Search This Blog

Showing posts with label Tamil Cinema. Show all posts
Showing posts with label Tamil Cinema. Show all posts

Friday, December 8, 2017

இசைபுயலும், நடனபுயலும் ...

Vijay Mahindran
ஏ.ஆர்.ரஹ்மான் பல துள்ளல் இசைப் பாடல்களுக்கு இசையமைத்திருந்தாலும், முதன்முதலில் இந்தியா முழுவதும் கவனிக்கப்பட்ட பாட்டு ஜென்டில்மேன் பட...த்தில் வரும் 'சிக்குபுக்கு ரயிலே'. சுரேஷ் பீட்டர்ஸ் பாடிய முதல் பாட்டு.
அதுவரை கேட்காத இசை. ஆங்கிலப் பாடல்களில் மட்டும் கேட்டுள்ள ஒலிப்பதிவுத் தரம். அருமையான டிஜிட்டல் ரிதம். கவிஞர் வாலியின் இளைஞர்களை கவரும் வரிகள். இப்படிப் பல சிறப்புகளுடன் கேசட்டில் கேட்டவர்களை மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டியது. படம் வருவதற்கு முன்னரே பாடலைக் கேட்டு ஆடியவர்கள் ஏராளம். இந்தப் பாடலை எப்படி படமாக்கப் போகிறார்கள்? யார் இந்தப் பாடலுக்கு நடனமாடப் போகிறார்கள்? என்ற பேச்சும் இருந்துகொண்டே இருந்தது. ஜென்டில்மேன் படம் வெளிவந்த அன்று அதற்கான விடை கிடைத்தது. அதற்கு நடனப் புயல் பிரபுதேவா நடனமாடியிருந்தார்.
இயக்குநர் ஷங்கர் அற்புதமாக அந்தப் பாடலை படமாக்கியிருந்தார். ரயிலின் தடதடப்புக்கு நடுவே பிரபுதேவாவின் ஆட்டம் அந்தப் பாடலை எல்லா திரையரங்குகளிலும் ஒன்ஸ்மோர் கேட்கவைத்தது. சிக்குபுக்கு ரயிலே பாடல் தமிழ்நாட்டைத் தாண்டி இந்தியா முழுவதும் பிரபலமானது. பிரபுதேவாவின் நடனமும் ரஹ்மானின் இசையும் வீடுகள், கடைகள், ஷாப்பிங் மால்கள் என எல்லா இடத்திலும் பட்டையைக் கிளப்பின. பிரபுதேவா அதற்குமுன்னர் தேவாவின் இசையில் சூரியன் படத்தில் 'லாலாக்கு டோல் டப்பிமா', இளையராஜா இசையில் வால்டர் வெற்றிவேல் படத்தில் 'சின்ன ராசாவே' ஆகிய பாடல்களுக்கு நடனமாடி புகழ்பெற்றிருந்தார். 'இதயம்' படத்தில் 'ஏப்ரல் மேயிலே' பாடலுக்கும் அவரது நடனம் தனியாக கவனிக்கப்பட்டது. பிரபுதேவா மேற்கத்திய பாப் பாடகர் மைக்கேல் ஜாக்சனால் கவரப்பட்டவர். அவரைப்போலவே கண்ணாடிமுன் நின்று ஆடிப் பழகியதாக அவரே பல பேட்டிகளில் சொல்லியுள்ளார். ஆனால் ஜாக்சனின் நடனம் மேற்கத்திய இசையின் பீட்-களுக்கு தகுந்தவாறு துள்ளலாக இருக்கும்.
அப்படி ஆட வேண்டும் என விரும்பிய பிரபுதேவாவுக்கு அத்தகைய பீட்ஸ் ரஹ்மான் இசையில்தான் கிடைத்தது. தனது வகை நடனத்தை சுதந்திரமாக ஆட ரஹ்மானின் இசை அவருக்கு உதவியது. தாளத்தை அடிப்படையாகக் கொண்ட பாடல்களை கம்போஸ் செய்வதில் ரஹ்மான் சிறந்த வல்லுநர். ரஹ்மானின் மிகப்பெரிய பலம் அவரது ரிதம்-சென்ஸ் என்பதை மணிரத்னம் ஒருமுறை குறிப்பிட்டு இருக்கிறார். அவருக்கு பக்கபலமாக டிரம்ஸ் சிவமணியும் ஆரம்ப காலத்தில் இருந்தே ரஹ்மானுடன் வாசித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.
பின்னர், ரிதம் புரோகிராமராக இசையமைப்பாளர் ரஞ்சித் பரோட்டும் பல படங்களில் பணியாற்றியிருக்கிறார்.
ரஞ்சித் பரோட்தான் பிரபுதேவா நடித்த இன்றும் நினைவில் உள்ள சில பாடல்களைக் கொண்ட விஐபி படத்துக்கு இசையமைத்தவர். இந்தியிலும் பல படங்கள் இசையமைத்துள்ள ரஞ்சித், ரஹ்மானுக்கு இப்போதும் வாசித்து வருகிறார். இந்தப் படத்தின் பாடல்கள் கொஞ்சம் ரஹ்மான் ஸ்டைலில் இருப்பதால் பலரும் விஐபி-க்கு ரஹ்மான் இசை என்றே நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். தனது படங்களின் தாளக்கட்டுகள் புதிதாக அமைய வேண்டும் என்பதில் நிறைய மெனக்கெடுவார் ரஹ்மான். அவர் இசையமைக்கும்போது நோட்ஸ் கொடுப்பார். சில இடங்களில் இந்த விதமான இசைதான் வேண்டும் என்பதை வாயிலே பாடிக் காட்டவும் செய்வார். ரஹ்மான் தவில் வித்வான் ஒருவருக்கு ரிதம் சொல்லும் வீடியோ யூடியூபில் இருக்கிறது. இந்த இடத்தில் இப்படி மாற்றிக்கொள்ளுங்கள் என வாயிலேயே தவில் இசையை சொல்லுகிறார். அதன்பிறகு, வித்வான் வேறு மாதிரி வாசிக்க ஆரம்பிக்கிறார். அதை ரிக்கார்ட் செய்து கொள்ளுகிறார். அந்தளவு தாளக்கட்டில் கவனமாக இருப்பதால்தான் அவரது துள்ளல் இசைப் பாடல்கள் பெரிய அளவில் ஹிட் ஆகின்றன.
அடுத்த படமான காதலன் படத்தில் பிரபுதேவாவை ஹீரோவாக ஷங்கர் அறிவித்ததும், இந்தப் படம் பெரிய அளவில் பாடல்களுக்கும் நடனத்துக்கும் முக்கியத்துவம் கொடுத்த படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. வழக்கம்போல, படத்தின் பாடல்கள் படம் வெளிவரும்முன்பே அதிரிபுதிரி ஹிட் ஆனது. ரஹ்மான் சுரேஷ் பீட்டர்ஸ், ஷாகுல் ஹமீது இவர்களுடன் இணைந்து பாடிய 'டேக் இட் ஈஸி ஊர்வசி' பாடலின் தாக்கம் கல்லூரி மாணவர்களிடையில் பெரிய அளவில் இருந்தது. கொண்டாட்டத்தை உருவாக்கிய அந்தப் பாடலின் ரிதமுக்கு பிரபுதேவா ஆடியிருந்த நடனமும் மிக பிரபலம். இசைப்புயலின் பாடலுக்கு நடனப்புயல் ஆடிய ஆட்டம் அருமையாக இருந்தது. காதலன் படத்தில் ’முக்காலா முக்காபுலா' பாடல் எட்டுத் திக்கும் ஹிட்டானது. அதற்கு பிரபுதேவா பாராட்டும்படி நடனம் அமைத்திருந்தார். அதிலும் பாடலின் இறுதியில் வரும் டிரம்ஸ் பீட்டுகளுக்கு தலை இல்லாத முண்டமாக பிரபுதேவா போட்ட ஆட்டம் அந்தப் பாடலை இந்தியா முழுவதும் பேசவைத்தது. பாராட்டப்பட்டது
இந்திப் படங்களில் நடன இயக்குநராக பணியாற்றும்படி பெரிய நடிகர்கள் பிரபுதேவாவை கூப்பிட்டது அப்போதுதான். தமிழ்ப் படங்களில் ஹீரோவாக நடித்துக்கொண்டே இந்தியில் பெரிய படங்களுக்கு நடன இயக்குநராகவும் பணியாற்றினார் பிரபுதேவா. அகில இந்திய அளவில் பிரபுதேவாவை கொண்டுபோய் நிறுத்தியதில் ரஹ்மான் இசைக்கு முக்கியப் பங்குண்டு என்றே சொல்லவேண்டும்.
பிரபுதேவாவும் ரஹ்மான் பாடல்களைப் படமாக்க கடுமையான உழைப்பைக் கொடுத்திருக்கிறார். அடுத்த படமான லவ் பேர்ட்ஸ் படத்தை பி.வாசு இயக்க, பிரபுதேவா-நக்மா-வடிவேல்-ரஹ்மான் எனக் காதலன் வெற்றிக் கூட்டணி மீண்டும் ஒன்று சேர்ந்தது. இந்தப் படத்திலும் பிரபுதேவாவின் நடனங்களுக்காக சிறப்பான இசையைக் கொடுத்திருப்பார். 'மலர்களே மலர்களே' மெல்லிசை பாடல்களுக்கு நடுவே துள்ளல் இசையை நுழைத்திருப்பார் ரஹ்மான். கமான் கமான் காமாட்சி, சம்பா சம்பா, நோ பிராப்ளம் என அனைத்துப் பாடல்களும் பிரபுதேவாவின் வித்தியாசமான நடனங்களுக்கு வழியமைத்தன. லவ் பேர்ட்ஸ் படம் பெரிய அளவில் ஹிட் ஆகாமல் போனாலும் அதன் பாடல்கள் இன்றளவும் மக்களால் கேட்கப்பட்டு வருகிறது. அதன்பிறகு, பெரிய பட்ஜெட்டில் பிரபுதேவாவை இரண்டு வேடங்களில் நடிக்கவைத்து உருவான படம்தான் மிஸ்டர் ரோமியோ. இந்தப் படத்தில் ஷில்பா ஷெட்டி, மதுபாலா பிரபுதேவாவுடன் போட்டி போட்டு நடனக் காட்சிகளில் நடனமாட முயன்று இருப்பார்கள்.
'ரோமியோ ஆட்டம் போட்டால்' பாடல் இன்றளவும் ரஹ்மானின் துள்ளல் இசைக்கு பாராட்டப்படுகிறது. மெல்லிசை, மோனலிசா, முத்து முத்து மனம் முத்தாடுது என தமிழில் இந்திப் பாடகி இலா அருண் பாடிய பாடல் என கலக்கல் ஆல்பமாகவே மிஸ்டர் ரோமியோ இருந்தாலும் பலவீனமான கதையால் பாக்ஸ் ஆபிசில் ஓடவில்லை. இதற்கு அடுத்த படம்தான் மின்சாரக் கனவு. ரஹ்மானின் நெடுநாள் நண்பரான ராஜீவ்மேனனுக்கு இசையமைத்த படம். பிரபுதேவா, அரவிந்த்சாமி, கஜோல் நடித்து ஏவிஎம் தயாரித்த இந்தப் படத்தில் காலத்தால் அழியாத நல்ல பாடல்களை ரஹ்மான் கொடுத்துள்ளார்.
வெண்ணிலவே... வெண்ணிலவே, ஊ... லலா லா, அன்பென்ற மழையிலே, ஸ்ட்ராபெர்ரி கண்ணே போன்ற பாடல்கள் இன்றும் கிளாசிக் அந்தஸ்தில் இருக்கின்றன. மின்சாரக் கனவு படத்துக்கு ரஹ்மானுக்கு சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருது கிடைத்தது. வெண்ணிலவே வெண்ணிலவே பாடலுக்கு நடனம் அமைந்ததற்கு சிறந்த நடன இயக்குனராக பிரபுதேவாவுக்கு தேசிய விருது கிடைத்தது. ’தங்கத்தாமரை மகளே’ பாடலை இந்தப் படத்தில் பாடியதற்காக எஸ்.பி.பாலசுப்ரமணியமும், ’ஊ... லலா லா’ பாடலைப் பாடியதற்காக சித்ராவும் தேசிய விருது பெற்றனர். பாடகர் உன்னி மேனனுக்கு இதே ’ஊ... லலா லா’ பாடலுக்கு தமிழ்நாடு அரசின் சிறந்த பின்னணி பாடகர் விருதும் கிடைத்தது. ரஹ்மானும், பிரபுதேவாவும் ஏக் சத்யம் என்ற பாடலை ஜெர்மனியில் மைக்கல் ஜாக்சனுடன் மேடையில் சேர்ந்து பாடி நடனமாடியதும் வரலாறு. இருவரின் கூட்டணியும் சிறப்பான வெற்றிக் கூட்டணியாக இந்திய திரையுலகில் இருந்தது.

Monday, December 4, 2017

கல்யாணசுந்தரம் - கண்ணதாசன்! இருவருக்கும் இடையில் இருந்த ஒற்றுமைகளும், வேற்றுமைகளும்


ஒற்றுமைகள்:- இருவருடைய தாயாரின் பெயர்களும் விசாலாட்சி அம்மையார்! இருவரது பெயர்களின் முதல் எழுத்து 'க!' இருவரும் சிற்றூர் மண்ணில் பூத்த செந்தமிழ்ப்பூக்கள்! இருவரும் நல்ல உயரமான தோற்றம் கொண்டவர்கள்! இருவரும் உயர்கல்வி கற்காதவர்கள்! (கண்ணதாசன் எட்டாம் வகுப்பு - கல்யாணசுந்தரம் மூன்றாம் வகுப்பு)
இருவரும் திராவிட உணர்வு உடைய தமிழ் அறிஞர்களை ஆசான்களாகக் கொண்டவர்கள்! (கல்யாணசுந்தரத்திற்கு 'பாவேந்தர்' பாரதிதாசனும், கண்ணதாசனுக்கு 'பன்மொழிப்புலவர்' கா.அப்பாதுரையாரும் ஆசான்களாக அமைந்தனர்!)
இருவரும் தொடக்கக் காலத்தில் பழுத்த நாத்திகர்களாக இருந்தவர்கள்! (கல்யாணசுந்தரம் கம்யூனிஸ்டு கட்சியையும், கண்ணதாசன் தி.க., தி.மு.கழகங்களையும் சார்ந்திருந்தனர்)
இருவரும் தம் வாழ்க்கைக்குத் திரைப்படத்துறையைத் தேர்ந்தெடுத்துக் கொண்டவர்கள்!
இருவருக்கும் முதன் முதலில் புகலிடமாகவும், புகழிடமாகவும் இருந்தது சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ்.
இருவருக்கும் பாட்டு சொல்லத்தான் வரும். பாட்டுப்பாட வராது. தப்பித்தவறிக்கூட பாடமாட்டார்கள். தனிமையில் அவர்கள் முணுமுணுத்துக்கூட நான் கேட்டதே இல்லை.
இருவருக்குமே கர்நாடக சங்கீதம், ராகங்கள், ஆலாபனைகள், ஆரோகணம், அவரோகணம் இந்தச் சங்கதிகள் எல்லாம் எதுவுமே தெரியாது. சுத்தம்!
இருவரும் ஏறிய அகலமான நெற்றியைக் கொண்டவர்கள்! இருவருமே கள்ளம் கபடம் அற்ற புறாவைப்போன்றவர்கள்! இருவருடைய அமைதியான முகங்களிலும் ஒருவிதமான 'வெகுளித்தனம்' விளையாடிக்கொண்டிருக்கும்!
இருவரும் அசைவ உணவுப் பிரியர்கள்! அதிலும் கல்யாணசுந்தரம் ஒரு முழுக்கோழி முட்டையை அப்படியே வாய்க்குள் வைத்து அதவித்தின்று விடுவார்! பொரித்த சிறுசிறு வடிவிலான காடை, கவுதாரி வகையறாக்களையும் அவ்வண்ணமே வாயில் வைத்து மென்று தின்று உள்ளே தள்ளுவார்.
இருவருமே பிறருக்கு உதவவேண்டும் என்ற இரக்க குணம் கொண்டவர்கள். இருவருக்கும் கோபம் வந்து நான் கண்டதே இல்லை. இருவருமே நல்ல நகைச்சுவை ரசனை உடையவர்கள்!
வேற்றுமைகள்:- கண்ணதாசன் கலர் கலராக அரைக்கைச்சட்டை அணிவார். தோளில் துண்டு போடமாட்டார்.
கல்யாணசுந்தரம் எப்பொழுதும் வெள்ளை நிற சட்டை அணிந்து அதன் மீது 'லினன்' துணியினாலான நீளமான கலர்த்துண்டை கழுத்தில் மாலைபோலப் போட்டு மார்புப் புறத்தில் இழுத்துத் தொங்க விட்டுக்கொள்வார்! (தமிழறிஞர் - கவிஞர் மாயூரம் முன்சீப் வேதநாயகம் பிள்ளைபோல)
கல்யாணசுந்தரம் அகலமான கருப்புக்கறை வேட்டியையும் கண்ணதாசன் சற்று மெல்லிய அல்லது கறை இல்லாத வேட்டியையும் விரும்பிக்கட்டுவார்கள்! கண்ணதாசனின் சட்டைப்பையில் பேனா, மணிபர்சு, ஒரே ஒரு ரூபாய் நோட்டுகூட எதுவுமே இருந்து நான் ஒருநாளும் பார்த்தது இல்லை.
கண்ணதாசன் காசைத் தண்ணீராக வாரி இறைப்பார். கல்யாணசுந்தரம் அதைத் தங்கமாக மதித்துப் பத்திரப்படுத்துவார். அவர் பாட்டெழுதத்தொடங்கிய அந்த ஆரம்ப நாட்களிலேயே சிறுகச் சிறுகச் சேர்த்து வைத்திருந்த பணத்தைக்கொண்டு சொந்த சங்கம் படைத்தான் கிராமத்தில் நிலபுலன் மற்றும் தோப்புகளை வாங்கினார். அவை இன்றைக்கும் அவருடைய குடும்பத்தாருக்கு வாழ்வாதாரமாக இருந்து வருகிறது.
கண்ணதாசனுக்கு நிறைய ஆண், பெண் குழந்தைகள் உண்டு. கல்யாணசுந்தரத்திற்கு ஒரே ஒரு மகன் குமரவேல்! பிறந்த ஐந்தாவது மாதத்தில் தந்தையை இழந்த தனயன்! கண்ணதாசன் புகை பிடிப்பார்! கல்யாணசுந்தரம் வெறும் வெற்றிலை சீவல் புகையிலை போடுவதோடு சரி.
கண்ணதாசன் சற்றும் ஓசை இல்லாமல் தனக்குத் தானே மெதுவாகச் சிரித்துக் கொள்வார். கல்யாணசுந்தரம் சத்தம் போட்டுச் சிரிப்பார்!
ஈடு இணையற்ற இவ்விரு 'கவிஞர் பிரான்களும்' நான் கதை வசனம் எழுதிய பல வெற்றிப்படங்களில் பாட்டெழுதி, என்னோடு அவர்களும், அவர்களோடு நானும் இமைகளும், விழிகளும்போல இணைந்து இருந்து பணிபுரிந்தது என் வாழ்வில் நான் பெற்ற பெரும் பேறு ஆகும்!
இன்னும் பல்லாண்டுகள் வாழ்ந்திருந்து, அன்னை தமிழைத் தங்களின் இனிய பாடல்களால் அலங்கரித்திருக்க வேண்டியவர்கள்! அதற்கு இசையும், இலக்கியமும் கொடுத்து வைத்திருக்கவில்லை. அதனால்தான் 'கூற்றுவன்' அவசரப்பட்டு அவர்களைக் கூப்பிட்டுக்கொண்டான்! இருவருமே குறுவைப் பயிர்போல குறைந்த வாழ்நாளில் நிறைந்த சாதனை படைத்து சரித்திரம் கண்டவர்கள்! இருவரும் என் இரு விழிகள்!
- ஆரூர்தாஸ் .
Chandran Veerasamy

Sunday, November 5, 2017

விழித்திரு படத்தின் விமர்சனம் Vizhithiru Movie Review



இரவு என்பது மிகவும் அழகான திரில் . எத்தனை பேர் சென்னையில் இரவில் சுற்றி வந்து இருப்பீர்கள் என தெரியாது . உங்களுக்கு அந்த அனுபவம் இல்லையென்றால் " விழித்திரு" திரைப்படம் பார்க்கலாம் .அமைதியாக இருக்கும் இரவு , விரிச்சோடி கிடைக்கும் சாலைகள் இவைகளை தாண்டி எங்கோ ஏதோ ஒரு அசம்பாவிதம் நடந்து கொண்டுதான் இருக்கும் . சிலருக்கு அந்த இரவு வாழ்வை முடித்து விடும் கோரத்துடன் அணுகி கொண்டு இருக்கும் . அது காலையில் நாம் காபி சாப்பிட , சுவையான செய்தியாகி கையில் நிற்கும் .இப...்படிப்பட்ட இரவில் நடக்கும் சம்பவங்களை உங்களை தியேட்டர் இருளில் அமரவைத்து ,வெளிச்சம் போட்டு காட்டுகிறார் இயக்குனர் மீரா கதிரவன் .ஒவ்வொரு சம்பவங்களும் , பார்க்கும் நம்மை பதற வைக்கிறது இரவில் துவங்கி விடியலுக்குள் முடிந்து விடுவதாக நான்கு சம்பவங்களை கோர்வையாக்கி அமைக்கப் பட்ட திரைக்கதை . கொஞ்சம் சவாலான பின்னல் தான் . அதை சாமர்த்தியமாக செய்திருக்கிறார் இயக்குனர் . படம் சமூக அக்கறையுடன் கூடிய விஷயத்தை முன்னிறுத்தினாலும் , கமர்ஷியல் ரசிகர்களுக்கான விருந்தாகத்தான் இருக்கிறது . இரவில் படம் பிடிக்க எவ்வளவு சிரமப் பட்டிருப்பார்கள் என்பது புரிகிறது . தன்ஷிகா ,விதார்த் , கிருஷ்ணா , வெங்கட்பிரபு , தம்பி ராமையா , அபிநயா என்று திரை நிரம்பி நட் ச்சத்திரங்கள் இருந்தாலும் , அத்தனை பேரையும் நன்றாக வேலை வாங்கி நடிக்க வைத்து இருக்கிறார் இயக்குனர் . மில்டனின் கேமரா அருமை .புதிய இசையமைப்பாளர் சத்யன் மகாலிங்கம் பிண்ணனி இசையை உறுத்தாமல் செய்திருக்கிறார் . காட்சிக்கு சில இடங்களில் இசை வலிமை சேர்க்கிறது . நல்ல திரைப்படம் . சரியான மழை நேரத்தில் வெளி வந்திருக்கிறது . ஆனாலும் தியேட்டரில் ஆர்வத்துடன் வந்து பார்க்கும் ரசிகர்களை காணும் போது நல்ல திரைப்படத்தை ரசிக்க மக்கள் தயாராகவே இருக்கிறார்கள் என்று தோன்றுகிறது .
Govindarajan Vijaya Padma நான்கு வெவ்வேறு கதைகள் ஒரே இடத்தில் சந்திப்பதே ‘விழித்திரு’ படத்தின் கதை.

திருட்டு தொழில் செய்து வரும் விதார்த், ஒரு வீட்டிற்கு திருட செல்கிறார். அதே வீட்டிற்கு திருட சென்ற தன்ஷிகாவை, வீட்டின் உரிமையாளர் தம்பி ராமையா அவரை திருமண கோலத்தில் கட்டி வைத்திருக்கிறார். அதைக்கண்ட விதார்த், தன்ஷிகாவை காப்பாற்றி தன்னுடன் அழைத்துச் செல்கிறார். திருடிய நகைகளை ஒருவருக்கொருவர் எப்படி ஏமாற்றி அடையலாம் என்று திட்டம் போட்டு வருகிறார்கள்.

இது ஒருபக்கம் நடக்க, ஊரில் இருந்து வெளிநாட்டுக்கு செல்வதற்காக சென்னை வருகிறார் கிருஷ்ணா. வந்த இடத்தில் பர்ஸை பறிக்கொடுக்கிறார். இதனால் தற்காலிகமாக கால் டாக்சி டிரைவராக வேலைக்கு செல்கிறார். இவரது காரில் பத்திரிகையாளரான சரண் பயணிக்கிறார். அமைச்சர் மற்றும் போலீஸ்காரர் இருவரும் ஒரு பிரச்சனையில் ஊரை நாசம் செய்த ஆதாரத்தை பத்திரிகையாளரான சரண் வைத்திருப்பதால், அந்த காரில் கொலை செய்யப்படுகிறார். இதை கிருஷ்ணா பார்த்ததால், அவரை கொல்ல அமைச்சரும் போலீஸ்காரரும் திட்டம் போடுகிறார்கள்.

நான்கு வெவ்வேறு கதைகளை உருவாக்கி அதில் ஒரே கிளைமாக்ஸ் வைத்து ஒரே இரவில் நடிக்கும்படியான படத்தை இயக்கி இருக்கிறார் மீரா கதிரவன். ஒவ்வொரு மனிதனும், தான் சந்திக்க கூடிய ஒருவர், தமக்கு நல்லதோ, கெட்டதோ செய்தால், நம் வாழ்க்கை அவனுடையே பயணிக்கும் என்பதை மையக்கருவாக வைத்து திரைக்கதை அமைத்திருக்கிறார். காட்சிகள் மாறி மாறி வருவதால் சுவாரஸ்யம் குறைகிறது. சிறப்பான கதாபாத்திரங்களை தேர்வு செய்து அவர்களிடம் திறமையாக வேலை வாங்கி இருக்கிறார் இயக்குனர்.

சத்யன் மகாலிங்கம் இசையில் பாடல்கள் கேட்கும். பின்னணி இசையில் அதிக ஸ்கோர் செய்திருக்கிறார். விஜய் மில்டன், ஆர்.வி.சரண் ஆகியோரின் ஒளிப்பதிவு கதை ஓட்டத்திற்கு பெரிதும் உதவி இருக்கிறது.


Monday, September 25, 2017

உடுமலை நாராயணகவி

Chandran Veerasamy
புகழ் உச்சியில் இருந்தபோதும் மிக எளிய வாழ்க்கை வாழ்ந்த உடுமலை நாராயணகவியார், தம் 82ஆம் அகவையில் - உயிர்துறந்தார். அவர்தம் இறப்பிற்கு முன்பு எழுதி வைத்த இறுதி ஆவணத்தில், தாம் இறந்தபிறகு என்ன செய்யவேண்டுமென்பதைக் குறித்துள்ளார்.
அந்த ஆவணத்தில், ‘‘செத்த பிணத்தை வைத்துக் கொண்டு, இனிமேல் சாகும் பிணங்கள் கூத்தடித்துக் கொண்டிருப்பது அறியாமை; இந்த அறியாமையானது பணத்தின் அளவிலே விரிவடைகிறது, குறைகிறது. என்னைப் பொறுத்தமட்டில் இந்த அறியாமை வேண்டாம். உடலைவிட்டு உயிர் பிரியுமானால் அப்போதே... காலத்தை வீணாக்காமல் குழியைத் தோண்டிப் புதைப்பதோ அல்லது எரிப்பதோ இந்த இரண்டில் ஒன்றைச் செய்திடுங்கள்! வேறு எந்தவகையான சடங்குகளும் தேவையில்லை. மீறிச் செய்வது அறியாமை. உங்களை மன்றாடிக் கேட்டுக் கொள்கிறேன்.
எனக்காக ஒன்று செய்யவேண்டுமானால் அதை மட்டும் செய்யுங்கள்! உணவிலே எளிமை, உடையிலே எளிமை, கல்வியிலே மேன்மை இது போதுமானது. இதுதவிர வேறு எதையும் செய்யாதீர்கள். இந்த வீண்பெருமைகளை (டாம்பீகங்களை) எல்லாம் செய்து சீரழிந்து, மனத்துன்பங்களுக்கு ஆளாகி, என் பின்னோர்க்கு (வாரிசுகளுக்கு) இதைப் பழக்கி, அவர்களின் அறிவைக் கெடுத்துத் துன்பங்கட்கு ஆளாக்கி விட்டேன். இப்போது உணர்கிறேன். காலங்கடந்துவிட்டது. இனி ஒரு பயனும் இல்லை. கடைசியாக ஏதோ வைத்திருக்கிறேன். அதைக்கொண்டு உங்கள் மதிப்பைக் காப்பாற்றிக் கொள்ளுங்கள்! இத்தனையும் கல்விக்குள்ளாக அடங்கியுள்ளது. ஆதலால் காலத்தை வீணாக்காமல் கவனத்தைக் கல்வியிலே செலுத்துங்கள்; இதுதான் என் கடைசி ஆசை!’’ என்று எழுதிவைத்துள்ளார். காலத்தை வென்று நிலைத்து நிற்கும் பாடல்களை எழுதி ,

சுயமரியாதை சிந்தனைகளை திரையுலகம்
மூலம் பரப்பிய , ' பகுத்தறிவுப் பாவாணர் ' அய்யா
உடுமலை நாராயணக் கவிராயர் பிறந்தநாள் இன்று !

Thursday, August 17, 2017

ஓர் பெண்ணின் பார்வையில் தரமணி திரைப்படம்.Taramani Review


ஓர் ஆணின் பார்வையில் போலிப் பெண்ணியம்:
தரமணி திரைப்படம்.
இயக்குநர் ராம் அவர்களே!
தங்கள் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் தரமணி திரைப்படத்தின் தலைப்பு தற்செயலாக அமைந்திருந்தாலும் படம் பார்த்தவுடன் அதற்கு எதிர்மறையான அர்த்தத்தையே மனத்தில் உருவாக்கியது என்பதே உண்மை.
Hemavathy Hemavathy Hems
Taramani Synopsis: An orthodox youngster and a free-spirited lady fall in love, only to understand that they are different in all aspects of life. How do they realise their complex requirements and mistakes?

Taramani Review: We have had numerous women-centric films that have touched upon the varied woes of average women in our society. However, a lion’s share of them, knowingly or unknowingly, had women living life and behaving within the societal norms, so that even the average judgmental audience could empathise with them effortlessly. For a change, Taramani, which is set against an IT hub of the same name, narrates the life of Diya (Andrea Jeremiah), a free-spirited lady.

An Anglo-Indian who works as an HR in a corporate firm, her characterisation is such that it defies the dos and don’ts which women characters are often associated with.

She may easily be misunderstood as a rebel because of her nature. But she isn’t one actually, and she doesn’t mind being judged. Thanks to the terrible experiences she has had, Diya has learnt to accept life in the way it is — an ex-husband who confessed about his sexual orientation after marriage, a mother who calls her a bitch and a conservative father who repeatedly puts her off with his unconvincing theories about life.

Prabhunath (Vasanth Ravi), a care-free unemployed youngster, who is depressed due to love failure, meets Diya in an unexpected situation, after which they slowly start opening up about themselves. The dialogues between them and their body language are a treat to watch as they are devoid of clichés. Though Prabhu falls for her, the practical lady she is, Diya expresses her disinterest as she needs only a companion in life, not a typical, dominating partner. And yes, she has a child, too — the apple of her eye. When Prabhu suggests her to quit smoking, as she’s the mother of a child, she hits back asking, ‘Aren’t you the child of a mother?’ But despite knowing that Prabhu is one more man, who expects his lady to be at his feet, she, too, at one point, reciprocates his feeling, only to regret later.

Back to square one, Diya’s life again revolves around her son and office. At the work place, she has to deal with her boss, who has a ‘happy family’, but does not mind getting a chance to sleep with her. She asks him about his obsession with her and he replies, ‘You smoke and drink. You seem to be a modern girl with sexy look. So, I thought you’re ‘that’ kind of girl’.

Prabhu, on the other hand, finds a brother (Azhagamperumal) in a railway employee. After developing an ‘anti-women’ attitude, he starts seducing wives of married men, an act which he truly repents later after witnessing a horrific episode. After realising his mistakes, he goes back to Diya. Will she forgive him?

Andrea, as the stubborn girl, has given her best performance till date, while debutant Vasanth is an apt find for the role of a judgmental and confused soul. Anjali, in the role of a traditional girl-turned-modern girl, makes her presence felt in the few scenes she appears in. Azhagamperumal and the other few characters make a mark. Yuvan Shankar Raja’s music helps the viewers immerse themselves in the narration and cinematography by Theni Eswar makes them relate to the places where the story unfolds.

Apart from narrating the stories of a few characters, Taramani also attempts to remind people about how life should be lived — the need to empathise even with animals, the need to protect our ecology, the importance in letting others live — all in a non-preachy way. It also delves deep into ‘complex’ issues like globalisation, demonetisation, ego, desire, greed, lust, hypocrisy, compassion, frustration and more.
பிறப்பிலிருந்து இறப்பு வரை பாலியல் சார்ந்து பெண்களுக்கு எண்ணற்ற பிரச்சனைகள் இருந்தாலும் தற்போதுதான் பெண்கள் படிப்பு, வேலை எனத் தொடங்கி, எந்தக் கிராமத்திலிருந்தும் வேலை தேடி நகரத்திற்கு வந்து, தங்கி பணிபுரியும் சூழல் உருவாகியிருக்கிறது. இதில் வாய்ப்புக் கிடைக்கும் இடத்திலெல்லாம் ஆண்களைவிட பல மடங்கு திறமை உள்ளவர்கள் என்று நிரூபித்தும் காட்டி வருகின்றனர்.
தரமணி, பெண்களை உயர்வாகக் காண்பிக்கிறது என்று பரவலாக பேசப்பட்டது. அதன் அடிப்படையில்தான் படத்தைப் பார்த்தேன்.
பெண்கள், குடிப்பது, சிகரேட் பிடிப்பதுதான் முற்போக்கு என்று நினைத்திருக்கிறீர்கள் போலும். அதையே அழகாகவும் காட்டியுள்ளீர்கள். ஆனால், கணவனை விட்டுப் பிரிந்து தனித்து வாழும் பெண் தன் பாலியல் தேவைக்கு என்ன செய்வாள் என்பதையும் சொல்லி இருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்.

இப்படத்தில் வரும் கதாநாயகி ஆண்ட்ரியாவின் முன்னாள் கணவன் ஓரினச்சேர்க்கையாளர் (GAY) என்று அறிந்ததும் அவனிடம் அமர்ந்து பேசி அவனின் மன ரீதியான உளவியலைத் தெரிந்துக்கொண்டு விருப்பத்துடன் விடை கொடுக்கிறாள்.
முற்போக்கு பேசுபவளாகவும், சுயமாக வாழ்பவராகவும் தைரியமாகத் தனது உரிமைக்காக போராடுபவளாகவும் பல இக்கட்டான சூழலிலும் தன்னந்தனியே குழந்தையைச் சிறப்பாக வளர்க்கும் ஆண்ட்ரியா, ஒரு வழிப்போக்கனுக்கு ஆதரவு கொடுப்பதும் பின் அவனுக்காகக் குடித்து விழுந்துகிடப்பது, தற்கொலை முயற்சியில் ஈடுபடுவது போன்ற காட்சி வைத்திருப்பது இயல்பாகவே இல்லை.
ஆண்களுக்கு மட்டும்தான் வருத்தம் வந்தால் குடிப்பது, சிகரேட் பிடிப்பதுபோல காட்சிகள் காட்டணுமா? அதே வருத்தத்தில் பெண்கள் இச்செயலை செய்தால் என்ன குற்றமா என்று கூட கேள்வியை முன் வைக்கலாம். ஆனால் தவறு யார் செய்தாலும் தவறுதானே.
காதல் என்றாலே குணத்தைப் பார்த்துதான் வரும். ஆனால் பலருக்கு அழகு என்று நினைத்துக்கொள்ளும் தோல்,, உடலைப் பார்த்து வருகிறது. ஆனால் இப்படத்தில் ஒரு படி மேலே போய் தன் உடலை மூடி மறைக்கும் உடையை அஞ்சலி அணிவதால் கதாநாயகனுக்கு அவள் மேல் காதல் ஏற்படுகிறது. நாயகன் வசந்த் ரவி ஒரு male chauvinist. அஞ்சலி வெளிநாடு செல்ல 3 லட்சம் திருடித் தருகிறான். இதனால் பாதிக்கப்பட்ட குடும்பத்தை பார்த்து, குற்ற உணர்வில் இருப்பதாகக் கூறுகிறான் நாயகன்.
உண்மையில் பாதிக்கப்பட்ட குடும்பத்தின் அவல நிலையைப் பார்த்து தவறை உணர்ந்திருந்தால் வேலைக்குச் சென்று தன்னால் இயன்ற அளவு பணத்தை கொடுக்க முயற்சி செய்திருப்பான். வெளிநாட்டுக்குச் சென்று, பல வருடம் கழித்து திரும்பி வரும் அஞ்சலி கொடுக்கும் காசுக்காகக் காத்திருக்க மாட்டான். இதைப் பார்க்கும்போதே கதாநாயகன் வேலைவெட்டிக்கு போகாத பெரிய சோம்பேறி என்று தெரிகிறது.
கிராமத்திலிருந்து நகரத்தில் வேலை கிடைத்த பலருடைய வாழ்க்கை மறுபடியும் கிராமம் நோக்கியே போவதில்லை. நகரமே நிரந்தரமாகிவிடுகிறது. இவ்வாழ்வின் சூழலே இதற்குக் காரணம். அதேபோலத்தான் அஞ்சலி வெளிநாடு சென்றவுடன் இவளுடைய வாழ்க்கை மாறுவதும் இயல்வே.
நாயகன் வழக்கம் போல காதல் தோல்வியால் தாடி வைத்துக்கொண்டு சமூகம், தன் குடும்பம், தன் முன்னேற்றம் என எதைபற்றியும் கவலைப்படாமல் திரிகிறான். இடையில் ஆண்ட்ரியா நட்பு கிடைக்கிறது.
ஒரு கட்டத்தில் தன்னால் பாதிக்கப்பட்டு வீட்டை இழந்து நிற்கும் ஆண்ட்ரியாவுக்கு உதவாமல் விடைபெற நினைக்கிறான் . இதுகுறித்து கேட்ட ஸ்டேஷன் மாஸ்டரிடம் “நீங்க மட்டும் கிராமத்திலிருந்து ஒரு பெண்ணைக் கல்யாணம் கட்டிக்கொண்டு வருவீங்க… நான் மட்டும் ஒரு குழந்தையின் அம்மாவுக்கு வாழ்க்கை கொடுக்கணுமா”, என்று கேட்கிறான். பிறகு, தங்கும் வீடு அவளுக்கு ஆறு மாதம் இலவசம் என்று தெரிந்தவுடன் நானும் வருகிறேன் என்று சுயநலமாக ஒட்டிக்கொள்கிறான்.
ஆண்ட்ரியா மனத்தில் இடம் கிடைத்த பிறகு அவனின் உண்மையான கோர முகமும் பிறவி குணமும் வெளிப்படுகிறது.. எதற்கெடுத்தாலும் சந்தேகம், இழிவாகப் பேசுவது எனத் தொடங்கி ஒரு கட்டத்தில் கைகலப்புடன் இருவரும் பிரிகிறார்கள்.
வீட்டைவிட்டு வெளியேறிய நாயகன், பின் ரிச்சார்ஜ் கடைகளிலிருந்து பெண்களின் தொலைபேசி எண்ணை எடுத்து அவர்களிடம் பேசி வரவழைத்து பணம் பிடுங்கும் ஒரு காம வெறிபிடித்த சைக்கோவாக செயல்படுகிறான்.

போலீஸ்காரனின் மனைவி கொலை என தொடங்கி பல பெண்களிடம் பணம் பறித்து, அப்பெண்களின் குடும்ப உறவுகளை சிதைக்கும் நாயகன் ஒரு கட்டத்தில் திருந்தியதாக கூறி வந்தவுடன் காதலி சேர்த்துக்கொள்வராம்.
என்ன கதை இது. சட்டத்தில் குற்றம் செய்தவனுக்குத் தண்டனை கட்டாயம் உண்டு. ஆனால் படத்தின் முடிவில் அயோக்கியனை நாயகன் என்ற ஒரே காரணத்திற்காக, யோக்கியானாக்கி ஏற்றுக் கொள்ள வைப்பதை ஏற்கவே முடியாது.
இயக்குநர் ராம் அவர்களே… இப்படத்தின் மூலம் இச்சமூகத்திற்கு நீங்கள் சொல்ல வரும் கருத்துதான் என்ன…?
1. ஆண் துணை இல்லாமல் ஒரு பெண் தனித்து வாழ முடியாது என்கிறீர்களா?
2. தைரியமாகப் பெண்கள் தன் துணையைத் தேடுவதில் பலவீனமாக இருக்கிறார்கள் என்கிறீர்களா?
3. ஆண்களின் வார்த்தை ஜாலத்தால் பெண்களை சுலபமாக ஏமாற்றிவிட முடியும் என்பதைச் சொல்ல வருகிறீர்களா ?
4. ஐடி யில் வேலை செய்யும் பெண்கள் விடுமுறை நாட்களில் பார் போன்ற இடத்திற்கு சென்று குடித்துவிட்டுக் கூத்தடிப்பார்கள் என்பதை ஆவணப்படுத்த முயல்கிறீர்களா?
5. பணியிடங்களில் ஆண் அதிகாரிகள் எல்லோருமே தனக்குக் கீழ் வேலை செய்யும் பெண்களை படுக்க அழைப்பார்கள் என்பதை உறுதிப் படுத்துவது நோக்கமா.?
6. வெளியூரில் வேலைபார்க்கும் கண்வன் வீடுகளில் உள்ள பெண்கள் கண்ட ஆண்களோடு பயணிப்பார்கள் என்பது தான் உங்கள் எண்ணமா?
7. நைட் ஷிப்ட் வேலைக்குப் போன பிறகு மனைவி, மற்ற ஆணை வீட்டுக்கு வர சொல்வார்கள் என்பது இயல்பான வாழ்முறை என்கிறீர்களா?
8. இந்தப் படத்தை பார்க்கும் உங்கள் பெண் தோழிகள் உங்கள் குடும்பத்தில் உள்ள பெண்களை நீங்கள் எப்படி எதிர்கொள்வீர்கள்?
9. படம் முழுவதும் பாலியல் தொடர்பை வைத்துதான் நகர்த்துகிறீர்கள். இடையில் மட்டும் ஊறுகாயைப் போல சில சமூக கருத்தைச் சொல்கிறீர்கள். வியாபார நோக்கமா?
10. எல்லாத் தரப்பு ஆண்களுக்கும் தனித்து வாழும் பெண்களை எப்படி எல்லாம் முயற்சி பண்ணி கரைக்ட் பண்ணலாம் என்ற சமூக ஆலோசனை இந்த படத்தில் சிறப்பாக கொடுத்திருக்கிறீகள்.
11. முகம் அறியாதவன் போனில் பேசியவுடன், பாலியல் வேட்கையோடு பெண்கள் அவனை தேடிச் செல்கிறார்களா?
12. சராசரியான, பெண்களை இழிவு படுத்தும் வர்த்தகப் படங்களையாவது விஷம் என்று விலகி விடலாம். நீங்கள் மருந்து புட்டியின் பாவனையோடு கொடுப்பது அதனினும் சிக்கல்.
ராம் அவர்களே.
பெண்ணுரிமை என்பது மாறுதலுக்காக ஆண்களைத் தேடிக்கொள்கிற பாலியல் உரிமையல்ல. அதேசமயம், ஒரு ஆணால் வஞ்சிக்கப்படும் போது, அதனை அந்தப் பெண், எதிர்கொண்டு மாற்று ஆணைத் தேர்ந்தெடுக்கிற வாழ்வியல் உரிமை.

பெண்ணுரிமை என்பது டாஸ்மாக் கடையில் பெண்ணும் வாடிக்கையாளர் ஆவதல்ல. குடித்துவிட்டுக் கொடுமைப் படுத்தும் கணவனெனில் விலகி தனியே வாழ முடிவெடுக்கும் சமூக உரிமை.
ஐடி துறையில் பணியாற்றுவோரின் உடைகளும் செயல்பாடுகளும் பழக்கவழக்கங்களும் பணியிடச் சூழல் சார்ந்த, மேற்கத்தியத் தாக்கம் சார்ந்த, பொருளாதாரம் சார்ந்த விஷயங்கள். பெண்ணியம் சார்ந்தவை அல்ல.
பெண்ணிய உணர்வோடு வாழ்பவரைக் காண வேண்டுமா?
அவகாசம் இருந்தால் என்னோடு வாருங்கள்.
ஸ்ரீபெரும்புதூரில் என் பாட்டி இருக்கிறார் பெண்ணியத்தின் முதிய சாட்சியாக.

Tuesday, August 15, 2017

தொடக்ககால தமிழ் சினிமா கதாசிரியை "எழுத்துலக நாயகி" : வை.மு.கோதைநாயகி அம்மாள்


  Vel Murugan
தமிழகத்தின் நாவல்,பத்திரிகை எழுத்தாளர்களில் மிகப்பெரும் ஆளுமை வை.மு.கோதைநாயகி அம்மாள். இவர் தான் தமிழின் முதல் பெண் நாவல் எழுத்தாளர். 1924 - ம் ஆண்டுதொடங்கிய அவரது எழுத்துப்பணி 1960 பிப்ரவரி 20 - ம் நாள் அவர் இம்மண்ணுலகை விட்டு அகல்வது வரை தொடர்ந்தது. இவர் எழுத்தாளராக மட்டுமின்றி, பத்திரிகை அதிபராகவும் தமிழ் இலக்கிய உலகுக்கு பணியாற்றியுள்ளார்.
"ஜெகன்மோகினி" என்கிற பத்திரிகையை 35 ஆண்டுகளாக தொய்வின்றி நடத்தி அதன் ஆசிரியராகவும் செயல்பட்ட இவரை "எழுத்துலக நாயகி" என்று புகழ்வதற்கு சிறிதும் அச்சப்படத் தேவையில்லை. ஆங்கிலேயரிடம் அடிமைப்பட்டிருந்த காலகட்டத்திலேயே பெண் சுதந்திரம்,பெண்ணியம் குறித்து எழுதியும், போராடியும் வந்த கலகக்காரர்.
இத்தனை பெருமைகளுக்கும் சொந்தக்காரரான வை.மு.கோதைநாயகி அம்மாள் தனது 5 - வது வயதிலே பால்ய விவாகம் மணம் செய்து கொடுக்கப்பட்டவர். முறையாக கல்விகூடம் சென்று கல்வி கற்றவரல்லர். எழுதப்படிக்க தெரியாததால் தனது முதல் கதையினை இவர் சொல்லச் சொல்ல அவரது தோழி டி.சி.பட்டம்மாள் எழுதுகிறார். "இந்திரமோகனா" என்கிற அந்த நாடகம் நோபில் அச்சகம் மூலம் அச்சேறுகிறது. இந்த நாடகநூலினை மிகப்பெரும் நாடக அறிஞர் பம்மல் சம்பந்த முதலியார், பாரதியார் போன்றோர் பாராட்ட, அம்மையார் முழுமூச்சில் எழுத ஆரம்பிக்கிறார். தொடர்ச்சியாக 115 படைப்புகளை (நாவல்கள்,சிறுகதை தொகுப்பு,நாடகம் அடங்கும்) தமிழ் நல்லுலகிற்கு அர்ப்பணிக்கிறார்.
வை.மு.கோதைநாயகி அம்மாள் தமிழ் திரையுலகையும் விட்டு வைக்கவில்லை. 1937 - ம் ஆண்டு "ராஜமோகன்" என்கிற இவரது நாவல் அதே பெயரில் திரைப்படமாகிறது. அம்மையார் தனது நாவலான "அனாதைப்பெண்" - யினை திரைப்படமாக எடுத்து வெளியிட முயற்சிக்கிறார். அக்காலத்தில் மிகப்பிரபலமாக இருந்த "ஜூபிடர் பிக்சர்ஸ்" நிறுவனம் தாமே முன்வந்து அம்மையாரது நாவலை திரைப்படமாக தயாரிக்கிறது. இந்த திரைப்படத்தினை "ராஜாசாண்டோ" இயக்குகிறார். இப்படம் திரைக்கு வந்து திரையுலகில் அம்மையாருக்கு நற்பெயரினை வாங்கித்தருகிறது.
இது நிகழ்ந்ததது 1938 - ம் ஆண்டு.

அதன்பின் அம்மையாரின் 55 - வது நாவலான "தயாநிதி" யானது "சித்தி" என்கிற பெயரில் 1966 - ம் ஆண்டில் தரமான திரைப்படமாக வெளியாகி மிகுந்த பாராட்டையும், நற்பெயரையும் பெற்றுத் தந்தது. இந்த திரைப்படம் அம்மையாருக்கு "சிறந்த கதாசிரியர்" விருதினையும் பெற்றுத் தந்தது. பின்பு அம்மையார் திரைப்படதணிக்கை குழு உறுப்பினராக 10 ஆண்டுகள் பணிபுரிந்து சினிமா தொண்டாற்றுகிறார். அம்மையார் சினிமாவில் பணிபுரிந்தாலும் சினிமாவின் சீர்கேடுகளை தனது கதாபாத்திரங்கள் மூலம்தொடர்ந்து சாடிவந்துள்ளார்.
இது மட்டுமில்லாது அவர் பன்முக திறமைசாலி இசைத்துறை....., சுதந்திரப்போராட்ட வீராங்கனையாக சிறைப்பதிவு....., பெண்ணியவாதி, ..... என்று சொல்லிக்கொண்டே போகலாம். இவ்வாறு பல திறமைகளோடு சினிமாவிற்கும் தொண்டாற்றிய வை.மு.கோதைநாயகி அம்மாள் அவர்களை சினிமாவின் நூற்றாண்டு கொண்டாடும் இத்தருணத்தில் நினைவு கூர்வோம்.

நன்றி : ரோஜா முத்தையா ஆராச்சி நூலகம், தரமணி, சென்னை - 113.

Saturday, August 13, 2016

‘ஜோக்கர்’ விமர்சனம் Joker' Movie Review

Direction : Raju Murugan
Production : Dream Warrior Pictures
Starring : Guru Somasundaram, Ramya Pandian, Gayathri Krishna
Music : Sean Roldan
Cinematography : Chezhiyan
Editing : Shanmugam Velusamy



Raju Murugan, who struck gold with his debut movie "Cuckoo," is back with his second outing "Joker." While his first film was a romantic drama, the latest flick is a political satire in which Guru Somasundaram of "Jigarthanda" fame plays the lead role.


Ramya Pandian is doing the female lead role in the movie, which has Gayathri Krishna, Ramasamy, Bava Chelladurai and others in the cast. Sean Soldan is the music director of "Joker" and his four songs like "Ennanga Sir Unga Sattam," "Ola Ola Kudisayila," "Jasmine –U" and "Mannar Mannan Theme" have turned out to be chartbusters. Chezhiyan is the cinematographer and Shanmugam Velusamy is the editor of the Tamil flick.
"Joker" attempts to highlight the current societal issues and projects the political situation of the country. The story is being narrated from the view of a 40-year old man. Guru Somasundaram plays the role of Mannar Mannan, who works in a water company. His simple questions about politics are presented in humorous way.
Despite being a hard-hitting and message-oriented flick, "Joker" entertains the viewers with lots of comedy and leaves the audience wondering why they cannot dismiss a government if they have the power to elect it.

வருடத்திற்கு 200க்கும் மேற்பட்ட படங்கள் தமிழில் வெளியானாலும், அதில் நம் மண்ணின் கலாச்சாரத்தையும், மக்களின் வாழ்வியலையும் பிரதிபலிக்கும் கதைகளோடு வெளிவரும் படங்கள் சொற்பமே. தன் அறிமுகப்படமான ‘குக்கூ’ மூலம் அந்த சொற்ப பட்டியலில் இடம்பிடித்தவர் இயக்குனர் ராஜுமுருகன். ஒரு எழுத்தாளராக சமூக பிரக்ஞையுடன் வலம் வந்த ராஜுமுருகன், இயக்குனராக மாறிய பின்பும் அதிலிருந்த நெறிபிறழவில்லை என்பதை பார்வையற்றோர்களின் உலகத்தை பிரதிபலித்த ‘குக்கூ’ பறைசாற்றியது. அந்த வகையில், அவரின் 2வது படைப்பு இப்போது திரையரங்குகளை ஆக்ரமித்திருக்கிறது. ‘ஜோக்கர்’ சிரிக்க வைப்பவனா? சிந்திக்க வைப்பவனா?

கதைக்களம்

தருமபுரியின் பப்பிரெட்டிபாளையத்தில் தன்னைத்தானே ‘ஜனாதிபதி’ என சொல்லிக்கொண்டு, அநியாயத்திற்கு எதிராக குரல் கொடுத்து வருபவர் மன்னர் மன்னன் (குரு சோமசுந்தரம்). இவரை எங்கு பார்த்தாலும், அரசுப் பணியாளர்கள் அனைவரும் தெறித்து ஓடுகின்றனர். காரணம்... ஆமை விடும் போராட்டம், பின்னோக்கி நடக்கும் போராட்டம், கோமணத்துடன் போராட்டம், தீ போராட்டம் என தினம்தோறும் புதிய புதிய போராட்டத்துடன் அரசின் மந்தமான செயல்பாடுகளை கண்டிப்பதே மன்னர் மன்னனின் வேலை. போலீஸின் கைதும், ஜாமீனில் மீண்டும் வெளிவருதும் இவரின் அன்றாட நடவடிக்கை.

யார் இந்த மன்னர் மன்னன்? அவர் ஏன் தன்னை ஜனாதிபதி என கருதிக்கொள்கிறார்? அவரின் போராட்டங்களுக்குப் பின்னணியில் இருக்கும் காரணங்கள் என்னென்ன என்பதற்கான விடையாக விரிகிறது ‘ஜோக்கர்’.

படம் பற்றிய அலசியல்

சமீபகால தமிழ் சினிமாவில் ஹீரோவுக்கு இப்படி ஒரு அறிமுகக் காட்சியை எந்த இயக்குனரும் யோசித்திருக்க மாட்டார்கள் (அப்படியென்ன ‘இன்ட்ரோ சீன்’ என்பதை படத்தில் பார்த்து தெரிந்து கொள்ளவும்). முதல் 20 நிமிடங்களுக்கு... கலெக்டர் ஆபீஸ், நீதிமன்றம், காவல் நிலையம், அரசியல் வசனங்கள், சட்டப்பிரிவுகள், போராட்டம், கைது என ஏதோ ‘கம்யூனிஸ்ட் டாக்குமென்ட்ரி’யைப் பார்ப்பது போன்ற உணர்வு ரசிகர்களுக்கு ஏற்படலாம். ஆனால், இந்த 20 நிமிட காட்சிகளின் முக்கியத்துவம் ஹீரோவுக்கான ஃப்ளாஷ்பேக்கில்தான் காட்டப்படும். அந்த அற்புதமான ஃப்ளாஷ்பேக்கில் காதல், சென்டிமென்ட், கிராமத்து மக்களின் வாழ்வியல், அரசு எந்திரத்தின் அடாவடித்தனம் என யதார்த்தத்திற்கு அருகில் நம்மை அழைத்துச் செல்கிறார் ராஜு முருகன்.

இப்படத்தின் மிகப்பெரிய பலம் வசனங்களும், நடிகர்களின் பங்களிப்பும். ‘நாம ஓட்டுப்போட்டுதான அவன் ஆட்சிக்கு வர்றான்... அதுக்கு மட்டும் நமக்கு உரிமை இருக்கு... அவன் அநியாயம் பண்ணா... அவன டிஸ்மிஸ் பண்றதுக்கு நமக்கு உரிமை இல்லையா....?’ இது போன்ற சமூக வசனங்களாகட்டும், ‘ஒருத்தியோட அன்புக்கு சமானமா இந்த உலகத்துல ஒண்ணுமே கிடையாதுடா...’ என்பன போன்ற நெகிழ வைக்கும் வசனங்களாட்டும் அத்தனையும் ‘நச்’ ரகம்!

நாட்டுப்புற இசை மூலம் பாடல்களில் வெகுவாக வசீகரித்திருக்கும் ஷான் ரோல்டன், பின்னணி இசையில் இன்னும் கவனம் செலுத்தியிருக்கலாமோ என்ற உணர்வை ஏற்படுத்தியிருக்கிறார். குறிப்பாக, படத்தின் முக்கிய காட்சி ஒன்றில் பின்னணி இசை மூலம் உணர்ச்சிகளைக் கடத்த வேண்டிய பெரிய வாய்ப்பு இருந்தும், அதை சரியாகக் கையாளவில்லையோ எனத் தோன்றுகிறது. செழியனின் ஒளிப்பதிவில் எளிமையும், அழகும் கைகோர்த்திருக்கிறது.

நடிகர்களின் பங்களிப்பு

ஆரண்யகாண்டம், ஜிகர்தண்டா படங்களின் மூலம் வரவேற்பைப் பெற்ற சோமசுந்தரம், இப்படத்தில் ‘மன்னர் மன்னன்’ என்ற கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார். அப்பாவித்தனமான முகபாவம், வெள்ளந்தியான வசன உச்சரிப்பு என பல இடங்களில் கண்ணீரை வரவழைக்கிறது சோமசுந்திரத்தின் ஆத்மார்த்மான நடிப்பு. விருது நிச்சயம்!

நாயகி காயத்ரியையும், அறிமுக நாயகி ரம்யா பாண்டியனையும் படத்தில் பார்த்துவிட்டு நேரில் பார்த்தால் யாருக்குமே அடையாளம் தெரியாது. அந்தளவுக்கு அவர்களை கேரக்டர்களாகவே மாற்றியிருக்கிறார்கள். படத்தின் முக்கிய கேரக்டர் ஒன்றில் நடித்திருக்கிறார் எழுத்தாளர் பவா செல்லதுரை. ஃப்ளாஷ்பேக்கில் இவரின் பங்களிப்பு பெரிய கவனத்தைப் பெற்றிருக்கிறது. ‘நீ ஒரு ரூரல் பியூட்டிடா’ என நாயகனைப் பார்த்து அவர் சொல்லும் அழகே தனி! படத்தின் உயிர்நாடி கதாபாத்திரத்தை ஏற்றிருப்பவர் மு.ரா. என்று அழைக்கப்படும் மு.ராமசாமி. ஹீரோவுக்கு இணையான இவரின் கதாபாத்திரமும், க்ளைமேக்ஸ் வசனமும் படத்தின் ஆணிவேர்!

பலம்

1. இயக்குனர் ராஜு முருகனின் கதையும், வசனங்களும்
2. நடிகர்களின் பங்களிப்பு
3. செழியனின் ஒளிப்பதிவும், ஷான் ரோல்டனின் பாடல்களும்

பலவீனம்

1. பின்னணி இசை
2. ‘டாக்குமென்ட்ரி’ உணர்வை ஏற்படுத்தும் முதல் 20 நிமிட காட்சிகள்

மொத்தத்தில்...

பரபரப்பான இன்றைய சூழலில், நம் கண்ணெதிரே எத்தனையோ போராட்டங்களும், அரசுக்கெதிரான உண்ணாவிதரங்களும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. ஆனால், அதையெல்லாம் கண்டும் காணாமல் சுயநலமாக பயணிக்கும் ஒவ்வொருவரையும் உட்கார வைத்து கேள்வி கேட்கிறது ‘ஜோக்கர்’. தியேட்டரைவிட்டு வெளியே செல்லும் ஏதாவது ஒரேயொரு ரசிகன் ‘உண்மையில் யார் ஜோக்கர்?’ என்பதை உணர்வானேயானால் அதுவே இப்படத்தின் உண்மையான வெற்றி!

ஒரு வரி பஞ்ச் : சிந்திக்க வைப்பவன்!

டத்தில்... பதவியைத் தக்க வைக்க தகிடுதத்தம் செய்யும் முதல்வர் இல்லை, இடைத் தேர்தலில் ஜெயிக்க எதிராளியை கொலை செய்யும் ஆளுங்கட்சி உறுப்பினர் இல்லை, மது-மாது என எப்போதும் உல்லாசிக்கும் சட்டமன்ற உறுப்பினர் இல்லை. ஆனால், காட்சிக்கு காட்சி, வசனத்துக்கு வசனம் சுளீர் அரசியல் பேசுகிறான் இந்த ‘ஜோக்கர்’!
’பவருக்கும், பவுசுக்கும் அடிமையாகி, தீயதைக் கொண்டாடி, நல்லதை மறந்து வாழ்ற சமுதாயத்துலதான் நாம வாழ்றோம். ஆனா, அதைத் தட்டியும் கேட்கமாட்டோம், தட்டிக் கேட்குறவங்கள ஜோக்கர்னும் சொல்லுவோம்’ என்ற நிதர்சனத்தை எதார்த்தமாக முகத்தில் அறைந்து சொல்லியிருக்கிறான் ’ஜோக்கர்’.
சசிபெருமாள், ‘டிராஃபிக்’ ராமசாமி, ‘மதுரை’ நந்தினி போன்றவர்களின் போராட்டங்களை வெறும் செய்திகளாகக் கடக்கும் சமூகத்துக்கு... மக்களாட்சிக்கு யார் பொறுப்பு என்பதை அழுந்தத்திருத்தமாகச் சொல்கிறார் இயக்குநர் ராஜு முருகன். ’குக்கூ’வில் காதலும் காதல் நிமித்தமுமாக மெழுகுவர்த்தி ஒளி காட்டியவர், ‘ஜோக்கரில்’ பிடித்திருப்பது அரசியல் தீப்பந்தம்!
வீட்டில் ஒரு கக்கூஸ் கட்டினால் காதலியை கை பிடிக்கலாம். ஆனால், அது கூட இயலாத ‘மன்னர் மன்னனாக’ சோமசுந்தரம். அரச பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடினாலும், ‘பொட்டி கேஸ் பொன்னூஞ்சல்’ என்று கிண்டலுக்கு உள்ளாகும் ராமசாமி. கழிப்பறை இருக்கும் வீட்டுக்கு திருமணமாகி செல்ல வேண்டும் என்பதை பெருங்கனவாகக் கொண்டிருக்கும் பெண்ணாக ரம்யா பாண்டியன். கணவனை மது அரக்கனுக்குப் பறி கொடுத்துவிட்டு, அரசாங்கத்துக்கு எதிரான குரலுக்கு ஒலிபெருக்கியாக இருக்கும் ’இசை’யாக காயத்ரி கிருஷ்ணா. இந்த நால்வர் வாழ்க்கையின் குறுக்குவெட்டுத் தோற்றத்தில் தமிழகத்தின் அவல நிலவரங்களை பொளேரென முகத்தில் அடித்துச் சொல்கிறான் ‘ஜோக்கர்’!
மத்திய அரசாங்கம் அறிவிக்கும் இலவச கழிப்பறைத் திட்டத்தில் கழிப்பறை கட்ட விண்ணப்பிக்கிறார் சோமசுந்தரம். ஆனால், கழிப்பறை ஊழலில் இவருக்கு மிஞ்சுவது பீங்கான் கோப்பை மட்டுமே. அரைகுறையாக எழுப்பப்பட்ட கழிப்பறையால் அவர் வாழ்வே கேள்விக்குறியாகிறது. இதனால் மனதளவில் பாதிக்கப்படும் சோமசுந்தரம், தன்னை ’இந்தியாவின் ஜனாதிபதி’யாக நியமித்துக் கொண்டு, ஊரில் நடக்கும் அநீதிகளுக்கு எதிராகப் பல போராட்டங்களை நடத்துகிறார். கூடவே தன் மனைவிக்காக ஒரு மனு போட்டு, நீதிமன்றங்களில் அது தள்ளுபடி செய்யப்பட உச்சநீதிமன்றம் வரை அதைக் கொண்டு செல்கிறார். அது என்ன மனு, அதன் விளைவு என்ன, சோமசுந்தரத்தின் போராட்டங்கள் என்ன தாக்கத்தை உண்டாக்குகின்றன போன்ற தொடர் சம்பவங்களை மனதில் ஆதங்கமும் ஆவேசமுமாகப் பதியச் செய்கிறது படம்!
சினிமா எனும் அதிகவனம் ஈர்க்கும் பொதுதளத்தில், அந்தப் பொது தளத்தின் மனசாட்சியையே சாட்டையால் விளாசியிருக்கிறது கதையின் கரு!
கழிப்பறையில் பிருஷ்டத்தை கழுவியபடியே படத்தின் நாயகன் அறிமுகமாவது முதல் ‘இதுக்கு பஜார் லாட்ஜ்ல பிராத்தல் பண்ணலாம்’ என கொதிகொதிக்கும் க்ளைமாக்ஸ் வசனம் வரை... படத்தில் எங்கும் ’so called' சினிமா சாயல் இல்லை. ‘அபத்தங்களைக் கொண்டாடி’ பழகிய சினிமாவில் இது புது பாட்டை. துணிச்சலுக்கு வாழ்த்துகள் ராஜு!
’உன் கைலதான் கவர்மெண்ட் இருக்குல்ல... பேசாம அந்த நாய்க்கு காய் அடிச்சுவிட்ரு’, ‘நகைக்கடைக்காரன் புரட்சி பண்ற நாட்ல, ஜனாதிபதி புரட்சி பண்ணக் கூடாதா?’, ‘ஜனாதிபதி வீட்டு கரன்ட் பில்லு எவ்ளோனு கேட்டாக் கூட சொல்லணும்’, ‘சகாயம் பண்ணுங்கனு சொல்லலை... சகயாம் மாதிரி பண்ணுங்க’னுதான் சொல்றோம்!’, ‘இந்த நாட்ல வாழ்றதுதான் கஷ்டம்னு பார்த்தா... இப்போ பேள்றதையும் கஷ்டமாக்கிட்டாங்களே..!’, ’குண்டு வைக்கிறவன்லாம் விட்டுருங்க, உண்டகட்டி வாங்கி திண்ணுட்டு கோயில்ல தூங்குறவன பிடிங்க’, ’உழைக்கிறவன் வண்டியதான போலீஸ் புடிச்சு ஸ்டேஷன்ல வெச்சுக்கும்? எந்த ஸ்டேஷன்லயாவது ஆடி காரோ, பி.எம்.டபிள்யூவோ துருப்பிடிச்சு நின்னுட்டிருக்கா?’  - குடியானவனின் வீட்டு கழிப்பறைகளிலிருந்து கோடிகளைக் கொள்ளையடித்துக் கொண்டு ‘கக்கூஸ் கட்டுன காசு நாறாது’ என்று தத்துவம் பேசும் அரசியல் - அதிகார மையங்களை சகட்டுமேனிக்கு சவட்டியெடுக்கின்றன வசனங்கள்.
அதே சமயம் சாமான்யனின் மனசாட்சியையும் உலுக்குகின்றன வசனங்கள். ‘சூப்பர் சிங்கர்ல நம்ம புள்ள கலந்துக்கணும்... அதைப் பார்த்து நாம அழுவணும்... அதை டி.வி.ல காட்டணும்!’, ‘ஆமா.. அவர் அப்பா மார் சளிக்காக குடிக்கிறாரு, என் புருசன் நான் மார்ல அடிச்சிக்கணும்னு குடிக்கிறான்’, ‘இப்போலாம் ஹீரோவைவிட வில்லனைத்தானே இந்த சனங்களுக்குப் பிடிக்குது’, ‘உங்களுக்காகப் போராடுற எங்களைப் பார்த்தா பைத்தியக்காரன்னு தோணினா... அது எங்க தப்பில்ல!’ - பொறுப்பை உதாசினப்படுத்தும், நல்லது/கெட்டது தெரியாத- தெரிந்துகொள்ள விரும்பாத- உள்ளங்களை உலுக்கும் வார்த்தைகள்.   
’மக்கள் ஜனாதிபதி’யாகவே வாழ்ந்திருக்கிறார் சோமசுந்தரம். எளியவனைப் பிரதிபலிக்கும்போது ஒரு நடிப்பும், அந்தக் கோட் அணிந்து ஜனாதிபதியானதும் தலையை நிமிர்த்தத் துவங்கி, அதற்கென ஒரு நடிப்பும் என்று மிளிர்கிறார். ‘ஒரு கண்ணு காந்தி, இன்னொரு பக்கம் பகத்சிங்கை வச்சிருக்கேன். எனக்கு கோவம் வந்துச்சி பகத்சிங்க அவுத்துவிட்டுருவேன் பாத்துக்க’, ‘பாப்பிரெட்டிப்பட்டி பவன்ல இருந்து வந்த பெட்டிஷன் என்ன ஆச்சு’ என்று ஆவேசம் காட்டும்போதெல்லாம்... இந்நாட்டின் மன்னனாகவே மாறிவிடுகிறார். அதே சமயம் காதலி முதன்முதலில் வீட்டுக்குள் வரும்போது காட்டும் அந்த குழைவும், நெளிவும்... சிறப்பு!
கோவணப்போராட்டம், வாயிலடித்துக்கொள்ளும் போராட்டம், குளோபல் வார்மிங் போராட்டம், ரிவர்ஸ் போராட்டம், காறித்துப்பும் போராட்டம் என்று விதவிதமாகப் போராட்டங்களில் ஈடுபடுகிறார் சோமசுந்தரம். அதற்காக நீதிமன்ற வாசலில் பெட்டிகேஸ் போட்டு, நீதிக்காக காத்துகிடக்கும் பொன்னூஞ்சல்,  ஒவ்வொரு போராட்டத்தையும் ஃபேஸ்புக்கில் பகிர்வது என்று போராட்டத்தை அப்டேட்டாக எடுத்துச்செல்லும் இசை... அவரவர்களின் பின்புலம் மற்றும் நடிப்பு சபாஷ்!
‘உங்க மேல அரசியல்வாதிகளுக்கு ஏன் கோவம்’ என்று பத்திரிகையாளர்கள் கேட்க, சோமசுந்தரம் ஒவ்வொரு சம்பவமாகச் சொல்வதெல்லாம்... கசக்கும் உண்மை!
‘மண்டைக்குள்ள கலவரம், யுத்தகாலம் ஆரம்பிச்சிட்டுது’ என்று வசனம் பேசும் பவா செல்லத்துரை, சிறிதுநேரம் வந்தாலும் நடிப்பில் நச். அவருக்கும் சோமசுந்தரத்துக்குமான உரையாடல்களே படத்தின் போக்கைத் தீர்மானிக்கின்றன.
படத்தின் ராஜூமுருகனுக்கு பக்கபலமாக க்ளாப்ஸ் அள்ளுகிறது செழியனின் கேமரா. பறவைப் பார்வையில் சோமசுந்தரம் கிராமத்துக்குள் உலாவருவதைக் காண்பிப்பதிலும், சோமசுந்தரம் வீட்டின் ஒவ்வொரு சதுர அடியைக் காண்பித்ததிலும் கனகச்சிதம். செல்லம்மா பாடலில் சோகம் கடத்துகிறது ஷான் ரோல்டனின் இசை. திரைக்கதையின் வேகம் குறையுமிடங்களில், வசனங்கள் அந்த அலுப்பை சரிசெய்கிறது.
‘கோணமண்டை புடிக்கல’ என்று தன்னை ரிஜெக்ட் செய்யும் ரம்யாவை, சோமசுந்தரத்தின் பிரியம் கொஞ்சம் கொஞ்சமாகக் கரைக்கும் காட்சிகள்... படத்தின் மென் அத்தியாயங்கள்.
மினரல் வாட்டர் நிறுவனத்தின் பெயர் ‘AMA', 'மதுவால் இறந்தவர் இங்கே... மதுவைத் திறந்தவர் எங்கே’, டெல்லி சாமி, அரை நாள் உண்ணாவிரதத்துக்கு ஏன் ஏ.சி., இயற்கை வளச் சூறையாடல், இஸ்லாம் பிறைக்கும் சிவன் பிறைக்கும் முடிச்சிட்டு ‘முப்பாட்டன்’ என அறைகூவும் ‘ஒறவுகளே’ தலைவர் என நிகழ்கால அநீதிகளை, அபத்தங்களை போகிற இடமெல்லாம் சுட்டி குட்டிக் காட்டுகிறது படம்.
இதுவரை, ’பிழைக்கத் தெரியாதவன்’ என்ற அடைமொழிக்கோ, படத்தின் அச்சு பிச்சு காமெடிகளுக்கோ பயன்பட்டு வந்த ஒரு கதாபாத்திரத்தை, கதை நாயகனாக்கியதிலேயே ‘ஜோக்கர்’ வித்தியாசப்படுகிறான். இதில் 6 பாட்டு, 5 ஃபைட்டு கொடுக்கும் கேளிக்கை கொண்டாட்டங்களை எதிர்பார்ப்பவர்களுக்கு இந்த ‘ஜோக்கர்’ மூலம் செட்டு சேராது. அதே சமயம், காட்சி ஊடகமான சினிமாவில் வசனங்களே பலத்த தாக்கத்தை உண்டாக்குகின்றன. மனதைத் தைக்கும், உணர்வுகளை உருக்கும் விஸூவல்கள்... பத்தலையே! படம் முழுக்க இருக்கும் எதிர்மறை தொனியையும் தவிர்த்திருக்கலாம். நமக்குப் பழகிய சினிமாவில் ‘happy end' என்பது க்ளிஷேவாக இருந்தாலும், ஜோக்கர் பேசும் கருவுக்கு அது ஒரு நம்பிக்கை கீற்றாக இருந்திருக்கும்.   

அன்பு நண்பன் ராஜூ முருகனுக்கு,
சிவபாலன் முருகள் சூரனின் அரண்மனைக்குள் நுழைந்து படைவீரர்கள் மேல் பச்சைக்குதிரை ஏறி தாண்டினான் என்று எனக்காக ,என் அனிமேஷன் ஓம் முருகா " புராண படத்துக்கு திரைக்கதை எழுதி தந்தபோது உள்ளிருந்நு ஒலித்த ராஜூமுருகனின் கலகக்குரலை ரசித்தேன்.வட்டியும் முதலும் படித்த போது எங்க தஞ்சாவூர் பையன் என்று பெருமையில் உன் ஜோக்கர் போல நிமிர்ந்து சிரித்தேன்.PK என்ற ஹிந்திப்படம் பார்த்தபோது அந்த காமெடித்தாண்டி புதைந்து கிடந்த சமுக குப்பைஙகளின் நாற்றங்களை தோண்டி எடுத்தது கண்டு இப்படித் தமிழில் ஏன் புதிய சிந்தனை வரவில்லை என்ற என் குறை தீர்ந்தது இன்று ஜோக்கர் பார்த்ததும். நல்ல தயாரிப்பாளர்கள் உங்களுக்கு கிடைக்க வேண்டும் முருகன்.எல்லோரும் சொன் னார்கள் இந்திய அரசியல் அமைப்பை "ஜோக்கர்" நக்கலாக கேள்வி கேட்கிறது என்று.ஆனால் எனக்கென்னவோ தூக்குதண்டனைக் கூடாது என்று பேசிய விருமாண்டியின் குரலையும் தாண்டி காதுகளின் உள்ளே சென்று குடைந்து வலி ஏற்படுத்துகிறது உங்கள் ஜோக்கரின் தீனக்குரல்"நாய்களா கருணைக்கொலை செய்ய அனுமதிங்கடா"என்று. நான் பார்த்த ஆங்கிலப்படமொன்றில் தன்வயதான மனைவியின் மரண அவஸ்தை தாளாமல் யாருக்கும் தெரியாமல் அவளது வயதான கணவர் அவளை தலையணையால் அமுக்கி வேதனையுடன் கொள்வார்.படம் பார்த்து விட்டு விடிய விடிய அழுதேன். அதேபோல் உங்கள் ஹீரோ மனைவிக்கு ஆசையாக பூ வைத்து விட்டு அவளுடன் உறவு வைத்துக்கொள்ள விரும்பும் அந்த சில நிமிடங்கள்..சொல்ல வார்த்தைகள் இல்லை முருகன் உங்களுக்கு ஒரு சல்யூட் ஜோக்கர் திரைப்படத்தின் மொத்த உணர்வுமே அதுதான்.ஜடமாக கிடக்கும் இந்த தேசத்தை ஆர்வத்துடன் தன் இஷ்டத்திற்கு புணரும் அரசியல் அதிகாரம்..! இதில் அரசியல் செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ள நல்ல அரசியல்வாதிகள் மற்ற அரசியல்வாதிகளின் அநாகரீக செயலுக்காய் அவமானத்தில் குறுகி வருத்தப்படுவார்கள். வேறு என்ன செய்ய இயலும்? கையில் ஊறும் கரப்பான் பூச்சியை பத்திரமாக தரையிறக்கிவிடும் ஹீரோ,என் மனைவியை கருணைக் கொலை செய்ய அனுமதியுங்கள் எனப் போராடு கிறான் என்றால் அவனின் தாள இயலாத வலி புரிகிறது.அந்த உணர்வு இன்னமும் கூட அழுத்தமாக பதிவு செய்யப்பட்டிருக்கலாம். கிளைமாக்ஸில் எதற்காக இந்தப் போராட்டம் என்று வலுவிழந்து போகும் குரல் இயக்குநரின் குரலாகவே இருக்கிறது. இயங்கிக் கொண்டிருக்கும் அரசியலை மைப்பின் ஊடே கொஞ்சமாவது சமூக நலன் கருதி தங்கள் சொந்த குடும்பத்தைக் கூட பாராமல் களமிறங்கி போராடும் கம்யூனி ஸ்ட்களை பற்றி அழுத்தமாக சொல்லியுருக்கலாம். நம் இடது சாரி இயக்கம் இவ்வளவு வலுவாக செயல் படவில்லையென்றால், சமூக பொறுப்புடன் பிரச்னைகளை தாங்களே கையில் எடுத்து களமாட வில்லையென்றால்,தோழர்களின் அர்ப்பணிப்பு இல்லையென்றால் நம் சமூகம் என்றோ "உளுத்துப்" போயிருக்கும். செழியனின் ஒளிப்பதிவு அருமையான ஓவியக் கவிதை. இசையமைப்பாளர் அபஸ்வரம் ராம்ஜியின் இசை மழலை டீமில் இருந்து வந்தவர் என்றார்கள் அற்புதம். கதைக்கு ஏற்றார்ப்போல் பிண்ணனி இசை.பாராட்டுகள். இர்பாஃன் கான்,ரகுவரன் பிரகாஷ்ராஜ் வரிசையில் ஓர் புதிய வரவு சோமசுந்தரம். என்ன அருமையான கலைஞன்..அவரது உடல் மொழி உங்கள் கைவண்ணம் சிறப்பு நண்பா. வாழ்த்துகள்.சிறப்பான சிந்தனை.பெரிய வருத்தம் என்னவென்றால் சீரமைக்கப்படாத தமிழ் சினிமாவின் வர்த்தகம்.அதுவும் ஜோக்கர் படம் போலத்தான். நான் இன்று தாணுவை டிஸ்மிஸ் செய்துவிட்டேன். சினிமா வியாபாரத்தை மேம்படுத்தி எல்லாத் திரைப்படங்களும் உலக அரங்கில் ரிலீஸ் செய்யப்படவேண்டும் ஓவர்சீஸ் வியாபாரம் தயாரிப்பாளர் சங்கம் மூலமாக விநியோகம் செய்யப்படும் கபாலியும், வாகாவும், ரிலீஸாகும்போது கட்டாயமாக ஒரு ஸ்கிரீனாவது ஜோக்கர் போன்ற படங்கள் ரிலீஸாக வேண்டும். என்பது என் ஆணை.


ஜி விஜயபத்மா எழுத்தாளர் இயக்குனர்

Sunday, July 31, 2016

‘கபாலி’ படம் விரிவான கட்டுரை


Kumaresan Asak
பொழுதுபோக்குத் தயாரிப்பு, வர்த்தக சினிமா, மசாலாப் படம்... எப்படிச் சொன்னாலும், தேர்ந்தெடுக்கப்பட்ட அவையோர்களோடு சுருங்கிவிடாமல், கோடிக்கணக்கானவர்களைச் சென்றடைகிற திரையாக்கங்கள் ஒரு பக்கம் மக்களின் மன மலர்ச்சித் தேவையை நிறைவேற்றுகின்றன; இன்னொரு பக்கம் அவற்றின் ஊடாகச் செல்கிற சிந்தனைகள் மனதில் பதிந்து சமூக விளைவாகவும் மாறுகின்றன. பெண்களைப் பற்றிய வக்கிரப்பார்வை, தனிமனித வழிபாடு, சாதிப் பெருமை ஆகியவை உள்ளிட்ட எதிர்மறையான படிமங்கள் இறுகிப்போனதில் திரைப்படங்களுக்கு ஒரு முக்கியப் பங்கு உண்டு. இதற்கெல்லாம் எதிரான கருத்துகளைக் கொண்டு சேர்ப்பதிலும் இதே திரைப்படங்கள் வலுவாகப் பங்களிக்க முடியும். அப்படி வெகுமக்களின் எளிய மனக்கொண்டாட்டத்திற்கும் ஈடுகொடுத்து, வழக்கமான ரஜினி படங்களின் பரபரப்புகளோடு நுட்பமாக சில சமூகச் சிந்தனைகளைத் தூவுவதில் பா. இரஞ்சித் அனுப்பியிருக்கும் ‘கபாலி’ வெற்றி பெற்றிருப்பது உண்மை.
பெயர்ப் பஞ்சம் ஏற்பட்டிருக்கிறதோ என்னவோ, பழைய படங்களின் பெயர்களிலேயே வருகிற படங்களின் வரிசையில் இதுவும் சேர்கிறது. வேறுபாடு என்னவென்றால், இதே பெயரில் முன்பு ரஜினியே நடித்து வந்த படத்தின் பெயரைச் சூட்டிக்கொண்டு இது வந்திருக்கிறது.
மையமான சிலரைத் தவிர்த்து, தலைமை வில்லன் உள்பட மற்றவர்கள் மனதில் பதிவதற்குள் காட்சிகள் பாய்கின்றன. நிகழ்வுகளின் வேகத்தில் இனிய இசையோடு வரும் பாடல்களைப் பிடித்துக்கொள்ள செவிகள் சிரமப்படுகின்றன. தனிமனித கார்ப்பரேட் கலைஞனாகிவிட்ட ரஜினியின் இந்தப் படத்தின் சந்தையையும் முன்னெப்போதும் இல்லாத வசூலையும் உறுதிப்படுத்திக் கொள்ள நடந்த ஏற்பாடுகள், எளிய முதலீட்டில் புதிய கலைஞர்களோடு அரிய செய்திகளைச் சொல்ல வருகிற படங்கள் பின்னுக்குத்தள்ளப்படுவது பற்றிய விசனத்தை ஏற்படுத்துகின்றன.இத்தகு நெருடல்களைத் தாண்டி ஒன்றைச் சொல்லியாக வேண்டும்.
இது ரஜினி படமாகவும் இல்லை, இரஞ்சித் படமாகவும் இல்லை. அதாவது, படத்திற்குப் படம் பெண்கள் எப்படி இருந்தால் நல்லது என்று பண்பாட்டு அறிவுரை வசனம் ஒன்றைச் சொல்வார் ரஜினி. அது இந்தப் படத்தில் இல்லை. மாறாக, தகப்பனுக்கு ஈடாகச் சண்டைக்காட்சிகளில் பந்தாடுகிற மகள் வருகிறாள். படத்திற்குப் படம் ஒரு ஆன்மிக போதனையும் ரஜினியிடமிருந்து வரும். இந்தப் படத்தில் அப்படி வரவில்லை. அரசியலைத் தூய்மைப்படுத்த இவர் வந்தால்தான் முடியும், காலத்தின் கட்டளையை மீறாமல் எப்போது வேண்டுமானாலும் வருவார் என்ற எதிர்பார்ப்பு ஆங்காங்கே செருகப்படும். அந்தச் செருகலும் இதிலே இல்லை. லட்சக்கணக்கான குழந்தைகளின் அபிமானத்தைப் பெற்றுள்ளது தெரிந்தும், நகைச்சுவைப் பாத்திரத்தின் மனைவியோடு போர்வைக்குள் ஆவி பிடிப்பது போன்ற காட்சிகள் இல்லை. நகைச்சுவைக் காட்சிகளே கூட இல்லை. ஆக, இது வழக்கமான ரஜினி படமாக இல்லை.
முந்தைய இரண்டு இரஞ்சித் படங்களிலும் கதைதான் மையமானதாக இருக்கும். கதாபாத்திரங்கள் அதைச் சுற்றி நிறுத்தப்பட்டிருப்பார்கள். இதில், இயல்பாக ரஜினி மையமாக இருக்க அவரைச் சார்ந்து திரைக்கதை அமைக்கப்பட்டு கதாபாத்திரங்கள் இயக்கப்பட்டிருக்கிறார்கள். கேங்ஸ்டர் (அடியாள் கும்பல்) தொழிலில் உள்ளவர்கள், ஒரு காப்பு ஏற்பாடாக மக்களுக்கு மருத்துவமனை உள்ளிட்ட சில சேவை ஏற்பாடுகளைச் செய்வதுண்டு. இதிலோ, பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தொண்டாற்றுவதற்காகவே கபாலி என்கிற கபாலீஸ்வரன் ‘நாயகன்’ வேலுத்தனமாக ஒரு கேங்ஸ்டராகிறான். ஆக, இது வழக்கமான இரஞ்சித் படமாக இல்லை.
மலேசியாதான் கதைக் களம். தமிழகத்திலிருந்து அங்கே புலம்பெயர்ந்து பின்னர் அந்நாட்டுக் குடிமக்களாகவே மாறிவிட்ட தமிழர்களின் வாழ்க்கைச் சூழலில் ஒரு சிறு முனை படம்பிடித்துக் காட்டப்படுகிறது. அவர்களிலும் ஒதுக்கப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த தொழிலாளர்களின் கூலிப்போராட்டம் சொல்லப்படுகிறது. அவர்களது பிள்ளைகள் பள்ளிப்படிப்பைத் தொடர முடியாமல் போகிற நிலையில் அவர்களை போதை மருந்தால் இழுப்பதோடு, அதை வாடிக்கையாளர்களிடம் கொண்டுசெல்கிற வேலையில் தள்ளியும் விடுகிறது ஒரு பெரிய கும்பல். தமிழ்த் தொழிலாளர்களுக்காகப் போராடிய தமிழ்நேசனின் தொண்டராக இணைந்து அந்த இயக்கத்தின் தலைவராகவே உயரும் கபாலியை, எதிரிகள் போலியான குற்றச்சாட்டுகளைப் புனைந்து சிறையில் தள்ளச் செய்கிறார்கள். 25 ஆண்டுகள் சிறைவாசத்துக்குப் பிறகு, நல்லது செய்வதற்காக மறுபடியும் துப்பாக்கி தூக்குகிற கபாலி, போதை மருந்து விநியோகத்துக்காக அடியாள் படை வைத்திருக்கிற டோனி லீ இவர்களது சண்டைதான் கதையோட்டம்.
வழக்கமான கும்பல் மோதல் கதையை இரஞ்சித்தின் மந்திரக் கோல் மூன்று வகைகளில் மாறுபட்டதாக்கியிருக்கிறது: ஒன்று, எதிரிகளின் இடங்களுக்குக் கபாலி நேரில் சென்று தாக்குகிற காட்சிகளின் விறுவிறுப்பு.இரண்டு, எதிரிகளால் கொல்லப்பட்டுவிட்டதாக நினைத்துக்கொண்டிருக்கும் மனைவியும் மகளும் உயிரோடு இருப்பது தெரியவர, அவர்களை எப்படியாவது மீட்டுக்கொண்டுவரத் துடிக்கிறவனின் பதைப்பு.மூன்று, தமிழகத்தில் பண்ணையடிமைகளாக இருந்தவர்கள் மலேசியாவுக்குக் கொண்டுசெல்லப்பட்டது, அந்த நாட்டை வளப்படுத்தியதில் அவர்களது பங்களிப்பு, பின்னர் அவர்கள் கைவிடப்பட்ட வஞ்சகம் போன்ற வரலாற்றுத் தகவல்கள் கதையோடு இழையோடச் செய்யப்பட்டுள்ளன.
அன்றைய சூழலில், இழிவாகக் கருதிய மேட்டிமை சமூகத்தினருக்கு நிகராக அடையாளப்படுத்துவதன் குறியீடாக கோட் சூட் அணிவது பற்றிய அம்பேத்கர் நிலைபாடு பொருத்தமான சூழலில் மேற்கோள் காட்டப்படுகிறது. “தமிழன் எங்கே போனாலும் தன்னோடு தன் தன்சாதியையும் கொண்டுபோயிடுறான்” -ஒரு முழுமையான வர்த்தக சினிமாவில் இப்படியான உரையாடல்கள் வருவது சாதாரணமானதல்ல.
கும்பல்களோடு மோதுகிறபோது ரஜினியின் வயது கடந்த நடிப்பு பாணி விசில் பாராட்டுகளை அள்ளுகிறது. சீர்திருத்தப்பள்ளி நடத்தும் ரஜினி அங்கே மாணவர்களிடையே உறவாடுகிற இடம், போதைப் பொருள் எந்த அளவுக்கு சீரழிக்கிறது என்பதை கண்கூடாகப் பார்த்து அதற்கு முடிவு கட்டத் தீர்மானிக்கிற இடம், நீண்ட எதிர்பார்ப்புக்குப் பிறகு மனைவியைச் சந்திக்கிற இடம் என, இடைக்காலத்தில் மறைக்கப்பட்டுவிட்ட ரஜினியின் நடிப்பு கபாலியால் மீட்கப்பட்டிருக்கிறது. பஞ்ச் டயலாக்குகள் இல்லை என்றாலும் “கபாலிடா,” “மகிழ்ச்சி” என பஞ்ச் வார்த்தைகள் அதிர்வூட்டுகின்றன.
ராதிகா ஆப்தே, தன்ஷிகா, ரிய்த்விகா, வின்ஸ்டன் சாவ்வோ, ‘அட்டைக்கத்தி’ தினேஷ், கிஷோர், நாசர், ஜான் விஜய், ஜானி ஹரி உள்ளிட்டோர், குறைவான வாய்ப்பை நிறைவாகப் பயன்படுத்தியுள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையும், சி. முரளி ஒளிப்பதிவும், பிரவீன் தொகுப்பும் இணக்கமாகப் பயணித்துள்ளன.
இப்படியான படங்கள் மட்டுமே சமூக மாற்றத்தை ஏற்படுத்திவிடாதுதான். ஆனால், விரிந்த ரசிகப்பரப்பில் சிறு மழைத்துளிகளாக சில மாற்றுச் சிந்தனைகள் தூறுவது, மாற்றத்திற்காகக் களம் இயங்குவோருக்குத் துணை செய்யும்.

Wednesday, July 20, 2016

Kabali film




 
 மலேசிய வாழ் தமிழர்களில் பெரும்பான்மையானவர்களான தோட்ட கூலித் தொழிலாளர்களின் கதையை பேசும் கபாலியை புரிந்துகொள்ளவேயென்று .
காலம் காலமாக ரப்பர் தோட்டங்களில் வேலை செய்த தமிழர்கள் பின் உலகமயமாக்கல் , மலிவான செயற்கை ரப்பர் உற்பத்தி தொழிற்நுட்பம் , இயற்கை ரப்பரின் விலை வீழ்ச்சிக்கு பின் நிகழ்ந்த தோட்ட துண்டாடல்கள் காரணமாய் வேலை இழந்து அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர் . அவர்களில் சிலர் தாயகமான இந்தியாவிற்கு திரும்பினாலும் பெரும்பாலானோர் தங்கள் தாய்மண்ணான மலேசியாவிலே தங்கினர் . காலங்காலமாய் தோட்ட வேலைகளில் மட்டுமே ஈடுபட்டவர்கள் மாறிப்போன உலக பொருளாதாரம் காரணமாக பெரும் படிப்போ , வாழ்க்கையை ஓட்ட தொழிலோ தெரியாமல் பெருநகரங்களில் வந்து தஞ்சமடைந்தனர் .
பொதுவாய் இந்திய தமிழர்களுக்கு ஒரு எண்ணம் , அதாவது வெளிநாட்டில் உள்ள தமிழர்கள் செல்வந்தர்கள் என . அது தான் மலேசிய தமிழர்கள் எதிர்கொள்ளும் இன்னல்களை புரிந்துகொள்ளாதபடிக்கு செய்கிறது . மலேசியாவில் இந்தியர்கள் இரண்டாம் தர குடிமகன்களாகவே நடத்தப்படுகிறார்கள் . மலேசிய அரசாங்கம் 'பூமி புத்திரர்கள்' என்னும் கொள்கையை பின்பற்றுவதால் , கல்வி மற்றும் வேலைவாய்ப்பினில் மலாயா மக்களுக்கே முன்னுரிமை வழங்கப்படுகின்றது . அதே நாட்டின் குடிமகன்களான மலேசிய சீனர்களுக்கு மலேசிய தமிழர்களுக்கும் வாய்ப்பு மறுக்கப்பட்ட வருகிறது இன்று வரை . இதில் சீனர்கள் அந்நாட்டின் பொருளாதாரத்தை தங்கள் வணிகத்தால் கட்டுப்படுத்துவதால் அவர்களை இது பெரிதும் பாதிப்பதில்லை . ஆனால் மலேசிய இந்தியர்கள் , அதிலும் குறிப்பாக தோட்டங்களில் வேலை பார்த்த மலேசிய தமிழர்கள் கல்வி புலம் பெரிதும் இல்லாததாலும் , கல்வி புலம் இருந்தும் மேற்கொண்டு படிக்க வாய்ப்புகள் மறுக்கப்படுவதாலும் திசை மாறிப் போகிறார்கள் என்பதே நிதர்சனம்.
மலேசியா , Golden Triangle என்று சொல்லப்படும் பர்மா , தாய்லாந்து , லாவோஸ் என்னும் நாடுகளுக்கு அருகே உள்ளது . பர்மிய அரசாங்கத்திற்கு எதிராக செயல்பட்டுவரும் போராளிகள் தங்கள் வருமானத்திற்காக கஞ்சா பயிரிட்டு , அதன் வழி போதை மருந்துகளை உற்பத்தி செய்தும் வருகின்றனர் . இவர்களைத் தவிர மற்ற குழுக்களும் போதை மருந்தினை உற்பத்தி செய்து வருகின்றது . அதன் அளவு எத்தகையது என்றால் , உலகின் கணிசமான சதவிகித போதை மருந்துகள் இங்கு தான் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது . தற்பொழுது மலேசியாவே போதை மருந்து உற்பத்தி கேந்திரமாக உருமாறியும் வருகிறது . வேலைவாய்ப்பில்லாத பலர் போதை மருந்து வணிகத்தில் , கேங்களின் (Number Gangs) வாயிலாக சேர்ந்துகொண்டுவிட்டனர் . சமீபத்திய கணக்கெடுப்பு , இக்கேங்களில் 71 % சதவிகித பேர் இந்தியர்கள் என்று கூறுகிறது . இதோடு தான் கபாலி படத்தின் பின் கதையை நாம் புரிந்து கொள்ளவேண்டும் . மலேசிய மக்கட்தொகையில் வெறும் 7 முதல் 9 சதவிகிதமே இருக்கும் மலேசிய இந்தியர்கள் எவ்வாறு கேங்களில் 71 % சதவிகிதம் இருக்கிறார்கள் என்பதை ஆராய ஆரம்பித்தால் மலேசிய இந்தியர்களும் அவர்களுள் பெரும்பான்மையான மலேசிய தமிழர்கள் படும் அல்லல்களும் விளங்கும் . இந்த புரிதல் இருந்தால் , கபாலி படத்தின் கடைசி சீனில் மாணவர்கள் பேசும் உரையாடல் தெள்ளென விளங்கும் . இந்தியர்கள் தங்கள் தோலின் நிறத்தால் , இந்தியர்கள் என்ற ஒரே காரணத்தினால் ஒதுக்கப்படுவதையே பேசுபொருளாக கொண்டிருக்கிறது இத்திரைப்படம் . அதோடு எவ்வாறு ஒடுக்கப்பட்ட நிலையினிலும் மலேசிய தமிழ் சமூகத்துள் சாதி , வர்க்க பாகுபாடு தலைவிரித்து ஆடுகிறது என்ற அரசியலையும் பேசுகிறது .
மேலும் இந்த திரைப்படத்தில் வரும் வன்முறை நிஜமாகவே நிகழுமா , ஒரு கேங் தலைவன் இறந்தால் ஊரில் ஊர்வலம் நடத்துவார்களா என்றெல்லாம் கேள்விகள் வருகின்றன . நிஜம் பலநேரங்களில் கற்பனையை விட பயங்கரமாய் இருக்கும் என்பதற்கு இதுவே ஒரு உதாரணம் (யுடியூபில் funeral for gang 36 என்று தேடி பார்க்கவும்). மேலும் இது போன்ற கேங்களை எவ்வாறு அரசாங்கம் கட்டுக்குள் வைத்திருக்கிறது என்பதற்கு இந்த படமே ஒரு உதாரணம் தான் . முள்ளை முள்ளால் எடுப்பது போன்று கேங்களை ஒன்றுக்கொண்டோடு சண்டையிட்டுக்கொள்ள வைத்து நிலைமையை கட்டுக்குள் வைத்திருப்பதும் ஒரு வகை நிர்வாக தந்திரமே , உலகம் முழுவதும் .
ஆக , எல்லைகள் கடந்த தமிழ் சமூகத்தின் கதைகளை தமிழ் திரைப்பட உலகம் கவனிக்க ஆரம்பித்ததன் முதற் படி தான் கபாலி . தமிழ் பேசும் மக்கள் இந்தியா தவிர்த்து மலேசியா , சிங்கை , சிறீலங்கா , தென் ஆப்ரிக்கா , மொரீசியஸ் , செய்செல்ஸ் போன்ற நாடுகளில் காலம் காலமாய் வாழ்ந்து வருகின்றனர் . இத்தனை ஆண்டு காலம் நமது மண்ணின் கதைகளான பருத்திவீரன் , தேவர் மகன் , மறுமலர்ச்சி , சின்ன கவுண்டர் , புதுப்பேட்டை போன்ற படங்களை ஆதரித்து வந்த மலேசிய தமிழ் சமூகத்தின் கதையினை நாமும் ஆதரிக்க வேண்டும் என்று நினைக்கிறேன் . காரணம் , இந்த படத்தின் அடிநாதமாக இருக்கும் கசப்பான உண்மை , ரப்பர் தோட்டத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட தமிழர்களின் கையறு நிலை , அவர்களை நிர்கதியாக்கிய அரசாங்கத்தின் பூமிபுத்திரர் கொள்கை அதனோடு இனம் சார்ந்த ஒடுக்குமுறை .
இது ஒடுக்கப்பட்ட தமிழ் சமூகத்தின் கதையென்பதில் துளியளவும் சந்தேகமில்லை . இத் திரைப்படத்தை காணுவதென்பது நமது சகோதரர்களை , எல்லை கடந்த தமிழ் சமூகத்தை பற்றி அறிந்து கொள்ள ஒரு வாய்ப்பாகவே காண்கிறேன் .
ஒரு நிஜ பிரச்னையை , நிகழ்ந்து கொண்டிருக்கும் ஒடுக்குமுறையை மிக தைரியமாக எடுத்ததற்காகவே ரஜினி அவர்களுக்கும் , பா . இரஞ்சித் அவர்களுக்கும் ஒரு உலக தமிழனாய் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன் . இது நாள் வரை நான் அறிந்த இந்த சரித்திரம் இன்று தமிழ் பேசும் ஒவ்வோர் வீடுகளிலும் உலகம் அதிரும் பறையிசையாய் , போர்முரசாய் ஒலிப்பதற்கு வினையூக்கியாய் இருந்த கபாலிக்கு என் நன்றிகள் .
Jeyannathann Karunanithi
கபாலி திரைப்படத்துக்கான சிறப்பு அஞ்சல் உறை விற்பனையை அஞ்சல் துறை தொடக்கியுள்ளது.

ரஜினிகாந்த் நடித்த கபாலி திரைப்படம் வெளியாகும் ஜூலை 22-இல் தனி விமான சேவைக்கு ஏர் ஏசியா விமான நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது. இதன்படி, பெங்களூருலிருந்து சென்னைக்கும் சென்னையிலிருந்து பெங்களூருக்கும் "கபாலி விமானம்' மூலம் ரசிகர்கள் அழைத்துச் செல்லப்படுவார்கள்.

இதுபோல் கர்நாடக அஞ்சல் வட்டம், சென்னை நகர மண்டல அஞ்சல் வட்டம் ஆகியன இணைந்து கபாலி திரைப்படத்துக்கான சிறப்பு அஞ்சல் உறையை வெளியிட்டுள்ளன.

இதற்காக, சென்னை, பெங்களூரு விமான நிலையத்தில் உள்ள அஞ்சல் அலுவலகங்களில் விளம்பரங்கள் செய்யப்பட்டுள்ளன. மேலும், சென்னை, பெங்களூரு அஞ்சல்தலை சேமிப்பு மையங்களிலும் கபாலி சிறப்பு அஞ்சல் உறை விற்பனை தொடங்கப்பட்டுள்ளது.

இதன்மூலம், கபாலி திரைப்படத்தை முதல் நாள் முதல் காட்சியை காண விமானத்தில் பயணிக்கும் ரசிகர்களுடன் சிறப்பு அஞ்சல் உறையும் இடம்பெற்றிருக்கும் என அஞ்சல் துறை சார்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளை மறுநாள் திரைக்கு வரஇருக்கும் ரஜினியின் ‘கபாலி’ படத்துக்கு உலகம் முழுவதும்  பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.கலைப்புலி எஸ். தாணு இயக்கத்தில் பா.ரஞ்சித் இயக்கியுள்ள இந்த படத்தில் ராதிகா ஆப்தே, தன்ஷிகா, தினேஷ், கிஷோர் மற்றும் சீன, மலேசிய வில்லன் நடிகர்கள் உள்பட பலர் நடித்திருக்கிறார்கள்.

படத்தின் புரொமோஷன்களும், படத்தில் இடம்பெறும் காட்சிகள் பற்றிய விவரங்கள் என படத்திற்கான எதிர்ப்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகமாகி வருகிறது.

இந்நிலையில் இப்படத்தில் ரஜினியின் அறிமுககாட்சி மட்டும் ஸ்லோ மோஷனில் சுமார் ஒன்றரை நிமிடங்கள் வருவதாகவும், அறிமுகக்காட்சியே சண்டைக்காட்சி என்று கூறப்படுகிறது.

இப்படி ஒரு மாஸ் என்ட்ரி இருந்தால் தியேட்டர் ஆரம்பமே அதிரும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

இப்படத்தின் விளம்பரம் பாலிவுட் சினிமா மூக்கில் விரல் வைத்து பார்க்கும் அளவுக்கு இருக்கிறது. ஏன் ஹாலிவுட் என்று கூட சொல்லலாம் விமானத்தில் விளம்பரம் என்பதெல்லாம் இதுவரை யாரும் யோசித்திராத ஒன்று தான். விமானம் முதல் இரு சக்கர வாகனங்கள் வரை, பத்திரிகைகள் , டி.வி, இணையதளம், செல்போன் அனைத்திலும் கபாலி மயமாகவே உள்ளது. பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை ‘கபாலி’ என்ற பெயரை கேட்டாலே குதூகலப்படும் அளவுக்கு இதன் தாக்கம் எங்கும் நிறைந்திருக்கிறது.

இதுமட்டுமல்ல முத்தூட் பின்கார்ப் என்ற நகை அடகுவைக்கும் நிறுவனம் கபாலியின் பெயரில் தங்கம், வெள்ளி காசுகளை வெளியிடுகிறது. கேட்பரிஸ் நிறுவனம் சாக்லேட் விளம்பரம், ஏர்டெல் கபாலி ஆபர் என இன்னொரு பக்கம் அதிரடி காட்டுகிறது. இன்னும் பல கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்கள் விளம்பரங்களில் கபாலியை பயன்படுத்தி வருகிறது. கபாலி பொம்மையும் இந்திய மதிப்பில் 1000த்தில் தொடங்கி 5000 வரை விற்கப்படுகிறது.

மிகப்பெரிய வெற்றியை பெற்ற ‘பாகுபலி’  படம் உலகம் முழுவதும் திரையிடப்பட்ட பிறகு அதன் சாதனைகள் பற்றி பேசப்பட்டது. ஆனால் ‘கபாலி’ திரையிடப்படுவதற்கு முன்பே பல சாதனைகளைப் படைத்து வருகிறது.

‘பாகுபலி’ படம் டிரைலர் ‘யுடியூப்’ பில் வெளியிடப்பட்டது. இதை ஒருகோடிக்கும் அதிகமானவர்கள் பார்த்து இருக்கிறார்கள். ஆனால் ‘கபாலி’ படம் திரைக்கு வருவதற்கு முன்பே இதன் ‘டீசரை’ 2 கோடிக்கும் அதிகமானோர் யுடியூப்பில் பார்த்து விட்டனர்.‘பாகுபலி’ தமிழ் தெலுங்கு, இந்தி, மலையாளம் உள்பட பல மொழிகளில் வெளியானது. படம் திரைக்கு வந்த பிறகுதான் சீனாவிலும் வேறு சில நாடுகளிலும் திரையிட முடிவு செய்யப்பட்டது. சீனாவில் ‘பாகுபலி’ வருகிற 22-ந் தேதி தான் திரைக்கு வருகிறது.

ஆனால் ‘கபாலி’ தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் மட்டுமல்ல மலாய் மொழியிலும் திரையிடப்படுகிறது. சீன மொழியிலும் வெளியிட இப்போதே ஏற்பாடுகள் நடந்து வருகிறது. தாய்லாந்து, ஜப்பான், இந்தோனேஷியா விலும் அந்தந்த மொழிகளில் ‘டப்பிங்’ செய்யப்பட்டு திரைக்கு வருகிறது.   உலகப் புகழ்பெற்ற பிரான்ஸ் நாட்டின் ‘ரெக்ஸ் சினிமாஸ்’ திரையரங்கில் திரையிடப்படும் முதல் இந்திய படம் என்ற பொருமையை ‘கபாலி’ பெற்றுள்ளது. உலக அளவில் ‘பாகுபலி’ 4 ஆயிரத்துக்கும் அதிகமான தியேட்டர்களில் திரையிடப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால் கபாலி 5 ஆயிரத்துக்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.

பாகுபலி படத்தின் வியாபாரம் ரூ.162 கோடியை தொட்டதாக கூறப்பட்டது. ஆனால் ‘கபாலி’ அதையும் முறியடித்து விட்டதாக கூறப்படுகிறது. ‘கபாலி’ வெளிநாட்டு வினியோக உரிமையை வாங்க கடும் போட்டி நிலவியதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.‘பாகுபலி’ படத்தை பத்திரிகைகள், தொலைக்காட்சி, சமூகவலைதளங்கள் மூலம் பிரபலப்படுத்தினார்கள். படக்குழுவினர் சென்னை, ஐதராபாத், பெங்களூர், மும்பை போன்ற முக்கிய நகரங்களுக்கு நடிகர்&நடிகைகள் சென்று ‘பாகுபலி’ யை பிரபலப்படுத்தினார்கள். ஆனால் ‘கபாலி’ படத்துக்காக இந்தியாவில் முதல் முறையாக விமானத்தில் ‘கபாலி’ போஸ்டர் இடம் பெற்றது. ஏர்& ஏசியா விமான நிறுவனம் பல்வேறு சலுகைகளையும்அறிவித்துள்ளது.

இது தவிர தங்க, வெள்ளி நாணயங்கள் வெளியீடு,  தனியார் நிறுவனங்கள் தொலை தொடர்பு நிறுவனங்கள், ஆன்லைன் சேவை நிறுவனங்கள் அனைத்தும் சலுகைகளை அறிவித்து ‘கபாலி’ படத்தை விளம்பரப்படுத்துவதுடன் தங்களுக்கும் விளம்பரம் தேடிக்கொள்வதில் ஆர்வம் காட்டி வருகின்றன. இது எப்போதும், எந்த படத்துக்கும் இல்லாத புதிய யுத்தியாகும்.‘கபாலி’ திரைக்கு வரும் தினத்தை ரசிகர்கள் மட்டுமல்ல, பல்வேறு நிறுவனங்களும், திரை உலகினரும் கோலாகலமாக கொண்டாட ஏற்பாடு செய்து இருப்பதும் புதிய சாதனையாக கருதப்படுகிறது.

வெளிநாடுகளில் இந்திய படம் என்றால் இந்திபடங்கள்தான் என்ற நிலை இருந்தது. அதை ‘பாகுபலி’ ஓரளவு முறியடித்தது. இப்போது ரஜினியின்’கபாலி’ படத்தின் மூலம் இந்திய படங்கள் என்றாலே அது தமிழ்படம் தான் என்று வெளிநாட்டினர்  கருதும் அளவுக்கு ‘கபாலி’ புகழ் கொடிகட்டி பறக்கிறது. திரைக்கு வந்த பிறகு மேலும் சாதனைகள் படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Kabali is an upcoming 2016 Indian Tamil-language gangster-drama film written and directed by Pa. Ranjith. The film stars Rajinikanth as the title character, whilst Taiwanese actor Winston Chao, Radhika Apte, Dhansika, Dinesh Ravi, Kalaiyarasan, and John Vijay star in other pivotal roles. Principal photography for the film began on 21 August 2015 in Chennai. While filming mostly occurred in Malaysia, smaller scenes were shot in Bangkok and Hong Kong.The film is slated for release on 22 July 2016.

Development

In June 2015, director Pa. Ranjith announced his third directorial venture, which would follow his previous two films Attakathi (2012) and Madras (2014), with Rajinikanth via Twitter. Rajinikanth had been impressed with Ranjith's work in Madras (2014) and subsequently Rajinikanth's daughter, Soundarya, asked Ranjith to work on a script for her father.Working with Ranjith would make Kabali Rajinikanth's first film with a novel director for the first time since his collaboration with S. Shankar in Sivaji (2007). In an interview with IndiaGlitz, producer S. Thanu revealed that Rajinikanth had personally asked him to produce the Ranjith-directed film. The producer's commercially successful  
Bairavi (1978) was Rajinikanth's first lead role film and the two had not collaborated since.It was speculated that Rajinikanth's role would be based on a real-life mob boss from Chennai. Santhosh Narayanan was confirmed as the film's music composer, continuing his partnership with Ranjith after the latter's previous two films. Ranjith also retained G. Murali, the cinematographer of Madras.
On 17 August 2015, Ranjith announced the title of the film to be Kabali and that Rajinikanth would play the role of Kabaliswaran.The makers of the film had earlier considered using title Kaali, which was the title of Rajinikanth's 1980 film. As that film did not do well in the Tamil Nadu box office at the time, the makers passed on using it for the new film. Another title, Kannabhiran, was also considered but it was later found that the title's rights were already held by director Ameer Sultan for a future film.

Casting

In the film, Rajinikanth plays the role of an aged crime boss. Dinesh Ravi, who played the lead in Ranjith's Attakathi (2012), and Kalaiyarasan, who played pivotal roles in both of the director's previous films, were also confirmed to be part of the film. An important role was offered to Prakash Raj initially, but later it was said that the role was declined due to scheduling issues and John Vijay was cast for the role instead. It was later confirmed that the role of the lead character's wife would be given to Radhika Apte, who was introduced to Tamil films through Dhoni (2012).Dhansika was signed to play a supporting character in the film.

Filming

On 18 August 2015, director Pa Ranjith announced on his Twitter page that principal photography would begin the following week, which was confirmed on 22 August when Behindwoods covered a photo shoot which took place on 21 August at AVM Studios in Chennai. First schedule of the filming started on Vinayagar Chaturthi on 17 September 2015 at the Russian Centre of Science and Cultural in Chennai.



Release

Kabali is expected to be released in Tamil worldwide, along with dubbed versions in Hindi, Telugu, and Malayalam.The film will be simultaneously released in Singapore and Indonesia. Malik Streams Productions and Distribution, a Malaysian media company, will simultaneously release the film in Malay for exclusive screening in Malaysia alongside the original Tamil version. The film will also be dubbed in Thai and Chinese, where talks are under way to simultaneously release the film in Hong Kong and China. Kabali will also premiere at the Le Grand Rex in Paris, France. The satellite rights of the film were sold to Jaya TV.

Marketing

The Malaysian airline, AirAsia became an official partner for Kabali and certain AirAsia planes will be painted with a Kabali theme.The Indian financial company Muthoot FinCorp who is also an official partner of the film produced silver coins embossed with the image of actor as cast in the film. Its teaser trailer was released in April 2016 and went viral in Asia and gained 5 million views in less than 24 hours becoming the most viewed teaser in Asia.By 28 May, the Kabali teaser garnered 20 million views, making it one of the most watched Indian film teasers.

Online piracy issue

On July 19, 2016, three days prior to the film's worldwide release, it was reported that pirated copies of the film were leaked online in various file-sharing sites. The Indian Express reported that although the leaked copies were available only in the darknet, lots of fake links were being circulated in the web. The makers of the film had approached Madras High Court in anticipation of piracy and had requested the authority to ensure that it does not happen. The Times of India reported that the producers of the film were urging the fans of the film not to watch the film online.
CBFC chief Pahlaj Nihalani commented on the issue by saying that the leak had nothing to do with his office in Mumbai and reiterated the fact that Kabali, a Tamil film, was certified by CBFC's Chennai office. He also added that the leak would not have much effect on the film's box office collection.