Search This Blog
Thursday, August 4, 2016
This ‘farm from a box’ can feed an entire community
Wednesday, August 3, 2016
Night and the City
Based on the novel of the same name by
Gerald Kersh, Night and the City is a 1950 film noir directed by Jules
Dassin and starring Richard Widmark, Gene Tierney, Googie Withers and
Herbert Lom.
Harry Fabian (Widmark) is a grifter in London, who
uses his girlfriend Mary (Tierney) as well as her boss Phil (Francis L.
Sullivan) and his wife Helen (Withers) to finance his lifestyle and
scams. His latest plan is to host his own wrestling matches in London by
manipulating retired wrestling great
Gregorius (Stanislaus Zbyszko) who has had a falling out with his son
Kristo (Herbert Lom), an underworld figure who effectively controls all
wrestling in London. But when his manipulation of Gregorius causes the
old wrestler's accidental death and Kristo puts a price on Harry's head,
his schemes start to unravel.
Whilst not received well upon its initial release, Night and the City
is now considered a classic of the genre. Utterly grim, cynical and
pessimistic, the film's stark black and white distorted visuals, lack of
sympathetic characters and down beat conclusion all contribute to a
true glimpse into an urban nightmare. Richard Widmark gives a great lead
performance whilst the prolonged wrestling scene between real life
former wrestlers Stanislaus Zbyszko and Mike Mazurki remains one of the
film's many highlights. Forced out of Hollywood due to the blacklist,
director Jules Dassin was forced to shoot the film on location in London
and at the Shepperton Studios, providing the film with its original
setting. A true look into the Abyss, Night and the City is the spiritual
precursor of later urban nightmares like Taxi Driver and Seven and a
must-see for all fans of film noir and classic crime flicks.
புறப்பொருள் வெண்பா மாலை ஓர் அரிய நூல்
ஓர் அரிய நூலைனைப் பற்றி இங்கு கொஞ்சம் பார்ப்போம்.
ஆதிகாலத்தில் அகத்தியர் தம்முடைய பன்னிரண்டு சீடர்களையும்
தம்முடன் இருத்திக்கொண்டு தமிழாய்ந்த காலத்தில், அந்தப் பன்னிரு
சீடர்களும் 'பன்னிரு படலம்' என்னும் நூல் தொகுப்பை யாத்தனர்.
அதன் வழிநூல்களாகப் பல நூல்கள் எழுந்தன. அவற்றுள் பல,
மறைந்துபோயின.
சிலநூல்கள் கிடைத்துள்ளன. அவற்றில் ஒருநூல்தான்
'புறப்பொருள் வெண்பாமாலை'
அதன் பெயர் உணர்த்துவது போல, இது வெண்பாக்களால் ஆகிய
நூல். புறவொழுக்கத்தைப் பற்றி விளக்கிக்கூறும் நூல் இது.
ஒவ்வொரு திணையிலும் உள்ள துறைகளுக்குரிய சூத்திரங்களையும்
குறிப்பிட்டு, அவற்றை எடுத்துக்காட்டும் விதத்தில் ஒரு வெண்பாவையும் அமைத்திருக்கிறார் நூலாசிரியர்.
நூலாசிரியர் - ஐயனாரிதனார்.
அவர் சேரர்குடியைச்சேர்ந்தவர்.
கடவுள்வாழ்த்தில் வினாயகர் துதி:
நடையூறு சொல்மடந்தை அல்குவது நம்மேல்
இடையூறு நீங்குவதும் எல்லாம் - புடையூறும்
சேனைமுகத் தாளிரியச் சீறுமுகத் தூறுமதத்து
ஆனைமுகத் தானை நினைத்தால்
தொகுதி தொகுதியாக மேலும் மேலும் வந்து குவிகின்ற எதிரிகளின்
படைகள் எல்லாம் பயந்து சிதறி ஓடிப்போகுமாறு சீற்றமுடன்கூடிய
திருமுகத்தை ஆனைமுகன் கொண்டுள்ளான். சுரக்கும் மத நீரையும்
கொண்டிருக்கிறான். அவன் திருவடிகளை நினைத்தால்
சொல்மடந்தையாகிய சரஸ்வதி, நடைவளம் சுரக்கின்ற
நாவளத்தைத் தந்து அருளுவாள். அதுமட்டுமல்லாது, நம்மைத்
தாக்கும் இடையூறுகளெல்லாமே நம்மைவிட்டு நீங்குவதும் கைகூடும்.
அடுத்து சிவனை வழுத்துவார்:
கண்அவனைக் காண்கஇரு காதுஅவனைக் கேட்கவாய்ப்
பண்ணவனைப் பாடப் பதஞ்சூழ்க - எண்ணிறைந்த
நெய்யொத்து நின்றானை நீலமிடற்றானை என்
கையொத்து நேர் கூப்புக.
எள்ளினுள் விளங்கும் எண்ணெய் போல் அனைத்திலும் இரண்டறக்
கலந்து நின்றானாகிய முதல்வன் சிவன். திருநீலகண்டத்தை
உடையவன். அப்படிப்பட்ட சிவனையே என் கண்கள் பார்க்கட்டும்.
அவன் திருநாமத்தையே என் காதுகள் கேட்கட்டும். என் வாயில்
தோன்றும் பண்ணெல்லாமே அவனைப் போற்றிப் புகழ்வதற்காகவே
உரிய சொற்பதங்களைப் புனைந்து விளங்கட்டும். என் கைகள், என்
உள்ளத்தோடு ஒருமைகொண்டு, அவன் திருவின் முன்பாக குவிந்து
வணங்கியிருக்கக்கூடியவையாக விளங்கட்டும்.
பழங்கால மரபில் கலைமகள் வாழ்த்தும் காணப்படும்.
பிற்காலத்தில் அவ்வாறு காணப்படுவதில்லை.
நாமகள் வாழ்த்து:
தவளத் தாமரைத் தாதார் கோயில்
அவளைப் போற்றுதும் அருந்தமிழ் குறித்தே!
அருமையான இந்தத் தமிழ்நூல், இனிதாக நிறைவெய்துதலே குறி;
அதற்காக வெண்தாமரை மலர்களின் மகரந்தம் நிறைந்துவிளங்குகின்ற
கோயிலிடத்தே எழுந்தருளியிருப்பவளாகிய கலைமகளை நாம்
போற்றுவோம்.
இந்நூலின் சிறப்புப்பாயிரத்தையும் கவனிப்போம்.
மன்னிய சிறப்பின் வானோர் வேண்டத்
தென்மலை இருந்த சீர்சால் முனிவரன்
தன்பால் தண்டமிழ் தாவின் றுணர்ந்த
துன்னருஞ் சீர்த்தித் தொல்காப்பியன் முதல்
பன்னிரு புலவரும் பாங்குறப் பகர்ந்த
பன்னிரு படலமும் பழிப்பின் றுணர்ந்தோன்
ஓங்கிய சிறப்பின் உலகமுழு தாண்ட
வாங்குவில் தடக்கை வானவர் மருமான்
ஐய னாரிதன் அகலிடத் தவர்க்கு
மையறு புறப்பொருள் வழாலின்று விளங்க
வெண்பா மாலை எனப்பெயர் நிறீஇப்
பண்புற மொழிந்தனன் பான்மையின் தெரிந்தே
இதன் உரையை அப்படியே கொடுக்கிறேன்.
'நிலைபெற்ற சிறப்பினை உடையவரானவானோர்கள் வேண்டிக்
கொள்ளுதலினாலே, தென்மலையாகிய பொதியத்திடத்தே வந்து
வீற்றிருந்தவர், சீர்மை நிறைந்த முனிவராகிய அகத்தியர்.
அவரிடத்தே, தண்மை செறிந்த தமிழ்மொழியின் நுட்பங்களிப்
பழுதின்றிக் கற்றுணர்ந்த கிடைத்தற்கரிய புகழினைப் பெற்றவர்கள்,
தொல்காப்பியர் முதலாகிய பன்னிரு புலவர்களும் ஆவர்.
அவர்கள் பகுதியோடும் அமையச் சொல்லிய புறப்பொருள் நூல்,
'பன்னிரு படலம்' என்பது.
அந்நூல் முழுவதையும் குற்றமின்றிக் கற்றுணர்ந்த சிறப்பினையுடையவர்
'ஐயனாரிதனார்' என்னும் இவர்.
உயர்ந்த மேம்பாட்டினையுடைய உலகம் முழுவதையுமே ஆட்சி
செலுத்திவந்தவரும், வளைந்த வில்லினைத் தம் பெரிய கையிடத்தே
கொண்டவருமான சேரர் குடியினரின் வழிவந்தவரும் இவராவர்.
அகற்சியை உடைய நிலப்பரப்பினதான தமிழ்நாட்டின்கண்
உள்ளவர்க்குக் குற்றமற்ற வகையிலே புறப்பொருள் இலக்கணம்
வழுவின்றி விளங்கும் பொருட்டாக, வெண்பாமாலை என்னும்
பெயரினை இட்டு, அப்பொருளினை முறையோடும் தெளிந்தவராக,
நூற்பண்பு பொருந்த, அவர் இதனைச் சொல்லி அருளினார்'.
இந்நூலைக் கண்டெடுத்து வெளியிட்டவர் தமிழ்த்தாத்தா
உ.வே.சாமிநாதய்யரவர்கள். அதற்குப் பொருளுதவி செய்தவர்
நான்காவது மதுரைத் தமிழ்ச்சங்கம் நிறுவியவரும் பாலவநத்தம்
ஜமீன்தாருமாகிய பாண்டித்துரைத் தேவரவர்கள்.
நமக்கெல்லாம் நன்கு அறிமுகமாகிய ஒரு சொற்றடர்
இந்நூலில் உள்ளதொரு வெண்பாவில் காணப்படுவதுதான்.
'கரந்தைப் படலம்' எனும் பகுதியில் 'குடிநிலை' என்னும்
துறையை விளக்கும்படியாக இயற்றப்பட்டது.
பொய்யகல நாளும் புகழ்விளைத்தல் என்வியப்பாம்
வையகம் போர்த்த வயங்கொலிநீர் - கையகலக்
கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளோடு
முன்தோன்றி மூத்த குடி.
உரை:
'பண்டு, இந்த வையகத்தினைக் கவிந்துகொண்ட, தெளிந்து
ஆரவாரிக்கும் ஊழிக்கடல் வெள்ளமானது விட்டு நீங்கியதாக,
அதன்பின் முற்பட மலைதோன்றி மண்தோன்றாதிருந்த அந்தப்
பழங்காலத்திலேயே, எல்லா மக்கட்குடியினும் முற்படத்தோன்றி,
வாளாண்மையுடன் முதிர்ச்சி பெற்றுவருவதும் அம்மறவனின்
குடியாகும். அதனால் இவன், பொய்மை நீங்க நாள் தோறும்
புகழினை விளைத்துச் சிறப்புறுதல் என்னதான் வியப்போ?'
ஆதிகாலத்தில் அகத்தியர் தம்முடைய பன்னிரண்டு சீடர்களையும்
தம்முடன் இருத்திக்கொண்டு தமிழாய்ந்த காலத்தில், அந்தப் பன்னிரு
சீடர்களும் 'பன்னிரு படலம்' என்னும் நூல் தொகுப்பை யாத்தனர்.
அதன் வழிநூல்களாகப் பல நூல்கள் எழுந்தன. அவற்றுள் பல,
மறைந்துபோயின.
சிலநூல்கள் கிடைத்துள்ளன. அவற்றில் ஒருநூல்தான்
'புறப்பொருள் வெண்பாமாலை'
அதன் பெயர் உணர்த்துவது போல, இது வெண்பாக்களால் ஆகிய
நூல். புறவொழுக்கத்தைப் பற்றி விளக்கிக்கூறும் நூல் இது.
ஒவ்வொரு திணையிலும் உள்ள துறைகளுக்குரிய சூத்திரங்களையும்
குறிப்பிட்டு, அவற்றை எடுத்துக்காட்டும் விதத்தில் ஒரு வெண்பாவையும் அமைத்திருக்கிறார் நூலாசிரியர்.
நூலாசிரியர் - ஐயனாரிதனார்.
அவர் சேரர்குடியைச்சேர்ந்தவர்.
கடவுள்வாழ்த்தில் வினாயகர் துதி:
நடையூறு சொல்மடந்தை அல்குவது நம்மேல்
இடையூறு நீங்குவதும் எல்லாம் - புடையூறும்
சேனைமுகத் தாளிரியச் சீறுமுகத் தூறுமதத்து
ஆனைமுகத் தானை நினைத்தால்
தொகுதி தொகுதியாக மேலும் மேலும் வந்து குவிகின்ற எதிரிகளின்
படைகள் எல்லாம் பயந்து சிதறி ஓடிப்போகுமாறு சீற்றமுடன்கூடிய
திருமுகத்தை ஆனைமுகன் கொண்டுள்ளான். சுரக்கும் மத நீரையும்
கொண்டிருக்கிறான். அவன் திருவடிகளை நினைத்தால்
சொல்மடந்தையாகிய சரஸ்வதி, நடைவளம் சுரக்கின்ற
நாவளத்தைத் தந்து அருளுவாள். அதுமட்டுமல்லாது, நம்மைத்
தாக்கும் இடையூறுகளெல்லாமே நம்மைவிட்டு நீங்குவதும் கைகூடும்.
அடுத்து சிவனை வழுத்துவார்:
கண்அவனைக் காண்கஇரு காதுஅவனைக் கேட்கவாய்ப்
பண்ணவனைப் பாடப் பதஞ்சூழ்க - எண்ணிறைந்த
நெய்யொத்து நின்றானை நீலமிடற்றானை என்
கையொத்து நேர் கூப்புக.
எள்ளினுள் விளங்கும் எண்ணெய் போல் அனைத்திலும் இரண்டறக்
கலந்து நின்றானாகிய முதல்வன் சிவன். திருநீலகண்டத்தை
உடையவன். அப்படிப்பட்ட சிவனையே என் கண்கள் பார்க்கட்டும்.
அவன் திருநாமத்தையே என் காதுகள் கேட்கட்டும். என் வாயில்
தோன்றும் பண்ணெல்லாமே அவனைப் போற்றிப் புகழ்வதற்காகவே
உரிய சொற்பதங்களைப் புனைந்து விளங்கட்டும். என் கைகள், என்
உள்ளத்தோடு ஒருமைகொண்டு, அவன் திருவின் முன்பாக குவிந்து
வணங்கியிருக்கக்கூடியவையாக விளங்கட்டும்.
பழங்கால மரபில் கலைமகள் வாழ்த்தும் காணப்படும்.
பிற்காலத்தில் அவ்வாறு காணப்படுவதில்லை.
நாமகள் வாழ்த்து:
தவளத் தாமரைத் தாதார் கோயில்
அவளைப் போற்றுதும் அருந்தமிழ் குறித்தே!
அருமையான இந்தத் தமிழ்நூல், இனிதாக நிறைவெய்துதலே குறி;
அதற்காக வெண்தாமரை மலர்களின் மகரந்தம் நிறைந்துவிளங்குகின்ற
கோயிலிடத்தே எழுந்தருளியிருப்பவளாகிய கலைமகளை நாம்
போற்றுவோம்.
இந்நூலின் சிறப்புப்பாயிரத்தையும் கவனிப்போம்.
மன்னிய சிறப்பின் வானோர் வேண்டத்
தென்மலை இருந்த சீர்சால் முனிவரன்
தன்பால் தண்டமிழ் தாவின் றுணர்ந்த
துன்னருஞ் சீர்த்தித் தொல்காப்பியன் முதல்
பன்னிரு புலவரும் பாங்குறப் பகர்ந்த
பன்னிரு படலமும் பழிப்பின் றுணர்ந்தோன்
ஓங்கிய சிறப்பின் உலகமுழு தாண்ட
வாங்குவில் தடக்கை வானவர் மருமான்
ஐய னாரிதன் அகலிடத் தவர்க்கு
மையறு புறப்பொருள் வழாலின்று விளங்க
வெண்பா மாலை எனப்பெயர் நிறீஇப்
பண்புற மொழிந்தனன் பான்மையின் தெரிந்தே
இதன் உரையை அப்படியே கொடுக்கிறேன்.
'நிலைபெற்ற சிறப்பினை உடையவரானவானோர்கள் வேண்டிக்
கொள்ளுதலினாலே, தென்மலையாகிய பொதியத்திடத்தே வந்து
வீற்றிருந்தவர், சீர்மை நிறைந்த முனிவராகிய அகத்தியர்.
அவரிடத்தே, தண்மை செறிந்த தமிழ்மொழியின் நுட்பங்களிப்
பழுதின்றிக் கற்றுணர்ந்த கிடைத்தற்கரிய புகழினைப் பெற்றவர்கள்,
தொல்காப்பியர் முதலாகிய பன்னிரு புலவர்களும் ஆவர்.
அவர்கள் பகுதியோடும் அமையச் சொல்லிய புறப்பொருள் நூல்,
'பன்னிரு படலம்' என்பது.
அந்நூல் முழுவதையும் குற்றமின்றிக் கற்றுணர்ந்த சிறப்பினையுடையவர்
'ஐயனாரிதனார்' என்னும் இவர்.
உயர்ந்த மேம்பாட்டினையுடைய உலகம் முழுவதையுமே ஆட்சி
செலுத்திவந்தவரும், வளைந்த வில்லினைத் தம் பெரிய கையிடத்தே
கொண்டவருமான சேரர் குடியினரின் வழிவந்தவரும் இவராவர்.
அகற்சியை உடைய நிலப்பரப்பினதான தமிழ்நாட்டின்கண்
உள்ளவர்க்குக் குற்றமற்ற வகையிலே புறப்பொருள் இலக்கணம்
வழுவின்றி விளங்கும் பொருட்டாக, வெண்பாமாலை என்னும்
பெயரினை இட்டு, அப்பொருளினை முறையோடும் தெளிந்தவராக,
நூற்பண்பு பொருந்த, அவர் இதனைச் சொல்லி அருளினார்'.
இந்நூலைக் கண்டெடுத்து வெளியிட்டவர் தமிழ்த்தாத்தா
உ.வே.சாமிநாதய்யரவர்கள். அதற்குப் பொருளுதவி செய்தவர்
நான்காவது மதுரைத் தமிழ்ச்சங்கம் நிறுவியவரும் பாலவநத்தம்
ஜமீன்தாருமாகிய பாண்டித்துரைத் தேவரவர்கள்.
நமக்கெல்லாம் நன்கு அறிமுகமாகிய ஒரு சொற்றடர்
இந்நூலில் உள்ளதொரு வெண்பாவில் காணப்படுவதுதான்.
'கரந்தைப் படலம்' எனும் பகுதியில் 'குடிநிலை' என்னும்
துறையை விளக்கும்படியாக இயற்றப்பட்டது.
பொய்யகல நாளும் புகழ்விளைத்தல் என்வியப்பாம்
வையகம் போர்த்த வயங்கொலிநீர் - கையகலக்
கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளோடு
முன்தோன்றி மூத்த குடி.
உரை:
'பண்டு, இந்த வையகத்தினைக் கவிந்துகொண்ட, தெளிந்து
ஆரவாரிக்கும் ஊழிக்கடல் வெள்ளமானது விட்டு நீங்கியதாக,
அதன்பின் முற்பட மலைதோன்றி மண்தோன்றாதிருந்த அந்தப்
பழங்காலத்திலேயே, எல்லா மக்கட்குடியினும் முற்படத்தோன்றி,
வாளாண்மையுடன் முதிர்ச்சி பெற்றுவருவதும் அம்மறவனின்
குடியாகும். அதனால் இவன், பொய்மை நீங்க நாள் தோறும்
புகழினை விளைத்துச் சிறப்புறுதல் என்னதான் வியப்போ?'
thanks http://jaybeestrishul11.blogspot.com.au
DNA vaccines (U.S. Government Doses First Volunteer with experimental DNA vaccine against Zika. )
Traditional Vaccines: The development of
vaccination against harmful pathogenic microorganisms represents an important
advancement in the history of modern medicine. In the past, traditional
vaccination has relied on two specific types of microbiological preparations
to produce material for immunization and generation of a protective immune
response. These two categories involve either living infectious material
that has been manufactured in a weaker state and therefore inhibits the
vaccine from causing disease, or inert, inactivated, or subunit preparations.
DNA vaccination is a technique for protecting an animal against disease by injecting it with genetically engineered DNA so cells directly produce an antigen, resulting in a protective immunological response.
Recently, a radically new approach to vaccination has been developed. It involves the direct introduction into appropriate tissues of a plasmid containing the DNA sequence encoding the antigen(s) against which an immune response is sought, and relies on the in situ production of the target antigen. This approach offers a number of potential advantages over traditional approaches, including the stimulation of both B- and T-cell responses, improved vaccine stability, the absence of any infectious agent and the relative ease of large-scale manufacture. As proof of the principle of DNA vaccination, immune responses in animals have been obtained using genes from a variety of infectious agents, including influenza virus, hepatitis B virus, human immunodeficiency virus, rabies virus, lymphocytic chorio-meningitis virus, malarial parasites and mycoplasmas. In some cases, protection from disease in animals has also been obtained. However, the value and advantages of DNA vaccines must be assessed on a case-by-case basis and their applicability will depend on the nature of the agent being immunized against, the nature of the antigen and the type of immune response required for protection.
The field of DNA vaccination is developing rapidly. Vaccines currently being developed use not only DNA, but also include adjuncts that assist DNA to enter cells, target it towards specific cells, or that may act as adjuvants in stimulating or directing the immune response. Ultimately, the distinction between a sophisticated DNA vaccine and a simple viral vector may not be clear. Many aspects of the immune response generated by DNA vaccines are not understood. However, this has not impeded significant progress towards the use of this type of vaccine in humans, and clinical trials have begun.
The first such vaccines licensed for marketing are likely to use plasmid DNA derived from bacterial cells. In future, others may use RNA or may use complexes of nucleic acid molecules and other entities. These guidelines address the production and control of vaccines based on plasmid DNA intended for use in humans. The purpose of these guidelines is to indicate:
DNA vaccination is a technique for protecting an animal against disease by injecting it with genetically engineered DNA so cells directly produce an antigen, resulting in a protective immunological response.
Vaccination consists of stimulating the immune system with an infectious agent, or components of an infectious agent, modified in such a manner that no harm or disease is caused, but ensuring that when the host is confronted with that infectious agent, the immune system can adequately neutralize it before it causes any ill effect. For over a hundred years vaccination has been effected by one of two approaches: either introducing specific antigens against which the immune system reacts directly; or introducing live attenuated infectious agents that replicate within the host without causing disease synthesize the antigens that subsequently prime the immune system.
Recently, a radically new approach to vaccination has been developed. It involves the direct introduction into appropriate tissues of a plasmid containing the DNA sequence encoding the antigen(s) against which an immune response is sought, and relies on the in situ production of the target antigen. This approach offers a number of potential advantages over traditional approaches, including the stimulation of both B- and T-cell responses, improved vaccine stability, the absence of any infectious agent and the relative ease of large-scale manufacture. As proof of the principle of DNA vaccination, immune responses in animals have been obtained using genes from a variety of infectious agents, including influenza virus, hepatitis B virus, human immunodeficiency virus, rabies virus, lymphocytic chorio-meningitis virus, malarial parasites and mycoplasmas. In some cases, protection from disease in animals has also been obtained. However, the value and advantages of DNA vaccines must be assessed on a case-by-case basis and their applicability will depend on the nature of the agent being immunized against, the nature of the antigen and the type of immune response required for protection.
The field of DNA vaccination is developing rapidly. Vaccines currently being developed use not only DNA, but also include adjuncts that assist DNA to enter cells, target it towards specific cells, or that may act as adjuvants in stimulating or directing the immune response. Ultimately, the distinction between a sophisticated DNA vaccine and a simple viral vector may not be clear. Many aspects of the immune response generated by DNA vaccines are not understood. However, this has not impeded significant progress towards the use of this type of vaccine in humans, and clinical trials have begun.
The first such vaccines licensed for marketing are likely to use plasmid DNA derived from bacterial cells. In future, others may use RNA or may use complexes of nucleic acid molecules and other entities. These guidelines address the production and control of vaccines based on plasmid DNA intended for use in humans. The purpose of these guidelines is to indicate:
- appropriate methods for the production and control of plasmid DNA vaccines; and
- specific information that should be included in submissions by manufacturers to national control authorities in support of applications for the authorization of clinical trials and marketing.
Vaccines of the future. fast, designed on computer, effective.
The study involves a novel type of vaccination called a DNA vaccine, in
which genes from the virus are shot under high pressure into a person’s
arm. While easy to design, no DNA vaccine has ever reached
commercialization.
With the,
federal scientists are a demonstrating the power of biotechnology to
whip up countermeasures to new threats. The vaccine they developed is a
small stretch of genetic material from the virus, which is fired into a
person’s upper arm through a device that acts like a high-pressure
squirt gun.
The added genes then cause the person’s body to manufacture certain harmless parts of the Zika virus, including its protein shell. That should train a person’s immune system to recognize the virus and fight it off.
The added genes then cause the person’s body to manufacture certain harmless parts of the Zika virus, including its protein shell. That should train a person’s immune system to recognize the virus and fight it off.
Cecile G. Tamura
சிதறல்கள்-பாமா
மரத்தூர் சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் ஒவ்வொரு நாள்
மாலையிலும் வாத்தியக்குழுவினர் முழுவீச்சில் பயிற்சி மேற்கொண்டிருந்தனர்.
காட்டுப்பட்டி பள்ளிக்கூடத் திறப்பு விழாவுக்கு அவர்களது குழுவினரை
அழைத்திருந்தார்கள். அதனால் கடந்த ஒரு வாரமாக சிறுவர்கள் மாலை நேரத்தில்
பயிற்சியில் ஈடுபட்டிருந்தார்கள்.கீரனூருக்கும் கொளத்தூருக்கும் இடையில்
பிரதான சாலையில்
மாத்தூர் அமைந்திருந்தது. கீரனூர் காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில்
குற்றச் செயலில் ஈடுபட்டதாகச் சொல்லப்பட்ட சிறுவர்கள், அந்தப் பள்ளியில்
இருந்தார்கள். சந்திரனும் அவர்களில் ஒருவன். எடையபட்டிதான் அவனது சொந்த
ஊர். சீர்திருத்த பள்ளிக்கு வந்து ஓராண்டு ஆகிறது. அவனது ஊரைவிட மாத்தூர்
கொஞ்சம் பெரிய கிராமமாக இருந்தது. சீர்திருத்தப் பள்ளி ஊரைவிட்டுத் தள்ளி
காட்டுப் பகுதியில் இருந்தது. அவனுக்கு அங்கு இருக்கப் பிடிக்கவி;ல்டலை.
அடிக்கழ அவனது ஊரையும், அவனது அம்மாவையும், அவனது ஒரேயொரு குட்டித்
தங்கையையும், அவன் படித்த பள்ளியையும், அவனது நண்பர்களையும் நினைத்துப்
பார்ப்பான். அப்படி நினைக்கும் பொழுதெல்லாம் அவனுக்குக் கண்கள் கலங்கும்.
அங்கு வந்த புதிதில் அடிக்கடி அழுதுகொண்டிருப்பான். இப்போது மௌனமாக
வேதனையைச் சுமந்து திரியப் பழகிக் கொண்டான்.சந்திரனின் வயது பதிமூன்று.
சீர்திருத்தப்பள்ளிக்கு வருதற்கு முன்பு, ஊரில் ஏழாம் வகுப்பு
படித்துக்கொண்டிருந்தான். அவன் மூன்றாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த போது
அவனது அப்பா கோதண்டம் இறந்துபோனார்.
வயலில் நெற்பயிருக்குப் பூச்சி
மருந்து அடிக்கச் சென்றவர் அங்கேயே சுருண்டு விழுந்து இறந்துவிட்டதாகச்
சொல்லி, வீ;ட்டுக்குத் தூக்கிக் கொண்டு வந்தார்கள். சந்திரனின் அம்மா
ரஞ்சிதம் கூலி வேலை செய்து சந்திரனைப் படிக்க வைத்துக்கொண்டிருந்தாள்.
சந்திரனும் நன்றாகப் படித்துக்கொண்டிருந்தான். படிப்பில் இருந்தது போல மற்ற
எல்ல விசயத்திலும் கெட்டிக்காரனாக இருந்தான். அவனை எப்படியாவது படிக்க
வைத்து ஒரு நல்ல நிலைமைக்குக் கொண்டு வரவேண்டுமென்று ரஞ்சிதம் கனவு
கண்டாள். ஆனால் இடையிலேயே அவனது வாழ்க்கை இப்படியாகிப் போனதை எண்ணி அவள்
நொறுங்கிப் போனாள். சந்திரனுக்கும் அம்மாவை நினைத்தால் மிகவும் கவலையாக
இருக்கும். மறுபடியும் ஊருக்குப் போயி நண்பர்களோடு சேர்ந்து படிக்க
வேண்டும் தங்கையோடு விளையாட வேண்டும் என்று ஏங்கிக் கொண்டிருந்தான்.
ஊரில்
படிக்கும்போது நண்பர்களோடு சேர்ந்து செய்த சேட்டைகளை யெல்லாம் அடிக்கடி
நினைத்துப் பார்த்துக் கொள்வான்.அவன் படித்த பள்ளிக்குச் செல்லும் வழியில்
ஒரு வட்டமான பெரிய கிணறு இருந்தது. அந்தக் கிணற்றுச் சுவரையொட்டிய
மஞ்சணத்தி மரத்தில் ஒரு குருவிக்கூடு இருந்தது. அந்தக் கூட்டில் இருந்த
குருவிக்குஞ்சை எடுப்பதற்கு, நண்பர்கள் சந்திரனை மரத்தில் ஏறச்
சொன்னார்கள். சந்திரனும் ஏறினான். கூடு இருந்த கிளை கிணற்றின் உட்புறமாக
சாய்ந்து தொங்கிக்கொண்ழருந்தது. அந்தக் கிளையில் கால் வைக்க வேண்டாமென்று
நண்பர்கள் சொன்னார்கள். அது மிகச் சிறியதாக இருந்ததால் ஒடிந்து விடுமென்று
பயந்தார்கள். அப்படி ஒடிந்தால் சந்திரன் கிணற்றுக்குள்தான் விழ வேண்டும்.
சந்திரனும் அந்தக்கிளைக்கு அருகே இருந்த பெரிய கிளையில் காலூன்றிக் கொண்டு
கையை நீட்டி கூட்டைத் தொட முயன்றான். தொட முடியவில்லை. அந்தக் கிளை
கிணற்றுக்குள் தொங்கிக் கொண்டிருந்ததால் கூட்டை நெருங்குவது அவ்வளவு
சுலபமாக இல்லை. நண்பர்களுடைய ஆலோசனைப்படி சந்திரனின் சட்டையைக் கழற்றி அதை
அவன் இடுப்பில் கட்டியிருந்த அரை ஜாண் கயிற்றில் கட்டி, சட்டையின்
மறுமுனையை நண்பர்கள் பிடித்துக்கொள்ள, சந்திரன் தாவி அந்தக்கிளையை இழுக்க
முயன்றான்.
ஆனால் அடுத்த நிமிடத்தில் இடுப்பில் கட்டியிருந்த கயிறு
அறுந்துவிட சந்திரன் தாவி தடாலெனக் கீழே விழுந்தான். நல்லவேளையாக
கிணற்றுக்குள் விழாமல் வெளியில் விழுந்ததால் கை ஒடிந்ததோடு
தப்பித்துக்கொண்டான். அந்தத தோளைத் தொட்டுப் பார்த்துக்கொண்டான். அதனால்
ஒருமாதம் பள்ளிக்கே செல்லாமல் சுற்றிக்கொண்ழருந்ததை
நினைத்துக்கொண்டான்.அப்போது பயிற்சிக்கு மாஸ்டர் அழைப்பதாக மணிகண்டன் வந்து
சொல்லவும், சந்திரன் எழுந்து சென்றான். அந்தப் பள்ளியில் அவனுக்குப்
பிடித்தது அந்த வாத்தியக் கருவிகளைக் கையாளுவதுதான். அனைத்துக்
கருவிகளையும் இசைக்கப் பழகியிருந்தான். ஊரில் இருக்கும்போதே பறையடிப்பதில்
அவனை யாரும் வெல்லமுடியாது. நாக்கைக் கடித்துக்கொண்டு ஆவேசத்தோடு
ஆடிக்கொண்டே அவன் அடிப்பதைப் பார்க்கும் போது பார்ப்பவர்களுக்கே ஆட்டம்
வந்துவிடும். அவ்வளவு ஈடுபாட்டோடு பறையடிப்பான்.
இப்போது இங்கு பறை
இல்லாததால் டிரம்ஸ் அடிப்பான். ஆனாலும் பறை அடிப்பதில் இருக்கும் ஊக்கமும்,
உற்சாகமும் டிரம்ஸ் அடிப்பதில் இல்லை என்று அவனுக்குச் சற்று
ஏமாற்றமாகத்தான் இருந்தது. புல்லாங்குழலில் வாசிப்பான். தபேலா அடிப்பான்.
வாசிக்கப்படும் இசைக்கு ஏற்ப மொராக்கசை வைத்து அருமையாக உள்ளங்கையில்
உருட்டுவான். அந்த மொராக்கசை உருட்டுவது அவனுக்கு மிகவும் பிடித்திருந்தது.
இதற்கு முன் அதை ஊரில் பார்த்திராததால் அவன் அப்பொழுதும் அதை எடுத்து
உருட்ட விரும்புவான். அவன் தாளம் தவறாமல் உருட்டுவதால் மாஸ்டரும் அவனை
அதையே உருட்டச் சொல்லிவிட்டார். இதற்காக மட்டும்தான் அந்த மாஸ்டரை
அவனுக்குக் கொஞ்சம் பிடிக்கும். மற்றபடி அவரைக்கண்டால் இவனுக்குக் கோபம்
கொப்பளிக்கும். அதற்குக் காரணமும் இருந்தது.
நான்கைந்து மாதங்களுக்கு
முன்பு ஓரிடத்திற்கு வாத்தியக்குழு சென்றிருந்தபோது, அந்த சந்தர்ப்பத்தைப்
பயன்படுத்தி சந்திரன் தப்பியோட முயன்றான். அப்போது இந்த மாஸ்டர்தான்
அவனைப் பிடித்துக்கொண்டுவந்து மீண்டும் இந்த பள்ளியில் போட்டுவிட்டார்.
அதிலிருந்து மாஸ்டருக்கு இவன்மேல் ஒரு கண். எங்கு சென்றாலும் இவனைக்
கண்காணித்துக்கொண்டே இருப்பார். அதை அவன் வெறுத்தான். அவரையும் வெறுத்தான்.
இப்போது காட்டுப்பாட்டிக்குச் செல்ல பயிற்சி எடுக்கும்போதே
சொல்லிவிட்டார்.“என்ன சந்திரன், நம்ம போறது ஒரு சின்ன கிராமம்.
அங்கயெல்லாம் தப்பிச்சு கிப்பிச்சு ஓடலாம்னு நெனைக்காதே. அப்பிடி எதுவும்
செஞ்சீனா ஈசியா மாட்டிக்கிடுவெ.சந்திரன் பதிலுக்கு அவரை ஒரு பார்வை
பார்த்தான். அவ்வளவுதான் அவனால் செய்ய முடிந்தது.காட்டுப்பட்டி பள்ளியைத்
திறந்து வைக்க வந்த அதிகாரியை, காட்டுப்பட்டி பேருந்து நிலையத்தி லிருந்து
வாத்தியக்குழுவினரின் இசையோடு ஊர்வலமாக பள்ளிக்கு அழைத்துச் செல்ல
வேண்டும். அதன்படி மாஸ்டரும், மற்றும் வாத்தியக் குழுவில் இடம்பெற்றிருந்த
பத்துச் சிறுவர்களும் தூய வெண்ணிறச் சீருடை அணிந்து, வெள்ளைத் தொப்பி
வைத்து, அவரவரின் வாத்தியக் கருவிகளுடன் மாலை ஐந்து மணிக்கெல்லாம்
காட்டுப்பட்டி பேருந்து நிலையத்தில் வரிசையாக நின்றுகொண்டிருந்தனர்.
காட்டுப்பட்டி
ஊர்த்தலைவரும், ஊர்மக்களோடு அங்கு வந்து காத்திருந்தார்.
பேருந்துநிலையத்திலிருந்து பள்ளிக்கூடம் வரையுள்ள தெருக்களில் ஆங்காங்கே
மின்விளக்குகள் கட்டி அலங்கரித்திருந்தனர். ஊரே திருவிழாக்கோலம்
பூண்டிருந்தது. எல்லோரும் மகிழ்ச்சியாக இருந்தார்கள். பேருந்துநிலையம்
மிகவும் சிறியதாக இருந்தது. ஒன்றிரெண்டு தேநீர்க் கடைகள் தவிர
குறிப்பிட்டுச் சொல்லும்பழ எதுவுமில்லை. ஒரு பெரிய வேப்பமரம் இருந்தது.
அதில் சினிமா போஸ்டர் ஒன்று தொங்கிக் கொண்டிருந்தது. என்ன படமென்று
சரியாகத் தெரியவில்லை.
ஊரில் இருக்கும்போது அக்கம்பக்கத்து
பையன்களோடு சினிமாப் பார்க்கப் போனது சந்திரனின் நினைவுக்கு வந்தது.ஊரில்
இருந்த சினிமாக் கொட்டகையில் ரஐனிகாந்து படம் வந்தபோது அம்மாவிடம்
சினிமாவுக்குக் காசு கேட்டு தொந்தரவு செய்தது ஞாபகத்துக்கு வந்தது.
அம்மாவிடம் அப்போது பணமில்லை. படம் ஆரம்பமாவதற்கு முன்பே அங்கு சென்ற
சந்திரன், டிக்கெட் கவுண்டரில் வைக்கப்பட்டிருந்த ஒரு கட்டு டிக்கெட்டை
எடுத்துக்கொண்டு வீட்டுக்கு வந்துவிட்டான். கவுண்டரில் டிக்கெட் கட்டைக்
காணாமல் அலைமோதிக் கொண்டிருந் தார்கள். காணாமல் போன டிக்கெட்டுகளின் எண்கள்
தெரியுமாதலால் அந்த எண்கள் கொண்ட டிக்கெட்டுகளை எடுத்து வருபவர்களைப்
பிடிப்பதற்கு உஷாராக இருந்தார்கள்.இதைப்பற்றியெல்லாம் யோசிக்காத சந்திரன்
தன் நண்பர்களுக்கும் டிக்கெட் கொடுத்து, அவர்களையும் அழைத்துக்கொண்டு
சென்றான். மாட்டிக்கொண்டதும் நண்பர்கள் சந்திரன்தான் தங்களுக்கு டிக்கெட்
கொடுத்தான் என்று சொல்லிவிட சந்திரனைப் பிடித்து விசாரித்தார்கள்
ஊர்ப்பெரியவர்களிடம் சொல்லி அவனைக் கண்டித்து வைக்கச் சொன்னார்கள். ஊரில்
அனைவரும் ~டிக்கெட்டு எடுத்த பெயலுக்கு அதக்கொண்டுக்கிட்டு போனா
புடிபட்டுக்கிருவம்னுகூடத் தெரியல பாருன்னு"சொல்லி அவனைக் கிண்டல் செய்து
சிரித்தனர்.
தலைவர் வந்துவிட்டாரென மக்கள் பரபரப்பாகவும் சந்திரனின்
சிந்தனை தடைப்பட்டது. மாஸ்டர் உத்தரவுப்படி அவரவர் வைத்திருந்த
வாத்தியக்கருவிகளை வாசிக்க ஆரம்பித்தனர். சந்திரனும் தன் கையிலிருந்த
மொராக்கஸை வலது கையில் பிடித்துக்கொண்டு பல வண்ண மணிகளைச் சேர்த்துக்
கட்டப்பட்டிருந்த அந்த மணிகளை இடது உள்ளங்கையில் வைத்து தாளத்துக்கு
ஏற்றபடி உரசி உரசி ஒலி எழுப்பிக் கொண்டிருந்தான். மற்ற சிறுவர்களும்
ஒருமித்த வாசித்ததைக் கேட்பதற்கு மிகவும் நன்றாக இருந்தது. மாஸ்;டர்
அவர்களை வழி நடத்திக் கொண்டிருந்தார்.அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் தலைவர்
ஏறிக்கொள்ள ஊர்வலம் தொடங்கியது. வாத்தியக்குழு ஊர்வலத்துக்கு முன்னே
வாசித்தபடி மெதுவாகச் சென்றது.
சிறுவர்களின் வாசிப்பு மிகவும்
பிரமாதமாக இருப்பதாக மக்கள் ஒருமனதாகச் சொன்னார்கள். அந்தச் சிறுவர்களைப்
பார்ப்பதற்கே கூட்டம் அலைமோதியது. ஆனால் அந்தச் சிறுவர்கள் முகத்தில்
எந்தவித உணர்வும் இல்லை. ஏதோ தங்களுக்குக் குறிக்கப்பட்ட ஒரு கடமையைச்
செய்வது போல எவ்விதச் சலனமுமின்றி அவர்கள் வாசித்துக் கொண்டே முன்னோக்கி
நகர்ந்தார்கள். இடையிடையே பட்டாசுகளை வெடித்தார்கள். சிறுவர்கள் அதைக்
கண்டுகொள்ளவே இல்லை. அவர்களது முழுக் கவனமும் வாசிப்பில்தான் இருந்தது.
அவர்களைச் சுற்றி இளைஞர்கள் ஓர் அரண்போல பாதுகாப்பாக
வந்துகொண்டிருந்தார்கள். அவர்கள் பேசிக்கொண்டதிலிருந்து மாஸ்டரின்
ஏற்பாட்டின்படி ஒரு பாதுகாப்புக்காகத்தான் அவர்கள் அப்படி புடைசூழ்ந்து
வருகிறார்கள் என்பதை சந்திரன் புரிந்து கொண்டான். அவனுக்கு அது எரிச்சலை
உண்டாக்கியது. அவன் மனது பலவிதமான உணர்வுகளால்; அலைக்கழிக்கப்பட்டது. அவன்
கையில் அகப்பட்டுக்கொண்ட அந்த மொராக்கஸை அவன் ஆக்ரோசமாக உருட்டி, உருட்டி
மனசை ஆசுவாசப்படுத்த முயற்சி செய்தான். கைகளிரண்டும் சூடாகின. மனது
கொதித்துக்கொண்டிருந்தது.
தங்களைச் சுற்றி பெருந்திரளாக மக்கள் கூடி
வந்தது தங்களது வாசிப்புத் திறனைப் பார்த்து, கேட்டு மகிழத்தான்
என்றெண்ணியிருந்த சந்திரன், அவர்கள் தங்களது பந்தோபஸ்துக்காகத்தான்
வருகிறார்கள் என்பதை அறிந்தபின் ஆத்திரமும், வெறுப்பும் அடைந்தான்.
மாஸ்டரைப் பார்க்கும்போது அவனுக்கு வெறித்தனமான கோபம் வந்தது. அவர்
தன்னைமட்டும் குறிப்பிட்டு கவனிப்பது போல் தெரிந்தது. இந்த ஊர்
மக்களிடம்கூட அவர் தன்னைப் பற்றிச் சொல்லி வைத்திருப்பார் என்று எண்ணினான்.
அனைவரும் அவனையே கூர்ந்து கவனிப்பதுபோல அவனுக்குத் தெரிந்தது.
சீர்திருத்தப்
பள்ளிக்கு வருவதற்கு முன்பு தனது ஊரில் எவ்வளவு மகிழ்ச்சியாக விழாக்கள்
கொண்டாடினோம் என்று நினைத்தான். தன்வயதுப் பையன்கள் ஓடியாடித் திரிவதைப்
பார்க்கும்போது அவனது மனது வேதனையில் கனத்தது. அவனது மனச்சஞ்சலத்தை அவன்
கையில் வைத்திருந்த மொராக்கஸ் பட்டபாட்டிலிருந்து அறிய முடிந்தது. அவன்
மனதிலிருந்த ஆத்திரத்தையும், வலியையும் அவன் கையில் வைத்து உருட்டிய
மொராக்கஸின் மணிகள் எழுப்பிக் கொண்டிருந்தன. அவனது முகத்திலிருந்து வியர்வை
தாரை தாரையாக வழிந்தது. அவனது கைகள் சூடானது போலவே அவனது முகமும் சூடானது.
அவனது நெஞ்சின் வேட்கை, வெக்கையாக வெளியேறியது. அவனைப் பார்த்துக்
கொண்டிருந்தவர்கள் பேசிய பேச்சுக்கள் அவன் காதுகளில் தெளிவாகக் கேட்டது.
“யே...
இந்தப் பையனப் பாருங்கடா... இந்த மணிய எப்பிடி உருட்டுறாம்னு பாருங்க...
இதுமாதிரி உருட்டுற மணிய நம்ம இது வரைல பாக்கவே இல்லைலடா... இவெ உருட்டுற
உருட்டுல மணியே அந்து போகும் போலடா..."“இதெப்பிடிடா செஞ்சுருக்காக?
"“அதுக்குள்ள இருக்குறது என்னனு தெரியுமா? தேங்காச் செரட்ட"“செரட்டையா?
இம்புட்டுப் பெரிய செரட்டையா?"“ஆமாடா.
இது கேரளா தேங்காயில
இருக்குற செரட்ட. இதுக்குப் பேரு கொப்பரத் தேங்காடா. அங்கயெல்லாம் ரொம்பா
பெருசாத்தான் இருக்குமாம். எங்கண்ணஞ் சொன்னான். நீயி வேணும்னா அத உருட்டுற
பெயல்ட கேட்டுப் பாரேன்."“ஐயய்யோ.... அவங்கிட்டயெல்லாங் கேக்கக் கூடாதுடா.
அந்தா வாராருல அவுங்க வாத்தியார்டத்தான் கேக்கனும்".“போடா போ... அவருட்ட
கேக்கக் கூடாதுடா. எனக்கு அவரப்பாத்தா புடிக்கவே இல்லடா. அவருதாண்டா
இந்தப்பெயல்களை புடுச்சு அடச்சு வச்சுருக்காரு."“இல்லடா... இவனுங்க என்னமோ
தப்பு செஞ்சாங்களாம்டா. அதுக்குத்தான் இவனுங்கள செயில்ல புடுச்சு
வச்சுருக்காங்களாம். எங்கம்மெ சொன்னா."“போடா போ... அதெல்லமில்லடா. பாவம்டா
இவனுங்க. இவுங்க செயில்ல இல்லடா. அதன்னமோ சீர்திருத்தப்பள்ளிக்கூடத்துல
இருக்காங்களாம். ஆஸ்டலுமாதிரி. இல்லடா? "
இதைக்கேட்டுக்கொண்டே நடந்த
சந்திரனுக்கு, ~ஆஸ்டலு இல்லடான்னு" கத்த வேண்டும்போல இருந்தது. அவர்களுடன்
பேசவேண்டும் போல இருந்தது. அந்த மாஸ்டரைப் பற்றியும் அந்த சீர்திருத்தப்
பள்ளிக்கூடத்தைப் பற்றியும் அவர்களிடம் சொல்ல வேண்டும் போல் இருந்தது.
அத்துடன் அவன் கையில் வைத்து உருட்டிக்கொண்டிருக்கும் அந்த மொராக்கசைப்
பற்றியும் அதை அவன் எவ்வாறு தாளத்துக்கு ஏற்றாற் போல உருட்டுகிறான்
என்பது பற்றியும் அவர்களுக்கு உருட்டிக்காட்டவும் அவனுக்கு ஆசை ஆசையாக
இருந்தது. இப்படி எத்தனையெத்தனை ஆசைகளை அவன் அழித்துக்கொள்ள வேண்டியுள்ளது
என்றெண்ணினான்.
இவர்களைப் போல தானும் தனது நண்பர்களும் பேசித்
திரிந்த நாட்கள் நினைவுக்கு வர, துக்கம் தொண்டையை அடைத்தது. அழவேண்டும் போல
இருந்தது. ஆனால் இந்தக் கூட்டத்தில் எப்பழ அழமுடியும்? அழுகையை அடக்கிக்
கொண்டு ஆனந்தமாக வாசிப்பது போல பாவனை செய்ய பழகியிருந்தான்.“பாவம்டா...
சின்னப்பெயலா இருக்கான். ஆனா எம்புட்டு அழகா தாளம் தப்பாமெ உருட்டுறாம்னு
பாரு. எப்பிடி வேர்த்து ஊத்துதுன்னு பாரு. இவம்மேல கருப்பசாமி எறங்குனது
மாதிரி இருக்குதுடா".“இவனத்தாம்டா குறிப்பா கவனிக்கச் சொல்லி அந்த மாஸ்டரு
சொல்லியிருக்காராம். ஏம்னா இன்னொரு எடத்துல இப்பிடி வாசிக்கப் போனப்ப
இந்தப் பெய தப்புச்சு ஓடப்பாத்தானாம். ஆனா மாட்டிக் கிட்டானாம்.
இதைக்கேட்டதும்,
அடக்கி வைக்கப்பட்டிருந்த சந்திரனின் அழுகை ஆங்காரமாக மாறியது. மனது
இறுக்கமானது. மொராக்கசில் கட்டப்பட்டிருந்த கம்பிகளின் இறுக்கத்தை அவன்
மனமும் அனுபவித்தது. ஊர்வலம் பள்ளியை நெருங்கிக் கொண்டிருந்தது. சந்திரனின்
மன உளைச்சல் உச்சத்தை அடைந்தது. அது அந்த மணிகளின் ஆங்கார ஓசையில்
வெளிப்பட்டது. அவனது மனதைப் போலவே கைகளும் சூடாகின. அவன் ஆக்ரோசமாக உருட்ட,
உருட்ட மணிகளை இணைத்துக் கட்டியிருந்த கம்பிகள் அறுந்தன. மணிகள் சிதறின.
விடுதலையாகிப்போன மணிகளை ஏக்கத்தோடு பார்த்தான் சந்திரன்.
http://azhiyasudargal.blogspot.com.au
ஆத்திகமும் நாத்திகமும் AASTHIKAM AND NAASTHIKAM
இருபதாண்டுகளுக்கு முன்னர் மலேசியாவிலிருந்து வெளிவந்த 'மயில்'
இலக்கியப் பத்திரிக்கையில் வந்த நாத்திகம் -ஆத்திகம்' பற்றிய கேள்வி பதில்.
இந்து சமய விளக்கம்
டாக்டர் எஸ்.ஜெயபாரதி
மயில் இலக்கிய இதழ்
1992
டாக்டர் எஸ்.ஜெயபாரதி
மயில் இலக்கிய இதழ்
1992
கேள்வி:
எம்.இந்திரன்,
கம்போங் போகூல்,
பூச்சோங்
கேள்வி: நம்மிடையே ஒரு சாரார் கடவுள் இருக்கிறது என்றும் மற்றொரு
சாரார் கடவுள் இல்லையென்றும் கூறும் நிலைமை எப்படி ஏற்பட்டது?
பதில்: 'அஸ்து' என்றால் இருக்கிறது என்று பொருள். 'ந அஸ்து' என்றாலோ 'இல்லை' அல்லது 'இல்லாமல் இருக்கிறது' என்று அர்த்தம். இருக்கிறது என்போர் ஆஸ்திகர். இல்லை என்போர் நாஸ்திகர்.
மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இந்து சமயத்தில் ஒரு மாபெரும் சரிவு ஏற்பட்டது. பெருமளவில் ஊழல்கள், மனிதன் மானிதனை மதிக்காத நிலைகள், சடங்கு சம்பிரதாயங்களின்மூலம் மக்களிடையே சிந்தனை முடக்கத்தைத் தோற்றுவித்துவிட்டனர். சமுதாயத்தில் ஒரு பிற்போக்கு வாதம் நீடித்து நிலவ ஆரம்பித்தது.
அந்த நிலையைத் தக்ர்ப்பதற்குப் பல சிந்தனையாளர்கள் தோன்றினர். சமுதாய வாழ்வை முடக்கிவைத்துக்கொண்டிருக்கும் மூட நம்பிக்கைகளினின்றும் மக்களை விடுபடச் செய்வதற்காகப் பலவித முயற்சிகளை மேற்கொண்டு பலவித வழிகளைக் கண்டுபிடிக்கலாயினர். இந்து சமயத்திற்கு ஆணிவேராக விளங்குபவை நான்கு வேதங்கள். அந்த வேதங்களை அனுசரித்து மேலும் ஆறு நூல்கள் உள்ளன. இவற்றை 'அங்க நூல்கள்' என்பர். 'சடங்கு' என்னும் சொல்லும் 'சாங்கியம்' என்னும் சொல்லும் இதிலிருந்து ஏற்பட்டவைதாம் வேதங்கள்
நான்கினின்றும் தோன்றிய பகுதி நூல்களாகப் 'பிராமணங்கள்' ஆரண்யகங்கள்', உபநிடதங்கள், முதலியவைகளும் விளங்கின. இவை தவிர தர்ம நூல்கள் புராணங்கள் இதிகாசங்கள் முதலிய நூல்களும் ஏற்பட்டன. பிராம்மணர்களின் ஆதிக்கம் மேலோங்கியது. சமுதாயத்தின்மீது இரும்புப்பிடியொன்றை அவ்வர்க்கத்தினர் போட்டுவிட்டனர்.
வேதங்களில் சொல்லப்பட்டுள்ள தத்துவக் கருத்துக்களைவிட, , அவற்றில் காணப்படும் தெய்வங்களை எளிமையாகத் துதிக்கும் முறைகளை விட, அவற்றில் உள்ள வாழ்வியல் உண்மைகளை விட, சடங்குகள் தட்சணைகள் போன்றவையே முக்கியத்துவம் பெற்றன.
இந்தத் தேக்கநிலைகள்மீது பலதுறைகளைச்சேர்ந்த அறிஞர்கள் பல்முனைத் தாக்குதல்களை நடத்தினர்.
அவர்களில் புத்தர் மகாவீரர் பொன்றோர் வேதங்களை அறவே மறுத்து,
சடங்குகளைப் புறக்கணித்துப் புதிய சமயங்களைத் தோற்றுவித்தனர். புத்தர் தோற்றுவித்த மதத்தில் கடவுள் கொள்கையும் கிடையாது. வேதங்களும் புறக்கணிக்கப்பட்டன.
சமணத்தில் அருகன், மலர்மிசை ஏகினான், எண்குணத்தான், வாலறிவன், பொறிவாயில் ஐந்தவித்தான் போன்ற பல பெயர்களில் ஒரு பேரிறைவனையும் அவனுக்குப் பரிவார சக்திகளாகப் பல தெய்வங்களையும் வணங்கினர். ஆனால் வேதங்களுக்குப் பதில்
இவர்கள் 'ஸ்ரீபுராணம்' என்னும் நூலையும் அதன் தொடர்பாக உள்ள பல வழி நூல்களையும் அவர்கள் பின்பற்றினர்.
வேதங்கள் மார்க்கத்தில் கர்ம காண்டம், ஞானகாண்டம் என்ற இருவேறுபாடுகள் உண்டு. கர்மகாண்டத்தைப் பூர்வமீமாம்சை என்று ஞானகாண்டத்தை உத்தரமீமாம்சை என்றும் சொல்வ்துண்டு. பூர்வமீமாம்சையை கடைபிடிப்பவர்களை பூர்வமீமாம்சகர் அல்லது கர்மகாண்டர் என்றும் குறிப்பிடுவார்கள். வேதங்களில் குறிப்பிடப்பட்ட பூஜை, புனஸ்காரம், கடமைகள் சடங்குகள் முதலியவற்றை மட்டுமே இவர்கள் செய்தனர். பூர்வமீமாம்சையில் கடவுள் கொள்கையே கிடையாது. தேவர்கள் போன்றவர்கள் உண்டு. ஜைமினி என்னும் பெரும் ரிஷி நிறுவியது. இந்தக் கோட்பாடு. குமாரில பட்டர், மண்டனமிசிரர் போன்ற பெரும் பெரும் மேதைகள் இந்த மதத்தில் இருந்தனர்.
இவர்களை ஆதிசங்கரர் வாதத்தில் வென்று கடவுள் கொள்கையை ஏற்றுக்கொள்ளச்செய்தார்.
வேதங்களையும் கடவுட் கொள்கையையும் ஏற்றுக்கொள்ளாத இன்னொரு மதமும் இருந்தது. அதன் பெயர் லோகாயாதம். 'கண்டதே காட்சி; கொண்டதே கோலம்; அனுபவிப்பதே உண்மை. நோக்கத்தின் வழி காரணம்; காரணத்தால் காரியம்; காரியத்தின் மூலம் பலன் - இவ்வாறுதான் தர்க்கரீதியாக அதன் தத்துவங்கள் செல்லும்.
இதில் இறைவனுக்கே இடமில்லை. பச்சையான நாஸ்திக வாதம். இதில் உயிர், இறைவன், மறுமை, பாவம், புண்ணியம், கற்பு முதலிய விஷயங்கள் கிடையாது. வல்லவன் வகுத்ததே சட்டம், வழி, நியதி, நீதி, எல்லாமே. உடலும் உலகுமே மெய். இப்படியாக மிக விரிவாகவும் ஆணித்தரமாகவும் விவரித்துக்கொண்டே இவ்வாதம் போகும். .
இந்த வாதத்தைச் 'சார்வாகம்' என்றும் குறிப்பிட்டனர். இந்த மதத்தில் ஆறு உட்பிரிவுகள் இருந்தன.
அவற்றுள் ஒன்று 'பார்ஹஸ்பத்யம்' எனப்படுவது. அசுரர்களின் குரு சுக்கிரன். அசுரர்களின் விரோதிகள் தேவர்கள். தேவர்களின் குரு பிரஹஸ்பதி. சுக்கிரன் தவம் செய்யச் சென்றிருந்த காலத்தில் சுக்கிரனின் வடிவத்தில் பிரஹஸ்பதி அசுரர்களிடம் வந்தார்.
தேவர்களுடைய மாபெரும் சக்திகளையும் தவவலிமைகளையும் ஆன்மீக ஆற்றலையும் குன்றச்செய்து, அவர்களின் பலத்தையும் பராக்கிரமத்தையும் அழிப்பதற்காக சுக்கிரன் உருவில்
வந்த பிரஹஸ்பதி அவர்களிடம் தவறான முறைகளையும் வழிகளையும் நாஸ்திக வாதத்தையும் பரப்பிவிட்டார்.
போலி சுக்கிரனாக வந்த பிரஹஸ்பதி பரப்பிவிட்ட மதமாதலால் அதற்கு 'பார்ஹஸ்பத்யம்' என்ற பெயர் ஏற்பட்டது.
உபநிடதங்கள் மிகச்சிறந்த உள்ளர்த்தங்களை உள்ளடக்கியவை. இவற்றில்
உள்ள சில தத்துவங்களை மட்டுமே எடுத்துக்கொண்டு, அவற்றை விவரித்து,
வியாக்கியானம் செய்த உட்சமயங்களும் உண்டு. அவற்றில் ஒன்று ஸாங்க்யம், இதை
நிறுவியவர் 'கபிலர்' என்னும் முனிவர். வேதங்களை ஸாங்க்யம் ஏற்றுக்கொண்டது.
ஆனால் கடவுள் கொள்கையை இது ஏற்றுக்கொள்ளவில்லை. ஆகவே இதை நிரீஸ்வர
சாங்க்யம் என்று அழைத்தார்கள்.
பிற்காலத்தில் வந்த ஸாங்க்யர்கள் கடவுள் தத்துவத்தை ஏற்றுக்கொண்டனர். அவர்களை 'சேஸ்வர ஸாங்க்யர்' - 'ச ஈஸ்வர ஸாங்க்யர்' என்பர்.
கோயில்களையும் சடங்குகளையும் சாஸ்திரங்களையும் அறவே வெறுத்து மிகக்கடுமையாகக் கண்டித்திருக்கின்றனர் சிவவாக்கியர் போன்ற சித்தர்கள்.
இந்து சமயத்தில் மட்டுமே நாஸ்திக வாதம் உண்டு என்று எண்ணி விடவேண்டாம்.
இரண்டாயிரத்து ஐந்நூற்று ஆண்டுகளுக்கு முன்னரேயே கிரேக்க நாட்டில் 'எப்பிக்யூரஸ்', ஸீனோ, டெமாக்ரிட்டஸ் போன்ற ஞானிகள் அவரவர் பாணியில் நாஸ்திக வாதங்களை ஏற்படுத்தினர். ஸ்க்கெப்டிக்ஸ் என்ற வகை நாஸ்திக வாதிகளும் இருந்தனர்.
கிருஸ்தவ மதத்தைச் சேர்ந்த சிலர் ஏக்நோஸ்ட்டிக் எனப்படும் நாத்திகத்தை ஏற்படுத்தினர். அதலை சிறந்த அரசியல் ராஜ தந்திரிகளாகிய மாக்கியவெல்லி, ரேனே டேய்கார்ட் போன்றோரின் கொள்கைய்களில் இதன் சாயல் அதிகமாக உள்ளது. இருபதாம் நூற்றாண்டில் நீட்ஷவின் சித்தாந்தங்களை புதுமை வாதத்தை விரும்பிய இளைஞர்கள் படித்தனர்.
பத்தொன்பதாம் நூற்றாண்டில் வசித்த அறிஞர் இங்கர்ஸால். ஒரு மாலை நேரச் சொற்பொழிவுக்கு அந்தக் காலத்திலேயே மூவாயிரத்து ஐந்நூறு டாலர்கள் வாங்கியவர். 'Why I Am Agnostic' - 'நான் ஏன் நாத்திகன்' என்னும் நூல் பகுத்தறிவு பூர்வமாகச் சிந்திக்கும் ஆத்திகர்களாலும் கட்டாயமாகப் படிக்கப்படவேண்டிய புத்தகம். பேரறிஞர் அண்ணதுரையின் சிந்தனையில் மிகப் பெரிய தக்கத்தைத் தோற்றுவித்தவர் இங்கர்ஸால்தான்.
ஐரோப்பிய சிந்தனை மறுமலர்ச்சியை ஏற்படுத்தியவர்கள் வால்ட்டேய்ரும் ரோஸோவும். இவர்களில் வால்ட்டேய்ர் சிறந்ததொரு நாத்திகவாதி.
இவர்களுடைய சிந்தனைகளைத் தூண்டிவிட்டவர் 'பெனடிக் தே ஸ்ப்பிநோஸா'. இவர் ஒரு யூதர். இவருடைய கொள்கைகள்தாம் இன்றளவும் ஐரோப்பிய பகுத்தறிவு வாதச் சிந்தனைகளில் அதிகமான தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன.
நாஸ்திக வாதம் எப்போதுமே இந்து மதத்தில் இருந்து வந்திருக்கிறது. கடவுள் இல்லை என்று கூறுபவர்களை 'நிரீசுவர வாதிகள்' என்று எண்பது தொண்ணூறு ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த தமிழர்கள் குறிப்பிட்டனர்.
எண்பது ஆண்டுகளுக்கு முன்னர் என் தந்தையார் சின்னமுத்து பிள்ளையவர்களை அவ்வாறுதான் தென்கிழக்காசியாவில் அன்று வாழ்ந்த இந்து சமயப்பிரமுகர்கள் அழைத்தனர்.
அதன் நிமித்தம் 'கடவுளின் உண்மைத் தோற்றம்' என்ற தலைப்பில் 1936-ஆம் ஆண்டில் அவர் ஒரு சிறிய விளக்க நூலை எழுத நேரிட்டது. அந்தச் சிறிய நூலின் தாக்கத்தைக்கூடத் தாங்கிக்கொள்ள முடியாமல் அந்தக் காலத்துத் தமிழ் நேசன் பத்திரிக்கை அச்சிறு நூலைத் தாக்கி தலையங்கங்களையே எழுதிவிட்டது.
பெரியாரைப் பற்றி யார் யாரோ ஏதேதோ கூறுவார்கள். ஆனால் உண்மையிலேயே பெரியாரின் நாத்திக வாதத்தால் இந்து சமயம் நன்மையே பெற்றது என்பதுதான் ஆணித்தரமான அசைக்கமுடியாத யதார்த்தமாகும்.
நாஸ்திக வாதம் இந்து சமயத்துக்கு எந்தக் காலத்திலேயுமே மிரட்டலாக விளங்கியதே கிடையாது. உண்மையிலேயே அதனால்தான் அவ்வப்போது இந்துசமயம் புத்துணர்வு பெற்றே வந்திருக்கிறது. இதுதான் உண்மை.
நம் சமுதாயத்தில் பல நாஸ்திகர்கள் தங்களை ஆஸ்திகர்கள் என்று கருதிக் கொள்பவர்களைவிடச் சிறந்த நேர்மையாளர்களாகவும் பெரும் சிந்தனையாளர்களாகவும், மேதைகளாகவும் விளங்கியிருக்கின்றனர்.
சமுதாயத்தில் மலிந்துவிட்ட பிற்போக்கு வாதத்தைத் தைரியமாக எப்போதுமே எதிர்த்து வந்துள்ள வீரம் மிகுந்த சிறுபான்மையினர் அவர்கள். Thanks
http://jaybeestrishul11.blogspot.com.au
பிற்காலத்தில் வந்த ஸாங்க்யர்கள் கடவுள் தத்துவத்தை ஏற்றுக்கொண்டனர். அவர்களை 'சேஸ்வர ஸாங்க்யர்' - 'ச ஈஸ்வர ஸாங்க்யர்' என்பர்.
கோயில்களையும் சடங்குகளையும் சாஸ்திரங்களையும் அறவே வெறுத்து மிகக்கடுமையாகக் கண்டித்திருக்கின்றனர் சிவவாக்கியர் போன்ற சித்தர்கள்.
இந்து சமயத்தில் மட்டுமே நாஸ்திக வாதம் உண்டு என்று எண்ணி விடவேண்டாம்.
இரண்டாயிரத்து ஐந்நூற்று ஆண்டுகளுக்கு முன்னரேயே கிரேக்க நாட்டில் 'எப்பிக்யூரஸ்', ஸீனோ, டெமாக்ரிட்டஸ் போன்ற ஞானிகள் அவரவர் பாணியில் நாஸ்திக வாதங்களை ஏற்படுத்தினர். ஸ்க்கெப்டிக்ஸ் என்ற வகை நாஸ்திக வாதிகளும் இருந்தனர்.
கிருஸ்தவ மதத்தைச் சேர்ந்த சிலர் ஏக்நோஸ்ட்டிக் எனப்படும் நாத்திகத்தை ஏற்படுத்தினர். அதலை சிறந்த அரசியல் ராஜ தந்திரிகளாகிய மாக்கியவெல்லி, ரேனே டேய்கார்ட் போன்றோரின் கொள்கைய்களில் இதன் சாயல் அதிகமாக உள்ளது. இருபதாம் நூற்றாண்டில் நீட்ஷவின் சித்தாந்தங்களை புதுமை வாதத்தை விரும்பிய இளைஞர்கள் படித்தனர்.
பத்தொன்பதாம் நூற்றாண்டில் வசித்த அறிஞர் இங்கர்ஸால். ஒரு மாலை நேரச் சொற்பொழிவுக்கு அந்தக் காலத்திலேயே மூவாயிரத்து ஐந்நூறு டாலர்கள் வாங்கியவர். 'Why I Am Agnostic' - 'நான் ஏன் நாத்திகன்' என்னும் நூல் பகுத்தறிவு பூர்வமாகச் சிந்திக்கும் ஆத்திகர்களாலும் கட்டாயமாகப் படிக்கப்படவேண்டிய புத்தகம். பேரறிஞர் அண்ணதுரையின் சிந்தனையில் மிகப் பெரிய தக்கத்தைத் தோற்றுவித்தவர் இங்கர்ஸால்தான்.
ஐரோப்பிய சிந்தனை மறுமலர்ச்சியை ஏற்படுத்தியவர்கள் வால்ட்டேய்ரும் ரோஸோவும். இவர்களில் வால்ட்டேய்ர் சிறந்ததொரு நாத்திகவாதி.
இவர்களுடைய சிந்தனைகளைத் தூண்டிவிட்டவர் 'பெனடிக் தே ஸ்ப்பிநோஸா'. இவர் ஒரு யூதர். இவருடைய கொள்கைகள்தாம் இன்றளவும் ஐரோப்பிய பகுத்தறிவு வாதச் சிந்தனைகளில் அதிகமான தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன.
நாஸ்திக வாதம் எப்போதுமே இந்து மதத்தில் இருந்து வந்திருக்கிறது. கடவுள் இல்லை என்று கூறுபவர்களை 'நிரீசுவர வாதிகள்' என்று எண்பது தொண்ணூறு ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த தமிழர்கள் குறிப்பிட்டனர்.
எண்பது ஆண்டுகளுக்கு முன்னர் என் தந்தையார் சின்னமுத்து பிள்ளையவர்களை அவ்வாறுதான் தென்கிழக்காசியாவில் அன்று வாழ்ந்த இந்து சமயப்பிரமுகர்கள் அழைத்தனர்.
அதன் நிமித்தம் 'கடவுளின் உண்மைத் தோற்றம்' என்ற தலைப்பில் 1936-ஆம் ஆண்டில் அவர் ஒரு சிறிய விளக்க நூலை எழுத நேரிட்டது. அந்தச் சிறிய நூலின் தாக்கத்தைக்கூடத் தாங்கிக்கொள்ள முடியாமல் அந்தக் காலத்துத் தமிழ் நேசன் பத்திரிக்கை அச்சிறு நூலைத் தாக்கி தலையங்கங்களையே எழுதிவிட்டது.
பெரியாரைப் பற்றி யார் யாரோ ஏதேதோ கூறுவார்கள். ஆனால் உண்மையிலேயே பெரியாரின் நாத்திக வாதத்தால் இந்து சமயம் நன்மையே பெற்றது என்பதுதான் ஆணித்தரமான அசைக்கமுடியாத யதார்த்தமாகும்.
நாஸ்திக வாதம் இந்து சமயத்துக்கு எந்தக் காலத்திலேயுமே மிரட்டலாக விளங்கியதே கிடையாது. உண்மையிலேயே அதனால்தான் அவ்வப்போது இந்துசமயம் புத்துணர்வு பெற்றே வந்திருக்கிறது. இதுதான் உண்மை.
நம் சமுதாயத்தில் பல நாஸ்திகர்கள் தங்களை ஆஸ்திகர்கள் என்று கருதிக் கொள்பவர்களைவிடச் சிறந்த நேர்மையாளர்களாகவும் பெரும் சிந்தனையாளர்களாகவும், மேதைகளாகவும் விளங்கியிருக்கின்றனர்.
சமுதாயத்தில் மலிந்துவிட்ட பிற்போக்கு வாதத்தைத் தைரியமாக எப்போதுமே எதிர்த்து வந்துள்ள வீரம் மிகுந்த சிறுபான்மையினர் அவர்கள். Thanks
http://jaybeestrishul11.blogspot.com.au
Tuesday, August 2, 2016
Wolf pack & strategy
The first 3 are the older or sick & they set the pace of the group. If it was on the contrary, they would be left behind and lost contact with the pack. In ambush case they would be sacrificed. The following are the 5 strongest. In the center follow the remaining members of the pack, & at the end of the group the other 5 stronger. Last, alone, follows the alpha wolf. It controls everything from the rear. That position can control the whole group, decide the direction to follow & anticipate the attacks of opponents. The pack follows the rhythm of the elders & the head of command that imposes the spirit of mutual help not leaving anyone behind.
நம்மாலான தொகை, எவ்வளவு சிறிதாயினும், நம் தமிழ் மொழிக்கான இருக்கைக்கு நிதியாக கொடுப்போம்.
அமெரிக்காவின் ஹாவர்டு பல்கலைக்கழகம் நம் தமிழ் மொழிக்கென ஒரு இருக்கை
ஒதுக்கியுள்ளது.இது நம் தமிழ் மொழிக்கான மிகப்பெரிய அங்கீகாரம்.தமிழ்
இருக்கைக்கான நிதி திரட்டும் பணி நடந்து வருகிறது,நடிகர் சிவகுமார்,வானொலி
அறிவிப்பாளர் அப்துல் ஹமீது உள்ளிட்டோர் இது குறித்து காணொளி பேசி
அனுப்பியுள்ளனர்.நீங்களும் அனுப்புங்கள் என்றார் எழுத்தாளர்
அ.முத்துலிங்கம். என் பேச்சின் மீது பெரும் மதிப்பு கொண்ட அவர் தமிழ்
இருக்கை குறித்து நீங்கள் தொடர்ந்து மேடைகளில் பேச வேண்டும் என வேண்டுகோள்
வைத்த போது,தமிழ் சார்ந்த பணிகளை வேண்டுகோளாக அல்லாமல்,கட்டளையாகவே நீங்கள்
சொல்லலாம் என்றேன்.
நண்பர்கள் காணொளியைப் பார்க்க
வேண்டுகிறேன்.நம்மாலான தொகை, எவ்வளவு சிறிதாயினும்,உலகப் புகழ்பெற்ற
பல்கலைக்கழகத்தில், நம் தமிழ் மொழிக்கான இருக்கைக்கு நிதியாக கொடுப்போம்.
Sumathi Srri
Subscribe to:
Posts (Atom)