Search This Blog

Friday, March 14, 2014

புகைச்சல்கள் - ஆதவன்

கல்யாணமாகிய முதல் ஆறு மாதங்களில் அவர்களிடையே கடும்பூசல்கள் எதுவும் ஏற்படவில்லையானால் அந்தக்கட்டத்தில் அவர்கள் ஒருவருக்கொருவர் முழுவதும் அந்நியர்களாக இருந்தார்களென்பதுதான் காரணம்.  அந்நியர்களிடையே அவரவருடைய குறை நிறைகள் பற்றிய ஆழ்ந்த பிரக்ஞையோ உறுத்தல்களோ இருக்காது; அவை சார்ந்த திட்டவட்டமான விமர்சனங்களோ தீர்ப்புகளோ இருக்காது; ஒருவரையொருவர் கண்டிக்க வேண்டும்; திருத்த வேண்டும் என்ற aathavanமுனைப்பு இருக்காது. இதெல்லாம் நெருக்கத்தில் விளைபவை. உடைமையுணர்வு அல்லது ஆதிக்க உணர்வை எருவாகக் கொண்டு செழிப்பவை, நமக்குச் சொந்தமான வீட்டில் இடித்துத் திருத்தி மாற்றங்களும் சௌகரியங்களும் செய்து கொள்வது போல, நமக்குச் சொந்தமென நாம் நினைக்கும் மனிதரையும் இடித்துச் செப்பனிட முயற்சி செய்தல், சுருக்கங்களை நீவி நேராக்கி விட முயலுதல்....
அந்த முதல் ஆறு மாதங்களில் அவர்களிடையே ஏற்பட்ட சில சில்லறைப் பூசல்கள், உரசல்கள் உடல் சார்புள்ளவை, பால் பேதத்தின் சூட்சுமத்தையும், அந்தச் சூட்சுமத்தில் பொதிந்திருந்த இன்பத்தையும் உணரும் துடிப்பு. முதல் தடவையின் நம்பிக்கைகள், எதிர்பார்ப்புகள், கூடவே ஏமாற்றங்கள், எரிச்சல்கள், லட்சிய ஆண்மை, லட்சிய பெண்மை என்ற ரூபமற்ற கனவுச்சிதறல்களின் குவிமையம் கடைசியில் புராதனத்திலும் புராதனமான ஒரு பௌதிக நியதிதானா என்ற வியப்பு அதிர்ச்சி. இதுவும் பயிலவேண்டிய ஒரு வித்தை, என்ற உணர்வு ஏற்படுத்திய உற்சாகம். கூடவே ஆதாரமான இளமையின் புனிதமான படிமங்களின் பின்னணியில் ஒரு சோர்வு. உடல் ரீதியாக அவர்களிடையே சகஜ பாவமும் சீரான லய உறவும் ஸ்தாபிதமான பிறகு, இவ்வாறு தத்தம் உடல்கள் ஆள்வதிலும் ஆளப்படுவதிலும் அவர்கள் கர்வம் கொண்டவர்களாகி, இவனுடைய ஆளுமை முழுவதும் தனக்குச் சொந்தமென்று அவளும் அவளது ஆளுமை முழுவதும் தனக்குச் சொந்தமென்று அவனும் நினைக்க ஆரம்பித்தார்கள். பழக்கங்கள், பாணிகள் உள்பட எல்லாமே சொந்தமென்று. ஆறுமாதச் சொந்தம்; ஆறுமாத உரிமை.
இந்த உரிமையின் போதை முதலில் பிதற்றச் செய்தது அவளைத்தான். அவனுடைய பழக்கங்களைச் சீண்டத் தொடங்கினாள். முதலில் வேடிக்கையாக பிறகு சீரியஸாக. அவனுடைய ஊதாரித்தனத்தை, அவனுடைய சிகரெட் பிடிக்கும் பழக்கத்தை.
முதலிலெல்லாம் சட்டையில் உட்காரும் பூச்சியைத் தட்டிவிடுவது போல அவன் அவளுடைய ஆட்சேபங்களை ஒரு புன்சிரிப்பால் அலட்சியமாகத் தட்டி உதறிவிட்டுத் தன் பாட்டில் இருந்தான். இது அவளுடைய அகந்தையைச் சீண்டியது. தன் அதிருப்தியை அவன் அங்கீகரிக்கும்படி செய்ய வேண்டும். அது அவனைக் காயப்படுத்தவேண்டும் என்பது அவளுக்கு ஒரு தீவிர தாகமாகவும் வெறியாகவும் ஆகி தன் ஆட்சேபணைகளின் காரத்தை ஏற்றிக் கொண்டே போனாள்.
நிகழ்ந்து கொண்டிருபது வெறும் காதல் சீண்டல் அல்ல, தீவிரமான பலப்பரீட்சை; எறியப்படுபவை பூப்பந்துகள் அல்ல பாணங்கள் - என அவன் உணரச் சிலகாலம் பிடித்தது. உணர்ந்ததும் அவன் எச்சரிக்கை அடைந்தான். தன் அந்தரங்க உலகின் எல்லைக் கற்களைச் சோதித்து, பாராவைப் பலப்படுத்தினான். அவனுடைய ராஜ்யத்தில் அவள் பிரஜா உரிமை பெற்றவளாக இருக்கலாம். ஆனால், ஆட்சி அவனுடையதுதான் என உறுதியாகவும் அவளுக்கு உறைக்கும் படியும் பிரகடனப்படுத்தலானான். இது ஒரு விதத்தில் அவனுக்குத் தோல்விதான். இத்தகைய சுய பிரகடனங்களை அவன் விரும்பியவனேயல்ல, தான் அரசன் அல்லது தான் அடிமை என்று. அவள் அடிமை என்ற சட்டையை அவனுக்கு அணிவிக்க முயன்றதால் அம்முயற்சியை எதிர்க்கும் தீவிரத்திலும் பரபரப்பிலும் அவன் அரசன் என்ற சட்டை அணிய நேர்ந்தது. இதனால் அவனுடைய சகஜ நிலை - பொதுவாக அவன் அப்பியசிக்க விரும்பிய தோரணைகள் அற்ற எளிய தன்மை - பங்கப்பட்டது. ராஜா சட்டையில் தான் ஒரு சோளக்கொல்லை பொம்மையாகத் தோன்றுவதாக, தன் மீதே சிரிப்பு வருகிறது. அதே சமயத்தில் அந்தச் சட்டையைக் கழற்றினால்தான் பாதுகாப்பற்றவனாகி, தன் ராஜ்யம் சூறையாடப்பட்டு விடுமென்ற பயம் அவனைச் சட்டையைக் கழற்றவிடாமல் தடுக்கிறது.
சங்கடமான நிலை; அவனுடைய உலகில் இதுகாறும் நிலவி வந்த அமைதி, அறியாமை விளைவித்த அமைதிதானா, கடைசியில்? வெகுளித்தனமான, பக்குவம் பெறாத அமைதி. அந்த அமைதியைக் கடந்து அவனுடைய பலவீனங்களென்னும் வெண்ணெயைத் திரட்டி வழித்து ருசிப்பதுதான் அவள் நோக்கமென்றால் அதில் அவள் நிச்சயம் வெற்றி பெற்று விட்டாள். அவனுடைய பதற்றமான வெளிப்பாடுகளின் போது அவள் முகத்தில் ஒரு கணத்துக்குப் பளிச்சிட்டு மறையும் புன்னகை - ஆம் அது ஒரு வெற்றிப்புன்னகை!
’என் பலவீனங்களே உனக்கு ஒரு வெற்றி மமதையை அளிக்கின்றன’ என்று அந்தப் புன்னகையைப் பார்த்துவிட்டு ஒரு நாள் அவன் சொன்னான். ‘எனவே ஒரு விதத்தில் இந்தப் பலவீனங்களை நீ விரும்புகிறாய் என்று கூடச் சொல்வேன்... இப்போது நீ சுட்டிக் காட்டுகிற பலவீனங்களை நான் களைந்தேனானால் ஏமாற்றந்தான் உண்டாகும். அவசரமாக என்னிடம் வேறு பலவீனங்களைத் தேடிக் கண்டுபிடித்து உன்னைத் திருப்திப்படுத்திக் கொள்ள முயலுவாய்.’
‘அதாவது நான் வேண்டுமென்றே உங்களிடம் குறைகளை கண்டுபிடிக்கறவள், வாக்குவாதத்துக்காக சால்ஜாப்புகள் தேடி அலைகிறவள் அப்படித்தானே?’
‘ஹூம்!’ என்று அவன் பெருமூச்செறிந்தான். ‘இதோ பார், நான் சொல்ல விரும்புவதெல்லாம் அற்ப விஷயங்களை ஏன் பெரிதாக்குகிறாய், என்றுதான்... வாழ்க்கையில் துக்கத்துக்கான காரணங்களையே தேடி சதா துக்கத்தில் ஆழ்ந்திருப்பதும் சாத்தியந்தான். சந்தோஷத்துக்கான காரணங்கள் தேடி எப்போதும் சந்தோஷமாக இருப்பதும் சாத்தியந்தான். நாம் சந்தோஷமாக இருந்துவிட்டுப் போவோமே! உனக்காக நான் ஒரு செயற்கையான வேஷமணிந்தால்தான் உனக்குத் திருப்தியா? நான் நானாகவே இருக்க முயற்சி செய்கிற நேர்மையை நீ ஏன் புரிந்துகொள்ள மாட்டேனென்கிறாய், பாராட்டமாட்டேன்னென்கிறாய்?’
‘ஹோ!’ என்று அவள் நொடித்தாள். ‘நல்ல நேர்மை... நான் ஒன்று கேட்கட்டுமா?’
‘ஒன்றென்ன, ஒன்பது கேள்’
‘நான் சிகரெட் குடித்தால் நீங்கள் பேசாமலிருப்பீர்களா?’
‘ஐ டோன்ட் மைன்ட் அட் ஆல்’
‘குடிக்க மாட்டேனென்ற தைரியம் - வேறென்ன?’
‘அதுதான் சொன்னேனே இது ரொம்பச் சின்ன விஷயம். நீ குடித்தாலும் சரி குடிக்காவிட்டாலும் சரி, நம்முடைய உறவுக்கும் இதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.’
‘பொய்! சுத்தமான வடிகட்டின பொய்!’ என்றாள் அவள், ஒவ்வொரு வார்த்தையும் அழுத்தம் திருத்தமாக உச்சரித்தவாறு. ‘ஓர் ஆண் என்ற முறையில் சிகரெட் பிடிப்பது உங்கள் பிரிவிலேஜ், குடிக்கிறீர்கள்... நான், என் பெற்றோர் எல்லோரும் இதை நவீன வாழ்க்கையின் ஒரு சாதாரண அம்சமாக, சுமுகமாக ஏற்றுக் கொள்ள வேண்டும்... ஆனால் நான் சிகரெட் குடித்தால் நீங்கள் ஏற்றுக் கொண்டால் கூட பெற்றோர், சமூகத்தினர் எல்லோரும் ஏற்றுக் கொள்வார்களா? நிச்சயம், அது ஒரு சின்ன விஷயமாக இருக்காது - உண்டா, இல்லையா?’
‘ஸோ உனக்கு அனுமதிக்கப்படாத ஒன்று எனக்கு அனுமதிக்கப்படுகிறது என்பதுதான் உன் ஆட்சேபணையா?’
‘நேர்மையைப் பற்றிச் சொன்னீர்கள், உங்கள் மனைவி செய்தால் உங்களை அதிருப்தி கொள்ளச் செய்யும் ஒன்றை நீங்களும் செய்யாமலிருப்பதுதான் நேர்மை என்று சொல்ல வந்தேன்...’
‘நான்தான் நீயும் குடி, என்று சொல்கிறேனே....’
‘வேண்டாம்’ என்று அவள் பிணங்குவது போலப் பாசாங்கு செய்து, சூழ்நிலையின் இறுக்கத்தைத் தளர்த்த முயன்றாள். ‘வேண்டாம்.. இரண்டு பேரும் ஒன்றையே குடித்தால், போராடிக்கும்... நான் வேண்டுமானால் விஸ்கி குடிக்கிறேன்.’
‘ஷ்யூர்!’
‘அல்லது ரம் குடிக்கட்டுமா? ஆரம்பக் குடிகாரர்களுக்கு ஏற்றது?’
‘இரண்டையும் கலந்து குடி.’
பக்கென்று சிரித்தாள் அவள். ‘ஓ.கே... நாளை ஆபிசிலிருந்து வரும்போது நினைவாக வாங்கி வாருங்கள், என்ன? நாளைக்கே தொடங்கப் போகிறேன்...’
அவன் சற்று நேரம் மௌனமாக இருந்தான்... ஏதோ ராகத்தின் நயங்களை அனுபவிப்பவன் போல கண்களை மூடிக்கொண்டு தலையை மெல்ல இங்குமங்குமாக ஆட்டினான். பிறகு சொன்னான்.
‘உன்னுடைய எண்ணக் குதிரையின் ஓட்டம் இருக்கே... அப்பா! வெரி இன்ட்ரஸ்டிங். சிகரெட்டைப் பார்த்தவுடனே உனகு சினிமா வில்லன்தான் நினைக்கு வரான் - அசோகன், சத்ருகன் சின்ஹா. சிகரெட்டின் தொடர்ச்சியாக மது நினைவு வருது, அப்புறம் வுமனைஸிங் என்கிற பிம்பமும் நினைவு வருமோ என்னவோ, யார் கண்டது! இதோ பாரு. சிகரெட் பாபகரமான விஷயம்கிற ரீதியிலே சிந்திச்சி இதை நீ ஏன் ஒரு ஒழுக்கப் பிரச்னையாக்கிற? இது வெறும் ஹெல்த் பிராப்ளம்னு ஏன் புரிஞ்சுக்கமாட்டேங்கிற!’
‘டியர், ஹெல்த் பிராப்ளமோ இல்லையோ, இது ஒரு சேவிங்ஸ் பிராப்ளம்னு நீங்க புரிஞ்சுக்கணும்னுதான் என் ஆசை.’
‘சேவ் பண்ணினா உனக்கு இன்னமும் இரண்டு ஸாரி வாங்கலாம், இல்லையா?’
‘உடனே இப்படிப் பேசுவீங்க. தினம் பொழுது விடிஞ்சா இங்கே நான் ஸாரி வாங்கணும்னு அடம் பிடிக்கிற மாதிரி.’
‘ஓ.கே., ஸாரி... ஐ மீன், மன்னிப்புக் கேட்டுக்கிற ஸாரி...’
இரண்டு பேரும் சிரித்து விட்டார்கள். அந்தச் சிரிப்பின் தொடர்பாக அவன் எழுந்து சுவரில் ஆணியில் தொங்கிய தன் சட்டையின் பையிலிருந்து சிகரெட் ஒன்றை உருவி எடுத்து வாயில் பொருத்திக் கொண்டான். இயந்திரம் போல இவ்வளவும் செய்தவன், சட்டென்று அவள் தன்னை உற்றுப் பார்ப்பதை உணர்ந்தான். வாயில் பொருத்திக் கொண்ட சிகரெட்டை மறுபடி கையிலெடுத்து வைத்துக் கொண்டான்.
‘பரவாயில்லை, பிடியுங்கள்’ என்றாள் அவள்.
ஆனால் அவன் அதை வாயில் வெறுமனே விரலிடுக்கில் செருகிக் கொண்டு மறுபடி கட்டிலில் வந்து உட்கார்ந்தான். ‘நான் கூட இதை விட்டுடணும், குறைச்சுக்கணும், என்றெல்லாம் அடிக்கடி யோசிக்கறதுண்டு... தண்டச் செலவுதான், எனக்குத் தெரியாமல் இல்லை’ என்றான் தனக்குத்தானே பேசிக் கொள்பவன் போல.
அவள் பேசாமல் கேட்டுக் கொண்டிருந்தாள்.
‘ஆனால் இதுதான் என்னுடைய ஒரே லக்சரி, என்னுடைய கனவு பலூன்... இதுவும் கூட இல்லைன்னா வாழ்க்கை ரொம்ப டல்லாப் போயிடும் - அப்படி வாழ்ந்தும் என்ன பிரயோஜனம்?’
‘இது இல்லேன்னா டல்லா ஏன் போகணும், வாழ்க்கை? எனக்குப் புரியலே...’
‘வாழ்க்கையிலே பொதுவாகவே ஒரு அலுப்பூட்டுகிற தன்மை இருக்கு இல்லையா? அதைச் சொல்ல வரேன்... ஒரே மாதிரியான நம்முடைய தினசரி அலுவல்கள், கடமைகள்... இன்றைக்குச் செய்ததையே செய், இந்த ரூட்டிலிருந்து ஒரு எஸ்கேப் தேவையாயிருக்கு’
‘அதுக்கு சிகரெட் உதவுகிறதாக்கும்?’
அவன் ‘ஆமாம்’ என்பது போலத் தலையை ஆட்டினான். தொடர்ந்து பேசினான்.
‘அப்புறம் சில சமயங்களிலே பிரச்னைகள் ரொம்பக் கடுமையான இடுக்கியாலே பிடிக்கிற மாதிரி மென்னிய வந்து பிடிக்கின்றன... ஒரே டென்ஷன்.. அந்த மாதிரி சமயங்களிலே சிகரெட் பிடிச்சால் ஒரு ரிலீஃப் கிடைக்குது...’
‘இதெல்லாம் நீங்களாகவே மனசிலே நினைச்சிக்கிறதுதானே! சிகரெட் பிடிக்கறதினாலே நிலைமைகள் ஏதாவது மாறிடப் போவுதா?’
‘இல்லை... ரொம்ப கரெக்ட். ஆனால் அப்படி அவை மாறிடறாப்லே, என்னை அவை பாதிக்க முடியாது என்பது போல, ஒரு இல்யூஷனை சிகரெட் கொடுக்கிறது... இந்த இல்யூஷன் எனக்கு ரொம்பத் தேவையாயிருக்கு.’
‘சரி, ஆனா ஒண்ணு கேக்கிறேன் பதில் சொல்லுங்க, இப்ப இந்த கணத்திலே உங்களுக்கு என்ன டென்ஷன் அல்லது அலுப்பு? இப்ப எதுக்காக அவசரமா சிகரெட்டை உருவியெடுத்தீங்க? என் பேச்சு உங்களுக்கு அலுப்பாகவும் டென்ஷனாகவும் இருக்குன்னு அர்த்தமா? சொல்லுங்க’
இதைக் கேட்டு அவன் பெரிதாகக் கடகடவென்று சிரித்தான். ‘நல்லா மடக்கிட்டே, போ’ என்றான். பிறகு சற்றே யோசித்துச் சொன்னான்: ‘ரொம்ப மகிழ்ச்சியான தருணங்களிலும், அந்த மகிழ்ச்சியை செலிபிரேட் பண்ண நான் பிடிக்கிறது வழக்கம்.’
அவள் அலட்சியமாக ஒரு நொடிப்பு நொடித்தாள்: ‘போதும் நிறுத்திக்குங்க. உங்க விளக்கங்கள் ஒண்ணாவது நம்புகிறமாதிரி இல்லை.’
இது ஒரு விடுமுறை நாளில் இருவருமே ஆசுவாசமாக உணர்ந்த ஒரு சந்தர்ப்பத்தில் அவர்களிடையே நடந்த சம்பாஷணையின் சாம்பிள். இத்தகைய சந்தர்ப்பங்கள் அபூர்வமாகத்தான் நிகழ்கின்றன. ஆனால் இந்தச் சந்தர்ப்பங்கள் மிக முக்கியமானவை. அவை நெஞ்சில் பதிக்கும் - பிற்பாடு தடவுகையில் இனிய நெருடல்களை ஏற்படுத்தும் - சுவடுகள் மிக முக்கியமானவை. அவர்களிடையேயுள்ள உறவின் அஸ்திவாரத்தைப் பலப்படுத்துவது என அவள் உணரத் தொடங்கியிருந்தாள்.
சில நாள்களில் ஆபீசிலிருந்து திரும்புகையில் ஒரே அலுப்பும் சிடுசிடுப்புமாக இருப்பான். அத்தகைய சந்தர்ப்பங்களில் இப்படியெல்லாம் உரிமையெடுத்துக் கொண்டு அவனிடம் பேச முயன்றால் பலன் விபரீதமாகிவிடும். இது ஒரு ஜல்லிக்கட்டு விளையாட்டுப் போல ஆகி விட்டிருந்தது. சரியான அசைவுகள், ஓசைகள் மூலம் காளையை மெல்ல, மெல்ல வசப்படுத்தி அதன் முதுகில் ஏறி உட்கார வேண்டும். எங்கேயாவது கொஞ்சம் பிசகினால் போச்சு,  காளை மிரண்டு விடும். முட்டித் தள்ளிவிட்டு ஓடிவிடும்.
கடவுள் நம்பிக்கைக்கும் வாழ்க்கையை அவரவர் அணுகும் முறைக்குமிடையே உள்ள தொடர்பு பற்றி அவர்களிடையே நடந்த சர்ச்சையும் சுவையானது.
இந்தச் சர்ச்சையும் ஒரு முறை விடுமுறை நாளன்று, சேவிங்ஸ் பிராப்ளத்தை வித்தாகக் கொண்டுதான் தொடங்கியது. அன்று கந்தர் சஷ்டி. சௌகரியமான விடுமுறை நாளன்று வாய்த்திருந்தது. கோயிலுக்குப் போய் அன்றைய விசேஷ ஏற்பாடுகளையெல்லாம் பார்த்து வர வேண்டுமென்று அவள் பத்து நாள்கள் முன்பே கேட்டுக் கொண்டு அவனும் அதரு இணங்கியிருந்தான். ஆனால் கடைசியில் அன்றைக்குக் கோயிலுக்குப் போக முடியாமல் போயிற்று. காரணம், அங்கே போய்விட்டு வருவதற்கான போக்குவரத்துச் செலவுக்குக் கூட கையில் காசு இல்லை. மாதக் கடைசி! அவன் என்னவோ ரொம்பச் சுலபமான ஒரு மாற்று வழியைச் சிபாரிசு செய்தான். அந்த வழியைக் கடைப்பிடித்திருந்தால், அவர்கள் கோயிலுக்குப் போய் வந்திருக்கலாம். ஆனால் அவள் அந்த வழியை ஏற்கவில்லை. பக்கத்து வீட்டு மாமியிடமவள் பத்து ரூபாய் கடன் வாங்கி வர வேண்டும் என்பதுதான் அவன் சொன்ன யோசனை. எப்படியிருக்கிறது கதை?
அவளுக்கு இருந்த அளவு தெய்வபக்தி அவனுக்கும் உண்டு.  ஆனால் அவளுக்குக் கொஞ்சம் வெவ்வேறு கோயில்களுக்குப் போக வேண்டும்.. உற்சவம், பஜனை ஆகியவற்றில் பங்கு பெற வேண்டும் என்றெல்லாம் ஆசை உண்டு. அவனுக்கு இவ்வித ஆசைகள் கிடையாது. வெறுமனே வீட்டில் காலையும் மாலையும் நெற்றியும் விபூதி இட்டுக்கொண்டு சாமி படத்தின் முன்பு கும்பிடு போடுவதோடு சரி. வெளியே கிளம்புவதற்கு முன் அதை ஞாபகமாக அழித்து விடுவான். ‘இது என்னுடைய பர்சனல் விஷயம். டமாரம் அடிக்க விரும்பவில்லை’ என்பான். அவள் ஏதோ தன்னுடைய நம்பிக்கைகளை டமாரம் அடிக்கிற மாதிரி; அவள் கோயிலுக்குப் போவது அனாவசிய வெளிப்பகட்டு மாதிரி.
எனவே இந்தப் பகட்டுக்கு அவள்தான் பண ஏற்பாடு செய்து கொள்ளவேண்டுமாம் பக்கத்து வீட்டு மாமி மூலம்.  ஹூம். அவளுக்கொன்றும் இத்தகைய இரவல் சுவாமி தரிசனமெல்லாம் வேண்டாம். அவளுடைய விருப்பம் எதனுடனாவது அவனுக்கு உடன்பாடு இல்லாமலிருக்கலாம். இருந்தாலும் அதை கௌரவிப்பதுதானே அன்பின் அடையாளம். இந்த அன்பு இருந்திருந்தால், அவன் நிச்சயம் அன்றைய பணத்துக்காக முன்னேற்பாடுடன் இருந்திருப்பான். இக்கருத்தை அவள் சூசகமாகத் தெரிவித்தவுடன் அவன் வெடித்தான், ‘இதை நீ வீணே ஒரு கௌரவப் பிரச்னையாக்குகிறாய்.’
‘ஒரு திட்டமில்லாமல் வாழ்க்கை நடத்துவதை நான் ஆதரிக்க முடியாது’ என்றாள் அவள். ‘பத்து ரூபாய்தானே, பக்கத்து வீட்டில் வாங்கிக் கொள்ளலாம் என்று நினைக்கிறீர்கள். ஆனால் திடீரென்று நூறு ரூபாயோ அல்லது ஆயிரம் ரூபாயோ கூட நமக்குத் தேவைப்படுகிற  சந்தர்ப்பம் இன்றோ நாளையோ நேரலாம். அதையும் கூட பக்கத்து வீட்டில் வாங்கிக் கொள்வீர்களா என்ன?’
‘நீ வெறுமனே ஆர்க்யூ பண்ணணுமென்பதற்காகவே ஆர்க்யூ பண்ணுகிறாய்.’
‘நான் கேட்டதற்கு பதில் சொல்லுங்கள்.’
’நூறோ ஆயிரமோ தேவைப்பட்டால் அது கிடைப்பதற்கும் கடவுளே ஒரு வழி பண்ணுவார். தேவையை உருவாக்குகிறதும் அவர்தான். தீர்த்து வைக்கிறதும் அவர்தான்.’
இப்படி அவன் கூறினானோ இல்லையோ, உடனே காரசாரமான ஒரு சொற்போர் அவர்களிடையே தொடங்கியது. கடவுள் என்ற கருத்தை அவன் கொச்சைப்படுத்துகிறானென்றும், பொறுப்பின்மை, திட்டமின்மை இதற்கெல்லாம் கடவுள் ஒரு சால்ஜாப்பாகிவிடக்கூடாதென்றும் அவள் கூறினாள். அவள்தான் அவ்வாறு கொச்சைப்படுத்துகிறாளென்றும், கடவுளின் அருளில் முழு நம்பிக்கை கொண்டவர்கள் நாளையச் சோறு பற்றிய கவலை கூட அண்டாத தூய மட்டங்களில் சஞ்சரித்தலே தமக்கும் கடவுளுக்கும் செய்துகொள்ளும் நியாயமென்றும் அவன் கூறினான். அவன் குதர்க்கம் செய்வதாக அவள் சொன்னாள். இல்லை, அவள்தான் குதர்க்கம் செய்கிறாளென்று அவன் சொன்னான்.
இதையடுத்துச் சிறிது நேரம் மௌனம்; அவள் சமையலறை வேலைகளில் ஈடுபட்டாள். அவன் தன் சட்டைகளைத் துவைக்கத் தொடங்கினான். அவன் துவைத்த துணிகளை மொட்டை மாடியில் உலர்த்தத் தொடங்கும்போது, அவளும் அங்கே வந்தாள், அங்கிருந்த அம்மியைப் பயன்படுத்துவதற்கு. உடனே அவன் மறுபடி தொடங்கிவிட்டான்: ‘அன்றைய சாம்பாருக்கு வேண்டியதை நீ அன்றன்றைக்குத்தானே அரைத்துக் கொள்கிறாய்? ஒரு வாரத்துக்கு முன்பே அரைத்து வைத்துக் கொள்வதில்லையே! அதே போல, அன்றன்றுக்கு எழும் பிரச்னைகளை அன்றன்றைக்குத் தீர்த்துக்கொண்டு மகிழ்ச்சியுடன் இருக்கலாமே என்றுதான் நான் சொல்கிறேன்.’
இதைக் கேட்டு அவள் சட்டென்று அரைப்பதை நிறுத்தினாள். முகத்தில் ஒரு விஷமத்தனமான புன்னகை. ‘ஒன்று சொல்கிறேன் கோபித்துக் கொள்ள மாட்டீர்களே?’ என்றாள்.
ஒரு வாரத்துக்கு அரைத்து வைத்துக் கொள்வது சாத்தியந்தான். ஆனால் அதற்கு வீட்டில் ஃப்ரிஜ் இருக்க வேண்டும். மறுபடி சேமிக்கிற விருப்பத்தையும் திறனையும் பொறுத்த விஷயம்.’
அவன் பேசாமலிருந்தான்.
‘இன்னொன்று சொல்கிறேன். அன்றன்றைய வாழ்வு என்று தத்துவம் பேசுகிறவர்கள் மாதச் சம்பளத்துக்கு ஒரு வேலை ஒப்புக்கொண்டிருக்கக்கூடாது. கல்யாணம் செய்துகொண்டு இருக்கக்கூடாது. ஒரு சிலவற்றில் தொலைதூர நோக்கும் நிரந்தர ஏற்பாடுகளும் வேண்டும். வேறு சிலவற்றில் அந்த நோக்கு வேண்டாம் என்பது முரண்பாடாக இருக்கிறது.’
பலமாகவே பதிலடி அடித்துவிட்டாள். ஆனால் அவன் சிறிதும் நிதானமிழக்கவில்லை. இழந்தால் அது அவளுக்கு வெற்றியாகிவிடுமே! அமைதியாகச் சொன்னான். ‘என்னில் முரண்பாடு இல்லையென்று நான் எப்போது சொன்னேன்? நான் தேவபுருஷனல்ல, ஒரு சராசரி மனிதன், என்னில் சில முரண்பாடுகளுக்கும் குறைகளுக்கும் அனுமதி தா, என்றுதான் நான் சதா வேண்டுகிறேன்.’
‘அப்படியானால் எனக்கும் உங்கள் முரண்பாடுகளை ஏற்காமல் முரண்பட அனுமதி தாருங்கள்.’
ஒருவேளை ஏதோ ஒரு விஷயத்தை வைத்து - அது எந்த விஷயமானாலும் சரி வாக்கு வாதம் செய்வதில் அவர்களுக்கு ஓர் இன்பம் ஏற்படத் தொடங்கியிருந்ததோ?
அப்படியும் இருக்கலாம்.
அவன் ஒரு எஸ்கேப்பிஸ்ட் என்று அவள் அலுத்துக்கொள்வாள். ஒரு சாதாரண மத்தியதரக் குடும்பத்தைச் சேர்ந்தவன் அவன், என்ற உண்மையை அவன் சந்திக்கத் தயாரில்லை, அதுதான் பிரச்னை உண்மையில், சிகரெட்டை ஊதித்தள்ளி, ஏதோ அரச குமாரனாகத் தன்னை எண்ணிக் கொண்டு.....
ஆமாம், நான் ஓர் எஸ்கேப்பிஸ்ட்தான், என்பான் அவன். ரசனையற்ற மூடர்கள்தான் உண்மையை ஒவ்வொரு கணமும் நினைவுபடுத்திக் கொண்டவாறிருப்பார்கள். கற்பனை மூலமும் கனவுகள் மூலமும் வாழ்க்கையை ரம்மியப்படுத்திக் கொண்டு வாழ்தலே அவனுக்குப் பிரியமான....
பொறுப்பில்லாதவன். எவ்வித வருங்காலத் திட்டமும் இல்லாதவன், என்று அவள் அவனைச் சாடுவாள். நிகழ்காலத்தை அனுபவிக்கத் தெரியாதவள் என்று அவன் அவளைக் கிண்டல் செய்வான்.
அவள் வேண்டும் என்றால் அவன் வேண்டாம் என்பான். அவள் வேண்டாம் என்றால் அவன் வேண்டும் என்பான்.
ஆனால் திடீரென்று ஒரு நாள் அவளுடைய வேண்டாம் அவனுடைய வேண்டாமாகவும் ஆகியது. திடீரென்று அவன் சிகரெட் பிடிப்பதை நிறுத்தி விட்டான். காரணம், அவர்களிடையே நடந்த எந்த வாக்குவாதமும் இல்லை, அவள் அவனிடம் சொன்ன ஒரு செய்தி: ‘நான் உண்டாகியிருக்கிறேன்.’
அவளுடைய இந்த அறிவிப்பு கிடைத்த இரண்டு நாள்களுக்குப் பிறகு, தான் சிகரெட் பிடிப்பதை நிறுத்தி விட்டதாக அவன் அறிவித்தான். ‘உனக்காக இல்லை, குழந்தைக்காக’ என்றான். ‘சிகரெட் நாற்றம் அதற்கு ஒத்துக் கொள்ளாது...’ மேலும், பெரிய பணக்கார வீட்டுக் குழந்தை போல் மிக சொகுசாக அதை வளர்க்க வேண்டும். எவ்விதமான குறையும் அதற்கு இருக்கக் கூடாது; அதற்குப் பணம் சேர்க்கத் தொடங்க வேண்டாமா?’
அவளுக்கு, தனக்குக் கிடைத்தது வெற்றியா அல்லது தோல்வியா என்று புரியவில்லை. குழந்தையின் பாலுள்ள கரிசனமும் அக்கறையும் அவனுக்குத் தன்னிடம் ஏனோ இல்லை.  குழந்தை அவனுடையதென்றால் தானும் தானே அவனுடையவள்? தான் காண்பித்த உடைமையுணர்வினால் அவனுடைய (அவள் பாற்பட்ட) உடைமையுணர்வு பிணங்கிக் கொண்டதா?
‘மேலும்....’ என்று அவன் தொடர்ந்தான். ‘மேலும் அப்பா ஏதோ தப்புக் காரியம் பண்ணுகிறார் என்ற உணர்வு குழந்தைக்கு ஏற்பட வேண்டாம்... குழந்தையின் அப்பா பற்றிய ஓர் லட்சிய உருவம் உன்னுடையதிலிருந்து வேறுபட்டதாக இருக்க வேண்டாம்... அப்பாவை பற்றி அது பெருமையாக சொல்லிக் கொள்ள வேண்டும். நீ உன் அப்பாவைப் பற்றிச் சொல்லிக் கொள்வது போலவே.’
இந்த சம்பாஷணை நடந்தது விடுமுறை இல்லாத ஒரு தினத்தன்று காலையில், அவன் ஆபிசுக்குக் கிளம்பிக்கொண்டிருந்தபோது. சொல்லி விட்டு அவன் ஆபிஸ் போய் விட்டான். அன்று பகலெல்லாம் அந்தச் சொற்கள், அதில் பொதிந்திருந்த அர்த்தங்கள் - அவள் மனத்தில் ரீங்காரமிட்டபடி இருந்தன. அவள் தன் அப்பாவின் மேல் வைத்திருக்கும் மதிப்பை அவன் மீது... வைகக்வில்லையென்று அவன் சொல்ல விரும்புகிறானோ? இந்த மனப்பாங்கு குழந்தைக்கும் தொற்றிக் கொள்ளும் என்று பயப்படுகிறானோ? கடவுளே, இதென்ன வீண் தப்பபிப்பிராயங்களும் குழப்பங்களும்....
அன்றிரவு அவள் அவனிடம் சொன்னாள்: ‘இதோ பாருங்கள், உங்களை நான் மிகவும் மதிக்கிறேன்.கௌரவிக்கிறேன்... உங்கள் பழக்கங்களைப் பற்றி நான் பேசியதெல்லாம் ஒரு அன்பினால்தான். நீங்கள் இப்படித் தவறாகப் புரிந்து கொள்வதாக இருந்தால்.... நல்லது, உங்களுடைய எந்தப் பழக்கத்தைப் பற்றியும் நான் இனி எதுவும் சொல்லவில்லை. சிகரெட் பிடிப்பது உள்பட.’
அவன் பூடகமாக ஒரு புன்னகை புரிந்தான். ஆனால் அதன் பிறகு அவன் சிகரெட் குடிக்கவே இல்லை. அவளும் இத்தகைய விஷயங்களைப் பற்றிக் குறிப்பிடுவதையே கவனமாகத் தவிர்க்கத் தொடங்கினாள்.
அவர்களுடைய சிந்தனை, எதிர்பார்ப்பு எல்லாம் இப்போது குழந்தையை பற்றியதாகத்தான் இருந்தது.
இருவரும் தத்தம் சுய மதிப்புக்குச் சிறிதும் குந்தகம் விளைவிக்காமலேயே தம் தனித்தனியான அன்பின் வடிகாலாகவும் பரவசமூட்டும் ஒரு விளையாட்டுப் பொருளாக இருக்கப் போவதாகவும் வரப்போகும் குழந்தையை உருவகம் செய்து கொண்டு அதன் வரவுக்காக ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.
புகையில்லாத ஒரு நெருப்புக்காக அவர்கள் காத்திருப்பது போலத் தோன்றுகிறது.

வாழைப்பழம்:

நம்மில் பலர் விலையுயர்ந்த கனிவர்க்கங்களைப் பார்க்கும் விதத்தில், விலைகுறைந்த கனிவர்க்கங்களைப் பார்ப்பதில்லை. ஆனால் விலை குறைந்த பழவகைகளிலும் எல்லா சத்துக்களும் நிறைந்து கிடைக்கின்றன. அவ்வகையில் இந்த உலகத்தில் எல்லா பாகங்களிலும், எல்லா நேரங்களிலும் கிடைக்கும் ஒரே கனிவகை வாழைப்பழம் மட்டும்தான்.

வாழைப்பழம் மனிதனின் மூளைக்கு தேவையான எல்லாப் புரதச் சத்துக்களையும் கொண்டுள்ளது.வாழைப்பழம் மூன்று இயற்கையான இனிப்பு வகைகளைக் (Natural Sugar) கொண்டுள்ளது. அதாவது சக்ரோஸ் (Sucrose), பிரக்டோஸ் (Fructose) மற்றும் குளுகோஸ் (Glucose) உடன் சேர்ந்து நம் குடலுக்குத் தேவையான ஃபைபரையும் (Fiber) கொண்டுள்ளது. இரண்டு வாழைப்பழம் சாப்பிட்ட 11/2 மணி நேரத்தில் உடலுக்குத் தேவையான, உடனடியான, உறுதியான, கணிசமான, ஊக்கமுள்ள ஊட்டச்சத்தை கொடுப்பதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.

வாழைப்பழம் ஒரு மனிதனுக்கு கிடைக்ககூடிய ஊட்டச்சத்து மட்டுமல்ல பல நோய்கள் வராமல் தடுக்கக்கூடிய நோய்தடுப்பு நாசினியும் கூட. இதை நாம் உடலில் தினமும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

மூளை வலிமை (Brain Power):
மிடில் செக்ஸ் (Middle Sex)ல் உள்ள டிவிக்கென்ஹாம் (Twickenham) கல்வி நிலையத்தில் இவ்வருடம் 200 மாணவர்களுக்கு காலை, இடைவெளி மற்றும் மதிய உணவில் வாழைப்பழத்தை உணவுடன் சேர்த்து கொடுத்து சோதனை செய்து பார்த்தபோது அவர்களது மூளைத்திறன் அதிகரித்ததோடு, பொட்டாசியம் நிறைந்த இந்த உணவு அதிகமான கல்வித்திறனை அளிப்பதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.

மலச்சிக்கல் (Constipation):
ஒரு மனிதனுக்கு மலச்சிக்கல் வந்துவிட்டால் அவனது மனித குணமே மாறிவிடும். அதற்கு ஒரே வழி உங்கள் உணவில் தினமும் வாழைப்பழத்தைச் சேர்த்து சாப்பிடுங்கள். வாழைப்பழத்தில் அதிகமான பைபர் (Fiber) இருப்பதால் உங்கள் குடலை சுத்தமாக்கி மலம் இலகுவாக வெளியாவதற்கு வழிசெய்வதோடு மனத்தளர்ச்சியை சுத்தமாக போக்கிவிடுகிறது.

மந்தம் (Hangovers):
நம்மில் சிலர் சிறிது தூங்கிவிட்டு எழும்பிவிட்டால் கூட மந்தமாக இருப்பதாக அலுத்துக் கொள்வார்கள். உங்களுக்கு இதோ வாழைப்பழ மருந்து தயாராகவுள்ளது. வாழைப்பழத்துடன் தேனையும், பாலையும் சேர்த்து ஒரு குவளை மில்க் ஷேக் (Milk Shake) தயார் செய்து குடிக்கவும்.வாழைப்பழம் தேனுடன் சேர்த்து வயிற்றை அமைதிப்படுத்தி இரத்தத்திலுள்ள இனிப்புச் சத்தை அதிகமாக்குகிறது. அத்துடன் இதில் பாலும் சேர்ப்பதால் பால், நீர் சத்தை சரியாக வைத்துக்கொள்கிறது. இந்த மூன்றும் சேர்ந்து மந்த நிலைக்கு டாட்டா காட்டிவிடுகிறது.

நெஞ்செரிப்பு (Heart Burn):
உங்களுக்கு நெஞ்செரிகிறதா? வாழைப்பழத்திற்கு இயற்கையாக அமில எதிர்ப்பு சக்தி இருப்பதால் வாழைப்பழத்தை தொடர்ந்து தினமும் சாப்பிட்டு வர நெஞ்செரிப்பு நோய் உங்களை விட்டு பறந்துவிடும்.

உடற்பருமன் (Over Weight):
ஆஸ்திரியா (Austria)வில் உள்ள மனோதத்துவ நிறுவனத்திலுள்ள (Institute of Psychology) ஆராய்ச்சியாளர்கள் 5000 நோயாளிகளை சோதனை செய்து பார்த்ததில் அதிகமான உயர்ந்த மனஅழுத்த வேலைகளில் உள்ளவர்கள் தான் இதனால் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள். இந்த அழுத்தத்தின் காரணத்தால் அவர்களது இரத்தத்தில் உள்ள குளுகோஸ் அளவு சீராக இல்லாத காரணத்தால் உடற்பருமன் ஏற்படுகிறது. அவர்களுக்கும் வாழைப்பழத்தை தினமும் உணவில் சேர்த்து அவர்களது இரத்தத்தில் உள்ள குளுகோஸ் அளவை ஒரு ஸ்திரத்தன்மைக்கு கொண்டு வந்து உடற்பருமன் குறைவதாக அந்த ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.

குடற்புண் (Ulcers):
வாழைப்பழத்தை தினமும் சாப்பிட்டால் குடலின் உட்பகுதி மென்மையாகி அதிகமான அமிலத்தன்மை ஏற்படுத்தாததினால் குடற்புண்ணை அழிப்பதுடன் குடற்புண் வராமல் காக்கிறது.

சீரான வெப்பநிலை (Temperature Control):
வாழைப்பழத்திற்கு குளிர்ந்த பழம் (Cooling Fruit) என்ற பெயரும் உண்டு. தாய்லாந்து நாட்டு மக்கள் அதிகமாக வாழைப்பழத்தை சாப்பிடுவதால் அவர்களது உடலின் தட்பவெப்ப நிலை சீராக உள்ளது.

காலநிலை மாற்றம் (Seasonal Affective Disorder):
வாழைப்பழம் சாப்பிடுவதால் காலநிலை மாற்றத்தால் ஏற்படக்கூடிய ஒரு வித மந்த நிலையை இல்லாமல் ஆக்குகிறது.

புகைப்பிடிப்பது (Smoking):

புகைப்பிடிப்பவர்கள் அந்த கொடுமையிலிருந்து விடிவு பெற வாழைப்பழத்தை சாப்பிடலாம். வாழைப்பழத்தில் B6. B12 அதிகமாக இருப்பதால் புகைப்பிடிப்பதால் ஏற்படும் Nicotine ஐ கொஞ்சம் கொஞ்சமாக குறைப்பதால் புகைப்பிடிப்பதிலிருந்து விடுபடலாம்.

மன அழுத்தம் (Stress):
வாழைப்பழத்தில் பொட்டாசியம் அதிகம் இருப்பதால் அவை இதயத்துடிப்பை கட்டுக் கோப்புக்குள் வைத்துக் கொள்வதுடன் ஆக்ஸிஜைனை மூளைக்குச் செலுத்தி உடலின் தண்ணீரின் அளவை சமப்படுத்துகிறது. இதனால் மன அழுத்த நோய் நீங்கும்.

காலைத் தூக்கம் (Morning Sickness):
மூன்று நேர உணவு இடைவேளைக்குள்ளும் வாழைப்பழத்தை சாப்பிட்டால் உடம்பிலுள்ள இரத்தத்தில் உள்ள குளுகோஸ் (Blood Sugar) அளவு அதிகமாக்கப்பட்டு காலைத் தூக்க நோயிலிருந்து விடுபடலாம்.

நரம்பு நாளங்கள் (Nerve System):
இதில் B விட்டமீன்கள் அதிகமாக இருப்பதால் நரம்பு நாளங்கள் நன்றாக செயல்பட்டு நரம்புத் தளர்வை போக்குகிறது.

அழுத்தக் குறைவு (Depression):
‘Mind’ என்ற நிறுவனம் நடத்திய ஆராய்ச்சியின் முடிவாக ஒவ்வொரு உணவிற்குப் பின்பும் வாழைப்பழம் சாப்பிட்டால் அழுத்தக் குறைவு நோயை விரட்டலாம் என்று கூறுகிறது. ஏனெனில் மூளையிலிருந்து கசியக் கூடிய நீரை திட்டப்படி வெளியேற்றி மனிதனை மகிழ்ச்சியாக்குகிறது.

இரத்த சோகை (Anemia):
வாழைப்பழத்தில் அதிக அளவு இரும்புச் சத்து இருப்பதால் அதிக அளவு சிவப்பணுக்களை உண்டு பண்ணி இரத்தச் சோகை வராமல் தடுக்கிறது.

இரத்த அழுத்தம் (Blood Pressure):
குறைந்த அளவு உப்பும் அதிக அளவு பொட்டாசியமும் இருப்பதால் அதிக இரத்த அழுத்தத்தையும், வாதநோயையும் குறைக்க முடிமென்று அமெரிக்க அரசு உணவு நிறுவனம் கூறுவதோடு அதிக வாழை மரங்களை சாகுபடி செய்யவும் உத்தரவிட்டுள்ளது.

The new England Journal of Medicines ஆராய்ச்சிப்படி நமது தினசரி உணவில் வாழைப்பழத்தையும் சேர்த்துக் கொண்டால் Stroke கினால் ஏற்படக்கூடிய மரணத்தின் விகிதத்தை 40% குறைக்கலாம் என்கிறது. இவ்வளவு நன்மைகளை சுமந்து நிற்கும் வாழைப்பழத்தை பாதுகாக்கும். அந்த மஞ்சள் நிறத்தைக் கொண்டதால் தன்னால் இயன்ற உதவியை மனிதனுக்கு செய்ய மறக்கவில்லை. ”மறு” என்று சொல்லக்கூடிய கருப்பு வடு உடம்பில் ஏற்பட்டால் வாழைப்பழத் தோலை சிறு துண்டாக வெட்டி உள் தோல் அந்த வடுவின் மேலும் மஞ்சள் தோல் வெளியில் தெரியும் படி வைத்து அதன் மீது சிறிது மருத்துவ டேப் ஒட்டி வைத்தால் நாள்பட அந்த மறு மறைந்துவிடும்.

கொசுக்கடிக்கு மருந்து தேவையா?
வாழைப்பழத்தோலின் உட்பகுதியை கொசுக் கடித்த இடத்தில் வைத்து அழுத்தி தேய்த்தால் கொசுக் கடியால் ஏற்பட்ட வேதனையும் தீரும். வீக்கமும் வற்றிவிடும்.

வாழைப்பழத்தைச் சாப்பிட்டு விட்டு அதன் தோலை குப்பைத் தொட்டியில் எறிவதற்கு முன் அதன் உள்தோலைக் கொண்டு உங்கள் காலணி (Shoe) யை பாலிஷ் செய்து வெள்ளைத் துணியால் துடைத்துப் பாருங்கள். உங்கள் Shoe மினு மினுக்கும்.

வாழைப்பழத்தை சாப்பிட்டு விட்டு அதன் தோலை தெருவிலே எறிந்து விடுவதால் அத்தோலின் மெல் கால் வைத்து வழுக்கி மரணம் வரை சென்றவர்கள் உண்டு. அவ்வாறு தூக்கி எறிவதை நாமும் தவிர்த்து மற்றவர்களையும் தடுக்க வேண்டும். வாழைப் பழத் தோலை மனிதர்கள் நடக்குமிடத்தில் கண்டால் அதை எடுத்து குப்பை தொட்டியில் போட்டு அதன் மூலம் நன்மையை தேடிக் கொள்ள முன் வரவேண்டும்.
Photo: வாழைப்பழம்:

நம்மில் பலர் விலையுயர்ந்த கனிவர்க்கங்களைப் பார்க்கும் விதத்தில், விலைகுறைந்த கனிவர்க்கங்களைப் பார்ப்பதில்லை. ஆனால் விலை குறைந்த பழவகைகளிலும் எல்லா சத்துக்களும் நிறைந்து கிடைக்கின்றன. அவ்வகையில் இந்த உலகத்தில் எல்லா பாகங்களிலும், எல்லா நேரங்களிலும் கிடைக்கும் ஒரே கனிவகை வாழைப்பழம் மட்டும்தான். 

வாழைப்பழம் மனிதனின் மூளைக்கு தேவையான எல்லாப் புரதச் சத்துக்களையும் கொண்டுள்ளது.வாழைப்பழம் மூன்று இயற்கையான இனிப்பு வகைகளைக் (Natural Sugar) கொண்டுள்ளது. அதாவது சக்ரோஸ் (Sucrose), பிரக்டோஸ் (Fructose) மற்றும் குளுகோஸ் (Glucose) உடன் சேர்ந்து நம் குடலுக்குத் தேவையான ஃபைபரையும் (Fiber) கொண்டுள்ளது. இரண்டு வாழைப்பழம் சாப்பிட்ட 11/2 மணி நேரத்தில் உடலுக்குத் தேவையான, உடனடியான, உறுதியான, கணிசமான, ஊக்கமுள்ள ஊட்டச்சத்தை கொடுப்பதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.

வாழைப்பழம் ஒரு மனிதனுக்கு கிடைக்ககூடிய ஊட்டச்சத்து மட்டுமல்ல பல நோய்கள் வராமல் தடுக்கக்கூடிய நோய்தடுப்பு நாசினியும் கூட. இதை நாம் உடலில் தினமும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

மூளை வலிமை (Brain Power):
மிடில் செக்ஸ் (Middle Sex)ல் உள்ள டிவிக்கென்ஹாம் (Twickenham) கல்வி நிலையத்தில் இவ்வருடம் 200 மாணவர்களுக்கு காலை, இடைவெளி மற்றும் மதிய உணவில் வாழைப்பழத்தை உணவுடன் சேர்த்து கொடுத்து சோதனை செய்து பார்த்தபோது அவர்களது மூளைத்திறன் அதிகரித்ததோடு, பொட்டாசியம் நிறைந்த இந்த உணவு அதிகமான கல்வித்திறனை அளிப்பதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.

மலச்சிக்கல் (Constipation): 
ஒரு மனிதனுக்கு மலச்சிக்கல் வந்துவிட்டால் அவனது மனித குணமே மாறிவிடும். அதற்கு ஒரே வழி உங்கள் உணவில் தினமும் வாழைப்பழத்தைச் சேர்த்து சாப்பிடுங்கள். வாழைப்பழத்தில் அதிகமான பைபர் (Fiber) இருப்பதால் உங்கள் குடலை சுத்தமாக்கி மலம் இலகுவாக வெளியாவதற்கு வழிசெய்வதோடு மனத்தளர்ச்சியை சுத்தமாக போக்கிவிடுகிறது.

மந்தம் (Hangovers):
நம்மில் சிலர் சிறிது தூங்கிவிட்டு எழும்பிவிட்டால் கூட மந்தமாக இருப்பதாக அலுத்துக் கொள்வார்கள். உங்களுக்கு இதோ வாழைப்பழ மருந்து தயாராகவுள்ளது. வாழைப்பழத்துடன் தேனையும், பாலையும் சேர்த்து ஒரு குவளை மில்க் ஷேக் (Milk Shake) தயார் செய்து குடிக்கவும்.வாழைப்பழம் தேனுடன் சேர்த்து வயிற்றை அமைதிப்படுத்தி இரத்தத்திலுள்ள இனிப்புச் சத்தை அதிகமாக்குகிறது. அத்துடன் இதில் பாலும் சேர்ப்பதால் பால், நீர் சத்தை சரியாக வைத்துக்கொள்கிறது. இந்த மூன்றும் சேர்ந்து மந்த நிலைக்கு டாட்டா காட்டிவிடுகிறது.

நெஞ்செரிப்பு (Heart Burn):
உங்களுக்கு நெஞ்செரிகிறதா? வாழைப்பழத்திற்கு இயற்கையாக அமில எதிர்ப்பு சக்தி இருப்பதால் வாழைப்பழத்தை தொடர்ந்து தினமும் சாப்பிட்டு வர நெஞ்செரிப்பு நோய் உங்களை விட்டு பறந்துவிடும்.

உடற்பருமன் (Over Weight):
ஆஸ்திரியா (Austria)வில் உள்ள மனோதத்துவ நிறுவனத்திலுள்ள (Institute of Psychology) ஆராய்ச்சியாளர்கள் 5000 நோயாளிகளை சோதனை செய்து பார்த்ததில் அதிகமான உயர்ந்த மனஅழுத்த வேலைகளில் உள்ளவர்கள் தான் இதனால் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள். இந்த அழுத்தத்தின் காரணத்தால் அவர்களது இரத்தத்தில் உள்ள குளுகோஸ் அளவு சீராக இல்லாத காரணத்தால் உடற்பருமன் ஏற்படுகிறது. அவர்களுக்கும் வாழைப்பழத்தை தினமும் உணவில் சேர்த்து அவர்களது இரத்தத்தில் உள்ள குளுகோஸ் அளவை ஒரு ஸ்திரத்தன்மைக்கு கொண்டு வந்து உடற்பருமன் குறைவதாக அந்த ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.

குடற்புண் (Ulcers):
வாழைப்பழத்தை தினமும் சாப்பிட்டால் குடலின் உட்பகுதி மென்மையாகி அதிகமான அமிலத்தன்மை ஏற்படுத்தாததினால் குடற்புண்ணை அழிப்பதுடன் குடற்புண் வராமல் காக்கிறது.

சீரான வெப்பநிலை (Temperature Control):
வாழைப்பழத்திற்கு குளிர்ந்த பழம் (Cooling Fruit) என்ற பெயரும் உண்டு. தாய்லாந்து நாட்டு மக்கள் அதிகமாக வாழைப்பழத்தை சாப்பிடுவதால் அவர்களது உடலின் தட்பவெப்ப நிலை சீராக உள்ளது.

காலநிலை மாற்றம் (Seasonal Affective Disorder):
வாழைப்பழம் சாப்பிடுவதால் காலநிலை மாற்றத்தால் ஏற்படக்கூடிய ஒரு வித மந்த நிலையை இல்லாமல் ஆக்குகிறது.

புகைப்பிடிப்பது (Smoking):

புகைப்பிடிப்பவர்கள் அந்த கொடுமையிலிருந்து விடிவு பெற வாழைப்பழத்தை சாப்பிடலாம். வாழைப்பழத்தில் B6. B12 அதிகமாக இருப்பதால் புகைப்பிடிப்பதால் ஏற்படும் Nicotine ஐ கொஞ்சம் கொஞ்சமாக குறைப்பதால் புகைப்பிடிப்பதிலிருந்து விடுபடலாம்.

மன அழுத்தம் (Stress):
வாழைப்பழத்தில் பொட்டாசியம் அதிகம் இருப்பதால் அவை இதயத்துடிப்பை கட்டுக் கோப்புக்குள் வைத்துக் கொள்வதுடன் ஆக்ஸிஜைனை மூளைக்குச் செலுத்தி உடலின் தண்ணீரின் அளவை சமப்படுத்துகிறது. இதனால் மன அழுத்த நோய் நீங்கும்.

காலைத் தூக்கம் (Morning Sickness):
மூன்று நேர உணவு இடைவேளைக்குள்ளும் வாழைப்பழத்தை சாப்பிட்டால் உடம்பிலுள்ள இரத்தத்தில் உள்ள குளுகோஸ் (Blood Sugar) அளவு அதிகமாக்கப்பட்டு காலைத் தூக்க நோயிலிருந்து விடுபடலாம்.

நரம்பு நாளங்கள் (Nerve System):
இதில் B விட்டமீன்கள் அதிகமாக இருப்பதால் நரம்பு நாளங்கள் நன்றாக செயல்பட்டு நரம்புத் தளர்வை போக்குகிறது.

அழுத்தக் குறைவு (Depression):
‘Mind’ என்ற நிறுவனம் நடத்திய ஆராய்ச்சியின் முடிவாக ஒவ்வொரு உணவிற்குப் பின்பும் வாழைப்பழம் சாப்பிட்டால் அழுத்தக் குறைவு நோயை விரட்டலாம் என்று கூறுகிறது. ஏனெனில் மூளையிலிருந்து கசியக் கூடிய நீரை திட்டப்படி வெளியேற்றி மனிதனை மகிழ்ச்சியாக்குகிறது.

இரத்த சோகை (Anemia):
வாழைப்பழத்தில் அதிக அளவு இரும்புச் சத்து இருப்பதால் அதிக அளவு சிவப்பணுக்களை உண்டு பண்ணி இரத்தச் சோகை வராமல் தடுக்கிறது.

இரத்த அழுத்தம் (Blood Pressure):
குறைந்த அளவு உப்பும் அதிக அளவு பொட்டாசியமும் இருப்பதால் அதிக இரத்த அழுத்தத்தையும், வாதநோயையும் குறைக்க முடிமென்று அமெரிக்க அரசு உணவு நிறுவனம் கூறுவதோடு அதிக வாழை மரங்களை சாகுபடி செய்யவும் உத்தரவிட்டுள்ளது.

The new England Journal of Medicines ஆராய்ச்சிப்படி நமது தினசரி உணவில் வாழைப்பழத்தையும் சேர்த்துக் கொண்டால் Stroke கினால் ஏற்படக்கூடிய மரணத்தின் விகிதத்தை 40% குறைக்கலாம் என்கிறது. இவ்வளவு நன்மைகளை சுமந்து நிற்கும் வாழைப்பழத்தை பாதுகாக்கும். அந்த மஞ்சள் நிறத்தைக் கொண்டதால் தன்னால் இயன்ற உதவியை மனிதனுக்கு செய்ய மறக்கவில்லை. ”மறு” என்று சொல்லக்கூடிய கருப்பு வடு உடம்பில் ஏற்பட்டால் வாழைப்பழத் தோலை சிறு துண்டாக வெட்டி உள் தோல் அந்த வடுவின் மேலும் மஞ்சள் தோல் வெளியில் தெரியும் படி வைத்து அதன் மீது சிறிது மருத்துவ டேப் ஒட்டி வைத்தால் நாள்பட அந்த மறு மறைந்துவிடும்.

கொசுக்கடிக்கு மருந்து தேவையா?
வாழைப்பழத்தோலின் உட்பகுதியை கொசுக் கடித்த இடத்தில் வைத்து அழுத்தி தேய்த்தால் கொசுக் கடியால் ஏற்பட்ட வேதனையும் தீரும். வீக்கமும் வற்றிவிடும்.

வாழைப்பழத்தைச் சாப்பிட்டு விட்டு அதன் தோலை குப்பைத் தொட்டியில் எறிவதற்கு முன் அதன் உள்தோலைக் கொண்டு உங்கள் காலணி (Shoe) யை பாலிஷ் செய்து வெள்ளைத் துணியால் துடைத்துப் பாருங்கள். உங்கள் Shoe மினு மினுக்கும்.

வாழைப்பழத்தை சாப்பிட்டு விட்டு அதன் தோலை தெருவிலே எறிந்து விடுவதால் அத்தோலின் மெல் கால் வைத்து வழுக்கி மரணம் வரை சென்றவர்கள் உண்டு. அவ்வாறு தூக்கி எறிவதை நாமும் தவிர்த்து மற்றவர்களையும் தடுக்க வேண்டும். வாழைப் பழத் தோலை மனிதர்கள் நடக்குமிடத்தில் கண்டால் அதை எடுத்து குப்பை தொட்டியில் போட்டு அதன் மூலம் நன்மையை தேடிக் கொள்ள முன் வரவேண்டும்.

கர்லூ பறவைகள்-கேப்ரியல் கார்சியா மார்க்வெஸ்

த‌மி‌ழி‌ல் : கால சு‌ப்‌பிரம‌ணிய‌ம்
நாங்கள் மூவரும், மேஜையைச் சுற்றி உட்கார்ந்திருந்தோம், நாணயத்தை யாரோ துளைக்குள் போட வுல்லிட்ஸர் மீண்டும் இசைத்தட்டினை - இரவு முழுதும் பாடிக் கொண்டிருந்த அதே இசைத்தட்டினை - மறுபடியும் இசைத்தது. பின்பு எங்களுக்கு யோசித்துப் பார்க்கக் கூட நேரம்  வைக்காமல், அதிவேகமாக நிகழ்ந்துவிட்டது அந்த பின் நிகழ்வு. எங்கிருக்கிறோம் என்று நினைத்துப் பார்க்குமுன் - இருக்குமிடத்தின் ஞாபகத்தை நாங்கள் திரும்ப நினைவுக்குக் கொண்டு வருமுன் - அது நிகழ்ந்தது.
எங்களில் ஒருத்தன், தன் கரத்தைக் கெளண்டருக்கு மேல் நீட்டி (அந்தக் கையைப் பார்க்கவில்லை - கேட்டோம்) இருட்டில் தடவினான். ஒரு தம்ளரை அது தள்ளிவிடவே, இருகரங்களையும்ட கரடு முரடான தரை‌யில் ஊன்றிக் கொண்டு இருட்டில் துளாவினான்.marquez_gabriel
பின்பு மூவரும் இருட்டுக்குள் எங்களை நாங்கள் பார்த்துக் கொள்ள முயன்றோம். முப்பது விரல்கள் இணைந்ததை வைத்து நாங்கள் அங்கிருப்பதை உணர்ந்து கொண்டோம். கல்லாவின் கெளண்டரைப் பற்றிப் பிடித்துக் கொண்டோம். நாம் கிளம்பலாம் என்று எங்களில் ஒருத்தன் சொன்னான். பின்பு எதுவும் நிகழாதது போல், எழுந்து நின்றோம். நாங்கள் திகைப்படைவதற்குக் கூட இன்னும் நேரம் கிடைக்கவில்லை.
முற்றம் வழியாகச் சென்றபோது, அருகிலிருந்து இசை சுழன்று வந்து எங்களை அடைவதைக் கேட்டோம். சோகித்த பெண்கள், உட்கார்ந்தபடியே காத்துக் கொண்டிருக்கும் வாசனையைப் பிடித்தோம். கதவை நாங்கள் அடைவதற்குள அந்த ஹாலின் நீண்ட வெறுமையினை உணர்ந்தோம். வேறு வாசனைகள் எங்களைச் சூழ்ந்து கொள்ளுமுன், கதவுக்கருகில் அமர்ந்திருந்த ஒரு பெண்ணின் புளித்த மணத்தை நோக்கிச் சொன்னோம், போய் வருகிறோம்.
அந்தப் பெண் எந்தப் பதிலும் கூறவில்லை. அவள் எழுந்து நின்றதால், ஆடும் நாற்காலி கிரீச்சிட்டது. தளர்ந்த பலகைத் தரையில், காலடிகளை உதைந்துச் சென்றதையும் திரும்பி வந்து அப்பெண் உட்கார்ந்ததையும் அப்போது திரும்பவும் ஒரு முறை கீல்கள் கிரீச்சிட்டதையும் பின்பு எங்களுக்குப் பின் கதவு மூடிக் கொண்டதையும் கேட்டோம்.
நாங்கள் சுற்றிச் சுற்றி நடந்தோம். நேர் எதிரே - பார்க்க முடியாத ஓர் கடும் விடியலின் மென்காற்று;அதை வெட்டுவது போல எங்களுக்கு பின் ஒரு குரல் இதைச் சொன்து, வழி விடுங்கள் உள்ளே போக வேண்டும்.
நாங்கள் பின்னுக்கு நகர்ந்தோம். அந்தக் குரல் மீண்டும் சொன்னது. நீங்கள் இன்னும் கதவுக்கு எதிரில்தான் இருக்கிறீர்கள்.
அதன்பிறகு எல்லாப் பக்கமு‌ம் நகர்ந்து பார்த்துவிட்டு, அந்தக் குரலை எல்லா இடத்திலும் கேட்டு, நாங்கள் இதைச் சொன்னோம். கல்லூக்கள் எங்கள் கண்களைக் கொத்திக் கொண்டு போய்விட்டன. நாங்கள் இங்கிருந்து போக வழி தெரியாமல் நிற்கிறோம்.
உடனே பல கதவுகள் திறந்து கொள்வதைக் கேட்டோம். பின்பு, எங்கள் கரங்களிலிருந்து எங்களில் ஒருவனை, வழி பார்த்து வர விடுத்துவிட்டோம். அவன் இருட்டுக்குள நகர்ந்து செல்வதைக் கேட்டோம். பல்வேறு பொருட்களை எங்களை அடர்ந்து சூழ்ந்து கொண்டிருக்க, எங்கோ இருட்டுக்குள் இருந்து அவன் பேசினான். நாம் போக வேண்டிய இடம், அருகில் எங்கேயோதான் இருக்க வேணும்.
அவன் மேலும் சொன்னான். நிறைந்து வழியும்படி குவிக்கப்பட்ட தொட்டிகளின் நாற்றம் இங்கே சுற்றிலும் இருக்கிறது.
மறுபடியும் அவனுடைய கரங்கள் இணைவதை உணர்ந்தோம். எதிரிலிருந்த ஒரு சுவரில் சாய்ந்து கொண்டு நின்றோம். எங்கள் கூடவே வந்த வேறொரு குரல், இப்போது எங்களைக் கடந்து சென்றது - ஆனால் எதிர்த்திசையில்.
`இவைகள் சவப்பெட்டிகளாய்த்தான் இருக்க வேண்டும்' எங்களில் ஒருத்தன் சொன்னான். அவனாகவே, எங்களை ஒரு மூலைக்கு இழுத்துச் சென்றான், எங்களுக்குப் பக்கத்தில் மூச்சு விட்டுக் கொண்டு பின்பு சொன்னான். `இவை பெட்டிகள்தான். குவித்து வைக்கப்பட்ட துணிகளின் நாற்றத்தைக் கண்டு சொல்லும் திறமை எனக்குச் சின்ன வயசிலிருந்தே இருக்கிறது'
பின்பு நாங்கள் அத்திசையில் நகர்ந்தோம். தரை மிருதுவாயும், மெத்தென்றுமிருந்தது. நாங்கள் நடந்து சென்றது வளமான ஒரு நிலத்தின் மீது. எங்களில் யாரோ ஒருத்தன் கரத்தை நீட்டி எங்களை நிறுத்தினான். ஆரோக்கியமான உயிர்த்துடிப்புள்ள ஒரு தோலின் தொடர்பை உணர்ந்தோம். ஆனால் எதிரிலிருந்த சுவரையோ, நாங்கள் நீண்ட நேரமாக உணரவேயில்லை.
`இது ஒரு பெண்' நாங்கள் சொல்லிக் கொண்டோம். எங்களில் ஒருத்தன் - பெட்டிகளைப் பற்றி பேசியவன் - சொன்னான். `அவள் தூங்குகிறாள் என்று நினைக்கிறேன்.'
எங்கள் கரங்களின் ஸ்பரிசத்தில், அவள் உடல் அசைந்தது; நெளிந்தது. எங்களின் கையெல்லையை மீறி அது போகவில்லை என்றாலும், அது நழுவிச் செல்வதை உணர்ந்தோம். ஆனால் அது இன்னும் எழுந்து நிற்கவில்லை.
அசையாமல் சிறிது நேரம் நின்றோம். பின்பு மற்றவர் தோள்களில் சாய்ந்து உறுதிப்படுத்திக் கொண்டு நின்றோம். பிறகு அவர் குரலைக் கேட்டோம்.
`யாரது?' என்று அது கேட்டது.
"நாங்கள்தான்" நாங்கள் நகராமல் பதிலளித்தோம். கிரீச்சும் கேட்டன. இருட்டுக்குள் காலணிகளுக்காகத் தேடி நகர்ந்தன அந்தப் பாதங்கள். இன்னும் முழுசாக விழித்துக் கொள்ளாமல், உட்கார்ந்தபடியே எங்களைப் பார்க்கும் ஒரு பெண்ணை மனதில் வரைந்து கொண்டோம்.
`இங்கே என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்?' அவள் கேட்டாள். உடனே நாங்கள் பதிலளித்தோம் : `எங்கிருக்கிறோம் என்று எங்களுக்குத் தெரியவில்லை. கர்லூக்கள் எங்கள் கண்களைக் கொத்தி எடுத்துவிட்டன.'
இந்த விஷயம் பற்றி தான் ஏதோ கேள்விப்பட்டதாக அவள் சொன்னாள். செய்தித்தாள்கள் இதைப் பற்றிச் சொல்லியிருந்தன. மூன்று மனிதர்கள், ஏழு கர்லூக்கள் (ஐந்து அல்லது ஆறு கர்லூக்கள்) இருந்த ஒரு முற்றத்தில் குடித்துக் கொண்டிருந்தபோது, அவர்களின் ஒருவன் கர்லூக்களைப் போலவே பாடத் தொடங்கினான். அவைகளைப் போலி செ‌ய்தான். `இதில் மோசம் என்னவென்றால், ஒரு மணி நேரத்திற்குப் பின்னால் அங்கே போய் அவர்களோடு சேர்ந்து கொண்டவன் அவன்' அவள் சொன்னாள். மேஜைமேல் அந்தப் பறவைகள் தாவிக்குதித்து, அவர்களின் கண்களைக் கொத்தி எடுத்துச் சென்றுவிட்டன.
செய்தித்தாள்களில் சொல்லியதை அவள் எல்லோருக்கும் சொன்னாள். ஆனால் யாரும் அதை நம்பவில்லை.
நாங்கள் சொன்னோம் :`ஜனங்கள் அங்கே போயிருந்தால், அந்தக் கர்லூக்களைப் பார்த்திருக்கலாம்.'
உடனே அந்தப் பெண் சொ‌ன்னாள் :`அடுத்த நாள் அந்த முற்றம் நிறைய, ஜனங்கள் கூடி விட்டார்கள் என்றுதான் சொன்னார்கள். ஆனால் அந்த பெண் முன்னதாகவே அந்தக் கர்லூக்களை எடுத்துக் கொண்டு எங்கோ சென்றுவிட்டாள்.'
நாங்கள் சுற்றித் திரும்பி நடக்கத் தொடங்கியதும் அந்தப் பெண் சொல்வதை நிறுத்திவிட்டாள். மறுபடியும் அந்தச் சுவர்தான் எதிரிலிருந்தது. சும்மா சுற்றித் திரும்பியதுமே நாங்கள் அந்தச் சுவரைக் கண்டுபிடித்துவிட்டோம். எங்களைச் சுற்றி, எங்களைச் சூழ்ந்து எப்போதும் ஒரு சுவர். ஒருத்தனை மறுபடியும் எங்கள் கரங்களிலிருந்து விடுவித்தோம். அவன் மீண்டும் தவழ்ந்து செல்வதையும் நிலத்தை முகர்வதையும் பின்பு தொடர்வதையும் கேட்டோம்.
இப்போது அந்தப் பெட்டிகள் எங்கே என்று எங்களுக்குத் தெரியவில்லை.`இப்போது நாம் வேறு எங்கோ வந்துவிட்டோம் என்று நினைக்கிறேன்' கூடவே இதையும் சொன்னோம்: `இங்கே வா. இங்கே நமக்கு அருகில் யாரோ இருக்கிறார்கள்.
பிரிந்து சென்றவன் அருகில் வருவதைக் கேட்டோம். அவன் எங்களுக்குப் பக்கத்தில் நிற்பதையும் அவனது சூடான மூச்சு எங்கள் முகத்தைத் தாக்குவதையும் உணர்ந்தோம். `அந்த வழியாகப் போ' அவனுக்குக் கூறினோம். `நாம் தெரிந்து கொள்ள வேண்டிய ஏதோ ஒன்று அங்கே இருக்கிறது.'
அவன் அதைச் சென்று அடைந்திருக்க வேண்டும். நாங்கள் குறிப்பிட்ட இடத்தை அவன் நகர்ந்து சென்று சேர்ந்திருக்க வேண்டும். ஏனென்றால் அடுத்த கணம், உடனே அவன் திரும்பி வந்து எங்களிடம் சொன்னான்.
`அது ஒரு பையன் என்று நினைக்கிறேன்'
உடனே நாங்கள் அவனுக்குச் சொன்னோம் : `சரி... அவனுக்கு நம்மைத் தெரியுமா என்று கேள்.'
அவன் அந்தக் கேள்வியைக் கேட்டான். அந்தப் பையனின் கவலையற்ற சன்னக் குரலை நாங்கள் கேட்டோம். அவன் சொன்னான் : `ஆம் உங்களைத் தெரியும். நீங்கள்தானே கர்லூக்களால் கண்கள் கொத்தி எடுக்கப்பட்ட அந்த மூன்று பேர்?'
பின் ஒரு வயதான குரல் பேசியது, மூடிய கதவுக்குப் பின்னாலிருந்து வந்தது போல் தோன்றிய அந்தப் பெண் குரல் சொன்னது :`மறுபடியும் நீ உனக்குள் பேச ஆரம்பித்துவிட்டாயா?'
அந்தக் குழந்தையின் சாவதானமான குரல் சொன்னது :`இல்ல¨.. கர்லூக்களால் கண்கள் கொத்தி எடுக்கப்பட்ட மனிதர்கள்.. மறுபடியும் இங்கே வந்திருக்கிறார்கள்.'
கீல்களின் சத்தம். பிறகு முதல் தடவையைவிட மிக அருகில் அந்த வயதான குரல் :`அவர்களை வீட்டுக்கு அழைத்துப் போ.' அவள் சொன்னாள்.
அந்தப் பையன் சொன்னான் :`அவர்கள் எங்கே வசிக்கிறார்கள் என்று எனக்குத் தெரியாது.'
அந்த வயதான குரல் சொன்னது :`அர்த்தம் இல்லாமல் உளராதே. இவர்கள் இங்கே வசிக்கிறார்கள் என்று எல்லோருக்கும் தெரியும். அந்த கர்லூக்கள் இவர்கள் கண்களைக் கொத்திச் சென்ற இரவிலிருந்தே இது இங்கே எல்லோருக்கும் தெரியும்.'
பின்பு, அவள் மாறுபட்ட குரலில், எங்களை நோக்கிப் பேசுவது போல் தொடர்ந்து கூறினாள் :`என்ன நடந்தது என்பது யாராலும் நம்ப முடியாததாகத்தான் இருக்கிறது. மேலும் இது பேப்பர்காரர்களால் அவைகளின் வியாபாரத்தை அதிகரிக்க, மிகைப்படுத்தப்பட்ட ஒரு ஆதாரமற்ற தகவல் என்றும் சிலர் சொல்கிறார்கள். யாரும் அந்த கர்லூக்களைப் பார்க்கவில்லை.'
உடனே அச்சிறுவன் சொன்னான் :`ஆனால் இவர்களைத் தெரு வழியே இட்டுச் சென்றால், என்னை யாரும் நம்பமாட்டார்கள்.'
நாங்கள் நகரவில்லை. சுவரில் எதிரிட்டுச் சாய்ந்து நிலைத்து நின்று, அவளைக் கவனித்துக் கேட்டோம். மேலும் அந்தப் பெண் சொன்னாள் :`இவன் உங்களைக் கூட்டிச் செல்லலாம் என்று நினைத்தான் என்றால் மட்டும் அது வேறு விதமாகிவிடும். ஒரு சிறு பையன் சொல்வது பற்றி யாரும் பெரிசாகக் கவனம் செலுத்த மாட்டார்கள்.'
அந்தக் குழந்தையின் குரல் குறுக்கிட்டது. `இவர்களுடன் நான் தெருவில் சென்றாலோ, இவர்கள்தான் அந்தக் கர்லூக்களால் கண்கள் இழந்த மனிதர்கள் என்று சொன்னாலோ, பையன்கள் என் மேல் கல்லை விட்டெறிந்தார்கள். தெருக்காரர்கள் ஒவ்வொருவரும் சொல்கிறார்கள், அது ஒருபோதும் நடந்திருக்காது என்று.'
அங்கு ஒரு கணநேர அமைதி. பின்பு அந்தக் கதவு மறுபடியும் மூடிக் கொண்டது. அந்தப் பையன் பேசினான் : அதில்லாமல் நான் இப்போது `டெர்ரியும் கடற்கொள்ளைக்காரர்களும்' படித்துக் கொண்டிருக்கிறேன்.
காதுக்குள் எங்களில் யாரோ ஒருத்தன் சொன்னான் : `அவனை நான் வழிக்குக் கொண்டு வருகிறேன்.' குரல் வந்த இடத்துக்கு அவன் தவழ்ந்து சென்றான். `அந்தக் கதை எனக்கு ரொம்பப் பிடிக்கும்' என்றான். : `இந்த வாரம் டெர்ரிக்கு என்ன நடந்தது என்பதையாவது எங்களுக்குச் சொல்லேன்.'
தன் சாதுரியத்தால் அவன் காரியம் சாதிக்க முயற்சி செய்கிறான் என நினைத்தோம். ஆனால் அந்தப் பையன் சொன்னான் : `எனக்கு அந்த கதையென்றும் பிடித்தமானதில்லை. நான் ஆசைப்படும் ஒரே ஒரு பொருள், பெயிண்ட்தான்.'
`டெர்ரி ஒரு ஆபத்தான கட்டத்தில் இருக்கிறான்' நாங்கள் சொன்னோம்.
உடனே அந்தப் பையன் சொன்னான் :`அது வெள்ளிக்கிழமை. இன்று ஞாயிற்றுக்கிழமை. மேலும் நான் விரும்புவது பெயிண்ட் மட்டும்தான்' அவன் இதை உணர்ச்சியற்ற வேறுபட்ட குரலில் உஷ்ணத்துடன் சொன்னான்.
மற்றவன் திரும்பி வந்ததும் நாங்கள் சொன்னோம். `நாங்கள் மூன்று நாட்களுக்கு மேல் அலைந்து திரிகிறோம். ஒரு நிமிஷம் கூட இளைப்பாற முடியாமல் கிடந்து தவிக்கிறோம்.'
ஒருத்தன் சொன்னான் :`சரி. கொஞ்சம் ஓய்வெடுத்துக் கொள்வோம். ஆனால் ஒருவர் கையை மற்றவர் போக விட்டுவிட வேண்டாம்.'
கீழே அமர்ந்தோம். பார்க்க முடியாத சூரியன் எங்களின் தோள்களைச் சூடாக்கத் தொடங்கினான். சூரியனின் புறப்பாடு கூட எங்கள் ஆவலைத் தூண்டவில்லை. முன்பே தொலைந்து போய்விட்ட தூரம் பற்றிய ஞாபகத்தால் காலம், திசை எல்லாவற்றிலும் நாங்கள் அந்த தூரத்தையே நினைவுகொண்டோம். பல குரல்கள் கடந்தன.
`கர்லூக்கள் எங்கள் கண்களைக் கொத்திக் கொண்டு போய்விட்டன' - நாங்கள் சொன்னோம்.
அதில் ஒரு குரல் சொன்னது : `இது உண்மைதானா என்று செய்தித்தாள்களைப் படித்துப் பார்க்க வேண்டும்.'
அந்தக் குரல்கள் சென்று தேய்ந்தன. தோளோடு தோள் இணைய நாங்கள் அப்படியே உட்கார்ந்திருந்தோம். கடந்து செல்லும் குரல்களை, கடந்து செல்லும் மன உருவங்களை, மணத்தாலோ ஒலியாலோ - அவை கடந்து செல்வதை உணர்ந்தபடி காத்திருந்தோம். எங்களின் உச்சந்தலைக்கு மேல் சூரியன் மேலும் அதிகச் சூட்டைக் கிளப்பினான். பின்பு எங்களுள் ஒருவன் சொன்னான் :`அந்தச் சுவரை நோக்கி மறுபடியும் போவோம்.'
பார்க்க முடியாத வெளிச்சத்தை தலைகளை அண்ணாந்து நோக்கியபடி அசையாமலிருந்துகொண்டு மற்ற இருவரும் சொன்னோம்.
`இப்போது வேண்டாம். சூரியன் சாய்ந்து நம் முகத்தில் காயத் தொடங்கும் வரை நாம் காத்திருப்போம்.'
****
கேப்ரியல் கார்சியா மார்க்வெஸ் நோப‌ல் ப‌ரிசு பெ‌ற்ற ல‌த்‌தீ‌ன் அமெ‌ரி‌க்க எழு‌த்தாள‌ர். மே‌ஜிக‌ல் ‌ரிய‌லிச‌ம் எ‌ன்ற வகை எழு‌த்தா‌ல், ‌மிக‌ப் ‌பிரபல‌ம் பெ‌ற்றவ‌ர். இவரது `ஒரு நூ‌ற்றா‌ண்டு‌த் த‌னிமை' நாவ‌ல், உல‌கி‌ன் ‌சிற‌ந்த நாவ‌ல்களு‌ள் ஒ‌ன்றாக‌க் கருத‌ப்படு‌கிறது. ‌சிற‌ந்த ‌சிறுகதைகளையு‌ம் இவ‌ர் படை‌த்த‌ளி‌த்து‌ள்ளா‌ர்.
 ந‌ன்‌றி - ச‌‌ங்கேத‌ங்களு‌ம் கு‌றி‌யீடுகளு‌ம் - மேலைநா‌ட்டு‌ச் ‌சிறுகதைக‌ள் : விலை: ரூ 85
வெ‌ளி‌யீடு : குரு‌த்து, பிச்சாண்டம் பளையம், பொலவக்காளி பாளையம் அஞ்சல், கோபிச்செட்டிப்பாளையம், ஈரோடு மாவட்டம்-638476

சாணக்கிய சிந்தனைகள்:-

வேலையத் துவங்கிவிட்டீர்களென்றால் அதன் விளைவுகள் பற்றி அச்சப்படக்கூடாது. கைவிடாதீர்கள்! நேர்மையாக பணியாற்றுபவர்கள் மகிழ்ச்சியானவர்கள்.

மலரின் மணம் காற்றின் திசைவழி மட்டுமே செல்லும், ஒரு நல்ல மனிதனின் நற்தன்மை அனைத்து திசைகளுக்கும் செல்லும்.

விக்கிரகங்களில் கடவுள் இல்லை. உங்கள் உணர்வுகளே உங்கள் கடவுள். ஆன்மாவே கோயில்.

மனிதன் செயலினால் உயர்ந்தவனே தவிர பிறப்பினால் அல்ல.

உங்களை விட தகுதியில் உயர்ந்தவர்களிடமோ, தாழ்ந்தவர்களிடமோ நட்பு பாராட்டாதீர்கள், இந்த நட்பினால் மகிழ்ச்சி ஏற்படாது.

முதல் 5 ஆண்டுகளுக்கு உங்கள் குழந்தைகளை அன்புடன் நடத்துங்கள். அதன் பிறகு கண்டியுங்கள், 16 வயது ஆகிவிட்டதா நண்பராக நடத்துங்கள், வளர்ந்த உங்களுடைய குழந்தைகளே உங்கள் சிறந்த நண்பர்கள்.
சாணக்கிய சிந்தனைகள்:-

வேலையத் துவங்கிவிட்டீர்களென்றால் அதன் விளைவுகள் பற்றி அச்சப்படக்கூடாது. கைவிடாதீர்கள்! நேர்மையாக பணியாற்றுபவர்கள் மகிழ்ச்சியானவர்கள்.

மலரின் மணம் காற்றின் திசைவழி மட்டுமே செல்லும், ஒரு நல்ல மனிதனின் நற்தன்மை அனைத்து திசைகளுக்கும் செல்லும்.

விக்கிரகங்களில் கடவுள் இல்லை. உங்கள் உணர்வுகளே உங்கள் கடவுள். ஆன்மாவே கோயில்.

மனிதன் செயலினால் உயர்ந்தவனே தவிர பிறப்பினால் அல்ல.

உங்களை விட தகுதியில் உயர்ந்தவர்களிடமோ, தாழ்ந்தவர்களிடமோ நட்பு பாராட்டாதீர்கள், இந்த நட்பினால் மகிழ்ச்சி ஏற்படாது.

முதல் 5 ஆண்டுகளுக்கு உங்கள் குழந்தைகளை அன்புடன் நடத்துங்கள். அதன் பிறகு கண்டியுங்கள், 16 வயது ஆகிவிட்டதா நண்பராக நடத்துங்கள், வளர்ந்த உங்களுடைய குழந்தைகளே உங்கள் சிறந்த நண்பர்கள்.

எகிப்தில் உள்ள " பிரமிடு " தமிழர் கட்டியது என்பது மட்டுமல்ல , அச்சொல்லே தமிழ்ச் சொல்லாகும் .

ஒரு வியப்பான செய்தியை கூறினால் நீங்கள் வியப்பால் விழி விலகி நிற்பீர்கள் ! எகிப்தில் உள்ள " பிரமிடு " தமிழர் கட்டியது என்பது மட்டுமல்ல , அச்சொல்லே தமிழ்ச் சொல்லாகும் .

"இடுதல்" என்றால் புதைத்தல் என்று பொருள். இறந்தவர்களை புதைப்பதால் ' இடுகாடு ' என்று அழைக்கப் பட்டது . சாதாரண மக்கள் இறந்தால் சிறு குழியில் புதைத்து மேலே மேடு அமைப்பர் . அது "சிறு இடு " . மன்னர்கள் போன்ற உயர்ந்தோர் இறந்தால் "பெரும் இடு" அமைப்பர் . பெரும் + இடு = பெருமிடு . அதுவே "பிரமிடு " என்று எகிப்தில் அழைக்கப் படுகிறது . 

தமிழர்கள் உலகின் பல பாகங்களில் வாழ்ந்தவர்கள் என்பது மட்டுமல்ல . பல மொழிகள் தோற்றத்திற்கு காரணமாய் அமைந்து , பல மொழிகளுக்கும் பல சொற்களை கொடையாகவும் அளித்துள்ளது
ஒரு வியப்பான செய்தியை கூறினால் நீங்கள் வியப்பால் விழி விலகி நிற்பீர்கள் ! எகிப்தில் உள்ள " பிரமிடு " தமிழர் கட்டியது என்பது மட்டுமல்ல , அச்சொல்லே தமிழ்ச் சொல்லாகும் .

"இடுதல்" என்றால் புதைத்தல் என்று பொருள். இறந்தவர்களை புதைப்பதால் ' இடுகாடு ' என்று அழைக்கப் பட்டது . சாதாரண மக்கள் இறந்தால் சிறு குழியில் புதைத்து மேலே மேடு அமைப்பர் . அது "சிறு இடு " . மன்னர்கள் போன்ற உயர்ந்தோர் இறந்தால் "பெரும் இடு" அமைப்பர் . பெரும் + இடு = பெருமிடு . அதுவே "பிரமிடு " என்று எகிப்தில் அழைக்கப் படுகிறது .

தமிழர்கள் உலகின் பல பாகங்களில் வாழ்ந்தவர்கள் என்பது மட்டுமல்ல . பல மொழிகள் தோற்றத்திற்கு காரணமாய் அமைந்து , பல மொழிகளுக்கும் பல சொற்களை கொடையாகவும் அளித்துள்ளது

பல்லில் பிரச்னை இருந்தால் புற்றுநோய் வர வாய்ப்பு:-

பல்லில் ஏற்படும் பொதுவான பிரச்சனை சொத்தை. இதை ஆரம்ப கட்டத்தில் சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும். இல்லை என்றால் அது பல் முழுதையும் பாதிக்கும். சிலசமயம் பல் இரண்டாக உடைந்து போகும். அப்போது, உடைந்த கூறான பல், நாக்கு மற்றும் கன்னப் பகுதியில் குத்தி காயம் ஏற்படும்.

இது புற்றுநோயாக மாறும் வாய்ப்பு உண்டு. பல் சொத்தையை வேர் வைத்தியம் செய்து, செராமிக் செயற்கை பல்லை பொருத்தலாம். பல்லின் அடுத்த பிரச்சனை பல்செட். இதை அணிபவர்கள் இருபத்து நாலு மணிநேரமும் பயன்படுத்தக்கூடாது. ஒரு நாளைக்கு பதினைந்து மணி நேரம் மட்டுமே அணியணும். இரவு படுக்கும் போதும் கண்டிப்பாக கழட்டணும்.

தொடர்ந்து அணிவதால், தடை எலும்பில் பாதிப்பு ஏற்படும். நம் வாயில் பலகோடி பாக்டீரியாக்கள் உள்ளன. பல் இடுக்கில் சிக்கிக் கொள்ளும் உணவுகளை சரியாக சுத்தம் செய்யாமல் இருந்தால், வாய் துற்நாற்றம், ஈறு பிரச்னை ஏற்படும். பாக்டீரியாக்கள் எச்சில் மூலமாக வயிற்றுக்கும் மற்ற உறுப்புக்கும் பரவும்.

இதனால் கண்கள் சிவப்பாகும், சருமத்தில் தேமல், மூட்டு வலி போன்ற பிரச்சனைகள் ஏற்படும். ஒவ்வொரு முறை உணவு சாப்பிட்ட பிறகு வாயை நன்றாக தண்ணீரால் சுத்தம் செய்ய வேண்டும். பல் சிறப்பாக இருந்தால் உடல் ஆரோக்கியமாக இருக்கும் என்றார்.

பல் ஆரோக்கியத்துக்கு டிப்ஸ்...

செய்ய கூடியவை...

தினமும் காலை. இரவு இரண்டு வேளை பல் துலக்க வேண்டும்.

இரவு படுக்கும் முன் பல் இடுக்கில் உள்ள உணவு பொருட்களை ‘பிளாஸ்‘, தண்ணீரால் சுத்தம் செய்யணும்.

பால் சார்ந்த உணவுகளை சாப்பிடுவது நல்லது.
பல்லில் பிரச்னை இருந்தால் உடனடியாக பல் நிபுணரை அணுக வேண்டும்.

செய்ய கூடாதவை...

பற்களில் ஒட்டிக் கொள்ளும் உணவு பொருட்களை தவிர்க்கவும்.பென்சிலை கடிப்பது மற்றும் பிளாஸ்டிக் மற்றும் நூல் போன்ற பொருட்களை பல்லால் கடித்து கிழிக்க கூடாது.
புகை, பாக்கு, வெற்றிலை ஆகியவற்றை தவிர்க்க வேண்டும்

மடியில் வைத்து மடிக்கணினியை பயன்படுத்தலாமா?

லேப்டாப்பை மடியில் வைத்து பயன்படுத்துபவர்களுக்கு நிறச்சிதைவு நோய் அதிகம் வருகிறது. அதிலிருந்து வெளி வரும் வெப்பத்தால் தோல்பகுதி சிவந்து போகும். பிறகு அந்த இடத்தில் சிறிய கொப்புளங்கள் உருவாகி அரிப்பு ஏற்படும். அதை சொரியச் சொரிய அந்த இடத்தில் தோலின் நிறம் மாறி, தடித்த கறுப்பான தோலாக மாறிவிடும். இதற்கு ‘ரோஸ்டட் ஸ்கின் சின்ட்ரோம்’ என்று பெயர்.
காஷ்மீர் பகுதியில் உள்ளவர்கள் குளிரிலிருந்து தப்பிக்க, ஒரு பானை நிறைய நெருப்பைப் போட்டு அதை வயிற்றோடு சேர்த்து கட்டிக் கொள்வார்கள். அப்போதைக்கு குளிரில் இருந்து தப்பித்தாலும் நெருப்பால் உண்டான காயம் தோலில் தடிமனான ரோஸ்ட் போல தங்கிவிடும். இதுதான் ‘ரோஸ்டட் ஸ்கின் சின்ட்ரோம்’. இது போன்ற பாதிப்பு லேப்டாப் பயன்படுத்துவோருக்கும் வருகிறது.
லேப்டாப்பில் காரீயம் சேர்த்திருப்பார்கள். அதிக நச்சுத்தன்மை நிறைந்த இந்த தனிமம் உடலுக்கு பல ஆபத்துகளை உருவாக்கும். கான்டாக்ட் டெர்மடைட்டிஸ் என்ற அலர்ஜியை உருவாக்கும். இதனால் கொப்புளம், அரிப்பு, தோல் தடிப்பு போன்ற நோய்கள் வரும். லேப்டாப்பை தொடர்ச்சியாக அருகில் வைத்து பார்ப்பதால் கண்ணுக்கு அடியில் ரத்த ஓட்டம் குறைந்து, கருவளையம் நிரந்தரமாகத் தங்கிவிடும்.
மடியின் மேல் பயன்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டால் அரைமணி நேரத்துக்கு மேல் வேண்டாம். துணி, தலையணை, பிளாஸ்டிக் பொருட்களின் மீதும் லேப்டாப்பை வைத்து பயன்படுத்துவது ஆபத்தானது. லேப்டாப்பில் இருந்து வெளியாகும் வெப்பத்தைக் கட்டுப்படுத்த இப்போது சிறிய ஃபேன் கொண்ட ‘கூலிங் பேடு’ உபகரணங்கள் வந்துவிட்டன. குழந்தைகளிடம் இருந்து லேப்டாப்பை சற்று தள்ளியே வைத்திருங்கள்.

Perfect Click....

Wednesday, March 12, 2014

ஏதோ ஒன்று

செங்கை ஆழியான் 











இருள் வானைக் கீறிக் கொண்டு பாய்ந்த எரி வெள்ளி ஒன்று, ஒளி ஒடுங்கி, அவிகின்றது.

எவ்வளவு உண்மை, மறுக்கவே முடியாத பிரத்தியட்சமான உண்மை.

அடிவானில் ஒளி ஓடுங்கி, அவியத்தான் வேண்டுமா?

தூரத்தே பெரும் கட்டிடங்களின் மங்கற் கோடுகள். இருளுடே தெரிகின்றன. அவற்றிற்கும் அப்பால், சிவனொளிபாத மலையின் சிகரத்து மின் விளக்கு, நம்பிக்கை தரும் ஒளியாக மின்னுகின்றது.

நம்பிக்கை தரும் அச்சிறு ஒளியின் பின்னால், அதனோடு இணைந்து, மாபெரும் மலை, உண்மைப் பொருள் இருக்கிறது.

எரி வெள்ளி...?

முழுவதும் ஒளிதான், ஆனால் அதன் பின், - கண்ணைப் பறித்து மின்னி அவியும்போது அதன் பின் - சூனியம் தான் மிச்சம்.

என் கொள்கைகள் எரி வெள்ளியா?

'சகல பிரச்சனைகளுக்கும் காரணம், அடிப்படைக் காரணம், என்ன தெரியுமா?

அவன் என்னை நிமிர்ந்து பார்க்கிறான். அவன் பார்வையில், என் பேச்சில் இருந்த படபடப்பு இல்லை. அமைதி உருகி வருகிறது.

'நீயே... சொல்லு....!'

'அடிப்படைக் காரணம் பொருளாதாரக் குறைவுதான்....! ஒருவன் அளவிற்கு அதிகமாக உண்டுகளித்கும்போது, இன்னொருவன் ஒருவேளை கஞ்சிக்கும் வழியில்லாமல் தவிக்கிறான்! ஒருவன் ஆடம்பரமாகக் காரிலே பவனி வரும்போது, இன்னொருவன் கொதிக்கும் வெயிலில், தார் சூடு பாதங்களைத் தீய்க்க, செருப்பிற்கே வழியின்றித் தடுமாறுகிறான்! ஒருவனுக்கு அளவுக்குமதிகமான உடைகள்! இன்னொருவனுக்கு தன் மானத்தை மறைக்கவும் ஒரு முழந்துண்டில்லை! ஒருவனுக்கு அரண்மனை போன்ற வீடுகள் பல! இன்னொருவனுக்கு வாழ்வதற்குச் சிறு குடிசையுமில்லை! ஒருவன் பிறர் உழைப்பிலே வாழ்கிறான்! இன்னொருவன் உழைத்து வாழ வழியின்றித் தவிக்கிறான். இந்த நிலையேன்.....? இந்த ஏற்றத்தாழ்வுகளேன்? மனிதர்களுக்குள் ஏற்றவிறக்கங்கள் ஏன்?'

உணர்ச்சி வசப்படுகின்றேன்.

எதிர்த்தரப்பில் அமைதி 'இந்த மனித பேதத்தை முற்றாக ஒழிக்க வேண்டும்! வர்க்க பேதமற்ற ஒரு சமூகத்தை அமைக்கவேண்டும்! எல்லோருக்கும் சம சந்தர்ப்பம் எல்லாத்துறைகளிலும் அளிக்க வேண்டும்!

ஆவேசத்தோடு தொடர்கின்றேன்.
'அப்போதுதான் எல்லோருக்கும் உணவு கிடைக்கும்! வாழ வீடுகள் கிடைக்கும்!'

இருளினூடே என் கண்கள் துழாவுகின்றன. மலையுச்சியிலமைந்திருக்கும் என் விடுதியிலிருந்து பார்க்கும் போது, பல்கலைக்கழகக் கட்டிடங்கள் மங்கலாகத் தெரிகின்றன.

மேடுகளும், பள்ளங்களும்!

வானில் இங்கொன்றும், அங்கொன்றுமாக நட்சத்திரப் பூக்கள். இரவுச் சாப்பாட்டிற்குரிய அழைப்பு மணி கிணு கிணுக்கின்றது. அவன் எழவில்லை.
'வர்க்கபேதமற்ற ஒரு சமூகத்தை நான் எதிர்க்கிறேன் என்று நீ எண்ணுகிறாயா?'
நான் அவனைக் கண்ணிமைக்காது பார்க்கிறேன்.

அவன் மெதுவாக எழுந்து சென்று, பலகணிக் கதவைத்திறந்து விடுகின்றான். மென்காற்று இழைக்கிறது!

மனிதர்களுக்குள் ஏற்றத் தாழ்வுகள் இருக்கக்கூடாது என்றுதான் நானும் விரும்புகின்றேன். எல்லோரும் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்றுதான் நானும் விரும்புகிறேன்! ஒருவன் ஒருவேளை சோற்றிற்குத் தவிக்கும்போது, இன்னொருவன் மேலதிகமாக உண்டு சீரழிப்பதை நானும் வெறுக்கிறேன்!.....'

'அப்படியானால் நீயேன் மொழி, இனம் மதம் என்று திரிகிறாய்?

வானில் இருளின் கருமை அகன்று, தெளிவு தோன்றுகின்றது. அங்கொன்றும் இங்கொன்றுமாகத் தெரிந்த நட்சத்திர மலர்கள், வானமெங்கும் இப்போது மலர்கின்றன.

'அவ்விடத்தில் தான் நீயும், நானும் வேறுபடுகின்றோம்! நீ உணவு மட்டும் தான் வாழ்க்கை என்கிறாய்?'

'பின் வேறு என்ன?....?'

'உணவுமட்டும்தான் வாழ்வல்ல! உணவு மடடும்தான் வாழ்வென்றால், மிருகங்களுக்கும், எங்களுக்கும் என்ன வித்தியாசம்?'

அவன் கேள்வியோடு நிறுத்தி விட்டு, என்னைப் பார்க்கின்றான்:

'உன் கொள்கைகள் உயர்ந்தவை! நல்லவை! ஆனால் - சிறிது யோசித்துப்பார், தெரிந்தோ, தெரியாமலோ மொழியையும், இனத்தையும், மதத்தையும் காட்டி.., ஒரே நாட்டில் வாழ்கின்ற இன்னொரு சமூகத்தின் மேல் இனவெறியை ஊட்டிவிட்டு, பதவிக்கு வந்த சிங்கள அரசில்;, நாம் வர்க்க பேதமற்ற ஒரு சமூகத்தைக் காணப் பொதுவுடைமை பேசுவுது சரியா? அப்படிப் பேசிசிக்கொண்டிருந்தால் நம்மினம், நம்மொழி.........'

நான் வேகமாகக் குறுக்கிடுகின்றேன்.

'வர்க்க பேதமற்ற ஒரு சமூகத்தில், இனம், மொழி?'

இப்பொழுது அவன் குறுக்கிடுகின்றான்:

'இரு மொழி பேசும் மக்கள் சமூகம் வாழ்கின்ற ஒரு நாட்டில், ஒரு சமூகம் மட்டும் அதுவும் சிறுபான்மைச் சமூகம் மட்டும், வர்க்கபேதமற்ற சமூகத்தை அடையப் போராடும்போது, அச்சமூகத்தின் மொழி இனம் அழிந்து போய்விடும்! அதுமட்டுமல்ல, எல்லா மக்களும், மொழி, இன மதவேறுபாடுடின்றிப் போராடும் போதுதான் நீ கருதுகின்ற சமூகம் உருவாக முடியும்......!'

என் கண்களில் வெறுப்பு

'புரிந்து கொள்ளாதவன்!'

'உணவு மட்டுத்தான் வாழ்க்கையா?'

அவன் திரும்பவும் கேட்கிறான்.

என் தலை திடமாக அசைகிறது.

'உணவு கிடைத்தால் போதுமா?'

திரும்பவும் கேட்கின்றான்.

'ஒரு மணிக்கு மேலாகிறது! இன்னும் படுக்காமல் வெளியே என்னத்தை அப்படிப் பார்த்துக் கொண்டு நிற்கின்றாய்?'

என் அறை நண்பன் கேட்கிறான்.

'நீ படுத்துக்கொள்! விளக்கை அணைத்து விட்டுப் படு!'

வெளியே இருள் தான். தூரத்தில் சிவனொளி பாதமலைச் சிகர மின் விளக்கு கண்ணைச் சிமிட்டுகிறது.

நாங்கள் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறோம். சிங்கள மாணவர்களும், தமிழ் மாணவர்களும் ஒன்றாக இருந்து சாப்பிட்டுக் கொண்டிருக்கின்றோம்.

'எவ்வளவு ஐக்கியம்!'

இன்னொரு மேசையிலிருந்து அவன், அந்த பிற்போக்குவாதி, சாப்பிட்டுக் கொண்டிருக்கிறான்.

எனக்குப் பக்கத்தில் ஓரிடம் காலியாக இருக்கிறது.

அதில் ஒரு தமிழ் மாணவனை அழைத்து வந்து இருத்துகிறான், எங்களுக்கு உணவு பரிமாறுகிறவன்.

இந்தத் தமிழ்ப் பண்டிகளை இங்கேன் இருத்துகிறாய்?' கேட்டவன், என் முன்னிருந்து சாப்பிட்டுக் கொண்டிருந்த ஒரு சிங்கள மாணவன்தான், சிங்களத்தில் தான் கேட்டான்.

என் இதயமேன் துடிக்கிறது? இதயமே நீறற்று வரண்டு போனது போல்..... அடிவயிற்றில் பெரு நெருப்புப் படர்வது போல.....

என்னால் அங்கிருக்க முடியவில்லை. மொழி விளங்காத நண்பர்கள் அமைதியாகச் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

நான் எழுந்து சென்று, 'அவனு'க்கு முன் அமர்ந்து கொள்கின்றேன்.

அவன் விழிகளில் அதிசயம், கேள்வி.

நான் வேதனையோடு விளக்குகின்றேன்.

அவன் சிரிக்கின்றான்.

'உணவு மட்டுந்தான் வாழ்க்கையா?'

நானென்ன பதில் கூறுவேன்?

'உணவு மட்டுந்தான் வாழ்க்கை என்றாயே? அப்படியானால் இங்கே ஏன் எழுந்து வந்தாய்? தமிழ்ப் பண்டி என்று சொன்னானே, அவனுக்கு முன்னாலும் உணவு இருக்கிறது தானே?'

வேதனையோடு தலை குனிகிறேன்.

'அவன் அப்படிக் கூறியபோது நீ எதையோ ஒன்றை இழந்தது போல உணரவில்லையா?'

உணர்கிறேன், உணர்கிறேன்.

இருள் வானைக் கீறிட்டுக் கொண்டு பாய்ந்த எரி வெள்ளி ஒன்று, ஒளி ஒடுங்கி, அவிகின்றது.

தூரத்தே சிவனொளிபாதமலைச் சிகரத்து மின் விளக்கு மின்னுகின்றது.

தலையில் முடி அடர்த்தியாக வளர உங்களுக்கு சில குறிப்புக்கள்..........



1.ஐந்து இதழ்கள் உள்ள செம்பருத்தி / செம்பரத்தை பூவை அரைத்து நல்லெண்ணையில் காய்ச்சி, வடிகட்டிய பின் தலைக்குத் தேய்த்தால் தலை முடி அடர்த்தியாக வளரும்.

2. முடி செழித்து வளர வாரம் ஒருமுறை வெண்ணெய் தலைக்குத் தடவி ஒருமணி நேரம் கழித்து கழுவி வந்தால் முடி நன்றாக வளரும்.

3.செம்வரத்தம் இலையை அரைத்து தலையில் தடவி அரைமணி நேரம் ஊறிய பின் தலையை சீயக்காய் அல்லது ஷாம்பூ போட்டு அலசவும். கூந்தல் அடர்த்தியாக வளரும்.

4.கறிவேப்பிலை, சின்ன வெங்காயம்-4, இரண்டையும் நன்றாக அரைத்து அத்துடன் தயிர் சேர்த்து தலைக்கு தேய்த்து முழுகினால் கூந்தல் நல்ல கருமையான நிறத்துடன் வளரும்.

5. கடுக்காய், செவ்வரத்தம் பூ, நெல்லிக்காய் ஆகியவைகளை சம அளவு எடுத்து தேங்காய் எண்ணெயில் காச்சி கூந்தலில் தடவினால் முடி நன்றாக வளரும்.

6.வெந்தயத்தை ஊறவைத்து நன்கு அரைத்து தலையில் பேக் போல போட்டு ஊறிய பிறகு தலைக்கு குளித்தால் தலை முடி செழித்து வளரும்.

7.ஒரு லிட்டர் நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெயில் நெல்லிக்காய் பொடி, தான்றிக்காய் பொடி, மருதாணி பொடி, கறிவேப்பிலை பொடி, கரிசலாங்கண்ணி பொடி, வெட்டிவேர், ரோஜா இதழ்கள், சந்தன பொடி ஆகியவை தலா 10 கிராம் சேர்த்து, எண்ணெயில் போட்டு கொதிக்க வைக்கவும். இந்த கலவையை நாலு நாள் வெயிலில் வைக்க வேண்டும். சூரிய கதிர்கள் பட்டு எண்ணெயில் எசன்ஸ் இறங்கும். பின் வெள்ளைத் துணியில், அதை வடிகட்டவும். குளிக்கும் முன் இதை தலையில், தேய்த்து வந்தால், முடி கருமையாகும்,அத்துடன் தலை முடி அடர்த்தியாக வளரும்.

8.மருதாணி, செம்பருத்தி, கருவேப்பிலை, வேப்பிலை, ரோஜா இதழ்கள் இவற்றை நன்கு நிழலில் உலர்த்தி பொடி செய்து வைத்து கொண்டு காய்ச்சிய தேங்காய் எண்ணையில் கலந்து ஊறவிட்டு பின்பு தலைக்கு தேய்க்கவும். இப்படி செய்தால் தலைமுடி உதிர்வது குறையும். எப்பொழுதுமே ஒரு செய்முறை செய்தால் அதை தொடர்ந்து செய்யவேண்டும். மாற்றிக் கொண்டே இருந்தால் முடி உதிர்வதை தடுக்க முடியாது. ஷாம்புக்கள் பயன்படுத்தும் போதும் இதே போல் செய்ய வேண்டும்.அடிக்கடி ஷாம்புக்களை மாற்றினால் முடி உதிரும்.

9.செம்பருத்தி இலையை அரைத்து தலையில் தடவி அரைமணி ஊறிய பின் தலையை சீயக்காய் அல்லது ஷாம்பூ போட்டு அலசவும். கூந்தல் அடர்த்தியாக வளரும்.

10.கருவேப்பிலை, சின்ன வெங்காயம் -4, இரண்டையும் நன்றாக அரைத்து அத்துடன் தயிர் சேர்த்து தலைக்கு தேய்த்து குளித்தால் கூந்தல் நல்ல கருமையான நிறத்துடன் வளரும்.
தலையில் முடி அடர்த்தியாக வளர உங்களுக்கு சில குறிப்புக்கள்..........

1.ஐந்து இதழ்கள் உள்ள செம்பருத்தி / செம்பரத்தை பூவை அரைத்து நல்லெண்ணையில் காய்ச்சி, வடிகட்டிய பின் தலைக்குத் தேய்த்தால் தலை முடி அடர்த்தியாக வளரும்.

2. முடி செழித்து வளர வாரம் ஒருமுறை வெண்ணெய் தலைக்குத் தடவி ஒருமணி நேரம் கழித்து கழுவி வந்தால் முடி நன்றாக வளரும்.

3.செம்வரத்தம் இலையை அரைத்து தலையில் தடவி அரைமணி நேரம் ஊறிய பின் தலையை சீயக்காய் அல்லது ஷாம்பூ போட்டு அலசவும். கூந்தல் அடர்த்தியாக வளரும்.

4.கறிவேப்பிலை, சின்ன வெங்காயம்-4, இரண்டையும் நன்றாக அரைத்து அத்துடன் தயிர் சேர்த்து தலைக்கு தேய்த்து முழுகினால் கூந்தல் நல்ல கருமையான நிறத்துடன் வளரும்.

5. கடுக்காய், செவ்வரத்தம் பூ, நெல்லிக்காய் ஆகியவைகளை சம அளவு எடுத்து தேங்காய் எண்ணெயில் காச்சி கூந்தலில் தடவினால் முடி நன்றாக வளரும். 

6.வெந்தயத்தை ஊறவைத்து நன்கு அரைத்து தலையில் பேக் போல போட்டு ஊறிய பிறகு தலைக்கு குளித்தால் தலை முடி செழித்து வளரும். 

7.ஒரு லிட்டர் நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெயில் நெல்லிக்காய் பொடி, தான்றிக்காய் பொடி, மருதாணி பொடி, கறிவேப்பிலை பொடி, கரிசலாங்கண்ணி பொடி, வெட்டிவேர், ரோஜா இதழ்கள், சந்தன பொடி ஆகியவை தலா 10 கிராம் சேர்த்து, எண்ணெயில் போட்டு கொதிக்க வைக்கவும். இந்த கலவையை நாலு நாள் வெயிலில் வைக்க வேண்டும். சூரிய கதிர்கள் பட்டு எண்ணெயில் எசன்ஸ் இறங்கும். பின் வெள்ளைத் துணியில், அதை வடிகட்டவும். குளிக்கும் முன் இதை தலையில், தேய்த்து வந்தால், முடி கருமையாகும்,அத்துடன் தலை முடி அடர்த்தியாக வளரும்.

8.மருதாணி, செம்பருத்தி, கருவேப்பிலை, வேப்பிலை, ரோஜா இதழ்கள் இவற்றை நன்கு நிழலில் உலர்த்தி பொடி செய்து வைத்து கொண்டு காய்ச்சிய தேங்காய் எண்ணையில் கலந்து ஊறவிட்டு பின்பு தலைக்கு தேய்க்கவும். இப்படி செய்தால் தலைமுடி உதிர்வது குறையும். எப்பொழுதுமே ஒரு செய்முறை செய்தால் அதை தொடர்ந்து செய்யவேண்டும். மாற்றிக் கொண்டே இருந்தால் முடி உதிர்வதை தடுக்க முடியாது. ஷாம்புக்கள் பயன்படுத்தும் போதும் இதே போல் செய்ய வேண்டும்.அடிக்கடி ஷாம்புக்களை மாற்றினால் முடி உதிரும். 

9.செம்பருத்தி இலையை அரைத்து தலையில் தடவி அரைமணி ஊறிய பின் தலையை சீயக்காய் அல்லது ஷாம்பூ போட்டு அலசவும். கூந்தல் அடர்த்தியாக வளரும்.

10.கருவேப்பிலை, சின்ன வெங்காயம் -4, இரண்டையும் நன்றாக அரைத்து அத்துடன் தயிர் சேர்த்து தலைக்கு தேய்த்து குளித்தால் கூந்தல் நல்ல கருமையான நிறத்துடன் வளரும்.

Recovering the Hidden Ram in HP Servers !

This is very interesting and thought of sharing with you all!! Recently we found out that our HP DL 380(G6) server shows only 3.25GB RAM, even though we originally installed 4GB RAM. But it was showing only 3.25GB RAM.
We were surprised when we have removed the server casing and saw that it has 4GB Physical memory. Our requirement is to upgrade it up to 8GB. But even I have installed the 8GB RAM modules it shows only 3.25GB RAM. Then I have checked in the BIOS. It nicely display 8GB RAM. I phoned our venders but even they didn’t have an answer for it. We decided that this should be an issue with Operating system.
When we check Microsoft says W2K3 std Edition supports only up to 4GB, but we have got W2K3 Enterprise on our server.
Finally we found the solution for this issue, it’s really easy to recover your Hidden RAM. I have done it and it worked. Recovering memory that is invisible to the Microsoft® Windows® operating system As memory usage requirements of servers increase, one common problem is that the Windows® operating system sees less RAM than is actually present, such as seeing only 3.25 GB of RAM instead of 4 GB. In most cases, the loss of RAM is caused by the PCI (peripheral component interconnect) memory space that is located just below 4 GB. This is commonly called the “PCI memory hole.” The PCI memory hole ranges from .5 GB to 2.0 GB, but is often about .75 GB. PCI memory is configured as “memory-mapped I/O,” which means it takes up standard memory address space to access hardware I/O locations. That memory space then becomes unavailable for use with actual memory. Originally, this did not cause issues because the amount of memory space taken was small and computers did not have that much memory. More recently, the PCI memory hole has become more of an issue because of the increased memory requirements and also because the PCI memory hole grew. The latest chipsets now have mechanisms available that allow the recovery of this memory space by mapping it to other address locations above 4 GB.
Older HP ProLiant servers may not have chipsets that allow the recovery of RAM; as of 2007, all shipping ProLiant servers support this feature.
Partial list of ProLiant servers with chipsets allowing the recovery of RAM HP BladeSystem c-Class servers HP ProLiant DL servers HP ProLiant ML servers ProLiant BL460c ProLiant DL140 G3 ProLiant ML110G4 ProLiant BL465c ProLiant DL145 G3 ProLiant ML115 ProLiant BL480c ProLiant DL320 G5 ProLiant ML150 G3 ProLiant BL680c G5 ProLiant DL320s ProLiant ML370 G5 ProLiant BL685c ProLiant DL360 G5 ProLiant ML310 G4 ProLiant BL20p G4 ProLiant DL365 ProLiant ML350 G5 ProLiant BL25p G2 ProLiant DL380 G5 ProLiant BL45p G2 ProLiant DL385 G2 ProLiant DL580 G5 ProLiant DL585 G2 To access this memory, the OS needs to be capable of working with memory addresses above 4 GB.
 The way to access the rest of the RAM is to enable the PAE (Physical Address Extension). PAE is available in the following operating systems: • Microsoft Windows 2000 Advanced Server • Microsoft Windows 2000 Datacenter Server • Microsoft Windows Server 2003, Enterprise Edition • Microsoft Windows Server 2003, Datacenter Edition
Steps: To enable PAE, the C:\boot.ini file needs to be edited.
To edit this file, go to the control panel for the Windows OS.
1. Click Start, point to Settings, and then click Control Panel.
2. In the Control Panel, double-click System.
3. Click the Advanced tab, and then click Settings under Startup Recovery. 4. Under System Startup, click Edit to display the C:\boot.ini command line. The current boot.ini command probably reads something like the following: multi(0)disk(0)rdisk(0)partition(1)\WINDOWS=”Microsoft Server 2003 Enterprise” /noexecute=optin /fastdetect 5. Add the PAE command at the end so the command reads something like: multi(0)disk(0)rdisk(0)partition(1)\WINDOWS=”Microsoft Server 2003 Enterprise” /noexecute=optin /fastdetect /PAE 6. Click OK to apply the change. Then reboot the system, then you will see entire RAM which you have installed.

Kushantha Gunawardana
MSc-IT, C|EH, C|HFI, CISE, IEEE, MBCS, MCS (lk), MCSE (W2K) + M MCSA (W2K3), HNDIT
E kushantha@gmail.com

Get rid of Babylon Toolbar (Removal Instructions)

This toolbar is ad-ware comes with various free tools. Babylon toolbar set your home page to Babylon URL and always redirect to their own search instead of user desired search engine. It also post adds and disturbs general user routine. Also it steals user bandwidth and generates unintended traffic to various other websites without users knowledge. I recommend two easy steps to get rid from Babylon.
1. Go to add remove program feature, and uninstall Babylon toolbar from the computer.
2. Then goto -> Run command, and Type “Regedit” and press enter. Then go to “View”-> press “Find”, then Type “Babylon”, and delete all the entries it finds about Babylon. Then close it and again open Browser.Now at this point you can see again Babylon has changed your general URL to its own one. Now go to registry editor again and search for “Babylon”. Once you found it (Usually general URL), change the value to http://www.google.com or your desired home page.
This will remove Babylon redirection. If you need to remove this completely I recommend to  Download  “Malwarebytes Anti-Malware FREE”, Scan system and remove all the malware.
Kushantha Gunawardana
MSc-IT, C|EH, C|HFI, CISE, IEEE, MBCS, MCS (lk), MCSE (W2K) + M MCSA (W2K3), HNDIT
E kushantha@gmail.com