Search This Blog
Friday, October 25, 2013
காங்கிரஸின் முகங்கள்
# ஜவஹர்லால் நேரு முகமது அலி ஜின்னா ஆகிய இருவருமே ஹாரிஸ் கல்லூரியில் இங்கிலாந்தில் ஒன்றாகப் படித்தவர்கள். அவர்களுடன் எட்வினா என்னும் பிரிட்டிஷ் பெண்ணும் சேர்ந்தே படித்தார். மூவருக்குள்ளும் மிக ஆழமான புரிதல் இருந்தது. ( இடக்கரடக்கல் ) இருந்தாலும் நேருவுக்கும் ஜின்னாவுக்கும் இடையில் எட்வினா ஒரு பகைத்தீயைப் பற்றவைத்ததில் காலம் காலமாக பற்றி எரிந்தது.
# பின்னாளில் நேருவும் ஜின்னாவும் வழக்கறிஞர்களாகத் தோல்வியுற்றிருந்தாலும் இந்திய தேசிய காங்கிரஸில் சேர்ந்து இணைந்து போராடினாலும் இந்த இருவருக்குள்ளுமே எட்வினா மூட்டிய தீ அணையவே இல்லை.
# கடைசி வைஸ்ராயாக இந்தியாவுக்கு வந்து சேர்ந்த மௌண்ட் பேட்டனுடன் அவரது மனைவியும் வந்தார். ஆம். இம்முறை எட்வினா மௌண்ட் பேட்டனாக. இந்தியாவைத் துண்டாடும் நோக்குடன் பிரிட்டிஷ் அனுப்பிய விஷக்கன்னியாக எட்வின் மீண்டும் வந்தாள்.
# மூவரிடையே ( நேரு ஜின்னா எட்வினா) மீண்டும் தழைத்தது பழைய புரிதல். ( இடக்கரடக்கல் ) இந்தியாவின் சுதந்திரம் நிச்சயமானது. ஆனால் இந்தியாவை விட்டுச் செல்லும் முன் துண்டாடிவிட்டுச் செல்லும் பிரிட்டிஷாரின் நோக்கத்துக்கு இந்த மூவர் கூட்டணி எப்படி பலமான தூண்டுதலாக இருந்தது என்பது தான் ட்ரஸ்ட் வித் டெஸ்டினி.
# ஒன்றுபட்ட இந்தியாவுக்கு பிரதமராக இருக்க நேரு ஜின்னா இருவருமே முனைந்து நின்றபோது எட்வினா தோற்றுவித்த ( முன்னரே பிரிட்டிஷாரால் முடிவுசெய்யப்பட்ட ) ஆலோசனையின் பேரில் இந்தியா பாகிஸ்தான் ஆக இரண்டு கூறாக்கி இந்தியாவுக்கு நேருவையும் பாகிஸ்தானுக்கு ஜின்னாவையும் பிரதமராக தேர்ந்தெடுப்பது என்ற கருத்து திணிக்கப்பட்டது.
# இதை எதிர்த்த மஹாத்மா காந்தி ஜின்னாவை பிரதமராக்கினால் இந்தியா பிளவுபடாமலேயே இருக்கும் என்று நேருவை நிர்ப்பந்தித்த போது நேருவின் பதவி ஆசை அதை ஏற்றுக்கொள்ள வைக்கவில்லை. இந்தியா இரு கூறானது தவிர்க்க வியலாத நிலையானது.
# ஜின்னாவுக்கு எலும்பு கேன்சர் இருப்பதாகவும் அவர் விரைவில் இறந்துவிடுவார் எனவும் அவரது டாக்டர் அறிவித்ததன் பேரில் காந்தி மீண்டும் இறுதி முயற்சியாக நேருவிடம் சில மாத காலம் ஜின்னாவை ஒருங்கிணைந்த இந்தியாவுக்கு பிரதமராக்கும் படியும் பின்னர் ஜின்னா காலத்துக்குப்பின்னர் நேரு பிரதமர் ஆகலாம் என்ற காந்தியின் யோசனை நேருவின் பதவி வெறிக்கு முன்னால் எடுபடவில்லை. ( பாகிஸ்தான் பிரதமராக ஆன ஜின்னா அடுத்த ஏழுமாதத்தில் இறந்தார் என்பது வரலாறு )
# பிளவுபட்ட இந்தியாவுக்கு பிரதமர் யாராக இருக்கவேண்டும் என ஆலோசிக்கப்பட்ட போது அப்போதிருந்த காங்கிரஸ் வொர்க்கிங் கமிட்டியின் 15 பேரில் ஒருவர் ஆப்செண்ட் ஆக 13 பேர் சர்தார் வல்லப பாய் படேலுக்கு ஆதரவாகவும் ஒரே ஒருவர் நேருவுக்கும் ஆதரவு அளித்தனர்.
# இதனால் வெகுண்ட நேரு இந்திய தேசிய காங்கிரஸை பிளவு படுத்தி தனது கோஷ்டியினருடன் பிரிட்டிஷாரைச் சேர்த்துக்கொண்டு பிரதமராவதை முடிவு செய்ய முற்பட்டார். காந்தி மேலும் இன்னலுக்குள்ளானார்.
# காந்தியின் இந்த சத்ய சோதனையில் நேருவின் பதவி ஆசை வென்றது. காங்கிரஸில் காந்தி சொன்னது தான் இறுதி என்ற நிலையில் அனைவருமே காந்தியின் சொல்லை ஏற்றுக்கொண்டார்கள்.
# இந்தியா சுதந்திரம் அடையும் ஆகஸ்டு 15க்கு முதல் நாள் ஆகஸ்டு 14 இல் பாகிஸ்தான் சுதந்திரப்பிரகடனம் செய்யப்பட்டது.
# ட்ரைஸ்ட் வித் டெஸ்டினி என்று செங்கோட்டையில் நேரு முழங்க நடந்த சுதந்திர தின விழாவில் காந்தி கலந்துகொள்ளவே இல்லை.
# இந்திய தேசிய காங்கிரஸை இத்துடன் கலைத்துவிடலாம் என்ற காந்தியின் யோசனையைக் கூட நேரு ஏற்கவில்லை. பதவி வெறி அன்றுமுதல் இதோ இன்றுவரை அந்தக் குடும்பத்தில் பாரம்பரியமாக இருந்து வருகிறது.
# பின்னாளில் நேருவும் ஜின்னாவும் வழக்கறிஞர்களாகத் தோல்வியுற்றிருந்தாலும் இந்திய தேசிய காங்கிரஸில் சேர்ந்து இணைந்து போராடினாலும் இந்த இருவருக்குள்ளுமே எட்வினா மூட்டிய தீ அணையவே இல்லை.
# கடைசி வைஸ்ராயாக இந்தியாவுக்கு வந்து சேர்ந்த மௌண்ட் பேட்டனுடன் அவரது மனைவியும் வந்தார். ஆம். இம்முறை எட்வினா மௌண்ட் பேட்டனாக. இந்தியாவைத் துண்டாடும் நோக்குடன் பிரிட்டிஷ் அனுப்பிய விஷக்கன்னியாக எட்வின் மீண்டும் வந்தாள்.
# மூவரிடையே ( நேரு ஜின்னா எட்வினா) மீண்டும் தழைத்தது பழைய புரிதல். ( இடக்கரடக்கல் ) இந்தியாவின் சுதந்திரம் நிச்சயமானது. ஆனால் இந்தியாவை விட்டுச் செல்லும் முன் துண்டாடிவிட்டுச் செல்லும் பிரிட்டிஷாரின் நோக்கத்துக்கு இந்த மூவர் கூட்டணி எப்படி பலமான தூண்டுதலாக இருந்தது என்பது தான் ட்ரஸ்ட் வித் டெஸ்டினி.
# ஒன்றுபட்ட இந்தியாவுக்கு பிரதமராக இருக்க நேரு ஜின்னா இருவருமே முனைந்து நின்றபோது எட்வினா தோற்றுவித்த ( முன்னரே பிரிட்டிஷாரால் முடிவுசெய்யப்பட்ட ) ஆலோசனையின் பேரில் இந்தியா பாகிஸ்தான் ஆக இரண்டு கூறாக்கி இந்தியாவுக்கு நேருவையும் பாகிஸ்தானுக்கு ஜின்னாவையும் பிரதமராக தேர்ந்தெடுப்பது என்ற கருத்து திணிக்கப்பட்டது.
# இதை எதிர்த்த மஹாத்மா காந்தி ஜின்னாவை பிரதமராக்கினால் இந்தியா பிளவுபடாமலேயே இருக்கும் என்று நேருவை நிர்ப்பந்தித்த போது நேருவின் பதவி ஆசை அதை ஏற்றுக்கொள்ள வைக்கவில்லை. இந்தியா இரு கூறானது தவிர்க்க வியலாத நிலையானது.
# ஜின்னாவுக்கு எலும்பு கேன்சர் இருப்பதாகவும் அவர் விரைவில் இறந்துவிடுவார் எனவும் அவரது டாக்டர் அறிவித்ததன் பேரில் காந்தி மீண்டும் இறுதி முயற்சியாக நேருவிடம் சில மாத காலம் ஜின்னாவை ஒருங்கிணைந்த இந்தியாவுக்கு பிரதமராக்கும் படியும் பின்னர் ஜின்னா காலத்துக்குப்பின்னர் நேரு பிரதமர் ஆகலாம் என்ற காந்தியின் யோசனை நேருவின் பதவி வெறிக்கு முன்னால் எடுபடவில்லை. ( பாகிஸ்தான் பிரதமராக ஆன ஜின்னா அடுத்த ஏழுமாதத்தில் இறந்தார் என்பது வரலாறு )
# பிளவுபட்ட இந்தியாவுக்கு பிரதமர் யாராக இருக்கவேண்டும் என ஆலோசிக்கப்பட்ட போது அப்போதிருந்த காங்கிரஸ் வொர்க்கிங் கமிட்டியின் 15 பேரில் ஒருவர் ஆப்செண்ட் ஆக 13 பேர் சர்தார் வல்லப பாய் படேலுக்கு ஆதரவாகவும் ஒரே ஒருவர் நேருவுக்கும் ஆதரவு அளித்தனர்.
# இதனால் வெகுண்ட நேரு இந்திய தேசிய காங்கிரஸை பிளவு படுத்தி தனது கோஷ்டியினருடன் பிரிட்டிஷாரைச் சேர்த்துக்கொண்டு பிரதமராவதை முடிவு செய்ய முற்பட்டார். காந்தி மேலும் இன்னலுக்குள்ளானார்.
# காந்தியின் இந்த சத்ய சோதனையில் நேருவின் பதவி ஆசை வென்றது. காங்கிரஸில் காந்தி சொன்னது தான் இறுதி என்ற நிலையில் அனைவருமே காந்தியின் சொல்லை ஏற்றுக்கொண்டார்கள்.
# இந்தியா சுதந்திரம் அடையும் ஆகஸ்டு 15க்கு முதல் நாள் ஆகஸ்டு 14 இல் பாகிஸ்தான் சுதந்திரப்பிரகடனம் செய்யப்பட்டது.
# ட்ரைஸ்ட் வித் டெஸ்டினி என்று செங்கோட்டையில் நேரு முழங்க நடந்த சுதந்திர தின விழாவில் காந்தி கலந்துகொள்ளவே இல்லை.
# இந்திய தேசிய காங்கிரஸை இத்துடன் கலைத்துவிடலாம் என்ற காந்தியின் யோசனையைக் கூட நேரு ஏற்கவில்லை. பதவி வெறி அன்றுமுதல் இதோ இன்றுவரை அந்தக் குடும்பத்தில் பாரம்பரியமாக இருந்து வருகிறது.
மரபணு மஞ்சள் வாழைப்பழம்:
--------------------------
முன்பெல்லாம் டாக்டர்கள் தினமும் ஓரு வாழைப்பழமாவது சாப்பிடுங்கள், உடம்புக்கு ரொம்ப நல்லது என்பார்கள். ஆனால் தற்போது மரபணு மாற்று பெரிய மஞ்சள் வாழைபழத்தை சாப்பிடவே வேண்டாம் என்று எச்சரிக்கிறார்கள்.
காரணம் தற்போது சென்னை வாசிகள் பெரும்பாலோர் உடலில்-தொண்டையில் அலர்ஜி, சைனஸ், தும்மல், வயிற்றுக்கோளாறு, வயிற்றுவலி, சிறுநீரக கற்கள், அடிக்கடி தலைவலி, புட் பாய்சன்... என்று கடுமையாக அவதிப்படுகிறார்கள். இவர்களை நோயாளிகளாக மாற்றியது இந்த மரபணு மாற்று மஞ்சள் வாழைப்பழங்கள் தான்.
இயற்கையான வாழைப்பழம் பழுத்தால் இரண்டொரு நாளில் அழுகிவிடும். இயற்கையான மஞ்சள், பச்சை வாடன், ரஸ்தாளி, மலைபழம், தேன்கதளி, நாட்டுப்பழம், நாட்டுச்சக்கைப்பழம், கற்பூரவள்ளி, ஏலக்கி ஆகிய வாழைப்பழங்கள் மணமாகவும், நல்ல ருசியாகவும் இருக்கும்.
இந்த பழங்கள் உடம்புக்கு சத்தாகவும், மற்ற உணவை செரிமானமாக்கவும் பயன்படும். மலச்சிக்கலால் பாதிக்கப்படுவோரும் தினமும் இரவில் வாழைப்பழம் சாப்பிடுவார்கள்.
பொதுவாக இயற்கையான வாழை ரகங்களில் நோய் தொற்று ஏற்படும். இவற்றை பூச்சுக் கொல்லிகளை பயன்படுத்தி நோயை கட்டுப்படுத்த வேண்டும். இந்த ரகங்களை பழுத்த உடன் நாம் சாப்பிடுவது வழக்கம்.
பூச்சிக் கொல்லிகளை அழிப்பதற்கு பதிலாக பூச்சிகளை கொல்லும் விஷச்சத்தை வாழைமரத்தின் மரபணுவில் செலுத்தி அமெரிக்க விஞ்ஞானிகள் வெற்றி கண்டுள்ளனர்.இதைத் தான் நாம் பி.டி.வாழை என்று அழைக்கிறோம். கேவின் டிஷ் என்ற பெயருடன் இந்த மரபணு மாற்று வாழைப்பழம் நம்மூரில் கள்ளத்தனமாக விற்கப்படுகிறது. இப்பழங்களில் விஷத்தன்மை மிக அதிகமாக இருப்பதால் அமெரிக்காவில் இந்த வாழைப்பழம் பயிரிடவோ விற்கவோ அனுமதிக்கப்படவில்லை.
ஏழ்மையிலும் பசிபட்டினியிலும் வாடும் ஆப்பிரிக்க நாடு உகாண்டா. இங்குதான் முதன் முதலில் 2007 -ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் உகாண்டா அதிபரை மிரட்டி அந்நாட்டின் பாராளுமன்றத்தில் சட்டம் கொண்டு வர செய்து பி.டி. வாழை எனப்படும் கேவின் டிஷ் வாழைப்பழத்தை முதன் முதலில் பயிரிட செய்தார்.
நோய்களை பரப்பும்:
--------------------------
உகாண்டாவில் பயிரிடுவதற்கு முன்பாகவே இந்தியாவில் சர்வதேச கம்பெனிகள் இந்திய நிறுவனங்களின் துணையுடன் கள்ளத்தனமாக இவ்வகை மரபணு மாற்று பி.டி. கேவின்டிஷ் வாழைப்பழத்தை பயிரிடவும் விற்பனை செய்யவும் ஆரம்பித்து விட்டனர்.
இந்த கேவின்டிஷ் மரபணு மாற்று மஞ்சள் வாழைப்பழம் பெங்களூர் வாழைப்பழம் என்ற பெயரில் சென்னை உள்பட தமிழகம் முழுவதும் விற்கப்படுகிறது. முதலில் சென்னையில் சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையத்தில் பெங்களூர் வாழைப்பழம் என்ற பெயரில் இந்த பி.டி. வாழைப்பழம் விற்கப்பட்டது. மக்களுக்கோ, வியாபாரிகளுக்கோ இதன் கொடூரத்தன்மை பற்றி எதுவும் தெரியாததால் சென்னை முழுவதும் இந்த வாழைப்பழ விற்பனை விரிவு படுத்தப்பட்டது.
மாதக்கணக்கில் வைத்திருந்து விற்றாலும் கெட்டுபோகாது என்ற ஆசை வார்த்தை கூறி வியாபாரிகள் இந்த மரபணுமாற்று கேவின்டிஷ் வாழைப்பழத்தை விற்கும் நிலைக்கு தள்ளப்பட்டார்கள். இதனால் சென்னையில் முக்கிய கம்பெனிகளின் சூப்பர் மார்க்கெட்டுகளில் வாழைப்பழம் மட்டுமே விற்கும் நிலை உள்ளது.
மதுரை, சேலம், கோவை, நெல்லை போன்ற நகரங்களில் இந்த பி.டி. மரபணு மாற்று வாழைப்பழம் அறிமுகப்படுத்தப்பட்டாலும் இதற்கு போதிய வரவேற்பு இல்லை. இந்த மரபணு மாற்று வாழைப்பழம் இயற்கை வாழைப்பழம் போல் ருசியாக இருக்காது.
இதனால் மற்ற நகரங்களில் இதனை யாரும் வாங்கவில்லை. எனவே சென்னையில் அறிவிக்கப்படாத தடைபோல வேறு இயற்கையான வாழைப்பழமே விற்காத வண்ணம், சர்வதேச நிறுவனங்கள் கேவின்டிஷ் வாழைப்பழம் மட்டுமே விற்கும் வண்ணம் ரகசியமாக சதி செய்துவிட்டன. இதற்கு கார்ப்பரேட் கம்பெனிகள் பெரிதும் உதவியாக உள்ளன.
பி.டி. கத்தரிக்காய்க்கே இன்னும் இந்திய அரசு முழுமையான அனுமதி வழங்கவில்லை. பி.டி. ரக மரபணு காய்கறி, பழங்கள், உயிரை மெல்லமெல்ல கொல்லும் விஷமாகும்.
நன்றி :மாலை மலர்
Subscribe to:
Posts (Atom)