Search This Blog

Showing posts with label Education. Show all posts
Showing posts with label Education. Show all posts

Tuesday, November 10, 2020

இந்திய பெண் முதுகலை மருத்துவர் ஆனந்தி கோபால் ஜோஷி


"உங்க பொண்ணை கல்யாணம் பண்ணிக்கிறேன், ஆனா ஒரே கண்டிஷன். அவளை படிக்க வைப்பேன் நீங்க தடுக்க கூடாது " என்ற கோபாலை பார்த்து அதிர்ச்சி அடைந்த யமுனாவின் அம்மா தன் கணவனின் காதில், "இந்த கிறுக்கனை வெளியே அனுப்புங்க. பிரிட்டிஷ் அரசாங்கத்து போஸ்ட் ஆபீஸ் குமாஸ்தாவாக இருக்கும் ஒரே காரணத்திற்காக இவனுக்கு கல்யாணம் பண்ணி வைக்க முடியாது" என்கிறாள். "சும்மா ஒப்புக்கு ஒத்துப்போம். பின்னாடி பாத்துக்கலாம்" என்று சமாதானம் சொல்கிறான்.
கல்யாணமும் ஆகி விடுகிறது. பத்து வயதே ஆன யமுனாவிற்கு பஜ்ஜி சுடுவது பத்து பாத்திரம் தேய்ப்பது போன்ற அரிய கலைகளை அவள் அம்மா சொல்லி கொடுத்து கொண்டிருக்க,  அடுக்களையிலிருந்து அவளை வெளியே இழுத்து ஒரு பத்து புத்தகத்தை கையில் கொடுத்து, இதை படித்து முடித்தால்தான் நான் உன்னுடன் சேர்ந்து வாழ்வேன் என்று சொல்லிவிட்டு போய் விடுகிறான்.
கணவனுடன் சேர்ந்து வாழும் ஆசையில் அம்மாவிற்கு தெரியாமல் ரகசியமாய் படிக்கிறாள். அந்த புத்தகத்தை படித்து முடிப்பதற்குள் அவள் வயதுக்கே வந்து விடுகிறாள்.
இனி இந்த பெண்ணை வீட்டில் வைத்திருக்க முடியாது, நீங்கள் கூட்டிக்கொண்டு சென்றாக வேண்டும் என்று கட்டாய படுத்தி யமுனாவை கோபாலுடன் அனுப்பி வைக்கிறார்கள்
முதல் இரவு அறைக்குள் இருவரையும் தள்ளி தாளிட்டு, இந்த கிறுக்கனை நம்ப முடியாது என்று கதவில் காதை வைத்து உள்ளே எதாவது நடக்கிறதா என்று ஒட்டு கேட்க ஆரம்பிக்கிறாள் யமுனாவின் அம்மா.
அதை அறிந்த கோபால் கட்டிலை தன் கையை வைத்து ஆட்டியபடி, " நீ படித்த 10 ஆம் பெருக்கல் டேபிளை சொல்லு " என்று பள்ளி அறையை பரிட்சை அறை ஆக்குகிறான்.
அவள் முப்பதாவது டேபிளையே அனாசயமாக சொல்லிவிட்டு
"கட்டிலை ஆட்டாமலே கேட்கலாம்ல" என்று அப்பாவியாய் கேட்பவளை ஆனந்தமாய் பார்த்து, "இன்று முதல் உன் பெயர் கரைக்குள் அடங்கும் யமுனா அல்ல. கரையில்லா ஆனந்தி" என்கிறான். 
தினமும் இரவு பள்ளி அறையில் இவன் பாடம் சொல்லி கொடுக்கிறான். வேண்டா வெறுப்பாய் கற்கிறாள். காலை முதல் வீட்டு வேலை செய்து களைப்பாக இருப்பதாக சொல்லி படிக்க முடியாது என்று அடம் பிடித்து  தூங்க ஆரம்பிக்கிறாள்.
மறுநாள் எழுந்து பார்த்தால் அவனே சமையல் வேலையை முடித்து வைத்து "இப்போ என்ன செய்வ?" என்பதை போல் பார்த்து விட்டு வேலைக்கு செல்கிறான். இரவு வந்த பொழுது அவள் தூங்கி கொண்டிருப்பதை பார்த்து கோபமாகி,  எழுப்பி அறைய போகும் பொழுது தடுத்து கர்ப்பமாய் இருப்பதாக சொல்லிறாள்.
கர்ப்பமாய் இருப்பதை விட இந்த சாக்கில் படிக்காமல் இருக்கலாம் என்று சந்தோசம் ஆகிறாள்.  அவளை ஒரு ஆங்கிலேய ஆண் கைனக்காலஜிஸ்டிடம் கூட்டி செல்கிறான். அவள் மிகவும் சங்கோஜப்படுகிறாள்.
"பெண் டாக்டராய் இருந்தால் நன்றாக இருக்கும்" என்கிறாள் திரும்பி வரும் பொழுது. "பெண்கள் படித்தால்தானே?" என்கிறான் புன்னகையுடன்.
இவளுக்கு பிரசவம் பார்த்த கையோடு தன் சொந்த ஊருக்கு விடுப்பில் போகிறார் அந்த டாக்டர்.
பத்தாவது நாளில் குழந்தை மிகுந்த காய்ச்சலில் அழுது கொண்டே இருக்கிறது. பக்கத்தில் வேறு ஆங்கிலேய மருத்துவர்கள் இல்லாததால் ஒரு கை வைத்தியரை கூப்பிட்டு வருகிறான். அவனிடம் மகிழ்ச்சியாக,  அரை மணி நேரம் முன்பு வரை கத்திக்கொண்டிருந்த தன் மகள் இப்பொழுது அமைதியாக தூங்குகிறாள் என்றாள். நாடியை பார்த்து விட்டு இறந்து விட்டதாக கூறுகிறான். அதிர்ச்சியில் உறைகிறாள்.
"குழந்தையை காப்பாற்ற முடியாமல் போன காரணம் என்ன? " என்று கோபாலிடம் கேட்டு புலம்புகிறாள். படித்த டாக்டர் பக்கத்தில் இல்லாததே என்கிறான். அவள் கண்களை துடைத்து கொண்டு, ஒரு உறுதியுடன், "என்னை டாக்டர் ஆக்குங்கள்" என்கிறாள்.
அவளை பள்ளியில் சேர்ப்பதற்காக அலைந்து திரியும் இவனை "மனு நீதியை மதிக்காத இவனெல்லாம் பிராமணன் இல்லை, பித்தன்" என்று ஊர் பழிக்கிறது.
1880 இல் கிறிஸ்டியன் மிஷனரிகளே பெண்களுக்கான பள்ளிகளை நடத்தி வருகிறது. பெரும்பாலும் அது வெள்ளைய பெண்களுக்கே. 
இவன் விடுவதாக இல்லை. அந்த பள்ளியின் பாதரை பார்த்து,  இயேசு அடிக்கடி கனவில் வருவதாகவும், தான் கிருஸ்துவத்துக்கு மாற விரும்புவதாகவும், அதை புரிந்து கொள்ளும் அளவிற்கு தன் மனைவிக்கு படிப்பறிவு இல்லை, அவளை பள்ளியில் சேர்ந்து படித்தால் அதை புரிந்து கொண்டு தான் குடும்பத்துடன் கிறிஸ்துவத்திற்கு மாற உதவியாய் இருக்கும் என்று புருடா விட்டு சீட்டை வாங்கி விடுகிறான்.
சீட்டு வாங்கினாலும் சீட்டு இல்லை. கருப்பு பெண் என்று பழிக்க பட்டு தரையில் உட்கார வைக்க படுகிறாள். அவள் அதை பொருட் படுத்தாமல் படிப்பில் முனைப்பாய் இருக்கிறாள்.
அதற்குள் ஊர் பஞ்சாயத்து கூடி, மனு தர்மத்தின் படி பெண்கள் படிப்பது பாவச்செயல் என்பதால் இவன் குடும்பத்தை தீண்ட தகாத குடும்பமாய் அறிவிக்கிறது.
தெரியாமல் ஒரு முறை பெஞ்சில் உட்கார்ந்து விட்டதனால் இவளை சீட்டை கிழித்து வீட்டுக்கு அனுப்புகிறது பள்ளி. ஒரே சமயத்தில் மத மற்றும் இன பேதங்களால் இரு முனையிலும் அவமான படுத்த படுகிறாள்.
இவர்கள் என்ன நம்மை புறக்கணிப்பது. நாம் இவர்களை புறக்கணிப்போம் என்று மஹாராஷ்டிரத்தை விட்டு கல்கத்தாவிற்கு வந்து இவளை பள்ளி படிக்க வைக்கிறான்.
அமெரிக்கா நாட்டில் உள்ள பல்கலை கழகங்கள் மற்றும் மிஷனரிகளுக்கு சலிக்காமல் கடிதம் எழுதுகிறான்.
நியூ ஜெர்சியில், பல் வலி தாங்க முடியாமல் இருக்கையில் நெளிந்து கொண்டிருக்கிறாள் தியோடிஸியா.
அந்த பல் டாக்டருக்கோ கூட்டம் அதிகம், காத்திருந்துதான் ஆக வேண்டும் என்று அலுத்துக்கொண்டே அந்த வரவேற்பு அறையில் உள்ள அந்த பத்திரிக்கையை எடுத்து உத்தேசமாக ஒரு பக்கத்தை பிரித்தால்,  அதில் ஆனந்தி என்ற இந்திய  பெண் மருத்துவ படிப்பு படிக்க வாய்ப்பில்லாமல் சிரம படுவதை பற்றி அவள் கணவன் எழுதிய கடிதத்தை வைத்து ஒரு கட்டுரையை படித்த ஆச்சரியத்தில்,  அவளுக்கு பல் வலியே மறந்து,  அந்த முகம் தெரியாத ஆனந்தி மேல் ஒரு நேசம் வந்து விட்டது.
அவர்கள் விரைவில் கடித நண்பர்கள் ஆனார்கள். தியோடிஸியை சித்தி என்றே அழைப்பாள் ஆனந்தி. அது தியோடிஸிக்கு விநோதமாகவும், மிகவும் பிடித்தும் இருந்தது. அவள் ஆனந்திக்கு பென்சில்வேனியா மருத்துவ காலேஜில் சேருவதற்கு உதவி செய்தாள்.
இவள் அமேரிக்கா பயணப் படுவதற்கு அதே மனு தர்மத்தை வைத்து பெண் படிப்பே பாவம் அதுவும் கடல் கடந்து படிப்பது பெரும் பாவம் என்று கலாட்டா செய்தவர்களை பார்த்து
"ஹிந்து பெண் டாக்டர்கள் இல்லாததாலேயே ஹிந்து பெண்கள் பலர் இறக்கிறார்கள். அவர்களை காப்பதற்காக நான் படிக்க போகிறேன். ஹிந்து பெண்கள் சாவதை வேடிக்கை பார்ப்பதுதான் உங்கள் தர்மம் என்றால் அதை ஏற்க போவது இல்லை " என்று தெளிவாக சொல்லி விட்டு படகு எறியவளை என்ன சொல்லி தடுப்பது என்று ஸ்தம்பித்தது, அந்த கும்பல்.
அமெரிக்கா சென்று டாக்டர் மட்டும் அல்ல எம். டி ஓ. ஜி யும் முடித்து விட்டு ஊர் திரும்பிய போது அதே கும்பல் அவளை தன் தலை மீது தூக்கி வைத்து கொண்டாடியது.
டிபி யில், தன் 22 ஆம் வயதில் மரண படுக்கையில், "நான் மெனக்கெட்டதெல்லாம் வீணாகி விட்டதே. பலருக்கும் மருத்துவம் பார்க்க முடியாமல் இறக்க போகிறேனே?" என்று விரக்தி அடையும் பொழுது, கோபால் சொல்கிறான் " நீ வீண் அல்ல. துருவ விண்மீன். உன்னை வழிகாட்டியாக கொண்டு, கோடி பெண்கள், பல்வேறு துறைகளிலும் திறக்காத கதவுகளை உடைத்து திறப்பார்கள்"
முதல் இந்திய பெண் முதுகலை மருதுவரானா ஆனந்தி கோபால் இன்றும் பலருக்கு வழிகாட்டியே.
( படம் : ஆனந்தி கோபால், மொழி : மராத்தி, உபயம் : zee 5 )

Thursday, October 29, 2020

“Dark” personality traits

The term dark personality is fairly self-explanatory. It refers to anyone with a less empathetic personality than others. These characters are negative because they display errant or even sociopathic behaviors.

The professional definition of the phrase goes deeper than the one above. Psychologists refer to it as the study of distinct personality types. They explore the Dark Triad, a subject that concentrates on the three negative traits of narcissism, Machiaveillanism, and psychopathy. These experts study, in addition, people with psychopathic and sociopathic tendencies.

 "Psychologists have long discussed the idea that there exists a set of “dark” personality traits alongside the more benign Big Five — so much so, in fact, that one team of researchers argued that too much time had been spent pondering the darker side of human nature and that a “Light Triad” was needed to counteract it.

There is also debate around whether such traits — psychopathy, narcissism, Machiavellianism and sadism — are stable, or whether they can be induced.

Narcissists are “grandiose self-promoters who continually
crave attention.” Paulhus notes that: “You have undoubtedly been annoyed by
these tiresome braggarts.” Frank Sinatra, the great crooner of my mother’s
generation, was something of a narcissist, a trait he shared with any number of
super-stars in the performing arts, then and now.

Machiavellians, according to Paulhus, are “Master
manipulators… one of them has cheated you out of something valuable—the fact
that you may not have realized until it was too late.” They differ from
narcissists in their incredibly high scores on tests of manipulativeness, and
their inclination to be involved in white-collar crime. The stock swindler
Exchange, only to use his position to bilk his investors out of hundreds of
Bernard Madoff, who worked his way up to the leadership of the New York Stock
millions of dollars, is the classic Machiavellian.

Psychopaths, as Paulhus notes, are “arguably the most
malevolent,” scoring high on measures of callousness, impulsivity, manipulativeness,
and grandiosity, thus being dark across the board. They often harm others as
way. Their impulsiveness makes them less adept at the white-collar crime of the
they go about seeking thrills with little concern for who gets hurt along the
in their way. Charles Manson and Whitey Bulger are classic cases of psychopathy
Bernie Madoff variety and often inclines them towards violence when others get
nevertheless leading to costs for those who are drawn close to them.
(see Do You Have Criminal Genes?). But Paulhus notes that there are many people
whose psychopathy is low enough to keep from landing in jail, while

What is especially troubling about this first set (the
original “Dark Triad”) is that they are often socially adept, and can make excellent
first impressions. For example, they do better on job interviews than ordinary
greater willingness to show off their strengths to strangers while playing it
people, advantaged by their lack of anxiety about the opinions of others, and
smooth and comfortable.

Everyday sadists share the trait of callousness with the
first three types. Still, they are distinguished not by their impulsiveness or
manipulativeness (which are in the normal range), but instead by their
such as police officers or the military, where they can harm others in a
enjoyment of cruelty. As Paulhus notes, everyday sadists may be drawn to jobs
personnel are sadistic, but simply that their ranks may have a higher than an average
legitimate guise. Paulhus is not saying, incidentally, that all law enforcement number of everyday sadists (who, as noted by a police official interviewed
recently on NPR, can do great damage to police-community relations).


The most famous exploration of the question is almost certainly Zimbardo’s Prison Experiment, which claimed that being in a powerful position over others — in this case, acting as a prison guard — could induce sadistic behaviour in apparently non-sadistic people. The experiment’s influence is undeniable; it’s even been made into a film. But it has also been subject to criticism, casting some doubt over the extent of its findings.
Now a new paper in Personality and Individual Differences has joined the conversation, examining whether sadistic tendencies can be induced. The study finds that they can — particularly in people who already have some level of sadistic interest — but leaves a question mark over what that might mean for real world behaviour."
Sociopaths
First of all is the sociopath. These individuals are products of the environment. Sociopaths behave in negative ways because they have gone through trauma. Their sociopathic conduct serves as a coping mechanism; as a result, they respond poorly in violent or sexual situations.

Key Points

The Dark Triad personality traits – narcissism, psychopathy and Machiavellianism – can be toxic and damaging in the workplace. But be aware that someone exhibiting these traits may initially be a high achiever and potentially charming, conscientious and achievement-oriented.

There are tools for identifying Dark Triad traits, but it is important to recognize that, unless you are also a skilled psychologist, you should not make a diagnosis on your own. If you do have any concerns about a team member's negative behaviors, you should raise them with your HR department. Your responsibility is to manage the impact of negative behaviors in the workplace, rather than try to diagnose and pin a psychological label on someone.

Conflict management, assertiveness and emotional intelligence skills will all be useful in managing someone with Dark Triad traits. However, given the risk these behaviors bring and their potential for causing serious damage to the organization, these behaviors must be addressed actively and vigorously

With thanks to Dr Peter Jonason, senior lecturer University of Western Sydney. For more information about the Dark Triad, visit www.peterjonason.com.

References

Hogan, R. (2007). Personality and the fate of organizations. Mahwah, NJ: Erlbaum.

Paulhus, D.L. (2014). Toward a taxonomy of dark personalities. Current Directions in Psychological Science, 23, 421– 426.

Paulhus, D. L., & Jones, D. N. (in press). Measures of dark personalities. In G. J. Boyle, D. H. Saklofske, & G. Matthews (Eds.), Measures of personality and social psychological constructs. San Diego, CA: Academic Press.

Thanks:  

Robert Stonjek, 
https://www.psychologytoday.com/,https://www.mindtools.com/,https://www.learning-mind.com/

Wednesday, October 28, 2020

பதினெட்டாம் நூற்றாண்டில் யாழ்ப்பாணம்

பதினெட்டாம் நூற்றாண்டில் யாழ்ப்பாணம் எப்படி இருந்திருக்கும்?மேரி லீட்ச் எழுதிய "சிலோனில் ஏழு ஆண்டுகள்"என்ற இப் புத்தகம் 1890ஆம்ஆண்டில்வெளியிடப்பட்டது!அதில்,அன்றைய யாழ்ப்பாணத்தை படம் பிடித்து காட்டியிருந்தது!

















 

Friday, October 23, 2020

The extent to which our behavior is influenced by our genes.


"Many of us believe we are masters of own destiny, but new research is revealing the extent to which our behavior is influenced by our genes.
It's now possible to decipher our individual genetic code, the sequence of 3.2 billion DNA "letters" unique to each of us, that forms a blueprint for our brains and bodies.
This sequence reveals how much of our behavior has a hefty biological predisposition, meaning we might be skewed towards developing a particular attribute or characteristic. Research has shown genes may predispose not only our height, eye color or weight, but also our vulnerability to mental ill-health, longevity, intelligence and impulsivity. Such traits are, to varying degrees, written into our genes—sometimes thousands of genes working in concert.
Most of these genes instruct how our brain circuitry is laid down in the womb, and how it functions. We can now view a baby's brain as it is built, even 20 weeks before birth. Circuitry changes exist in their brains that strongly correlate with genes that predispose for autism spectrum disorder and attention deficit-hyperactivity disorder (ADHD). They even predispose for conditions that might not emerge for decades: bipolar disorder, major depressive disorder and schizophrenia."

Robert Stonjek

Wednesday, October 21, 2020

Nanoparticle eats away plaque that causes heart attacks

Michigan State University and Stanford University scientists have invented a nanoparticle that eats away—from the inside out—portions of plaques that cause heart attacks. 
Atherosclerosis is a cardiac-based disease where plaque builds up inside the body’s arteries, the blood vessels responsible for carrying oxygen-rich blood to the heart and other organs of the body. Plaque is made up of white immune blood cells, known as macrophages, fat, cholesterol, calcium, and other substances found in the blood. As this plaque hardens it narrows the arteries, limiting the flow of oxygen-rich blood around the body. This, in turn, can lead to serious problems, including heart attack, stroke, or even death.
The team states their nanoparticle reduces and stabilizes plaque, providing a potential treatment for atherosclerosis, a leading cause of death in the United States. The study is published in the journal Nature Nanotechnology.


Macrophages are a type of white blood cell in our immune system, which engulf and digest cellular debris, foreign substances, microbes, cancer cells, and anything else that does not have the type of proteins specific to healthy body cells.

Once inside the macrophages of arterial plaques, the nanoparticle delivers a drug agent that can stimulate the cell to engulf and eat cellular debris, removing the diseased/dead cells. By reinvigorating the macrophages, plaque size is reduced.


Future clinical trials on the nanoparticle are expected to reduce the risk of most types of heart attacks, with minimal side effects due to the unprecedented selectivity of the nanodrug, according to Smith. His research is focused on intercepting the signaling of the receptors in macrophages and sending a message via small molecules using Nano-immunotherapeutic platforms. Previous studies have acted on the surface of the cells, but this new approach works intracellularly and has been effective in stimulating macrophages.

"We found we could stimulate the macrophages to selectively eat dead and dying cells – these inflammatory cells are precursor cells to atherosclerosis – that are part of the cause of heart attacks," Smith said. "We could deliver a small molecule inside the macrophages to tell them to begin eating again."

This approach also has applications beyond atherosclerosis, he added.

"We were able to marry a groundbreaking finding in atherosclerosis by our collaborators with the state-of-the-art selectivity and delivery capabilities of our advanced nanomaterial platform," explained Smith. "We demonstrated the nanomaterials were able to selectively seek out and deliver a message to the very cells needed. It gives a particular energy to our future work, which will include clinical translation of these nanomaterials using large animal models and human tissue tests. We believe it is better than previous methods."

Smith has filed a provisional patent and will begin marketing it later this year.

Thanks https://www.sciencenews.org/article/nanoparticles-beat-back-atherosclerosis https://phys.org/news/2020-01-nanoparticle-chomps-plaques-heart.html,https://www.nhlbi.nih.gov/news/2020/plaque-eating-nanoparticles-may-help-prevent-heart-attacks

Saturday, September 12, 2020

கள்ளத்தோணி (பல விடயங்களை தகுந்த ஆதாரங்களுடன் வெளிக்கொணரும் சரவணன்)



ஓர் எழுத்தாளர் ஓர் விடயத்தை தகுந்த மூல ஆதாரங்களுடன் வெளிப்படுத்தும்பொழுதே அது வலிமையான ஆவணமாக உருமாற்றம் பெறும். சமூக, அரசியல், வரலாற்று விடயங்களை எழுதுபவர்கள் கவனத்திற்கொள்ள வேண்டிய மிகமுக்கியமான விடயமாக இது உள்ளது.
அவ்வகையில் இலங்கையின் சமூக, அரசியல், வரலாற்றுத் தளங்களை அடிப்படையாகக் கொண்டு பேசாப் பொருளை பேசுபொருளாக்கிப் பல விடயங்களை தகுந்த ஆதாரங்களுடன் வெளிக்கொணரும் சரவணன் அவ்வாறான வலுவான நூல்களை எழுதுபவர்களில் குறிப்பிடத்தக்க இடத்தை வகிக்கின்றார் என்றால் மிகையல்ல இவரது படைப்புகளில் கண்டிக் கலவரம் 1915, தலித்தின் குறிப்புகள் வரிசையில் இந்த கள்ளத்தோணி நான் வாசித்த மூன்றாவது நூலாக இணைகின்றது.
மலையகத்தை அடிப்படையாகக் கொண்ட தமிழர்கள் என்று இலங்கைக் கரையை அடைந்தனரோ அன்று தொடக்கம் இன்று வரை அவர்களிற்கு இழைக்கப்பட்டுவரும் சமூக அநீதிகளை இந்நூலில் பிரதானமாக கோடிட்டுக் காட்டியுள்ள நூலாசிரியர் அவற்றிற்கான நீதியையும் வேண்டி வலியுறுத்தி நிற்கின்றார். இதற்குப் பக்கபலமாக இறுதி அத்தியாயங்களில் தான் எதிர்கொள்ளும் இடர்பாடுகளையும் எழுதத் துணிந்தமை "எண்ணித் துணிக கருமம்....." எனும் குறள் வரிகளிற்கேற்ப ஆசிரியர் தனது கருத்தில் கொண்டுள்ள அர்ப்பணிப்பை எடுத்துரைக்கின்றது.
வலிமை மிக்கவன் தனது எதிரி தன்னைப் பற்றி ஏதாவது உரைக்கும்பொழுது தனது எதிரியை பழிவாங்குவதாக எண்ணி அவனது வலிமை குறைந்த அயலவனை பழிவாங்குவது போல் இலங்கையில் மலையகத் தமிழர்களிற்கெதிராக 1939ல் நாவலப்பிட்டியில் ஏற்பட்ட முதலாவது இனக்கலவரத்தையும் அதன்நீட்சியாக தொடர்ந்து வந்த அரசுகள் ஏற்படுத்திய சட்டங்கள், ஒப்பந்தங்கள், நடவடிக்கைகள் வரை பல விடயங்களை சுட்டிக்காட்டி அவற்றால் ஏதுமறியா அப்பாவி மக்கள் வஞ்சிக்கப்பட்ட விதத்தையும் வலியுடன் வெளிக்காட்டியுள்ளார்.
தேசங்கள் என்றும் தமது நலன்களுக்கே முன்னுரிமை வழங்கும் எனும் உண்மையை 'கச்சத்தீவு' இலங்கைக்கு வழங்கப்பட்ட வரலாற்றினூடாக இந்நூல் அழகாக வெளிக்காட்டியுள்ளது, வடக்கு கிழக்கை ஆதாரமாகக் கொண்ட மக்களும் வரலாற்றிலிருந்து எதிர்கால நகர்வு தொடர்பான பாடங்களைக் கற்க வேண்டுமென்பதனை இது வலியுறுத்துகின்றது.
இதற்கப்பால், தலைமுறை தலைமுறையாக உரிமைகள் மறுக்கப்பட்டு, இழக்கப்பட்டு,வாய்ப்புகளின்றி, தேசங்களாலும் தேசிய இனங்களாலும் பந்தாடப்பட்ட மக்கள் தங்களை ஏன் மலையகத் தமிழர் என ஓர் தனித்தன்மையுள்ள இனமாகக் காட்ட வேண்டிய அவசியமேற்பட்டதையும் அதற்கான காரணங்களையும் வெளிக்கொணரும் இந்நூல் வரலாற்றை கற்கத் தூண்டுபவர்களிற்கும் வரலாற்றினூடே பாடங்களை கற்க வேண்டிய அவசியமுள்ளவர்களிற்கும் ஓர் பிரதான உசாத்துணையாகவே உள்ளது என்றால் மிகையல்ல.
வரலாற்றில் மலையகத்தை தளமாகக் கொண்ட தமிழர்களிற்கு இழைக்கப்பட்ட அநீதிகள் மறைக்கப்படக்கூடாதவை மட்டுமல்ல அது மன்னிக்கப்பட முடியாதவையுமாகும்.
குறிப்பு :- அனைவருக்கும் பயனுள்ள இந்நூலை இலங்கையிலுள்ள பல புத்தக நிலையங்களில் வாங்குவதற்குரிய வசதிகள் உள்ளன. அனைத்து விடயங்களையும் ஆதாரபூர்வமாக வெளிப்படுத்தியுள்ள இந்நூலின் ஓர் பிரதியை தனிப்பட்ட வகையில் கொள்வனவு செய்வதன் மூலம் எம்மவரை நாமே ஊக்குவிக்க முதற்காரணியாக அமைவோம்.
Sarawanan Komathi Nadarasa
Thanks

Pragash Sinnarajah

கள்ளத்தோணி புத்தகத்தை இவ்வாரம் கொழும்பு BMICH இல் புத்தக விற்பனை மற்றும் கண்காட்சியில் வாங்கி, ஒரே மூச்சில் வாசித்து முடித்தேன்.
முன்னர் நான் அறிந்திராத விபரங்களும் இதில் இருந்தன. குறிப்பாக, 'ப்ரஸ்கேர்டில்' பற்றி நான் அறிந்திருக்கவில்லை.
83 கலவரங்களைத் தொடர்ந்து தமிழ் நாட்டுக்கு இடம் பெயர்ந்து, அதனால் தமது அடையாளங்களைத் தொலைத்து விட்டவர்களில் சிலரைத் தனிப்பட்ட முறையில் நான் அறிவேன்.
இதிலுள்ள 23 கட்டுரைகளும் முக்கியமானவை.
என்னை மிகவும் திருப்திப்படுத்திய மிகச் சமீபத்திய வாசிப்பு இது.

Pathmanathan Mahadevah

Sunday, August 9, 2020

சித்தர் சரநூல் சாஸ்திரம்

 சித்தர் சரநூல் சாஸ்திரம் என்பது சிவன் பார்வதிக்குச் சொல்லி , பார்வதி நந்திதேவருக்குச் சொல்லி, நந்திதேவர் அகஸ்தியருக்குச் சொல்லி, அகஸ்தியர் பதிணென் சித்தர்களுக்கு சொல்லி, சித்தர் பரம்பரை வரும் அனைவருக்கும் இரகசியமாக உபதேசிக்கப்பட்டு வருவது.

சரம் என்றால் மூச்சுள்ளது. அசரம் என்றால் மூச்சில்லாதது. இவையே சித்தர்கள் உலகை அழைப்பதற்குரிய வார்த்தையாக சராசரம் என்று கூறுகிறார்கள். இந்த உலகமே மூச்சை அடிப்படையாக வைத்தது என்பதற்காகவும், அது முட்டையின் வடிவத்தை ஒத்திருப்பது என்பதற்காகவும், அண்ட சராசரம்(அண்டம் என்றால் முட்டை என்று பொருள்) என்று அழைத்து வந்தனர்.

1நிமிடத்திற்கு 15 மூச்சும், 1 மணி நேரத்திற்கு 900 மூச்சும்; 1 நாளிற்கு 21,600மூச்சும் ஓடுகின்றது. உயிர்மெய்யெழுத்துக்கள் 216 என்பது இந்த 21,600மூச்சுக்களையே குறிக்கும் ஒரு மனிதன் தன் வாழ்நாளில் தினமும் 21,600மூச்சுக்கு மிகாமல் உபயோகம் செய்தால் அவனுடைய ஆயுள் 120ஆண்டுகளாகும்.

ஆனால் உட்கார்ந்திருக்கும் போது 12மூச்சும், நடக்கும் போது 18மூச்சும், ஒடும்போது 25 மூச்சும், தூங்கும் போது 32 மூச்சும, உடலுறவின் போதும், கோபம் முதலான உணர்ச்சிகளில் சிக்கும் போது 64 மூச்சும் 1நிமிடத்தில் ஓடுகின்றன. இந்த மூச்சினுடைய அளவு எவ்வளவு மிகுதியாகிறதோ அதற்கு தகுந்தாற் போல் ஆயுள் குறைகிறது.
நாம் செய்யும் காரியங்களில் வெற்றி பெறவும், காரியத்தடை நேராமல் தடுத்துக் கொள்ளவும், பலன்களைச் சொல்வதற்கும், கேள்வி கேட்கும் நபருக்கு காரிய சித்தியாக்குதலையும், இன்னும் பல காரியங்களுக்கும் இந்த சரநூல் சாஸ்திரம் பயன்படுகிறது. சரம் பார்க்கத் தெரிந்தவனே "பார்ப்பான்" என்று அழைக்கப்படுகிறான். சரம் பார்க்கத் தெரிந்தவனிடம் எந்த மோதலையும் வைத்துக்கொள்ளக் கூடாது என்பதற்காகவே "சரம் பார்ப்பவனிடம் பரம் போகாதே" என்று வழக்குச் சொல்லில் கூறுவர். சரமே இறைவன், எனவே அகத்தியர் தனது சரநுநூல் சாஸ்திரத்தில், சரத்தை இறைவனுக்கு சமமாகவும் பஞ்சபூதங்களின் ஒடுக்க ஸ்தானமாகவும் கூறுகிறார். 

சூரிய கலை, சந்திர கலை அவற்றின் வேகம் மற்றும் எண்ணிக்கையைப் பற்றி பார்த்தோம். ஒரு நாளில் ஓடக்கூடிய மூச்சுக்களின் எண்ணிக்கை 21,600 என்று பார்த்தோம். சிதம்பரத்தில் உள்ள பொன்னம்பலத்தில் 64 கை மரங்கள் உள்ளன. இந்த 64ம் 64வகையான கலைகளாகும். 21,600 ஓடுகள் வேயப்பட்டுள்ளன. அவை ஒரு நாளில் ஓடக்கூடிய மூச்சின் எண்ணிக்கையை குறிக்கும். 5 வெள்ளிப் படிகள் உள்ளன. இவை ஐந்தெழுத்து மந்திரமான நமசிவாயத்தினையும் (பஞ்ச பூதங்களையும்) குறிப்பன.

இதையே விதியை மதியால் வெல்லலாம் என்பார்கள். இங்கு மதி என்று கூறப்படுவது புத்தி அல்ல மதி என்றால் சந்திரன் 16 அங்குலம் ஓடக்கூடிய சந்திரகலையை சுருக்க சுருக்க ஆயுள் விருத்தியாகும். எனவே விதி முடிவும் விலகியே போகும்.

நந்தனார் கீர்த்தனையில் எட்டும் இரண்டறியாத மூடன் என்கிறார். 8-என்பது "அ" காரமாக தமிழ் எழுத்துக்களில் குறிக்கப்படுகிறது. 2-என்பது "உ" காரமாக தமிழ் எழுத்துக்களில் குறிக்கப்படுகிறது. இதையே அகார உகாரம் என்று கூறுகின்றார்கள். 8×2=16 அங்குலம் ஓடும் சந்திரகலையை குறிக்கிறது.

"எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்"

அகார(8), உகாரம்(2), யகாரம்(10).

தமிழ் எழுத்துக்களில் எண்ணாகவும் எழுத்தாகவும் திகழ்கின்றனவோ அவையே அகாரம்-ரவி, உகாரம்-மதி, மகாரம்-சுடர், இந்த மூன்றும் சேர்ந்ததே ஓம் என்னும் பிரணவம்.

ரவி, மதி,சுடர் ஆகிய மூன்றிலும் இருப்பது சிகாரம் என்றழைக்கப்படும் நெருப்பு.

"நாயோட்டும் மந்திரம் நமனை வெல்லும்"

"குழவியும் ஆணாம் வலத்தது ஆகில் குழவியும் பெண்ணாம் இடத்தது ஆகில் குழவியும் இரண்டாம் அபானன் எதிர்க்கில்
குழவி அலியாகும் கொண்ட கால் ஒக்கிலே"
- திருமந்திரம் 482

உடலுறவில் இணைகின்ற ஆணுக்கு வலது நாசியில் சுவாசம் நடந்தால் ஆண்குழந்தை தோன்றும். சுவாசம் இடது நாசியில் நடந்தால் பெண் குழந்தை தோன்றும். சுவாசம் சுழுமுனையில் நடந்தால் தோன்றும் குழந்தை அலியாகும். வலது அல்லது இடது நாசியில் சுவாசம் நடந்து அப்போது அபானன் என்ற வாயு எதிர்க்குமானால் இரட்டைக் குழந்தை தோன்றும்.
பிறவியிலேயே கூன், குருடு, ஊமை போன்ற பல குறைகளுடன் குழந்தைகள் பிறப்பதற்கு, காரணங்களை சித்தர்கள் சரநூலில் பல இடங்களில் கூறுகின்றனர். இதையே திருமந்திரத்தில

"மாதா உதரம் மலமிகில் மந்தனாம்
மாத உதரம் சலமிகில் மூங்கையாம்
மாதா உதரம் இரண்டொக்கில் கண்ணில்லை.
மாதாஉதரத்தில்வந்தகுழவிக்கே"
- திருமந்திரம் 481

உடலுறவின் போது பெண்ணின் வயிற்றில் மலம் மிகுந்திருந்தால் தோன்றும் குழந்தைக்கு மூளை வேகமாக செயல்படாது மந்தமாக இருக்கும். பெண்ணின் வயிற்றில் சிறுநீர் மிகுந்து இருந்தால் பிறக்கும் குழந்தை ஊமையாகும். மலம், சிறுநீர் இரண்டும் அதிகமாக இருந்தால் பிறக்கும் குழந்தைக்கு கண் குருடாகும் என்ற திருமூலர் திருமந்திரத்தில் கூறுகின்றார்.

"பாய்கின்ற வாயு குறையிற் குறளாகும்
பாய்கின்ற வாயு இளைக்கின் முடமாகும்
பாய்கின்ற வாயு நடுப்படின் கூனாகும்
பாய்கின்ற வாயு மாத்ர்க்கில்லை பார்க்கிலே"
- திருமந்திரம் 480

ஆணின் உடலிலிருந்து உயிரணுக்கள் வெளியேறும் நேரம் இருவரின் சுவாசமும் சரியான அளவில் இருந்தால் எந்தக் குறைபாடும் இராது. ஆனால் ஆணின் சுவாசம் தேவையான அளவை விட குறைந்து வெளிப்படுமானால் பிறக்கும் குழந்தை குள்ளமாக இருக்கும். சுவாசம் திடமின்றி வெளிப்படுமானால் பிறக்கும் குழந்தை முடமாகும். சுவாசத்தின் அளவு குறைந்தும், திடமின்றியும் வெளிப்பட்டால் பிறக்கும் குழந்தைக்கு கூன் விழும்.

"பாய்ந்த பின் அஞ்சோடிய ஆயுளும் நூறாம்
பாய்ந்த பின் நாலோடி பாரினில் எண்பதாம்"
- திருமந்திரம் 479

உயிரணுக்கள் வெளியேறும் நேரம் ஆணின் சுவாசம் ஐந்து மாத்திரை நேரம் பாய்ந்தால் பிறக்கும் குழந்தை நூறு வயது வரை வாழும். நான்கு மாத்திரை நேரம் ஓடினால் எண்பது வயதுவரை உயிர்வாழும். சுவாசம் வெளிப்படும் மாத்திரை குறைய குறைய ஆயுளும் குறையும்

"கொண்ட வாயு இருவருக்கும் ஒத்தொழில்
கொண்ட குழவியும் கோமளமாயிரும்
கொண்ட நல்வாயு இருவருக்கும் குழறிடில்
கொண்டதும் இல்லை கோல்வினையாட்கே"
- திருமந்திரம் 483

உடலுறவின் போது ஆண் பெண் இருவருக்கும் சுவாசம் சீராக ஒரே அளவாக ஓடினால் தோன்றும் குழந்தை மிக அழகாக பிறக்கும் . சுவாசம் தாறுமாறாக ஓடினால் குழந்தை விகாரமாக பிறக்கும்.

சந்திர கலை சூரியகலை என்றால் என்ன?

சூரியன் உதிக்கும் போது ஓட வேண்டிய திதிகள் குறிப்பிட்டிருந்தோம். சூரியன் உதிக்கும்போது சூரியகலையில் அதாவது வலது நாசியில் ஓட வேண்டிய திதிகளில் காலை 6 மணிக்கு ஓட ஆரம்பித்து ஒரு மணிநேரம் கழித்து சந்திர கலை ஓட ஆரம்பிக்கும். மீண்டும் ஒரு மணிநேரம் கழித்து சூரிய கலை ஓட ஆரம்பிக்கும். இதே போல் சூரியன் உதிக்கும் போது சந்திர கலையில் ஓட வேண்டிய திதிகளில் சூரிய உதயத்தில் சந்திர கலையில் ஒரு மணிநேரம் மூச்சு ஓடி, பின் சூரிய கலையில் ஒரு மணி நேரம் மூச்சு ஓடி இப்படியே மாறி மாறி மூச்சு ஓடிக்கொண்டிருக்கும்.

"நாத விந்து கலாதி நமோ நம
வேத மந்திர சொரூபா நமோ நம
-அருணகிரிநாதர் திருப்புகழ்

நாதத்திற்கும் (பெண்களிடமுள்ள ஜீவசக்தி) விந்துவிற்கும் (ஆண்களிடமுள்ள ஜீவசக்தி) முதல் வணக்கத்தைத் தெரிவித்த அருணகிரிநாதர் பின்னரே வேத மந்திர சொரூபனான இறைவனுக்கே வணக்கம் தெரிவிக்கிறார். இதையே திருப்புகழில்

"அருகுநுனி பனியனைய சிறிய துளி
பெருகியொரு ஆகமாகிய பாலரூபமாய்"
என்று கூறுகிறார். ஒரு விந்துவில் உள்ள இலட்சக்கணக்கான உயிரணுக்கள் ஒவ்வொன்றும் மானிடனாகி 120 வருடங்கள் வாழ வைக்கக்கூடிய உயிர்ச் சக்தியைப் பெற்றிருக்கின்றன. எனவே "விந்து விட்டவன் நொந்து கெட்டான்" என்று சித்தர்கள் கூறுகின்றனர். நாம் அணியும் திருநீறு வெள்ளை நிறமாக இருந்து இந்த விந்தையே குறிக்கிறது. குங்குமம் சிவந்த நிறமான பெண்களின் நாதத்தைக் குறிக்கிறது.

இதையே உலக இயக்கம் என்பதால் குங்குமமும், திருநீறும் நெற்றியில் அணிகிறோம். எல்லோருமே நாத விந்து சொரூபர்களே.....

ஆண், பெண்களின் சேர்க்கையே லிங்க சொரூபம். இடப் பாகம் சக்தியென்பதால் லிங்கத்தின் இடது பாகம் நீர்த்தாரை வைக்கப்பட்டுள்ளது. சிவலிங்கத்தின் அந்த இடப்பாகத்தையே நோக்குவது போல இடதுபுறம் நந்தி சாய்த்துப் பார்க்கும் படி அமைக்கப்பட்டுள்ளது. சக்தியான சந்திரகலையை முதலில் குறைக்க வேண்டும் என்பதற்காகவே, இது கோயிலில் அமைப்பாக காட்டப்பட்டுள்ளது.

(சீனத்து அக்கு பஞ்சர் முறை நமது போகர் சித்தரால் கண்டுபிடிக்கப்பட்டு சீனத்தில் கையாளப்பட்டு வருகிறது அதில் "யின்" (yin)என்றால் இடப்பக்கம் என்றும் பெண் தன்மை என்றும், "யாங்" (yang)என்றால் வலப்பக்கம் என்றும் ஆண் தன்மை என்றும் கூறப்பட்டுள்ளது.)

"மூலமான மூச்சதில் மூச்சறிந்து விட்டபின்
நாலு நாலு முன்னிலொரு நாட்டமாகி நாட்டில்
பாலனாகி நீடலாம் பரப்பிரம்மம் ஆகலாம்.
ஆலமுண்ட கண்டராணை அம்மையாணை உண்மையே"

"இருக்கலாம் இருக்கலாம் அவனியிலே இருக்கலாம்
அரிக்குமால் பிரம்மனும் அகண்ட மேழ் அகற்றலாம்
கருக்கொளாத குழியிலே காலிடாத கண்ணிலே
நெருப்பறை திறந்த பின்பு நீயும் நானும்"
- சிவ வாக்கியர்

மேற்கண்ட பாடல்களில் மூலமான மூச்சை சரியான படி அறிந்து அளவிட்டு 4 அங்குலமட்டில் ஓட விட்டால் பாலன் போன்ற தோற்றமும், பரப்பிரம்மான இறைவனுக்குச் சமமாகவும் ஆகலாம் என்று சிவவாக்கியர் இறைவன், இறைவி மீது ஆணையிட்டுக் கூறுகிறார்.

இந்த அவனியான பூமி இருக்கும் வரை, அரி, மால் பிரம்மன், அண்டங்கள் இவற்றைக் கூட படைக்கலாம், அழிக்கலாம் காலிடாத கண்ணிலே என்ற மூச்சுவிடாத (கால் என்றால் காற்று) நிலை அடைந்தால் நெற்றிக்கண்ணில் நெருப்பறை திறக்கும். ன்நெருப்பறை திறக்குமானால் , நீ நான் அனைவரும் ஈசனே....

உண்ணும் போது உயிரெழுத்தைஉயரேவாங்கு
உறங்குகின்ற போதெல்லா மதுவேயாகும்.
பெண்ணின் பாலிந்திரியம் விடும்போ தெல்லாம்
பேணி வலம் மேல் நோக்கி அவத்தில் நில்லு
தின்னுங் காயிலை மருந்தும் அதுவேயாகும்.
தினந்தோறும் அப்படியே செலுத்த வல்லார்
மண்ணு}ழி காலமட்டும் வாழ்வார் பாரு.
மரலிகையில் அகப்படவு மாட்டார் தாமே.
- அகத்தியர்தம் ஞானப்பாடலில் இவ்வாறு கூறுகிறார்.

எல்லா வைத்திய முறைகளும் உடலில் ஏற்படுகின்றன பிணிகளைப் போக்கிக் கொள்ளும் முறைகளைப் பற்றிமட்டுமே கூறுகின்றன. அதிலும் சில நோய்கள் மனித குலத்திற்கும், விஞ்ஞானத்திற்கும் சவாலாகவே அமைந்திருக்கின்றன.

ஆனால் சித்தர்களோ உடலில் ஏற்படுகின்ற வியாதிகளின் எண்ணிக்கை 4448 வியாதிகள் என்று குறிப்பிட்டுச் சொல்வதுடன் அவற்றைப் போக்கும் முறைகளையும் தெளிவுபட விளக்கியுள்ளனர்.

இதற்கு மேலும் ஒருபடி சென்று மரணம் என்பதும் ஒரு பிணி என்று கூறுவதுடன் மரணம் மாற்றும் முறைகளையும், மரணமிலாப் பெருவாழ்வு என்பதனையும் விளக்கிச் சொன்னதுடன் கடைபிடித்து வெற்றியும் கண்டுள்ளனர்.

குரு குல கல்வி முறையில் இவையெல்லாம் ஒரு காலத்தில் கற்பிக்கப்பட்டு வந்தன. இந்த மேம்பாடான கல்விமுறை அழிந்து தற்கால சந்ததியினருக்கு கிடைக்காமல் போனது துரதிர்ஷ்டமே. தற்கால சந்ததியினர் மேற்கத்தைய கல்வி முறை ஆங்கிலேயர் காலத்தில் குமாஸ்தாக்களை உருவாக்கவே ஏற்படுத்தப்பட்டது.

அந்தக் கல்வி முறை மூலம் உருவாகும் இவர்கள், சுயம் என்பது போய் தன் காலில்நிற்கத் தெரியாதவர்களாகவும், அரசாங்க வேலையை எதிர்பார்த்து, அதற்கு கையூட்டு கொடுப்பவர்களாகவும், கொடுத்த கையூட்டை, மறுபடி மக்களிடம் அதே கையூட்டின் மூலம் வசூலிக்கும் அக்கிரமக்காரர்களகவும் மாறி கடைசியில் நிம்மதியை தொலைத்து, முறையற்ற வழியில் பணம் தேடும் பிசாசுகளாய் வாழ்ந்து, முடிவில் இறந்தே போகுபவர்களாவே உள்ளனர்.

இந்த சரநூல் சாஸ்திரத்தைக் கொண்டு நோய்களை போக்கிக் கொள்ளவும், நமக்கு வேண்டிய காரியங்களை முடித்துக் கொள்ளவும் என் குரு காகபுஜண்டர் பெருமானின் அருளாசியால் நீங்கள் கற்றுக் கொள்ள இங்கு இறைவன் கருணை புரிந்து இருக்கின்றான் போல.....

சித்தர் சரநூல் கற்போம்
சராசரம் வெல்வோம்!!!!
http://amuthasurabhii.blogspot.com/