Search This Blog

Monday, September 10, 2012

வலி திருக்கோவில் கவியுவன்




நினைவு கூரத்தக்க நாள்வரை  
வாழ்வை மீட்டிப் பார்க்கின்றேன்  
வேலிக்கம்பியில் மாட்டித் தவிக்கும்  
சொப்பிங் வேக்காய் தவிக்கிறது மனசு.
கோழியின் சிறகிடுக்கின் கதகதப்பில்  
குளிரும் வெயிலுமற்று சுகம் காணும் குஞ்சுகளாய்  
உறவுகளின் அரவணைப்பில் கடைசிப் பிள்ளை என்ற செல்ல மமதையுடன்
உலா வந்த நாட்கள்----------------
அறுத்த வயற்பரப்புத் தரும் ஏக்கத்தைப்போல்  
அவர்கள் விடுத்துச் சென்ற நினைவுகளின் தாக்கங்கள்  
உறக்கத்தின் முன்னான கடைசி நிமிடங்களில் ஒவ்வொரு நாளுமே  
ஏக்கப் பெருமூச்சாய் எனக்குள்ளே------
நத்தார் அடைமழையின் பின்  
இறுகிப்போன முற்றத்து மண்ணில்
குச்சி கொண்டு பூ வரைவேன் நான்  
கூரிய நகத்துடன் கொடும் மிருகமொன்று வரைவான் 
என் நண்பன்
அப்பா சொல்வார்
'உன்னை மிதித்துச் செல்வார்கள்
உன் நண்பன் மற்றவரை மிதித்துச் செல்வான்'  
மூன்று தசாப்தங்கள் முழுதாய்க் கடந்தது  
அப்பா சொன்னதன் அர்த்தத்தைப் புரிய.
சிறு வெள்மணலை கூட துள்ளியெழா  
கோரக்களப்பாற்றின் பேரமைதியையொத்த  
மகோன்னத தருணங்கள் நிறைந்த என் வாழ்வுக்குளத்தில்  
வந்து விழுந்த முதற்கல்லாய் அப்பாவின் மரணம்.
நீருக்குள் அணையாமல் நெருப்புக் கொண்டு செல்லும்  
தந்திரங்கள் நிறைந்த மானுடக் கூட்டத்தினுள்ளே  
நேர்கோட்டில் வாழ்வதன் கடினத்தைப்  
புரிய வைக்காமலே அப்பா சென்று விட்டார்.
அதன் பின்
ஒலிம்பிக் போட்டி நடப்பது போல  
நான்காண்டுக்கொரு முறை  
ஒவ்வொரு உறவு ஒவ்வொரு காரணமாய்  
ஒவ்வொரு பாடத்தையும் ஒவ்வொரு 
வலியையும் எனக்குள்
நிரந்தரமாய் இறக்கிவிட்டு.........




ஒரு காலத்தில்
என் வலிகளையும் மறந்து விட்டு,
இருப்பு கேள்வியாகிப்போன வாழ்வின்  
அவலத்தை வெளிப்படுத்த
என் பேனா குனிந்தபோதெல்லாம்
நான் நிமிர்ந்து நின்றேன்
அப்பாவின் தெளிவுடனும்  
அண்ணாவின் உறுதியுடனும்------
இன்றோ,
ஊழித்தாண்டவம் ஆடிய  
ஆழிப்பேரலையை விஞ்சும் வகையில்  
மானுடம் நசுக்கப்பட்டபோதும்  
உள்ளிருந்தே அரிக்கும் கறையான்போல  
கொஞ்சம் கொஞ்சமாய் சுயம் மறுக்கப்பட்ட போதும்  
ஏழு கடல்களுக்கப்பால் 
ஏதோ ஒரு சிறு மீனின் உடலில்  
உயிரைத்தங்க விட்டு 
வேறெங்கோ வாழும் அரக்கன் போல  
உணர்வைத் தோண்டிப் புதைத்தது விட்டு  
ஊமையாய் வாழும் இந்த வாழ்வின் வலி  
எல்லா வலியையும் விட மிகக் கொடுமையானது.
மன்னியுங்கள்
நானும் பழகிக் கொணடேன்  
வலியுடன் வாழ்வதற்கு.
திருக்கோவில் கவியுவன்

முன்மாதிரி-முஸ்லிம்-குடும்பம்-islamkalvi-HD

இஸ்லாம் ஓர் அறிமுகம் - islamkalvi

Natural Treatment of Obesity


Natural Treatment of Obesity~

Obesity is a physical condition that results from excessive storage of fat in the body. Obesity has been defined as a weight more than 20% above what is considered normal as per the body mass index, which is calculated from an individual’s age, height, and weight.

Home Remedies for obesity:-


>Extract juice of one lemon in a glass of lukewarm water. Add a teaspoon of honey, mix well and take in the morning immediately after waking up and before taking anything else. Similarly add a pinch of black rock salt instead of honey to the lukewarm water, mix it well and take it daily in the afternoon. These two drinks must be taken regularly to cut off fats form your body.

>Roast barley seeds and powder it. Mix it with a little milk and honey. Make a small ball and take it in breakfast. A pinch of salt can be added with a little water.

>Sieve wheat flour and remove the bran. Mix two tablespoon full of this bran in a glass of skimmed milk, add honey and take it at least once a day. Do not add sugar. Bran can also be taken with buttermilk.

>Take a ripe banana mashed in plain diluted cow’s milk with a tablespoonful of fresh banana flower juice during breakfast for a couple of months can help in reducing obesity.

>Ten drops of tulsi leaf juice with two teaspoon full of honey in water for one month. This tulsi juice is very effective in terms of reducing obesity from body.

>Raw tomatoes and onions, mixed with juice of one lemon is a very good salad for obesity.

>Having green tea has been found to be beneficial in treating obesity. You can also consume tea made from dandelion root.

>Horse gram can help cure obesity. Soak 1-2 tbsp horse gram in a glass of water and keep it overnight. Filter the concoction the next morning and have it on an empty stomach.

>To prevent obesity, there is no better option than physical exercise. Brisk walking is the best exercise to begin with. As soon as you wake up in the morning, workout for at least 30mins to an hour. Burn up unwanted calories by putting large leg muscles to work.

Forms of Shiva


 
Shaivite iconography recognizes many different traditional forms of the Lord. The Shiva Lingam is the primary form for worship and is found everywhere, in almost all temples of Shiva. The Shiva Lingam is referred to as the aniconic form because it depicts the supreme Formless Form (arupa-rupa). In addition, 25 common iconic forms (murtis) are described as prominent in Saiva Siddhanta, although many more are recognized. In general, anthropomorphic representations are called Maheshvara murtis, whereas the Shiva Lingam, the aniconic form, is called Sadashiva murti.
The Maheshvara murtis are sub-divided by two sets of classifications. The first classification divides the murtis into fierce (ugra) or benevolent (anugraha) images. The second classification divides the murtis into bhoga, yoga and vira. The bhoga forms are represented with Shakti, whereas in the yoga and vira forms Shakti is not specifically depicted, but is implicit. Note that all the bhoga and most of the yoga forms are also anugraha forms.

25 Maheshvara Murtis 

Name Grouping I Grouping II Bhikshatana Anugraha
Yoga
Nataraja Anugraha Yoga Aja Ekapada
Anugraha Yoga Dakshinamurti
Anugraha Yoga Lingodhbhavamurti
Anugraha Yoga Kamadahanamurti (Kamari) Ugra Yoga Tripurantaka (Tripurari) Ugra Vira Mahakaleshvara (Kalari) Ugra Vira Jalandharari
Ugra Vira Gajasamharamurti Ugra Vira Virabhadra (Karala)
Ugra Vira Kankala-Bhairava Ugra Vira Kalyanasundara
Anugraha Bhoga Vrishabharudha Anugraha Bhoga Chandrashekhara
Anugraha Bhoga
Uma-Maheshvara Anugraha Bhoga Shankara-Narayana
Anugraha Bhoga Ardhanarishvara Anugraha Bhoga Kiratamurti
Anugraha Bhoga Chandeshanugraha Anugraha Bhoga Chakrapradasvarupa
Anugraha Bhoga Somaskanda Anugraha Bhoga Gajamukhanugraha Anugraha Bhoga Nilakantha-Maheshvara Anugraha Bhoga Sukhasanamurti
Anugraha Bhoga

Panchanana Shiva – the five faces and the five Shaktis

In addition to the above twenty-five, there is yet another important but rare anthropomorphic form – the five-faced (Panchanana) Shiva – which is considered not a Maheshvara Murti, but a Sadashiva Murti like the Shiva Lingam. Per Shaivite theology, Shiva realized in the five faces is revealed as the Lord and Master of all the categories of existence (tattvas), which have classically been described and divided into groups of fives. The sum totality of all groups of five categories is the manifest universe (prapancha). Revealed in the five faces, Shiva is realized as the essence of all prapancha (prapancha-sara).

Each of the five faces of Shiva has a proper name, and an associated Shakti, which collectively describe the Panchakritya (five divine acts) of Shiva, i.e. creation, sustenance, dissolution, concealment and revealment.

Name of Face Associated Shakti Ishana (Sadashiva)
Anugraha Shakti (Power of Revealment)
Tatpurusha (Maheshvara)
Tirodhana Shakti (Power of Concealment)
Aghora (Rudra)
Samhara Shakti (Power of Dissolution)
Vamadeva (Vishnu)
Stithi Shakti (Power of Sustenance)
Sadyojata (Brahmā)
Sristhi Shakti (Power of Creation)

The basic idea is that the Supreme Lord (Parameshvara) ever creates the world, sustains it, and dissolves it when the time is ripe. Moreover, He has concealed Himself within the fabric of manifest existence, and becomes revealed to us as such when we have matured enough.


Aum Namah Shivaya.
Anbe Sivamayam Satyame Parasivam.

எல்லாளன் துட்ட காமினி மகாவம்சம்

எல்லாளன் என்ற தமிழ் மன்னன் இலங்கையை 44 ஆண்டுகள் ஆண்டதாக ஆதாரபூர்வமான வரலாறு கூறுகிறது.
சிங்களர்கள்தான் இலங்கையின் பூர்வக்குடிகள் என்று நிரூபிப்பதற்காக எழுதப்பட்ட நூல் "மகாவம்சம்.''
சிங்கள வம்சத்தை தோற்றுவித்தவன் விஜயன்தான் என்று அந்நூல் கூறுகிறது. ஆனால், அவன் இலங்கையில் காலடி வைக்கும்போதே, அங்கே குவேனி என்ற தமிழ் அரசி இருந்திருக்கிறாள் என்று அதே மகாவம்சம் குறிப்பிடுகிறது. அப்படியானால், விஜயனுக்கு முன்பே தமிழர்கள் அங்கு வாழ்ந்திருக்கிறார்கள் என்பதை மகாவம்சமே ஒப்புக்கொள்கிறது.

அனுராதபுரம்

இலங்கையின் மற்ற பகுதிகள் காடுகளாக இருந்தபோது, அனுராதபுரத்தை பெரிய நகரமாக தமிழர்கள் உருவாக்கி, அங்கிருந்து ஆட்சி நடத்தியிருக்கிறார்கள் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.

விஜயன் தனக்கென்று ஒரு ராஜ்ஜியத்தை உருவாக்குவதற்கு முன்பே, அனுராதபுரத்தில் தமிழ் மன்னர்களின் ஆட்சி நடந்திருக்கிறது. விஜயனின் வருகைக்கு சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்பே அனுராதபுரம் பெரிய நகரமாக இருந்திருக்கிறது என்பது, தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிப்பு. அந்தக் காலத்தில் இந்தியாவில் உஜ்ஜயினி பெரிய நகரமாக இருந்தது. அதற்கு சமமாக அனுராதபுரம் இருந்ததாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.

புகழ் பெற்ற தமிழ் மன்னன்

இலங்கைக்கு இந்தியப் பேரரசர் அசோகர் அனுப்பிய புத்த மதக் குழுவினர், அனுராதபுரத்தில் திசையன் என்ற தமிழ் மன்னனை சந்தித்தது பற்றி, பாலி மொழி வரலாற்று நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

திசையன் இறந்த பிறகு, சேனன், குத்தன் என்ற இரு தமிழ் மன்னர்கள் 22 ஆண்டுகள் அனுராதபுரத்தில் நல்லாட்சி நடத்தினர்.
இவர்களுக்குப் பிறகு ஆட்சிக்கு வந்தவர் எல்லாளன்.

சிங்களர்களைப் புகழ்வதற்காகவே எழுதப்பட்ட "மகாவம்சம்'' நூலில், எல்லாளனின் வீரம் பற்றி உயர்வாகவே கூறப்பட்டுள்ளது. அவனுடைய குணநலன்கள், மனுநீதிச் சோழனின் இயல்பை ஒட்டி சித்தரிக்கப்பட்டுள்ளன.

மகாவம்சம் கூறுவதாவது:-

"எல்லாளன், இயேசு கிறிஸ்துவுக்கு 235 ஆண்டுகளுக்கு முன்னதாகப் பிறந் தவன். அவன் அனுராதபுரத்தைத் தலைநகரமாகக் கொண்டு, 44 ஆண்டுகள் ஆட்சி நடத்தினான். அவன் சோழ வம்சத்தை சேர்ந்தவன். நீதி தவறாதவன்.

அவன் தன் படுக்கை அறையில் ஒரு மணியை தொங்கவிட்டிருந்தான். அது, அரண்மனைக்கு வெளியே தொங்கவிடப்பட்டிருந்த ஒரு கயிற்றுடன் இணைக்கப்பட்டு இருந்தது. தங்களுடைய குறைகளை மன்னருக்குத் தெரிவிக்க, யார் வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் மணியை அடிக்கலாம்.

ஒருமுறை, ஒரு பெண் அந்த மணியை அடித்தாள். எல்லாளன் அந்தப் பெண்ணை அழைத்து, "உன் குறை என்ன?'' என்று கேட்டான்.
"உன் மகன் ரதத்தில் செல்லும்போது, என் கன்றுக்குட்டி மீது ரதத்தை ஏற்றிக் கொன்றுவிட்டான்'' என்று கூறினாள்.

அதைக்கேட்ட எல்லாளன், தன் மகனையும் ரதத்தை ஏற்றி கொன்றுவிடுமாறு கட்டளையிட்டான். அக்கட்டளைப்படி இளவரசன் கொல்லப்பட்டான். (மனுநீதி சோழன் வரலாற்றிலும் இதே போன்ற சம்பவம் வருகிறது)

புத்தர் கோவில்

ஒருமுறை எல்லாளன் ரதத்தில் செல்லும்போது, ரதம் மோதி புத்தர் கோவில் சேதம் அடைந்தது. ரதத்தில் இருந்து கீழே இறங்கிய எல்லாளன், கோவில் இடிந்ததற்காக மிகவும் வருந்தினான்.

உடனே மந்திரிகளை அழைத்து, "புத்தர் கோவிலை சேதப்படுத்திய நான் படுபாவி; பெரிய குற்றவாளி. என்னைக் கொன்றுவிடுங்கள்'' என்றான்.

அதற்கு மந்திரிகள் மறுத்துவிட்டனர். "நீங்கள் உங்களுக்கே மரண தண்டனை விதித்துக் கொள்வதை, புத்த பகவானே ஏற்கமாட்டார்'' என்று கூறினர். "நீங்கள் உங்கள் உயிரைப் போக்கிக் கொள்வதற்கு பதிலாக, கோவிலை புதிதாகக் கட்டிக் கொடுத்து விடலாம்'' என்று தெரிவித்தார்கள்.

மந்திரிகளின் இந்த யோசனையை ஏற்றுக்கொண்ட எல்லாளன், புத்தர் கோவிலை முன்பைவிட அழகாகக் கட்டிக் கொடுத்தான்.

துட்ட காமினி


இந்தக் காலக்கட்டத்தில் தென் இலங்கையை கவந்திசா என்ற சிங்கள மன்னன் ஆண்டு வந்தான். அவனுடைய மகன் பெயர் துட்டகாமினி. (இவனுடைய இயற்பெயர் கெமுனு என்றும், துஷ்டத்தனம் செய்து வந்ததால், துட்ட காமினி என்று அழைக்கப்பட்டான் என்றும் மகாவம்சம் கூறுகிறது.)

ராஜ்ஜியத்தை விரிவுபடுத்த விரும்பிய துட்டகாமினி, பல சிற்றரசர்களை தோற்கடித்து விட்டு, வடக்கு நோக்கி முன்னேறினான். தமிழ் மன்னன் எல்லாளனை முறியடித்து, அனுராதபுரத்தை கைப்பற்ற வேண்டும் என்பது அவன் எண்ணம்.

தன் விருப்பத்தை தன் தந்தைக்குத் தெரிவித்தான். அதை மன்னர் ஏற்கவில்லை. "எல்லாளனிடம் ஒரு லட்சம் போர் வீரர்கள் இருக்கிறார்கள். மேலும் அவர் நல்லவர். மக்களின் ஆதரவைப் பெற்றவர். அவர் மீது படையெடுக்க வேண்டாம்'' என்று தகவல் அனுப்பினார்.

தந்தைக்கு அனுப்பிய "பரிசு''

இதனால் சீற்றம் அடைந்த துட்ட கா மினி, பெண்கள் அணியும் வளையல்களையும், சேலைகளையும் தந்தைக்கு அனுப்பி வைத்து, தந்தையை அவமானப்படுத்தினான்.

இதனால் கோபம் அடைந்த மன்னர், துட்ட காமினியை கைது செய்து, தன் முன் கொண்டு வந்து நிறுத்துமாறு வீரர்களுக்குக் கட்டளையிட்டார்.

இதை அறிந்து கொண்ட துட்ட காமினி, காட்டில் போய் ஒளிந்து கொண்டான்.

சில நாட்களில் மன்னர் மரணம் அடைந்தார். துட்ட காமினி, நாட்டுக்குத் திரும்பி ஆட்சியைக் கைப்பற்றிக் கொண்டான். பின்னர், அனுராதபுரத்தின் மீது படையெடுத்தான்.

பயங்கர போர்


பெரும் படையுடன் துட்ட காமினி வருவது பற்றி அறிந்த எல்லாளன், மந்திரிகளை அழைத்து அவசர ஆலோசனை நடத்தினார்.
துட்டகாமினியை கோட் டைக்குள் வரவிடக்கூடாது என்றும், கோட்டைக்கு வெளியே அவனை எதிர்கொண்டு போரிடுவது என்றும் முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, அனுராதபுரம் கோட்டைக்கு வெளியே இருதரப்பு படைகளும் மோதின. போர் பயங்கரமாக நடந்தது. ரத்த ஆறு ஓடியது.

பட்டத்து யானை

இந்நிலையில், எல்லாளனுக்கு துட்டகாமினி சவால் விட்டான்.

"நாம் இருவரும் நேருக்கு நேர் நின்று போர் புரிவோம். யாருக்கு வெற்றி என்பதை நமது நேரடிப் போர் தீர்மானிக்கட்டும்'' என்றான்.
போர் நடந்தபோது எல்லாளனுக்கு வயது 74. துட்ட காமினி இளைஞன். என்றாலும் அவன் விட்ட சவாலை, எல்லாளன் ஏற்றுக்கொண்டார்.

இருவரும் பட்டத்து யானைகள் மீது அமர்ந்து போரிட்டனர். எல்லாளன் வயோதிகராக இருந்தாலும் தீரத்துடன் போரிட்டார். என்றாலும், துட்டகாமினியின் யானை, தன்னுடைய தந்தத்தால் எல்லாளன் அமர்ந்திருந்த யானையின் முகத்தில் குத்தி கிழித்தது. யானை கீழே சாய்ந்தது. அதே நேரத்தில் துட்ட காமினி எறிந்த ஈட்டி, எல்லாளன் உயிரைக் குடித்தது.

கோவில்

எல்லாளன் இறந்த இடத்திலேயே அவர் உடலை தக்க மரியாதையுடன் துட்ட காமினி தகனம் செய்தான். அதே இடத்தில் கோவில் ஒன்றை கட்டவும் ஏற்பாடு செய்தான்.

"இந்த வழியே செல்பவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் அரசர்களே ஆனாலும் கோவிலை கும்பிட்டு விட்டு செல்லவேண்டும்'' என்று உத்தரவிட்டான். எல்லாளனின் வீரத்துக்கு, துட்ட காமினி அளித்த மரியாதை இது.

அனுராதபுரத்தைக் கைப்பற்றிக்கொண்ட துட்டகாமினி, அதை மேலும் விரிவுபடுத்த எண்ணமிட்டான்.

ஆனால், அவன் திட்டங்கள் நிறைவேறுவதற்கு முன், பாம்பு கடித்து இறந்து போனான்.''

இவ்வாறு மகாவம்சம் கூறுகிறது.

Foods that heal the kidneys



Foods that heal the kidneys are purple plums, purple potatoes, black quinoa, blackberries, black carrots (purple carrots), hijiki(potent seaweed), black seaweed salad, black grapes, black beans, and black elderberries. 

உலகம் ஆண்ட லெமூரியன்


 
லெமூரியர்களுக்கு பல அரிய பொருள்கள் தெரிந்திருந்தன. தண்ணீரை எதிர்ப்பக்கம் தள்ளும் ஆற்றல் மிக்க 'கல்' அவர்களுக்கு தெரிந்திருந்தது. படகைத்தள்ள அந்த கல்லை பயன்படுத்தி இருக்கிறார்கள். நீராவிக் கருவி, வான ஊர்தியும் தெரிந்திருந்ததாகவே கருதப்படுகிறது.'ஒளி' பற்றி அதிசயம் ஒன்று உண்டு! மின்சாதனத்தைவிட ஏதோ ஒரு வகையில், இரவை பகலாக்கும் அளவுக்கு ஒளிரச் செய்திருக்கிறார்கள். கலிபோர்னியா காட்டில் இன்றும் நெடுந்தூரம் வரை வீசும் ஒளி தெரிகிறது. அங்கே பழங்குடி மக்கள் பதுங்கி வாழ்கிறார்கள்.

அடுப்பில் சமைத்தவர்கள், நெருப்பு, அல்லது வெய்யிலை பயன்படுத்தி சமைத்திருக்கலாம். வீடுகள் காற்றோட்டமாக அமைக்கப்பட்டது. தெருக்கள் சிமெண்டைப் போல பொருளால் அமைக்கப்பட்டது. ஒட்டகம் போல ஒருவகை விலங்கின் மீது அமர்ந்து பயணம் செய்தார்கள். இதெல்லாம் அவர்கள் வரைந்த ஓவியங்கள் மூலம் அறியப்படுகிறது. பொன்னும் வெள்ளியும் அன்று இருந்தன. அணிகலன்களுக்கு பயன் படுத்தப்பட்டிருக்கிறது. சொல்லப் போனால், பொன்னைவிட விலை உயர்ந்த பிளாட்டினம் போன்ற ஒன்றையும் அவர்கள் பயன்படுத்தி இருக்கிறார்கள்! "லெமூரியா பற்றி இன்னும் நிறைய ஆராய்ச்சிகள் நடக்கின்றன. லெமூரியாவில் மிச்சம் இருந்தவர்களே 'சித்தர்கள்' என்று பன்மொழிப்புலவர் அப்பாதுரை கூறுவார் பழந்தமிழ் மக்கள் லெமூரியர்களையும், எகிப்தியர், அமெரிக்க மாயா நகர மக்களையும் ஒத்திருந்தனர்.

ஆஸ்திரேலியா நாட்டின் பழங்குடியினர் இன்னும் 'சிவா நடனம்' என்ற பழம்பெரும் தமிழர் நடனத்தை ஆடுகிறார்கள். நெற்றியில் கண் வைத்துக் கொண்டு முக்கண்ணுடன் ஆடுகிறார்கள். வன உயிர்களை வேட்டையாட அவர்களை 'பூமராங்' என்ற ஆயூதத்தை பயன்படுத்துகிறார்கள். இது எதிரியை தாக்கி விட்டு திருப்பி வந்து விடும். இந்த பூமராங்கை இன்னும் ஊட்டி கொடைக்கானல் பழங்குடியினர் பயன்படுத்துகிறார்கள்.

எனவே ஆஸ்திரேலியா ஆப்பிரிக்கா பழங்குடியினர் கலாச்சார ரீதியாக நம்முடன் ஒத்திருக்கிறார்கள். மெக்சிகோ நகரில் சிவப்பு இந்தியர்கள் (மாயன்) சிறுபயற்றை விரும்பி சாப்பிடுகிறார்கள். நாம் அனைத்து விழாக்களிலும் தாய் மாமனுக்கு முக்கியத்துவம் கொடுப்பது போல் அவர்களும் கொடுக்கிறார்கள். தமிழன் பயன்படுத்தும் அம்மியும்இ உரல்களும் அங்கு சகஜம். இவையெல்லாம் ஒரு காலத்தில் அனைத்து பகுதிகளும் ஒன்றாக இருந்திருக்கிறது என்ற வாதத்திற்கு வலுவூட்டுவதாய் அமைந்திருக்கிறது.

குமரிக் கண்டத்தில் குமரிகோடு என்ற இடம் இருந்ததாக வரலாறு. இதையொட்டிதான் தற்போதைய குமரி மாவட்டத்தில் விளவன் கோடு அதன்கோடு ஆண்டுகோடு இடைகோடு மெக்கோடு நெட்டன்கோடு திருவிதாங்கோடு பரகோடு வெள்ளைக்கோடு கட்டிமன்கோடு என்று ஊர்களுக்கு பெயரிடப்பட்டது. சங்கம் வளர்த்த தமிழ் குமரிக் கண்டம் தான் உலகில் முதன் முதலில் தோன்றியது என்பதற்கு இன்னொரு அடையாளம் குமரி என்ற பெயர் பல கண்டங்களில் இருப்பது. குறிப்பாக ஆப்பிரிக்கா அருகே மடகாஸ்கர் தீவிற்கு குமர் என்று பெயர். இங்கு வாழும் மக்கள் கொம்ரி என்று அழைக்கப்படுகிறார்கள்.

ஆப்பிரிக்கா மடகாஸ்கர் மொசாம்பி ஆகிய இடங்களுக்கு இடையேயுள்ள தீவை கோமர் அல்லது கோம்ரான் என்று அழைக்கிறார்கள். மேற்கு ஆப்பிரிக்காவின் ஒரு பகுதி கோம்ரூல் என்றே இன்றும் அழைக்கப்படுகிறது. எனவே இவற்றிற்கெல்லாம் தோற்றுவாய் குமரிதான் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

தென்அமெரிக்கா மேல்கரை, பஜகாலிபோர்னியா, நெவதா முதலிய இடங்களில் ஒருவகை கல் அமைந்த வேலைப்பாடுகள் காணப்படுகிறது. இவை கருங்கல்லைவிட உறுதியானவை. இவற்றை சிமெண்டை விட உறுதியான குழம்பு கொண்டு, சேர்த்து கட்டம் கட்டி இருக்கிறார்கள். அந்த கல் எங்கும் இன்று இல்லை.

திரிகோணப் பாறை எனப்படும் விவேகானந்தர் பாறையிலிருந்து 8 கி.மீ. தூரத்தில் 36 மீ ஆழத்தில் 15000 சதுர அடியில் பழைய கால இடிபாடுடன் கூடிய கோயில் உள்ளது. இதனை டாலமியும் சொல்லியுள்ளார். பின்பு, இந்தியப் பெருங்கடல் முழுவதும் ஆய்வு செய்தபோது இது வரை நான்கு இட்பாடுகள் உள்ள இடங்களும் மற்றும் ஒரு தீவு மூழ்கி உள்ளதும் தெரியவந்தது. இப்படி உலகில் முதல் மனிதன் தோன்றிய லெமூரியாவை குறித்து இன்னும் பல ஆராய்ச்சி செய்ய வேண்டும். லெமூரியா கல் வெட்டுகளையும், சிந்துநதி பக்கமுள்ள கல் வெட்டுகளையும் புரிந்து முயலும்போது இன்னும் பல புதிர்கள் அவிழும். தமிழ் இனம் பற்றி பல புதுமைகள் அறிய முடியும்."

'Hit men' stop autoimmune


WALTER AND ELIZA HALL INSTITUTE   
Share on print
Eraxion_BloodCells_iStock
White blood cells in the blood stream. The scientists found that the absence of two related proteins, called Puma and Bim, led to self-reactive immune cells accumulating and attacking many different body organs. This suggests the two proteins work together to protect against autoimmune diseases, such as type 1 diabetes and rheumatoid arthritis.  
Image: Eraxion/iStockphoto
Researchers at the Walter and Eliza Hall Institute have discovered that a pair of molecules work together to kill so-called ‘self-reactive’ immune cells that are programmed to attack the body’s own organs. The finding is helping to explain how autoimmune diseases develop.

Dr Daniel Gray and colleagues from the institute’s Molecular Genetics of Cancer division and the University of Ballarat discovered that the absence of two related proteins, called Puma and Bim, led to self-reactive immune cells accumulating and attacking many different body organs, causing illness. The research is published online in the journal Immunity.

Autoimmune diseases, such as type 1 diabetes, rheumatoid arthritis, inflammatory bowel disease and multiple sclerosis, develop when immune cells launch an attack on the body’s own cells, destroying important body organs or structures. Around one in 20 Australians is affected by autoimmune conditions, most of which are chronic illnesses with no cure.

Puma and Bim are so-called ‘BH3-only’ proteins that make cells die by a process called apoptosis. Defects in apoptosis proteins have been linked to many human diseases, including cancer and neurodegenerative disorders.

Dr Gray said one way the body protects against autoimmune disease is by forcing most self-reactive immune cells to die during their development. “If any self-reactive cells manage to reach maturity, the body normally has a second safeguard of switching these potentially dangerous cells into an inactive state, preventing them from causing autoimmune disease,” he said.

“Until now, there has been debate about how important the death of self-reactive cells is as a protection against autoimmune diseases. Our research has identified two molecules that are needed for this process. We were able to use this discovery to show that the death of self-reactive immune cells is indeed an important protection against autoimmune disease development.”

Dr Gray is now collaborating with researchers who have identified human gene defects linked to the development of autoimmune conditions. “We now know that self-reactive cell death is an important protection against autoimmunity,” Dr Gray said. “The next stage of our work is to discover whether defects in the cell death process cooperate with other factors to cause human autoimmune disease.”

The research was funded by the National Health and Medical Research Council, the Juvenile Diabetes Research Foundation, the US Leukemia and Lymphoma Society, the US National Cancer Institute and the Victorian Government.
Editor's Note: Original news release can be found here.

Sri Shirdi Sai Baba Temple - Punjagutta

Friday, September 7, 2012

அறிஞர் அண்ணா


Screening halves breast cancer deaths


THE UNIVERSITY OF MELBOURNE   
Share on print


Women who undergo screening halve their risk of dying from breast cancer, a new study from the University of Melbourne has found.

The study, published in Cancer Epidemiology, Biomarkers and Prevention is the largest of its kind in Australia and one of the largest in the world. It followed about 4,000 women in a study of the BreastScreen program in Western Australia.

University of Melbourne Research Fellow Dr Carolyn Nickson and colleagues from the Melbourne School of Population Health said the findings reaffirmed the importance and efficacy of mammography.

The study focused on women aged 50-69 years, who are in the target age range for screening. It included 427 cases where women had died from breast cancer and 3,650 control women who were still alive when the other women died.

The research team compared screening attendance between the two groups and found screening was much lower among women who had died from breast cancer, a finding that is consistent with a similar study from South Australia and with numerous studies from around the world. Comparison with similar studies showed an average estimate of a 49 per cent reduced risk of dying.

Some other studies including studies from Australia claim that screening doesn’t reduce risk of dying from breast cancer. However, these studies do not compare outcomes for individual women.

“Sound research methods have been used in this study. I believe it is time to move on from the debate about whether screening reduces mortality and to instead direct research resources to help improve the program for women who choose to use it,” Dr Nickson said.

“It is important that Australian women have accurate information about the pros and cons of participating in BreastScreen. The findings of this study may help women decide whether to participate.”

“Early detection is the key to early treatment and the free BreastScreen program is the best health service available to detect breast cancers earlier in women aged 50-69 years.”
Editor's Note: Original news release can be found here.

New device heals muscle pains

EDITH COWAN UNIVERSITY   
Share on print
DKart_-_neck_pain
"[The e-cell] has the potential to be used in post-operative care for joint replacements, as well as in elite athlete recovery and for the weekend warrior gym goer who goes a bit too hard.”
Image: DKart/iStockphoto
Using a hand held device the size of a computer mouse for just 30 minutes could significantly change how people deal with, and recover from, the pain associated with musculoskeletal conditions.

Edith Cowan University (ECU) School of Exercise and Health Sciences Master by Research student Harry Banyard has been investigating the effectiveness of electromagnetic therapy in treating muscle damage.

Pulsed electromagnetic field therapy (PEMFT) has already been proven to enhance the healing of bone fractures and osteoarthritis, but no scientific evidence exists on whether it can help the recovery of muscles, explains Mr Banyard.

“In testing the PEMFT, using a machine called an e-cell, I wanted to determine whether the device could really have an impact on debilitating conditions such as rheumatoid arthritis and muscle tears and sprains experienced by elite athletes,” Mr Banyard said.

“Current treatments for these conditions include costly trips to physiotherapists and remedial massage therapists. This device could provide an alternative.”

The e-cell device was tested by Mr Banyard over a period of six months on both male and female volunteers. Muscle damage was induced in their biceps by forcibly lowering their extended arm using a machine whilst they tried to maximally resist against it.

“The results suggested that the e-cell treatment significantly enhanced the recovery of muscle function including a rapid return of strength and range of motion, significantly reducing swelling and tenderness,” Mr Banyard said.

“For an elite athlete, being able to recover quickly can have a significant impact on their performance, a hundredth of a second can mean the difference between winning or losing, so any measurable improvement this device can provide is valuable.”

“The range of conditions that the e-cell could assist in treating is endless. It has the potential to be used in post-operative care for joint replacements, as well as in elite athlete recovery and for the weekend warrior gym goer who goes a bit too hard.”
Editor's Note: Original news release can be found here.

சிறுகதை எழுதுவது எப்படி?-தி.ஜானகிராமன்




எல்லோரும் நாட்டியம் ஆடுவதில்லை. எல்லோரும் சங்கீதம் பாடுவதில்லை. எல்லோரும் வயலினோ, மிருதங்கமோ வாசிப்பதில்லை. சிலருக்குத்தான் இந்தக் காரியங்களைச் செய்ய முடிகிறது. அந்தச் சிலரிலேயே ஓரிரண்டுபேர் செய்யும் பொழுது நமக்கு மெய் மறந்துவிடுகிறது. தெய்வத்தையே கண்டு விட்டாற்போல புல்லரித்துப் போகிறோம். வேறு பலர் செய்யும் பொழுது, நமக்கு இந்த அனுபவம் ஏற்படுவதில்லை. ஒரு சமயம் நாம் பிரமிக்கலாம். மலைக்கலாம். வியக்கலாம். நுட்பமான ரசானுபவம், தன்மறதி போன்ற உணர்வு நிலைகள் வருவதில்லை. கலைஞர் உணர்வு மயமாகி ஆகி ஆடும்போதோ, வாசிக்கும் போதோ, தானாக ஒரு முழுமையும் ஓர் ஒருமையும் அந்தக் கலைப்படைப்பில் நிறைந்து, நம்முள்ளேயும் பரவி நிரம்பும். உணர்வு
thija4
இல்லாமல் இயந்திர ரீதியில் படைக்கிறவர்கள் இருக்கிறார்கள். இவர்கள் தங்கள் சாமர்த்தியத்தையும் அசகாய சூரத்தனத்தையும் காட்டி நம்மைப் பிரமிக்க வைக்க முடியும், ஆனால் மெய்மறக்கச் செய்ய இயலாது. நான் இந்த நோக்கில்தான் எந்தக் கலைப் படைப்பையும் பார்க்கிற வழக்கம். சிறுகதையையும் அப்படித்தான் பார்க்கிறேன்.
எந்தக் கலைப்படைப்புக்கும் முழுமையும் ஒருமையும் அவசியம். அவை பிரிக்க முடியாத அம்சங்கள். சிறுகதையில் அவை உயிர்நாடி. ஓர் அனுபவத்தைக் கலைவடிவில் வெளிப்படுத்த சிறுகதையில் இடமும் காலமும் குறுகியவை. எனவே எடுத்துக்கொண்ட விஷயம் உணர்வோ, சிரிப்போ, புன்சிரிப்போ, நகையாடலோ முறுக்கேறிய, துடிப்பான ஒரு கட்டத்தில்தான் இருக்கமுடியும். சிறிது நேரத்தில் வெடித்துவிடப் போகிற ஒரு தெறிப்பும், ஓர் அவசரத் தன்மையும் நம்மை ஆட்கொள்ள வேண்டும். தெறிக்கப் போகிறது பட்டுக் கயிறாக இருக்கலாம். எஃகு வடமாக இருக்கலாம். ஆனால் அந்தத் தெறிப்பும் நிரம்பி வழிகிற துடிப்பும் இருக்கத்தான் வேண்டும். இந்தத் தெறிப்பு விஷயத்திறகுத் தகுந்தாற்போல் வேறுபடுவது சகஜம். கதையின் பொருள் சோம்பல், காதல், வீரம், தியாகம், நிராசை, ஏமாற்றம், நம்பிக்கை, பக்தி, உல்லாசம், புதிர் அவிழல் அல்லது இவற்றில் சிலவற்றின் கலவைகளாக இருக்கலாம். அதற்குத் தகுந்தபடி அந்தத் தெறிப்பு பஞ்சின் தெறிப்பாகவோ, பட்டின் தெறிப்பாகவோ, எஃகின் தெறிப்பாகவோ, குண்டு மருந்தின் வெடிப்பாகவோ சத்தம் அதிகமாகவோ குறைந்தோ மௌனமாகவோ மாறுபடும். எனக்கு வேறு மாதிரியாக இந்த அனுபவத்தை விளக்கத் தெரியவில்லை. பல சமயங்களில் சிறுகதையைப் பற்றி நினைக்கும் போது, நூறு அல்லது ஐம்பது கஜ ஓட்டப்பந்தயத்திற்கு ஆயத்தம் செய்து கொள்ளுகிற பரபரப்பும், நிலைகொள்ளாமையும் என்னைக் கவ்விக் கொள்கிறதுண்டு. இது ஒரு மைல் ஓட்டப்பந்தயமல்ல. சைக்கிளில் பல ஊர்கள், வெளிகள், பாலங்கள், சோலைகள், சாலைகள் என்று வெகுதூரம் போகிற பந்தயம் இல்லை. நூறு கஜ ஓட்டத்தில் ஒவ்வோர் அடியும் ஒவ்வோர் அசைவும் முடிவை நோக்கித் துள்ளி ஓடுகிற அடி அசைவு. ஆர அமர,வேடிக்கை பார்த்துக் கொண்டு செல்லவோ வேகத்தை மாற்றிக் கொள்ளவோ இடமில்லை. சிறுகதையில் சிக்கனம் மிக மிக அவசியம். வளவளப்புக்கு இடமே கிடையாது. வளவளப்பு என்றால் அதிகச்சுமை. ஓடுவது கஷ்டம்.
இத்தனை தெறிப்பும் துடிப்பும் வேகமும் தேவையான சிறுகதை எழுத எத்தனையோ பேர் வழிகள் சொல்லியிருக்கிறார்கள். வகுப்புக்கூட நடத்துகிறார்கள். தபால் ட்யூஷன்கூட நடத்துவதாகக் கேள்வி. என்ன நடத்தினாலும் உத்திகளைத்தான் சொல்லிக்கொடுக்கலாம். உணர்வில் தோய்வதைச் சொல்லிக் கொடுக்க முடியாது. உணர்வில் லயிப்பதையும் முறுக்கேறுவதையும் சொல்லிக் கொடுக்க முடியாது. ஆனால் உத்திகளைச் சரியாகக் கையாண்டு, இலக்கண ரீதியாகப் பழுதில்லாத ஆயிரம் சிறுகதைகள் இப்பொழுது நம் நாட்டிலும் அயல்நாடுகளிலும் பல பத்திரிகைகளில் வருகின்றன. ஆனால் நாவலோ, நாடகமோ எழுதும் ஆசிரியர்களின் எண்ணிக்கையில் நூற்றில் ஒரு பங்குகூட அசல் சிறுகதை ஆசிரியர்கள் இந்த உலகத்தில் இல்லை. இதுதான் வேடிகக்கை. உத்திகளைத் தெரிந்து கொண்டு மட்டும் சிறுகதைகள் எழுதி, பத்திரிகைகளை நிரப்பலாம். அது ஒன்றும் பெரிய காரியமில்லை. செக்காவின் உத்திக்கு ஓர் அச்சு தயார் செய்துகொண்டு அதில் நம் சரக்கைப் போட்டு வார்த்துவிடலாம். ஆனால் அது செக்காவ் அச்சின் வார்ப்பாகத்தான் இருக்கும். புதிதாக ஒன்றும் வந்துவிடாது. உணர்வும் நம் பார்வையின் தனித்தன்மையும்தான் முக்கியம். அவை கண்யமாகவும் தீவிரமாகவும் இருந்தால் நமக்கு என்று ஓர் உருவம் கிடைக்கும். இதை எப்படிச் சொல்லிக் கொடுக்கப் போகிறார்கள்?
தனித்தன்மையும், உணர்ச்சி நிறைவும், தெறிப்பும் எல்லாம் இல்லாவிட்டால் சிறுகதையின் பிரசித்திபெற்ற இலக்கணமான ஒருமைப்பாடு உயிரில்லாத ஜடமாகத்தான் இருக்கும். இன்று உலகப் பத்திரிகைகளில் வரும் பெரும்பாலான கதைகள் தனித்தன்மை இல்லாத, அல்லது போலி உணர்ச்சிகள் நிறைந்த ஜடங்கள்தான். ஆனால் பொதுவாகப் பத்திரிகைகள்தான் சிறுகதைக் கலையை வளர்ப்பதில் பெரும் பங்குகொண்ட கருவியாக இருந்திருக்கின்றன. செக்காவ், மாப்பஸான், ஹென்ரி ஜேம்ஸ், மாம், மெல்வில், ஸ்டீபன், க்ரேன், ப்ரெட் ஹார்ட்டி முதல் ஜெர்மனி, ஜப்பான், இந்தியா ஆகிய நாடுகளில் எழுதிய எழுதுகிற சிறுகதை எழுத்தாளர்கள் வரை முக்காலே மூனறு வீசம்பேர் பத்திரிகைகளில்தான் எழுதியிருக்கிறார்கள்எழுதுகிறார்கள். எனவே, பொறுப்புள்ள பத்திரிகைகள் நல்ல சிறுகதைகளையும், பொறுப்பில்லாதவை ஜடங்களையும் வளர்க்கின்றன என்று சொல்லிவிட்டு மேலே போவோம்,
சிறுகதையில் வரும் கதையோ நிகழ்ச்சியோ ஒரு க்ஷணத்திலோ,நிமிஷத்திலோ, ஒரு நாளிலோ, பல வருடங்களிலோ நடக்கக்கூடியதாக இருக்கலாம். காலையில் தொடங்கி இரவிலோ, மறுநாள் காலையிலோ அல்லது அந்த மாதிரி ஒரு குறுகிய காலத்திலோ முடிந்துவிட வேண்டும் என்று அவசியமில்லை. சொல்லப்படவேண்டிய பொருளின் ஒருமைதான் முக்கியமானது. எட்டு நாளில் நடந்த சங்கதியை முதல் நாளிலிருந்து வரிசையாகச் சொல்லிக்கொண்டு போகலாம். இரண்டாவது, மூன்றாவது, நாலாவது நாளிலிருந்தோ அல்லது கடைசிக் கணத்திலிருந்தோ ஆரம்பித்து, பின் பார்வையாகப் பார்த்துச் சொல்லிக் கொண்டு போகலாம். நடந்தது, நடக்கப் போவது இரண்டுக்கும் இடையே ஒரு வசதியான காலகட்டத்தில் நின்றுகொண்டு நிகழ்ச்சியைச் சித்திரித்துக்கொண்டு போகலாம். எப்படிச் சொன்னாலும் ஒரு பிரச்னை, ஒரு பொருள், ஓர் உணர்வு, ஒரு கருத்துதான் “ஓங்கியிருக்கிறது’ என்ற நிலைதான் சிறுகதைக்கு உயிர்.
சிறுகதையில் சொல்லக்கூடாத விஷயங்களே இல்லை. கடந்த 100 ஆண்டுகளில் சிறுகதை வளர்ந்துள்ள போக்கைப் பார்த்தாலே இது தெரியும். வெறும் புற நிகழ்ச்சிகளில் தொடங்கி நுட்பமான மனத்தத்துவ ஆராய்ச்சி வரையில் அதன் பொருள் இப்பொழுது விரிந்திருக்கிறது. மேலெழுந்த வாரியான கவனத்திற்குப் புலப்படாத அக உணர்வுகள், நினைவோட்டங்கள், அடிமன நிலைகள் வெறும் கண்பார்வைக்குப் பின்னால் ஒளிந்து கிடக்கும் மன உந்தல் இவை எல்லாம் இன்று சிறுகதைப் பொருளாக வந்துள்ளன. ஆனால் எதைச் சொன்னாலும் ஓங்கி நிற்கும் ஒருமை அவசியம். ஒருமையுள்ள சிறுகதை முடிய வேண்டிய இடத்தில் தானாக முடிந்துவிடும். முடிகிற எல்லையைக் கடந்தால் ஒருமைக்கோப்புக்கும் ஊறுவிளையத்தான் செய்யும். பந்து எல்லையைக் கடந்து ஓடினால் கிரிக்கெட்டில் ஒன்றுக்கு நாலாக ரன் கிடைக்கும். சிறுகதையில் கிடைப்பது பூஜ்யம்தான்.
என்னை ஒரு நண்பர் கேட்டார். சிறுகதை, நாவல் எழுதுகிறவன் பெரிய இலக்கிய கர்த்தர்களின் நூல்களைப் படிக்க வேண்டுமா என்று. அவசியமில்லை என்று நான் சொன்னேன். அது எனக்கும் என்னைப் போன்றவர்களுக்கும் சொல்லவில்லை. இயற்கையாகவே அபாரமாக எழுதும் மேதை படைத்தவர்களை, புது வழிவகுக்கும் ஆற்றல் படைத்தவர்களை மனதில் வைத்துக்கொண்டு சொன்னது. என்னைப் போன்றவர் நிறைய படித்தால்தான் நல்லது. செக்காவ், மாப்பஸான், போ, மாம், தாகூர், கு.ப.ரா. புதுமைப்பித்தன், லா.ச.ரா, ஸீன் ஓகாஸி, ஜாய்ஸ், ஸ்டீஃபன் க்ரேன், ஹென்றி ஜேம்ஸ், போவன், காவபாட்டா போன்ற வெவ்வேறு சிறுகதை ஆசிரியர்களைப் படித்தால், சிறுகதைக்கான பொருள்களை நாடுவதில் எத்தனை சாத்தியக் கூறுகள் உண்டு என்பதும், சிறுகதை உருவத்தில் எத்தனை நூறு வகைகள் சாத்தியம் என்பதும் தெரியும். உருவம் என்று சொல்லும் போது ஆரம்பம், இடை, முடிவு மூன்றும் தெள்ளத் தெளிவாகத்தான் இருக்கவேண்டிய அவசியம் இல்லை என்பதும் இந்தக் கதைகளைப் படித்தால் தெரியும். இந்த மூன்றும் தெளிவாகத்தெரிவதும், தெளிவில்லாமல் பூசினாற் போல் இருப்பதும் சொல்லுகிற விஷயத்தைப் பொறுத்தவை. ஒரு மரத்தின் நிழல் கருக்காகக் கத்தரித்தாற் போலும் விழலாம். பூசினாற் போலும் விழலாம். அது விளக்கின் தூரம், ஒளி முதலியவற்றைப் பொறுத்தது. உருவம் சரியாக அமைவது நம்முடைய உணர்வின் தீவிரத் தன்மையைப் பொறுத்தது. என்னுடைய அனுபவத்தில், உணர்ச்சியோ, சிந்தனையோ போதிய தீவிரத்தன்மை பெறும்போது, உருவமும் தானாக ஒருமைப்பாட்டுடன் அமைந்துவிடுகிறது. உணர்ச்சியின் தீராத தன்மை எப்போது, எந்தக் கால அளவில் போதிய அளவுக்குக் கைகூடும் என்று சட்டம் போடுவதில்லை. அது ஒவ்வொர் ஆசிரியரின் திறமையைப் பொறுத்தது. ஒருவருக்கு ஒரு மணியிலோ, ஒரு நிமிஷத்திலோ கைகூடுகிற தீவிரத்தன்மை, ஊறும்தன்மை, எனக்குக் கிட்ட ஒரு வாரமோ, ஒரு வருஷமோ பிடிக்கலாம். எனக்கு ஒரு கதையைப் பற்றிச் சிந்தித்துக் கொண்டிருக்கையில், திடீரென்று வேறு ஒரு கதை தோன்றிச் சில நிமிஷங்களில் அதை எழுதி முடித்ததுண்டு. யோசித்துப் பார்த்தால், அந்தக் கதைக்கான வித்து மனத்தில் விழுந்து எத்தனையோ வருஷங்கள் ஆகியிருக்கும். தோட்டத்து மண்ணில் எப்பொழுதோ உதிர்ந்த விதையொன்று, மண்ணுள் பல காலம் உறங்கி, திடீரென்று ஒரு மழை அல்லது நைப்பிற்குப் பிறகு முளைப்பது மாதிரிதான் அது. உணர்ச்சியைக் குறுகிய காலத்தில் தீவிரமாக அனுபவிக்கப் பழக்கியும் கொள்ளலாம் என்று சொல்கிறார்கள். எழுத்து தொழிலாகி, பத்திரிகைகள் பெருகிவிட்ட இந்த நாளில் இப்படிப் பழக்கிக் கொள்வது அவசியம் என்பதில் தவறில்லை.
எப்படி எழுதுவது என்பதை எனக்குச் சரியாக விவரிக்கத் தெரியவில்லை. மாபஸான் “நெக்லேஸை”யோ, “இரு நண்பர்களை”யோ, செக்காவ் “டார்லிங்”கையோ, “கோரஸ் பாடகி”யையோ, கு.ப.ரா. “நூருன்னிஸா”வையோ, பிச்சமூர்த்தி “பதினெட்டாம் பெருக்கை”யோ, டாகூர் “ஊர் திரும்புதலை”யோ எப்படி எழுதினார்கள் என்று அவர்களைக் கேட்டால்தான் தெரியும். என் சொந்த அநுபவத்தில் தெரிந்ததைத்தான் நான் சொல்லுவேன். ஒரு நாள் நான் ரயிலில் போய்க்கொண்டிருந்தபோது கச்சலும், கறுப்புமாக நாய் பிடுங்கினாற் போன்ற ஒரு பத்து வயதுப் பெண்குழந்தையுடன் யாரோ பணக்கார அம்மாள் எதிர் இருக்கையில் அமர்ந்திருந்தாள். பள்ளிக்கூட விடுமுறைக்கு மூத்த அக்காளின் ஊரில் தங்கிவிட்டு ஊர் திரும்புகிறது அந்தப் பெண். நல்ல துணை ஒன்று இந்தப் பணக்கார அம்மாளின் உருவில் கிடைக்கவே, அக்காள் அந்த அம்மாளோடு குழந்தையை அனுப்பியிருக்கிறாள். ஏதோ பேசிக் கொண்டிருக்கும்போது அந்த அம்மாள் “இது படித்து என்ன பண்ணப் போகிறது? நான் கூட, கூடமாட ஒத்தாசையாயிருக்க இதையே சாப்பாடு போட்டு வீட்டில் வைத்துக்கொண்டு விடலாம் என்று பார்க்கிறேன்” என்றாள். என்னமோ, அந்த யோசனையும் அந்த அம்மாள் அதைச்சொன்ன தோரணையும் உள் மனத்தில் பாய்ந்து குத்திக்கொண்டுவிட்டன. அந்தப் பெண்ணையே பார்த்துக் கொண்டு வந்தேன். அந்த ஆறு மணி நேரப்பயணத்தில் ஒன்றும் வேண்டும் என்றுகேட்காமல், ஆசைப்படாமல், கேட்ட கேள்விகளுக்கு மட்டும் பதில் சொல்லிக்கொண்டு வந்தது அது. எனக்கு உணர்ச்சி வசப்படுகிற இயல்பு அதிகம். அந்தப் பெண் தன் பொறுமையினாலும், பொறுப்பினாலும் எதையும் சமாளிக்கும். எதையும் ஆளும் என்று தோன்றிற்று. ஓடி ஆடி, கத்திக் கூச்சலிட்டு, விளையாடிப் பிதற்ற வேண்டிய வயதில் அது உலகத்தின் சுமைகளையும், கவலைகளையும் தாங்கிக் கொண்டிருப்பது போல் எனக்குத் தோன்றிற்று. எனக்குப் பயமாக இருந்தது. வயிற்றைக் கலக்கிற்று. அது ஒரு படம்.
இன்னொரு படம். என் மகன் ஆறு வயதில் ஒரு விடுமுறைக்கு அவன் தாத்தா வீட்டுக்குப் போயிருந்தான். நான் போய்த் திரும்பி அழைத்து வந்தேன். குணத்தில் எனக்குநேர் விரோதம் அவன். கூப்பிடாததற்கு முன் போய் யாரோடும் பேசிச் சிரித்து, நெடுநாள் சிநேகம் போல ஐக்கியமாகிவிடுகிற சுபாவம். பார்ப்பதற்கும் அப்போது கஷ்கு முஷ்கென்று உருட்டி விட்டாற்போல் இருப்பான். கூடப் பிரயாணம் செய்தவர்களோடு பேசிச் சிரித்துக் களைத்துப்போய் அவன் தூங்கத் தொடங்கினான். ஆரஞ்சுப் பழத்திற்காகக் கத்திவிட்டு, வாங்கிக் கொடுத்ததும் சாப்பிடாமல் தூங்கிவிட்டான். அது கையிலிருந்து உருண்டு ஒரு ஓரமாகக் கிடந்தது. அவ்வளவு கத்தினவன் ஏன் உடனே அதைத் தின்னவில்லை? எனக்கு அப்போது முன்பொருதடவை ரயில் பயணம் செய்தபோது பார்த்த அந்தப் பெண்ணின் ஞாபகம் வந்தது. இந்த இரண்டு படங்களும் எனக்கு அடிக்கடி ஞாபகம் வருவதுண்டு. ஆனால் எழுத வேண்டும் என்று தோன்றவில்லை. சுமார் ஒரு வருடம் கழித்து கலைமகள் தீபாவளி மலருக்காக அழைப்பு வந்தபோது,இந்த இரண்டு படங்களும் இணைந்து கலந்து “சிலிர்ப்பு” என்ற கதையாக உருவாயின. அதை வேகமாக எழுதின ஞாபகம் எனக்கு. கம்ப்யூட்டரில் கொடுத்தது போல இந்த இரு நிகழ்ச்சிகளும் அந்த ஒரு வருஷ காலத்திற்குள் ஒரு கதையை உருவாக்கிவிட்டனவோ என்னவோ! உட்கார்ந்து கதையை எழுதி முடிக்கிற வரையில் என்னால் துயரம் தாங்கமுடியவில்லை. ஒரு அபூர்வமான உணர்ச்சிலயம் அது. உடல், உள்ளமெல்லாம் நிரம்பி அன்று நான் கரைந்து கொண்டிருந்த ஞாபகம். 13 வருஷம் கழிந்தும் இன்னும் தெளிவாக நினைவிருக்கிறது. கடைசி வரிகளை எழுதும்போது ஒரு குழந்தையின் நிர்மலமான அன்பில் திளைக்கும் சிலிர்ப்பும் கசிவும் என்னைக் கரைத்துக் கொண்டிருந்தன. எழுதி முடித்ததும் ஒரு அதிசயமான சுமையிறக்கமும் விடுதலையும் நெஞ்சு கொள்ளாத நிறைவும் என்னை வந்து அணைத்துக்கொண்ட நினைவு இன்னும் எனக்கு இருக்கிறது. “சிலிர்ப்பு’ என்றே பெயர்வைத்துக் கதையை அனுப்பினேன். (எழுதி முடித்த பிறகுதான் தலைப்புக் கொடுக்கிற பழக்கம் எனக்கு.)
நான் ஒரு சின்ன ஹோட்டலில் சாப்பிடப் போனபோது ஒரு புதுக் கண்டாமணி கல்லாவிற்கருகில் வைத்திருந்தது. ஹோட்டல் முதலாளி அதைக் கோவிலுக்கு விடப்போவதாகச் சொன்னார். ஏதோ செல்லக் குழந்தையைப் பார்ப்பது போல அதை அவர் பார்த்துக் கொண்டு நின்றார். எதற்காக மணி வாங்கிவிடுகிறார் என்று எனக்குள் கேட்டுக் கொள்ளத் தொடங்கினேன். இன்னொரு நாள் லஸ் மூலை ஹோட்டல் ஒன்றில் சாப்பிடுகையில் ரவாதோசையின் மடிப்பைத் திறந்தபோது பாதி குடித்த பீடி ஒன்று கிடந்தது. ஹோட்டல் முதலாளியிடம் காண்பித்தேன். அவருக்கு வருத்தம், பத்துப் பேருக்கு நடுவில் சொன்னார். அதே லஸ் மூலையில் இன்னொரு ஹோட்டலில் சாம்பாரில் ஒரு சின்ன கருவண்டு கிடைத்தது. நல்ல வேளையாகச் சுண்டை வற்றல் குழம்பு இல்லை. வண்டு அடையாளம் தெரிந்தது. (ஒரு தடவை ரசத்தில் பல்லிகூடக் கிடைத்திருக்கிறது. சாப்பாடு விஷயத்தில் எனக்குத் தனி அதிர்ஷ்டம் உண்டு.) சர்வரிடம் சொன்னதும், பீடி தோசை முதலாளி போலல்லாமல், அவர் பயந்து பரபரவென்று காதோடு காதாக மன்னிப்புக் கேட்டுக்கொண்டு ராஜோபசாரம் செய்து என்னை வழியனுப்பி வைத்தார். பல ஆண்டுகள் கழித்து இவையெல்லாம் சேர்ந்து “கண்டாமணி’ என்ற கதையாக உருவாயின. இந்தக் கதைக்கு மையக்கரு, சந்தேகம் அல்லது பயம். ஒரு உணவு விடுதிக்காரர் சாதம் குழம்புகள் பரிமாறிவிட்டு உள்ளே வந்தபோது, குழம்பிற்குள் கரண்டியை விட்டுக் கிளறித் தூக்கிய போது நீளமாகப் பாம்பு குட்டி போன்ற ஒரு ஜந்து கிடப்பதைப் பார்த்தார். கணவனும் மனைவியும் பதறிப்போய் தெய்வத்திடன் அபவாதம் ஆபத்து ஏதும் வராமல் காப்பாற்றும்படி வேண்டிக்கொள்கிறார்கள். செய்தி பரவாமலிருக்க வேண்டும் என்று அவர்களுக்குக்கவலை. கண்டாமணி வார்த்துக் கட்டுவதாக நேர்ந்து கொள்கிறார்கள். மறுநாள் காலை அநத் ஆள் செத்துப் போய்விட்டதாகத் தெரிகிறது. அது இங்கே சாப்பிட்டதனால்தானா என்று நிச்சயமாகச் சொல்வதற்கில்லை. ஆனால் விடுதிக்காரருக்குத்தன் குழம்புதான் யமன் என்று பயம். சந்தேகமும் பயமும் அவரை ஆட்டுகின்றன. சொன்னபடி கண்டாமணி வார்த்துக் கோயிலில் கட்டிவிடுகிறார். ஆனால் அந்த மணியோசையைக் கேட்கும்போதெல்லாம், தான் செய்து விட்டதாக நினைத்த குற்றம் அவரை அலைக்கழிக்கிறது. கடைசியில் தாங்க முடியாமல் கோயில் நிர்வாகியிடம் சென்று வேறு என்னவோ சாக்குகள் சொல்லி மணியைத் திருப்பிப் பெறப்பார்க்கிறார். சின்னச் சின்னதாக வெள்ளிமணிகள் செய்து வைக்கிறேன் என்று வேண்டுகிறார். கண்டாமணியோ நன்றாக அமைந்துவிட்டது. அதிகாரி அதை எண்ணி, “போய்யா பைத்தியம்” என்கிற மாதிரி சிரித்துவிட்டு மறுத்துவிடுகிறார். விடுதிக்காரருக்கு அழுத்தி வற்புறத்தவும் பயம். பேசாமல் திரும்பிவிடுகிறார். இந்தக் கதையைச் “சிலிர்ப்பு” மாதிரி பரபரவென்று நான் எழுதவில்லை. அந்தச் சந்தேகமும் பயமும் கதாநாயகர்களாக இருப்பதாலோ என்னவோ மெள்ள மெள்ளத்தான் எழுத முடிந்தது. வேறு தொல்லைகள் குறுக்கிட்டதனாலும் மூன்று நான்கு தடவை உட்கார்ந்து எழுதி முடித்ததாக ஞாபகம்.
இந்த மாதிரி பல கதைகளுக்குச் சொல்லிக்கொண்டு போகலாம். அதனால் உங்களுக்கு எந்தப் பிரயோசனமும் இராது. அவரவர்கள் அனுபவிப்பதும் எழுத்தாக வடிப்பதும் அவரவர் முறை.
என் அனுபவத்தை மீண்டும் ஒருமுறை சொல்ல ஆசைப்படுகிறேன். எந்த அனுபவத்தையும் மனசில் நன்றாக ஊறப்போடுவதுதான் நல்லது. பார்த்த அல்லது கேட்ட ஓர் அனுபவம் அல்லது நிகழ்ச்சியைப் பற்றி உணர்ந்து சிந்தித்துச் சிந்தித்து ஆறப்போடத்தான் வேண்டும். இந்த மன நிலையை ஜே. கிருஷ்ணமூர்த்தி அடிக்கடி சொல்லும் “ Choice-less Awareness” என்ற நிலைக்கு ஒப்பிடத் தோன்றுகிறது. ஒரு நிகழ்ச்சியைச் சுற்றி சித்தம் வட்டமிட, வட்டமிட, அதன் உண்மை நம் அகத்தின் முன்னே மலரும். கதை உருவு முழுமையுடன் வடிவதற்கு என் அனுபவத்தில் இதுதான் வழி. அனுபவம் நம்முள்ளில் தோய்ந்து ஒன்றி பக்குவநிலைக்கு வருமுன் அவசரப்பட்டு எழுதினால் உருவம் மூளிப்பட்டு விடுகிறது. பழக்கத்தில் இது தெரியும்.
நான் சிறுகதை ஆசிரியனும் இல்லை. சிறுகதை வாத்தியாரும் இல்லை. (சிறுகதை எழுது என்று யாராவது என்னைக் கேட்டால் எனக்கு வயிற்றில் புளியைக் கரைக்கத் தொடங்கிவிடும்.!) நான் எழுதிய நூற்றுக்கு மேற்பட்ட கதைகளில் ஒன்றோ இரண்டோதான் சிறுகதை என்ற சொல்லுக்குச் சற்று அருகில் நிற்கின்றன. மற்றவைகளைச் சிறுகதை என்றால் சிறுகதை என்ற சொல்லுக்கே இழிவு செய்கிற மாதிரி. இப்படியானல் ஏன் இத்தனை நாழி கதைத்தாய் என்று கேட்காதீர்கள். தோல்வி பெற்றவர்கள்தான் உங்களுக்கு வழி சொல்லமுடியும்.
******
தொகுத்தவர் - மகரம். (1969)
நன்றி: சொல்வனம்