Search This Blog

Sunday, October 4, 2015

Sculptural extravaganza













உணவே மருந்து


1. மனநலக் கோளாறு மற்றும் மூளை நரம்புகளில் பாதிப்பு உள்ளவர்களின் தினசரி உணவில் தர்பூசணி துண்டுகள் அவசியம். மன அழுத்தம், பயம் போன்ற பாதிப்புகளை தகர்க்கும் விட்டமின் பி-6 தர்பூசணியில் அதிகம்.
2. ஆப்பிள் தோலில் பெக்டின் என்ற வேதிப்பொருள் கணிசமாக இருப்பதால், தோலோடு சாப்பிட வேண்டும். பெக்டின் நம் உடலின் நச்சுக்களை நீக்குவதில் எக்ஸ்பர்ட்.
3. பூண்டு சாப்பிட்டீர்களென்றால்… உங்கள் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி வெகுவாக அதிகரிக்கும். வெள்ளை அணுக்கள் அதிகம் உற்பத்தியாவதோடு, கேன்சர் செல்கள் உருவாகாமலும் தடுக்கும்.
4. சிவப்பணு உற்பத்திக்கு புடலங்காய், பீட்ரூட், முருங்கைக்கீரை, அவரை, பச்சைநிறக் காய்கள், உளுந்து, துவரை, கம்பு, சோளம், கேழ்வரகு, பசலைக்கீரை போன்றவற்றை அடிக்கடி சேர்த்துக் கொள்ள வேண்டும்.
5. பச்சைப் பயறு, மோர், உளுந்துவடை, பனங்கற்கண்டு, வெங்காயம், சுரைக்காய், நெல்லிக்காய், வெந்தயக்கீரை, மாதுளம் பழம், நாவற்பழம், கோவைக்காய், இளநீர் போன்றவை உடலின் அதிகப்படியான சூட்டைத் தணிக்கும்.
6. சுண்டைக்காயை உணவில் சேர்த்தால்… நாக்குப்பூச்சித் தொல்லை, வயிற்றுப்பூச்சித் தொல்லை தூர ஓடிவிடும்.
7 வெங்காயம், பூண்டு, சிறுகீரை, வேப்பிலை, மிளகு, மஞ்சள், சீரகம், கருப்பட்டி, வெல்லம், சுண்டைக்காய் வற்றல், செவ்விளநீர், அரைக்கீரை, எலுமிச்சை போன்றவை உடலில் உள்ள நச்சுத்தன்மை நீக்கும் உணவுகள்.
8. பொன்னாங்கண்ணிக் கீரையைத் துவட்டல் செய்து சாப்பிட்டு வந்தால், மூல நோய் தணியும். இந்தக் கீரையின் தைலத்தை தலைக்குத் தேய்த்துக் குளித்து வந்தால்… கண் நோய்கள் நெருங்காது.
9. சமையலுக்குக் கைக்குத்தல் அரிசியைப் பயன்படுத்துவது மிக மிக நல்லது. கைக்குத்தல் அரிசியில் நார்ச் சத்துக்கள் நிறைந்துள்ளன.
10. சைக்கிள் கேப்பில் எல்லாம் ஸ்நாக்ஸ் சாப்பிடுவதை முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டும். அதற்குப் பதிலாக தானியங்கள், முளைகட்டிய பயறு போன்றவற்றைச் சாப்பிடலாம்.
11. பப்பாளிப் பழங்கள் மிகவும் சத்து மிகுந்தவை. வாரம் ஒருமுறை பப்பாளிப் பழம் வாங்கிச் சாப்பிடுங்கள். கண்களுக்கும் நல்லது.
12. அதிக நாட்கள் உணவை ஃப்ரிட்ஜில் வைத்து சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். அப்படி வைக்கப்பட்ட உணவுகளில் சத்துக்கள் குறைந்து விடுவதோடு, உடல் ஆரோக்கியத்துக்கும் தீங்கினை ஏற்படுத்தும்.
13. தினசரி சிறு துண்டு பைனாப்பிளை தேனில் ஊற வைத்து, அந்தத் தேனை இரண்டு வாரம் சாப்பிட்டால் கல்லீரல் ஆரோக்கியமாக இருக்கும்.
14. பலமான விருந்து காரணமாக ஜீரணக் கோளாறா? புதினா, தேன், எலுமிச்சைச் சாறு… இவற்றில் ஒவ்வொரு ஸ்பூன் கலந்து சாப்பிட்டால் போதும். கல்லும் கரைந்துவிடும்.
15. கேன்சர் செல்களைத் தகர்க்கும் சக்தி திராட்சையின் தோலில் இருக்கிறது. திராட்சை கொட்டைகளிலிருந்து பெறப்படும் மருந்துப் பொருட்கள், வைரஸ் எதிர்ப்புச் சக்தியை பெரிதும் தூண்டுகின்றன.மருந்தே வேண்டாம்….!
16. இயற்கைச் சூழலான இடங்களுக்குச் செல்ல நேர்ந்தால்… கொஞ்ச நேரம் ஆழமாக மூச்சு விடுங்கள். நுரையீரலுக்கு அது மிகவும் பயனளிக்கும்.
17. எந்தவித நோய் தாக்கியிருந்தாலும் முதலில் செய்ய வேண்டியது, கவலையைத் தூக்கி எறிவதுதான்

ஒரு தந்தை தன் மகனுக்கு எழுதிய அழகிய / அருமையான கடிதம்


இக்கடிதம் புகழ் பெற்ற ஹாங்காங் தொலைக் காட்சி ஒளிபரப்பாளர் / குழந்தை உளவியல் நிபுணரால் அவருடைய மகனுக்கு எழுதப்பட்டது. இக் கடிதத்தில் உள்ள வார்த்தைகள் / கருத்துக்கள் உண்மையிலேயே நம் அனைவருக்கும் பயனளிப்பதாகும். இளமையானவர்கள், முதியவர்கள், குழந்தைகள் அல்லது பெற்றோர்கள் அனைவருக்கும் இது பயனளிக்கும். அனைத்து பெற்றோர்களும் தங்களுடைய குழந்தைகளுக்கு இதனை படிப்பினையாக கற்பிக்கலாம்.
அன்புள்ள மகனுக்கு,
மூன்று காரணங்களுக்காக நான் இதை உனக்கு எழுதுகிறேன்:
1. வாழ்க்கை, அதிர்ஷ்டம்/நல்ல வாய்ப்பு, இடையூறுகள் ஆகிய அனைத்தும் முன் மதிப்பிட்டு அறிய(கணிக்க) முடியாதவை. தாம் எவ்வளவு காலம் வாழ்வோம் என்று எவரும் அறிவதில்லை. சில கருத்துக்களை / அறிவுரைகளை சரியான நேரத்தில்(முன் கூட்டியே) கூறிவிடுவது நல்லது.
2. நான் உன்னுடைய தந்தை. நான் உனக்கு இதனை கூறாவிடில் உனக்கு இதனை யாரும் கூறப் போவதில்லை.
3. நான் உனக்கு எழுதுவது யாதெனின், எனக்கேற்பட்ட சிறு அளவிலான சொந்த அனுபவங்களேயாகும். இது ஒரு வேளை தேவையற்ற அதிகப்படியான இதய வலிகளிலிருந்து உன்னைக் காக்க இயலும். .
கீழ்க் கண்டவற்றை நீ உன் வாழ்க்கை முழுவதும் கவனத்தில் கொள்ள வேண்டும்:
1. உன்னிடத்தில் நல்லவர்களாக நடந்து கொள்ளாதவரிடம் நீ உன் வன்மத்தை / பொல்லாங்கை காட்டாதே. உன் அம்மாவையும் என்னையும் தவிர உன்னை நல்லவிதமாக நடத்தி செல்லும் பொறுப்பு எவருக்குமில்லை. உனக்கு யாராவது நல்லவர்களாக இருப்பின் அது உனக்கு கிடைத்த புதையல் / பொக்கிஷம் போன்றதாகும். அவர்களுக்கு நீ நன்றி உடையவனாக இரு. மேலும் நீ அவர்களிடத்தில் கவனமாக நடந்து கொள்ளுதல் அவசியம். ஏன் எனில், ஒவ்வொருவரின் அணுகுமுறையும் ஏதேனும் ஒரு நோக்கத்துடனேயே இருக்கிறது. உன்னிடத்தில் ஒரு மனிதன் நல்லவனாக நடந்து கொள்கிறான் என்றால், உன்னை அவன் உண்மையாக நேசிக்கிறான் என்று அர்த்தம் இல்லை. நீ விழிப்புடன் இருக்க வேண்டும். அவனை நீ ஆய்ந்தறியாமல், மதிப்பிடாமல் உண்மையான் நண்பன் என்று கொள்ளாதே.
2. இந்த உலகில் இன்றியமையாதது என்று ஒன்று இல்லை. உனக்கு உடமையானது என்று எதுவும் இந்த உலகில் இல்லை. இந்த கூற்றினை நீ புரிந்து கொண்டாய் என்றால், உன்னை சுற்றி மனிதர்கள் சூழ்ந்திருந்தாலும், எவரும் தேவை இல்லை என்றாலும் அல்லது நீ அதிகமாக விரும்பிய ஒன்றையோ/ ஒருவரையோ நீ இழக்க நேர்ந்தாலும் உன் வாழ்க்கையை நீ எளிதில் வழி நடத்திச் செல்ல இயலும்.
3. வாழ்கை என்பது மிகவும் குறுகிய காலத்திற்கு உட்பட்டது. இன்றைய வாழ்க்கையை நீ வீணடித்தாய் என்றால் உன் வாழ்க்கை உன்னைவிட்டு சென்றுவிட்டதை நாளை நீ கண்டுகொள்வாய். வாழ்க்கையின் மதிப்பினை நீ எவ்வளவு விரைவில் உணர்ந்து கொள்கிறாயோ ஓரளவாகிலும் நீ வாழ்வினை அனுபவிப்பாய்.
4. அன்புதான் என்றாலும் அது உறுதியற்ற ஒரு உணர்வே ஆகும். காலத்தை பொருத்தும் ஒருவரின் மனநிலையை பொருத்தும் இந்த உணர்வு மங்கி / குறைந்து விடுகிறது. உன்னை மிகவும் நேசித்தவர் உன்னை விட்டு விலகிச் செல்லும் பொழுது நீ அமைதியாக இரு. காலம் உன் வலிகளையும் கவலைகளையும் துடைத்தழித்துக் கொண்டு போய்விடும். இனிமையான அன்பையும், அழகையும் நீ மிகையாக எண்ணாதே. அன்பில்லாமல் போகின்ற தருணத்தில் ஏற்படும் கவலைகளையும் நீ பெரிதாகக் கொள்ளாதே.
5. வெற்றி பெற்ற நிறைய மனிதர்கள் நல்ல கல்வியறிவு பெற்றவர்கள் இல்லை. நீ சிரமப்பட்டு கல்வி பயிலாவிடினும் வெற்றி பெற இயலும் என்பது இதன் பொருள் இல்லை. என்னென்ன அறிவுத் திறனைப் நீ பெற்றிருக்கின்றாயோ அது வாழ்க்கையில் உனக்கான ஆயுதங்களாகும். ஒரு சிலர் வாழ்க்கையில் உயர்கின்ற தருணத்தில் இன்னல்களை அனுபவிக்கின்றனர். ஒரு சிலர் துவக்கத்திலேயே இன்னல்களை சந்திக்க நேரிடுகிறது.
6. என்னுடைய வயதான காலத்தில், உன்னுடைய வருமானத்தை சார்ந்து வாழ வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எனக்கில்லை. அதே போன்று உன்னுடைய வாழ்க்கை முழுதும் நான் உனக்கு நிதி ஆதாரங்களை அளிக்க இயலாது. உன்னை வளர்த்து ஆளாக்கும் வரையில் தான் என்னுடைய ஆதரவும் பொறுப்பும்; நீ வளர்ந்து விட்ட பிறகு இந்த பொறுப்பு முடிவடைந்து விடுகிறது. அதன் பிறகு நீ தான் முடிவு செய்ய வேண்டும். நீ பயணிக்கப் போவது பொது போக்குவரத்திலா அல்லது உன் சொந்த வாகனத்திலா / இரதத்திலா; வசதி படைத்தவனாக அல்லது ஏழையாக.
7. நீ கூறும் வார்த்தைகளுக்கு நீ மதிப்பளிக்க வேண்டும். ஆனால் பிறர் அவ்வாறு இருத்தல் வேண்டும் என்று நீ எதிர்பார்க்கக் கூடாது. நீ அனைவருக்கும் நல்லவனாக இரு. ஆனால் உனக்கு அனைவரும் நல்லவர்களாக இருக்க வேண்டும் என்று எதிர்பாராதே. நீ இதனை புரிந்து கொள்ளாமல் போனால் உன் வாழ்க்கை தேவையற்ற பிரச்சினைகளில் உழல வேண்டி இருக்கும்.
8. நான் பல வருடங்களாக பரிசு சீட்டுகளை வாங்கி இருக்கிறேன். ஆனால் எந்த பரிசும் எனக்கு அடித்ததில்லை / கிடைக்கவில்லை. நீ வசதி படைத்தவனாக வேண்டுமென்றால் நீ கடினமாக உழைக்க வேண்டும் என்பதையே இது காட்டுகிறது! இலவசமாக உணவு கிடைக்காது!
9. நான் உன்னுடன் எவ்வளவு அதிகப்படியான நேரம் இருக்கிறேன் என்பது ஒரு பொருட்டல்ல. நாம் ஒன்றாக இணைந்திருக்கும் அந்த நேரத்தை பெரும் பாக்கியமாகக் (பொக்கிஷம்) கருதுவோம். நமக்கு தெரியாது நாம் மறுபடியும் நம்முடைய அடுத்த பிறவியில் சந்திப்போம் என்று.
அன்புடன் ,
உன் அப்பா.

Saturday, October 3, 2015

To Build Wealth, Treat Money Like a Jealous Lover

What's the difference between Physics and mathematics exactly?

The indivi-duality of Nature. The phys-maths Nature
In the article below the author question:
what's the difference between phys and maths exactly?
And answered himself (between *---* my observations)
I think there are two linked, but subtly distinct, differences.
*There is no differences when you consider Nature as individuality, so far they are not linked, just they are two faces of the same coin*.
1. Physics is a science and mathematics is not.
This means that physics has an experimental aspect. In physics, it is possible to disprove a hypothesis by experiment: this cannot be done in maths.
*The author is debunking empiric and/or quasi-empiric maths defended by Stewart Mills and Imre Lakatos respectively. Also, he is obviating Mr. Atiyah assertion about human evolution in a very special physical environment with the physical reality across our brain modelizing it "mathematically" beyond our physical "intuitions" that we developed observing that immediate physical environment as Albert Einstein did with his General and Special Relativity theory for example*.
2. Physics is about this world and mathematics is not (necessarily).
The canvas for mathematical ideas is much wider than the canvas of physics.
A small subset of mathematics seems to correspond with observable physical phenomena to a shocking extent. This we call applied mathematics. However, mathematics describes many things which don't correspond to phenomena in this world.
*Sure, maths are wider than phys. In fact maths is a "world of possibles" and phys is our world now, one world in a period of time between many possible worlds. Thus we can't say that maths describe many things which not correspond to phenomena in this world. On contrary we have many examples which maths without any connection with our world, in principle, but later on they were describing extremely accurately physical phenomena, as for example non-euclidean geometry. It is started just like a toy for some XIX century mathematicians and finally it was the bases to describe space-time by Minkowski and fundamental for the General Relativity by Einstein. There are many examples like that (recently Efimov's triad describe a physical phenomena) and it is very probable to find more and more "connections" like tha when we will get deeper in our knowledge about Nature. Perhaps it will happen with string theory too.
Finally, in the wider sense of science, maths is science as well because Nature is a phys-math individuality.*
https://protonsforbreakfast.wordpress.com/…/physics-is-mor…/

Facebook is about to look completely different — here’s what's coming


What types of video games improve brain function?


From "brain games" designed to enhance mental fitness, to games used to improve real-world problems, to games created purely to entertain, today's video games can have a variety of potential impacts on the brain.
A new article in Policy Insights from the Behavioral and Brain Sciences argues that it is the specific content, dynamics, and mechanics of individual games that determine their effects on the brain and that action video games might have particularly positive benefits.

Analyzing science on the cognitive effects of video games researchers wrote that action video games- games that feature quickly moving targets that come in and out of view, include large amounts of clutter, and that require the user to make rapid, accurate decisions - have particularly positive cognitive impacts, even when compared to "brain games," which are created specifically to improve cognitive function.
"Action video games have been linked to improving attention skills, brain processing, and cognitive functions including low-level vision through high-level cognitive abilities. Many other types of games do not produce an equivalent impact on perception and cognition," the researchers commented. "Brain games typically embody few of the qualities of the commercial video games linked with cognitive improvement."
Researchers noted that while action games in particular have not been linked to problems with sustaining attention, research has shown that total amount of video game play predicts poorer attention in the classroom.
Furthermore, video games are known to impact not only cognitive function, but many other aspects of behavior - including social functions - and this impact can be either positive or negative depending on the content of the games.

Scientists find worms can safely eat the plastic in our garbage

  • Researchers found mealworms that subsists on Styrofoam transform wastes into biodegradable fragments
  • Styrofoam had always been thought to be non-biodegradable from early research
  • The discovery is considered a revolutionary breakthrough in solving global waste crisis

Garbage is a big problem. Even with so many of us doing our bit to help out with recycling, the amount of unrecyclable and discarded plastics in the US alone comes close to 30 million tonnes annually, thanks to things like disposable coffee cups(2.5 billion of which are thrown away by Americans every year). We’re looking at you, Starbucks.
Now, for the first time, researchers have found detailed evidence that bacteria in an animal’s gut can safely biodegrade plastic and potentially help reduce the environmental impact of plastic in landfill and elsewhere. The animal in question? The humble mealworm – which turns out to be not so humble after all.
Researchers led by Stanford University in US and Beihang University in China found that the mealworm – the larval form of the darkling beetle – can safely subsist on a diet of Styrofoam and other kinds of polystyrene, with bacteria in the worm’s gut biodegrading the plastic as part of its digestive process. The findings are significant because it was previously thought that these substances were non-biodegradable – meaning they ended up in landfill (or worse, our oceans, where they’d accumulate for decades).
“Our findings have opened a new door to solve the global plastic pollution problem,” co-author Wei-Min Wu, a senior research engineer in the Department of Civil and Environmental Engineering at Stanford, said in a statement.
In the study, 100 mealworms ate between 34 and 39 milligrams of Styrofoam each day, converting about half into carbon dioxide and the other excreting the bulk of the rest as biodegraded droppings. They remained healthy on the plastic diet, and their droppings appeared to be safe for use as soil for crops.
Compared to the amount of plastic people go through every year, the mealworms’ capacity to process our waste product might not sound like much, but further research could help us engineer more powerful enzymes for plastic degradation, including processing other kinds of currently impervious plastics, including polypropylene, microbeads, and bioplastics.
The researchers are also looking to find whether a marine equivalent of the mealworm may exist, as hundreds of thousands of tonnes of plastic in the world’s oceans are an ongoing environmental concern.
“There’s a possibility of really important research coming out of bizarre places,” said Craig Criddle, a professor of civil and environmental engineering who supervised the research. “Sometimes, science surprises us. This is a shock.”
Not a substitute to recycling
However, while the mealworms may just help the world save its mounting waste crisis, this should not be considered as a substitute for recycling, Wu said.
According to the Worldwatch Institute data released in 2013, the world has generated about 300 million tons of plastic, with a very small percentage of these wastes being recycled while the larger portion continue to threaten the environment with water contamination and poisoning of the animal and marine life.
“We need to be better at recycling. We shouldn’t waste plastic anywhere,” Wu told CNN.
Craig Criddle, a professor of civil and environmental engineering supervising Wu’s research at Stanford, said they are now planning to study whether microorganisms within mealworms and other insects can biodegrade plastics such as polypropylene, microbeads and bioplastics.
Polypropylene is being used to manufacture textile products and automotive components, microbeads are used for exfoliants while bioplastics are derived from renewable sources of biomass.
Craig said the researchers will next study the effect of wastes from these sources when consumed by other animals, which are in turn, eaten by other animals in what he described as “cradle-to-cradle” approach.

கட உபநிஷதத் தத்துவங்கள் 108 :


மரணமிலாப் பெருநிலை :
அவ்யக்தாத் து பர: புருஷோ வ்யாபகோஅலிங்க ஏவ ச I
யம் ஜ்ஞாத்வா முச்யதே ஜந்து: அம்ருதத்வம் ச கச்சதி II (கட 2.3:8)

பொருள்: அவ்யக்த்தத்தை விட இறைவன் மேலானவர், அவர் எங்கும் நிறைந்தவர், (இவர்தான் என்று சுட்டிக் காட்டுவதற்கு) எந்த அடையாளமும் இல்லாதவர். அவரை அனுபூதியில் உணர்வதால் மனிதன் (தளைகளிலிருந்து) விடுபடுகிறான்; மரணமிலாப் பெருநிலையையும் அடைகிறான்.
புலன்களின் செயல்பாடு தனியானவை, அவற்றுடன் ஆன்மாவிற்கு எந்தத் தொடர்பும் இல்லை என்பதை உணர்ந்து மனம் ஆன்மாவில் நிலைபெறும்போது புலன்கள் இயல்பாகவே தங்கள் வேகத்தை இழக்கின்றன. இதனைப் படிப்படியாக 7&8 ஆம் மந்திரங்கள் தெரிவிக்கின்றன. 1.3:10-11 மந்திரங்களும் இதே கருத்தை வலியுறுத்துவதாக அமைந்தது ஒப்புநோக்கத் தக்கது.
இறைவனை அடைந்தால் மனிதன் மரணமிலாத நிலையை அடைகிறான். அந்த நிலையைப் பற்றிய சில விளக்கங்கள் இங்கே தரப்படுகின்றன.
இந்தக் கண்களால் காண முடியாது:
ந ஸந்ருசே திஷ்ட்டதி ரூபமஸ்ய
ந சக்ஷுஷா பச்யதி கச்சனைனம் I
ஹ்ருதா மனீஷா மனஸா அபிக்ல்ருப்தோ
ய எதத் விதுரம்ருதாஸ்தே பவந்தி II ( கட 2.3:9)
பொருள்: இறைவனுடைய உருவம் புறத்தில் காணக்கூடியதாக இல்லை. யாரும் அவரைக் கண்களால் காண்பதில்லை. இதயக்குகையிலுள்ள ஆன்மாவால், விழிப்புற்ற புத்தியில், மனத்தின் தொடர்ந்த முயற்சியால் உணரப்படுகிறார். அவரை அறிபவர்கள் மரணமற்றவர்களாக ஆகின்றனர்.
மிகவும் பொருள் பொதிந்த மந்திரம் இது. இறையனுபூதி என்பதன் ஒரு தெளிவான விளக்கத்தை இங்கு காண்கிறோம். இறையனுபூதிக்கு இங்கே ஐந்து விளக்கங்கள் தரப்படுகின்றன –
1 புறத்தில் காணக்கூடியதல்ல; 2 கண்களால் காண்பதில்லை; இந்தக் கருத்துக்களை ஏற்கெனவே (2.2:14-15) கண்டோம்.
3 ஆன்மாவால் காணப்படுகிறது ; உடம்பிலுள்ள சாதாரணக் கண்கள் இறைவனைக் காண்பதில்லை என்றால் அவரைக் காண்பது, உணர்வது யார்? இதயக் குகையிலுள்ள ஆன்மா. இதயக் குகை பற்றியும் ஆன்மா பற்றியும் ஏற்கெனவே விரிவாகக் கண்டுள்ளோம். இறைவன் ஒரு பேரொளி என்றால் ஆன்மா ஒரு சுடர், ஒரு பொறி. ஒவ்வொருவரிலும் அந்தப் பொறி உள்ளது. அந்தப் பொறிதான் இறைவனை அறிகிறது.
4 புத்தி தெளிய வேண்டும்: ஆன்மா இறைவனை எங்கே காண்கிறது? விழிப்புற்ற புத்தியில். இது பற்றியும் ஏற்கெனவே (1.3:6-9) விரிவாகக் கண்டுள்ளோம்.
5 மனத்தின் தொடர்ந்த முயற்சி வேண்டும்: ஆன்மா, இதயக் குகை, புத்தி என்றெல்லாம் கூறியதால் அவை ஏதோ நம்மை மீறிய விஷயங்கள் என்று எண்ணி விடாமல், நமது கருவியாகிய மனத்தைத் தொடர்ந்து சாதனைகளில் ஈடுபடுத்த வேண்டும். ஏதாவது ஒரு பாதையைத் தேர்ந்தெடுத்து முழுமூச்சுடன் அதில் முன்னேற வேண்டும்.
இவ்வாறு மனத்தின் தொடர்ந்த முயற்சியால் புத்தி தெளிகிறது. தெளிந்த புத்தியால் தன்னை ஆன்மாவுடன் ஒன்றுபடுத்திக் காண முடிகிறது. நம்மில் உள்ள இருவரில் (1.3.1) ‘நாம் ஜீவன்’ என்ற நிலை மாறி ‘நாம் ஆன்மா’ என்ற நிலை உருவாகிறது. இந்த ஆன்ம நிலையில் இறைக்காட்சி கிடைக்கிறது.

ராமர் பட்டாபிஷேகம்!



ஸ்ரீராமபிரானுக்கு பட்டாபிஷேகம் எப்படி நடந்தது? எத்தனையோ ராமயணங்கள் இருந்தாலும், அதில் வால்மீகி ராமாயணத்துக்கு ஒரு சிறப்பு உண்டு. அந்தக் காவியத்தில் ராமனுக்குப் பட்டாபிஷேகம் நடந்ததை வால்மீகி எப்படி வர்ணிக்கிறார்?
அதிகாலையின் அற்புதம் திவ்யமாக இருக்கிறது. மதுரமான இசையாலும், கருவிகளின் ஒலிகளாலும், தங்க ஆபரணங்கள் அணிந்து உத்தமப் பெண்களின் நாட்டியங்களாலும், தாங்கள் எழுப்பப்டுவதைக் கண்டு நாங்கள் சந்தோஷம் கொள்கிறோம்.  வானவீதியில் முழுமையான ஒளிக்கிரணங்களுடன் அனைத்து உலகுக்கும் தேஜஸையும் ஆயுளையும் வழங்கிக் கொண்டிருக்கும் நடுப்பகல் சூரியன் போன்று, தாங்கள் பட்டாபிஷேகப் பெரும் வைபவத்தோடு, சிம்மாசனத்திலிருந்து எங்கள் அனைவருக்கும் அருள்பாலித்து நலம் புரிவதைப் பார்த்துப் பார்த்து மகிழ்ச்சி கொள்கிறோம். பூமி உள்ள வரையிலும் தாங்கள் பரிபாலனம் நடத்த வேண்டும் என்பதே எங்கள் பிரார்த்தனை! இவ்வாறாக பரதன், தலைமீது கரங்களைக் கூப்பியவண்ணமாக ஸ்ரீராமனிடம் வேண்டினான்.
பூஜிதா மாமிகா மாதா
தத்தம் ராஜ்யம் இதம் மம
தத் ததாமி புனஸ் துப்யம்
யதாத்வம் ததா மம
முன்பு எனக்கு அரசு தந்து என் தாயைப் போற்றினாய். அதை அப்படியே உனக்குத் தருகிறேன். பரதனின் சரணாகதியை அயோத்தி ராமனும் ஏற்றார். ஆசனத்தில் அமர்ந்தார். பட்டாபிஷேகத்துக்குரிய பணிவிடைகள் எல்லாம் சீராகத் தொடங்கின. ராம லக்ஷ்மண பரத சத்ருக்னார்களுடைய அலங்காரம் நடந்தேறியது. சீதாதேவிக்கு, தசரத பத்தினிகளே அலங்காரம் செய்தனர். வந்திருக்கும் வானரப் பெண்களுக்கும் அழகு செய்கிறாள் கௌசல்யை.
ததோ வானர பத்னீனாம்
ஸர்வாஸாமேவ சோபனம்
சகார யத்னாத் கௌஸல்யா
ப்ரஹ்ருஷ்டா புத்ரவத்ஸலா
சத்ருக்னருடைய ஆணையின் பேரில் இஷ்வாகு குலத்தின் தேரோட்டியான சுமந்திரர், கம்பீரமான குதிரைகள் பூட்டிய ரதத்தைக் கொணர்ந்தார். கதிரவன் போன்று ஒளிமயமாகக் காட்சிதரும் அந்த ரதத்தில் ஸ்ரீராமன் ஏறி அமர்ந்தார். சுக்ரீவனும் அனுமனும் உடன் சென்றனர். சுக்ரீவன் மனைவியும் சீதாபிராட்டியும், திவ்யமான அலங்காரத்துடன் அவர்களுடனே சென்றனர். ஸ்ரீராமனுக்கு சகல நலங்களும் சுகமும் தனமும் பெருகுவதற்கும், அயோத்தி நகரமும் அந்த நாடும் என்றும் மங்கலம் பெறுவதற்கும் உரிய சுப காரியங்களைச் செய்யுமாறு அனைவரும் வசிஷ்டரிடம் வேண்டினர். அமைச்சர்கள் பின்தொடர ஜய விஜயபீவ என்ற முழக்கம், ஜயகோஷமுமாகக் காற்றுடன் அலை மோதியது. ரகுராமனான, கல்யாண ராமனான, சீதா ராமனான, தசரத ராமனான, கல்யாண குனோஜ்வலனான, பித்ருவாக்ய பரிபாலனான, ஏக பத்னி விரதனான, சர்வஜன ரக்ஷகனான ஸ்ரீராமன் அயோத்தி நகரை நோக்கி வந்து கொண்டிருந்தார். மஞ்சள் கலந்த அட்சதையுடன் பிராமணர்களும் உடன் சென்றனர். பசுக்களும் கோலாகலத்தில் கலந்து சென்றன. குடிமக்களின் குதூகலம் பொங்க, ஸ்ரீராமன் அரண்மனைக்குள் அடியெடுத்து வைத்து, கௌசல்யாதேவி, சுமித்ரா தேவி, கைகேயி தேவி மூவரையும் நமஸ்கரித்தார். சத்ருக்னர், ராமருடைய அபிஷேகத்துக்காக சுக்ரீவனிடம் வானரர்களை அனுப்பப் பணித்தார். பொழுது புலரும் முன் வானரர்கள், ரத்னமும் தங்கமும் இழைத்த குடங்களில், கடலிலிருந்தும் நதிகளிலிருந்தும் புண்ணிய தீர்த்தத்தைக் கொணர்ந்தார்கள். ஜாம்பவான், அனுமன், வேகதர்சீ, சிஷபன் ஆகியோர் ஐந்நூறு நதிகளிலிருந்து புண்ணிய தீர்த்தத்துடன் வந்தார்கள். ஸுஷேணன், ரிஷபன், கவயன், நளன் நால்வரும் முறையே நாலா திசை சமுத்திரங்களிலிருந்தும் புனித நீரைக் கொணர்ந்தார்கள்.
பேரருள் பெற்றவரும் தசரத குல குருவுமான வசிஷ்ட மகரிஷி, புலன்களையும் புத்தியையும் சமன் செய்து, பிராமணர்களின் சம்மதத்துடன் ஸ்ரீராமனை ரத்தின ஒளிவீசும் சிம்மாசனத்தில் அமரும்படி செய்தார்.
ராமம் ரத்னமயே பீட
ஸஹஸுதம் ந்யவேசயத்
பட்டாபிஷேக வைபவம் பவித்திரமாகத் திகழ்ந்தது. வசிஷ்டர், வாமதேவர், ஜாபாலி, காச்யபர், காத்யாயநர், ஸுயஜ்ஞர், கௌதமர், விஜயர் ஆகிய எட்டு மகா ஞானியர்களும் நிகழ்த்திய பட்டாபிஷேகம். எண்மரும் வேதச் சீர்மையுடன் மந்திரங்களை உச்சாடனம் செய்து ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியை மணமிகுந்த திரவியங்கள் கலந்த புண்ணிய தீர்த்தத்தால் நெறிமுறைகளின்படி பட்டாபிஷேகத்தை நிறைவேற்றினார்கள். வானத்தில் திக்பாலர்களும் தேவகணங்களும் பேருவகை கொண்டார்கள். சத்ருக்னர் வெண்குடை பிடித்தார். சுக்ரீவன் வெண் சாமரம் வீசினார். வாயுபகவான் தங்கத் தாமரைகளாலான ஒளி கூடிய மாலைகளையும், ஒன்பது ரத்தினம் சேர்ந்த முத்து மாலையையும் கொணர்ந்தார். பூமி செழித்தது. மரங்களில் கனிகள் நிறைந்தன. பசுக்களையும், கன்றுகளையும், தங்க நாணயங்களையும், ஆபரணங்களையும் ஸ்ரீராமன் தானமாக வழங்கினார். சுக்ரீவனுக்குத் தங்க மாலையையும், அங்கதனுக்குத் தங்கத்தோள் வளைகளையும் வழங்கினார். சீதாதேவியிடம் சந்திரன் போன்று பிரகாசமான முத்துமாலையை வழங்கினார். பிராட்டியும் மணாளனின் விருப்பத்தை ஜாடையால் அறிந்து, அம்மாலையை அனுமனுக்கு அளித்தாள். விபீஷணர், ஸ்ரீரங்க விமானத்தைப் பெற்று லங்காபுரி சென்றார். தசரத குமாரனான ஸ்ரீராமச்சந்திர மூர்த்தி, குடிமக்கள் அனைவரையும் தமது குழந்தைகளாக நினைத்து பரிபாலனம் நடத்தி வந்தார். லக்ஷ்மணனை இளவரசாக இருக்கக் கோரினார். லக்ஷ்மணர் இசையவில்லை. பரதனுக்கு இளவரசுப் பட்டம் நிகழ்ந்தது. சிம்மாசனத்தைத் தாங்கி நிற்கிறான் அனுமன். அங்கதன் வாள் ஏந்த, பரதன் வெண்குடை தாங்க, மற்ற இரு சகோதர்களும் சாமரம் வீச, சீதையின் உவகை ஓங்க, வசிஷ்டர் மகுடம் சூட்டுகிறார். அச்வமேதம், வாஜபேயம் போன்ற யாகங்களைப் புரிந்து, ஸ்ரீராமன் ஆட்சி ராமமயமாகவே இருந்தது.

உலக இறுதி நாட்களில் ஏற்படும் அடையாளங்கள் என்று நபி முஹம்மது (ஸல்) அவர்கள் குறிப்பிட்டவைகள்.


* அநீதி பெருகிவிடும்.
* பொய் உண்மையாகும்.
* தீர்ப்புகள் நியாயமானதாக இருக்காது.
* மனித உள்ளங்கள் மாசு படிந்திருக்கும்.
* இலேசன விஷயத்திற்கெல்லாம் கொலை செய்வார்கள்.
*
*
* வட்டியைச் சாப்பிடுவார்கள்.
* ஆண்கள் பட்டாடை அணிவார்கள்.
* உறவினர்களை துண்டித்து வாழ்வார்கள்.
* கட்டிடங்களை உயர உயரமாக கட்டுவார்கள்.
* உலக ஆதாயங்களுக்காக மார்க்கத்தை விற்பார்கள்.
*
*
* மழை பொழியாது.
* பூகம்பம் ஏற்படும்.
* சிகப்பு சூறாவளி காற்று வீசும்.
* வானத்திலிருந்து கல்மாரி பொழியும்.
* பாவமான செயல்கள் அதிகமாகி விடும்.
*
*
* பொய்யனை மெய்யனாக ஆக்குவார்கள்.
* மெய்யனைப் பொய்யனாக ஆக்குவார்கள்.
* அவதூறுகள் (வீண்பழிகள் சுமத்துவது) பரவலாகி விடும்.
* மோசடிக்காரர்களை மக்கள் நம்பிக்கையாளர்கள் என நினைப்பார்கள்.
* நம்பிக்கையாளர்களை மக்கள் மோசடிக்காரர்கள் என நினைப்பார்கள்.
*
*
* பள்ளிவாசல்கள் அலங்கரிக்கப்படும்.
* குர்ஆன் பிரதிகள் அலங்கரிக்கப்படும்.
* மினராக்கள் உயர உயரமாக கட்டுவார்கள்.
* குர்ஆனை ஓதிக் கொண்டே பாவங்கள் செய்வார்கள்.
* தீயவர்களின் சப்தம் பள்ளி வாசல்களில் அதிகமாகி விடும்.
*
*
* திடீர் மரணம் அதிகமாகி விடும்.
* விவாகரத்து (தலாக்) அதிகமாகி விடும்.
* குழந்தைகள் அதிகம் பெற்றெடுப்பதை வெறுப்பார்கள்.
* தகுதி குறைந்தவர்கள், உயர் ரக வாழ்க்கை வாழ்வார்கள்.
* கண்ணியத்திற்குறியவர்கள் வசதி வாய்ப்பின்றி வாழ்வார்கள்.
*
*
* அக்கிரமம் செய்வதை பெருமையாகக் கருதுவார்கள்.
* நம்பிக்கைக்கு உரியவர்கள் கூட மோசடி செய்வார்கள்.
* தலைவர்களும், மந்திரிகளும் பொய்யர்களாக இருப்பார்கள்.
* கூட்டத்தில் இழிவுக்குறியவன் அவர்களுக்குத் தலைவராகி விடுவான்.
* செருப்பில்லாமல் நடப்பவர்கள், ஆடையின்றி இருப்பவர்கள் கூட தலைவர்களாக ஆகிவிடுவார்கள்.
*
*
* பாதுகாப்பு குறைந்து விடும்.
* காவலர்கள் அதிகமாக இருப்பார்கள்.
* மதுபானங்கள் அருந்துவது அதிகரிக்கும்.
* மக்கள் நீதத்தை லஞ்சம் கொடுத்து மாற்றுவார்கள்.
* பொய்யை ஒரு கலையாக சாமர்த்தியமாக நினைப்பார்கள்.
*
*
* இசைக் கருவிகள் அதிகமாகி விடும்.
* இசையைப் போன்று குர்ஆனை ஓதுவார்கள்.
* பாட்டுப் பாடும் பெண்கள், கண்ணியம் செய்யப்படுவார்கள்.
* மக்கள் மிருகங்களின் தோலினாலான ஆடையை அணிவார்கள்.
* எவ்விதம் உயர்ரக ஆடைகளை அணிந்தாலும், அவர்களின் உள்ளங்கள் செத்த பிணங்களை விட, மிக மோசமானதாக இருக்கும்.
*
*
* ஆண்கள் பெண்களைப் போன்று நடிப்பார்கள்.
* பெண்கள் ஆண்களைப் போன்று நடிப்பார்கள்.
* கணவன் மனைவிக்குக் கட்டுப்பட்டு நடப்பான்.
* கணவருடன் மனைவி வியாபாரத்தில் ஈடுபடுவாள்.
* அடிமைபெண் (தனக்கு கட்டளையிடும்) எஜமானியைப் பெற்றெடுப்பாள். (அதாவது பெண் மக்கள் தனது தாயை வேலைக்காரியைப் போன்று வழி நடத்துவார்கள்)
*
*
* தனது தாயை வெறுத்து விடுவான்.
* தனது நண்பனுக்கு கேடு செய்வான்.
* மகன் தந்தையை நோவினை செய்வான்.
* முஸ்லிம் பொய் சாட்சி கூறத் தயாராகி விடுவான்.
* அறிமுகம் உள்ளவர்களுக்கு மட்டும் ஸலாம் கூறுவார்கள்.
*
*
* தங்கம் பயன்பாட்டில் அதிகமாக இருக்கும்.
* வெள்ளி பயன் படுத்துதல் குறைந்து விடும்.
* விலங்கினங்களின் தோலைப் பயன்படுத்துவார்கள்.
* நடக்கும் பாதைகளில் மதுபானங்கள் அருந்துவார்கள்.
* பிற்காலத்தவர் முற்காலத்தவர்களைத் திட்டுவார்கள். சாபமிடுவார்கள்.
*
*
* பொறுமையாளர்கள் அநீதம் புரிவார்கள்.
* ஜகாத் கொடுப்பதை அபராதமாக நினைப்பார்கள்.
* தீனுக்காக அல்லாமல் உலக ஆதாயத்திற்காக கல்வி கற்பார்கள்.
* அல்லாஹ் அல்லாத உலக வஸ்துக்களின் மீது சத்தியம் செய்வார்கள்.
* தொழுகையை மரணிக்கச் செய்வார்கள். அதாவது தொழுகைக்கு முக்கியத்துவம் தர மாட்டார்கள், அதை முறைப்படி நிறைவேற்ற மாட்டார்கள்.
*
*
* குற்றங்களுக்குறிய ஷரீஅத் தண்டனைகள் நிறைவேற்றப் படாது.
* கனீமத் பொருட்களை தங்கள் சொந்தப் பொருள்களைப் போன்று பயன்படுத்துவார்கள்.
* மனிதர்களின் உருவங்களை உருமாற்றம் செய்யப்படும் மற்றும் பல அடையாளங்கள் நிகழும்.
* அமானிதப் பொருள்களை போரில் கிடைத்த (கனீமத்)பொருளைப் போன்று எடுத்துக்கொள்வார்கள்.
* அமானிதப் பொருட்களை வீணாக்கி விடுவார்கள். அதாவது அமானிதப் பொருள்களைக் கொடுத்து வைத்திருந்தால் அதில் மோசடி செய்வார்கள்.


இத்தகைய செயல்கள்(பாவங்கள்) ஏற்படும் போது,
இந்த உலகின் இறுதி நாளை எதிர் பாருங்கள்.
*
என்று நபி(ஸல்) அவர்கள் கூறியதாக
ஹுதைபா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
*
ஆதார நூல்: - துர்ருல் மன்சூர். பக்கம் :-56.

Wednesday, September 30, 2015

Plastic Fuel (Plastic to oil refining known as pyrolysis )

Plastic Fuel
All around the globe companies and individuals are starting to produce fuel from waste plastic. As only 8% of waste plastic is recycled in the U.S., 15% in Western Europe, and much less in developing countries, this reuse of plastic could potentially keep enormous amounts of plastic out of landfills and out of the oceans. Over 500 billion pounds of new plastic is manufactured each year and roughly 33% of that is single use and thrown away. As so little plastic is recycled, we need to reframe plastic waste as an underused resource vs landfill destined. If all plastic waste made it into the landfill, it would surely be mined in the future, but currently all plastic waste does not make it into our landfills. The United Nations estimates plastic accounts for four-fifths of the accumulated garbage in the world's oceans. We need to stop polluting our oceans with plastic before it is too late, and start collecting all plastics suitable for this new fairly simple technology, a technology that is available now. The technology is not overly complicated, plastics are shredded and then heated in an oxygen-free chamber (known as pyrolysis) to about 400 degrees celsius. As the plastics boil, gas is separated out and often reused to fuel the machine itself. The fuel is then distilled and filtered. Because the entire process takes place inside a vacuum and the plastic is melted - not burned, minimal to no resultant toxins are released into the air, as all the gases and or sludge are reused to fuel the machine. - See more at: http://www.inspirationgreen.com/plastic-waste-as-fuel.html#sthash.CnDtN5TN.dpuf

- See more at: http://www.inspirationgreen.com/plastic-waste-as-fuel.html#sthash.CnDtN5TN.dpuf

குழந்தை வளர்ப்பு & மனிதனை மனிதனாக வளர்ப்பது எப்படி ?????

குழந்தை வளர்ப்பு & மனிதனை மனிதனாக வளர்ப்பது எப்படி ????? நம்மை சிந்திக்க வைக்கும் இவரின் பேச்சை கேளுங்கள் .

வீட்டின் சிறகுகள் -எஸ்.ராமகிருஷ்ணன்

எஸ்.ராமகிருஷ்ணன் - கதாவிலாசம்
மு.சுயம்புலிங்கம்
பூனைகளைபோல வெயில், யாருமற்ற வீடுகளில் ஏறியிறங்கி விளையாடும் கிராமங்களைத் தொடர்ந்து ஒவ்வொரு பயணத்திலும் பார்த்துக்கொண்டிருக்கிறேன். suyambuசுபாவத்தில், உடையில், பேச்சில் பழக்கவழக்கங்களில் ஒட்டிக்கொண்டு வந்துவிட்ட ஊரைக் கொஞ்சம் கொஞ்சமாக நாமே கவனமாகத் துடைத்து எறிந்துவிட்டு அடையாளமற்ற மனிதர்களாக வாழ்வதற்குப் பழகிவிட்டோம். 
சப்தமாகச் சிரிப்பதற்கும் வாய்விட்டு அழுவதற்கும்கூடக் கூச்சமாக இருக்கிறது. அடுத்தவர்கள் கவனிக்கிறார்களா என்று பார்த்துப் பார்த்துதான் உணவகங்களில் சாப்பிட வேண்டியிருக்கிறது. நண்பனின் தோளில் கைபோட்டுக் கொள்வது அநாகரிகமாகிவிட்டது. மூத்திரம் பெய்வதற்குக்கூட வரிசையில் காத்திருக்க வேண்டியிருக்கிறது. எப்படியோ ஏதேதோ நகரங்களில் வேலைகள் செய்து குழந்தைகள் பெற்றுப் பிழைத்துக்கொண்டிருக்கிறோம். ஆனால், வாழ்ந்துகொண்டிருக்கிறோமா என்று தெரியவில்லை.
கிராமம் உலர்ந்த நத்தைக்கூட்டைப் போல உயிர்ப்பற்றுப் போய்விட்டிருக் கிறது. ஒவ்வொரு கிராமத்துக்கும் சாலைகளும் தெருவிளக்கு களும் வந்துவிட்டன. ஆனால், அமைதியும் பரஸ்பர அன்பும் வெளியேறிப்போய்விட்டன. ஊரைப் பிரிந்து வராமல் நாய்கள் மட்டுமே தெருவில் குழி பறித்துப் படுத்துக்கிடக்கின்றன. ஆனால், அவை குரைப்பதை நிறுத்திப் பல வருடங்களாகிவிட்டன. யாரைக் கண்டு குரைப்பது? சுபாவம் திரிந்து போனது ஊரும் மனிதர்களும் மட்டுமல்ல... இயற்கையும்தான்! 
தீபாவளிக்கு முதல்நாள் இரவு ஒரு ஆட்டோவில் ராயபுரத்திலிருந்து வந்து கொண்டிருந்தேன். டிரைவரைப் பார்த்ததுமே தெற்கிலிருந்து வந்தவர் என்று தெரிந்தது. எந்த ஊர் என்று விசாரித்தேன். கடம்பூர் என்றார். நட்பான குரலில் பேசியபடியே வந்து கொண்டிருந்தபோது, ‘சார் வழியிலே அஞ்சு நிமிஷம் ஒரு கடையில நிறுத் திட்டுப் போயிடலாமா?’ என்று கேட்டார். சரி என்றேன்.
ஆட்டோ, பிராட்வேயின் சந்துகளுக் குள் புகுந்து சௌகார்பேட்டையில் உள்ள ஒரு கடையில் நின்றது. மரப் படிகள் கொண்ட கட்டடம் அது. இருவருமாக படிகளில் ஏறிப்போனோம். மங்கிய லைட் எரிந்து கொண்டிருந்தது. உள்ளே வயதானவர் ஒருவர் பைஜாமா ஜிப்பா அணிந்து, பார்ப்பதற்கு குஜராத்தியைப்போல் இருந்தார். ஆட்டோ ஓட்டுநர் தன்னுடைய கையிலிருந்த சிறிய மஞ்சள் பையிலிருந்து ஊதா நிறத்திலிருந்த ஒரு பட்டுப்புடவையையும் துவைத்து மடித்திருந்த பட்டு வேஷ்டி ஒன்றையும் எடுத்து அவரிடம் நீட்டினார். ஏதோ அசூயையான பொருளைத் தொடுவது போன்ற முகபாவத்துடன் அந்தப் பொருள்களை மேஜையில் வைக்கச் சொல்லிவிட்டு வயதானவர் தனது கண்ணாடியை அணிந்து கொண்டார். புடவையின் கரையைப் பிரித்துப் புரட்டிவிட்டு அதிலிருந்து ஒரு நூலை உருவிப் பார்த்தார். மேஜையிலிருந்த பட்டு வேஷ்டி சரிந்து கீழே விழவே, டிரைவர் அவசரமாக எடுத்து மடித்தார். வேஷ்டியில் வெற்றிலைக் கறை படிந்து அழியாமல் இருந்தது.
எவ்விதமான உணர்ச்சியுமின்றி வயதானவர் மேஜை டிராயரிலிருந்து ஐந்நூறு ரூபாய் எடுத்து நீட்டினார். டிரைவர் சற்றே தயக்கத்துடன் ‘ஒரிஜினல் காஞ்சிபுரம் பட்டு... விலை நாலாயிரம். வேஷ்டி வேறு இருக்கு, பார்த்துக் கொடுங்க’ என்றார். கொச்சை யான தமிழில் குஜராத்திக்காரர் ‘இந்த வேஷ்டி சரியில்லை. கறையிருக்கு. அதுக்கு 50 ரூபாய் தான் தரமுடியும். நாங்க சேலை பார்டரை மட்டும்தான் கட் பண்ணி விக்கமுடியும். அதுக்கு மேலே பணம் தர முடியாது’ என்றார். பேரம் நீண்டு கொண்டே போய் முடிவில் எண்ணூறு ரூபாய் கிடைத்தது.
ஆட்டோ கடற்கரைசாலையில் வந்துகொண்டிருந்த போது, டிரைவர் தானாகவே சொன் னார்... ”நல்ல நாளுக்குத் துணி எடுக்க கையில் காசில்லை சார். வீட்ல மூணுபிள்ளைக இருக்கு. அவளுக்கு வேற சேலை எடுக்கணும். எங்க கல்யாணத்துக்கு எடுத்த பட்டுத்துணி... அதை வெச்சிருந்து என்ன செய்யப் போறேன். அதான் வித்துட்டேன். இப்பவே மணி பத்தாச்சு. உங்களை இறக்கி விட்டுட்டுத் திரும்பி வரும்போது பாண்டிபஜார்ல ஏதாவது புதுத்துணி வாங்கிட்டு வீட்டுக்கு போகணும் சார்.”
என்னால் பதில் பேச முடியவில்லை. ஆட்டோ இருண்ட சாலைகளில் ஓடிக் கொண்டிருந்தது. டிரைவர் பேசிக்கொண்டே இருந்தார். ”ஊர்ல வீடு, நிலம் எல்லாம் இருந்துச்சு சார். விவசாயம் பண்றதுக்கு லோன் போட்டோம். மழையில்லை. விளைஞ்சதுக்கு விலையில்லை. லோனைக் கட்ட முடியலை. பேங்க்காரன் கழுத்தைப் பிடிச்சான். எல்லாத்தையும் அப்படியே விட்டுட்டு ராத்திரியோட ராத்திரியா கள்ளப்பயக மாதிரி தூங்குற பிள்ளைகளைத் தோள்ல தூக்கிப்போட்டுக் கிட்டு ரயிலேறி வந்துட்டோம். பிழைக்கணுமில்லையா...ஆட்டோ ஓட்டப் பழகிட்டேன்.”
வெடிச் சப்தங்கள் வழியெங்கும் கேட்டுக் கொண்டிருந்தன. சாலையில் எரிந்துகொண்டு இருக்கும் நியான் விளக்குகளின் வெளிச்சத்தையும் வழியெங்கும் மின்னும் விளம்பரப் பலகைகளின் வசீகரத்தையும் தாண்டி, கண்ணுக்குப் புலப் படாத இருள் ஊரெங்கும் வழிந்துகொண்டு இருக்கிறது. டிரைவர் மௌனமாகிவிட்டார். 
வீட்டின் முன்னால் ஆட்டோ வந்து திரும்பி நின்றது. அருகிலிருந்த மைதானத்திலிருந்து வெடித்த வாணவெடி ஒன்று ஆகாசத்தில் ஏழு நிறங்களில் ஒளித் துகள்களை வாரியிறைத்தது. குழந்தையைப்போல அதை வியப்போடு பார்த்தார் டிரைவர். எனக்குத்தான் வழியில் நடந்ததை நினைத்து நடுக்கமாக இருந்தது. அன்றிரவெல்லாம் குற்ற உணர்ச்சி ஒரு கம்பளிப்பூச்சியைப்போல உடம்பு முழுவதும் படர்ந்துகொண்டிருந்தது.
ஒவ்வொரு இரவும் ஏதோவொரு குடும்பம் ஊரைக் காலி செய்து மாநகரம் நோக்கி வந்து கொண்டுதானிருக்கிறது. இப்படி வந்தவர்களில் ஊர் திரும்பிப்போனவர்கள் எத்தனை பேர் இருப்பார்கள்? முதுகில் உள்ள மச்சத்தைப் போல, சொந்த ஊர் இனி அவர்களால் பார்க்கவே முடியாமல் போய்விடுமா? யோசிக்க யோசிக்க மனச்சோர்வும் பயமுமாக இருந்தது. பின்பு, அது உருமாறி ஆத்திரமாக வந்தது. ஏதாவது புத்தகம் படித்து மனதைத் திருப்பி விடலாம் என்று எனக்கு பிடித்த ஹெமிங்வேயின் சிறுகதைகளை வாசிக்க முயன்றேன். கண்கள் காகிதத்தில் படிய மறுத்து அலைந்தன. 
திடீரென யோசனை வந்ததுபோல மு.சுயம்பு லிங்கத்தின் ‘ஊர்க்கூட்டம்’ என்ற புத்தகத்தை எடுத்து வாசிக்கத் துவங்கினேன். முதல் பக்கத்தில் சுயம்பு, தான் மதுரையில் கண்ட ஒரு காட்சியை எழுதியிருக்கிறார்.
பெரிய சுத்துக்கெட்டு வீடு. ஏழு ஏர் சம்சாரி, எந்த நாடு தீய்ந்து போனாலும் அவர் வீட்டு தானியப்பட்டறையில் தவசம் குறையாது. அந்த வீட்டுப் பெண்கள் முகத்தில் உரசிப் பூசிய மஞ்சளும் அழியாத சிரிப்புமிருக்கும். அப்பேர்ப்பட்ட ஆள் விவசாயம் பொய்த்துப்போய் பிழைக்க வழியின்றி மதுரையின் டவுன்ஹால் ரோட்டில் குரங்குக்குட்டிக்கு சட்டை போட்டு தோள்மேல் உட்காரவைத்துக்கொண்டு கடை கடையாக காசு கேட்டு யாசகம் வாங்கிக்கொண்டு அலைகிறார். பூமி அதே இடத்தில்தான் இருக்கிறது. மனித வாழ்க்கைதான் பொய்த்துப் போய்விட்டது. 
வாசிக்க வாசிக்க நாக்கில் மண் ருசி தென்படத் துவங்கியது. நினைவுகள் காரை உதிர்வதுபோல பொறுக்குகளாக உதிரத் துவங்கின.
சுயம்புலிங்கத்தின் உலகம் அசலானது. வேப்பலோடை மனிதர்கள் மிகுந்த கோபக்காரர்கள். மழையற்றுப் போய் வறுமை பீடித்த ஊரில் வாழ்ந்துகொண்டு தன் ஊரைக் கடந்து செல்லும் மழை மேகங்கள் மீது கோபம்கொண்டு அவற்றைப் படிய வைப்பதற்காக விரட்டிப் போகிறவர்கள். திங்க பழம் தராத மரத்தின் மீதும், உட்கார நிழலற்ற பூமி மீதும் அவர்களது கோபம் பீறிடுகிறது. மண்ணோடு அவர்கள் கொண்டுள்ள பந்தம் மூர்க்கமானது. நினைவுகள் தான் அவர்களது ஒரே ஆறுதல். இதே ஊரில் மழை பெய்திருக்கிறது. நூறு நூறு பறவைகள் இலைக் கூட்டங்களில் விசிலடித்திருக்கின்றன. மேகத்தை வருடிச் செல்லும் மின்னல், இருட்டுக்கு உதை கொடுத்திருக்கிறது. பிறப்பும் சாவும் நடந்தேறியிருக்கின்றன. பார்த்துக் கொண்டிருக்கும்போதே வால் அறுந்த பல்லியைப்போல மூளியாகிவிட்டது ஊர். 
சுயம்புலிங்கத்தின் கதை களிலே எனக்கு ரொம்பவும் பிடித்தது ‘ஒரு திருணையின் பூர்விகம்’ என்ற ஒரு பக்கக் கதை. கிராமத்து வாழ்வின் உக்கிரமும் வெளிப்படுத்த முடியாத உணர்ச்சிகளும் கொண்ட கதை. கதையென்று அதில் அதிகச் சம்பவமில்லை. இடிந்துபோன வீட்டின் திண்ணையைப் பற்றிய சிறு குறிப்புகள்.
திண்ணை என்பது வீட்டின் சிறகுகள் என்று சொல்லலாம். ஒவ்வொரு வீட்டுக்கும் இரண்டு சிறகுகள்போலத் திண்ணைகளிருந்தன. அங்கு எப்போதும் யாராவது ஒருவர் படுத்துக்கொண்டோ உட்கார்ந்துகொண்டோ இருப்பார்கள். பெரும்பாலும் அது வயதானவர்களின் வசிப்பிடம். சில வீடுகளில் வம்பு பேசும் சிற்றிடம். திண்ணையைப் பார்க்கும்போது அது வீட்டுக்கும் தெருவுக்கும் இடையில் ஒரு பாலத்தைப்போல இருப்பதாகவே தோன்றும். வெளியாட்கள் யார் வந்தாலும் திண்ணையில் தான் அமர்வார்கள். பேசிக்கொண்டிருப்பார் கள்.வெற்றிலை போடு வார்கள். திண்ணை ஒரு வகையில் சௌகரியம், மறுவகையில் தொல்லை.
சுயம்புலிங்கம் காட்டும் திண்ணைக்காட்சி வேறு விதமானது.
வீட்டுத் திண்ணையில் கண் தெரியாத பாட்டி பல காலம் கிடந்து இறந்திருக்கிறாள். அதே திண்ணையில் ஓடையில் வண்டி கவிழ்ந்து, எலும்பு முறிந்த தாத்தா படுக்கை யாகவே கிடந்திருக்கிறார். அதைவிடவும் அம்மாவின் இறந்தஉடலை வைத்திருந்தது இந்தத் திண்ணையில்தான். அம்மா மோட்டுவளையில் ஒரு துணி சுருக்கிட்டு தூக்கில் தொங்கினாள். காரணம் ஒன்றும் பெரிதானதில்லை. வறுமையின் காரணமாகக் கழுத்தில்கிடந்த சங்கிலியை அப்பா கழற்றி விற்றதை சகித்துக்கொண்ட அவளுக்கு, காதில் போட்டிருந்த கம்மலைக் கழற்றியதைத் தாங்கமுடியவில்லை. மூளிக் காதோடு எப்படி ஊருக்குள் நடமாடுவது என்று நாண்டு கொண்டுவிட்டாள். அந்த உடல் இதே திண்ணையில்தான் கிடத்தப்பட்டிருந்தது. பின்னொரு நாள் அப்பாவும் குளிர்காலத்தில் இதே திண்ணையில் பனி தாங்காமல் நடுங்கி விறைத்து செத்துப்போயிருந்தார். ஒரு மழையில் திண்ணை கரைந்து தரையோடு தரையாகிவிட்டது. ஆனால், அந்த நினைவுகள் இலைகளில் தேங்கிய மழைத் துளிகளைப்போல சொட்டிக்கொண்டே இருக்கின்றன.
இந்தக் கதையை எத்தனையோ முறை வாசித்துவிட்டேன். ஒவ்வொருமுறை வாசித்து முடிக்கும்போதும் உடல் முழுவதும் காமாலை பீடித்ததுபோல துக்கம் பரவிவிடுகிறது. கண்களின் வழியே கண்ணீர் வெளிப்படுகிறது. ஆனால், அது இதயத்திலிருந்துதான் ஊற்று எடுக்கின்றது என்பதற்குச் சாட்சியாக இருக்கிறது இந்தக் கதை.
‘கால் இல்லாமல், 
கை இல்லாமல் 
உறுப்புகள் கோரப்பட்டு 
மனுசங்க இருக்காங்க. 
வயிறு இல்லாத மனிதன் 
இல்லவே இல்லை’
என்று சுயம்புலிங்கத்தின் ஒரு கவிதை இருக்கிறது. இதைப் படித்த பிறகுதான் வயிற்றுப்பாடு என்பது எத்தனை போராட்டமிக்கது என்று எனக்குப் புரியத் துவங்கியது! 
மு.சுயம்புலிங்கம் கிராமத்து விவசாயி. தூத்துக்குடி மாவட்டம் வேப்பலோடை கிராமம். Ôஊர்கூட்டம்Õ என்று ஒரேயரு புத்தகம் மட்டுமே எழுதியிருக்கிறார். அந்தப் புத்தகம் கரிசல்காட்டின் வெக் கையும் மணமும் நிறைந்தது. ஊரில் விவசாயியாக வாழ்வதற்கான சாத்தியங்கள் அற்றுப் போனதும், சென்னைக்கு இடம் மாறி காட்டாங்குளத்தூர் பகுதியில் சிறிய ஸ்வீட் ஸ்டால் நடத்திக்கொண்டிருக்கிறார். பசியும் போராட்டமும் அவரது இலக்கியக் கனவுகளை அரித்துத் தின்றுவிட்டன. ஆனால், அவரது படைப்புகளில் வேப்பலோடையின் நினைவுகள் களிமண்ணைப்போல ஈரமும் பிசுபிசுப்புமாக அப்படியே இருக்கின்றன.

Installation of wind turbines

Installation of the approximately 3 weeks of this wind turbines, when they are in the right place, an average of 3-4 years can figure out the costs of the way.

Nearly 30 years of life the towers, the birds on their migration in kurulmamaları very eco-friendly tools...

Production‬ of civilization type 1, interplanetary one.


Karate monkey


How to Make a paper gun that shoots......


Futuristic floating city will produce zero waste and house 7,000 residents


Healthy heart


Tuesday, September 29, 2015

How does the brain determine what matters?

THE INSULA and the SALIENCE NETWORK 

: How does the brain determine what matters?

How does the brain determine what matters? According to a new scientific article, a brain structure called the insula is essential for selecting things out of the environment that are "salient" for an individual, and dysfunction of this system is linked to brain disorders such as autism, psychosis and dementia.
The SALIENCE NETWORK and the various aspect of the INSULA which is a key part of it are increasingly being found to be operative just about "everywhere" in an interesting balance with the DEFAULT MODE NETWORK, somehow directing or orchestrating our attention to what needs to be done and away from our internal processes.
In psychology and neuroscience, the term "salient" is used to describe a thing, person, place or event that stands out, or that is set apart from others.
First described by Greicius and Seeley in 2007, the salience network is thought to be central in prepping the brain for action, such as when a driver must respond to someone darting across the road or a student readies herself for a pop quiz. An object or event is salient if it is significant to an individual. The signals can come from inside the body, such as pain or hunger, or outside, such as the sound of a distant siren while driving in traffic.
http://www.wired.com/2013/12/the-will-to-persevere/
The findings show that the insular cortex is a complex and multi-purpose structure that can be separated into, at least, three separate regions with distinct functions. Specific subdivisions of the insular cortex, along with other cortical and subcortical regions, form a "salience network." Compromises to the integrity of this network can contribute to deficits in attention and affect, as well as social and cognitive processes.
In healthy people, the Default Mode Network and the Salience network appear to be tightly coupled. The default network is active when a person daydreams — but when something outside, such as an ambulance siren, pierces that sense of reflection, the salience network takes over. “It’s activated when you have to get rid of that internal focus and figure out what’s happening around you,” “To understand what’s going on, we need to think about how they work together.”
If you have to think about tiny regions of the brain all doing something different, it’s very hard to make sense of how activity fits together globally,” said David Sharp, a neurologist at the National Institute for Health Research in London who did the study described further below.
"We are constantly bombarded with stimuli from the environment that place demands on our attention," said author of the article. "The function of one of the insular cortex subdivisions is crucial for orchestrating activity in other brain regions that are important for guiding attention,"
See Also: Saliency, switching, attention and control: a network model of insula function. http://www.ncbi.nlm.nih.gov/pubmed/20512370
“Our brain is constantly bombarded by sensory information, and we have to score all that information in terms of how personally relevant it is for guiding our behavior,” said Seeley, a neurologist at the University of California, San Francisco, who was not involved in a new study. “The more salient something is, the more it captures our drive system, which directs behavior.”
In a rare study involving direct brain stimulation, Michael Greicius, a neurologist at Stanford University, and collaborators say they have uncovered direct evidence that a brain region known as the anterior midcingulate cortex and its surrounding network play a central role in motivation and a readiness to act.
The theory had been based on indirect data — until now. “It was a fortuitous opportunity, providing a rare piece of data that we can’t get from any other setting,” Greicius said. “It’s nice to have a human lend this first-person insight into what it feels like to have your salience network stimulated.
raise tantalizing questions about how differences in the network from one individual to the next contribute to differences in our ability to overcome challenges and cope with stress.
If you have to think about tiny regions of the brain all doing something different, it’s very hard to make sense of how activity fits together globally,” said David Sharp, a neurologist at the National Institute for Health Research in London.
brain is constantly bombarded by stimuli, and the relative salience of these inputs determines which are more likely to capture attention. A brain system known as the 'salience network', with key nodes in the insular cortices, has a central role in the detection of behaviourally relevant stimuli and the coordination of neural resources. Emerging evidence suggests that atypical engagement of specific subdivisions of the insula within the salience network is a feature of many neuropsychiatric disorders
At least part of the salience network’s role seems to be linked to something very basic: the fight or flight response. That response — an accelerated heart rate, dilated pupils and rising blood pressure, readying the body for action — may be orchestrated by the salience network
“I think it comes on line anytime there is a challenge to be met and allows the brain to marshal the body’s resources,” said Greicius. The fight or flight response would be an extreme example, “but low-level challenges still require marshaling of those physiologic resources,” he said.
Scientists don’t yet know the exact role the salience network plays in perseverance, but they do know that disrupting the network can have a profound effect. Rodents with damage to their version of the anterior cingulate give up more easily than others when trying to find food. And deterioration in the salience networks in frontotemporal dementia has been linked to lack of drive.
They theorize that paying too much attention to one’s thoughts may give them undue significance. “These disorders might be partially understood as conditions in which an excessive amount of salience is attributed to situations or stimuli that don’t merit that much attention,” Greicius said.
Too much activity in the salience network can also be problematic. Seeley and Greicius’s original study found that the people who reported the most anxiety before they entered the brain scanner also showed the strongest network connections; and hyperconnectivity in the network has been linked to autism.

சனி பகவான் போற்றி

ஓம் அருளுங்கால் இனியனே போற்றி
ஓம் அண்டியோர்க்காவலனே போற்றி
ஓம் அலிக்கிரகமே போற்றி
ஓம் அடர்த்தியிலா கிரகமே போற்றி
ஓம் அனுஷத்ததிபதியே போற்றி
ஓம் அன்னதானப் பிரியனே போற்றி
ஓம் அசுப கிரகமே போற்றி
ஓம் ஆட்டுவிப்பவனே போற்றி
ஓம் ஆயுட்காரகனே போற்றி
ஓம் ஆதியூரில் அருள்பவனே போற்றி





ஓம் ஆணவமழிப்பவனே போற்றி
ஓம் இருவாகனனே போற்றி
ஓம் இளைத்த தேகனே போற்றி
ஓம் இரும்புத் தேரனே போற்றி
ஓம் இரும்பு உலோகனே போற்றி
ஓம் ஈடிலானே போற்றி
ஓம் ஈசுவரனானவனே போற்றி
ஓம் உக்கிரனே போற்றி
ஓம் உத்திரட்டாதி நாதனே போற்றி
ஓம் உபகிரகமுளானே போற்றி

ஓம் எமன் அதிதேவதையனே போற்றி
ஓம் எள் விரும்பியே போற்றி
ஓம் எவர்க்கும் அஞ்சானே போற்றி
ஓம் எண்பரித் தேரனே போற்றி
ஓம் ஏழாம் கிரகனே போற்றி
ஓம் கரு மெய்யனே போற்றி
ஓம் கலி புருஷனே போற்றி
ஓம் கழுகு வாகனனே போற்றி
ஓம் கருங்குவளை மலரனே போற்றி
ஓம் கரிய ஆடையனே போற்றி

ஓம் கருஞ்சந்தனப் பிரியனே போற்றி
ஓம் கருங்கொடியனே போற்றி
ஓம் கருநிறக் குடையனே போற்றி
ஓம் கண்ணொன்றிலானே போற்றி
ஓம் காகமேறியவனே போற்றி
ஓம் காசியில் பூசித்தவனே போற்றி
ஓம் காரியே போற்றி
ஓம் காற்றுக் கிரகமே போற்றி
ஓம் குளிர்க் கோளே போற்றி
ஓம் கும்பராசி அதிபதியே போற்றி

ஓம் குச்சனூர்த் தேவனே போற்றி
ஓம் குளிகன் தந்தையே போற்றி
ஓம் குறுவடிவனே போற்றி
ஓம் கொள்ளிக்காட்டில் அருள்பவனே போற்றி
ஓம் கைப்புச்சுவையனே போற்றி
ஓம் சடையனே போற்றி
ஓம் சமரிலானே போற்றி
ஓம் சனிவிரதப் பிரியனே போற்றி
ஓம் சனிவார நாயகனே போற்றி
ஓம் சாயை புத்ரனே போற்றி

ஓம் சுடரோன் சேயே போற்றி
ஓம் சூரனே போற்றி
ஓம் சூலாயுதனே போற்றி
ஓம் சூர்ய சத்ருவே போற்றி
ஓம் சுக்ர நண்பனே போற்றி
ஓம் சிவனடியானே போற்றி
ஓம் சிவபக்தர்க்கடியானே போற்றி
ஓம் சீற்றனே போற்றி
ஓம் செயலறச் செய்பவனே போற்றி
ஓம் தமோகணனே போற்றி

ஓம் தண்டாயுதனே போற்றி
ஓம் தசரதனுக்கருளியவனே போற்றி
ஓம் தனிக்கோயிலுளானே போற்றி
ஓம் தீபப் பிரியனே போற்றி
ஓம் திருநள்ளாற்றுத் தேவனே போற்றி
ஓம் துலாராசியிலுச்சனே போற்றி
ஓம் துயரளித்தருள்வோனே போற்றி
ஓம் தைரியனே போற்றி
ஓம் தொலை கிரகமே போற்றி
ஓம் நம்பிக்கிரங்கியவனே போற்றி

ஓம் நளனைச் சோதித்தவனே போற்றி
ஓம் நீலவண்ணப் பிரியனே போற்றி
ஓம் நீண்டகாலச் சுழலோனே போற்றி
ஓம் பத்தொன்பதாண்டாள்பவனே போற்றி
ஓம் பயங்கரனே போற்றி
ஓம் பக்கச் சுழலோனே போற்றி
ஓம் பத்மபீடனே போற்றி
ஓம் பத்திரை சோதரனே போற்றி
ஓம் பிணிமுகனே போற்றி
ஓம் பிரபலனே போற்றி

ஓம் பீடிப்பவனே போற்றி
ஓம் ப்ரஜாபதி ப்ரத்யதி தேவதையனே போற்றி
ஓம் புஷ்பப்பிரியனே போற்றி
ஓம் புதன்மித்ரனே போற்றி
ஓம் பூசத் ததிபதியே போற்றி
ஓம் பேதமிலானே போற்றி
ஓம் பைய நடப்பவனே போற்றி
ஓம் போற்றப்படுபவனே போற்றி
ஓம் மகரத்தாள்பவனே போற்றி
ஓம் மாங்கல்ய காரகனே போற்றி

ஓம் மதிப்பகையே போற்றி
ஓம் மநு சோதரனே போற்றி
ஓம் முடவனே போற்றி
ஓம் முதுமுகனே போற்றி
ஓம் மும்முறை பீடிப்பவனே போற்றி
ஓம் மூபத்தாண்டில் சுற்றுபவனே போற்றி
ஓம் மேல் திசையனே போற்றி
ஓம் மேற்கு நோக்கனே போற்றி
ஓம் யமுனை சோதரனே போற்றி
ஓம் யமனுடன் பிறந்தோனே போற்றி

ஓம் வன்னி சமித்தனே போற்றி
ஓம் வலிப்பு தீர்ப்பவனே போற்றி
ஓம் வக்கரிப்பவனே போற்றி
ஓம் வளை மூன்றுளானே போற்றி
ஓம் வில்லேந்தியவனே போற்றி
ஓம் வில்வப்பிரியனே போற்றி
ஓம் ஸ்ரம் பீஜ மந்திரனே போற்றி
ஓம் சனீச்வரனே போற்றி

ATULYA BHARAT .MP HEART OF INDIA SANCHI STUPA





Monday, September 28, 2015

Information Revolution


Direct detection of Ebola virus using chip based technology


The current gold standard for Ebola virus detection relies on a method called polymerase chain reaction (PCR) to amplify the virus's genetic material for detection. Because PCR works on DNA molecules and Ebola is an RNA virus, the reverse transcriptase enzyme is used to make DNA copies of the viral RNA prior to PCR amplification and detection.
A team led by researchers has developed chip-based technology for reliable detection of Ebola virus and other viral pathogens. The system uses direct optical detection of viral molecules and can be integrated into a simple, portable instrument for use in field situations where rapid, accurate detection of Ebola infections is needed to control outbreaks.
The system combines two small chips, a microfluidic chip for sample preparation and an optofluidic chip for optical detection.
Ebola virus RNA--are isolated by binding to a matching sequence of synthetic DNA (called an oligonucleotide) attached to magnetic microbeads. The microbeads are collected with a magnet, nontarget biomolecules are washed off, and the bound targets are then released by heating, labeled with fluorescent markers, and transferred to the optofluidic chip for optical detection.
In laboratory tests, the system provided sensitive detection of Ebola virus while giving no positive counts in tests with two related viruses, Sudan virus and Marburg virus. Testing with different concentrations of Ebola virus demonstrated accurate quantification of the virus over six orders of magnitude.
The team has not yet been able to test the system starting with raw blood samples. That will require additional sample preparation steps, and it will also have to be done in a biosafety level 4 facility
.
The team reported their results in a paper published in Nature Scientific Reports.
http://www.nature.com/articles/srep14494