Search This Blog

Friday, April 6, 2012

IceHotel - the largest ice hotel in the World


Winter season 2011/2012 was the twenty-second in the history of IceHotel - unique hotel made ​​of ice in the small village of Jukkasjärvi in Sweden. From a small house in an area of ​​60 sq.m. the hotel has come a long way of development. Last season was a record, the total area of ice creations was 5.500 sq.m.
Visit Us @ www.MumbaiHangOut.Org
Visit Us @ www.MumbaiHangOut.Org
Visit Us @ www.MumbaiHangOut.Org
Visit Us @ www.MumbaiHangOut.Org
Visit Us @ www.MumbaiHangOut.Org
Visit Us @ www.MumbaiHangOut.Org
Visit Us @ www.MumbaiHangOut.Org
Visit Us @ www.MumbaiHangOut.Org
Visit Us @ www.MumbaiHangOut.Org
Visit Us @ www.MumbaiHangOut.Org
Visit Us @ www.MumbaiHangOut.Org
Visit Us @ www.MumbaiHangOut.Org
Visit Us @ www.MumbaiHangOut.Org
Visit Us @ www.MumbaiHangOut.Org
Visit Us @ www.MumbaiHangOut.Org
Visit Us @ www.MumbaiHangOut.Org
Visit Us @ www.MumbaiHangOut.Org
Visit Us @ www.MumbaiHangOut.Org
Visit Us @ www.MumbaiHangOut.Org
Visit Us @ www.MumbaiHangOut.Org
Visit Us @ www.MumbaiHangOut.Org
Visit Us @ www.MumbaiHangOut.Org
Visit Us @ www.MumbaiHangOut.Org
Visit Us @ www.MumbaiHangOut.Org
Visit Us @ www.MumbaiHangOut.Org
Visit Us @ www.MumbaiHangOut.Org

What is ‘Solah Shringar ?



A traditional Indian bride has to dress up using sixteen vital components of her beauty known as ‘Solah Shringar’.These objects of beauty are believed to be associated with the well being of her to-be husband. Having knowledge about accessories that comprises ‘Solah Shringar’ helps you understand their worth. 
These are the following components:
  1. Bindi: It is considered to be a mark of identity for a married woman. Traditionally, it used to be round in shape and red in color. But nowadays, a large variety of Bindis in various shapes, sizes and shades are available in the market. Generally, a girl chooses her bindi that is matching to her wedding dress.
  2. Sindoor: Sindoor (vermillion) is a red colored powder that is applied on the centre parting of a bride. It has various religious and mythological connotations.
  3. Mangteeka: It is a hair accessory that is generally worn in the centre parting of the hair and it comes till fore head. It is generally made of gold/silver.
  4. Anjan: Anjan (kajal) is used to highlight the eyes of a bride. It is black in color and is applied on the edges of the upper and lower eyelids. It makes a bride’s face look beautiful and attractive.
  5. Nath: Nath (Nose Ring) is another important symbol of holiness associated with marriage. It is a big, round ring that can be worn in a pierced nose. It is also generally made up of gold/silver.
  6. Karn Phool: Karn phool (ear rings) is worn by a bride in both the ears. They are generally heavy and it further beautifies the bride’s face.                                                     Hand Accessories include the following components:
  7. Mehandi: Mehandi (henna) is prepared from the dried leaves of a tree. It is applied in the hands and foot of a bride. It stands as a symbol for the love between a wife and her husband. Mehandi applying ceremony forms an important part of an Indian wedding.
  8. Choodiyan: Choodiyan (bangles) are worn in both the hands of the bride in large number. They are made up of glass or metal. They are believed to fill colors in the life of the bride.
  9. Baajuband: Baajuband (armlet) is worn in the upper arms of a bride.
  10. Aarsi: Aarsi (finger rings) is worn in the fingers of a bride.
    Other Accessories include the following components:
         11. Haar: Haar (necklace) is worn around the neck of a bride.
        12. Keshapasharachana: Keshapasharachana (hairstyle) is also as important as the face.   
              Different types of flowers and other ornaments are used to adorn the hair of a bride.
       13.Kamarband: Kamarband (waist band) is worn around the waist of a bride.
         14. Payal: Payal (anklet) is worn around the ankle of a bride. It produces sound when the   
               bride moves.

         15. Itar: Itar (fragrance) is applied to a bride to create a soothing aroma around her.

         16. Wedding Dress: Normally a ‘Saree’ or ‘Lehenga’ is worn as a wedding dress. They are  
             usually of bright colors like red, maroon etc.
        These are the sixteen signs of beauty to hold their importance.

        It happens only in India!















        Active older adults less likely to experience psychological distress




        In a study examining the relationship between physical activity and physical function, researchers from Australia discovered that older adults who experienced any level of psychological distress were more than four times more likely to experience functional limitation than those who did not. This study is published in the Journal of the American Geriatrics Society.
        Led by Gregory Kolt, PhD, of the University of Western Sydney, School of Science and Health, researchers analyzed data from nearly 100,000 Australian men and women, aged 65 and older, who participated in the 45 and Up Study. Information was sought on self-reported physical activity engagement, physical function, psychological distress, age, smoking history, education, height, and weight.
        Psychological distress scores determined by researchers indicated that 8.4% of all older adult participants were experiencing some level of psychological distress, and older adults who experienced a moderate level of psychological distress were the most likely group to experience a functional limitation—almost seven times more likely than those who did not report psychological distress.
        Psychological distress has previously been linked to reduced physical activity and increased functional limitation across a range of age groups. A separate study also indicated that approximately 30% of reductions in physical activity, and increases in psychological distress over time, are due to functional limitations and chronic health problems.
        "Our findings can influence the emphasis that we place on older adults to remain active," Kolt notes. "With greater levels of physical activity, more positive health gains can be achieved, and with greater physical function (through physical activity), greater independence can be achieved."
        Results also revealed that older adults who were more physically active were less likely to experience functional limitations.
        Provided by Wiley
        "Active older adults less likely to experience psychological distress." April 5th, 2012. http://medicalxpress.com/news/2012-04-older-adults-psychological-distress.html
        Posted by
        Robert Karl Stonjek

        Copper Chains: Earth's Deep-Seated Hold On Copper Revealed


        This garnet pyroxenite xenolith from Sierra Nevada, Calif., is an example of the deepest products of crystallization within the magmatic belts of subduction zones. Rice University’s Cin-Ty Lee and colleagues showed that most of the copper in arc magmas eventually end up in these deep-seated rocks. (Credit: Image courtesy of Rice University)                              Science Daily — Earth is clingy when it comes to copper. A new Rice University study recently published in the journal Science finds that nature conspires at scales both large and small -- from the realms of tectonic plates down to molecular bonds -- to keep most of Earth's copper buried dozens of miles below ground.
        "Everything throughout history shows us that Earth does not want to give up its copper to the continental crust," said Rice geochemist Cin-Ty Lee, the lead author of the study. "Both the building blocks for continents and the continental crust itself, dating back as much as 3 billion years, are highly depleted in copper."
        Finding copper is more than an academic exercise. With global demand for electronics growing rapidly, some studies have estimated the world's demand for copper could exceed supply in as little as six years. The new study could help, because it suggests where undiscovered caches of copper might lie.
        But the copper clues were just a happy accident.
        "We didn't go into this looking for copper," Lee said. "We were originally interested in how continents form and more specifically in the oxidation state of volcanoes."
        Earth scientists have long debated whether an oxygen-rich atmosphere might be required for continent formation. The idea stems from the fact that Earth may not have had many continents for at least the first billion years of its existence and that Earth's continents may have begun forming around the time that oxygen became a significant component of the atmosphere.
        In their search for answers, Lee and colleagues set out to examine Earth's arc magmas -- the molten building blocks for continents. Arc magmas get their start deep in the planet in areas called subduction zones, where one of Earth's tectonic plates slides beneath another. When plates subduct, two things happen. First, they bring oxidized crust and sediments from Earth's surface into the mantle. Second, the subducting plate drives a return flow of hot mantle upwards from Earth's deep interior. During this return flow, the hot mantle not only melts itself but may also cause melting of the recycled sediments. Arc magmas are thought to form under these conditions, so if oxygen were required for continental crust formation, it would mostly likely come from these recycled segments.
        "If oxidized materials are necessary for generating such melts, we should see evidence of it all the way from where the arc magmas form to the point where the new continent-building material is released from arc volcanoes," Lee said.
        Lee and colleagues examined xenoliths, rocks that formed deep inside Earth and were carried up to the surface in volcanic eruptions. Specifically, they studied garnet pyroxenite xenoliths thought to represent the first crystallized products of arc magmas from the deep roots of an arc some 50 kilometers below Earth's surface. Rather than finding evidence of oxidation, they found sulfides -- minerals that contain reduced forms of sulfur bonded to metals like copper, nickel and iron. If conditions were highly oxidizing, Lee said, these sulfide minerals would be destabilized and allow these elements, particularly copper, to bond with oxygen.
        Because sulfides are also heavy and dense, they tend to sink and get left behind in the deep parts of arc systems, like a blob of dense material that stays at the bottom of a lava lamp while less dense material rises to the top.
        "This explains why copper deposits, in general, are so rare," Lee said. "The Earth wants to hold it deep and not give it up."
        Lee said deciding where to look for undiscovered copper deposits requires an understanding of the conditions needed to overcome the forces that conspire to keep it deep inside the planet.
        "As a continental arc matures, the copper-rich sulfides are trapped deep and accumulate," he said. "But if the continental arc grows thicker over time, the accumulated copper-bearing sulfides are driven to deeper depths where the higher temperatures can re-melt these copper-rich dregs, releasing them to rejoin arc magmas."
        These conditions were met in the Andes Mountains and in western North America. He said other potential sources of undiscovered copper include Siberia, northern China, Mongolia and parts of Australia.
        Lee noted that a high school intern played a role in the research paper. Daphne Jin, now a freshman at the University of Chicago, made her contribution to the research as a high school intern from Clements High School in the Houston suburb of Sugarland.
        "The paper really wouldn't have been as broad without Daphne's contribution," Lee said. "I originally struggled with an assignment for her because I didn't and still don't have large projects where a student can just fit in. I try to make sure every student has a chance to do something new, but often I just run out of ideas."
        Lee eventually asked Jin to compile information from published studies about the average concentration of all the first-row of transition elements in the periodic table in various samples of continental crust and mantle collected the world over.
        "She came back and showed me the results, and we could see that the average continental crust itself, which has been built over 3 billion years of Earth's history in Africa, Siberia, North America, South America, etc., was all depleted in copper," Lee said. "Up to that point we'd been looking at the building blocks of continents, but this showed us that the continents themselves followed the same pattern. It was all internally consistent."
        In addition to Jin, Lee's co-authors on the report include Rajdeep Dasgupta, assistant professor of Earth science at Rice; Rice postdoctoral researchers Peter Luffi and Veronique Roux; Rice graduate student Emily Chin; visiting graduate student Romain Bouchet of the École Normale Supérieure in Lyon, France; Douglas Morton, professor of geology at the University of California, Riverside; and Qing-zhu Yin, professor of geology at the University of California, Davis.
        The research was funded by the National Science Foundation.

        நட்சத்திரங்கள்



        கணேஷ் அரவிந்த்


        இரவில் மின்னும் நட்சத்திரங்களைப் பார்க்கிறோம். அவைகளுக்கும் மனிதர்களைப் போல் பிறப்பு, முதுமை, இறப்பு உண்டு. நட்சத்திரங்களின் ஆயுட்காலத்தில் அவற்றின் நிறம் மாறுகிறது. பிரகாசம் மாறுகிறது. பரிமாணமும் மாறுகிறது. நட்சத்திரம் ஒன்றின் ஆயுட்காலம் பல நூறு கோடி ஆண்டு அளவிலுள்ளது.

        நட்சத்திரங்கள் எப்படி பிறக்கின்றன? அதாவது அவை எப்படி உருவாகின்றன?

        அண்டைவெளியில் நட்சத்திரங்களுக்கு இடையேயுள்ள இடத்தில் ஒன்றுமில்லை என்று தோன்றலாம். உண்மையில் அப்படியில்லை. நட்சத்திரக் கூட்டங்களுக்கிடையிலுள்ள காலியிடங்களில் வாயு, தூசு போன்ற பொருட்களும் மண்டிக் கிடக்கின்றன. இதனைத் தூசு முகில் என்று குறிப்பிடலாம்.

        இவ்விதத் தூசு முகிலிலிருந்துதான் நட்சத்திரம் பிறக்கிறது. குறிப்பிட்ட சூழ்நிலைகளில் இத்தூசு முகில் இப்பொருட்களின் இடையிலான ஈர்ப்புச் சக்தி காரணமாகச் சுருங்க ஆரம்பிக்கிறது. தூசு முகிலில் அடங்கிய பொருட்கள் மையத்தை நோக்கித் திரள ஆரம்பிக்கின்றன. அப்படி ஏற்படும் போது அத்திரளில் வெப்பம் அதிகரிக்கிறது. அக்குறிப்பிட்ட கட்டத்தில் வெப்பம் சுமார் 10 மில்லியன் டிகிரி செண்டிகிரேட்டை எட்டுகிறது.

        ஆரம்பத் தூசு முகிலில் அடங்கிய வாயுவில் பெரும் பகுதி ஹைட்ரஜனே. எனவே, இம்மிகுந்த வெப்பத்தில் ஹைட்ரஜன் அணுக்கள் அணுச்சேர்க்கை (Nuculear Fusion) மூலம் ஹீலியமாக மாறுகின்றன. அப்போது பிரம்மாண்டமான சக்தியும் ஒளியும் வெளிப்பட ஆரம்பிக்கின்றன. இவ்விதமாக நட்சத்திரம் தோன்றுகிறது.

        சூரியனில் அணுச்சேர்க்கை மூலம் ஹைட்ரஜன் ஹீலியமாக மாறுவதன் விளைவாகத்தான் சூரியனிடமிருந்து நாம் வெப்பத்தயும் ஒளியையும் பெறுகிறோம்.



        ஒரு நட்சத்திரத்தில் முதலில் ஹைட்ரஜன் ஹீலியமாகிறது. ஹைட்ரஜன் அனைத்தும் தீர்ந்த பிறகு அந்த நட்சத்திரம் உள் ஒடுங்கி, கொஞ்சம் கொஞ்சமாக உட்தளர்ந்து அதன் பரிமாணமும் ஒடுங்கிப் போகும். அதனால் உட்புற அழுத்தம் அதிகரிக்கும். அழுத்தம் அதிகரிப்பதால் வெப்பம் உயரும். பிரகாசம் அதிகரிக்கும். அக்கட்டத்தில் ஹீலியம் அணுக்கள் வேறு அணுக்களாக மாறும். அதன் வாயிலாக நட்சத்திரம் சக்தியையும் வெப்பத்தயும் பெறும்.

        இப்படி நடந்து வருகையில் நட்சத்திரம் தன் நடுத்தர வயதைத் தாண்டி முதுமையை நெருங்கும். பின் மடியும். இவ்வாறு மடிகின்ற நட்சத்திரங்கள் "குள்ள"(Dwarf) நட்சத்திரங்களாக அல்லது நியூட்ரான் (Neutron), பல்சார் (Pulsars), கருப்பு ஓட்டை நட்சத்திரம் (Black Holes Stars) என இவைகளில் ஒன்றாக மாறும்.

        கிட்டத்தட்ட சூரியனின் அளவுள்ள நட்சத்திரம் இறுதியில் "வெள்ளைக் குள்ளன்" (White Dwarf) நட்சத்திரமாகி விடும். சூரியனை விட பெரிதாக உள்ள, ஆனால் சூரியனை விட இரு மடங்கு பரிமாணத்திற்கு மேல் இராத நட்சத்திரங்கள் நியூட்ரான் அல்லது பல்சார் நட்சத்திரங்களாக மாறும். சூரியனை விட பல மடங்கு பெரிய நட்சத்திரங்கள் கருப்பு ஓட்டைகளாக மாறும்.

        சூரியனைப் போன்ற ஒரு நட்சத்திரத்தில் உள்ள பொருட்கள் அணுச் சேர்க்கை மூலம் மேலும் மேலும் எரிந்து பொருட்கள் குறையும் போது அது உள் ஒடுங்குகிறது. அதாவது அதன் பரிமாணம் குறைகிறாது. வெள்ளைக் குள்ளன் நட்சத்திரம் ஒன்றின் பரிமாணம் பூமியின் அளவே இருக்கலாம். ஆனால் அந்நட்சத்திரம் அடர்த்தி அதிகமுடையதாயிருக்கும். ஒரு ஸ்பூன் பொருளின் எடை ஒரு டன் அளவில் இருக்கும்.

        வெள்ளைக் குள்ளன் நட்சத்திரம் பொதுவில் அதிகப் பிரகாசம் கொண்டது. அதன் மேற்புற வெப்பம் மிக அதிகமாயிருக்கும் வெள்ளைக்குள்ளன் அதே வடிவில் பல லட்சம் ஆண்டுகள் நீடிக்கும். இறுதியில் அது வெப்பத்தை இழந்து அவிந்து போய் விடும். அதன் பின் அதில் சாம்பல்தான் மிஞ்சி நிற்கும். ஒளியற்ற அது கருப்புக் குள்ளனாக (Black Dwarf) தனது வாழ்க்கையை முடித்துக் கொள்ளும்.

        நியூட்ரான் நட்சத்திரங்கள் அனேகமாக முற்றிலும் நியூட்ரான்களைக் கொண்டதாகும். இந் நட்சத்திரத்தின் ஒரு ஸ்பூன் பொருள் பல கோடி டன் எடையுள்ளதாயிருக்கும். இதன் ஈர்ப்புச் சக்தி பூமிக்குள்ள ஈர்ப்புச்சக்தியை விடப் பல நூறு கோடி மடங்கிற்கு இருக்கும். நமது அண்டத்திலிலுள்ள கோடான கோடி நட்சத்திரங்களில் நியூட்ரான் நட்சத்திரங்கள் சுமார் 10 லட்சம் உள்ளதாய் மதிப்பிடப்பட்டுள்ளது.

        இறுதியில் கறுப்பு ஓட்டைகளாக மடியும் நட்சத்திரங்கள் உண்மையில் ஓட்டைகளல்ல. அவை மிக மிக அடர்த்தி கொண்டவை. மிகவும் ஒடுங்கியவை. சூரியனை விட மிகப் பெரிய நட்சத்திரங்கள் கறுப்பு ஓட்டைகளாக முடிகின்றன. இவற்றின் ஈர்ப்புச் சக்தியும் மிக அதிகம். இந் நட்சத்திரத்திலிருந்து ஒளி கூட வெளியே போக முடியாத அளவுக்கு இவ்வித நட்சத்திரம் ஈர்ப்புச் சக்தி கொண்டது.




        நட்சத்திரங்களிலேயே இவைதான் மிகச் சிறியவை. மிக அடர்த்தி கொண்டவை. இந் நட்சத்திரம் தனது பயங்கர ஈர்ப்புச் சக்தியால் அருகிலிருக்கக் கூடிய நட்சத்திரத்தையும் தன் பக்கம் ஈர்த்துக் கொண்டு அதனை விழுங்க ஆரம்பித்து விடும். சுற்றிலும் உள்ள பொருட்கள் ஓட்டையில் விழுவது போல அதில் விழுவதால் "ஓட்டை" எனப் பெயர் ஏற்பட்டது.

        சூரியன் ஒரு கறுப்பு ஓட்டையாக இருந்தால் அதன் குறுக்களவு இரண்டு மைல்கள்தானிருக்கும்.

        சூரியன் ஒரு ஒற்றை நட்சத்திரம் ஆகும். மொத்தமுள்ள நட்சத்திரங்களில் 25 சதவிகிதம் ஒற்றை நட்சத்திரங்கள், 33 சதவிகிதம் இரட்டை நட்சத்திரங்கள் ஆகும். மீதி நட்சத்திரங்கள் இரண்டுக்கும் மேற்பட்ட குழுவைக் கொண்டிருக்கும்.

        நட்சத்திரங்களின் நிறங்களை வைத்துத்தான் அவற்றை ஓ, ஏ, பி, எப், ஜி, கே, எம் என வகை பிரித்துள்ளனர். ஒரு நட்சத்திரத்தின் நிறத்துக்கும் அதன் மேற்புறமுள்ள வெப்பத்துக்கும் இடையேயுள்ள தொடர்பை வைத்து இவ்வகைகள் பிரிக்கப்படுகிறது. நட்சத்திரத்தின் அதாவது ஓ ரக நட்சத்திரத்தின் மேற்புற வெப்பம் மிக அதிகம். அதாவது 63 ஆயிரம் டிகிரி பாரன்ஹீட். பி ரகத்தின் வெப்பம் அதை விடச் சற்றுக் குறைவு. இப்படிப் படிப்படியாகக் குறைகிறது. மேலே கூறிய வரிசையில் எம் ரக நட்சத்திரத்தின் மேற்புற வெப்பம் சுமார் 6 ஆயிரம் டிகிரி பாரன்ஹீட்.

        ஓ முதல் எம் வரையிலுள்ள நட்சத்திரங்கள் பிரதான வரிசையை (Main Sequence) சேர்ந்த வகையாகக் குறிப்பிடப்படுகிறது.




        சூரியன் ஜி வகையைச் சேர்ந்த நட்சத்திரமாகும். சூரியன் மஞ்சள் நிறமுடையது. மேற்படி பட்டியலில் அடங்காமல் விதிவிலக்காக இருக்கிற நட்சத்திர வகைகலும் உள்ளன.

        "செம்பூத நட்சத்திரங்கள்" (Red Giants) இவ்வகையைச் சேர்ந்தவை. செம்பூத நட்சத்திரங்கள் அவற்றின் பெய்ருக்கேற்றாற் போல் சிகப்பு நிறம் கொண்டவை. வடிவத்திலும் மிகப் பிரம்மாணடமானவை. "பிடால்ஜீஸ்" (Betalgeuse) என்னும் நட்சத்திரம் ஒரு செம்பூத நட்சத்திரமாகும்.

        "வெள்ளைக் குள்ளன்" (White Dwarf) நட்சத்திரங்களும் பிரதான வரிசையில் அடங்காதவை. பரிமாணத்தில் சுருங்கிப் போன இவை வெண்மை ஒளியை விடுகிறது.

        "மங்கிப் பொங்கும் நட்சத்திரம்" என ஒரு வகை நட்சத்திரம் (Variable Stars) உள்ளது. இவைகளில் குறிப்பிடத்தக்கது இவ்வகையினைச் சேர்ந்த டெல்டா செஃபை (Delta Cephei) எனும் நட்சத்திரம். இவ்வகை நட்சத்திரம் செஃபைடஸ் என்றும் கூறப்படுகின்றன.

        நோவா(Novae) வகை நட்சத்திரங்களின் ஒளி சில நாள் இடைவெளியில் மிகவும் அதிகரித்துப் பிறகு மங்குகிறது. இவைகளில் சூப்பர் நோவா நட்சத்திரங்களின் ஒளி பல மடங்கு அதிகமாய் மங்குகிறது. ஒரு நட்சத்திரம் வெடிக்கும் போது சூப்பர் நோவா காணப்படுகிறது. கி.பி.1054, 1572, 1604 ஆண்டுகளில் இந்த சூப்பர் நோவா நட்சத்திரங்கள் தெரிந்தன.

        பல்சார் வகை நட்சத்திரங்கள் சக்தி மிக்க ரேடியோ அலைகளை வெளியிடுகின்றன. மிகப் பெரிய பல்சாரின் அளவு (குறுக்காக) 12 ஆயிரம் கிலோ மீட்டருக்கு அதிகமில்லை. மிகச் சிறிய பல்சாரின் குறுக்களவு 1200 கிலோ மீட்டர்.



        குவாசார்கள் (Quasars) எனும் நட்சத்திரம் அல்ட்ரா வயலட் வரிசையிலும், ரேடியோ அலை வரிசையிலும் சக்தியை வெளிப்படுத்துகிறது. Quassi-Stellar Radio Sources எனும் நீண்ட ஆங்கிலச் சொற்றொடரின் சுருக்கமே குவாசர். இதுவரை 350 குவாசர்களிருப்பதாகத்தான் தெரிகிறது. குவாசரிலிருந்து கிளம்பும் ஒளி பூமியை வந்தடைய சுமார் 200 கோடி ஆண்டுகளாகும்.

        வானில் வால் நட்சத்திரமும் (Comet) சில சமயங்களில் தோன்றுகிறது. இந் நட்சத்திரம் தோன்றினால் அரசனுக்கு ஆபத்து, போர் மூளும், நோய்கள் வரும் என்றெல்லாம் மூட நம்பிக்கை பழங்காலத்திலிருந்து இன்றுவரை இருந்து வருகிறது.

        வால் நட்சத்திரம் என்பது உண்மையில் நட்சத்திரமே இல்லை. வால் நட்சத்திரம் சூரியக் குடும்பத்தைச் சேர்ந்தது. வால் நட்சத்திரங்கள் சூரியக் குடும்பத்தில் அடங்காப் பிடாரிகள் என்பார்கள். சுமாராக ஆயிரம் வால் நட்சத்திரங்கள் இருப்பதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. இவைகளில் என்கே வால் நட்சத்திரம், ஹாலி வால் நட்சத்திரம், பியலா வால் நட்சத்திரம் என அந்த நட்சத்திரங்களைக் கண்டு பிடித்தவர்களின் பெயர்களே வைக்கப்பட்டு இருக்கிறது.

        என்கே வால் நட்சத்திரம் 3.3 ஆண்டுகளுக்கு ஒரு முறை நம்மை சந்தித்து விட்டுச் செல்கிறது. ஹாலி நட்சத்திரம் சுமார் 76 ஆண்டுகளுக்கு ஒரு முறை வருவதாகும். 1910 ஆம் ஆண்டில் ஹாலி வால் நட்சத்திரம் வந்த போது பூமியானது அவ்வால் நட்சத்திரத்தின் வாலுக்குள்ளாகவே நுழைந்து சென்றது. அதனால் பூமிக்கோ மக்களுக்கோ எவ்விதத் தீங்கும் ஏற்படவில்லை. 1986-ல் வந்த போதும் எந்த பாதிப்புமில்லை...

        *****

        ஓட்டப்பிடாரம்




        புலவர் சு. தி. சங்கரநாராயணன்



        இந்திய நாட்டின் சுதந்திரத்துக்காகப் போராடியதுடன் அந்நிய நாட்டில் தயாரிக்கப்பட்டு இறக்குமதியான பொருட்களைப் பயன்படுத்தாமல் சுதேசிக் கொள்கைக்காக 1906-ல் ஆங்கிலேய ஆட்சியாளர்களை எதிர்த்து, சுதேசிக் கப்பல் நிறுவனம் அமைத்து, கடல் வணிகம் செய்ததால் சிறைத் தண்டனை பெற்று, கப்பலோட்டிய தமிழன் என்ற சிறப்பு பெயர் பெற்ற வ.வ.சிதம்பரம் பிள்ளையைத் தெரியும் . அவர் பிறந்த ஊர் தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஓட்டப்பிடாரம் என்பதும் தெரியும். ஓட்டப்பிடாரத்துக்கு எப்படி அந்த பெயர் வந்தது என்பது தெரியுமா?

        ஓட்டப்பிடாரம் என்னும் ஊர் படாரர், படாரன், பிடாரி, பிடரி, பிடாகை, ஓட்டன் என்கிற மிக அருமையான தமிழ்ப் பண்பாட்டுச் சொற்களை நினைவூட்டும் வகையில் அமைந்துள்ளது. தமிழகத்துப் பழங்காலக் கோவில்களில் மிகுதியான கல்வெட்டுக்களும், செப்புப் பட்டயங்களும் உள்ளன. இவற்றை அடிப்படையாகக் கொண்டும், இலக்கியச் சான்றுகளை ஏற்றும் ஓட்டப்பிடாரம் என்ற ஊர்ப் பெயர் விளக்கத்தைக் காண்போம்.

        இயேசு கிறிஸ்து பிறப்பதற்கு முன்னுள்ள காலத்து கல்வெட்டுக்கள் சமண முனிவர்களைப் படாரர் என்று குறிப்பிடுகின்றன. முந்தைய காலங்களில் சிவபெருமானைப் பிடாரன் என்றும் குறிப்பிட்டனர். பாம்பாட்டியைப் பாம்புப் பிடாரன் என்று திருநெல்வேலி பகுதி மக்கள் இன்றும் கூறுகிறார்கள். பாம்பை மாலையாக அணிந்த கடவுளே சிவபிடாரன் ஆவார்.

        முப்பெரும் சக்தி அன்னைகளான சரஸ்வதி, இலட்சுமி, பார்வதி எனும் தெய்வங்களை திருநெல்வேலி பகுதி மக்கள், தங்களுடைய பண்பாட்டிற்கு ஏற்ப முப்பிடாரி என்று பெயரிட்டு வணங்கி வருகிறார்கள். இப்பகுதியில் முப்பிடாரி, முப்பிடாத்தி, முப்புடாதி என்கிற பெயர்கள் ஆண்-பெண் இரு பாலருக்கும் பொதுப்பெயராகி இன்றும் வழங்கி வருகிறது. அடக்கமாக வாழ வழியறியாது திரியும் பெண்களை 'அடங்காப் பிடாரி' என்று பழித்தும் உரைப்பார்கள்.



        சைவமடத்து ஆதீனத் தலைவர்களைத் தம்பிரான் என்று அழைக்கிறார்கள். திருவாரூரில் தியாகேசப் பெருமானுக்கு மிக நெருங்கிய நண்பர் என ஒட்டி உறவாடியவரும் தேவாரத் திருப்பதிகங்களை ஓதியவருமான சுந்தரமூர்த்தி நாயனாரைத் 'தம்பிரான் தோழர்' என்பார்கள். கேரளாவில் தங்களுடைய எஜமானர், எஜமானியர்களை, இக்காலத்திலும் தம்புரான், தம்புராட்டி என்றுதான் கூறுகிறார்கள்.

        தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள வல்லநாடு என்கிற ஊரிலும், திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள வன்னிக்கோனேந்தல், கரிவலம் வந்த நல்லூர் முதலிய ஊர்களிலும் தம்பிராட்டி அம்மன் கோவில்கள் மிகச் சிறப்புடன் இருந்து வருகின்றன.

        மதுரை மாநகரின் ஒரு பகுதியாக உள்ள விராட்டிபத்து என்கிற ஊர் பிராட்டியார் பத்து என்ற பெயருடன் விளங்கி அதன் பின் மருவி விராட்டி பத்து ஆகியிருக்க வேண்டும். பத்து-பத்துக்காடு என்பது நல்ல நெல்விளையும் நன்செய் நிலங்களைக் குறிப்பதாகும். இதேபோல் மதுரை மாவட்டம் அழகர் கோவில் அருகே உள்ள கிடாரிப்பட்டி என்ற ஊரும் முன்பு பிடாரிப் பத்து-வாக இருந்து பின் பிடாரிப்பட்டி ஆகி தற்போது கிடாரிப்பட்டியாக மருவியிருக்க வேண்டும்.

        சைவசமயக் கோவில்களில் தேவாரத் திருப்பதிகங்களைத் தமிழிசையோடு விண்ணப்பஞ் செய்து வரும் இசைவாணர்களைப் பிடாரர்கள் என இராசராச சோழன் கட்டிய தஞ்சைப் பெருவுடையார் கோவிலிலுள்ள கல்வெட்டுக்கள் குறிப்பிடுகின்றன. ஆகவே பிடாரர், பிடாரி, பிடாரன் என்கிற பண்டைய தமிழ் சொற்களே தற்காலத்தில் பிரான், பிராட்டி என மரூஉ மொழியாக தசை என்பது சதை என்று ஆனது போல வழங்குகின்றன.

        மனிதனுடைய தலையை உடம்போடு இணையச் செய்யும் பகுதி 'கழுத்து' ஆகும். கழுத்தின் முன் பகுதி 'தொண்டை' என்றும் பின் பகுதி 'பிடரி' என்றும் சொல்வோம். மனிதனுக்கு உயிர்ப்புத் தன்மை வழங்கும் தைராய்டு கிளாண்ட்சு தசைநார்களும், நிணநீர்ச் சுரபிகளும் அமைந்த பகுதியைப் பிடரி என்று அழைக்கிறோம். குதிரைக்குப் பிடரி மயிர் அழகு, காளை மாட்டிற்குப் பிடரி என்னும் திமில் அழகு, ஆகவே பிடரி என்னும் சொல்லும் பிடாரி என்று அழைக்கப் பெறும் ஆற்றல்-சக்தி என்ற பெண் தெய்வப் பெயரும் தமிழரிடையே இன்றும் வழங்கி வருகின்றன. பிடர், பீடு என்ற சொற்கள் உயிர்ப்பு,உயர்வு,பெருமை என்னும் பொருளைத் தரும்.



        ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் சைவ, வைணவக் கோவில்களில் திருப்பணிகள் செவ்வனே நடைபெற அக்கால மன்னர்களால் தேவதானமாக வழங்கப் பெற்ற ஊர்கள் நிறைய உண்டு. தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டம் பகுதியில் ஸ்ரீ பராங்குச நல்லூர்க் கீழ்ப்பிடாகை, ஸ்ரீ பராக்கிரம பாண்டியபுரம் கீழ்ப்பிடாகை, கீழ்ப்பிடாகை கஸ்பா வரதராஜபுரம் என்னும் ஊர்கள் இன்றும் உள்ளன. இவை போன்ற பெயருடைய பல ஊர்களைத் தமிழகம் முழுவதும் காண முடிகிறது. பிடாரன் கோவிலுக்கு உரிமையாக்கப் பெற்ற நிலங்கள் உள்ள ஊரானது பிடாகை என அழைக்கப் பெற்றது.

        இராமயணக் காவியத் தலைவன் இராமன் லிங்க வடிவமுடைய சிவபெருமானை வணங்கி வழிபட்ட தலம் இராமேசுவரம் ஆகும். இராசராச சோழன் தஞ்சையில் பெருவுடையாருக்குப் பெருங்கோவில் வழிபட்ட இடம் இராசராசேசுவரம் ஆகும். இராஜா ஆட்சி செய்யும் நிலப் பகுதி இராஜ்ஜியம். அதுபோல சிவனாகிய ஈசுவரன் குடிகொண்ட கோவில் ஈசுவரம் எனப்படும். ஈசுவரன், ஈசுவரி, ஈசுவரம் என்பவை தமிழ் வடிவம் பெற்ற வடமொழிச் சொல்லாகும். இம்மூன்று பெயர்ச் சொற்களும் பொருநை (தாமிரபரணி) ஆற்றங்கரைப் பகுதி மக்களிடையே இன்றும் வழக்கத்தில் உள்ளன. ஆகவே பிடாரன் ஆகிய சிவபெருமான் குடிகொண்ட கோவில் இடம் பிடாரம் ஆகும்.

        -இவை அனைத்தும் ஓட்டப்பிடாரம் என்னும் ஊரின் பின் பகுதிப் பெயாரான பிடாரம் என்பதற்கு விளக்கமாகும்.

        தமிழ் இலக்கிய வரலாற்றில் கம்பர் காலத்தில் வாழ்ந்த முதிர்ந்த பெரும்புலவர் ஒட்டக்கூத்தர். சோழப் பேரரசர்களான விக்கிரம சோழன் (கி.பி.1118-1133) ,இரண்டாம் குலோத்துங்கன் (கி.பி.1133-1150), இரண்டாம் இராசராசன் (கி.பி.1150-1163) ஆகிய மூன்று தலைமுறைச் சோழப் பேரரசர்களின் அவைக்களப் புலவராகச் சீரும் சிறப்பும் பெற்று விளங்கியவர். இம்மூன்று பேரரசர்களைப் பாட்டுடைத் தலைவர்களாகக் கொண்டு இவர் தனித்தனியே உலா இலக்கியங்கள் மூன்றை இயற்றியுள்ளார்.

        வான்மீகி இராமாயணத்தின் இறுதிப் பகுதியாகத் தமிழில் அமைந்த உத்திர காண்டம் என்னும் காவியமும், தக்கயாகப்பரணி என்ற நூலும் இந்த ஒட்டக்கூத்தர் இயற்றியதாக அறியப்படுகிறது. இப்புலவருக்கு ஒட்டக்கூத்தர் என்ற பெயர் ஏன் வந்தது? மூன்று தலைமுறை சோழப்பேரரசர்களிடமும் அவர்கள் குடும்பத்தினரிடமும் ஒட்டி, மிக நெருங்கிப் பழகியவர் என்பதால் 'ஒட்டர்' என்றும் முத்தமிழிலும் வல்லவராக இருந்ததால் 'கூத்தர்' என்றும் அழைக்கப் பெற்றார். ஒட்டக்கூத்தர் என்ற பட்டப் பெயருடன் புலவர் முற்றூட்டாகக் கூத்தங்குடி, கூத்தனூர் என்னும் நல்லூர்களையும் பெற்றார். தஞ்சையிலிருந்து திருவையாறு செல்லும் சாலையில் உள்ள கூத்தங்குடி என்ற சிற்றூரை இன்றும் காணலாம். தஞ்சை மாவட்டம் பூந்தோட்டம் என்னும் ரயில் நிலையம் அருகில் கூத்தனூர் உள்ளது. இரண்டாம் குலோத்துங்க சோழனால் இப்புலவருக்கு முற்றூட்டாக இவ்வூர் வழங்கப் பெற்றதாகும். இக்கூத்தனூரின் ஆற்றங்கரையிலுள்ள கலைமகள் கோவிலில் உள்ள கல்வெட்டால் இது அறியப்படுகிறது.




        உலகத்தோ ஒட்ட ஒழுகல் பலகற்றும்
        கல்லார் அறிவிலா தார் (குறள் 140 - ஒழுக்கமுடைமை.)

        சிறைநலனும் சீரும் இலரெனினும் மாந்தர்
        உறை நிலத்தொ(டு) ஒட்டல் அரிது. (குறள் 499 - இடனறிதல்)

        அற்ற குளத்தில் அறுநீர்ப் பறவை போல்
        உற்றுழித் தீர்வார் உறவல்லர். அக்குளத்தில்
        கொட்டியும் ஆம்பலும் நெய்தலும் போலவே
        ஒட்டி உறுவார் உறவு (மூதுரை – செய் 17)

        -இம் மூன்று செய்யுட்களிலும் திருவள்ளுவரும் ஒளவையும் மிக நெருங்கிய நட்பு உரிமையை ,ஒட்ட, ஒட்டி என்ற சொற்களால் குறிப்பிடுகின்றனர். இதுபோலவே

        நட்டார்க்கு நல்ல செயலின் விரைந்தே
        ஒட்டாரை ஒட்டிக் கொளல் (குறள் 679 - வினைசெயல் வகை)

        நட்டார்போல் நல்லவை சொல்லினும் ஒட்டார் சொல் ஒல்லை உணரப் படும் (குறள் 826 - கூடாநட்பு)

        - இந்த இரு குறட்பாக்களிலும் 'ஒட்டார்' என்ற சொல்லால் பகைவரைத் திருவள்ளுவர் சுட்டிக் காட்டுகிறார்.

        கம்பராமாயணம் யுத்த காண்டம்- வீடணன் அடைக்கலப் படலத்தில் சுக்கிரீவன் கூற்றாக உள்ள

        'ஒட்டிய கனகமான் உருவம் ஆகிய சிட்டனும் '

        யுத்த காண்டம்- கும்பகர்ணன் வதைப் படலத்தில் ஆசிரியர் கூற்றாக உள்ள

        'ஒட்டிய நாயகன் வென்றிநாள் குறித்தொளிர் முளைகள்'

        யுத்த காண்டம்- மீட்சிப் படலத்தில் பரதன் கூற்றாக உள்ள

        'இவ்வுலகை உலைய ஒட்டான் அத்திருக்கும் கெடும்'

        அயோத்தி நகர் நீங்கு படலத்தில் இலக்குவன் கூற்றாக உள்ள

        'பெண்நாட்டம் ஒட்டேன் இனிப்பேர் உலகத்துள் என்றான்'

        - என்கிற தொடர்களிலும் வேறுபல இடங்களிலும் ஒட்டிய, ஒட்ட, ஒட்டான், ஒட்டேன் என்னும் சொற்களைக் கம்பர் எடுத்தாளுகிறார். மேற்காணும் செய்யுட்களிலிருந்து 'ஒட்டன்' என்றால் மிக நெருங்கிய நண்பர் என்றும், 'ஒட்டார்', 'ஒட்டலன்' என்றால் பகைவர் என்றும் பொருள் கொள்ளலாம்.


        அறிஞர் அண்ணா தமிழகத்தில் தம் எதிர்க்கட்சிக்காரர்களை அடையாளம் காட்டும்போது 'நம்முடன் ஒட்டும் உறவும் இல்லாதவர்' என்று அரசியல் மேடைகளில் கூறி வந்ததை இவ்விடத்தில் நாம் நினைவு கூறலாம்.

        ஜெயங்கொண்டம் அருகில் ஒட்டக்கோவில் என்னும் பெயருடன் சிவன் கோவில் உள்ள ஒரு ஊர் உள்ளது. இதேபோல் வீரவாஞ்சி மணியாச்சிக்கு அருகில் உள்ள ஒரு ஊரின் பெயர் ஒட்டநத்தம். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒரு ஊரின் பெயர் ஒட்டன் சத்திரம். கடம்பூர் அருகேயுள்ள ஒரு ஊரின் பெயர் ஒட்டுடன்பட்டி. இந்த ஊர்ப் பெயர்களை இணைத்து நாம் சிந்திக்க வேண்டும்.

        அறுபத்து மூன்று நாயன்மார்கள் வரலாற்றைப் பெரிய புராணம் கூறுகிறது. காஞ்சிபுரத்தில் மன்னன் கழற்சிங்கன் சிவபெருமானுக்கு கற்றளி ஒன்றை அமைத்தான். அதற்கு குடமுழுக்கு விழா எடுக்க ஏற்பாடு செய்து அதற்கான நாளும் நேரமும் குறித்தான். காஞ்சிக்கு சற்று தொலைவில் உள்ள சிற்றூரில் அடியார் ஒருவர் வாழ்ந்தார். அவர் தாமும் ஓர் கற்றளியைப் பெருமானுக்கு அமைக்க வேண்டுமென்று பேரவாக் கொண்டார். கையில் பொருளில்லாதவரான அடியாரால் என்ன செய்ய முடியும்? அதனால் தன் மனத்திலேயே சிவபெருமானுக்கு கற்றளி ஒன்றை அமைத்தார். குடமுழுக்குக்கு நாளும் நேரமும் தம் மனதிலேயே குறித்துக் கொண்டார். அரசன் கழற்சிங்கன், அடியார் குறித்த குடமுழுக்கு நாளும் நேரமும் ஒன்றாகிப் போனது. இதனால் அரசன் நடத்தும் குடமுழுக்கு விழாவில் கலந்து கொள்ள முடியாது என்றும் அடியார் அமைத்த கோவில் விழாவில் கலந்து கொள்ளப் போவதாகவும் கழற்சிங்கன் கனவில் தோன்றி சிவபெருமான் கூறினார். அரசன் அடியவரைப் போற்றினான். அவர் வாழ்ந்த இடத்திற்குத் திருநின்றவூர் என்றும் பெயர் சூட்டினான். சிவனருள் பெற்ற திருத்தொண்டரை பூசலார் நாயனர் என்று அழைத்துப் போற்றினான். பூசல் என்றால் மாறுபாடு. மனத்திலே கோவில் அமைத்த அடியார் ஏனைய மக்களினும் சிந்தனைத் திறனிலும் மாறுபட்டவர். பூசலுடையவர் என்று உலகத்தாரும் அறிந்து கொண்டனர். இவ்வாறு பூசலார் நாயனார் வரலாற்றைச் சேக்கிழார் குறிப்பிடுகிறார்.
        நாம் ஒட்டக்கூத்தர் என்ற புலவரின் பெயர் விளக்கத்துடன் பூசலார் நாயனார் வரலாற்றையும் இணைத்து 'ஒட்டன்' என்கிற சொற்பொருளுக்குரிய சிறப்பையும் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

        தென்பாண்டிச் சீமையின் கரிசல்மண் பூமியில் கங்கைவார் சடையும் பாம்பணியும் கொண்ட சிவபெருமான் தன்னுடன் ஒட்டி உறவாடிய சிவத்தொண்டரான பிடாரர் ஒருவர் அமைத்துள்ள திருக்கோவிலில் குடி கொண்டார். ஆகவே இவ்வூர் 'ஒட்டன்பிடாரம்' என்றிருந்து ஒட்டப்பிடாரமாகி பின்னால் அதிலிருந்து மருவி 'ஓட்டப்பிடாரம்' என மருவி வழங்கலாயிற்று. இது ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த ஊர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


        *****

        ந.முத்துசாமி உடல் மொழியின் நாடகம் - எஸ்.ராமகிருஷ்ணன்



        கல்லூரியில் ஆங்கில இலக்கியம் படிக்கும் போது சாமுவேல் பெக்கட்டின் வெயிட்டிங் பார் கோதோ வாசித்தேன். அதுவரை நவீன நாடகம் என்பதைப் பற்றி அறிந்திருக்கவில்லை. அந்த நாடகம் வாசிப்பதற்கு மிகுந்த ஆர்வமுடையதாக இருந்தது. அதை எப்படி மேடையேற்றியிருப்பார்கள் என்பதைப் பற்றி எனது பேராசிரியர்களில் ஒரு வரிடம் பேசிக்கொண்டிருந்தபோது அவர் லண்டனில் நடந்த நாடகவிழா ஒன்றில் நிகழ்த்தப்பட்ட கோதோ நாடகத்தின் வீடியோவைக் காண்பதற்குத் தந்தார்.
        நான் வாசித்த பிரதிக்கும் நிகழ்த்தபட்ட நாடகத்திற்கும் இடையில் மிகப்பெரிய இடைவெளி 2006041100010101இருந்தது. நிகழ்த்தப்படும் வெளி மற்றும் நடிகர்களின் உடல்மொழி மற்றும் காட்சிகளின் பின்புல இசை யாவும் அந்த நாடகத்தை ஒரு கனவு நிலைப்பட்டதாக மாற்றியிருந்தது.  பிரதியை அப்படியே மேடையேற்றுவது அல்ல நாடக இயக்குனரின் வேலை. பிரதியிலிருந்து தனக்கான நாடகமொழியை உருவாக்கிக் கொள்வதுதான் நவீன நாடகத்தின் பிரதான பணி என்று பேராசிரியர் சொன்னபோது எனக்கு அது புரியவில்லை.
        அந்நாள்வரை நான் கண்டிருந்த மேடை நாடக வடிவம் முற்றிலும் கலைந்து போய் நடிகர்களின் உடல் மொழியும் நவீன நிகழ்த்து வெளியும் உரையாடும் பாங்கும் தீவிரமாகப் பற்றிக் கொண்டது. என்ன வகை நிகழ்த்துதல் இது. ஏன் தமிழில் இப்படியான நாடகங்கள் நடத்தப்படுவதில்லை. கோதோவை மொழியாக்கம் செய்து இதே போல நிகழ்த்தினால் என்னவென்று அதன் பிந்தைய நாட்களில் தோன்றிக்கொண்டிருந்தது. பத்து நாட்களுக்குள் கோதோவை மொழியாக்கம் செய்துவிட்டேன். ஆனால் அதை எப்படி நிகழ்த்தவது என்பதைப் பற்றி நான் அறிந்திருக்கவில்லை.
        நான் அறிந்த இலக்கிய நண்பர்கள் எவரும் அன்று நவீன நாடகம் பற்றி எதையும் அறிந்திருக்கவில்லை. சில மாதங்களுக்கு அதைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்துவிட்டு பெக் கெட்டை மறந்து வழக்கம் போல  நாவல், அபுனைவுக் கட்டுரைகள் என்று வாசிப்பதை நோக்கி நகர ஆரம்பித்தேன். ஆனால் மனதில் பெக்கெட்டின் வரிகள் மற்றும் நிகழ்காட்சிகள் இருந்து கொண்டேயிருந்தது.
        அதன் சில ஆண்டுகளுக்கு பின்பு மதுரையில் தற்செயலாக பேராசிரியர் மு.ராமசாமி ஏற்பாடு செய்திருந்த எட்வர்ட் ஆல்பியின் ஜர் ஸ்டோரி என்ற நாடகத்தைப் பார்க்க நேர்ந்தது. என் மனதிலிருந்த  பெக்கெட் திரும்பவும் விழித்துக் கொண்டுவிட்டார். அந்த நாட்களில்  மதுரையில் சுதேசிகள் என்ற பெயரில் தமிழ்த் துறையில் பயின்ற சுந்தர்காளி ஒரு குழுவை உருவாக்கியிருந்தார். அவர்களுடன் சேர்ந்து நவீன நாடகம் பற்றிப் பேசவும் விவாதிக்கவும் துவங்கினேன்.
        விஜய் டெண்டுல்கர், ஹெரால்ட் பைண்டர், ஐயனெஸ்கோ, டென்னஸி வில்லியம்ஸ்,  லூயி பிராண்டலோ,  ஆர்தர் மில்லர், ஒநில், பிரெக்ட், செகாவ், ஜெனே, லோர்க்கா, இப்சன் எட்வர்ட் பாண்ட், வோலே சோயிங்கா என்று நூலகத்தில் கையில் கிடைத்த நாடகப்பிரதிகளை மிகுந்த தீவிரத்தோடு வாசிக்க ஆரம்பித்தேன்.
        தமிழில் அப்படி யாருடைய நாடகமாவது இருக்கிறதா என்று தேடியலைந்த போது பழைய ஷேக்ஸ்பியர் பிரதிகள், மற்றும் சங்கரதாஸ் சுவாமிகளின் மரபு நாடகப்பிரதிகள் இருந்தனவேயன்றி நவீன நாடகப்பிரதிகள் எதுவும் காணப்படவில்லை.
        அறிந்த நண்பர்களிடம் கேட்டபோது அவர்களும் அப்படி நவீன நாடகப்பிரதி எதுவும் வெளியாகி இருப்பது போல அறியவில்லை என்றார்கள். அந்த நாட்களில்தான் ந. முத்துசாமியின் பெயரைக் கேள்விபட்டேன். நடை இதழில் முத்துசாமியின் காலம் காலமாக வெளி வந்து மிகுந்த கவனத்தைப் பெற்றது என்பதையும் அவரது நாற்காலிக்காரர், சுவரொட்டி நாடகங்களையும் பற்றி நண்பர்கள் விரிவாகச் சொல்லிக்கொண்டிருந்தார்கள்.
        நீர்மை எழுதிய முத்துசாமியா நவீன நாடங்கங்கள் போடுகின்றவர் என்று வியப்புடன் கேட்டேன். ஆமாம் அவரேதான் என்றபடியே கூத்துப்பட்டறை என்ற நவீன நாடகக் குழுவைச் சென்னையில் உருவாக்கியிருக்கிறார் என்றும் அது தீவிரமாக நவீன நாடக உருவாக்கத்தில் முனைந்திருக்கிறது என்றும் அறிந்து கொண்டேன்.
        எனக்கு முத்துசாமியின் சிறுகதைகளைப் பிடிக்கும். நவீனச் சிறுகதைகளில் அவர் தனித்துவமானவர். குறிப்பாக அவர் கதை சொல்லும் முறை வித்யாசமானது. சிறிய சம்பவங்களை நுட்பமாக விவரித்துக் கொண்டே செல்லும் கதைமுறை அவருடையது. ஊர் சார்ந்த நினைவுகள் மற்றும் நவீன வாழ்வின் அபத்தம் இரண்டும் கலந்த குரல் அவர் கதைகளுக்கு உண்டு. கதாபாத்திரங்களின் நிகழ்வுகளைவிடவும் அவர்களின் மனவோட்டத்திற்கு மிகுந்த முக்கியத்துவம் தரும் எழுத்துமுறை அவருடையது. புஞ்சை என்ற ஊரைப் பற்றிய வெவ்வேறு விதமான பதிவுகள் அவர் கதைகளில் தொடர்ந்து இடம் பெற்றிருந்தன. அத்தோடு கசடதபற இதழ்களில் முத்துசாமி எழுதியதையும் வாசித்திருக்கிறேன்.
        நீர்மையின் இன்னொரு சிறப்பு முத்துசாமியின் மகன் ஓவியர் நடேஷ் வரைந்த முகப்பு ஓவியம். மிகச் சிறப்பாக அச்சிடப்பட்டிருந்த புத்தகமது. அதில் முத்துசாமியின் சித்திரம் ஒன்றை மிக நவீனமான முறையில் நடேஷ் வரைந்திருப்பார். அதிலிருந்து ஒரு முத்துசாமியை நாம் கற்பனை செய்து கொள்வது விசித்திரமாக இருக்கும்.
        இருபதிற்கும் குறைவான சிறுகதைகளே முத்துசாமி எழுதியிருக்கக்கூடும். ஆனால் அந்தக் கதைகள் அவருக்கெனத் தனியான வாசக உலகை உருவாக்கியிருந்தன. தொடர்ந்து அவர் சிறுகதையுலகில் செயல்படாமல் போனது பெரிய இழப்பே.
        நவீன நாடங்களில் ஏற்பட்ட ஈடுபாட்டின் காரணமாக கேரளாவில் உள்ள திருச்சூரில் உள்ள நாடகப்பள்ளிக்கு ஒருமுறை சென்றிருந்தேன். அங்கே நாடகவிழா ஒருவார காலம் நடைபெற்றது. அப்போதுதான் நான் வாசித்திருந்த பல நவீன நாடகங்களை ஒரு சேரக்காணக் கிடைத்தது. நாடகப்பள்ளியின் வளாகமும் அதன் கட்டிட அமைப்பும் மிக நவீனமானவை. அதை லேரி பேக்கர் வடிவமைத்திருந்தார்.
        நாடகப்பள்ளியில் நடத்தபட்ட நாடங்களைக் காண்பதற்கு அருகாமையில் உள்ள  கிராம மக்கள் வருவதைக் கண்டது ஆச்சரியமாக இருந்தது. லோர்க்காவின் நாடகம் ஒன்றை மலையாளத்தில் நிகழ்த்தினார்கள். சமஸ்கிருத நாடகம் ஒன்று நிகழ்த்தப்பட்டது. அயென்ஸ்கோ நாடகத்தை மாணவர்கள் நிகழ்த்தினார்கள்.  இப்படி ஒரு வார காலம் நடைபெற்றது. அங்குள்ள மாணவர் விடுதியில் தங்கியபடி நாடகங்களைப் பார்த்து பிரமித்துப் போயிருந்தேன்.
        இந்த நாடகங்கள் மேடை அமைப்பை விட்டுவிலகி புதிய நாடகவெளியை உருவாக்கியிருந்ததும் சம்பிரதாயமாக வசனங்களைப் பெரிதும் சார்ந்திருந்த நடிப்பை விலக்கி நடிகனின் உடலின் வழியே நிகழும் நாடகமாக வெளிப்படுத்தும் முறையும் குரலை உபயோகிக்கும் முறைகளும் நாடக பாவனைகளும், அவர்கள் உருவாக்கும் படிமங்களும், உருவகங்களும் நவீன நாடகம் என்பதைப் பற்றிய ஆதார பிரக்ஞையை உருவாக்கியது. அந்த நாட்களில் முத்துசாமியைச் சந்திக்க வேண்டும் என்பதில் மிகுந்த ஆர்வம் கொள்ளத் துவங்கினேன்.
        ஆனால் ஏதோ தயக்கம் அதைத் தடுத்துக்கொண்டேயிருந்தது. திருச்சூரில் சந்தித்த நாடகத்துறை  நண்பர்களின் வழியே பெங்களூரில் நடைபெறும் நவீன நாடகங்கள் பற்றி அறிந்து கொள்ள ஆரம்பித்தேன். இதற்காகவே  பெங்களூர் செல்லும் போதெல்லாம் நவீன நாடகங்களைத் தேடிச்சென்று பார்க்கத் துவங்கினேன். அப்படித்தான் கிரிஷ் கர்நாட்டின் துக்ளக், ஹயவதனா, மற்றும் கம்பாரின் நாடகங்கள் காண நேர்ந்தது.
        நவீன நாடகம் என்பது தனியுலகம். அதற்கெனத் தன்னை அர்ப்பணித்துக் கொண்ட நடிகர்களும் இயக்குனர்களும் அதற்கான குறைந்தபட்ச பார்வையாளர்களைப் பற்றிய கவலையின்றித் தங்களது முழு ஈடுபாட்டையும் செலுத்தி வருவதைக் கண்ட போது அது என்னை ஈர்க்கத் துவங்கியது.
        அந்த நாட்களில் திருச்சியில் பாதல்சர்க்கார் நாடகவிழா நடை பெற்றது. அதைக் காணும் சந்தர்ப்பம் கிடைத்தது. அங்கே கூத்துப்பட்டறையின் நாடகம் ஒன்றைக் கண்டேன். முத்துசாமியைக் காண முடியவில்லை. மற்ற நாடகங்களிலிருந்து கூத்துப்பட்டறை நாடகம் மிகவும் வேறுபட்டிருந்தது.
        அந்த நாடகவிழாவின் உந்துதலில் சூரியனின் அறுபட்ட சிறகுகள் என்ற நாடகத்தை எழுதி அதை நாடகவெளி இதழுக்கு அனுப்பி வைத்தேன். ரங்கராஜன் அப்போதுதான் நாடகத்திற்கான சிற்றிதழாக வெளியை அறிமுகம் செய்திருந்தார். அதில் என்னுடைய நாடகம்    வெளியானது.  அதன் தொடர்ச்சியாக சுதேசிகள் நாடகக்குழுவிற்காக 'உருளும் பாறைகள்' என்ற நாடகத்தை எழுதித் தந்தேன். அது சங்கீத நாடக அகாதமியின் தென் மண்டல நாடகவிழாவிற்காகத் தேர்வு செய்யப்பட்டது. அந்த நாடகம் குறித்து முத்துசாமி தனக்குப் பிடித்துள்ளது என்று தெரிவித்ததாக சுந்தர்காளி சொன்னபோது மீண்டும் முத்துசாமியைப் பார்க்கும் ஆசை துளிர்விடத் துவங்கியது.
        மதுரை நண்பர்களுக்காக எட்வர்ட் பாண்டின் ஸ்டோன், பிரெக்டின் கலிலியோ, மகேஷ் எல்கஞ்வரின் பிரதிபிம்பம், என்று பரபரப்பாக நாடகங்களை மொழியாக்கம் செய்வதும் எழுதித் தருவதுமாக இருந்த நாட்களில் எனக்கிருந்த ஒரே வாசிப்புத் துணை ந. முத்துசாமியின் நாடகங்கள். அத்தோடு அவர் எழுதிய அன்று பூட்டிய வண்டி என்ற நிகழ்த்து கலைகள் பற்றிய கட்டுரைகள். மரபுக்கலைகள் குறித்த அவரது பார்வையும் விவரிப்பும் அசலானவை. அன்று பூட்டிய வண்டி முத்துசாமியின் முக்கியமான கட்டுரைத் தொகுப்பு.
        தெருக்கூத்து தென்மாவட்ட மக்களுக்குப் பரிச்சயம் இல்லாத வடிவம். அப்படி ஒரு நிகழ்த்துகலை இருப்பதையே மக்கள் அறிந்திருக்கவில்லை. தென்மாவட்டங்களுக்கு என்று சிறப்பான நிகழ்த்துகலைகள் நிறைய இருந்தன. ஆனால் தெருக்கூத்து அங்கேயில்லை.
        முத்துசாமியின் கட்டுரைகள் அளித்த உந்துதல் காரணமாக தெருக்கூத்தைத் தேடிச் சென்று பார்ப்பது என்று சுற்றியலைந்து காஞ்சிபுரம் அருகில் உள்ள ஒரு கிராமத்தில் முதன்முறையாகத் தெருக்கூத்தைப் பார்த்தேன். நடிகர்களின் ஒப்பனையும், நிகழ்த்தும் முறையும் வியப்பாக இருந்தது. அது  முத்துசாமியைச் சந்திக்கும் ஆசையை அதிகப்படுத்தியது.
        சென்னையில் வந்து சுற்றியலைந்தபோது சிறுகதைகள் மற்றும் நாடகம் இரண்டிலும் இருந்த என் அக்கறைக்கு முத்துசாமியே காரணமாக இருந்தார். அப்போது அடையாற்றில் தங்கியிருந்த போது அண்ணாமலை அறிமுகமானார். அவர் கூத்துப்பட்டறையில் பயின்ற நடிகர். அவரிடம் முத்துசாமியைச் சந்திக்க வேண்டும் என்று சொன்னதும் அதற்கென்ன பார்த்துவிடலாமே என்று சொல்லி மறுநாளே முத்து சாமியைச் சந்திக்க அழைத்துச் சென்றார். அலியான்சே பிரான்சேயின் வெளிவாசலில் முத்துசாமி நின்றுகொண்டிருந்தார்.
        முத்துசாமியின் தோற்றம் ஒரு நடிகருக்கான கம்பீரம் கொண்டது. குறிப்பாக அவரது மீசையும் முகபாவங்களும் அற்புதமானவை. அவர் பேசும் தோரணையும் கைகளை அவர் உபயோகிக்கும் லாவகமும் எவரையும் ஈர்க்கக் கூடியவை.  ஆனால் அவர் குரலில் இயல்பாகவே எதையோ மறுக்கின்றவரைப் போன்ற எதிர்ப்புணர்வு இருக்கும். உண்மையில் அவர் வேடிக்கையாகப் பேசும்போதுகூட அந்தத்தொனி  அவரிடமிருக்கிறது. அது பலநேரம் முத்துசாமி மிகவும் கோபப்படக்கூடியவர் என்ற பிம்பத்தை உருவாக்கியிருந்தது.  அது உண்மையில்லை. முத்துசாமியோடு நெருங்கிப் பேசினால் அவரிடம் சொல்லித் தீராத நினைவுகளும்  நாடகம் குறித்த புதிய தேடுதல்களும் மரபுக் கலைகள் குறித்த தனித்துவமான அவதானிப்புகளும் நிரம்பியிருக்கும்.
        என் முதல் சந்திப்பில் முத்துசாமி 'ஒங்க நாடகம் ரொம்ப நல்லாயிருந்தது. எழுதுங்க' என்று ஒரேயொரு வரிதான் பேசினார். அதன் பிறகு அலியான்சேயில் பிரான்சிலிருந்து வந்திருந்த தோல்பாவைக் கலைஞருடன் ஒரு கலந்துரையாடல் நடைபெற்றது. அதன் முன் வரிசையில் அமர்ந்தபடியே அந்த பிரெஞ்சுக் கலைஞரை உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தார் முத்துசாமி. ஏதோ ஓவியம் ஒன்றைப் பார்வையிடுவதைப் போன்றிருந்தது அவரது முகபாவம்.
        முடிவில் முத்துசாமி பத்து நிமிடங்கள் பேசினார். "தெருக்கூத்து ரொம்ப ஒசத்தியானது. அதை அப்படியே நாடகமாகப் போட்டுற முடியாது. அதை நாம முதல்ல புரிஞ்சிகிடணும். குரல்வளம் உள்ள நடிகர்கள் நம்மகிட்டே இல்லை. முதல்ல நாம  அதை உருவாக்கணும். அதே போல பார்வையாளர்களுக்கும் நடிகருக்கும் இடையில் உள்ள வெளி ரொம்ப முக்கியமானது. நடிகர்கள்  கதாபாத்திரத்தை சிருஷ்டி பண்றாங்க. அதுல மூழ்கிப் போறதில்லை.
        கதாபாத்திரமாக மாறிப்போறது என்பதெல்லாம் தெருக்கூத்துல கிடையாது. நடிகர் கதாபாத்திரம் ரெண்டுக்கும் இடையில் ஒரு பெரிய மாயம் நடக்குது. நடிகன் தன் கற்பனையால் அந்தக் கதாபாத்திரத்தை வளர்த்துகிட்டே போறான். அது ஒரு விளையாட்டு. கண்ணுக்குத் தெரியாத விளையாட்டு. நடிகன் ஒரு ஜென் துறவி மாதிரியும் இருக்கணும். அதே நேரம் சாமுராய் மாதிரியும் இருக்கணும். பழைய மேடை நாடக நடிப்பு எல்லாம் இப்போ எடுபடாது" என்று அவர் பேசிய விதமும் சொற்களை அவர் கையாளும் லாவகமும் அதை விளக்கிச் சொல்லும் போது அவரிடம் ஏற்படும் முகமாற்றங்களும் பார்வையாளர்களைக் கட்டிப் போட்டிருந்தது.
        பேச்சை அவர் திடீரென நிறுத்தி  முடித்துக்கொண்டுவிட்டார். கிட்டத்தட்ட அதுவே ஒரு நிகழ்த்து கலை போலவே இருந்தது. நிகழ்ச்சி முடிந்து முத்துசாமி வெளியே செல்லும் வரை பார்த்துக்கொண்டேயிருந்தேன். சம்பந்தம் என்ற கூத்துக் கலைஞருடன் அவர் ஒரு டிவிஎஸ் 50யின் பின்னாடி ஏறிக்கொண்டு புறப்பட்டார். அவரது உயரத்திற்கு அந்த வண்டியில் போவது சிரமம் தருவதாக இருந்திருக்கக்கூடும். ஆனால் அவரிடம் அது தென்படவில்லை.
        அலியான்சேயின் வெளியில் இருந்த படிகளில் அமர்ந்தபடியே முத்துசாமி பற்றிப் பேசிக் கொண்டிருந்தோம். நவீன இலக்கியப் பரிச்சயம் கொண்டிருந்த முத்துசாமி நவீன நடனத்திலிருந்தே தனது நாடகத்திற்கான மூலங்களைக் கொண்டிருக்கிறார். ஆகவே அவருக்கு நாடகப்பிரதி என்பது ஒரு வரைபடம் போல நாடகம் போடுவதற்காக ஆதாரம் மட்டுமே. நடிகனின் உடல் மற்றும் குரலில் அவர் செய்யும் மாற்றம் அற்புதமானவை.
        கூத்துப்பட்டறையில் நடிப்பிற்கு மட்டும் பயிற்சி அளிக்கப்படுவதில்லை. மாறாக நடனம், யோகா, மார்சல் ஆர்ட்ஸ், சிலம்பம், தேவராட்டம், களறி, தாய்சி, தியானம், எனப் பல்துறைப் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. அதன் மூலம் நடிகன் தன் உடலை எப்படிப் பயன்படுத்துவது என்பதை அறிந்து கொள்ள முடியும். அது போலவே மரபான நடிப்பு முறையிலிருந்து விலகிய பிரக்ஞை பூர்வமாக நடிப்பைக் கைக்கொள்ள முடியும் என்று கூத்துப்பட்டறையில் பயின்ற நண்பர்கள் பேசிக் கொண்டிருந்தார்கள்.
        அது உண்மை என்பதை அதிலிருந்து பயின்று வந்த பல நடிகர்கள் இன்று நிரூபணம் செய்கிறார்கள். சிறந்த இரண்டு உதாரணங்கள் பசுபதி மற்றும் கலைராணி. இவர்கள்  நடிப்பை பிரக்ஞை பூர்வமாகவும் பல்வேறு தளங்களில் விரித்தும் கற்பனை செய்தும் புரிந்து கொண்டவர்கள். இவர்கள் மட்டுமின்றி பிரசாத், அண்ணாமலை, ஜார்ஜ், பாங்ளா , குமாரவேல், சந்திரா, என்று தனித்துவமிக்க நடிகர்கள் பலரை கூத்துப்பட்டறை உருவாக்கியிருக்கிறது.
        அதன் பிறகு கூத்துப்பட்டறையின் நாடகங்களை அலியான்சே மேக்ஸ்முல்லர் பவன் மற்றும் தீவுத்திடலில் உள்ள அரங்கில் தொடர்ச்சியாகக் காண நேர்ந்தது. ஒவ்வொரு நிகழ்வின்  போதும் முத்துசாமி தொலைவில் நின்று கொண்டிருப்பார். ஒரு சிரிப்பு மற்றும் எப்படியிருக்கீங்க என்ற வினா இரண்டையும் தவிர அவர் வேறு எதையும் பகிர்ந்து கொண்டது கிடையாது.
        ஆனால் ஒரு முறை பிரிட்டீஷ் கவுன்சில் ஆங்கில நாடகம் ஒன்றினையும் அதைத் தொடர்ந்த இரவு விருந்தையும் அளித்தது. சென்னையில் தமிழ் நவீன நாடகங்கள் பார்ப்பதற்கு ஐம்பது பேர்கூட வருவதில்லை. ஆனால் ஆங்கில நாடகம் பார்ப்பதற்கு முந்நூறு பேர்களாவது வருவார்கள். இதில் ஆச்சரியம் ஐநூறு ரூபாய் டிக்கெட் போட்டு நடக்கும் நவீன நாடகங்களுக்குக் கூடப் பல நேரங்களில் டிக்கெட் விற்றுப் போய் நாடகம் பார்க்க முடியாமல் வீடு திரும்ப நேரிடும். அது ஒரு எலைட் இன்ட்ரஸ்ட் என்று முத்துசாமியே ஒரு சமயம் சொன்னார்.
        அன்று பிரிட்டீஷ் கவுன்சிலின் வெளியில் நாடகம் முடிந்து வெளியே விருந்து துவங்கியது. பகட்டான ஆங்கிலப் பேச்சுகள், நாடகம் பற்றிய மேல்உதட்டு அபிப்ராயங்கள் தாண்டி தனியே அமர்ந்திருந்தார் முத்துசாமி, அருகில் சென்று அமர்ந்தேன்.  அவராகப் பேசத்துவங்கி பேச்சு அவரது சொந்த ஊரான புஞ்சை  பற்றியும் அங்குள்ள நற்றுணையப்பன் என்ற தெய்வம் குறித்தும் நீண்டது.
        பேச்சின் நடுவில் செம்பொனார் கோவிலில் இருந்த நாதஸ்வரக் கலைஞர் ஒருவரைப் பற்றி நினைவுகூறத்துவங்கி உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தவர் அப்படியே எழுந்து நின்று அந்த நாதஸ்வரக் கலைஞர் வாசிக்கும் முறையைத் தன் கைகளால் பாவனை செய்தபடியே தனிநடிப்பு போல சொல்லத் துவங்கினார்.
        "அப்படியே ஆகாசத்துக்கும் பூமிக்கும் இடையில் அந்த நாதஸ்வரம் சுழன்று சுழன்று வருது.  அந்த மனுசன்  ஆவேசத்துடன் வாசிக்கிறார். வெளியே இருக்கிற மரங்கள் எல்லாம் ஒடுங்கிப் போய் நிக்குது. அருள் வந்த ஆள் போல அவர் வாசிச்சிகிட்டே இருக்கார். ரொம்ப  ஒசத்தியான இசை. இன்னைக்கும் மனசில அப்படியே இருக்கு. இசையைக் கேட்டு நாம கற்பனை பண்ண முடியலை. அது ஒரு உன்னதமான அனுபவம். பார்த்துகிட்டு இருக்கும்போதே எல்லாம் மறைஞ்சி போற மாதிரி இருக்கு.  பாம்பாட்டி முன்னால் நிக்குற பாம்பு மாதிரி இருக்கேன். எதையோ தொலைச்சிட்டு தேடிக்கிட்டு இருக்கிறது மாதிரி நாதஸ்வரம் மேலேயும் கீழேயும் இந்தப் பக்கமும் அந்தப் பக்கமும் போய்க்கிட்டே இருக்குது. சாட்டையைச் சுழட்டுற மாதிரி இருக்கு இசை. ஆனா.. சட்னு அப்படியே ஒரு நிமிஷம் அவர் வாசிக்கிறதை நிறுத்திடுறார். நம்மாலே நிறுத்த முடியலை."
        அவர் சொல்லச் சொல்ல, காதில் அந்த நாதஸ்வர இசை கேட்பது போலவே இருந்தது. இசையை ஒரு மனிதனால் இவ்வளவு நுட்பமாகக் காட்சிப்படுத்த முடியுமா என்ற வியப்பிலிருந்து என்னால் மீள முடியவேயில்லை. முத்துசாமி சொல்லி முடித்து சிரிப்போடு அருகில் இருந்த தண்ணீரை எடுத்துக் குடித்துவிட்டு நெருக்கத்தோடு என் தோளில் தட்டினார். முத்துசாமியிடமிருந்து இதைத்தான் தெரிந்துகொள்ள ஆசைப்பட்டிருந்தேன் என்று அந்த நிமிடத்தில் தோன்றியது.
        அதன் பிறகு அவரை ஒன்றிரண்டு முறை தேடிப்போய்ப் பேசுவதும் பார்ப்பதுமாக இருந்தேன். இணக்கமும் அன்புமான பகிர்தல் அவரிடம் எப்போதுமிருந்தது. இதன் இடையில் நடேஷ் நெருக்கமான நண்பராகியிருந்தார். நடேஷ் முத்துசாமி இருவரும் பேசிக்கொள்வதைக் காணும்போது அப்பா பையன் போலவே இருக்காது.
        முத்துசாமியின் கவனம்  தமிழ் நவீன நாடகத்திற்கான புதிய மொழியை உருவாக்குவதிலே முதன்மையாகக் குவிந்திருக்கிறது. அது மரபுக்கலைகளிலிருந்து உருவான நவீன உடல்மொழி.  தமிழ்நவீன நாடகப் பிரக்ஞையை முத்துசாமியே உருவாக்கினார்.
        பேராசிரியர் ராமானுஜம், மு.ராமசாமி, மங்கை, ஞாநி, பிரளயன், ராஜி, ஆறுமுகம், ராஜேந்திரன், சண்முகராஜா, முருகபூபதி என்று நவீன நாடகப் பரப்பில்  பல்வேறு ஆளுமைகள் தீவிரமாக நாடக உருவாக்கத்தில் செயல்பட்டு வருகின்றார்கள். இவர்கள் யாவருக்குள்ளும் முத்துசாமியின் ஏதோவொரு நுட்பமான பாதிப்பும், அரூபமான நெருக்கமும் அறிந்தும் அறியாமலும் இருக்கின்றது.
        முத்துசாமி உருவாக்கிய நாடக மொழிக்கான அடிப்படைகளை அவர் சிற்பங்கள் ஓவியங்கள், நடனம், மரபுக்கலை, கோவில்கலை, மேலை நாடக மரபுகள் என்று பல்வேறு இழைகளைக் கொண்டு உருவாக்கியிருக்கிறார்.
        முத்துசாமியின் நாடகம் தந்த உந்துதலால் சந்திரலேகாவின் நாடகங்களைக் காண நேர்ந்தது. அது முற்றிலுமான ஒரு நடனநாடகம் என்றே சொல்வேன். அதில் நடிகன்  பெரிதும் நடனக்கலைஞராகவே இருக்கிறான். அவன் உடலை யோகநிலைகள் போல வெவ்வேறு படிகளில் ஒன்று சேர்ப்பதும் அவிழ்ப்பதுமே நாடகத்தின் முக்கிய போக்காக இருந்தது. அபத்தமோ, முரண்களோ, பகடியோ அதில் இல்லை.
        முத்துசாமியின் நாடகங்களை ஒரு சேர வாசிக்கும் போதுதான் அவர் உருவாக்கியுள்ள தமிழ் நவீன நாடகப்பரப்பு எவ்வளவு பெரியது என்று உணர முடிகிறது. காலம் காலமாக எழுதிய போது முத்துசாமி நவீன நாடகம் குறித்து அதிகம் அறிந்திருக்கவில்லை. அது நடை இதழில் 1969ஆம் ஆண்டு வெளியாகிறது. எழுத்து இதழில் சி.சு. செல்லப்பா ஓரங்க நாடகங்கள் என்று சில நாடகங்களை வெளியிட்டார். ஆனால் அது நவீன நாடக வகைமை கொண்டதில்லை.
        முத்துசாமி சுயமாக தனக்கான நாடகமொழியைக் கண்டுபிடித்திருக்கிறார். அதன்பிறகு தெருக்கூத்தின் பரிச்சயம் அவருக்கு 1975ஆம் ஆண்டுதான் ஏற்பட்டிருக்கிறது. அன்றிலிருந்து அவரது பிரதிகள் உருமாற்றம் கொள்ளத் துவங்குகின்றன. உருவகங்கள் குறியீடுகள் கலாச்சார மறுவாசிப்பு புராணக்கதைகளின் மறுவடிவம் என்று அவர் தன் பிரதிக்கான அர்த்த தளங்களை விரிவாக  எடுத்துக்கொண்டு போகிறார். படுகளம் நாடகம் அதன் உச்ச நிலை என்றே சொல்வேன். மகாபாரதமும் சமகால நிகழ்வுகளும் ஒன்றோடு ஒன்று கலப்பதும் அதில் வெளிப்படும் பகடியும் நிகழ்த்து முறையும் நவீன நாடகத்தின் சிறப்பான உயர்நிலை.
        நாற்காலிக்காரர், சுவரொட்டிகள், உந்திசுழி, கட்டியக்காரன், நற்றுணையப்பன்,  இங்கிலாந்து தெனாலி, பிரகலாத சரிதம், சந்திர ஹரி, படுகளம் என்று முத்துசாமியின் நாடகங்கள் ஒவ்வொன்றும் ஒரு தளத்தில் இயங்குகின்றது.
        முத்துசாமியின் நாடகங்களை முதன்முதலாகப் பார்க்கும் பார்வையாளன் அடையும் திகைப்பு நடிகர்கள் பேசும் முறை. அவர்கள் வசனங்களை நேரடியாக ஒப்புவிப்பதில்லை. மாறாக அதைச் சிலவேளைகளில் உச்சாடனம் செய்கிறார்கள். சில வேளைகளில் கவிதை போல உயர்நிலைக்குக் கொண்டு போகிறார்கள். சிலவேளைகளில் சொற்களின் ஊடே இடைவெளியை உருவாக்கி அர்த்த மாற்றங்களை ஏற்படுத்துகிறார்கள். இது பார்வையாளன் அடையும் முதல் திகைப்பு.
        அடுத்தது அவர்கள் மேடையைப் பயன்படுத்தும் விதம். பொதுவில் திரைச்சீலைகளும் மேஜை நாற்காலிகளும் அரங்க பொருட்களாக அறிமுகமாகயிருந்த பார்வையாளனுக்கு முத்துசாமியின் நாடகத்தில் அவர்கள் தங்கள் பாவனைகளால் பொருட்களை உருவாக்குவதும் அதைப் பயன்படுத்துவதும் வியப்பளிக்கக் கூடியது. மூன்றாவது, நாடகத்தின் பின்புல இசை மற்றும் கூட்டியக்கம். ஒரு இசைக்கோவை போல நாடகம் வேறுவேறு தளங்களுக்கு உயர்ந்து பின்பு உச்சநிலையை அடைகிறது.
        இது பார்வையாளர்களுக்குக் குழப்பம் ஏற்படுத்திவிடாதா, நாடகம் புரிந்து கொள்ளப்படவில்லை என்ற கேள்வி முத்துசாமியின் ஒவ்வொரு நாடகத்தின் முடிவிலும் கேட்கப்படுகிறது. அவர் மிகப் பொறுமையாக, இதற்குப் பார்வையாளர்கள் பழகிக் கொள்ள வேண்டும். திரும்பத் திரும்ப எனது நாடகங்களைக் காண்பதுதான் அதைப் புரிந்துகொள்வதற்கான ஒரே வழி என்று சொல்கிறார். அதுதான் உண்மை. இந்த நாடகங்கள் புரியவில்லை. இதை வெறும் ஏமாற்று என்று புறக்கணிப்பதைவிடவும் இதை எப்படிப் புரிந்து கொள்வது என்று முயற்சிப்பதே அவசியம்.
        முத்துசாமி நவீன நாடகப்பிரதிகளை எழுதியதோடு அதை முழுமையானதொரு நவீன நாடகமாக நடிகர்களைக் கொண்டு பயிற்சி செய்து உருமாற்றிக் காட்டுகிறார்.  குறிப்பாக மேடையின் ஒளியமைப்பில் கூத்துப்பட்டறை செய்த பல முன்முயற்சிகள் இந்திய அளவில் குறிப்பிட்டுச் சொல்லப்பட வேண்டியவை. டாக்டர் ரவீந்திரன், மற்றும் நடேஷ் ஒளியமைப்பு செய்த முறைகள் மிகுந்த பாராட்டுக்கு உரியவை.
        அது போலவே பன்சி கௌல், கன்யாலால், அன் மோல் விலானி, கில் ஆலன், ஜான் மார்டின், என்று பல்வேறு நாடக இயக்குனர்களுடன் முத்துசாமி இணைந்து உருவாக்கிய தமிழ்நாடங்கள் நவீனத் தமிழ்நாடகத்தை உலக அரங்கிற்கு எடுத்துச் சென்றுள்ளது. இன்று நாடகத்திற்கான சிறப்புப் பயிலரங்கில் ஒன்றாகக் கூத்துப்பட்டறையை யுனெஸ்கோ அங்கீகாரம் செய்து உதவி செய்து வருகிறது.
        முத்துசாமியை நீண்ட நேர்காணல் ஒன்று செய்து எனது அட்சரம் இதழில் வெளியிட வேண்டும் என்று அவரை நான்கு முறை தொடர்ச்சியாகச் சந்தித்து உரையாடலைப் பதிவு செய்தேன். பத்து மணி நேரத்திற்கும் அதிகமான பதிவு. முத்துசாமி அந்தப் பதிவில் எங்கும் தன் சாதனைகள் பற்றியோ, தனது ஏமாற்றங்கள் பற்றியோ ஒரு முறைகூடக் குறிப்பிடவேயில்லை. இதழ் நின்று போய்விடவே அந்த ஒலிப்பதிவுகள் அப்படியே கைவிட் டுப் போய்விட்டன.
        அலியான்சே மேக்ஸ்முல்லர்பவன் என்று அயல்நாட்டுக் கலாச்சார நிறுவனங்களோடு இணைந்து நாடகம் போடுகின்றவர் என்று குற்றம் சாட்டப்பட்ட முத்துசாமி சென்னையில் பலவருடம் சேரிப்பகுதி மக்களுடன் இணைந்து வசித்தவர். அடிப்படை வசதிகள்கூட எதுவுமில்லாத மிக எளிமையான அரசுக் குடியிருப்பில் தன் வாழ்க்கையைச் செலவிட்டவர். பொருளாதார நெருக்கடிகளுக்காகத் தன்னை மாற்றிக்கொள்ளாதவர் முத்துசாமி.
        இன்று சிறுகதை, கவிதை, நாவல் போன்ற வடிவங்களின் மீது இலக்கியவாதிகள் காட்டும் அக்கறையில் ஒரு பகுதிகூட நாடகத்தின் மீது இல்லை என்பதே உண்மை.
        தெருக்கூத்திற்கு இன்றுள்ள அங்கீகாரத்திற்கு அவரே முக்கிய காரணம். நாடகம், கூத்து, கலை என்று தன் முழு நேரத்தையும் ஒப்படைத்துக் கொண்ட முத்துசாமி  சங்கீத நாடக அகாதமி விருது பெற்றபோது அது இலக்கியச் சூழலில் பெரிதாகக் கண்டு கொள்ளப்படவேயில்லை. ஆனால் முத்துசாமியின் தொடர் இயக்கம் காரணமாகவே இன்று வெளி மாநிலங்களில் நவீனத் தமிழ்நாடகம் குறித்த அறிமுகம் ஏற்பட்டு உள்ளது.
        நாடகத்திற்கான தேவை இப்போதுதான் மிக அதிகமாக உள்ளது. அதிகமான மன அழுத்தம் மற்றும் நெருக்கடியான சூழலில் மனிதர்களுக்கு அகவிடுதலை தரக்கூடிய தனித்தன்மை கொண்டது நாடகம். பன்னாட்டு நிறுவனங்கள் இன்று தங்களது ஊழியர்களுக்கு யோகா மற்றும் நாடகப் பயிலரங்கம் நடத்துகின்றன. நாடகம் ஒருபோதும் புறக்கணிக்கபட்டுவிடாது. அதை நாம் முறையாக எடுத்துச் செல்ல வேண்டும் என்று முத்துசாமி சொல்லியிருந்ததை சமீபத்திய நேர்காணல் ஒன்றில் வாசித்தேன்.
        முப்பது ஆண்டுகாலமாக முத்துசாமியின் அக்கறை அப்படியே இருக்கிறது. பிரதான இலக்கியச் சூழல் அவரைக் கண்டுகொள்ளாமல் எப்போதும் போல வீண்வாதங்கள், வம்புகளின் பின்சென்று கொண்டிருக்கிறது. அதை அவர் கண்டுகொள்ளவும் இல்லை கவலைப்படவும் இல்லை. அபத்தம் தான் வாழ்வின் பிரதான சுவை என்று அவர் அறிந்திருக்கக்கூடும்.
        நன்றி: உயிர்மை இதழ் - November, 2008

        ஜப்பானியக் கவிதை-மகாகவி பாரதியார்



        ஸமீபத்தில் “மார்டன் ரிவ்யூ” என்ற கல்கத்தாப் பத்திரிகையில்உயோநே நோகுச்சி என்ற ஜப்பானியப் புலவர் ஒருலிகிதம் எழுதியிருக்கிறார். அவர் அதிலே சொல்வதென்னவென்றால்:- இங்கிலாந்து அமெரிக்காஎன்ற தேசங்களிலுள்ள இங்கிலீஷ் கவிதையைக் காட்டிலும் ஜப்பானியக் கவிதை சிறந்தது. காரணமென்ன?
        மேற்குக் கவிதையில் சொல்மிகுதி. எண்ணத்தை அப்படியே வீண் சேர்க்கையில்லாமல்சொல்லும் வழக்கம் ஐரோப்பியக் கவிதையிலே இல்லை. எதுகை, சந்தம் முதலியவற்றைக் கருதியும்,சோம்bhar56 பற் குணத்தாலும், தெளிவில்லாமையாலும், பல சொற்களைச் சேர்த்து வெறுமே, பாட்டை அதுபோகிற வழியெல்லாம் வளர்த்துக்கொண்டே போகும் வழக்கம் ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும்அதிகமிருக்கிறது. தம்முடைய மனத்திலுள்ள கருத்தை நேரே வெளியிடுவதில் மேற்குப் புலவர்கதைகளெழுதுவோரைக் காட்டிலும் சக்தி குறைந்திருக்கிறார்கள்.
        ஜப்பானில் அப்படியில்லை. வேண்டாத சொல் ஒன்று கூடச் சேர்ப்பதுகிடையாது. கூடை கூடையாகpப பாட்டெழுதி அச்சிடவேண்டும் என்ற ஒரே ஆவலுடன் எப்போதும் துடித்துக்கொண்டிருப்பவன் புலவனாகமாட்டான். கவி்தை யெழுதுபவன் கவியன்று; கவிதையே வாழ்க்கையாகஉடையோன், வாழ்க்கையே கவிதையாகச் செய்தோன், அவனே கவி. புலவனுக்குப் பணம் ஒரு பொருளன்று.வானத்து மீன், தனி்மை, மோனம், பலர்களின் பேச்சு இவற்றிலே ஈடுபட்டுப் போய், இயற்கையுடனேஒன்றாகி வாழ்பவனே கவி.
        ~
        ஜப்பானிய பாஷையில் பதினேழசை கொண்ட ‘ஹொக்கு’ என்ற பாட்டு ஒருதனிக் காவியமாக நி்ற்கும். முப்பத்தோரசையுள்ள ‘உத்தா’ (உக்தம்) என்பதும் அங்ஙனமே. அயோநேநோகுச்சி தமது கருத்தை விளக்கும் பொருட்டுச் சில திருஷ்டாந்தங்கள் காட்டியிருக்கிறார். அமெரிக்காவில்மிஸ் ரீஸ் (Miss Lizette Woolworth Reese) என்பதோர் கவிராணி யிருக்கிறார். வேண்டாதவற்றைத்தள்ளிவிடுவதில் அந்த மிஸ் ரீஸ் என்ற பெண் புலவர் பெயர் வாங்கியிருக்கிறார். அநாவசியமான பதச் சேர்க்கை, அநாவசியமான கருத்து –விளக்கம் என்ற இரண்டுமில்லாமல் முத்துப்போலே பதங்கள் கோக்கும் நல்ல தொழிலாகிய, அக்கவிராணிஇங்கிலீ்ஷ் பாஷையில் எழுதியிருக்கும் அடிகள் சிலவற்றை நோகுச்சி எடுத்துக் காட்டுகிறார்.
        மழை
        (மிஸ் ரீஸ் எழுதியதன் மொழிபெயர்ப்பு மாதிரியடிகள்)
        ஓ! வெண்மையுடையது; மழை இளையது. கூரை மேலே சொட்டுச் சொட்டென்றுவிழுகிறது; வீட்டுக்குள் நூறு வஸ்துக்கள் ஓடி வருகின்றன. பூண்டுகளின் மணம். பழமையின்நினைவு. இவை யெல்லாம் புல்லாந்தரையிலே குணந் தெரிகிறது. உடைந்த கண்ணாடித் துண்டு போலே.(1)
        சிறிய வெளிக்கதவுகள் புடைக்கிறது பார். அதுவரை செவந்த கொடிப்பூண்டுகள் நேரே ஓடிச் செல்லுகின்றன. (2(
        ஓ! வீட்டுக்குள் நூறு வஸ்துக்கள் வந்து நுழைகின்றன. கற்பூரச்செடியின் மணம். பழைய மகிழ்ச்சி பழைய துன்பம்; இளைய வெண்மழையிலே கிடைத்தன. (3)
        மேற்கூரிய பாட்டை எடுத்துக்காட்டிவிட்ட பிறகு நோகுச்சி சொல்லுகிறார்:-
        “வெண்மையுடையது; மழை இளையது” என்ற முதலடியில் வியப்பில்லை. அதிஸாமான்யமானவார்த்தை. கடைசி விருத்தம் வயிரமபோலிருக்கிறது. அதை மாத்திரம் தனிக் கவிதையாக வைத்துக்கொண்டுமற்றதையெல்லாம் தள்ளிவிடலாம். ஜப்பானியப் புலவன் அப்படியே செய்திருப்பான். சிறிய பாட்டுப்போதும்.சொற்கள், சொற்கள், சொற்கள் – வெறும் சொற்களைவளர்த்துக் கொண்டு போய் என்ன பயன்?
        ஜப்பானிலே பதினெட்டாம் நூற்றாண்டில் “பூஸோன் யோஸாஹோ” என்ற ஜப்பானியக்கவிராயர் ஒரு ‘ஹொக்கு’ (பதினெழசைப்பாட்டு) பாடியிருக்கிறார். அதன் மொழிப்பெயர்ப்பு:-
        “பருவமழையின் புழையொலி கேட்பீர், இங்கென் கிழச் செவிகளே.” இந்தஒரு வசனம் ஒரு தனிக் காவியம். பாட்டே இவ்வளவு தான்.
        மேற்படி ஹொக்க்ப் பாட்டைப் படித்துவிட்டுத் திரும்பத் திரும்பமனனம் செய்யவேண்டும். படிப்பவனுடைய அனுபவத்திற்கு தக்கபடி அதிலிருந்து நூறு வகையானமறைபொருள் தோன்றும். பல பல பதங்களை அடுக்கி ஏடுகளைப் பெருக்குவது சிறந்ந கவிதையன்று.கேட்பவனுள்ளத்திலே கவிதை யுணர்வை எழுப்பி விடுவது சிறந்த கவிதை.
        ~
        மற்றுமொரு நேர்த்தியான “ஹொக்குப்” பாட்டு. வாஷோ ம்த்ஸுவோ(Basho Matsuso) என்றொரு ஜப்பானியக் கவியிருந்தார். இவர் வறுமையே விரதமாகப் பூண்டிருந்தாராம்.ஒரு சீடன் இவரிடம் கல்வி கற்று முடிந்து வீட்டுக்குத் திரும்புகையிலே இவரிடம் மூன்றுரியே (அதாவது ஏறக்குறைய முப்பது வராகன்) காணிக்கையாகக் கொடுத்தான். இவர் ஒருநாளுமில்லாதபடிபுதிதாக வந்த இந்தப் பணத்தை வைத்துக் காப்பது தமக்குத் தொல்லையாதலால் வேண்டியதில்லைஎன்று திரும்பக் கொடுத்துவிட்டாராம்.
        இவருக்கு காகா (Kaga) என்ற ஊரில் ஹொகூஷி என்றொரு மாணாக்கர் இருந்தார்.இந்த ஹொகூஷியின் வீடு தீப்பட்டெரிந்து போய்விட்டது.அந்தச் செய்தியை ஹொகூஷிப் புலவர் தமது குருவாகிய “வாஷோ-மத்ஸுவோ” என்பவருக்குப் பின்வரும்பாட்டில் எழுதியனுப்பினார்.
        “தீப்பட்டெரிந்தது: வீழு மலரின் – அமைதியென்னே!”
        மலர் தனக்கு வாழுங்காலம் மாறிக் கீழே விழும்போது எத்தனை அமைதியுடனிருக்கிறதோஅத்தனை அமைதியுடன் மனிதனுக்கு வருந்துன்பங்களை நோக்குகிறான். .‘வீடு தீப்பட்டெரிந்தது.ஆனால் அது பற்றித் தன் மனம் அமைதியிழந்து போகவில்லை’ என்ற விஷயத்தை ஹொகூஷி இந்தப் பாட்டின் வழியாகத் தெரிவித்தார்.
        ~
        “சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல்” ஜப்பானியக் கவிதையின் விஷேசத்தன்மையென்று நோகுச்சிப் புலவர் சொல்வதுடன், ஆங்கிலேயரின் கவிதை இதற்கு நேர்மாறாக நிற்கிறதென்றும்சொல்லுகிறார். நமக்குள்ளே திருக்குறள் இருக்கிறது. “கடுகைத் துளைத்தேழ் கடலைப் புகட்டிக்குறுகத் தறித்த குறள்.” கிழக்குத் திசையின் கவிதையிலேயே இவ்வி்தமான ரஸம் அதிகந்தான்.தமிழ் நாட்டிலே முற்காலத்திலே இது மிகவும் மதிப்பெய்தி நின்றது. ஆனாலும், ஒரேயடியாய்கவிதை சுருங்கியே போய்விட்டால் நல்லதன்று. ஜப்பானிலே கூட எல்லாக் கவிதையும் “ஹொக்குப்”பாட்டன்று. நோகுச்சி சொல்வதிலே அருமையான உண்மையிருக்கிறது.
        “எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும், அப்பொருள் மெய்ப்பொருள்காண்பதறிவு.”
        நன்றி: http://bhaarathi.blogspot.in
        குறிப்பு: நல்ல இலக்கியம் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. வேறு வணிக நோக்கம் எதுவுமில்லை. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறேன். படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே