Search This Blog

Thursday, March 20, 2014

Plastic shopping bags can be converted into diesel, natural gas and other useful petroleum products

Plastic shopping bags, an abundant source of litter on land and at sea, can be converted into diesel, natural gas and other useful petroleum products, researchers report.The conversion produces significantly more energy than it requires and results in transportation fuels -- diesel, for example -- that can be blended with existing ultra-low-sulfur diesels and biodiesels. Other products, such as natural gas, naphtha (a solvent), gasoline, waxes and lubricating oils such as engine oil and hydraulic oil also can be obtained from shopping bags.
A report of the new study appears in the journal Fuel Processing Technology.
There are other advantages to the approach, which involves heating the bags in an oxygen-free chamber, a process called pyrolysis, said Brajendra Kumar Sharma, a senior research scientist at the Illinois Sustainable Technology Center who led the research. The ISTC is a division of the Prairie Research Institute at the University of Illinois.
"You can get only 50 to 55 percent fuel from the distillation of petroleum crude oil," Sharma said. "But since this plastic is made from petroleum in the first place, we can recover almost 80 percent fuel from it through distillation."
Americans throw away about 100 billion plastic shopping bags each year, according to the Worldwatch Institute. The U.S. Environmental Protection Agency reports that only about 13 percent are recycled. The rest of the bags end up in landfills or escape to the wild, blowing across the landscape and entering waterways.
Plastic bags make up a sizeable portion of the plastic debris in giant ocean garbage patches that are killing wildlife and littering beaches. Plastic bags "have been detected as far north and south as the poles," the researchers wrote.
"Over a period of time, this material starts breaking into tiny pieces, and is ingested along with plankton by aquatic animals," Sharma said. Fish, birds, ocean mammals and other creatures have been found with a lot of plastic particles in their guts.
Whole shopping bags also threaten wildlife, Sharma said.
"Turtles, for example, think that the plastic grocery bags are jellyfish and they try to eat them," he said. Other creatures become entangled in the bags.
Previous studies have used pyrolysis to convert plastic bags into crude oil. Sharma's team took the research further, however, by fractionating the crude oil into different petroleum products and testing the diesel fractions to see if they complied with national standards for ultra-low-sulfur diesel and biodiesel fuels.
"A mixture of two distillate fractions, providing an equivalent of U.S. diesel #2, met all of the specifications" required of other diesel fuels in use today -- after addition of an antioxidant, Sharma said.
"This diesel mixture had an equivalent energy content, a higher cetane number (a measure of the combustion quality of diesel requiring compression ignition) and better lubricity than ultra-low-sulfur diesel," he said.
The researchers were able to blend up to 30 percent of their plastic-derived diesel into regular diesel, "and found no compatibility problems with biodiesel," Sharma said.
"It's perfect," he said. "We can just use it as a drop-in fuel in the ultra-low-sulfur diesel without the need for any changes."

Story Source:
The above story is based on materials provided by University of Illinois at Urbana-ChampaignNote: Materials may be edited for content and length.

Journal Reference:
  1. Brajendra K. Sharma, Bryan R. Moser, Karl E. Vermillion, Kenneth M. Doll, Nandakishore Rajagopalan. Production, characterization and fuel properties of alternative diesel fuel from pyrolysis of waste plastic grocery bagsFuel Processing Technology, 2014; 122: 79 DOI: 10.1016/j.fuproc.2014.01.019

செய்வினை நீக்கும் எளிய பரிகாரமுறை

செய்வினை நீக்கும் எளிய பரிகாரமுறை இக்காலத்தில் பொறாமை, வஞ்சனை கொண்ட மனிதர்கள் தமது எதிரிகளை நேரடியாக எதிர்க்க துணிவில்லாமல் மறைமுகமாக தாக்கி அழிக்கவே ஏவல், பில்லி, சூனியம் மற்றும் செய்வினை இவற்றை செய்கின்றனர். இப்படிப்பட்ட செய்வினை, ஏவல், பில்லி, சூனியம், கண்திருஷ்டி மற்றும் பிற தீயசக்திகளும் எதிர்மறை சக்திகளும் அழிந்தோட ஒரு எளிய முறை உண்டு.

இதோ அதன் செய்முறை…!

பொருட்கள் அளவு:

1. வெண்கடுகு - 250 கிராம்
2. நாய்க்கடுகு - 250 கிராம்
3. மருதாணி விதை - 250 கிராம்
4. சாம்பிராணி - 250 கிராம்
5. அருகம்புல் பொடி - 50 கிராம்
6. வில்வ இலை பொடி - 50 கிராம்
7. வேப்ப இலை பொடி - 50 கிராம்

இவை அனைத்தும் நாட்டு மருந்து கடைகளில் வெகு எளிதாக கிடைக்கக்கூடியவை. சாம்பிராணியை மட்டும் பொடி செய்து கொண்டு மீதமுள்ள 6 பொருட்களுடன் சேர்த்து ஒரு கலனில் அடைக்கவும்.

இவ்வாறு தயாரிக்கப்பட்ட பொருட்களின் கலவையை செவ்வாய், வியாழன் மற்றும் ஞாயிறு கிழமைகளில் அடுப்புக்கரி நெருப்பில் தூவி தூபம் போடவும். தி்னமும் செய்தால் தவறில்லை. 48 நாட்களுக்குள் நிச்சயம் பலனுண்டாகும். ஏவல், பில்லி, சூனியம், செய்வினை, எதிர்மறை மற்றும் தீய சக்திகள் அனைத்தும் நிச்சயம் நீங்கும்.

குடும்பத்தில் அமைதி உண்டாகும். குடும்பத்தின் உறுப்பினர்களிடையே ஒற்றுமை உண்டாகும். லட்சுமி கடாட்சம் உண்டாகும். மேற்கண்ட கலவையை நெருப்பில் தூவும் போது கீழே சிந்தாமல் கவனித்துக் கொள்ளவும்.

ஏனெனில் மேற்கண்ட 7 பொருட்களும் தெய்வத்தன்மை பொருந்தியவை. யார் காலிலும் படக்கூடாது. மேற்கண்ட முறையை பயன்படுத்தி மாந்திரீக கோளாறுகளிலிருந்து பாதிக்கப்பட்ட குடும்பங்களை காப்பாற்ற எல்லாம் வல்ல இறைவன் அருள் துணை நிற்கும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.

வட்டச் சிதைவுகள் - ஜார்ஜ் லூயி போர்ஹே தமிழில் - பிரமிள்

அந்த ஏகோபித்த இரவில் அவன் தரையிலிறங்கியதை யாரும் காணவில்லை. அவனது மூங்கில் படகு அங்கே அப்புனிதச் சேற்றில் புதைந்ததையும் யாரும் காணவில்லை. ஆனால் ஒரு சில நாட்களில், பேச்சு வார்த்தைக்கு இடம் கொடுக்காத இந்த மனிதன் தெற்கிலிருந்து வந்திருக்கிறான் என்பதையோ, நதி வரும் வழியில், மேலே, மலையின் பிளந்த பகுதியில் கிரீக் மொழியினால் ஜென்ட் மொழி பாதிப்படையாமலும் குஷ்டரோகம் அடிக்கடி வராமலும் உள்ள எண்ணற்ற borgesகிராமங்களுள் ஒன்று அவனது ஊர் என்பதையோ அறியாதவர் யாருமில்லை.
அந்தப் புகைநிற மனிதன் குனிந்து சேற்றை முத்தமிட்டான் என்பதும், தசையைக் கிழிக்கும் கூரிய இலைகளை (உணராததால் என) ஒதுக்காமலே கரையேறினான் என்பதும், அருவருப்புடனும் ரத்தக் கறையுடனும் தவழ்ந்தபடி எப்போதோ அக்னி நிறமாயிருந்து இப்போது சாம்பல் நிறமாகிவிட்ட ஒரு புலியினதோ குதிரையினதோ சிலை கிரீடமாக நிற்கும் ஒரு வட்ட அடைப்பை நோக்கி ஏறினான் என்பதும் தான் மிக நிச்சயமானது. புராதன அக்னி ஒன்றினால் விழுங்கப்பட்டு, விஷப்புகை போன்ற கானகத்தினால் புனிதத்துவத்தை இழந்து, அதன் கடவுளும் மனித வழிபாட்டை இழந்துவிட்ட ஒரு கோவில்தான் இந்த வட்டம்.
அவன் சிலையின் பீடத்தடியில் உடலை நீட்டிப் படுத்துக் கொண்டான். உச்சிச் சூரியன் அவனை விழிப்படையச் செய்தது. தனது காயங்கள் ஆறிவிட்டதில் அவன் வியப்புறவில்லை. சோகை படிந்த கண்களை மூடி அவன் துயின்றான். - உடலின் பலவீனத்தால் அல்ல, மனசின் தீர்மானத்தால். இந்தக் கோயில்தான் தனது மாற்ற முடியாத தீர்மானத்திற்குத் தகுந்த இடம் என்று அவனுக்குத் தெரியும். கீழ் நதிப்புறத்தில் இப்போது எரிந்து இறந்துவிட்ட கடவுள்களின் இன்னொரு ஆலயம் ஓயாது வளரும் மரங்களினால் மூழ்கடிக்கப்படாமல் தப்பித்து இருக்கிறது என்று அவனுக்குத் தெரியும்.
காலையளவில் ஒரு பறவையின் ஆறுதல்படுத்த முடியாத அலறலில் அவன் கண் விழித்தான். பாதரட்சையற்ற காற் சுவடுகளும், உணவுக்கு சில ஃபிக் இலைகளும், ஒரு கூஜாவும், அவனிடமிருந்து பாதுகாப்பை வேண்டியோ, அவனது மந்திர சக்திக்கு அஞ்சியோ, அந்தப் பிரதேசத்து மனிதர்கள் அவனது நித்திரையை ஒற்றுப் பார்த்திருக்கிறார்களென எச்சரித்தன. பயத்தின் குளிரில் அவன் கல்லறை போன்ற ஒரு வெடிப்பை அங்கே சிதைந்த ஒரு சுவரில் தேடிப் பழக்கமில்லாத இலைகளினுள்ளே மறைந்து கொண்டான்.
அவனை வழி நடத்திய நோக்கம் இயற்கையை மீறிய ஒன்றாயினும் சாதிக்க முடியாததல்ல. ஒரு மனிதனைக் கனவு கொள்ள அவன் விரும்பினான். அம்மனிதனை அவனது சிறு சிறு நுட்பங்களில் பரிபூரணமாகக் கனவு கண்டு அவனை நிதர்சன உலகிலே எழச் செய்ய அவன் விரும்பினான். இந்த மாந்திரீக முயற்சி அவனது மனப்பரப்பு முழுவதையும் வரளச் செய்து விட்டது. யாராவது அவனது பெயரை அல்லது அவனது முன் வாழ்வில் ஒரு நிகழ்ச்சியைப் பற்றிக் கேட்டிருந்தால் அவனால் பதில் தந்திருக்க முடியாது.
இந்த சிதைந்த கானகக் கோயில் அவனது தேவைக்குப் பொருந்தியிருந்தது. ஏனெனில் அவனது குறைந்தபட்ச அளவு காட்சியுலகு அது. தொழிலாளர்கள் சமீபத்திருப்பதுகூட அவனுக்குப் பொருந்தியிருந்தது. ஏனெனில் அவனது எளிய தேவைகளை நிரப்ப அவர்கள் தாங்களே பொறுப்பெடுத்துக் கொண்டார்கள். அவர்கள் அவனுக்குக் கொண்டு வந்த அரிசி உணவும் பழமும் நித்திரைக் கனவு என்ற ஒரே முயற்சிக்காக அர்ப்பணிக்கப்பட்டிருந்த அவனது சரீரத்துக்குப் போதுமானதாக இருந்தது.
ஆரம்பத்தில் அவனது கனவுகள் ஒரே குழப்பமயமாயிருந்தன. பிறகு ஒரு சிறு கால அளவில், அவை ஒன்றை ஒன்று மறுத்து பின் இவ்விரு எதிரிடைகளும் இணங்கி வருவதான நியதி கொண்டன. இந்த வேற்றூர் மனிதன், வட்டவடிவமாய், ஓரளவில் இந்த எரிந்த கோயிலேயான ஒரு போட்டி அரங்கத்தின் மையத்திலே தான் இருப்பதாகக் கனவு கண்டான்.
உறவு கொள்ள மறுக்கும் மாணவர்கள், தொங்கும் பலகை ஆசனங்களில் முகிற்கூட்டங்கள் போல் நிரம்பியிருந்தனர். அதி தூரத்து மாணவர்களின் முகங்கள், தாரகைகளின் உயரத்தில் பல நூற்றாண்டுகளின் தூரத்தில் தொங்கின ஆனால் அவர்களது முகங்கள் ஸ்பஷ்டமாகத் தெரிந்தன. இந்த மனிதன் தனது மாணவர்களுக்கு உடற்கூறு, பிரபஞ்சவியல், மாந்திரீகம் என்ற துறைகளில் உரை நிகழ்த்தினான். தங்களது வெற்று மாயை நிலையிலிருந்து தங்களில் ஒருவனை ரட்சித்து நிதர்சன உலகினுள் மாறி நுழைய வைக்கக் கூடியது இப்பரீட்சை என இதன் முக்கியத்தை ஊகித்தறிந்தவை போல அம்முகங்கள் ஆவல் அவசத்தோடு இவன் உரைக்குக் காது கொடுத்துக் கேட்டு புரிந்து கொண்ட வகையாகப் பதிலிறுக்க முயன்றன. விழிப்பிலும் சரி தூக்கத்திலும் சரி இம் மனிதன் தனது ஆவிகளின் பதில்களை ஆராய்ந்தான். போலிகளினால் தான் ஏமாந்து போய்விடாமல் பார்த்துக் கொண்டான். அதோடு, சில சிக்கல்களின்போது வளர்ந்து கொண்டிருக்கும் அறிவு ஒன்றை அவன் உணர்ந்தான். இவ்வகையாக, பிரபஞ்சத்தில் பங்கு கொள்வதற்குத் தகுதியான உயிர் ஒன்றை அவன் தேடிக் கொண்டிருந்தான்.
***
தனது சிந்தாந்தத்தைப் பேச்சு மூச்சற்று ஏற்றுக் கொள்பவர்களிடமிருந்து எதையும் எதிர்பார்க்க முடியாதெனவும், ஆனால் அவ்வப்போது தன்னை எதிர்க்க முனைந்தவர்களிடமிருந்துதான் எதையும் எதிர்பார்க்கலாம் எனவும் ஒன்பது பத்து இரவுகளின் பின் அவன் ஒருவித கசப்போடு புரிந்துகொண்டான். இவர்களுள் முதல் ரகத்தினர் அன்புக்கும் ஆதரவுக்கும் உரியவர்களானாலும், தனிமனிதர்களென உயர முடியவில்லை. இரண்டாவது ரகத்தினரோ முன்னவர்களைவிட ஒரு சிறிது உந்நதமானவர்களாக ஏற்கனவே வாழ்வு பெற்றிருந்தனர். ஒரு முன் மாலைப் போது (இப்போது முன் மாலைகளும் துயிலுக்கு அளிக்கப்பட்டிருந்தன. இப்போது சூர்யோதயத்தில் ஒரு சில மணி நேரங்கள்தான் அவன் விழித்திருந்தான்) அவன் ஒரேயொரு மாணவனை வைத்துக்கொண்டு, மீதியிருந்த பிரமாண்டமான மாயாரூப சீடர் குழு முழுவதையும் அப்படியே நீக்கிவிட்டான். மீந்திருந்தவன் உறவு கொள்ளக் கடினமான, சில வேளை அடங்க மறுக்கிற ஒரு சிறுவன். அவன் முகவெட்டு அவனைக் கனவு கொண்டிருந்தவனுடைய முகவெட்டை ஒத்திருந்தது. தன்னுடைய சகமாணவர்களை அப்படி அநாயசமாகத் துடைத்து அழித்து விட்டது பற்றி அவன் வெகு நாள் நிச்சலனப்படவில்லை. ஒரு சில தனி வகுப்புகளோடு, அவனது முன்னேற்றம் ஆசிரியரைத் திகைக்க வைக்கப் போதுமானதாக இருந்தது. இருந்தும் ஒரு எதிர்பாராத விபத்து நேர்ந்துவிட்டது.
ஒரு நாள் அவன் ஒரு பிசுபிசுத்த பாலைவனத்திலிருந்து புறப்பட்டாற்போல் தனது நித்திரையிலிருந்து விழித்தவன், உபயோகமற்றுக் கிடந்த முன் மாலை ஒளியைக் கண்டு அதை விடிகாலை என்று குழம்பினான். அதோடு தான் அன்று கனவு காணவில்லை என்பதைத் திடீரென உணர்ந்தான். அன்றிரவு முழுவதும், பகல் முழுவதும் துயிலின்மையின் தாங்கொண்ணாத் தெளிவு அவனைப் பீடித்தது. தன் பலத்தை இழந்து களைப்புறுவதற்காகக் கானகத்துள் அலைந்து ஆராய முயன்றான். நச்சுத் தாவரங்களிடையே உபயோகமற்ற ஆரம்ப தர்சன வீச்சுக்களின் நாளங்கள் ஓடிய துயில் கணங்கள் சில அவனுக்குக் கை வந்தன. அந்த மாணவ சரீரத்தை அவன் சேர்த்தெடுக்க முயன்றும், ஒரு சில உற்சாக மந்திரங்களை அவன் உச்சரித்து முடிக்கு முன்பே அவ்வுடல் ஊனமாகி மறைந்தது. ஓரளவுக்கு ஓய்வற்றதென்ற இத்தபஸினால் அவனது கிழக் கண்களில் கோபக் கண்ணீர் எரிந்தது.
மகத்தானதும் கீழ்மையானதுமான ஒரு முறைமையின் எல்லாப் புதிர்களையும் அவன் ஊடுருவ வேண்டுமாயினும் ஒன்றுக்கொன்று வரிசைக் கிரமமற்று, அசைவு மயமாகவே இருக்கும் கனவுப் பதார்த்தங்களை கொண்டு உருச் சமைப்பதென்பதுதான் எவனும் செய்யக்கூடிய கடினமான காரியம் என அவன் உணர்ந்தான். இது மணலைக் கயிறாகத் திரிப்பதைவிட, முகமற்ற காற்றை நாணயங்களாகப் பதிப்பதைவிடக் கடினமானது. தன்னை வழி தடுமாற்றிய பிரம்மாண்ட மயக்கத்தை மறப்பதென சபதமெடுத்துக் கொண்டு அவன் வேறொரு வேலை முறையைத் தொடரந்தான். அம்முறையைத் தொழிற்படுத்து முன்னால் தனது மயக்கத்தின்மூலம் இழந்த பலத்தைத் திரும்பப் பெறுவதற்காக ஒரு மாதத்தைச் செலவிட்டான். கனவு காணவேண்டுமென்ற முன்னேற்பாட்டை முதலில் கைவிட்டான். உடனேயே என ஒவ்வொரு நாளும் ஒரு கணிசமான வேளை நித்திரை அவனுக்குக் கை வந்தது. இந்தக் காலகட்டத்தில், கனவு கண்ட ஒரு சில வேளைகளை அவன் அலட்சியப் படுத்திவிட்டான். தனது பெரு முயற்சியை ஆரம்பிப்பதற்கு, சந்திரவட்டம் பூரணமாகும்வரை காத்திருந்தான். பிறகு முன் மாலைப் போது நதி நீரில் தன்னைப் புனிதமாக்கிக் கொண்டபின், ஒரு மகத்தான நாமத்தின் தேர்ந்தெடுத்த அசைகளை உச்சரித்துவிட்டுத் துயிலில் ஆழ்ந்தான். உடனேயே ஹ்ருதயம் துடிதுடிக்கக் கனவு காணத் துவங்கி விட்டான்.
இன்னும் ஆணோ பெண்ணோவெனத் தெரியாத ஒரு மனித உடலின் அரையிருளினுள் அது கதகதப்பாக, மர்மமாக, ஒரு முஷ்டி அளவினதாய் கரு ரத்த நிறத்தில் அமைந்திருப்பதாக அவன் கனவு கண்டான். ஒரு தீட்சண்யமான அன்புடன் பதினான்கு தெளிந்த இரவுகளாக அவன் அதைப்பற்றிக் கனவு கண்டான். அதை அவன் தீண்டவில்லை. அதற்கு தன்னை சாட்சியாக நிற்க, அதை அவதானிக்க, அடிக்கடி அதைத் தனது பார்வையினாலேயே திருத்தியமைக்க மட்டுமே அவன் தன்னை அனுமதித்துக் கொண்டான். ஒவ்வொரு கோணத்திலும், ஒவ்வொரு தூரத்திலுமிருந்து அதை நோக்கினான். அதன் மயமாகவே தான் மாறி அதைக் கவனித்தான். பதினான்காவது இரவு அவன் சுவாச கோளத்துக்குச் செல்லும் அதன் ரத்த நாளத்தை தனது ஆள்காட்டி விரலினால் மென்மையாகத் தீண்டினான். அதன் பிறகு முழு ஹ்ருதயத்தையும், அதன் உள்ளையும் புறத்தையும். இச் சோதனை அவனுக்குத் திருப்தியளித்துவிட்டது. ஒரு இரவு வேண்டுமென்றே அவன் கனவு காணவில்லை. அதன்பிறகு ஹ்ருதயத்தை மீண்டும் கவனத்துக்கு எடுத்தான். ஒரு கிரகத்தின் நாமத்தை உச்சரித்து வேறொரு உறுப்பின் கனவுருவை மேற்கொண்டான்.
ஒரு வருஷத்திற்குள் அவன் எலும்புக்கூட்டுக்கும் கண்ணிமைக்கும் வந்துவிட்டான். அளவற்ற தலை மயிர்கள்தான் மிகக் கடுமையான வேலை தரும்போல தோன்றின. அவன் முழுமையில் ஒரு மனிதனைக் கனவு கண்டான். ஒரு இளம் மனிதன். ஆனால் எழுந்து உட்காராத, பேசாத, கண்ணிமைகளைத் திறக்க மாட்டாத மனிதன் இவன். இரவு மாறி இரவு தோறும் இம் மனிதன் துயிலில் கிடப்பதாகவே அவன் கனவு கண்டான்.
***
இறை அறிவின் பிரபஞ்சத்துவத்திலே அரை உத்வேகங்கள் எழுந்து நிற்க முடியாத ஒரு செந்நிற ஆதாமை சமைக்கின்றன. தூசியில் பிறந்த, அரை குறையான, தாறுமாறான தாது நிலையிலுள்ள அதே ஆதாமைப் போன்றவன் தான் இந்த மாந்திரீகனது இரவு ஜ்வாலைகளில் காய்ச்சிச் சமைக்கப்பட்ட கனவுகளின் ஆதாமும். ஒரு முன் மாலையில் இவன் தன் சிருஷ்டியை ஒரேயடியாக அழிக்க எண்ணிப் பின் மனதை மாற்றி கொண்டான். (அவன் அதை அழித்திருந்தானென்றால் நல்லது.) பூமியிலுள்ள தெய்வங்கள் யாவற்றுக்கும் செய்த வழிபாடுகள் முழுவதும் வரண்டு போனதில், அவன், புலியோ குதிரையோ ஆன அங்கிருந்த விக்கிரகத்தின் பாதங்களில் வீழ்ந்து அதன் அமானுஷ்யமான உதவியை வேண்டிக் கெஞ்சினான். அன்று மாலைக் கருக்கலில் அவன் அவ்விக்கிரகத்தைக் கனவில் கண்டான். அக் கனவில் அது உயிரோடு துடிதுடித்துக் கொண்டிருந்தது. அது ஒரு புலிக்கும் குதிரைக்கும் பிறந்த அநாமத்தாக இருக்கவில்லை. ஆனால் அது இவ்விரு ஆக்ரோஷமான பிராணிகளாகவும் -ஒரு காளையாகவும் - ஒரு ரோஜாவாகவும் - ஒரு புயலாகவும் நின்றது. தனது பூவுலக நாமம் அக்னி எனவும் இந்த வட்டக் கோயிலில், (இது போன்ற வேறு கோயில்களில் போல) மனிதர்கள் தனக்குப் பலிகளிட்டு முன்னொரு கால் வழிபட்டார்களெனவும், அக்னியையும் கனவு காண்பவனையும் தவிர மற்றெல்லாரும் கனவில் கிடக்கும் ஆவியுருவை ரத்தமும் தசையுமான மனிதனென்றே நம்பும்படி தான் உயிர்ப்பித்துத் தருவதாகவும் அவனை அது உணரவைத்தது. இம் மனிதனுக்கு எல்லா பூஜை முறைகளிலும் போதனை ஆனவுடன் கோபுரங்கள் இன்றும் நிற்கும் அந்த அடுத்த கோயிலுக்கு இவன் குரலேனும் அந்தப் பாழ்க்கட்டிடத்தில் தன்னை வாழ்த்திப் புகழ அனுப்பிவிடும் படியும் கட்டளையிட்டது. கனவு கொண்டவனின் கனவில் கனவு காணப்பட்டவன் உயிர்த்தெழுந்தான்.
தனக்கு இடப்பட்ட கட்டளைகளை மாந்திரீகன் நிறைவேற்றினான். அவன் ஒரு குறிப்பிட்ட அளவு காலத்தை (முடிவில் இக் கால அளவு இரண்டு வருஷங்களென ஆயிற்று) அவனுக்குப் பிரபஞ்சத்தின் ரகசியங்களையும் அக்னிவழிபாட்டையும் கற்பிப்பதற்கு அர்ப்பணித்தான். மனதுக்குள் அவனிடமிருந்து தான் பிரிவடையவேண்டும் என்ற எண்ணத்தில் வேதனை கொண்டான். பாண்டியத்தியத் தேவை என்ற சாக்கில் ஒவ்வொரு நாளும் கனவு காணும் கால அளவை அதிகரித்துக் கொண்டான். கொஞ்சம் குறைபாடாயிருந்த வலது தோளையும் புதுப்பித்தான். சில வேளைகளில் இதெல்லாம் ஏற்கனவே நடந்திருக்கின்றன என்ற தோற்றம் அவனை சங்கடப் படுத்தியது.... பொதுவாகப் பார்த்தால், அவனது நாட்கள் மகிழ்ச்சியிலேயே கழிந்தன. கண்களை மூடியதும் அவன் நினைவு: இப்போது நான் என் மகனுடன் இருக்கப் போகிறேன். அல்லது வெறுமே: எனது காரணத்தில் வந்த என் மகன் எனக்காகக் காத்திருக்கிறான், நான் அவனிடம் போகாவிட்டால் அவனுக்கு இருப்பு இல்லை.
கொஞ்சம் கொஞ்சமாக அவனை அவன் நிதர்சனத்துக்கு பழக்கப்படுத்த ஆரம்பித்தான். ஒரு தடவை ஒரு தூரத்து நிலச்சிகரத்தில் ஒரு கொடியை நடும்படி அவனுக்குக் கட்டளையிட்டான். மறுநாள் அந்தக் கொடி அந்நிலச் சிகரத்தின் மேல் படபடத்துக் கொண்டிருந்தது. இதற்குச் சமமான வேறு பரிசோதனைகளையும் செய்து பார்த்தான் - ஒவ்வொரு தடவையு முந்தியதைவிடத் துணிகரமானதாக ஒருவிதக் கசப்போடு தன் மகன் பிறப்பதற்கு ஆத்திரப்படுமளவு தயாராகி விட்டான் என்பதை உணர்ந்தான். அன்றிரவு அவனை முதல் தடவையாக முத்தமிட்டு, ஒழுங்கற்று பலமைல்களுக்கு நீண்டு கிடக்கும் காட்டையும் சதுப்பு நிலங்களையும் தாண்டி, வெண்ணிறமாக மாறிக் கொண்டிருக்கும் சிதைவுகளுடன் கீழ் நதிப்புறத்தில் நிற்கும் அந்த மற்றக் கோயிலுக்கு அவனை அனுப்பினான். இதற்கு முன்பே (தனது மகன் தான் ஒரு ஆவியுரு என்பதை அறியாமல், தானும் பிறரைப் போன்ற ஒரு மனிதன் என்று நினைக்க வேண்டும் என) அவனது வாழ்வுத் தொழிலின் ஆரம்ப வருஷ ஞாபகங்கள் யாவற்றையும் அழித்து விட்டான்.
***
அவனது வெற்றியும் சாந்தியும் சலிப்பினால் மாசடைந்தன. காலை மாலை கருக்கல் வேளைகளில் இதே போன்ற பூஜாகிருத்தியங்களை தனது மாயாரூபக் குழந்தையும் கீழ் நதிப்புறத்தில் செய்து கொண்டிருப்பதாகக் கற்பனை செய்து கொண்டு போலும், அங்கிருந்த கற்சிலையின் முன்னால் இவன் சாஷ்டாங்கமாகக் கிடப்பான். இரவு வேளைகளில் அவன் பிறகு கனவு காணவில்லை. அல்லது மற்ற எந்த மனிதனையும் போலத்தான் கனவு கண்டான். பிரபஞ்ச சப்தங்களையும் உருக்களையும் பற்றி அவனது பார்வை ஓரளவு வெளிறிவிட்டது: தனது உயிரிலிருந்ஹ்டு பிரிந்த இவற்றினால், இங்கில்லாத அவனது மகன் போஷிக்கப்பட்டான். தனது வாழ்வின் நோக்கம் நிறைவேறிவிட்டது. அவன் ஒருவகைப் பரவசத்தில் ஆழ்ந்திருந்தான்.
சில வரலாற்றுக்காரர் வருஷங்களாகவும் சிலர் பத்து வருஷப்பிரிவுகளாகவும் கணித்த ஒரு குறிப்பிட்ட காலம் சென்று இரண்டு துடுப்புக்காரர்கள் அவனை ஒரு நள்ளிரவில் எழுப்பினர். அவர்கள் முகத்தை அவனால் சரிவரக் காண முடியவில்லை. ஆனால் வடக்கில் ஒரு கோயிலில் எரிபடாமலே தீயினூடே நடக்கும் சக்திவாய்ந்த மந்திர வசப்பட்ட ஒரு மனிதனைப் பற்றி அவர்கள் பேசினர். மாந்திரீகனுக்கு அந்தக் கடவுளின் வார்த்தைகள் திடீரென நினைவுக்கு வந்தன. உலகில் நிரம்பியுள்ள எல்லாவகை ஜீவர்களினுள்ளும், அக்னி மட்டுமே தனது மகனை ஒரு ஆவியுரு என அறிந்திருந்தது என்பது நினைவுக்கு வந்தது. இந்த ஞாபகம் முதலில் அவனை ஆசுவாசப்படுத்தினாலும் முடிவில் அவனை வதைக்கத் தொடங்கிவிட்டது. தனது மகன் தனக்குள்ள இந்த அசாதாரண சலுகையைப்பற்றிச் சிந்திக்க ஆரம்பித்து ஏதேனும் ஒரு வகையில் தான் ஒரு வெறும் மனப்பிரதிமை என்பதைக் கண்டுபிடித்து விடக் கூடுமோ என அஞ்சினான். ஒரு மனிதனாக இல்லாதிருப்பது, இன்னொரு மனிதனது கனவின் வெளியுறுவாக வாழ்வது - என்ன ஒப்பற்ற அவமானம். பைத்தியக்காரத்தனம்! தனது வெறும் இன்பக் குழப்பத்தில் தான் ஜனிப்பித்த (அல்லது அனுமதித்த) தனது மக்களைப் பற்றி எந்தத் தந்தைக்கும் அக்கறை இருக்கத்தான் செய்யும். ஆயிரத்து ஒரு மர்ம இரவுகளில், அங்கம் அங்கமாகவும் ஒவ்வொரு உள்ளுறுபாகவும் நினைத்துச் சமைத்த தனது மகனைப் பற்றி அந்த மாந்திரீகன் அச்சம் கொண்டது இயல்புதான்.
அவனது மனக்குறைகள், சில குறிப்பிட்ட எச்சரிக்கைகளுடனேயே, திடீரென நின்றன. முதலாவதாக (ஒரு நீண்ட வரட்சியின் பிறகு) ஒரு தூரத்து முகில், ஒரு பறவை போல் கனமற்று ஒரு குன்றின் உச்சியில் தோன்றியது. பிறகு வடக்குப் புறமாக வானம் சிறுத்தையின் ஈறுகளைப் போன்ற ஒரு ரோஜா நிறமாயிற்று அதன் பிறகு இரவின் உலோகத் தகட்டை துருப்பிடித்தாற் போல, புகைமுகில் முகிலாக வந்தது. இவற்றையடுத்து வனமிருகங்கள் பீதி கொண்டு சிதறியோடின. எத்தனையோ நூற்றாண்டுகளின் முன்னால் நடந்ததே மீண்டும் திரும்ப நிகழ்ந்து கொண்டிருந்தது. அக்னிக் கடவுளினது புனித க்ருகத்தின் சிதைவு அக்னியினாலேயே அழிக்கப்பட்டுக் கொண்டிருந்தது. பறவைகளற்ற ஒரு விடி காலையில் அக்னி வட்டம் சுவர்களை நக்கிக் கொண்டிருப்பதை அவன் கண்டான். ஒரு கணம் நீரினுள் ஒதுங்கித் தப்பித்துக் கொள்ள எண்ணினான். ஆனால் உடனேயே தனது வயோதிகத்துக்கும் உழைப்புக்கும் மரணம் முடி சூட்டுவதற்காக வந்திருக்கிறது என உணர்ந்தான். அவை அவனது தசையைக் கிழிக்கவில்லை. அவனைத் தழுவி, சூடோ எரிவோ இன்றி அவன் மேல் பெருகின. ஆசுவாசத்தோடு, அவமானத்தோடு, பயங்கரத்தோடு, தானும் ஒரு மாயாரூபம் என, தன்னையும் யாரோ கனவு கண்டு கொண்டிருக்கிறான் என அவன் உணர்ந்தான்.
The Circular Ruins by Jorge Luis Borges
(மூலம் : ஸ்பானிஷ். ஆங்கில மொழி பெயர்ப்பைத் தமிழில் தருபவர்: தர்மு அரூப் சிவராம்)
நன்றி கசடதபற சிற்றிதழ் - ஜூன் 1971 இதழ் 9 விலை 30 காசு
தட்டச்சு உதவி: சென்ஷி

ஆத்மாநாம் நேர்காணல் - பிரம்மராஜன்

(18. 1. 1951 - 6. 7. 1984)
ஆத்மாநாமின் இயற்பெயர் S. K. மதுசூதன். 1951 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 18ஆம் தேதி பிறந்தார். சென்னையிலேயே வளர்க்கப்பட்டார். தாய்மொழி கன்னடமாக இருந்தபோதிலும் ஆத்மாநாமுக்குத் தமிழில் இருந்த ஈடுபாடு அதிகம். அம்பத்தூரில் சர் ராமசாமி முதலியார் உயர்நிலைப் பள்ளியில் கல்வி பெற்று பிறகு வைஷ்ணவா கல்லூரிக்குச் சென்றார். ஒரு வருட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் பட்டப்படிப்பைathmanam_thumb6 (B. Com) அதே கல்லூரியில் மாலை வகுப்புகளில் சேர்ந்து படித்தார். 1967ஆம் ஆண்டு சதர்ன் சுவிட்ச்கியர்ஸ் என்ற  கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்தார். 1968ஆம் ஆண்டு வேலையை விட்டுவிட்டுக் கணக்குத்துறை சேர்ந்த விஷயங்களைக் கற்க ஆடிட்டர் அலுவலகம் ஒன்றுக்குச் சென்றார். இந்தப் பின்னணி அவருக்கு கோரமண்டல் கார்மெண்ட்ஸ் என்ற கம்பெனியில் வேலை கிடைக்க ஏதுவாக இருந்தது. 3 ஆண்டுகளுக்குப் பிறகு 1971இல் தயார் உடைகள் தயாரிக்கும் நிறுவனமான ரெங்கா அப்பாரெல்ஸ்க்கு மாறினார். இங்கிருந்துதான் ஆத்மாநாமின் சிக்கலான வருடங்கள் ஆரம்பிக்கின்றன. 1978ஆம் ஆண்டு அய்யப்பன் என்பவருடன் சேர்ந்து டாப்டென் என்ற தயார் உடைகளை ஏற்றுமதி செய்யும் நிறுவனத்தை உருவாக்கினார். இதே சமயத்தில்தான் ழ இதழையும் தொடங்கினார். தன்னுடைய நிறுவனத்தைக் கட்டி எழுப்ப இரவுகளிலும் வேலைசெய்ய வேண்டிவந்தது. இரண்டு மூன்று ஈடுபாடுகளில் ஒரே நேரத்தில் தீவிரமாய் இயங்கியபோது Affective Disorder என்ற மனநலத் தாக்குதல் ஏற்பட்டு 1979 புரசைவாக்கத்திலிருக்கும் தனியார் மருத்துவமனையில் ஒரு மாதம் சிகிச்சை பெற்றார். சிகிச்சைக்குப் பிறகு இன்டர் கிராப்ட் என்ற கம்பெனியில் பணிபுரிந்தார். ஆனால் அவருக்கு ஓய்வு முக்கியம் என்று மருத்துவர் கருதியதால் தொடர்ந்து பணிக்குச் செல்ல முடியாத சிக்கல் ஏற்பட்டது. மூளையின் அதி தீவிர இயக்கத்தைக் கட்டுப்பாட்டில் வைக்க ஆத்மாநாம், Lithium, Hyportrym, Largatyl, Fenargon போன்ற மருந்துகளைத் தொடர்ந்து சாப்பிட வேண்டியிருந்தது. 1983 ஆம் ஆண்டு தீபாவளிக்கு ஒரு வாரம் முன்பாகத் தனக்கு சிகிச்சைக்காகத் தரப்பட்ட மருந்துகளையே அளவுக்கு அதிகமாக உட்கொண்டு தற்கொலை செய்துகொள்ள முயன்றார். காப்பாற்றப்பட்டார்.
இந்தச் சமயத்தில் அவர் இடைவிடாது படித்துக்கொண்டிருந்த நூல் A. K. ராமானுஜனின் The Speaking of Shiva. 1983ஆம் ஆண்டு டிசம்பர் இறுதியில் Affective Disorderன் இரண்டாவது தாக்குதல் ஆத்மாநாமுக்கு ஏற்பட்டது. 1984 ஜனவரி இறுதிவரை தனியார் மருத்துவமனையில் சிகிச்கை அளிக்கப்பட்டது. 1984ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் முழுவதும் அவர் பெங்களூரில் அவரது சகோதரர் ரகுநந்தனின் வீட்டில் இருந்தார். மார்ச் 9ஆம் தேதி (1984) தனக்குத் தரப்பட்ட மருந்துகளை உட்கொண்டு இரண்டாவது முறையாகத் தற்கொலை செய்ய முயன்றார். பின்னர் National Institute of Mental Health and Neurological Sciences மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. 1984ஆம் ஆண்டு மார்ச் மாதம் 10ஆம் தேதியிலிருந்து 20 வரை NIMHANSல் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். வீடு திரும்பிய பின்னர் தனது சகோதரர் வீட்டில் எவரிடமும் எதுவும் பேசாமல் இருந்திருக்கிறார். ஏறத்தாழ ‘உயிரற்ற மனித உடம்பாக’ ஆத்மாநாம் வீடு திரும்பியதாக அவரது சகோதரர் ரகுநந்தன் குறிப்பிட்டார். மார்ச் 1984லிருந்து தனது இறுதி மறைவு வரை (ஜு லை 1984) ஆத்மாநாம் தனக்கு வந்த கடிதங்களையோ, பத்திரிகைகளையோ, அழைப்பிதழ்களையோ படிக்கவில்லை. பிரித்துக்கூடப் பார்க்கவில்லை. பெங்களூரில் தன்னுடைய சாவை முன்கூட்டித் தீர்மானித்ததுபோல ஏறத்தாழ 120 தபால் கார்டுகளை வாங்கி வைக்கிருந்திருக்கிறார். நண்பர்களின் முகவரிகள் முதலிலிருந்து கடைசி வரை திருத்தம் செய்து வைக்கப்பட்டிருந்தன.
**********
ந்தப் பேட்டி 14-4-83 அன்று மதியத்திற்குமேல் உதகமண்டலத்தில் நிகழ்த்தப்பட்டது. இடம் செயின்ட் மேரீஸ் ஹில். கோடை என்பதால் கண்ணாடி ஜன்னல்கள் திறந்து விடப்பட்டிருக்கின்றன. தூரத்துத் தோட்டங்களில் மருந்து தெளிக்கும் யந்திரங்களின் தொடர்ச்சியான ரீங்காரம் கேட்கிறது. அறைக்குள் தாமோதர் தீட்டிய தைல வண்ண ஓவியம். அதை நோக்கியபடி ஆத்மாநாம் ஒரு நீல நிற ஒயர் நாடாக்கள் பின்னிய நாற்காலியில் அமர்ந்திருக்கிறார். பேட்டியின்போது Charms சிகரெட்டுகளைப் பிடித்தவண்ணம் இருக்கிறார். ஸ்டீல் டீப்பாயின் மீதிருந்த Nippo batteries-ன்டீ ட்ரேயை சாம்பல் கிண்ணமாகப் பயன்படுத்துகிறார். காலர் வைத்த காக்கியுமல்லாத மிலிட்டரி பச்சையுமில்லாத ஒரு நிறத்தில் ஜிப்பா ஷர்ட் அணிந்திருக்கிறார். பதில்களை இடைவிட்டு நிறுத்திப் பேசுகிறார். சில நேரங்களில் தடையற்ற பிரவாகமாகவும் பதில்கள் வெளிப்படுகின்றன. இந்தச் சமயத்தில் ஆத்மாநாம் படித்துக்கொண்டிருந்த புத்தகங்கள், Stalin : an Impartial Study of the life and works of JosephStalin (Stephen Graham), Octavio Paz-ன் கவிதைகள், Gunter Grass-ன் கவிதைகள், நவீன ஐரோப்பியக் கவிஞர் வரிசையில் வெளிவந்த Tadeuz Rosewicz. பேட்டி பதிவு செய்யப்பட்டுப் பிரசுர நிலையை அடைந்திருக்கிறது. கேள்விகள் மட்டுமே முன்தீர்மானத்துடன் உருவாக்கப்பட்டு இருந்தன. மேலும் அக்கேள்விகளும் ஆத்மாநாமின் பதில்களால் ஈர்க்கப்பட்டுவேறு வடிவங்களை அடைந்திருக்கின்றன. 24-4-83 அன்று இரவு கோவை, அகில இந்திய வானொலி நிலையத்தில் ஒலிபரப்பப்பட்ட இந்தப் பேட்டிக்கும் தொடர்பு ஏதுமில்லை.
பிரம்மராஜன்: தமிழ்ப் புதுக்கவிதைல 20 வருஷம் பழக்கம் இருக்குன்னு கணக்கு வெச்சுக்கலாம். எழுத்து பத்திரிகைல இந்தப் புதுக்கவிதை ஒரு ஆரம்ப நிலைல இருந்தது. கொஞ்சம் கழிஞ்சு கசடதபற பத்திரி்கை காலத்தில எழுதப்பட்ட கவிதைகள் வளர்ச்சியாயிருந்தது. பின்னால ‘ழ’ பத்திரிகையில வந்த கவிதைகள், இப்ப ‘எழுத்து’ கவிதைகள், ‘கசடதபற’ கவிதைகள் என்கிற ஒரு காலப்பிரிவாக வைத்துக்கொள்ளலாம். இவை வளர்ச்சி ரீதியா என்னென்ன நிலைகளில் இருந்தன? இயல்பு ரீதியா என்ன வித்தியாசங்கள் ஏற்பட்டிருக்கு?
ஆத்மாநாம்: தமிழின் புதுக்கவிதைகள் பாரதியாரிடமிருந்து ஆரம்பமாகின்றன என்று கணக்கு பார்த்தா சுமார் 60 ஆண்டுகளுக்குத் தமிழ்ல புதுக்கவிதைகள் இருக்குன்னு சொல்ல முடியும். பாரதியாருக்கு அடுத்து வரக்கூடிய கவிஞர்கள்னு ந. பிச்சமூர்த்தி, கு. ப. ரா, புதுமைப்பித்தன் போன்றவர்களைச் சொல்ல முடியும். ‘எழுத்து’ பிரசுரமான புதுக்குரல்களின் மூலம் தெரியவந்த கவிஞர்களின் பெரும்பான்மையான கவிதைகள் மேற்கத்திய தத்துவத்தையோ அல்லது கிழக்கத்திய
தத்துவத்தையோ தூக்கலாக அறிவிக்கும்படியாக இருந்தன. அதற்கப்பறம்வந்த ‘கசடதபற’ கவிதைகளில் பௌதிக உலகத்தின் தாக்குதல் மற்றும் அனுபவம் வெளிப்படையா தெரியவந்தது. சமீபத்திய ‘ழ’ கவிதைகள் சுய அனுபவம், சுய சிந்தனையின் அடிப்படைல இருந்தன.
பிரம்மராஜன்: எழுபதுகளில் இருந்த புதுக்கவிதைகளுக்கும், தற்போதைய புதுக்கவிதைகளுக்கும் என்ன வித்தியாசம்? முன்னேற்றம் ஏதும் இருக்கிறதா?
ஆத்மாநாம்: 70களில் இருந்த புதுக்கவிதைகள் விரைவாக உற்பத்தி செய்யப்பட்டவை. தற்போது கொஞ்சம் நிதானமாக யோசித்து எழுதப்படுகின்றன. 70ன் கவிதைகள் இன்றைய பிரபல வாரப் பத்திரிகைகளில் வெளிவரும் கவிதைகளுக்கு முன்மாதிரியாக அமைந்துவிட்டது ஒரு சோகமான விஷயம்.
பிரம்மராஜன்: நடை இதழில் சி. மணி, ‘புதுக்கவிதை புரியவில்லை’ என்று ஒரு கட்டுரை எழுதியிருந்தார். அதாவது 1969-70ல். இன்றைக்கும் இந்த நிலை மாறிவிடவில்லை. இதுபற்றி?
ஆத்மாநாம்: இதைப்பற்றிச் சொல்லும்பொழுது - இரண்டு விதமான சிந்தனைப் போக்குகள் கவிதைகளில் இருப்பதால் - ஒருவிதப் போக்கின் கவிதைகள் படித்தவுடன் புரிந்துவிடுகின்றன, இன்னொரு வகை மீண்டும் ஓரிரு முறை படித்தவுடன் ஓரளவோ அல்லது முழுமையாகவோ புரிகின்றன. ஆனால் புரிதல் என்பது தனிப்பட்ட நபரின் விஷயமாகும். எனவே கவிதைகள் புரிகின்றன, புரியவில்லை என்பது தன்னிலை விளக்கமாகத்தான் அமைகின்றது.
பிரம்மராஜன்: ஒரு நல்ல கவிதைக்கும் அதிலிருக்கும் obscurity, அதாவது புரியாத தன்மைக்கும் சம்பந்தமிருக்கா?
ஆத்மாநாம்: இது கவிதையின் கருப்பொருளைப் பொறுத்த விஷயம். ஒருவரின் அனுபவம் சிக்கலானதாக இருந்தால் கவிதைகள் இருண்மையுடன் கூடியதாக இருக்கும். சிலசமயம் கவிதைகள் தெளிவாகவே வெளியாகவும் கூடும். எனவே கவிதைக்கும் obscurityக்கும் நேரடித்தொடர்பு இருக்க வேண்டிய அவசியமில்லை. சில கவிதைகள் படித்தவுடன் புரிந்துவிடுவதால் அது வார்த்தைக்கு மீறிய பொருளைக் கொள்ளவில்லை அல்லது கொண்டிருக்கிறது என்று சொல்லமுடியாது. அதே சமயம் ஒரு கவிதை புரியவில்லை என்னும் பொழுதும் அந்தக் கவிதைவில் குற்றமுள்ளதுஅல்லது வாசகனிடம் குற்றமுள்ளது என்றும் சொல்லமுடியாது. சிறிது காலம் தாழ்த்தித்தான் எதுவும் சொல்ல முடியும்.
பிரம்மராஜன்: ஒரு கவிதை சிக்கலா இருக்கறதுக்கு வாழ்க்கைல இருக்கற complexity காரணமா, இல்லை அதை எழுதின கவிஞன் ரொம்ப complex ஆன அனுபவமுடையவனா இருக்கான்கிறது காரணமா, அல்லது அவனது சிந்தனை, வெளிப்பாட்டு முறையே complex ஆக இருப்பது காரணமா? சிந்தனை வெளிப்பாட்டு முறையே complex ஆக
இருக்கும்போது it is indirectly influenced by his sociallife. அதனால் வாழ்க்கை நிர்ப்பந்திக்கிறதால்தான் கவிதை complex ஆகிறதா?ஏன்னா, மேற்கத்திய அரூப ஓவியங்களைப் பத்திச் சொல்லும்பொழுது வாழ்க்கை அரூபமாகிவிட்டதால்தான் ஓவியங்களும் அரூபமாயிருச்சுங்கறாங்க.
ஆத்மாநாம்: கவிதைகள், ஓவியங்கள் அரூமாயிருப்பது காலத்தோட நிர்ப்பந்தம்.
பிரம்மராஜன்: விளக்கமா சொல்லுங்க.
ஆத்மாநாம்: ஒரு நேரிடையான புகைப்படத்துடன் ஓவியத்தை ஒப்பிட்டுப்பார்க்கும்போது ஓவியம் குழப்பமாகத் தெரிகிறது. ஆனால் ஓவியம் வரைபவன் தன் முழு தீட்சண்யத்தையும் அதில் கொண்டுவருவதற்காக அப்படி வரைகிறான். ஆனால் கவிதை புரியாததா வருதுன்னு சொல்லும்போது அந்த obscurity ஒரு சில சமயம் forced obscurity ஆக இருக்க முடியும். சில விஷயங்களை நேரடியாக எழுத்தின் மூலம் சொல்ல முடியாது. எனவே வேறுவிதமான வார்த்தைகள் மூலமாய் அதைத் தெரிவிக்கிற முயற்சிகளாக இருக்க முடியும். உதாரணமாக ‘மறு பரிசீலனை’ என்ற கவிதையில் கடைசி வரி.
பிரம்மராஜன்: மறு பரிசீலனை உங்க கவிதை இல்லையா?
ஆத்மாநாம்: ஆமாம். அதில ‘புறப்பட்டாகிவிட்டது கறுப்புப் படை’, அதுக்கு முன்னாடி ‘தொண்டையில் சிக்கிக்கொண்ட மீனின் முள் என’, அப்பறம் ‘துணிக் கயிற்றில் தொங்கும் குரல்வளைகள் போல’ இப்படிப் பல விஷயங்களை indirect ஆகச் சொல்லவேண்டியிருக்கிறது. அந்த நேரத்தில் obscurity வருது.
பிரம்மராஜன்: அதைத் தவிர்க்க முடியாதுன்னு சொல்றீங்க.
ஆத்மாநாம்: அது ஒரு காலத்தின் நிர்ப்பந்தம்னு ...
பிரம்மராஜன்: அதாவது வெளிப்பாட்டில் தவிர்க்க முடியாததா அல்லது கருப்பொருளிலேயே தவிர்க்க முடியாததா?
ஆத்மாநாம்: அது situationsனால தவிர்க்க முடியாததாகுது.
பிரம்மராஜன்: Situationsனா? இன்னும் தெளிவா சொல்லணும் நீங்க.
ஆத்மாநாம்: Situationsனு சொல்லும்போது ...
பிரம்மராஜன்: ஒரு காலகட்டம்னு சொல்லலாமா அதை?
ஆத்மாநாம்: ஒரு காலகட்டத்தின், சமூக, அரசியல், பொருளாதாரப் பின்னணிகளைப் பொறுத்து அது அமையறது.
பிரம்மராஜன்: சில கவிதைங்க ரொம்ப plain ஆகவே இருக்கு. சிக்கலான வார்த்தைங்க ஏதும் போடறதில்லை. ஆனா படிச்சு முடிச்ச உடனே comprehensiveஆக ஓரு ஒட்டுமொத்தமான பார்வைக்குப் புரியாம போயிடறது. இதை plain poetryன்னு நாம எடுத்துக்கிட்டோம்னா plain
poetryகூட புரியாம போயிடறதுக்கு chance இருக்குன்னு அர்த்தம்தானே. இதைப் பத்தி நீங்க ஏதாவது சொல்றீங்களா...
ஆத்மாநாம்: Plain poetryன்னு சொல்லும்போது ஆனந்தோட பல கவிதைகள் plain poetry ஆகதான் வருது...
பிரம்மராஜன்: உதாரணத்துக்கு எதையாவது சொல்ல முடியுமா... ?
ஆத்மாநாம்: ‘ம்... அதோ அந்தச் சிறுபறவை அழைத்துவரும் மேகம் தண் என எனை நிறைக்கையில், நான் இல்லாது போவேன்’- இந்தக் கவிதையில் அந்தப் பறவை, அப்றம் ‘நான் இல்லாது போவேன்’ அப்படின்ற expression எல்லாமே தெளிவாக இருக்கு.
பிரம்மராஜன்: அதாவது statement plain ஆக இருக்கு.
ஆத்மாநாம்: ஆமாம். ஆனா முழுக்கவிதையும் படிச்சா உங்களுக்கு அதில் புரியாத ஏதோஒரு அம்சம் இருக்குன்னு, அதில் அவர் உணர்ந்த ஏதோ அனுபவம் உங்களுக்குச் சரியா transfer ஆகலை அப்படிங்கற மாதிரி quality அந்த poemல இருக்கு. அதனால் Simple poemகூட complexஆக இருக்க வாய்ப்புகள் இருக்கு.
பிரம்மராஜன்: அதையேதான் நானும் கேக்கறேன்.
ஆத்மாநாம்: இன்னொரு நேரத்திலே ஒரு complex poem, ஒரு absurd poem ஒண்ணை நாம assess பண்ணி பாக்கறப்ப புரியக்கூடியதா இருக்கு. இதுக்கு உதாரணம் என்னோட கவிதைகள்லேர்ந்தே எடுத்துக்காலம்.
பிரம்மராஜன்: எந்தக் கவிதைய எடுத்துக்கலாம்?
ஆத்மாநாம்: என் ‘மறுபரிசீலனை’ கவிதையையே எடுத்துக்கலாம். அது நேரிடையா obscure poem கிடையாது; absurd poem ஆகச் சொல்லலாம். கொலாஜ் மாதிரி various cuttingsஐ வச்சு ஒரு paintingஐ paste செய்யற மாதிரி.
பிரம்மராஜன்: இப்படிச் சொல்லலாமா? absurdஆக இருக்கறது ரொம்ப logical ஆகப் பாக்கறவனுக்கு obscure ஆகத் தெரியலாமில்லையா?
ஆத்மாநாம்: That is possible.
பிரம்மராஜன்: ஏன்னா எல்லாம் ஒரு ஒழுங்கிலேயே இருக்கணும்னு எதிர் பார்க்கிறவனுக்கும் absurdஆக இருப்பது ஒரு ஒழுங்கில்லாததாய்த் தோன்றலாம். அதனால இன்றைய சூழல்ல விளக்கம் தர்றது அதாவது interpretations தவிர்க்க முடியாததாகிப் போகிறது. இதற்குக் காரணம் பகையான ஒரு சமூகத்தில் கவிஞன் அந்நியமாகிப் போனதாலா? அல்லது கவிதைங்கற ஒரு அறிவுத்துறையிலே, மற்ற அறிவுத் துறைகளின் பாதிப்புகள், உதாரணத்திற்கு சைக்காலஜி, பெயிண்டிங், இசை மற்றும் ஆஸ்ட்ரோஃபிஸிக்ஸ், டைம் இந்தமாதிரி விஷயங்கள் கலந்துவிட்டது காரணமா?
ஆத்மாநாம்: இதில அந்நியமாகிப் போறதுங்கறது அம்சம் பல நூற்றாண்டுகளாகவே மனிதன் ஒரு சமூகத்திலிருந்து அந்நியமாகிப்போய் வரான்.
அதனால ஒவ்வொரு காலகட்டத்திலேயும் அந்நியமாதல்ங்கற அந்தவிஷயம் உணர்ந்தோ உணராமலோ நடந்திருக்கு. அவன் எழுத் தாளனாயிருந்தா எழுத்திலேகொண்டுவரான். ஓவியனா இருந்தா அதை ஓவியத்துல கொண்டுவரான். அதனால் இந்த அந்நியமாதல்ங்கறதநாம பல ஆயிரம் வருஷங்களாகவே ஒரு விதத்துல உணர்ந்து வரோம். இந்திய சிற்பங்களில் இருக்கக்கூடிய சில புரியாத் தன்மைகள் - யாளி மாதிரி - இல்லாத மிருகங்கள் ...
பிரம்மராஜன்: புரியாத மிருகங்கள...
ஆத்மாநாம்: ஆமாம். புரியாத மிருகங்களைக் கொண்டுவரும்போது அந்த இடத்தில் அவன் அவனுடைய கற்பனையில் அந்நியமானதால்தான் அந்தமாதிரி கொண்டுவர முடிஞ்சிருக்கு. ஆனா இன்றைக்கு ஓருவன் அந்நியமாகிப் போறான்னா அதை அவன் முழுக்க முழுக்க உணர்றான்.
பிரம்மராஜன்: இல்ல... நான் கேக்கற கேள்வி ...
ஆத்மாநாம்: நீங்க கேக்கற கேள்வி பாதிப்புகள், ஓவியம் மற்றும் சைக்காலஜி போன்ற அறிவுத்துறைகள்லயிருந்து வந்த விஷயமான்னு ...
பிரம்மராஜன்: இல்ல... கவிதைங்கற துறையில ஒரு perceptive poet வேறுசில துறைகளை அனுமதிக்கிறான். தன் சிந்தனைக்குள்ள அப்படி அவன் அனுமதிக்கறதால கவிதைகள் சிக்கலாகறதான்னு கேக்றேன்.
ஆத்மாநாம்: இல்லை... அதில தெளிவுதான் வர முடியுமே தவிர...
பிரம்மராஜன்: தெளிவு கவிஞனுக்கு வர முடியும். இந்தத் துறைகள் பற்றித் தெரியாத ஒருவாசகனுக்குத் தெளிவின்மை வரக் காரணமாக இருக்க லாம் இல்லையா?
ஆத்மாநாம்: இருக்கலாம்.
பிரம்மராஜன்: வேறு ஏதாவது விளக்கம் தர முடியுமா? இதைத்தவிர inter- pretationsன் அவசியத்தைப் பற்றி ஏதாவது சொல்லமுடியுமா?
ஆத்மாநாம்: சில கவிதைகள் புரியாமயே போகிறபோது அதைப் புரிஞ்சிருக்கிற ஒருத்தர் வந்து விளக்க முற்படறார். அதாவது ஒருத்தருடைய சுய அனுபவமானது இன்னொருத்தருக்கு முழுக்க முழுக்கவோ இல்லை ஓரளவுக்கோ அந்த அனுபவத்தின் கிட்ட நெருங்கற மாதிரி இருக்கும்போது அந்தக் கவிதையை அவர் புரிஞ்சுக்கறார்னு சொல்ல முடியும். அதனால இது புரியாத சில வாசகர்களுக்கு விளக்க முற்படறார். இதன் மூலமா poetsக்கு quantity wise ஒரு contribution இருக்கு. உங்க கவிதைகளைப் புரியலைன்னு first readingல சொல் லிடறவங்க எவ்வளவோ பேர் இருக்காங்க. ஆனா அதுக்குத்தான் முன்னாலேயே 2அல்லது 3 தடவை படிக்கணும்னு சொல்லியிருக்கு. அப்பறம் உங்க interpretation பிரகாரமா ஒரு வாசகன் ஒரு கவிஞனின் அனுபவத்துக்கு இணையா தன்னை உயர்த்திக்கணும்கற ஒரு எதிர்பார்ப்பு வந்து அந்த இடத்துல இருக்கு. ஆனா நேரிடையா ஒரு வாச
கன் எங்கேயோ இருக்கான். ஐநூறு கிலோமீட்டர் தள்ளி இருக்கான். அவன் இந்தக் கவிதையைப் படிக்கிறான். அவனுக்கு அந்தக் கவிதை புரியுணும்னு சொல்லும்போது வேறு யாரோ ஒருவர் அந்தக் கவிதைக்கு விளக்கம் சொல்லறப்ப ஓரளவுக்கு உள்ள போறதுக்கு வாய்ப்பு கிடைக்குது. அந்த வகையில அந்தமாதிரி விளக்கங்கள் தேவை. ஏன்னு கேட்டா, கவிதைகள்ல இன்னைக்கும் நாம ஒரு புறப் படற நிலையிலேதான் இருக்கோம். நாம எந்த நிலையிலும் போய்ச் சேர்ந்திடலை.
பிரம்மராஜன்: எழுதப்பட்ட மொழி ஒரு குறியீடுன்னு நாம சொல்றோம். அதை ஒரு அடிப்படையாவெச்சு ஆரம்பிச்சா கவிதையும் எழுதப்பட்ட சொற்களால்தான் ஆகியிருக்கு. அப்ப கவிதைபுரிவதற்கான சாத் தியப்பாடுகள் என்னென்ன?
ஆத்மாநாம்: அகநோக்குப் பார்வைகள் கொண்ட கவிதைகள் சிலதுல மொழி வெறும் குறியீடா மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. உதாரணமா ஆனந்தோட கவிதைல பறவை. அவரோட பல கவிதைகள்ல பறவை வருது. தொடர்ச்சியா வருது. So பறவைங்கறது ஒரு விஷயத்தைக்குறிப்பிடறது. அதாவது பறக்கறது. சுதந்திரமா பறக்கறது. எந்தவிதக் கட்டுப்பாடும் இல்லாம பறக்கறது. அப்படிங்கிறதை அது குறிப்பிடறது. அந்த வகையில ஆனந்தோட கவிதைல பறவைங்கறது ஒரு குறிப்பிட்ட விஷயத்தை ஒரு முழு சுதந்திரத்தோட எங்கே வேணும்னாலும் திரியக் கூடிய வாய்ப்பை எதிர்நோக்கறது. அதனால மொழிப்பயிற்சி ஓரளவுக்கு இருக்கிறவாசகர்கள் குறியீட்டோட நியாயத்தையும் அர்த்தத் தையும் புரிஞ்சுக்க முடியும்.
பிரம்மராஜன்: ஆனா கவிதை எல்லோருக்கும் புரியல. புரியாத கவிதை எழுதறது ரொம்பத் தப்புங்கறமாதிரி சொல்றாங்களே அது பத்தி என்ன சொல்றீங்க? அப்ப எதுக்காக எழுதறீங்கனுகேக்கறாங்க. அதாவது உங்களுக்கே புரியாத அல்லது வாசகனுக்குப் புரியாத கவிதை எழுதறதுலஎன்ன பிரயோஜனம்னு கேக்கறாங்க. இது validஆன காரணமாக இருக்க முடியுமா? வாசகர் பக்கத்துல இருந்து.
ஆத்மாநாம்: ஒரு individualங்கறவனுக்கு நேரடியா ஒரு consciousல சில அனுபவங்கள் பதிவாயிருக்கு. சில அனுபவங்கள் sub-consciousல பதிவு ஆகியிருக்கு. இன்னும் சில அனுபவங்கள் அவனுக்கே புரியாம, தெரியாம அவனுடைய brain cellsல போய் record ஆயிருது. இப்ப அவனுக்குக் கனவுகள் வருது. அந்தக் கனவுகள்ல ஒரு ஊஞ்சல் வரது. அவன் சைக்கிள் ஓட்டிண்டு போறான். இல்ல groundல இருக்கானோ, இல்ல யாருமில்லாத கடற்கரையில்தனியா இருக்கானோ, இந்த மாதிரி பல்வேறு காட்சிகளில் அவனே இருக்கான்.
பிரம்மராஜன்: யார்? அவன்... அந்தக் கவிஞனா?
ஆத்மாநாம்: இல்லை ஒரு individual. அவனுக்கு ஒண்ணுமே புரியல. அதை அவன் probe பண்ணிட்டு போகும்போது ஒண்ணு அவன் அதை
சைக்காலஜிகலா அப்ரோச் பண்ணனும். அவனோட life experienceல இருந்து அது கிடைக்கறதா இல்ல lifeக்கு அப்பாற்பட்ட விஷயங்களிலிருந்து கிடைக்கற experienceல இருந்து இந்த மாதிரி ஞாபகங்கள் வருதான்னு அவனுக்கே தெரியாது. அந்த நேரத்தில் அவன் creative writerஆக இருந்தா சில விஷயங்கள் intuitiveஆக புலனாறது. அதை கவிதைல கொண்டுவரபொழுது அது complex metaphor ஆகவோ இல்ல complex imageஆகவோ இருக்கறதுக்கு possibilities இருக்கு. இதை ஒருத்தன் புரிஞ்சுக்கணும்னா அது அந்தக் கவிஞனுக்கே immediate ஆக சாத்தியம் இல்லை. So வாசகன் அந்த இடத்துல கொஞ்சம் தேட வேண்டியிருக்கு. ஆனா அதுக்கு ஏதாவது ஒரு நாள் ஒரு சைக்காலஜிஸ்டோ இல்ல brain chemist டோ ஒரு விளக்கம் தர முடியும். ஆனா அதுகூட ஒரு definite answer என்று கூற முடியாது. இவன், இவனோட அர்த்தம்தான் முழுமையான அர்த்தமாக இருக்க முடியும். அது கிடைக்கிற வரைக்கும் அந்தக் கவிதையை அவன் வாசிச்சிட்டே இருப்பான். அவ்வளவுதான்.
பிரம்மராஜன்: இப்படிச் சொல்லலாமா? அதாவது ஒரு கவிஞன் தனக்கான ஒரு பிரச்சனைக்குத் தீர்வு கொண்டு வருவதன் மூலம் பல மனிதர்களுக்கான, பல தனிநபர்களுக்கான தீர்வைக் கொண்டு வரான் அப்ப டின்னு F. R. லீவிஸ், T. S. எலியட்டின் கவிதைகளைப் பற்றிச் சொல்லுவார். அந்த மாதிரி இந்த இருண்மை அல்லது புரியாத தன்மை, conscious, sub-conscious இன்னும் pre-conscious statesல இருக்கிற சில மன நிலைகளை ஒரு கவிஞன் சொல்லறப்போ, அதை முதல்முறை படிக்கற வாசகனுக்குச் சிரமம் ஏற்படலாம். ஆனா அதே கவிதையை அனுபவம் ஏற்பட்ட பிறகு பத்து வருஷம் கழிச்சுப் படிக்கறான்னு வச்சுக்குவோம், அப்ப அந்த கவிதை புரியலாமில்லையா? இந்தக் காரணத்துக்காக அது புரியறதோ புரியலையோ, உபயோகமோ இல்லையோ அதை அந்தக் கவிதையை வாழ்வுக்கு கொண்டுவரது, to bring it into existence அவசியம்தான்னு எனக்குப் படறது.
ஆத்மாநாம்: கண்டிப்பா நாம் காத்திருக்கணும்தான்.
பிரம்மராஜன்: எதுக்கு? கவிதை புரியறதுக்கா?
ஆத்மாநாம்: ஆமா, புரியதுக்காகக் காத்திருக்கணும். ஆனா அதுக்காகப் புரியாத கவிதைகள்தான் கவிதைகள்னு நான் ஒத்துக்கமாட்டேன்.
பிரம்மராஜன்: சரி.
ஆத்மாநாம்: இன்னும் எனக்கு, நான் இருக்கக்கூடிய சமூகத்துல எந்த அளவுக்கு நான் முரண்பட்டிருக்கேன் அல்லது ஒத்துப்போறேன்னு விஷயங்கள் வரும்போது அதுக்கு நான் நேர்மையா இருக்கேன்னா அதை நான் கவிதைல கொண்டுவந்திருக்கணும். அதைச் செய்யாம நான், வெறும் எனக்குள்ள இருக்கற பிரச்சினைகளை மட்டுமே வச்சி ருக்கேன்; அது வந்து பத்து வருஷமோ இல்ல 20 வருஷமோ கழிச்சுப் புரியும்னு, இல்ல வேற யாராவது சைக்காலஜிஸ்டோ, சைக்கியாட்ரிஸ்டோ வந்து அதை interpret பண்ணுவான் அப்படின்னு நான் காத்
திருக்கேன்னு சொன்னா அது முழுமையான வாழ்க்கையை வெளிப்படுத்தினதா ஆகாது. இரண்டும் balancedஆக இருக்கணும்.
பிரம்மராஜன்: கவிதைகள் சில சமயம் அரூபத்தன்மை பெறுகின்றன. எடுத்துக்காட்டா abstract paintings போல, நம் ராகங்களின் வடிவைப் போல, Symphoniesஐ போல, இந்த மாதிரியா இருப்பதற்கு வேறுபட்ட அர்த்தங்களைக் கொடுக்கறாங்க. அதாவது கவிஞர் intend பண்ணாத அர்த்தங்களை வேற கொடுக்க வேண்டியிருக்கு. அப்படிக் கொடுக்கும்போது கவிஞனின் கவித்துவக் கருத்துருவத்துக்குப் பாதகம் விளையாதா? அவன் என்ன நினைச்சான்கறதுக்கு?
ஆத்மாநாம்: எந்த விதமான பாதகமும் விளையாது.
பிரம்மராஜன்: எப்படி?
ஆத்மாநாம்: ஒரு கவிதைக்கு நாலு பேர் நாலு விதமான பொருள் கொடுக்கறாங்கன்னு வச்சுப்போம். இவன் இவனுக்கு intuitiveஆகப் புரியற போதுதான் அந்தக் கவிதைக்கு ஒரு பொருளைக் கொடுக்க முடியும். அதுவரைக்கும் அந்த நாலு பேர் கொடுக்கறதையும் இவன் ஒரு listener எப்படி respond பண்றாங்கிற levelல அதை observe பண்ணுவானே ஒழிய இவன் அதை interpret பண்ணலை. நாலு பேர் நாலு பொருளைக் கொடுக்கறாங்க. நாலு பேரும் நாலு different persons ஆக இருக்கறதால அவங்கவங்க தங்கள் life styleக்கு ஏத்தபடி அதுக்குப் பொருளைக் கொடுக்க முடியும். So அந்த நாலு interpretationsம் அவங்கவங்க அளவிலே சரி, தப்புன்னு கணிக்க முடியாது. இந்தப் புரியாத தன்மைங்கறது ஒரு மனுஷனுக்கு ஆதிகாலத்துல இருந்து இன்னிவரைக்கும் இருந்திண்டுருக்கற விஷயம். இந்த வாழ்க்கையே எனக்கு விளங்கலை, இதுக்குப் பொருளே இல்லை, அப்படின்னு சொல்ற தன்மை பல ஆயிரக்கணக்கான வருஷங்களாகவே இருந்திட்டிருக்கு. இந்த வாழ்க்கைக்கான அர்த்தத்துக்குத்தான் பல சமயங்களும், பல புத்தங்களும், பல இலக்கியங்களும் முயற்சி செய்யறது. அதனால இந்த வாழ்க்கைக்கான முழுப்பொருளை... அவன் எந்த அளவுக்குத் தன்னோட வாழ்க்கைக்கு நேர்மையானவனா இருக்கான்கறதை வச்சுதான்கணிக்க முடியும். மத்தபடி எந்த விதமான அளவுகோலும் இருக்கவே முடியாது. So நாலு பேர்நாலு விதமா பொருள் கொடுத்தாலும்கூட அந்தக் கவிதைக்கு என்னிக்காவது ஒரு நாள் சரியானபொருள் கிடைக்கும்னே நான் நினைக்கிறேன்.
பிர:அதாவது அந்தக் கவிஞர் intend பண்ணின அளவுக்கு அந்த meaning இருக்குமா? இல்லை அதைவிடவும் அழகாகூடக் கொடுக்க முடியுமா?
ஆத்மாநாம்: ம்ம் அதைவிட அழகாகக்கூடக் கொடுக்க முடியும்...
பிரம்மராஜன்: ஒரு தடவை டி. எஸ். எலியட்டோட Love Song of Alfred J. Prufrockக்கு ஒருத்தர் interpretation எழுதினார். அதைப் படிச்ச எலியட் இது ரொம்ப ஜோரா இருக்கு. ஆனா நான் இப்படி நினைக்கவே இல்
லைன்னு சொல்லிட்டார். சில சமயம் interpretations கவிதைகளையே enhance பண்ற அளவுக்கு வந்துடுது.
ஆத்மாநாம்: ஆமாம்.
பிரம்மராஜன்: Committed poetryன்னு சொல்றாங்க இல்லையா? அதை ஈடுபடுத்திக்கொண்ட கவிதைகள்னு மொழிபெயர்க்கலாம். அந்தமாதிரி தமிழ்ல ஏதும் எழுதப்பட்டிருக்கா?இது முதல் கேள்வி. ஒரு துணைக் கேள்வி: மேற்கத்திய நாடுகள்ல இந்தமாதிரி எழுதப்பட்டிருக்கா? அவைகளின் தரம் எப்படி? நீங்க நிறைய மேற்கத்திய கவிதைகளைப் படிச்சிருப்பீங்கங்கிற நம்பிக்கையில் இதைக் கேக்கறேன்.
ஆத்மாநாம்: Committed poetryன்னு சொல்றப்ப முழுக்க முழுக்க ஒரு கவிஞன் தன்னை ஈடுபடுத்திக்கொண்டால் ஒழிய கவிதைகள் சாத்தியமே கிடையாது. அதுக்குமேல நாம் committed poetryன்னு சொல்றப்ப, ஒரு social commitmentஐ refer பண்ற மாதிரி ஆயிடறது.
பிரம்மராஜன்: Social commitmentனா சமுதாயத்துக்கு உண்மையா இருக்கறது...
ஆத்மாநாம்: சமூகத்துல ஈடுபாடோட நேர்மையா இருக்கறதுன்னு சொல்லலாம். சமூகத்துல ஈடுபாடு கொண்ட கவிதைகள் ஒரு புறம். இன்னொருபுறம் தன்னைப் பற்றித் தேடலுடன் கூடிய கவிதைகள். இரண்டுமே committedதான். ஆனா ஒரு கவிஞன் தன்னைப் பற்றி மட்டுமே தேடிக்கொண்டிருந்து தனக்கும் சமூகத்துக்கும் இடையிலான உறவு பற்றி எதுவும் கூறாமல் இருந்தால், அந்தமாதிரிக் கவிஞர்கள் காலப்போக்கில் தள்ளப்பட்டுவிடுவார்கள். ஆக, ஒரு கவிஞனை முழுமையான கவிஞன்னு சொல்லணும்னா அவனுக்கு social ஆகவும் ஒரு commitment இருக்கணும் personal ஆகவும் ஒரு commitment இருக்கணும். ஒரு angleல மட்டும், வெறும் social commitment அல்லது Personal commitment மட்டும் இருந்தா முழுக்கவிஞன்னு சொல்லிட முடியாது.
பிரம்மராஜன்: முழுமையடையாத கவிஞன்னு சொல்லிடலாமா...
ஆத்மாநாம்: முழுமையடையாத கவிஞன்னு சொல்ல முடியாது. அது implied. இரண்டும் ஒண்ணுதான்.
பிரம்மராஜன்: சரி, இன்னொரு கேள்வி உள்முகத்தேடல்னு சில கவிஞர்களின் கவிதைகளைச் சொன்னீங்க இல்லையா...
ஆத்மாநாம்: இல்ல, அகநோக்குப் பார்வைன்னு...
பிரம்மராஜன்: சரி, அகநோக்குப் பார்வை அல்லது உள்முகத்தேடல் அல்லது introvert outlook அல்லது inlookனு சொல்லலாம். நீங்க வேறகவிதைகள் இருக்குன்னு சொன்னீங்களே, அதாவது objective ஆக அல்லது புற நோக்கிலே எழுதப்பட்ட கவிதைகளும் இருக்குங்கறீங்க. ஆனா இப்ப நீங்க குறிப்பிட்ட கவிஞர்கள் நிறைய பேர் இந்த அகவயக் கவிதைகள் நிறைய எழுதக் காரணம் அது ஒரு typical ஆன
Indiannessன் பாதிப்போன்னு சந்தேகமா இருக்கு. இதைப் பத்திகொஞ்சம் தெளிவு பண்ண முடியுமா?
ஆத்மாநாம்: பொதுவா கவிதையை seriousஆக எடுத்திட்டிருக்கிற கவிஞர்கள் மிகக்குறைவா இருக்கற இந்த நேரத்துல, சில கவிஞர்கள்தான் committedஆக இருக்காங்க. அவங்க அகநோக்குப் பார்வை கொண்ட கவிஞர்கள் ஆனாலும் சரி, புறவயப்பட்ட பார்வை இருக்கற கவிஞர்கள் ஆனாலும் சரி, மிகவும் குறைவான எண்ணிக்கையில்தான் இருக்காங்க. அவங்க கவிதைகள்ல புறவயமான பாதிப்புகள் இருக்கக்கூடிய கவிதைகள் அதிகமாக இல்லன்னு சொல்றது ஒரு பொதுவான முறைல சொல்லக்கூடிய குற்றச்சாட்டாகத்தான் எடுத்துக்க முடியும். புறவயமான கவிதைகளை எழுதச் சொல்லி எதுவும் force பண்ண முடியாது. எந்த state ஆலயும் force பண்ண முடியாது.
பிரம்மராஜன்: Stateன்னா அமைப்புன்னு சொல்லலாமா...
ஆத்மாநாம்: ம. எந்த அமைப்பாலயும் force பண்ண முடியாது. அதனால தான்ஜோசப் ப்ராட்ஸ்கி போன்ற கவிஞர்கள் தங்கள் தேசத்தை விட்டு வேற தேசத்துக்குப் போய் கவிதைகள் எழுத வேண்டிய நிர்ப்பந்தம் உருவாறது. Commitmentங்கறது அவங்ககவிதைக்கு அவங்க committedஆக இருக்காங்களா இல்லையான்னுதான் பார்க்க முடியுமேதவிர மற்றபடி social commitmentஓட எழுதறாங்களா இல்லையான்னு பாக்க முடியாது. அவங்களே மனிதாபிமான அடிப்படைல எழுதினாங்கனா அதை நாம வரவேற்கலாம், அவ்வளவுதான். Force பண்ண முடியாது.
bramarajan_thumb[3]பிரம்மராஜன்: சமூகத்துல ஈடுபடுத்திக்கிட்ட எழுத்துக்கள்... அதனோட வெளிப்பாட்டு முறைக்கும், romanticஆன வெளிப்பாட்டு முறைக்கும் தொடர்பிருக்கா? அப்படி வந்து ஈ டுபடுத்திக்கொண்ட எழுத்துக்கள் எல்லாம் romanticஆகதான் வெளிப்பட முடியுமா? குறிப்பா நீங்க வானம் பாடிக் கவிஞர்கள் பற்றி ஒரு சின்ன குறிப்பு கொடுத்தா தேவலாம்னு தோணுது.
ஆத்மாநாம்: பொதுவா சமூகத்திலே ஈடுபடுத்திக்கொண்ட கவிதைகளுக்கும், romanticஆன கவிதைகளுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. இன்னிக்கு romanticஆக எழுதப்படக்கூடிய புரட்சிகரமான கவிதைகள் சினிமாப் பாடல்லகூட இருக்கு. ஆன அதையெல்லாம்நாம கவிதைகளா எடுத்துக்கறது கிடையாது. Romanticஆன வெளிப்பாடு சில குறிப்பிட்ட கவிதைகளுக்குதான் பொருத்தமானதா இருக்க முடியும். சமூக ஈடுபாடுங்கறபோது அந்த இடத்துலஅது romanticஆக வந்தா அது ரொம்ப ஆபாசமாதான் இருக்க முடியும். இந்த வகைல நாம வானம்பாடிக் கவிதைகளைப் பார்க்கும்போது, பொதுவா அவங்க சமூகப் பிரச்சினைகள் பற்றித்தான் எழுதுறாங்க. ஆனா சமூகப் பிரச்சினைகள் எந்த அளவுக்கு ஆழ்ந்த உணர்ந்து எழுதியிருக்காங் கன்னு தெரியல. அவங்க usage of language ரொம்பவும் romanticஆக இருக்கறதால அந்தக் கவிதைகள் நீர்த்துப்போயிடறது. அவை எழுதப்
படுவதின் முக்கியமான purposeஐயோ அவை serve பண்ணுவதில்லை. ஆனா அதில சில exceptionsம் இருக்கும்.
பிரம்மராஜன்: தமிழ்ச் சூழல்ல ... ஏன் இந்தியச் சூழல்லயே நெரூடாவோட statureக்கோ, லோர்காவோட integrityக்கோ அல்லது ஸ்டீவன் ஸ்பென்டரோட் integrityக்கோ ஒரு கவிஞனை நம்மால பார்க்க முடியலை. Outputலயும் சரி, கவிதையை சாதிச்ச முறையிலேயும் சரி, அவங்க நடத்திய வாழ்க்கை முறையிலும் சரி, அவங்கமாதிரி இங்கு ஒருத்தரையும் நாம பார்க்க முடியலை. ஏதாவது காரணம் இருக்க முடியுமா?
ஆத்மாநாம்: அங்க பல மாற்றங்கள் உருவாகுது.
பிரம்மராஜன்: எதில... ?
ஆத்மாநாம்: அவங்க systemல்
பிரம்மராஜன்: System of what?
ஆத்மாநாம்: அவங்க வாழ்க்கை முறைல, அதில பல விதமான மாற்றங்கள் அடிக்கடி உருவாறதால அவங்க உடனடியா வெளிப்படுத்திக்கறாங்க. அந்த மாற்றங்களுக்கு அவங்க react பண்றாங்க. ஆனா இந்தியால எவ்வளவோ விதமான மாற்றங்கள் வந்திட்டிருந்தாலும், இவ்வளவு பெரிய நாடா இருந்து இவ்வளவு மொழிகள் இருக்கும் போது, நீங்க சொல்ற statureஉடன் ஒரு poet உருவாற அளவுக்குப் பாதிப்புகள் இல்ல. National levelல்ல ரவீந்திரநாத் தாகூர் ஒருத்தர் பேசப்பட்டிருக்கார். ஆனா பாரதியாரையோ இல்ல ஆந்திராவில, கர்நாடகாவில, இல்ல மஹாராஷ்ட்ராவில் இருக்கிற கவிஞர்களையோ அந்த levelல்ல பேசப்பட்டதாசொல்ல முடியல, அதை posterityதான் சொல்லணும். நாம ஒண்ணும் சொல்ல முடியாது.
பிரம்மராஜன்: அதாவது பின்னால வரவங்கதான் சொல்லணும்...
ஆத்மாநாம்: ஆமாம்.
பிரம்மராஜன்: Mathew Arnoldங்கற ஆங்கிலக் கவிஞர் - விமர்சகர் தன்னுடைய Preface to the Study of poetryங்கற சின்ன கட்டுரையோட முன்னுரையில (1853ல் வெளியானது) தன் காலத்துக்குச் சற்று பின்னால மதத்தோட இடத்தைக் கவிதை நிரப்பிடும்னு சொன்னார். இது டார்வினோட Origin of Species வெளியானதோட காரணமா இருக்கலாம். அந்தச் சமயத்துல கொஞ்சம் மதம் ஆட்டம் கண்டுபோனதால இதைச் சொல்லியிருக்கலாம். அதுக்கும் இன்றைய தமிழ்க் கவிதைக்கும் அல்லது பொதுவா உலகக் கவிதைக்கும் ஏதாவது relevance இருக்குமா?
ஆத்மாநாம்: கண்டிப்பா இருக்கு. முக்கியமா நம்ம நாட்டிலேயே இருக்கு. ஏன்னா நம்ம cultureல் வந்து dogmatic ideas, religious beliefs இதெல்லாம் ஒரு விதமான அர்த்தத்தையும் வாழ்க்கைக்குக் கொடுக்கறது கிடையாது. அந்த மாதிரி நேரத்துல ...
பிரம்மராஜன்: அதாவது வெறும் சடங்காகிப்போன மதத்தைப் பத்திச் சொல்றீங்க இல்லையா? நம்ம இந்து மதம் வாழ்தலே மதமாகியிருக்கிற ஒரு மதம். பின்னால ஏற்பட்டசில விளைவுகளினால அது வெறும் சடங்காகிப் போச்சுன்னு தாகூரே தன்னுடைய பல கட்டுரைகள்ல சொல்லியிருக்கார். அந்த மாதிரிச் சடங்காகிப்போன ஒரு மதத்தை replace பண்ற capacity, ஒரு தகைமை கவிதைக்கு இருக்குன்னு நீங்க நம்பறீங்களா?
ஆத்மாநாம்: அது இப்ப இல்லன்னாலும்கூட இன்னும் literacy rate increase ஆகும்போதும், அப்பறம் literatureல interest improve ஆகும் போதும் அதுலயும் குறிப்பாகக் கவிதைகள்ல interest அதிகரிக்கும் போதுதான் அதைச் சொல்ல முடியும். இப்போ immediateஆக poetry religionஐ replace பண்ணிடும்னு சொல்ல முடியாது. கண்டிப்பா replace பண்ணும், இந்த qualifications வரும்போது, கவிதை தன்னுடைய முழுப் பரிமாணத்தோட மக்களை ஈர்க்கும்போது அந்த effect வர முடியும்.
பிரம்மராஜன்: நாம இப்ப புதுக்கவிதை பத்தியே பேசி முடிக்காம இருக்கோம். ஆனா மேற்கில 1940களிலேயே இந்தப் புதுக்கவிதைகளையெல்லாம் தாண்டி அதாவது Verse-libre/Free-Verse என்கிறதையெல்லாம் தாண்டி anti-poetryங்கற விஷயம் வந்துருச்சு. அந்த மாதிரியான ஒரு வளர்ச்சி நிலை தமிழுக்கு இருக்கா? இது பத்தி நீங்க என்ன நினைக்கறீங்க?
ஆத்மாநாம்: எதிர்க்கவிதைங்கறதைப் பத்தி இன்னும் எந்த விதமான தெளிவான அபிப்ராயமும் form ஆகல. ஆனா இப்போ கவிதைகள் போற போக்கைப் பார்த்தா வேறவிதமான கவிதைகள் உருவாகும்னு சொல்ல முடியாது; இந்த எதிர்க்கவிதைகள் அப்படிங்கறஒரு வடிவத்துக்குள்ள தான் வர முடியும்னு தோணறது.
பிரம்மராஜன்: இன்னிக்கு எப்படி நவீன ஓவியத்தைப் பயன்படுத்தறவங்க அல்லது பயில்றவங்கன்னு சொல்லலாம் - அவங்க பல பேருக்கு மரபு வழியான ஓவியத்தைப் பத்தினபயிற்சி இல்லாம இருக்காங்க அல்லது புறக்கணிக்கறாங்க. அதே மாதிரி இன்னிக்குத் தமிழ்ல பேரிலக்கியங்கள் பற்றி அறிவு இல்லாமலே நிறைய பேர் கவிதைகள் எழுதிட்டிருக்காங்க. இவங்களோட கவிதைகள்லாம் எப்படி இருக்கும்? அதை identify பண்ண முடியுமா?்
ஆத்மாநாம்: மரபை அறிஞ்சு அதை மீறது ஒண்ணு. அந்த மாதிரிதான் இப்பநிறைய பேர் செய்யறாங்க. மிகச் சிலரே மரபு தெரியாம புதுசா அவங்க கவிதைகள்னு feel பண்ணறதை எழுதறாங்க. அவங்க கவிதைக்கும் இவங்க கவிதைக்கும் content levelல்ல variation இருக்கறதுக்கு possibilities கிடையாது. மரபை மீறறவனும் அவனுக்கு ஒரு clarityக்காகத்தான் அதைச் செய்யறான். ஆனா மரபைத் தெரியாதவன் மரபை மீறின கவிதைகள் இருக்கு இல்லையா? அதைப் படிக்கும்போது அவன் feel பண்ணக்கூடிய விஷயங்களைப் பொறுத்து அவன் கவிதைகள் எழுதறான் இரண்டு பேருமே ஒரே விஷயத்தைப் பத்திதான்
கவிதைகள் எழுதிண்டு வருவாங்க. அதுல வித்யாசம் இருக்கறதுக்கு வாய்ப்பு கிடையாது. மரபு தெரிஞ்சாதான் கவிதை எழுதலாம்கற qualification செல்லுபடி ஆகாது.
பிரம்மராஜன்: ஒரு கலாச்சாரப் பாரம்பர்யம் வேண்டாம்னு சொல்றீங்களா? T. S. எலியட் கவிஞர்கள் ஓரளவுக்காவது படிச்சிருக்கணும்னு நினைக்கறார். எழுதியிருக்கார். அதாவது அவங்களுடைய creativityக்கு அல்லது spontaneityக்குக் குந்தகம் விளைவிக்காத அளவுக்கு அவர்கள் பொது விஷயங்களைத் தெரிஞ்சு வெச்சுருக்கனும்னு, awareஆக இருக்கனும்னு சொல்றார்.
ஆத்மாநாம்: மரபு பள்ளிக்கூடங்கள்ல இருந்தே ஆரம்பம் ஆறது. தமிழ்ல எழுதக்கூடிய ஒரு கவிஞனோ அல்லது எழுத்தாளனோ மரபு ஓரளவுக்குத் தெரிஞ்சுதான் எழுதறான். அந்த வகைல மரபு முழுக்க முழுக்கத் தெரியாதுன்னு சொல்ல முடியாது. ரொம்பவும் மரபு பற்றித்தெரியும்னு confidentஆக சொல்றவங்களோட complete பண்ண முடியாமே இருக்கலாம். ஆனா அவங்களுக்கும் ஓரளவு மரபு தெரிஞ்சுதான் அவங்க புது விஷயங்களை எழுதறாங்க.
பிரம்மராஜன்: இந்த மாதிரியான ஆழ்ந்த கலாச்சாரப் பாரம்பரியம் எந்தெந்த கவிஞர்கள்கிட்ட இருந்து வெளிப்பட்டிருக்குன்னு நீங்க நினைக்கிறீங்க?
ஆத்மாநாம்: ஞானக்கூத்தன், சுந்தர ராமசாமி, நகுலன், சிவராமு அப்படின்னு சொல்லலாம்.
பிரம்மராஜன்: சரி, Major poets அப்படிங்கற கேள்வியை கவிதை வளர்ந்திட்டிருக்கற அந்த கால கட்டத்துல எழுப்பறது தகுதியா இருக்குமா?
ஆத்மாநாம்: என்னைப் பொறுத்தவரைக்கும் இப்ப எழுதற அத்தனை பேருமே Minor Poetsதான்னு தோண்றது. காவியங்களோ, மிக நீண்ட கவிதைகளோ ரொம்ப உள்ளாழ்ந்த கருத்துக்கள் இருக்கக்கூடிய கவிதைகளோ எழுதக்கூடியவங்களைத்தான் Major Poetனு சொல்லலாம். இப்பொ எழுதக்கூடிய கவிஞர்கள் முக்கால்வாசி பேர் spontaneousஆக எழுதறாங்க, இல்லை technicalஆக அவங்களுக்கு இருக்கற knowledgeஐ வெச்சு எழுதறாங்க, மற்றபடி major poetsங்கற categoryல கம்பன் மாதிரியோ, இளங்கோவடிகள் மாதிரியோ, திருவள்ளுவர் மாதிரியோ, பாரதி மாதிரியோ இப்ப இருக்கற கவிஞர்கள் யாரையுமே சொல்ல முடியாது.
பிரம்மராஜன்: அப்ப நீண்ட காவியங்கள் எழுதினாத்தான் ஒருவன் major poetஆக இருக்க முடியுமா?
ஆத்மாநாம்: ஒரு கவிஞனோட மொத்தப் படைப்பையுமேகூட ஒரு நீண்ட காவியமா எடுத்துக்கலாம். ஒரு தொகுப்பை நீங்க நீண்ட காவியமா எடுத்துகிட்டீங்கனா அதுல ஒரு forceம், clarityம், total understanding of lifeம், அப்பறம் various aspectsthat attract life இதைப் பத்தின understanding இருந்தாத்தான் நீங்க அவரை major poetன்னு சொல்ல
முடியும். அந்த வகைல பாத்தா இப்பொ சிறு சிறு தொகுப்புகள்தான் வந்திருக்கும். So we cannot say anything now.
பிரம்மராஜன்: கவிதை ஒரு தொழிற்சாலை மாதிரி இன்னிக்கு ஆயிருச்சு. நிறைய உற்பத்தி செய்யப்படுது. அப்படிப்பட்ட இந்தக் கட்டத்துல நாம் இனம் பிரிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுப்போகுது. நீங்க ஒரு கவிதை இதழோட ஆசிரியர்ங்கற முறைல இதற்கு ஏதாவது அளவுகோல் வச்சிருக்கீங்களா? எப்படி நீங்க கவிதைகளைத் தேர்ந்தெடுக்கறீங்க?
ஆத்மாநாம்: தொழிற்சாலைன்னு குறிப்பிடக்கூடிய கவிதைகள் எல்லாமே துணுக்காகவோ இல்லை விடுகதைகளாகவோ இந்த வகைப்பட்ட கவிதைகளாகவோதான் இருக்கு. அந்தமாதிரி கவிதைகள் மொத்தத்தையும் நீங்க ஒதுக்கித் தள்ளிட்டுப் பாத்தீங்கனா நாங்க editபண்ற பத்திரிகைக்கு வரக்கூடிய கவிதைகள்ல வந்து ஒரு use of language, idea, thoughtஅப்பறம் ஒரு inner beautyன்னு சொல்றாங்க - அதை explain பண்றது கஷ்டம் - அந்த inner beauty, உள்ளழகு ஒரு organic element, அந்த poetryயோட structureல இருக்குன்னா அந்தக் கவிதையை நாங்க பிரசுரிக்கிறோம். அதுல ஏதாவது ஒரு சில elements இருந்தாக்கூட போடறோம். அந்த வகைலதான் கவிதைகளைத் தேர்வு செய்ய முடியறது, வேற எந்த set-rulesம் கிடையாது.
பிரம்மராஜன்: ஒரு வாசகனோட ‘status-quo’வை disturb பண்றது நல்ல கவிதைங்கற அளவுகோலை ஒரு உச்சமான தேர்வா வைக்கலாமா?
ஆத்மாநாம்: கண்டிப்பா. இந்த statement உடன் நான் முழுக்க ஒத்துப் போறேன்.
பிரம்மராஜன்: நல்ல கவிதை ‘இரும்பு - மனோநிலை’யை disturb பண்றது...
ஆத்மாநாம்: பாதிக்கிறது.
பிரம்மராஜன்: அது தன்னோட உலகத்துக்குத்தான் வாசகனை இழுக்கிறது. இதுக்கு எதிர்மறையா ஒரு நர்சரி ரைமை எடுத்துக்கலாம். பா - பா ப்ளாக் ஷீப்ங்கற ரைமைப் படிக்கும்போது நாம் disturb ஆகறதில்லை. ஓஹோ! அப்படியான்னுதான் கேக்கறோம். ஆனா சில கவிதைகளைப் படிக்கும்போது நாம நம்பளையே மறந்துடறோம்...
ஆத்மாநாம்: We are moved.
பிரம்மராஜன்: ஆமாம். We don’t forget ourselves...
ஆத்மாநாம்: We are moved.
பிரம்மராஜன்: நாம கவிதையோட உலகத்துக்கு எடுத்துட்டுப் போகப்படறோம். உதாரணமா அக்னிக்குஞ்சொன்று கண்டேன்கற பாரதியோட கவிதையைச் சொல்லலாம். கவிதையை இனம்காணறதுக்கு இதை ஒரு நல்ல அளவுகோல்னு சொல்லலாம் இல்லையா?
ஆத்மாநாம்: கண்டிப்பா. இது மிக முக்கியமான அளவுகோல். இதை வெச்சுதான் நாம் கவிதை இயலையே தீர்மானம் செய்யமுடியும். அப்படின்னுதான் நினைக்கிறேன்.
பிரம்மராஜன்: முதல் நபர் பார்வையில் சொல்லப்படற கவிதை, முன்னிலைப்படுத்தப்பட்ட கவிதை, இவை இரண்டுமே அதிகம் சிரமம் தரவில்லை. இது இல்லாம narratorனு ஒருத்தர் இல்லாத ஒரு omniscient view, point of view அந்த மாதிரி narratorம் இல்லாம, நானும் இல்லாம, நீயும் இல்லாம சிலர் கவிதை எழுதறாங்க. அந்த கவிதைகள் ரொம்ப சிக்கலா இருக்கு. இதுபற்றி?
ஆத்மாநாம்: இந்தமாதிரி கவிதைகள் ரொம்ப கம்மி. ஒண்ணு தன்னிலைபடுத்தியோ இல்லைனா முன்னிலைப்படுத்தியோதான் பெரும்பாலான கவிதைகள் எழுதப்படறது. ஏன்னா அதுதான் simpleஆக இருக்கு communicationக்கு. இப்போ வெறும் description மட்டும் ஒரு கவிதைல நீங்க குடுக்கறீங்கனா அது எப்போதுமே complexஆகதான் இருக்கும்னு சொல்லமுடியாது. ஏதாவது சில சமயம்தான் complexஆக இருக்கும். அந்தமாதிரிக் கவிதைகள் எல்லாமே சிக்கலா இருக்கும்னு என்னால ஒத்துக்க முடியாது. ஆனா இந்த மாதிரிக் கவிதைகள் சிக்கலாறதுக்கு முதல்ல நாம obscurity பத்தி பேசின விஷயங்களைத்தான் மறுபடியும் நினைவுபடுபத்திக்கணும்.
பிரம்மராஜன்: தமிழ்ல கவிதை இயக்கமா வளர்ந்திருக்குன்னு உங்களால சொல்ல முடியுமா?
ஆத்மாநாம்: ஆரம்பத்திலிருந்தே ஒரு இயக்கமாதான் கவிதை இருந்திருக்கு. ஆனா அதுல பல போக்குகள் உருவாகியிருக்கு. ஒவ்வொரு கால கட்டத்திலயும் ஒவ்வொரு விதமான போக்குகள் உருவாறது. ஒரு சிலர் யதார்த்தத்தைக் கடைபிடிச்சாங்க. சிலர் வேற வெளிப்பாட்டுமுறைகள்ல வித்தியாசம் காட்டினாங்க - படிமங்கள் மூலமா தங்களை வெளிப்படுத்திக்கமுயன்றாங்க. தமிழ்ல எப்போதுமே கவிதை இயக்கமாதான் இருந்திருக்குன்னு சொல்ல முடியும். ஆனா பல போக்குகள் இருக்கு. ஒரு போக்கு அழியறது. இன்னொரு போக்கு உருவாறது. இல்லனா இரண்டு மூன்று போக்குகள் parallelஆக வளர்ந்திட்டிருக்கு. இந்த மாதிரிதான் இயக்கத்தைப்பத்தி என்னால சொல்ல முடியும்.
பிரம்மராஜன்: கடைசியா இன்னொரு கேள்வி. நிறைய வார, மாதப் பத்திரி கைகள்லவர்ற கவிதைங்க கவிதையின் ஒட்டுமொத்தமான வளர்ச்சிக்கு என்ன விளைவைக் கொடுக்கும்?
ஆத்மாநாம்: கண்டிப்பா கவிதையோட ஒட்டுமொத்தமான வளர்ச்சிக்கு நீங்க சொன்ன கவிதைகள் அடிகோலாகாது. ஏன்னா அதுல போலியான கவிதைகள்தான் கவிதைகள்ங்கற பேர்ல வெளியாறது. அதைப்படிக்கறவங்க அதுதான் கவிதை அப்படின்னு நம்பற வாய்ப்புகள் அதிகமா இருக்கு, அதுல genuineஆன கவிதைகள். சிறு பத்திரிகைகள்ல எழுதக்கூடிய கவிஞர்களோட கவிதைகள் வரும்போது அவங்களுக்கு கொஞ்சம் differentஆன reading material கிடைக்கிறது. இப்பலாம் கவிதையை யாரும் ரொம்ப seriousஆக எடுத்துக்கறது கிடையாது அப்படின்னுதான் தோணறது. ஆனா பொதுவா நல்ல கவிதைக்கு வார, மாத பத்திரிகைகள்ல, பல லட்சக்கணக்குல விற்பனையாகிற பத்திரிகைகள்ல வரக்கூடிய கவிதைகள் குந்தகமாகத்தான் இருக்கும் எப்போதும்.




*****
ஆத்மாநாம் படைப்புகள் - பதிப்பாசிரியர்: பிரம்மராஜன்

தைராய்டு பிரச்சனை- நோய் அறிகுறியும் சிகிச்சையும்:-



என்டோகிரைன் சுரப்பிகளில் ஏற்படும் பிரச்சனைகளை தைராய்டு நோய் என்று அழைக்கிறோம். இது மிகவும் சகஜமான ஒரு நோயாகும். பயப்படவோ அச்சப்படவோ தேவையில்லை. அதாவது நம் உடல் தைராய்டு ஹார்மோன்களை அதிகம் உற்பத்தி செய்வதே தைராய்டு நோயாகும்.

உலகம் முழுதும் 200மில்லியன் பேர்களுக்கு தைராய்டு நோய் உள்ளது. கடந்த மே மாதம் 25ஆம் தேதி உலக தைராய்டு தினமாக அனுசரிக்கப்பட்டது.

அறிகுறிகள்:

கழுத்தில் வலி மற்றும் வீக்கம், நிணநீர் திரளையில் வீக்கம், குரல் கரகரப்பாவது, மூச்சு விடுதலில் சிரமம், விழுங்குவதில் சிரமம் ஆகியவை தைராய்டின் பிரதான அறிகுறிகள்.

மேலும், நல்ல பசியிருந்தும் உடல் எடை குறைதல், இருதயத் துடிப்பு அதிகரிப்பு, உயர் ரத்த அழுத்தம், நரம்புத்தளர்ச்சி, அதிக வியர்வை, மாதவிடாய் சட்டு சட்டென வருதல், குடல் இயக்கம் அதிகரித்தல், கை நடுக்கம். ஆகியவையும் தைராய்ட் அறிகுறிகளாகும்.

உடல் எடைக்குறைப்பிற்கான அனைத்து வேலைகளைச் செய்தும் உடல் எடை குறையாமல் இருப்பது அல்லது உடல் எடை அதிகரிப்பது, சோம்பல், இருதய துடிப்பு இருக்கவேண்டிய அளவை விட குறைதல், கைகள் மறத்துப் போதல், வறண்ட சருமம், மாதவிடாயில் வெளியேற்றம் கடுமையாக இருத்தல். மலச்சிக்கல் ஆகியவையும் தைராய்டு அறிகுறிகளாகும்.

சிகிச்சை:

தைராய்டிற்கு சிகிச்சை என்பது தைராய்ட் கிளாண்டை முழுமையாகவோ அல்லது பாதியோ வெட்டி எடுத்தல் இதனுடன் கதிர்வீச்சு அயோடின் சிகிச்சையும் செய்யப்படுகிறது.

தைராய்டு சுரப்பி சரியாக வேலை செய்யவேண்டுமென்றால் அயோடின், செலினியம் மிக முக்கியமாகும். எனவே அயோடைஸ்டு உப்பை பயன்படுத்துவது நல்லது. அதேபோல் கடல் உணவுவகைகளும் நல்லது. பசலைக் கீரை, எள், பூண்டு ஆகியவை மிகச்சிறந்தது.

செலினியம் அதிகம் உள்ள உணவு வகைகளில் இறைச்சி, மீன், காளான், சோயாபீன்கள், சூரியகாந்தி விதைகள் ஆகியவையும் அவசியம்.

மனக்கவலை, அழுத்தமும் தைராய்ட் சுரப்பி சரியாக வேலை செய்யாததின் ஒரு அறிகுறியே. எனவே மனதை இலகாக்குவது அவசியம்.

சிலருக்கு தைராய்டு சுரப்பியிலிருந்து ஹார்மோன்கள் தேவைக்குக் குறைவாக சுரக்கும். இது ஹைபோ தைராய்டு என்று அழைக்கப்படுகிறது. இதற்கு மருத்துவரின் ஆலோசனையின் படி மாத்திரைகள் எடுத்துக் கொள்ளலாம்.

Boat from littered plastic bottles...

Tom Davies, a New Zealand native living in Fiji, made a boat from littered plastic bottles... -

Super Moon, New York

Novel membrane reveals water molecules will bounce off a liquid surface.

Details -- Consider the nearest water surface: a half-full glass on your desk, a puddle outside your window, or a lake across town. All of these surfaces represent liquid-vapor interfaces, where liquid meets air. Molecules of water vapor constantly collide with these liquid surfaces: Some make it through the surface and condense, while others simply bounce off.

The probability that a vapor molecule will bounce, or reflect, off a liquid surface is a fundamental property of water, much like its boiling point. And yet, in the last century, there has been little agreement on the likelihood that a water molecule will bounce off the liquid surface.

"When a water vapor molecule hits a surface, does it immediately go into the liquid? Or does it come off and hit again and again, then eventually go in?" says Rohit Karnik, an associate professor of mechanical engineering at MIT. "There's a lot of controversy, and there's no easy way to measure this basic property."

Knowing this bouncing probability would give scientists an essential understanding of a variety of applications that involve water flow: the movement of water through soil, the formation of clouds and fog, and the efficiency of water-filtration devices.

This last application spurred Karnik and his colleagues -- Jongho Lee, an MIT graduate student in mechanical engineering, and Tahar Laoui, a professor at the King Fahd University of Petroleum and Minerals (KFUPM) in Saudi Arabia -- to study water's probability of bouncing. The group is developing membranes for water desalination; this technology's success depends, in part, on the ability of water vapor to flow through the membrane and condense on the other side as purified water.

By observing water transport through membranes with pores of various sizes, the group has measured a water molecule's probability of condensing or bouncing off a liquid surface at the nanoscale. The results, published in Nature Nanotechnology , could help in designing more efficient desalination membranes, and may also expand scientists' understanding of the flow of water at the nanoscale.

"Wherever you have a liquid-vapor surface, there is going to be evaporation and condensation," Karnik says. "So this probability is pretty universal, as it defines what water molecules do at all such surfaces."

• Getting in the way of flow:
One of the simplest ways to remove salt from water is by boiling and evaporating the water -- separating it from salts, then condensing it as purified water. But this method is energy-intensive, requiring a great deal of heat.

Karnik's group developed a desalination membrane that mimics the boiling process, but without the need for heat. The razor-thin membrane contains nanoscale pores that, seen from the side, resemble tiny tubes. Half of each tube is hydrophilic, or water-attracting, while the other half is hydrophobic, or water-repellant.
As water flows from the hydrophilic to the hydrophobic side, it turns from liquid to vapor at the liquid-vapor interface, simulating water's transition during the boiling process. Vapor molecules that travel to the liquid solution on the other end of the nanopore can either condense into it or bounce off of it. The membrane allows higher water-flow rates if more molecules condense, rather than bounce.

Designing an efficient desalination membrane requires an understanding of what might keep water from flowing through it. In the case of the researchers' membrane, they found that resistance to water flow came from two factors: the length of the nanopores in the membrane and the probability that a molecule would bounce, rather than condense.

In experiments with membranes whose nanopores varied in length, the team observed that greater pore length was the main factor impeding water flow -- that is, the greater the distance a molecule has to travel, the less likely it is to traverse the membrane. As pores get shorter, bringing the two liquid solutions closer together, this effect subsides, and water molecules stand a better chance of getting through.

But at a certain length, the researchers found that resistance to water flow comes primarily from a molecule's probability of bouncing. In other words, in very short pores, the flow of water is constrained by the chance of water molecules bouncing off the liquid surface, rather than their traveling across the nanopores. When the researchers quantified this effect, they found that only 20 to 30 percent of water vapor molecules hitting the liquid surface actually condense, with the majority bouncing away.

• A no-bounce design:
They also found that a molecule's bouncing probability depends on temperature: 64 percent of molecules will bounce at 90 degrees Fahrenheit, while 82 percent of molecules will bounce at 140 degrees. The group charted water's probability of bouncing in relation to temperature, producing a graph that Karnik says researchers can refer to in computing nanoscale flows in many systems.

SOURCE: Massachusetts Institute of Technology
Photo: LATEST MECHANICAL ENGINEERING RESEARCH IN FLUID MECHANICS (March 18, 2014)

Novel membrane reveals water molecules will bounce off a liquid surface.

Details -- Consider the nearest water surface: a half-full glass on your desk, a puddle outside your window, or a lake across town. All of these surfaces represent liquid-vapor interfaces, where liquid meets air. Molecules of water vapor constantly collide with these liquid surfaces: Some make it through the surface and condense, while others simply bounce off.

The probability that a vapor molecule will bounce, or reflect, off a liquid surface is a fundamental property of water, much like its boiling point. And yet, in the last century, there has been little agreement on the likelihood that a water molecule will bounce off the liquid surface.

"When a water vapor molecule hits a surface, does it immediately go into the liquid? Or does it come off and hit again and again, then eventually go in?" says Rohit Karnik, an associate professor of mechanical engineering at MIT. "There's a lot of controversy, and there's no easy way to measure this basic property."

Knowing this bouncing probability would give scientists an essential understanding of a variety of applications that involve water flow: the movement of water through soil, the formation of clouds and fog, and the efficiency of water-filtration devices.

This last application spurred Karnik and his colleagues -- Jongho Lee, an MIT graduate student in mechanical engineering, and Tahar Laoui, a professor at the King Fahd University of Petroleum and Minerals (KFUPM) in Saudi Arabia -- to study water's probability of bouncing. The group is developing membranes for water desalination; this technology's success depends, in part, on the ability of water vapor to flow through the membrane and condense on the other side as purified water.

By observing water transport through membranes with pores of various sizes, the group has measured a water molecule's probability of condensing or bouncing off a liquid surface at the nanoscale. The results, published in Nature Nanotechnology , could help in designing more efficient desalination membranes, and may also expand scientists' understanding of the flow of water at the nanoscale.

"Wherever you have a liquid-vapor surface, there is going to be evaporation and condensation," Karnik says. "So this probability is pretty universal, as it defines what water molecules do at all such surfaces."

• Getting in the way of flow:
One of the simplest ways to remove salt from water is by boiling and evaporating the water -- separating it from salts, then condensing it as purified water. But this method is energy-intensive, requiring a great deal of heat.

Karnik's group developed a desalination membrane that mimics the boiling process, but without the need for heat. The razor-thin membrane contains nanoscale pores that, seen from the side, resemble tiny tubes. Half of each tube is hydrophilic, or water-attracting, while the other half is hydrophobic, or water-repellant.
As water flows from the hydrophilic to the hydrophobic side, it turns from liquid to vapor at the liquid-vapor interface, simulating water's transition during the boiling process. Vapor molecules that travel to the liquid solution on the other end of the nanopore can either condense into it or bounce off of it. The membrane allows higher water-flow rates if more molecules condense, rather than bounce.

Designing an efficient desalination membrane requires an understanding of what might keep water from flowing through it. In the case of the researchers' membrane, they found that resistance to water flow came from two factors: the length of the nanopores in the membrane and the probability that a molecule would bounce, rather than condense.

In experiments with membranes whose nanopores varied in length, the team observed that greater pore length was the main factor impeding water flow -- that is, the greater the distance a molecule has to travel, the less likely it is to traverse the membrane. As pores get shorter, bringing the two liquid solutions closer together, this effect subsides, and water molecules stand a better chance of getting through.

But at a certain length, the researchers found that resistance to water flow comes primarily from a molecule's probability of bouncing. In other words, in very short pores, the flow of water is constrained by the chance of water molecules bouncing off the liquid surface, rather than their traveling across the nanopores. When the researchers quantified this effect, they found that only 20 to 30 percent of water vapor molecules hitting the liquid surface actually condense, with the majority bouncing away.

• A no-bounce design:
They also found that a molecule's bouncing probability depends on temperature: 64 percent of molecules will bounce at 90 degrees Fahrenheit, while 82 percent of molecules will bounce at 140 degrees. The group charted water's probability of bouncing in relation to temperature, producing a graph that Karnik says researchers can refer to in computing nanoscale flows in many systems.

SOURCE: Massachusetts Institute of Technology

Wow

கோயிலைக் கட்டுங்கோ கும்பிடத்தான் ஆளில்லை


 - வடபுலத்தான்
ஊர்கள் தோறும் கோவில்கள் பிரமாண்டமாக கட்டப்படுகின்றன. கோவில்க
ளைக் கட்டுவதற்காக புலம்பெயர்ந்து, வெளிநாடுகளில் இருப்போர் தாராளமாக அள்ளியள்ளிக் கொடுக்கிறார்கள். போதாக்குறைக்கு உள்ளூரிலும் கோடி கோடியாகச் சேருது.

இப்பிடிக் காசு சேர்ந்தால் என்ன நடக்கும்?

ஏட்டிக்கு போட்டியாக ஒவ்வொரு கோவில்களும் வானுயர எழுகின்றன.

ஊரில் பலருடைய வீடுகள் இன்னும் கொட்டிலாகவம் குடிசையாகவும் இருக்கும்போது, பலருக்கு குடியிருப்பதற்கே காணி இல்லாதபோது, பல பள்ளிக்கூடங்களில்வகுப்பறைகளே சீரில்லாமல் இருக்கும்போது, ஆஸ்பத்திரிகளில் கட்டில் இல்லாமல் விறாந்தைகளில் நோயாளிகள் படுத்திருக்கும்போது  இப்படி கோவில்களுக்காக தமிழ்ப்பெருங்குடி மக்கள்  தாராளமாகச் செலவழிக்கிறார்கள்.

தமிழ்ப்பெருங்குடி தன்னுடைய உழைப்பில் அதிகமாகச் செலவழிப்பது கோயில்களுக்காகத்தான். இதில் அவர்களுடைய வரலாற்றுப் பெருமையை எந்த விண்ணனும் மிஞ்ச முடியாது.

இதைவிடப் போரினால் பாதிக்கப்பட்ட பல ஆயிரக்கணக்கான குடும்பங்கள் உதவிகள் இல்லாத நிலையில் தவித்துக்கொண்டிருக்கின்றன.

இன்னும் பல ஆயிரக்கணக்கானவர்கள் உடல் உறுப்புகளை இழந்து அந்தரித்துக்கொண்டிருக்கிறார்கள்.

பல ஆயிரக்கணக்கான சிறார்கள் பெற்றோரை இழந்த நிலையில் உதவிக்காக ஏங்கிக்கொண்டிருக்கின்றனர்.

தொடர்ந்து படிக்க வசதியில்லாமல் இடை விலகிக்கொண்டிருக்கின்றார்கள் பல மாணவர்கள். லட்சக்கணக்கானவர்கள் வேலையில்லாமல் தெருவில் நிற்கிறார்கள்.

இதைப்பற்றி மானமுள்ள தமிழர்கள் எழுதிக் கொண்டும் புலம்பிக்கொண்டும் இருக்கிறார்கள். மனச்சாட்சியும் மனமும் இல்லாத தமிழர்கள் இதையெல்லாம் படித்துக் கொட்டாவி விட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

இந்த மாதிரி தமிழ்சமூகம் துன்பத்தில் உழன்றுகொண்டு இருக்கும்போது இதையெல்லாம் பொருட்படுத்தாமல் கோவில்களுக்கு கொட்டிக்கொண்டே இருக்கின்றார்கள் நம் வரலாற்றுப் பெருமைமிகு தமிழர்கள்.

யுத்தத்திற்குப் பிறகு உருவாகியுள்ள புதிய சூழலிலும் தமிழர் அதிமாகச் செலவழித்திருப்பது கோவில்களுக்குத்தான்.

கோபுரங்களுக்காகவும், திருமண மண்டபங்களுக்காகவும், வர்ணப்பூச்சுகளுக்காகவும், தேர், தீர்த்தக்கேணி. வாகனம் என்றெல்லாம் இந்தச் செலவு நீண்டுகொண்டு போகிறது.

சமூகம் செழிப்பாக இருந்தால் இப்படி மேலதிகமாக செலவழிப்பதில் பிரச்சினை இல்லை.

ஆனால், இங்கோ மக்கள் பிச்சை எடுக்கிறார்கள். கோபுரங்களோ உயர்கின்றன.

இதற்காகத்தான் சொல்வார்கள், 'தாய் பிச்சை எடுக்கும்போது மகன் அன்னதானம் கொடுக்கிறார்' என்று.

சொந்தச் சோதரரை துன்பத்தில் உழல விட்டு விட்டு தெய்வத்தொண்டு செய்வதில் எந்தப் புண்ணியமும் இல்லை என்பதை சொல்லித்தான் தெரியவேண்டும் என்றில்லை.

உண்மையாக ஆன்மீக நாட்டம் யாருக்காவது இருந்தால் அவர்கள் துன்பத்திலும், துயரத்திலும் வாடும் சக மனிதரைக் கண்டு அவர்களுக்கு உதவ முன்வருவர். அது மனிதநேய உணர்வு மட்டுமல்ல தெய்வ பக்திக்கு நிகரானதுமாகும். அதுதான் மெய்யான ஆன்மீகமுமாகும்.

பசித்தவனுக்கு ஒருவேளை உணவு கொடுப்பதென்பது தெய்வத்துக்குச் செய்யும் தொண்டுக்குச் சமம் என்பது பெரியோர் வாக்கு.

கோவிலுக்கும், கோபுரங்களுக்குமாக செலவழிக்கும் இந்த கோடிக்கணக்கான காசை ஒவ்வொரு ஊர்களிலும் ஏதாவது தொழிற்துறைகளை உருவாக்குவதற்குச் செலவழிக்கலாம்.

அப்படி தொழில்த்துறைகளுக்குச் செலவழிக்கும் போது அதனால் பலருக்கும் தொழில்வாய்ப்புகள் கிட்டும். தொழிலும், உழைப்பும் பெருகும்போது ஊரும், உறவுகளும் செழிக்கும். ஊரும் உறவும் செழிக்கும்போது நாடும் வாழ்வும் வளம் பெறும்.

இப்படிப் சிந்திப்பது ஒன்றும் ஆன்மீகத்திற்கு எதிரானதோ பக்தி மார்க்கத்திற்கு மாறானதோ அல்ல. ஒரு நாத்திகவாதியின் கண்ணோட்டத்தில் இதைப்பார்க்கவும் இல்லை.

ஒரு மனிதநேயவாதியாக, மக்களோடு மக்களாக வாழ்பவராக, உண்மையான ஆன்மீகவாதியாக சிந்திக்கும் போது இப்படித்தான் சொல்லத்தோன்றுது.

தொழில்த்துறைகளை விருத்தி செய்வதற்காக நாம் செலவு செய்யும்போது அல்லது முதலீடு செய்யும்போது நமது மக்கள் கையேந்தும் நிலையிலிருந்து விடுபடுவர். அது மட்டுமல்ல அடிமை வாழ்விலிருந்தும் மக்கள் மீள்வர்.

அரசாங்கம் கல்வி, மருத்துவம் போன்றவற்றை இலவசமாகச் செய்கிறது.

அதற்காக அது எல்லாவற்றையும் எல்லோருக்கும் தானம் போல வழங்கும் என்று எதிர்பார்க்க முடியாதே. ஆனால் எம்மில் பலர் அப்படித்தான் எண்ணுகிறார்கள். எனவேதான் எல்லாவற்றையும் அரசிடமே எதிர்பார்க்கிறார்கள். அந்த எதிர்பார்ப்பு நிறைவேறாத போது அரசாங்கத்தைத் திட்டுகிறார்கள்.

இந்தப் பணம் படைத்தவர்கள், கோவில்களுக்கு செலவழிப்பதுபோல தங்கள் பிரதேசங்களில் தொழில் மையங்களுக்காகச் செலவழிக்கலாம். கலை வளர்ச்சி, சமூகப்பணி, அறிவு மையங்கள் போன்ற பிற துறைகளுக்கும், மக்கள் வாழ்வுக்கும் செலவழிக்க வேண்டும் என்றே சொல்கிறேன்.

சமூகத்தைப் பிச்சை எடுக்க விட்டுக்கொண்டு வானுயரும் கோபுரங்களை எழுப்புவதால் எந்தப் பயனும் கிட்டாது.

இங்கே இன்னொன்றையும் சொல்ல வேண்டும். இப்படி கட்டப்படும் பென்னாம்பெரிய கோவில்களைக் கும்பிடுவதற்குக் கூட இப்போது பல ஊர்களில் ஆட்களே இல்லை. அது மட்டுமில்லை. உற்சவ காலங்களில் சுவாமி தூக்குவதற்குப் பெடியளும் இல்லை.  இதைப்பற்றி டி.பி.எஸ். ஜெயராஜ் தன்னுடைய இலங்கைப் பயணத்துக்கு (ஊருலாவுக்கு) ப் பிந்திய பேட்டியொன்றிலும் சொல்லியிருந்தார்.

“கோயிலைக் கட்டுங்கோ கும்பிடத்தான் ஆளில்லை“

இதையெல்லாம் சொல்லி இந்தச் சனங்களையும் சமூகத்தையும் வழிப்படுத்துவது யார்? 

Wednesday, March 19, 2014

மலேசியா விமானம் போன்றே மாயமான சில விமானங்கள்!!!



அனைத்து ஊடகங்களிலும் இன்றைக்கு முக்கிய செய்தியாக, புரியாத புதிராக உலா வந்து கொண்ட்ரி காணாமல் போன மலேசியா ஏர்லைன்ஸ் விமானம் MH370. 239 பயணிகளுடன் சென்ற அந்த விமானமானது திடீரென்று மாயமாகிவிட்டதோடு, இன்று வரை அதற்கான உண்மையான காரணம் எதுவும் கிடைக்கவில்லை. வரலாற்றில் இதுபோன்று நிறைய விமானங்கள் காணாமல் போயுள்ளன. அது போல மாயமாகி போய், இன்றளவும் கண்டுபிடிக்கமுடியாமல் போன விமானங்கள் சில உங்கள் பார்வைக்கு:

1. ஏர் பிரான்ஸ் விமானம் 447 :-

இந்த விமானத்தைப் பற்றி சொல்ல வேண்டுமானால், ஏர் பிரான்ஸ் விமானம் 447 ஆனது பிரேசிலிய வான்வெளியில் இருந்து பறந்து, செனகல் வான் எல்லைக்குள் நுழையும் போது, திடீரென்று விமான போக்குவரத்து கட்டுப்பாட்டுடன் கொண்டிருந்த அனைத்து தொடர்புகளும் துண்டிக்கப்பட்டுவிட்டது. இன்று வரை அது ஏன் நடந்தது என்று யாருக்கும் தெரியாது. இருப்பினும் 5 நாள் விசாரணைக்கு பிறகு, அந்த விமானமானது அட்லாண்டிக் பெருங்கடலைக் கடக்கும் போது வெடித்திருக்கும் என்று எண்ணி சாதாரணமாக விட்டுவிட்டனர்.

2. மெலியா இயர்ஹார்ட் சென்ற விமானம் :-

அமெரிக்காவை சேர்ந்த பெண் பைலட் அமெலியா இயர்ஹார்ட், சாதனை படைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் உலகைச் சுற்றி பார்க்க 1937 ஆம் ஆண்டு பசிபிக் பெருங்கடல் வழியே பறந்து சென்றார். அப்போது லேசான மேக கூட்டத்தில் சென்றவர், திடீரென மாயமாகிவிட்டார். அதிலும் அவர் பசிபிக் பெருங்கடல் வழியே சென்ற பகுதியில் சோதனை செய்த போது, அப்பகுதியில் அவரது உடலோ அல்லது அவர் சென்ற விமானத்தின் சிறு பாகம் கூட கிடைக்கவில்லை.

3. விமானம் 739 :-

1962 ஆம் ஆண்டு இராணுவ விமானம் ஒன்று மாயமானது. இந்த விமானத்தில் 93 இராணுவ வீரர்களும், 3 தெற்கு வியட்நாம் மக்களும் பயணித்தனர். இந்த விமானமானது மேற்கு பசிபிக் பெருங்கடலின் வழியே செல்லும் போது திடீரென்று மாயமாகிவிட்டது. ஒருவேளை வெடித்திருக்குமோ என்று பார்த்தால், அதற்கான ஆதாரம் ஏதும் கிடைக்கவில்லை. ஆகவே இதுவும் வரலாற்றில் காணாமல் போன விமானங்களில் ஒன்றாக உள்ளது.

4. ஸ்டார் டஸ்ட் விமானம் :-

ஸ்டார் டஸ்ட் விமானமானது ஆண்டிஸ் மலைத்தொடரை கடக்கும் போது, எந்த ஒரு தடயமும் இல்லாமல் காணாமல் போய்விட்டது. ஆனால் அதை பற்றி சோதனை செய்யும் போது, ஒரு வித்தியாசமான யாரும் புரிந்து கொள்ள முடியாத தந்திக்குறிப்பு ஒன்று மட்டும் கிடைத்தது. ஆனால் அதையும் யாராலும் புரிந்து கொள்ள முடியவில்லை என்பது தான் “வேதனையான” உண்மை.

5. பெர்முடா முக்கோணம் :-

பெர்முடா முக்கோணம்(Bermuda Triangle) என்றாலே அனைவருக்கும் புதிரான ஒன்று தான். ஏனெனில் அந்த பகுதியை கடக்கும் எந்த ஒரு பொருளும் மாயமாகிவிடும். அதுமட்டுமல்லாமல், உண்மையிலேயே விமானம் 19, பெர்முடா முக்கோணத்தை கடக்கும் போது மாயமாகிவிட்டது. இதுபோன்று 5 விமானங்கள் இந்த பகுதியை கடக்கும் போது மாயமாகியுள்ளன. இன்று வரை இதற்கான காரணத்தை யாரும் கண்டறியவில்லை. இனி எப்படியோ...!!!

6,மலேசியா ஏர்லைன்ஸ் விமானம் MH370 :-

மர்மமாக காணாமல் போன விமானங்களில் ஒன்று தான், மார்ச் 8 ஆம் தேதி மாயமான மலேசியா ஏர்லைன்ஸ் விமானம். இந்த விமானம் 239 பயணிகளுடன் மலேசியாவில் இருந்து சீனாவுக்கு சென்று கொண்டிருந்த போது, சீன கடற்பகுதியில் மாயமானது. ஒரு வாரம் ஆகியும் இன்னும் அந்த விமானம் என்ன ஆனது, அதில் உள்ளவர்கள் என்ன ஆனார்கள் என்பது இதுவரை புரியாத புதிராக உள்ளது. மேலும் இதனை கண்டுபிடிக்க உலக நாடுகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து தேடிக் கொண்டிருக்கிறது. பொறுத்திருந்து பார்க்கலாம்.

நன்றி : Sathiyam TV

The Himalayas From Space.

RAVANA WAS A HISTORICAL PERSON .....


RAVANA MARRIED MANDODARI : FROM TODAY'S NR. JODHPUR [ RAJASTHAN]

Mandodari (Sanskrit: मंदोदरी Mandodarī, lit. "soft-bellied", Sinhala: මන්දෝදරි; Tamil: Montotari; Indonesian, Javanese and Sundanese: Banondari; Khmer: Mandogiri; Malay: Mandudaki; Thai: Montho Thewi) is the queen consort of Ravana, the king of Lanka, according to the Hindu epic Ramayana. The Ramayana describes Mandodari as beautiful, pious, and righteous. She is extolled as one of the panchakanya ("five virgins"), the recital of whose names is believed to dispel sin.

Mandodari is the daughter of Mayasura, the King of the Asuras (demons), and the apsara Hema. Mandodari bears three sons: Meghanada (Indrajit), Atikaya, and Akshayakumara. According to some Ramayana adaptations, Mandodari is also the mother of Rama's wife Sita, who is infamously kidnapped by Ravana. Despite her husband's faults, Mandodari loves him and advises him to follow the path of righteousness. Mandodari repeatedly advises Ravana to return Sita to Rama, but her advice falls on deaf ears. Her love and loyalty to Ravana are praised in the Ramayana.

Different versions of the Ramayana record her ill-treatment at the hands of Rama's monkey generals. Some versions say they disturb a sacrifice by Ravana, and some that they destroy her chastity, which was the last protection for Ravana's life. Hanuman tricks her into disclosing the location of a magical arrow which Rama uses to kill Ravana. After Ravana's death, Vibhishana—Ravana's younger brother who joins forces with Rama and is responsible for Ravana's death—marries Mandodari on the advice of Rama. — with Khu Shi and Nupur Das.

Richard Norris before and after receiving the most extensive full face transplant ....

This is what Stephen Hawking looked like before he developed ALS.