Search This Blog

Wednesday, February 26, 2014

பொங்கும் பூம்புனல் சுமார் 33 வருடங்களுக்கு முன்பு ஒலிப்பதிவு செய்யப்பட்டது


சுமார் 33 வருடங்களுக்கு முன்பு ஒலிப்பதிவு 
செய்யப்பட்டது. கேட்டுப்பாருங்கள்
பழைய நினைவுகளை மீட்டுப்பாருங்கள்.

புண்ணியன்

சில விலங்கியல் வினோதங்கள்!


1. Madagascan Hissing Cockroach: இவ்வகை கரப்பான் பூச்சிகள் முட்டையிட்டு குஞ்சு பொரிக்காமல் நேரடியாக குஞ்சாக பிறக்கும் குணமுடையது. ஒரு சிலபூச்சியினங்களில் மட்டுமே இந்த பண்பு உண்டு. பொதுவாக நம் வீடுகளில்காணப்படும் கரப்பான் பூச்சிகள் முட்டையிட்டு குஞ்சு பொரிக்கும் தன்மையுடையது

2. ஒட்டகங்களின் பால் தயிராக மாறாது. 

3. Hamsters: இந்த இன எலிகள் ஒரு நேரத்தில் ஒரு கண்ணை மட்டுமே இமைக்கும்.

4. ஆடு மற்றும் ஆக்டோபஸின் கண்ணின் கருவிழிகள் செவ்வக வடிவில் இருக்கும். பொதுவாக எல்லா விலங்குகளுக்கும் கருவிழி வட்ட வடிவமாகவே இருக்கும்

5. எல்லா முள்ளம்பன்றிகளும் தண்ணீரில் மிதக்கும் தன்மையுடையது.

6. Copperhead snake: இந்தவகை பாம்புகளின் மணம் (smell) புதிதாக வெட்டிய வெள்ளரிக்காவின் மணத்தை போன்று இருக்கும். 

7. Tasmanian devils: இந்த விலங்கினம் ஆஸ்திரேலியாவின் அருகில் உள்ள டாஸ்மேனியன் தீவில் காணப்படும். இவை கோபப்படும் பொது அதன் காதுகள் இளம் சிவப்பு நிறமாகிவிடும் (Pinkish red).

8. Iguana: மத்திய மற்றும் தென் அமெரிக்காவில் காணப்படும் இந்த விலங்கினம் தண்ணீருக்கடியில் 25 நிமிடத்திக்கு மேல் இருக்கும் திறனுடையது.

9. பூனைகளுக்கு நான்கு வரிசை whiskers இருக்கும் (மீசை போன்று நீண்டு இருக்கும் ஆனால் மீசை அல்ல - உங்களுக்கு தெரிந்தால் தமிழ் படுத்தவும்) .

10. இங்கிலாந்து நாட்டில் உள்ள அனைத்து அன்னபறவைகளும் Sturgeons எனப்படும் மீன்களும் இங்கிலாந்து நாடு ராணிக்கே சொந்தம். அதையும் மீறி அதனை பிடிப்பவர்களுக்கு மிக பெரிய தண்டனை விதிக்கப்படும்.

11. கரடிகளுக்கு 42 பற்கள் உண்டு.

12. மிக சமீபத்தில் உருவாக்கபட்ட நாயினம் Bull Boxer தான். அமெரிக்காவில் 1990-1991 ஆம் ஆண்டு உருவாக்க பட்டது.

13. கன்னித்திரை என அழைக்கப்படும் Hymen மனிதர்களுக்கும் குதிரைகளுக்கும்மட்டுமே உண்டு.

14. Sea wasp (Box Jelly Fish) எனப்படும் ஜெல்லி மீன்கள் சுமார் அறை இன்ச் அளவே இருக்கும் இவை மாற்ற ஜெல்லி மீன்களை விட அதிக விஷம் உடையது.

15. நியூசிலாந்து நாட்டில் காணப்படும் கிவி (Kiwi) இடும் முட்டைகள்தான் உலகிலே மிக பெரியாது அவற்றின் உருவத்துடன் ஒப்பிடும்போது





மினரல் வாட்டர் தயாரிக்குது செம்பு!

கேன் வாட்டர், மினரல் வாட்டர் என்று பணத்தைத் தண்ணீராக செலவு செய்யும் காலமிது. ஆனால், ''வீட்டுக்கு ஒரு செம்புத் தகடு இருந்தாலே போதும், அருமையான மினரல் வாட்டர் கிடைத்துவிடும். மாசம் நூத்துக் கணக்கான ரூபாய் மிச்சமாகும்!'' என்கிறார் இந்திரகுமார். இதையும் இவரே பரிசோதித்துப் பார்த்திருக்கிறார்.
''மைசூர்ல இருக்கற அஜய் நினைவு குடிநீர் நிறுவனத்தைச் சேர்ந்தவங்க, செம்புப் பாத்திரத்துல தண்ணியை வெச்சி ஒரு ஆராய்ச்சி நடத்தினாங்க. அதோட முடிவுல, 'செம்புப் பாத்திரத்தில் 24-மணி நேரம் குடிநீரை வைத்திருந்து பரிசோதித்துப் பார்த்ததில், மனிதர் களுக்குப் பாதிப்பு ஏற்படுத்தும் நுண்ணுயிரிகள் எதுவும் அந்த நீரில் இல்லை'னு அந்த நிறுவனம் சொல்லியிருக்கு. இந்தத் தகவல் தெரிஞ்சதிலிருந்து செம்புக் குடத்துல வெச்சிருந்துதான் தண்ணியைக் குடிக்கிறோம். எங்கக் கிணத்துல கிடைக்கறத் தண்ணி, செம்புக் குடத்துக்குப் போனதும் மினரல் வாட்டர் மாதிரி அருமையா மாறிடுது. செம்பு குடம் இல்லனாலும் பரவாயில்லை. ஒரு கையளவு செப்பு தகட்டை குடத்துக்குள்ள போட்டு வெச்சா கூட உங்க வீட்டுத் தண்ணி தரமானதா மாறிடும். மூணு நாளைக்கு ஒரு தரம் செம்பு தகட்டை எடுத்துப் பார்த்தா பாசி புடிச்ச மாதிரி இருக்கும். அதெல்லாம் பாக்டீரியாக்கள்தான். தகட்டைச் சுத்தமா கழுவிட்டு திரும்பவும் குடத்துக்குள்ள போட்டு வைக்கலாம். அந்தக் காலத்துல பல வீடுகள்ல செம்புக்குடம்தான். இன்னிக்கும் சில கிராமங்கள்ல செம்பு குடத்துலதான் தண்ணி வெச்சி ருந்து குடிக்கறாங்க’’ என்று ஆதாரங்களை எடுத்து வைத்துப்பேசினார்
மினரல் வாட்டர் தயாரிக்குது செம்பு!

கேன் வாட்டர், மினரல் வாட்டர் என்று பணத்தைத் தண்ணீராக செலவு செய்யும் காலமிது. ஆனால், ''வீட்டுக்கு ஒரு செம்புத் தகடு இருந்தாலே போதும், அருமையான மினரல் வாட்டர் கிடைத்துவிடும். மாசம் நூத்துக் கணக்கான ரூபாய் மிச்சமாகும்!'' என்கிறார் இந்திரகுமார். இதையும் இவரே பரிசோதித்துப் பார்த்திருக்கிறார்.
''மைசூர்ல இருக்கற அஜய் நினைவு குடிநீர் நிறுவனத்தைச் சேர்ந்தவங்க, செம்புப் பாத்திரத்துல தண்ணியை வெச்சி ஒரு ஆராய்ச்சி நடத்தினாங்க. அதோட முடிவுல, 'செம்புப் பாத்திரத்தில் 24-மணி நேரம் குடிநீரை வைத்திருந்து பரிசோதித்துப் பார்த்ததில், மனிதர் களுக்குப் பாதிப்பு ஏற்படுத்தும் நுண்ணுயிரிகள் எதுவும் அந்த நீரில் இல்லை'னு அந்த நிறுவனம் சொல்லியிருக்கு. இந்தத் தகவல் தெரிஞ்சதிலிருந்து செம்புக் குடத்துல வெச்சிருந்துதான் தண்ணியைக் குடிக்கிறோம். எங்கக் கிணத்துல கிடைக்கறத் தண்ணி, செம்புக் குடத்துக்குப் போனதும் மினரல் வாட்டர் மாதிரி அருமையா மாறிடுது. செம்பு குடம் இல்லனாலும் பரவாயில்லை. ஒரு கையளவு செப்பு தகட்டை குடத்துக்குள்ள போட்டு வெச்சா கூட உங்க வீட்டுத் தண்ணி தரமானதா மாறிடும். மூணு நாளைக்கு ஒரு தரம் செம்பு தகட்டை எடுத்துப் பார்த்தா பாசி புடிச்ச மாதிரி இருக்கும். அதெல்லாம் பாக்டீரியாக்கள்தான். தகட்டைச் சுத்தமா கழுவிட்டு திரும்பவும் குடத்துக்குள்ள போட்டு வைக்கலாம். அந்தக் காலத்துல பல வீடுகள்ல செம்புக்குடம்தான். இன்னிக்கும் சில கிராமங்கள்ல செம்பு குடத்துலதான் தண்ணி வெச்சி ருந்து குடிக்கறாங்க’’ என்று ஆதாரங்களை எடுத்து வைத்துப்பேசினார்