I Disorder is one of the most severe forms of mental illness and is characterized by recurrent episodes of mania and (more often) depression. The condition has a high rate of recurrence and if untreated, it has an approximately 15% risk of death by suicide. It is the third leading cause of death among people aged 15-24 years”
- Internet Mental Health
The article also clarifies that Bipolar I Disorder should not be confused with Bipolar Disorder 2, BPD (Borderline Personality Disorder) or Mood Disorders triggered by Physiological conditions.
Sort of brings clarity to my mind, too:
A few well-meaning friends in their feedback talk about their total recovery from Bipolar Disorder.
Research says that one can’t compare variants of Bipolar. Similarly, each individual is distinct, the environmental factors which have such a huge bearing, vary, too.
Does the label of ‘severe, incurable illness’ bother me?
Honestly it did, for many years. I have now made peace with my condition.
It is no longer about complete recovery. A pragmatic me declares: it is about living a life of fulfillment.

Breaking news: Link between serious mental illness and committing crime not found

 "The study didn't find any predictable patterns linking criminal conduct and mental illness symptoms over time. Two-thirds of the offenders who had committed crimes directly related to their mental illness symptoms also had committed unrelated crimes for other reasons, such as poverty, unemployment, homelessness and substance abuse, according to the research. "Is there a small group of people with mental illness committing crimes again and again because of their symptoms? We didn't find that in this study," 
“When we hear about crimes committed by people with mental illness, they tend to be big headline-making crimes so they get stuck in people’s heads,”
said lead researcher Jillian Peterson, PhD.
“The vast majority of people with mental illness are not violent, not criminal and not dangerous.”

Crime and Mental Illness – End the Stigma


The researchers studied over 400 offenders with serious mental disorders (defined as Axis-I disorders in the DSM-IV psychiatric manual), and were unable to find a subgroup of offenders who committed offences only or mostly related to symptoms of their mental illness. Surprisingly, the mental illness most likely to be linked to crime was bipolar – one of the most common mental illnesses in the general population.
SourcePeterson, J. K., Skeem, J., Kennealy, P., Bray, B., & Zvonkovic, A. (2014). How often and how consistently do symptoms directly precede criminal behavior among offenders with mental illness?
thanks http://traumaanddissociation.wordpress.com/ 

World longest river bridge Chaina 32.5 K.M.


Monday, April 21, 2014

Water-repelling concrete could last a lifetime

A new concrete that repels water could be close to maintenance-free.
aslysun_concrete_shutterstock
Image: aslysun/Shutterstock
While concrete seems tough, cracks in vital areas can result in buildings, bridges and sidewalks becoming unsafe.
But by mixing oil, water and tiny particles into the concrete, scientists are getting close to creating a longer-lasting, water-resistant concrete.
And the researchers at the University of Wisconsin-Milwaukee have also been experimenting with creating concrete that can be consistently monitored remotely,
They tested their findings in a concrete slab in their parking lot, and found that embedded sensors can measure resistance between electrodes and monitor stresses to the concrete and alert scientists to any developing dangers.
The average life of a concrete road is about 40 years, but is much lower in regions where freezing and thawing are common. But the new durable, water-resistant material could last 120 years in average conditions.
Source: Inside Science

Solar-panel windows are now possible

Researchers have created transparent solar cells using quantum dots.
Nemeziya_sunshine_shutterstock
Image: Nemeziya/Shutterstock
Windows that double as solar panels could soon be a reality after a breakthrough in quantum dot research.
Researchers at Los Alamos National Laboratory and the University of Milano-Bicocca in the US have created a new generation of quantum dots - nano crystals made of semiconductor materials - that are able to be embedded in a transparent polymer.
These quantum dots are able to capture sunlight and transport it through the plastic matrix to a solar cell on its edge, the International Business Times reports.
The findings are published in Nature Photonics, and the scientists are calling this set-up a large-area luminescent solar concentrators (LSCs).
"The LSC serves as a light-harvesting antenna which concentrates solar radiation collected from a large area onto a much smaller solar cell, and this increases its power output," said Victor Klimov, lead researcher at the Centre of Advanced Solar Photophysics at Los Alamos.
The breakthrough could lead to house windows that soak up the Sun's energy. We can't wait.
Source: International Business Times

இலங்கையில் தற்கொலை செய்துகொள்வோரில் 80 வீதமானோர் ஆண்கள்: குடும்ப பிரச்சினைகளே காரணம்

இலங்கையில் தற்கொலை செய்துகொள்வோரில் ஆண்களே முன்னிலை வகிப்பதாக பொலிஸார் மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. பொலிஸ் நிலையங்களில் பதிவாகியுள்ள தகவல்களின் பிரகாரம் கடந்த இரு வருடங்களில் இலங்கையில் நிகழ்ந்த 6ஆயிரத்து 987 தற்கொலை சம்பவங்களில் 80 வீதமானவர்கள் ஆண்கள் என தெரியவந்துள்ளது.
பொலிஸ் திணைக்கள தகவல்களின் பிரகாரம் கடந்த 2012ஆம் ஆண்டு 3526 தற்கொலைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இவற்றில் 810 சம்பவங்களில் பெண்களும் மிகுதி 2ஆயிரத்து 716 சம்பவங்களும் ஆண்களுடன் தொடர்பானவை எனவும் அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.
பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹணவின் தகவல்களின் படி கடந்த ஆண்டு 3 ஆயிரத்து 461 தற்கொலைகள் இலங்கையில் பதிவாகியுள்ளன. இதில் 760 சம்பவங்களில் பெண்களும் மிகுதி 2 ஆயிரத்து 701 சம்பவங்களில் ஆண்களும் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.
இந்த தற்கொலைகளுக்கு குடும்ப பிரச்சினை மற்றும் கொடிய நோய்கள் ஆகியனவே பிரதான காரணங்கள் என தெரியவந்துள்ளது.

Do Lazy People Have More 'Immature' Brains?

The new findings from that researchers suggest a correlation between laziness and a less mature brain. "What we're finding is that physical activity is linked to the maturing of neural networks in the brain," according to the study leader Frank Booth.
He and his colleagues offer two possible explanations for the association, both of which appear equally plausible. Either physical activity causes the brain to grow in some ways, or specific genetic combinations encourage both physical activity and the greater maturation of some brain areas.
Booth, Frank, Laye, M.J. Lack of adequate appreciation of physical exercise's complexitites can pre-empt appropriate design and interpretation in scientific discovery. Journal of Physiology. 2014.

புற்று நோயை முற்றிலும் அழிக்க , வராமல் தடுக்க

வெறும் நூறு ரூபாயில் புற்று நோயை முற்றிலும் அழிக்க , வராமல் தடுக்க ஒரு சிறந்த கை மருந்து !
புற்று நோயால் பாதிக்கப் படுகிறார்களாம். சொந்த செலவிலேயே சூனியம் வைக்கறதுக்கு சமம். சொன்னா யார் கேட்கப்போறா !?

புற்று நோய் வந்து விட்டது என்றாலே சகல சப்த நாடிகளும் ஒடுங்கிப்போய் தளர்ந்து விடுவார்கள். அருகில் இருந்து பார்த்தவர்களுக்குத் தான் தெரியும் , சிங்கம் போலே சிலுப்பிக் கொண்டு இருந்த பலரை , வேரோடு சாய்த்து விடும் தன்மை. இந்த புற்று நோய்க்கு உண்டு. இப்போது ஓரளவுக்கு மெடிக்கல் உலகம் சில மருந்துகளை கண்டுபிடித்து , குணப் படுத்த நடவடிக்கை எடுத்தாலும், பணம் இருப்பவர்கள் மட்டுமே அந்த சிகிச்சை மேற்கொள்ள முடியும். ஆனால் அந்த வேதனை , ரணம் உயிரை விட்டு விடுவதே மேல் என்றே தோன்றி விடும்.

எனக்கு தெரிந்து , மிக நெருக்கமான வட்டத்தில் – மூன்று பேரை , அவர்கள் ஒட்டு மொத்த சொத்தையும் செலவழித்துப் பார்த்தும், உயிரையே காவு வாங்கி விட்டது.
அதை விட கொடூரமாக வேறு எந்த நோயின் வீரியத்தையும் கண் முன்னே நான் பார்த்ததில்லை.
அப்படிப்பட்ட புற்று நோயை , படிப்படியாக முற்றிலும் குணப்படுத்த ஒரு எளிய வைத்தியம் இது.
இந்த சிகிச்சையை கண்டுபிடித்தவர் பிரேசில் நாட்டில் பிறந்தவரும் சிறந்த மருத்துவரும் பாதிரியாருமாகிய Fr ரோமனோ சகோ (Fr Romano Zago) என்பவர்.
இவர் கண்டு பிடித்த இம்மருந்தை புற்று நோயால் மிக கடுமையாக பாதிக்கப் பட்டவர்கள்கூட உபயோகித்து குணமடைந்துள்ளனர். .
இனி இம்மருந்தை எப்படி தயாரிப்பது என்பதை பார்ப்போம் .இதில் பயன்படுத்தப்படும் மூலிகை எங்கும் எளிதாக கிடைக்கும் சோற்று கற்றாழை ஆகும் .
சோற்று கற்றாழை 400 கிராம்
சுத்தமான தேன் 500 கிராம்
whisky(or)brandy 50 மில்லி (மருந்தாக மட்டும் பயன்படுத்துக)
தயாரிப்பு முறை
சோற்றுக் கற்றாழையை எடுத்து பக்கவாட்டில் உள்ள முட்களை நீக்கி கொள்ள வேண்டும்
தோலை நீக்கிவிடக்கூடாது
தோலை சுத்தமான துணியினால் துடைத்துக் கொள்ளவேண்டும் அடுத்த படியாக எவ்வளவு முடியுமோ அவ்வளவு சிறியதாக கற்றாழையை நறுக்கிக் கொள்ளவேண்டும்
நறுக்கப்பட்ட துண்டுகளை ஒரு பாத்திரத்தில் கொட்டி தேன் மற்றும் whisky (or) brandy யுடன் சேர்த்து ஒரு கரண்டியால் நன்றாக கலக்க வேண்டும்
இப்போது மருந்து தயாராகி விட்டது
மருந்தை உட்கொள்ளும் விதம்
இம்மருந்தை தினமும் மூன்று வேளை உணவு அருந்துவதற்கு 30 நிமிடத்திற்கு முன்பு 15 ml வீதம் உண்ணவேண்டும் .ஒவ்வொரு முறை பயன்படுத்தும்போதும் மருந்தை நன்றாக குலுக்கிக் கொள்ளவேண்டும. மேலே சொன்ன அளவில் செய்தால் பத்து நாட்களுக்கு இந்த மருந்து வரும். மருந்து தீர்ந்தவுடன் 10 நாள் கழித்து மீண்டும் தயாரித்து உண்ணவேண்டும. பத்து நாட்களுக்கு மேல் மருந்தை storage செய்ய கூடாது.
இடையிடையே மருத்துவ பரிசோதனை செய்து கொண்டு நோய் நன்கு குணமாகும் வரை மருந்தை உட்கொள்ளவேண்டும் .சிலருக்கு மிக குறுகிய காலத்திலேயே இதன் மூலம் நிவாரணம் கிடைத்துள்ளது .
இது மிகவும் எளிதான சக்தி மிகுந்த மருந்து ஆகும் . மருந்தை குளிர்சாதன பெட்டியிலோ அல்லது அதிக வெப்பம் இல்லாத இடங்களிலோ காற்று புகாத பாட்டிலில் வைத்திருப்பது நல்லது .
உங்களால் முடிந்தவரை உங்கள் நட்பு வட்டாரத்தில் இதை தெரியப்படுத்துங்கள். யாரோ ஒருவருக்கு இது மிக தேவையானதாக இருக்க கூடும்… ! சிகரெட் பிடிக்கும் அனைவரும் உடனடியாக , புகை பழக்கத்தை நிறுத்தி , இந்த மருந்தை உட்கொள்ள ஆரம்பித்தல் நல்லது.ஒரே ஒரு நிமிஷம் , உங்களுக்கு புற்று நோய் வந்துடுச்சுனு டாக்டர் சொல்றதா நினைச்சுக்கோங்க.. கண் முன்னாலே உங்க மனைவி, குழந்தைகள், வயசான அப்பா , அம்மா எல்லோரும், நீங்க இல்லாம – கஷ்டப்படப் போறதை நினைச்சுப் பாருங்க… அந்த கருமத்தை , இதுக்கு மேலே தொடுவீங்க !?
நாம மனசு வைச்ச எல்லாம் முடியும் சார்!

திருமணம் செய்து கொள்ளும் பழமொழிகள்


திருமணம் செய்வதற்கு முன் இரண்டு கண்களையும் திறந்து வைத்துக்கொள்; திருமணம் ஆனபின் ஒன்றை மூடிக்கொள்.
- அமெரிக்கா
மணவாழ்க்கை என்பது இரும்புக் கோட்டை மாதிரி. வெளியே இருப்பவர்கள் உள்ளே செல்ல விரும்புகிறார்கள்; உள்ளே இருப்பவர்கள் வெளியே செல்ல விரும்புகிறார்கள்.
- அரேபியா
மனைவி - வீட்டின் ஆபரணம் - இந்தியா
கெட்டிக்காரப் பெண் - தான் காதலிப்பவனை விட்டு விட்டுத் தன்னை காதலிப்பவனைத்தான் மணப்பாள்.
- செக்கோஸ்லோவேகியா
திருமணம் செய்து கொள்ளும் முன்பும், கோர்ட்டுக்குச் செல்லும் முன்பும் தீர்க்கமாக யோசிக்க வேண்டும்.
- டென்மார்க்
திருமணத்துக்குப் பெண்ணை நாடும்போது கண்களை மூடிக் கொண்டு கடவுளை தியானம் செய்.
- வேல்ஸ்
அழுது கொண்டே வரும் மணமகள், சிரித்து கொண்டிருக்கும் மனைவியாகிறாள்.
- ஜெர்மனி
பணத்திற்காகக் கல்யாணம் செய்து கொள்ள வேண்டாம்; பணம் குறைந்த வட்டிக்கு வெளியே கிடைக்கும்!
- ஐரோப்பா
திருமணம் என்பது - மூடிய தட்டிலிருக்கும் உணவு போன்றது
- ஸ்காட்லாந்து
மணம் செய்யும் போதும், மாத்திரை சாப்பிடும்போதும் மிக அதிகமாகச் சிந்திக்கக் கூடாது.
- ஹாலந்து
கணவனின் அன்பே, பெண்ணிற்குப் பொக்கிஷம்
- தமிழ் நாடு
இரு இதயங்களும் ஒன்றானால் வைக்கோல் தொட்டி கூட அரண்மனையாகும்!
- இலங்கை

SAMSUNGமொபைல் போன்களுக்கான் குறியீட்டுகளே...!

1)*#9999# - தங்கள் போனின் சாப்ட்வேர் சார்ந்த தகவல்களை அறிய.
2)#*3849# -தங்கள் சாம்சங் மொபைல் போனை மீண்டும்Rebootசெய்ய.
3)*#06# -சாம்சங் போனின்IMEI (EMI)எண்ணை அறிய. இது மிக முக்கிய ஓர் எண்ணாகும்.
4)#*2558# -தங்கள் போனின் கடிகாரத்தை இயக்க அல்லது நிறுத்த. தங்கள் போனின் மொபைல் போனின் டைமை ஆன் செய்ய அல்லது ஆப் செய்ய.
5)#*7337# -தங்கள் அண்மைகால சாம்சங் மொபைல் போனை அன்லாக் செய்ய(UnLock).
6)#*4760# -தங்களில் போனில்GSM Featuresயை இயக்க அல்லது நிறுத்த.
7)*#9998*246# -தங்கள் போனின் மெமரி திறன் மற்றும் பேட்டரியின் திறனை அறிய.
8)*#7465625# -தங்கள் போனின் கடவுசொல் நிலைமை அறிய.
9)*#0001# -தங்கள் போனின் சீரியல் எண்ணை காண.
10)*#2767*637# -தங்கள் மொபைல் போனை அன்லாக் செய்ய.
11)*#8999*636# -தங்கள் போனின் சேமிப்பு கொள்ளலவு நிலைமையை காண.
12)*#8999*778# -தங்கள் சிம் கார்ட் பற்றிய தகவல்களை அறிய.
13)#*#8377466# -தங்கள்போனின் ஹாட்வேரின் தன்மை மற்றும்Versionயை அறிய.
14)#*3888# -சாம்சங் போன்களின்Bluetoothயின்தகவல்களைஅறிய.
15)#*5376# - ஒரே கட்டளையில் தங்கள் போனின் அனைத்து மெசேஜ்யும் ஒரே கட்டளையில் நீக்க அல்லது அழிக்க.
16)#*2472# -தங்கள் போனின் சார்ஜிங் நிலைமை அறிய.
ஒரு சில கோடுகள் சில போன்களில் இயங்காது.

இந்திய விஞ்ஞானி புதிய சாதனை - வினாடிக்கு 1 ட்ரில்லியன் ஷாட் எடுக்க கூடிய கேமரா கண்டுபிடிப்பு:

Ultra Slow motion கேமராவை பற்றி அனைவரும் அறிந்திருப்போம். இந்த வகை கேமராக்கள் தான் கிரிக்கெட் ரன் அவுட் Reply யை காட்ட பயன் படுத்தப்படுகிறது. இந்த வகை கேமராக்கள் ஒரு வினாடிக்கு 1000 ஷாட் வரை எடுக்க கூடிய கேமராக்கள் ஆகும். மற்றும் வினாடிக்கு 1 மில்லியன் ஷாட் எடுக்க கூடிய கேமேராக்கள் தான் இதுவரை அதிகபட்சமாக இருந்து வந்தது. இந்த கேமரா மூலம் ஒரு துப்பாக்கியில் இருந்து வெளிவரும் குண்டு செல்வதை கூட எளிதாக படம் பிடிக்க முடியும்.
ஆனால் இதையெல்லாம் மீறி யாருமே யூகிக்க கூட முடியாத அளவுக்கு வினாடிக்கு 1ட்ரில்லியன் Frames எடுக்க கூடிய புதிய கேமராவை இந்திய MIT விஞ்ஞானி கண்டுபிடித்துள்ளார். இந்த புதிய கேமராவினால் ஒரு லிட்டர் பாட்டிலில் ஒளி(light) செல்லும் வேகத்தை கூட எளிதாக படம் பிடிக்க முடியும். அதாவது ஒளி எவ்வளவு வேகத்தில் செல்கிறது என்பதை slowmotion ஆக காட்ட முடியும்.
இந்த கேமராவை MIT விஞ்ஞானி Mr. Ramesh Raskar's கண்டு பிடித்துள்ளார். சமீபத்தில் The Eye Netra என்ற விலை குறைந்த கருவியை உருவாக்கினார். இந்த கருவியின் மூலம் ஸ்மார்ட் போன்களை பயன்படுத்தி உங்களின் கண்களை பரிசோதனை செய்து கொள்ள முடியும்.thanks* V Nadarajan Vnrcud *

Motivation

A pessimist sees the difficulty in every opportunity; an optimist sees the opportunity in every difficulty.
~Winston Churchill

Baba Blesses a Rebirth

This is not a story or fiction. Every Sai devotee experiences such strange incidents, one way or the other, either mentally, morally or physically in their day to day walks of life. I am no exception and I came across one such incident that happened in our family.

On 27th June, 2002 my cousin, Sri Haran's marriage with Sow. Sumathi took place at Kosapel, Vellore, Tamilnadu. Both of them went to Kodaikanal for honeymoon. It is a place of tourist interest with greener and scenic beauty. While they were enjoying the natural beauty a co-tourist, requested Mrs. Sumathi to click a snap for them and she agreed. Mr. Haran was also watching the proceedings. Sumathi did not notice the slippery land. While moving front and back in order to compose the picture, she positioned herself on the floor to take the snap which was 60 ft. high from the ground level. Within a few seconds the slippery ground where she was standing started sinking gradually and half of her body started immersing inside the wet land. She lost her balance and immediately shouted "HARAN PLEASE SAVE ME” repeatedly. On hearing the cry Haran without any second took the name of Sai Baba and prayed for Sumathi's survival and jumped near the same spot where her body was sinking gradually. Except her hair nothing was visible. He caught hold of her hair and protected further drowning of the body.Picture Courtesy: Anitha Nagaralu
At the moment a strange person who was watching the entire proceedings, whom I strongly feel none other than Baba rushed to the nearby telephone booth, requisitioned for the Fire Brigade, equipments such as rope etc and also the people who were nearby were asked by the same person to assist the victims in all possible manner. After a big struggle both the victims were taken out.
Due to head injury Sumathi was unconscious. She was given immediate first aid by Mr. Haran, by gently beating both sides of her cheeks and sprinkling water etc. Haran was keeping Baba's Vibhooti always in his pocket and at that time he applied the same on forehead and a spoon full of water diluted with vibhooti was also given orally. She regained her senses and was admitted into a local hospital and later on shifted to Vellore Hospital for further treatment.
Sumathi and Haran both had operations in the hospital. Mr. Haran's left hand got fractured. Sumathi had operation on the head due to severe injury. She had breathing trouble also due to severe shock.
Both of them got recouped after hospitalization, due lo Baba's love and mercy.
(Sai Padananda January 2003)

Sunday, April 20, 2014

அரக்கன் புரக்கிரேட்டஸ்

கிரேக்க புராணத்தில் வரும் அரக்கன் புரக்கிரேட்டஸ் , விருந்தினரை அற்புதமான முறையில் உபசரிப்பான். இரவு விருந்தினரை ஒரு ஸ்பெஷல் கட்டிலில் படுக்கவைப்பான். விருந்தினர் கட்டிலை விட நீளம் அதிகமிருந்தால் , கால் அல்லது தலையை வெட்டி கட்டிலின் நீளத்திற்கு மாற்றுவான்., கட்டிலைவிட நீளம் குறைவாக இருந்தால் அவரை இழுத்து நீட்டி கட்டிலின் நீளத்திற்கு சம்மாக்குவான்.
நமக்குள்ளும் புரக்கிரேட்டஸ் ஒழிந்துகொண்டிருக்கிறன்.
அரசியலில் மாற்றுக்கருத்து கூறுபவர்களை , தூற்றுவது, நார்நாராக கிழித்து , ஆபாசமாக பேசுவது வியப்பாக உள்ளது.( தமிழில் பாலியல் கலைக்களஞ்சியம் தயார் செய்துவிடலாம் .)
பல்வேறு முகங்கள் கொண்டதுதான் ஜனநாயகம்,. நாம் இன்னும் ஜனநாயகத்தின் பொருளை உணரவில்லை என தோன்றுகிறது .
உண்மையில் , ஏராளமான கோணங்கள் , வேறுபட்ட பார்வைகள் மூலம் அரசியலின் நல்ல, /கோரமான ,/ சந்தர்ப்பவாத முகங்களை பார்க்க முடிகிறது.கற்றுக்கொள்ள முடிகறது.
ஆரோக்கியமான விவாதம் அரசியலையும் செழுமைப்படுத்தும், தமிழ் மொழியும் வளரும் . thanks DrKamaraj Kamaraj

Saturday, April 19, 2014

தமிழில் கையொப்பம்

இன்று என் அலுவலக நண்பர் ஒருவர் (தமிழர்தான்) இட்ட கையெழுத்தை கவனித்து வியந்து போனேன்.. தமிழில் இட்டிருந்தார்.. அவரோட பேசப்பேச ஆச்சரியங்களும், என் மேல் கோபமும் வந்துது.. > சீனர்களின் கையெழுத்து பெரும்பாலும் சீன மொழியில்தான் உள்ளது.. பெரும்பாலும் உலகின் அநேக மக்களின் கையெழுத்தும் அவரவர் தாய்மொழியிலேயே > கைரேகை வைப்பது கூட கையெழுத்தாக ஒப்புக்கொள்கிறார்கள் (அதாவது, அதை விட சிறந்த சாட்சி இல்லை என்ற போதிலும், எழுத்தறிவில்லாத காரணத்தால்). நம் தாய்மொழிக்கென்ன குறை? > அரசாங்கக் கோப்புகளில் தொடங்கி, அவர் படித்த சான்றிதழ், கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்) வரை அனைத்திலும் அவர் கையொப்பம் தமிழில் தான் இருக்கிறது... ### என் கையெழுத்தையும் தமிழில் மாற்றிக்கொள்ளப்போகிறேன்.. (ஏகப்பட்ட கோப்புகளை மாற்ற வேண்டும், கடவுச்சீட்டு முதல் எத்தனையோ, இருப்பினும் தமிழுக்காக) தமிழன் என்று சொல்லிக்கொண்டு ஆங்கிலத்தில் கையெழுத்திடுவதில் எனக்கே சற்று அவமானமாய் இருக்கிறது.. தமிழர் என்று சொல்லுவோம்.. தமிழராய் வாழ்வோம்.. நம் அடையாளம் அதுவே..
 

U.S. Route 50 - Known as America's most lonely road

U.S. Route 50 - Known as America's most lonely road

Cleopatra 1945 - Caesar and Cleopatra Full Movie

BENEFITS OF FERMENTED FOODS

Inside A Fully Automated Car Factory


Friday, April 18, 2014

இன்னும் கன்னியாக....

பாடும்மீன் சு.ஸ்ரீகந்தராசா













சிங்கப்பூர் விமான நிலையத்தில் மாற்று விமானத்திற்குக் காத்திருக்கும் பயணிகள் தரிப்பிடத்தில் அமர்ந்திருக்கிறாள் மாலதி. மெல்பேணிலிருந்து பயணித்துக்கொண்டிருக்கும் அவளுக்கு சிங்கப்பூரில் மூன்று மணிநேரத் தரிப்பு. கடிகாரத்தில் நேரத்தைப் பார்க்கிறாள். கொழும்புக்கான விமானம் புறப்பட இன்னும் இரண்டு மணி நேரம் இருக்கிறது. விமானத்தினுள் பயணிகளை அனுமதிப்பதற்கு இன்னும் குறைந்தது ஒன்றரை மணி நேரம் ஆகும். அதுவரையில் சாய்வுக் கதிரையில் கொஞ்சம் கண்ணயரலாம் என்றால் எண்ண அலைகள் எம்பிக் குதித்து அவளின் இதயத்தில் மோதிக்கொண்டிருந்தன. தன் வாழ்வில் ஏற்பட்டுவிட்ட சோகத்துடன் தொடர்பான நிகழ்ச்சிகள் மாறாத காயங்களாக மனதில் எரிந்துகொண்டிருந்தன.

பதினான்கு மாதங்களுக்கு முன்னர் இதே சிங்கப்பூர் விமான நிலையத்தில் இதே இடத்தில்தான் அவுஸ்திரேலியாவுக்குச் செல்வதற்காக அவள் தரித்திருந்தாள். ஆனால் அன்று, கொள்ளை ஆசைகளோடும், குதூகலிக்கும் உள்ளத்தோடும், இல்லறவாழ்வில் நுழையப்போகும் இன்பக் கனவுகளோடும் காத்திருந்தாள். பூரித்த நினைவுகளும், புதுமையான உணர்வுகளும் அன்றைய பயணத்தில் அவளோடு துணையாக வந்தன.

*************
மாலதி மிகவும் அழகானவள். பார்த்தவர்களை மீண்டும் ஒருமுறை பார்க்கத்தூண்டும் கவர்ச்சிகரமான முகம். சிவந்த நிறம். ஒல்லியென்று சொல்ல முடியாத மெல்லிய உடல். அளவான உயரம். பெற்றோருக்கு ஒரேயொரு பிள்ளை. தந்தை கருணாகரன் இளைப்பாறிய சுங்க அதிகாரி. தாய் ஜானகி ஆசிரியை. இன்னும் இரண்டுவருடங்களில் சேவையிலிருந்து இளைப்பாறக் காத்திருக்கிறார். இருவரும் சேர்த்து வைத்திருக்கும் சொத்துக்கள் எத்தனையோ தலைமுறைகளை இருத்தி வைத்துப் பராமரிக்கப் போதுமானவை. வெள்ளவத்தையில் விசாலமான காணியுடன் ஒருவீடு, அதற்கு சற்றுத் தூரத்தில் மூன்றுபடுக்கை அறைகளுடன் ஓர் உயர்தரத் தொடர்மாடி மனை. யாழ்ப்பாணத்தில் வங்கியொன்றிடமிருந்து இன்னமும் கொழுத்த வாடகையை வசூலித்துக் கொண்டிருக்கும் மாடிவீடு இப்படி அசையாச் சொத்துக்கள் ஒருபுறமிருக்க தங்கநகைகளாகவும், பங்கு முதலீடுகளாகவும், வங்கி வைப்புக்களாகவும் ஏராளமான சொத்துக்கள். எல்லாமே மாலதிக்குத்தான்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பு முடிந்ததும் அந்தவருடமே மாலதிக்குப் பட்டதாரி ஆசிரியர் வேலை கிடைத்தது. வேலை பார்க்கவேண்டிய அவசியம் அவளுக்கு இல்லை என்றாலும், படித்த படிப்புக்குக் கிடைத்த வேலைக்குக் கொஞ்சநாள் போய்வரட்டுமே என்பது பெற்றோரின் கருத்து. திருமணத்திற்குப்பிறகு அவளுக்கு வேலை தேவையில்லை என்பது அவர்களது எண்ணம். மாலதிக்கும் அதில் உடன்பாடுதான்.

உள்ளுரில் பல நல்ல இடங்கள் தானாகத் தேடியே வந்தன. ஒரேயொரு பிள்ளை. உள்ளதெல்லாம் அவளுக்குத்தான். எனவே, தெறித்துப்பார்த்து மாப்பிள்ளையைத் தெரிவு செய்வதில் மாலதியின் பெற்றோர் மிகவும் கவனம் எடுத்துக்கொண்டார்கள். மாலதிக்கு இதுவரை யாரிலும் காதல் ஏற்பட்டதில்லை என்பதும், பெற்றோர் பார்க்கும் மாப்பிள்ளையையை விருப்போடு ஏற்றுக்கொள்ளும் தெளிவான மனநிலையில் அவள் இருப்பதும் மாலதியின் பெற்றோருக்கு மாப்பிள்ளையைத் தெரிவு செய்வதில் ஒருவித பூரண சுதந்திரத்தைக் கொடுத்திருந்தன. ஆயினும் தாம் தெரிவுசெய்யும் மாப்பிள்ளையை மாலதிக்குப் பிடித்திருந்தால் மட்டுமே மேற்கொண்டு ஆகவேண்டியவைகளைக் கவனிப்பது என்பதில் இருவருமே மிகவும் தீர்மானமாக இருந்தார்கள். மாலதிக்கு மகிழ்ச்சியான எதிர்காலத்தை அமைத்துக் கொடுக்க வேண்டுமே என்று அவர்கள் இருவரும் சற்று அதிகமாகவே சிரத்தை எடுத்துக் கொண்டார்கள்.
அந்தநேரத்தில்தான் மாலதியின் குடும்ப நண்பர் கோவிந்தராஜன் அவுஸ்திரேலிய மாப்பிள்ளை ஒருவரின் விபரங்களுடன் வந்தார். பெயர் துஷியந்தன். பொறியியலாளர். நல்ல குடும்பத்தைச் சேர்ந்தவர். பெற்றோருடன் அவுஸ்திரேலியாவில் வாழ்கிறார். ஒரேயொரு அக்கா. அவவும் திருமணமாகிக் குடும்பத்துடன் அவுஸ்திரேலியாவில்தான். நல்ல இடம் என்று சொன்னார். துஷியந்தன் அங்கே சொந்தமாக வீடும் வாங்கியிருக்கிறாராம். பெற்றோர் தங்களுக்கு ஒரு மருமகளையல்ல மகளையே தேடுவதுபோலத் தேடுகிறார்களாம். மாலதியின் அழகுக்கும் அறிவுக்கும் நல்ல குணத்துக்கும் ஏற்ற இடம் என்றெல்லாம் சொன்னார் கோவிந்தராஜன். துஷியந்தனின் படத்தையும் கொடுத்தார். அழகான மாப்பிள்ளைதான். ஜானகி அம்மாவுக்கு மாப்பிள்ளையின் அழகு பிடித்துவிட்டது. கருணாகரன் இரண்டொருநாளில் பதில் சொல்வதாகக்கூறி கோவிந்தராஜனை அனுப்பிவைத்தார்.

அந்த நிமிடத்திலிருந்து ஒவ்வொரு கணமும் கருணாகரனுக்கும், ஜானகி அம்மாவுக்கும் இதே சிந்தனைதான். பல்வேறு விடயங்களைச் கவனத்திற்கு எடுத்துப் பரிசீலித்தார்கள். நாட்டுப்பிரச்சினை முடிவெடுப்பதை விரைவு படுத்தியது. எவ்வளவு சொத்து இருந்தாலும் உயிருக்கு உத்தரவாதம் இல்லாத நிலை. ஒவ்வொருநாளும் என்ன நடக்குமோ என்று எதிர்பார்க்க முடியாத வாழ்க்கை. நாடு முழுவதுமே இப்படியே என்றால் நாளைக்கு இந்தப் பதற்றமான சூழலில்தானே மாலதி குடும்பம் நடத்த வேண்டும்? மாலதி அவுஸ்திரேலியாவுக்குப் போய்விட்டால் பிறகு ஒன்றிரண்டு வருடங்களில் எல்லாச் சொத்துக்களையும் விற்றுவிட்டுத் தாங்களும் அங்கே போய்விடலாம். மாலதி ஒரே பிள்ளை என்பதால் தங்களுக்கு அந்த வாய்ப்பு நிச்சயம் கிடைக்கும். சுங்க இலாகாவில் வேலை செய்தவர் என்பதாலா அல்லது இந்தச் சம்பந்தம் வந்தபின்னர் விசாரித்து அறிந்து கொண்டதாலா என்று தெரியவில்லை கருணாகரன் தனக்குத் தெரிந்த அவுஸ்திரேலிய குடியேற்ற விபரங்கள் எல்லாவற்றையும் மனைவியிடம் கூறினார்.

'பிறகென்ன? யோசிக்கிறியள்? பிள்ளையோட அங்க நாங்களும் போய் இருக்கலாம் எண்டால் இந்தச் சனியன் பிடிச்ச நாட்டில கிடந்து ஏன் சீரழிய வேணும்' என்று வெளிப்படையாகவே தன் முடிவைச் சொன்னா ஜானகி அம்மா. கருணாகரனும் தலையசைத்தார். மாலதிக்கும் புகைப்படத்தில் பார்த்த மாப்பிள்ளையின் முகம் மனதில் பதிந்துவிட்டது. விடயங்கள் வேகமாக நகர்த்தப்பட்டன. ஏற்பாடுகள் துரிதமாகச் செய்யப்பட்டன.

அன்றிலிருந்து ஒரு வருடத்திற்குள் மாலதிக்கும் துஷியந்தனுக்கும் அவுஸ்திரேலியாவில் திருமணம் நடைபெற்றது. முருகன் கோயிலில் திருமணமும் அதனைத்தொடர்ந்து ஒரு பெரிய மண்டபத்தில் வரவேற்பு விழாவும் நடைபெற்றன. தேன்நிலவை ஐந்து நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் தனது செலவில் வைப்பதற்கு கருணாகரன் எவ்வளவோ முயன்றும் மாப்பிள்ளையின் பெற்றோர் சம்மதிக்கவில்லை. இராசியான வீடு, அது இது என்றென்னவோ எல்லாம் சொல்லி வீட்டிலேயே தேன்நிலவுக்கு ஒழுங்கு செய்தார்கள். திருமணத்திற்காக மூன்று மாத விசாவில் சென்றிருந்த கருணாகரனும், ஜானகி அம்மாவும் திருமணம் முடிந்தபின்னர் ஒருமாதகாலம் அவுஸ்திரேலியாவெல்லாம் சுற்றிப்பார்த்துவிட்டுத் திரும்பினார்கள்.

தேன்நிலவு மாலதிக்கு இனிக்கவில்லை. தேன்நிலவே இல்லாத போது எப்படி இனிக்கும்? எல்லாப் பெண்களையும் போலத்தான் மாலதியும் அந்தப் புது உறவின் எதிர்பார்ப்பில், வெட்கம் கலந்த மகிழ்வில் உள்ளம் திளைக்க, உடல் சிலிர்க்க அலங்கரிக்கப்பட்ட அந்த அறைக்குள் நுழைந்தாள். துஷியந்தன் கட்டிலில் ஏனோதானோ என்று வீற்றிருந்தான். மாலதி அறைக்குள் நுழையும்போது நிமிர்ந்து அவளைப்பார்த்துவிட்டு எந்தவித சலனமும் இல்லாமல் மீண்டும் குனிந்து கொண்டான். கண்கள் சந்திக்காவிட்டாலும் அவன் முகத்தில் உற்சாகம் இன்மை இருப்பதை மாலதி உணர்ந்தாள். வா என்று ஒரு வார்த்தைகூடப் பேசாவிட்டாலும், ஒரு புன்சிரிப்புக்கூட இல்லாமல் அவன் இருப்பது அவளுக்கு ஒருவித ஏமாற்றத்தைத் தந்தது. இத்தனைக்கும் கடந்த பத்துமாதங்களுக்கு மேலாக வாரம் ஒருதடவையாவது இருவரும் பலதடவைகள் தொலைபேசியில் கதைத்தவர்கள்தான். திருமண நிகழ்ச்சிகளின்போதும்,  வரவேற்பின்போதும் கலகலப்பாகத்தானே இருந்தார். இப்போது ஏன் இப்படி? என்றெல்லாம் மாலதியின் மனம் குழம்பியது.
ஐந்து நிமிடங்களுக்குப் பின்னர் அவன் வாய் திறந்தான்.

'மாலதி! இருங்க. எனக்கு கொஞ்சம் களைப்பாய் இருக்கு. நேற்றிரவு முழுக்க நித்திரையில்லை. நான் கொஞ்சம் படுக்கிறன். நீங்களும் வேணுமெண்டால் படுங்க. உங்களுக்கும் களைப்பாய்த்தான் இருக்கும். இந்த சாறியளையும் கட்டிக்கொண்டு, காலையில இருந்து ஒரே டென்சனாய் இருந்திருப்பியள்...'
அவன் முடிக்கவில்லை, அவள் தொடங்கினாள், ' அப்பிடியொண்டுமில்ல. நீங்கதான் களைச்சிருக்கிறீங்க. நீங்க றெஸ்ற் எடுங்க. நான் இருக்கிறன்..'

கட்டிலின் ஓர் ஓரத்தில் அவன் சரிந்து படுத்துக்கொண்டான். எவ்வளவு நேரம் மாலதி கட்டிலில் அமர்ந்திருந்தாளோ அவளுக்குத் தெரியாது. துக்கம் தொண்டையில் நெருட, தூக்கம் கண்களை வருட அப்படியே கட்டிலின் மறு ஓரத்தில் படுத்தாள். இடையே ஒருமுறை தூக்கம் கலைந்து மாலதி விழித்தபோது அறை இருளாயிருந்தது. துஷியந்தன் விளக்கை அணைத்திருக்கவேண்டும் என்று ஊகித்துக்கொண்டு அவன் படுத்த பக்கம் திரும்பிப் பார்த்தாள். அவன் நன்றாகத் தூங்கிக் கொண்டிருப்பதைக் குறட்டைச்சத்தம் கூறிக்கொண்டிருந்தது. அவள் மீண்டும் கண்களை மூடிக்கொண்டு மறுபக்கம் ஒருக்களித்துப் படுத்துக்கொண்டாள். மறுநாள் காலை கதவு தட்டப்பட்டது. மாலதியின் மாமியார் இரண்டு தேனீர்க் கோப்பைகளுடன் அறைக்குள் நுழைந்தாள். இவ்வளவுதான் மாலதியின் முதல் இரவு.

நாட்கள் நகர்ந்தன. பகலெல்லாம் பலர் முன்னிலையில் மட்டுமன்றித் தனித்திருக்கும் போதும் கூட துஷியந்தன் மாலதியுடன் கலகலப்பாகவே இருந்தான். இரவானதும் அவளிடம் இருந்து ஒதுங்கினான். ஏதோ ஒரு காரணத்தைச் சொல்லி விலகியேயிருந்தான். ஒரே கட்டிலில் படுத்திருந்தாலும் சிறிது நேரத்தில் எழுந்து தன் படிப்பறையினுள் சென்று கொம்பியூட்டரில் கலந்துவிடுவான். சிலநாட்களில் அங்கேயே மேசையில் தலைசாய்த்துத் தூங்கியும் விடுவான். மாலதிக்கு இனம்புரியாது இழையோடிய துன்பம் நாளாக நாளாக இரணமாகி அணுவணுவாகச் சித்திரவதை செய்யத் தொடங்கியது. திருமணம் முடிந்து ஒருமாதத்தில் பெற்றோர் இலங்கைக்குத் திரும்பியதும் அவளின் வேதனை விம்மி வெடித்தது. உடல் இச்சைக்காக அவள் அலையவில்லை. ஆனால் உள்ளத்து உணர்வுகளுக்குத் தடைபோட அவளால் முடியவில்லை. வாழ்க்கை நியதிகளுக்கு மாறான தனது கணவனின் நடத்தையில் உள்ள புதிரை அவளால் புரிந்துகொள்ள முடியவில்லை.
அதேவேளை, இதுவரை ஒருதடவைகூட அவர்கள் உடலுறவு வைத்துக்கொள்ளாததால், அதனால் உண்டாகக்கூடிய அன்னியோன்னியம், உரிமை நெருக்கம் எதுவுமே அவர்களுக்குள் ஏற்படவில்லை. சட்டப்படி கணவன் மனைவியாக இருந்தாலும், இன்னும் அவர்களின் உள்ளங்களுக்கும், உடல்களுக்கும் இடையே இருந்த இடைவெளி, நேரடியாக அவனிடம் இதுபற்றிக் கேட்பதற்கான துணிவை எழவிடாமல் அவளைத் தடுத்தது.

இந்த நிலையில்தான், ஒருநாள் துஷியந்தனின் அக்கா கௌரி, தாயிடம் கதைத்த வார்த்தைகள் மாலதிக்கு அந்தத் துணிவைக் கொடுத்தன. கௌரி அடிக்கடி வெளியில் எங்காவது அலுவல்களுக்கோ அல்லது கணவனுடன் நிகழ்ச்சிகளுக்கோ செல்லும்போது அவர்களின் ஐந்து வயதுப்பிள்ளை லக்சியை துஷியந்தனின் வீட்டில் கொண்டுவந்து விட்டுவிட்டுப் போவது வழக்கம். அன்றும் அப்படித்தான், ஒரு மாலைப்பொழுதில் லக் சியை விட வந்தவளிடம், துஷியந்தனின் தாய், தாங்களும் வெளியில் போக இருப்பதாகக் கூறினாள்.

'பிள்ளை! நாங்களும் கலைவிழாவுக்குப் போக இருக்கிறம். லக்சியை என்னெண்டு இங்க விடுறது? அவளையும் எங்களோடை கூட்டிக்கொண்டு போகட்டே..'

'மாலதியும் வருகுதோ அம்மா?'

'இல்லை பிள்ளை. துஷியும் மாலதியும் வரேல்லை. ஆனால் அவையளோடை என்னெண்டு லக்சியை விடுறது..?'
'ஏனம்மா? அவையளோடை விடுறத்துக்கு என்ன? உங்களோடை லக்சியைக் கூட்டிக்கொண்டு போனால் நீங்கள் விழா பாக்க ஏலாது. அவள் குளப்படி பண்ணுவாள். இரவுக்கு லக்சி இங்கேயே நிக்கட்டும். நாங்க லேற்றாத் தான் வருவம். அந்தநேரம் லக்சியை எடுக்க வரமாட்டம் அவளின்ர நித்திரை குழம்பிப்போகும். நான் நாளைக்கு வந்துகூட்டிப் போவன். அவள் இங்க மாலதியோட படுக்கலாம்தானே! மாலதி என்ன குடும்பம் நடத்தி பிள்ளையா பெறப்போறாள்?.. லக்சியையை எண்டாலும் கொஞ்சட்டுமன்,'

இதைக்கேட்டுக்கொண்டிருந்த மாலதிக்கு நெஞ்சில் இடி விழுந்தது போல இருந்தது.
'மாலதி என்ன குடும்பம் நடத்தி பிள்ளையா பெறப்போறாள்?..' என்ற வார்த்தைகளுக்கு என்ன அர்த்தம்? 'தன்னால் பிள்ளை பெறுவதற்கு முடியாதா? தன்னால் குடும்பம் நடத்த முடியாதா? தான் குடும்பம் நடத்த தகுதியற்றவளா? அப்படியென்றால்... அப்படியென்றால்... இந்த வார்த்தைகளுக்கும் தன்கணவன் தன்னிலிருந்து விலகி நடப்பதற்கும் ஏதாவது சம்பந்தம் இருக்குமா? இருக்கும். இருக்க வேண்டும். இவர்கள் எல்லோருக்கும் இடையில் தனக்குத் தெரியாத பயங்கர இரகசியம் ஏதோ ஒன்று இருக்க வேண்டும்.' மாலதிக்குத் தலை சுற்றியது. வயிற்றில் அமிலம் நிறைந்து எரிவது போல இருந்தது. நெஞ்சில் தாங்கமுடியாத சுமை ஏறிக்கனத்தது.

நேராக துஷியந்தனின் அறைக்குச் சென்றாள். திருமணமான நாள்முதல் நெஞ்சில் புகைந்துகொண்டிருந்த எரிமலை வெடித்தது. எதையும் சுற்றி வளைக்காமல் நேரடியாகவே துஷியந்தனிடம் கேட்க நினைத்தாள்.

' நான் உங்களோட கொஞ்சம் கதைக்க வேணும்'

'வாங்க, மாலதி. என்ன கதைக்கோணும். கதைக்கலாம்.'

'உங்கட அம்மாவும், அக்காவும் நான் பிள்ளை பெறமாட்டன் அது இது எண்டு என்னென்னவோ எல்லாம் கதைக்கிறாங்க...ஏன் அப்பிடி?'

'ஒட்டுக்கேட்டீங்களா?'

'ஒரே வீட்டில இருந்துகொண்டு ஒட்டுக் கேட்கவேண்டியதில்லை. அவங்க கதைச்சது எனக்குக் கேட்டது,'

'என்ன கதைச்சவங்கள்..?'

'நான் குடும்பம் நடத்தமாட்டனாம்...லக் ஷியைத்தான் கொஞ்சிக்கொள்ள வேணுமாம்...என்ன கதை இது?'

'ஓ...இவ்வளவுதானா...அக்கா லக் ஷியை விட்டுட்டுப் போக வந்திருப்பா. அதனால அவ என்னவோ சொல்லியிருப்பா.. அத நீங்க பிழையாக விளங்கிக் கொண்டீங்க....'

'எனக்கொண்டும் பைத்தியமில்ல. அவங்கட கதையும் சரியில்ல...உங்கட நடத்தையும் சரியில்ல...'

'என்ர நடத்தையில... என்ன சரியில்ல...?'

மாலதிக்குக் கோபம் தலைக்கேறியது. அவனை உற்றுப் பார்த்தாள். அவளது கண்களில் அனல் தெறித்தது. உடல் நடுங்கியது. அவனது கேள்விக்குப் பதிலாக, ஆயிரமாயிரம் கேள்விகளை அவன்மீது அள்ளி வீசுவதற்கு அவளின் உதடுகள் துடித்தன.

ஆனால், கோபத்தையும் மீறி குமுறிவந்த அழுகை பேச முடியாமல் தடுத்தது. அங்கிருந்து ஓடிச்சென்று தன் அறைக்குள் கட்டிலில் குப்புற விழுந்து விம்மி வெடித்தாள்.

அன்று இரவு முழுவதும் அவளுக்குத் தூக்கம் வரவில்லை. கண்ணீரால் தலையணை முற்றாக நனைந்தது. எதை நினைத்தாலும் கண்ணீர் பெருகியது. தொண்டைப்பகுதி இறுகிக் கனத்து நோவெடுத்தது. விடியவிடிய அவளது சிந்தனை சுழன்றது. எந்தத் திசையும் தெரியாத பாலைவனத்தின் மத்தியிலே தன்னந்தனியே விடப்பட்டது போன்றதொரு வெறுமை உணர்வில் இனம் புரியாத பயம் இதயத்தைக் கவ்வியது. அன்றுவரை பூரணமான ஒரு கணவனாகத் தன்னுடன் நடந்துகொள்ளாத துஷியந்தன் மேல் அதுவரை எழாத ஒரு சந்தேகம் அவளுக்கு மெல்லத் தலைதூக்கியது. அப்படியொரு சந்தேகம் எழுந்த கணத்திலிருந்து அவளது சிந்தனை முழுவதும் அதனைச்சுற்றிச் சுற்றியே வந்துகொண்டிருந்தது.

மறுநாள் துஷியந்தன் வேலைக்குச் சென்றதும் அவனது படிப்பறையினுள் சென்று அங்கிருந்த எல்லாப் பொருட்களையும் ஆராய்ந்தாள். இந்த ஒரு நேரத்திற்காக விடியும்வரை கண்விழித்து அவன் செல்லும்வரை காத்திருந்ததால் ஏற்பட்ட மன அழுத்தத்தால் அந்த அறையை துருவிவத்துருவி அசுரத்தனத்தோடு துளாவினாள். அங்கே இருந்த பொருட்கள் அவளுக்கு ஆச்சரியத்தையும், பயத்தையும் கொடுத்தன. எத்தனையோ விதம்விதமான மருந்துக்குளிசைகள், மருத்துவஅறிக்கைகள். சிலவற்றை வாசித்துப்பார்த்தாள். அவளுக்கு எதுவுமே விளங்கவில்லை. தொடர்ந்து தினமும் மருந்தெடுக்கவேண்டிய ஏதோ ஒரு நோய் துஷியந்தனுக்கு இருக்கிறது என்று மட்டும் அவளால் புரிந்து கொள்ள முடிந்தது. அது புரிய வந்தபோது அவளின் இதயமே வெடிப்பது போல இருந்தது. ஓவென்று அழவேண்டும்போல இருந்தது. ஆனால் அழுகை வர மறுத்தது. கண்கள் மட்டும் நீரை வடித்தன. நெஞ்சு கனத்தது. சித்தசுவாதீனமற்ற ஒருவரைப்போல அந்த மருந்துகளை வெறித்துப் பார்த்தபடியே இருந்தாள். சில நிமிடங்களில் திடீரென்று எதையோ நினைத்துக் கொண்டவளைப் போல எழுந்தாள். அந்த அறிக்கைகளிலே சிலவற்றை அங்கிருந்த தொலைநகலி மூலம் பிரதி எடுத்தாள். கண்ணில் பட்ட மருந்துகளின் பெயர்களையெல்லாம் ஒரு தாளில் எழுதினாள். தனது அறைக்குள் சென்று கட்டிலில் வீழ்ந்தாள். அன்றே தனது பள்ளித்தோழி இராதாவுக்கு கடிதம் ஒன்றை எழுதி எல்லாவற்றையும் அனுப்பிவிட்டாள்.

மாலதியோடு க.பொ.த. உயர்தர வகுப்பவரை ஒன்றாகப்படித்த இராதா இப்பொழுது ஒரு மருத்துவராக கொழும்பு தனியார் வைத்தியசாலையொன்றில் கடமையாற்றுகிறாள். மாலதியும் இராதாவும் பள்ளித்தோழிகள் மட்டுமல்ல குடும்ப நண்பர்களும்கூட.

அதனால் இதுபற்றி இராதா மாலதியின் பெற்றோரிடம் சிலவேளை ஏதாவது சொல்லிவிடக்கூடும் என்றெண்ணிய மாலதி அவ்வாறு செய்துவிடவேண்டாம் என்று இராதாவிடம் மன்றாடிக்கேட்டு எழுதினாள்.

ஒருவாரத்தில் இராதா மாலதியைத் தொலைபேசியில் அழைத்தாள். அழுதுகொண்டே அவள்கூறிய விடயம் மாலதிலின் தலையில் இடிபோல் விழுந்தது. மாலதியின் கணவன் குடும்பவாழ்க்கையில் ஈடுபடமுடியாத நோயால் பீடிக்கப்பட்டிருப்பதை அவளிடமே சொல்லும்போது என்னதான் டாக்டராக இருந்தாலும் இராதாவால் எப்படி அழாமல் இருக்கமுடியும்? மாலதிக்குத் தன் வாழ்க்கையில் இருந்த கொஞ்சநஞ்ச நம்பிக்கையும்
தகர்ந்து விட்டது.

'துஷியந்தனால் குடும்ப வாழ்வில் ஈடுபட முடியாது, அவனைப் பீடித்திருக்கும் நோயை முற்றாகக் குணப்படுத்தவும் முடியாது, பொரும்பாலும் தவறான சிற்றின்பத் தொடர்புகளினால்தான் இந்த நோய் ஒருவருக்குத் தொற்றிக்கொள்ளும்' என்கின்ற விபரங்களையெல்லாம் இராதாவிடமிருந்து அறிந்தபோது மாலதியின் இதயம் நொறுக்கியேவிட்டது. அப்போதே அவளின் உடலில் இருந்த இரத்தமெல்லாம் உறைந்துவிட்டது போல இருந்தது அவளுக்கு.
அன்றிலிருந்து அவள் நடைப்பிணமானாள். தான் ஏமாற்றப்பட்டுவிட்டதை அவளால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. தன்னைமட்டுமன்றித் தன் பெற்றோரையும் துஷியந்தனும் அவனின் குடும்பத்தினரும் திட்டமிட்டு ஏமாற்றிவிட்டார்களே என்பது அவளது உள்ளத்தை ரணகளமாக்கியது.

அவளால் உண்ண முடியவில்லை. உறங்க முடியவில்லை. எவருடனும் பேசப் பிடிக்கவில்லை. யார் முகத்தையும் பார்க்கப் பிடிக்கவில்லை. தன்னைச் சுற்றி இருப்பவர்கள் எல்லோரும் சதிகாரர்கள், மோசக்காரர்கள் என்ற எண்ணம் அவளைப் பயமூட்டி வாட்டி வதைத்தது. எடுத்ததற்கெல்லாம் துஷியந்தன் மீது எரிந்து விழுந்தாள். அவளது மாற்றத்தைக்கண்டு கலவரமடைந்த துஷியந்தனின் தாயும், கௌரியும் அவளிடம் வந்து என்ன ஏது என்று அறிவதற்காகப் பேச்சுக் கொடுத்தார்கள். அப்போது மாலதி அவர்களைப் பார்த்த பார்வையில் அவர்கள் கருகிப் போனார்கள். எதுவுமே பேசாமல், சுட்டெரிக்கும் கண்களால் அவர்களை ஒருநிமிடம் அப்படியே இமை வெட்டாமல் அனல் கக்கப் பார்த்துவிட்டு, விருட்டெனத் தன் அறைக்குள் சென்று படாரெனக் கதவைச் சாத்தினாள். மறுநாள் அவள் தன் தந்தையைப்போல எண்ணி மிகவும் மதித்து நடந்த துஷியந்தனின் அப்பா அவளிடம் ' மகள், மாலதி நான் உங்களோட கொஞ்சம் கதைக்கவேணும் பிள்ளை' என்று சொல்லிக்கொண்டு வந்தார். மாலதி, நிமிர்ந்து ஓர் அருவருப்பான பிராணியைப்பார்ப்பது போல அவரைப்பார்த்து, ' சீ நீயும் ஒரு மனுஷனா..தூ' என்றாள். அதைப் பார்த்துவிட்ட துஷியந்தன் பாய்ந்தோடி வந்து, 'ஏய்! என்னடி செய்த நீ?' என்று கேட்டுக்கொண்டே அவளை அடிக்கக் கையை ஓங்கினான். ஓங்கிய கையை தடுத்துப் பிடித்த மாலதி, அதனை உதறித் தள்ளிய வேகத்தில் அவன் நிலை குலைந்துபோனான்.

'என்ன அடிக்க வாறீங்களா? பெம்பிளைய அடிச்சால் மட்டும் நீங்க ஆம்பிளையாகிடுவீங்களா?' என்று சொல்லிவிட்டு யாருடைய பதிலுக்கும் காத்திராமல் மின்னலென அவ்விடத்தை விட்டகன்று தன் அறைக்குள் சென்று கதவைப் பூட்டிக்கொண்டாள். தன் கையை அவள் உதறித்தள்ளிய வேகத்தில் ஓர் ஆணுக்கு இருக்கக்கூடிய பலம் இருப்பதை உணர்ந்துகொண்ட துஷியந்தனுக்கு, 'பெம்பிளையை அடிச்சால் மட்டும் நீங்க ஆம்பிளையாகிடுவீங்களோ?' என்ற கேள்வி பழுக்கக் காய்ச்சிய இரும்புக் கணையாக நெஞ்சில் பாய்ந்து, அவனின் உடற்பலத்தையும், மனப்பலத்தையும் ஒரே கணத்தில் உறிஞ்சிக் குடித்தது.

அடுத்தடுத்த நாட்களில் வீட்டுக்கு முன்னால் வாடகைக் கார் வந்து நிற்பதும், மாலதி ஏறிப் போவதும், பின்னர் வாடகைக் காரிலேயே அவள் வந்து இறங்குவதும் எல்லோருக்கும் பதற்றத்தைக் கொடுத்தது. எங்கே போகிறாய் என்று கேட்பதற்கு யாருக்கும் துணிவில்லை. துஷியந்தன் ஒரு தடவை கேட்டான். 'மாலதி..என்ன நீ உன் பாட்டுக்கு எங்கேயோ போறாய்.. வாறாய்.. அதுவும் டாக்ஷியில...?' அவள் சொன்ன பதில் அவனைத் திக்கமுக்காடச் செய்துவிட்டது. ' பயப்பிடாதீங்க.. உங்கட அக்கா நினைக்கிற மாதிரி நான் ஆம்பிளை தேடிப் போகேல்ல.' துஷியந்தன் மௌனமானான்.

அதற்கு முதல் நாள் துஷியந்தனின் அம்மா. அப்பா, அக்கா கௌரி, கொளரியின் கணவர் எல்லோரும் ஒன்றாகக் கூடியிருந்து மாலதியைக் குறை சொல்லி குற்றம்சாட்டி பேசிக்கொண்டிருந்தது துஷியந்தனுக்குத் தெரியும். தாங்கள் செய்த தவறை மறைத்து, மாலதியைப் பற்றிக் கண்டவிதமாகப் பேசினார்கள்.

'இப்ப என்ன நடந்த போச்சுதெண்டு இப்பிடிக் குதிக்கிறாள்.'

'உலகத்தில நடக்காத ஒண்டா? கலியாணம் நடந்த பிறகு ஒரு விபத்தோ. நோயோ வந்து புருஷனுக்கு ஏலாமல் போனால் என்ன செய்யுறது..எத்தினை குடும்பத்தில அப்பிடியெல்லாம் நடந்திருக்குது?'
 
'அவளுக்குத் திமிர்.'

'போயும் போயும் இப்படி ஒருத்திய எங்கயிருந்து அப்பா கண்டு பிடிச்சீங்க?'

இப்படியெல்லாம் மாலதிக்குக் கேட்கக்கூடியதாக அவர்கள் திட்டிக் கொண்டிருப்பதைத் தனது அறைக்குள் இருந்து மாலதி கேட்டுக்கொண்டுதான் இருந்தாள். தன்னை வம்புக்கு இழுத்து அவமானப்படுத்துவதற்காகத் திட்டமிட்டே இப்படி நடக்கிறது என்பதை மாலதி உணர்ந்து கொண்டாள். கோபத்தை அடக்கி மனதுக்குள் குமுறிக்கொண்டிருந்தாள். அப்போது, கௌரிசொன்ன வார்த்தைகள் அவளைக் கொந்தளித்தெழத் தூண்டின. ஆனாலும் மிகவும் க
ஷ்டப்பட்டுத் தன்னை அடக்கிக்கொண்டாள்.

'அவுஸ்திரேலியா வாழ்க்கை கிடைச்சது அதிஷ்டம் எண்டு நினைக்காமல் ஆம்பிளைச் சுகத்துக்கு அலையுறாள்...இவளெல்லாம் ஒரு பொம்பிளையா...? என்று கௌரி கக்கிய வார்த்தைகள் வெகுநேரத்திற்கு மாலதியின் மனதை எரித்துக்கொண்டிருந்தன. 'அஞ்சு வயதுப் பிள்ளையை தன்ர தாயோட விட்டுப்போட்டு ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் இரவிரவா நைற் கிளப்பில கூத்தடிக்கிற கௌரி என்னையா ஆம்பிளைச் சுகத்துக்கு அலைபவள் என்று சொல்கிறாள்' என்று நெஞ்சுக்குள் குமுறிக்கொண்டிருந்தாள். அந்த வார்த்தைகளை அவளால் தாங்க முடியவில்லை. ஆத்திரம், துக்கம் எல்லாம் அழுகையாக வெடித்தது. நீண்டநேரம் அழுது தீர்த்தபின்னர் அவள் நிதானமானாள்.

எல்லோரும் சேர்ந்து தன்வாழ்வைப் பாழாக்கிவிட்டு இப்போது தன்னையே குற்றவாளியாக்கிக் கதைக்கிறார்கள். அவர்களுக்குப் பாடம் படிப்பிப்பதை விடத் தன்வாழ்வை அவர்களிடம் இருந்து மீட்டெடுப்பதுதான் புத்திசாலித்தனமானது என்று தீர்மானித்தாள். அதன் விளைவாகத்தான் அவள் அடிக்கடி வெளியே சென்றாள். யாருக்கும் தெரியாமல் தன் பயண ஒழுங்குகளைச் செய்துகொண்டிருந்தாள். அந்தநேரத்தில்தான் துஷியந்தனின் கேள்விக்கு அப்படியொரு சூடான பதில் அவளிடமிருந்து வெளிப்பட்டது. முதல்நாள் தமக்கை கூறிய வார்த்தைகளைக் கேட்டுக்கொண்டு மௌனமாயிருந்த துஷ்யந்தனின் குற்றமுள்ள நெஞ்சுக்கு மாலதியின் பதிலுக்கும் மௌனமாவதைத் தவிர வேறுவழி இருக்கவில்லை.

*******************************
பக்கத்து இருக்கைகளில் அமர்ந்திருந்த சிலர் எழுந்து பரபரப்போடு தமது உடமைகளைத் தூக்கிக்கொண்டு நடந்தார்கள். அறிவித்தல் பலகையில் மாலதி செல்லும் கொழும்பு விமானம் பயணிகளை ஏற்றுவதாக அறிவிக்கும் குறிப்பு வந்து விழுகின்றது. அவர்களும் அதே விமானத்தில் பயணிப்பவர்களாக இருக்க வேண்டும். மாலதி எழுந்து தனது கைப்பையை எடுத்துக்கொண்டு, சுற்றும்முற்றும் ஒருமுறை பார்த்துவிட்டு, அவளது விமானத்தில் பயணிகள் ஏறுவதற்கு உட்புகவேண்டிய நுழைவாயிலை நோக்கி நடக்கிறாள். அங்கே பாதுகாப்புச் சோதனைகள் முடிவடைந்து விமானத்தினுள் சென்றதும் விமானப் பணிப்பெண் அவளுக்குரிய இருக்கை அமைந்துள்ள பகுதியைச் சுட்டிக்காட்டுகிறாள். மாலதி தன் இருக்கையில் அமர்ந்து, தனது கைப்பையினுள் இருந்து ஒருதாளை எடுத்தாள். அது அவள் துஷியந்தனுக்கு முகவரியிட்டு, மெல்பேண் விமான நிலையத்தில் இருந்த தபால்பெட்டிக்குள் போட்டுவிட்டுவந்த கடிதத்தின் பிரதி. அமைதியாக அதை வாசித்துப்பார்க்கிறாள்.


துஷியந்தனுக்கும் குடும்பத்தாருக்கும் வணக்கம்.
துஷியந்தனுக்கு என்ன நோய் என்று தெரிந்திருந்தும் ஒரு பெண்ணின் வாழ்க்கையைப் பாழடிக்க நினைத்த உங்களையெல்லாம் கடவுள் என்று ஒருவர் இருந்தால் பார்த்துக்கொள்ளட்டும். எனது வாழ்க்கையை நான் தீர்மானித்துக்கொள்வேன். நான் கொழும்பிற்கு எனது பெற்றோரிடம் செல்கிறேன்.
யாருடனோ ஓடிப்போய்விட்டாள் என்று நீங்கள் ஊரெல்லாம் பறையடிப்பீர்கள் என்று எனக்குத் தெரியும். அது உங்கள் பாவச் சுமையை மேலும் கூட்டுமேயன்றி என்னைப் பாதிக்காது.

இறுதியாக துஷியந்தனுக்கு சில வார்த்தைகள். அவுஸ்திரேலியச் சட்டப்படி என்னை விவாகரத்துச் செய்வதற்கான நடவடிக்கைகளை விரைவாக எடுத்து உங்கள் பாவங்களில் சிறுபகுதியையாவது கழுவிக்கொள்ளப் பாருங்கள். நீங்கள் அதைச் செய்தாலும் செய்யாவிட்டாலும் நான் இன்னும் ஒரு திருமணம் செய்யத்தான் போகிறேன். எனக்காக இல்லாவிட்டாலும் வாழ்க்கை முழுவதும் மகிழ்ச்சியாக வாழ்ந்த எனது பெற்றோர் இறுதிக்காலத்திலும் அப்படியே வாழவேண்டும் என்பதற்காக நான் திருமணம் செய்வேன். எவ்வளவோ நல்லவர்கள் உத்தமர்கள் இந்த உலகத்திலே இருக்கிறார்கள். அவர்களில் என் கதை முழுவதையும் கேட்டு என்னைத்திருமணம் செய்துகொள்ளும் ஒருவருடன் நான் சந்தோஷமாக வாழ்வேன். ஒருவகையில், உங்களுக்கு நான் நன்றி சொல்ல வேண்டும். அவுஸ்திரேலிவுக்கு நான் வரும்போது இருந்ததுபோலவே என்னைத் திரும்பிச் செல்ல வைத்திருக்கிறீர்கள். இன்னும் கன்னியாகவே நான் இருப்பது உங்களால்தானே. அந்த நன்றிக்கடனுக்காக, உங்களுக்குக் கொடுத்த சீதனப்பணம், வெள்ளவத்தை வீடு எல்லாவற்றையும் எடுத்துக்கொள்ளுங்கள். அவற்றை நீங்கள் திருப்பித்தரத் தேவையில்லை. உங்கள் வைத்தியச் செலவுக்குப் பயன்படுத்துங்கள். நீங்களோ உங்கள் குடும்பத்தவரோ இனிமேலும் யாரையும் ஏமாற்றாதீர்கள்.

இப்படிக்கு
மாலதி
வாசித்து முடிந்ததும் மெல்லியதொரு நிம்மதிப் பெருமூச்சு அவளிடம் இருந்து வெளிப்படுகின்றது. கடிதப் பிரதியை மடித்து மீண்டும் தன் கைப்பைக்குள் வைக்கிறாள். இருபது நிமிடங்களில் விமானம் தரையோட்டத்தைத் தொடர்ந்து மெல்ல எழும்பிக் கொழும்பைநோக்கிப் பறக்கின்றது.
(யாவும் கற்பனை)

The Majestic Lofoten Islands in Norway. Photo by Daniel Korzhonov.

Thursday, April 17, 2014

Scientists generate solar power in the dark

ScienceAlert Staff      
Molecules known as photos witches can absorb energy from the sun, store it and release it on demand, and researchers have devised a way to use them in domestic environments.

Image: NASA
When exposed to the sun, photoswitches absorb energy that is stable for long periods. To liberate the energy, all you have to do is expose the molecules to a very small amount of light, heat or electricity, explained Todd Woody at The Atlantic. The challenge, however, is to use photoswitches to make technology that releases energy on demand and can be easily installed in houses or offices. 
Researchers used a chemical compound known as azobenzene and carbon nanotubes to generate solar power from photoswitches, and they succeeded in producing molecular solar storage technology that can be used at night to produce electricity. Commercialisation is now the big question. 
Timothy Kurcharski, lead author of the study published in Nature Chemistry, told The Atlantic that the technology could be used in developing nations and will most likely be stored in liquid form, as it would be easy to transport.
The users will need to store the liquid in a tank that is near a window to make sure the molecules receive energy from the sun, and then the charged liquid would need to be transported to a storage tank, where it will remain until needed. 
“For solar cooking, one would leave the device out in the sun during the day,” Kucharski explained. “One design we have for such an application is purely gravity driven – the material flows from one tank to another. The flow rate is restricted so that it's exposed to the sun long enough that it gets fully charged. Then, when it's time to cook dinner, after the sun is down, the flow direction is reversed, again driven by gravity, and the opposite side of the setup is used as the cooking surface… As the material flows back to the first tank, it passes by an immobilized catalyst which triggers the energy-releasing process, heating the cooking surface up.”
So yes, solar power in the dark is now a reality. Thank you, science!
Source: The Atlantic

கிரேட் டிக்டேட்டர்' திரைப்படத்தின் இறுதியில் சாப்ளின் ஆற்றும் உரை


இந்த உலகில் எல்லோருக்கும் இடம் இருக்கிறது
மன்னித்துக்கொள்ளுங்கள், நான் ஒரு பேரரசனாக ஆக விரும்பவில்லை. அது என்னுடைய வேலையும் அல்ல. நான் யாரையும் ஆளவோ வெற்றிகொள்ளவோ விரும்பவில்லை. முடிந்தால், அனைவருக்கும் உதவி செய்யவே விரும்புகிறேன்.
யூதர்கள், யூதரல்லாதவர்கள், கருப்பினத்தவர், வெள்ளையினத்தவர் என்று அனைவருக்கும் உதவவே விரும்புகிறேன். நாமெல்லோரும் ஒருவொருக்கொருவர் உதவிசெய்துகொள்ளத்தான் வேண்டும். மனிதர்கள் அப்படித்தான். நாம் ஒவ்வொருவரும் அடுத்தவர்களின் மகிழ்ச்சியை ஆதாரமாகக் கொண்டுதான் வாழ வேண்டும், அடுத்தவர்களின் துன்பத்தை ஆதாரமாகக் கொண்டல்ல. நாமெல்லோரும் ஒருவருக்கொருவர் வெறுக்கவும் துவேஷம் கொள்ளவும் வேண்டியதில்லை.
இந்த உலகத்தில் ஒவ்வொருவருக்கும் இடம் இருக்கிறது. நம்முடைய நல்ல பூமி வளம் மிக்கது, எல்லோருடைய தேவைகளையும் நிறைவேற்றக் கூடியது.
தொலைத்துவிட்ட பாதை
வாழ்க்கைப் பாதை என்பது சுதந்திரமானதாகவும் அழகானதாகவும் இருக்க முடியும். ஆனால், அந்தப் பாதையை நாம் தொலைத்துவிட்டோம். மனிதர்களின் ஆன்மாக்களில் பேராசை விஷத்தைக் கலந்துவிட்டது. அந்தப் பேராசை, வெறுப்பால் இந்த உலகத்துக்கு முட்டுக்கட்டை போட்டுவிட்டது, துன்பத்திலும் துயரத்திலும் நம்மைத் தள்ளிவிட்டது. வேகத்தை அதிகப்படுத்தியிருக்கிறோம்.
ஆனால், நாம் நமக்குள்ளே முடங்கிப்போயிருக்கிறோம். ஏராளமாக உற்பத்தி செய்யும் இயந்திரங்கள் நம்மிடம் இருந்தும் என்ன பயன், நாம் வறுமையில்தான் உழன்றுகொண்டிருக்கிறோம். நமது அறிவு யார் மீதும் நம்பிக்கையற்றவர்களாக நம்மை ஆக்கிவிட்டது. நமது புத்திசாலித்தனம் கடின மனம் கொண்டவர்களாகவும் இரக்கமற்றவர்களாகவும் நம்மை ஆக்கிவிட்டது. மிதமிஞ்சி சிந்திக்கிறோம், மிகமிகக் குறைவாக அக்கறைகொள்கிறோம். இயந்திரங்களை விட நமக்கு அதிகம் தேவை மனிதமே.
புத்திசாலித்தனத்தைவிட நமக்கு அதிகம் தேவை இரக்கவுணர்வும் கண்ணியமுமே. இந்தப் பண்புகள் இல்லையென்றால், வாழ்க்கை கொடூரமானதாக ஆகிவிடும். அப்புறம் நமது கதை அவ்வளவுதான்.
கண்டுபிடிப்புகளின் அடிப்படை
விமானமும் வானொலியும் நம் அனைவரையும் மிகவும் நெருங்கி வரச் செய்திருக்கின்றன. மனிதர்களின் நற்குணத்தையும், உலகளாவிய சகோதரத்துவத்தையும், அனைவரது ஒற்றுமையையும் வலியுறுத்துவதுதான் இந்தக் கண்டுபிடிப்புகளின் அடிப்படை இயல்பே.
இந்த உலகில் உள்ள கோடிக் கணக்கானவர்களை என் குரல் இந்தத் தருணத்தில் சென்றடைகிறது. நம்பிக்கையை இழந்த ஆண்கள், பெண்கள், சின்னஞ்சிறு குழந்தைகள் என்று கோடிக் கணக்கான மக்களைச் சென்றடைகிறது. அதாவது, அப்பாவி மக்களை சக மனிதர்களே கொடுமைப்படுத்துவதும் சிறைப்படுத்துவதுமான ஒரு சித்தாந்தத்தின் பலிகடாக்களை எனது குரல் இந்தத் தருணத்தில் சென்றடைகிறது.
சுதந்திரம் ஒருபோதும் அழியாது
நான் பேசுவதைக் கேட்டுக்கொண்டிருப்பவர்களே, உங்களுக்கு நான் ஒன்றைச் சொல்லுகிறேன்- நம்பிக்கை இழக்காதீர்கள். நம்மை ஆட்கொண்ட துன்பம் என்பது வேறொன்றுமில்லை, பேராசையின் விளைவுதான் அது. மனித முன்னேற்றத்தைக் கண்டு அஞ்சும் மனிதர்களின் கசப்புணர்வுதான் அது. மனிதர்களின் வெறுப்பு கடந்துபோகும், சர்வாதிகாரிகள் இறந்துவிடுவார்கள், மக்களிடமிருந்து அவர்கள் எடுத்துக்கொண்ட அதிகாரம் மக்களிடமே திரும்பும். மனிதர்கள் தங்கள் உயிரைத் தியாகம் செய்வது நீடிக்கும்வரை, சுதந்திரம் என்பது ஒருபோதும் அழியாது.
நீங்கள் இயந்திரங்கள் அல்ல
போர்வீரர்களே, கொடூரர்களிடம் உங்களை ஒப்படைக் காதீர்கள். அவர்கள் உங்களை வெறுப்பவர்கள், உங்களை அடிமைப்படுத்துபவர்கள், உங்கள் வாழ்க்கையைக் கடுமையாகக் கட்டுப்படுத்தக்கூடியவர்கள், நீங்கள் என்ன செய்ய வேண்டும், என்ன நினைக்க வேண்டும், எதை உணர வேண்டும் என்றெல்லாம் சொல்பவர்கள்! உங்களைப் பழக்குவார்கள், உங்களைக் குறைவாக உண்ண வைப்பார்கள், கால்நடைகளைப் போலவே உங்களை நடத்துவார்கள்.
உங்களைப் பீரங்கிக் குண்டுகளுக்கு இரையாக்குவார்கள். மனித இயல்பற்ற அவர்களுக்கு அடிபணிந்துவிடாதீர்கள். இயந்திர மனங்களையும் இயந்திர இதயங்களையும் கொண்ட இயந்திர மனிதர்கள் தான் அவர்கள். நீங்களெல்லாம் இயந்திரங்கள் அல்ல, நீங்களெல்லாம் கால்நடைகள் அல்ல, நீங்கள் மனிதர் கள்! மனிதம் மீதான அன்பு உங்கள் இதயத்தில் இருக்கிறது. நீங்கள் யாரையும் வெறுப்பதில்லை. நேசிக்கப்படாதவர்கள்தான் வெறுப்பார்கள் - நேசிக்கப் படாத, மனித இயல்பற்ற மனிதர்கள்தான் அவர்கள்! போர்வீரர்களே, அடிமைத்தனத்துக்காகப் போரிடாதீர்கள்! சுதந்திரத்துக்காகப் போராடுங்கள்!
கடவுளின் சாம்ராஜ்யம்
17-வது அதிகாரத்திலே புனித லூக்கா சொல்லியிருக்கிறார்: “கடவுளின் சாம்ராஜ்யம் மனிதனுக்குள்தான் இருக்கிறது.” ஒரு மனிதனுக்குள்ளோ, ஒரு குழுவுக் குள்ளோ என்பதல்ல இதன் அர்த்தம். எல்லா மனிதருக் குள்ளும் என்பதுதான் இதன் அர்த்தம்! உங்களுக் குள் இருக்கிறது என்பதுதான் அர்த்தம்! மக்களே, உங்களிடம்தான் இருக்கிறது சக்தி - இயந்திரங்களை உருவாக்குவதற்கான சக்தி.
மகிழ்ச்சியை உருவாக்கு வதற்கான சக்தி! இந்த வாழ்க்கையைச் சுதந்திரமான தாகவும் அழகானதாகவும் ஆக்குவதற்கான சக்தியும், இந்த வாழ்க்கையை அற்புதமான சாகசமாக்குவதற்கான சக்தியும் மக்களே உங்களிடம்தான் இருக்கின்றன.
புதியதோர் உலகைப் படைப்போம்!
அப்படியென்றால், ஜனநாயகத்தின் பெயரால், நாமெல்லோரும் அந்த சக்தியைப் பயன்படுத்துவோம், நாமெல்லோரும் ஒன்றுசேர்வோம். புதியதோர் உலகைப் படைப்பதற்காக நாமெல்லோரும் போராடுவோம். மனிதர்களுக்கு வேலை பார்ப்பதற்கான வாய்ப்பையும், இளைஞர்களுக்கு எதிர்காலத்தையும் முதியவர்களுக்கு அரவணைப்பையும் தரக்கூடிய கண்ணியமான அந்தப் புதிய உலகத்துக்காகப் போராடுவோம்.
இதையெல்லாம் வாக்குறுதிகளாகக் கொடுத்துதான் கொடூ ரர்கள் அதிகாரத்துக்கு வந்தார்கள். அவர்கள் சொன்ன தெல்லாம் பொய்! அவர்கள் தங்களுடைய வாக்குறு திகளை நிறைவேற்றவில்லை, அவர்களால் ஒருபோதும் நிறைவேற்ற முடியாது!
சர்வாதிகாரிகள் தங்களை விடுவித்துக்கொள்வார்கள். ஆனால், மக்களை அடிமைப்படுத்திவிடுவார்கள்! அந்த வாக்குறுதிகளை நிறைவேற்ற நாம் ஒருங்கிணைந்து போராட இதுவே தருணம்! நாடுகளுக்கிடையிலான பாகுபாடுகளைத் தகர்க்கவும், பேராசையையும் வெறுப் பையும் சகிப்பின்மையையும் குழிதோண்டிப் புதைக்கவும் அனைவரும் ஒன்றுசேர்ந்து போராடுவோம், புதிய உலகைப் படைக்க.
அறிவியலும் முன்னேற்றமும் மனிதர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்துவதையே நோக்க மாகக்கொண்டிருக்கும் அந்த உலகத்துக்காக, பகுத்தறிவின் உலகத்துக்காக அனைவரும் போராடுவோம். வீரர்களே, ஜனநாயகத்தின் பேரால், அனைவரும் ஒன்றுசேர்வோம்!
(ஹிட்லரைப் பகடிசெய்து சார்லி சாப்ளின் 1940-ம் ஆண்டு உருவாக்கிய ‘த கிரேட் டிக்டேட்டர்' திரைப்படத்தின் இறுதியில் சாப்ளின் ஆற்றும் உரை.)
தமிழில்: ஆசை( தி இந்து,16.04.2014)

மகாபாரதப் போரும் தமிழர்களும்!

மகாபாரதப் போரானது பாண்டவர்கள் ஐந்து பேருக்கும் கவுரவர்கள் நூற்றுவருக்கும் இடையில் நடந்ததாகக் கூறப்படுகிறது. வியாசர் இயற்றிய மகாபாரத நூலின்படி இந்த பாண்டவர்கள் ஐந்து பேரும் பாண்டு மன்னனின் பிள்ளைகள் என்றும் கவுரவர்கள் நூற்றுவரும் திருதராட்டிரனின் மக்கள் என்றும் சொல்லப்படுகிறது. குருசேத்திரம் என்னும் இடத்தில் நடந்ததாகக் கூறப்படும் இந்த பெரும்போர் உண்மையிலேயே நடந்ததா? கற்பனையாகக் கூறப்படும் ஒன்றா? உண்மை என்றால் எந்த அளவிற்கு அதில் உண்மை கலந்துள்ளது என்று காண்பதே இக் கட்டுரையின் நோக்கமாகும்.
உண்மையில் இந்த மகாபாரதப் போரானது தொல்தமிழகத்தைச் சேர்ந்த ஐந்து தமிழ் மன்னர்களுக்கும் வேற்றினத்தாருக்கும் இடையில் நடந்த போராகும். இந்த வேற்றினத்தாருக்கு என்ன பெயர் வைப்பது? ஏற்கெனவே ஆரியர் என்ற சொல் புழக்கத்தில் இருந்தாலும் இச்சொல் பல குழப்பங்களையே தோற்றுவித்துள்ளது. எனவே இந்த வேற்றினத்தவருக்கு 'நூற்றுவர்' என்ற பெயரையே கொள்ளலாம்.
இந்த மகாபாரதப் போரானது பல நாட்கள் நீடித்ததாகச் சொல்லப்படுகிறது. என்றால், ஒரு ஐந்து பேர் ஒருநூறு பேருடன் போரிட்டு வெல்ல பல நாட்களாகுமா?. என்ற ஐயம் மனதில் எழலாம். அதுமட்டுமின்றி, வெறும் ஐந்துபேர் ஒருநூறு பேருடன் போரிட்டு வெல்ல முடியுமா? என்ற கேள்வியும் கூடவே எழலாம். இக் கேள்விகளுக்கான விடைகளை மட்டுமின்றி இப் போரில் பங்கேற்ற அந்த ஐந்து தமிழ் மன்னர்கள் யார் யார்? என்றும் கீழே காணலாம்.
தமிழ் மன்னர்கள்:
தொல்தமிழகத்தில் இருந்ததாகக் கூறப்படும் முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல், பாலை என்ற ஐவகை நிலங்களையும் ஆண்டு கொண்டிருந்த ஐந்து தமிழ் மன்னர்கள் தாம் இந்த மகாபாரதப் போருக்குத் தலைமையேற்றவர்கள் ஆவார். இவர்கள் ஐவரின் தலைமையில் பல்லாயிரக் கணக்கான தமிழ் வீரர்களும் நூற்றுவர் தலைமையில் பல்லாயிரம் எதிரி வீரர்களும் நிலம் அதிரப் பொருத 'தும்பை' வகைப் போரே மகாபாரதப் போர் ஆகும்.
இப்போரில் பங்கேற்ற ஐந்து தமிழ் மன்னர்கள் தான் பிற்காலத்தில் பாண்டவர்களாகிய தருமன், அர்ஜுனன், பீமன், சகாதேவன், நகுலன் என்று அழைக்கப்பட்டனர். இப் பெயர்கள் இம் மன்னர்களின் இயற்கைப் பெயர்கள் அல்ல; பட்டப்பெயர்கள். ஒவ்வொரு நிலத்தில் இருந்தும் வந்த இம் மன்னர்களுக்கு அவர்களின் தனிச்சிறப்பு கருதி இடப்பட்ட தமிழ்ப் பெயர்களே வடமொழியில் இவ்வாறு திரிபுற்று வழங்கப்படுகின்றன.
தருமன்:
பாண்டவர் ஐவரில் முல்லை நிலத்து மன்னனாக வந்தவனே தருமன் ஆவான். கற்பு நெறியும் ஒழுக்கமும் சான்ற முல்லை நிலத்தில் இருந்து வந்தமையால் இம் மன்னனுக்கு தருமன் என்ற பட்டப்பெயர் வழங்கப்பட்டது. தருமன் என்ற தமிழ்ப் பெயரே தர்மா என்று வடமொழியில் வழங்கப்பட்டது.
தருமன் -----> தர்மா
மேகத்தை தெய்வமாகக் கொண்டது முல்லை நாடு. இந்த மேகம் தரும் மழையோ தருமத்தை அடிப்படையாகக் கொண்டது. ஒரு நாட்டில் தருமம் பிறழும் போது மழையில்லாமல் போவதை நாம் அறிவோம். திருவள்ளுவரும் இக் கருத்தை பல இடங்களில் வலியுறுத்தி உள்ளார். இப்படி முல்லை நிலமானது தருமத்தையே தலைமேற்கொண்டு விளங்குவதால் இந் நாட்டில் இருந்து வந்த மன்னனுக்கு அவரது நாட்டின் சிறப்பான தருமம் பற்றி 'தருமன்' என்ற பெயரை சூட்டியிருக்கலாம்.
அர்ஜுனன்:
குறிஞ்சி நிலத்தில் இருந்து வந்த மன்னனே அர்ஜுனன் ஆவான். இவனது பட்டப்பெயர் அருஞ்சுனையன் என்பதாகும். அரிய பல சுனைகளை உடைய மலைநாட்டில் இருந்து வந்தமையால் இவன் அருஞ்சுனையன் எனப்பட்டான். இவன் சிறந்த வேடன் ஆவான். வில் எய்வதில் நிகரற்ற ஆற்றல் உடையவனாக அறியப்பட்டான். அருஞ்சுனையன் என்ற தமிழ்ப் பெயரே அர்ஜுனா என்று வடமொழியாக்கப் பட்டிருக்கலாம்.
அருஞ்சுனையன் -----> அர்ஜுனா
பீமன்:
மருத நிலத்தில் இருந்து வந்த தமிழ் மன்னனே பீமன் ஆவான். இவனது பட்டப்பெயர் பருமன் என்பதாகும். ஓங்கிய உருவமும் அதற்கேற்ப ஈடான உடலும் வலிமையும் கொண்டவனாக இருந்ததால் பெருமை கருதி பருமன் எனப்பட்டான். பருமம் உடையவன் ஆதலால் பருமன் எனப்பட்டான். இப் பருமன் என்ற தமிழ்ப் பெயரே வடமொழியில் பீமன் என்று வழங்கப்படுகிறது.
பருமன் ----> ப்ரமன் ---> பீமன் ----> பீமா
அதுமட்டுமின்றி, ஐந்து பூதங்களில் வலிமை மிக்கது காற்று ஆகும். மெல்லிய தென்றலாய் வருடிக் கொடுப்பதும் புயலாய் மாறி பொருட்களை புடைபெயர்த்து இடுவதும் காற்றே ஆகும். வலிமையின்றி தொய்ந்து கிடக்கும் ஒரு டயருக்குள் காற்றினை அடித்தவுடன் அது ஒரு வண்டியையே தாங்கி நிற்கும் ஆற்றலைப் பெறுகிறது. இந்த காற்றின் ஆற்றல் சிறப்புற்று விளங்கும் மருதநிலத்தில் இருந்து வந்தவன் என்பதாலும் காற்றைப் போல எதிரிகளை தனது உடல் வலிமையால் பந்தாட வல்ல பலசாலி மன்னன் என்பதாலும் இவனுக்கு இப் பெயர் சூட்டப்பட்டிருக்கலாம்.
பருமன் என்ற சொல்லில் இருந்து தோன்றிய ப்ரமன் என்ற சொல்லே பிரம்மாண்டம் (பெரியது) என்ற சொல்லுக்கும் வலிமை மிக்க சுழல் காற்றினைக் குறிக்கும் பிரமம் என்ற சொல்லுக்கும் ஆதாரமாய் இருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
ப்ரமன் ----> பீமன் (பருமையும் வலிமையும் கொண்டவன்)
ப்ரமன் ----> ப்ரமாண்டம் (பெரியது)
ப்ரமன் ------> ப்ரமம் (வலிமையான சுழல்காற்று)
சகாதேவன்:
நெய்தல் நிலத்தில் இருந்து வந்த தமிழ் மன்னனே சகாதேவன் ஆவான். இவனது பட்டப்பெயர் சகடதேவன் ஆகும். இப் பெயரே சகாதேவ் என்று வடமொழியில் வழங்கப்படுகிறது.
சகடதேவன் ------> சகாதேவா
வண்டிச் சக்கரங்களைச் (சகடம்) செய்வதில் பெயர் பெற்றிருந்தவர்கள் இந் நிலத்து மக்கள் ஆதலால் அச் சிறப்பு கருதி இவனுக்கு இப் பெயர் ஏற்பட்டிருக்கலாம். ஐந்துநில மக்களிலும் கடலில் செல்லும் மரக்கலங்களை முதலில் கண்டறிந்தவர்கள் நெய்தல் நில மக்களே ஆவர். கடலில் இருந்து விளைவிக்கப்பட்ட உப்பினை ஏற்றிச் செல்லத் தேவையான வண்டியையும் சக்கரங்களையும் முதலில் கண்டறிந்ததும் நெய்தல் மக்களாகவே இருக்கலாம் என்று தோன்றுகிறது. ஏனென்றால் அதிக விளைபொருட்களை உடைய மருத நிலத்தில் பொருட்களைக் கடத்த மாடுகள் இருந்தன. முல்லை நிலத்திலோ குறிஞ்சி நிலத்திலோ வண்டிகளில் ஏற்றிக் கடத்த வேண்டிய அளவுக்குப் பொருட்பெருக்கம் இல்லை. பாலைநிலத்தில் கொள்ளையடிப்பதைத் தவிர வேலை எதுவும் இல்லை. எஞ்சியுள்ள நெய்தல் நிலத்தாருக்கு மட்டுமே பெரும் அளவிலான மீனையும் உப்பினையும் கடத்த வேண்டிய சூழல் இருந்ததால் அவர்களே வண்டிகளைக் கண்டறிந்திருக்கலாம். முதன்முதலில் கையால் தள்ளப்பட்ட இந்த வண்டிகளில் மாடுகளைப் பூட்டி இழுக்கும் வழக்கம் பின்னாளில் ஏற்பட்டிருக்க வேண்டும்.
நகுலன்:
பாலைநிலத்தில் இருந்து வந்த தமிழ் மன்னனே நகுலன் ஆவான். இவனுடைய பட்டப்பெயர் நற்குலன் என்பதாகும். இப் பெயரே நகுலா என்று வடமொழியில் வழங்கப்படுகிறது.
நற்குலன் -----> நகுலா
முல்லை, குறிஞ்சி, மருதம், பாலை என்னும் நான்கு நிலங்களுக்கும் தனித்தனியே சிறப்பு உண்டு. ஆனால் பாலை நிலத்து மக்களுக்கு என்ன சிறப்பு உள்ளது? பிறரது பொருட்களை கொள்ளையடிப்பதைத் தவிர அவர்கள் வேறெதுவும் அறியாதவர்கள். இருந்தாலும் தமிழருக்கு எதிரான போர் என்றதும் தானாகவே வந்து தனது ஆதரவைக் காட்டினான் இந் நிலத்து மன்னன். தொல்காப்பியர் கூறியதைப் போல இம் மன்னன் கடைக்குலத்தவனாகவே இருந்தாலும் ஆதரவு தந்து போர் புரியத் தயாராக இருந்ததால் அவனுக்கு 'நல்ல குலத்தவன்' என்ற பொருளில் 'நற்குலன்' என்ற பட்டப்பெயரைச் சூட்டியுள்ளது தமிழரின் பரந்த மனப்பான்மையைக் காட்டுகிறது.
இதுவரை கண்டவற்றை கீழ்க்கண்டவாறு தொகுத்து வழங்கலாம்.
போர் நடந்த இடம்:
இந்தியாவின் தற்போதைய அரியானா மாநிலத்தில் உள்ள குருசேத்திரம் என்ற ஊரில் தான் இப்போர் நடந்ததாகக் கூறப்படுகிறது. தொல்தமிழகப் பகுதிகளில் தமிழ் மன்னர்கள் ஆண்டு கொண்டிருந்த பொழுது ஆஃப்கானிஸ்தானில் இருந்து கைபர் போலன் கணவாய் வழியாக இந்த வேற்றினத்தாராகிய நூற்றுவர்கள் இந்தியாவிற்குள் நுழையத் தலைப்பட்டிருக்கக் கூடும். அப்பொழுது அவர்களுக்கும் தமிழ் மன்னர் ஐவருக்கும் இடையில் இந்த குருசேத்திரம் என்னும் இடத்தில் வைத்து நடந்த பெரும்போரே இந்த மகாபாரதப் போராகும். இந்த நூற்றுவர்கள், தமிழரின் போர்வீரத்தைப் பற்றி முன்னரே கேள்விப்பட்டிருக்கக் கூடும். அதனால் தான் அவர்களது படைக்கு நூறு பேர் தலைமை தாங்கி பெரும் படையாக வந்துள்ளனர்.
போர்க்காலத்தில் இப் போரில் ஈடுபட்ட தமிழ் மன்னர் ஐவரின் படைவீரர்களுக்கும் தேவையான உணவினை அளித்தான் பெருஞ்சோற்று உதியன் சேரலாதன் என்னும் தமிழ் மன்னன் என்று புறநானூறு கூறுகிறது. அப்படியென்றால் இம் மன்னனுடைய நாடும் தொல்தமிழகத்தில் தான் இருந்திருக்க வேண்டும். அப்படி இருந்தால் தான் இவனால் படைவீரர்களுக்கு குருசேத்திரத்தில் உணவளித்திருக்க முடியும். இப்போதுள்ள தமிழகத்தில் இருந்துகொண்டு இதைச் செய்திருக்க சாத்தியமில்லை.
ஆதாரங்கள்:
மேலே நாம் பல புதிய செய்திகளைக் கண்டோம். இவை உண்மை என்பதற்கு என்ன ஆதாரங்கள் உள்ளன என்று காண்போம்.
மேலே கண்ட பல புதிய செய்திகளில், பாரதப் போரில் ஈடுபட்ட தமிழ் மன்னர்கள் ஐவரின் பெயர்களில் வேண்டுமானால் மாறுபாடுகள் இருக்கலாம். ஆனால் மகாபாரதப்போர் என்பது தமிழ் மன்னர்கள் ஐவருக்கும் வேற்றினத்தார் நூற்றுவருக்கும் இடையில் நடந்த போர் தான் என்பதில் எந்தவித மாறுபாடுமில்லை. இதை உறுதிசெய்யும் வண்ணம் தமிழ் இலக்கியங்களில் இப் போர் பற்றிய குறிப்புக்களும் உள்ளன.
அலங்குஉளைப் புரவி ஐவரொடு சினைஇ
நிலம்தலைக் கொண்ட பொலம்பூந் தும்பை
ஈரைம் பதின்மரும் பொருதுகளத் தொழியப்
பெருஞ்சோற்று மிகுபதம் வரையாது கொடுத்தோய்
- புறநானூறு - 2
பெருஞ்சோற்று உதியன் சேரலாதன் பாரதப் போர் நிகழ்ந்த காலத்தில் பெருஞ்சோறு அளித்த நிகழ்ச்சியை இப்பாடல் விவரிக்கிறது.
ஈரைம் பதின்மரும் பொருதுகளத்து அவியப்
பேரமர்க் கடந்த கொடிஞ்சி நெடுந்தேர்
ஆராச் செருவின் ஐவர் போல
- பெரும்பாணாற்றுப்படை - 415-417
நன்றி - பொன்.சரவணன் இளமுனைவர் (தமிழ்)
மகாபாரதப் போரும் தமிழர்களும்!

மகாபாரதப் போரானது பாண்டவர்கள் ஐந்து பேருக்கும் கவுரவர்கள் நூற்றுவருக்கும் இடையில் நடந்ததாகக் கூறப்படுகிறது. வியாசர் இயற்றிய மகாபாரத நூலின்படி இந்த பாண்டவர்கள் ஐந்து பேரும் பாண்டு மன்னனின் பிள்ளைகள் என்றும் கவுரவர்கள் நூற்றுவரும் திருதராட்டிரனின் மக்கள் என்றும் சொல்லப்படுகிறது. குருசேத்திரம் என்னும் இடத்தில் நடந்ததாகக் கூறப்படும் இந்த பெரும்போர் உண்மையிலேயே நடந்ததா? கற்பனையாகக் கூறப்படும் ஒன்றா? உண்மை என்றால் எந்த அளவிற்கு அதில் உண்மை கலந்துள்ளது என்று காண்பதே இக் கட்டுரையின் நோக்கமாகும்.

உண்மையில் இந்த மகாபாரதப் போரானது தொல்தமிழகத்தைச் சேர்ந்த ஐந்து தமிழ் மன்னர்களுக்கும் வேற்றினத்தாருக்கும் இடையில் நடந்த போராகும். இந்த வேற்றினத்தாருக்கு என்ன பெயர் வைப்பது? ஏற்கெனவே ஆரியர் என்ற சொல் புழக்கத்தில் இருந்தாலும் இச்சொல் பல குழப்பங்களையே தோற்றுவித்துள்ளது. எனவே இந்த வேற்றினத்தவருக்கு 'நூற்றுவர்' என்ற பெயரையே கொள்ளலாம்.

இந்த மகாபாரதப் போரானது பல நாட்கள் நீடித்ததாகச் சொல்லப்படுகிறது. என்றால், ஒரு ஐந்து பேர் ஒருநூறு பேருடன் போரிட்டு வெல்ல பல நாட்களாகுமா?. என்ற ஐயம் மனதில் எழலாம். அதுமட்டுமின்றி, வெறும் ஐந்துபேர் ஒருநூறு பேருடன் போரிட்டு வெல்ல முடியுமா? என்ற கேள்வியும் கூடவே எழலாம். இக் கேள்விகளுக்கான விடைகளை மட்டுமின்றி இப் போரில் பங்கேற்ற அந்த ஐந்து தமிழ் மன்னர்கள் யார் யார்? என்றும் கீழே காணலாம்.

தமிழ் மன்னர்கள்:

தொல்தமிழகத்தில் இருந்ததாகக் கூறப்படும் முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல், பாலை என்ற ஐவகை நிலங்களையும் ஆண்டு கொண்டிருந்த ஐந்து தமிழ் மன்னர்கள் தாம் இந்த மகாபாரதப் போருக்குத் தலைமையேற்றவர்கள் ஆவார். இவர்கள் ஐவரின் தலைமையில் பல்லாயிரக் கணக்கான தமிழ் வீரர்களும் நூற்றுவர் தலைமையில் பல்லாயிரம் எதிரி வீரர்களும் நிலம் அதிரப் பொருத 'தும்பை' வகைப் போரே மகாபாரதப் போர் ஆகும்.

இப்போரில் பங்கேற்ற ஐந்து தமிழ் மன்னர்கள் தான் பிற்காலத்தில் பாண்டவர்களாகிய தருமன், அர்ஜுனன், பீமன், சகாதேவன், நகுலன் என்று அழைக்கப்பட்டனர். இப் பெயர்கள் இம் மன்னர்களின் இயற்கைப் பெயர்கள் அல்ல; பட்டப்பெயர்கள். ஒவ்வொரு நிலத்தில் இருந்தும் வந்த இம் மன்னர்களுக்கு அவர்களின் தனிச்சிறப்பு கருதி இடப்பட்ட தமிழ்ப் பெயர்களே வடமொழியில் இவ்வாறு திரிபுற்று வழங்கப்படுகின்றன.

தருமன்:

பாண்டவர் ஐவரில் முல்லை நிலத்து மன்னனாக வந்தவனே தருமன் ஆவான். கற்பு நெறியும் ஒழுக்கமும் சான்ற முல்லை நிலத்தில் இருந்து வந்தமையால் இம் மன்னனுக்கு தருமன் என்ற பட்டப்பெயர் வழங்கப்பட்டது. தருமன் என்ற தமிழ்ப் பெயரே தர்மா என்று வடமொழியில் வழங்கப்பட்டது.
தருமன் -----> தர்மா

மேகத்தை தெய்வமாகக் கொண்டது முல்லை நாடு. இந்த மேகம் தரும் மழையோ தருமத்தை அடிப்படையாகக் கொண்டது. ஒரு நாட்டில் தருமம் பிறழும் போது மழையில்லாமல் போவதை நாம் அறிவோம். திருவள்ளுவரும் இக் கருத்தை பல இடங்களில் வலியுறுத்தி உள்ளார். இப்படி முல்லை நிலமானது தருமத்தையே தலைமேற்கொண்டு விளங்குவதால் இந் நாட்டில் இருந்து வந்த மன்னனுக்கு அவரது நாட்டின் சிறப்பான தருமம் பற்றி 'தருமன்' என்ற பெயரை சூட்டியிருக்கலாம்.

அர்ஜுனன்:

குறிஞ்சி நிலத்தில் இருந்து வந்த மன்னனே அர்ஜுனன் ஆவான். இவனது பட்டப்பெயர் அருஞ்சுனையன் என்பதாகும். அரிய பல சுனைகளை உடைய மலைநாட்டில் இருந்து வந்தமையால் இவன் அருஞ்சுனையன் எனப்பட்டான். இவன் சிறந்த வேடன் ஆவான். வில் எய்வதில் நிகரற்ற ஆற்றல் உடையவனாக அறியப்பட்டான். அருஞ்சுனையன் என்ற தமிழ்ப் பெயரே அர்ஜுனா என்று வடமொழியாக்கப் பட்டிருக்கலாம்.

அருஞ்சுனையன் -----> அர்ஜுனா

பீமன்:

மருத நிலத்தில் இருந்து வந்த தமிழ் மன்னனே பீமன் ஆவான். இவனது பட்டப்பெயர் பருமன் என்பதாகும். ஓங்கிய உருவமும் அதற்கேற்ப ஈடான உடலும் வலிமையும் கொண்டவனாக இருந்ததால் பெருமை கருதி பருமன் எனப்பட்டான். பருமம் உடையவன் ஆதலால் பருமன் எனப்பட்டான். இப் பருமன் என்ற தமிழ்ப் பெயரே வடமொழியில் பீமன் என்று வழங்கப்படுகிறது.

பருமன் ----> ப்ரமன் ---> பீமன் ----> பீமா

அதுமட்டுமின்றி, ஐந்து பூதங்களில் வலிமை மிக்கது காற்று ஆகும். மெல்லிய தென்றலாய் வருடிக் கொடுப்பதும் புயலாய் மாறி பொருட்களை புடைபெயர்த்து இடுவதும் காற்றே ஆகும். வலிமையின்றி தொய்ந்து கிடக்கும் ஒரு டயருக்குள் காற்றினை அடித்தவுடன் அது ஒரு வண்டியையே தாங்கி நிற்கும் ஆற்றலைப் பெறுகிறது. இந்த காற்றின் ஆற்றல் சிறப்புற்று விளங்கும் மருதநிலத்தில் இருந்து வந்தவன் என்பதாலும் காற்றைப் போல எதிரிகளை தனது உடல் வலிமையால் பந்தாட வல்ல பலசாலி மன்னன் என்பதாலும் இவனுக்கு இப் பெயர் சூட்டப்பட்டிருக்கலாம்.

பருமன் என்ற சொல்லில் இருந்து தோன்றிய ப்ரமன் என்ற சொல்லே பிரம்மாண்டம் (பெரியது) என்ற சொல்லுக்கும் வலிமை மிக்க சுழல் காற்றினைக் குறிக்கும் பிரமம் என்ற சொல்லுக்கும் ஆதாரமாய் இருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

ப்ரமன் ----> பீமன் (பருமையும் வலிமையும் கொண்டவன்)
ப்ரமன் ----> ப்ரமாண்டம் (பெரியது)
ப்ரமன் ------> ப்ரமம் (வலிமையான சுழல்காற்று)

சகாதேவன்:
நெய்தல் நிலத்தில் இருந்து வந்த தமிழ் மன்னனே சகாதேவன் ஆவான். இவனது பட்டப்பெயர் சகடதேவன் ஆகும். இப் பெயரே சகாதேவ் என்று வடமொழியில் வழங்கப்படுகிறது.

சகடதேவன் ------> சகாதேவா

வண்டிச் சக்கரங்களைச் (சகடம்) செய்வதில் பெயர் பெற்றிருந்தவர்கள் இந் நிலத்து மக்கள் ஆதலால் அச் சிறப்பு கருதி இவனுக்கு இப் பெயர் ஏற்பட்டிருக்கலாம். ஐந்துநில மக்களிலும் கடலில் செல்லும் மரக்கலங்களை முதலில் கண்டறிந்தவர்கள் நெய்தல் நில மக்களே ஆவர். கடலில் இருந்து விளைவிக்கப்பட்ட உப்பினை ஏற்றிச் செல்லத் தேவையான வண்டியையும் சக்கரங்களையும் முதலில் கண்டறிந்ததும் நெய்தல் மக்களாகவே இருக்கலாம் என்று தோன்றுகிறது. ஏனென்றால் அதிக விளைபொருட்களை உடைய மருத நிலத்தில் பொருட்களைக் கடத்த மாடுகள் இருந்தன. முல்லை நிலத்திலோ குறிஞ்சி நிலத்திலோ வண்டிகளில் ஏற்றிக் கடத்த வேண்டிய அளவுக்குப் பொருட்பெருக்கம் இல்லை. பாலைநிலத்தில் கொள்ளையடிப்பதைத் தவிர வேலை எதுவும் இல்லை. எஞ்சியுள்ள நெய்தல் நிலத்தாருக்கு மட்டுமே பெரும் அளவிலான மீனையும் உப்பினையும் கடத்த வேண்டிய சூழல் இருந்ததால் அவர்களே வண்டிகளைக் கண்டறிந்திருக்கலாம். முதன்முதலில் கையால் தள்ளப்பட்ட இந்த வண்டிகளில் மாடுகளைப் பூட்டி இழுக்கும் வழக்கம் பின்னாளில் ஏற்பட்டிருக்க வேண்டும்.

நகுலன்:

பாலைநிலத்தில் இருந்து வந்த தமிழ் மன்னனே நகுலன் ஆவான். இவனுடைய பட்டப்பெயர் நற்குலன் என்பதாகும். இப் பெயரே நகுலா என்று வடமொழியில் வழங்கப்படுகிறது.

நற்குலன் -----> நகுலா

முல்லை, குறிஞ்சி, மருதம், பாலை என்னும் நான்கு நிலங்களுக்கும் தனித்தனியே சிறப்பு உண்டு. ஆனால் பாலை நிலத்து மக்களுக்கு என்ன சிறப்பு உள்ளது? பிறரது பொருட்களை கொள்ளையடிப்பதைத் தவிர அவர்கள் வேறெதுவும் அறியாதவர்கள். இருந்தாலும் தமிழருக்கு எதிரான போர் என்றதும் தானாகவே வந்து தனது ஆதரவைக் காட்டினான் இந் நிலத்து மன்னன். தொல்காப்பியர் கூறியதைப் போல இம் மன்னன் கடைக்குலத்தவனாகவே இருந்தாலும் ஆதரவு தந்து போர் புரியத் தயாராக இருந்ததால் அவனுக்கு 'நல்ல குலத்தவன்' என்ற பொருளில் 'நற்குலன்' என்ற பட்டப்பெயரைச் சூட்டியுள்ளது தமிழரின் பரந்த மனப்பான்மையைக் காட்டுகிறது.

இதுவரை கண்டவற்றை கீழ்க்கண்டவாறு தொகுத்து வழங்கலாம்.

போர் நடந்த இடம்:

இந்தியாவின் தற்போதைய அரியானா மாநிலத்தில் உள்ள குருசேத்திரம் என்ற ஊரில் தான் இப்போர் நடந்ததாகக் கூறப்படுகிறது. தொல்தமிழகப் பகுதிகளில் தமிழ் மன்னர்கள் ஆண்டு கொண்டிருந்த பொழுது ஆஃப்கானிஸ்தானில் இருந்து கைபர் போலன் கணவாய் வழியாக இந்த வேற்றினத்தாராகிய நூற்றுவர்கள் இந்தியாவிற்குள் நுழையத் தலைப்பட்டிருக்கக் கூடும். அப்பொழுது அவர்களுக்கும் தமிழ் மன்னர் ஐவருக்கும் இடையில் இந்த குருசேத்திரம் என்னும் இடத்தில் வைத்து நடந்த பெரும்போரே இந்த மகாபாரதப் போராகும். இந்த நூற்றுவர்கள், தமிழரின் போர்வீரத்தைப் பற்றி முன்னரே கேள்விப்பட்டிருக்கக் கூடும். அதனால் தான் அவர்களது படைக்கு நூறு பேர் தலைமை தாங்கி பெரும் படையாக வந்துள்ளனர்.

போர்க்காலத்தில் இப் போரில் ஈடுபட்ட தமிழ் மன்னர் ஐவரின் படைவீரர்களுக்கும் தேவையான உணவினை அளித்தான் பெருஞ்சோற்று உதியன் சேரலாதன் என்னும் தமிழ் மன்னன் என்று புறநானூறு கூறுகிறது. அப்படியென்றால் இம் மன்னனுடைய நாடும் தொல்தமிழகத்தில் தான் இருந்திருக்க வேண்டும். அப்படி இருந்தால் தான் இவனால் படைவீரர்களுக்கு குருசேத்திரத்தில் உணவளித்திருக்க முடியும். இப்போதுள்ள தமிழகத்தில் இருந்துகொண்டு இதைச் செய்திருக்க சாத்தியமில்லை.

ஆதாரங்கள்:

மேலே நாம் பல புதிய செய்திகளைக் கண்டோம். இவை உண்மை என்பதற்கு என்ன ஆதாரங்கள் உள்ளன என்று காண்போம்.

மேலே கண்ட பல புதிய செய்திகளில், பாரதப் போரில் ஈடுபட்ட தமிழ் மன்னர்கள் ஐவரின் பெயர்களில் வேண்டுமானால் மாறுபாடுகள் இருக்கலாம். ஆனால் மகாபாரதப்போர் என்பது தமிழ் மன்னர்கள் ஐவருக்கும் வேற்றினத்தார் நூற்றுவருக்கும் இடையில் நடந்த போர் தான் என்பதில் எந்தவித மாறுபாடுமில்லை. இதை உறுதிசெய்யும் வண்ணம் தமிழ் இலக்கியங்களில் இப் போர் பற்றிய குறிப்புக்களும் உள்ளன.

அலங்குஉளைப் புரவி ஐவரொடு சினைஇ
நிலம்தலைக் கொண்ட பொலம்பூந் தும்பை
ஈரைம் பதின்மரும் பொருதுகளத் தொழியப்
பெருஞ்சோற்று மிகுபதம் வரையாது கொடுத்தோய்

- புறநானூறு - 2

பெருஞ்சோற்று உதியன் சேரலாதன் பாரதப் போர் நிகழ்ந்த காலத்தில் பெருஞ்சோறு அளித்த நிகழ்ச்சியை இப்பாடல் விவரிக்கிறது.
ஈரைம் பதின்மரும் பொருதுகளத்து அவியப்
பேரமர்க் கடந்த கொடிஞ்சி நெடுந்தேர்
ஆராச் செருவின் ஐவர் போல

- பெரும்பாணாற்றுப்படை - 415-417

நன்றி - பொன்.சரவணன் இளமுனைவர் (தமிழ்)