Search This Blog

Tuesday, November 19, 2013

குறைந்த செலவில் நிறைந்த மின்சாரம் - படிக்காத மேதையின் பலே கண்டுபிடிப்பு!



“படித்ததினால் அறிவு பெற்றோர் ஆயிரம் உண்டு.. பாடம் படிக்காத மேதைகளும் பாரினில் உண்டு..’ என்ற கண்ணதாசனின் காப்பிய வரிகளுக்கு கச்சிதமான உதாரணம் சுப்பிரமணியம்!

சுப்பிரமணியத்தின் சொந்த ஊர், ஈரோடு மாவட்டம் சென்னிமலை. குடும்பச் சூழலால் பத்தாம் வகுப்புக்கு மேல் தாண்ட முடியாத சுப்பிரமணியம் இப்போது, தனியார் கல்லூரியின் தற்காலிக ஊழியர். ஆனால், இவரது சாதனைப் பட்டியல், பெரிய சைன்டிஸ்ட் ரேஞ்சுக்கு நீள்கிறது.

மெட்ரிக் முறையில் இயங்கும் கடிகாரம், செலவைக் குறைத்து சுற்றுச்சூழலை பாதுகாக்கும் புதிய பெட்ரோல் இயந்திரம், தினசரி, மாத காலண்டர்களைப் போல வார காலண்டர், சாண எரிவாயு உற்பத்தியில் புதிய தொழில்நுட்பம், தமிழ் எழுத்து சீர்திருத்தத்துக்கான முயற்சி… என பல கண்டுபிடிப்புகளால் மிரட்டுகிறார் மனிதர்!

இதுமட்டுமா, சிலந்தி வலை சிக்கலில் எனது நாடு, டீசல், இந்தியா - உலக நாடுகள் பல்வகை ஒப்பீடு உள்ளிட்ட நூல்களையும் சுப்பிரமணியம் எழுதியுள்ளார். இதில், 'சிலந்திவலை சிக்கலில் எனது நாடு' என்ற நூலை, புதுச்சேரி மாநிலத்தில் உள்ள அனைத்து நூலகங்களிலும் வைக்க வேண்டும் என முதல்வர் ரங்கசாமி உத்தரவிட்டுள்ளது சிறப்பிலும் சிறப்பு.

"படிப்பு கம்மினாலும், புதுசா எந்தத் தகவல் கிடைச்சாலும் மறக்காம நோட்டுல குறிச்சு வைச்சிக்குவேன். அதைத் தொகுத்துத்தான் நூல்களா எழுதிருக்கேன். எட்டு மாசத்துக்கு முந்தித்தான் இப்ப நான் இருக்கிற வேலையில சேர்ந்தேன். அதுக்கு முந்தி கம்ப்யூட்டரை தொட்டுக்கூட பார்த்ததில்லை" என்று தன்னை வெளிச்சம் போட்டுக் கொள்ளும் சுப்பிரமணியம், கடந்த, 2000-ம் ஆண்டில், தமிழக அரசின், புதிய கண்டு பிடிப்புக்கான அறிவியல் ஆய்வாளர் விருது பெற்றவர்.

இந்த, 'வில்லேஜ் விஞ்ஞானி'யின் தற்போதைய கண்டுபிடிப்பு நவீன காற்றாலை

மின் உற்பத்தி இயந்திரம். அதுகுறித்து பேசியவர், ’’நம்ம மாநிலத்தில இருக்கிற காற்றாலைகள், வருஷத்துக்கு, 4 மாசம்தான் வேலை செஞ்சு, கரன்ட் உற்பத்தி பண்ணுது. அதுவும், வேகமா காத்து அடிக்கிற தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தேனி, கம்பம், உடுமலைப்பேட்டை, தாராபுரம் மாதிரியான ஊர்கள்ளதான் இந்த காற்றலைகளையும் அமைக்க முடியுது. இதுக்கான செலவும் அதிகம்.

ஆனா, நான் கண்டுபிடிச்சிருக்கிற மெஷின் லேசா காத்தடிச்சாலும் ஓடி கரன்ட் உற்பத்தியாகும். காத்து உராய்வு மூலமா, பெரிய ரெக்கைகள் சுத்தி, அது வழியா கரன்ட் உற்பத்தி பண்ணுறாங்க. இதுக்கு பதிலா, காத்து நேரடியா ரெக்கைகளை தள்ளினால், முழு சக்தி கிடைக்கும்; மின்சார உற்பத்தியும் அதிகரிக்கும்னு நினைச்சேன். அதைத்தான் இப்ப செஞ்சிருக்கேன்.

இப்ப இருக்கிற செங்குத்தான பெரிய ரெக்கைகளைக் கொண்ட காற்றாலைகள் மணிக்கு, 12 கி.மீ. வேகத்தில் காத்து வீசினாத்தான், மின்சார உற்பத்தி செய்யும். வருஷத்துல நாலு மாசம்தான், இந்த வேகத்தில் காத்து வீசும்ங்கிறதால, அப்ப மட்டுமே, மின் உற்பத்தி செய்யமுடியும். ஆனா, நான் வடிவமைச்சிருக்கிற காற்றாலையில மணிக்கு, 6 கி.மீ., வேகத்தில் காற்று வீசினாலே மின் உற்பத்தி செய்யமுடியும். அப்படிப் பார்த்தா வருஷத்துல 8 மாசம் மின் உற்பத்தி செய்ய முடியும்.

தற்போதுள்ள காற்றாலை இயந்திரங்களை, 300 மீட்டர் இடைவெளியில் தான் நிறுவமுடியும். என்னுடைய இயந்திரத்தை அருகருகே அமைக்க முடியும். காற்று எந்த திசையில் இருந்து வீசினாலும் மின் உற்பத்தி செய்யமுடியும். முதலில் சின்னதாக ஒரு மாடல் செய்து பார்த்தேன். அதில் வெற்றி கிடைத்ததால், அடுத்ததாய், நான்கு இறக்கைகளுடன் சற்று பெரிய அளவில் வடிவமைத்துள்ளேன். இதனை, 20 இறக்கைகள் வரை அதிகரித்தால், அதற்கு ஏற்ப மின் உற்பத்தியும் அதிகரிக்கும்’’ என்றார்.

கோவை, 'கொடிசியா'வில், புதிய கண்டுபிடிப்புகளுக்காக நடந்த கண்காட்சியில் இவரது கண்டுபிடிப்புக்கு ஏக வரவேற்பாம். பெருமையோடு இதை நம்மிடம் சொன்ன சுப்பிரமணியம், "இரண்டு இறக்கை கொண்ட காற்றாலை இயந்திரத்தை செய்ய, 60 ஆயிரம் ரூபாய் செலவானது. எனவே, எனது இயந்திரத்தை தனித்தனியாக அமைப்பது நடைமுறை சாத்தியமில்லை. அதிக அளவில் உற்பத்தி செய்யும்போது, செலவு குறையும்.

ராணுவத்தில் பணியாற்றும் முருகசாமி, எனது கண்டுபிடிப்பை ஊக்குவிக்க 35 ஆயிரம் ரூபாய் கடன் கொடுத்து இந்த இயந்திரத்தை உருவாக்க உதவினார். எட்டு மாதங்கள் பாடுபட்டு இந்த இந்திரத்தை செய்து முடித்திருக்கிறேன். எனது கண்டுபிடிப்புக்கு காப்புரிமை கேட்டு விண்ணப்பம் செய்திருக்கின்றேன். அரசு எனக்கு நிதி ஆதாரம்

வழங்கினால் தொழிற்சாலை தொடங்கி இந்த காற்றாலை இயந்திரங்களை அதிக எண்ணிக்கையில் தயாரித்துக் கொடுக்கத் தயாராய் இருக்கிறேன்’’ என்று சொன்னார்.

இவரது நவீன இயந்திரத்தைக் கொண்டு மணிக்கு, 6 கி.மீ. வேகத்தில் காற்று அடிக்குமானால் ஒரு நாளில் 4 யூனிட் வரை மின் உற்பத்தி செய்ய முடியுமாம். இறக்கைகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்தினால், மின் உற்பத்தியின் அளவை அதிகரிக்க முடியும். சாதாரணமாக வீட்டின் மாடியில் இதனை பொருத்திவிட்டால், எட்டு மாதத்துக்கு மின்சாரம் தடையின்றி பெறமுடியும்.

ஆயிரக்கணக்கில் கோடிகளை கொட்டி அணு உலைகளை அமைத்து மின்சாரம் தேடும் ஆட்சியாளர்கள் தனது எளிய கண்டுபிடிப்பை அங்கீகரிக்கத் தயங்குவதாக ஆதங்கப்படுகிறார் சுப்பிரமணியம், ‘’அதற்காக நான் சோர்ந்துட மாட்டேன் சார்.. எடிசனையே அவர் ஆயுசு இருக்கும் வரைக்கும் இந்த உலகம் கண்டுக்கல. அதேமாதிரி, என்னையும் ஒருநாள் இந்த உலகம் கண்டுக்கும். அதுவரைக்கும் நாட்டுக்கு

தேவையான நல்ல விஷயங்கள் எதையாவது கண்டுபிடிச்சுக்கிட்டே இருப்பேன் சார்’’ நம்பிக்கை துளிர்க்கச் சொன்னார் சுப்பிரமணியம்.

எஸ். கோவிந்தராஜ்

பக்கவாதம் நோய் பற்றிய தகவல்கள்:-



பக்கவாதம் என்பது ஸ்ட்ரோக் என்று ஆங்கிலத்தில் அறியப்படுகிறது. மூளைக்குச் செல்லும் ரத்த நாளங்களில் ஏற்படும் அடைப்பு, கசிவு போன்ற சில பிரச்சினைகளால் ஏற்படுவதுதான் பக்கவாதமாகும்.

ரத்த திட்டுக்கள் ஏதேனும் ஒன்று மூளைக்குச் சென்று அங்குள்ள நாளங்களை அடைத்து விட்டாலும் பக்க வாதம் ஏற்படும். இது யாருக்கும், எப்போது வேண்டுமானாலும் ஏற்படலாம். இந்த நோய் வருவதற்கு முன்பு எந்த அறிகுறியும் இருக்காது.

இதனைத் தடுக்க, உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு, இதய நோய்கள் போன்றவற்றிற்கு உரிய சிகிச்சை அளித்து உடல் இயக்கத்தை சீராக வைத்துக் கொள்ள வேண்டும். புகைக்கும் பழக்கம் பக்கவாதத்திற்கு காரணமாக அமையலாம். எனவே புகைப்பிடிக்கும் பழக்கம் இருப்பவர்கள் அதனை கைவிட வேண்டும்.

குறைந்த கொழுப்பு உள்ள உணவுகள், மற்றும் குறைந்த உப்பை உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.

தினமும் உடற்பயிற்சி செய்வது இன்றியமையாததாகிறது.

பக்கவாதத்தின் காரணமாக ஏற்படும் பிரச்சினைகள்

உடலின் ஏதேனும் ஒன்று அல்லது இரண்டு உறுப்புகள் செயல்படாமல் போவது, பலகீனம், பார்வைக் குறைபாடு, நினைவுத் திறன் குறைவது, ஒரு காரியத்தை செய்ய உடலின் ஒத்துழைப்பு இன்மை, உடல் வீக்கம், அடிக்கடி மயக்கநிலை, சிறுநீர் தொடர்பான உபாதைகள் போன்றவை பக்கவாதத்திற்கு அடிப்படைக் காரணிகளாக அமைகின்றன.

இவற்றை, சிடி அல்லது எம்ஆர்ஐ ஸ்கேன் பரிசோதனைகள் மூலமாகவோ, இசிஜி, ஸ்கேன் போன்றவற்றைக் கொண்டு அறிந்து கொள்ளலாம்.

மிகப்பெரிய பிரச்சினை

சில சமயங்களில் பக்கவாத நோயால் நோயாளிகளுக்கு மிகப்பெரிய பிரச்சினைகள் அல்லது நிரந்தர ஊனம் ஏற்பட்டு விடுகிறது.

ரத்த அழுத்தம் அதிகரித்து ரத்த நாளங்களில் பாதிப்பு, உடலில் வாய், கை அல்லது கால்களின் அசைவுகள் முற்றிலுமாக முடங்கிப்போவது, எலும்பு முறிவு, மூட்டுகள் விடுபட்டுப் போவது, தசைகள் கிழிவது, மூளையின் செயல்பாடு நின்றுப்போவது, சுயமாக எதையும் செய்ய இயலாமல் போவது போன்ற பல பிரச்சினைகளை பக்கவாதம் ஏற்படுத்திவிடுகிறது.

சிகிச்சை முறைகள்

முன்பெல்லாம் பக்கவாதம் வந்துவிட்டால் ஆயுள் முழுவதும் படுக்கையிலேயே இருக்க வேண்டிய நிலை இருந்தது. ஆனால் இப்போது பக்கவாதம் வந்தவர்கள் பல்வேறு பயிற்சிகளுக்குப் பிறகு இயல்பான வாழ்க்கை வாழ வழி ஏற்பட்டுள்ளது.

மேலும், பக்கவாதம் வந்தவுடன் சில மருந்துகளைக் கொடுத்து உடனடியாக ரத்த ஓட்டத்தை சீரடைய வைத்து கோமா அல்லது நிரந்த பக்கவாதத்தில் இருந்து நோயாளிகளைக் காப்பாற்றும் சிகிச்சை முறைகள் வந்துவிட்டன.

மூளையில் ரத்த திட்டால் ஏற்பட்ட பக்கவாதத்தை உடனடியாகக் கண்டறிந்து தலையில் அறுவை சிகிச்சை செய்து நோயாளியை காப்பாற்றும் முறை வந்துள்ளது.

ரத்த நாளங்களில் உள்ள அடைப்புகள், ரத்த திட்டுக்கள் போன்றவற்றை உடலில் பரிசோதனை செய்து அவற்றை முன்கூட்டியே நீக்குவதால் மேற்கொண்டு பக்கவாதம் வராமலும் தடுக்க முடியும்.

பக்கவாதம் பாதித்தவர்களுக்கு உடனடியாகக் கொடுக்கப்படும் சிகிச்சையை விட, பிறகு அவர்களுக்கு அளிக்கும் பிசியோதெரப்பி பயிற்சியே நல்ல முன்னேற்றத்தை அளிக்க உதவும்.

பேசும் பயிற்சி, கை, கால்களை அசைக்க பயிற்சி, நடக்கும் பயிற்சி, சிறுநீரை அடக்கும் பயிற்சி போன்றவையும் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அளிக்கப்படுகிறது

கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர்களின் இறுதி காலம்

 கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர்களின் இறுதி காலம் குறித்து பெரும்பாலான மக்களுக்கு தெரிய வாய்ப்பில்லாமல் போனது வருந்தத்தக்கது. தமிழனுக்கே உரியதாக சொல்லப்படும் தன்மான உணர்வை உண்மையிலேயே கொண்டிருந்த திரு வ.உ.சி அவர்கள் சுதேசி கொள்கையைமுன்னெடுக்கும் விதத்தில் உருவாக்கிய சுதேசி கப்பல் தொழிலும் நலிவடைய, போராட்டத்தின் காரணமாக சிறை சென்றதால் வழக்கறிஞராக பணியாற்றவும் தடைவிதித்தது ஆங்கில அரசு. 1908 ஆம் ஆண்டு சிறை சென்ற வ.உ.சி அவர்கள் 1912 டிசம்பர் மாதம் விடுதலையானார். சென்னை சிந்தாதிரிப்பேட்டை, மயிலாப்பூர், பெரம்பூர், என பல்வேறு இடங்களில் குடியேறினார். சென்னை, கோவை, ஒட்டப்பிடாரம், கோவில்பட்டி, தூத்துக்குடி, என பல்வேறு ஊர்களில் வாழ்ந்து பார்த்தார்.ஆனால் வறுமை அவரை வாழ விடவில்லை.. சிந்தாதிரிப் பேட்டையில் ஒரு சிறிய வீட்டில் தன் மகளோடு குடியேறினார்.ஒரு சிறிய மளிகை கடையை துவங்கி நடத்தினார். வியாபாரம் குறிப்பிடும் படி இல்லாமல் போகவே வீடு வீடாக சென்று மளிகை பொருட்களின் தேவையை பட்டியல் (லிஸ்ட்) எடுத்து வந்து தன் மகளின் உதவியோடு அந்தந்த வீடுகளுக்கு விநியோகம் செய்து அதில் கிடைத்த சொற்ப தொகையில் வாழ்ந்து வந்தார். அரிசி விற்றார், மண்ணெண்ணெய் விற்றார், ஆனால் தன்மானத்தை விற்கவில்லை.யாரிடமும் கையேந்தவில்லை. சுயராஜ்ய நிதியிலிருந்து திலகர் மாதந்தோறும் அனுப்பி வைத்த 50 ரூபாய் அவருக்கு ஓரளவு உதவியாக இருந்தது. தென் ஆப்ரிக்க தமிழர்கள் இதனை கேள்வி பட்டு ஒரு தொகையை வ.உ.சி யிடம் சேர்க்குமாறு காந்தியிடம் கொடுத்தனுப்பினர்.ஆனால் ஏனோ அது வ.உ.சி-க்கு வந்து சேரவில்லை. "இப்போது இருக்கும் நிலையில் அந்த பணம் வேண்டாம் என்று நான் சொல்லப்போனால் அது நான் எனக்கும் என் குடும்பத்தார்க்கும் இழைத்த தவறாகிவிடும் " என்று வெட்கத்தை விட்டு காந்திக்கு கடிதம் எழுதும் அளவிற்கு வ.உ.சி இருந்தார்.. அவர் இறுதி காலத்தில் எழுதி வைத்த உயில் கண்ணீர் வரவழைக்கும். தூத்துக்குடி சரோஜினி ஸ்டோர்ஸ் ஜவுளி கடைக்கும், வன்னிய தெரு எண்ணெய் கடைக்கும் எவ்வளவு கடன் வைத்துள்ளேன் என்பதை சொல்லியிருந்தார். நண்பர்களே இதை படித்து விட்டு like போடவேண்டும் என்பது இந்த பதிவின் நோக்கமல்ல. படித்து விட்டு இனி இந்த காங்கிரசுக்கு நான் வாக்களிக்க மாட்டேன் என உறுதி கொண்டவர்கள் like செய்யுங்கள். தயவு செய்து பகிருங்கள்.

மனதைக் கரைத்து விட்டது இந்த அழகான கதை

" 'நம் உடம்பிலே மிக முக்கியமான உறுப்பு' என்ற தலைப்பில் ஆசிரியர் தன் மாணவர்களை ஒரு கட்டுரை எழுதச் சொன்னார்.அந்த வகுப்பில் உடல் ஊனமுற்ற ஒரு சிறுமியும் இருந்தாள். கட்டுரைக்கான தலைப்பே அவளுக்கு பிடிக்கவில்லை. தவிர, சக மாணவர்கள் அந்தச் சிறுமியின் ஊனத்தைச் சொல்லி கிண்டல் செய்ய.. அன்றைய வகுப்பு பாவம் அவளுக்கு நரகமாகக் கழிந்தது.

மாலை வீடு திரும்பியதும் அந்தச் சிறுமி தன் தாயின் தோள்களில் சாய்ந்து அழுதபடியே கேட்டாள்.. "நம் உடம்பில் முக்கியமான உறுப்பு எதும்மா?"

"உடம்பிலே கண் தான் மா முக்கிய உறுப்பு! ஏன் என்றால், கண் இல்லையெனில் உலகமே இருட்டாகி விடுமே" என்று சொன்னாள் அம்மா. ஆனால், அதைச் சரியான பதிலாக அந்தச் சிறுமியால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. "அப்படியானால் கைகள் தான் முக்கியமான உறுப்பு. அது இல்லையென்றால் நம்மால் எழுதவோ, வேறு எந்த வேலையும் செய்ய முடியாது இல்லையா" .. அம்மாவின் இந்த பதிலையும் சிறுமியால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை

கடைசியில் அந்தச் சிறுமியே ஒரு பதிலைச் சொன்னாள்.. " நம் உடம்பில் தோள்கள் தான்மா முக்கியமான உறுப்பு. மற்ற உறுப்புக்கள் எல்லாம் நமக்கு உதவியாக இருக்கும். ஆனால், தோள்கள் தான் ஆதரவு தேடும் அன்பு முகங்கள் புதைந்து கொள்ள இடம் கொடுக்கும். இதோ, நான் கூட இப்போது உன் தோள்களிலே முகம் புதைந்து அழுகிறேன். என்னைப் பொறுத்தவரை அடுத்தவர் அழுவதற்கு இடம் கொடுக்கும் தோள்கள் தான் உடம்பிலே முக்கியமான உறுப்பு!"

மலையாள சினிமாவின் மகாராஜாக்கள்.

ஒரு திரியளவு, பஞ்சை, மேலும் பக்குவமாய் திரித்து, நாசிக்குள் நுழைத்தால், வரும் அந்த முதல் தும்மல், கொஞ்சம் சிரம காரியம் தான் எனினும்,அதற்குப் பின் நிகழும் அந்த சுவாசம் ரொம்ப சந்தோஷமான அனுபவம்.

இந்திய சினிமாவின், வர்த்தக நாசிக்குள், தும்மல், அதுவாக வந்தால் தான் உண்டு. ஏனெனில், சுவாசிக்க கூட, மறந்து பணம் பண்ணிக் கொண்டிருக்கும் பாவப் பட்ட ஜீவன் அது. மறைந்த ரிது பர்ன கோஷ், இன்றும் பிரகாசிக்கும் ரிதிவிக் கட்டக் போன்றவர்கள் இந்திய சினிமா நாசியில் தும்மல் எழுப்பிய சில திரிகள்.

தென்னிந்திய சினிமாவில், அந்த தும்மல், அடிக்கடி நிகழும் ஒரே நாசி மலையாள சினிமா தான் என்று பகவதி அம்மன் அருள் வாக்கு மாதிரி ,சினிமாவைப் பின் தொடர்பவர்களால் மிக உறுதியாக சொல்ல முடியும். ஆயிரத்து தொள்ளயிரத்து ஐம்பதுகளில், அப்புறம் எண்பதுகளில்,அங்கே விழுந்த தும்மல், கொஞ்சம் வடக்கத்தி பக்கமும்,நிறைய நம் தமிழ் பக்கமும் தொடர் தும்மல்களை ஏற்படுத்தி இருந்திருக்கிறது.

இப்போது மறுபடியும், மாற்றத்திற்கான அந்த தும்மல் மலையாளத்தில் நிகழ்ந்திருக்கிறது. அவர்கள் கொஞ்சப் பேர் தான். விரல் விட்டு எண்ணி விடலாம்.

ஆனால்,தம் படங்களில் வாய்ஸ் ஓவருக்கு மட்டும் மோகன்லாலையும்,மம்முட்டி யையும் பயன்படுத்தினால் போதும் என்கிற முடிவு எடுக்கிற மாதிரியான மன வலிமை படைத்தவர்கள்.

முன் மண்டை வழுக்கையான, கொஞ்சம் அசந்தர்ப்பமான மூக்கும் கொண்ட பஹத் பாசிலை நம்பி கதை சொன்னவர்கள். ஆரம்பத்தில் அடி வாங்கினாலும்,இன்று அவர்களை இந்திய சினிமாவே உற்று கவனிக்கிறது. ஆகவே,நாமும்.

ராஜேஷ் பிள்ளை,அமல் நீராட்,ஆசிக் அபு, அன்வர் ரஷீத், சமீர் தாகிர்,ராஜீவ் ரவி,சலீம் அஹ்மத்,வினீத் ஸ்ரீனிவாசன், ஷ்யாம் பிரசாத், அஞ்சலி மேனன்,ரூபேஷ் பீதாம்பரம்,சித்தார்த் பரதன்,லால் ஜோஸ், இப்படி தொடரும் இவர்கள் தான் இன்றைய மலையாள சினிமாவின் மகாராஜாக்கள்.

இவர்களில், எர்ணாகுளம்,மகாராஜாஸ் காலேஜ் தந்த மகாராஜாக்கள் மிகக் குறிப்பிடத் தக்கவர்கள்.

ஏனெனில்,கல்லூரி நட்பும்,கனவும்,உண்மையாகும் போது, அது அந்த நண்பர்கள் சார்ந்த ஒரு துறைக்கே, மாற்றத்தைக் கொணர்வதாக இருக்கக் கூடும் என்பதை உங்கள் கையில் இப்போது தவழும் அந்திமழை மாதிரி, சினிமாவில் நிரூபித்தவர்கள் இவர்கள்.இவர்களுடைய கல்லூரி சீனியர்கள் ஆன மம்முட்டி,திலீப் மாதிரி.

அமல் நீராட்,அன்வர் ரஷீத்,ஆசிக் அபு,ராஜீவ் ரவி, இவர்களுடன் நடிகர் சலீம் குமார். இந்த எர்ணாகுளம் மகாராஜாக்கள் தந்த சில படைப்புகள் மலையாள சினிமாவின் கண்களை மறுபடி திறந்து வைத்தவை.

ஆதாமிண்டே மகன் அபு,
சாப்பா குரிசு,
அன்னையும் ரசூலும்,
சால்ட் அண்ட் பெப்பர்,
22,பீமேல் கோட்டயம்,
அஞ்சு சுந்தரிகள்,
டைமண்ட் நெக்லஸ்,
அன்வர்,
பிக் பீ,
நீல ஆகாசம்,
பச்சக் கடல்,
சுவர்ண பூமி
இவையெல்லாம் இந்த மகாராஜாக்களின் பெயர் சொன்னவை,சொல்பவை.

அமல் நீராட்-டிடம் இருந்து ஆரம்பிக்கிறது மலையாள சினிமாவை மாற்றிய இந்த எர்ணாகுளம் மகாராஜாசின் மகா கனவு.

டாடி கூல், சாப்ப குரிசு, டைமன்ட் நெக்லஸ்,நீலாகசம் பச்சக் கடல் சுவர்ண பூமி,ஆகிய குறிப்பிடத்தக்க படங்களை இயக்கிய சமீர் தாகிர், அமலை தங்களின் குரு என்கிறார்.

அமல் நீரட் எர்ணாகுளம் மகாராஜஸ் கல்லூரி யின் யூனியன் சேர்மன் ஆக இரண்டு முறை தேர்ந்தெடுக்கப் பட்டவர் (1992-93,1993-94). ஆனால்,இந்த கேங் கின் ஆதார சுதியாக இருக்கும் போட்டோ கிராபி தான் அமலையும் சினிமாவுக்குள் இழுத்து வந்தது. அமல் ஒளிப்பதிவாளர் ஆகப் பணியாற்றிய "ப்ளாக் (2004)" மம்முட்டி நடித்து சூப்பர் ஹிட் ஆனதும், ராம்கோபால் வர்மாவின் மாஸ்டர் பீஸ்,சிவா(89)வின் தொடர்ச்சியான சிவா(2006) ஹிந்தி,தேடி வந்தது.

அன்வர் (2010) - மலையாளத்தில் ,அமல் இயக்கிய முக்கியமான திரைப்படம்.

அமல் நீரட் மாதிரியே சினிமாட்டோகிராபியை தன் கனவாகக் கொண்டு கல்லூரியில் திரிந்தவர் ராஜீவ் ரவி. அமலைக் காட்டிலும் அதிக உயரத்திற்கு ஒளிப் பதிவில் போனவர்.

மொத்த பாலிவுட் உலகமும் தேடும்,கொண்டாடும் ஒளிபதிவு இயக்குனர். அவர் ஒளிப் பதிவு செய்த முதல் படம் மது பண்டார்க்கர் இயக்கிய "சாந்தினி பார்(2001)". "தேவ் டி", அனுராக் காஷ்யப்பின் "கேங்க்ஸ் ஆப் வாசிப்பூர்" பார்ட் 1&2, "மான்சூன் சூட் அவுட்" இவையெல்லாம் ராஜீவ் ரவியின் பாலிவுட் பெயர் சொல்லும் சில படங்கள்.

லால் ஜோஸ் இயக்கிய "கிளாஸ் மேட்ஸ்" என்னும் மனதில் நிற்கும் மலையாள கவிதைக்கு ஒளிப் பதிவு ராஜீவ் ரவி தான். ராஜீவ் ரவி முதன் முதலாக இயக்கிய படமும் ஒரு கவிதை தான்."அன்னையும் ரசூலும்(2013)".

ராஜீவ் ரவியின் அசிஸ்டெண்ட் ஆக சினிமாவுக்குள் நுழைந்தவர் தான் சமீர் தாகிர். எனினும் அமலைப் போலவோ,ராஜீவைப் போலவோ சினிமா கனவுகளுடன் இருந்தவரில்லை. ஆனாலும் சமீரின் அடிப்படை போட்டோ கிராபிதான்.

அவர் அதிகபட்சம் ஆர்வம் காட்டியது திருமண வீடியோ,புகைப் படங்கள் எடுப்பதில்தான். ஆனால்,ஒரு குழுவாக, அதிலும் கல்லூரித் தோழர்களாக இயங்குவதன் பூரண பலன் சமீருக்குக் கிடைத்தது. அமல் நீரட் டின் " பிக் பி"படத்தின் ஒளிப்பதிவாளர் சமீர் தான். லால் ஜோஸ் இயக்கிய "டைமன்ட் நெக்லஸ்" படத்திற்காக சிறந்த ஒளிப் பதிவாளர் விருது அவருக்கு கிடைத்தது.

ஆனால்,சமீர் தாகிரின் பெயர் சொன்ன படம் "சாப்ப குரிசு". அவர் இயக்கியது. அவருடைய லேட்டஸ்ட்" நீல ஆகாசம் பச்சக் கடல் சுவர்ண பூமி". மம்முட்டியின் மகன், தல்கர் சல்மான் நடித்த Road Movie.

தல்கர் சல்மான் நடித்த இதற்கு முந்தைய படம் மறக்க முடியாத ஒன்று. "உஸ்தாத் ஹோட்டல்(2012)".இதை இயக்கியவரும் எர்ணாகுளம் மகாராஜாஸ் கல்லூரியின் மகாராஜாக்களில் ஒருவர் தான்.

அவர் பெயர் அன்வர் ரஷீத்.

தன்னுடைய முதல் படத்தில் மம்முட்டியை இயக்கியவர் "ராஜமாணிக்கம் -(2005)". இன்னொரு கமர்சியல் படமான "சோட்டா மும்பை - (2007)க்கு" அப்புறம் அன்வர் ரஷீத் இயக்கிய உஸ்தாத் ஹோட்டல் மலையாள சினிமாவின் மிக முக்கியமான சினிமாவாக விமர்சகர்களால் குறிப்பிடப்பட்ட ஒன்று.

அமல் நீரட்டின் நட்பும்,கொட்டேஷன் படத்தை இயக்கிய வினோத் விஜயனின் அருகாமையும் அன்வர் சினிமாவுக்குள் தன் கனவுகளைக் கடைவிரிக்க உதவின.

டிராமா, யூத் பெஸ்டிவல்கள்,போட்டோ கிராபி தான் அன்வரின் கனவு ஆதாரமும். "உண்மையில் மகாராஜாஸ் கல்லூரியைத்தான் எனக்கும் என் சினிமாவுக்கும் காரணமாக சொல்லவேண்டும்" என்று சொல்லும் அன்வர் ரஷீத் தை நம்பித் தான் மலையாள சினிமாவின் பெரிய பட்ஜெட் படங்கள் உருவாகின்றன.

ஆஷிக் அபுவும் ஸ்டூடண்ட் யூனியன் மெம்பர் தான். அப்படி, நான்கு வருடங்கள் தொடர்ந்து இருந்தவர்.

"எர்ணாகுளம் மகாராஜாஸ் கல்லூரி யில் நாங்கள் படித்ததாக நினைவில்லை,ஆனால்,வாழ்க்கையைக் கற்றுக் கொண்டோம்,எங்கள் கனவுகளைச் சுமக்கவும்"என்று ஒரு மலையாளப் பத்திரிகைப் பேட்டியில் சொல்லியிருக்கும் ஆஷிக் அபுவின் சால்ட் அண்ட் பெப்பர் ரசனையான காதல் சமையல் கவிதை. இன்று சக்கை போடு போட்டுக் கொண்டிருக்கும் ஹிந்தி " லஞ்ச் பாக்ஸ் "கூட இதன் பாதிப்பு தான் என்கிறார்கள்.

"22 பீமேல் கோட்டயம்" ஆஷிக் அபு இயக்கிய மறக்க முடியாத படம்.

ஆஷிக் அபுவின் ஆரம்பம் விளம்பர படங்களில் தான். ஆலுக்காஸ்,மாத்ருபூமி,பேனசோனிக் ஆகியவை அவரது முக்கியமான விளம்பர க்ளையண்ட்டுகளில் சில.இப்போது போஸ்டர்களில் ரகளையை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் மோகன் லாலின் "கொடுங்காட்டு" பட இயக்குனரும் ஆஷிக் தான்.

மேற்சொன்ன மகாராஜாக்கள் எல்லாம் படிக்கிற காலத்தில்,கேரளாவில் கல்லூரி களுக்கு இடையே நடக்கிற யூத் பெஸ்டிவல்கள் ரகளையாகவும்,
ரசனையாகவும்,அதிக போட்டியுடனும் இருக்கும்.

அப்போதெல்லாம்,நம்பி,இவர்களும்,இவர்கள் கல்லூரியும் அனுப்பி வைத்த தனிநபர் திறமை அதிகம் கொண்ட தோழர்தான் நடிகர் சலீம் குமார்.

இவர்கள் மொத்த பேருமே பெருமைப் படக் கூடிய படமொன்றில் நடித்தவர்,ஏன்,உண்மையில் அது மலையாள சினிமா உலகமே,பெருமைப் படக் கூடிய எளிய மனிதனின் சினிமாவும்தாம்.

அதன் பெயர் "ஆதாமிண்டே மகன் அபு".

இதை இயக்கிய "சலீம் அஹ்மத்",

உஸ்தாத் ஹோட்டலுக்கு திரைகதை எழுதிய, மஞ்சாடிக் குரு என்கிற அற்புதமான படத்தை இயக்கிய "அஞ்சலி மேனன்",

நித்ரா வை இயக்கிய "சித்தார்த் பரதன்",

மோகன்லாலை வைத்து ரெட் வைன் இயக்கிய "சலாம்பாப்பு",

தீவ்ரம் என்கிற டார்க் பிலிமை இயக்கிய "ரூபேஷ் பீதாம்பரம்",

நீலத் தாமர,டைமன்ட் நெக்லஸ்,கிளாஸ்மேட்ஸ் படங்களை இயக்கிய "லால்ஜோஸ்" என்று நீளும் மலையாள சினிமாவின் புதிய பாதை விருப்பு வெறுப்பற்று,கூச்சப் படாமல் எதையும் பேசும் சினிமாவை நம் கண்முன் தவழ விட்டுக் கொண்டிருக்கிறது.

எளிய மனிதர்களின் அன்றாட நிகழ்வை,பணத்தில் புரளும் புதிய தலைமுறை சமூகத்தின் வாழ்க்கையை, வக்கிரத்தை,தனிமனித ரசனை, சோகம், காதல், மரணங்களைப் பதிவு பண்ணுவதோடு,அதை
கமர்சியல் ஆகவும் வெற்றிப் பெற செய்தது தான் இந்த "கேங்க்ஸ் ஆப் கேரளா"வின் நவீன சினிமா சாதனை.

கடவுளின் சொந்த பூமி என்கிற கால கால மலையாளக் கனவை உடைத்து,வறுமையும்,பீடி வலித்தே வயிறு நிரப்பும் மனிதர்களும் இங்கே உண்டு என்று சொன்னவர்களும் இந்த புதிய தலைமுறை இளைஞர்கள் தான்.

இல்லையென்றால் பஹத் பாசில் போன்ற அற்புதமான நடிகனை மலையாள சினிமாவோ,இல்லை நாமோ ஏற்றுக் கொண்டிருப்போமா என்பது சந்தேகம் தான். மம்முட்டியும், மோகன்லாலும் இவர்கள் பின்னே போவதற்கும் இந்த சினிமாவை உடைத்த சினிமா கேங்க்ஸ் தான் காரணம்.

"அந்த நாட்கள் மிக வறுமையானவை. கொஞ்சம் ரொட்டியும்,வாழைப்பழங்களும்,ஒரு பாட்டில் தண்ணீரும் எடுத்துக் கொண்டு திருவனந்தபுரத்தில் நடக்கும் பிலிம் பெஸ்டிவல்களுக்கு நாங்கள் பயணப் பட்ட போது,எங்கள் கையில் இருந்தது கொஞ்சம் ரூபாய் நோட்டுகளும்,டன் கணக்கில் கனவுகளும் தான்"...... என்று அமல் நீரட் தன் கேங்க்ஸ் ஆப் மகாராஜாஸ் காலேஜ் வாழ்க்கையை நினைவு கூறும்போது, அந்த கனவுகள் மாற்றிப் போட்டிருக்கிற மலையாள சினிமாவைப் பார்த்து பொறாமையும், வருமா தமிழில் இப்படி ஒரு கேங் என்கிற ஏக்கமும் மிஞ்சுகிறது.


-குமரகுருபரன்



(அந்திமழை அக்டோபர் 2013 மாத இதழில் வெளியான கட்டுரை)

ஆங்கில படங்களை தழுவி அல்லது ஆங்கில படங்களின் பாதிப்பில், அல்லது ஆங்கில படங்களின் தாக்கத்தில் எடுக்கப்பட்ட நடிகர் கமல்ஹாசனின் படங்கள்

ஆங்கில படங்களை தழுவி அல்லது ஆங்கில படங்களின் பாதிப்பில், அல்லது ஆங்கில படங்களின் தாக்கத்தில் எடுக்கப்பட்ட நடிகர் கமல்ஹாசனின் படங்கள் பற்றிய சிறு குறிப்பு !

தவறாக இருந்தாலும் சுட்டி காட்டலாம் நீங்கள்.


Romance on the High Sea"s (1948) - மன்மதன் அம்பு (2010)

Butterflies are free (1972 ) - ராஜபார்வை (1982)

The reincarnation of Peter Proud (1975 ) - எனக்குள் ஒருவன் (1984 )

Moon over Parador (1988 ) - இந்திரன் சந்திரன் (1990)

The Prinicpal (1987 ) - நம்மவர் (1994)

Tie me Up, Tie me Down (1990 ) - குணா (1991 )

HardCore (1979 ) - மகாநதி (1994 )

Very Bad Things (1998) - பஞ்ச தந்திரம் (2002)

Mrs.Doubtfire (1993) - அவ்வை சண்முகி (1996 )

What about Bob (1991) - தெனாலி ( 2000 )

Planes, Trains, Automobiles (1987) - அன்பே சிவம் (2003)

9 to 5 (1980) - மகளிர் மட்டும் (1994 )

She Devil (1989) - சதி லீலாவதி (1995 )

Greencard (1990 ) - நள தமயந்தி (2003 )
 — 
149

இசையமைப்பாளர் "சலீல் சவுத்ரி"

"செம்மீன்" படத்தில் வரும் "கடலினக்கற போனோரே" பாடல், தமிழ் ரசிகர்களின் மனதில் கிட்டத்தட்ட நாற்ப்பதாண்டுகளுக்கு மேலாக பதிந்து நின்றது என்கிறார்கள் இசை விமர்சகர்கள்.

தமிழ் திரைப்பட காவியங்கள் என்று ரசிகர்களால் சிலாகிக்கப்படும் 'அழியாத கோலங்கள்" படத்தில் வரும் "பூவண்ணம் போல மின்னும்" பாடலை யாரால் மறக்க முடியும் ???

இப்படியான பாடலை நமக்கு தந்து சென்ற இசையமைப்பாளர் "சலீல் சவுத்ரி" அவர்களின் பிறந்த நாள் இன்று. வங்காள இசையமைப்பாளரான இவர் எப்படி தமிழுக்கு அழைத்து வரப்பட்டார் என்று ஒரு கவிதையை போல சொல்லி இருக்கிறார் பாலு மகேந்திரா. இனி பாலு மகேந்திரா என்ன சொல்லி இருக்கிறார் என்பதை பார்க்கலாம். 



சலீல் சவுத்ரி பற்றி பாலு மகேந்திரா:
-------------------------------------------------


பூனே திரைப்படக் கல்லூரியில் எனது படிப்பை முடித்து தங்கப் பதக்கம் வென்று நான் வெளிவந்த வருடம் 1969. செம்மீன் புகழ் ராமு கரியாத், அதற்கடுத்து இயக்கிய நெல்லு என்ற மலையாளப் படத்தின் ஒளிப்பதிவாளராக என்னை அறிமுகப்படுத்துகிறார். இது வருடம் 1971-ல் நிகழ்கிறது.

நெல்லு படத்தின் இசையமைப்பாளர் சலீல் சௌத்ரி. செம்மீன் படத்திற்கும் அவர்தான் இசையமைத்திருந்தார். இந்தியத் திரையிசையின் மகா மேதைகளில் ஒருவர் சலீல் சொத்ரி. நெல்லு படத்தின் ஒளிப்பதிவைப் பார்த்து பிரமித்துப் போன அவர் என் மீது மிகவும் பிரியமாக இருந்தார். அந்தப் பிரியத்தின் வெளிப்பாடாக அவர் ஒரு நாள் என்னிடம் சொன்னார். ”பாலு நீ இயக்கும் முதல் படத்திற்கு நான் தான் இசையமைப்பேன்”. இந்திய இசைவானில் தன்னிகரற்ற தனி நட்சத்திரமாகத் திகழ்ந்த அந்த மகா வித்வானின் அன்புக் கட்டளை அது.

அவர் விரும்பியபடியே,எனது முதற் படமான “கோகிலா”வுக்கு அவரே இசையமைத்து என்னை ஒரு இயக்குனராகத் துவக்கி வைத்தார். அது நடந்த வருடம் 1976. கன்னட கோகிலாவைத் தொடர்ந்து நான் இயக்கிய இரண்டாவது படம் “அழியாத கோலங்கள்” தமிழ்ப்படம். இந்தப் படத்திற்கும் சலீல் சௌத்ரியே இசை அமைத்தார்.

-----------------

இப்படியாகத்தான் தமிழ் திரையுலகிற்கு சலீல் சவுத்ரி கிடைத்தார். இது மட்டுமல்ல "பூவண்ணம் போல மின்னும்" பாடல் மெட்டை அவர் தமிழிலில் மட்டுமல்லாமல், மலையாளத்திலும், வங்காளத்திலும் பயன்படுத்தியுள்ளார்.


1977-ல் மலையாளத்தில் வெளிவந்த “ஏதோ ஒரு ஸ்வப்னம்” படத்தில் யேசுதாஸை வைத்து இதே மெட்டில் ஒரு பாடல் கொடுத்திருக்கிறார் சலீல் சவுத்ரி.

அதே போல் 1980-களில் வெளிவந்த “அந்தர்காட்” என்கிற வங்காள படத்தில் “கிஷோர்குமாரயும், லதா மங்கேஷ்கரயும்” இதே மெட்டில் பாட வைத்தார் சலீல்.

ஒரு தலைமுறை தமிழர்களின் வாழ்வில் ஒன்றாக கலந்துவிட்ட “சலீல் சவுத்ரிக்கு” பிறந்த நாள் வாழ்த்துக்கள் !

மருத்துவத்திற்கு பயன்படும் இலை காய்கறி



நாம் பொரியலுக்கு பயன்படுத்துவதில் முட்டைகோஸ் முக்கிய பங்கு வகிக்கிறது. இலைக்காய்கறிகளில் ஒன்றான முட்டைகோஸின் நன்மைகள் பற்றி நாம் அதிகம் தெரிந்திருப்பதில்லை. முட்டைகோஸ் வெள்ளை, சிவப்பு, பச்சை மற்றும் ஊதா போன்றவை நிறங்களில் உள்ளது. இவை அனைத்தும் ஆரோக்கியம் தரும் உணவுகளே. இதில் பைட்டோ நியூட்ரியண்டுகள் மற்றும் வைட்டமின்களான ஏ, சி மற்றும் கே போன்ற சத்துகளை கொண்டுள்ளது. 

இவை உடலை தாக்கும் புற்றுநோய், இதயநோய், போன்றவற்றை தடுக்கும். இதில் நார்சத்துகளை கொண்டுள்ளதால் செரிமான பிரச்சனை மற்றும் மலச்சிக்கல் பிரச்சனைகளை சரிசெய்கிறது. குறிப்பாக முட்டைகோஸை சமைக்கும் போது அளவுக்கு அதிகமாக வேகவைத்து சாப்பிடக்கூடாது. ஏனெனில் அதிகளவு வேகவைக்கும் போது அதன் சத்துகள் வெளியாகிவிடும். 

முட்டைகோஸில் புற்றுநோயை எதிர்த்துப் போராடும் பொருட்களை அதிகளவு கொண்டுள்ளது. எனவே இதனை சாப்பிட்டால், புற்றுநோயை ஏற்படுத்தும் செல்கள் வளர்வதை முற்றிலும் தடுக்கும். மேலும் ஆய்வு ஒன்றிலும், முட்டைகோஸ் சாப்பிட்டால், புற்றுநோய் வளர்வதை தடுக்கலாம் என்று கண்டறியப்பட்டுள்ளது. அல்சரால் அவதிப்படுபவர்கள், முட்டைக்கோஸை ஜூஸ் போட்டு சாப்பிட்டு வந்தால், அல்சரை விரைவில் குணப்படுத்தலாம். ஏனெனில் இதில் அல்சரை குணப்படுத்தும், குளுட்டமைல் அதிக அளவில் நிறைந்துள்ளது.

இதில் உள்ள அதிகப்படியான வைட்டமின் சி, நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலிமைப்படுத்தி, உடலை நோய்கள் தாக்காதவாறு பாதுகாக்கும். முட்டைகோஸில் பீட்டா-கரோட்டீன் அதிக அளவில் இருப்பதால், அது கண்புரையை தடுக்கிறது. எடையை குறைக்க நினைப்போர், தினமும் ஒரு கப் வேக வைத்த முட்டைகோஸ் அல்லது முட்டைகோஸ் சூப் சாப்பிட்டால், உடல் எடையை ஆரோக்கியமான முறையில் குறைக்கலாம்.

பெண்களுக்கு மெனோபாஸ் காலங்களில் உண்டாகும் கால்சியம், பாஸ்பரஸ் இழப்பை முட்டைகோஸ் ஈடுசெய்யும். நரம்புகளுக்கு வலு கொடுக்கும். நரம்புத் தளர்ச்சியைப் போக்கும். தொற்று நோய்கள் ஏற்படாமல் தடுக்கும். உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். முட்டைகோஸை நீரில் போட்டு சிறிது நேரம் ஊறவைத்து அந்த நீரைக் கொண்டு முகம் கழுவினால் வறட்சியான சருமம் பளபளப்படையும். எலும்புகளுக்கு வலு கொடுக்கும். இதில் சுண்ணாம்புச்சத்து அதிகமிருப்பதால் எலும்புகளும் பற்களும் உறுதியாகும்.

நரம்பு தளர்ச்சியை போக்கும் சௌ சௌ





நாம் உணவில் சேர்த்துக்கொள்ளும் காய்கறிகளில் சில காய் வகைகளை எப்போதாவது சேர்த்துக்கொள்வோம். அப்படி எப்போதாவது சேர்த்துக்கொள்ளும் காய்கறிகளில் சௌசௌவும் ஒன்று. சௌசௌவில் வைட்டமின் ஏ, பி, சி, கே போன்ற சத்துகள் அடங்கியுள்ளன. 100 கிராம் சௌசௌவில் 17.8% கார்போஹைட்ரேட், 10.7% ஸ்டார்ச், 10.5% போலேட் சத்து, 5.4% புரதசத்து, 6.7% சுண்ணாம்பு சத்து, 4.8% பாஸ்பரஸ், 9% மாங்கனீசு கொண்டுள்ளது.

உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் சௌசௌ காயை சாப்பிடலாம். இது நரம்பு தளர்ச்சியை போக்கி நரம்புகளை கட்டுபடுத்தும் ஆற்றல் கொண்டது. வயிறு சம்பந்தமான அனைத்து பிரச்சனைகளை நீக்கி வயிற்றை சுத்தமாக வைத்துக்கொள்ளும் சக்தி இதற்கு உண்டு.. உயர் ரத்த அழுத்தத்தை குறைத்து உடலை சமநிலையில் வைத்துக்கொள்ளும். மலச்சிக்கல் பிரச்சனையால் அவதிபடுபவர்கள் இந்த காயை வாரம் இரு முறை உணவில் சேர்த்துக்கொள்ளலாம். பெருங்குடல், சிறுகுடல் சம்பந்தமான பிரச்சனைகளை நீக்கி குடல் மூலம் உருவாகக்கூடிய பிரச்சனைகளை சரிபடுத்துகிறது. 

கர்ப்பிணி பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் கை, கால்களில் வீக்கம் ஏற்படும். ஆதலால் நீர்சத்து மிகுந்த காய்களில் ஒன்றான சௌசௌவை உணவில் சேர்த்துக்கொள்ளலாம். இதை உணவில் சேர்த்துக்கொள்வதால் குழந்தையையும் நோய் தொற்றிலிருந்து பாதுகாக்கிறது.. சிறு வயதிலேயே முகச்சுருக்கம் ஏற்பட்டு விட்டதே என கவலை படுபவர்கள் சௌசௌவை உணவில் தாராளமாக பயன்படுத்தி வந்தால் முகத்தில் உள்ள சுருக்கம் நீக்கி விடும்.

புற்றுநோயை தடுக்க: சௌசௌவில் காணப்படும் வைட்டமின்கள் புற்றுநோய் தடுப்பியாக செயல்படுகிறது என ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். எனவே இதை உணவில் பயன்படுத்தினால் புற்றுநோய் வராமல் பாதுகாத்து கொள்ள முடியும்..

தைராய்டு கோளாரால் அவதி படுபவர்கள் சௌசௌவை பயன்படுத்தலாம். சௌசௌவில் காணப்படும் காப்பர், மாங்கனீசு, தைராய்டு நோயால் அவதிபடுபவர்களுக்கு சிறந்த மருந்தாகும். இதை உணவில் எடுத்துக்கொண்டால் தைராய்டு கோளாறு நீங்கும். சௌசௌவில் கால்சியம் சத்துகள் காணப்படுவதால் எலும்புகளை வலுப்பெற செய்கிறது. எனவே வளரும் குழந்தைகளுக்கு சௌசௌ காயை உண்ண கொடுக்கலாம்.

கொழுப்புகளை குறைக்கவும் இது பயன்படுகிறது. வயிறு மற்றும் இடுப்பு பகுதியில் சேர்ந்து இருக்கும் அதிகபடியான கொழுப்புகளை கரைக்க சௌசௌவை சூப் செய்து பருகினால் நல்ல பலன் கிடைக்கும். சௌசௌவை வேகவைத்து உப்பு, மிளகு, தண்ணீர் சேர்த்து சூப் செய்து காலை, மாலை வேளையில் உணவிற்கு முன் இதை பருகலாம்.

இந்திரா படுகொலை : சீக்கியர்கள் பார்வையில் !

இந்திரா படுகொலை : சீக்கியர்கள் பார்வையில் !
=====================================

இந்திரா காந்தி ஏன் அவரது பாதுகாவலர்களால் கொல்லப்பட்டார், சீக்கியர்களின் புனித பொற்கோயிலின் மீது இராணுவத்தை ஏவியதால் ஆத்திரமுற்ற சீக்கிய மதத்தைச் சார்ந்த அவரது பாதுகாவலர்கள் அவரை சுட்டுக் கொன்றனர் இதுதான் வரலாறு கூறும் செய்தி. ஆனால் சீக்கியர்களிடம் வேறு ஒரு காரணத்துக்காகத்தான் இந்திரா காந்தி கொல்லப்பட்டார் என்று ஒரு கருத்து உண்டு. இந்திரா படுகொலைக்கான காரணம் குறித்து குறித்து இணையத்தில் தேடிய போது இன்னொரு அதிர்ச்சித் தகவல் கிடைத்தது. இது சீக்கியரின் சார்பான இணையங்களில் மட்டுமே காணக்கிடைக்கிறது . சங்கத் சிங் என்பவர் எழுதிய "வரலாற்றில் சீக்கியர்கள்" ( The Sikhs in History ) என்ற நூலில் எழுதப்பட்டுள்ளது.


அன்றைய காலத்தில் அதாவது இந்திராவின் ஆட்சியில்தான் பாகிஸ்தான் எதிர்ப்புணர்வு அதிகமாக இருந்தது. சோவியத் ஆதரவு நாடாக இருந்த இந்தியா அண்டை நாடுகளுடன் (சீனா, அமெரிக்க ஆதரவு நாடுகளான இலங்கை மற்றும் பாகிஸ்தான்) சுமூகமான உறவுடன் இருக்கவில்லை. விடுதலை நாடான பின் இந்தியாவின் மிக மோசமான நாள்களாக இருந்தவைதான் இந்திராவினால் கொண்டுவரப்ப்ட்ட அவசரநிலைப் பிரகடனம். காஷ்மீர் பிரச்சனை, பஞ்சாப்பின் பிரிவினைவாதம் ஆகியவை உச்சத்தில் இருந்தன. பாகிஸ்தானுடன் போர் மூளும் நிலையும் இருந்தது. இந்திராவின் இறுதிச்சடங்கிற்காக வந்திருந்த பாகிஸ்தான் அதிபர் முகமது ஜியா-உல்-ஹக் இவ்வாறு கூறினார். "அல்லா சொர்க்கத்தில் இருக்கையில், ரீகன் வெள்ளை மாளிகையில் இருக்கையில், இந்திராகாந்தியின் சாம்பல் இமயமலைகளில் தூவப்பட்டபின் எனக்கென்ன கவலை". அதாவது இந்திரா காந்தி உயிருடன் இருந்திருந்தால் இந்தியாவுடனான போரைத் தவிர்க்க இயலாது, அவர் இறந்து விட்டதால் தற்போது போர் நடைபெறாமல் தவிர்க்கப்பட்டது என்ற பொருளில் அப்படிக் கூறினார்.

சீக்கியர்களின் கருத்துப்படி, இந்திரா சீக்கியர்கள் மீது மிகப்பெரும் இனப்படுகொலையைக் கட்டவிழ்த்துவிட கொடூரமான திட்டம் தீட்டியிருந்ததாகவும் அதைக் கண்டுகொண்ட இந்திரா காந்தியின் காவலர்களான பீந்த் சிங், சத்வந்த் சிங் ஆகியோர் சீக்கியர் இனத்தைக் காக்கவே அந்தப் படுகொலையை செய்தனர். அந்த நடவடிக்கையின் பெயர் அமைதி நடவடிக்கை எனப்படும் Operation Shanti. இதன்படி பஞ்சாப்பில் பாகிஸ்தான் இராணுவத்திற்கெதிரான போரில் சீக்கியரையும் சேர்த்து அவர்கள் மீதும் போர்தொடுத்து மிகப்பெரும் அழிவை உண்டாக்குவது, அதே நேரம் இந்தியா முழுவதும் இளைஞர் காங்கிரஸ் கும்பலைக் கொண்டும் சீக்கியர்களை கலவரம், கொலை, கொள்ளைகள் மூலம் அழிப்பது என்பதே "அமைதி நடவடிக்கை"யின் சாரம்.

பொற்கோயில் தாக்குதலில் பல சீக்கியர்கள், பிந்தரன்வாலே கொல்லப்பட்ட பிறகும் இந்திராகாந்தி மனநிறைவு அடையவில்லை. எனவே அதைவிட பலமடங்கு கொடிய ஒரு திட்டம் தீட்டப்பட்டு, அது குறித்து முக்கிய அதிகாரிகளுடன் ஆலோசனைகளும் நடத்தப்பட்டுவிட்டன. இந்தத் திட்டத்தின்படி குரு நானக்கின் பிறந்த நாள் கொண்டாட்டங்களில் சீக்கியர்கள் கூடியிருக்கும் வேளைகளில் நவம்பர் மாதத்தின் முதலிரண்டு வார நாட்களில் பாகிஸ்தானுடன் போரைத் தொடங்குவது, காஷ்மீர் எல்லையிலல்ல பஞ்சாப் எல்லையில். பாகிஸ்தானின் எல்லையோரத்திலுள்ள ஜலந்தர், அமிர்தசரஸ், குருதாஸ்பூர், ஃபெரோஸ்பூர், கபுர்தலா ஆகிய மாவட்டங்களில் மீது வான்தாக்குதல் இராணுவ, துணை இராணுவத்தாக்குதல் மூலம் அழிப்பது என்பது திட்டம். இதற்குத் தோதாக பாகிஸ்தான் இராணுவத்தை சிறிது உள்வாங்க அனுமதித்து விட்டு, அதன்மீது தாக்குதல் நடத்துவதன் மூலம் சீக்கியர்களுக்கு அழிவை உண்டாக்குவது என்பது திட்டம். காரணம் கேட்டால் பாகிஸ்தான் படையெடுக்கிறது, அதற்கு ஆதரவாக சீக்கியர்களும் அவர்களுடன் இணந்து கொண்டு இந்தியாவுக்கெதிரான போரில் ஈடுபட்டார்கள் என்று பரப்புரை செய்துவிட வேண்டியது சீக்கியர்களுக்கெதிரான இந்த எதிர்ப்புணர்வைப் பயன்படுத்தி இந்தியா முழுவதும் இளைஞர் காங்கிரஸ் குண்டர்களைப் பயன்படுத்தி அவர்களுக்கெதிரான கலவரத்தைக் கட்டவிழ்த்து விட்டு இனப்படுகொலையை ஏவுவது இதுதான் அமைதி நடவடிக்கை.

இதற்காக கொல்லப்படுவதற்கு (அக்டோபர் 31, 1984) மூன்று நாள்கள் முன்பு 1984 அக்டோபர் 27 -ம் நாளில் காஷ்மீர் சென்ற இந்திராகாந்தி இராணுவத் தளபதியான வைத்யா என்பவரைச் சந்தித்து, பாகிஸ்தான் எதிர்பாராவிதமாகத் தாக்குதல் நிகழ்த்தினால் எதிர்கொள்ள ஆயத்தமாக இருக்குமாறு அறிவுறுத்தச் சென்றார் என்பது இந்திராகாந்தியின் முதன்மை உதவியாளரான பி.சி. அலெக்ஸாண்டர் என்பவரின் குறிப்பில் இருக்கிறது. அதாவது பஞ்சாப்பில் தாக்குதல் நடத்தும் வேளையில் பாகிஸ்தான் காஷ்மீர் எல்லையிலும் போரை தொடங்கும் நிலை வரலாம் என்பதற்காக. 1993 - ம் ஆண்டில் பாகிஸ்தான் அதிபரான குலாம் இஷாக் கான் இந்திரா காந்தி பாகிஸ்தானுடன் போருக்கு திட்டமிட்டிருந்ததாகவும், ஆனால் பத்து நாட்கள் முன்பாகவே கொல்லப்பட்டதாகவும் தெரிவித்திருந்தார்.

இந்திரா காந்தியின் இந்த இரகசியத் திட்டம் அவரது சிறப்பு உதவியாளரான ரஜிந்தர் குமார் தவான் (இவர்தான் இந்திரா காந்தியின் கொலையையின் சாட்சி) என்பவரின் மூலமாக அறிந்த பீந்த் சிங் என்ற சீக்கிய காவலர் சத்வந்த் சிங் என்ற மற்றொரு சீக்கிய காவலருடன் இணைந்து இந்திராவை சுட்டுக் கொன்றார்கள். சுட்டபின்பு துப்பாக்கிகளைக் கீழே போட்டுவிட்டு "நான் செய்ய வேண்டியதை செய்து விட்டேன். நீங்கள் செய்ய வேண்டியதை செய்யுங்கள்" என்று கூறினார் பீந்த் சிங். இதனால்தான் சீக்கியர் மீதான போரைத் தடுத்தற்காகவே இந்திரா கொல்லப்பட்டார் என்று கருதுகின்றனர் சீக்கியர்கள்.

நன்றி : தமிழ்வினை இணையம் .

Video games can be good for kids


QUEENSLAND UNIVERSITY OF TECHNOLOGY   
Don't feel guilty for stuffing Sonic in the Santa sack - video games can be good for your children's mental health.
In fact, according to the director of QUT's Games Research and Interaction Design Lab, Dr Daniel Johnson, playing video games as a family can help you build stronger relationships with your children.
Dr Johnson and his gaming research group at the Young and Well Cooperative Research Centre (CRC) combed through 200 papers and reports from around the world to find out when and how video games can have a positive effect on the wellbeing of young players.
They discovered that the types of video games a young person plays is less important for their wellbeing than how they play videogames - and who they play them with.
Their research challenges the belief that video games breed socially isolated, aggressive and lazy teenagers.
"Our research showed that playing video games can improve a young person's mood, help them reduce their stress levels, and promote feelings of competence and autonomy," said Dr Johnson, from QUT's Science and Engineering Faculty.
"Playing video games with others in particular increases a person's brain activity, improves their social wellbeing and helps them feel more connected with others.
"If you're trying to reach out to the teenager in your house, spending time with them playing a cooperative video game you both enjoy could be the bridge you're looking for - and you'll likely feel the same positive impacts on your wellbeing, too."
Dr Johnson cautioned that excessive or obsessive video game play and technology use was not good for mental health as this could lead to negative outcomes such as anxiety and insomnia.
But overall, his team's research found:
- moderate (non-excessive) levels of playing are associated with positive emotions and improved mood, improved emotion regulation and emotional stability and the reduction of emotional disturbances
- playing video games can be a healthy means of relaxation, stress reduction and socialising
- people who play video games in moderation have been shown to have significantly less depressed mood and higher self-esteem compared to those who don't play or who play excessively.
More than 95 per cent of Australian homes with children aged under 18 have one or more devices for playing video games.
"One of the most important things you can do as a parent is to ensure you and your child engage thoughtfully with what you are playing," Dr Johnson said.
"Look for games that encourage creativity and cooperation and that are age appropriate."
Dr Johnson will present the results of a range of studies conducted by the QUT Games Research Lab as well as the Young and Well CRC's findings at a Videogames and Wellbeing lecture at the University of Sydney on Tuesday 19 November.
His presentation will also explore: the genres, modes of play and experiences during play that influence wellbeing; the predictors of obsessive and harmonious passion for play; and the differences in brain activity associated with playing with humans versus Artificial intelligence (AI) controlled teammates.
"People talk a lot about technologies being good or bad for us - phones, social media, video games - but it's never that simplistic," said Associate Professor Rafael Calvo from the University of Sydney's School of Electrical and Information Engineering and host of the talk.
"Technologies impact our wellbeing in positive and negative ways, depending in part on how they're designed.
"The fact is, we need to start measuring and understanding this impact better so we can design future technology that actively promotes wellbeing and human potential."
Dr Johnson said his team's future research will in part focus on what constitutes a healthy or moderate amount of play for people at different ages and how best to leverage the wellbeing benefits of video games in a therapeutic setting.
Editor's note: Original news release can be found here.

"The Elegant Universe - The String Theory"



Adapted from a provocative book by Brian Greene,here is an attempt to explain the controversial string theory, a complicated scientific proposal that, in short, posits a single explanation for many of the universe's mysteries. As affable an egghead as you're likely to find, Greene engages an array of physicists in his examination of string theory, which in part blends Einstein's theory of relativity with the complex laws governing quantum mechanics. 

Although mind-numbing technical terms are kept to a minimum, those of us not conversant with advanced physics might feel a bit lost at times. Still, the subject is undeniably fascinating, and some of the conclusions are nothing short of mind-blowing: a reasoned, professional discussion of a universe encompassing 11 separate dimensions certainly calls Johnny Carson's "I did not know that" to mind. 

A single-celled creature found in pond water


Description: Scanning electron micrograph of a Vaginicola, a single-celled creature found in pond water. The cell (green) secretes and lives within a protective casing called a lorica into which it can contract. The cell is attached to the bottom of the lorica and has hair-like cilia at the end, which it uses for feeding. Scanning electron micrograph 2000 Collection Wellcome Images.



Author: David Furness

Licensing: Attribution-NonCommercial-NoDerivs 2.0 UK: England & Wales (CC BY-NC-ND 2.0 UK)
Microorganisms or microbes are microscopic organisms that can be found all around the world. They can be unicellular or cell clusters. As such, they are only visible under a microscope.

They are largely composed of the members of the Archaea and Bacteria kingdoms (both are prokaryotic cells) and unicellular Protists (belong to eukaryotes). Within the umbrella of Protist, the members can be further divided into:

• Protozoa – “animal-like”, like Paramecium and Amoeba;
• Protophyta – “plant-like”, like Diatomgreenred, and brown algae;
• Molds – “fungus-like”, like water mold and slime mold.

Typically, pond water contains a variety of microorganisms. They could be free-living single cells or microorganisms that cluster together in large numbers (colonies). Sometimes, you will find microscopic animals and plants that consist of hundreds or even thousands of cells. We will also include these multicellular organisms in this guide.

Friday, November 15, 2013

தியான அனுபவங்கள்

தியான அனுபவங்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாக உள்ளது. சிலருக்கு தியானத்தில் ஏற்படும் அனுபவங்கள் சில நாட்களிலேயே ஏற்படும். இன்னும் சிலருக்கு 6 அல்லது 9 மாதங்களில் கூடத் தோன்றும். அது மனநிலை அல்லது மன ஒருமைப்பாட்டின் தரத்தைப் பொறுத்து அமையும். ஒரு சிலருக்கு இத்தகைய அனுபவங்கள் எதுவுமே தோன்றாத நிலையில் அவர்கள் சாதனையில் முன்னேறிக் கொண்டே இருப்பார்கள். இந்த அனுபவங்கள் காட்சிகளாகவோ, ஒலிகளாகவோ, உணர்வுகளாகவோ பலவாறு அமைகின்றன. இவை எல்லாம் நம் மனதின் சிருஷ்டிகளே. சூக்கும உலகோடு தொடர்பு உடையவை. பஞ்ச பூதங்களின் தன்மாத்திரைகளின் பல தரங்களின் ஒழுங்கான அசைவுகளால் பல லோகங்களாக உள்ளது சூக்கும உலகம். ஜாக்ரதையில் நாம் செய்த நமது தீவிர சிந்தனையின் உருவகமாகவோ அல்லது முற்றிலும் கற்பனையாகவோ இருக்கும். நம் இஷ்ட தெய்வங்களையும் காணக் கூடும். சில வேளைகளில் நம்மை நாமே கூட காண்பது போன்ற காட்சிகளும் அமையும். பலவிதமான இனிய நாதங்களும் கேட்கும். கண்ணைக் கூசும் ஒளிகளும் தோன்றும். ஒழுங்காக விடாமுயற்சியுடன் தியானம் செய்யும் போது தியானத்தின் இலட்சியப் பொருள் வெகு விரைவில் நம் முன் தோன்றும். தேவதைகள், நம் குரு, சித்தர்கள், ரிஷிகளின் தரிசனங்கள் கூட கிடைக்கும். தீவிரமான மன ஒருமைப்பாட்டின் போது மூலாதாரச் சக்கரத்திலிருந்து மின்சாரம் பாய்வது போன்ற உணர்வும் சிலருக்கு ஏற்படும். உடனே அவர்கள் பயந்து பௌதிக உணர்வு நிலைக்குத் திருந்பி விடுகிறார்கள். பயப்பட வேண்டிய அவசியமில்லை. அச்சமின்மையே சாதனையில் வெற்றியைத் தரும்.மேலும், நாம் தியானிக்கும் பொருள் நம்மை அப்படி சுற்றிலும் படர்ந்து மூடுவது போலத் தோன்றும். விண்வெளி எங்கும் ஒளிர்வது போலத் தோன்றும். இவை எல்லாவற்றையும் கடந்த பேரமைதியையும் உணரலாம். இந்த அனுபவங்கள் பேரானந்தத்தைத் தரும். ஆனால் இவற்றால் எல்லாம் நாம் நம் இலக்கை அடைந்து விட்டோம் என்று சிலர் தவறாக எண்ணிப் பயிற்சியில் தடுமாற்றம் அடைந்து விடுகிறார்கள். தாங்கள் ஆத்மானுபூதி அடைந்து விட்டதாகக் கருதி சாதனையை நிறுத்தி விட்டு பிறருக்கு போதனை செய்ய ஆரம்பித்து விடுகிறார்கள். இது சாதனையில் மிகப் பெரிய வீழ்ச்சியையும், அவமானத்தையும் ஏற்படுத்தி விடும். இத்தகைய அனுபவங்களெல்லாம் இதற்கும் மேலான ஆன்மீக வாழ்விற்கு உங்களை அழைத்து சொல்வதற்கு தரப்படும் ஊக்கங்களே ஆகும். அவற்றில் லயித்து நம் இலட்சியத்தை இழந்து விடக் கூடாது. காட்சிகளும், அனுபவங்களும் வரும், போகும். இவைகளெல்லாம் சாதனையில் முடிந்த நிலைகளல்ல. இவற்றிற்கு முக்கியத்துவம் அளித்து சாதனையில் ஏற்படும் முன்னேற்றத்தை இழந்து விடக் கூடாது. இவற்றையெல்லாம் பொருட்படுத்தாமல் கடந்து போக வேண்டும் என்பதற்காகவே இந்தப் பதிவு தரப்பட்டுள்ளது. உள்ளார்த்தமான, நேரடியான பரம்பொருள் அனுபவம் ஒன்றே உண்மையானது. அதை நீங்கள் அடைந்து விட்டால் பிறகு உங்களுக்கு அப்பால் எதுவும் இல்லை. எல்லாவற்றிற்குள்ளும் நீங்களும், உங்களுக்குள் எல்லாமும் இருப்பதைத் தெரிந்து கொள்வீர்கள்.

Ashtanga Yoga (The Eight-Limbed Yoga)



Yoga is surrendering to the Supreme Lord and constantly remembering him. It is not an exercise process which people are portraying.

Yoga originated in India over five thousand years ago. Yoga history can be traced to the Vedic period, approximately 3000 BCE, and specifically to the Rig Veda - the oldest written book in the world.

Yoga is one of the six orthodox systems of Indian Philosophy. The date of its origin is difficult to pinpoint, as the actual era from which this knowledge came is much less important than the knowledge itself.

The word “yoga” is a Sanskrit term that has many meanings. The word is derived from the Sanskrit root “yuj” – to yoke or harness.

One would bring an ox under control by harnessing it to a wagon in India. Similarly, yoga can be viewed as training and uniting the body, mind and spirit. It has been practised over the centuries in many different forms.

Ashtanga yoga literally means “8 limbs yoga. ” These limbs are defined in the second chapter of the Yoga Sutras of Patanjali.

The following are the 8 practices or limbs:

1. yama (moral restraints) – how we relate to others

2. niyama (observances) – how we relate to ourselves

3. āsana (posture) – how we relate to our body

4. prāṇāyāma (breath extension) – how we relate to our breath or spirit

5. pratyāhāra (sensory withdrawal) – how we relate to our sense organs

6. dhāraṇā (concentration) – how we relate to our mind

7. dhyāna (meditation) – moving beyond the mind

8. samādhi (meditative absorption) – profound realization and inner union

The "Yamas" or the first limb consists of five parts: ahimsā (non-harming), Satya (truthfulness), asteya (non-stealing), bramacharya (directing one’s energy towards the Divine), aparigraha (greedlessness, non-hoarding).

The "Niyamas" the second limb also contains five aspects: śauca (purity), santoṣa (contentment), tapas (purifying practices), svādhyāya (self-study, and the study of sacred texts), Īśvara praṇidhāna (surrender to the Divine, Universal Self).

The "Āsanas" we practice have been given to us by Sri K. Pattabhi Jois who believes it necessary to enter into the 8 limbs through the physical postures.


The first four limbs are often called “external yoga,” and the last four are called “internal yoga.” The fifth limb, pratyāhāra, acts as a bridge between the external and internal limbs.

As students of yoga we are able to actively practice the external limbs, believing the internal limbs are the fruits of a sincere and continual practice.

These final limbs of our practice are a manifestation of grace that arise spontaneously, and are not something we can bring about through our own efforts.

The eight limbs are interconnected and not separate steps along this path. Whether one starts by practising the physical postures, breath awareness, or mindfulness in the daily practice of the yamas and niyamas, each limb encourages growth in the others.

As the body becomes steady and at ease, the breath comes under control, and the mind begins to experience moments of clarity, and peace.

சில விதைகளில் உள்ள மருத்துவ குணங்கள்:-





வேப்ப விதை:

வேப்ப விதைகளில் மேல் ஓடுகளை எடுத்துவிட்டு பருப்புகளை அரைத்து விஷம் கடித்த இடத்தில் தடவினால் சிறு விஷம் கொஞ்சம் கொஞ்சமாக இறங்கும். இந்த பருப்புகளிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய் வாதநோய்களுக்கு தயாரிக்கப்படும் எண்ணெய்களில் சேர்க்கப்படுகிறது. விதையின் மேல் ஓட்டை எரித்து அதிலிருந்து வரும் புகையை நுகர்ந்தால் தலையில் உள்ள நீர் இறங்கும். நரம்புத் தளர்ச்சி உள்ளவர்கள் வேப்ப எண்ணெயை தடவி வந்தால் நரம்புகள் வலுவடையும்.

முருங்கை விதை:

பிரம்ம விருட்சம் என அழைக்கப்படும் முருங்கையின் முற்றிய விதையை எடுத்து பொடி செய்து பாலில் கலந்து கொதிக்க வைத்து ஒரு மண்டலம் அருந்தி வந்தால் இழந்த தாதுவை மீண்டும் பெறலாம். மேலும் நரம்புத் தளர்வு, உடல் சோர்வு, இரத்த சோகை முதலியவற்றைக் குணப்படுத்தும். முருங்கை விதையை பொடி செய்து தேனில் கலந்து காலை, மாலை அருந்தி வந்தால் மேற்கண்ட பாதிப்புகளிலிருந்து விரைவில் மீளலாம்.

மாங்கொட்டை:

மாம்பழத்தில் உள்ள விதையின் பருப்புகளை எடுத்து நிழலில் உலர்த்தி பொடித்து வைத்துக்கொண்டு அதனுடன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் வயிற்றுக் கடுப்பு, வயிற்றுப் புண் நீங்கும். மேலும் மூலச் சூட்டைக் குறைக்கும். உடலுக்கு வலுவூட்டும்.

புளியங்கொட்டை:

புளிய விதையின் மேல் உள்ள ஓட்டை காயவைத்து பொடி செய்து அதனுடன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் சிறுநீரக நோய்கள் நீங்கும். பெண்களுக்கு உண்டாகும் வெள்ளைப் படுதல், அதிக உதிரப்போக்கு மாறும். இதன் பருப்பு தாதுவை விருத்தி செய்யும்.

முந்திரி பருப்பு:

முந்திரியின் உள் இருக்கும் பருப்பானது பித்தத்தைக் குறைக்கும். உடலுக்கு வலுவூட்டும். தாதுவை விருத்தி செய்யும். உடல் சூட்டைத் தணிக்கும். குழந்தைக்கு உண்டாகும் மாந்தத்தைப் போக்கும்.

புங்க விதை:

புங்க விதையில் உள்ள பருப்பு தோலில் ஏற்படும் புண், கரப்பான், அலர்ஜி இவற்றைப் போக்கும். இதன் எண்ணெய் வெப்பக் கட்டியைத் தடுக்கும். கண் நோய்களைக் குணப்படுத்தும்.

காட்டுப் புங்க விதை:

இதன் பருப்பானது வயிற்றுக் கடுப்பைக் குணப்படுத்தும். தோலில் ஏற்படும் தேமல், படர்தாமரை போன்றவற்றைப் போக்கும். வாயுத் தொல்லையை குணப்படுத்தும்.

புன்னை விதை:

வாதக் கோளாறுகளைக் குணப்படுத்தும். கருப்பை நோய்களை போக்கும். உடலில் உள்ள தேவையற்ற நீரைப் போக்கும்.

வாதுமை பருப்பு:

கண் சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களையும் குணப்படுத்தும். உடலுக்கு புத்துணர்வை உண்டாக்கும். எப்போதும் சோம்பலாக இருப்பவர்கள் வாதுமைப் பருப்பை பாலில் போட்டு கொதிக்க வைத்து தினமும் அருந்திவந்தால் தாது பலப்படும். சோம்பல் நீங்கும்.

ஆமணக்கு விதை:

ஆமணக்கு விதையின் ஓட்டை நீக்கி, பருப்பை பச்சையாக அரைத்து அல்லது நன்றாக நசுக்கி அனலில் வதக்கி கட்டிகளின் மீது வைத்துக் கட்டினால் கட்டிகள் விரைவில் பழுத்து உடைந்து கட்டிகள் குணமாகும்.

ஆமணக்கு விதையின் பருப்பை பொடித்து சட்டியிலிட்டு வதக்கி துணியில் முடிந்து ஒற்றடமிட்டு வந்தால் உடலில் உண்டான வீக்கங்கள் குணமாகும். இதிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய் உடல்வலி மற்றும் மலச்சிக்கலைப் போக்கும்.

Thursday, November 14, 2013

தி போவ் The-bow (தென் கொரிய திரைப்படம்)





என் மனதில் உயிர்ப்புடன் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு கவித்துவம் நிறைந்த படம் இது. 2005இல் திரைக்கு வந்த இந்தப் படத்தை இயக்கி, தயாரித்தவர் தென் கொரிய திரைப்பட இயக்குநரான கிம் கி-டுக். படத்தின் கதையை எழுதியிருப்பவரும் இவரே. தன்னுடைய பல அற்புதமான படைப்புகளால், உலகமெங்கும் கோடிக்கணக்கான ரசிகர்களைப் பெற்று, புகழின் ஏணியில் சிம்மாசனம் போட்டு அமர்ந்திருப்பவர் இவர்.

அறுபது வயது நிறைந்த ஒரு கிழவனையும், 16 வயது கொண்ட ஒரு பேரழகு படைத்த இளம் பெண்ணையும் சுற்றி பின்னப்பட்டதே ‘The Bow’. எங்கிருந்தோ ஆறு வயது உள்ள அழகான ஒரு சிறுமியை அவன் கொண்டு வருகிறான். கடலின் நடுவில் மிதந்து கொண்டிருக்கும் 40 அடி நீளம் கொண்ட படகுதான் அவனுக்கு வீடு. அங்கிருந்தவாறு அவளை அவன் வளர்க்கிறான். அவள் பேசுவதே இல்லை. இப்போது அவளின் வயது 16.

மேலும் படிக்க…

http://lekhabooks.com/cinema/548-the-bow

முறுக்கு வகை

முறுக்கு வகைகளில், கைகளால் சுற்றி செய்யப்படும் கை முறுக்கின் சுவை விவரிக்க முடியாதது, இவ்வகை முறுக்கினை சுற்றுவதற்கு சற்று அனுபவம் தேவை. இரண்டு மூன்று முறுக்குகள் சுற்றினால் பழக்கமாகிவிடும். 

அரிசி மாவு - 3 கப்
உளுத்தம் மாவு - கால் கப்
உப்பு - ஒரு மேசைக்கரண்டி
டால்டா - ஒன்றரை மேசைக்கரண்டி
வெண்ணெய் - அரை கப்
சீரகம் - ஒரு மேசைக்கரண்டி
எண்ணெய் - பொரிப்பதற்கு


மாவினை சலித்து எடுத்துக் கொள்ளவும். டால்டா, வெண்ணைய்யை லேசான சூட்டில் சற்று உருக்கி எடுத்து வைக்கவும்.

அரிசி மாவுடன் உளுத்தம் மாவு, உப்பு, டால்டா, வெண்ணெய், சீரகம் எல்லாம் சேர்த்து போட்டு 2 கப் தண்ணீரை கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி பிசைந்துக் கொள்ளவும். மிகவும் தோய்வாக இல்லாமல் பிசையவும்.

ஒரு உருண்டை மாவை எடுத்துக் கொண்டு, கட்டை விரல், ஆள்காட்டி விரல் மற்றும் நடுவிரல் ஆகிய மூன்று விரல்களைக் கொண்டு முறுக்கினை சுற்றவும். ஒரு தினசரி பேப்பரில் சுற்றினால் போதுமானது. எடுப்பதற்கு எளிதாக இருக்கும்.

கட்டை விரலாலும், ஆட்காட்டி விரலாலும் மாவினை சிறிது அழுத்திவிட்டு, பிறகு அதனைத் திருகி திருகி, வட்ட வடிவில் சுற்றவும். முறுக்கு சுற்றுவதற்கு சற்று அனுபவம் தேவை. முதல் முறையே சரியாக வந்துவிடாது. சிறிது பழகினால் போதுமானது. இந்த வகை முறுக்கினை மிகவும் மெல்லியதாக சுற்றக்கூடாது.

தேவையான அளவிற்கு சுற்றுக்களின் எண்ணிக்கையை கூடவோ, குறைத்தோ முறுக்கினைச் சுற்றிக் கொள்ளவும். முறுக்கு சுற்றின பிறகு சிறிது நேரம் உலர வைக்கவும்.

முதலில் ஒரு பேப்பரில் சுற்றிக் கொள்ளவும். முறுக்கு பெரிதாக இருந்தால், பேப்பரை அப்படியே ஒரு தட்டில் கவிழ்த்து, தட்டில் முறுக்கை மட்டும் எடுத்துக் கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் முறுக்கு வைத்துள்ள தட்டை எண்ணெய்க்கு அருகில் கொண்டு சென்று, சற்று கவனமுடன் எண்ணெய்யில் போடவும். ஈரத்தினால் எண்ணெய் தெறிக்கும் வாய்ப்பு உள்ளது.

சிறிய வடிவ முறுக்குகள் என்றால், கைகளில் எடுத்து எண்ணெய்யில் போட்டுப் பொரித்து எடுக்கலாம்.

முறுக்கை போட்டு மஞ்சள் நிறமாக வெந்ததும் திருப்பி போட்டு வேக வைத்து எடுக்கவும்.

எண்ணெய் நுரைத்து வருவது குறைந்தவுடன், இரண்டு புறமும் பொன்னிறமாக வெந்ததும், ஒரு கம்பி கொண்டு முறுக்கினை எடுத்து எண்ணெய் வடியவிடவும்.

சுவையான கை சுற்று முறுக்கு தயார். ஒன்றிரண்டு முறை செய்து பழகினால், முறுக்கு சுற்றுவது எளிதாக வரும்.

City Planning


City planning and designPrioritizing and placing city services and city features for maximum benefit to the quality of life for the citizens, the environment, and the economic future of the city.
ConnectivityPlacing infrastructure so that all areas of the city are served and linked for maximum benefit of citizens, businesses, industry, safety, education, and recreation.
Systems thinkingTaking into consideration that a system is made up of individual parts that function in unison or in a cooperative way and always have an impact on one another.
TermDefinition
City ZoneAn area or district within a city set aside for a specific use.
Industrial zoneAn area of land set aside for factories and warehouses.
Commercial ZoneAn area of land set aside for for-profit businesses like office complexes, shopping malls, service stations, and restaurants.
Residential ZoneAn area of land set aside for housing.
Zoning density: high, medium, lowDesignation of the ratio of building space to open space (eg., high-density residential includes high-rise apartment buildings).
InfrastructureA public system of services needed by industry, commercial, and residential zones such as power, water, transportation, communications, and schools.
Transportation systemsA network of roads, streets, water, or rails that allows the vehicular movement of people and goods.
Utilities: water, electrical, natural gasAn organization that maintains the infrastructure that generates, transmits, or distributes electricity, water, or gas from facilities that it owns or operates.
Water sanitation systemA public utility that provides removal of waste water
High-tech industrialAn industry that develops or uses advanced technology (eg., aerospace, biotech, telecom, robotics).
MunicipalityA town, city, or region that has its own local government.
Land fillA site where waste material has been buried.
Power plant: coal, natural gas, nuclear, wind, solar, bio, etc.An industrial plant that generates power such as electricity from another source like burning coal, nuclear reactions, or flowing water.
Geothermal energyAn area of land where energy is generated from the heat in the interior of the earth.
Retail establishmentA place of business that sells goods such as groceries, clothing, or furniture.
Government facilityA place that houses government services such as a courthouse or government offices.
Cultural and entertainment facilityA place such as an art museum, theater, or sports arena.
Service IndustryAn industry or facility that provides services rather than sells goods (for example, banking or communications).
ProportionThe relationship between two or more amounts of a number or between the parts of a whole.
Inter-relationshipsA connection or association between multiple things.
ConnectivityThe direct links or associations between multiple things. In city design, connectivity refers to the links between different parts of a city that provide accessibility and easy transport from one area to another.
BEIJING - Chen Xiaohong, dean of the Business School at Central South University in Changsha, Hunan province, is about to see a greener city emerge from the dots and curves on a design sketch to become reality.
As deputy director of the coordinating committee for the Changsha-Zhuzhou-Xiangtan City Cluster in Hunan province, she is part of an official team responsible for introducing a whole new town-planning concept in China.
"We are seeking new ideas as reference points for the planning of the city, so that the green concept of economic development and the improvement of people's livelihood can be integrated," she said.
Chen's university has signed a Memorandum of Understanding with University College, London (UCL) to employ its expertise in city planning in the construction of the cluster.
With a population of 65 million, the cluster consists of eight major cities in the central region of the country.
The program will strive to address facets such as reduced energy demand, integrated transportation systems, water resources, heritage conservation and regeneration, as well as sustainable urbanization, said Alan Penn, dean of The Bartlett Faculty of the Built Environment, who is leading the UCL team.
"Advanced expertise in urban planning from the UK will provide a better plan for our city, and that in turn, will attract more investment and boost the local economy," Chen said.
If the city cluster pilot project is successful, the model will be employed in the construction of the cluster, she added.
Chen's program is one example of the country's efforts to develop low-carbon city programs.
Moreover, the National Development and Reform Commission (NDRC), China's top economic planning body, has selected a number of pilot cities to tackle the problem of carbon emissions and energy consumption.
Five provinces and eight cities across the country, including the traditional heavy industry bases in the northeast, and coastal cities in the south, have been selected as pilot sites for the low-carbon city program.Each area is required to draft its own plan to reduce carbon emissions and develop a green economy for the forthcoming 12th Five Year Plan (2011-2015), the country's blueprint for economic development for the next five years.The new airport is also a mini city and multi-functional centre
One of the eight cities chosen for the project, Tianjin has imposed strict restrictions on high-energy consumption and heavily polluting industries, while vigorously developing high and new technologies, including aviation, solar and wind power, as well as modern medicine.
In 2009, the city's energy consumption per unit of GDP production was reduced by 20.1 percent compared with 2005, according to data released by the Tianjin Municipal Commission of Development and Reform.
Meanwhile, in Nanchang, the capital city of eastern China's Jiangxi province, efforts have been concentrated on light-emitting diode (LED), photovoltaic (PV) and service outsourcing industries, as well as new-energy industries such as solar and wind power.
In a bid to promote the use of LED lighting and electric vehicles, the city has pledged to increase the number of electric automobiles to 1,000 by 2012, and that of LED bubbles to 100,000 by 2016.
"For future development, we will also strive to create a better and more efficient market environment to boost foreign investment into the green industry," said Ling Chengjie, vice-governor of Jiangxi province.