Search This Blog

Sunday, September 16, 2012

2012 இல் அதிகம் சம்பாதித்த 30 இணையத்தளங்கள் விபரம்



1. Google 
முதலாம் இடத்தில் இருப்பது Google தான்.


நிறுவுனர்கள் : Larry Page and Sergey Brin
செக்கன் ஒன்றிற்கான வருமானம் :$691.29
வருடாந்த சராசரி வருமானம் :$22,000,000,000

2. Amazon

நிறுவுனர் : Jeff Bezos
செக்கன் ஒன்றிற்கான வருமானம் :$607.05
வருடாந்த சராசரி வருமானம் :$19,200,000,000

3. Yahoo
நிறுவுனர் : Jerry Yang and David Filo
செக்கன் ஒன்றிற்கான வருமானம் :$228.31
வருடாந்த சராசரி வருமானம் :$7,200,000,000

4. eBay
நிறுவுனர் : Pierre Omidyar
செக்கன் ஒன்றிற்கான வருமானம் :$199.45
வருடாந்த சராசரி வருமானம் :$ 6,300,000,000

5. Msn/Live
நிறுவுனர் : Nathan Myhvoid
செக்கன் ஒன்றிற்கான வருமானம் :$102.00
வருடாந்த சராசரி வருமானம் :$ 3,200,000,000

6. Paypal
நிறுவுனர் : Luke Nosek, Max Levchin and Peter Thiel
செக்கன் ஒன்றிற்கான வருமானம் :$71.40
வருடாந்த சராசரி வருமானம் :$2,250,000,000

7. iTunes
நிறுவுனர் : Jeff Robin
செக்கன் ஒன்றிற்கான வருமானம் :$60.00
வருடாந்த சராசரி வருமானம் :$1,900,000,000

8. Rueters
நிறுவுனர் : Marshal Vace
செக்கன் ஒன்றிற்கான வருமானம் :$60.00
வருடாந்த சராசரி வருமானம் :$1,900,000,000

9. Priceline
நிறுவுனர் : Jesse Fink
செக்கன் ஒன்றிற்கான வருமானம் :$59.6
வருடாந்த சராசரி வருமானம் :$1,850,000,000

10. Expedia
நிறுவுனர் : Added Mark Schroeder
செக்கன் ஒன்றிற்கான வருமானம் :$46.00
வருடாந்த சராசரி வருமானம் :$1,450,000,000

11. NetFlix
நிறுவுனர் : Reed Hastings
செக்கன் ஒன்றிற்கான வருமானம் :$38.00
வருடாந்த சராசரி வருமானம் :$1.100.000,000

12. Travelocity
நிறுவுனர் : Terry Jones
செக்கன் ஒன்றிற்கான வருமானம் :$38.00
வருடாந்த சராசரி வருமானம் :$1.100.000,000

13. Zappos
நிறுவுனர் : Nick Swinmurn
செக்கன் ஒன்றிற்கான வருமானம் :$31.70
வருடாந்த சராசரி வருமானம் :$1,000,000,000

14. Hotels.com
நிறுவுனர் : David Litman
செக்கன் ஒன்றிற்கான வருமானம் :$31.70
வருடாந்த சராசரி வருமானம் :$1,000,000,000

15. AOL
நிறுவுனர் : Erik Prince
செக்கன் ஒன்றிற்கான வருமானம் :$30.50
வருடாந்த சராசரி வருமானம் :$960,000,000

16. Orbitz
நிறுவுனர் : Jeff Katz
செக்கன் ஒன்றிற்கான வருமானம் :$28.00
வருடாந்த சராசரி வருமானம் :$870,000,000

17. Overstock
நிறுவுனர் : Robert Brazell
செக்கன் ஒன்றிற்கான வருமானம் :$27.00
வருடாந்த சராசரி வருமானம் $834,000,000

18. Myspace
நிறுவுனர் : Tom Anderson
செக்கன் ஒன்றிற்கான வருமானம் :$25.00
வருடாந்த சராசரி வருமானம் $800.000.000

19. Skype
நிறுவுனர் : Niklas Zennstrom
செக்கன் ஒன்றிற்கான வருமானம் :$18.00
வருடாந்த சராசரி வருமானம்: $550,840,000

20. Sohu
நிறுவுனர் : Zhang Chaoyang
செக்கன் ஒன்றிற்கான வருமானம் :$14.00
வருடாந்த சராசரி வருமானம்: $430,000,000

21. Buy.com
நிறுவுனர் : Robb Brock
செக்கன் ஒன்றிற்கான வருமானம் :$12.68
வருடாந்த சராசரி வருமானம்: $400,000,000

22. StubHub
நிறுவுனர் : Eric Baker
செக்கன் ஒன்றிற்கான வருமானம் : $13.00
வருடாந்த சராசரி வருமானம்: $ 430,000,000

23. Alibaba
நிறுவுனர் : Jack Ma
செக்கன் ஒன்றிற்கான வருமானம் : $10.00
வருடாந்த சராசரி வருமானம்: $315,000,000

24. Facebook
நிறுவுனர் : Mark Zuckerberg
செக்கன் ஒன்றிற்கான வருமானம் :$9.50
வருடாந்த சராசரி வருமானம்: $300,000,000

25. YouTube
நிறுவுனர் : Chad Hurley, Jawed Karim and Steve Chen
செக்கன் ஒன்றிற்கான வருமானம் :$9.50
வருடாந்த சராசரி வருமானம்: $300,000,000

26. Blue Nile
நிறுவுனர் : Mark Vadon
செக்கன் ஒன்றிற்கான வருமானம் :$9.40
வருடாந்த சராசரி வருமானம்: $295,000,000

27. Tripadvisor
நிறுவுனர் : Stephen Kaufer
செக்கன் ஒன்றிற்கான வருமானம் :$8.20
வருடாந்த சராசரி வருமானம்: $ 250,000,000

28. Getty Images
நிறுவுனர் : Mark Getty
செக்கன் ஒன்றிற்கான வருமானம் :$7.40
வருடாந்த சராசரி வருமானம்: $230,000,000

29. Bidz
நிறுவுனர் : Garry Itkin
செக்கன் ஒன்றிற்கான வருமானம் :$6.70
வருடாந்த சராசரி வருமானம்: $200,000,000

30. NYTimes
நிறுவுனர் : Henry Jarvis Raymond
செக்கன் ஒன்றிற்கான வருமானம் :$6.00
வருடாந்த சராசரி வருமானம்: $175,000,000

அலன் மாத்திசன் டூரிங்.. இவரை எத்தனை பேருக்கு தெரியும்?

 

இன்று கணனித்திரையில் நாம் எமது பணிகளை செய்கிறோமென்றால் அதற்கு காரணம் இந்த அற்புத மனிதர்தான். இவர் இல்லாவிட்டால் என்னால் கணனித்திரையில் இதை எழுதவும் முடியாது. உங்களால் படிக்கவும் முடியாது. Binary எண்களாக பகுத்தெழுதி கணிப்பு நடத்த முடியும் என்று நிரூபித்து காட்டியவர். சுருக்கமாக கூறினால் நவீன கணனியின் தந்தை.

மூச்சு விடுவதுகூட கணனி என்று ஆகியிருக்கும் இக்காலத்தில் அலன் மாத்திசன் டூரிங்கை யாருக்கும் தெரியாமல் இருப்பது கொடுமைதான்.

1912 ஆம் ஆண்டு இப் புவியில் அவதரித்த அலன் டூரிங் அமெரிக்காவின் புகழ்வாய்ந்த பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் 1938 ஆம் ஆண்டு கணிதத்தில் முனைவர் பட்டம் பெற்றுக்கொண்டார். அந்த காலகட்டம் இரண்டாம் உலகப்போர் நடைபெற்றுக்கொண்டிருந்த காலப்பகுதியாகையால் அலன் பல்கலைக்கழகத்தில் இருந்து தன் தாய் நாடான பிரிட்டனுக்கு திரும்பி, அங்கே ஜேர்மனியர்களின் போர்க்கால சங்கேதங்களை தகர்க்கும் வேலையில் சேர்ந்தார். 

இரண்டாம் உலகப்போரின்போது ஜெர்மனியின் எனிக்மா இயந்திரம் அதனுடைய சங்கேதங்களை மாற்றிக்கொண்டேயிருக்க எந்த வகையிலும் ஜேர்மனியர்களின் தகவல்களை புரிந்துகொள்ளமுடியாமல் இருந்தது. அப்போது டூரிங் தயாரித்த கணனி செய்முறைகளை (Algorithmas) கொண்டு எந்த அடிப்படையில் எனிக்மாவின் சங்கேதங்கள் மாறுகின்றன என்பதை துல்லியமாக கணிக்க முடிந்தது. விளைவாக ஜேர்மனியரின் A+-போட் என்ற நீர்மூழ்கியின் சங்கேதங்களைப் பிரிட்டானியர்கள் புரிந்துகொள்ள, அந்த நீர்மூழ்கி முறியடிக்கப்பட்டு போரில் நேச நாடுகளுக்கு வெற்றி கிடைத்தது. இரண்டாம் உலகப்போரில் இது ஒரு முக்கிய நிகழ்வாகும். கிட்டத்தட்ட இதுதான் உயர்தொழில்நுட்ப அடிப்படையிலான போர்த்தந்திரத்துக்கு கிடைத்த முதல் வெற்றி)
தொடர்ந்து எண்கணிதம் (Number Theory), நேரிலி கணக்கீடு (Nonlinear computation), நேரிலிக்கணக்கீட்டின் அடிப்படையில் உயிரியல் பெருக்கங்களை வடிவாக்கல், பிணைப்பு வலைகள் (Neural Networks) என்று பலதுறைகளில் அலன் டூரிங் மிக முக்கியமான பங்களிப்பைத் தந்தார்.

இதெல்லாம் ஒருபுறமிருக்க இவரது தனிப்பட்ட வாழ்வு சோகம் மிகுந்ததாகவே இருந்தது. அலன் டூரிங்கிற்கு இயற்கையிலேயே ஓரினச்சேர்க்கைமீது நாட்டமிருந்தது. அக்காலத்தில் ஓரினச்சேர்க்கையாளர்களை உலகம் வெறுத்து ஒதுக்கிய காலம். அரசுகளினால் கூட ஓரினச்சேர்க்கை தடை செய்யப்பட்டிருந்தது. ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுவோர் சமூக விரோதிகளாகவே நோக்கப்பட்டனர். அலன் டூரிங் 1952 ம் ஆண்டு மான்செஸ்டர் நகரில் இன்னொரு ஆணுடன் உறவுகொள்ள முயற்சித்தபோது போலீசாரால் பிடிக்கப்பட்டார். 

ஓரினச்சேர்க்கையாளர்கள் கைது செய்யப்பட்டால் அவர்களுக்கு சிறைத்தண்டனை கொடுப்பதே வழமை. அல்லது பெண்களுக்கு இயற்கையில் சுரக்கும் எஸ்ட்ரோஜன் ஹார்மோனை ஒருவருடத்திற்கு ஊசிமூலம் செலுத்திகொள்ள வேண்டும். சிறையை தவிர்ப்பதற்காக அலன் டூரிங் ஹார்மோன் செலுத்த ஒத்துக்கொண்டார்.


தன்னைக்கவர்ந்திழுக்கும் தொழில்நுட்பம் ஒருபுறமும், ஓரினச்சேர்க்கை ஆர்வம் மறுபுறமும், இயற்கைக்கு மாறாக உடலில் செலுத்தப்பட்ட ஹார்மோன் இன்னொரு புறமும் என்று இழுக்க அலன் டூரிங்கின் வாழ்வு அவலமாகிப்போனது.

தூங்க முடியாத வேதனையில் இரண்டு வருடங்களுக்கு பிறகு கணிதம், இயற்பியல், உயிரியல் என்று முடிக்கப்படாத பல சித்தாந்தங்களை உலகிற்கு விட்டுவிட்டு சயனைட் கலந்த அப்பிளை உட்கொண்டு தன் வாழ்வை முடித்துக்கொண்டார். எந்த பிரிட்டானிய சமூகத்தை தன் அறிவால் போரில் காப்பாற்றினாரோ அதே சமூகத்தின் ஓரினச்சேர்க்கை வெறுப்பினால் துரத்தியடிக்கப்பட்டு அவருடைய வாழ்வு முடிந்துபோனது.

அவருடைய ஆராய்ச்சிகள், கணிதம், இயற்பியல், தர்க்கம், தத்துவம், உயிரியல், சங்கேதம் என்று பல் துறைகளில் பரவி நிற்கிறது. அவருடைய மறைவுக்கு பிறகு 1969 இல் வெளியிடப்பட்ட Intelligent Machines என்ற ஆராய்ச்சிக் கட்டுரை, இன்றைக்கு நாம் அறியும் செயற்கை ஒட்பம் (Artificial Intelligence) என்ற துறைக்கு வித்திட்டது. மனித மூளையின் செயற்பாடுகளை முற்றாகவோ, கிட்டத்தட்ட முழுமையாகவோ நிகழ்த்தவல்ல இயந்திரங்களைப் படைப்பது சாத்தியம் என்று அலன் டூரிங் முழுமையாக நம்பினார். அத்தகைய புத்திசாலி இயந்திரங்களை உளவியல் ரீதியாக கையாள்வதற்கு மனிதனுக்கு இருக்கும் தயக்கங்களையும் முன்மொழிந்தார்.

1950 இல் டூரிங் சோதனை என்ற கட்டுரையை வெளியிட்டார். அதில் செயற்கை ஒட்பத்தை அடையாளம் காணும் வழியை விளக்கியிருந்தார். மொத்தத்தில் நவீன இரண்டடிமான (Binary) கணனி, செயற்கை ஒட்பம், சங்கேதவியல் போன்ற துறைகளை நமக்கு உருவாக்கி கொடுத்தவர் அலன்.

அணுசக்தி வேண்டாம்; ஆனால்...



அணுசக்தியைப் பிளப்பதால் ஏற்படும் அபரிமிதமான உஷ்ணத்தைக் கொண்டு டர்பைன்களை இயக்கி மின்சாரம் உண்டாக்குவதை மனிதனின் சக்தித் தேவைகளுக்கு முடிவான விடை என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள். நூற்றுக்கணக்கான அணுமின் நிலையங்களை அமைத்தார்கள்.
எல்லோரும் சந்தோஷமாக இருந்தார்கள்.அணுசக்தியென்னும் ராட்சசனை அடக்கி நம் மனித இனத்தின் நலனுக்குப் பயன்படுத்துகிறோம் என்கிற திருப்தியில் விஞ்ஞானிகள் சிரித்துப் பேசிக்கொண்டிருக்கும் போது, ராட்சசன் அப்படியொன்றும் அடங்கிவிடவில்லை என்பது தெரிந்தது.

விபத்துகள்:-
முதலில் விபத்துகள். அமெரிக்காவில் 'மூன்று மைல் தீவு' என்கிற இடத்தில் வைத்திருந்த அணுமின்நிலையத்தில் விபத்து. அப்புறம் பற்பல அணுமின் நிலையங்களில் தெரிந்த, தெரியாத விபத்துக்கள். கல்பாக்கம் கூட விலக்கல்ல. அதன்பின் சமீபத்தில் செர்னோபில்.
அணுமின் நிலையங்களில் விபத்து என்பதை ஒரு அணுகுண்டு இலவசமாக வெடிபபதற்குச் சமானமாக, அவ்வளவு தீவிரமாகப் போகவிடமாட்டார்கள் என்கிற நம்பிக்கையில் நாமெல்லாம் நகத்தைக் கடித்துக்கொண்டிருக்க, விஞ்ஞானிகள் இன்னமும் கான்க்ரீட், இன்னமும் பாதுகாப்புச் சாதனங்கள், ஏதாவது எங்கேயாவது தப்பு என்றால் உடனே எல்லாவற்றையும் அணைத்து விடும்படியான இருமடங்கு மும்மடங்கு பாதுகாப்புகள் என்றெல்லாம் செய்தும், அணுமின் நிலையத்தில் உள்ள மற்றொரு தீவிரமான பிரச்சினையை அவர்கள் நிஜமாகவே மூடி மறைக்கிறார்கள் - அதன் சாம்பல்.

ஆபத்தான கதிரியக்கம்:-
அணுமின் நிலையங்களில் எரிபொருளாக உபயோகிக்கப்படும் யுரேனியம், ப்ளுடோனியம் போன்றவை அதீத கதிரியக்கம் கொண்டவை. அதிலிருந்து வெளிப்படும் கதிர்கள் நம்மேல் பட்டால் நம் எலும்புக்குள் இருக்கும் குருத்து அழிக்கப்பட்டு உத்திரவாதமாகச் செத்துப்போவோம்.
அணுமின் நிலையத்தின் சாம்பலில் இவ்வாறான கதிரியக்கம் அதிகப்படியாகவே இருக்கும். அதைத் தண்ணீரில் கரைக்க முடியாது; காற்றில் தூற்ற முடியாது; அதன் கதிரியக்கம் ஆய்ந்து அவிந்து பத்திர அளவுக்கு வர ஆயிரக்கணக்கான வருஷங்கள் ஆகும்.

சாம்பலை என்ன செய்வது:-
அதனால், அந்தச் சாம்பலை வைத்துக்கொண்டு என்ன செய்வது என்று விழிக்கிறார்கள். துப்பறியும் நாவல்களில் 'டெட்பாடி' போல எப்படி மறைப்பது, எங்கே புதைப்பது என்று அலைகிறார்கள். அவைகளை 'நாடுயுல்ஸ்' (nodules) என்று கெட்டியாக்கி ஆழக்கடல் தாண்டிச் சென்று சமுத்திரத்திற்குக் கீழே புதைக்கலாம்; இல்லை, பூமியில் பள்ளம் தோண்டிப் பத்திரப்படுத்தலாம்.இவ்வளவு தகிடுதத்தம் ப்ண்ணி அந்தச் சனியனை உற்பத்தி செய்து தான் ஆக வேண்டுமா என்று ஒரு கோஷ்டி கேள்வி கேட்க, அதற்கு விஞ்ஞானிகளிடமிருந்து சரியான பதில் இல்லை. அதுவும் இளைய தலைமுறையினர் இந்தக் கேள்விகளை கேட்கிறார்கள்.

ஆர்ப்பாட்டம், எதிர்ப்பு:-
உலகில் எங்கே அணுமின் நிலையம் வைப்பதாகச் சர்க்கார் அறிவித்தாலும் அங்கே போய் ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள். கர்நாடகத்தில் 'கைகா' வில் ஓர் எதிர்ப்பு இயக்கம் தோன்றியுள்ளது. அதுபோல் தமிழ்நாட்டில் திருநெல்வேலி ஜில்லாவில் கூடங்குளம் என்கிற இடத்தில் சோவியத் உதவியுடன் ஆயிரம் மெகாவாட் அணுமின் சக்தி நிலையம் கொண்டுவரப் போகிறார்கள். அதற்கும் ஓர் எதிர்ப்பு இயக்கம் உருவாகி வருகிறது என்று படித்தேன்.

எரிபொருள்கள்:-
இந்த எதிர்ப்புகள் நியாயமானவை தான் என்றாலும், எதிர்காலத்தில் மின்சாரம் தயாரிக்க எரிபொருள்கள் காலியாகிக் கொண்டிருக்கின்றன என்பதும் உண்மையே. உலகத்தில், கைவசம் உள்ள பெட்ரோலியம் சம்பந்தப்பட்ட எரிபொருள்கள் அடுத்த நூற்றாண்டின் முற்பகுதியில் காலியாகிவிடும். எண்ணெய்க் கிண்றுகள் வற்றிவிடும். நம் இந்தியாவில் மிக அதிகப்படியாக நிலக்கரி இருக்கிறது. அது இன்னும் பல நூற்றாண்டுகளுக்குத் தாங்கும். ஆனால், நிலக்கரியில் சிக்கல்கள் பல உள்ளன. முதலில் நிலக்கரியைத் தோண்டியெடுப்பதில் உள்ள சங்கடங்கள். ஆழமாகத் தோண்ட வேண்டும்; ஆபத்து அதிகம்; தோண்டுபவர்களுக்கு விபத்துக்கள்; அவர்கள் மூச்சில் ஏறும் கார்பன் கலந்த காற்றினால் அவர்கள் சீக்கிரம் இறந்துபோகிறார்கள். இவ்வாறு இரக்கமற்றுத் தோண்டுவதற்குப் பதிலாக முழுக்க முழுக்க ரோபாட் மெஷின்களை வைத்துக் கொண்டே செய்தால் மிக அதிகமான செலவாகும்.

காற்று மண்டலத் தூய்மைக்கேடு:-
நிலக்கரியைச் சுரங்கங்களிலுருந்து மின் உற்பத்தி ஸ்தலத்திற்குக் கொண்டு வர ஆகும் செலவு, அங்கேயே உற்பத்தி செய்தால் மின்சார விரயம். அது மட்டுமன்றி, நிலக்கரியை எரிப்பதால் நம் காற்று மண்டலத்தில் அதிகமாகும் கார்பன் டையாக்ஸைடின் அளவு ஒரு பெரிய ஆபத்து. 1900-த்தில் நம் காற்று மண்டலத்தில் கார்பன் டையாக்ஸைடு வாயு பத்தாயிரத்தில் 29 பகுதி இருந்தது. இப்போது 32 ஆக உயர்ந்திருக்கிறது. கி.பி. 2000-க்குள் 36 ஆகிவிடும். இந்தக் கார்பன் டையாக்ஸைடு அதிகமானால் பூமி மெல்ல மெல்லச் சூடேறிக் கொண்டு வருகிறது. இதை க்ரீன் ஹவுஸ் எஃபெக்ட் (Green house effect) என்று சொல்வார்கள்.

துருவப் பிரதேசப் பனி உருகலாம்:-
அந்த அதிகப்படி உஷ்ணம் நாம் உணராமல் மெல்ல மெல்ல நம் துருவப் பிரதேசங்களில் உள்ள பனிப் பாளங்களை உருக்கி, நம் சமுத்திரங்களில் தண்ணீர் லெவல் அதிகமாகி, கொஞ்சம் கொஞ்சமாக தினமணி ஆபீசின் மாடிக்கு கடல் வந்துவிட சாத்தியக்கூறுகள் உள்ளன!. மேலும் சமுத்திர நீர் அதிக உஷ்ணத்தால் ஆவியாகி, அதில் கரைந்துள்ள கார்பன் டையாக்ஸைடு காற்றில் அதிகமாகி, வீனஸ் கிரகம் போல் சூடு ஆயிரக்கணக்கான டிகிரிகளுக்கு எகிறும்.

மாற்று வழிகள்:-
நிலக்கரி எல்லாவற்றையும் எரிப்பதால் ஆபத்து; அணுசக்தி ஆகாது; பின் என்ன தான் நல்லது? பற்பல மாற்று சாத்தியக்கூறுகள் நம்பிக்கை தருகினறன. முதலில் இங்கிருந்து புரசவாக்கம் போவதற்கு பாட்டரி கார்கள் அமைக்கலாம். ஸோலார் பாய்மரங்கள் விரித்துச் சூரிய ஒளியைப் பயன்படுத்திக் காலேஜ் போகலாம்; இல்லை, சைக்கிள்களை அதிகம் பயன்படுத்தலாம்.

ஹைட்ரஜன் வாயு:-
ஹைட்ரஜன் - ஜலவாயு நம்மிடம் நிறைய இருக்கிறது. பூமியின் கைவசம் உள்ள 3000 கோடி கனமைல் தண்ணீரில் கரைந்திருக்கும் இந்த ஹைட்ரஜன் வாயுவை எப்படியாவது எரி பொருளாக உபயோகிக்க முடிந்தால் நம் பிரச்சினைகள் எல்லாமே தீர்ந்துவிடும். இதனால் நம் வாயுமண்டலம் பாழாகாது. ஹைட்ரஜன் எரியும் போது அது விடுவிக்கிற, பிராண வாயுவுடன், ஆக்ஸிஜனுடன் சேர்ந்து கொண்டு மறுபடி நீராவியாகிறது. ஆனால் விஷயம் அத்தனை சுலபமில்லை. ஜலவாயு ரொம்ப லேசானது. அதைச் சேமித்து வைப்பதற்கு ராட்சசக் குடுவைகள் வேண்டும். மேலும் ஜலவாயு முணுக்கென்றால் பற்றிக்கொள்ளும். ஆரம்பக் காலத்தில் ஹைட்ரஜன் நிரப்பின பிரம்மாண்டமான மிதக்கும் கப்பல்கள் பண்ணி பல பேர் எரிந்து போயிருக்கிறார்கள்.

"சைவ" பெட்ரோல்:-
அதனால் பல மாற்று முறைகளை ஆராய்ந்து கொண்டிருக்கிறார்கள். இரும்பு, டைட்டேனியம் கலந்த ஒரு கலப்பு உலோகத்திற்கு ஜலவாயுவை உறிஞ்சிக் கொள்ளும் குணம் இருப்பதைக் கண்டுபிடித்திருக்கிறார்கள் அல்லது கார்பன் டையாக்ஸைடுடன் கலந்து மிதைல் சாராயம், மீதேன் என்று பொருள்களாக மாற்றிச் சேமித்து வைக்கலாம். அதிலிருந்து அவைகளையே மறுபடி பெட்ரோலாகவும் பண்ணலாமா என்று முயற்சி பண்ணிக் கொண்டிருக்கிறார்கள். இந்தப் பெட்ரோல் 'சைவ பெட்ரோல்'. இதை எரிப்பதால் முதலில் ஆரம்பித்த கார்பன் டையாக்ஸைடைத் திரும்பப் பெறுவோம் அவ்வளவே. சுத்தம்!. இவை யாவும் பரிசோதனைச்சாலைக் கனவுகள்.

சூரியனே கதி

சூரியன் தான் நமக்கு எப்படியும் கடைசி சரணாக இருக்கப் போகிறது. சூரியன், பத்திரமான தூரத்தில் உள்ள அணு உலை என்று தான் சொல்லலாம். பதினைந்து கோடி கிலோமீட்டர் தூரத்தில் உள்ள அணு உலை அதன் சக்தியின் பெரும்பாலான பகுதி விண்வெளியில் வேஸ்ட் ஆகிறது. அதிலிருந்து ஒரு கடுகளவு தான், மொத்தத்தில் 220 கோடியில் ஒரு பகுதி தான், நமக்குக் கிடைக்கிறது. இதுவே நமக்கு ஜாஸ்தி.
இதற்கு இன்றைய ரேட்டில் விலை போட்டால், ஒரு செகண்டுக்கு நூறு கோடி ரூபாய் மதிப்புள்ள சக்தியைச் சூரியன் நம் பக்கம் அனுப்புகிறது. அதைச் சரியாகச் சிறைப்பிடிக்க முடிந்தால் போதும். யோசித்துப் பார்த்தால் நம் வாழ்வின் அத்தனை சக்திகளும் ஆதாரமாக சூரிய வெளிச்சத்திலிருந்து கிடைப்பவையே. மழை, மேகம், ஆறுகள், நிலக்கரி, பெட்ரோல் எல்லாமே சூரிய ஒளியின் வேறு வேறு வடிவங்கள் தாம். விதிவிலக்கு அணுசக்தி. அணுசக்தி ஆதிநாள்களில் சிருஷ்டி சமயத்தில் ஏற்பட்ட மகா வெடிப்பில் அணுக்கருகள் இருக்கும் துகள்கள் ஒட்டிக்கொண்ட போது சேமித்து வைக்கப்பட்டவை. சிருஷ்டியைக் கலைப்பதில் தான் எத்தனை சிரமம்!.


(1-10-1988 - தினமணியில் காலங்களை கடந்த எழுத்தாளர் சுஜாதா எழுதியது.)

‎~ The Heaven Gate Mountains~



It is no wonder that Tianmen Mountain in China is also called the Heaven Gate Mountain. The mountain measures up to 131 meters in height and runs 60 meters deep. Because of its high altitude, it is more like an open gate to heaven. Located in the Zhangjiajie city in China, the Heaven Gate Mountain is seven kilometers from the city. Adventures prefer hiking up to the mountain while tourists prefer a taxi or a car to get to the mountains. Apart from trekking and car rides, cable car facility is available too. The mountain boasts of a natural cave believed to have formed in 263 AD.
The Tianmen Mountain has a 500 year old temple called the Tianmenshan temple situated on its top and hence the mountain is the major place of worship for the Chinese. Written as Tien Men Shan in Chinese language, the mountain had longer days and shorter nights. The temperature is around 9 to 10 degree centigrade through most of the year. In July 1992, the Heaven Gate Mountain was established as a national park and a potential tourist attraction. To facilitate the tourism aspect, the Chinese government built the 7455 meter cable cars so that the tourists can marvel the beauty of the mountain.

Scientists show protein linked to hunger also implicated in alcoholism



Researchers at The Scripps Research Institute have found new links between a protein that controls our urge to eat and brain cells involved in the development of alcoholism. The discovery points to new possibilities for designing drugs to treat alcoholism and other addictions.
The new study, published online ahead of print by the journal Neuropsychopharmacology, focuses on the peptide ghrelin, which is known to stimulate eating.
"This is the first study to characterize the effects of ghrelin on neurons in a brain region called the central nucleus of the amygdala," said team leader Scripps Research Institute Associate Professor Marisa Roberto, who was knighted last year by the Italian Republic for her work in the alcoholism field. "There is increasing evidence that the peptide systems regulating food consumption are also critical players in excessive alcohol consumption. These peptide systems have the potential to serve as targets for new therapies aimed at treating alcoholism."
Excessive alcohol use and alcoholism cause approximately 4 percent of deaths globally each year. In the United States, that translates to 79,000 deaths annually and $224 billion in healthcare and other economic costs, according to a 2011 report by the Centers for Disease Control and Prevention.
Key Brain Region
The brain region known as the central nucleus of the amygdala is thought to be a key region in the transition to alcohol dependence, that is, a biological change from experiencing a pleasant sensation upon the consumption of alcohol to the need to consume alcohol to relieve unpleasant, negative feelings due to the lack of its consumption. In animals addicted to alcohol, the central nucleus of the amygdala controls increased consumption.
"Given the importance of the central nucleus of the amygdala in alcohol dependence, we wanted to test ghrelin's effects in this region," said Maureen Cruz, the first author of the study and former research associate in the Roberto laboratory, now an associate at Booz Allen Hamilton in Rockville, MD.
The peptide ghrelin is best known for stimulating eating through its action on a receptor known as GHSR1A in the hypothalamus region of the brain. But scientists had recently shown that gene defects in both ghrelin and the GHSR1A receptor were associated with severe cases of alcoholism in animal models. In addition, alcoholic patients have higher levels of the ghrelin peptide circulating in their blood compared to non-alcoholic patients. And, the higher the ghrelin levels, the higher the patients' reported cravings for alcohol.
New Evidence
In the new study, Roberto, Cruz, and colleagues at Scripps Research and the Oregon Health and Sciences University first demonstrated that GHSR1A is present on neurons in the central nucleus of the amygdala in the rat brain.
Using intracellular recording techniques, the team then measured how the strength of the GABAergic synapses (the area between neurons transmitting the inhibitory neurotransmitter GABA) changed when ghrelin was applied. They found that ghrelin caused increased GABAergic transmission in the central amygdala neurons. With further testing, the scientists determined that most likely this was due to increased release of the GABA neurotransmitter.
Next, the researchers blocked the GHSR1A receptor with a chemical inhibitor and measured a decrease in GABA transmission. This revealed tonic, or continuous, ghrelin activity in these neurons.
In the final set of experiments, the researchers examined neurons from alcohol-addicted and control rats when both ghrelin and ethanol were added. First, the scientists added ghrelin followed by ethanol. This resulted in an even stronger increase in GABAergic responses in these neurons. However, when the scientists reversed the order, adding ethanol first and ghrelin second, ghrelin did not further increase GABAergic transmission. This suggests that ghrelin could be potentiating the effects of alcohol in the central nucleus of the amygdala, in effect, priming the system.
New Possibilities
"Our results point to both shared and different mechanisms involved in the effects of ghrelin and ethanol in the central nucleus of the amygdala," said Roberto. "Importantly, there is a tonic ghrelin signal that appears to interact with pathways activated by both acute and chronic ethanol exposure. Perhaps if we could find a way to block ghrelin's activity in this region, we could dampen or even turn off the cravings felt by alcoholics."
Roberto cautions, though, that current therapies for alcoholism only work in a subset of patients.
"Because alcohol affects a lot of systems in the brain, there won't be a single pill that will cure the multiple and complex aspects of this disease," she said. "That is why we are studying alcoholism from a variety of angles, to understand the different brain targets involved."
More information: "Ghrelin Increases GABAergic Transmission and Interacts with Ethanol Actions in the Rat Central Nucleus of the Amygdala,"www.nature.com/npp… 012190a.html
Provided by Scripps Research Institute
"Scientists show protein linked to hunger also implicated in alcoholism." September 14th, 2012. http://medicalxpress.com/news/2012-09-scientists-protein-linked-hunger-implicated.html
Posted by
Robert Karl Stonjek

MGR and ANNA Rare Photo

''அரசியல் லாபம் அண்ணாவின் லட்சியமல்ல!''

எம்.ஜி.ராமச்சந்திரன்

ஆனந்த விகடன் பொக்கிஷம் பகுதியில் இருந்து...

இருபத்தைந்து ஆண்டுக ளுக்கு முன்பு, முதன்முறையாக அண்ணாவை நான் சந்தித்தேன். நான் தூய கதராடை அணிந்து, காங்கிரஸ் இயக்கத்தில் அங்கத் தினராக இருந்தேன். அண்ணா அவர்களோ, திராவிடர் கழகத் தின் முக்கிய தலைவர். ஆனாலும், ஓர் அரசியல் தலைவர் என்ற முறையில் நான் அவரைச் சந்திக்க வில்லை. ஒரு நடிகன், ஒரு நாட காசிரியரைச் சந்திக்கும் முறையில் தான் எனது முதல் சந்திப்பு அமைந்தது. சென்னையில் நடை பெறவிருந்த, அண்ணாவின் 'சிவாஜி கண்ட இந்து ராஜ்யம்' என்ற நாடகத்தில் சிவாஜியாக நடிக்க வைப்பதற்காகத்தான் அந்த முதல் சந்திப்பு நிகழ்ந்தது.
இன்றைக்கு இருபத்தைந்து ஆண்டுகள் உருண்டோடிவிட் டன. இன்று அண்ணா அவர்கள் தமிழகத்தின் முதலமைச்சர். திராவிட முன்னேற்றக் கழகத்தைத் தோற்றுவித்து, சுமார் 20 ஆண்டு களிலே மாபெரும் இயக்கமாக வளர்த்து, 70 ஆண்டுகளுக்கு மேலான வரலாற்றையும், 20 ஆண்டுகளுக்கு மேலாக ஆட்சிப் பொறுப்பையும் ஏற்றிருந்த காங்கி ரஸை வீழ்த்தி, இந்தியத் துணைக் கண்டத்திலேயே, ஒரே எதிர்க்கட்சி ஆட்சியை ஏற்படுத்தும் அளவிற்கு மக்களின் பேராதரவைப் பெற்ற மகத்தான அரசியல் தலைவர்.

எந்த ஆயுதத்தையாவது பயன் படுத்தி, எந்த முறையைக் கையாண் டாவது அரசியல் லாபம் பெறுவது என்பது அவருடைய லட்சியமல்ல; அவருக்குத் தன்னுடைய சக்தியில் முழு நம்பிக்கை உண்டு. எழுத் திலோ பேச்சிலோ இயக்கத்தை நடத்திச்செல்வதிலோ யாருக் கேனும் இடம் அளித்துவிட்டால் அவர்கள் தன்னை அழித்துவிடு வார்கள், தன் செல்வாக்கைப் பறித்துவிடுவார்கள் என்ற எண் ணமே இல்லாதவர் அண்ணா. மாற்றாரின் திறமைக்கு மதிப் பளிப்பதிலே ஈடற்றவர். இந்தப் பண்புதான் அவரைப் பெரியா ரிடத்திலே பதினைந்து ஆண்டு களுக்கு மேலாகப் பணியாற்ற வைத்தது. இந்தப் பண்புதான் பெரியாரையே எதிர்த்து வெற்றி காண வைத்தது.

அண்ணா அவர்களின் பாச மிகு குடும்பத்திலே ஓர் உறுப்பின னாக வாழும் பேறு பெற்றதை எண்ணி எண்ணி மகிழும் நேரத் திலே அண்ணனுக்கு 60-வது பிறந்த நாள். குடும்பத் தலைவ னுக்கு 60-வது பிறந்த நாள். நாட்டின் முதல்வருக்கு 60-வது பிறந்த நாள். ஆம்... அன்புள்ளத் திற்கு, பண்புள்ளத்திற்கு 60-வது பிறந்த நாள். இந்த நாளிலே நம்முடைய பாச உள்ளங்களை அவருடைய பாதங்களிலே படைத்து மகிழ்வோம்.

Gopika poornima Best Song in Damarukam