Search This Blog

Tuesday, July 5, 2011

மெய்ஞானம்-அஞ்ஞானமா?? விஞ்ஞானத்தின் முன்னோடியா??



 
விஞ்ஞானம் திகைக்கும் நமது சமீப கால அமானுஷ்யங்கள்.!!!(MIRACLES?) 

ஐம்புலன்களுக்கு உட்பட்டு ஆராய்வது விஞ்ஞானம். புலனையும் கடந்து மெய்யை உணர்வது மெய்ஞானம். புலன்களை அடக்கி ஆள்கின்றபோது ஏராளமான வியத்தகும் சக்திகளை சித்தர்களும் யோகிகளும் அடைகின்றனர். அவர்கள் இதைப் பொருட்படுத்துவதே இல்லை. ஆனால் 
சாமானியர்அதிசயிக்கின்றனர். இதை நேருக்கு நேர் பார்க்கும் போது 
 விஞ்ஞானமும் திகைக்கிறது.

வள்ளலாரின் மரணமிலாப் பெரு வாழ்வு 

நமது காலத்திற்கு சற்று முன்னர் வாழ்ந்த வள்ளலார் (வடலூர் ராமலிங்க சுவாமிகள்) 1874ம் ஆண்டு ஜனவரி 30ம் தேதி நள்ளிரவில் தனது அறையில் உள்ளே சென்று தாளிட்டுக் கொண்டவர் திரும்பி வரவில்லை. 
அறையின் உள்ளே இருந்த விளக்கை வெளியே கொண்டு வந்து வைத்த அவர், தனது சீடர்களிடம் யாரும் அறையைத் திறக்க வேண்டாம் என்று அருளி விட்டு உள்ளே சென்றார். அவர் ஜோதியாக ஆனாரா, காற்றிலே கலந்தாரா என்பது தெரியாவிட்டாலும், அவர் மரணத்தை வென்ற மாபெரும் ஞானி என்பதை உலகம் உணர்ந்தது. 

வள்ளலார் பற்றி அறிய தென் ஆற்காடு கலெக்டர் ஒரு டாக்டருடன் சித்திவளாகம் விரைந்தார். உடல் சிதைந்து நாற்றம் எடுக்கும் என்று நம்பிய டாக்டர் அறைக்குள் நுழைந்தவுடன் திகைத்தார். பச்சைக் கற்பூர மணம் கமழ்ந்தது! அங்கிருந்த சீடர்களிடம் வள்ளலார் பற்றி நன்கு விசாரித்து அறிந்த கலெக்டர், அவரது மாபெரும் ஆன்மீக உயர்வைப் 
போற்றியதோடு தன் பங்கிற்கு இருபது ரூபாயை அளித்தார். 

1878ல் சவுத் ஆர்காட் கெஜட்டில், அறைக்குள் நுழைந்து தாளிட்டுக் கொண்டவர் திரும்பி காணப்படவில்லை என்று குறிப்பிட்டு அவரைப் பின்பற்றுவோர் அவர் கடவுளுடன் ஒன்றாகி விட்டார் என்று நம்புவதையும் குறிப்பிட்டார்ஜே.ஹெச் கார்ஸ்டின். 1906ல் டபிள்யூ. பிரான்ஸிஸ் ஐ.சி.எஸ் சவுத் ஆர்காட் கெஜட்டில் வள்ளலார் மறைந்ததை விளக்கி அதிசயப்படுகிறார்! 

பரமஹம்ஸ யோகானந்தரின் யோக ஆற்றல்: 

'ஆட்டோபயாகிராபி ஆஃப் எ யோகி' என்ற உலகப் பிரசித்தி பெற்ற நூலை எழுதிய பரமஹம்ஸ யோகானந்தர் (1893-1952) 1952ம் ஆண்டு மார்ச் 7ம் தேதி மஹா சமாதி அடைந்தார். அவரது உடல் இருபது நாட்கள் கழித்து மார்ச் 27ம் தேதி வெங்கல மூடியிட்ட பேழையில் வைக்கப்பட்டது. அதுவரை அந்த உடலில் எந்த வித மாற்றமும் இல்லை. லாஸ் ஏஞ்சலீஸைச் சேர்ந்த ஃபாரஸ்ட் லான் மெமோரியல் பார்க்கின் மார்ச்சுவரி டைரக்டர் ஹாரி டி ரோ, “பரமஹம்ஸ யோகானந்தரின் இறந்த உடலில் சிதைவுக்கான எந்த வித அறிகுறிகளும் தோன்றாதது எங்கள் அனுபவத்திலேயே மிகவும் அசாதாரணமான ஒன்றாக விளங்குகிறது. உடல் தோலிலோ அல்லது திசுக்களிலோ எந்த வித மாற்றமும் இல்லை! இது போன்று மாறாமல் இருக்கும் ஒரு உடல் எங்கள் சவக் கண்காணிப்பு வரலாறிலேயே இல்லாத இணையற்ற ஒரு சம்பவம்! நாளுக்கு நாள் எங்கள் வியப்பு கூடிக் கொண்டே போனது” என்று குறிப்பிடுகிறார்! 

சூரிய ஒளியை உட்கொண்டு உயிர் வாழும் யோகி 

ஹீரா ரதன் மனேக் (1937 செப்டம்பர் 12ம் தேதி பிறந்தவர்) என்ற யோகி சூரிய ஒளியை மட்டும் உண்டு உயிர் வாழ்வதாகக் கூறியதும் நாஸா விஞ்ஞானிகளே வியந்து அவரை தமது ஆராய்ச்சிக்காக அழைத்தனர். சூரிய ஆற்றலை பயன்படுத்துவது எப்படி என்று அறிவதே நாஸா விஞ்ஞானிகளின் நோக்கம்! விஞ்ஞானிகள் மற்றும் மருத்துவர்களின் கட்டுப்பாடான சோதனைக்கு உட்பட்ட இவர் 1995-96ல் 211 நாட்கள் கொல்கத்தாவில் எந்த வித உணவையும் உட்கொள்ளாமல் இருந்தார். அடுத்து 2000-2001ல் அஹமதாபாத்தில் 411 நாட்கள் 21 மருத்துவர்கள் உள்ளிட்ட நிபுணர் குழுவின் கண்காணிப்பிலும் ஆய்விலும் எதையும் உட்கொள்ளாமல் இருந்தார்! அடுத்து பென்ஸில்வேனியாவில் பிலடெல்பியாவில் தாமஸ் ஜெபர்ஸன் பல்கலைக்கழகத்தில் டாக்டர் ஆன்ட்ரூ நியூபெர்க் மூளையை ஸ்கேன் செய்தவாறு இருக்க, 130 நாட்கள் எதையும் உட்கொள்ளாமல் இருந்தார். 

65 ஆண்டுகள் எதுவும் உட்கொள்ளாத யோகி:- 

பிரஹ்லாத்பாய் ஜானி என்ற 76 வயது ஆகும் யோகி குஜராத்தில் அம்பாஜி ஆலயத்திற்கு அருகே உள்ள குகை ஒன்றில் வசிக்கிறார்! கடந்த 65 ஆண்டுகளில் திரவ பதார்த்தத்தையோ எந்த வித உணவு வகைகளையுமோ தான் தொட்டதே இல்லை; உட்கொண்டதே இல்லை என்கிறார் அவர் ! ஆன்மீக தாகம் மீதூற ஏழு வயதில் வீட்டை விட்டுப் புறப்பட்டவர்தான்! 11ம் வயதில் ஒரு தேவதை அவருக்கு அருள் பாலித்தது. அவரது வாயில் மேல் பகுதியிலிருந்து அமிர்தம் சொட்ட ஆரம்பித்தது. அன்றிலிருந்து சிறுநீர் மலம் எதையும் கழிக்கவில்லை! உயிர் காக்கும் அமிர்தம் சொட்ட ஆரம்பித்ததிலிருந்து எனக்கு உணவோ குடிநீரோ தேவை இல்லாமல் போய் விட்டது என்றார் அவர்!

இவரை விஞ்ஞான முறைப்படி ஆராய 2003ம் ஆண்டு நவம்பரில் டாக்டர் சுதிர் வி.ஷா தலைமையில் 21 ஸ்பெஷலிஸ்டுகள் ஒன்று சேர்ந்தனர். பத்து நாட்கள் 24 மணி நேர முழு சோதனை நடத்தப்பட்டது. கார்டியாலஜி, நியூராலஜி, யூராலஜி, கேஸ்ட்ரோ என்டிரோலொஜி, ஆப்தமாலஜி, ரீனல் பங்க்ஷன், பல்மனரி பங்க்ஷன், ஈ என் டி அனாலிஸிஸ், சைக்கியாட்ரி, பொது மருத்துவம் உள்ளிட்ட ஏராளமான துறை நிபுணர்கள் குழுவில் இருந்தனர். இந்த அனைத்துத் துறை நிபுணர்களும் தத்தம் துறையில் உள்ள தீவிர சோதனைகளை அவர் மேல் மேற்கொண்டனர். சோதனைகள் அனைத்தும் முடிந்த பின்னர் பிரஹலாதின் சொல்லுக்கு மறுப்பு ஏதும் அவர்களால் தெரிவிக்க இயலவில்லை. அவர்கள் திகைத்துப் போனார்கள். விளக்க முடியாத மர்மமாக அவர் விளங்கினார். 

எப்படி ஒருவரால் தண்ணீர், உணவு இன்றி வாழ முடியும்? சிறுநீர் மலம் கழிக்காமல் இருக்க முடியும்? அவர்களின் ஆச்சரியத்திற்கு எல்லையே இல்லை! சோதனையின் முதல் கட்டமாக அவரை இன்டென்ஸிவ் கேர் யூனிட்டில் 24 மணி நேரம் வைத்தனர். அடுத்து ஒன்பது நாட்கள் ஒரு கண்ணாடி கதவு கொண்ட டாய்லட் வசதி பூட்டப்பட்ட ஒரு விசேஷமான அறையில் அவர் வைக்கப்பட்டார். அந்த அறையில் ஒரு வீடியோ கேமராவும் பொருத்தப்பட்டது. அத்தோடு விசேஷ பணியாளர்கள் சிலர் 24 மணி நேர டியூட்டியில் தொடர்ந்து அவரைக் கண்காணிக்க நியமிக்கப்பட்டனர்! அவர் உணவு அருந்துகிறாரா, தண்ணீர் குடிக்கிறாரா, சிறுநீர், மலம் கழிக்கிறாரா என்று இவை அனைத்தும் கண்காணிக்கப்பட்டன!

ஒரு அல்ட்ரா சவுண்ட் கருவி அவரது சிறுநீரகத்தைப் பரிசோதித்தது. அந்தக் கருவியின் கண்டுபிடிப்பின்படி அவரது சிறுநீரகத்தில் சிறுநீர் சேர்ந்தது. ஆனால் அது சிறுநீரக சுவரில் உறிஞ்சப்பட்டு விட்டது. இது எப்படி நேரிடுகிறது என்பதை குழுவால் விளக்க இயலவில்லை .  பத்து நாட்கள் சோதனைக்குப் பின்னர் ஆய்வுக் குழு அவர் திரவ பதார்த்தத்தையோ திட உணவையோ உட்கொள்ளவில்லை என அறிவித்தது. சாதாரணமாக, குடி நீர் இன்றி நான்கு நாட்களுக்கு மேல் ஒருவரால் உயிர் வாழ முடியாது. ஆய்வின் போது அவர் முழு ஆரோக்கியத்துடன் இருந்ததையும் குழு உறுதிப்படுத்தியது. மருத்துவமனையின் டெபுடி சூபரின்டெண்டெண்ட் டாக்டர் தினேஷ் தேசாய் தனது அறிக்கையில் தொடர் சோதனைகள் அவர் மீது நிகழ்த்தப்பட்ட போதிலும் அவரது உடல் இயங்கிய விதம் ஒரு சகஜமாகவே இருந்தது என்று உறுதிப்படுத்திக் கூறினார்!

கண்களைக் கட்டிப் படிப்பவர்:- 

காஷ்மீரில் பிறந்த குடா பக்ஸ் தன் கண்களை இறுகக் கட்டிய பின்னர் ஊசியில் நூல் கோர்ப்பார் பார்வையாளரில் ஒருவரை வரவழைத்து அவர் கையில் ஒரு புத்தகத்தைக் கொடுத்து ஏதேனுமொரு பக்கத்தை எடுக்கச் சொல்லுவார். அதை அப்படியே வரிக்கு வரி படிப்பார். அயல் நாட்டு மொழிகளில் வார்த்தைகளை எழுதச் சொல்லி அதை அப்படியே திருப்பி எழுதுவார். லண்டன் பல்கலைக்கழக அதீத உளவியல் விஞ்ஞானிகள் 1935ல் ஒரு சோதனைக்கு இவரை அழைத்தனர். அதை ஏற்ற இவர் சோதனைக் கட்டுப்பாடுகளுக்கு இணங்க தீ மீது நடந்தார். தீயின் மேற்பரப்பு உஷ்ணம் 806 டிகிரி பாரன்ஹீட் என அளக்கப்பட்டது. தீயின் உக்கிரமான உஷ்ணமோ 2552 டிகிரி பாரன்ஹீட். இரும்பையும் உருக்கும் உஷ்ண நிலை! புகைப்படக்காரல் இதனைப் படம் பிடிக்கத் தவறி விட்டதால் மீண்டும் ஒரு முறை குடா பக்ஸை நடக்கச் சொல்லி வேண்டினார். குடா பக்ஸும் நடந்தார். உலகமே வியந்தது!

கண்களை மூடிய பின்னர் பார்வை எப்படிக் கிடைக்கிறது என்ற ரகசியத்தை ஒரு கேள்விக்கு விடை அளிக்கும் போது அவர் வெளிப்படுத்தினார். இரு புருவ மத்தியில் கண்களை வைத்து இருபத்தி நான்கு வருடங்கள் தியானம் செய்தால் அகக் காட்சி வந்து விடுமாம்! புறக் கண்களின் உதவி பிறகு தேவை இல்லையாம்!! 1906ல் பிறந்த இவர் 1981 பிப்ரவரி 5ம் தேதி மறைந்தார். 

மெய்யுணர்வுத் தேட்டப் பாதையில் புலன்களைக் கடந்த பெரும் ஆற்றல் நிச்சயமாக வரும்; அது ஒரு சாதாரண விஷயம் என்று கூறிச் சிரிக்கிறது மெய்ஞானம்! பிரமிக்கிறது விஞ்ஞானம்!! 

அறிவோமா ஆன்மிகம் !!! ஆன்மீகத்தை விரிக்கலாமா? பதிவு -001



அறிவோமா ஆன்மிகம் !!!
ஆன்மீகத்தை விரிக்கலாமா?


இந்த உலகில் ஒரு பன்றி தன் வாழ்னாளில் 100குட்டிகளை போட்டுவிட்டுப் போகத்துடிக்கிறது. மிகச்சிறிய கொசு கூட பல்லாயிரம் சந்ததியைப் பெருக்கி விட்டுப் போகிறது. இப்படி இயற்கையின் தூண்டுதலால் அனைத்து உயிர்களும் எப்படியோ ஒரு வகையில் சந்ததியையோ, பணத்தையோ, புகழையோ விரிவாக்கம் செய்துவிட்டு மறைகின்றன. ஆனால்ஆன்மீக உலகம் இதற்கு என்ன விடை கூறுகிறது?
ஒரு சராசரி மனிதன் தன் சந்ததியை விரிவாக்கம் செய்கிறான். நன்கு உழைப்பவன் தன் வீட்டை விரிவாக்கம் செய்கிறான். இன்னும் பொய்யை வியாபாரம் ஆக்குபவன் ஊழல் செய்தோ, லஞ்சம் பெற்றோ, வஞ்சக வழியில் பிறர் பொருளை அபகரித்தோ, தனது செல்வத்தை விரிவாக்கம் செய்கிறான். இன்னும் வாய் சமர்த்து உள்ள அறிவார்ந்த சடாமுடிகள் அல்லது மொட்டையர்கள் அறக்கட்டளை, ஆசிரமம் இப்படி விரிவாக்கம் செய்கிறார்கள். இவை ஆன்மீகம் ஆதரிக்கின்ற அறிவுடைமையா என்றால் சர்வ நிச்சயமாக இது மாபெரும் குற்றம் என்கிறது ஆன்மீகம்! ஆன்மீகம் விரிவாக்கத்தை விரும்பவில்லை.
நாமே மக்களைக் கூட்டுகின்ற விரிவாக்கப் பணியில் ஈடுபட்டாலும் மாபெரும் குற்றவாளி என்பதைப் பகிரங்கமாக வெளிப்படுத்தத் தயங்கவும் மாட்டோம். அதே சமயம் எமது விரிவாக்கத்திற்காகச் சப்பைக் கட்டுப்போட்டு சமாதானம் கூறவும் மாட்டோம். யார் தவறு செய்தாலும் தவறு,தவறுதான்!
மாணிக்கவாசகர் அழகாகக் கூறுவார், ' நோக்கரிய நோக்கே நுணுக்கரிய நுண்ணுணர்வே!என்று! நமது நோக்கம் அணுவிற்குள் ஓர் அணுவாகச் சுருங்கி ஆற்றலை வெளிப்படுத்துவதே தவிரப் பெருக்குவது அல்ல. தனக்குள் பயன் உள்ள குழந்தை தாய்தந்தை அருகிலேயே வாழ விரும்புகிறது. பயன் உள்ள பணக்காரன்வங்கிக் கணக்கு வைப்புத்தொகை அருகில் வாழ விரும்புகிறான். ஆதரவு இல்லாத வாழ்வைக் கண்டு பயப்படும் ஆன்மீகவாதிகள் ஆசிரம சொத்தின் அருகில் வாழத்துடிக்கிறர்கள். அனைத்தையும் உணர்ந்த சாகாக் கல்வி அறிந்த சாது, 'அறுக்கல் உற்றார்க்கு உடம்பும் மிகை என்று ஆன்மாவிலேயே லயமாகவாழ்வார்கள்.
போனாலும் பேறு, இருந்தாலும் பேறு. ஆனால் இந்த உடம்போடு வாழ்வது அருவருப்பே! என்று கூறிய பட்டினத்தாரின் ஆன்மீகம் எங்கே!ஆயிரக்கணக்கில் கூட்டத்தை அழைத்து அற்புதம் என்ற பெயரில் அற்பப் பணத்தைக் குவிக்கும் குருமார்களின் ஆன்மீகம் எங்கே! இந்த குருமார்கள் பட்டினத்தாரின் துறவைத் தொடப் பல லட்சம் பிறவி எடுக்க வேண்டும்.
பட்டினத்தாரைப் போலத் தினம் தினம் கையிலே பிச்சை எடுத்துச் சாப்பிடத் துணிவில்லையே! எனத் தினம் தினமும் நெஞ்சு புண்ணாகிறோம். என்றாலும் பட்டினத்தாரின் துறவு வேட்கை,வைராக்கிய முயற்சி, இறைதாகம், ஆன்மதரிசனம்இவற்றில் ஓரளவு அவரோடு ஒட்டி உறவாடுவதில் சலிக்காது முயன்று வருகிறோம்.
தனக்குள் வாழும் பயம் அகலதாம் சார்ந்து நிற்கிற உபயோகம் விலகிக் கொண்டே வரும். சாகாக்கல்வி என்பது உபயோகத்தை உதறுவது என்றே பொருள். முதலில் பெற்றோர்,அடுத்து செல்வம்அதற்கு அடுத்து அறிவார்ந்த கல்விஉணவுஉடைஉறையுள் என்கிற உபயோகம் கூட அறுக்கப்படும். இதையே அருணகிரியார், 'உரை அவிழ,உளம் அவிழஉயிர் அவிழஉளபடியை அறியும் அவர் அனுபூதி என்பார்.
மகாவீரர் என்று யாரைப் போற்றுகிறோம்உடம்பை மறைக்கும் ஆடை உபயோகத்தை கூட அகற்றியவர் என்பதால் தான் மகாவீரர் ஆனார். மக்கள் துதி பாடாவிட்டால் மண்டையைச் சைத்துவிடும் மண்ணாங்கட்டிகளை மகான் என்று மடத்தனமாக உளறும் மடையர்களின் மதிமயக்கம் என்றுதான் ஒழியப்போகிறதோ?
தனி மனிதனுக்குள் ஆத்ம சக்தி பெருகப் பெருக அவன் யாரையும் சார்ந்து துதி பாடமாட்டான். தனக்குள் தானே பிரகாசிப்பான். ஆனால்ஒவ்வொரு மனித மனமும் பயத்தோடுதான் பயணம் செய்கிறது. பயந்த மனம் எதையோ சார்ந்து பிடித்துக்கொள்கிறது. அதுபோல பயந்த குருமார்கள் பல லட்சம் பேரைத் த்ணைக்குப் பிடித்துக்கொள்கின்றனர். இந்த குருமார்களுக்கும் சீடர்கள் மனத்திற்கும் பெரிய வித்தியாசம் ஒன்றுமில்லை. ஆட்டுக்கூட்டத்தில் முதலில் போகிற ஆடு தைரியமான ஆடு என கூற முடியாது. அது பின்னால் வரும் ஆடுகளின் பலத்தில் முதலில் நடைபோடுகிறது.இதுபோலவே குருமார்களின் தலைமைத்துவம் சீடர்களின் பலத்தால்நடக்கிறது. ஆத்ம சக்தி வீரியம் உண்டாகிவிட்டால் தனித்து வாழும் சிங்கமாகமாறிவிடுவார்கள். தனித்து வாழப் பயிலாதவர்கள்பயப்படுபவர்கள் அழுகிப்போன பிணமாவது உறுதி.

ஒரு மனிதனின் பாவ வினையை அடுத்த மனிதன்வாங்கிக்கொள்ள முடியும். ஆனால்புண்ணிய வினையை யாருக்கும் கொடுக்க முடியாது. கடவுளிடம் மட்டுமே கொடுக்க முடியும். இதற்கு உதாரணம்பாரதக் கதையில் வரும் கர்ணன். கர்ணன் புண்ணியத்தால் அவன் உயிர் பிரியாமல்தர்மதேவதை காப்பாற்றுகிறது. கடவுள் ஸ்ரீ கண்ணனே மாறுவேடத்தில் சென்று கர்ணனிடம் புண்ணியத்தைத் தானமாகப் பெற்று முத்தி அளித்தான் என்று கதை முடியும்.
எனவேபாவ வினையைக் கொடுப்பதற்குத்தான் தான தர்மம் செய்கிறார்கள். அந்தக் காலத்தில் பாவ வினையைப் பெற வேண்டும் என்பதற்காகவே வறுமையாளர்பிணியாளர்களை இறைவன் படைத்தார். இப்படிப்பட்டவர்களைத் தேடிபுண்ணியவான்கள் தங்களது பாவத்தை குறைக்கச் சென்றனர். இதனால் அந்தக்காலத்தில் ஓடி இட்ட பிட்சையும் உகந்து செய்த தர்மமும் இருந்தன. இப்போது அந்தக் கவலையே வேண்டாம். அசந்தால் அத்தனையும் அபகரித்து வாழும் பல கோடிப்பாவிகள் அரசு ஊழியராக லஞ்சம் வாங்கியும்அரசியல் தலைவராகி ஊழல் செய்தும்வாழ்கிறார்கள். பலரது பாவங்களைக் கூசாமல் ஏற்கும் பாவிகள் நிறைந்தபூமியில் கடவுளின் பெயரிலும் சித்தர்கள் பெயரிலும் கட்டணம் வாங்கும்கூட்டம் எராளம். உழைப்பு மட்டும் இருந்தால் போதும். நமது உழைப்பின்ஊதியத்தை இந்தப் பாவிகளிடம் ஒப்படைத்துவிட்டுப் பரமனை அடைந்து விடலாம்.  



மிகச்சிறந்த ஞானிகளாகப் போற்றப்படும் ரமண மகரிஷியின் தொழுநோய்,யோகிராமகிருஷ்ண பரமஹம்சரின் புற்றுநோய் மரணங்கள் மறக்கமுடியாத கசப்புணர்வைத்தருகின்றன. எமக்குத் தெரிந்த பெரிய மகான் சிவகங்கையில் முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக மௌனம்இருந்தார். ஒரு எறும்புக்குக் கூடத் தீங்கு  செய்யாத உத்தமர். ஆனால் அவருக்கும் புற்றுநோய் வந்து அருகில் சென்று பணிவிடை செய்ய முடியாத துர்னாற்றம் எற்பட்டதால் தாமாகவே இறந்து கிடந்தார். இதுவும் தாங்க முடியாத வேதனை.

காலம் முழுக்கக் கடவுளை வேண்டிய இவருக்கே இந்த கதி என்று பாமரனும் முகம் சுழிக்கும் விகல்பம். இதற்குச் சமாதன வார்த்தையாக மக்களின் கர்மவினைப் பாவங்களை இந்த ஞானிகள் சுமந்ததால் இந்த வினையை அனுபவிக்க நேரிட்டது என்ற பதில் சற்று ஆறுதல் தந்தாலும் போதிய நியாயம் இருப்பதாகத் தோன்றவில்லை. ஆனால்எங்கேயோ முரண்பாடுஎற்பட்டுவிட்டது என்பது மட்டும் புரிகிறது.
வேண்டுதல் வேண்டாமை இலான் அடி சேர்ந்தார்க்கு யண்டும் இடும்பை இலஎன்ற வள்ளுவரின் வாக்கு சத்தியமான உண்மை. அப்படியிருக்கஎப்படி இடும்பை வந்ததுமக்களின் பாவங்கள்தான் புற்றுநோயாக வந்தது என்பது உண்மைதான். அதேசமயம் நாம் பிறக்கும்போது ஒருஅடி நீள அழகான ஆரோக்கியமான குழந்தையாகப் பிறந்தவர்கள் இறக்கும்போது சுமார் ஐந்தரை அடி நீள அழுகிப்போன பிணமாக உடலை உலகத்தில் போட்டுவிட்டுப் போனால் அது எந்தவகையில் நியாயம்ஆரோக்கியமாகப் பிறந்துவிட்டு அழுகிப்போய்ச் சாவது மனிதப் பிறவியாகிவிட்டால் எதற்காகக் கடவுள் பக்திஎதற்காக யோக சாதனைஇந்த முரண்பாட்டைக் களைவதே சாகாக்கல்வியின் ரகசியம்.

மனிதன் இன்பமாக வாழ்வதற்குத் திட்டமிட்ட மார்க்கங்கள் அனைத்தும் அழுகிப்போன உடலை உலகில் போட்டுச்செல்வது வாடிக்கை. அந்த நிக்ழ்வுக்கு சமாதானம் கூற இவருக்கு மறுபிறவி இல்லை என்றும் ....விதவிதமான சரடுகளைப் புனைந்து விதைப்பர். ஆனால்சித்தர்கள் மார்க்கம்அழுகிப்போன பிணம் ஆவதை ஏற்பதில்லை. திருமூலர் கூறுவார்.....

'காக்கை கவரில் ஏன்கண்டார் பழிக்கில் ஏன்?கூத்தன் புறப்பட்டுப் போன கூட்டிற்கே!என்று சாகாக் கல்வி உணர்த்தும் பாடம் மிக அற்புதமானது.
சாகாக்கால் மூலம் காற்றை உணவாக்கத் தெரிந்தும்வேகாத்தலை மூலம் நெருப்பை உணவாக்கத் தெரிந்தும்போகாப்புனல் மூலம் ஆகாய சக்தியை உணவாக்கத் தெரிந்தும் உள்ள யோகியால் மட்டுமே மரணத்தைத் தடுக்க முடியும்.அதாவது ஐந்து பூதத்தில் நிலமும் நீரும் அன்னமும் தண்ணீரும் ஆகிய இந்த உணவையே நம்பி வாழும் உயிர்கள் உடம்பை பெரிதக்க முடியுமே தவிரசுருக்க முடியாது. ஒரு மனிதன் நூறு கிலோ எடையைக் கூட்டுவதற்கு எந்தப் பயிற்சியோ,அறிவோ தேவை இல்லை. கண்டதை எல்லாம் சாப்பிட்டு செரிமானம் செய்யும் சக்தி மட்டும் தெரிந்தால் போதும்நூறு கிலோவை எட்டி விடலாம்.
ஆனால், 100 கிலோ மனிதன் 20 கிலோவாகக் குறைக்க சாகாக்கல்வி நுட்பம் தெரிந்தால் மட்டுமே முடியும். இந்த வகையில்தான் சாகாக்கல்வி நுட்பம் தெரியாமல் கடவுள் பக்திஞானம்இவற்றின் வழியே ஞானியாகத் தேறி விடுகிறர்கள். ஆனால்நோய் வரும்போது உடலைக் காப்பற்ற வழி தெரியாமல் பல ஞானிகள் மார்டைப்பு நோயாலும்சில ஞானிகள் புற்று நோயாலும் சாகின்றனர்.
காற்றுசூரிய ஒளிமூலக்கனல் இதில் வாழத்தெரிந்த உடம்புக்கு மட்டுமே பெருத்த தேகம் சுருங்கி வர இயலும். இப்படிப் ப்லயோக சாதனையாளர்கள் பிறந்த குழந்தையைப் போல ஒருஅடி உயரம் வரை தேய்ந்து வாழ்வார்கள். இன்றும் வாழ்கிறர்கள். இப்படிப்பட்ட யோகிகள் மூன்றடி உயரமாகத் தேயத் தொடங்கியதும் மனிதர் கண்களுக்குஅகப்படாமல் மலைகளில் ஒதுங்கி விடுவார்கள். ஒரு சாண் நீள யோகியை மனிதர் கண்களால் பார்க்க இயலாது. இது எல்லோருக்கும் சாத்தியமாகாது. அப்போது தனது மூலக்கனல் சாதனையால் பெரிய ஜோதியை உண்டாக்கி பிடி சாம்பல்கூட மிஞ்சாமல் மறைந்து விடுவார்கள். இப்படித்தான் மாணிக்கவாசகர்ஞானசம்பந்தர்திருமூலர் போன்ற எண்ணற்ற மகான்கள் மறைந்தார்கள்.

வளரத் தெரிந்த மனிதனுக்கு தேயத் தெரியவில்லை. வாழத் தெரிந்த மனிதனுக்கு மறையத் தெரியவில்லை. விரியத் தெரிந்தவனுக்கு சுருங்கத் தெரியவில்லை. சுருங்கத் தெரிந்தவனுக்கு சாவு இல்லை. சுருங்கச் சொன்னால் இதைவிட எளிய விளக்கம் எதுவும் இல்லை.
பாவத்தைக் கட்டி பண மூட்டையாய்ச் சுமக்கும் மடையர்களே! மடத்தனம்மடத்தின் தனம்உம்மை மட நாயாகப் பிறந்து காவல் காக்க வைக்கும். விரிந்தது போதும் அறிவே! குறுக முயற்சி செய். உனது தேவைகளைஉணவுகளைதூக்கங்களை,உறவினர்களைஅறிவுகளை குறுக்கிக் கொள். பிறகுசாகாக்கல்வி மூலம் காற்றை உணவாக்கிப் பழகிக் கொள்ளலாம்.

அழுகிப்போன உடலை அடக்கம் செய்ய ஆறடி நிலம் தேவையாஅந்த ஆறடி நிலத்தை சுற்றி வழிபாடு செய்யும் அறிவு கெட்ட கூட்டம் தேவையாபுதைத்த மேடைக்குபூக்கள் அலங்காரம் செய்துவிட்டால் புனிதர் ஆகிவிட முடியுமாஉயிருடன் இருந்தபோது ஏய்த்துப் பிழைத்தவர் செத்த பின்னரும் சவக்குழிக்குச் சடங்கு செய்யத் தூண்டிவிடுவதா குருபக்தி? என்னயா உலகம்! கசாப்புக் கடையில் நிறுத்தப்பட்ட அடி மாட்டுக்கு நேர்ந்த கதிபோல் உங்களது குருமார்களும் அடிமாட்டு மரணம் அடைந்த பிறகு புதைகுழியை வக்கணையாகச் சுற்றி வழிபாடு செய்கிற கூட்டம்திக்கற்ற பறவைக் கூட்டம்தானே!
சாகாக்கல்வியை அறிந்தால் மரணம் அடைந்த குருவையோ அவர் கூறிய தத்துவங்களையோ வணங்க மாட்டீர்கள். வனங்கவும் முடியாது. நமக்கு குரு இறைவனே! தனக்கு உவமை இல்லாதான்வேண்டுதல் வேண்டாமை இல்லாதவன்மலர்மிசை ஆகியவன். அவனே குரு. அவன் உணர்த்தும் பாடமே சாகாக்கல்வி. இப்படித்தான் நாம் உய்வு அடைந்தோம். சந்தேகம் இருந்தால் காற்றைப் பிடித்துக் கட்டிக் காட்டுவோம். கடும் குளிரிலும் கனலைப் பிடித்து வியர்க்க வைப்போம். சாகாக்கல்வியின் நிதர்சன உன்மையை அனுபவப்பூர்வமாக உணர்த்த முடியும். என்றாலும் உமது சந்தேகம் தெளிய வைக்க மட்டுமே எம்மால் முடியும்.மற்ற சாதனைகளை மகேசன் மீது உள்ள விசுவாசம்அன்புஇறைதாகம் இவற்றால் பெற முடியும். 
உங்களுக்கு வேகமும் வைராக்கியமும் மட்டுமே மூலதனமாக இருக்க வேண்டும். உங்களை இறைவன் தேடுகிறான். உங்களால் உங்களுக்குள் ஞான ஒளி பரவட்டுமாக! சிவலயம் பெறுவோம்! சிவத்தை அடைவோம்! சிவமயம் ஆவோம்!

Auto-pilots need a birds-eye view



“Pigeons can inform navigation technology design”
New research on how birds can fly so quickly and accurately through dense forests may lead to new developments in robotics and auto-pilots.
Caption: The pigeons were fitted with a tiny head-camera before they flew through the artificial forest. Credit: Talia Moore
Scientists from Harvard University trained pigeons to fly through an artificial forest with a tiny camera attached to their heads, literally giving a birds-eye view. “Attaching the camera to the bird as well as filming them from either side means we can reconstruct both what the bird sees and how it moves,” says Dr. Huai-Ti Lin, a lead researcher for this work who has special insight into flying as he is a remote control airplane pilot himself.
The methods pigeons use to navigate through difficult environments could be used as a model for auto-pilot technology. Pigeons, with >300 degree panoramic vision, are well suited to this task because this wrap-round vision allows them to assess obstacles on either side. They can also stabilise their vision and switch rapidly between views using what is called a “head saccade”, a small rapid movement of the head.
This research is being presented at the Society for Experimental Biology annual conference in Glasgow on the 1st of July, 2011.
Caption: This image shows a pigeon, fitted with a camera, about to fly through the artificial forest that can be seen in the background. Credit: Talia Moore
The researchers also showed that the birds have other skills that would be important for auto-piloted machines, for example they tend to choose the straightest routes. “This is a very efficient way of getting through the forest, because the birds have to do less turns and therefore use less energy but also because they reach the other side quicker,” says Dr Lin. “Another interesting finding is that pigeons seems to exit the forest heading in exactly the same direction as when they entered, in spite of all the twist and turns they made in the forest.”
When using a robot or an unmanned air-craft it would be invaluable to simply provide it with the coordinates of the destination without having to give it detailed information of all the obstacles it might meet on the way. “If we could develop the technology to follow the same methods as birds we could let the robot get on with it without giving it any more input,” says Dr. Lin.