Search This Blog

Sunday, February 16, 2014

காலையில் மூன்று வகையான உணவுகள்

காலை உணவைத் தவிர்க்கக் கூடாது என்பது முதல் விதி. இரண்டாவது விதி அது சரியான உணவாக இருக்க வேண்டும் என்பதுதான். குறிப்பாக, காலையில் மூன்று வகையான உணவுகள் இடம் பெற்றால் மூளையின் ஆற்றல் அபாரமாக இருக்குமாம்.

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த சத்துணவு நிபுணர்கள் 18 வயதுக்கு உட்பட்ட 800 மாணவ, மாணவிகளின் உணவுப் பழக்கத்தை ஆராய்ந்தனர். மூளை சிறப்பாகச் செயல்பட வேண்டும். மாணவர்கள் உற்சாகமாகப் பாடங்களில் உள்ள பெரிய பிரச்னைகளையும் எளிதில் தீர்க்க வேண்டும். கல்வி கற்பதில் எரிச்சல் வந்துவிடக்கூடாது. இதற்கு எளிய வழி காலையில் முழுத்தானியம் + பழம் அல்லது காய்கறி + பால் சம்பந்தப்பட்ட உணவு என இந்த மூன்றும் இடம் பெற்றால் பள்ளி, கல்லூரி மாணவர்கள் உட்பட அனைத்து வயதினரும் மூளை ஆற்றலுடன் நாள் முழுவதும் செயல்படுவார்கள் என்பதைக் கண்டுபிடித்து, பரிசோதித்தும் வெற்றியும் பெற்றனர், ஆஸ்திரேலிய சத்துணவு நிபுணர்கள்.

சரி, உணவுகள்?

1. முழுத்தானிய உணவால் செய்யப்பட்ட சாண்ட்விச், பாலாடைக்கட்டி, ஆப்பிள், அல்லது

2. தக்காளித் துண்டுகள், கோதுமை சாப்பாத்தி, காய்கறி அவியல், தயிர் ஒரு கோப்பை அல்லது

3. கோதுமை ரவை, பால், பழத்துண்டுகள்

என்று எளிமையாக இருந்தால் போதும். பழங்களைத் தேர்வு செய்யும்போது மட்டும் வைட்டமின் சி தாராளமாக உள்ள பழங்களையே தேர்வு செய்யவும். ஏனென்றால், வைட்டமின் சி இருந்தால்தான் வளர்சிதை மாற்றம் விரைவாக நடந்து மூளைக்கும் ஆக்ஸிஜன் தொடர்ந்து கிடைக்கும். ஆப்பிள் உட்பட எந்த ஒரு பழமும் காலையில் சாப்பிடவில்லை என்றால் பரவாயில்லை. தக்காளிப் பழம் ஒன்றை அவசியம் சாப்பிடவும். இதில் வைட்டமின் சி தாராளமாக இருக்கிறது.

இட்லி, தோசை, சம்பா ரவை, சோளவறுவல், தவிடு நீக்காத கோதுமையில் செய்த சப்பாத்தி, கேழ்வரகு ரொட்டி, பொங்கல் போன்ற முழுத் தானிய உணவுகள் மூலம் கிடைக்கும் மாவுச்சத்தும், பால், தயிர் போன்றவற்றின் மூலம் கிடைக்கும் சுண்ணாம்புச் சத்தும் முறையே மூளையையும், நரம்பு மண்டலத்தையும் அமைதிப்படுத்தி ஆற்றலுடன் செயல்பட வைக்கிறது. காய்கறிகளில் மிகக் குறைந்த அளவில் கிடைக்கும் வைட்டமின்களும் மூளையைத் துடிப்புடன் செயல்பட உதவுகின்றன.

பழத்துண்டுகளைக் காலை உணவின் போது இறுதியில் சாப்பிடுவது என்றால் அன்னாசிப் பழத்துண்டுகள், பப்பாளித் துண்டுகள் என்று சாப்பிடலாம். இவை உடனே செரிமானம் ஆக உதவும். இல்லையேல் மிக எளிய வழி, எலுமிச்சம் பழச் சாறுடன் ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து அருந்துவது.

காலை உணவில் பால் அல்லது தயிர் சேர்த்துக் கொண்டால் பழத்துண்டுகளாகச் சாப்பிடலாம்.

பழச்சாறாக அருந்தினால் பாலாடைக்கட்டி சேர்க்கலாம். அல்லது முதலில் தயிர் அல்லது பால் சாப்பிட்டுவிட்டு, இரண்டாவதாக முழுத்தானிய உணவு, மூன்றாவதாக பழம் அல்லது பழச்சாறு சாப்பிடலாம்.

சப்பாத்தி, ரவை முதலியவற்றில் தாராளமாக இல்லாத லைசின், இட்லியில் தாராளமாக இருக்கிறது. இதனால்தான் நீரிழிவு நோயாளியும் காலையில் இட்லி சாப்பிடுவதால் மூளை சோர்ந்து போகாமல் சுறுசுறுப்பாக செயல்படுகிறார்.

அடுத்தடுத்து பணிகளை சுறுசுறுப்பாகச் செய்யவும், மூளையும் மனமும் துடிப்புடன் விளங்கவும் காலை உணவை சரியான உணவாகத் தேர்வு செய்து சாப்பிடுவதே நல்லது.
காலையில் மூன்று வகையான உணவுகள்

காலை உணவைத் தவிர்க்கக் கூடாது என்பது முதல் விதி. இரண்டாவது விதி அது சரியான உணவாக இருக்க வேண்டும் என்பதுதான். குறிப்பாக, காலையில் மூன்று வகையான உணவுகள் இடம் பெற்றால் மூளையின் ஆற்றல் அபாரமாக இருக்குமாம்.

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த சத்துணவு நிபுணர்கள் 18 வயதுக்கு உட்பட்ட 800 மாணவ, மாணவிகளின் உணவுப் பழக்கத்தை ஆராய்ந்தனர். மூளை சிறப்பாகச் செயல்பட வேண்டும். மாணவர்கள் உற்சாகமாகப் பாடங்களில் உள்ள பெரிய பிரச்னைகளையும் எளிதில் தீர்க்க வேண்டும். கல்வி கற்பதில் எரிச்சல் வந்துவிடக்கூடாது. இதற்கு எளிய வழி காலையில் முழுத்தானியம் + பழம் அல்லது காய்கறி + பால் சம்பந்தப்பட்ட உணவு என இந்த மூன்றும் இடம் பெற்றால் பள்ளி, கல்லூரி மாணவர்கள் உட்பட அனைத்து வயதினரும் மூளை ஆற்றலுடன் நாள் முழுவதும் செயல்படுவார்கள் என்பதைக் கண்டுபிடித்து, பரிசோதித்தும் வெற்றியும் பெற்றனர், ஆஸ்திரேலிய சத்துணவு நிபுணர்கள்.

சரி, உணவுகள்?

1. முழுத்தானிய உணவால் செய்யப்பட்ட சாண்ட்விச், பாலாடைக்கட்டி, ஆப்பிள், அல்லது

2. தக்காளித் துண்டுகள், கோதுமை சாப்பாத்தி, காய்கறி அவியல், தயிர் ஒரு கோப்பை அல்லது

3. கோதுமை ரவை, பால், பழத்துண்டுகள்

என்று எளிமையாக இருந்தால் போதும். பழங்களைத் தேர்வு செய்யும்போது மட்டும் வைட்டமின் சி தாராளமாக உள்ள பழங்களையே தேர்வு செய்யவும். ஏனென்றால், வைட்டமின் சி இருந்தால்தான் வளர்சிதை மாற்றம் விரைவாக நடந்து மூளைக்கும் ஆக்ஸிஜன் தொடர்ந்து கிடைக்கும். ஆப்பிள் உட்பட எந்த ஒரு பழமும் காலையில் சாப்பிடவில்லை என்றால் பரவாயில்லை. தக்காளிப் பழம் ஒன்றை அவசியம் சாப்பிடவும். இதில் வைட்டமின் சி தாராளமாக இருக்கிறது.

இட்லி, தோசை, சம்பா ரவை, சோளவறுவல், தவிடு நீக்காத கோதுமையில் செய்த சப்பாத்தி, கேழ்வரகு ரொட்டி, பொங்கல் போன்ற முழுத் தானிய உணவுகள் மூலம் கிடைக்கும் மாவுச்சத்தும், பால், தயிர் போன்றவற்றின் மூலம் கிடைக்கும் சுண்ணாம்புச் சத்தும் முறையே மூளையையும், நரம்பு மண்டலத்தையும் அமைதிப்படுத்தி ஆற்றலுடன் செயல்பட வைக்கிறது. காய்கறிகளில் மிகக் குறைந்த அளவில் கிடைக்கும் வைட்டமின்களும் மூளையைத் துடிப்புடன் செயல்பட உதவுகின்றன.

பழத்துண்டுகளைக் காலை உணவின் போது இறுதியில் சாப்பிடுவது என்றால் அன்னாசிப் பழத்துண்டுகள், பப்பாளித் துண்டுகள் என்று சாப்பிடலாம். இவை உடனே செரிமானம் ஆக உதவும். இல்லையேல் மிக எளிய வழி, எலுமிச்சம் பழச் சாறுடன் ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து அருந்துவது.

காலை உணவில் பால் அல்லது தயிர் சேர்த்துக் கொண்டால் பழத்துண்டுகளாகச் சாப்பிடலாம்.

பழச்சாறாக அருந்தினால் பாலாடைக்கட்டி சேர்க்கலாம். அல்லது முதலில் தயிர் அல்லது பால் சாப்பிட்டுவிட்டு, இரண்டாவதாக முழுத்தானிய உணவு, மூன்றாவதாக பழம் அல்லது பழச்சாறு சாப்பிடலாம்.

சப்பாத்தி, ரவை முதலியவற்றில் தாராளமாக இல்லாத லைசின், இட்லியில் தாராளமாக இருக்கிறது. இதனால்தான் நீரிழிவு நோயாளியும் காலையில் இட்லி சாப்பிடுவதால் மூளை சோர்ந்து போகாமல் சுறுசுறுப்பாக செயல்படுகிறார்.

அடுத்தடுத்து பணிகளை சுறுசுறுப்பாகச் செய்யவும், மூளையும் மனமும் துடிப்புடன் விளங்கவும் காலை உணவை சரியான உணவாகத் தேர்வு செய்து சாப்பிடுவதே நல்லது.

The Singing Tree.


The Singing Tree. The Wind blowing makes music : Lancashire - England.



The Singing Tree. The Wind blowing makes music : Lancashire - England.

New laser can diagnose breath

THE UNIVERSITY OF ADELAIDE   Pixomar_laser_shutterstock
The new laser produces 25 times more light emissions than other lasers operating at a similar wavelength, allowing it to detect very low concentrations of gases.
Image: Pixomar/Shutterstock
University of Adelaide physics researchers have developed a new type of laser that will enable exciting new advances in areas as diverse as breath analysis for disease diagnosis and remote sensing of critical greenhouse gases.
Published in the journal Optics Letters, the researchers from the University's Institute for Photonics and Advanced Sensing and the School of Chemistry and Physics describe how they have been able to produce 25 times more light emission than other lasers operating at a similar wavelength - opening the way for detection of very low concentrations of gases.
"This laser has significantly more power and is much more efficient than other lasers operating in this frequency range," says Ori Henderson-Sapir, PhD researcher. "Using a novel approach, we've been able to overcome the significant technical hurdles that have prevented fibre lasers from producing sufficient power in the mid-infrared."
The new laser operates in the mid-infrared frequency range - the same wavelength band where many important hydrocarbon gases absorb light.
"Probing this region of the electromagnetic spectrum, with the high power we've achieved, means we will be able to detect these gases with a high degree of sensitivity," says Project Leader Dr David Ottaway. "For instance, it should enable the possibility of analysing trace gases in exhaled breath in the doctors' surgery."
Research has shown that with various diseases, minute amounts of gases not normally exhaled can be detected in the breath; for example, acetone can be detected in the breath when someone has diabetes.
Other potential applications include detection in the atmosphere of methane and ethane which are important gases in global warming.
"The main limitation to date with laser detection of these gases has been the lack of suitable light sources that can produce enough energy in this part of the spectrum," says Dr Ottaway. "The few available sources are generally expensive and bulky and, therefore, not suitable for widespread use."
The new laser uses an optical fibre which is easier to work with, less bulky and more portable, and much more cost effective to produce than other types of laser.
The researchers, who also include Jesper Munch, Emeritus Professor of Experimental Physics, reported light emission at 3.6 microns - the deepest mid-infrared emission from a fibre laser operating at room temperature. They have also shown that the laser has the promise of efficient emission across a large wavelength spectrum from 3.3-3.8 micron.
"This means it has incredible potential for scanning for a range of gases with a high level of sensitivity, with great promise as a very useful diagnostic and sensing tool," says Dr Ottaway.
This research was supported by the State Government through the Premiers Science Research Foundation (PSRF).
Editor's Note: Original news release can be found here.

Friday, February 14, 2014

மதுவினால் ஏற்படும் பாதிப்புகள்:-

நாம் சாப்பிடுகிற எந்த உணவும் ஜீரணமடைந்த பிறகு சிறுகுடலால் உட்கிரகிக்கப்பட்டு ரத்தத்தோடு கலந்துவிடும். இச்சத்துக்கள் கல்லீரலுக்குச் சென்று அங்கு பல்வேறு மாற்றங்களையும் பெறும். உடலின் தேவைக்குப் போக, மீதமுள்ள பல்வேறு சத்துக்களம் கல்லீரலில் சேமித்து வைக்கப்படும்.
அதுபோல மதுஅருந்தும் போது அது சிறுகுடலால் உட்கிரகிக்கப்பட்டு கல்லீரலைச் சென்றடையும். பல்வேறு உணவுகள், மருந்துகள் ஆகியவற்றின் வளர்ச்சிதை மாற்றங்களுக்கு உதவுவது போல, மதுவின் வளர்ச்சிதை மாற்றங்களிலும் கல்லீரல் பெரும் பங்கு வகிக்கிறது. மது முதலில் கல்லீரலில் உள்ள செல்களின் மைட்டோகான்டிரியாவிலுள்ள நொதியிலிருக்கும் ஆல்கஹால் டீஹைடிரோஜீனேஸ் என்ற நொதியினால் மாற்றமடைந்து அசிட்டால்டீஹைடு என்ற பொருளாக மாற்றப்படும். மீண்டும் அசிட்டால்டீஹைடானது டீஹைடிரோஜீனஸ் என்ற நொதியால், அசிட்டால் டீஹைடு, ஆயிடேட் என்ற பொருளாக மாற்றப்படும். இதுபோன்ற பல்வேறு நச்சுப் பொருட்களும், மதுவும் கல்லீரலைப் பெரிதும் பாதிக்கும்.

மதுவை தொடர்ந்தும், அதிகமாகவும் அருந்தும் போது கண்டிப்பாக கல்லீரல் பாதிக்கப்படும். தினமும் முப்பது கிராமிற்கு அதிகமாக ஆண்கள் குடிக்கும் போதும், பெண்கள் இருபது கிராமிற்கு அதிகமாகக் குடிக்கும் போது கண்டிப்பாக கல்லீரல் பாதிக்கப்படும்.

மது அதிகமாக அருந்தும் போது ஏற்படும் மாற்றங்களால் கல்லீரலில் கொழுப்புப் பொருட்கள் சேர்கின்றன. அதிகமாக கொழுப்பு அமிலங்கள் உற்பத்தியாக்கப் படுகின்றன. அதே நேரம் கொழுப்பு அமிலங்கள் குறைவாகவே செலவழிக்கப் படுகிறது. இதனால் இவை கல்லீரலில் படிந்து கல்லீரலை பெரிதாக்கிவிடும்.

மது அருந்துவதால் ஏற்படும் கல்லீரல் பாதிப்புகள்
கல்லீரல் செல்களில் கொழுப்பு அமிலங்கள் அதிகமாகத் தங்குதல், கொழுப்புப் பொருட்கள் அதிகம் மிகுந்து கல்லீரல் வீங்குதல், கல்லீரல் அழற்சியால் கல்லீரல் செல்கள் பாதிக்கப்பட்டு நலிவடைதல். ஹையலின் என்ற பொருட்கள் தோன்றுவதால் கல்லீரல் செல்கள் வீங்கி பெரிதாதல், ஹையலினால் நார் இழமைப் பொருட்கள் மிகுதல் போன்றவை தோன்றி இறுதியில் கல்லீரல் இறுக்கி நோயாக மாறும். அதிக மது அருந்துவோருக்கு கல்லீரலில் இரும்புச்சத்து அதிகமாகப் படியும்.

பொதுவாக மதுபானங்கள் பருகினால், இரத்த அழுத்தம் அதிகரிக்கும். அவையே அளவுக்கு அதிகமானால், இரத்த அழுத்தமானது உடனே அதிகரித்து, பின் பெரிய ஆபத்தை ஏற்படுத்தும்.

வோட்கா, பீர் மற்றும் ஜின் போன்றவற்றில் கொழுப்புகள் அதிகம் உள்ளன. பொதுவாக இவற்றை இந்த ஆல்கஹாலில் உணவுகளை விட, அதிகமான அளவில் கலோரிகள் இருக்கும். எனவே இதனை பருகினால், உடல் எடை அளவுக்கு அதிகமாக அதிகரித்துவிடும். பின் உடல் பாதிப்பின் ஆரம்ப நிலையான தொப்பை வந்து, பின் பல்வேறு கொடிய நோய்களும் உடலில் வந்துவிடும்.

இரத்த அழுத்தம் உடலில் அதிகரித்தால், இவை இதயத்திற்கு அழுத்தத்தை கொடுத்துவிடும். பின் மாரடைப்பு ஏற்படும். அதுமட்டுமின்றி, ஆல்கஹால், இரத்தத்தை உறைய வைத்து, இதயத்திற்கு போதிய இரத்த ஓட்டத்தையும் தடுத்துவிடும்.
அனீமியா எனப்படும் இரத்தக்குறைவு, ஆல்கஹால் பருகுவதால், ஏற்படும். ஏனெனில் ஆல்கஹால் பருகும் போது, ஆக்ஸிஜனை எடுத்துச் செல்லும் கொள்ளவானது குறைந்து, உடலில் இரத்த ஓட்டம் குறைந்துவிடும். இதனால் எந்த வேலை செய்யாமல் இருக்கும்போதும், அதிகமான சோர்வு ஏற்பட்டு, மூச்சுவிடுவதே கஷ்டமாக இருக்கும்.
மன அழுத்தம் குறைய வேண்டும் என்பதற்காக ஆல்கஹால் பருகுவார்கள். ஆனால் உண்மையில் ஆல்கஹால் பருகினால், தான் விரைவில் மன அழுத்தம் மற்றும் மன இறுக்கம் ஏற்படும்.
மூட்டுகளில் யூரிக் ஆசிட் அதிகமாக இருப்பதால், மூட்டு வலியானது ஏற்படுகிறது. அதிலும் ஆல்கஹால் அதிகமாக பருகினால், மூட்டுகளில் இன்னும் அதிகமான வலி ஏற்படும்.

ஆல்கஹால் குடித்தால், கணையத்தில் காயங்கள் ஏற்பட்டு, சாதாரணமாக நடைபெறும் செரிமானத்தையும் பாதிக்கும். இத்தகைய பிரச்சனை ஏற்பட்டால், அது குணமாவது மிகவும் கடினம். இதனால் இறப்பு கூட ஏற்படலாம்.

ஆல்கஹால் நரம்பு செல்களுக்கு விஷம் போன்றது. எனவே ஆல்கஹாலை அதிகம் பருகும் போது, அது உடலில் உள்ள நரம்புகளில் ஆங்காங்கு ஊசியை வைத்து குத்துவது போன்று இருக்கும் அல்லது உடலின் ஒரு பகுதி மட்டும் ஒரு மணிநேரத்திற்கு உணர்ச்சியில்லாமல் இருக்கும்.ஒரு குடும்பத்தையே சிதைக்க கூடிய இந்த மதுவை விட்டு விடுங்கள் என்று இன்று ஒரு தகவல் சார்பாக நண்பர்களை கேட்டு கொள்கிறோம் மற்றும் உங்களுடைய நண்பர்களிடமும் இதை புரிய வைக்க முயற்சி செய்யுங்கள் .இதனால் ஒருவர் திருந்தினால் கூட நல்ல விடயம் தான்

அறிகுறிகள்

துவக்கத்தில் அறிகுறிகள் தெரியாது, ஆரம்ப நிலையில் கல்லீரல் வீக்கம் இருக்கும். அதனைத் தொடர்ந்து பல்வேறு தொந்தரவுகளுடன் காமாலை, மூளை நலிவு, மகோதரம், வைட்டமின் சத்துக்குறைபாடு, பித்தநீர் குழாய் அடைப்பால் வயிற்றுவலி போன்றவையும் பிறகு கல்லீரல் இறுக்கி நோயும் வரும்.

சிகிச்சை
கல்லீரல் செல்கள் தாங்களாகவே தங்களைப் புதுப்பித்துக் கொள்ளும் திறன் பெற்றவை. அதனால் கல்லீரல் பாதிப்படைவதை தடுக்க மேற்கொள்ள வேண்டிய முக்கிய சிகிச்சை மது அருந்துவதை விட்டுவிடுவதுதான். உடல் எடைக்குத் தேவையான வைட்டமின் மற்றும் ஊட்டச்சத்து நிறைந்த உணவு கொடுக்க வேண்டும். தேவையற்ற மருந்துகளை தவிர்க்க வேண்டும். கல்லீரல் இறுக்கி நோய் வருமுன் தடுப்பு முறைகளை மேற்கொண்டால் பாதிப்பிலிருந்து தப்பிக்கலாம். இல்லாவிட்டால் கல்லீரல் தவிர, இதயம், மூளை, நரம்பு மண்டலம், இனவிருத்தி உறுப்புகள், கணையம், இரைப்பை குடல்கள் என பல்வேறு உறுப்புகளும் பாதிக்கப்படும்.
மது பழக்கத்திலிருந்து விலகும் வழிமுறைகள்.

1) உங்கள் மனதை தயார்படுத்திக் கொள்ளுங்கள்.
உங்களின் மன உறுதி வலுவாக இருக்குமானால், நீங்கள் துரிதமாக மதுவை விட்டு விடுவீர்கள்.

2) மதுவின் அளவை குறைத்துக் கொள்ளுங்கள்.
முதலில் மது அருந்துவோர் வட்டத்தைத் தவிருங்கள்.
ஒரு நாளைக்கு எத்தனை முறை குடிக்கிறீர்கள் என்பதைக் குறித்து வைத்துக் கொள்ளுங்கள்.
பின் ஒரு தடவை குடித்தபின் அடுத்த தடவை குடிப்பதற்கான இடைவெளியை படிப்படியாக அதிகரியுங்கள்.
பின் ஒரு நாள் முழுதும் மது குடிப்பதை நிறுத்தி விடுங்கள்
இவற்றின் போது,

உங்களுக்குப் பிடித்தமான வேறு ஏதாவது செயலில் ஈடுபடுங்கள். இது மதுவிலிருந்து உங்கள் புலனை திசை திருப்ப உதவும்.

ஒரு நண்பரிடமோ அல்லது நெருங்கிய உறவினரிடமோ உங்கள் பிரச்சினை பற்றி விவாதியுங்கள். இது மன அழுத்தத்தில் இருந்து ஆறுதல் தரும்.

3) மதுவுக்கு விடை கொடுங்கள்.
மதுவை மறுப்பதில் உறுதியாயிருங்கள்.
மதுவை விட்டு விடுவது கஷ்டமாகத் தோன்றினால், மனம் தளராதீர்கள். முயற்சியை விடாதீர்கள். தொடர்ந்து முயலுங்கள். மதுவை ஒழிப்போம் மனிதனாய் வாழ்வோம்.

வாழைத்தண்டு மருத்துவ குணம்

அதிக நீர்ச்சத்து- நார்ச்சத்து கொண்டது. சர்க்கரைச் சத்தும் உள்ளது. கொழுப்பைக் குறைக்கும். வயிற்றுப் புண்களைச் குணப்படுத்தும். சிறுநீர் எரிச்சலைப் போக்கும்.
ஊளைச் சதையைக் கரைத்து, உடல் பருமனைக் குறைக்கும்.

பெண்களின் மாவிடாய் கோளாறு- ரத்த அழுத்தத்துக்கு சிறந்த மருந்தாக பயன்படுகிறது, சிறுநீரகத்தில் தோன்றும் கற்களைக் கரைக்கும். அதிக உடல் பருமன் கொண்டவர்கள், தொப்பை உள்ளவர்கள் அடிக்கடி வாழைத்தண்டை உணவில் சேர்த்துக் கொண்டால் நலம்.

வாழைத்தண்டு அதிக குளிர்ச்சி கொண்டது என்பதால் அதை உண்ணும் நாட்களில் தயிர், மோரை தவிர்க்கவும். வாழைத்தண்டை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி மிளகு, சீரகம், பூண்டு, எலுமிச்சை சாறு கலந்து உப்பு போட்டு கொதிக்க வைத்து காலை உணவுக்கு முன் குடித்து வந்தால் உடல் கனம் குறைவதோடு ரத்த அழுத்தம் கட்டுக்குள் வரும்.

வாழைத் தண்டு குடலில் சிக்கிய மணல்&கற்களை விடுவிக்கும். சிறுநீர் தாராளமாகப் பிரியும். மலச் சிக்கலைப் போக்கும். நரம்புச் சோர்வையும் நீக்கும். வாழைத் தண்டுச் சாற்றை இரண்டு அல்லது மூன்று அவின்சு வீதம் தினம் உள்ளுக்கு சாப்பிட்டு வந்தால், வாய் ஓயாமல் இருமும் இருமல் நீங்கும். கோழைக் கட்டையும் இளகச் செய்யும். நல்ல பாம்பு கடிக்கு வாழைத் தண்டுச் சாற்றை ஒரு டம்ளர் வீதம் உள்ளுக்குக் கொடுத்தால் விஷம் தானாக இறங்கிவிடும்.

வாழைத்தண்டை சிறு துண்டுகளாக நறுக்கி அதனுடன் இஞ்சி, எலுமிச்சம் பழச்சாறு, மிளகு, சின்ன வெங்காயம், சீரகம் கலந்து நீர்விட்டு கொதிக்க வைத்து பிறகு சிறிது எண்ணெய் விட்டு தாளித்து சூப் போல் செய்து அருந்தி வந்தால் கீழ்கண்ட நோய்களுக்கு கண்கண்ட மருந்தாகும்.
மது, புகை போன்ற தீய பழக்கங்களால் அடிமைப் பட்டவர்களின் கல்லீரல் அதிகம் பாதிக்கப் பட்டிருக்கும். ஈரல் பாதிப்பினால் கண் பார்வைக் கோளாறு, காமாலை நோய் தாக்கும். இவர்கள் வாழைத்தண்டு சிறந்த மருந்தாகும்.

சிறுநீரகத்தில் கற்கள் உருவாகி பயங்கரமான வலி ஏற்படும். இந்த கற்களை அகற்ற வாழைத்தண்டு சிறந்த மருந்தாகும்.

குடற்புண்களை ஆற்றும் சக்தி இதற்குண்டு.

வாழைத் தண்டில் அதிக நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளதால் உடலுக்குத் தேவையான அனைத்து சத்துக்களும் கிடைக்கும். இரத்தத்தைச் சுத்தப்படுத்தி சீரான இரத்த ஓட்டத்திற்கு உதவும்.

உடல் பருமனால் அவதிப்படுபவர்கள் வாழைத்தண்டு சூப் செய்து தினமும் அருந்தி வந்தால் உடல் பருமன் குறையும்.

பெண்களுக்கு மாத விலக்குக் காலங்களில் ஏற்படும் உபாதைகளைம், வெள்ளைப் படுதலையும் குணப்படுத்தும்.

இரத்த அழத்தத்தைக் குறைக்கும். வயிற்றில் உள்ள கீரி பூச்சிகளை அகற்றும்.

தோல் நோய்களைக் குணப்படுத்தும்.

உடலில் நச்சுப் பொருட்கள் கலந்திருந்தால் விரைவில் குணமாக்கும்.

நீர்ச்சுருக்கம், நீர் எரிச்சல் இவற்றை போக்கும்.

Good sleep patterns can help men live longer

Gabriela Munoz   
Good sleep patterns can help men live longer – but women will only benefit if they also have a diverse diet, a new study shows.
The Monash University-led collaborative study found that women who ate a varied diet that included sources rich in vitamin B6 could still live long lives despite poor sleep habits. 
The researchers from Monash University, the National Defense Medical Centre, Taiwan, and the National Health Research Institutes, Taiwan, investigated the ways diet contributed to the relationship between sleep quality and mortality among elderly men and women.
Emeritus Professor Mark Wahlqvist from Monash University’s Department of Epidemiology and Preventive Medicine and the Monash Asia Institute said sleep played a more important role in men’s mortality than women’s.
“Poor sleep has been associated with increased morbidity and mortality including obesity, diabetes, cardiovascular disease and coronary heart disease,” Professor Walhqvist said.
“We found that for both genders, poor sleep was strongly correlated with poor appetite and poor perceived health.
“There was significant interaction between sleep quality and dietary diversity. For men, poor sleep was not associated with a greater risk of death unless there was also insufficient dietary diversity. For women, good sleep only provide a survival advantage if they had a diverse diet.”
The study found women were almost twice as likely as men to sleep badly. Women who were poor sleepers had a lower intake of vitamin B6 from food than those whose sleep was rated fair or good. Fair sleepers had lower iron intakes than good sleepers.
Both men and women could improve their outlook by eating a more varied diet.
“Sufficient dietary diversity in men could offset the adverse effect on mortality of poor sleep while women need to make sure they are eating foods high in vitamin B6,” Professor Walhqvist said.
Professor Wahlqvist said people who did not sleep well were also less able to chew, had poor appetites, and did less physical activity.
“These characteristics could contribute to lower overall dietary quality and food and nutrient intake, especially for vegetables, protein-rich foods, and vitamin B-6,” Professor Wahlqvist said.
“They may also contribute to the risk of death, either in their own right or together with problematic sleep. Intervention focusing on education on healthy dietary practices in elderly people could improve sleep duration and provide more stable levels of health.”
The study was recently published in the Journal of the American College of Nutrition.
Editor's note: Original news release can be found here.

மனைவி அமைவதெல்லாம் இறைவன்...

ஞாயிறு ஒளி மழையில் திங்கள்...

Yaarathu Sollamal Nenjalli Povathu-Nenjamellam Neeyae (+playlist)

ஹலோ மை டியர் - Manmadha Leelai

22 - 25 வயது..., பெண்களுக்கு மிகவும் கடினமான வயது.

1) உங்கள் காதலனுக்கு திருமணம் ஆகி இருக்கும்.உங்கள் நெருங்கிய தோழிகளுக்கெல்லாம் காதலன் இருப்பான், நீங்கள் மட்டும் தனிமையில் இருப்பீர்கள்.புறக்கணிக்கப்பட்டதாய் உணர்வீர்கள்.

2) அப்போது தான் வேலை தேட ஆரம்பித்திருப்பீர்கள். அதற்குள்,பெரியவர்களின் பார்வையெல்லாம் " இதெல்லாம் எங்க உறுப்படப்போது?" என்பது போன்றே இருக்கும் அல்லது வேலை செய்து என்னத்தைக் கிழிக்கப் போகுது என்றிருக்கும்.

3) நண்பன் இருந்தால் அவன், உங்கள் நல்லதொரு காதலனைப் போல பேசுவான். காதலா என்று கேட்டால், வெறும் நட்பு என்று கழட்டி விடுவான்.உங்களை உபயோகிப்பதைப் போல உணருவீர்கள், வேறு வழி இல்லாமல் பழகுவீர்கள்.

4) விளையாட்டுக்களில் ஆர்வம் குறையும். செய்தி தாள் படிக்க மாட்டீர்கள். ஆராவது சொல்வதை நம்பகூடாதென்று தோன்றினாலும் நம்பி விட நினைப்பீர்கள். 5) உடல் பருமன் ஏறாம , நீங்கள் விரும்பிய அனைத்தையும் உங்களால் சாப்பிட முடியாது. பொது இடத்தில் விளையாட்டுத் தனமாய் இருக்க ஆசைப்பட்டாலும் இருக்க முடியாது.

6) தினமும் முகத்தை பொலிவுற செய்யாவிட்டால், வாலில்லா குரங்கைப் போல் இருப்பீர்கள். யாராவது உங்களையே உற்றுப் பார்ப்பது போல் நினைத்தாலும் யாரும் பார்க்கவில்லை என்பதே உண்மையாக இருக்கும்.

7) முகப்பரு, நிறம் குறைவு, உடல்ப்பருமன், மாதவிடாய் வலி இப்படி ஏதாவதொரு பிரச்சினையை ஒரே நாளில் முடித்து விட ஏங்குவீர்கள்.

வீட்டில் யாருடனும் எதுவும் கதைப்பதற்கு இருக்காது, நெருங்கிய யாருடனாவது எல்லாவற்றையும் கதைக்க வேண்டும் போல் உணர்வீர்கள். நெருங்கிய தோழனே காதலனாகவும் இருக்க நினைப்பீர்கள்.

9). உறவினர் வீடுகளுக்குச் சென்றாலோ , சுப நிகழ்ச்சிகளுக்கு சென்றாலோ அத்தைமார்கலெல்லாம் எப்போது திருமணம் என்பார்கள்?மாமாக்களோ உன் career பத்தி என்ன முடிவு பண்ணியிருக்க என்பார்கள்?

10) இந்த உலகை வெல்வதற்கான அத்தனை தன்னம்பிக்கையும் உங்களிடம் நிறைந்திருக்கும்.ஆனால் சாதிப்பதற்கான வாய்ப்புகள் மட்டும் குறைவாக இருக்கும்.

11) இந்த உலகைப் பற்றி உங்களுக்கு பள்ளிகளில் என்னக் கற்பிக்கப் பட்டதோ, அது அத்தனையும் ஒன்றுமே இல்லை என்பது உங்களுக்கு தெரியவந்திருக்கும்.

12) வேலைக்காக எழுதும் தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற பின்னர் கூட , வேலை கிடைத்திருக்காது.

13) சிபாரிசு என்றவுடன் வேலை கிடைக்கும்.இங்கு எல்லாமே அரசியல் தான் என்பதை புரிந்துக்கொள்வீர்கள். பெண்கள் என்றால் சிபாரிசுடன் சேர்ந்து புன்னகைக்கவும் வேண்டும் என்றும் உணருவீர்கள். மேலதிகாரியின் சுரண்டலுக்கு பதிலாக செருப்பால் அடிக்க வேண்டும் என்று ஒரு தடவையாவது நினைப்பீர்கள்.

14) காதலுக்கு கண்கள் உண்டு என்பீர்கள். காதலை விட நட்புச் சிறந்தது என்று உணர்வீர்கள்.ஆணும் பெண்ணும் நட்புடன் இருக்க முடியுமா என்ற கேள்வி ஒரு நாளில் ஆயிரம் முறை வந்து போகும்.

15) இங்கு எதுவுமே எளிதில் இலவசமாக கிடைத்து விடாது என்பதை உணர்ந்துக் கொள்வீர்கள். உங்கள் மீது நீங்கள் வைத்திருக்கும் அதீத நம்பிக்கை மட்டுமே உங்கள் மனசாட்சியை வழி நடத்தும்.

16) கற்பு,கலாசாரம், நாகரீகம் எல்லாவற்றுக்கும் நடுவில் உங்களுகென்று தனி வட்டம் அமைத்து அதில் சுதந்திரமாக வாழ ஆசைப்படுவீர்கள். ஆனால் ஒவ்வொரு நாளும் இது தொடர்பான மூன்று பிரச்சினைகளையாவது எதிர்நோக்குவீர்கள்.

17)ஒரு நாளில் உங்களை விட வயது குறைந்த/கூடிய/நடுத்தரப் பிராய அங்கிள் வயதுடைய இப்படி யாராவது ஒருவருடைய கேலி/கிண்டல்/ பெண் ஒடுக்குமுறைக்கு உள்ளாவீர்கள்.பொம்புளைப் பிள்ளை இப்படித்தான் இருக்க வேண்டும் என்பதை ஒரு நாளில் ஒரு தடவையாவது எங்காவது கேப்பீர்கள்.

18) பஸ்ஸில், தெருவில், கல்லூரியில் சில மோசமான தருணங்களை சந்திக்கும் போது, ஆணாகப் பிறந்திருக்கலாம் என்று ஒரு தடவையாவது நினைப்பீர்கள். நீங்கள் பெண்ணாக பூரிப்படையும் போது, யாராவது ஏமாற்ற காத்திருப்பார்கள்.

19) நேரம் சென்று வீட்டுக்கு வரும் போதோ, தனியாகப் பயணம் செய்ய நேருகையிலோ யாருடைய துணையும் இல்லாமல் செல்வதையே விரும்புவீர்கள் . இருப்பினும் யாராவது ஒருவருடைய துணையை வலிந்து திணிக்கும் போது சாகலாம் போல வலிக்கும்.

20) காதல் தோல்வி பெண்களுக்கு கூடாது என்ற சமுகத்தில் வாழும் உங்களின் காதலை நீங்கள் கொண்டாட முடியாது/ வருத்தப்பட முடியாது. கேட்பவர்கள் உங்களை ஏளனமாகப் பார்ப்பார்கள்.

21) நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பதாக நினைத்த அடுத்த கணம், உங்கள் மகிழ்ச்சிக்கான காரணம் மறைந்து போகும்.

22) பெற்றோர்களும், உறவினர்களும், சகோதரர்களும் உங்களை உளவு பார்த்த்துக் கொண்டே இருப்பார்கள்.

23) இப்படி ஒரு வாழ்க்கையைத் தான் எதிர்க்கொள்ளப் போகிறோம் என்று சற்றும் எதிர்பார்க்காத ஒரு வாழ்க்கையை வாழ்ந்துக் கொண்டிருப்பீர்கள்.

இதயக்குரல்

அன்புமணி
















செல்லத்தம்பி யோசித்தான். யோசிக்க, யோசிக்க தன்மேலேயே அவனுக்கு ஆத்திரமாக வந்தது.

 நியாயமாகப்பார்த்தால் அவன் ஆத்திரப்படவேண்டியது தன்னைப் படைத்த ஆண்டவன் பேரில், ஆனால் அவன் நல்லவன். ஆகையால் தன்னையே நொந்து கொண்டான்.

 இறைவனுக்குத்தான் எவ்வளவு ஓரவஞ்சனை. சிலவேளைகளில் குப்பையில் மாணிக்கத்தையும் கோபுரத்தில் கூழாங்கல்லையும் அல்லவா போட்டுவிடுகிறான். பாவம் சீதா: பண்பின் சிகரமாகத் திகழ்ந்தும் ஏழ்மையில் மங்கிக் கிடக்கிறாள். அடச்சே: இந்த இரக்க உணர்ச்சியைக்கூட ஏழைகளிடம்தானே படைத்து வைத்திருக்கிறான் இறைவன். ஆடடா, அவள் நம்வாழ்க்கையில் குறுக்கிடாமலே இருந்திருக்கக்கூடாதா?

 செல்லத்தம்பி பள்ளிக்கூடத்தில் படித்துக்கொண்டிருந்த காலத்தில் மிகவும் கெட்டிக்காரன் என்று பெயரெடுத்திருந்தான். ஆனால் ஏழை. அவன் ஏழ்மையை அறிந்திருந்த சில ஆசிரியர்கள், 'தம்பி, என்ன கஷ;டப்பட்டாலும் நீ படிப்பைமட்டும் இடையில் நிறுத்திவிடாதே, உன் எதிர்காலம் பிரகாசமானது' என்று அடிக்கடி புத்தி கூறுவார்கள். அவனுக்கும் ஒரு ஆசை மேற்படிப்பு – டாக்டா.; ஆனால் நடந்ததோவேறு.

 ஜே.எஸ்.சி. தாண்டியதும் தன் குடும்ப நிலையை நன்கு உணர்ந்துகொண்ட செல்லத்தம்பி டாக்டராகும் தன் ஆசைக்கனவைத் துறந்தான். எப்படியாவது பணம் சம்பாதித்தே ஆக வேண்டும் என்று பறந்தான்.

 அதன் பயன் அவன் ஒரு எழுதுவினைஞன்.

 இந்த உத்தியோகத்தை ஒரு ஆரம்ப ஊன்றுகோலாக வைத்திருந்து படிப்படியாக மேலுக்கு ஏறவேண்டும் என்றுதான் அவன் எண்ணினான். ஆனால் எழுதுவினைஞன் வேலையில் இறங்கியவனுக்கு விமோசனம் ஏது? அதுவே இன்றுவரை நிரந்தர தொழிலாகத் தங்கிவிட்டது.

 இந்த உத்தியோகம் கிடைத்த புதிதில் செல்லத்தம்பி மிகவும் உற்சாகமாகக் காணப்பட்டான். முழுசாக ஒரு ரூபாவுக்குச் சொந்தக்காரனாக எந்தக் காலத்தும் இருந்திராதவனுக்கு நூறுரூபாவுக்குமேல் பணம் ஒரேசமயத்தில் கிடைப்பதனால் கேட்க வேண்டுமா? உண்மையைச் சொல்லப்போனால் அந்த நாட்களில் செல்லத்தம்பிக்கு ஒரு இறுமாப்பு கர்வமும் கூட.

 இனிமேல் நான் தாய் தந்தையருக்குச் சுமையாக இல்லை. குடும்ப பாரத்தைச் சுமப்பதில் நானும் பங்கு கொள்கிறேன். என் தம்பி தங்கைகளை குடும்ப கஷ;டம் தெரியாமல் வளப்பதற்கு உதவுகிறேன். பெற்றோருக்கும் இந்தவகையில் மகிழ்ச்சியை ஊட்டுகிறேன். வேறு என்ன வேண்டும் எனக்கு?

 அப்போது செல்லத்தம்பிக்கு வேறெதுவும் வேண்டியிருக்கவில்லை. ஒரே மகிழ்ச்சிக் கடலில் திளைத்துக் கொண்டிருந்தான்.

 வெகு நாட்களாக இந்தக் கனவு மயக்கத்தில் இறங்கியிருந்த செல்லத் தம்பிக்கு அன்று ஒரு புது அனுபவம் ஏற்பட்டது.

 இந்த இரண்டு வருடங்களாக தினமும் எட்டுமைல் சைக்கிளில் போகும்போதும் வரும்போதும் ஏற்படாத புதிய அனுபவமா இது? இல்லையில்லை. தினம் தினம் எத்தனையோ பெண்களைப் பார்த்திருக்கிறான் அவன்.

 ஆனாலும் அன்றுமட்டம் ஏனோ ஒரு மனக்கிளர்ச்சி, அவளும் அவனைப் பார்த்தது போன்ற ஒரு பிரமை. அது தான் இத்தனை பரபரப்புக்கும் காரணம்.

 எழுத்தாளர்கள் வேண்டுமானால் இதைக் காதல் என்று குறிப்பிடலாம். ஆனால் செல்லத்தம்பிக்கு அது தெரியவில்லை. பாவம் அப்பாவி.

 அந்தப் பெண் மகளிர் கல்லூரியில் படித்துக்கொண்டிருக்க வேண்டும். தினமும் வெள்ளைச் சேலையுடுத்து ஒரு கட்டுப் புத்தகங்களுடன் வந்து கொண்டிருப்பாள். செல்லத்தம்பி சைக்கிளை மிதித்துக் கொண்டே காரியாலயத் தெருவில் திரும்பும்பொழுது சொல்லிவைத்தாற் போல் அவள் எதிர்ப்படுவாள். கண்கள் சந்திக்கும். மௌனமொழி. உள்ளுக்குள் சிரிப்பு. அவ்வளவுதான். சைக்கிள் அவளைத்தாண்டிப் போய்விடும்.

 கிட்டத்தட்ட அரைவருடகாலம் இந்த நாடகம் தொடர்ந்து நடந்தது. ஒரு அபிவிருத்தியும் இல்லை. திடீரென்று அதற்கும் முற்றுப்புள்ளி இடப்பட்டது.

 கொஞ்ச நாட்களாக அந்தப் பெண் வருவதில்லை. செல்லத்தம்பியின் உள்ளத்தில் ஒரு ஏக்க உணர்ச்சி. எங்கே தேடுவான்? யாரிடம் சொல்வான்?

 சில மாதங்களில் இப்படி ஆதங்கத்தில் கழிந்தன.

 எப்படியோ அந்த நினைவு மங்கி அவன் மனதின் அடித்தளத்தில் தங்கிவிட்டது. நல்லவேளை இந்தத் 'தகாத' செயலை தொடர்ந்து செய்யாமல் விடயம் இதோடு முடிந்துவிட்டது என்று மேலுக்குத் திருப்பியடைந்தான் செல்லத்தம்பி. ஆனால் விடயம் என்னவோ அத்துடன் முடியவில்லை. மீண்டும் அந்தப் பெண் அவன் வாழ்;க்கையில் குறுக்கிட்டாள். விசித்திரம்தான்.

 செல்லத்தம்பி மாற்றலாகி முனைக்கோட்டைக்குச் செல்லவேண்டி ஏற்பட்டது. அங்கே தூரத்து உறவினர் ஒருவரின் வீட்டில் தங்குவதற்கு ஏற்பாடு செய்து கொண்டான். அன்று மாலை காரியாலயத்தில் இருந்து வந்ததும் வீட்டுக்கார அம்மா, 'எனக்கு உடம்பு கொஞ்சம் சுகமில்லை தம்பி. சீதாவைக் கோப்பி போடச் சொல்லியிருக்கிறேன். குடிச்சிட்டு இரு. ஐயா வந்ததும் வெளியே எங்காவது கூட்டிக்கொண்டு போகச் சொல்கிறேன்' என்றாள்.

 பார்வதி மாமியின் பேச்சு முடியவில்லை. அதற்குள் கோப்பி அவனைத்தேடி வந்துவிட்டது.

 ஆகா, இவள்தானா சீதா? செல்லதம்பி ஒருகணம் அயர்ந்து போனான். அவள், அந்த வெள்ளச் சேலையுடுத்து கட்டுப் புத்தகங்களுடன் அவன் பழைய காரியாலயப் பாதையில் எதிர்படும் பெண்தான்.

 சீதாவும் ஒரு புன்சிரிப்பின் மூலம் செல்லத்தம்பியைத் தெரிந்து கொண்டதாகக் காட்டிக் கொண்டாள்.

 சீதா எப்படி இங்கு வந்தாள்? சாதாரண மனிதர்களின் வாழ்க்கையில் நடக்கும் விநோத சம்பவங்களில் நம்பிக்கை இல்லாத செல்லத்தம்பிக்கு இது மாயமாகப்பட்டது.

 பார்வதி அம்மாள் அந்தப் புதிரை விடுவித்தாள். சீதா தன்சொந்த ஊரில் உள்ள பள்ளிக்கூடத்தில் தமிழ் எஸ்.எஸ்.சி. பாஸ்பண்ணிவிட்டு ஆங்கிலம் படிப்பதற்காக இங்குள்ள கொன்வென்டில் சேர்ந்திருக்கிறாள். பக்கத்து வீட்டில் தங்கியிருக்கிறாள். அடிக்கடி இந்த வீட்டுக்கு வந்து ஒத்தாசை செய்வாள், மிகவும் நல்ல பெண்!'

 வாரங்கள் பல கடந்தன. சீதாவும் செல்லத்தம்பியும் கிட்டத்தட்ட ஒரே வீட்டில் இருப்பது போலத்தான், ஆனால் இதுவரை அவர்கள் பேசிய வார்த்தைகளை எண்ணிப்பார்த்தால் இருபதுகூட இருக்காது. என்றாலும் சீதாவைப் பற்றி செல்லத்தம்பிக்கு வேண்டிய சில தகவல்கள் அங்கே கிடைத்தன.

 சீதா, பெயருக்கேற்றபடி பண்பு நிறைந்தவள். மிகவும் புத்திசாலி இங்கிதம் தெரிந்தவள். அறிவும், அடக்கமும் ஒருங்கேயமையப் பெற்றவள். ஆனால் ஏழை. அதனால்தான் கும்பையில் மாணிக்கமாக மறைந்து கிடக்கிறாள்.

 செல்லத்தம்பிக்கு ஒரு சபலம். சீதாவும் ஏழை நானும் ஏழை. தொழிலோ எழுதுவினைஞர் உத்தியோகம்தான். ஆனால் குடும்பத்தைக் கொண்டு நடத்தலாம் சீதாவின் விருப்பத்தை அறிந்தால்........

 சீதா என்ன நினைத்திருக்றாளோ?

 அன்றிலிருந்து சீதாவின் நடவடிக்கைகளை ஊன்றிக் கவனித்து வந்தான் செல்லத்தம்பி. பாம்பின் காலைப் பாம்பு அறியும் என்பார்கள். எப்படியோ தன்மேல் சீதாவுக்கு வெறுப்பில்லை என்பதை அறிந்து கொண்டான், செல்லத்தம்பி. முயன்றால் அவள் அன்பைப் பெறலாம.; உடனே அந்த முயற்சியில் இறங்கி ஒரளவு வெற்றியும் கண்டான். இரண்டொரு சம்பவங்கள் அதை உறுதிப்படுத்தின. செல்லத்தம்பிக்கு உள்ளுர மகிழ்ச்சி.

 வாழ்க்கையில் ஒரு புது அத்தியாயத்தை எழுதுவது போன்றநிலை. தானும் ஒரு மனிதாகிவிட்டது போன்ற எண்ணம் செல்லத்தம்பிக்கு. அடுத்த தடவை ஊருக்குச் சென்றிருந்த போது அது நிதர்சனமாகத் தெரிந்தது.

 வழக்கம் போல வீட்டில் கல்யாணப் பேச்சு புகையத் தொடங்கியது. தான் 'பையன்' பருவத்தைத் தாண்டி 'மனிதன்' பருவத்தை அடைந்து விட்டோம் என்பதில் அவனுக்கு இனியும் சந்தேகம் இருக்க இடமில்லை. என்றாலும் கல்யாணப் பேச்சுக்களில் அடிபட்ட விஷயங்கள் அவனுக்கு அவளவாகப் பிடிக்கவில்லை.

 'காசிநாதன் போடியார் வீட்டில் கேட்கிறார்கள். காணி, தோட்டம், வீடு அத்துடன் கைரொக்கம் ஐயாயிரம் தருகிறார்களாம்!'

 'அது இஷ;டமில்லாவிட்டால் ஆறுமக உடையாரின் வீட்டில் கேட்கிறார்கள் - ஆறு ஏக்கர் காணி, இரண்டுவளவு, வீடு, அத்துடன் காசும் மூவாயிரம்!'

 செல்லத்தம்பி திறந்த வாயை மூடவில்லை.

 நான் ஏழை என்றல்லவா இதுவரை எண்ணியிருந்தேன். இப்போதல்லவா தெரிகிறது என் மதிப்பு. கேவலம் ஒரு எழுதுவினைஞருக்கு இவ்வளவு விலை பேசக்கூடிய நிலையிலே நம் சமுதாயம் இருக்குமானால் இதற்கு விமோசனம் எப்போது? நம்மக்கள் விழிப்பது எப்போது?

 சமுதாயத்தின் கீழ் நிலையைப் பற்றி செல்லத்தம்பி வருந்தினாலும், அந்தரங்கமாக அவனுக்கு ஒரு திருப்தி. சீதாவின் கரத்தை இனித்தைரியமாகக் கேட்கலாம் அல்லவா?

 தனக்கு வரவிருக்கும் இத்தனை செல்வங்களையும் தியாகம் செய்து சீதாவின் குணம் ஒன்றுக்காகவே அவளை நாடிவருகிறேன் என்பதை அவள் அறிந்து கொண்டால் நிச்சயம் தன் அன்பை அவள் ஏற்றுக் கொள்வாள் அல்லவா?

 உடனே செல்லத்தம்பி சினிமாக் கதாநாயகனாக மாறி தன் பெற்றோருடன் போர் தொடுக்கச் சித்தமானான். ஆனால் சினிமாவில் வருவதுபோல் அந்தப்போர் அவ்வளவு இலகுவானதாக இருக்கவில்லை.

 'டேய்! மேதாவிப் பயலே, நீ இந்தக் கதை புத்தங்களைப் படிச்சிட்டு வந்து காதல், தியாகம், அன்பு என்று என்னிடத்திலே கதை அளக்காதே. ஏழைப் பெண்ணைக் காப்பாத்துறதுக்கு ஆண்டவன் இருக்கிறான். நீ அதற்காக ஒன்றும் தியாகம் செய்ய வேண்டாம். மரியாதை வேணுமெண்டால் ஊரிலே நாலுமனிதர் மதிக்கிறமாதிரி நடந்துகொள். அவ்வளவுதான் நான் சொல்லுவேன்!' இது அவன் அப்பாவின் கணை.

 'டேய் தம்பி, சீதனம் வாங்குறது அப்படி ஒன்றும் மோசமான காரியமில்லையடா. இந்தக்காலத்திலே சீதனம் வாங்காமல் கல்யாணம் செய்தால்தான் மரியாதைக் குறைவு. அதுவுமில்லாமல் நாங்களும் பிறகு இப்படிச் சீதனம் கொடுத்துத்தானே உன் தங்கச்சிகளுக்குச் செய்ய வேணும்.' - இது அவன் அம்மாவின் அறிவுரை.

 செல்லத்தம்பி விடவில்லை.

 'அம்மா, காணிக்கும் பணத்துக்கும் ஆசைப்பட்டு பெரிய இடத்தில் போய் மாட்டிக்கொண்டால், கொஞ்சக் காலத்தின் பின் நம்மையெல்லாம் மதிக்கவே மாட்டார்கள். பணத்திமிரிலும் செல்வச் செருக்கிலும், நாம் ஏழைகள் என்பதைக் காட்டிக்கொண்டேயிருப்பார்கள். ஏன், அப்படி நடப்பதைக் கண்முன்னே நீங்கள் காணவில்லையா?'

 'அப்படியானால் உன் தங்கச்சிகளுக்கு?'

 'அம்மா, கடவுள் இருக்கிறார். நல்லவர்களைக் கைவிடமாட்டார். சீதாவைப் போன்ற ஆதரவற்ற பெண்ணுக்கு வாழ்வளிக்கும் நம் அன்புக்காகவாவது கடவள் கருணை காட்டுவார்.'

 'என்னமோ போடா, நாளைக்கு நாலுபேர் நம்மைப் பார்த்துச் சிரிக்கிறத்துக்கு இடம் வைக்கக்கூடாது.'

 'சீதா தன் அன்பாலும் பண்பாலும் இந்தக் குடும்பத்தையே மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்திடுவாள். யார் சிரிப்பும் நம் காதில் விழாது. சீதேவி என்று நீ அடிக்கடி சொல்லுவாயே. சீதாவைப்பார்த்தால் நீயே தெரிந்து கொள்வாய்.'

 என்ன சொல்லியும் செல்லத்தம்பியின் எண்ணம் நிறைவேறவில்லை. தாயின் மனதை ஒரு படியாக மாற்றினாலும் தந்தையின் மனதை மாற்ற முடியவில்லை. மாறாக கண்டிப்பும் கட்டுப்பாடும் அதிகரித்தன.

 இந்தக் கட்டத்தில்தான் செல்லத்தம்பிக்கு தன்மேலும் தன்னைப் படைத்த இறைவன் மேலும் அளவில்லாத கோபம் வந்தது.

 சீதாவைப் போன்ற மாணிக்கங்களை ஏழ்மை என்ற கும்பை மேட்டிலும் இதயமில்லாத பணக்காரர்களைச் செல்வம் என்ற கோபுரத்திலும் வாழ விட்டது இறைவனின் தவறுதானே?

 அரச குமாரனாகப் பிறந்ததினால் ஏழை நாட்டியப் பெண்ணை மணந்து கொள்ள முடியவில்லை என்று அங்கலாய்த்தானாம் ஒரு இளவரசன் அந்தக் காலத்தில். இந்தக் காலத்தில் அரச குமாரனாகப் பிறக்க வேண்டியதில்லை. ஏழை எழுதுவினைஞனாகப் பிறந்தாலே போதும். சே! என்ன உலகம்! என்ன சமூகம்!

 செல்லத்தம்பி ஒரு முடிவுக்கு வந்தான்.

 எதிர்ப்புக்கு அஞ்சாது சீதாவை ஏற்றுக் கொள்ள வேண்டியதுதான்.

 ஓடினான் சீதாவிடம். எத்தனை பெரிய தியாயத்தைச் செய்து அவளை ஏற்றுக் கொள்ள வந்திருக்கிறேன் என்பதை அறிந்தால் அகமகிழ்ந்து போகமாட்டாளா சீதா?

 ஆனால் அந்தோ! சீதா என்ன கூறுகிறாள்?

 'உங்களுக்கு மிகவும் நன்றி. ஆனால்.... நீங்கள் என்னை ஏற்றுக்கொள்வதைப் பற்றி தான் யோசித்தீர்களே தவிர நான் உங்களை ஏற்றுக்கொள்வதைப்பற்றி யோசிக்கவில்லையே!..... மன்னிக்கவேண்டும். உங்கள் தியாயத்தை நான் ஏற்றுக்கொள்ள முடியாத நிலையில் இருக்கிறேன்.... போய்வாருங்கள்!'

 சிலையாகி நின்ற செல்லத்தம்பி மௌனமாக அவ்விடத்தைவிட்டுப் பெயர்ந்தான். அவன் தலை மறையும் வரை அங்கே நின்றுகொண்டிருந்த சீதா தலையைக் குனிந்துகொண்டு உள்ளே போனாள். அறையினுள் இருந்த சுவாமி படத்தின் முன் அவள் மண்டியிட்டபோது அவள் இதயக்குரல் பேசிற்று:

 'கடவுளே! இந்தக் துரதிர்ஷ;டசாலிக்காக அவர் தாய் தந்தையரைப் பகைத்துக் கொள்ள வேண்டாம். அவர் தியாகம் பெரிது. ஆனால்.. அவர் நல்வாழ்வுக்காக அதைவிடப் பெரிய தியாகத்தை நான் செய்தேன் என்பதை அவர் அறிந்து கொள்ள வேண்டாம். ஆமாம்.... ஆமாம்...!'

 சீதாவின் பிரார்த்தனை பலித்தது. கடைசிவரை சீதாவின் தியாகத்தை செல்லத்தம்பி அறிந்து கொள்ளவேயில்லை.
 

Thursday, February 13, 2014

பொதுஅறிவு:-


*நாம் இறந்த பிறகும் கண்கள் 6 மணிநேரம் பார்க்கும் தன்மையுடையது.

*சுகபிரசவம் அல்லாமல் தன் தாயின் வயிற்றில் இருந்து கிழித்து வெளியே எடுக்கப்பட்டவர் ஜூலியஸ் சீசர். அதனால்தான் இந்த முறைக்கு ‘சீசரியன்’ என்று பெயர் வந்தது.

*பிறந்து ஆறு முதல் எட்டு வாரங்கள் வரை குழந்தைகள் அழுதால் கண்ணீர் வராது.

*நான்கு வயது குழந்தைகள் ஒரு நாளைக்கு சுமார் 400 கேள்விகள் கேட்கும்.

*கருவில் முதன் முதலில் உருவாகும் உறுப்பு - இதயம் மனிதன் இறந்து போனதும் முதலில் செயலிழக்கும் உறுப்பு - இதயம்.

*மனித உடல்களில் சுமார் 6 கோடியே 50 லட்சம் செல்கள் இருகின்றன.

*ஒரு தலைமுறை என்பது 33 ஆண்டுகள்.

*மார்க்கோ போலோ என்கிற சிகரெட் நிறுவனத்தின் முதல் உரிமையாளர் நுரையீரல் புற்று நோய் தாக்கி இறந்துப் போனார்.

*பழ மரங்களில் நீண்ட காலம் விளைச்சல் தருவது ஆரஞ்சு மரம். சுமார் 400 ஆண்டுகளாக தொடர்ந்து அது விளைச்சல் தரும்.

*உலகிலேயே மிக சிறிய மரம் குட்டை வில்லோ மரம். அதன் உயரம் இரண்டே அங்குலம் தான்.

*ஒரு தர்பூசணி பழம் இருந்தால் அதில் இருந்து 6 லட்சம் தர்பூசணி பழங்களை உற்பத்தி செய்து விடலாம்.

*பொதுவாக தாவரங்கள் நகராது. ஆனால் கிலாமிடோமொனாஸ் என்ற ஒரு செல் தாவரம் நகர்ந்து போகும் தன்மை உடையது.

*பச்சோந்தியின் நாக்கு தன் உடலின் நீளத்தை இரண்டு மடங்கு அதிகமாக இருக்கும்.

*நாக்கை நீட்ட முடியாத ஒரே விலங்கு முதலை.

*நீல திமிங்கலத்தின் எடை 22 யானைகளின் எடைக்கு சமம். அதன் இதயம் ஒரு சிறிய கார் அளவில் இருக்கும்.

*யானையின் கால் தடத்தின் நீளம் அளந்து, அதை ஆறால் பெருக்கி வரும் விடையே - யானையின் உயரம்.

*ஒரு புள்ளி அளவு இடத்தை 70,000 (எழுபதாயிரம்) அமிபாக்களால் நிரப்ப முடியும்.

*தரையில் முதுகு படும்படி உறங்கும் ஒரே உயிரினம் - மனிதன்.

*முன்னால் பின்னால் பக்கவாட்டில் என அனைத்து பக்கங்களிலும் பறக்க முடிந்த பறவை - தேன்சிட்டு.

*தேன்சிட்டு, மரங்கொத்தி, போன்ற பறவைகளுக்கு நடக்கத் தெரியாது.

The Science of Kissing | It's Okay To Be Smart | PBS Digital Studios


by Maria Popova
Oxytocin, dopamine, and what the hineys of monkeys have to do with the faces of our lovers.
“Any man who can drive safely while kissing a pretty girl is simply not giving the kiss the attention it deserves,” Einstein allegedly smirked. “Like a bee that settles on the fragrant pistils of a flower, and sips in the nectar for honey, so should you sip in the nectar from between the lips of your love,” Hugh Morris counseled in The Art of Kissing, his entertaining 1936 guide for lovers. The first kiss in cinema both scandalized and tantalized audiences when it appeared on the silver screen in 1896. But why, exactly, do we like kissing so much?
In this illuminating short video, based on the altogether fascinating book The Science of Kissing: What Our Lips Are Telling Us (public library) by our mutual friend Sheril Kirshenbaum, Joe Hanson of It’s Okay To Be Smart, who has previously explored the mathematical odds of finding your soulmate, takes us through the neurochemistry, evolutionary biology, and social science of kissing — all with the necessary disclaimer that we know much less than we don’t, a vital reminder that science and human knowledge are driven by “thoroughly conscious ignorance.”
Scientists are not exactly sure why we kiss. This may be in part because they have not even definitively decided what a kiss is. Unlike most other areas of scientific investigation, there’s no accepted “taxonomy,” or classification system, for different kinds of kisses and closely related behaviors. What’s more, you don’t find the experts crunching the numbers and figures on kissing across world cultures, as researchers would surely do if they wanted to get a handle on the available data. Why so little analysis of osculation? Perhaps kissing seems so commonplace that few of us have paused to reflect on its deeper significance. Or it’s possible the subject has been intentionally avoided under the microscope given the challenges of interpreting what a kiss really means.
[…]
Because a kiss brings two individuals together in an exchange of sensory information by way of taste, smell, touch, and possibly even silent chemical messengers called pheromones (odorless airborne signals), it has the potential to provide all kinds of insight into another person. So even when our conscious minds may not recognize it, the act can reveal clues about a partner’s level of commitment and possibly his or her genetic suitability for producing children.
Thanks  http://www.brainpickings.org

வனம்மாள் - அழகிய பெரியவன்

சூரியன் பொழியும் தூரத்து வானம் வரைக்கும் வெள்ளை வெள்ளையாய் குத்துக்கற்களும், சரளைக் கற்களுமாக நிரவி, நட்சத்திரங்களுடன் சிவந்த வானமாக அந்தச் செம்மண் பிரதேசம் இருந்தது. எங்கோ ஒன்றாய் தோழமையற்றுத் தனித்து தவிப்புடனிருந்தன பனை மரங்கள்.
சாலம்மாளுக்கு கானல் மருட்டியது. அவளின் மோட்டாங்காட்டின் வடக்காலே எழும்பிச் சரிந்திருக்கும் சிறு குன்றின் பாறைக் கூட்டங்களுக்கிடையிலே, நீர் வற்றிக் கிடக்கும் குட்டையை நோக்கி, தலையில் குடத்துடன் போய்க்கொண்டிருந்தாள் அவள். கூப்பாடுடAlakiyaperiyavan ன் விருட்டென்று அவளைக் கடந்த பறவையொன்றின் திசையிலே அலையலையாய் எழுந்து ஆடும் கருஞ்சுவாலைக் கூட்டம்போல தூரத்தில் ஊசிமலை அவளுக்குத் தென்பட்டது.
வயோதிகத்தின் நியதிகளைத் தட்டாமல் ஏற்றிருந்த சாலம்மாளின் தேகம், ஒரு யுகத்தின் நகர்வுபோல இயங்கியது. முந்தானையைச் சுருட்டித் தலைச்சும்மாடாகவும், முக்காடாகவும் மாற்றிக் கொண்டு பெருமூச்சுகளுடனும் தனக்குத் தானே பேசியபடியும் போய்க்கொண்டிருந்தாள் அவள். இரண்டு மூன்று குடங்கள் சுமந்து வந்ததற்குள் களைத்து ஒரு மரத்தடியில் ஓய்ந்து உட்கார்ந்துவிட்டாள்.
வெப்பக் காற்று மாந்தளிர்களில் பட்டு தணிந்து வீசியது. கருகும் தளிர்களின் வாசம்போல மாம்பூக்களின் வாசம் மெல்லக் காற்றிலே பரவி அடங்கியது. அவளைப் போலவே பக்கத்துத் துண்டுகளிலும் சிலர் மாஞ்செடிகள் வைத்திருந்தனர். சிலர் அப்படியே தரிசாகவிட்டு வைத்திருந்தனர்.
ஒரு நான்கைந்து ஆண்டுகளுக்கு முன்பிருக்கும். அப்போது சாலம்மாளுக்கு நல்ல புத்தி இருந்தது என்றே சொல்ல வேண்டும். அந்த ஊரிலும், சுத்துப்பட்டிலும் இருக்கிற வானம்பார்த்த பூமி கொண்ட ஏழை விவசாயிகள் சிலருக்கு இயேசுகாரர்கள் இலவசமாகவே மாங்கன்றுகளைத் தருவதாகக் கேள்விப்பட்டாள். உடனே முந்திக்கொண்டாள் சாலம்மாள். அவளுக்கிருந்த கையளவு நிலத்துக்கு அவர்கள் கொடுத்த சில செடிகளே போதுமானதாக இருந்தன. கிடைத்த மாஞ்செடிகள் எல்லாமுமே மெங்களூரா, நீலம் வகைகளாகவே இருந்துவிட்டதால் சாலம்மாளின் மனசு கேட்கவில்லை. மேல் ஆலத்தூர் அரசாங்கப் பண்ணை வரை போய் காதர், பீத்தர், பங்கனப்பள்ளி, மல்கோவா என்று வகைக்கொன்றாகவும், சிலவற்றை வாங்கி வந்து வைத்தாள். செடிகளின் ஒட்டு பிரிந்துவிடாமல் தொட்டிகளை கவனமாக உடைத்து, பச்சைப்பிள்ளைகளை கையாள்வது போல நட்டு, குளம் குட்டை என்று விடாமல் அலைந்து நீர் ஊற்றினாள் சாலம்மாள். புதிய இடத்தில் பொருந்தாமல் இருப்பவர்களைப் போல இருந்த செடிகள் பச்சை பிடித்ததும் தான் அவளுக்கு உயிரே வந்தது. மரஞ்செடிகள் என்றாலே சாலம்மாவுக்கு உயிர்தான். கையில் கிடைப்பதையெல்லாம் கொண்டு வந்து வைத்து அவள் வீட்டை நந்தவனமாக்கியிருந்தாள். கொத்திக் கொண்டும், நீர்வார்த்துக்கொண்டும், சருகுகளை அள்ளிக்கொண்டும் இருப்பது தான் அவள் வேலை. பூத்துக் குலுங்கும் அவள் தோட்டத்துப் பூக்கள் ஊர்ப்பெண்டுகளின் தலைகளிலெல்லாம் சிரிக்கும். அவள் தோட்டத்துக் காய் கனிகளுக்கே தனி ருசிதான் என்று சொல்வார்கள்.
“மரம், மரமின்னு பைத்தியமா கீறாளே! காட்டுலேர்ந்து எறங்கிவந்துட்டாளா!”
“புள்ளைங்க, திக்குதெச இல்லாததுக்கு எதுமேலியாவது ஆச இருக்க வேண்டியதுதான். ஆனாலும் இப்பிடியா?”
“நம்ம வேலூர் பக்கமா யாரோ ஒருத்தரு வீட்டு மரங்களுக்கு பத்திரிக்க அடிச்சி கல்யாணம் செஞ்சிவெச்சாராமே. அப்பிடி இவுளும் செய்வாளோ எனுமோ?” ஊரார் பேசிக்கொள்வதும் உண்டு.
சாலம்மாளின் மரப்பிரியத்தை எவராலும் புலங்காண முடிந்ததில்லை. ஊரிலிருக்கும் அத்தனை மரங்களும் அவளுக்குத் தாய்மடிதான். தினமும் ஒன்றின் நிழலிலாவது செத்த நேரம் ஒக்காந்து மனக்குறைகளைத்தானே புலம்பியபடி இருப்பது வாடிக்கையாயிருந்தது சாலம்மாளுக்கு.
காற்றும் மழையுமாக இயற்கை ஒருமுறை சாடிவிட்டுப் போய்விட்ட போது வானத்தைப் பார்த்து நெட்டி முறிப்பதும், மழையைச் சபிப்பதுமாக இருந்தாள் சாலம்மாள். கொய்யாவின் இளங்கிளையையும், முருங்கையையும் பேய்க்காற்று பதம் பார்த்துவிட்டுச் சென்றிருந்தது. முறிந்த கிளைகளைச் சேர்த்து செம்மண் துணி சுற்றிவிட்டாள் சாலம்மாள். சிரித்துவிட்டுப் போனவர்களையெல்லாம் சட்டை செய்யவில்லை அவள். இப்படித்தான் போன மாதம் கிராம அபிவிருத்தித் திட்டம் ஒன்று அவர்கள் ஊருக்கு வந்து சேர்ந்தது. ஊர்முச்சையருகே கிளை விரித்திருந்த அரசமரத்தையும், ஊர் எல்லையிலிருக்கும் நாகமரத்தையும் படிப்பகம் கட்டவும், நீரேற்று அறை, தொலைக்காட்சிப் பெட்டி அறை கட்டவும் வெட்டிவிடுவது என்று தீர்மானமாகிவிட்டது. சாலம்மாளுக்கு இது தெரியவந்ததும் ஆங்காரியாகிவிட்டாள். மரத்தின்மீது முதல் வெட்டு விழுந்தபோது தலைவிரி கோலமாய் குறுக்கே மறித்து விழுந்தாள் சாலம்மாள். ஓடிவந்ததில் அவளுக்கு மூச்சிரைத்தது.
“டேய் நாங்க அக்கா தங்கச்சிங்க தங்கியிருக்கண்டா இதுல..எங்களெ ஓட்டப்பாக்குறவன் எவன்டா?”
“தாயே பொறுக்கணும். நீ யாரு?”
“நாகலம்மா, பூவுலம்மா, எல்லம்மாடா எங்க இருப்பிடன்டா இது. நாங்க எடுத்து அடி வெக்கிறது எல்ல நாகமரம்டா. நாங்க இருக்கிற மரங்களெ வெட்டி எங்கள ஓட்டப்பாத்தா ஊரையே துவம்சம் பண்ணிடுவம்டா”
கத்திகளும், வாள்களும் கீழே விழுந்துவிட்டன. மரங்களை வெட்டுவதில்லை என்று பதில் பெற்றவுடன் மலையேறிவிட்டது சாமி. மரங்களைக் காப்பாற்றின அன்றெல்லாம் சாலம்மாள் அரசமரத்தடியிலேயேதான் கிடந்தாள். சாலம்மாள் தனிக்கட்டை. பிள்ளையில்லாததால் புருஷன் துரத்திவிட வாழாமல் வந்து ஊரோடு தங்கிவிட்டவள். நாதி என்றிருந்த ஒரே அண்ணனும் வேலை, வாழ்க்கை என்று ஊரைவிட்டுப் போய்விட்டான். கிராமத்து வீடும் கொஞ்சம் மேட்டுநிலமும் அவள் பாடு என்றாகிவிட்டது. யாரும் கண்டுகொள்ளாத அந்த மேட்டு நிலத்தில் வலு இருக்கும்வரை விழுந்து எழுவது என்று அல்லாடி வந்தாள். சும்மாடைப் பிரித்து முகம் துடைத்துக்கொண்டாள் சாலம்மாள். நேற்றுதான் நட்ட மாதிரி இருக்கிறது. அதற்குள் வளர்ந்துவிட்டன. பூவெடுத்திருக்கும் கவைகளை உடைத்துவிட வேண்டும். காப்புக்கு விட இன்னும் கொஞ்சம் போகட்டும் என நினைத்துக்கொண்டாள். கானலின் ஊடாக சுழன்ற அவள் பார்வை கிழக்காக இருந்த வெற்றிடத்தில் நிலைகுத்தித் தவித்தது. அங்கிருந்த கானலும், வெம்மையும் அப்படியே பெயர்ந்து அவள் மனதுக்குள் வந்து இறங்கியது. பழசை நினைத்துக்கொள்ள கண்கள் மடைதிறந்துகொண்டன.
கேட்க நாதியில்லை என்பதால் ஊரிலே சாலம்மாள் என்றாளே இளக்காரந்தான். நடுத்தெரு இடைச்சி ரங்கமணிக்கும், அவள் மச்சினன்மார்களுக்கும் ரொம்பவுமே கிண்டல்தான். ஒருநாள் விறகு பொறுக்கிக்கொண்டு தன் நிலத்தின் வழியே வந்த ரங்கமணி மாவிலைகளைப் பிய்த்து கசக்குவதைப் பார்த்துவிட்டாள் சாலம்மாள். வேர் கிளம்பிவிடுமே என்று பதைபதைத்து திட்டித் தீர்த்துவிட்டாள் ரங்கமணியை. கன்றுகளை வைத்து கொஞ்ச காலம்தான் ஆகியிருந்தது. மறுநாள் சாலம்மாள் நிலத்துக்குப் போனபோது பாதி மாஞ்செடிகள் வெட்டிச் சாய்க்கப்பட்டிருப்பதை பார்த்தாள். தன் கழுத்தை யாரோ அறுத்திவிட்டது போல வலித்தது வலித்தது அவளுக்கு. “ அய்யோ எம் புள்ளிங்களே! என் செல்லங்க போச்சே” வயிற்றிலும் மார்பிலும் அடித்துக்கொண்டு, வீழ்ந்திருக்கும் செடிகளை ஓடிஓடி எடுத்து அழுதாள் சாலம்மாள். சாலம்மாளின் பக்கத்து நிலம் ரங்கமணியுடையது. இவளின் நிலம்மீது ஒரு கண் ரங்கமணிக்கு இருந்தே வந்தது. “சின்னதுக்குத்தான் சின்னங் கொலையறதுன்ற மாதிரி ஆயிடுச்சே. அய்யோ எங் கொறையே. வேர் கெளம்பிடுமே, ஏண்டி இப்படி செய்யறன்னதுக்கேவா இப்படி பன்னிர்றது? ஒஞ் சாதித்திமிர எஞ் செடிங்க மேலியா காட்டறது?” ஊர்ப் பஞ்சாயத்துக்குப் பிராது கொடுத்துவிட்டு அன்று முழுவதும் இழவு வீட்டுக்காரி மாதிரி இருந்தாள் சாலம்மாள். “மரங்களுக்குப் போய் இப்படி மாரடிக்கிறாளே” என்று சொல்லிக் கொண்டனர் ஊரார். பொழுது அமர கூடிய பஞ்சாயத்தில் வெட்டியது யார் எனத் தெரியாமல் பேச முடியாது என்று தீர்ப்பு வந்தது. இவரிவர்கள்தான் வெட்டியிருப்பார்கள். தாட்டிமமான, அரக்கி அரக்கி நடந்திருக்கும் காலாடித் தடங்கள் ரங்கமணியினுடையதுதான் என்று சாலம்மாள் சொன்னதை யாரும் எடுத்துக் கொள்ளவில்லை.
அவுக்கென்றாகிவிட்டது சாலம்மாளுக்கு, மனசு ஆறாமல் மறுநாள் காலம்பரமே மாஞ்செடிகள் தந்த இயேசுக்கார அய்யா வீட்டுக்குப் போய் ஒப்பாரி வைத்தாள் சாலம்மாள்.
”நீ இப்படி அழவேண்டியதே இல்ல, வேற செடிகளுக்கு ஏற்பாடு பண்ணுவேன்” என்றதும் வேகமாய்த் தலையசைத்தாள் சாலம்மாள்.
வெட்டினவங்களுக்கு நீ தண்டென வாங்கித் தரணும் சாமீ, பாதி புள்ளைங்க களுத்த அறுத்துப்புட்டாங்களே”
“சரி நீ போயி போலீசுல சொல்லு. நான் பின்னாடியே வரேன்”
இயேசுக்கார அய்யா சொன்னதும் காவல் நிலையம் போய்விட்டாள் சாலம்மாள்.
“மரம் வெட்டின கேசெல்லாம் இங்க எடுத்துக்கறதில்ல பாட்டி” என்ற பதிலெல்லாம் அவளை அசரச் செய்யவில்லை. பகலுக்கும் காவல் நிலைய வாசலிலேயே மூக்குச் சிந்திக் கொண்டிருந்தாள் அவள்.
“சரி உன்னெ அடிச்சுப்புட்டு, மரத்தெ வெட்டிப்புட்டாங்கன்னு ஒரு மனு எழுதினு வா”
மனுகொடுத்தபிறகு காவல் நிலையத்துக்கும், இயேசுக்கார அய்யா வீட்டுக்கும் என நடந்தபடியே இருந்தாள். வழக்கு பதிவாகி முதல் சம்மன் வந்தபோதுதான் அவளுக்கு மனது ஆறியது. “என்னாதான் காலங்கெட்டுக் கெடந்தாலும் நியாயஞ் செத்துப் போகுமா? இருங்கடி இருங்க. துன்னத் துடிக்க எஞ்செடிகளெ வெட்டந்துக்கு இன்னிக்கு இருக்குது உங்குளுக்கு”
சம்மன் வந்த நாளெல்லாம் கோர்ட்டு வாசலில் தவம் கிடந்தாள். ஆனால் அவள் நினைத்தபடியெல்லாம் எதுவுமே நடக்காமல் அவளுக்கு ஏமாற்றமாய்ப் போனது.
ஒன்றிரண்டு நாட்களுக்குள்ளாகவே, “தப்பு தப்புத்தான்னு சொல்லிப்புட இந்த மனுசங்களுக்கு இத்தினி தயக்கமா?” என புலம்பிக் கொண்டே அண்ணன் மகன் தம்பிதுரை வீட்டுக்குப் போய்ச் சேர்ந்தாள் சாலம்மாள்.
அவள் அண்ணன் போனபிறகு அவளுக்கென்று இருந்த ஒரே ஆதரவு தம்பிதுரைதான், அவன் தூரத்தில் இருந்தாலும் மாதத்துக்கு ஒருகால் பஸ் பிடித்துப் போய் பார்த்துவிட்டு வந்துவிடுவாள் அவள். அவனின் எல்லா பிள்ளைகளையும் மார்மேல்போட்டு சாலம்மாள் தான் வளர்த்துவிட்டாள். அதிலும் சின்னவள் சிவப்பி என்றால் சாலம்மாளுக்கு கொள்ளை ஆசை. தம்பிதுரை அரசாங்க வழக்கறிஞரைப் போய்ப் பார்க்கச் சொன்னான். மறுநாளே விசாரித்துக் கொண்டு வழக்கறிஞரிடம் போய்ச் சேர்ந்தவள், ஒப்பாரியும், முறையிடலுமாக நெளியவைத்ததுவிட்டாள் அவரை.
“ஏம்பாட்டி, தேக்கு மரத்தெ வெட்டிட்டாப்பில ஏன் அழற? மரந்தானெ பாக்கலாம் வுடு”
“அய்யா அதுங்க மரம் இல்லய்யா, என் வயித்துல பொறந்த பொறப்புங்க மாதிரி, அந்தக் கொலகாரப் பாவிகளுக்கு நீதான் தீர்ப்புச் சொல்லணும்”
வாய்தாவுக்கு வாய்தா சாலம்மாளின் ஒப்பாரி அதிகமாகிக் கொண்டே போனது. இனிமேல் அலுவலகம் பக்கம் வந்தால் கேசை தோற்கடித்துவிடுவேன் என்று சொல்லி அனுப்பிவிட்டார் வழக்கறிஞர்.
பிராது கொடுத்து மறுநாளே ரங்கமணியின் கூட்டாளிகளுக்கு தண்டனை கிடைத்துவிடும் என்று நினைத்தவளுக்கு இன்னும் எதுவுமே நடக்காதது அதிர்ச்சியாய் இருந்தது. நடையாய் நடந்து யார் யாரையோ பார்த்துவிட்டாள். எத்தனையோ வாய்தாக்களுக்கும் போய்விட்டாள். வேறு செடிகளுக்காக இயேசுக்கார அய்யாவை பலமுறை சென்று பார்த்ததிலும் ஒன்றும் நடக்கவில்லை. சாலம்மாள் ஓய்ந்துவிட்டாள்.
செங்கம்புதரிலிருந்து காடை ஒன்று ‘புர்’ என பறந்து போனதும்தான் சாலம்மாளுக்கு நினைவு திரும்பியது. வெயில் உச்சிக்கு ஏறியிருந்தது. காற்றில் சலசலக்கும் மாஞ்செடிகளைப் பார்த்தபோது அவளுக்கு ஆயாசமெல்லாம் மறைந்துபோனது. மிச்சமிருக்கும் மரங்களைப் பராமரிப்பதும், தண்ணீர் விடுவதும், நெட்டி முறிப்பதும், அவைகளுடன் பேசுவதுமாக இத்தனை நாட்களை கழித்துவிட்டாள். வயல் வரப்புகளிலும், தண்ணீர் தொரவுகளிலும் ரங்கமணியைப் பார்த்துக்கொள்ளும்படி நேர்ந்துவிடும்போதெல்லாம் அவளின் ஏளனச் சிரிப்பில் சருகுகள் மிதிபடுவதுபோல் ஆகிவிடும் சாலம்மாளுக்கு. அதைத் தவிர்க்கவும் இந்த மோட்டாங்காடே கதியென்றும் ஆகிவிட்டது அவளுக்கு. அடுத்த வருடம் மகசூலுக்கு விடும்படி மரங்கள் ஆகிவிட்டிருப்பது சாலம்மாளுக்கு சந்தோஷத்தைத் தந்தது. நாளைக்குத்தான் கடைசி வாய்தா. தீர்ப்பு வந்துவிடும் என்று வக்கீல் சொன்னதும் ஞாபகத்துக்கு வந்து மேலும் சந்தோஷம் தந்தது. முந்தானையால் முக்காடு போட்டுக்கொண்டு குடத்தைத் தூக்கியபடி, வீட்டுக்குப் போகும் சரிவில் இறங்கினாள் சாலம்மாள்.
கோர்ட்டு வாசலில் பூவெடுத்துக் குலுங்கும் மாமரத்தின் கிழே சாலம்மாள் உட்கார்ந்திருந்தாள். வெய்யில், குட்டிகளைக் கவ்வும் பூனையென பாரித்திருந்தது. சாலம்மாளின் தேகக் கூட்டினுள் இருந்த இதயம் சிறு பிராயத்துப் பிள்ளையென ஓடியாடிக்கொண்டிருந்தது. மாமரத்தின் குதியாட்டத்தைக் கண்டதும் அடிவயிற்றில் நீர்கழித்துப் புரள்வது போல அவளுள் பொருமல் எழுந்தது. அந்த மரத்தை அவள் கைகள் வாஞ்சையுடன் தடவி நெகிழ்ந்தன. கண்களில் நீர் ஊற்றெடுத்து சொட்டிவிடத் திரண்டு தயங்கியது.
கோர்ட்டுக் கட்டிடம், மனிதர்களின் புழக்கத்துடன் களை கட்டியிருந்தது. வக்கீல்களும், காவலர்களும், மக்களும் ஓடியாடிக் கொண்டிருந்தனர். ரங்கமணியும் அவள் மச்சினன்மார்களும் தூரத்தில் அமர்ந்து பேசிக்கொண்டும், சிரித்துக்கொண்டும் இருந்ததை சாலம்மாள் பார்த்தாள். அவர்கள் பேசிச் சிரிப்பது தன்னைப் பற்றித்தான் என நினைத்துக்கொண்டாள் சாலம்மாள். கோபம் அவளின் வறண்ட திரேகத்துள் பரவியது. முகத்தைத் திருப்பிக் கொண்டாள். தன்னுடைய நடுவயது முதல் இந்த நாள் வரையிலாக கோர்ட்டு வாசலிலேயே தவம் கிடந்துவிட்டது போல் எண்ணி மலைத்துக் கொண்டாள். சாலம்மாளுக்கு என்று வானத்திலிருந்து கூப்பிடும் குரல் போல டவாலியின் அழைப்பு அப்போது கேட்டது. உள்ளே ஓடினாள் சாலம்மாள். நீதிபதி பேசினார். “மரங்களை, குற்றம் சாட்டப்பட்டவர்கள் தான் வெட்டினார்கள் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. அவை புதிதாக நடப்பட்டிருந்த மாஞ்செடிகள் என்பதனால் வேர் பிடிக்காமலும் செத்திருக்கலாம்”.
அதைக் கேட்டதும் சாலம்மாளிடம் பேச்சில்லை. அவளின் குரல்வளை உள்ளிழுத்து கேவலின் அவல ஒலி கேட்டது.
“அதுங்க செடிங்க இல்லய்யா. எம்புள்ளைங்க. இந்த கொட்டி* நம்பியிருந்தது அதுங்களைத்தான்யா”
பைத்தியமாய் பிதற்றியபடி கோர்ட்டு வாசல் மாமரத்தின் அடியிலேயே இருந்தாள். அவமானமும், கோபமும், துக்கமுமாக இருந்தது அவளுக்கு. அந்தச் செடிகளுக்காக எத்தனை நடை, எத்தனை படியேறல், எத்தனை முறையிடல்... வயிறு பற்றிக் கொண்டது.
ஒருபாவமும் அறியாத பாலகனுங்க. என்ன பண்ணுச்சிங்க அதுங்களெ வெட்ட? அதுங்களுக்கு வாயிருந்தா என்னா பேசியிருக்குங்க. வீட்டுக்கு வந்தும் கூட சோறு பொங்காமல் நடுராத்திரி வரை ஒப்பாரி வைத்து சன்னமாகப் பாடி அழுதுகொண்டிருந்தாள்.
காலையில் எழுந்த கையோடு அடுக்களைப் பானைகளைத் தூர எடுத்து வைத்துவிட்டு பிரிமனைகளை நகர்த்தினாள். அடியில் புதைந்திருக்கும் உண்டியல்களைத் தோண்டி எடுத்தாள். ஐந்து உண்டியல்களும் நிரம்பியும் நிரம்பாமலும் இருந்தது. எல்லாவற்றையும் போட்டு உடைத்து காசுகளைச் சேர்த்தால் சாலம்மாள். மூட்டையாக முந்தானையில் முடிந்துகொண்டபோது பாரத்தினால் அவள் உடலே கீழ்நோக்கி குஞ்சியது. நேராய் பக்கத்து ஊர்ப் பண்ணைக்கு விறுவிறுவென்று நடந்தாள். மாங்கன்றுகளுக்கு சொல்லிவிட்டு தன் நிலத்திற்குத் திரும்பினாள்.
வெய்யில் சுள்ளென்று உறைப்பதற்குள் பத்துப் பதினைந்து குழிகளை தோண்டிவிட்டாள் அவள். மண் ஆவியடித்து வாசம் கிளம்பியது. திடீரென சாலம்மாளுக்கு பேத்தி சிவப்பியின் ஞாபகம் வந்தது. ஒவ்வொரு வருசமும் கோடை விடுமுறையில் சிவப்பி சாலம்மாவுடன் வந்து இருந்து போவாள். கூலி நாழி என்று வருசமெல்லாம் சேர்த்த பணத்தில் சிவப்பி போகும்போது, துணிமணி என்று ஆனதை செய்து அனுப்புவாள் சாலம்மாள். இந்த வருசம் உண்டியல்களை உடைத்து மாஞ்செடிகளுக்கு சொல்லிவிட்டது சாலம்மாளுக்கு மனம் பாரமாய் இருந்தது.
“ராசாத்தி புள்ளெ வந்து ஏமாறுமே”
ஆற்றாமையோடு தோப்பைப் பார்த்தாள் சாலம்மாள். சிலுசிலுவென்று காற்றுக்கு துளிர்கள் ஆடிக்கொண்டிருந்தன.
“போட்டும், இந்த ஒரு வருசம். பொறகால எம்புள்ளிங்க நீங்களே பாத்துகுக மாட்டீங்களா ராசாத்தியெ”
மாமரங்கள் காற்றுக்கு மேலும் குலுங்கின. அவள் பேச்சை கேட்டபடியே குழிந்து கொண்டிருந்தது மண்.
------------------------------------------
* கொட்டி – மலடி
தட்டச்சு : சுபைர்

H batteries soon a reality

ArtemFurman_hydrogen_shutterstock
The researchers combined the best aspects of hydrogen fuel cells and battery-based electrical power to develop this promising concept.
Image: Artem Furman/Shutterstock
Researchers have developed a concept hydrogen battery based simply on storing protons produced by splitting water.
The concept advances the potential for hydrogen to replace lithium in battery-powered devices.
The novel concept developed by researchers at RMIT University advances the potential for hydrogen to replace lithium as an energy source in battery-powered devices.
The proton flow battery concept eliminates the need for the production, storage and recovery of hydrogen gas, which currently limit the efficiency of conventional hydrogen-based electrical energy storage systems.
Lead researcher Associate Professor John Andrews, from RMIT's School of Aerospace, Mechanical and Manufacturing Engineering, said the novel concept combined the best aspects of hydrogen fuel cells and battery-based electrical power.
"As only an inflow of water is needed in charge mode - and air in discharge mode - we have called our new system the 'proton flow battery'," Associate Professor Andrews said.
"Powering batteries with protons has the potential to be a much more economical device than using lithium ions, which have to be produced from relatively scarce mineral, brine or clay resources.
"Hydrogen has great potential as a clean power source and this research advances the possibilities for its widespread use in a range of applications - from consumer electronic devices to large electricity grid storage and electric vehicles."
The concept integrates a metal hydride storage electrode into a reversible proton exchange membrane (PEM) fuel cell.
During charging, protons produced from splitting water are directly combined with electrons and metal particles in one electrode of a fuel cell, forming a solid-state metal hydride as the energy storage. To resupply electricity, this process is reversed.
Published in the International Journal of Hydrogen Energy (January, 2014), the research found that, in principle, the energy efficiency of the proton flow battery could be as high as that of a lithium ion battery, while storing more energy per unit mass and volume.
The published paper is the first to articulate and name the proton flow battery concept, and the first to include an experimental preliminary proof of concept.
"Our initial experimental results are an exciting indicator of the promise of the concept, but a lot more research and development will be necessary to take it through to practical commercial application," Associate Professor Andrews said.
Editor's note: Original news release can be found here.

What is a virus?

Peeradach-Rattanakoses_virus_shutterstock
Viruses are snippets of genetic code that use the mechanics of living cells to replicate themselves.
Image: Peeradach Rattanakoses/Shutterstock
It may seem like a fairly fundamental question, but there is still debate over whether viruses should be considered a form of life.
The diversity of viral infections is immense. Viruses cause everything from common cold (rhinoviruses) to Ebola and warts (papillomavirus); from HIV/AIDS to influenza and smallpox. Many viruses can cause cancer: the hepatitis B virus is a known cause of liver cancer, and some types of human papillomavirus cause cervical cancer.
Although viruses exhibit some of the characteristics of living organisms — they have genes, evolve by natural selection and create copies of themselves — most biologists argue they aren’t alive because they can’t replicate by themselves.
To say that viruses are small is an understatement. If the human genome were “War and Peace”, the average bacterium would have a genome of about a page or two. On this scale, the influenza virus is about two words; the smallest virus, circovirus, merely a letter or two.
Essentially, viruses are snippets of genetic code that hijack the mechanics of living cells to replicate themselves, escape the cell and spread (the “computer virus” analogy is apt). Even their envelope – the coating that many viruses have to protect their contents – is derived from the cells of their hosts.

Stopping viruses

Some viruses that cause human disease can be prevented from doing so — with varying degrees of success — through vaccines.
The origin of the word vaccine (from the Latin for “cow”) comes from Edward Jenner’s observation that milkmaids appeared to be immune from smallpox. From this came the idea that infection with a closely related but less dangerous virus could protect against serious disease.
It was subsequently found that even inactivated viruses (such as those in the rabies and polio vaccines) or parts of viruses (such as those in the hepatitis B and influenza vaccines) were able to stimulate the immune system to remember and protect from infection on subsequent exposure.
The best vaccines have even resulted in the eradication of diseases, such as smallpox and rinderpest. Hopefully, in the near future, polio and measles will also become illnesses of the past.
Compared with antibiotics for treating bacterial infection, which were developed in the 1940s, antiviral treatments are a much more recent development.
Most antiviral medication attempts to block one or more points in the viral replication cycle. Many antiviral medications used to treat HIV and herpes simplex (which causes cold sores), for instance, jam the replication mechanism itself.
Other antivirals interfere with the mechanism viruses use to enter or exit host cells (such as oseltamivir for influenza), while others stimulate the immune system to seek and destroy virally-infected cells (such as interferon for hepatitis C).

Mega-, mimi-, or TRUC?

Humans (or at least doctors) take a very anthropocentric view of the world, but viruses can infect all living organisms, even bacteria (bacteriophages). And they seem to be everywhere.
J Craig Venter, the biologist and entrepreneur who was one of the first to sequence the human genome (interestingly, his own), circumnavigated the world in his yacht and sampled seawater as he went. When his team examined the samples, they found an incredible diversity of new viruses, with about 10 million copies of viruses per millilitre of water.
The recent discovery of new very large viruses has also blurred the lines between what does and does not constitute life. In 2003, the Mimivirus was found inside an amoeba in a cooling tower in England. It was named the “microbe mimicking virus” as it was visible under a microscope and had a genome that rivalled small bacteria.
The current biggest virus record holder is the Pandoravirus, found in a pond in Melbourne. Its genome approaches the complexity of a small parasite.
These recent discoveries have prompted a reconsideration of the nature and classification of life. Didier Raoult, the French biologist who led the team that discovered Mimivirus, has even proposed reclassifying complex organisms such as giant viruses as “truc”. This is French for “stuff”, as well as being an acronym for “things resisting [un]complete classification” — in other words, the “too hard” basket.
Are the seawater viruses the soup from which we subsequently evolved? More research may yield answers to these and other interesting questions. Whatever the case, it is clear that these tiny genetic parasites will always be problems for us to contend with.
Allen Cheng receives funding from the National Health and Medical Research Council.
Editor's Note: This article was originally published by The Conversation, here, and is licenced as Public Domain under Creative Commons. See Creative Commons - Attribution Licence.

கலங்காத கண்கள்

அங்கையன்  











அந்தக் காட்சியைக் கண்டதும் அப்துல்காதர் திகைத்தே போனார்.
அவருடைய எண்ணங்கள் யாவும் ஒன்றாய் திரண்டு, பஞ்சுக்கூட்டம் போல் எங்கேயோ மெதுவாக மிதந்து, மிதந்து சென்று கொண்டிருந்தன.

உணர்ச்சிகள் எதுவுமற்ற மரக்குற்றி போல அப்படியே ஆடாமல் அசையாமல் பேசாமல் நின்றார் அவர்.

 
 'காசீம்!.....'

அவரையும் அறியாமல் அதரங்கள் மெல்ல அசைந்து இந்தப் பெயரை உச்சரித்துப் பார்த்தன. நினைவுத்திரையில் அவனுடைய அழகு நிறைதோற்றம் வந்து நிழலாடியது.

 
 'மயங்கும் கண்கள்...... சுருண்ட கேசம்.... இராச நெற்றி.... வட்ட வடிவமான முகம்..... செவ்வானச் சாயை.....'

 
 அப்துல்காதருடைய உடல் மெல்ல, மெல்ல வெல வெலுப்பைக் குறைத்துக் கொண்டன. சிலிர்த்த உரோமங்கள் படமெடுத்த பாம்புபோல ஒடுங்கித் தோலுடன் சாய்ந்து கொண்டன. உள்ளமும் குமுறலைத் தணித்தது.......

 
 தமது காலடியில் மூச்சற்றுப் பேச்சற்றக் கிடந்த காசீமை ஒருமுறை பார்த்தார் அப்துல்காதர். அவருடைய மார்பு ஒரு தடவைக் கிருதடவையாக விம்பிப் புடைத்தது.

 
 'இந்தக் காசியா......' இந்த நிலைக்கு ஆளாக்கப்பட்டான்.... சே! நேர்மை. நியாயம், நீதி, எதுவுமே அற்ற உலகம்!.... முரட்டுச் சாதிங்களட்டை இருந்தால் எவனுக்கும் இந்தக்கதிதான் ஏற்படும்!....... நினைவு தடுமாறியது!

 
 அப்துல்காதர் அரசியலைப்பற்றி நினைத்துக் கொண்டதும் அவருடைய உள்ளம் உடல் எல்லாம் நடுங்கின. அந்த நேரத்தில் அப்படியே நின்றால்...... யாராவது தன்னைப் பார்த்துவிட்டால்......

 
 காசிமுக்கு நடந்த அதேநிலைதான் தமக்கும் எற்படலாமென்று எண்ணினார்.

 பழையபடி அவருடைய நிலை மிகப் பரிதாபமாக இருந்தது.

 'இதென்ன?....... காலெல்லாம் கசியுது......'

 
 தம்மையே கேட்டுக் கொண்டு குனிந்து பார்த்தார். வீதி நீளம் நாட்டப் பெற்றிருந்த தெரு விளக்குகளில் ஒன்று அவருக்கு உதவியது.
 ஓளியின் உதவியுடன் கண்களைக் கூர்மையாக்கிக் கொண்டு பார்த்தார் அப்துல்காதர்.

 
 'ஐ......ய்......யோ!.......ஹல்லா!......'

 
 அவருடைய வாய் அலறிவிட்டது!

 
 அங்கே.

 
 'தார்' வீதியிற் செங்குருதி பாய்ந்து கொண்டிருந்தது. குண்டுகள் பாய்ந்து காசிமின் உடலைக் கிழித்திருந்தன.

 
 இரத்த ஆறு ஓடியது!

 
 நெருப்பை மிதித்தவர்போல் துள்ளி மறுபுறம் வந்து காசிமைத் தூக்க முயன்றார்.
 அவரால் முடியவில்லை!

 
 முதுமையின் வீட்டு வாசலைத் தட்டிக் கொண்டிருந்த அப்துல்காதரால் கட்டிளங் காளையான காசிமைத் தூக்க முடியவில்லை.

 
 அந்த ஐந்து சந்தியில் எந்த வீதியில் மனித மிருகங்களுடைய வண்டி வந்து கொண்டிருக்கும் என்று அவரால் சரியாக நினைத்துப் பார்க்க மூடியவில்லை. அந்த இடத்தைவிட்டு ஓடி தம்முடைய உயிரைக் காப்பாற்றலாமே? என்றாலும் மனம் ஒருபடவில்லை.

 
 'வாழ வேண்டிய பொடியன் இந்தா பொயிட்டான்..... நெறிகெட்ட அந்த நீசங்களாலை...... இனிமேல் நமக்கெதுக்கு வாழ்வு?.... கொஞ்சம் முந்தி என்னோட என்னமாதிரியெல்லாம் கதைச்சான்?....... இந்த இன்னைக்கு.....'

 
 அப்துல்காதரால் மேற்கொண்டு எதையும் சிந்தித்துப் பார்க்க முடியவில்லை. நினைவுத்திரையில் அவை மறைந்து கொண்டிருந்தன.

 
 பதிலாக.

 
 அடுத்த திரை விழுந்தது! தமிழர்கள் தம்முடைய உரிமைக்காக அகிம்சாவழிப் போராட்டம் நடத்திய வேளையில்....... அதற்கு வயது ஐம்பத்தொன்பது நாட்களாக இருந்தபோது..... அவசரகாலச்சட்டமும் ஊரடங்குச்சட்டமும் ஒன்றாக நாற்பத்தெட்டு மணித்தியாலங்களிற்கு பிரகடனப்படுத்தப்பட்ட அதேநாளில்......

 
 மத்தியான வேளை!

 அப்துல்காதர் காசிமைக் கண்டார். அவன் அவருடைய இனத்தவன் தான்..... இருந்தாலும் இதற்கு முன் அவர் அவனுடன் முகம் கொடுத்துக் கதைத்திருக்கவும் மாட்டார். ஐந்து சந்தி என அழைக்கப்படும் அந்த சோனக தெருவின் ஒரு மூலையில் அவர் இருப்புக்கடை வைத்திருக்கின்றார்.

 
 அந்த வழியாற் போய்க்கொண்டிருந்த காசிமைக் கண்டதும் அவருக்குப் புதிய பிரச்சனை தோன்றியது. என்றும் இல்லாதவாறு அவனுடன் கதைக்க வேண்டும் போன்ற ஆசையும் அடிமனதைக் கிளறியது.

 
 'தம்பி.... காசிம்!..... எங்கேப்பா போறா?'

 
 'எனக்கு எங்கே போகக்கிடக்கிறது காக்கா? சத்தியாக்கிரகம் செய்து கொண்டிருக்கிறார்களே!..... அந்தப் பெருமக்களுக்குச் சாப்பாடு எடுத்துக் கொடுக்க வேண்டும். அதுதான் போகிறேன்......
 நேரமில்லை!....' என்றவண்ணம் தொடர்ந்து நடந்தான் காசிம்.

 
 'வயதில் முதிர்ந்தவர் வழியிலே கதை கேட்கிறாரே!...... நின்று பதில் கூறிவிட்டுப் போவோம்! என்று எதுவித எண்ணமும் காசிமிடம் குடிகொள்ளவில்லை.

 'கடமை அங்கே காத்திருக்கிறது..... பொழுதுபோக்க என்னை மறித்து அழுது கொண்டிருக்கும் இவருடன் எமக்கென்ன எதை?.......'

 
 இப்படியும் காசிம் நினைக்கவில்லை.

 
 நேரத்தைப் பார்த்தான் காசிம்!

 
 ஒரு மணி!

 'ஐ.....ய்....யோ! ஆண்டவனே! அங்கே அவர்கள் என்ன கஷ;ரப்படுகிறார்களோ? நான் இங்கே நின்று வீணாக நேரத்தைப் போக்காட்டுகிறேன்.....' என்ற ஒரே எண்ணந்தான் அவனிடம் வந்து போகிறது.

 
 மனதையும் முந்திக் கொண்டு அவனுடைய கால்கள் கச்சேரி வாசலை நோக்கி வந்துவிட்டன.

 மக்கள் வெள்ளமே கச்சேரியின் வாசலிலும், மதிலிலும் வந்து முட்டிநின்றது. வீதி நிரம்பி வழிந்தது. அந்த வெள்ளத்தினிடையே கட்டுமரங்கள் சிலவற்றைப்போல வைத்த விழி வாங்காமல் சில இராணுவவீரர்கள் நின்று கொண்டிருந்தனர்.

 அவர்களைக் காண காசிமுக்கு என்ன செய்தென்று புரியவில்iலை. பற்கள் ஒன்ரோடொன்று உராய்ந்தன. கண்கள் அகலவிரிந்து... படர்ந்தன.

 
 'இந்த அறப்போர் தொடங்கப்பட்ட நாளில் மண்டை உடைபட்ட தலைவர்கள் எத்தனைபேர்? மானம் மரியாதை எதுவுமின்றி மாடு, ஆடுகளைப்போல் அடிபட்டவர்கள் எத்தனை?........ உடைபட்பவர்கள் எத்தனை?...... எத்தனை?'
 காசிம் தலையே சுழல்வது போன்ற நினைப்பு!...... ஒரு மூச்சு அடிவயிற்றில் பொங்கி வெளியே வழிந்தோடியது. கவலையில் பாதி....

 
 காசிம் எல்லா வேலைகளையும் முடிந்து வீடு திரும்ப நன்றாக இருட்டிவிட்டது.
 வழமைபோல் அப்துல்காதர் தம்முடைய கடையைப் பூட்டிக்கொண்டு உள்ளே சென்றார். காசிமைக் கண்டதும் அவருடைய மனம் ஒருவித கிளு கிளுப்பை உணர்ந்தது. அகத்திலே ஒருவித மலர்ச்சி!.......

 
 'வாப்பா! வா! எல்லாம் முடிஞ்சு போய்ச்சா..... இப்ப என்னதான் நடக்கபோகுது?.... அவர்கள் உங்கடை உரிமையை கொடுக்கத்தான் போறாங்கள் என்ன?'

 
 காசிமுக்கு வந்த கோபத்திற்கு அளவேயில்லை! அடக்கமுயன்றான், முடியவில்லை.

 
 'இந்தா காக்கா எனக்கு மட்டும் இரத்தம் துடிக்குதில்லை. இலங்கையில்..... இந்தியாவில் ஏன்? இந்த உலகத்திலுள்ள அத்தனை தமிழருடைய இரத்தமும் துடிக்கிறது. மொழிக்காகத் தன்னுடைய உயிரையே தியாகம் செய்ய எந்த மானமுள்ள தமிழனும் மறுக்கமாட்டான்! அவர்கள் எங்களுடைய உரிமைகளை எங்களிடமே விடத்தான் போகிறார்கள். இன்னும் இரண்டொரு நாளையில் அதுவும் தெரியத்தான் போகிறது!'.

 
 'தம்பி! நான் சொல்லுறன் என்றே வித்தியாசமா நினைச்சுப் போடாதே!.... நாமேன் இந்தமாதிரியான சோலிகளிலை எல்லாம் தலைபோடுவான்? அவங்க தங்கட உரிமை என்று பாடுபட்டால் பாடுபட்டுட்டுப் போகட்டுமே... யாருக்கென்ன? நீ சும்மா கிடவன்....'

 
 அப்துல்காதர் தம்முடைய 'தொப்பி'யால் காசிமையும் மூடப்பார்த்தார். அவருடைய நீண்டநாள் நினைவு... கனவு... எண்ணங்கள் அத்தனையுமே உடைந்து கரையும் வண்ணம் செய்தது, காசிம் சொன்னவைகள்.

 
 'கா...க்...கா...! எது உங்கடைய தாய்மொழி? நீங்க என்னுடன் இப்ப எந்த மொழியிலே பேசுறியள்? தன்மானம் என்ற ஒன்றிருந்தா இப்படிப் பேசுவீர்களா? அன்றைக்கு முஸ்லீம்களெல்லாம் சேர்ந்து செய்த சத்தியாக்கிரகத்தில் நீங்கள் பங்குபற்றவில்லை. இதுதானா உங்களுடைய நேர்மை? நியாயம்? இது உங்களுக்கு கண்ணியமாக இருக்கிறது. எங்களுக்குச் சரிவராது..... நாங்கள் தமிழர்கள்!.... எங்களுக்கு தன்மானம் என்ற ஒன்றுண்டு. அதுதான் பெரிது......'

 
 ஆவேசத்தில் வார்த்தைகள் வெளிவந்தன. அவனுடைய கைகள் நடுங்கின. கால்கள் நிலையிழந்து, அவனுடைய உடலையே மண்ணில் வீழ்த்துவன போல முடங்கின. உடலெல்லாம் வியர்த்துக் கொட்டியது. கண்கள் இருண்டு கொண்டு வந்தன. எதையோ எல்லாம் பேசினான் காசிம்.

 அப்துல்காதருக்கு மூக்கே சிவந்துவிட்டது. 'என்னடா பயலே! ஒரு மாதிரி முறைக்கிறே!... உன்னுடைய இரத்தம் அப்படிச் சொல்லுது.... இண்டைக்கு ஏதோ மந்திரிசபை கூடுதாம். ஆமிகள் வந்து உன்னை ஒரு கை பார்த்தப்புறம் எல்லாம் தெரிஞ்சுக்கத்தான் போறே!'

 
 முனிவர் ஒருவர் சாபம் போட்டால் எப்படி இருக்குமோ? அப்படியிருந்தது அவருடைய நிலை... அதே கோலம்.... அதே பேச்சு..... அதே சாட்சி!

 
 காசிம் எதையோ சொல்ல நினைத்து அதரங்களை அசைக்கப்போனான். ஏதோ ஒருவித ஓலம் வந்து தடுத்துவிட்டது!

 
 'காக்கா!...... கா.....க்......கா! ஆமியள்; சத்தியாக்கிரகம் செய்து கொண்டிருந்தவங்களை எல்லாம்.... கொல்லுறாங்கள்.... எல்லாரும் திசை தெரியாமல் ஓடுறாங்கள்....'

 
 சைக்கிளிலே ஓடிவந்த ஒருவனின் குரல் மட்டும் கேட்டது. பறை அறைபவனைப் போல மணியை அடித்துச் செய்தியையும் பரப்பியபடி ஓடிவந்தான் அவன்.

 
 இந்த இருவரையும் கண்டு எதுவும் கூறவில்லை. முன்பு சொன்ன வார்த்தைகளையே திரும்பத்திரும்பச் சொல்லிக் கொண்டு ஓடினான்.

 காசிம் 'காதர் காக்கா' விடமும் எதுவும் சொல்லிக் கொள்ளாமல், கால்கள் போன போக்கில் விறு விறுவென நடந்தான்.

 
 மனோகரா படமாளிகை வீதியில் அவன் இறங்கி நடந்ததும், அப்துல்காதர் அறைக் கதவைச் சாத்திக் கொண்டார். ஒரு நிமிடம் சென்றிருக்க முடியாது!

 'டுமீல்! டுமீல்!!

 என்ற வெடிச்சத்தம் வானில் முட்டி அதிர்ந்தது. அப்துல்காதரின் காதுகள் வெடித்துவிடாத குறை....

 அதனைத் தொடர்ந்து. 'ஐ....ய்....யோ!...... அ.....ம்.....மா...' என்று காசிம் அழகு தமிழிலே அழைத்த அந்த இறுதி வார்த்தைகளும் அவருடைய காதுகளை குத்தி அழிந்தன.

 
 ஏதோ கொலை செய்துவிட்டவர் போல அப்துல்காதர் நடுங்கினார்.

 
 அறைக்கதவை திறப்பதற்காக திறவு கோலைப்பற்றிய அவர் கை தானாகவே மறுத்து நின்றது. சந்தியில்.... இராணுவத்தினரின் வண்டி பறந்து கொண்டு சென்றது.

 
 காசிம் கதறிக் கதறிச் செத்துக் கொண்டு இருந்தான். தெய்வ நம்பிக்கையுடன் ஆரம்பிக்கப்பட்ட அறப்போருக்கு துணை நின்ற அந்தத் தமிழ் உடலைத் துப்பாக்கிக் குண்டுகள் துளை போட்டிருந்தன.
 'அங்கிருந்த பெண் பிரசுகள் என்ன ஆனார்களோ?.......... வயோதிபர்கள்.... குழந்தைகள்.... ஐ...ய்....யோ!'

 
 ஒரு குமட்டல். காசிமின் கண்கள் இமைக்குள் மறைய துடிதுடித்தன.

 
 'ஆமிகள் வந்து உன்னை ஒரு கை பாத்தப்புறம் எல்லாந்தெரிஞ்சுக்கத்தான் போறா!........' என்ற அப்துல்காதரின் வன்சொற்கள் அவனுடைய காதுகளில் விசம் பாய்ச்சின.

 
 கண்கள் ஒடுங்கிவிட்டன!

 
 சமையற் கட்டுக்கள் நுழையும் பூனையைப் போல சுடுகாடாக உறங்கிக் கொண்டிருந்த அந்த ஐந்து சந்தியைத் தாண்டி வந்தார் அப்துல்காதர். கண்கள் புரண்டன!

 
 காசிம் பிணமாகக் கிடந்த காட்சியை அவரால் கண்டுகளிக்க முடியவில்லை.

 
 அந்தத் துப்பாக்கிக் குண்டுகளில் ஒன்று பட்டோ என்னவோ பக்கத்து வேலி பூவரசு மரத்தில் இருந்து காகம் ஒன்று கரைந்து கொண்டிருந்தது. சாதாரண கரைவா அது?

 குதறல்!.... பிரிவைக் கண்டு துடிக்கும் உள்ளத்தின் குமுறல்....

 
 அப்துல்காதர் திருப்பிப் பார்த்தார்! வேலியின் ஓரத்திலே வேறொரு காகம் செத்துக்கிடந்தது.

 
 ஏடு எடுத்தும் படியாமல் கேள்வியால் அறியாமல்.... ஏதோ நீதிகளை எல்லாம் புகட்டும் அந்த இரு காக்கையையும் மாறி மாறிப் பார்த்தார் அப்துல்காதர். பின் - காசிமையும் பார்த்தார்.....!

 அவரையும் அறியாமல் என்றுமே கலங்காத அவருடைய குழி விழுந்த கண்களிலிருந்து. இரண்டு சொட்டுக் கண்ணீர்த் துளிகள் மல்கி, காசிமின் உடல்மீது விழுந்து தெறித்தன!

 
 அந்தக் கண்ணீர்த் துளிகள் உரிமைக்காகப் போராடிய அவன் உள்ளக் குமுறலை, கொந்தளிப்பை, இனிமேல்தான் தமிழைக்காக்க தியாகிகள் தோன்றப் போகிறார்கள் என்று கூறத் தணித்தனவா?

 
 அறத்தினால் வீழ்ந்தவர்களின் எண்ணத்திற்குச் சாவுமணி அடித்தனவா?

 அப்துல்காதருடைய கண்களிலிருந்து மென்மேலும் நீர் சுரந்து கொண்டிருந்தமை எதையோ ஒன்றை உண்மையெனக் கூறியது.

கற்ப மூலிகை ஆடாதோடை /ஆடாதோடா/ Adhatoda zeylanica.!


மக்கள் ஆரோக்கியமாக வாழ சித்தர்கள் பல வழிமுறைகளை கண்டறிந்து கூறினார்கள். அதில் நரை, திரை, மூப்பு, சாக்காடு நீக்கி, என்றும் இளமையுடனும் சுறுசுறுப்புடனும் வாழச் சொல்லப் பட்டவைதான் காய கற்ப மூலிகைகள்.
ஆடுகள் தொடாத இலை என்பதால் இது ஆடாதோடா என அழைக்கப்படுகிறது. சிறு செடியாகவும், ஒருசில இடங்களில் மரமாகவும் வளரும். இதன் இலை மாமர இலை வடிவில் இருக்கும். தென்னிந்தியாவில் பல இடங்களில் காணப்படும் மூலிகையாகும். எந்தவகையான மண்ணாக இருந்தாலும் இந்த ஆடாதோடை செழித்து வளரும் தன்மை கொண்டது. கிராமப்புற மக்களும் சரி, அங்கு மருத்துவம் செய்யும் மருத்துவர்களும் சரி, ஆடாதோடை இலையை அதிகம் பயன்படுத்துவார்கள்.

மனிதனை அன்றாடம் துரத்தும் சுவாசம் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு இது அருமருந்தாகும். இது அதிகளவு ஆக்ஸிஜனை வெளியிடுவதால் இதனை ஆயுள் மூலிகை என்றும் அழைக்கின்றனர். மனித உடலில் நுரையீரல் முக்கிய உறுப்பாகும். இது சுவாசக் காற்றை உள்வாங்கி அதிலுள்ள பிராணவாயுவைப் பிரித்து எடுத்துக் கொண்டு கரியமில வாயுவை வெளியேற்றுகிறது. நுரையீரல் நன்கு செயல் பட்டால்தான் இரத்தம் சுத்தமடையும். இதனால் நீண்ட ஆயுளும் கிடைக்கும். இத்தகைய சிறப்பு வாய்ந்த நுரையீரலைப் பலப்படுத்த ஆடாதோடை சிறந்த மருந்தாக உள்ளது. இது நுரையீரல் காற்றுச் சிற்றறைகளில் உள்ள அசடுகளை (சளி) நீக்கி ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. இதனால் இதை மரணமாற்று மூலிகை என்றும் கூறுகின்றனர். இதன் வேர், பட்டை, பூ, இலை அனைத்தும் மருத்துவத் தன்மை கொண்டது. .

நெஞ்சில் சளி, அதனுடன் வலி, உடலில் தசைப்பகுதிகளில் வலி போன்றவற்றிற்கு ஆடாதோடை இலையைப் பறித்து காயவைத்து பொடியாக்கி கஷாயம் செய்து கொடுப்பார்கள். இது சிறந்த நிவாரணியாக பயன்படுகிறது. அதுபோல் தடுக்கி விழுந்து மார்புப்பகுதியில் அடிபட்டால் உடனே முதலுதவியாக ஆடாதோடை இலை ஒன்றுடன் வெற்றிலை 2 சேர்த்து மென்று தின்னக் கொடுப்பார்கள். இது உடனடி நிவாரணமாகும்.

நீண்ட நாள் தொடந்த சளி, இருமல், தொண்டைக் கட்டு போன்றவற்றுக்கு சிறந்த மருந்தாகும். இலையை மட்டும் எடுத்து நீர் விட்டு கொதிக்கவைத்து, வடித்து தேன் சேர்த்து கொடுக்க ஆஸ்த்துமா, இருமல், சுரம் போன்ற நோய் தீரும்.

இவைகளுடன் திப்பிலி, ஏலம், அதிமதுரம், தாளிசப்பத்திரி ஆகியவற்றுடன் குடிநீரிட்டு கொடுக்க இருமல், இளைப்பு, சுரம் தீரும். இலையை உலர்த்தி சுருட்டாக சுருட்டி புகை பிடிக்க இரைப்பு(ஆஸ்த்துமா) தீரும்.

இதன் வேருடன் கண்டங்கத்திரி வேர் சேர்த்து குடிநீரிலிட்டு அத்துடன் திப்பிலி பொடி சேர்த்துக் கொடுக்க இருமல் தீரும். இலையின் சாறு தனித்துக் கொடுக்க கழிச்சல் தீரும்.

ஆடாதோடை இலைச் சாற்றைத் தேன் கலந்து சாப்பிட்டால் இரத்தக் கொதிப்பு, காமாலை போன்றவை குணமாகும். ஆடாதோடை இலையை நிழலில் உலர்த்திப் பொடித்து வைத்து தினமும் காலை வேளையில் 1 ஸ்பூன் அளவு எடுத்து தேனில் குழைத்து, குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் குழந்தைகளுக்கு உண்டாகும் சளி, இருமல், இரைப்பு நீங்கும். நெஞ்சுச் சளியைப் போக்கி உடலை சீரான நிலையில் வைத்துக்கொள்ளும். இதில் பச்சயம் அதிகமாக இருப்பதால் நெஞ்சுச்சளி, இருமல் போன்றவற்றை உடனே மாற்றும். குத்து இருமல், தொண்டைக்கட்டு போன்றவை நீங்கும்.

மேற்கண்ட முறைப்படி 1 மண்டலம் அதாவது 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால் குழந்தைகளுக்கு எப்போதுமே சளித் தொல்லை உண்டாகாது.