Search This Blog

Tuesday, January 3, 2012

உட்கார்ந்தபடியே நீண்டநேரம் வேலை செய்யும் இளைஞர்களை தாக்கும் அபாயம் ?



ஆழ் குருதி நாள ரத்தக்கட்டு என்று அழைக்கப்படும் DVT ( Deep Vein Thrombosis ) என்பது தொடை அல்லது கெண்டை சதை பகுதியில் உள்ள ரத்த நாளத்தில் ஏற்படும் ரத்தக்கட்டையே குறிக்கும். இந்த ரத்தக் கட்டு அந்த நாளத்தில் ரத்த ஓட்டத்தை முழுதுமோ அல்லது பகுதியாகவோ அடைந்துவிடும்.


இது கால் கீழ் பகுதி மற்றும் தொடை பகுதியிலேயே ஏற்படுகிறது. அப்பகுதியில் உள்ள பெரிய குருதி நாளங்களிலும் ரத்தக் கட்டு ஏற்படுவதில் இது பங்களிக்கிறது. ரத்த ஓட்டத்தை இடையூறு செய்து அல்லது ரத்தக்கட்டு ரத்த ஓட்டத்துடனேயே சென்று ரத்தக் குழாய் அடைப்பை ஏற்படுத்தும் அபாயம் மிக்கது.



நீண்ட நேரம் அசையாமல் உட்காருவது, கை கால்களை அசைக்காமல் நீண்ட நேர படுக்கை ஓய்வு, விமானம், கார்களில் நீண்ட தூரம் செல்வது, சமீப அறுவை சிகிச்சை அல்லது காயம் (குறிப்பாக இடுப்பு, முழங்கால் அல்லது மகப்பேறு அறுவை சிகிச்சை) எலும்பு முறிவு, ஈஸ்ட்ரோஜென் மற்றும் கருத்தடை மாத்திரைகள் ஆகியவை ஆழ் குருதி நாள ரத்தக்கட்டு ஏற்படுவதற்கு காரணமாகின்றன. 

வயதானவர்களுக்கும், அதிக எடை உள்ளவர்களுக்கும் இது பொதுவான நோயாக இருப்பினும் நவீன யுகத்தில் உட்கார்ந்தபடியே நீண்டநேரம் வேலை செய்வதால் இளைஞர்களையும், இது பாதிக்கக் கூடிய வாய்ப்புகள் பெருகி வருகின்றன.


நோய் அறிகுறிகள் :

கால்வலி அல்லது ஒரு கால் நொய்மையாக இருத்தல்.

ஒரு காலில் வீக்கம் (Oedema) ஏற்படுதல்.

உஷ்ணம் அதிகரிப்பு.

சரும நிறம் மாறுதல், சிகப்புத் தன்மை.

DVT யால் ஏற்படும் நுரையீரல் குருதிக் குழாய் அடைப்பு மிகவும் அபாயகரமானது. குருதி நாளச் சுவற்றிலிருந்து ரத்தக்கட்டு வெளியேறி நுரையீரலுக்குச் சென்று அதன் நாளத்தை அடைக்கும். இந்த நுரையீரல் ரத்தக்குழாய் அடைப்பு உயிருக்கு ஆபத்து விளைவிப்பது, உடனடியாக மருத்துவ சிகிச்சை தேவைப்படுவது. இந்த ரத்தக்கட்டு பிளசன்டாவிலுள்ள ரத்தக் குழாயில் தங்கினால் கருப்பையில் உள்ள பிண்டத்திற்கு பிராணவாயு குறைவாகச் செல்லும். இதனால் குழந்தை பிறப்பு மிகுந்த பிரச்சினைக்குள்ளாகும்.

குருதிநாள ரத்தக்கட்டு இருக்கிறது என்று ஒரு மருத்துவர் சந்தேகப்பட்டால் முதலில் முழு உடல் பரிசோதனை மேற்கொள்வார். நோயாளியின் மருத்துவ வரலாற்றை கேட்டறிவார். காலை மேலே தூக்கும்போது சுரிலென வலி ஏற்பட்டால் அந்தப் பகுதியில் ரத்தக்கட்டு இருப்பதற்கான அறிகுறி உள்ளது. மேலும் இதனைக் கண்டறிய அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன், கால் குருதி நாளத்தில் "டை" ஊசி மருந்து மூலம் செலுத்தப்பட்டு காலை எக்ஸ் ரே எடுக்கப்படுவதும் உண்டு. மற்றும் உடலின் ரத்தக்கட்டு அமைப்புகளை அறியும் பொதுவான சில பரிசோதனைகளும் மேற்கொள்ளப்படும்.
சிகிச்சை:

DAT-க்கு பொதுவாக நுரையீரல் ரத்தக்குழாய் அடைப்பைத் தடுக்க சிகிச்சை அளிக்கப்படும். மேலும் அடிக்கடி இது ஏற்படாமல் இருக்கவும் மருத்துவம் செய்து கொள்வது அவசியம்.

இதற்கு பொதுவாக அலோபதியில் ஹெபாரின் என்ற ஊசி மருந்து பரவலாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது நரம்பு வழியாக ஏற்றப்படுகிறது. இது ரத்தக்கட்டு ஏற்படாமல் தடுக்கிறது.

இதனுடன் வாய் வழி மருந்தான வார்ஃபாரின் அளிக்கப்படுகிறது. வார்ஃபாரின் 6 மாதங்களுக்கு கொடுக்கப்படும். ஹெபாரின் சிகிச்சை தொடங்காமல் வார்ஃபாரின் மட்டும் கொடுக்கக் கூடாது.

ஆழ் குருதி நாள ரத்தக்கட்டை முன்னதாகவே இனங்கண்டு முறையாக சிகிச்சையளித்தால் ஒன்றுமில்லை, கவனக் குறைவாக சிகிச்சை எதுவும் எடுக்காமல் இருந்தோமானால் இதனால் ஏற்படும் ஆபத்துகள் உயிருக்கு சேதம் விளைவிக்கும் அளவுக்கு அபாயமானது என்பதை நினைவில் கொள்வது நல்லது.
இதிலிருந்து தற்காத்துக் கொள்ள சில வழிகள் :

1. காலின் வழியாக செல்லும் ரத்த ஓட்டத்தை தடை செய்யும் விதத்தில் சாக்சுகளை இறுக்கமாக அணிவthaith தவிர்க்கவும்.

2. உட்கார்ந்திருக்கும்போது அல்லது படுத்திருக்கும்போது கால் மேல் கால் போடுவதை தவிர்க்கவும்.

3. ஒரே நிலையில் நீண்டநேரம் உட்காருவது, நிற்பது ஆகியவற்றை தவிர்க்க வேண்டும்.

4. ஓய்வு நிலையிலும் கால்களை அசைத்துக் கொண்டிருங்கள். கால் விரல் மற்றும் முழங்கால்களை மடக்கி நீட்டியபடி இருங்கள்.

5. விமானத்தில் செல்கையில் நிறைய தண்ணீர் குடியுங்கள். உடல் நீர் வற்றாமல் பாதுகாப்பது அவசியம்.

No comments:

Post a Comment