Search This Blog

Showing posts with label Spiritual. Show all posts
Showing posts with label Spiritual. Show all posts

Friday, October 8, 2021

நவராத்திரி பூஜை முறைகள்.



நவராத்திரி கோலாகலம் ஒவ்வொரு வருடமும் கொண்டாடப்படுகிறது என்றாலும், வருடத்துக்கு வருடம் புதுமெருகு காணும் வித்தியாசமான விழா அது. வருடந்தப்பாமல் புதிது புதிதாக பொம்மைகள் வாங்குபவர்களும், ஒவ்வொரு வருடமும் ஒரு புதுமையான ஆன்மிகத் தத்துவ அடிப்படையில் கொலு வைப்பவர்களுமே இதற்குச் சான்று. அவரவருக்குப் பிடித்தவகையில் விதவிதமாக கொலு வைத்தாலும், ஒன்பது நாட்களும் கடைபிடிக்கப்படும் சம்பிரதாயங்களும், வழிபாட்டு முறைகளும் பொதுவானதாகவே இருக்கின்றன.
பூர்வாங்கம்
--------------------
அமாவாசை தினமான இன்று நீராடிய பின் கும்ப கலசத்தை சுத்தம் செய்து சாம்பிராணி புகையிட்டு பச்சைக் கற்பூரம், குங்குமம், மஞ்சள், வெட்டிவேர் மற்றும் சில்லறை நாணயம் போட்டு, மாவிலை கொத்து அதன் நடுவே தேங்காய் வைத்து சந்தனம், குங்குமம், புஷ்பம் இட்டு மந்திரம் சொல்லி இலையில் பச்சரிசி (நெல்) பரப்பி அதில் மஞ்சள் பிள்ளையார் வைத்து,
கும்பத்தை ஏற்றிவிட வேண்டும். பின் பூஜை செய்ய வேண்டும்.
கன்யா பூஜை
------------------------
கும்பத்துக்குப் பக்கத்தில் ஒரு பெண் குழந்தையை ஒரு பலகை மீது அமர்த்தி வைக்க வேண்டும். குழந்தைக்கு மகிழ்ச்சி தரக்கூடிய நெற்றிச்சுட்டி, ஜிமிக்கி, வளையல், பொட்டு, பாசிமணி, ஒட்டியாணம், கண்ணாடி, சீப்பு, புத்தாடை, பூ, தேங்காய், பழம் போன்ற பொருட்களை ஒரு தாம்பாளத்தில் வைக்க வேண்டும். தாம்பாளத்தை பூஜை செய்கிற பெண் குழந்தை கையில் கொடுக்க வேண்டும். எல்லாவற்றையும் குழந்தைக்கு அணிவித்து மறுபடியும் குழந்தையை பலகையில் அமர்த்தி தாம்பாளத்தில் இரு கால்களையும் வைத்து தெய்வமாக நினைத்து பாத பூஜை செய்ய வேண்டும். மலர் தூவி, மாலை அணிவித்து மலர்களால் அர்ச்சித்து கற்பூரம் காட்டி மந்திரம் சொல்லி வழிபட வேண்டும். அன்றைக்குள்ள நைவேத்தியத்தை குழந்தைக்கு ஊட்டி விடவேண்டும். குழந்தை காலில் விழுந்து வணங்கிட வேண்டும். பக்கத்தில் (1 ரூபாய் அல்லது 5 ரூபாய் நாணயம்) காசு வைத்திருக்க வேண்டும். அதை குழந்தை கையினால் நாம் வாங்கிக் கொள்ள வேண்டும். அதை நாம் பத்திரமாக வைத்துக் கொள்ள வேண்டும். அதனால் செல்வம் பெருகும். இறுதியில் கண்ணாடியைக் குழந்தை கையில் கொடுத்து தன் முகம் பார்க்கச் சொல்ல வேண்டும். குழந்தை சந்தோஷத்தில் சிரிக்கும். அது நமக்கு அம்பாள் மகிழ்ச்சி அடைவதற்குச் சமம். தேங்காய், பழம், சந்தனம், குங்குமம் எல்லாம் கொடுத்து ஆரத்தி எடுத்து விட்டு குழந்தையை எழுந்திருக்கச் செய்ய வேண்டும்.
கோலங்கள்
---------------------
நல்ல முறையில் போடப்படும் கோலங்கள் மனிதர் மட்டுமல்லாது தேவதைகளையும் ஆகர்ஷிக்கக் கூடியன. முறையாகக் கோலங்கள் போட்டால் லக்ஷ்மிகரமாக இருக்கும். தேவதைகளுக்குப் ப்ரீதியை உண்டாக்கக் கூடிய வகையில் யந்திர வடிவில் அந்தக் கோலங்கள் அமைய வேண்டும். பகவான் ஆதிசங்கரர் நமக்கு அவ்வகை கோலங்களை அமைத்துத் தந்திருக்கிறார். நவகிரஹங்களின் சாராம்சங்களை அனுசரித்து, யந்திர உருவங்களை உள்ளடக்கிய கோலங்களைப் போட்டு அந்தந்த கிழமைகளில் அதற்குரிய பொருளை வைத்து அதற்கு எதிரில் குத்து விளக்கு ஏற்றி அந்தந்த கிழமைக்குரிய கிரஹத்தின் ஸ்லோகத்தையும், ஸெளந்தர்யலஹரி ஸ்லோகத்தையும் பக்தியுடன் படிக்க வேண்டும். இப்படிப்பட்ட வீடுகளில் லோகமாதாவின் பரிபூரண கடாட்சம் நிலவி நவகிரஹங்களும் நல்லதே செய்வார்கள்.
முதல் நாள் துர்க்கை அம்மன்
***********************************
1. அம்மன்: மஹேஸ்வரி பாலா
2. மலர்: மல்லிகை
3. இலை: வில்வம்
4. பழம்: வாழை
5. பிரசாதம்: வெண்பொங்கல், கருப்பு காராமணி சுண்டல்
6. விளக்கு: பஞ்சமுகம்
7. ராகம்: தோடி
8. வாத்தியம்: மிருதங்கம்
9. நினைக்க வேண்டிய தெய்வம்: நாகப்பட்டினம் நீலாயதாட்சியம்மன்
10. வஸ்திரம்: சிவப்பு வண்ண பட்டாடை
11. கோலம்: அரிசி மாவு
12. நட்சத்திரம்: ஹஸ்தம்
13. நவகிரகம்: அங்காரகன்
14. கோயில்: வைத்தீஸ்வரன் கோயில்
15. மலர்: சிவப்பு அரளி, செண்பகப்பூ
16. தான்யம்: துவரை
17. வஸ்திரம்: சிவப்பு
18. ரத்தினம்: பவளம்
19. நைவேத்தியம்: துவரம்பருப்பு பொடி சாதம், வெண் பொங்கல்.
பலன்: எல்லோராலும் வேண்டப்பட்டு சந்தோஷம் பெருகும்.
புத ஸ்தோத்திரம்:-
-------------------------------
இதமுற வாழ இன்னல்கள் நீக்கு
புத பகவானே பொன்னடி போற்றி
பதந் தந்தாள்வாய் பண்ணொளியாளனே
உதவியே அருளும் உத்தமா போற்றி.
கன்யா பூஜை:-
-------------------------
2 வயது சிறுமி
பெயர்: குமாரிகா
பலன்: தரித்திர நாசம்.
இரண்டாம் நாள் துர்க்கை அம்மன்
*****************************************
1.அம்மன்: ராஜயோகம் தரும் ராஜராஜேஸ்வரி
2. மலர்: ரோஜா, மல்லிகை, முல்லை
3. இலை: துளசி
4. பழம்: மாம்பழம்
5. பிரசாதம்: புளியோதரை, புட்டு, சுண்டல்
6. விளக்கு: வெண்கல விளக்கேற்றி கூட்டு வழிபாடு
7. ராகம்: கல்யாணி
8. வாத்தியம்: புல்லாங்குழல்
9. நினைக்க வேண்டிய தெய்வம்: காமாட்சி, கருமாரி
10. வஸ்திரம்: பச்சை
11. கோலம்: கோதுமை மாவு
12. நட்சத்திரம்: சித்திரை
13. நவகிரகம்: புதன்
14. கோயில்: திருவெண்காடு
15. மலர்: வெண்காந்தள்(மரு)
16. தான்யம்: பச்சைப் பயிறு
17. வஸ்திரம்: பச்சை
18. ரத்தினம்: மரகதம்
19. நைவேத்தியம்: புளி சாதம், பாசிப்பருப்பு பொடி சாதம்.
பலன்: நல்லவற்றையே பேச நல்லறிவு பெருகும்.
குரு ஸ்தோத்திரம்:-
--------------------------------
குணமிகு வியாழக்குருபகவானே
மணவுள வாழ்வு மகிழ்வுடன் அருள்வாய்
பிரகஸ்பதி வியாழப் பரகுரு நேசா
கிரஹ தோஷமின்றி கடாக்ஷித்தருள்வாய்.
கன்யா பூஜை:-
-------------------------
3 வயது சிறுமி
பெயர்: த்ரிமூர்த்தி
பலன்: தன தான்ய வளம்.
மூன்றாம் நாள் துர்க்கை அம்மன்
***************************************
1. அம்மன்: வளங்களை கொடுக்கும் வாராஹி
2. மலர்: சம்பங்கி
3. இலை: மரு
4. பழம்: பலா
5. பிரசாதம்: சர்க்கரைப் பொங்கல்
6. விளக்கு: பஞ்சமுக விளக்கேற்றி உற்றார் உறவினரோடு பிரார்த்தனை
7. ராகம்: காம்போதி
8. வாத்தியம்: வீணை
9. நினைக்க வேண்டிய தெய்வம்: மீனாட்சி
10. வஸ்திரம்: இளம் பச்சை, மஞ்சள்
11. கோலம்: முத்து (பாசி மணி)
12. நட்சத்திரம்: ஸ்வாதி
13. நவகிரகம்: குரு பகவான்
14. கோயில்: ஆலங்குடி
15. மலர்: முல்லை
16. தான்யம்: கடலை
17. வஸ்திரம்: இளம்பச்சை, மஞ்சள்
18. ரத்தினம்: புஷ்பராகம்
19.நைவேத்தியம்: தயிர் சாதம், சுண்டல், கடலை பொடி சாதம்.
பலன்: செல்வம் பெருகும். துன்பங்கள் மறையும்.
சுக்ர ஸ்தோத்திரம்:-
---------------------------------
சுக்ரமூர்த்தி சுப மிக ஈவாய்!
வக்கிரமின்றி வர மிகத் தருவாய்
வெள்ளிச் சுக்கிர வித்தக வேந்தே
அள்ளிக் கொடுப்பாய் அடியார்க்கருளே!
கன்யா பூஜை:-
-------------------------
4 வயது சிறுமி
பெயர்: கல்யாணி
பலன்: பகை ஒழிதல்.
நான்காம் நாள் மகாலக்ஷ்மி
**********************************
1. அம்மன்: மகாலக்ஷ்மி
2. மலர்: மல்லிகை, முல்லை, வெண்தாமரை,செந்தாமரை
3. இலை: கதிர்ப்பச்சை
4. பழம்: கொய்யா
5. பிரசாதம்: கதம்ப சாதம்
6. விளக்கு: பஞ்சமுக விளக்கு, கூட்டுப் பிரார்த்தனை
7. ராகம்: பைரவி
8. வாத்தியம்: கோட்டு வாத்தியம்
9. நினைக்க வேண்டிய தெய்வம்: விசாலாட்சி
10. வஸ்திரம்: வெள்ளை
11. கோலம்: அட்சதை
12. நட்சத்திரம்: விசாகம்
13. நவகிரகம்: சுக்கிரன்
14. கோயில்: கஞ்சனூர், சூரியனார் கோயில் மற்றும் ரங்கம்.
15. மலர்: வெண்தாமரை
16. தான்யம்: மொச்சை
17. வஸ்திரம்: வெள்ளை
18. ரத்தினம்: வைரம்
19. நைவேத்தியம்: மொச்சைப் பொடி சாதம்.
பலன்: எல்லா நன்மைகளும் பெருகி நவகிரஹங்களின் அருளைப் பெறலாம்.
சனீஸ்வர ஸ்தோத்திரம்:-
-------------------------------------------
சங்கடம் தீர்க்கும் சனி பகவானே!
மங்கலம் பொங்க மனம் வைத்தருள்வாய்
சச்சரவின்றி சாகா நெறியில்
இச் ஜெகம் வாழ இன்னருள் தா! தா!
கன்யா பூஜை:-
-------------------------
5 வயது சிறுமி
பெயர்: ரோகிணி
பலன்: கல்வி வளர்ச்சி.
ஐந்தாம் நாள் மஹாலக்ஷ்மி
*********************************
1. அம்மன்: வளர்ச்சியைக் காட்டும் வைஷ்ணவி
2. மலர்: பாரிஜாதம், முல்லை, செவ்வந்தி
3. இலை: விபூதி பச்சை
4. பழம்: மாதுளை
5. பிரசாதம்: தயிர் சாதம்
6. விளக்கு: நிறைய ஏற்றவும்.
7. ராகம்: பந்துவராளி
8. வாத்தியம்: அல்லரி
9. நினைக்க வேண்டிய தெய்வம்: ஜலஜாக்ஷி
10. வஸ்திரம்: நீலம்
11. கோலம்: கடலை
12. நட்சத்திரம்: அனுஷம்
13. நவகிரகம்: சனி பகவான்
14. கோயில்: திருநள்ளாறு
15. மலர்: கருங்குவளை
16. தான்யம்: எள்
17. வஸ்திரம்: நீலம்
18. ரத்தினம்: நீலம்
19. நைவேத்தியம்: எள்ளன்னம்
பலன்: கடன்கள் நீங்கி செல்வம் கொழிக்கும்.
சூரிய ஸ்தோத்திரம்:-
------------------------------------
சீலமாய் வாழ சீரருள் புரியும்
ஞாலம் போற்றும் ஞாயிறே போற்றி
சூர்யா போற்றி சுந்தரா போற்றி
வீரியா போற்றி வினைகள் களைவாய்
கன்யா பூஜை:-
-------------------------
6 வயது சிறுமி
பெயர்: காளிகா
பலன்: துன்பம் நீங்குதல்.
ஆறாம் நாள் மகாலக்ஷ்மி
******************************
1. அம்மன்: செல்வ வளர்ச்சியைத் தரும் சண்டிகா, இந்த்ராணி
2. மலர்: செம்பருத்தி
3. இலை: சந்தன இலை
4. பழம்: உலர் திராட்சை, நார்த்தம் பழம்
5. பிரசாதம்: தேங்காய் சாதம்
6. விளக்கு: பஞ்சமுக தீபம்
7. ராகம்: நீலாம்பரி
8. வாத்தியம்: பேரி
9. நினைக்க வேண்டிய தெய்வம்:இந்த்ராக்ஷி
10. வஸ்திரம்: தாமரை சிவப்பு
11. கோலம்: பருப்பு
12. நட்சத்திரம்: கேட்டை
13. நவகிரகம்: சூர்யபகவான்
14. கோயில் : ஆடுதுறை
15. மலர்: செந்தாமரை
16. தான்யம்: கோதுமை
17. வஸ்திரம்: தாமரை சிவப்பு
18. ரத்தினம்: மாணிக்கம்
19. நைவேத்தியம்: சர்க்கரைப் பொங்கல்.
பலன்: வீட்டில் செல்வ வளம் பெருகும்.
சந்திர ஸ்தோத்திரம்:-
-------------------------------------
எங்கள் குறைகள் எல்லாம் தீர்க்கும்
திங்களே போற்றி திருவருள் தருவாய்
சந்திரா போற்றி சற்குணா போற்றி
சங்கடந் தீர்ப்பாய் சதுரா போற்றி.
கன்யா பூஜை:-
------------------------
7 வயது சிறுமி
பெயர்: சண்டிகா
பலன்: செல்வ வளர்ச்சி.
ஏழாம் நாள் மகாசரஸ்வதி
*******************************
1. அம்மன்: கலைமகள், சாம்பவி தேவி
2. மலர்: மல்லிகை, தாழம்பூ
3. இலை: தும்பை
4. பழம்: பேரீச்சை, திராட்சை, பானகம்
5. பிரசாதம்: எலுமிச்சை சாதம், பிட்டு, மிளகு வடை, பானகம்
6. விளக்கு: பஞ்சமுகம்
7. ராகம்: பிலஹரி
8. வாத்தியம்: படகம்
9. நினைக்க வேண்டிய தெய்வம்: பத்மாக்ஷி
10. வஸ்திரம்: வெள்ளை
11. கோலம்: மலர்
12. நட்சத்திரம்: மூலம்
13. நவகிரகம்: சந்திரபகவான்
14. கோயில்: திங்களூர்
15. மலர்: வெள்ளலரி (மல்லிகைப்பூ)
16. தான்யம்: பச்சரிசி, நெல்
17. வஸ்திரம்: வெள்ளாடை
18. ரத்தினம்: முத்து
19. நைவேத்தியம்: தயிர் சாதம்.
பலன்: நோயற்ற வாழ்வுடன் எல்லா நலன்களும் பெருகும்.
செவ்வாய் ஸ்தோத்திரம்:-
--------------------------------------------
சிறப்புறு மணியே! செவ்வாய்த் தேவே!
குறைவிலாதருள்வாய் குணமுடன் வாழ
மங்கள செவ்வாய் மலரடி போற்றி
அங்காரகனே அவதிகள் நீக்கு.
கன்யா பூஜை:-
-------------------------
9 வயது சிறுமி
பெயர்: துர்க்கா
பலன்: பயம் நீங்குதல்.
எட்டாம் நாள் மகாசரஸ்வதி
*********************************
1. அம்மன்: நாரஸிம்ஹி
2. மலர்: ரோஜா, சம்பங்கி, மருதோன்றி பூ
3. இலை: பன்னீர்
4. பழம்: திராட்சை
5. பிரசாதம்: பால் சாதம், அப்பம்
6. விளக்கு: பஞ்சமுகம்
7. ராகம்: புன்னாகவராளி
8. வாத்தியம்: கும்மி
9. நினைக்க வேண்டிய தெய்வம்:வனஜாக்ஷி
10. வஸ்திரம்: சிவப்பு
11. கோலம்: காசு
12. நட்சத்திரம்: பூராடம்
13. நவகிரகம்: அங்காரகன்
14. கோயில்: வைத்தீஸ்வரன் கோயில்
15. மலர்: செண்பகப் பூ, சிவப்பு அரளி
16. தான்யம்: துவரை
17. வஸ்திரம்: பவளம்
18. ரத்தினம்: வெண் பொங்கல்
19.நைவேத்தியம்: துவரம்பருப்பு பொடி சாதம்.
பலன்: எல்லோராலும் விரும்பப்பட்டு சந்தோஷம் பெருகும்.
புத ஸ்தோத்திரம்:-
-------------------------------
இதமுற வாழ இன்னல்கள் நீங்கு
புதபகவானே பொன்னடி போற்றீ!
பதந்தந்தாள்வாய் பண்ணொளியாளனே]
உதவியே அருளும் உத்தமா போற்றி.
கன்யா பூஜை:-
------------------------
9 வயது சிறுமி
பெயர்: துர்க்கா
பலன்: பயம் நீங்குதல்.
ஒன்பதாம் நாள் மகா சரஸ்வதி
************************************
1. அம்மன்: கலைமகள், சரஸ்வதி
2. மலர்: தாமரை
3. இலை: மரிக்கொழுந்து
4. பழம்: நாவல்
5. பிரசாதம்: சர்க்கரைப் பொங்கல், கற்கண்டு சாதம்
6. விளக்கு: பஞ்சமுகம்
7. ராகம்: வசந்தா
8. வாத்தியம்: கோலாட்டம்
9. நினைக்க வேண்டிய தெய்வம்: பங்கஜாக்ஷி
10. வஸ்திரம்: பச்சை
11. கோலம்: வாசனைப் பொருட்கள்
12. நட்சத்திரம்: உத்திராடம்
13. நவகிரகம்: புதன்
14. கோயில்: திருவெண்காடு
15. மலர்: வெண்காந்தள் (மரு)
16. தான்யம்: பச்சைப் பயிறு
17. வஸ்திரம்: பச்சை
18. ரத்தினம்: மரகதம்
19. நைவேத்தியம்: புளி சாதம், பாசிப்பருப்பு பொடி சாதம்.
பலன்: நல்லவற்றையே பேசி நல்லறிவு பெருகும்.
குரு ஸ்தோத்திரம்:-
---------------------------------
குணமிகு வியாழக்குருபகவானே
மணவுள வாழ்வு மகிழ்வுடன் அருள்வாய்
பிரகஸ்பதி வியாழப் பரகுரு நேசா
கிரஹ தோஷமின்றி கடாக்ஷித்தருள்வாய்.
கன்யா பூஜை:-
------------------------
10 வயது சிறுமி
பெயர்: சுபத்ரா
பலன்: சர்வ மங்களம் உண்டாதல்.
பத்தாம் நாள் விஜயதசமி
******************************
பிரசாதம்: சுத்த அன்னம் ( வெறும் பச்சரிசி சாதம், உளுந்து வடை, வெண்ணெய், கருப்பட்டி போட்டு சுக்கு வெந்நீர்). இன்றைய பிரசாதத்தை வீட்டிலுள்ள நபர்கள் மட்டுமே உண்ண வேண்டும். பூஜை நடத்தும்போது குறைகள் ஏதும் நடந்திருந்தால் பொறுத்துக் கொள்ளுமாறு வேண்டிக் கொள்ளவும். மனமுருகி நமக்கு வேண்டிய வரங்கள் கேட்கவும், ஒன்பது நாட்களும் அம்பிகையை சந்தோஷமாக ஆராதனை செய்து 10ம் நாள் நம் வீட்டை விட்டு வழியனுப்பும்போது அவள் நமக்கு வேண்டிய எல்லாவற்றையும் தருவாள். அதிகாலையிலேயே ( சூரிய உதயத்திற்குள்) பூஜையை முடித்து விட வேண்டும். ஆரத்தி எடுக்க வேண்டும். மரம் அல்லது செடிக்கடியில் எடுத்த ஆரத்தியை ஊற்ற வேண்டும். கொலு வைக்கப்பட்டிருக்கும் பொம்மையை நல்ல நேரம் பார்த்து நகர்த்தவும். முளைப்பாரியை ஓடுகிற தண்ணீரில் விடவும் அல்லது பசுவிற்குத் தரவும். இந்நாளில் இல்லாதவர்களுக்கு முடிந்த அளவு தானம் செய்யவும்.
- சித்தர்களின் குரல் shiva shangar

Wednesday, September 29, 2021

மகாளய அமாவாசையன்று தர்ப்பணம் கொடுத்துப்பாருங்கள்

 

இந்த வருடம் (06/10/2021) புதன்கிழமை புரட்டாதி மகாளய அமாவாசையன்று நீங்கள் தர்ப்பணம் கொடுத்துப்பாருங்கள். அடுத்த ஆண்டுக்குள் உங்கள் வாழ்க்கைத்தரத்தை நிச்சயம் உங்கள் முன்னோர்களான பித்ருக்கள் தெய்வீக சக்தி கொடுத்து உயர்த்தி இருப்பார்கள்....

மறைந்த நம் முன்னோர்களான பித்ருக்களை நினைத்து அவர்களுக்குரிய நன்றியுணர்வாக வழிபட வேண்டிய மிக முக்கியமான திருநாள். அதாவது அன்று நாம் அவர்கள் தாகத்தை தீர்த்து அமைதிப்படுத்த வேண்டும்.
அதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்? தர்ப்பணம் கொடுக்க வேண்டும்.
தர்ப்பை புல்லை வைத்து, அதில் பித்ருக்களை ஆவாஹனம் செய்து எள்ளும் நீரும் தருவதை தர்ப்பணம் என்பார்கள். தர்ப்பணம் கொடுக்கும் போது காய்கறிகள் 5 வகை (பூசணி, வாழைத்தண்டு தவிர்க்கவும்)
யை தானமாக கொடுக்க வேண்டும். பித்ருக்களுக்கு தர்ப்பணம், சிரார்த்தம் கொடுக்க வேண்டும் என்றதும், பெரும்பாலானவர்கள் அது என்னவோ, ஏதோ என்று நினைக்கிறார்கள்.
சிலருக்குத்தான் அது சரிபட்டு வரும். நமக்கு இதெல்லாம் செய்வது வழக்கம் இல்லை என்கிறார்கள். சிலர் பித்ரு வழிபாட்டை எப்படி செய்வது என்ற குழப்பத்துடனே இன்னும் இருக்கிறார்கள். திதி, தர்ப்பணம், சிரார்த்தம் செய்ய வேண்டும் என்ற ஆசை இருந்தும், அதை முறைப்படி செய்வதற்கு ஐதீகம் தெரிந்து இருக்க வேண்டுமே என்று நினைக்கிறார்கள். ஆனால் இதுபற்றியெல்லாம் கவலைப்பட வேண்டிய அவசியமே இல்லை.
தர்ப்பணம் செய்வது ரொம்ப, ரொம்ப எளிதானது. தர்ப்பணம் கொடுப்பதற்கு வேறு எதுவும் வேண்டாம். உங்கள் அப்பா, அம்மா பெயர், தாத்தா-பாட்டி பெயர் (தந்தை வழி) பூட்டன்-பூட்டி பெயர் (தந்தை வழி) அப்புறம் அம்மாவின் அப்பா அம்மாவின் தாத்தா, அம்மாவின் தாத்தாவுக்கு அப்பா, அம்மாவின் அம்மா, அம்மாவின் பாட்டி, அம்மாவின் பாட்டிக்கு அம்மா ஆகிய பேர் மட்டும் தெரிந்தால் போதும்.
சிலருக்கு தாத்தாவின் பெற்றோர் பெயர் தெரியாமல் இருக்கலாம். அதற்கும் கவலைப்பட வேண்டாம். என் மூதாதையர்களுக்கு இந்த தர்ப்பணம் போய் சேரட்டும் என்று மனதார நினைத்து கையில் உள்ள எள் மீது தண்ணீர் ஊற்றி, அந்த நீரை தர்ப்பைகளின் மீது ஊற்றினால் போதும். அவ்வளவுதான். தர்ப்பண வழிபாடு முடிந்தது.
தை அமாவாசை தினத்தன்று கோவில் குளங்களிலும், பித்ரு வழிபாட்டுக்குரிய புனிதநீர் நிலைகளிலும், காவிரி கரையிலும் இந்த எளிய வழிபாட்டை செய்யலாம். மூதாதையர்களின் பெயரைச் சொல்லி எள் கலந்த நீரை தர்ப்பை புல்களின் மீது ஊற்றுவதில் என்ன கஷ்டம்? இதை கூட பெரும்பாலானவர்கள் மனப்பூர்வமாக செய்வதில்லை.
குறைந்தபட்சம் அது நம் கடமை என்று நினைத்தாவது செய்யக்கூடாதா? இந்த வருடம் நீங்கள் தர்ப்பணம் கொடுத்துப்பாருங்கள். அடுத்த ஆண்டுக்குள் உங்கள் வாழ்க்கைத்தரத்தை நிச்சயம் பித்ருக்கள் தெய்வீக சக்தி கொடுத்து உயர்த்தி இருப்பார்கள். இது பலரும் அனுபவித்து வரும் உண்மை. ஈடு, இணையற்ற அந்த பலன்களை பெற நீங்களும் நாளை தை அமாவாசையன்று பித்ரு வழிபாட்டை மறக்காமல் செய்யுங்கள்.
12 ஆண்டுகள் பலன் கிடைக்கும்.
மஹாளய அமாவாசை. இந்த அமாவாசையன்று செய்யப்படும் பிதுர்தர்ப்பணம் பன்னிரெண்டு ஆண்டுகள் பிதுர்திருப்தி ஏற்படுத்தும்.
என்ன செய்ய வேண்டும்?
அமாவாசை தினத்தன்று 4 முக்கிய செயல்களை செய்தல் வேண்டும்.
(1) புனித நதிகளில் நீராட வேண்டும்.
(2) பித்ரு தர்ப்பணம் செய்ய வேண்டும்.
(3) மந்திர ஜெபம் ஜெபிக்க வேண்டும்.
(4) தானங்கள் கொடுக்க வேண்டும்.
தர்ப்பணம் என்ற வடமொழி சொல்லுக்கு சந்தோஷமடைதல் என்று பொருள்.
தர்ப்பயாமி என்று சொல்லும்பொழுது சந்தோஷமடையுங்கள் என்று பொருள் கொள்ளலாம்.
ஜப்பான் நாட்டை சேர்ந்த இமொட்டோ என்ற ஆராய்ச்சியாளர் நீரில் நேர்மறை சொற்களை பிரயோகித்தபொழுது நீரில் உள்ள மூலக்கூறுகள் ஒரு முறைமையுடனும் ஒழுங்குடனும் வரிசைப்படுத்தப்படுவதை கண்டார்.
அதேசமயம், எதிர்மறைசொற்களை அந்த நீரில் பயன்படுத்தியபொழுது அந்த மூலக்கூறுகள் தாறுமாறாக அமைந்ததைகண்டார்.
இந்த ஆராய்ச்சிதான் இந்த கட்டுரையின் அடித்தளம்.....
தர்ப்பணம் செய்யும்பொழுது நீரை அதிகமாக விட்டு தர்ப்பணம் செய்யவேண்டும் என்று கூறுவார்கள்.
அவ்வாறு தர்ப்பயாமி என்று நமது முன்னோர்களை முன்னிட்டு கூறும்பொழுது அந்த சொற்கள் நீரின் மூலக்கூறுகளை சென்று அடைகின்றது.
நீர் ஆவியாக மாறி அந்த மூலக்கூறுகள் வளிமண்டலத்தில் கலக்கின்றன.
அதாவது, சந்தோஷமடையுங்கள் என்று நாம் கூறிய எண்ண அலைகள் ஆவியாக மாறிய நீரின் மூலக்கூறுகளுடன் வளி மண்டலத்தில் சஞ்சரிக்கின்றன.
அதீத உளவியல் (Para psychology) என்ற பிரிவில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் மரணத்தின் பின் மனிதனின் நிலை பற்றி ஆராய்ந்து வருகிறார்கள்.
அந்த ஆராய்ச்சியில் மரணத்திற்கு பின் ஆழ்மன எண்ண அலைகள் அதிர்வுகளாக நிலை பெறுகின்றன என்று நம்புகிறார்கள்.
மேலே கூறிய இந்த நிகழ்வை மகாபாரதத்தில் அம்பை பீஷ்மரை கொல்வேன் என்று சபதம் செய்து நெருப்பில் வீழ்ந்து மடிந்து மீண்டும் சிகண்டியாக பிறந்து பீஷ்மரை கொன்றாள் என்று கூறும் நிகழ்விலிருந்து புரிந்து கொள்ளலாம்.
அதாவது மனம் மற்றும் எண்ண அலைகள் மறைவதில்லை என்று புரிந்துகொள்ளலாம்.
ஆத்மா சாவதில்லை என்ற கருத்து இந்த இடத்தில் நினைவு கூறத்தக்கது.
நாம் கொள்ளுகின்ற எண்ண அலைகளை பொறுத்து மறுபிறவி வாய்க்கின்றது என்பது நமது கோட்பாடு.
ஜடாபரதர் என்ற முனிவர் சித்தி அடையும் தருவாயில் ஒரு மான் படும் வேதனையை நினைத்தார் என்பதினால் அவர் ஒரு மானாக பிறந்தார் என்று யோகவாசிஷ்டம் கூறுகின்றது.
இதனால்தான் மனமிறக்க வாயேன் பராபரமே என்று பாடினார் தாயுமான சுவாமிகள்.
உடல் உகுத்தவர்கள் ஆழ்மன எண்ணங்கள் மறைவதில்லை என்றும் அவைகள் அதிர்வுகளாக சஞ்சரிக்கின்றன என்றும் அதீத உளவியல் ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.
சில மகான்களின் சமாதி அருகிலோ அல்லது அவர்களின் ஆசிரமத்திற்கோ நாம் செல்லும்பொழுது நமது மனதில் ஏற்படும் ஒரு அமைதி மற்றும் பரவச உணர்சி அவர்களின் ஆன்மீக எண்ணங்கள் தரும் அதிர்வுகள் காரணமாக இருக்குமென்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.
தர்ப்பயாமி என்று கூறி நீரை விட்டு தர்ப்பணம் செய்யும்பொழுது சந்தோஷமடையுங்கள் என்று நாம் திரும்ப திரும்ப சொல்லும் எண்ண அலைகள் நீரின் மூலக்கூறுகளில் சென்றடைந்து நமது முன்னோர்களின் எண்ண அதிர்வுகளை சென்றடைகின்றது என்று நம்புவதற்கு இமொட்டோவின் ஆராய்ச்சி வழிவகுக்கின்றது.
சிரார்த்த காரியங்கள் செவ்வனே செய்தால் வம்ச விருத்தி அதாவது குலம் தழைக்கும் என்று தர்ம சாஸ்திரம் கூறுகின்றது.
சந்தோஷமடையுங்கள் என்று கூறி தர்ப்பணம் செய்வதால் நமது முன்னோர்கள் சந்தோஷமடைந்து நம்மை வாழ்த்துவதோடு மட்டுமல்லாமல் மீண்டும் நமது குடும்பத்தில் பிறக்கின்றார்கள் என்று நம்புவதற்கு இடமுண்டு.
நீரில் உள்ள மூலக்கூறுகள் நாம் சொல்லுகின்ற வார்த்தையினை உள்வாங்கிக்கொள்கின்றது என்பதினால்தான் நமது சடங்குகளில் நீர் ஒரு முக்கியமானதாக உள்ளது.
குறிப்பாக கும்பாபிஷேகம், சஷ்டி அப்த பூர்த்தி போன்றவை உதாரணமாக கொள்ளலாம்.
இந்த ஆராய்ச்சியின் முடிவை அன்றே நமது முனிவர்கள் தமது தவவலிமையினால்கண்டு தெளிந்து நமக்கு கூறியுள்ளார்கள் என்பதை கண்டு நாம் மெய்சிலிர்த்து போகின்றோம்.
சொல்லுக சொல்லைப் பிரிதோர்ச்சொல் அச்சொல்லை வெல்லுஞ்சொல் இன்மை யறிந்து.
நன்றிகள்
- சித்தர்களின் குரல். shiva shangar

Thursday, September 16, 2021

குண்டலினி சக்தி என்றால் என்ன?

குண்டலினி என்பது மனிதன் இறை நிலையை அடைவதற்காக 20000 ஆண்டுகளுக்கு முன்பு சிவபெருமான் பூலோகத்திற்கு வந்து சீடர்களுக்கு கற்பித்ததாக கூறப்படுகிறது.
குண்டலினி சக்திநிலையை அடைந்த மனிதர்களுக்கு குண்டலினியை
எழுப்ப உதவுவதால் ஆழ்நிலை தியானம்,
அறிவொளி,பேரின்ப நிலை எளிதில் விளைகிறது.
குண்டலினி சக்தி நிலையை அடைவதற்கு பல கட்டுபாடுகள் உண்டு. அவை பெண் மேல் மோகம் இருத்தல் கூடாது. எந்த ஒரு தவறான செயல்களிலும் ஈடுபட கூடாது. ஆண்கள் இந்நிலையை அடைய தவ வாழ்கை மேற்கொள்ள வேண்டும்.
குண்டலினி சக்தியானது நம் முதுகுதண்டின் அடிப்பகுதியில் குடிகொண்டுள்ளதாக கூறப்படுகின்றது. ஆனால் அங்கே என்ன? உள்ளது என்று பார்த்தால் வெண்பாஸ்பரஸ் என்ற தனிமமே உள்ளது!
இந்த வெண்பாஸ்பரஸ் தனிமம் காற்று பட்டாலே பற்றி எரியும் தன்மை
கொண்டது. அதேபோல் நம் உடலில்
உளநாக்கிற்கு மேலேயும் அடிவயிற்றுக்கு
கீழேயும் காற்று செல்வதில்லை. இங்கே ஒரு
சாதகன் எதோ ஒரு சாதகம் மூலம் சுழுமுனை
வழியாக காற்றை மூலாதாரத்திற்கு
கொண்டு செல்லும்போது,
வெண்பாஸ்பரஸ் காற்றோடு
வினைபுரிந்து எரிய தொடங்கி அந்த அனல்
மேலே எழுகின்றது. இதுவே யோகமுறையில்
குண்டலினி விழிப்படைதல் ஆகும். நம் உடலின் வெப்பத்தை உண்மையில்
மூலத்தில்தான் கண்டறிய முடியும். அந்த வெப்பத்துடன் இந்த அனலும் சேர்ந்தே மேலே எழுகின்றது. அடுத்து அந்த அனல் மேலே எழும்பி சுவாதிஷ்தானத்தை அடைகின்றது.
சுவாதிஷ்தானத்தில் உள்ள தனிமத்தின் பெயர் கார்பன். மூலாதாரத்திலிருந்து
மேலே எழும்பிய அனலுடன் கார்பன் அணுக்களும் வினைபுரிந்து வெப்பம் அதிகப்படுத்தப்படுகின்றது. வெப்பம் அதிகப்படுத்தலே குண்டலினி எழுவதாக குறிப்பிடபடுகின்றது. இதனால் அனல் மேலும் மேலே எழுந்து மணிபூரகத்தை அடைகின்றது.
மணிபூரகத்தில் உள்ள வினைபுரியும் தனிமத்தின் பெயர் ஹைட்ரஜன். இந்த தனிமத்தின் இயற்கை குணமே வெடிப்பதாகும். எனவே வெப்பநிலை
மேலும் அதிகரித்து அனாகதத்தை அடைகின்றது.
அனாகதத்தில் உள்ள தனிமத்தின் பெயர் சுத்த ஆக்சிஜன். நாம் சுவாசிக்கும் காற்று நைட்ரஜன் கலந்த ஆக்சிஜனாகும். சுத்த ஆக்சிஜன்
எப்பொருளையும் விரைவாக எரித்துவிடும். எனவே இங்கேயும் வெப்பம் அதிகரித்து
விசுத்தியை அடைகின்றது.
ஐயோடின் என்பது விசுத்தியில் உள்ள
தனிமத்தின் பெயராகும். இங்கேயும்
வினைபுரிதலும் வெப்பம் அதிகமடைதலும் நிகழ்ந்து மேலேறுகின்றது. அடுத்ததாக உள்ள
சக்கரத்தின் பெயர் ஆக்கினை.
அங்கே சுத்த நைட்ரஜன் என்ற தனிமம் உள்ளது. மேலே எழுப்பிய அனல் நைட்ரஜன் என்ற தனிமத்துடன் வினைபுரிவதோடு நிற்கிறது என்றும், அதை எழுப்பத்தான் குருவின் உதவி தேவைப்படுகின்றது
என்றும், சொல்லப்படுகிறது.
எனவே ஒரு குருவின் பெருமைகளை வெறும் வார்த்தைகளால் விவரிக்க முடியாது. அவருக்கு நிகர் இந்த பிரபஞ்சத்தில் எதுவும் இல்லை.
அது உங்கள் அனுபவத்திற்கு வரும்போது நன்கு விளங்கும் என்றும் கூறப்படுகிறது.
"சிரம் முட்டும் பொழுதில்
வரம் தட்டும் குருவே
தரம் பார்த்து என்னை
பரம் ஆக்கிடுவான்"
ஆக்ஞா சக்கரத்தின் புருவமத்தி வாசல் திறத்தலே வெற்றிட பூஜ்ஜிய பிரம
நிலையாகும்.
பிரமநிலைக்கு மணிபூரக சக்கரம் விழிப்படைதலே காரணம்.
பக்திநிலைக்கு அனாகத சக்கரம் விழிப்படைதலும்,
முக்தி நிலைக்கு சகஸ்ராரம் விழிப்படைதலும்,
யோக நிலைக்கு சுவாதிஷ்டானம் விழிப்படைதலும்,
ஞானத்தேடலுக்கு மூலாதாரம் விழிப்படைதலும் காரணமாகும்.
நாதத்தின் மீயோலி வெம்மையால் அமிர்தம் சுரப்பதற்கு விசுத்தி விழிப்படைதலே காரணமாகும்.
மேலும் நாம் தியானத்தில் அமரும் போது
குண்டலினியானது புருவமத்தி அல்லது
சகஸ்ராரத்திலும், தூங்கும் போது விசுத்தியிலும் தங்கும்.
அந்த அமிர்தமும் விசுத்தியை தாண்டி கீழிறங்காது. அதாவது விசுத்திதான் உறைவிடம் (உறையும் இடம்).
குண்டலினி எழும்பிய பின் முதலில் நரம்பு
முடிச்சுகள் அவிழ்ந்து ஒவ்வொரு சக்கரமாய்
விழிப்படையும். இதில் உடலில் மாறுபாடாக
அடையாளமாக காண்பது விந்தின்
வெம்மையால் சகஸ்ராரத்தின் கீழ்
உள்ளமூளையின் நரம்பு முடிச்சுகள் அவிழ்ந்து
வெம்மையானது நெருப்பாறாக மாறி வரிவரியாக தடம் இருக்கும்.
மேலும் உடலில் நிரந்தரமாக காணப்படும் அடையாளமாக புருவமத்திக்கு மேல் நெற்றி வகிடுக்கு கீழ் விந்தின் வெம்மையால்
ஒரு பிறைவடிவ "U" நாமத்தடம் விழும்.
இத்தடமானது இப்பூமியில் உடல் விடும் வரை இருக்கும். கை விரலால் தடவி பார்த்து
நெற்றியில் இந்நாமத் தடத்தினையும்,
கபாலத்தில் வரிவரியாக நெருப்பாற்றின் தடம் இருப்பதையும் உணரலாம்.
சகஸ்ரஹாரத்தில் இருந்து நெருப்பாற்று தடத்தின் வழியாக அமிர்தமானது
பிறை வடிவ நாமத்தடம் நீர் வடியும் விளிம்பாக மாறி அதன் வழி புருவமத்தி உட்வாசலான
குதம் சென்று பின் அங்கிருந்தே உண்ணாக்கு வழியாக விசுத்தி சென்று உறைவிடமாய் கொள்கிறது.
மேலும் பொன்னை உரசினாற் போல் மேனியுடைய தேமலானது உடலில் அதிகம் காணலாம்.
அடுத்ததாக இந்திரியம், இரத்தம் வழியாக
உடல் முழுவதும் கலந்ததன் அடையாளமாகிய
உடலில் நறுமணமும், சிறுநீர் மற்றும் வியர்வையில் கூட இந்திரியத்தின் மணமோடு
கூடிய ஓர் பழ வாசனையை அறியலாம்.
உடல் அடையாளமாக சாதாரணமாகவே
உழிழ்நீரானது அதிகமாக சுரப்பதும், மற்றும்
புருவமத்தி உள் வாசலான குதம் உறுத்தலும்,
மேலும் விசுத்தி சக்கரம்தான் அமிர்தமானது
உறையும் இடமாதலால் தொண்டை மத்தியில்
ஏதோ ஒன்று கட்டியாக ஒரு சிறு உருண்டையாக இருந்துகொண்டு எதையும்
நாம் சாதாரணமாக விழுங்கும் போது அங்கு உறுத்தல் ஏற்படும்.
41 மணி நேரத்தில் குண்டலினயை ஏற்றும் மந்திரம்! ஒன்று உள்ளதாக தந்திர நூல்கள் சொல்கிறது.
குண்டலினி பல முறைகளில் ஏற்றப்படுகிறது.
அவை பிராணயாமம், ஆசனம் மற்றும் மந்திரம் இவை மூலம் குண்டலினியை
எழுப்ப செய்யலாம்.
குண்டலினியை எழுப்ப செய்யும் மந்திரம்:
"ஓம் ஏம் ஹிரம் ஹிரம் ஹரம் ஹிரீம் ஹிரம் ஹரா: குல்-குண்டலினி ஜகன்மத் சித்திம் தேஹி தேஹி சுவாஹா"
மந்திரம்சொல்லும் முறை:
தினமும் அதிகாலை 4:30-6:00 மணி நேரத்திற்குள் பத்மாசனம் அல்லது வஜ்ராசனத்தில் 48நிமிடங்கள் மனதிற்குள் மந்திர ஜெபம் செய்யுங்கள். தொடர்ந்து 41 நாட்களில் ஒரு நாளுக்கு ஒரு மணி நேரத்திற்கு மந்திர ஜெபம் செய்யுங்கள்.
இந்த 41நாட்களும் சமநிலையில் இருங்கள்.
அதே நேரத்தில் தினமும் குண்டலினி மந்திரசக்தியால் உங்கள் முதுகில் அதிர்வுகளை உணர்வீர்கள். குண்டலினி சக்தியை தவறான செயல்களுக்கு பயன்படுத்த வேண்டாம்.
குண்டலினி முத்திரை:
இந்த முத்திரை குண்டலினி முத்திரை(அல்லது) ஆண்மை அதிகரிக்கும்
முத்திரை என்று அழைக்கப்படுகிறது. இது உடல் பலத்தை பெருக்கும் முத்திரை. ஆண்மையை பெருக்க இது தான் சிறந்தவழி.
உடலில் உள்ள முக்கிய நரம்புகள் எல்லாம் ஆசனவாய் சுருங்கும் இடத்தில் வந்து குவிகின்றன. அதை சுருக்கி விரிக்கும்போது அவை தூண்டப்பட்டு உடல் சக்தி பெருகுகிறது.
இனிமையான தாம்பத்தியத்திற்கான இரண்டாவது முக்கியமான முத்திரை இது. தந்திராவில் முக்கியமாக கருதப்படுவது
செக்ஸ் மூலம் தியானம் ஆகும். புத்தமதத்
தந்திராவில் வஜ்ராயனத்தில் பெரிதும் இதைப் போற்றுகின்றனர்.
ஒரு பெண்ணும் ஆணும் புணர்வதை சக்தி-சிவத்தின் இணைப்பாகவே தந்திர யோகம் உருவகப்படுத்துகிறது.
குண்டலினி முத்திரை செய்யும் முறை:
இரண்டு கைகளையும் தளர்வாக மூடுங்கள். இடதுகை முஷ்டி
கீழாக இருக்க, அதன் மேல் வலதுகை முஷ்டியை வையுங்கள். இடது ஆள்காட்டி விரலை நீட்டி, வலது கைவிரல்களின் உள்ளே விடுங்கள்.
வலதுகை விரல்களால் இடதுகை ஆள்காட்டி விரலை இறுக்கமாக பற்றிக்கொள்ளுங்கள். வலதுகை கட்டைவிரலை இடதுகை ஆள்காட்டி விரலின் நுனியில் மெதுவாகப்பதியச் செய்யுங்கள்.
இதுவே குண்டலினி முத்திரை ஆகும்.
அமரும் முறை:
பத்மாசனம் (அல்லது) வஜ்ராசனத்தில் அமர்ந்து குண்டலினி முத்திரையை செய்யலாம். முடியாதவர்கள் கால்கள் இரண்டையும் சம்மணமிட்டு அமர்ந்து செய்யலாம். அல்லது நாற்காலியில் அமர்ந்து செய்யலாம். சுவாசம் சீராக இருப்பது அவசியம்.
நேரம் 15-45 நிமிடங்கள் வரை செய்யலாம்.
பலன்கள்:
குண்டலினி சக்தி தூண்டப்படும்.
பாலியல் உணர்வு அதிகரிக்கும். உடலில் புதிய உற்சாகம் பெருகும். உயிர் சக்தி பலமடையும்.
ஆன்மிக வளர்ச்சி உண்டாகும். மதனநீர் சுரப்பு குறைதல் போன்ற பிரச்சனைகள் தீரும்.