Search This Blog

Friday, October 25, 2013

பிரபல பின்னணிப் பாடகர் மன்னா டே (94), பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் வியாழக்கிழமை காலமானார்.

பெங்களூருவில் வியாழக்கிழமை மறைந்த பழம்பெரும் பாடகர் மன்னா டேவுக்கு மலர் அஞ்சலி செலுத்தும் பேத்திகள். இடம்: கொல்கத்தா.

மூச்சுத் திணறல், சிறுநீரகக் கோளாறால் அவதிப்பட்டு வந்த மன்னா டே கடந்த 5 மாதங்களாக பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அங்கு அவர் வியாழக்கிழமை அதிகாலை 3.50 மணிக்கு மாரடைப்பால் மரணமடைந்தார்.

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட அவரது மனைவி சுலோசனா, கடந்த ஜனவரி மாதம் காலமானார்.

மூத்த மகள் ஷுமிதாதேப் பெங்களூருவிலும், மற்றொரு மகள் அமெரிக்காவிலும் வசித்து வருகின்றனர். பிரபோத் சந்திர டே என்ற இயற்பெயர் கொண்ட மன்னா டே 1919-ஆம் ஆண்டு, மே 1-ஆம் தேதி கொல்கத்தாவில் பிறந்தார்.

தனது தந்தையின் உடன் பிறப்பான இசையாசிரியர் கே.சி. டேயின் மீது கொண்ட ஈர்ப்பால் இசையில் ஆர்வமிக்கவரானார்.

கே.சி. டே மற்றும் உஸ்தாத் தாபீர் கானிடம் ஹிந்துஸ்தானி இசையை முறையாகப் பயின்றார். முதல் முறையாக 1943-ஆம் ஆண்டு ஹிந்தித் திரையுலகில் பின்னணிப் பாடகராக அறிமுகமானார். மலையாளத்தில் "செம்மீன்' என்ற திரைப்படத்தில்

"மானச மைனே வரூ' என்ற பாடல் மூலம் தென்னிந்திய திரைப்பட உலகிலும் பிரபலமானார்.

இதுவரை குஜராத்தி, வங்கமொழி, மலையாளம், மராத்தி, ஹிந்தி, அசாமி, கன்னடம் ஆகிய மொழிகளில் மொத்தம் 3,500 பாடல்களைப் பாடியுள்ளார். இந்திய திரைப்படத் துறையில் வழங்கப்படும் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது, பத்மபூஷண், பத்மஸ்ரீ உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார்.

1991-இல் ஹிந்தி திரைப்படமான பிரஹாரில் "ஹமாரி ஹி முத்தி மே' என்ற பாடலே இவர் பாடிய கடைசிப் பாடலாகும். தமிழ்த் திரைப்படங்களில் மன்னா டே பாடியதில்லை.

குடியரசுத் தலைவர், பிரதமர் இரங்கல்: மன்னா டேயின் மறைவுக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். "படைப்புத் திறன் வாய்ந்த பழம்பெரும் பின்னணிப் பாடகரை இந்தியா இழந்துள்ளது. தனது இனிமையான குரலால் பார்வையாளர்களை தன்வசப்படுத்தியவர் மன்னா டே' என்று குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி தனது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.

இதேபோல, "பன்முகத் தன்மை கொண்ட கலைஞரை இசை உலகம் இழந்துள்ளது' என்று பிரதமர் மன்மோகன் சிங்கும், "இந்தியா மிகப்பெரிய இசை மேதையை இழந்துவிட்டது' என்று சோனியா காந்தியும் தங்களது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளனர்.

மன்னா டேவின் மறைவுக்கு கர்நாடக முதல்வர் சித்தராமையாவும் இரங்கல் தெரிவித்துள்ளார்.

பொதுமக்கள் அஞ்சலி: பெங்களூருவிலுள்ள ரவீந்திர கலாúக்ஷத்ராவில் காலை 10 முதல் பகல் 12 மணி வரை பொதுமக்கள் அஞ்சலிக்காக மன்னா டே உடல் வைக்கப்பட்டிருந்தது. அவரது ரசிகர்கள் ஏராளமானோர் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.

கர்நாடக அரசு சார்பில் அமைச்சர் உமாஸ்ரீ மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். நடிகை தாரா, பின்னணிப் பாடகர்கள் பி.கே.சுமித்ரா, யஷ்வந்தஹலபண்டி, சிவசேனை கட்சியின் செய்தித் தொடர்பாளர் சஞ்சய்ராவ் உள்ளிட்ட பலரும் அஞ்சலி செலுத்தினர்.

பின்னர், ஹெப்பாள் மின் மயானத்தில் மன்னா டேயின் உடல் வங்காள மரபுப்படி தகனம் செய்யப்பட்டது.

Tuesday, October 22, 2013

நாம் மறந்து போனவை !



நமது முன்னோர்களின் நீண்ட நாள் ஆரோக்கியமான வாழ்வுக்கு காரணமான உணவுவகைகள் இதோ

உளுந்துப் பொடி

இதற்க்கு தேவையானவை:
உளுத்தம் பருப்பு - கால் கிலோ, காய்ந்த மிளகாய் - 10, சீரகம் - 5 கிராம், காய்ந்த கறிவேப்பிலை - 25 கிராம், ஓமம் - 10 கிராம், பெருங்காயம் - 5 கிராம்.

எப்படி செய்வது:
அனைத்துப் பொருட்களையும் பொன்னிறமாக வறுத்துப் பொடியாக அரைத்துக்கொள்ளவும். இந்தப் பொடியை சாதத்தில் நெய் சேர்த்துச் சாப்பிட சுவையாக இருக்கும்.

இதன் மருத்துவப் பயன்:
உடல் மெலிவானவர்கள் மற்றும் வயதானவர்களுக்கு சிறந்த ஊட்டச் சத்து உணவு. சிசு வளர்ச்சிக்குத் தேவையான சத்துக்களும் இதில் நிறைந்து இருப்பதால், கர்ப்பிணிகள் சாப்பிட ஏற்றது. கால்சியம் குறைபாட்டால் ஏற்படும் பிரச்னைகளுக்கு நல்ல பலன் தரும்.

பிரண்டைத் துவையல்

தேவையானவை:
முற்றாத பிரண்டை - 50 கிராம், மிளகு - 20, பச்சை மிளகாய் - 3, உரித்த சின்ன வெங்காயம் - ஒரு கைப்பிடி, நெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:
முதலில் பிரண்டையில் உள்ள நாரை நீக்கி, நெய்விட்டு வதக்கவும். பிரண்டை நன்றாக வதங்கியதும் பிற பொருட்களையும் அதனுடன் சேர்த்து லேசாக வதக்கி, துவையலாக அரைக்கவும். சூடான சாதத்தில் பிசைந்து சாப்பிடவும்.

மருத்துவப் பயன்:

குடலில் உள்ள கிருமி கள் நீங்கும். உடற்பருமன் குறையும். நரம் புத் தளர்ச்சி, எலும்புத் தேய்மானம் குண மாகும். மாதவிலக்கை ஒழுங்குபடுத்தும்.

வெந்தயக் கீரை தோசை

தேவையானவை:
தோசை மாவு - அரை கிலோ, சீரகம் - 25 கிராம், சோம்பு - அரை தேக்கரண்டி, பூண்டு - 4 பல், வெந்தயக் கீரை - 100 கிராம், எண்ணெய், உப்பு, மஞ்சள் தூள் - சிறிதளவு.

செய்முறை:
சீரகம், சோம்பு, பொடியாக நறுக்கிய பூண்டு, மஞ்சள் தூள் ஆகியவற்றை சிறிது எண்ணெய் ஊற்றி நன்றாக வதக்கிக்கொள்ளவும். சூடு ஆறியதும் நைசாக அரைத்துக்கொள்ள வேண்டும். அரைத்த விழுதுடன் உப்பு சேர்த்து தோசை மாவுடன் நன்றாகக் கலக்கி, தோசை வார்க்கவும். அதன் மேல் நறுக்கிய வெந்தயக் கீரையைத் தூவி, வெந்ததும் மறு பக்கம் திருப்பிப் போட்டு எடுக்கவும்.

மருத்துவப் பயன்:
இரும்பு மற்றும் கால்சியம் நிறைந்தது. எலும்புகளைப் பலப்படுத்தும். வயிற்றுப் பூச்சிகளை அகற்றும். கெட்ட கொழுப்பைக் குறைக்கும். சர்க்கரை நோயாளிகளுக்கு மிகச் சிறந்த உணவு.

கறிவேப்பிலைக் கொழுக்கட்டை

தேவையானவை:
கறிவேப்பிலை - 2 கைப்பிடி, பச்சரிசி மாவு - கால் கிலோ, கருப்பட்டி - 100 கிராம், சீரகம், மிளகு - தலா அரை தேக்கரண்டி, மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி, ஏலக்காய் - 6, சுக்கு - ஒரு துண்டு, தேங்காய் - அரை மூடி.

செய்முறை:
சீரகம், மஞ்சள் தூள், மிளகு, சுக்கு ஆகியவற்றை வெறும் வாணலியில் இளஞ்சிவப்பாக வறுத்து நன்றாக அரைத்துக்கொள்ளவும். தேங்காயைத் துருவிக்கொள்ளவும். ஏலக்காயைப் பொடித்துக்கொள்ளவும். கறிவேப்பிலையைப் பொடியாக நறுக்கிக்கொள்ளவும். கருப்பட்டியைப் பாகு காய்ச்சி, மற்ற பொருட்களுடன் சேர்த்து பச்சரிசி மாவில் கலக்கவும். பின்னர் கொழுக்கட்டையாகப் பிடித்து இட்லித் தட்டில் வேகவைத்து எடுக்கவும்.

மருத்துவப் பயன்:
சர்க்கரை நோய், எலும்புத் தேய்மானம், தைராய்டு பிரச்னைகளுக்குக் கை கண்ட மருந்து. உடல் பலவீனம், வலி, அசதி, சோர்வை நீக்கி சுறுசுறுப்பு தரும். ஆவியில் வேகவைத்து எடுப்பதால், எளிதில் ஜீரணமாகும்.

உடலுக்கு ஆரோக்கியம் அளிக்கும் இந்த மருத்துவ உணவு’ வகைகளை செய்து சாப்பிட்டு பாருங்கள் பிறகு சொல்வீர்கள் மகிழ்ச்சியான வாழ்வுக்கு ...

ஆமாங்க உணவே மருந்து...
Photo: நாம் மறந்து போனவை !

நமது முன்னோர்களின் நீண்ட நாள் ஆரோக்கியமான வாழ்வுக்கு காரணமான உணவுவகைகள் இதோ

உளுந்துப் பொடி

இதற்க்கு தேவையானவை:
 உளுத்தம் பருப்பு - கால் கிலோ, காய்ந்த மிளகாய் - 10, சீரகம் - 5 கிராம், காய்ந்த கறிவேப்பிலை - 25 கிராம், ஓமம் - 10 கிராம், பெருங்காயம் - 5 கிராம்.

எப்படி செய்வது:
அனைத்துப் பொருட்களையும் பொன்னிறமாக வறுத்துப் பொடியாக அரைத்துக்கொள்ளவும். இந்தப் பொடியை சாதத்தில் நெய் சேர்த்துச் சாப்பிட சுவையாக இருக்கும்.

இதன் மருத்துவப் பயன்:
உடல் மெலிவானவர்கள் மற்றும் வயதானவர்களுக்கு சிறந்த ஊட்டச் சத்து உணவு. சிசு வளர்ச்சிக்குத் தேவையான சத்துக்களும் இதில் நிறைந்து இருப்பதால், கர்ப்பிணிகள் சாப்பிட ஏற்றது. கால்சியம் குறைபாட்டால் ஏற்படும் பிரச்னைகளுக்கு நல்ல பலன் தரும்.

பிரண்டைத் துவையல்

தேவையானவை: 
முற்றாத பிரண்டை - 50 கிராம், மிளகு - 20, பச்சை மிளகாய் - 3, உரித்த சின்ன வெங்காயம் - ஒரு கைப்பிடி, நெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:
முதலில் பிரண்டையில் உள்ள நாரை நீக்கி, நெய்விட்டு வதக்கவும். பிரண்டை நன்றாக வதங்கியதும் பிற பொருட்களையும் அதனுடன் சேர்த்து லேசாக வதக்கி, துவையலாக அரைக்கவும். சூடான சாதத்தில் பிசைந்து சாப்பிடவும்.

மருத்துவப் பயன்: 

குடலில் உள்ள கிருமி கள் நீங்கும். உடற்பருமன் குறையும். நரம் புத் தளர்ச்சி, எலும்புத் தேய்மானம் குண மாகும். மாதவிலக்கை ஒழுங்குபடுத்தும்.

வெந்தயக் கீரை தோசை

தேவையானவை: 
தோசை மாவு - அரை கிலோ, சீரகம் - 25 கிராம், சோம்பு - அரை தேக்கரண்டி, பூண்டு - 4 பல், வெந்தயக் கீரை - 100 கிராம், எண்ணெய், உப்பு, மஞ்சள் தூள் - சிறிதளவு.

செய்முறை: 
சீரகம், சோம்பு, பொடியாக நறுக்கிய பூண்டு, மஞ்சள் தூள் ஆகியவற்றை சிறிது எண்ணெய் ஊற்றி நன்றாக வதக்கிக்கொள்ளவும். சூடு ஆறியதும் நைசாக அரைத்துக்கொள்ள வேண்டும். அரைத்த விழுதுடன் உப்பு சேர்த்து தோசை மாவுடன் நன்றாகக் கலக்கி, தோசை வார்க்கவும். அதன் மேல் நறுக்கிய வெந்தயக் கீரையைத் தூவி, வெந்ததும் மறு பக்கம் திருப்பிப் போட்டு எடுக்கவும்.

மருத்துவப் பயன்: 
இரும்பு மற்றும் கால்சியம் நிறைந்தது. எலும்புகளைப் பலப்படுத்தும். வயிற்றுப் பூச்சிகளை அகற்றும். கெட்ட கொழுப்பைக் குறைக்கும். சர்க்கரை நோயாளிகளுக்கு மிகச் சிறந்த உணவு.

கறிவேப்பிலைக் கொழுக்கட்டை

தேவையானவை: 
கறிவேப்பிலை - 2 கைப்பிடி, பச்சரிசி மாவு - கால் கிலோ, கருப்பட்டி - 100 கிராம், சீரகம், மிளகு - தலா அரை தேக்கரண்டி, மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி, ஏலக்காய் - 6, சுக்கு - ஒரு துண்டு, தேங்காய் - அரை மூடி.

செய்முறை: 
சீரகம், மஞ்சள் தூள், மிளகு, சுக்கு ஆகியவற்றை வெறும் வாணலியில் இளஞ்சிவப்பாக வறுத்து நன்றாக அரைத்துக்கொள்ளவும். தேங்காயைத் துருவிக்கொள்ளவும். ஏலக்காயைப் பொடித்துக்கொள்ளவும். கறிவேப்பிலையைப் பொடியாக நறுக்கிக்கொள்ளவும். கருப்பட்டியைப் பாகு காய்ச்சி, மற்ற பொருட்களுடன் சேர்த்து பச்சரிசி மாவில் கலக்கவும். பின்னர் கொழுக்கட்டையாகப் பிடித்து இட்லித் தட்டில் வேகவைத்து எடுக்கவும்.

மருத்துவப் பயன்: 
சர்க்கரை நோய், எலும்புத் தேய்மானம், தைராய்டு பிரச்னைகளுக்குக் கை கண்ட மருந்து. உடல் பலவீனம், வலி, அசதி, சோர்வை நீக்கி சுறுசுறுப்பு தரும். ஆவியில் வேகவைத்து எடுப்பதால், எளிதில் ஜீரணமாகும்.

உடலுக்கு ஆரோக்கியம் அளிக்கும் இந்த மருத்துவ உணவு’ வகைகளை செய்து சாப்பிட்டு பாருங்கள் பிறகு சொல்வீர்கள் மகிழ்ச்சியான வாழ்வுக்கு ...

ஆமாங்க உணவே மருந்து...
69

Monday, October 21, 2013

உங்கள் வீட்டு ”பல்ப்” மூலமே இனி இன்டர்நெட்டை பயன்படுத்தலாம் – சீனாவின் அரிய கண்டுபிடிப்பு

இனி இன்டர்நெட் பயன்படுத்த ‘வைபை’ வசதி இல்லையே என்று கவலைப்பட வேண்டாம்.
ஒரு பல்பை போட்டால் ‘லைபை’ வசதி கிடைத்து விடும். அதன் மூலம் இன்டர்நெட் பார்க்க முடியும். பாலா காலமாக குழந்தைகளுக்கு டிஜிட்டல் பொம்மை முதல் வீடியோ கேம் வரை, பல்பு முதல் பட்டாசு வரை எல்லாவற்றையும் மலிவு விலை யில் அள்ளிக்குவிக்கும் சீனா தான் இப்போது இந்த ‘பல்ப்’ மூலம் இன்டர்நெட் வசதியையும் கண்டுபிடித்துள்ளது.
news_18860
ஒரு வாட் பல்பை வாங்கி எரிய விட்டால் போதும், அடுத்த நொடி இன்டர்நெட்டுக்கு உயிர் வந்துவிடும். லைட்டை ஆப் செய்து விட்டால் இன்டர்நெட்டுக்கான ‘லைபை’ போய் விடும். ஒரு பல்பு எரியவிட்டால் நான்கு கம்ப்யூட்டர் வரைக்கும் இன்டர்நெட்டை பயன்படுத்த முடியும்.
விநாடிக்கு 150 மெகாபைட் வேகம் கொண்டதான இந்த ”லைபை” குறித்து இன்னும் ஆராய்ச்சிகள் தொடர்கின்றன. வர்த்தக ரீதியாக பயன்படுத்த முழு அளவில் தயாரிக்கப்படும் என்று இதை கண்டுபிடித்த ஷாங்காய் பல்கலைக்கழக பேராசிரியர் சிநான் கூறினார். லெட் வகை பல்பில் மைக்ரோசிப் பொருத்தப்பட்டிருக்கும். அதன் மூலம் அலைக்கற்றைகள் எழுப்பப்பட்டு, இன்டர்நெட் வசதி ஏற்படுத்தப்படுகிறது. சீனாவில் ஷாங்காயில் நவம்பர் 5 ம் தேதி ஆரம்பிக்கப்பட உள்ள சர்வதேச கண்காட்சியில் இந்த ‘லைபை’ அறிமுகம் செய்யப்படுகிறது.
வழக்கமான ‘வைபை’ வசதி, ரேடியோ அலைகளை கொண்டு ஏற்படுத்தப்படுகிறது. அதன் மூலம் இன்டர்நெட் உயிர்பெறுகிறது. ஆனால், இந்த ஒரு வாட் பல்பை வைத்து சீனா, இன்டர்நெட்டை பயன்படுத்த முடியும் என்று கண்டுபிடித்துள்ளது. மலிவு விலை பொருட்களை கண்டுபிடி த்து உலக நாடுகளில் சந்தையில் பெரும் மாற்றத்தை கொண்டு வந்துள்ள சீனா வின் ‘லைபை’ கண்டுபிடிப் பால் தொழில்நுட்ப புரட்சி ஏற்படும் என்று தெரிகிறது.
சீனாவில் மட்டும் 60 கோடி பேர் இன்டர்நெட் வசதி வைத்துள்ளனர். அவர்கள் எல்லாம் ‘வைபை’யில் இருந்து தங்கள் சொந்த நாட்டு கண்டுபிடிப்பான ‘லைபை’க்கு மாறி விடுவர். மேலும், உலக நாடுகளில் பலவும் இந்த வசதிக்கு மாறினால், ‘வைபை’க்கு டாட்டா காட்டும் காலம் வெகு தூரத்தில் இல்லை என்று கணக்கு போடுகிறது சீனா.