Search This Blog

Showing posts with label Astrology. Show all posts
Showing posts with label Astrology. Show all posts

Saturday, September 30, 2017

வாழ்க்கையிலும், தொழிலிலும் உறவுகளிலும், அதீத மேன்மையைக் கொடுக்கும் யோகங்கள்

யோகம் ஜாதகனுக்குத் தனிப்பட்ட வாழ்க்கையிலும், தொழிலிலும் உறவுகளிலும், அதீத மேன்மையைக் கொடுக்கும். ஜாதகன் பெயரும்,புகழும் பெற்றுத் திகழ்வான். நாடே அறிந்த மனிதனாக இருப்பான்.ஏராளமான சொத்தும், செல்வமும் அவனைத் தேடிவரும்
1,மாமனித யோகம்
2,ஆதி யோகம்
3,பாஸ்கரா யோகம்
4,சகடயோகம்
5,லக்ஷ்மியோகம்
6,கேமதுருமா யோகம்
7,கிரகமாலிகா யோகம்
8,ராஜயோகம்
9,துஷ்கிரிதியோகம்
10,குஹு யோகம்
11,வஞ்சன சோர பீதி யோகம்
13,பத்ரா யோகம்
14,ஹம்ஸ யோகம்
15,மாளவ்ய யோகம்
16,சஷ்ய யோகம்
17,பரிவர்த்தனை யோகம்
18,சந்திரமங்கள யோகம் ”சசிமங்கள” யோகம்
19,கஜகேசரி யோகம்
20,புத ஆதித்யா யோகம்
21,அனபா யோகம்
22,ருச்சகா யோகம்
23,பாபகர்த்தாரி யோகம்
24, பர்வத யோகம்
25,சுனபா யோகம்
26,துருதுரா யோகம்
1,மாமனித யோகம் 
மாமனித யோகம்! மாமனிதர் என்று சிலரைச் சொல்வோம். அதாவது He is a great man என்று சிலரைச் சொல்வோம். அதற்கான ஜாதக அமைப்பு என்ன? பஞ்ச மகாபுருஷ யோகம்! செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி ஆகிய ஐந்து கிரகங்களும் ஒருவரின் ஜாதகத்தில் ஒட்டு மொத்தமாக வலுவாக இருந்தால் அது இந்த யோகத்தைக் கொடுக்கும். சார் இந்த ஐந்தில் 3 எனக்கு இருக்கிறது. ஆகவே இதில் பாதி எனக்குக் கிடைக்குமா என்று யாரும் கேட்காதீர்கள். இருந்தால் அந்த 5 கிரகங்களுமே வலுவாக இருக்க வேண்டும். இல்லை என்றால் இல்லை! கிணற்றின் விட்டம் 5 அடி, 3 அடி மட்டும் தாண்டினால் போதுமா என்று பாருங்கள். 5 அடிகளையும் தாண்டினால் மட்டுமே, நீங்கள் கிணற்றின் மறுபக்கம் குதிக்க முடியும். இல்லையென்றால் கிணற்றிற்குள்ளேதான் விழுந்து எழுந்திரிக்க வேண்டும். இதுவும் அப்படித்தான் வலு என்றால் என்ன? அந்தக் கிரகங்கள் வலிமையாக (powerful) இருந்து தனித்தனியாக சில யோகங்களைக் கொடுக்கும்.அந்த ஐந்து யோகங்களும் ஜாதகனுக்கு இருக்கும் நிலைமைதான் மகா புருஷ யோகம். பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள்
1 ருச்சகா யோகம்: செவ்வாய் - செவ்வாயை மட்டுமே வைத்து வருவது இந்த யோகம். செவ்வாய் தனது சொந்த வீடுகளில் இருந்தாலும் அல்லது ஜாதகத்தில் உச்சம் பெற்று மகரராசியில் இருந்தாலும் அல்லது ஜாதகனின் கேந்திர வீடுகளில் இருந்தாலும் இந்த யோகம் உண்டு. 
2 பத்ரா யோகம்: புதன் - புதனை மட்டுமே வைத்து வருவது இந்த யோகம். புதன் தனது சொந்த வீடுகளில் இருந்தாலும் அல்லது ஜாதகத்தில் உச்சம் பெற்று கன்னிராசியில் இருந்தாலும் அல்லது ஜாதகனின் கேந்திர வீடுகளில் இருந்தாலும் இந்த யோகம் உண்டு.
 3 ஹம்ஸ யோகம்: குரு - குரு பகவானை மட்டுமே வைத்து வருவது இந்த யோகம். குரு தனது சொந்த வீடுகளில் இருந்தாலும் அல்லது ஜாதகத்தில் உச்சம் பெற்று கடக ராசியில் இருந்தாலும் அல்லது ஜாதகனின் கேந்திர வீடுகளில் இருந்தாலும் இந்த யோகம் உண்டு.
 4 மாளவ்ய யோகம்: சுக்கிரன் - சுக்கிரனை மட்டுமே வைத்து வருவது இந்த யோகம். சுக்கிரன் தனது சொந்த வீடுகளில் இருந்தாலும் அல்லது ஜாதகத்தில் உச்சம் பெற்று மீன ராசியில் இருந்தாலும் அல்லது ஜாதகனின் கேந்திர வீடுகளில் இருந்தாலும் இந்த யோகம் உண்டு. 
5 சஷ்ய யோகம்: சனி - சனீஷ்வரனை மட்டுமே வைத்து வருவது இந்த யோகம். சனீஷ்வரன் தனது சொந்த வீடுகளில் இருந்தாலும் அல்லது ஜாதகத்தில் உச்சம் பெற்று துலா இருந்தாலும் அல்லது ஜாதகனின் கேந்திர வீடுகளில் இருந்தாலும் இந்த யோகம் உண்டு.
பலன்: இந்த யோகம் ஜாதகனுக்குத் தனிப்பட்ட வாழ்க்கையிலும், தொழிலிலும் உறவுகளிலும், அதீத மேன்மையைக் கொடுக்கும். ஜாதகன் பெயரும்,புகழும் பெற்றுத் திகழ்வான். நாடே அறிந்த மனிதனாக இருப்பான்.ஏராளமான சொத்தும், செல்வமும் அவனைத் தேடிவரும்
2, ஆதி யோகம்
ஆதி யோகம்ஆதி யோகம்! புதன், குரு, சுக்கிரன் ஆகிய மூன்று சுபக் கிரகங்களும், ஜாதகத்தில் சந்திரன் இருக்கும் இடத்திலிருந்து 6, 7, 8 ஆம் வீடுகளில் இருந்தால், தனித்தனியாகவோ அல்லது சேர்ந்தோ இருந்தால், அது ஆதியோகம் எனப்படும். அந்த வீடுகள் ஒன்றில் அல்லது இரண்டில் அல்லது மூன்றிலுமே அவைகள் இருந்தாலும் அது இந்த யோகத்தைக் கொடுக்கும்! பலன்: ஜாதகன் செல்வாக்குடன் இருப்பான். ஆரோக்கியத்துடனும், செல்வங்களுடனும் இருப்பான். நோய், எதிரிகள், பயம் என்று எந்த அவலமும் அவனை அனுகாது!
3, பாஸ்கரா யோகம்
பாஸ்கரா யோகம்பாஸ்கரா யோகம் இது ஒரு நல்ல யோகம். ஆனால் அரிதான யோகம். மூன்று நிலைப்பாடுகள் சம்பந்தப்பட்டுள்ளதால் அரிதானதாகத் தோன்றும். புதன், சூரியனுக்கு அடுத்த வீட்டிலும், சந்திரன், புதனுக்குப் பதினொன்றாம் வீட்டிலும், குரு சந்திரனுக்குக் கேந்திர வீட்டிலும் இருந்தால் இந்த யோகம் உண்டாகும். பலன்: ஜாதகன் அதிகம் படித்தவன் அல்லது கற்றவன், வல்லவன், வலிமை மிக்கவன், துணிச்சலானவன். மதக்கோட்பாடுகளில் ஞானம் உள்ளவன். கணிதத்தில் தேர்ந்தவன். பாரம்பரிய இசையின் நுட்பங்களை அறிந்தவன்.
4,சகடயோகம்
சகடயோகம்! சகட என்னும் வடமொழிச் சொல்லிற்கு சக்கரம் என்று பெயர் சக்கரயோகம் என்று தனித் தமிழில் சொல்லாமல் சகடயோகம் என்றே சொல்லுங்கள். சிலவற்றை மொழிமாற்றம் செய்யாமல் அப்படியே ஏற்றுக் கொள்வதுதான் உசிதம் சகடயோகம் எப்போது ஏற்படும்? குருவிற்கு 6, 8, 12ஆம் வீடுகளில் சந்திரன் அமர்ந்திருந்தால், அது சகட யோகத்தைக் கொடுக்கும் Sakata yoga forms when Moon is placed in 6th, 8th or 12th from the Jupiter. என்ன பலன்? 1. ஜாதகனின் வாழ்க்கை சக்கரம்போல சுழன்று கொண்டே இருக்கும். ஜாதகன் ஒரு இடத்தில் இருக்க மாட்டான். தன்னுடைய வேலை காரணமாக அல்லது பொருள் ஈட்டல் காரணமாக ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு மாறிக் கொண்டே இருப்பான் அல்லது அலைந்து கொண்டே இருப்பான். Person with sakata yoga in his horoscope has to keep moving from one place to another for some work or the other. எல்லோருமே இருந்த இடத்தில் அல்லது இருக்கும்/வசிக்கும் ஊர்களில் இருந்து கொண்டே தங்கள் பணிகளைச் செய்ய ஆசைப் படுவார்கள். சகடயோகம் அதை அனுமதிக்காது.அலைய வைக்கும். உங்கள் மொழியில் சொன்னால் சுற்ற விடும்! People like to be working at the same city or town where they reside. Sakata yoga does not allow this. பலன் 2 சக்கரம் சுழலும்போது மேற்பகுதி கீழேயும், கீழ்ப்பகுதி மேலேயும் மாறி மாறி வருவதைப்போல, சகடயோக ஜாதகக்காரர்களின் அதிர்ஷ்ட நிலைமை தடைப்படுவதும், தடைநீங்கப் பெறுவதுமாக இருக்கும். பொருளாதாரத்தில் ஏற்றத்தாழ்வுகள் இருக்கும்

 one born in Sakata will have his fortune obstructed now and then. The native loses fortune and may regain it. The periods of misfortune will accord with the times of transits in malefic Rasis - 6th, 8th and 12th. Every time the Moon transits the 6th, 8th and 12th from the radical Jupiter, the effects of Sakata are realized. 
ஒருவனுக்கு எட்டில் இன்னொருவன் என்றால், அவனுக்கு, இவனுடைய இடம் 6ஆம் இடம் ஒருவனுக்கு ஆறில் இன்னொருவன் என்றால், அவனுக்கு, இவனுடைய இடம் 8ஆம் இடம் ஜாதகங்களில் நன்மை செய்யும் கிரகங்கள் 6/8 அல்லது 8/6 நிலையில் இருப்பது நல்லதல்ல. அதை அஷ்டம சஷ்டமம் என்பார்கள். எட்டாம் பொருத்தம் என்பார்கள் திருமணத்திற்கு வரன் பார்க்கும்போது, பெண்ணின் ராசி, பையனின் ராசிக்கு எட்டில் இருக்கக்கூடாது. ஆறிலும் இருக்கக்கூடாது இருந்து செய்தால் என்ன ஆகும்? செய்துபாருங்கள். சிலவற்றை செய்து அனுபவித்தால்தான் உண்மை தெரியவரும்:-)))))) பரிகாரம் உண்டா? சகடயோக ஜாதகக்காரன், தன்னுடைய வாழ்க்கையை அதற்குத் தகுந்தபடி அமைத்துக்கொள்ள வேண்டும்.தன் தொழிலால் குடும்பமும், குடும்பத்தால் தொழிலும் பாதிக்காதவகையில் இரண்டையும் அனுசரித்து வைத்துக்கொள்ள வேண்டும்.
 Travelling agent, Travelling salesman, Medical representative, Railway Guards, Drivers 
ஆகிய இதுபோன்ற தொழில்களை சகட யோகத்தொழில்களாகக் கொள்ளலாம் இதை ஒரு உதாரணத்திற்காகக் கொடுத்துள்ளேன். எனக்கு அப்படி இல்லையே என்று யாரும் கேட்க வேண்டாம். உங்கள் ஜாதகத்தை எழுதும்போது பிரம்மா தூக்க கலக்கத்தில் இருந்திருக்கலாம்:-))) சகட யோகம் ஜாதகத்தில் உள்ள மற்ற ராஜ யோகங்களைத் தடுக்காது. அந்த யோகங்கள் பலமாக இருந்தால், இது வளைந்து கொடுக்கும்! சகடயோகச் சந்திரன், ஜாதகனின் லக்கினத்தில் இருந்து திரிகோணத்தில் இருந்தால், சகடயோகம் ரத்தாகிவிடும்.உங்கள் மொழியில் சொன்னால் கேன்சலாகிவிடும் சகடயோகச் சந்திரன் குருவின் நட்சத்திரத்தில் இருந்தாலும் கேன்சலாகிவிடும் சகடயோகச் சந்திரன், நவாம்சத்தில் குருவுடன் சேர்ந்து ஒரே ராசியில் இருந்தாலும் யோகம் கேன்சலாகிவிடும் சகடயோகத்தைத் தரும் இருவரில் ஒருவர் ராசியில் உச்சமாகவும், மற்றொருவர் நவாம்சத்தில் உச்சமாக இருந்தாலும், யோகம் கேன்சலாகிவிடும் கேன்சலாகிவிட்டதே என்று கன்னத்தில் கையை வைத்துக் கொண்டு உட்கார வேண்டாம். கேன்சலாகிவிட்டால் நல்லதுதான். இது அவயோகம். அதாவது அவதியான யோகம். அவதி கேன்சலானால் நல்லதுதானே? சந்திரனுக்கு 6,8,12இல் குரு இருந்தால் அதனை ஜோதிடத்தில் சகட யோகம் எனக் கூறுவர். அதுபோன்ற அமைப்பு உள்ளவர்களுக்கு இருதயக் கோளாறு, கொலஸ்ட்ரால் அதிகரிப்பு போன்றவை ஏற்பட வாய்ப்புண்டு.
5, லக்ஷ்மியோகம்
லக்ஷ்மியோகம்லக்ஷ்மியோகம் எல்லோரும் விரும்பும் யோகம் இந்த யோகம். இந்த யோகம் இருப்பவன் ஜாதகத்தைக் கையில் எடுக்க வேண்டிய அவசியம் இருக்காது. இந்த யோகத்திற்கான ஜாதக அமைப்பு என்ன? லக்கினாதிபதி வலிமையாக இருக்க வேண்டும். அத்துடன் 9ஆம் அதிபதி சொந்த அல்லது உச்ச வீட்டில் இருக்க வேண்டும் (அது கேந்திர வீடாக அல்லது திரிகோணவீடாக இருக்க வேண்டும். அது லக்கினத்தில் இருந்தும் இருக்கலாம். அல்லது லக்கினாதிபதி இருக்கும் இடத்தில் இருந்து இருக்கலாம் 

If the lord of Lagna is powerful and the lord of the 9th occupies own or exaltation sign identical with a Kendra or Thrikona, Lakshmi Yoga is caused. 
பலன் என்ன? பலன் 1 ஜாதகன் அரவிந்தசாமியைப் போல (ரோஜா/தளபதி படங்களில் வரும் அரவிந்தசாமியைப் போல) அழகாக இருப்பான். பெண்ணாக இருந்தால் மிகவும் அழகாக இருப்பாள். பார்ப்பவர்களைத் திரும்பிப் பார்க்க வைக்கும் விதமான அழகுடன் இருப்பாள். பெண்ணுக்குப் பெண்ணே பொறாமைப்படும் விதத்தில் அழகுடன் இருப்பாள். கையெடுத்துக் கும்பிட வைக்கும் அழகோடு இருப்பாள்.( அதனால்தான் எந்த நடிகையையும் உதாரணமாகச் சொல்லவில்லை) 2 ஜாதகன் செல்வத்தோடு இருப்பான். உயர்ந்த குணங்களை உடையவனாக இருப்பான். நன்கு கற்றவனாக இருப்பான். மதிப்பும் மரியாதையும் மிக்கவனாக இருப்பான். நல்ல ஆளுமைத் திறமை கொண்டவனாக இருப்பான். வாழ்க்கையின் எல்லா வசதிகளையும் உடையவனாக இருப்பான். அதைவிட முக்கியமாக எப்பொதும் மகிழ்ச்சியை உடையவனாக இருப்பான். பெண்ணாக இருந்தாலும் இதே பலன்கள் உண்டு! 
The person will be wealthy, noble, learned, a man of high integrity and reputation, handsome appearance, a good ruler, and enjoying all the pleasures and comforts of life. 
பலன் எப்போது? லக்கினாதிபதி மற்றும் ஒன்பதாம் அதிபதி ஆகியவர்களின் தசை/ புத்திக் காலங்களில் பலன்கள் உண்டாகும்/கிடைக்கும் மேலதிகத்தகவல்கள்: 
Different definitions of the Lakshmi Yoga. Lakshmi Yoga will arise by the mutual association of lords of Lagna and the 9th; (b) by the lord of the 9th occupying Kendra, Thrikona, or exaltation and the lord of Lagna being disposed powerfully; and (c) by the lord of the 9th and Venus being posited in own or exaltation places which should be Kendras or Trikonas. Obviously, Lakshmi Yoga presumes the strength of lord of Lagna, Venus, and the lord of the 9th. Lakshmi has predominantly to do with wealth and one born in this combination will be wealthy, the degree of wealth varying with regard to the degree of strength or weakness of the planets causing the Yoga. The most powerful type of Lakshmi Yoga will give immense wealth, while the mutual association of or aspect between the lords of Lagna and the 9th in houses other than 3, 6 and 8 would also result in an ordinary type of Lakshmi Yoga which might be fortified by the presence of other Dhana Yogas 
அந்த இருவரும், பகை நீசம், அஸ்தமனம், வக்கிரம் என்று ஏதாவது டேமேஜ் ஆகியிருந்தால் இந்த யோகம் இருக்காது! பாதியாவது இருக்காதா? என்று யாரும் கேட்கவேண்டாம். பாதி அழகாக இருந்தால் எப்படி இருக்கும் யோசித்துப்பாருங்கள். தலையில் பாதி முடி இருந்தால் எப்படி இருக்கும் யோசித்துப் பாருங்கள் பாதிக் கிணறு தாண்டினால் என்ன ஆகும் யோசித்துப் பாருங்கள் ஆகவே உங்கள் ஜாதகத்தைவைத்து நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள் வேறு அமைப்புக்களை இதனுடன் கோந்து போட்டு ஒட்டி, கேள்விகள் எதுவும் கேட்க வேண்டாம் லக்ஷ்மி யோகம் இருந்தால் இருக்கட்டும். இல்லையென்றால் போகட்டும் என்ன இருந்தாலும் இல்லாவிட்டாலும் அனைவருக்கும் மதிப்பெண் 337 மட்டுமே. அதை மனதில் வையுங்கள் லக்ஷ்மி இல்லாவிட்டால் உங்கள் ஜாதகத்தில் பராசக்தி இருப்பார் அல்லது சரஸ்வதி இருப்பார். யார் இருக்கிறார் என்பது போகப்போகத் தெரியும்.
6,கேமதுருமா யோகம்
கேமதுருமா யோகம்! இது ஒரு அவயோகம்! ஜாதகத்தில் சந்திரனுக்கு முன்னும் பின்னும் உள்ள வீடுகளில் வேறு எந்தக் கிரகமும் இல்லாமல் இருந்து, சந்திரனும் வேறு எவருடைய கூட்டணியும் இல்லாமல் தனித்து இருந்து, சந்திரனுக்கு 7ஆம் வீட்டில் எந்த கிரகமும் இல்லாமலிருந்தால் அதற்குப் பெயர் கேமதுருமாயோகம்!

 If moon is alone, doesnt have any planet before and after and also in front then it is Kemadruma. For Example moon in 2nd house. 1st , 3rd and 8th house is empty. Rahu and Ketu are not actual planet and they do not cancel the yoga if they are in the above mentioned houses
 பலன் என்ன? சந்திரன் மனதிற்கான கிரகம். இந்த அமைப்புள்ள ஜாதகனுக்கு மனப் பிரச்சினைகள் ஒன்று மாற்றி ஒன்று இருந்து கொண்டே இருக்கும் இந்த அமைப்புள்ள ஜாதகனை அடிக்கடி துன்பம் சூழும், ஜாதகனிடம் பெருந்தன்மை இருக்காது. ஜாதகன் வறுமையில் கஷ்டப்பட நேரிடும். Kemdruma gives trouble to mind. Since moon is mind and is alone it can be destructive. Many of the serial killers from the history have this yoga. It also makes the person very poor, mentally instable, gives inner fears, phobias, takes away happiness. It makes one do crimes 
இந்த அமைப்புள்ள ஜாதகன் அல்லது ஜாதகி, வயதான காலத்தில் தனித்திருக்க நேரிடும். வயதான காலத்தில் சிலரை நிரந்தமாகப் புலம்பும் நிலைக்குக் கொண்டுவந்து விட்டுவிடும்! அவர்கள் தனிமையில் வாட நேரிடும் உடனே பயந்து விடாதீர்கள். இந்த அமைப்பிற்கு சில விதிவிலக்குகள் உண்டு. இந்த அமைப்பில், சந்திரனுக்கு ஏழாம் வீட்டில், ராகு கேதுவைத் தவிர்த்து மற்ற ஆறு கிரகங்களில் ஏதாவது ஒன்று 7ஆம் வீட்டில் இருந்தால் இந்த யோகம் காணாமற்போய்விடும். அதோடு அது நன்மையாகவும் மாறிவிடும ்
 If there is a planet in house opposite (7th house from moon), it not only cancels Kemadruma, but gives kalpadruma yoga (similar to neecha bhanga raja yoga.)
 குரு லக்கினத்தில் அல்லது கேந்திர வீடுகளில் இருந்தால், இந்த அவயோகம் ஜாதகனை அனுகாமல் காத்து நிற்கும்! ஆனால் கேமதுருமா அமைப்பே ஒரு கேந்திர வீட்டில் இருந்தால் ஜாதகனின் நிலைமை மோசமாக இருக்கும் இந்த அவயோகம் உள்ளவர்கள் அதிலிருந்து விடுபட திரிபுர மந்திரத்தை அனுதினமும் 108 முறைகள் சொல்வது நல்லது. மந்திரங்களில் நம்பிக்கை உள்ளவர்கள் சொல்லலாம். மற்றவர்கள் ஜூட் விட்டு விடலாம். வருவதை எதிர் கொள்ளலாம்! திரிபுர மந்திரம் (Tripura Sundari Mantra) அதாவது திரிபுரசுந்தரி தேவியை வணங்கிச் சொல்லும் மந்திரம்! ஓம் திரிபுரசுந்தரி போற்றி! ஓம் திரிபுரசுந்தரி போற்றி! இதே மந்திரம் வடமொழியில்: க்லீம் த்ரிபுரசுந்தரிமூர்த்தயே நமஹ" க்லீம் த்ரிபுரசுந்தரிமூர்த்தயே நமஹ"
7,கிரகமாலிகா யோகம்
கிரகமாலிகா யோகம் (மாலை யோகம்) மாலிகா என்னும் வடமொழிச் சொல்லிற்கு மாலை (garland) என்று பொருள். சூரியன், சந்திரன், செவ்வாய்,புதன், குரு, சுக்கிரன், சனி ஆகிய ஏழு கிரகங்களும் அடுத்தடுத்து ஏழு ராசிகளில் இருந்தால் அதற்குப் பெயர் மாலை யோகம். நான் எழுதியுள்ள வரிசைப்படி என்று இல்லை, வேறுவிதமான வரிசையில் கூட இருக்கலாம். எந்த வரிசையில் வேண்டுமென்றாலும் இருக்கட்டும். இருந்தால் அது மாலையோகம் எனப்படும் பார்ப்பதற்கே அழகாக இருக்கும். அந்த அமைப்புள்ள ஜாதகன் அழகான தோற்றமுடையவனாகவும், செல்வம் நிறைந்தவனாகவும், மகிழ்ச்சி நிறைந்தவனாகவும் இருப்பான் 

A planetary combination under which all planets occupy consecutive houses leaving the intervening cardinal houses vacant. The individual under this combination is happy, handsome, and is provided with much ornaments, gems and jewels.
 ஏழு ராசிகளுக்குள் இல்லையென்றாலும், ஆறு ராசிகளுக்குள், அந்த ஏழு கிரகங்கள் இருந்தாலும் அது மாலை யோகக் கணக்கில் வரும் அது லக்கினத்தைத் தவிர்த்து அமைய வேண்டும்!
8,ராஜயோகம்
யோகா எனும் சொல் யுஜ் என்னும் வடமொழிச் சொல்லின் விரிவாக்கம். யுஜ் என்பதற்கு கூட்டு (unite) - கூட்டாக என்னும் பொருள் வரும். ராஜா என்பதற்கு அரசன் என்று பொருள். ராஜயோகம் என்றால் அரசனுக்கு நிகரான யோகம் என்று பொருள் ராஜயோகம் என்பதற்கு, ஜாதகனுக்கு அந்தஸ்தைத் தரக்கூடிய கிரகங்களின் கூட்டணி என்று எடுத்துக் கொள்ளலாம். அதற்கு எதிர் மாறாக அவ யோகம், அரிஷ்ட யோகம், தரித்திர யோகம் என்று மூன்று விதமான - ஜாதகனுக்கு தீமையைச் செய்யக்கூடிய யோகங்களும் உண்டு! அவ என்பது கெட்டது (Ava means bad) அரிஷ்டம் என்பது நோயைக் குறிப்பது (Arishta means one causing diseases) தரித்திரம் என்பது வறுமையைக் குறிப்பது (Daridra means poverty) ராஜயோகங்களிலும் மூன்று பிரிவுகள் உள்ளன 

1. தன ராஜயோகம் (yogas for wealth)
2. கீர்த்தி ராஜயோகம் (yogas for name and fame) 
3. சன்யாச ராஜயோகம் (reigning as a religious head) 
சன்யாசத்தில் ராஜயோகமா...ஹி.ஹி என்று சிரிக்க வேண்டாம். அரசர்கள் வந்து வணங்கி விட்டுப் போகும் அளவிற்கு சித்தியை பெற்ற சன்யாசிகள் உண்டு. இருந்திருக்கிறார்கள். உதாரணத்திற்கு ரமண மஹரிஷியைச் சொல்லலாம் அவரை, முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி அவர்கள் பலமுறை தமிழகத்திற்கு வந்து வணங்கிவிட்டுப்போயிருக்கிறார். அதை நினைவில் வையுங்கள் ------------------------------------------------------ 
1. தன ராஜயோகம் (yogas for wealth) 2,6,10, & 11ம் வீட்டதிபதிகளின் சேர்க்கை அல்லது பரிவர்த்தனையால் இந்த யோகம் ஏற்படும் 
2. கீர்த்தி ராஜயோகம் (yogas for name and fame) இது திரிகோண அதிபதிகளூம், கேந்திர அதிபதிகளும் சேர்வதால் உண்டாகும் 
3. சன்யாச ராஜயோகம் (reigning as a religious head) 9, 12, 10 and 5ஆம் அதிபதிகள் சேர்க்கை அல்லது பார்வைகளால் இந்த யோகத்தைக் கொடுப்பார்கள் பணம், புகழ், மதிப்பு, மரியாதை & செல்வாக்கு போன்றவைகள் தடையில்லாமல் ஜாதகனுக்குக் கிடைக்க இந்த யோகங்கள் அவசியம். இந்த யோகம், ராசியிலும், நவாம்சத்திலும் இருக்க வேண்டும். இல்லையென்றால் இந்த யோகங்கள் உரிய பலனைத் தராது. அதை நினைவில் வையுங்கள். Navamsa is 1/9 th division of a Rasi Chart. In short it is the magnified version of the Rasi Chart! அவை எல்லாவற்றையும் விட முக்கியம். ஜாதகத்தில் லக்கின அதிபதி வலுவாக இருக்க வேண்டும். வலு என்பது சூப்பர் சுப்பராயன் போன்ற உடல் வலு அல்ல! லக்கின அதிபதி லக்கினத்தில் இருக்க வேண்டும். அல்லது தனது பார்வையால் லக்கினத்தைத் தன் கையில் வைத்திருக்க வேண்டும். குரு அல்லது புதன் லக்கினத்தில் இருக்க வேண்டும். அல்லது லக்கினம் அவர்களின் பார்வையைப் பெற்றிருக்க வேண்டும்.
9,துஷ்கிரிதியோகம்
அவயோகம் துஷ்கிரிதியோகம்: 7ஆம் வீட்டு அதிபதி 6,8,12ஆம் வீடுகள் ஒன்றில் அமர்ந்திருந்தால் அது இந்த யோகத்தைக் குறிக்கும். பலன்: மனைவியை விட்டு பிரிந்து வாழ நேரிடும். சிலர் அடுத்தவருடைய மனைவியின் மேல் ஆசைவைத்து, தகாத செயல்களைச் செய்து கொண்டிருப்பார்கள். ஊர் சுற்றிகள் பலராலும் ஒதுக்கித் தள்ளப்படும் நிலைக்கு ஆளாக நேரிடும். பால்வினை நோய்கள் உண்டாகும். இவற்றின் விளைவாக உறவுகளின் வெறுப்பிற்கு ஆளாக நேரிடுவதுடன் வாழ்க்கை மகிழ்ச்சி இல்லாததாக மாறிவிடும்.
10,குஹு யோகம்
அவயோகம் குஹு யோகம்: 4ஆம் வீட்டு அதிபதி 6,8,12ஆம் வீடுகள் ஒன்றில் அமர்ந்திருந்தால் அது இந்த யோகத்தைக் குறிக்கும் பலன்: தாய் அல்லது தாயின் அரவணைப்பு, வாழ்க்கை வசதிகள், நட்புக்கள் மற்றும் உறவுகள், மகிழ்ச்சி என்று நான்காம் வீடு சம்பந்தப்பட்ட பல நல்ல விஷயங்களை ஜாதகன் இழக்க நேரிடும். அல்லது பறிகொடுக்க நேரிடும். சிலர் நிரந்தரமாகத் தங்குவதற்கு ஒரு இடம் அல்லது ஒரு வீடு இன்றி அவதிப்பட நேரிடும். இருப்பதையும் இழந்து அவதிப்பட நேரிடும். கீழ்த்தரமான பெண்களுடன் சிநேகம் வைத்துக் கொண்டு சிலர் தங்களுடைய மரியாதையை இழந்து அவதிப்பட நேரிடும். பொதுவாகச் சொன்னால் ஜாதகனுக்குத் தேவையானதும், அவன் எதிர்பார்ப்பதும் கிடைக்காமல் போய்விடும்,
11,வஞ்சன சோர பீதி யோகம்
வஞ்சன சோர பீதி யோகம்! பயந்து விடாதீர்கள். எல்லாம் வடமொழிச் சொற்கள். Vanchana Chora Bheethi Yoga vañchana — cheating chora - thief bheethi - fear ஏமாற்றுவேலைகளுக்கு ஆளாகிவிடுவோமோ, இருப்பதை திருட்டுக் கொடுத்துவிடுவோமோ என்று ஜாதகன் ஒருவித பய உணர்வுடனேயே வாழும் நிலைமை இருப்பதைக் குறிக்கும் யோகம் இந்த யோகம். 

The combinations pertaining to this Yoga are found in almost all horoscopes, so that we are all guilty of cheating and being cheated one another in some form or the other. It is a tragedy of our social life that a merchant minting millions at the cost of the poor is left scot-free while the poor, committing theft in the face of poverty and want, are booked by law. Cheating is practiced in a variety of ways. Fertile brains find countless methods to cheat their associates. The merchants have various ways of cheating their clients. The lawyer is equally successful. The medical man commands many ways to defraud his patients. 
லக்கின அதிபதி ராகு, சனி அல்லது கேதுவோடு சேர்ந்து ஜாதகத்தில் எந்த இடத்தில் இருந்தாலும் இந்த அவயோகம் உண்டு! உண்டு! உண்டு! அதேபோல லக்கினத்தில் தீய கிரகம் இருந்து கேந்திரத்தில் மாந்தி இருந்தாலும் அல்லது மாந்தி, கேந்திர அதிபர்களுடன் கூட்டணி போட்டு இருந்தாலும் ஜாதகனுக்கு இந்த அவயோகம் இருக்கும் பலன்: ஜாதகன் எப்பொதுமே ஒருவித பய உணர்வுடன் இருப்பான்.
 The Lagna lord is with Rahu, Saturn or Ketu Result : The person will be constantly suspicious of people around him, afraid of being taken advantage of, swindled or stolen from. The native will always entertain feelings of suspicion towards others around him. He is afraid of being cheated, swindled and robbed. 
அதே போல ஜாதகன் பல வழிகளிலும் தன் செல்வத்தை இழந்தவனாகவும் இருப்பான். 
In all these cases, the person will not only have fears from cheats, rogues and thieves but he will also have huge material losses.
12, பத்ரா யோகம்
பத்ரா யோகம்பத்ரா யோகம்: புதன் - புதனை மட்டுமே வைத்து வருவது இந்த யோகம். புதன் தனது சொந்த வீடுகளில் இருந்தாலும் அல்லது ஜாதகத்தில் உச்சம் பெற்று கன்னிராசியில் இருந்தாலும் அல்லது ஜாதகனின் கேந்திர வீடுகளில் இருந்தாலும் இந்த யோகம் உண்டு. வகுப்பறை புத்திசிகாமணி!: ”சார், புதன் நீசம் பெற்று, அது கேந்திரமாக இருந்தாலும் பலன் உண்டா?” “இல்லை! நீசம் பெற்றால் totally out.ஆகவே இல்லை!” என்ன பலன்? ஜாதகன் அதி புத்திசாலியாக இருப்பான். அறிவுஜீவியாக இருப்பான். அறிவு ஊற்றெடுக்கும்! அதிகம் கற்றவனாக இருப்பான்.கல்வியில் அல்லது சொந்த அனுபவத்தில்! வேறு அமைப்புக்களால் முறையான கல்வி கற்கும் வாய்ப்புக் கிடைக்காமல் போயிருந்தாலும் தனது சொந்த முயற்சியால் பல புத்தகங்களையும் கற்றுத் தேறியிருப்பான். செல்வந்தனாக இருப்பான். அல்லது தன் முயற்சியால் செல்வத்தைத் தேடிப் பிடிப்பான்.
13, ஹம்ஸ யோகம்
ஹம்ஸ யோகம்ஹம்ஸ யோகம்: குரு - குரு பகவானை மட்டுமே வைத்து வருவது இந்த யோகம். குரு தனது சொந்த வீடுகளில் இருந்தாலும் அல்லது ஜாதகத்தில் உச்சம் பெற்று கடக ராசியில் இருந்தாலும் அல்லது ஜாதகனின் கேந்திர வீடுகளில் இருந்தாலும் இந்த யோகம் உண்டு. வகுப்பறை புத்திசிகாமணி!: ”சார், குரு நீசம் பெற்று, அது கேந்திரமாக இருந்தாலும் பலன் உண்டா?” “இல்லை! நீசம் பெற்றால் totally out.ஆகவே இல்லை!” என்ன பலன்? ஜாதகன் மிகுந்த அதிர்ஷ்டசாலியாக இருப்பான். வாழ்க்கையின் எல்லா நலன்களும் அவனைத் தேடி வரும். இறை நம்பிக்கை உள்ளவனாக இருப்பான்
14,மாளவ்ய யோகம்
மாளவ்ய யோகம் சுக்கிரன் - சுக்கிரனை மட்டுமே வைத்து வருவது இந்த யோகம். சுக்கிரன் தனது சொந்த வீடுகளில் இருந்தாலும் அல்லது ஜாதகத்தில் உச்சம் பெற்று மீன ராசியில் இருந்தாலும் அல்லது ஜாதகனின் கேந்திர வீடுகளில் இருந்தாலும் இந்த யோகம் உண்டு. வகுப்பறை புத்திசிகாமணி!: ”சார், சுக்கிரன் நீசம் பெற்று, அது கேந்திரமாக இருந்தாலும் பலன் உண்டா?” “இல்லை! நீசம் பெற்றால் totally out.ஆகவே இல்லை!” என்ன பலன்? ஜாதகன் வாழ்க்கையை மிகவும் ரசித்து வாழ்பவன். நல்ல மனைவி அமைவாள். பிரச்சினை இல்லாத மனைவி அமைவாள். திருமண வாழ்க்கை நன்றாக இருக்கும் தர்ம, நியாயங்களில் ஜாதகன் பற்றுடையவனாக இருப்பான். உங்கள் மொழியில் சொன்னால் அவற்றில் பிடிப்பு உடையவானாக இருப்பான். செல்வமுடையவனாக, வசதிகள் உடையவனாக இருப்பான். வேறு அமைப்புக்களால் நல்ல மனைவி அமையாவிட்டாலும், ஜாதகன் வாழ்க்கையை, ரசித்து வாழ்பவனாக இருப்பான். 

Marriage is only a part of the life. Not the whole life Please keep that in your mind! 
மொத்தத்தில் ஜாதகன் ரசனை உள்ளவன். அவனை எல்லோரும் விரும்புகிறார்களோ இல்லையோ, அவன் எல்லோரையும் விரும்புவான்
15,சஷ்ய யோகம்
சஷ்ய யோகம்: சனி - சனீஷ்வரனை மட்டுமே வைத்து வருவது இந்த யோகம். சனீஷ்வரன் தனது சொந்த வீடுகளில் இருந்தாலும் அல்லது ஜாதகத்தில் உச்சம் பெற்று துலா இருந்தாலும் அல்லது ஜாதகனின் கேந்திர வீடுகளில் இருந்தாலும் இந்த யோகம் உண்டு.
வகுப்பறை புத்திசிகாமணி!: ”சார், சனி நீசம் பெற்று, அது கேந்திரமாக இருந்தாலும் பலன் உண்டா?” “இல்லை! நீசம் பெற்றால் totally out.ஆகவே இல்லை!”
என்ன பலன்? ஜாதகன் சக்தியுள்ளவன். வலிமையுள்ளவன். எல்லாவிதத்திலும் வலிமையுள்ளவன். கண்டிப்பானவன். எதற்கும் வளைந்து கொடுக்காமல் தன் கொள்கைகளில், செயல்களில் கண்டிப்பாக இருப்பவன். அதிகாரம் மிக்கவன். தன் குடும்பத்தில், தொழிலில், செயல்களில் அதிகாரம் மிக்கவன்
16,பரிவர்த்தனை யோகம்
பரிவர்த்தனை யோகம் இரண்டு கிரகங்கள் இடம் மாறி ஒன்றின் வீட்டில் மற்றொன்று அமர்வது 

(interchange of places) 
பரிவர்த்தனை யோகம் ஆகும்! 
"Parivartthanai means Planet-A occupies the sign of Planet-B while simultaneously Planet-B occupies the sign of Planet-A. Example: Moon occupies Jupiters (குரு) house and Jupiter (குரு) occupies moons house
 இந்த யோகத்தால் இடம் மாறி அமர்ந்த கிரகங்களின் சக்தியும்/வலிமையும் அதிகமாகும்.அதேபோல இடம் மாறிய ராசிகளின் சக்தியும், வலிமையும் அதிகமாகும். அந்தப் பரிவர்த்தனை ஜாதகனின் வாழ்க்கையில் பல வெற்றிகள் ஏற்பட வழிவகுக்கும். Parivartthanai yoga will always increase the power of the two houses involved. It will also increase the power of the two graha involved. Increasing the power of these two bhava and these two graha may be helpful for the success of the native. அது பொது விதி. சில பரிவர்த்தனைகளால் தீமைகள் அதிகமாக ஏற்படும் நிலைமையும் உண்டாகும் எப்படி? வாருங்கள். அதைப்பார்ப்போம். அந்த மாற்றத்திற்குக் காரணமான கிரகங்கள் தீய கிரகங்களாக இருந்தாலும், மாறிய இடங்கள் தீய இடங்களாக (inimical places) இருந்தாலும், அதாவது 6, 8, 12ஆம் வீடுகளாக இருந்தாலும், ஜாதகனுக்குத் தீய பலன்கள்தான் அதிகமாகக் கிடைக்கும் ஆகவே பரிவர்த்தனை யோகம் உள்ளது என்றவுடன், யாரும் காலரைத் தூக்கி விட்டுக் கொள்ள வேண்டாம். If the bhava or the graha are inauspicious, the parivartthanai yoga may increase negative results. பரிவத்தனைக்கு உள்ளான கிரகங்கள், சுபக்கிரகங்களாக இருந்தால், (benefics) ஜாதகனுக்கு அதீத நன்மைகள் கிடைக்கும். பரிவத்தனைக்கு உள்ளான கிரகங்கள், அசுபக்கிரகங்களாக இருந்தால், (melefics) ஜாதகன் அதீத தீமைகளையே சந்திக்க நேரிடும். If the graha involved are natural benefics; the benefits will be more for which those grahas are concerned. If the exchanged graha are natural malefics; results may be more difficult than the graha might separately produce. இந்தப் பரிவர்த்தனை யோகத்தின் மூன்று விதமான உட்பிரிவுகள். 1.தைன்ய பரிவர்த்தனை. தீய இடங்களான 6,8, 12ஆம் வீடுகளுக்கு ஆட்சிக் கிரகம் (Ruler of 6,8, or 12th houses) பரிவர்த்தனை பெற்றால், பரிவர்த்தனையான அடுத்த கிரகம் பாதிப்பிற்கு உள்ளாகும். This parivarththanai leads to a wicked nature, persistent trouble from opponents and ill health. The dushthana lord will be strengthened by its interaction with the other non-dushthana partner. 2. கஹல பரிவர்த்தனை! மூன்றாம் இடத்து அதிபதி பரிவர்த்தனைக்கு உள்ளாவது. பரிவர்த்தனைக்கு உள்ளாகும் கிரகம், 1,2,4,5,7,9,10, 11 ஆம் இடத்து அதிபதியானால் இந்த யோகம் நன்மை பயக்கும். மூன்றாம் இட அதிபதியின் துணிச்சலை மாறி அமரும் கிரகம் பெறும். தன்னுடைய செயல்களை நிறைவேற்றிக் கொள்ளும் துணிச்சல் ஜாதகனுக்குக் கிடைக்கும். Kahala yoga will energize the talking, scheming, competing mind to go out and get stuff done. 3. மஹா பரிவர்த்தனை யோகம்.Maha Parivartamsha Yoga 1, 2, 4, 5, 7, 9, 10, 11 ஆம் இடத்து அதிபதிகளில் எவரேனும் இருவர் அல்லது இருவருக்கு மேற்பட்டவர்கள் இடம் மாறி அமரும்போது இந்த யோகம் உண்டாகும். ஜாதகனுக்கு, சொத்து, சுகம், அஸ்தஸ்து, மரியாதை, உடல் நலம், பதவி, அதிகாரம் என்று சம்பந்தப் பட்ட வீடுகளுக்கு ஏற்பக் கிடைக்கும். When the lords of 1, 2, 4, 5, 7, 9, 10, or 11 get exchange of signs, then it is called as Maha Parivarththanai Yoga Result: This yoga promises wealth, status, and physical enjoyments, plus beneficial influences from the houses involved. பரிவர்த்தனைக்கும், பார்வைக்கும் உள்ள வேறுபாடு. தீய கிரகங்கள் ஒன்றை ஒன்று பார்க்கும்போது தீமைகள் அதிகமாகும். நல்ல கிரகங்கள் ஒன்றை ஒன்று பார்க்கும்போது நன்மைகள் அதிகமாகும். உதாரணத்திற்கு சனியையும், செவ்வாயையும் எடுத்துக் கொள்வோம். இரண்டும், 180 பாகைகள், 90/270 பாகைகளில் (4/10 கோணங்களில்) ஒன்றை ஒன்று பார்க்கும். அதாவது ஜதகத்தில் ஒன்றின் பார்வையில் மற்றொன்று இருக்கும். அதனால் ஜாதகனுக்கு, அதீத கோப உணர்வும், மூர்க்கத்தனமும் இருக்கும். ஜாதகன் தன்னுடைய வாழ்வின் பாதி நன்மைகளை அந்தக் குணத்தாலாயே இழக்க நேரிடும். ஆனால் அதே நேரத்தில் சனியும், செவ்வாயும் ஒன்றிற்கொன்று பரிவர்த்தனையாகி நின்றால் சனியால் ஒரு ஒழுங்குமுறையும், செவ்வாயால் சாதிக்கும் தன்மையும் உண்டாகும். 2ஆம் அதிபதியும், 11ஆம் அதிபதியும் பரிவர்த்தனையானால், ஜாதகனுக்குப் பணம் கொட்டும். செல்வங்கள் சேரும். பணத்தை வைத்துக் கொண்டு என்ன செய்வது என்று குழம்பும் நிலை ஏற்படும். வாழ்க்கை, வசதிகளும், மகிழ்ச்சியும் நிறைந்ததாக இருக்கும். 6ஆம் அதிபதியும், 11ஆம் அதிபதியும் பரிவர்த்தனையானால், ஜாதகன் தன் சொத்துக்களை, செல்வங்களை இழக்க நேரிடும். 2ஆம் அதிபதியும், 9ஆம் அதிபதியும் பரிவர்த்தனையானால், ஜாதகன் மகிழ்ச்சி உள்ளவனாகவும், அதிர்ஷ்டம் உள்ளவனாகவும் இருப்பான். சொத்துக்களை உடையவனாகவும் இருப்பான். வேதங்களைக் கற்றவனாகவும், அதிபுத்திசாலியாகவும் விளங்குவான் 1ஆம் அதிபதியும், 5ஆம் அதிபதியும் பரிவர்த்தனையானால், ஜாதகன் புகழ்பெற்று விளங்குவான். மகிழ்ச்சி நிரம்பியவனாக இருப்பான். 1ஆம் அதிபதியும், 10ஆம் அதிபதியும் பரிவர்த்தனையானால், ஜாதகன் அரசில், அல்லது அரசியலில், உயர் பதவியைப் பெற்று உயர்வான நிலைக்கு வருவான். 9ஆம் அதிபதியும், 10ஆம் அதிபதியும் பரிவர்த்தனையானால், ஜாதகனுக்கு அந்தஸ்து, அதிகாரம், புகழ், என்று எல்லாமும் தேடிவரும். மிகவும் உயர்ந்த அமைப்பு இது. இதற்கு தர்ம கர்மாதிபதி யோகம் என்கின்ற பெயரும் உண்டு! This type of parivarththanai yoga will confer high position, reputation, fameand power. Shukra-Kuja exchange If Venus and Mars exchange their divisions, the female will go after other males. If the Moon be simultaneously in the 7th house, she will join others with consent of her husband. (எச்சரிக்கை: இது பொது விதி) அக்கிரமம். பெண்களுக்கு மட்டும்தான் மேலே குறிப்பிட்டுள்ள விதியா? ஆண்களுக்கு இல்லையா? எந்த விதிகளும் இல்லாமலேயே, ஆண்களில் பலர், காமுகர்கள்தான்:-))))) பல கடுமையான நோய்கள் வந்துவிட்டால் (இருதய நோய்கள், மார்புப்புற்று நோய்கள்) இந்தப் பரிவர்த்தனை யோகம் இருந்தால், அவர்களுக்கு வந்த வேகத்தில் அந்த நோய்கள் குணமாகிவிடும். இந்தப் பரிவர்த்தனை யோகத்திற்கு உதாரணமாகச் சொல்லப்படும் ஜாதகம் மறைந்த முன்னாள் பாரதப் பிரதமர் திருமதி இந்திரா காந்தி அம்மையார் அவர்களின் ஜாதகம். அதை உங்களுக்கு அறியத்தந்திருக்கிறேன். கீழே உள்ளது. அவர்களுடைய ஜாதகத்தில் ஆறு கிரகங்கள் பரிவர்த்தனையாகி உள்ளன. ஒரு ஜோடி பரிவர்த்தனை என்பது இரண்டு உச்சங்களுக்குச் சமம். 3ஜோடி பரிவர்த்தனை என்பது ஆறு கிரகங்கள் உச்சமானதற்குச் சமம் என்று எடுத்துக்கொள்ளலாம். இந்த பரிவர்த்தனைகளால் அவர் பல நன்மைகளையும் பெற்றார். பல தீமைகளையும் பெற்றார். இளம் வயதில் விதவையானதும், இளம் வயது மகனை, விமான விபத்தில் பறி கொடுத்ததும் (1980) தீமைகளில் முக்கியமானவை Indira GANDHI, born on November 19, 1917 at 11:11 PM in Allahabad 1 & 7ஆம் வீடுகளில் சந்திரனும், சனியும் பரிவர்த்தனை. 2 & 5ஆம் வீடுகளில் சூரியனும், செவ்வாயும் பரிவர்த்தனை. 6 & 11ஆம் வீடுகளில் குருவும், சுக்கிரனும் பரிவர்த்தனை.  
17,சந்திரமங்கள யோகம்
யோகங்கள்: ”சந்திரமங்கள யோகம்” ”சந்திரமங்கள யோகம்” ஒரு ராசியில் சந்திரனும், செவ்வாயும் கூட்டணி போட்டு ஒன்றாக இருந்தால் நன்றாகக் கவனியுங்கள் - ஒன்றாக இருந்தால் அது சந்திரமங்கள யோகம் எனப்படும். சிலர் அதைச் ”சசிமங்கள” யோகம் என்றும் சொல்வார்கள். இரண்டும் ஒன்றுதான் If Mars conjoins the Moon, this yoga is formed Sasi Mangala Yoga - When mars and moon placed in same house. The natives finance never gets drain. He will get finance help when ever he needs. யோகத்தின் பலன் என்ன? இந்த யோகத்திற்குப் பலனும் உண்டு. பக்க விளைவும் உண்டு. பலன் எந்த அளவிற்குக் கிடைக்குமோ, அந்த அளவிற்குப் பக்க விளைவும் உண்டு. ஜாதகனின் நிதி நிலைமை என்றும் வற்றாமல் இருக்கும். எந்த வழியிலாவது பண வரவு இருக்கும். ஜாதகன் வசதியானவன். செல்வந்தன். அதே நேரத்தில் மனகாரகன் சந்திரனுடன், தீய கிரகமான செவ்வாய் சேருவதால் ஜாதகனுக்குப் பலவிதமான மனப்போராட்டங்களும் கூடவே இருக்கும். அதுதான் பக்க விளைவு. That is called as the side effects of this yoga Chandra Mangala Yoga acts as a powerful factor in establishing ones financial worth and at the same time the native will suffer with mental worries The combination is good if it occurs in the 2nd, 9th, 10th or 11th house. இது உபரிச் செய்தி: சந்திரன் ரிஷபத்தில் இருந்து (அங்கே அவர் உச்சம்) செவ்வாய் விருச்சிகத்தில் இருந்தாலும் (அது அவருக்கு ஆட்சி வீடு) அதுபோல மகரத்தில் செவ்வாய் இருந்து (அங்கே அவர் உச்சம்) கடகத்தில் சந்திரன் இருந்தாலும் (அது அவருக்கு ஆட்சி வீடு) அந்த அமைப்பு உன்னதமானது. இந்த அமைப்பில் சேர்க்கையில் அல்லாமல் பார்வையில் இந்த இரண்டு கிரகங்களும் ஜாதகனுக்கு மிக நல்ல பலன்களைக் கொடுக்கும். ஜாதகனின் நிதி நிலைமை வற்றாமல் ஊற்றாக இருக்கும்! அதாவது சசி மங்கள யோகத்திற்கு ஈடான பலன் அதில் உண்டு! The Moon in Taurus and Mars in Scorpio - The Moon in Cancer and Mars in Capricorn are excellent positions for the native of a horoscope! சந்திரனும், செவ்வாயும் ஒன்றாகச் சேர்ந்து எந்த வீட்டில் இருந்தாலும் அது சந்திரமங்கள யோகம் தான். சந்திரன் சாத்வீகமான கிரகம். அதனுடன் சேரும் தீய கிரகம் கீழ்க்கண்ட பாதிப்புக்களை உண்டாக்கும்: 1. ஜாதகனின் மனநிலையைப் பாதிக்கும். 2. குணத்தை மாற்றும். உணர்ச்சிவசப்படச் செய்யும். தன் நிலையை மறக்க வைக்கும். செவ்வாய் மனதில் ஒருவித அலையை ஏற்படுத்தும் 

Mars will create the tide within the mind, and influence the mental and emotional aptitude. Fighting mind and spirit, self protective, desire to rule and influence others, irritated and aggressive 
3. ஜாதகனின் இந்தக் குண மாற்றங்களால், அவனுடைய மனைவி, குடும்பம், மற்றும் உறவுகள் எல்லாமும் பாதிப்படையும். சந்திரன் சுபக்கிரகம். நல்லவற்றை வழங்கக்கூடிய கிரகம். நான்காம் இடத்திற்குக் காரகன். செவ்வாயும் ஒருவிதத்தில் வழங்கக்கூடியவன். நான்காம் இடத்திற்கான, இடம், சொத்துக்களை (Landed Properties) வழங்கக்கூடியவன் அவன்தான் சாமிகளா! இருவருமே வழங்கக்கூடிய வள்ளல்கள். ஆகவே ஜாதகனுக்குச் செல்வத்தை நிச்சயம் வழங்குவார்கள். அதே நேரத்தில் சில தீமைகளும், அவர்களின் சேர்க்கையால் உண்டாகும். அதுதான் அந்தப் பக்க விளைவு (side effects) Chandra Mangala Yoga gives wealth and also troubles to the native of the horoscope! எப்போது வழங்குவார்கள்? இருவரும் தங்கள் தசை/புத்திகளில்/அந்தர தசைகளில் வழங்குவார்கள் அந்த யோகமும், பாதிப்பும் எந்த அளவிற்கு இருக்கும்? இருவரும் அமரும் வீட்டைப் பொறுத்துப் பலன்களும் வித்தியாசப்படும்! The main difference lies in the house where chandra and mangala are placed. There are different infleunces on the houses: 1,3,5,6,8,9,10 ஆம் வீடுகளில் செவ்வாய்க்கு வலிமை அதிகம் 2,4,7,11, 12ஆம் வீடுகளில் சந்திரனுக்கு வலிமை அதிகம் ஆகவே அந்த இரண்டு கிரகங்கள் சேரும்போது இயற்கையாகவே அது எந்த வீடோ, அந்த வீட்டை-அதாவது முதல் வரியில் குறிப்பிட்டுள்ள வீடுகளில் செவ்வாயின் அதிகாரம் மேலோங்கி இருக்கும். இரண்டாவது வரியில் குறிப்பிட்டுள்ள வீடுகளில் சந்திரனின் அதிகாரம் மிகுந்து இருக்கும். சந்திரனின் அதிகாரம் உள்ள வீட்டை உடைய ஜாதகனுக்குத் தீய பலன்கள் குறைவாக இருக்கும். இது பொது விதி! உச்சம், நீசம், வக்கிரம், அஸ்தமனம், அஷ்டகவர்க்கப் பரல்கள் 6, 8, 12ஆம் இடங்கள் ஆகியவற்றை வைத்துப் பலன்கள் மாறுபடும். ஆகவே பொறுமையாக அலசுங்கள். அலசுகிற வேகத்தில் துணியைக் கிழித்து விடாதீர்கள்:-))))))
 Therefore, each house will decide which planet among two, Moon or Mars dominates the Yoga. IF Moon is stronger, satvic qualities dominate the Yoga, and bad shades of Yogas are lesser. Mars turns calms down due to the blessings of Benefic Moon If Mars dominates the Yoga, Mars is very angry and can create serious problems (apart from other good effects given by this Yoga) 
வீடுகள் வாரியாகப் பலன்கள் கீழே கொடுக்கப்பாட்டுள்ளன! கீழே உள்ளது அனைத்தும் பொதுப் பலன்கள்! கீழே உள்ளது அனைத்தும் பொதுப் பலன்கள்! கீழே உள்ளது அனைத்தும் பொதுப் பலன்கள்! 1. லக்கினத்தில் இந்தக் கிரக அமைப்பு இருந்தால், அது மேஷ லக்கினம், விருச்சிக லக்கினமாக இருந்தால் அல்லது கடக லக்கினமாக இருந்தால் நல்லது. ஜாதகனுக்கு எல்லாம் நன்மையே. இல்லையென்றால் ஜாதகனுக்கு சுகக் கேடு. ஆரோக்கியக் கேடு. 2. இரண்டாம் வீட்டில் இந்தக் கிரக அமைப்பு இருந்தால், ஜாதகனின் வாழ்க்கை வளமாகவும் செல்வம் மிக்கதாகவும் இருக்கும். அதோடு இதய நோய் உடையவனாகவும், அடிக்கடி விபத்துக்களில் சிக்கிக் கொள்பவனாகவும் இருப்பான். 3. மூன்றாம் வீட்டில் இந்த அமைப்பு இருந்தால், ஜாதகன் அம்சமாக இருப்பான். அம்சம் என்றால் என்ன வென்று தெரியுமல்லவா? எதையும் ரசிப்பவனாக இருப்பான். வாழ்க்கை ரசனைகள் மிகுந்து இருக்கும். அதே நேரத்தில் மனதில் கவலைகளுக்கும், பிரச்சினைகளுக்கும் குறைவிருக்காது. சிலரது (நன்றாகக் கவனிக்கவும்) சிலர் தனது துணையை இளம் வயதிலேயே பறிகொடுக்க நேரிடும்! 4. நான்காம் இடத்தில் இந்த அமைப்பு இருந்தால், ஜாதகன் மிகுந்த அதிர்ஷ்டசாலி! ஜாதகனுக்கு எதையும் மோதிப் பார்க்கும் குணம் இருக்காது. வருவது வரட்டும் என்று மேலோட்டமாக இருப்பான். வலிமையான மனம் உடையவனாக இருப்பான். இளைய உடன் பிறப்புக்களுடனான உறவு சுகமாக இருக்காது! 5. ஐந்தாம் இடத்தில் இந்தக் கிரக அமைப்பு இருந்தால், ஜாதகனைப் பரபரப்பான ஆசாமியாகவும், தகறாறு செய்யும் மனப்பான்மையுடையவனாகவும் மாற்றிவிடும். ஆனால் ஜாதகன் அதிகாரமுள்ளவனாக இருப்பான். 6. ஆறாம் இடத்தில் இந்தக் கிரக அமைப்பு, ஜாதகனுக்குப் பலவிதமான பிரச்சினைகளைக் கொடுக்கும். எதிரிகளை ஏற்படுத்திக் கொடுக்கும். சிலருக்கு அடிக்கடி விபத்துக்கள் ஏற்படும். 7. ஏழாம் இடத்தில் இந்தக் கிரக அமைப்பு செல்வம், புகழ் இரண்டையும் கொடுக்கும். அதே நேரத்தில் திருமண வாழ்வில் கசப்பை உண்டாக்கி விடும். கசப்பு எந்த அளவு வேண்டுமென்றாலும் இருக்கலாம். உறவுகளை ஓரங்கட்டிவிடும். சிலருக்கு இதயநோய்கள் உண்டாகும். ஒரு ஆறுதல் ஜாதகன் எதிரிகளைத் துவம்சம் செய்து விடுவான். சிலருக்கு இரண்டு தடவைகள் திருமணம் நடக்கலாம். 8. எட்டாம் இடத்தில் இந்தக் கிரக அமைப்பு மிகவும் மோசமானது. அழிவை ஏற்படுத்தக் கூடியது. திருமண வாழ்வில் முறிவை ஏற்படுத்தும். அல்லது கணவன்/மனைவி இருவரில் ஒருவரைக் காலி செய்துவிடும்.சிலருக்கு முதல் திருமணம் ரத்தாகி, இரண்டாவது திருமணம் நடக்கலாம். சிலருக்கு அதீதமான பணத்தைக் கொடுக்கும். அதே நேரத்தில் ஆயுளைக் குறைத்து விடும் அபாயமும் உண்டு! 9. ஒன்பதாம் இடத்தில் இந்தக் கிரக அமைப்பு சக்தி, அதிகாரம், வலிமை, வளமை என்று எல்லாவற்றையும் கொடுக்கும், அதே நேரத்தில் ஜாதகனின் ஆயுளைக் குறைத்து விடும் அபாயமும் உண்டு! அல்லது ஜாதகன் விபத்தில் சிக்கிக்கொள்ளும் அபாயமும் உண்டு! 10. பத்தாம் இடத்தில் இந்தக் கிரக அமைப்பு இருந்தால் ஜாதகனுக்கு அதீத வருமானம் உடைய வேலை அல்லது தொழில் அமையும். சிலருக்கு உடல் வலிமை இருக்கும். மன வலிமை இருக்காது. 11. பதினொன்றாம் இடத்தில் இந்தக் கிரக அமைப்பு இருந்தால் ஜாதகனுக்கு நிறைய நண்பர்கள் கிடைப்பார்கள். சமூக சேவையில் ஜாதகன் பெயர் எடுப்பான். ”காசுமேல காசு வந்து கொட்டுகிற நேரம் இது; ராஜலக்‌ஷ்மி வந்து கதவைத் தட்டுகிற நேரம் இது” என்று பாடிக் கொண்டிருப்பான். பணம் கொட்டும். சிலரின் ஜாதகத்தில் செவ்வாய்க்கு இந்த இடம் உகந்த இடம் இல்லையென்றால், ஜாதகன் ஆர்வக்குறைவாக இருப்பான். ஆனால் பணம் மட்டும் மழையாகக் கொட்டும்! 12. பன்னிரெண்டாம் இடத்தில் இந்தக் கிரக அமைப்பு இருந்தால் தீமைகளே அதிகம். இடம் என்ன சாதாரணமான இடமா என்ன? விரைய ஸ்தானம் (House of Loss) உடல் உபத்திரவம், மன உபத்திரவம், கடன், அதிர்ஷ்டமின்மை, உறவுகளின் இழப்பு, நண்பர்களின் பிரிவு என்று எல்லாமுமே படுத்துவதாக இருக்கும். கவலைப் படாதீர்கள், இந்த அமைப்பு உங்களுக்கு இருந்தால், நீங்கள் ஞானியாகி விடலாம். ஞானியாகிவிட்டால் அதைவிட மேன்மையான நிலை எதுவும் இல்லை!
18,கஜகேசரி யோகம்
கஜகேசரி யோகம்! மிகச்சிறந்த யோகங்களில் கஜகேசரி யோகமும் ஒன்று. கஜம் என்றால் யானை, கேசரி என்றால் சிங்கம். யானையின் தோற்றத்தையும், சிங்கத்தின் பலத்தையும் கொடுக்கக்கூடிய யோகம் கஜகேசரி யோகம். பெருந்தன்மை, புத்திசாலித்தனம். கெளரவம், பெயர், புகழ், செல்வாக்கு, சொல்வாக்கு, ஆகியவற்றை ஜாதகனுக்கு இந்த யோகம் கொடுக்கும்.

 This yoga gives the native, qualities of a both animals - magnanimous and intelligent as an elephant and majestic as a lion. Such people would earn a lot of name and fame in life. A quality of generosity would also be associated with them. 
மொத்தம் உள்ள மூன்று சுபக்கிரகங்களில் இரண்டு சுபக்கிரகங்கள் - குரு’வும், சந்திரனும் சம்பந்தப்பட்டு ஏற்படுவதால் இந்த யோகத்திற்கு அந்தப் பெயர் வழங்கப்பட்டிருக்கலாம். இந்த யோகம் எப்போது உண்டாகும்? குரு பகவானும், சந்திரனும் ஒருவருடைய ஜாதகத்தில் அவர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் 1, 4, 7,10 ஆகிய கேந்திர வீடுகளில் அமர்ந்திருந்தால் இந்த யோகம் உண்டாகும்
Gaja Kesari Yoga is caused by Moon and Jupiter coming together in a chart by being in Kendras (1st, 4th, 7th, or 10th) from each other. 
இந்த யோகம் உள்ள அனைவருக்கும் ஒரே மாதிரிப் பலன் உண்டா? இல்லை! அந்த இரு கிரகங்களும் ஜாதகத்தில் அமைந்திருக்கும் தன்மையைப் பொறுத்துப் பலன் மாறுபடும். அவைகள் நீசம் பெறாமலும், பகை வீட்டில் இல்லாமலும், வக்கிரம் பெறாமலும், அஸ்தமனமாகாமலும், தீய கிரகங்களின் கூட்டணி மற்றும் பார்வை பெறாமலும் இருக்க வேண்டும். அதோடு அவைகளில் இரண்டில் ஒன்று ஜாதகத்தில் 6, 8,12 ஆம் வீடுகளில் உட்கார்ந்திருக்கக்கூடாது 
This yoga depends on the strength, position and house lordship of the two planets involved - Moon and Jupiter. The yoga would also be best shown in life if both these planets are in their exaltation sign and are at an angle not just from each other but from Lagna as well. Neechabhanga Chandra and Guru would be considered good. The two planets would need to be benefic in the charts and suitably disposed to the lord of Lagna as well. They themselves should be free from any negative aspect, particularly Rahu and Saturn should not be associated with Moon. This yoga would not work if Jupiter is in regression - as benefic planets become considerably weaker when they are retrograde. Moon and Jupiter should not be in neech awastha or in combust state. If that is the case, the effects of this yoga are nullified and the person would lead a fairly ordinary life.
 அப்படி இருந்தால் என்ன அளவில் (ratio) பலன்? அப்படி இருந்தால் என்ன அளவில் (ratio) பலன் என்பதைத் தருமியிடம்தான் கேட்கவேண்டும்! அவர்தான் திருவிளையாடல் தருமி! எப்போது பலன் கிடைக்கும்? குரு மற்றும் சந்திரனின் மகா தசைகளிலும், புத்திகளிலும் பலன்கள் கிடைக்கும்
19, புத ஆதித்யா யோகம்
புத ஆதித்யா யோகம்புத ஆதித்யா யோகம் புதனும், சூரியனும் ஒரு ராசியில் சேர்ந்திருந்தால் அது யோகத்தைக் கொடுக்கும். அந்த யோகத்தின் பெயர் புத ஆதித்ய யோகம்! பலன்: ஜாதகன் அல்லது ஜாதகிக்கு இந்த யோகம் அதீத திறமைகளைக் கொடுக்கும். எடுத்த காரியங்களில் வெற்றியைக் கொடுக்கும். சமூகத்தில்/நட்பு வட்டாரங்களில் மதிப்பையும், மரியாதையையும் கொடுக்கும். This yoga will give lots of talent, success, honour and fame in society. எல்லோருக்கும் கொடுக்குமா? கொடுக்காது. ஏன் கொடுக்காது? யோகத்தைக் கொடுக்க வேண்டிய கிரகங்கள் வலுவாக இருந்தால் மட்டுமே யோகத்திற்கான பலன்கள் கிடைக்கும். ஜாதகத்தில் புதனும், சூரியனும், இருவரில் ஒருவர், 6, 8, 12ஆம் வீடுகளில் ஏதாவது ஒன்றிற்கு அதிபதி என்றால், யோக பலன்கள் இருக்காது. அதுபோல அவர்கள் அமரும் வீடு, அவர்களுக்குப் பகை வீடு அல்லது நீச வீடு என்றாலும் பலன் இருக்காது. அவர்களுடன், சனி, ராகு, கேது போன்ற வில்லன்களில் ஒருவர் கூட்டாக இருந்தாலும் யோக பலன் இருக்காது The Sun & Mercury should be placed well in a chart and also should not themselves be badhakas for the chart சிம்மம் (சூரியனின் ஆட்சி வீடு) மேஷம் (சூரியனின் உச்ச வீடு) மிதுனம் (புதனின் ஆட்சி வீடு) கன்னி (புதனின் ஆட்சி மற்றும் உச்ச வீடு) ஆகிய 4 வீடுகளில் இந்த யோகம் அமைந்திருந்தால் அது பலனளிக்கும்! மற்ற வீடுகளில்/ராசிகளில் இந்த யோகம் கலவையான (mixed result) பலனைக் கொடுக்கும். அதாவது தண்ணீர் ஊற்றிய பால மேஷ லக்கினக்காரர்களுக்குப் புதன் 3 & 6ஆம் வீட்டிற்கு அதிபதி. அந்த லக்கினக்காரர்களுக்கு இந்த யோகம் சொல்லும்படியாகப் பலனளிக்காது ரிஷப, சிம்ம, துலா & மகர லக்கினக்காரர்களுக்கு, இந்த யோகம் இருந்தால் பலன் கிடைக்கும். தனுசு லக்கினக்காரர்களுக்கும் பலன் கிடைக்கும் புதன் சூரியனுடன் 6 பாகைக்குள் சேர்ந்திருந்தால் அஸ்தமனமாகிவிடும். அப்போது இந்த யோகம் கிடைக்காது. அதுபோல புதன் வக்கிரகதியில் இருந்தாலும் இந்த யோகம் இல்லை! சிலர் புதனுக்கு அஸ்தமனம் இல்லை என்பார்கள். அவர்களுக்கு இந்த யோகம் கிடைக்கப் பிரார்த்திப்போம்!
20,அனபா யோகம்
அனபா யோகம் சந்திரன் இருக்கும் வீட்டிலிருந்து அதற்குப் 12ஆம் வீட்டில் (அதாவது சந்திரனுக்குப் பின்புறம் உள்ள ராசியில்) செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி, ஆகிய ஐவரில் ஒருவர் இருந்தால் அது இந்த யோகம் பொதுப்பலன்: ஜாதகன் நல்ல தோற்றத்தை உடையவனாக இருப்பான். பெருந்தன்மை உடையவனாக இருப்பான். மென்மையானவனாக இருப்பான் சுயமரியாதை உடையவனாக இருப்பான். வயதான காலத்தில் ஆன்மீகத்தில் அதிக நாட்டம் கொள்வான்

 Anapha yoga: If there are planets in the twelfth from the moon, Anapha yoga is caused. A planet other than the Sun occupying the 12th house from the Moon constitutes Anapha yoga. It indicates a person who is of good appearance, generous, polite, self -respecting and moves into spiritual life at a later stage. One born in Anapha Yoga will be eloquent in speech, magnanimous, virtuous, will enjoy food, drink, flowers, robes and females, will be famous, calm in disposition, happy, pleased and will possess a beautiful body. 
தனிப் பலன்கள் 1.சந்திரனுக்குப் பன்னிரெண்டில் செவ்வாய் இருந்தால்: ஜாதகன் வலிமையானவன். அதிகாரமுள்ளவன். சுயகட்டுப்பாடு உள்ளவன். 2.சந்திரனுக்குப் பன்னிரெண்டில் புதன் இருந்தால்: சிறந்த பேச்சாளனாக இருப்பான். கலைகளின் நுட்பம் தெரிந்தவனாக இருப்பான். 3.சந்திரனுக்குப் பன்னிரெண்டில் குரு இருந்தால்: ஜாதகன் தீவிர சிந்தனை, செயல்களை உடையவனாக இருப்பான். தர்ம சிந்தனை மிக்கவனாக இருப்பான். தன்னுடைய செல்வத்தை அறவழிகளில் பயன்படுத்துவான். அதாவது பல தர்மங்களைச் செய்வான். 4.சந்திரனுக்குப் பன்னிரெண்டில் சுக்கிரன் இருந்தால்: ஜாதகன் பெண்பித்தனாக இருப்பான். அதிகாரத்தில் இருப்பவர்களின் தொடர்பு உள்ளவனாக இருப்பான் 5. சந்திரனுக்குப் பன்னிரெண்டில் சனி இருந்தால்: ஜாதகன் எதிலும் பிடிப்பு இல்லாதவனாக இருப்பான். பற்று இல்லாதவனாக இருப்பான். (ராகு அல்லது கேது இருந்தால்: ஜாதகன் இயற்கையான விஷயங்களுக்கு எதிராக நடப்பவனாக இருப்பான். அவற்றில் பற்று உள்ளவனாக இருப்பான்) ****************************** அனபா யோகம் என்றால் என்ன? சந்திரன் இருக்கும் இடத்தில் அதற்குப் பன்னிரெண்டாம் வீட்டில், அதாவது உங்கள் சந்திர ராசிக்குப் பன்னிரெண்டில், சூரியனைத் தவிர, மற்ற கிரகங்களில் ஒன்று இருந்தால் அதற்கு அனபா யோகம் என்று பெயர். ராகு & கேதுவிற்கு முழு கிரக அந்தஸ்து இல்லை. இருந்தாலும் இந்த யோகத்திற்கு அவற்றைக் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். அதன் பலன் என்ன? 1 அந்த இடத்தில் செவ்வாய் இருந்தால்: ஆசாமி வலிமையானவன். சுய கட்டுப்பாடு உள்ளவன். விரும்பத்தகாத வேலைகளைச் செய்பவனாகவும், அதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்களுக்குத் தலைமை ஏற்பவனாகவும் இருப்பான் 2 அந்த இடத்தில் புதன் இருந்தால்: ஆசாமி எல்லா வித்தைகளும் தெரிந்தவனாகவும், மிகச் சிறந்த பேச்சாளனாகவும் இருப்பான். யாரையும் கவரக்கூடிய வகையில் பேசும் திறமையைப் பெற்றிருப்பான் 3. அந்த இடத்தில் குரு இருந்தால்: ஜாதகன் எதையும் விளையாட்டாக எடுத்துக் கொள்பவன் அல்ல! சீரியசான ஆசாமி. அறவழியில் செல்லக்கூடியவன். தன் செல்வத்தை அல்லது வருமானத்தில் ஒரு பகுதியை தர்ம காரியங்களுக்காகச் செலவிடக்கூடியவன். 4. அந்த இடத்தில் சுக்கிரன் இருந்தால்: ஆசாமி பெண்களிடத்தில் வழியக்கூடியவன். அல்லது பெண்களிடம் கரையக்கூடியவன். அல்லது உருகக்கூடியவன் எப்படி வேண்டுமென்றாலும் வைத்துக் கொள்ளுங்கள். மொத்தத்தில் பெண்பித்தன் (womanizer) ஆனால் அதிகாரமுடையவர்களின் நன் மதிப்பைப் பெற்றவன் 5. அந்த இடத்தில் சனி இருந்தால்: ஜாதகன் தவறான நம்பிக்கைகளுக்கு எதிரானவன். மாயை’களில் இருந்து விடுபடக்கூடியவன். மொத்தத்தில் முற்போக்குவாதி! 6 ராகு அல்லது கேது இருந்தால்: ஆசாமி அதிரடியானவன். யாருக்கும் கட்டுப்படாதவன் எந்த விதிகளுக்கும், ஒழுங்கு முறைகளுக்கும் கட்டுப்படமாட்டான். மொத்ததில் அடங்காதவன்! மொத்ததில் இந்த யோகம் ஜாதகனுக்கு நல்ல உடல் அமைப்பையும், நல்ல பண்புகளையும், சுய மரியாதையையும் கொடுக்கும்
21,ருச்சகா யோகம்
ருச்சகா யோகம்: செவ்வாய் - செவ்வாயை மட்டுமே வைத்து வருவது இந்த யோகம். செவ்வாய் தனது சொந்த வீடுகளில் இருந்தாலும் அல்லது ஜாதகத்தில் உச்சம் பெற்று மகரராசியில் இருந்தாலும் அல்லது ஜாதகனின் கேந்திர வீடுகளில் இருந்தாலும் இந்த யோகம் உண்டு. ஜாதகன் துணிச்சலானவன்.எதிலும் வெற்றி காண்பவன். சிலர் இரக்கமில்லாமல் அரக்க குணமுடையவர்களாகவும் இருப்பார்கள்
22,பாபகர்த்தாரி யோகம்
அந்த விதியின் பெயர் பாபகர்த்தாரி யோகம 1.லக்கின அதிபதி (1st Lord) பத்தாம் வீட்டிற்கு உரியவன்(10th Lord) பதினொன்றாம் வீட்டிற்கு உரியவன் (11th Lord) ஆகிய மூவரும் நல்ல நிலைமியில் இருந்தால் ஜாதகன் வியாபாரம் செய்து அல்லது தொழில செய்து அல்லது பெரிய நிறுவனத்தில் உயர் வேலையில் இருந்து நிறையப் பொருள் ஈட்டுவான். 2.லக்கின அதிபதி (1st Lord) பத்தாம் வீட்டிற்கு உரியவன்(10th Lord) இருவர் மட்டும் நன்றாக இருந்தால் உத்தியோகம் பார்த்து வசதியாக வாழ்வான். 3.லக்கின அதிபதி (1st Lord) பலவீனமாக இருந்தால் - அதாவது ஆறு எட்டு, பன்னிரெண்டு ஆகிய இடங்களில் மறைந்து விட்டால் அல்லது பத்தாம் வீட்டிற்கு உரியவன்(10th Lord) அப்படியிருந்தாலும் ஜாதகனுக்குக் கஷ்ட ஜீவனம்தான். மற்ற கிரகங்கள் வலுவாக இருந்தால் விதிவிலக்காக சுக ஜீவனமாக இருப்பான். 4.லக்கின அதிபதி (1st Lord) பத்தாம் வீட்டிற்கு உரியவன் (10th Lord) இருவரும் பலம் பொருந்தி கேந்திர திரிகோணங்களில் இருந்தால் ஜாதகன் தான் பிறந்த ஊரில் அல்லது இருக்கும் ஏரியாவில் பிரபலமாக இருப்பான்.பலருக்கும் உதவி செய்பவனாக இருப்பான்.
23,அவயோகம்
ஜாதகத்தில் சந்திரன் தனித்து நின்றால் அது அவயோகம்! அதாவது சந்திரன் இருக்கும் கட்டத்தின் இருபக்கக் கட்டங்களிலும் கிரகம் எதுவும் இல்லாமல் இருந்து, சந்திரனும் தன்னுடைய கட்டத்தில் தனியாக இருந்தால் அது அவயோகம். அதற்குப் பெயர் தரித்திர யோகம். வயதான காலத்தில் ஜாதகனை அது தனிமைப் படுத்திவிடும்! ஆதரவு அற்ற நிலையில் நிறுத்திவிடும்! உடனே உங்கள் ஜாதகத்தை எடுத்துப் பார்த்து சந்திரன் அப்படி இருந்தால் பயந்து விடாதீர்கள். அதற்கு விதிவிலக்கு உண்டு! சந்திரன் குருவின் பார்வை பெற்றிருந்தாலோ அல்லது சந்திரன் தன்னுடைய சுயவர்க்கத்தில் 5 அல்லது அதற்கு மேல் பரல்கள் பெற்றிருந்தாலோ அந்த நிலைமை ஜாதகனுக்கு ஏற்படாது அல்லது வராது!
24, பர்வத யோகம்
பர்வத யோகம்யோகம் : லக்கினாதிபதியும் பன்னிரண்டாம் வீட்டு அதிபதியும் ஒருவர்க்கொருவர் கேந்திரத்தி−ருந்தால். நீங்கள் தர்ம சிந்தனை, தயாளகுணம், மற்றும் நகைச்சுவை உணர்வுள்ள மனிதராவீர்கள். உங்களுடைய செயல்கள் உணர்வு பூர்வமாக இருக்கும். ஒரு நிறுவனத்திற்கோ கிராமத்திற்கோ அல்லது நகரத்திற்கோ தலமையாளராக வருவீர்கள்.
25,சுனபா யோகம்
யோகம் : சூரியனை தவிர்த்து மற்ற கிரஹங்கள் சந்திரனுக்கு இரண்டாமிடத்தில் இருந்தால். ஜாதகத்தில் சந்திரராசியி−ருந்து 2-வது இடம் செவ்வாய், புதன், வியாழன், சுக்கிரன் அல்லது சனி தனியாகவோ அல்லது சேர்ந்தோ இருந்தால் சுனபயோகம் உண்டாகிறது. சுனபயோகத்தில் பிறந்த ஆடவர்கள் இயற்கையாக ஆஸ்திகள் மிக்கவராயும், புத்திக்கூர்மையும் புகழும் உடையவராயும் இருப்பார்கள். பார்வையிலும் சப்தத்தினாலும் உண்டாகும் சந்தோஷங்களை அனுபவிப்பார்கள். பொதுவாக தன்முயற்சியால் உயர்வார்கள்.
26,துருதுரா யோகம்
யோகம் : அனபா சுனபா யோகங்கள் இரண்டும் இருந்தால் துருதுராயோகம் என்பது அனபயோகமும் சுனபயோகமும் ஒரு ஜாதகத்தில் ஒருங்கே அமைந்தால் உண்டாகும். உங்களுக்கு இந்தயோகம் இருப்பதால் நீங்கள் ஆஸ்திகள் உடையவராய் இருப்பீர்கள். எப்பொழுதும் உங்கள் கைவசம் பணம் இருந்து கொண்டே இருக்கும். இது உங்களுடைய இயற்கையான இரக்கத்தன்மையையும் பெருந்தன்மையையும் கெடுக்காது. புகழ் உங்களை அரவணைக்கும். வாகனயோகங்கள் உண்டாகும்.,

Wednesday, September 6, 2017

குரு பெயர்ச்சி பலன்கள் Guru peyarchi predictions in Tamil 2017- 2018

மேஷம்:
தைரியம், வீரம், வீடு, மனை, நிலம் மற்றும் உடன்பிறப்புகளுக்கு காரகரான செவ்வாயை அதிபதியாகக் கொண்ட மேஷம் ராசி அன்பர்களே! தங்கள் இராசிக்கு குரு தரும் பலன்களைப் பார்ப்போம். தங்கள் இராசிக்கு பாக்ய, விரய பாவாதிபதியான குரு இதுவரை ருண ரோக சத்ரு பாவமான 6 ஆம் இடத்தில் சஞ்சரித்து ஆரோக்கியக் குறைவு, பகைவர்களால் தொல்லை, தேவையற்ற கடன்களால் பிரச்சனைகள் என அல்லல் தந்தவர், களத்திர பாவமாகிய 7 ஆம் இடத்திற்கு மாறுகிறார். குருவால் சிறப்பு பலன்கள் ஏற்படும். பார்வை பலத்தால் சிறப்பான பலன்கள் உண்டாகும். வீட்டில் சுபகாரியங்கள் திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் நடக்கும். மனைவியின் உடல் நலம் சிறப்பாக இருக்கும். உங்கள் வாழ்க்கைத் துணைவர் மகிழ்ச்சியடையும்படியான நிகழ்ச்சிகள் நடைபெறும். புதிய தொழில் தொடர்புகள் நல்ல வருமானத்தைத் தரும். சொகுசு மிகுந்த வாகனங்கள் வாங்கும் யோகம் உண்டாகும். அரசாங்க வேலைக்கு தேர்வு எழுதியவர்களுக்கு அரசு வேலை கிடைக்கும் வாய்ப்பு உண்டாகும். புதிதாக வீடு, மனை, நிலம் ஆகியவற்றை வாங்கும் யோகம் உண்டாகும். விலை உயர்ந்த ஆடை ஆபரணங்கள் சேர்க்கை உண்டாகும். மாணவ மாணவிகளின் கல்வி நிலை மேன்மையடையும். தொழில் வியாபாரம் சம்பந்தமான வெளிநாட்டுப் பயணம் ஏற்படும். தொழிலில் தன வரவு அதிகரிக்கும். கூட்டுத் தொழில் சிறப்படையும். தொழில் கூட்டாளிகளின் உதவி கிடைக்கும். உங்கள் தொழில் தொடர்பான முதலீடுகள் அதிகரிக்கும். உறவினர்களிடையே நல்லுறவு நிலவும். கணவன் மனைவி அன்னியோன்னியம் சிறப்படையும். சமுதாயத்தில் புகழ், கௌரவம், அந்தஸ்து ஆகியவை உயரும். குழந்தைகளினால் சந்தோஷம் அதிகரிக்கும்.
குருவின் பார்வை பலன்கள்: குரு உங்கள் ராசிக்கு பதினொன்றாம் இடத்தைப் பார்ப்பதால் மனைவி மக்களுடன் சந்தோஷம் அதிகரிக்கும். உங்கள் மூத்த சகோதரர்களின் பொருளாதார நிலை சிறப்படையும். உங்களின் தொழில் முயற்சிகள் யாவும் வெற்றி அடையும். குரு ஏழாம் பார்வையாக உங்கள் ராசியைப் பார்ப்பதால் பொதுவாக சமுதாயத்தில் மதிப்பு மரியாதை கூடும். தன்னம்பிக்கையும் தைரியமும் உயரும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். பதவி உயர்வு உண்டாகும். குரு மூன்றாம் இடத்தை பார்ப்பதால் தைரியம் அதிகரிக்கும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த நல்ல தகவல்கள் வந்து சேரும். இளைய சகோதரருக்கு வாழ்க்கையில் நல்ல முன்னேற்றங்கள் ஏற்படும். புதிய தொழில் ஒப்பந்தங்கள் உண்டாகும்.
ரிஷபம் :
களத்திரத்திற்கு காரகரான சுக்கிரனை அதிபதியாகக் கொண்ட மென்மையான குணமும், பிறர் மனதை கவர்ந்து நீங்கள் நினைத்த காரியங்களை நினைத்தபடி முடித்துக் கொள்ளும் ரிஷபம் ராசி அன்பர்களே! தங்கள் இராசிக்கு குரு பெயர்ச்சி தரும் பலன்களைப் பார்ப்போம். தங்கள் இராசிக்கு அஷ்டம மற்றும் இலாப பாவாதிபதியான குரு இதுநாள்வரை தங்களின் பூர்வ புண்ணிய புத்திர ஸ்தானத்தில் இருந்து ருண, ரோக, சத்ரு பாவத்தில் சஞ்சரிக்கப் போகிறார் இந்த காலத்தில் உங்களுக்கு குரு ஆரோக்கியக் குறைவினை ஏற்படுத்தலாம். எதிரிகளின் தொல்லைகளால் கஷ்டப்படும் சூழ்நிலை உண்டாகும். . தேவையற்ற கடன்கள் வாங்கி, அதன் காரணமாக கடன் கொடுத்தவர்களினால் தொல்லைகள் ஏற்படலாம். சமூகத்தில் செல்வாக்கும், சொல்வாக்கும் இழக்க நேரிடலாம். எதிரிகளின் பலம் கூடும். அதனால் உங்கள் மனம் பாதிப்படையும் குழந்தைகளால் வருமானம் அதிகரிக்கும் மனைவியால் விரயங்கள் ஏற்படும். குருவின் பார்வை பலன்கள்: குரு தனது 5 ஆம் பார்வையாக உங்கள் ராசிக்கு 10 ஆம் பாவமான கர்மஸ்தானத்தைப் பார்வையிடுவதால் புதிய தொழில் துவங்கும் வாய்ப்புகள் ஏற்படும். செய்யும் தொழிலில் விரிவாக்கங்கள் செய்யும் சூழ்நிலை உண்டாகலாம். மனைவியின் செயல்படுகள் சிறந்து, செயல்கள் எல்லாவற்றிலும் கை கொடுப்பார். தந்தை வகையில் தனவரவு உண்டாகும். குரு தனது 7 ஆம் பார்வையால் உங்கள் ராசிக்கு விரய பாவத்தை பார்வை இடுவதால் வீட்டில் விலை உயர்ந்த ஆடை ஆபரணங்களுக்காக செலவுகள் செய்வீர்கள் வெளிநாட்டு வாய்ப்புகள் ஏற்படும். மூத்த சகோதரர்களால் பண வரவு உண்டாகும். குரு தனது 9 ஆம் பார்வையாக உங்கள் ராசிக்கு தன பாவத்தைப் பார்வையிடுவதால் ஏதாவது ஒரு வழியில் பணவரவுகள் வந்து கொண்டே இருக்கும். வீட்டில் சுபகாரியங்கள் நடக்கும். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் நடக்கும். குரும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்
.
மிதுனம்:
கல்விக்கும் புத்திசாலித்தனத்திற்க்கும் வியாபாரா சிந்தனைகளுக்கும் காரகரான புதனை அதிபதியாகக் கொண்ட மிதுனம் ராசி அன்பர்களே தங்கள் இராசிக்கு குரு பெயர்ச்சி தரும் பலன்களைப் பார்ப்போம். தங்கள் இராசிக்கு களத்திர மற்றும் ஜீவன பாவத்துக்கு அதிபதியான குரு உங்கள் ராசிக்கு சுக ஸ்தானத்தில் இருந்து புத்திர, பூர்வ புண்ணிய பாவமான துலாம் ராசிக்கு மாறுகிறார். தேவகுரு இதுநாள் வரை சுக பாவம் அமர்ந்து நிம்மதி, சுகத்தைக் கொடுத்தாலும் சில கஷ்டங்கள் இருந்த வாழ்க்கையை தனவாசம் மிக்கதாக மாற்றி விடுவார். தெய்வீக அருளும், திருமகள் கடைக்கண் பார்வையும் ஏற்பட்டு நல்ல காலம் பிறக்கும். இன்னல்களை நீக்கி இன்பம் தருவார். நீங்கள் எதிர்பார்த்த செல்வம் சேரும். முகத்தில் அழகும் பொலிவும் கூடும், புத்திதெளிவும், அறிவுக் கூர்மையும் ஏற்படும். பெயரும் புகழும் ஓங்கும். வேலை இல்லாமல் இருந்தவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். குழந்தை பாக்கியத்தை எதிர்பார்த்திருந்தவர்களுக்கு ஆண் குழந்தை கிடைக்கலாம். வீட்டில் மங்கள காரியங்கள் சிறப்புற நடக்க்கும். சமுதாயத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். குருவின் பார்வை பலன்கள்: குரு தனது 5 ஆம் பார்வையால் உங்கள் ராசிக்கு பாக்கிய பாவத்தைப் பார்ப்பதால் அதிகாரம் மிக்க பதவிகள் கிடைக்கும் அதன் மூலம் சமுதாயத்தில் மதிப்பும் மரியாதைகளும் அதிகரிக்கும். தந்தையின் மூலமாகப் பொருளாதார நிலையும் உயரும். பூர்வீக சொத்துக்கள் கிடைக்கும். அதிர்ஷ்டம் அதிகரிக்கும். கடவுள் அருள் உண்டாகும். குரு தனது 7 ஆம் பார்வையால் உங்கள் ராசிக்கு லாப பாவத்தைப் பார்வை செய்வதால் தொழிலில் தங்கள் எதிர்பார்த்ததை விட அதிகமான இலாபங்கள் கிடைக்கும். அரசு மூலமான வருமானங்கள் அதிகரிக்கும். அரசு ஊழியர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். மூத்த சகோதரரின் பொருளாதாரம் சிறப்படையும். குரு தனது 9 ஆம் பார்வையாக உங்கள் ஜென்ம ராசியை பார்வையிடுவதின் மூலம் சமூகத்தில் உங்கள் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். கணவன் மனைவிக்கிடையே மகிழ்ச்சி அதிகரிக்கும்.
கடகம்: நல்ல மன நிலைக்கும் தாய்க்கும் காரகரான சந்திரனை அதிபதியாகக் கொண்ட நற்குணங்களும், எளிதில் உணர்ச்சி வசப்படக் கூடியவருமான கடகம் ராசி அன்பர்களே தங்கள் இராசிக்கு குரு பெயர்ச்சி பலன்களைப் பார்ப்போம். உங்கள் இராசிக்கு ருண, ரோக, சத்ரு பாவதிபதி மற்றும் பாக்கியாதிபதியான குரு தைரிய ஸ்தானத்திலிருந்து சுக ஸ்தானமான துலாத்திற்கு மாறுகிறார். குருவின் பார்வை பலன்கள்: குரு ராசிக்கு நான்கில் வந்த போது தான் தர்ம புத்திரர் உறவுகளை வைத்து சூதாடி சொத்துக்களை இழந்து வனவாசம் சென்றார். அதுபோல் இன்றைய நிலையில் வீண் சூதாட்டம், போட்டி பந்தயங்கள் ஆகியவற்றில் ஈடுபட்டு இழப்புக்களை சந்திக்க நேரலாம். எனவே நீங்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய காலம் இது. பண இழப்பு உண்டாகலாம், குடும்பத்தில் நிம்மதி குறையும் சந்தோஷம் குறையும், குழந்தைகளால் தேவையற்ற செலவுகள் ஏற்படும். உறவினர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. சிலருக்கு அவமானங்கள் ஏற்பட்டு, மதிப்பு, மரியாதைகள் குறையும். தொழில் உத்தியோகத்தில் சிக்கல்களும், வருமானக் குறைவும் ஏற்படும். குரு தனது 5 ஆம் பார்வையால் உங்கள் ராசிக்கு 8 ஆம் இடத்தைப் பார்வை செய்கிறார். இதன் பலனாக நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்து வந்த வழக்கு, வியாஜ்யங்கள் வெற்றி அடையும். மன கஷ்டங்கள் மன அழுத்தங்கள் மறையும். பயம் விலகி மன பலம் உண்டாகும். இது வரை இருந்து வந்த. தடைகள் விலகி மண மேடையில் உலாவரும் பாக்கியம் ஏற்படும். குரு தனது 7 ஆம் பார்வையாக உங்கள் ராசிக்கு 10 ஆம் இடத்தைப் பார்வை செய்கிறார் இதன் காரணமாக முடங்கிய தொழில்கள் மேன்மை நிலையை அடையும். தொழில் உத்தியோகம், வியாபாரம் ஆகியவை புத்துயிர் பெறும். பதவி உயர்வு கிடைக்கும் வேலை தேடி அலைபவர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். குரு தனது 9 ஆம் பார்வையாக உங்கள் ராசிக்கு 12 ஆம் இடமான விரயபாவத்தைப் பார்வையிடுவதால். சுகமான நித்திரைக்கு எவ்விதக் குறையும் இருக்காது. கோர்ட், கேஸ் விவகாரங்களில் உங்களுக்கு சாதகமான சூழ்நிலை உருவாகி வெற்றி கிடைக்கும்.
சிம்மம்: அப்பாவுக்கும் ஆத்மாவுக்கும் தொழில் உத்தியோகத்திற்கும் காரகரான சூரியனை அதிபதியாகக் கொண்ட தனக்கென ஒரு தனி வழி அமைத்துக் கொள்பவர்களும் ,தன்னம்பிக்கை மிக்கவர்களுமான சிம்மம் ராசி அன்பர்களே! தங்கள் இராசிக்கு குருபெயர்ச்சி தரும் பலன்களைப் பார்ப்போம். தங்கள் இராசிக்கு புத்திர பாவாதிபதி மற்றும் ஆயுள்ஸ்தானாதிபதியுமான குரு தன பாவத்திலிருந்து தைரிய பாவமான துலாம் ராசிக்கு மாறுகிறார் இது நாள் வரை தனபாவத்தில் இருந்து வந்த குரு பகவான் பொதுவாக நற்பலன்களை அள்ளி வழங்கினார். இனி எதையும் முன்பு இருந்த ஒரு துணிவோடு செய்ய முடியாத நிலை உருவாகும்.பிறருக்கு நல்லதே செய்தாலும் தீமையாகவே முடியும். எனவே, எதையும் ஆராய்ந்து அறிந்து செய்வதே நல்லது உடன் பிறப்புகளால் குடும்ப ஒற்றுமை குறையும். நண்பர்களால் ஏமாற்றப்படுவீர்கள். எச்சரிக்கையாகவே இருப்பது நல்லது. தேவையற்ற செலவுகள் ஏற்பட்டு கையிருப்பு கரையும். அரசாங்க உத்தியோகத்தில் உள்ளவர்களுக்குப் பதவி உயர்வில் தடை, தாமதங்கள் உண்டாகும். யாரையும் நம்பி ஜாமீன் கையெழுத்து போடுவது சிக்கலைத் தரும். எனவே, எச்சரிக்கை அவசியம். கணவன் மனைவிக்குள் ஒற்றுமை குறையும் வாக்கு வாதங்கள் அதிகரிக்கும். குருவின் பார்வை பலன்கள்: குரு தனது 5 பார்வையாக உங்கள் ராசிக்கு களத்திர பாவத்தை பார்வையிடுவதால்,திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் நடைபெறும். பிரிந்து போன உறவுகள் ஒன்று கூடுவர். புதிய ஒப்பந்தங்கள் ஏற்படும். தாய் மாமனின் பொருளாதார நிலை உயரும். அரசாங்க அதிகாரிகளுக்குப் புதியஇடமாற்றங்கள் ஏற்படலாம். குரு 7 ஆம் பார்வையாக உங்கள் ராசிக்கு பாக்கிய பாவத்தைப் பார்ப்பதால் குடும்பத்துடன் புனித யாத்திரைகள் செல்லும் நிலை உண்டாகும் அப்பாவின் ஆரோக்கியம் சிறப்படையும். கடவுள் அருள் அதிகரிக்கும். குரு 9 ஆம் பார்வையாக உங்கள் ராசிக்கு இலாப பாவத்தைப் பார்ப்பதால் இலாபம் அதிகரிக்கும். மூத்த சகோதரரின் முன்னேற்றம் சிறப்பாக இருக்கும். தொழிலில் அதிக ஆதாயங்களை எதிர்பார்க்கலாம். குடும்பத்தில் மங்களகாரியங்கள் நிறைவேறும். புத்திர பாக்கியம் இல்லாதவருக்கு அந்த பாக்கியம்ஏற்படும்.
கன்னி:
புத்தி காரகரான புதனை அதிபதியாகக் கொண்ட நற்குணமும் இரக்க குணமும் கொண்ட கன்னிராசி அன்பர்களே! உங்கள் இராசிக்கு குரு பெயரச்சி தரும்பலன்களைப் பார்ப்போம். தங்கள் இராசிக்கு சுகம் மற்றும் களத்திர ஸ்தானாதிபதியுமான குரு ஜென்ம ராசியிலிருந்து தன, குடும்ப ஸ்தானமான துலாம் இராசிக்கு மாறுகிறார். தன பாவத்தில் அமர்வதால் செல்வம் சேரும் சிறப்பான காலம் ஆரம்பமாகிவிட்டது. வாக்கு பலிதமாகும். வாக்கின் மூலம் பொருளாதார முன்னேற்றங்கள் ஏற்படும். புத்திர பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் ஏற்படும். சுபகாரியச் விரயங்கள் ஏற்படும். தனதான்ய விருத்தி உண்டாகும். உங்கள் வார்த்தைகள் பிறரால் வேதவாக்காக ஏற்றுக் கொள்ளப்படும். அனைத்து ஐஸ்வரியமும் உண்டாகும். தொழில் உத்தியோகம் மற்றும் வியாபாரம் ஆகியவற்றில் சீரான முன்னேற்றம் இருக்கும். இதுநாள் வரை இருந்து வந்த எதிர்ப்புக்கள் அகலும். எதிரிகள் மறைவர். குடும்ப உறவுகள் மேம்படும். வீட்டுக்குத் தேவையான வீட்டு உபயோகப் பொருட்கள் அனைத்தும் வாங்கி மகிழ்வீர்கள். எல்லா சுகமும் தேடிவரும். இறை வழிபாடு நன்மையும், ஏற்றமும் தரும். குருவின் பார்வை பலன்கள்: குரு 5 ஆம் பார்வையாக உங்கள் ராசிக்கு ருண பாவத்தைப் பார்வையிடுகிறார். அதன் காரணமாக நோய் நொடிகள் குறைந்து ஆரோக்கியம் மேன்மையடையும் அம்மாவின் உடன் பிறப்புக்களுக்கு அசையா சொத்துக்களான வீடு, மனை ஆகியவை ஏற்படும். தகப்பனாருக்கு தொழில் முன்னேற்றங்கள் ஏற்படும். எதிரிகள் தொல்லைகள் நீங்கும். பொறாமை கொண்ட நண்பர்கள் விலகுவர். சட்டச் சிக்கல்கள் தீர்ந்து, கோர்ட் அலைச்சல்களும் குறையும். கடன் தொல்லைகள் தீர்ந்து, சேமிப்புகள் உயரும். குரு 7 ஆம் பார்வையாக உங்கள் ராசிக்கு ஆயுள் பாவத்தை பார்வை செய்கிறார். அதன் காரணமாக தேக ஆரோக்கியம் மேன்மை அடைந்து ஆயுளும் கூடும். நீண்ட நாட்களாக இருந்துவந்த நோய்கள் நிரந்தரமாக சரியாகும். மணவிழாக்கள் மனம் போல் சிறப்பாக நடக்கும். வேலைக்காக காத்திருந்தவர்களுக்கு உத்தியோக வாய்ப்புகள் தேடி வரும். பணி நிமித்தமாக குடும்பத்தை விட்டு வெளியூர் போக வேண்டிய சூழ்நிலை உருவாகும். குரு தனது 9 ஆம் பார்வையால் உங்கள் ராசிக்கு ஜீவன பாவத்தைப் பார்க்கிறார். அதன் காரணமாக வேலை கிடைக்காதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். அரசுப் பணியில் உள்ளவர்களுக்கு அவர்கள் எதிர்பார்த்தபடி பதவி உயர்வுகள் தாமதமின்றிக் கிடைக்கும். சிறப்பாக பணி புரிபவர்களுக்கு, பணிகளைப் பாராட்டி பதக்கங்களும், பரிசுகளும் கிடைக்கும். பல வழியிலும் உங்கள் தந்தைக்கு பணவரவுகள் அதிகரிக்கும். புதிய வீடு, மனை வாங்கும் யோகமும் உண்டாகும்.
துலாம்: அசுர குருவான சுக்கிரனை அதிபதியாகக் கொண்ட வெளிப்படையான பேச்சும், உண்மை பேச்சும், வாசனை பிரியரும், ஜாலியான குணமுள்ளவர்களான துலாம் ராசி அன்பர்களே! தங்கள் இராசிக்கு குரு பெயர்ச்சிதரும் பலன்களைப் பார்ப்போம். துலாம் ராசிக்கு தைரிய வீரிய, ருண ரோக பாவங்களுக்கு அதிபதியான குரு தங்கள் ஜன்ம இராசியில் சஞ்சரிக்கவிருக்கிறார். துவக்கத்தில் பதவி உத்தியோகத்தில் பிரச்சனைகள் எழலாம். காடு, மேடு என அலைந்து திரிய நேரிடும். சுபகாரியச் செலவுகள் ஏற்படும். வேண்டிய அளவுக்கு பொருள் வரவு வந்தாலும் செலவுகளும் அதிகமாகும். சிறுசிறு உடல் ஆரோக்கிய குறைபாடுகள் உண்டாகலாம். பெண்களால் அவப் பெயர் ஏற்படலாம். செலவுகளினால் கைப் பணம் கரையும். வெளிநாட்டுப் பயண வாய்ப்புகள் ஏற்படும். இடமாற்றம், பதவி மாற்றம் ஆகியவை நிகழலாம். தேவையற்ற, ஆதாயமற்ற பயணங்கள் ஏற்படும். புகழ் மங்கும், படிப்பை முடித்தவர்களுக்கு நல்ல வேலைவாய்ப்புக்கள் தாமதமாகவே கிடைக்கும். உறவுகளைப் பிரிய வேண்டிய நிலை ஏற்படும். எதிலும் ஒரு பிடிப்பும், ஆர்வமும் இருக்காது. அடிக்கடி மன குழப்பங்கள் ஏற்பட்டு, குழப்பமான சூழ்நிலையே நிலவும். வீண் கற்பனைகளை உண்டாகும் தூக்கமின்மையின் காரணமாக உடல் சோர்வும், கோபமும் அடிக்கடி ஏற்படும். சிலருக்கு வேலையில் கூடுதல் பொறுப்புகள் வந்து சேரும். ஆன்மீகப் பெரியோர்களை சந்தித்து, அவர்களின் அருளாசி பெறுவீர்கள். மாணவர்களின் கல்வித் திறன் மேம்படும். குருவின் பார்வை பலன்கள்: குரு தனது 5 ஆம் பார்வையாக உங்கள் ராசிக்கு பூர்வ புண்ணிய, புத்திர பாவத்தை பார்வை செய்வதால் மணமான தம்பதியர்க்கு மழலைச் செல்வம் ஏற்பட்டு மனம் மகிழ வைக்கும். தாய் வழியில், ஏதேனும் ஒரு வகையில் பணவரவு ஏற்படும். நோய் நொடியின் பாதிப்புகள் குறையும். சுகமான, சொகுசான வாழ்க்கை அமையும். குரு தனது 7 ஆம் பார்வையாக உங்கள் ராசிக்கு களத்திர பாவத்தைப் பார்வை செய்வதால், தொழில் கூட்டாளிகளிடையே நல்லுறவு சிறப்படையும். கணவன், மனைவி இடையே அன்னியோன்னிய உறவு ஏற்படும். குரு தனது 9 ஆம் பார்வையாக உங்கள் ராசிக்கு பாக்கிய பாவத்தைப் பார்ப்பதால் கோவில் திருப்பணிகள், தர்ம காரியங்களில் ஈடுபட்டு, புகழ் அடைவீர்கள். மதிப்பு, மரியாதை, கௌரவம் ஆகியவை உயரும். பூர்வீகத் தொழில்கள் மேம்பாடு அடையும். இலாபமும் அதிகரிக்கும்.
விருச்சிகம்: தைரியம் வீரம் ஆகியவற்றுக்கு காரகரான செவ்வாயை அதிபதியாகக் கொண்ட விருச்சிகம் இராசி அன்பர்களே! தங்கள் இராசிக்கு குரு பெயர்ச்சி தரும் பலன்களைப் பார்ப்போம். விருச்சிகம் இராசிக்கு தன, புத்திர பாவாதிபதியான குரு விரய பாவத்தில் சஞ்சரிக்கவிருக்கிறார். அதன் காரணமாக விரயங்கள் ஏற்படும். பிறர் வாங்கிய கடனுக்கு ஜாமீன் கையெழுத்து போடக் கூடாது. சுலபமான காரியத்தையும் கடின உழைப்புக்குப் பிறகே முடிக்க முடியும். எவ்வளவு பண வரவு வந்தாலும் வரவுக்கு மிஞ்சியதாகவே செலவுகள் இருக்கும். .சிலருக்கு, வீட்டில் மராமத்து பணிகள செய்ய வேண்டிய நிலை ஏற்படும். தொலை தூரப் பயணங்கள் காரணமாக செலவுகள் தவிர்க்க முடியாததாகும்.தேவையற்ற கடன்கள் வாங்குவதைத் தவிர்க்கவும். .சிலருக்குப் பெண்களால் அவமானங்கள் ஏற்படலாம். மனதில் தயக்கமும், அச்ச உணர்வும் இருக்கும். உழைப்பினால் எந்தவிதப் பயனும் இருக்காது. மனைவிக்கு ஆரோக்கியக் குறைவு ஏற்படலாம். தொழிலில் நஷ்டங்கள் ஏற்படும். தொழிலில் தேவையற்ற பகை உண்டாகும். மன உளைச்சல் ஏற்பட்டு, மன அமைதியும் குறையும். சிலர் பதவி இழக்க நேரும். தொழில் உத்தியோகத்தில் மாற்றங்கள் ஏற்படலாம். குருவின் பார்வை பலன்கள்: குரு 5 ஆம் பார்வையாக உங்கள் சுக பாவத்தைப் பார்வையிடுகிறார். அதன் காரணமாக நிலம் வீடு, மனை வாங்கும் யோகம் ஏற்படும். சிலர் வீடுகட்டுவீர்கள் புதிய கல்வி கற்கும் வாய்ப்புகள் ஏற்படும். உடல் ஆரோக்கியம் மேம்படும். குழந்தைகளின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. தாயார், வீடு, சுகம் போன்ற 4 ஆம் வீட்டுத் தொடர்பான விஷயங்கள் முன்னேற்றம் இருந்தாலும், பணவிரயங்கள் ஏற்படும். குரு 7 ஆம் பார்வையாக உங்கள் ராசிக்கு 6 ஆம் பாவத்தை பார்வை செய்கிறார். அதன் காரணமாக எதிரிகளின் எதிர்ப்புகள் விலகும். சத்ரு ஜெயம் ஏற்படும். வங்கிக் கடன்கள் எளிதில் கிடைக்கும். நோய் பாதிப்புகளின் தாக்கமும், வேகமும் குறையும். சிலருக்கு, அடிக்கடி கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். குழந்தைகள் மூலமாக தனவருமானங்கள் வரும். மனைவி மூலமான விரயச்செலவுகள் தவிர்க்க முடியாததாகும். தந்தையின் தொழில்கள் மேம்படும். குரு 9 ஆம் பார்வையாக உங்கள் ராசிக்கு 8 ஆம் இடத்தைப் பார்வை செய்கிறார். அதன் காரணமாக வம்பு வழக்குகள் குறையும், மனைவி மூலமான வருமானங்கள் அதிகரிக்கும். தந்தையால் செலவுகள் அதிகரிக்கும். அஆன்மீகப் பயணங்களால் பணவிரயங்கள் அதிகரிக்கும். கோர்ட் வழக்குகள் வெற்றி அடையும். கைவிட்டுப் போன பொருட்கள் வந்து சேரும். விபத்துக்களில் இருந்து பெரிய பாதிப்புகள் ஏதுமின்றி தப்பித்து விடுவீர்கள். பெண்களுக்குத் தடைப்பட்ட திருமண வைபவங்கள் நடைபெறும். கடன் உதவிகள் கிடைக்கும்.
தனுசு: தேவகுருவான குருவை அதிபதியாகக் கொண்ட சத்யவான், குணவான், தனவான் என போற்றப்படும் நாணயமும், நியாயமும் மிக்க தனுசு ராசி அன்பர்களே! தங்கள் இராசிக்கு குரு பெயர்ச்சி தரும் பலன்களைப் பார்ப்போம். உங்கள் ஜென்ம இராசிக்கும் , சுக பாவத்திற்கு அதிபதியான தேவகுரு இலாப பாவத்தில் சஞ்சரிக்கவிருக்கிறார் அதிகாரப் பதவி, அரசியல் அதிகாரம் ஆகியவற்றைத் தருவார். நவீன வாகனங்கள் வாங்கும் யோகம் உண்டாகும் பணம் பல வழிகளிலும் சேரும். கையில் பணப்புழக்கம் தாராளமாகவே இருக்கும். இது வரை தடைப்பட்டிருந்த திருமண காரியங்கள் கைகூடும். திருமணமானவர்களுக்கு குழந்தை பாக்கியமும் ஏற்படும். தம்பதிகளின் வாழ்க்கை இனிமையாக இருக்கும். உறவினர்களும் நண்பர்களும் ஒற்றுமையுடன் பழகுவார்கள் தொழில் வளர்ச்சி சிறப்பாக இருக்கும். தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த ஆதாயம் உண்டாகும் அரசு மூலம் வெகுமதிகள் மற்றும் பரிசுகள் கிடைக்கும். விலை உயர்ந்த ஆடை ஆபரணங்கள்கள் சேரும். வெளிநாட்டுக்கு செல்லும் யோகம் உண்டாகும். செல்வ நிலையை உயரும். அதிர்ஷ்டம் அதிகரிக்கும். பதவி உயர்வு கிடைக்கும். நினைத்த காரியங்கள் அனைத்தும் எளிதாக வெற்றி பெறும். குருவின் பார்வை பலன்கள்: குரு தனது 5 ஆம் பார்வையால் உங்கள் ராசிக்கு தைரிய பாவத்தைப் பார்வை செய்வதால் கடன்களில் இருந்து விடுதலை கிடைக்கும். சிலர் சொந்த வீடு கட்டுவீர்கள். உயர் கல்வியில் மாணவர்களின் அறிவு விருத்தியாகும். . சகோதர வகையில் முன்னேற்றங்களும் ஏற்படும். மனைவியைப் புதிய உயர் பதவிகள் தேடிவரும். தந்தைக்குப் புதிய ஒப்பந்தங்களும், குரு தனது 7 ஆம் பார்வையால் உங்கள் ராசிக்கு 5 ஆம் இடத்தைப் பார்வை செய்கிறார்.அதன் காரணமாக குடும்பத்துடன் இன்பச் சுற்றுலா சென்றுவரும் வாய்ப்பு ஏற்படும். பூர்வீகச் சொத்துக்கள் கைக்கு வந்து சேரும். சந்ததி விருத்தி ஏற்படும்.பொன் ஆபரண, அணிகலன்கள் சேரும். குடும்பத்தில் சுப மங்கள காரியங்கள் சிறப்பாக நடந்தேறும். தாய்வழியில் பண வருமானம் அதிகரிக்கும் வீட்டில் சந்தோஷம் நிலவும். குரு தனது 9 ஆம் பார்வையாக உங்கள் ராசிக்கு 7 ஆம் இடத்தைப் பார்வை செய்கிறார். அதன் காரணமாக தம்பதிகளிடையே சந்தோஷம் நிலவும். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரித்து இல்லத்தில் மகிழ்ச்சி பொங்கும். கூட்டுத் தொழில்,வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் ஏற்படும். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். தொழில் வியாபார சம்பந்தமான வெளிநாட்டு பிராயாணங்கள் ஏற்படும்.
மகரம்: ஆயுளுக்கும் ஜீவனத்திற்கும் காரகரான சனியை அதிபதியாகக் கொண்ட அனைவருக்கும் உதவுபவர்களுமான மகரராசிஅன்பர்களே! உங்கள் இராசிக்கு குரு பெயர்ச்சி தரும் பலன்களைப் பார்ப்போம். தங்கள் இராசிக்கு தைரிய, விரய பாவாதிபதியான குரு ஜீவன பாவத்தில் சஞ்சரிக்கவிருக்கிறார். அதன் காரணமாக அனைத்துக் காரியங்களுக்கும் பிறர் தயவையே நாடவேண்டியிருக்கும். சிலருக்கு இதுவரை பார்த்துக் கொண்டிருந்த வேலையை விடவேண்டிய சூழல் எழலாம். சிலருக்கு இது வரை வகித்துவந்த பதவி பறி போகலாம். பதவி உயர்வு எதிர்பார்த்திருந்தவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்க தடை, தாமதங்கள் ஏற்படலாம். மனக்கவலைகளால் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படலாம். மாசினும் எவரை நம்பியும் கடன் கொடுக்க வேண்டாம். உங்கள்விருப்பங்கள் எதுவும் நிறைவேறாது. ஊரைவிட்டுப் போகவேண்டிய சூழ்நிலை எழலாம். மனச் சோர்வால், உடல்சோர்வும் சேர்ந்து கொள்ளும். எதிலும் திருப்திகரமான வாழ்க்கை அமையாது. அரசு மூலம் எவ்வித ஆதாயங்களையும் எதிர்பார்க்க முடியாது. வியாபாரம்,தொழில் புரிபவர்களுக்கு, போட்டிகள் அதிகமாகி உழைப்புக்கேற்ற வருமானம் இருக்காது. வாழ்க்கையில் வெறுப்பு உண்டாகும். வீண் விவாதங்களால் பிறருடன் மனஸ்தாபம் ஏற்படும். குருவின் பார்வை பலன்கள்: குரு 5 ஆம் பார்வையாக உங்கள் ராசிக்கு தனபாவத்தைப் பார்வையிடுவது நல்ல நிலை ஆதலால் இல்லத்தில் சுபகாரியங்கள் சிறப்புற நடைபெறும்.பல வழிகளிலும் தனவரவு ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். குரு 7 ஆம் பார்வையாக உங்கள் ராசிக்கு சுக ஸ்தானத்தைப் பார்வையிடுகிறார் அதன் காரணமாக புதிய நவீன வண்டி வாகனங்கள் வாங்குவீர்கள். புதிய மனை, வீடு, நிலம் ஆகியவற்றை வாங்கும் யோகம் ஏற்படும். தாயாரின் ஆரோக்கியம் மேம்படும். நண்பர்கள் தக்க சமயத்தில் உதவிக்கரம் நீட்டுவர். மாணவர்கள் கல்வியில் மேன்மை நிலை அடைவார்கள். குரு தனது 9 ஆம் பார்வையால் உங்கள் ராசிக்கு ருண, ரோக, சத்ரு ஸ்தானத்தை பார்வை செய்கிறார். அதன் காரணமாக நீண்ட நாட்களாக இருந்துவந்த நோய்கள் குணமாகும். இதுவரை எதிரிகளாக இருந்தவர்கள் நட்பு பாராட்டுவார்கள்.
கும்பம்: ஆயுள் மற்றும் தொழிலுக்கு காரகரான சனியை அதிபதியாகக் கொண்ட மனித இனத்திற்கு சேவை செய்யும் மனப்பான்மையும், நியாயம் வழக்குவதில் சமர்த்தரும், ஆன்மிகத்தில் நாட்டமுடையவருமான கும்பராசி அன்பர்களே! உங்கள்இராசிக்கு குரு பெயர்ச்சி தரும் பலன்களைப் பார்ப்போம். தங்கள் இராசிக்கு தனம் மற்றும் இலாப பாவத்திற்கு அதிபதியான குரு உங்கள் ராசிக்கு ஒன்பதாமிடத்தில் அமர்ந்து உங்கள் இராசியை 5ம் பார்வையாக பார்க்கிறார். திருமணம் ஆகாதவர்களுக்குத் திருமணம் விரைவில் நடக்கும். புது வாகனம் வாங்கும் யோகம் மற்றும் புத்திர பாக்கியம் ஏற்படும். குடும்பத்தில் நிலவிய குழப்பங்கள், தடுமாற்றங்கள் அனைத்தும் உங்கள்சமயோசித புத்தியால் சரியாகிவிடும். நல்ல யோகமான காலமாதலால்அரசாங்க அனுகூலங்கள், எதிரிகளை வெல்லுவவீர்கள், சொத்துக்கள் சேர்க்கை அதிகரிக்கும் என எல்லாம் நன்மையாகவே நடக்கும். இது வரை இருந்து வந்த சிறு உடல் ஆரோக்கிய குறைபாடுகள் மறையும். கணவன் மனைவிக்கு இடையே நல்லுறவு ஏற்பட்டு வீட்டில் மகிழ்ச்சி நிலவும். இராஜ தந்திரத்தால் எதிர் பார்த்திருந்த உயர் பதவிகள் கிடைக்கும். அதிர்ஷ்டம் அதிகரிக்கும் அரசாங்கத்தின் மூலமாக எதிர்பார்த்த அனுகூலங்கள் அனைத்தும் தாமதம் இன்றிக் கிடைக்கும். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். எல்லாவகையிலும் அப்பாவின் ஆதரவு கிடைக்கும். அந்தஸ்து உயரும். வசதி வாய்ப்புகள் அதிகரிக்கும்.சமூகத்தில் முதலிடம் கிடைக்கும். வீட்டிற்குத் தேவையான வீட்டு உபயோகப் பொருட்கள் அனைத்தையும் வாங்கி மகிழ்வீர்கள். வசூலாகாத கடன்கள் அனைத்தும் வசூலாகிவிடும். மாணவர்கள் கல்வியில் மேன்மை அடைவர். புதிய தொழில்களில் முதலீடுகள் செய்து தொழில் முன்னேற்றங்கள் சிறப்பாக இருக்கும். அரசு வெகுமதி மற்றும் புகழ் தேடி வரும். குருவின் பார்வை பலன்கள்: குரு தனது 5 ஆம் பார்வையால் உங்கள் ஜென்ம இராசியைப் பார்ப்பதால் பெயரும் புகழும் அதிகரிக்கும். தெளிவான சிந்தையால் முடங்கியிருந்த செயல்பாடுகள் அனைத்திலும் உத்வேகத்துடன் செயல்படுவீர்கள். உடல் பாதிப்புகள் விலகி ஆரோக்கியம் மேம்படும். தொழில் உத்தியோகத்தில் பதவி உயர்வுகள் கிடைக்கும். குரு 7 ஆம் பார்வையாக உங்கள் ராசிக்கு தைரிய ஸ்தானத்தைப் பார்வையிடுகிறார். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி அடைவீர்கள். வேலையின்றி அலைந்தவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். பணவசதி அதிகரிக்கும். கடன் சுமைகள் குறையும். மாணவர்களுக்குக் கல்வியில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். புதிய வாகனம் வாங்கும் யோகம் ஏற்படும். எதிர்பார்த்திருந்த செய்திகள் மகிழ்ச்சி அளிக்கும். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் ஏற்படும். குரு தனது 9 ஆம் பார்வையால் உங்கள் ராசிக்கு புத்திர பாவத்தைப் பார்க்கிறார். இதன் காரணமாக குடும்பத்துடன் சுற்றுலாப் பயணங்களை மேற்கொண்டு மகிழ்வீர்கள். பூர்வீக சொத்துக்கள் கைக்கு வந்து சேரும்.குழந்தைகளின் மகிழ்ச்சி அதிகரிக்கும். தொழில் சிறக்கும். சந்ததி விருத்தி ஏற்படும். புத்தி கூர்மை, மனத்தெளிவு உண்டாகும், மனைவி மூலமாகவும் இலாபம் உண்டாகும். வீட்டில் சுப மங்கள காரியங்கள் நிறைவேறும்.
மீனம்: தேவகுருவான குருவை அதிபதியாகக் கொண்ட கீர்த்திமான்,கெட்டிக்காரர், இரக்கமுள்ள, மீனம் ராசி அன்பர்களே!தங்கள் இராசிக்கு குரு பெயர்ச்சி தரும் பலன்களைப் பார்ப்போம். உங்கள் ஜென்ம இராசிக்கும் ஜீவன பாவத்திற்கும் அதிபதியான குரு உங்கள் ராசிக்கு 8 ஆம் பாவத்திற்கு இடம் பெயர்கிறார். 7 ஆம் பாவத்தில் இருந்தவரை மணமாகாதவர்களுக்குத் திருமணம் சிறப்பாக நடந்திருக்கும்.பிள்ளைகளால் பெற்றவர்கள் பெருமை அடைந்திருப்பார்கள். தொழில்துறையில் நல்ல வளர்ச்சி ஏற்பட்டிருக்கும். மனைவி மக்களுடன் வாழ்க்கைசந்தோஷமாகக் கழிந்திருக்கும். குருவின் தற்போதைய இட மாற்றத்தால் பதவி, உத்தியோகம், கௌரவம் ஆகியவற்றில் இறக்கம், மாற்றம் அல்லது இழப்பு இவற்றில் ஏதேனும் ஒன்று நிகழலாம். வியாபாரத்தில் எதிர்பார்த்த இலாபங்கள் கிட்டாது, கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை உருவாகும். அவப்பெயர் ஏற்படும். பயணங்களின் போது விபத்துக்களைச் சந்திக்க நேரும். கோர்ட், வழக்கு போன்ற தண்டச் செலவுகளால் கைப்பணம் கரையும். மனக் கஷ்டங்கள் உண்டாகும். உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படும்.. காரியங்கள் எதுவும் நினைத்தபடி கை கூடாது. உடல் உழைப்பு அதிகமாகும் அதற்கேற்ற வருமானம் கிடைக்காது. தேவையற்ற செலவுகள் ஏற்படும். பொருளாதாரச் சிக்கல்கள் உண்டாகும். சிலர் பழைய வீட்டை மாற்றி அமைத்து புதுப்பித்துக் கொள்ளக் கூடும். குருவின் பார்வை பலன்கள்: குரு தனது 5 ஆம் பார்வையால் உங்கள் ராசிக்கு விரயஸ்தானத்தைப் பார்ப்பதால்,செலவுகள் அனைத்தும் சுப செலவுகளாக மாறும். வீட்டில் நடக்கும் சுபகாரியங்களால் செலவுகள் கூடினாலும், சந்தோஷம் நிலவும். வீடு கட்டுதல் போன்ற செலவுகள் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் முதலீடுகள் அதிகரிக்கும். வெளிநாடு செல்லும் யோகம் உருவாகும். குரு தனது 7 ஆம் பார்வையால் உங்கள் ராசிக்கு தனபாவத்தை பார்வையிடுகிறார். அதன் காரணமாக குடும்பத்தில் திருமணம் போன்ற சுபகாரிய நிகழ்வுகள் அதிகம் ஏற்பட்டு சந்தோஷமான தருணங்களாக அமையும். தன வரவு அதிகரிக்கும். பிறரின் பணம் கையிருப்பு இருந்து கொண்டே இருக்கும். வரவேண்டிய நிலுவைத் தொகைகள் உடனடியாக்க் கிடைக்க வாய்ப்பு உண்டு. கணவன் மனைவி உறவு பலப்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். குரு தனது 9 ஆம் பார்வையால் உங்கள் ராசிக்கு சுக ஸ்தானத்தை பார்வை செய்வதால் ஆரோக்கியம் அதிகரிக்கும் குழந்தைகளின் கல்வி சம்பந்தமான செலவுகள் அதிகரிக்கும். வீடு மராமத்துச் செலவுகள், வாகனம் சரிசெய்யும் செலவுகள் உண்டாகும் வீடு கட்டும் ஆசை நிறைவேறும்.

எந்த கிழமையில் பிறந்தவர்கள் எந்த மாதிரியான திறமைகளைக் கொண்டிருப்பார்கள்

ஒவ்வொரு கிழமைக்கும் ஒவ்வொரு குணங்கள் இருக்கின்றன. அந்த வகையில் நீங்கள் பிறந்த கிழமையை வைத்து உங்களின் குணநலன்கள் மற்றும் உங்களின் திறமைகளை அறிந்து கொள்ள முடியும். வாரத்தில் ஏழு நாட்கள் உள்ளன. ஏழு நாட்களுக்கும் ஏழு கிழமைகள் உள்ளன. எந்த கிழமையில் பிறந்தவர்கள் எந்த மாதிரியான திறமைகளைக் கொண்டிருப்பார்கள் என்று பார்ப்போம்.
ஞாயிறு :
ஞாயிற்று கிழமையில் பிறந்தவர்கள் எந்த ஒரு கடினமான வேலைகளையும் மிக எளிதாகவும், திறமையாகவும் செய்து முடித்து சாதனைப் படைப்பார்கள். இந்த கிழமையில் பிறந்தவர்கள் சொன்னதை செய்வார்கள். மிகவும் உணர்ச்சிமிக்கவர்கள். உதவும் குணம் கொண்டவர்கள். பிரகாசமான வாழ்க்கையைக் கொண்டவர்களாகவும், தன்னைச் சுற்றி இருப்போரை எப்போதும் சந்தோஷமாகவும் வைத்துக் கொள்வார்கள். இயலாது எனில் மௌனம் சாதிப்பார்கள். இவரது தலைமையின் கீழ் பலபேர் பணிபுரிவார்கள்.
திங்கள் :
திங்கட்கிழமையில் பிறந்தவர்கள் அனைவரும் விரும்பும்படியான அமைதியான மனம் படைத்தவர்களாகவும், உதவும் உள்ளம் கொண்டவர்களாகவும் இருப்பார்கள். எதிரிகளை கூட நண்பர்களாகவே கருதுவார்கள். தர்மம், நியாயங்களைக் கடைபிடிப்பதில் உறுதி உள்ளவர்கள். நல்ல கற்பனைவளம் கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்களுக்கு சொந்தத் தொழில் கைக்கொடுக்கும்.
செவ்வாய் :
செவ்வாய்க்கிழமையில் பிறந்தவர்கள் எதிலும் வெற்றியைக் காண்பவர்கள். இவர்கள் பலரிடமும் பலவிதமான யோசனைகளைக் கேட்பார்கள். ஆனாலும் தான் நினைப்பதே சரி என்கிற மனப்போக்கு கொண்டவர்கள். நல்லவர்களுக்கு நல்லவராகவும், கெட்டவர்களுக்கு கெட்டவராகவும் திகழ்வார்கள். அதனாலேயே பலருக்கும் இவரைப் பிடிக்காது. நியாயம் மற்றும் தர்மத்திற்குக் கட்டுப்பட்டவர்கள்.
புதன் :
புதன் கிழமையில் பிறந்தவர்கள் பல திறமைகளை தன்னுள் கொண்டவர்களாக விளங்குவார்கள். சிறந்த அறிவாளிகளாக இருப்பார்கள். இவர்களிடம் ஒரு ரகசியத்தைக் கூறினால், அதை வாழ்நாள் முழுவதும் காப்பார்கள். மற்றவர்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு செயல்படுவார்கள். எதையும் எளிதில் புரிந்து கொண்டு வேலையை சிறப்பாக முடிப்பார்கள். பலதுறைகளில் தேர்ச்சி பெற்றவர்கள். எந்நேரமும் சாந்தமாக இருப்பார்கள்.
வியாழன் :
வியாழக்கிழமையில் பிறந்தவர்கள் மற்றவர்கள் போற்றத்தக்க குணங்களைக் கொண்டவர்களாக இருப்பர். எதையும் நேர்வழியில் செய்யக் கூடியவர்கள். குறுக்கு வழியில் செல்பவரையும் திருத்தி நல்வழிப்படுத்துவதற்கு பாடுபடுவார்கள். உற்றார், உறவினர்களுக்கு உதவிபுரியும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்கள் எந்தத் துறையில் ஈடுபட்டாலும் முன்னேற்றம் அடைவார்கள்.
வெள்ளி :
வெள்ளிக்கிழமையில் பிறந்தவர்கள் நல்ல பேச்சாற்றல் மிக்கவர்களாக இருப்பார்கள். இவர்கள் தன்னுடைய பேச்சுத் திறமையினால் மற்றவர்களை தன் வயப்படுத்தும் திறமை கொண்டவர்கள். கணவன் அல்லது மனைவியின் அளவற்ற அன்பிலும், பாசத்திலும் மூழ்கித் திளைப்பார்கள். இவர்கள் சொல்வதை கேட்காதவர்களை இவர்கள் புறக்கணித்து விடுவார்கள். எந்த வேலையையும் சிரமம் இல்லாமல் மற்றவர்களின் துணையுடன் பு+ர்த்தி செய்வார்கள்.
சனி :
சனிக்கிழமையில் பிறந்தவர்கள் பொறுமைசாலிகள். தன்னம்பிக்கை மிக்கவர்கள். இவர்கள் ஒரு வேலையைத் தொடங்கினால், அந்த வேலையை முடித்தப் பிறகே அடுத்த வேலையைச் செய்யத் துவங்குவார்கள். இவர்கள் முழு பொறுப்பையும் ஏற்று நடத்துவதில் சிறந்தவர்களாக இருப்பார்கள். சான்றோரிடமும், ஆன்றோரிடமும் மிகுந்த பக்தியுடன் நடந்து கொள்வார்கள். இவர்கள் எப்போதும் தான் உண்டு தன்வேலை உண்டு என இருப்பார்கள்.

Sunday, July 23, 2017

ராகு - கேது பெயர்ச்சி பலன்கள் 2017 Rahu Transit on 18th August, 2017

Rahu Transit In Cancer, Ketu Transit In Capricorn – Transit Dates

On 30th January, 2016, Rahu and Ketu entered the Signs of Leo and Aquarius respectively. They will be entering the Cancer-Capricorn axis on 18th August, 2017 and will stay there till 7th March, 2019. 


ராகு - கேது பெயர்ச்சி பலன்கள்
பலன்கள்கணித்தவர்:
திருக்கோவிலூர் KB.ஹரிபிரசாத் சர்மா

ராகு - கேது பெயர்ச்சி பலன்கள் ஒவ்வொரு ராசிக்கும்.

மேஷம்
குழப்பங்கள், தேவையற்ற பயம், விரக்தி மனதை ஆக்கிரமிக்கும். நினைப்பது ஒன்றாகவும் நடப்பது ஒன்றாகவும் இருக்கும். எதையும் திட்டமிட்டு செய்ய முடியாது போகும். எடுத்த பணியை வெற்றிகரமாக செய்து முடிக்க கூடுதல் அலைச்சல் ஏற்படும். கனவு தொல்லைகளால் உறக்கம் பாதிக்கப்படும். குறிப்பாக மாணவர்கள் தேர்வு நேரத்தின்போது சரியான விடையைத் தேர்ந்தெடுப்பதில் குழப்பம் அதிகரிக்கும். எதிர்பாராத இடமாற்றம் ஏற்படும். குடும்பத்தினருடன் இருக்கும் வாய்ப்புகள் குறையும். ஒரு சிலருக்கு வாழ்க்கைத்துணை மற்றும் பிள்ளைகளைப் பிரிந்து தொழில் ரீதியாக வெளியூர் செல்லும் வாய்ப்பு உருவாகும். அதனை தவிர்க்காமல் ஏற்றுக்கொள்வது நல்லது. பிள்ளைகளின் வாழ்க்கை தரத்தில் முன்னேற்றம் இருக்கும். உடன்பிறந்தோர் நலனுக்காக தியாகங்கள் செய்ய நேரும். சொன்ன சொல்லைக் காப்பாற்ற போராட்டம் இருக்கும்.
அடுத்தவர்களுக்கு ஆலோசனைகள் சொல்வதை தவிர்க்கவும். கொடுக்கல், வாங்கல் மற்றும் பணம் சம்பந்தப்பட்ட விவகாரங்களில் கூடுதல் கவனம் அவசியம். அசையா சொத்துகள் சேரும். பூர்வீக சொத்துகளில் இருந்த வில்லங்கம் நீங்கும். பாகப்பிரிவினை பிரச்னைகள் தீரும். அநாவசிய செலவுகள் கட்டுப்படும். தான தருமங்களுக்கு அதிகம் செலவழிப்பீர்கள். நற்பெயர், புகழ் கூடும். எதிர்பாராத பயணங்கள் உண்டு. மற்றவர்கள் செய்யும் தவறுகளுக்கு நீங்கள் பொறுப்பேற்பதை தவிர்க்க உத்யோகஸ்தர்களுக்கு கூடுதல் எச்சரிக்கை அவசியம். அக்கவுண்ட்ஸ், ஆடிட்டிங், வங்கி, இன்ஷ்யூரன்ஸ். சாஃப்ட்வேர், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் பத்திரிகைத் துறை பணியாளர்கள் ஏற்றம் காண்பார்கள். அயல்நாட்டுப் பணிக்காக காத்திருப்போருக்கு அதற்கான வாய்ப்புகள் கூடி வரும்.
தொழில் மற்றும் உத்யோகம்: வியாபாரிகள் கூடுதல் முதலீட்டை தவிர்த்து நிதானமாக செயல்படுவது நல்லது. சுயதொழில் செய்வோருக்கு வளர்ச்சிப் பாதை தெரியும். கூட்டுத்தொழில் செய்வோருக்கு கணக்கு வழக்குகளில் கவனம் தேவை. தொழிலதிபர்கள் புதிய பங்குதாரர்களை தவிர்க்க வேண்டியது கட்டாயம். மளிகை, கமிஷன் ஏஜென்சி, தரகு, உணவுப்பொருள் விற்பனை தொழில்கள் ஏற்றம் அடையும்.
பரிகாரம்: செவ்வாய், வெள்ளி தோறும் துர்கை சந்நதியில் விளக்கேற்றி வழிபடலாம். நேரம் கிடைக்கும்போது திருவேற்காடு சென்று கருமாரியம்மனை தரிசித்து வர நன்மை உண்டாகும்.
ரிஷபம்
தொழிலில் சங்கடம் இருந்தாலும் நற்பெயர் கிடைக்கும். அனுபவங்களால் முதிர்ச்சி ஏற்படும். விட்டு கொடுத்துச் செல்லும் மனப்பான்மை உருவாகும். எதிலும் அவசரத்தை தவிர்த்தால் வெற்றி நிச்சயம். கவனக்குறைவால் இழப்புகள் ஏற்படும். வாழ்க்கை தரம் உயரும். வீடு, வாகனம், மனை ஆகிய அசையும் மற்றும் அசையா சொத்துகள் சேரும். செயல்களில் அலைச்சல் இருந்தாலும் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பொதுக்காரியங்களில் முன்னின்று செயல்படுவீர்கள். திடீர் பிரயாணத்தை தவிர்ப்பது நல்லது. இன்ஜினியரிங் மாணவர்களுக்கு முன்னேற்றம் உண்டு. தாயார் உடல்நிலையில் கூடுதல் கவனம், அனுசரணை அவசியம். ஆன்மிக பணிகளில் நாட்டம் கூடும். உங்களை நாடி வருவோருக்கு உதவி செய்வீர்கள். பொது விஷயங்களில் முன்நின்று செயல்படுவீர்கள். எந்த ஒரு செயலையும் திட்டமிட்டு செயல்படுத்த இயலாது போகும்.
திட்டமிட்ட பணிகளை கடைசி நேரத்தில் மாற்றி அமைக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும். அதனால் திட்டமிட்டிருந்த வேறு வேலைகள் பாதிக்கப்படும். இதயம், நுரையீரல், மார்பு சார்ந்த நோய்களால் அவதிப்படுபவர்களுக்கு உடல்நிலையில் கவனம் அவசியம். மூத்த சகோதரர்களுடன் இருந்த மனக்கசப்பு நீங்கும். முன்னோர் சொத்துகளில் இருந்த பாகப்பிரிவினை பிரச்னைகள் சுமுகமான முடிவை எட்டும். குடும்பத்தில் சலசலப்பு நீங்கி கலகலப்பான சூழல் உருவாகும். மொத்த வியாபாரிகள் அகலக்கால் வைக்காமல் நிதானத்துடன் செயல்படுவது நல்லது. இரவில் நிம்மதியான உறக்கம் கெடும். தம்பதிகளிடேயே ஒற்றுமை நிலவும். மாணவர்கள் கடுமையாக உழைத்தால் கல்வியில் சிறக்கலாம். பொதுவாக கேந்திர ஸ்தானத்தில் அசுப கிரஹங்கள் நன்மை தரும். அதனால் ரிஷப ராசிக்காரர்களுக்கு நற்பலன்களை விளைவிக்கும் வகையில் சிறப்பாகவே அமைந்துள்ளது.
தொழில் மற்றும் உத்யோகம்: வங்கி, இன்ஷ்யூரன்ஸ், நிதி நிறுவனங்கள், ரெவின்யூ, அக்கவுண்ட்ஸ், ஆடிட்டிங், பத்திரிகை, நீதித்துறை சார்ந்த பணியாளர்கள் சங்கடங்களை எதிர்கொண்டாலும் வளர்ச்சி உண்டு. தொழில்நுட்பம், மெக்கானிகல் மற்றும் இதர அறிவியல் துறை பணியாளர்கள் கடுமையாக உழைக்க வேண்டும். உத்யோகஸ்தர்களுக்கு மேலதிகாரிகளோடு கருத்து வேறுபாடும், சுயதொழில் செய்வோரில் பால், கூல்டிரிங்ஸ், மினரல் வாட்டர், தின்பண்டங்கள், பெட்டிக்கடை, சில்லறை வணிகமும் சிறக்கும்.
பரிகாரம்: வியாழன் தோறும் சரஸ்வதி படத்திற்கு பூஜை செய்து வரவும். நேரம் கிடைக்கும்போது கூத்தனூர் சென்று சரஸ்வதியை தரிசித்து அர்ச்சனை செய்துகொள்ள மனத்தெளிவு கிடைக்கும்.
மிதுனம்
மனதில் அசாத்திய தைரியம் உருவாகும். அதனால் பிடிவாதம் கூடும். முக்கியமான முடிவெடுக்க வேண்டிய தருணங்களில் அவசரமாக முடிவெடுத்துவிட்டு பின்பு சிரமத்தினை சந்திக்க நேரலாம். எந்த சூழ்நிலையிலும் அவசரப்படாமல் நிதானம் காப்பது நல்லது. தகவல் தொடர்பு சாதனங்களால் நன்மை உண்டு. அறிஞர்களுக்கு புதிய உத்வேகம் வரும். எழுத்தாளர்கள் வலிமை பெறுவர். மாணவர்களுக்கு எழுத்து வேகம் கூடும். ஞாபக மறதி தொந்தரவு அகலும். பங்காளிகளின் குடும்பப் பிரச்னைகளில் தலையிடுவதை தவிர்க்கவும். அந்நிய பெண்களால் பிரச்னை வரும். புதிய நண்பர்களிடம் எச்சரிக்கை அவசியம். முக்கியமான பணிகளை நேரடியாக செய்வது நல்லது. எதிலும் அலைச்சல் கூடும். மனதை ஆக்கிரமிக்கும் தத்துவ சிந்தனைகள் ேபச்சிலும் வெளிப்படும். திருமண வயதில் உள்ளவர்களுக்கு திருமண யோகம் கூடிவரும். குழந்தைப்பேறு எதிர்ப்பார்பவர்களின் கனவு பலிக்கும். உத்யோக ரீதியாக எதிர்பாராத இடமாற்றம் வரும். பெற்றோருடன் கருத்து வேறுபாடு தோன்றும்.
தந்தை உடல்நிலையில் கூடுதல் கவனம் தேவை. உணவில் கட்டுப்பாடு அவசியம். பூர்வீக சொத்துகளில் இழப்புகள் ஏற்படும். பொதுநல சேவைகள், தர்ம காரியங்கள், ஆன்மிகப் பணிகளில் முன்நின்று செயல்படுவீர்கள். அயல்நாட்டுப் பணிகளுக்காக காத்திருப்போருக்கு வாய்ப்புகள் தேடிவரும். சிலா் தொழில் காரணமாக குடும்பத்தினரை விட்டுப் பிரிந்திருக்க நேரும். சுகமான வாழ்க்கை தரத்துக்கு குறைவிருக்காது. தாயார் வழி உறவினர்களோடு இருந்த பிரச்னைகள் தீரும். தந்தை வழி உறவினர்கள் உங்கள் உதவி நாடி வருவர். குடியிருக்கும் வீட்டில் மாற்றங்கள் செய்வீர்கள். நவீன வீட்டு உபயோக பொருட்கள் வாங்குவீர்கள். தோல், காது, கழுத்து, தோள்பட்டை, மேல்மார்பு பகுதிகளில் பிரச்னைகள் தோன்றலாம் என்பதால் உடல்நிலையில் கவனம் அவசியம். எதிரிகள் பலம் இழப்பர். கடன் பிரச்னைகள் குறையும். மொத்தத்தில் உங்களுக்கு தனிப்பட்ட முறையில் நன்மையும், பிறருக்கு உதவி செய்யப்போய் சிரமத்தையும் அனுபவிக்க நேரும்.
தொழில் மற்றும் உத்யோகம்: தொழில்முறையில் கூடுதல் அலைச்சலை சந்திக்க உள்ளீர்கள். அரசுப் பணியாளர்கள், உத்யோகஸ்தர்கள் எதிர்பாராத இடமாற்றத்திற்கு ஆளாவார்கள். சுயதொழில் செய்வோர், தொழிற்சாலை அதிபர்கள் ஆகியோர் தொழிலாளர்களுடன் நிதானமான அணுகுமுறையை பின்பற்ற வேண்டியது அவசியம். நகை, ஜவுளி, வாசனாதி திரவியங்கள், ஃபேன்சி பொருட்கள் போன்றவற்றை விற்பனை செய்வோர் சிறப்பான முன்னேற்றம் காண்பார்கள்.
பரிகாரம்: சனி தோறும் பாம்பின் மேல் பள்ளிக்கொண்டிருக்கும் பெருமாள் சந்நதிக்கு சென்று வருவது நல்லது. நேரம் கிடைக்கும்போது ஸ்ரீரங்கம் சென்று ரங்கநாதரை தரிசித்து பிரார்த்தனை செய்ய பலம் பெறுவீர்கள்.
கடகம்
அறிவுத்திறன் உயரும். பல்வேறு வழிகளில் பொருள்வரவு உண்டு. இந்த நேரத்தினை சாதகமாகப் பயன்படுத்தி சேமிப்பில் ஈடுபடுவது நல்லது. அசையா சொத்துகள், தங்க வெள்ளி பொருட்களில் முதலீடு செய்யலாம். ஃபைனான்ஸ், சிட்பண்ட்ஸ் போன்ற நிதி நிறுவனங்கள் தற்போது பயன் தராது. பேச்சில் கடுமை, தீயசொற்களை தவிர்க்கவும். உஷ்ணத்தால் சரும நோய்கள் தோன்றும். சொன்ன சொல்லைக் காப்பாற்ற போராட்டம் இருக்கும். வாக்குறுதிகளை தவிர்ப்பது அவசியம். சிலருக்கு கண்ணில் அறுவை சிகிச்சை செய்யும் நிலை உருவாகும். உடன்பிறந்தோருடன் இருந்த கருத்து வேறுபாடுகள், குடும்ப சலசலப்புகள் விலகும். சொத்து விவகாரங்களில் இருந்த பிரச்னைகள் விலகும். பிள்ளைகளின் வாழ்க்கை தரம் உயரும். அவர்களால் கூடுதல் செலவுகள் ஏற்படும். பிள்ளைகள் பெயரில் அசையா சொத்து வாங்கலாம். குடும்பபெரியவர் ஒருவர் மூலம் குடும்ப பாரம்பரியம் குறித்து அறிந்து கொள்வீர்கள். புதுமண தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
மாணவர்களின் அறிவுத்திறன் கூடி கல்வியில் முன்னேற்றம் காண்பர். கூட்டுப்பயிற்சி வெற்றி தரும். அநாவசிய செலவுகள் கட்டுப்படும். ஆனால் ஆன்மிகம், தான தருமம், புண்ணிய காரியங்கள், அன்னதான செலவுகள் கூடும். முக்கியமாக பண விவகாரங்களில் ஏமாற்றத்தை தவிர்க்க கூடுதல் எச்சரிக்கை தேவை. மனதில் இருந்த விரக்தி, குழப்பம் அகலும். சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். பித்த பாதிப்புகளால் உடல்நிலை பாதிக்கப்படலாம். உணவுப் பழக்கத்தில் கட்டுப்பாடு அவசியம். வாழ்க்கைத்துணையுடன் கருத்து வேறுபாடு ஏற்படும். அவரது உடல்நிலையில் கவனம் தேவை. சிலர் அலுவல் காரணமாக சிறிது காலம் குடும்பத்தை விட்டு பிரிந்திருக்க நேரும். மொத்தத்தில் உங்களுக்கு சிறப்பான பொருள் வரவு தருவதோடு தான தர்ம விவகாரங்களில் வள்ளலாகவும் மாற்றும்.
தொழில் மற்றும் உத்யோகம்: உத்யோகஸ்தர்களுக்கு ஊதிய உயர்வுடன் கூடிய இடமாற்றம், பணிச்சுமை கூடும். தொழிலதிபர்களுக்கு அலைச்சல் இருந்தாலும் தொழில் முன்னேற்றம் இருக்கும். கலைஞர்கள், ஏற்றுமதி, இறக்குமதி, தோல், சிமென்ட், இரும்பு, பழைய சாமான்கள் வியாபாரம், ஸ்டேஷனரி, மளிகை சார்ந்த தொழில்கள் சிறப்பான முன்னேற்றம் காணும்.
பரிகாரம்: சனிக்கிழமை தோறும் ஆஞ்சநேயரின் ஆலயத்தில் நெய் விளக்கேற்றி சந்நதியை எட்டு சுற்றுக்கள் வலம் வந்து நமஸ்கரிப்பது நன்மை தரும். நேரம் கிடைக்கும்போது நாமக்கல் சென்று ஆஞ்சநேயரை தரிசித்து வரவும்.
சிம்மம்
வாழ்க்கை தரத்தில் பல மாறுதல்கள் உண்டாகும். எதிலும் அதிவேகமாக செயல்படுவீர்கள். ஆனால் கூடுதல் எச்சரிக்கை அவசியம். உறவினர்களால் கலகம், விரோதம் ஏற்படும். உங்கள் தரப்பு நியாயம் எடுபடாமல் போகும். நல்லது செய்யப்போனாலும் அவப்பெயர் வரும். அதனால் கடமையை தவிர மற்றவர்கள் விவகாரங்களில் தலையிடுவதை தவிர்ப்பது அவசியம். தர்ம சாஸ்திரங்களில் நம்பிக்கை தளரும். இதனால் பெரியோர்களுடன் விதண்டாவாதத்தில் ஈடுபடுவீர்கள். நினைத்தவற்றை எளிதாக அடைய மனதை கட்டுப்படுத்துவது அவசியம். சகோதரியால் உபத்திரவங்கள் ஏற்படும். முன்னோர் சொத்துகளில் பாகப்பிரிவினை பிரச்னைகள் தோன்றும். புதிய நபர்களை நம்புவது கூடாது. பெண்கள் சம்பந்தப்பட்ட விவகாரங்களில் கூடுதல் எச்சரிக்கை நல்லது. கவலைகளை மறந்து தைரியத்துடன் மனதிற்கு சரியென்று பட்ட விஷயத்தை தயங்காது செய்வது நல்லது. ஒரு சில விஷயங்களில் தோல்வி உண்டாகும் என்று தெரிந்தே தைரியத்துடன் இறங்குவீர்கள். எதிரிகள் காணாமல் போவார்கள்.
இருப்பினும் நல்லவர் தீயவர்களை அடையாளம் காண்பது அவசியம். மாணவர்கள் கவனச் சிதறலை தவிர்த்து கூடுதல் கவனம் செலுத்தி கல்வியில் முன்னேற்றம் காணலாம். வாழ்க்கைத்துணையின் கருத்துகளை கேட்டு செயல்பட்டால் வெற்றி நிச்சயம். அவரது உடல்நிலையில் கவனம் அவசியம். அவரது பெயரில் இருக்கும் சொத்துகள் உருமாறக்கூடும். நண்பர்களுடன் கருத்து வேறுபாடு தோன்றும். கூடுதல் அலைச்சலால் உடல் அசதி ஏற்படும். குடும்பத்தினரோடு செலவழிக்கும் நேரம் குறையும். சிலருக்கு தூரதேச பிரயாணத்திற்கான வாய்ப்பு உண்டு. பூர்வீக சொத்துகளில் சிலவற்றை விற்று புதிய சொத்துகள் வாங்குவீர்கள். எந்தச் சூழலிலும் நிதானத்தோடு அனைவரையும் அனுசரித்து செல்வது அவசியம். மொத்தத்தில் வரும் ஒன்றரை வருட காலத்திற்கு நீங்கள் நிதானத்தைக் கடைபிடிக்க வேண்டியது அவசியமாகிறது.
தொழில் மற்றும் உத்யோகம்: உத்யோகஸ்தர்களுக்கு பதவி உயர்வு இருக்கும். கடுமையான பணிச்சுமையும் இருக்கும். அலுவலகத்தில் அடுத்தவர்கள் தவறுக்கு பொறுப்பேற்க நேரும். மருத்துவம், ராணுவம், போக்குவரத்து துறைகளை சார்ந்தவர்கள் ஏற்றம் காண்பார்கள். ஷேர்மார்க்கெட், புரோக்கர் தொழில், கமிஷன், தரகு, ஏஜென்சீஸ் தொழில் செய்பவர்கள் முன்னேற்றம் அடைவார்கள். சிறுதொழில் செய்வோர் ஓய்வில்லாமல் உழைக்க வேண்டியிருக்கும்.
பரிகாரம்: வருகின்ற ஒன்றரை வருட காலத்திற்கு பிரதி மாதம் வருகிற உங்கள் ஜென்ம நட்சத்திரத்தன்று அருகிலுள்ள பெருமாள் கோயிலில் உங்கள் பெயரில் அர்ச்சனை செய்யவும். நேரம் கிடைக்கும் போது திருப்பதி ஸ்ரீநிவாஸ பெருமாளை தரிசிக்க சஞ்சலம் நீங்கும்.
கன்னி
மன சஞ்சலம் இருந்தாலும் அச்சம் அகலும். தைரியத்தை இழக்காமல் செயல்படுவீர்கள். எதிலும் அலைச்சல் கூடும். அனுபவப் பாடம் கிட்டும். வேலைபளு கூடும். இன்னல்கள், இடம் விட்டு இடம் மாறுதல் இருக்கும். வீடு, வண்டி, போன்ற சொத்துகள் இருந்தாலும் அதனை சரியான நேரத்திற்கு அனுபவிக்க இயலாது போகும். அநாவசிய செலவுகள் அதிகரிக்கும். சம்பாத்யத்தை சேமிப்பது அவசியம். யோசிக்காமல் செய்யும் முதலீடுகளில் நஷ்டம் ஏற்படும். இடைத்தரகர்களால் ஏமாற்றப்படும் வாய்ப்பு உள்ளதால் பண விஷயத்தில் கூடுதல் எச்சரிக்கை நல்லது. முக்கிய தருணத்தில் பயத்தால் முன் வைத்த காலை பின்வைக்க நினைப்பீர்கள். இதனால் இழப்பு நேரும். மற்றவர்கள் சொல்லும் ஆலோசனைகளை ஆராய்ந்து செயல்படுத்துவது நல்லது. மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் காண கடுமையான உழைப்பு தேவை. எழுத்து வேகம் கூடும்.
நண்பர்களோடு இணைந்து கூட்டுப் பயிற்சியில் ஈடுபடுவது நன்மை தரும். அறிவியல் துறை ஆய்வாளர்களுக்கு ஓய்வு நேரம் குறையும். தொழிலில் பெருத்த முன்னேற்றத்தை எதிர்பார்க்க இயலாது. அடிக்கடி தொலைதூரப் பிரயாணங்கள் செல்ல நேரும். ஒரு சிலருக்கு அயல்நாட்டு பயணம் உண்டு. எதிரிகள் காணாமல் போவர். படிப்படியாக கடன் பிரச்னைகள் குறையும். நீண்டநாள் வியாதிகள் குணமடையும். உடல் ஆரோக்யம் பெறும். நண்பர்களுக்கு உதவி செய்வீர்கள். வாழ்க்கைத்துணையின் உடல்நிலையில் கூடுதல் கவனம் அவசியம். கனவு தொல்லையால் உறக்கம் கெடும். சிலர் செய்யும் வேலையில் இருந்து வெளியேறி சுய தொழில் செய்யும் நிலை உருவாகும். எதிலும் மற்றவர்களை சார்ந்திருக்காது தனித்து செயல்பட்டு வெற்றி காண்பீர்கள். ஜனன ஜாதகத்தில் கேதுவின் வலிமை உள்ளவர்களுக்கு திடீர் அதிர்ஷ்டம் உண்டாகும். மொத்தத்தில் ராகு சிரமத்தை தந்தாலும் கேது நற்பலன்களை தருவார். எது எப்படியாகினும் வரும் ஒன்றரை ஆண்டு காலம் சிறந்த அனுபவ அறிவு தருவதாக அமையும்.
தொழில் மற்றும் உத்யோகம்: உத்யோகஸ்தர்களுக்கு மேலதிகாரிகளுடன் கருத்து வேறுபாடு வரும். காவல்துறை, ராணுவம், தொழிற்சாலை, போக்குவரத்துத்துறை, மருத்துவம், நீதித்துறை பணியாளர்களுக்கு பணியில் கூடுதல் எச்சரிக்கை தேவை. வியாபாரிகள் புதிய முயற்சியில் ஈடுபடும்போது மிகுந்த கவனம் அவசியம். ஷேர் மார்க்கெட், புரோக்கர், கமிஷன் ஏஜென்சீஸ் தொழிலில்உள்ளவர்களுக்கு நிதானம் கட்டாயம்.
பரிகாரம்: சனிக்கிழமை தோறும் சுதர்ஸனர் சந்நதியில் விளக்கேற்றி, 18 பிரதட்சணம் செய்யலாம். நேரம் கிடைக்கும்போது கும்பகோணம் சக்ரபாணி ஆலயத்துக்கு சென்று பெருமாளை சேவிக்க சிரமங்கள் குறையும்.

துலாம்
வாழ்க்கை தரம் முன்னேறும். மனதில் நற்சிந்தனைகள், நல்ல எண்ணங்கள் தோன்றும். சாஸ்திர, சம்பிரதாயங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். சிறந்த ஞானம் உண்டாகும். நினைத்த காரியம் கைகூடி வெற்றி நிச்சயமாகும். நினைத்தவற்றை செயல்படுத்துவதில் வேகம் கூடும். பல்வேறு வழிகளில் வரவு கூடும். சேமிப்புகள் உயரும். அசையா சொத்துக்கள் சேரும். பிரபல்ய யோகத்தினைப் பெறும் உங்களுக்கு ராகுவின் இணைவு கூடுதல் வலிமை சேர்க்கும். கடமையில் கண்ணும் கருத்துமாக செயல்பட்டு மிகுந்த பிரபலம் அடைவீர்கள். நல்ல யோகம் உடைய ஜாதகர்களுக்கு உயர்பதவியில் உள்ளோருடன் தொடர்பு கிட்டும். கவுரவம் உயரும். உங்கள் புத்திசாலித்தனம் வெளிப்படும். மற்றவர்களால் பாராட்டப்படுவீர்கள். பூர்வீக சொத்து பிரச்னைகள் விலகி ஆதாயம் தரும். பாகப்பிரிவினை சாதகமான பலன் தரும். அயல்நாட்டுப் பிரயாண வாய்ப்பு உண்டு. முக்கிய பிரச்னைகள் பெண்களின் உதவியால் தீர்வடையும். மறைமுக எதிரிகள் காணாமல் போவார்கள்.
நிலுவையில் இருந்த வழக்குகள் விரைவில் முடியும். கடன் சுமை காணாமல் போகும். பாக்கிகள் வசூலாகும். எந்த ஒரு விஷயத்தையும் ஒருமுறைக்கு இருமுறை ஆராயும் மனப்பக்குவம் தோன்றும். வீண் கற்பனை, பயத்தால் இழப்பு ஏற்படும். ஆன்மிகச் சிந்தனை அதிகரிப்பதோடு சமூக சேவையிலும் நாட்டம் உண்டாகும். பிள்ளைகளின் நலனில் கவனம் அவசியம். அவர்களது உடல்நிலையை கண்காணிப்பதோடு மன நிலையிலும் அதிக அக்கறை தேவை. உங்களது ஆலோசனைகளும், அரவணைப்பும் அவர்களுக்குத் தேவைப்படும் நேரம் இது. ஆன்மிகப் பயணங்கள் செல்வதற்கான வாய்ப்புகள் உருவாகும். கேளிக்கை, கொண்டாட்டங்களில் நாட்டம் குறையும். மொத்தத்தில் கேதுவினால் விவேகமும், ராகுவினால் வேகமும் பெறுவதால் வரும் ஒன்றரை ஆண்டு காலத்தில் முன்நின்று செயல்படும் எல்லா விஷயங்களிலும் சிறப்பான வெற்றி காண்பீர்கள் என்பதில் ஐயமில்லை.
தொழில் மற்றும் உத்யோகம்: உத்யோகஸ்தர்கள் முக்கியத்துவம் பெறுவர். வியாபாரிகளுக்கு லாபம் அதிகரித்து பன்மடங்காக பெருகும். சுய, சிறுதொழில்கள் சிறக்கும். விவசாயம், செங்கல் சூளை, ரியல் எஸ்டேட் வெளிநாட்டு தொடர்பு வியாபாரிகள், ஏற்றுமதி, இறக்குமதி தொழில் செய்பவர்கள், சமையல் கலைஞர்கள், மருத்துவ, நீதித்துறையினர், ஆசிரியர்களுக்கு முன்னேற்றம் உண்டு. தொழிலதிபர்கள், வியாபாரிகள் தொழிலை அபிவிருத்தி செய்துகொள்ள சரியான நேரம் இது.
பரிகாரம்: வெள்ளி தோறும் அருகிலுள்ள மாரியம்மன் ஆலயத்திற்கு சென்று விளக்கேற்றி வழிபடலாம். நேரம் கிடைக்கும்போது சமயபுரம் சென்று மாரியம்மனுக்கு சிறப்பு ஆராதனை செய்து வணங்க வளம் காண்பீர்கள்.

விருச்சிகம்
குழப்பங்கள் அகலும். ஞானம் கூடும். எதிர்பாராத பிரச்னைகளையும் எளிதில் சமாளிப்பீர்கள். நுணுக்கமான விஷயங்களை எளிதில் புரிந்துகொண்டு நடைமுறைப்படுத்துவீர்கள். நெருங்கிய உறவினர் ஒருவருக்கு உதவி செய்ய இயலாது போகும். சுற்றத்தார் மத்தியில் அவப்பெயர் ஏற்படும். பிரச்னைகளை களைய நல்லவர் தீயவர்களை அடையாளம் காண்பது அவசியம். வேலைபளுவால் களைப்பு இருக்கும். பெண்களுக்கு வயிற்றுவலி, ரத்தப்போக்கு பிரச்னைகள் தோன்றும். ரத்தக் கொதிப்பு நோய் உள்ளவர்களுக்கு உடல்நிலையில் தீவிர கவனம் அவசியம். மாணவர்கள் கல்வியில் தேக்க நிலை இருக்கும். செய்முறை தேர்வில் மதிப்பெண்கள் கிடைத்தாலும் எழுத்துத் தேர்வில் சுணக்கத்தை தவிர்க்க கூடுதல் பயிற்சி தேவை. அரும்பாடுபட்டு உழைத்தால் மட்டுமே தேர்வில் நல்ல மதிப்பெண்களோடு தேர்ச்சி பெற முடியும். நண்பர்களால், பயணத்தால் ஆதாயம் உண்டு.
புதிய முயற்சிகள் வெற்றி தரும் என்றாலும் கூடுதல் கவனத்துடன் இறங்குவது அவசியம். வாழ்க்கைத்துணையின் முயற்சிகளுக்கு பக்கபலமாக இருப்பீர்கள். உங்களது ஆலோசனைகள் அவரை திறம்பட வழிநடத்தும். வாழ்க்கைத்துணையின் பேரில் அசையா சொத்துக்களில் முதலீடு செய்வது எதிர்காலத்திற்கு உதவியாக இருக்கும். நண்பர்கள் வாழ்க்கை தரம் உயர உதவுவீர்கள். ஏதேனும் ஒரு வழியில் எடுத்த செயல்களில் காரியவெற்றி சாத்தியமாகும். இக்கட்டான சூழலில் விவேகமான செயல்பாடுகளால் பெருமை தரும். இதுநாள் வரை பொறுமையுடன் இருந்து வந்த நீங்கள் தற்காலத்தில் தொழில்முறையில் அதிக கவனம் செலுத்தி சிறப்பான நற்பலன்களைக் காண உள்ளீர்கள். மொத்தத்தில் இந்த ராகுகேதுப் பெயர்ச்சியினால் இதுவரை கண்டிராத புதிய வளர்ச்சிகளைக் காண்பதன் மூலம் வாழ்வின் அடுத்த படிக்கு முன்னேறிச் செல்வீர்கள்.
தொழில் மற்றும் உத்யோகம்: தொழிலில் பணிச்சுமை அதிகரித்தாலும் தனப்ராப்தி உண்டு. நற்பலன்கள் ஏற்படும். போட்டியாளர் மத்தியில் திறம்பட செயல்பட்டு வெற்றி காண்பீர்கள். ஞானம் மேம்படும். உத்யோகஸ்தர்கள் தங்கள் பணிக்கு சிறிதும் சம்பந்தமில்லாத காரியங்களில் ஈடுபடுத்தப்படுவார்கள். பணிகளை சிறப்பாக முடித்து நற்பெயர் வாங்குவீர்கள். பதவி உயர்விற்கான வாய்ப்பு உண்டு. தொழிலதிபர்களும், வியாபாரிகளும் யுக்தியை மாற்றி செயல்பட்டு வெற்றி காண்பார்கள்.
பரிகாரம்: காலின் கீழ் நாகம் உள்ள முருகப்பெருமான் படத்திற்கு பூஜை செய்வது நல்லது. செவ்வாய் தோறும் சுப்ரமணிய ஸ்வாமி ஆலயத்திற்கு சென்று வாருங்கள். நேரம் கிடைக்கும்போது மருதமலைக்குச் சென்று பாம்பாட்டி சித்தரால் பூஜிக்கப்படும் வேலவனை தரிசிக்கவும்.
தனுசு
எடுத்த செயல்களில் நற்பலன்கள் ஏற்படும். அலைச்சல் குறைந்து முன்னேற்றம் ஏற்படும். விவசாய நிலங்கள், வீட்டு மனைகள் வாங்கும் வாய்ப்பு உருவாகும். இந்த முதலீடு எதிர்கால சந்ததிக்கு உதவும். பாட்டன் வழி சொத்துகள் வந்து சேரும். தான, தருமங்களில் ஈடுபாடு கூடும். ஆசை அதிகரிக்கும். அலைபாயும் மனதை கட்டுப்படுத்துவது அவசியம். ஆர்ப்பாட்டமில்லாமல் சேமிப்பில் ஈடுபடுவது நன்மை தரும். ஆன்மிக நாட்டம் கொண்டிருக்கும் உங்கள் சந்தேகங்களைப் போக்க ஞானி ஒருவருடனான சந்திப்பு நிகழும். பெற்றோர் மற்றும் வாரிசுகள் உடல்நிலையில் கவனம் அவசியம். முன்னோர்களுக்கு செய்ய விடுபட்டிருந்த காரியத்தை முடிக்கும் வாய்ப்பு கிடைக்கும். அயல்நாட்டுப் பிரயாணத்திற்கான வாய்ப்புகள் உருவாகும். அலுவலக காரியமாக செல்லும் பிரயாணங்களில் ஆதாயம் காண்பீர்கள். வாகனங்களை இயக்கும்போது கூடுதல் எச்சரிக்கை நல்லது. குறுக்கு வழியில் முன்னேற நினைப்பதை தவிர்க்கவும். வாழ்க்கை தரம் உயரும்.
எந்த ஒரு விஷயத்தையும் ஒருமுறைக்கு இருமுறை ஆராயும் மனப்பக்குவம் தோன்றும். முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அநாவசிய இழப்புகளை தடுக்கும். மனோ தைரியத்துடனும், திடமாக செயல்படுவீர்கள். கற்பனையை நடைமுறைப்படுத்துவீர்கள். உடன்பிறந்தோருடன் கருத்து வேறுபாடு தோன்றும். ஆன்மீக பயணங்கள் செல்வீர்கள். வாகனப்பயணம் பயன் தரும். எதையும் ஆரவாரமின்றி செய்வது அவசியம். மறைமுக எதிரிகள் காணாமல் போவார்கள். ஆனால் கூட இருந்தே குழி பறிப்பவர்களிடம் மிகுந்த எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. குடும்பப் பெரியவர்களின் மனவிருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். மொத்தத்தில் ராகுவின் அருளால் பரம்பரைப் பெருமையை காப்பதோடு எதிர்கால சந்ததியினரின் நலம் காக்க சொத்து சேர்க்கையிலும் ஈடுபட உள்ளீர்கள்.
தொழில் மற்றும் உத்யோகம்: சுயதொழில் செய்வோருக்கு லாபம் உண்டு. தொழிலில் பல்வேறு இடைஞ்சல்களை தாண்டி முன்னேற வேண்டியிருக்கும். உத்யோகஸ்தர்களுக்கு அடிக்கடி தற்காலிக பணி இடமாற்றம் இருக்கும். ஒரு சிலர் பதவி உயர்விற்காக சிறப்புப் பயிற்சி வகுப்புகள், உயர்கல்வி பயிலுதல் ஆகியவற்றில் நாட்டம் கொள்வார்கள். வியாபாரிகள் தொழிலை அபிவிருத்தி செய்ய அலைய வேண்டியிருக்கும். மொத்தத்தில் கஷ்டப்பட வேண்டிய நிலை உண்டாகுமே தவிர, நஷ்டப்பட வேண்டியிருக்காது.
பரிகாரம்: பிரதி மாதம் ஸ்வாதி நக்ஷத்ர நாளன்று நரசிம்மரை வழிபட்டு வர மன சஞ்சலங்கள் அகலும். நேரம் கிடைக்கும் போது சோளிங்கர் சென்று யோக நரசிம்மரையும், யோக ஆஞ்சநேயரையும் தரிசிக்க மனத் தெளிவு கிட்டும்.

மகரம்
சங்கடங்களை சமாளிக்க வேண்டிய கட்டாயம். வரவு தடைபடும். அநாவசிய செலவுகள் அதிகமாகும். பொருளாதார சிக்கல் இருக்கும். பேச்சில் எச்சரிக்கை, கவனம் கட்டாயம். குடும்ப உறுப்பினர்களுடன் பிரச்னை, கருத்து வேறுபாடு உருவாகும். நினைத்த காரியம் இழுபறி தரும். நினைப்பது ஒன்றாகவும், நடப்பது ஒன்றாகவும் இருக்கும். உங்கள் தவறுக்கு அடுத்தவர்களை குறை கூறுவீர்கள். ஞாபக மறதியால் அல்லல்பட நேரிடும். சந்தேகத்தால் பிரச்னைகள் உருவாகும். நேசிப்பவர்களும் உங்களை விட்டு விலகி செல்லும் சூழல் உண்டாகும். விருப்பமான உணவுகளை உட்கொள்ள இயலாது போகும். பிள்ளைகளின் வாழ்க்கை தரம் முன்னேறும். அவர்கள் விருப்பங்களுக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிப்பீர்கள். வாழ்க்கைத்துணை மற்றும் வாரிசுகளின் பெயரில் சொத்து சேமிப்பில் ஈடுபட தடை ஏதும் இருக்காது. உங்கள் பெயரில் இருக்கும் கணக்கில் சேமிப்பு உயராமல் போனாலும், உங்களைச் சார்ந்தவர்களின் சொத்து மதிப்பு உயரும்.
மருத்துவ செலவு ஏற்படும் வாய்ப்பு உள்ளதால் உடல்நிலையில் கூடுதல் எச்சரிக்கை அவசியம். சர்க்கரை, ரத்த அழுத்தம் உள்ளவர்கள் அடிக்கடி மருத்துவ பரிசோதனை எடுத்து கொள்வது நல்லது. சிலருக்கு நெருப்புக்காயம் தோன்றும் வாய்ப்பு உண்டு. பெண்கள் சமையல் செய்யும்போது மிகுந்த எச்சரிக்கை அவசியம். மாணவர்கள் கல்வியில் முன்னேற கடின உழைப்பு தேவை. அறிவாளிகளாக இருந்தாலும் கூட ஞாபகமறதிக்கு ஆளாவீர்கள். மனம் அலைபாய்வது, வீண் குழப்பம் உண்டாகும். மருத்துவ உயர்கல்வி மாணவர்கள் முன்னேற்றம் காண்பார்கள். நகைகள், வெள்ளிப் பாத்திரங்கள், விலையுயர்ந்த பொருட்களை வங்கி லாக்கர்களில் பத்திரப்படுத்தி வைக்க வேண்டியது கட்டாயம். அநாவசிய பிரச்னைகளை தவிர்க்க வீண் வாக்குவாதத்தை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். ராகு, கேது பெயர்ச்சி உங்கள் ராசிக்கு சுமாரான பலன்களையே தரும் என்பதால் பெயர்ச்சி நாளன்று (08.01.2016) ஆலயத்திற்கு சென்று சிறப்பு அர்ச்சனை செய்துகொள்வது நல்லது.
தொழில் மற்றும் உத்யோகம்: தொழில்அதிபர்கள், சுயதொழில் செய்வோர் சோதனைகள், தடைகளை தாண்டி எதையும் ஒருமுறைக்கு இருமுறை சிந்தித்து செயலில் இறங்குவது நல்லது. உத்யோகஸ்தர்களுக்கு பொறுமை கட்டாயம். கெமிக்கல்ஸ் துறையில் பணி புரிபவர்கள், உஷ்ணம் சம்பந்தப்பட்ட வேலையில் ஈடுபடுபவர்கள் மிகுந்த கவனத்துடன் இருப்பது நல்லது.
பரிகாரம்: ஞாயிறு தோறும் ராகு காலத்தில் அருகிலுள்ள அம்பிகை ஆலயத்தில் எலுமிச்சை விளக்கேற்றி வழிபட்டு வாருங்கள். மஹிஷாசுரமர்த்தினி ஸ்தோத்ரத்திரத்தை பாராயணம் செய்து வரவும். நேரம் கிடைக்கும்போது சென்னை பூக்கடை பகுதியில் உள்ள காளிகாம்பாள் ஆலயத்தில் அர்ச்சனை செய்து அம்பிகையிடம் பிரார்த்தனை செய்யவும்.
கும்பம்
எதிர்பாராத நேரத்தில் திடீரென்று தோன்றும் தடைகள் உங்கள் முயற்சிகளின் வேகத்தை குறைக்கும். சிறுசிறு பிரச்னைகளுக்குக் கூட துவண்டு போகும் வாய்ப்பு உண்டு. எந்த ஒரு விஷயத்திலும் அதிக ஈடுபாடின்மை தோன்றும். சஞ்சலங்களைத் தவிர்த்து சுறுசுறுப்புடன் செயல்பட்டு வெற்றி காண முயல்வது அவசியம். எதிலும் விட்டு கொடுத்து செல்வீர்கள். குடும்பத்தில் குழப்பத்தால் பிரச்னைகள் வரும். தான, தருமங்களில் ஈடுபாடு அதிகரித்து கையிருப்பு கரையும். பொருளாதார நிலை உயர கூடுதல் முயற்சி அவசியம். அதே நேரத்தில் வாழ்க்கைத்துணையின் செயல்பாடுகள் உங்களை பாதுகாக்கும். குடும்ப விஷயங்களிலும், பண விவகாரங்களிலும் அவரது கருத்துக்களோடு ஒத்துப்போவது நல்லது. தொழில் முறையில் தூரதேச பிரயாணம் செல்லும் வாய்ப்பு உண்டு. புதிய நண்பர்கள் சேர்க்கை உருவாகும். பெண்களால் ஏற்படும் அவமானத்தை தவிர்க்க முன்பின் தெரியாத பெண்களிடம் எச்சரிக்கை அவசியம். வெளிவட்டார தொடர்புகள் அதிகரிக்கும்.
வீட்டில் விருந்தினர்கள் வருகை இருக்கும். அவர்களால் குடும்பத்தில் கலகலப்பு கூடும். புதிய நட்பு, பழைய நட்பில் விரிசலை தோற்றுவிக்கும். புதிய நண்பர்களிடம் கூடுதல் எச்சரிக்கை தேவை. ஏற்கெனவே உடல்நிலை பலவீனமாக உள்ளவர்கள், நோய்வாய்ப்பட்டிருப்பவர்கள் தீவிரமாக உடல்நிலையை கவனித்துக் கொள்வது நல்லது. ஆரோக்கியமாக உள்ளவர்கள் கவலை கொள்ளத் தேவையில்லை. முன்னோர்களின் சொத்துகளில் இருந்த பிரச்னைகள் விலகும். குடும்பப் பெரியவர்களுடனான கருத்து வேறுபாடு நீங்கும். இந்த ராகு, கேது பெயர்ச்சியில் கேதுவால் சிரமத்தையும், ராகுவால் அனுகூலத்தையும் காண உள்ளீர்கள். நன்மையோ, தீமையோ, எதுவாக இருந்தாலும் ராகு சற்று கூடுதலாக தர வல்லவர். கேது உள்ளதைக் கெடுப்பவர். ராகுவின் துணையிருப்பதால் சமயோஜிதமாகச் செயல்பட்டு வெற்றி காணுவீர்கள்.
தொழில் மற்றும் உத்யோகம்: தொழிலில் சிறப்பான முன்னேற்றம் இருந்தாலும் பெரிய முதலீடு நஷ்டத்தை ஏற்படுத்தும். கூட்டுத்தொழில் லாபம் தரும். ரியல் எஸ்டேட், இரும்பு, மருந்து வியாபாரம், செயற்கை உர தயாரிப்பாளர்கள் முன்னேற்றம் காண்பர். உத்யோகஸ்தர்கள் கவனத்தை சிதற விடாமல் இருப்பதும், உடன் பணி புரிபவர்களை அனுசரித்துச் செல்வதும் அவசியம். தொழிற்சாலைகள், மின்சார வாரியம், பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை, காவல்துறையில் பணியாற்றுவோருக்கு திடீர் அதிர்ஷ்டத்தால் பதவி உயர்வு கிட்டும்.
பரிகாரம்: தினமும் காலையில் விநாயகப் பெருமானை மானசீகமாக வணங்கி வருவது நல்லது. நேரம் கிடைக்கும்போது பிள்ளையார்பட்டி சென்று கற்பக விநாயகரை தரிசித்து அர்ச்சனை செய்துகொள்ள வளம் உண்டாகும்.
மீனம்
அமைதியான சூழலை விரும்பும் உங்களது சஞ்சலங்கள், குழப்பங்கள் நீங்கும். மதிப்பு, மரியாதை உயரும். புகழ் கூடி நற்பலன்கள் ஏற்படும். திருமண வயதில் உள்ளவர்களுக்கு, திருமணத்தடை அகலும். குடும்பத்தில் சுபநிகழ்வுகள் நடைபெறும். சுபசெலவினை எதிர்கொள்ளும் வகையில் பொருளாதார நிலையும் முன்னேற்றம் காணும். வளர்ச்சிப் பாதையில் பயணிக்க தொடங்குவீர்கள். அநாவசிய செலவுகள் முற்றிலும் குறையும். சேமிப்பு உயரும். சத்ரு ஜெயம், கடன்தொல்லைகளிலிருந்து விடுபடுதல், ரோக நிவாரணம் போன்ற நற்பலன்கள் கிட்டும். நெடுநாள் ரோகத்திலிருந்து விடுபடும் அதே நேரத்தில் கொழுப்புத் தொந்தரவு உண்டாகும் வாய்ப்பு உள்ளதால் எண்ணெய் பதார்த்தங்களை தவிர்ப்பது நல்லது. வீண் வம்பு விவகாரங்களை தவிர்க்க சம்பந்தமில்லாத விவகாரங்களில் தலையிடுவதைத் தவிர்ப்பது நல்லது. முன்பின் தெரியாதவர்களிடம் மிகுந்த கவனம் தேவை. இக்கட்டான நேரத்தில் உங்கள் புத்திகூர்மை வெளிப்படும்.
சொன்ன சொல்லைக் காப்பாற்ற மிகவும் சிரத்தை எடுத்துக் கொள்வீர்கள். பேச்சில் இனிமை, நகைச்சுவை கலந்திருக்கும். குடும்ப உறுப்பினர்களிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி குடும்பத்தில் கலகலப்பான சூழல் நிலவும். வாகனத்தை புதிதாக மாற்றுவீர்கள். திடீர் பயணங்கள் இருக்கும். பெற்றோர் மற்றும் வாரிசுகளின் உடல்நிலையில் சற்று கூடுதல் கவனம் நல்லது. வாழ்க்கைத்துணையின் உடல், மன நிலையில் அதிக அக்கறை அவசியம். தம்பதியருக்குள் விட்டு கொடுத்துச் செல்வது அவசியம். வாழ்க்கைத்துணையின் உறவினர்கள் உங்கள் உதவி நாடி வரக்கூடும். மாணவர்களின் கல்விநிலை உயர்வடையும். ஆராய்ச்சி மாணவர்கள் ஆய்வில் வெற்றி காண்பார்கள். பொதுவாக மீன ராசிக்காரர்களுக்கு இந்த ராகு, கேது பெயர்ச்சி கெடுபலன்களை விட நற்பலன்களையே அதிகமாகத் தரும் என்பதில் ஐயமில்லை.
தொழில் மற்றும் உத்யோகம்: தொழில் ரீதியாக ஓய்வில்லாமல் செயல்பட வேண்டியிருக்கும். செய்தொழிலில் லாபம் கிடைக்கம். உத்யோகஸ்தர்களுக்கு அலுவலகத்தில் சாதகமான சூழல் நிலவும். கலைத்துறையினர் போட்டியான சூழலை சந்திக்க நேரும். ஆசிரியர்கள், வேத விற்பன்னர்கள், வழக்கறிஞர்களுக்கு வாக்குவன்மையால் நற்பெயர் கிட்டும். வெளிநாட்டு உத்யோகத்திற்காகக் காத்திருப்போருக்கு அதற்கான வாய்ப்புகள் தேடி வரும்.
பரிகாரம்: அவ்வப்போது அருகில் உள்ள சிவாலயத்திற்குச் சென்று இறைவனை வணங்கி வருவது நல்லது. நேரம் கிடைக்கும்போது திருவண்ணாமலை சென்று நாகாபரணத்துடன் கூடிய அருணாச்சலேஸ்வரரை தரிசித்து அர்ச்சனை செய்துகொள்ள நன்மை உண்டாகும்.

மறுபதிவு
மகிழம்பாடி பாலவசந்த்

Rahu-Ketu Transit 2017 – Major Breakthroughs To Take Place?

After planet Saturn, Rahu and Ketu take the longest time to complete their transit in one Sign. Thus, both these shadowy malefic planets have an extremely significant impact on our life trends. Both these planets are the representatives of our Karma and deliver results exactly as per our deeds; while Rahu signifies our future, Ketu denotes our past. When planets as important as these change Signs, major transformations take place in the world as well as in various areas of our life. 

Unpredictable, sudden and unexpected – these are some of the ways in which both Rahu and Ketu function. When both these planets are operating, change will take place when you least expect it. Opportunities will come, when you are least prepared for them. All this enables us to go ahead and act on the basis of our instincts and to act immediately. 

Rahu and Ketu – The Evergreen Villains Or Cosmic Agents Of Change? 

Rahu and Ketu are mostly considered as ruthless planets, which are out there to wreak havoc in our lives and to increase our problems. But, we should understand that both these planets are the chosen ones, the divine forces which have been assigned the role of delivering results exactly in accordance to one's karma and attitude. They do not do anything without a valid reason and logic. 

If both these planets are making your face troubles and complications, then it is because you may have committed some sinful or wrong deeds in the past birth/s. It is said that “Change is the only constant.” But, who ensures that change takes place? Who ensures that we are able to experience new and better things? Who ensures that we get rid of the old and monotonous? Think about it. It is Rahu and Ketu. Yes. While Rahu takes us towards the new and modern things, Ketu on the other hand ensures that there is a fine balance and brings and end to the things that are no longer needed in our lives.