Search This Blog

Sunday, February 3, 2019

புற்றுநோய் சித்த மருத்துவம் Sidda Medicine For Cancer





Ayurvedic medicine


Ayurveda is an ancient Indian system of medicine. It uses a wide range of treatments and techniques. There is no reliable evidence to support its use as a treatment for cancer.

Summary

  • Ayurvedic medicine uses a range of treatments and techniques
  • Some techniques might help with the symptoms of cancer or its treatment
  • Ayurvedic medicine as a treatment for cancer is not backed up by research
  • Some of the treatments might have severe side effects

What is Ayurvedic medicine?

Ayurveda is an ancient Indian system of medicine which began about 5,000 years ago. It is not just one treatment. It is a way of diagnosing illness and using a wide range of treatments and techniques.

Ayurveda is an Indian word. Ayur means life and veda means knowledge.

Ayurvedic medicine can include:

  • advice on diet and special diets
  • taking specific Ayurvedic medications
  • herbal medicine
  • massage
  • meditation
  • yoga, breathing and relaxation techniques
  • bowel cleansing

An Ayurvedic practitioner might suggest any or all of these treatments. It will depend on your particular health problems.

Ayurvedic medicine believes that health problems happen when your mind, body and spirit are out of balance.

Ayurvedic practitioners believe we are made up of 3 elements known as doshas.

These are:

  • air and space (vata dosha) which allows movement
  • fire and water (pitta dosha) which allows for change and handles digestion and metabolism
  • water and earth (kapha dosha) which gives structure or cohesion

These 3 doshas let the body's organs work together in harmony. They also create your relationship with the environment and universe.

Ayurvedic practitioners believe that health depends on the correct balance of all 3. They claim that combinations of Ayurvedic medicine bring balance and harmony into the body. It helps to:

  • increase energy and wellbeing
  • decrease stress
  • prevent and cure disease

There is no scientific evidence to prove that Ayurvedic medicine can treat or cure cancer, or any other disease.

Why people with cancer use it

People with cancer often use touch therapies such as massage and aromatherapy. Many people say these therapies help them to cope better with cancer and its treatment.

Research is looking into whether some herbs or plant treatments used in Ayurvedic medicine could help to prevent or treat cancer.

But, we still don't know much about some of the treatments that are part of Ayurvedic medicine. These include treatments like special diets and herbal remedies.

These treatments could be harmful to your health or interfere with conventional treatment such as cancer drugs and radiotherapy.

How you have it

Your practitioner will aim to restore or maintain your health and well-being. They will do it by balancing many factors in your life.

To plan your treatment, they will take your medical history and assess your doshas.

They will examine your tongue, lips and nails, and look inside your eyes, ears, nostrils and mouth. They might also examine your back passage (rectum) and genital area. They will listen to your lungs and heart and take your pulse.

They will ask about your emotions and relationships with other people. They will even consider the time of day and what season it is.

Then they'll discuss which treatments they think will help you most.

Some practitioners might recommend getting rid of toxins. They might cleanse the bowel (intestines). They do it by putting liquid into your back passage (enemas). Or, they might suggest taking medicines to make the bowel work more quickly (laxatives).

Other ways of cleansing and detoxifying include:

  • forced vomiting
  • drawing blood from the body

These methods can be harmful. Most therapists don’t use them.

Some Ayurvedic methods are generally helpful for people with cancer. These include:

  • yoga
  • massage
  • relaxation

But others such as some herbal treatments, diets and bowel cleansing can be harmful.

Always check with your doctor first as some treatments can have serious side effects. Ask their advice if an Ayurvedic practitioner diagnoses you with a new medical condition.

Your relationship with your practitioner is important. They are responsible for creating a safe space for you to work together to decide on your treatment.

Tell your practitioner if you don’t feel comfortable with anything that they are doing.

Finding an Ayurvedic practitioner


No single professional organisation regulates Ayurvedic medicine in the UK. Therapists and practitioners can join several associations. There is no law to say that they have to.

Always choose a trained and qualified practitioner. Contact the Ayurvedic Practitioners Association (APA) first.

Aurvedic practitioners are qualified to diagnose diseases and conditions from an Ayurvedic perspective. They can prescribe and give Ayurvedic remedies and treatments. They can also give nutrition and lifestyle advice.

Ayurvedic therapists are not trained as practitioners. They do not have to finish any specific training. They can give Ayurvedic nutrition and lifestyle advice. They can also give hands-on treatment such as massage. But they can’t diagnose conditions or prescribe Ayurvedic remedies.

There are several places that people can train to become Ayurveda practitioners. There are also different levels of training. Many practitioners go to India to study as there are more than 180 Ayurveda training schools there. Some of the training in India can take up to 5 years to complete.

Some practitioners train in a specific treatment. It might be in massage or meditation, but not in others such as herbal treatments.

நுாலக கட்டிடம் புத்தகம் வடிவில்


Saturday, February 2, 2019

இசைஞானி இளையராஜா_75















இலங்கை அரசியலில் முஸ்லிம்களின் சேவை

இலங்கை அரசியலில் ஆரம்ப காலம் தொட்டே முஸ்லிம்களின் தியாகம் போராட்டம் சேவை அளப்பரியதே!
இது தொடர்பான சிறு துளிகள்
இலங்கைத் திரு நாட்டின் சுதந்திரப் போராட்டத்தை முடுக்கி விடுவதில் முஸ்லிம்களின் பங்களிப்பு தீர்க்கமானது, உறுதியானது , வலுவுள்ள தாக்கத்தை உண்டு பண்ணியது.

எம்.சி.எம்.கலீல்
20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்தேசேர் மொஹம்மத் மாக்கான்மாக்கார், டாக்டர் டி.பி. ஜாயா,டாக்டர் எம்.சி.எம்.கலீல்,அப்போதைய அப்துல் ராஸீக் ( பின்னால் சேர் ராஸீக் பரீத் )ஆகிய பெருந்தலைவர்கள் தேசத்தை ஒற்றுமைப்படுத்தி உறுதிப்படுத்தி அதை சுதந்திரத்தை நோக்கி உந்தித் தள்ளுகின்ற மகத்தான பணியைச் செய்தார்கள்.
முஸ்லிம்கள் நாட்டினுடைய அரசியல்,அபிவிருத்திப் பணிகளுக்கு ஒரு போதும் முட்டுக்கட்டையாக இருந்ததேயில்லை.சித்திலெப்பை, வாப்புச்சி மரைக்கார், ஐ.எல்.எம்.அப்துல் அஸீஸ் போன்ற மேமக்கள் சிங்கள பெருங்குடியினரோடு உறவை நெருக்கமாக ஆக்கிக் கொண்டார்கள்.
சித்திலெப்பை
ஐ.எல்.எம்.அப்துல் அஸீஸ்
வாப்புச்சி மரைக்கார்
ஸ்ரீலங்கா முஸ்லிம்கள் ஸ்ரீலங்கா விடுதலைக்கு மேற்கொண்ட அளப்பரிய பெரும் பணிகள் 16 ஆம் நூற்றாண்டிலேயே தொடங்கிவிட்டன. நாட்டை அந்நிய ஆக்கிரமிப்பில் இருந்து விடுவிப்பதற்கு அவர்கள் மேற்கொண்ட முனைப்புக்களைப் பற்றி ஸ்ரீலங்கா பல்கலைக்கழக வரலாற்றுப் பேராசிரியர் கண்ணியத்திற்குரிய டாக்டர் கே.டபிள்யூ. குணவர்தன அவர்களே மிக்க சிறப்பித்துக் குறிப்பிடுகிறார்.
சேர் ராஸீக் பரீத்
வலிமை மிக்க அந்நிய ஏகாதிபத்தியவாதிகளோடு சில கட்டங்களில் இணங்கிப் போவதை ராஜ தந்திர நடவடிக்கையாக சிங்கள ஆட்சியாளர்கள் கருதத் தலைப்பட்ட நேரத்தில் கூட, முஸ்லிம்களும் சிங்கள பெருங்குடி மக்களும் ஏகாதிபத்தியவாதிகளுக்கு உறுதியான, பிடிவாதமான எதிர்ப்பைக் காட்டினார்கள்.
மன்னன் மூன்றாம் விஜயபாகு தனது ஆட்சிக்குக்கட்டுப்பட மறுத்த, தனது ராஜாங்க வணிகத்திற்கு குறுக்கீடு செய்த போர்த்துக்கீசர்களை எதிர்த்துப் போர்ப் பிரகடணம் செய்ய முற்பட்ட போது கூட, முஸ்லிம்களின் ஒத்துழைப்பையே அவன் நம்பி நின்றான்.
மன்னன் மாயதுன்னவுக்கு முஸ்லிம்கள் கொடுத்த ஒத்துழைப்பு, இராணுவப் பணிகளில் மட்டுமல்ல ராஜதந்திர தூதுவப் பணிகளிலும் அவர்களுடைய திறமை கொடி கட்டிப் பறந்த காலம் அது.கள்ளிக் கோட்டையிலிருந்து மன்னன் மாயாதுன்ன அடிக்கடி உதவி பெறுவதற்கு பெரிதும் முஸ்லிம்களே காரணமாக இருந்தார்கள். மலபார் இராணுவ வீரர்களும், கடற்படை வீரர்களும் போர்த்துக்கீச ஏகதிபத்தியவாதிகளுக்கு அடிக்கடி கொடுத்து வந்த தொல்லைகளின் காரணமாகத் தான் போர்த்துகீசர் கவனம் நம் பக்கம் இருந்து திசை திரும்பி அதன் காரணமாக சிங்களப் படையினர் சற்று நிம்மதி மூச்சு விட முடிந்தது.இந்த சூழ்நிலை உருவாவதற்கு முஸ்லிம்களே காரணமாக இருந்தார்கள்.சிங்களப் போர் இயந்திரம் மிகத் திறமையாக செயற்படுவதற்கு அதன் அதி மகத்தான உறுப்பாக முஸ்லிம் பெருமக்களின் பணி அமைந்தது என்பது வரலாற்றில் மறக்க முடியாத உண்மையாகும்.
சேர் மாக்கான் மாக்கார்
சேர் முஹம்மத் மாக்கான் மார்க்கார், 1939 ஆம் ஆண்டு மார்ச் 5 ஆம் நாள் ஸாஹிராக் கல்லூரியில் நடைபெற்ற அனைத்திலங்கை முஸ்லிம் அரசியல் மாநாட்டில் பேசிய பொழுது, நாட்டின் அனைத்து சமயத்தினரதும் ஒற்றுமையையும் ஒத்துழைப்பையுமே மிக அழுத்தமாக வலியுறுத்தினார்.


அவர் சொன்னார் : நான் முஸ்லிம்களுக்குத் தக்க அளவிலான பிரதிநிதித்துவம் வேண்டும் என்று கோரிய போது, நான் வெறும் 50:50 என்ற கணக்கு வழக்கு விகிதாசாரங்களில் மட்டும் நம்பி நின்றுவிடவில்லை. எல்லா விகிதாசார கணக்கு வழக்கு புள்ளி விபரங்களும் ஒரு தலைப்பின் கீழ் அடங்கி விடுகின்றன.அத் தலைப்பு என்னவென்றால்,அது தான் ஒரு நல்லாட்சி அமைவதாகும்.
நல்லாட்சி அல்லது அரசு என்பதென்ன? இதைச் சுருக்கிக் குறுக்கி இரண்டே சொற்களில் அடக்கிவிடலாம். நீதியும் நியாயமும் மனிதர்கள் ஒருவருக்கொருவர் நீதியாக நடந்து கொள்வதும் அனைத்து சமுதாயங்களுக்கும் நியாயம் செய்வதுமாகும்.அதே நீதி நியாயத்தின் அடிப்படையில் தான் நான் அப்போதோ அல்லது இனி எப்போதுமோ ஒரு பெரும்பான்மைச் சமுதாயத்தை சிறுபான்மை நிலைக்கு இட்டுச் செல்லவதை விரும்பினேனில்லை. அதனால்தான் என்னுடைய நல்லெண்ணத்துக்குச் சான்றாக,இந்நாட்டை சிங்களவர் ஆள்வதை நான் ஆட்சேபிப்பதாயில்லை என்று சொல்கின்ற அளவிற்கு வந்தேன். இந்த என்னுடைய ஒரு பேச்சே போதும். நான் ஒரு வகுப்பு வெறியனல்லன் என்பதை மெய்ப்பித்திட.


சிறுபான்மையினர் அரசியற் சட்டச் சாசனப் பாதுகாப்பிற்காகச் செய்த முயற்சி, சுதந்திரம் வழங்குவதைக் கிடப்பில் போட்டிட பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு ஒரு சாக்காக அமைந்திடக் கூடாதே என்பதற்காக டாக்டர் டி.பி.ஜாயா வெளியிட்ட கருத்துக்கள் வரலாற்றுச் சிறப்புமிக்க ஒரு சொற்பொழிவாக இன்னும் மிளிர்கின்றன! உள்ளத்தைத் திறந்து கொட்டி,உணர்வுகளை வலுவுள்ள சொற்களாக அவர் வடித்துத் தந்த அந்தப் பேருரை, அதில் அவர் முஸ்லிம்களின் நோக்கு, போக்கு என்ன என்பதை தீர்க்கமாக வரையறுத்துக் காட்டியமை, பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தையே அதிர வைத்ததோடு, இனிவரும் வருங் காலமெல்லாம் இந்நாட்டில் பிறக்கக்கூடிய சந்ததியினரையுங் கூட முஸ்லிம்களுக்கு நன்றிக் கடன்பட்டவர்களாக ஆக்கி விட்டது.
டாக்டர் டி.பி. ஜாயா
தான் சான்று நின்றவர்களாலேயே தான் வருத்தப்படுத்தப்பட்ட நிலையிலுங் கூட டாக்டர் ஜாயா, இந்நாட்டின் அனைத்து சமுதாயங்கள் மத்தியிலும் ஒருமித்த கருத்து உடன்பாடு கண்டிட பேரவாக் கொண்டு செயல்பட்ட அதே நேரத்தில், கிடைக்க வேண்டிய சுதந்திரம் முஸ்லிம்களால் தான் கெட்டது என்ற ஒரு கருத்து எக்காலத்திலும் இந்து முஸ்லிம் சமுதாயத்தின் மீது சுமத்தப்பட்டு விடக்கூடாது என்பதில் அவர் மெத்தக் கண்ணுங் கருத்துமாக இருந்தார்.அவருடைய அந்த வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய பேச்சு இந்நாட்டு மக்களின் மனதில் பாரியத்தாக்கத்தை ஏற்படுத்தியதோடு, மக்களை ஐக்கியப்படுத்தி, சுதந்திரப் போராட்டத்தை ஒரு அர்த்தமுள்ள விவகாரமாகவும் ஆக்கி விட்டது.
சுதந்திரப் பாதையில் ஒரு மைல்கல்லான சட்டசாசன சபையில் சோல்பரித் திட்டத்தின் மீது டாக்டர் ஜாயா பேசிய பேச்சு ஆதிக்க எதிர்ப்பிற்கு இஸ்லாம் காட்டுகின்ற வேகத்தையும், முஸ்லிம்களின் இயல்பான சுதந்திர வேட்கையையும் தெள்ளத் தெளிவாகப் படம் பிடித்துக் காட்டியது.”முஸ்லிம்களைப் பொறுத்தவரையில் சுதந்திரம் என்பது அவர்களின் பண்பாட்டின் அடித்தளம். முழுமையான சுதந்திரத்திற்காக மேற்கொள்ளப்படும் எந்தப் போரிலும், போராட்டத்திலும் முன்னணியில் தான் நிற்க வேண்டுமென அவர்களுடைய மார்க்கம் அவர்களுக்கு ஆணையிடுகிறது. முழுமையான சுதந்திரத்திற்கான ஒரு போர் என்றால் அதில் முஸ்லிம் தனது சொந்த நலனையுங் கூட கருதாது களத்தில் குதிப்பான்.சுதந்திரம் முதலில் வரட்டும். தன்னை எதிர்நோக்கும் இதர பிரச்சனைகளை அப்போது சந்தித்துக் கொள்ளலாம் என்பதே அவனது தெளிவான நிலை.”
தன்னுடைய இந்த முத்தாய்ப்புப் பேச்சால், முஸ்லிம், நாட்டை தனது சமுதாயத்திற்கு முன்னால் வைப்பான் என்ற கருத்தையே தியாகி, தீரர் ஜாயா நிலை நாட்டினார். அவருடைய அரசியல் மதி நுட்பமும், ஆழ்ந்த அறிவும், சுதந்திரப் போராட்டக் காலத்தில் அவர் மேற்கொண்ட நிலைப்பாடு ஒன்றும் தவறானதல்ல என்பதையே இத்தனையும் மெய்ப்பிப்பதாக இருக்கிறது. சுதந்திரத்துக்குப் பிறகு அமைந்த எந்தவொரு ஆட்சியும், அரசும் முஸ்லிம்களின் முன்னேற்றத்திற்குத் தடையாக வந்திடத் துணிந்ததில்லை.
முஸ்லிம்கள் தாமாகவே தான் தமது முன்னேற்றப் பாதையில், தமக்கிடையேயுள்ள ஒற்றுமையின்மையின் காரணமாக அடிக்கடி தடைக் கற்களைப் போட்டுக் கொள்கிறார்கள்.
ஒழுங்கான ஒற்றுமை மாத்திரம் நம்மிடையே அமைந்தால் அன்று டி.பி.ஜாயா எடுத்த முடிவு எத்துணை சரியானதென்பதை மெய்ப்பிக்கும். தியாகி டி.பி.ஜாயாவின் நம்பிக்கை வீண் போகவில்லை என்பதற்கு சான்றாக இன்று அனைத்துத் துறைகளிலும் முஸ்லிம்களின் முன்னேற்றத்திற்கு உரிய ஆக்கமும் , ஊக்கமும் தருகின்ற ஒரு நியாய சிந்தனையுள்ள ஜனாதிபதியை மாண்புமிகு ரணசிங்க பிரேமதாச அவர்களைப் பார்க்கின்றோம்.
அரசியல் சாசன ரீதியாக நமக்கு அளிக்கப்பட்டிருக்கின்ற பாதுகாப்புக்குள்ளேயே வாழ்க்கையில் சகல வட்டங்களிலும் நம் சமுதாயத்தின் முன்னேற்றத்திற்கான வழிவகைகளை செம்மையாக அமைத்துக் கொள்ள முடியும்.ஆனால் அதை நாம் ஐக்கியமாகத் தான் சாதிக்க முடியும். இறுதியாக ஒன்றை சொல்லி வைக்க விழைகின்றேன். நாட்டின் சுதந்திரத்திற்கு முட்டுக்கட்டையாக முஸ்லிம் இருந்ததில்லை. அதன் முன்னேற்றத்திற்குத் தடைக்கல்லாக அவன் ஒருபோதும் இருந்திட மாட்டான் என்ற விடயம் யாருடைய அவதானத்திலிருந்தும் நழுவி விடக் கூடாது.
சிறப்பு உரையில் பழமையின் தொய்மையும் உண்மையும் இருந்தது அதனால் என்னை வெகுவாக கவர்ந்தது.
நன்றி
Nazeem Mohammed


உம்ரா ''செய்வது'' எப்படி?


கொஞ்சம் நீண்ட பதிவு படித்து பயன் பெறுங்கள்....
அல்லாஹ்வுக்காக ஹஜ்ஜையும், உம்ராவையும் முழுமைப்படுத்துங்கள்! (அல் குர்ஆன் 2:196)
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ”ஓர் உம்ரா செய்வது மறு உம்ரா வரையிலுள்ள பாவங்களின் பரிகாரமாகும். ஏற்றுக் கொள்ளப்பட்ட ஹஜ்ஜுக்கு, சொர்க்கத்தைத் தவிர வேறு கூலியில்லை.” என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.ஷஹீஹ் புகாரி..1773,,,,
 
இப்போது
உம்ராவின் வணக்க வழிபாடுகளை ஒருமுறை பார்ப்போம்.
1. குளித்தல்.
2. அனுமதிக்கப்பட்ட ஆடையை அணிந்து கொள்ளுதல்.
3. தவாஃபை துவங்கும் வரை தல்பியா கூறுதல்.
4. ஹிஜ்ர் உட்பட ஏழு முறை கஅபாவில் தவாஃப் செய்தல்.
5. மகாமு இப்ராஹீமில் இரு ரக்அத்துக்கள் தொழுதல்.
6. ஸஃபா, மர்வாவுக்கு இடையில் ஸஃயீ செய்தல்
7. தலை முடியைக் கத்தரித்துக் கொள்ளுதல்.
மேற்கண்ட வணக்கங்களைச் செய்து விட்டால் உம்ரா முடிந்து விடுகின்றது.
உம்ராவில் இடம்பெற்ற இந்த வணக்கங்களில் 1. இஹ்ராம், 2.கஅபாவை தவாஃப் செய்தல், 3.ஸஃபா, மர்வாவுக்கிடையில் ஸஃயீ செய்தல் ஆகியவை இல்லையெனில் உம்ரா இல்லை என்றாகிவிடும்.....
இஹ்ராம்
"இஹ்ராம்' என்பது குறிப்பிட்ட சில வார்த்தைகளைக் கூறுவதாகும். அப்போது குறிப்பிட்ட வகையில் உடையணிந்திருக்க வேண்டும்
உம்ராவை மட்டும் செய்ய நாடினால் "லப்பைக்க உம்ரதன்'' என்று
கூறுவதே இஹ்ராம் ஆகும்...
இஹ்ராமில் ஆண்களுக்கு மட்டும் தடுக்கப்பட்டவை 1. தலையை மறைக்கக் கூடாது 2. தையல் ஆடை அணியக் கூடாது.
"இஹ்ராம் கட்டியவர் எதை அணியலாம்?'' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள் "இஹ்ராம் கட்டியவர் சட்டையையோ, தலைப் பாகையையோ,தொப்பியையோ, கால் சட்டையையோ அணிய வேண்டாம். குங்குமச்சாயம், வர்ஸ் (எனும் மஞ்சள்) சாயம் தோய்க்கப்பட்ட ஆடைகளையும் அணிய வேண்டாம். செருப்பு கிடைக்காவிட்டால் தவிர காலுறைகளையும் அணிய வேண்டாம். அவ்வாறு காலுறைகளை அணியும் போது கரண்டைக்குக் கீழே இருக்குமாறு மேற்பகுதியை வெட்டி விடுங்கள்'' என்று விடையளித்தார்கள்.(அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி),நூல்: புகாரி 134, 366, 1542, 1842, 5794)....
பெண்களுக்கு மட்டும் தடையானவை இஹ்ராம் கட்டிய பெண் தனது முகத்தை மறைக்க வேண்டாம். கையுறைகளையும் அவள் பயன்படுத்த வேண்டாம்'' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.(அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி),நூல்: புகாரி 1838)
இவ்விரண்டும் பெண்களுக்கு மட்டும் தடுக்கப்பட்டவையாகும்.....
இஹ்ராம் கட்ட வேண்டிய இடங்கள்...
ஒவ்வொரு பகுதியிலிருந்தும் வரக்கூடியவர்களுக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குறிப்பிட்ட இடங்களை இஹ்ராம் கட்டுவதற்காக நிர்ணயம் செய்துள்ளனர். அந்த இடங்களை அடைந்ததும் இஹ்ராம் கட்ட வேண்டும்.
மதீனா வாசிகளுக்கு துல்ஹுலைஃபாஎன்ற இடத்தையும், ஷாம் (சிரியா) வாசிகளுக்கு ஜுஹ்ஃபாஎன்ற இடத்தையும், நஜ்துவாசிகளுக்கு கர்னுல் மனாஸில்என்ற இடத்தையும், யமன்வாசிகளுக்கு யலம்லம்(இப்போதைய ஸஃதியா) என்ற இடத்தையும் இஹ்ராம் கட்டும் இடங்களாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நிர்ணயம் செய்தார்கள். இந்த எல்லைகள் இந்த இடங்களில் உள்ளவர்களுக்கும், இந்த இடங்களில் வசிக்காமல் இந்த இடங்கள் வழியாக ஹஜ், உம்ராவை நாடி வரக்கூடியவர்களுக்கும் இஹ்ராம் கட்டும் இடங்களாகும். இந்த எல்லைகளுக்கு உட்பட்டு வசிப்பவர்களுக்கு அவர்கள் வசிக்கும் இடமே எல்லையாகும். மக்காவாசிகள் மக்காவிலேயே இஹ்ராம் கட்ட வேண்டும்எனவும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்: புகாரி 1524, 1526, 1529, 1530, 1845.
இந்தியாவிலிருந்து செல்பவர்கள் யலம்லம்வழியாகச் செல்வதால் அங்கே இஹ்ராம் கட்ட வேண்டும். ஆடை அணிவதற்குப் பெயர் இஹ்ராம் அல்ல என்பதை நாம் குறிப்பிட்டுள்ளோம். விமானம், கப்பல், போன்றவற்றில் புறப்படுபவர்கள் முன்பே ஆடையை அணிந்து விட்டாலும், அந்த இடத்தை அடையும் போது தல்பியா கூறி இஹ்ராம் கட்ட வேண்டும்.....
யலம்லம்என்பது மக்காவுக்கு வடக்கே உள்ள ஒரு மலையாகும். இது மக்காவிலிருந்து 54 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது....
மக்கா நகரின் புனிதம்
மக்கா நகரை இறைவன் புனித பூமியாக ஆக்கியிருக்கிறான். அதன் புனிதம் கெடாத வகையில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இந்தப் புனிதத் தன்மை மக்கா நகருக்கு மட்டுமின்றி அதைச் சுற்றியுள்ள ஹரம் எல்லை முழுவதற்கும் பொதுவானதாகும்.
அல்லாஹ் மக்கா நகரைப் புனித பூமியாக்கியிருக்கிறான். மனிதர்கள் அதைப் புனிதமானதாக ஆக்கவில்லை. அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பக்கூடிய எவருக்கும் அங்கே இரத்தத்தை ஓட்டுவதும், அங்குள்ள மரங்களை வெட்டுவதும் ஹலால் இல்லைஎன்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.(அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) ,நூல்: புகாரி 104, 1832, 4295)....
இஹ்ராமிற்குப் பின் தடுக்கப்பட்ட காரியங்கள்
ஆண்களுக்கும் பெண்களுக்கும் பொதுவான தடைகள்
1. தலை மற்றும் உடலில் உள்ள முடிகளைக் களையக் கூடாது 2. நகங்களை வெட்டக் கூடாது. 3. நறுமணம் பூசக் கூடாது 4. திருமண ஒப்பந்தம் செய்யக் கூடாது. 5. உடலுறவு கொள்ளக் கூடாது. 6. ஆசையுடன் தொடுதல், கட்டியணைத்தல், முத்தமிடுதல் போன்றவை கூடாது. 7. வேட்டையாடுதல் கூடாது....
தல்பியா கூறுதல்
அதன் பின்னர் மக்காவில் ஹரமை அடைகின்ற வரை தல்பியா சொல்ல வேண்டும்.
لَبَّيْكَ اَللهُمَّ لَبَّيْكَ، لَبَّيْكَ لآ شَرِيْكَ لَكَ لَبَّيْكَ، إِنَّ الحَمْدَ وَالنِّعْمَةَ لَكَ وَالْمُلْكَ لآ شَرِيْكَ لَكَ
"லப்பைக், அல்லாஹும்ம லப்பைக், லப்பைக் லாஷரீக லக லப்பைக், இன்னல் ஹம்த வன்னிஃமத லக வல்முல்க, லாஷரீக லக'' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(பொருள் : இதோ, உன் அழைப்பை ஏற்று வந்து விட்டேன்! இறைவா! உனக்கே நான் கீழ்ப்படிகிறேன்! இணையில்லாதோனே! உனக்கே நான் கீழ்ப்படிகிறேன்! புகழும், அருட்கொடையும், ஆட்சியும் உனக்கே உரியன! உனக்கு இணையானவர் எவருமில்லை.)
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
நூல்: புகாரி 1549, 5915
திக்ருகள், துஆக்கள் ஆகியவற்றை உரத்த குரலில் கூறுவது திருக்குர்ஆனிலும், ஹதீஸ்களிலும் தடை செய்யப்பட்டுள்ளது.ஆனாலும், தல்பியாவை மட்டும் உரத்த குரலில் சொல்லுமாறு ஹதீஸ்கள் வலியுறுத்துகின்றன.
என்னிடத்தில் ஜிப்ரீல் (அலை) அவர்கள் வந்து இஹ்ராமின் போதும், தல்பியாவின் போதும் என் தோழர்கள் சப்தத்தை உயர்த்த வேண்டும்என்று கட்டளையிட்டார்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: ஸாயிப் பின் கல்லாத் (ரலி) ,நூல்கள்: ஹாகிம், பைஹகீ)
ஹரமை அடைந்த பின் தல்பியாவை நிறுத்தி விட்டு, தவாஃபுல் குதூம் என்ற உம்ராவுக்கான தவாஃப் செய்ய வேண்டும்.....
தவாஃபுல் குதூம்
"குதூம்' என்றால் வருகை தருவது என்று பொருள். மக்காவுக்கு வருகை தந்தவுடன் செய்யப்படுவதால் இதற்கு "தவாஃப் அல்குதூம்' என்று கூறப்படுகிறது.
இந்த நாளில் தான் "தவாஃப் அல்குதூம்' செய்ய வேண்டும் என்று வரையறை ஏதும் கிடையாது. ஒருவர் இஹ்ராம் கட்டி எப்போது மக்காவில் பிரவேசிக்கிறாரோ அப்போது இதைச் செய்ய வேண்டும்....
கஃபா ஆலயத்தை ஏழு தடவை சுற்றுவது ஒரு தவாஃப் ஆகும்.
தவாஃபுக்காக ஹரமுக்குள் சென்றதும் ஹஜ்ருல் அஸ்வதை முத்தமிட வேண்டும். ஹஜ்ருல் அஸ்வத் அமைந்துள்ள அந்த மூலையிலிருந்து தவாஃபைத் துவக்க வேண்டும்.
கஅபாவைச் சுற்றும் போது ஹிஜ்ர் என்ற பகுதியையும் சேர்த்தே சுற்ற வேண்டும். ஒவ்வொரு சுற்று முடியும் போதும் ஹஜ்ருல் அஸ்வதை முத்தமிட வேண்டும். முடிந்தால் முத்தமிட வேண்டும்; முடியாவிட்டால் கையால் தொட்டு முத்தமிட வேண்டும்; அதற்கும் இயலாவிட்டால் சைகையால் முத்தமிட வேண்டும்.
முதல் மூன்று சுற்றுக்களின் போது விரைந்து செல்ல வேண்டும்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஹஜருல் அஸ்வதைத் தொட்டு முத்தமிட்டதை நான் பார்த்துள்ளேன்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
நூல்: புகாரி 1611
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒட்டகத்தின் மீது அமர்ந்து தவாஃப் செய்தார்கள். (ஹஜருல் அஸ்வத் அமைந்த) மூலையை அடைந்தவுடன் அதை நோக்கி சைகை செய்தார்கள். தக்பீரும் கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்: புகாரி 1612, 1613, 1632, 5293
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் "தவாஃப் அல்குதூம்' செய்யும் போது மட்டும் முதல் மூன்று சுற்றுக்கள் ஓடியும் நான்கு சுற்றுக்கள் நடந்தும் தவாஃப் செய்தார்கள்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
நூல்: புகாரி 1644, 1617....
ருக்னுல் யமானி
கஅபாவின் இரண்டு மூலைகளில் ஒரு மூலையில் ஹஜருல் அஸ்வத் பதிக்கப்பட்டுள்ளது. மற்றொரு மூலை ருக்னுல் யமானி என்று கூறப் படுகின்றது. இந்த ருக்னுல் யமானி என்ற மூலையையும் தொடுவது நபி வழியாகும்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், நான்கு மூலைகளில் "யமானி' எனப்படும் இரண்டு மூலைகளைத் தவிர மற்ற இரண்டு மூலைகளைத் தொட்டு நான் பார்த்ததில்லை.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
நூல்: புகாரி 166, 1609....
ருக்னுல் யமானிக்கும், ஹஜருல் அஸ்வதுக்கும் இடையே "ரப்பனா ஆதினா ஃபித்துன்யா ஹஸனதன் வஃபில் ஆகிரதி ஹஸனதன் வகினா அதாபன்னார்'' என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியதை நான் செவியுற்றுள்ளேன்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் ஸாயிப்(ரலி)
நூல்கள்: அஹ்மத் 14851, அபூதாவூத் 1616....
மகாமு இப்ராஹீமில் தொழுதல்..
இவ்வாறு ஏழு சுற்றுக்கள் முடிந்த பின் மகாமு இப்ராஹீம் அமைந்திருக்கும் இடத்தில் இரண்டு ரக்அத்துக்கள் தொழ வேண்டும். (முஸ்லிம் 2137)...
ஸஃபா, மர்வாவில் ஸஃயீ செய்தல்
"தவாஃபுல் குதூம்' எனும் இந்த தவாஃபை நிறைவேற்றி, இரண்டு ரத்அத்கள் தொழுது விட்டு ஸஃபா,மர்வா எனும் மலைகளுக்கிடையே ஓட வேண்டும். இதற்கு ஸஃயீ என்று பெயர்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது தவாஃபை முடித்து இரண்டு ரக்அத்கள் தொழுத பிறகு "ஸஃபா' "மர்வா'வுக்கு இடையே ஓடினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
நூல்: புகாரி 1616, 1624, 1646, 1647, 1767, 1794, 4188...
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஸஃபாவை அடைந்ததும் "ஸஃபாவும் மர்வாவும் அல்லாஹ்வின் சின்னங்களாகும்''என்ற (2:158) வசனத்தை ஓதினார்கள். "அல்லாஹ் எதை முதலில் கூறியுள்ளானோ அங்கிருந்தே ஆரம்பிப்பீராக'' என்று கூறிவிட்டு ஸஃபாவிலிருந்து அவர்கள் ஆரம்பித்தார்கள். அதன் மேல் ஏறி கஃபாவைப் பார்த்தார்கள். கிப்லாவை முன்னோக்கி "லாயிலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லாஷரீகலஹு, லஹுல் முல்கு வலஹுல் ஹம்து வஹுவ அலாகுல்லி ஷையின் கதீர். லாயிலாஹ இல்லல்லாஹு வஹ்தா, அன்ஜஸ வஃதா, வநஸர அப்தா, லஹஸமல் அஹ்ஸாப வஹ்தா'' என்று கூறி இறைவனை பெருமைப்படுத்தினார்கள். இது போல் மூன்று தடவை கூறினார்கள். அவற்றுக்கிடையே துஆ செய்தார்கள். பின்னர் மர்வாவை நோக்கி இறங்கினார்கள். அவர்களின் பாதங்கள் நேரானதும் (சம தரைக்கு வந்ததும்) "பதனுல் வாதீ'என்ற இடத்தில் ஓடினார்கள். (அங்கிருந்து) மர்வாவுக்கு வரும் வரை நடந்தார்கள். ஸஃபாவில் செய்தது போலவே மர்வாவிலும் செய்தார்கள்.
அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)
நூல்கள்: முஸ்லிம் 2137....
ஸஃபாவில் செய்தது போலவே மர்வாவிலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் செய்துள்ளதால் அங்கேயும் மேற்கண்ட திக்ருகள் மற்றும் துஆக்களைச் செய்ய வேண்டும்.
ஸஃபாவிலிருந்து மர்வாவுக்கு வருவது ஒன்று, மர்வாவிலிருந்து ஸஃபாவுக்கு வருவது மற்றொன்று என்ற கணக்கில் ஏழு தடவை சுற்ற வேண்டும்.
"நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஏழு தடவை ஸஃயு செய்தார்கள். ஸஃபாவில் துவக்கி மர்வாவில் முடித்தார்கள்.
அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)
நூல்: முஸ்லிம் 2137....
நபி (ஸல்) அவர்கள் மர்வாவில் முடித்ததிலிருந்து "ஸஃபாவிலிருந்து மர்வா வந்தால் ஒரு தடவை என்றும்,மர்வாவிலிருந்து ஸஃபாவுக்கு வந்தால் இரண்டு தடவை'' என்றும் விளங்கலாம்....
முடியைக் கத்தரித்தல்...
"தலையை மழித்துக் கொள்வது பெண்களுக்குக் கிடையாது. (சிறிதளவு மயிரைக்) குறைத்துக் கொள்வதே அவர்களுக்கு உண்டு''என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்....
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்: அபூதாவூத் 1694...
இத்துடன் உம்ரா நிறைவேறி விடுகின்றது. ஆண்களாக இருந்தால் தலையை மழித்தல்,பெண்களாக இருந்தால் தலை முடியைக் கத்தரித்தல் மூலம் உம்ரா முடிவுக்கு வருகின்றது....


முல்லைக்கலி- சோழன் நல்லுருத்திரன்

யாருக்கும் தெரியாமல் ஒருவன் குடித்த கடுங் கள் உடம்பில்
பரவிப் பிறர் நடுங்க வெளிப்பட்டு
விடுவது போல நான் அந்த ஆயனோடு
கொண்டிருந்த நட்பு தெரிந்துவிட்டது தோழி!
ஆடுகள் மேய்த்துவந்த அந்த ஆயர் மகன் தன்
தலையில் சூடியிருந்த முல்லை மாலையில்
ஒரு கண்ணியை நான் சூடிக்கொண்டேன்.
தலைக்கு வெண்ணெய் தடவச் செவிலி
கூந்தலை விரித்தபோது, பெற்றோர் அருகிருக்கச்
செவிலியின் முன்னே விழுந்தது அந்தப் பூ.
அதைப் பார்த்த தாய் என்ன என்று கேட்கவில்லை.
கோபப்படவுமில்லை, தீயைத் தொட்டவள்
போலக் கையை உதறிக்கொண்டே போய்விட்டாள்.
நானும் பக்கத்தில் இருக்கும் கானகத்தில்
ஒளிந்துகொள்ளப் போய்விட்டேன்.’
*********************
தோழி! நாம், காணாமை உண்ட கடும் கள்ளை, மெய் கூர நாணாது சென்று நடுங்க உரைத்தாங்குக் கரந்ததூஉம் கையொடு கோள் பட்டாம், கண்டாய்; நம் புல் இனத்து ஆயர் மகன் சூடி வந்தது ஓர் முல்லை ஒரு காழும் கண்ணியும், மெல்லியால்! கூந்தலுள் பெய்து முடித்தேன் மன்; தோழி! யாய் வெண்ணெய் உரைஇ விரித்த கதுப்போடே, அன்னையும் அத்தனும் இல்லரா, யாய் நாண, அன்னை முன் வீழ்ந்தன்று அப் பூ. அதனை வினவலும் செய்யாள்; சினவலும் செய்யாள்; நெருப்புக் கை தொட்டவர் போல விதிர்த்திட்டு, நீங்கிப்புறங்கடை போயினாள். யானும், என் சாந்து உளர் கூழை முடியா, நிலம் தாழ்ந்த பூம் கரை நீலம் தழீஇத், தளர்பு ஒல்கிப், பாங்கரும் கானத்து ஒளித்தேன். - அதற்கு, எல்லா ஈங்கு எவன் அஞ்சுவது? அஞ்சல் - அவன் கண்ணி நீ புனைந்தாய் ஆயின், நமரும் அவன் கண் அடை சூழ்ந்தார் நின்னை. அகல் கண் வரைப்பில் மணல் தாழப் பெய்து, திரைப்பில் வதுவையும் ஈங்கே அயர்ப; அதுவே யாம் அல்கலும் சூழ்ந்த வினை!
-
- விளக்க உரை - ஞானக்கூத்தன்

Friday, February 1, 2019

சித்தர் என்றால் என்ன ,ஏன் ஒரு சிலரை மட்டும் சித்தர் என்கிறார்கள்?


இவர்கள் யாரை வழிபட்டார்கள்?
இவர்கள் சிவனை வழிபட்டாரா அல்லது விஷ்னுவை வழிபட்டார்களா?
இன்னும் பல கேள்விகள் பல பேரிடம்
சித்தர் என்றால் சித்தம்
சித்தம் என்றால் அறிவு
சித்தர்கள் என்றால் அறிவு தெளிந்தோர் என்று பொருள்
இவர்கள் யாரிடமும் அடிமையாகுவும் இல்லை இவர்கள் யாரையும் அடிமையாகுவும் இல்லை
இவர்கள் விதிமுறைகளுக்கு அப்பால் பட்டவர்கள்
இவர்களுக்கு நேரம் கிடையாது தீட்டு கிடையாது சாதிகள் கிடையாது சமையங்கள் கிடையாது இவர்கள் கோட்பாடு ஒன்று மட்டுமே
இறைவன் ஒருவனே
அவர் ஜோதி வடிவாக உள்ளவர்
அவர் தன்னுள்ளே உள்ளே உள்ளார் என்பதை உணர்ந்தவர்கள்
அவரை அடையக்கூடிய வழி அன்பு மட்டுமே என உணர்ந்தவர்கள்
சித்தர் என்ற வார்த்தை சித்தியில் இருந்து வந்தது.

ஆன்மீகத்திலும்,அறிவியல் சாதனைகளிலும்
முழுமை பெற்ற நிலை தான் சித்தி.சித்தி பெற்றவர் சித்தர்.

“தத்துவங்கள் தொன்னுற்று ஆறும் தாண்டியவர்கள் சித்தர்”
என்பார் திருமூலர்.
சித்தர்களை “அறிவன்” என்றும் “நிறைமொழி மாந்தர்”
என்றும் குறிப்பிடும் தொல்காப்பியம்.

”அவிர்சடை முனிவர்”என்கிறது புறநானூறு.
அழியக்கூடிய உடம்பின் அசுத்தமான மூலகங்களை
இரசவாதத்தின் மூலம் தூய்மைப்படுத்திக் கொண்டவர்கள்
-சித்தர்கள்.பொருளை சக்தியாக்குகிற வித்தை.
அதன் மூலம் சுத்த தேகம் பெற்றனர். மீண்டும்
அதனை மாற்றி பிரணவ தேகம் ஆக்கினர்.
அதனுடைய அடுத்த கட்டம் உருமாற்றும் ஞான வடிவு.
சித்தர்களின் தேகம் நுட்பத்திலும் அதி நுட்பம்,
கடினத்துவத்திலும் அப்படித்தான்.அவர்கள் தங்கள்
மனம் போல் உருமாறுவர். நோய்களூக்கும்
மரணத்திற்கும் அப்பாற்பட்டது அவர்களுடைய
அமைப்பு.மரணத்தை வெல்வது சித்தர் பண்பாடு.
சித்தர்களிடம் அனுபவம்,ஆற்றல் எல்லாவற்றுக்கும்
மேலாக இறையருள் இருந்தது.உயர்ந்த சிந்தனை
உடையவர்கள் அவர்கள்.எளிய வாழ்க்கை முறை அவர்களுடையது.அதனால்தான் அவர்களூடைய வாக்கு
பலித்தது.காரிய சித்தியில் அவர்களால் பெரும் புகழ்
பெற முடிந்தது.

சித்தர்களின் வலிமை தூய்மையின் வலிமை.
அவர்களின் மன உறுதி ஒருமுகப்பட்டது.
வார்த்தைகள் சக்தி மிக்கவை.சித்தர்கள் இன்றும்
நம்மிடையே இல்லாமல் இல்லை.நாம்தான் அவர்களை
புரிந்து கொள்ள தவறி விடுகிறோம். பார்த்தால
பிச்சைகாரர்கள் போலவும் பித்தர்கள் போலவும்
தோற்றமளித்தாலும்-அவர்கள் தேகத்தில் தனி தேஜஸ்
கண்களில் சக்தி(காந்தம்) ஒளி தெரியும்.

தேகத்தில் நறுமண வாடை மிதக்கும்.அவர்களை
உணர்ந்து கொள்ள இறையருள் வேண்டும்.
அவர்களை தரிசிக்கவும்,உணரவும்
பாக்கியம் செய்திருந்தால் தான் அது வாய்க்கும்.